சீறாப்புராணம் முற்றோதல்

189 views
Skip to first unread message

Ariviyal Tamil Mandram ( ATM)

unread,
Feb 8, 2014, 1:24:13 PM2/8/14
to tamil...@googlegroups.com

சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு



தமிழ் இலக்கிய உலகினில் ஜாதி மத காழ்ப்புணர்வு உள்ளது என்று நான் நிச்சயமாக கூறவில்லை. 

ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது.


நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில்  டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும்  கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது.  


வெறுமனே காலத்தை கழிக்க இணையத்தில் உலவுவது முட்டாள்தனம்.


அடுத்த தலைமுறைக்கு தேவையான சில செயல்பாடுகளை நாம் செய்தே ஆகவேண்டும்.


நான் செய்வேன்.


விழியமாக முற்றோதல் செய்வது என்னும் கோட்பாடு மிக முக்கியமானதாகும்  


நரம்பியல் ஆய்வாளர் என்னும் நிலையல் இந்தக் கூற்றை கூறுகிறேன்  





பெங்களுருவில் இருந்து இயங்கும் ஐயா திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் கம்ப ராமாயணம் முற்றோதல் செய்வது சிறப்பான தமிழ்த் தொண்டு


காலத்தால் அழியாத பனி


காலம் செல்ல செல்ல அவரது பெயர் இணையத்தில் ஆழமாக பதியும்.


அவருக்கும் அவரது குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்


நல்ல செயல்பாடுகளை மனமார பாராட்ட வேண்டும்


பாராட்டினால் யாரும் தவறாக நினைப்பார்களோ என்று நினைக்கக்  கூடாது


மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள்





அறிவியலுக்கு மதம் கிடையாது


செம்மலுக்கு அறிவியல்தான் மதம்


திருஅருட்பா முற்றோதல்


திருமூலர் திருமந்திரம் முற்றோதல்


சீறாப்புராணம் முற்றோதல்


இந்த மூன்று பெரும் பணிகளை நண்பர்களின் உதவியுடன் துவங்கியுள்ளேன்


அடுத்த இருபது வருடங்களில் நிச்சயமாக செய்து முடிப்பேன்




சீறாப்புராணம் முற்றோதல்


இனிதே துவங்குகிறது ……….


http://tamilarchives.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

rajam

unread,
Feb 8, 2014, 1:47:41 PM2/8/14
to தமிழ் மன்றம்
உடனே பார்த்துக் கேட்டு மகிழ்ந்தேன். அருமை! மிக்க நன்றி ஐயா! 

படிக்கும் காலாத்திலும் சரி, படிப்பித்த காலத்திலும் சரி … கல்லூரிப் பாடத் திட்டத்தில் இந்து சமயப் பாடல்கள் இடம் பெறுவதே பெரும்பான்மை, பிற சமயப் பாடல்கள் குறைவு. இதைப் பற்றி மிகவும் வருந்தியிருக்கிறேன். அது கடந்த காலம். இனியாவது புதிய காலம் பிறக்கட்டும். 

தொடரும் பதிவுகளைக் காண ஆவல். 

இப்படிக்கு,
தமிழாசிரியை ராஜம்

rajam

unread,
Feb 18, 2014, 11:58:34 AM2/18/14
to tamil...@googlegroups.com
இறைவனை வாழ்த்தும் பாடலை ஓதியதைக் கேட்டு மகிழ்ந்தேன். மதிப்பிற்குரிய பெரியவரின் விளக்கமும் தமிழ் ஒலிப்பும் மகிழ்ச்சி தந்தன. அரபு மொழி ஒலிப்பைச் சற்றே குரலுயர்த்திச் சொன்னால் என்னைப் போன்ற வயதானவளுக்குக் கேட்கும் இனிமை கூடும். 'பெரியவரின் ஒலிப்பில் தமிழின் "ர" "ற" ஆகியவற்றின் வேற்றுமை தெரிந்தது' என்று நான் நினைப்பது என் கற்பனையா அல்லது auto-suggestion-ஆ? (தமிழில் சரியாக மொழிபெயர்க்கத் தெரியவில்லை, மன்னிக்கவும்.) 

[பாருங்கள், இன்றைய தலைமுறைதான் தமிழைச் சரியாக ஒலிக்கத் தெரியாமல்/இயலாமல் ல/ள/ழ குழறுபடி செய்கிறது!!! ;-) எங்கள் காலத்தில் அப்படியிருந்ததில்லை என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். இந்த வகையில் இராம.கி ஐயாவின் புலம்பல் எனக்கும் உண்டு! தமிழ் ஒலிப்புக்காக ஒரு பயிற்சிப் பட்டறையை ஒரு நிலாச்சோறு நிகழ்ச்சியாக நடத்தலாமே, இயலுமா?]

சீறாப்புராணம் கடவுள் வாழ்த்துச் செய்யுளை (7-சீர்க் கழிநெடிலடி விருத்தத்தை) ஓதி விளக்கிய பெரியவருக்கு நன்றி. 

நாளைய தமிழ்

unread,
Feb 18, 2014, 12:03:55 PM2/18/14
to tamil...@googlegroups.com
அன்னையே வணக்கம் 

// தமிழ் ஒலிப்புக்காக ஒரு பயிற்சிப் பட்டறையை ஒரு நிலாச்சோறு நிகழ்ச்சியாக நடத்தலாமே, இயலுமா? // 

நல்ல சிந்தனை 

முயற்சி செய்கிறேன் 

நன்றி 

செம்மல் 

rajam

unread,
Feb 18, 2014, 2:14:45 PM2/18/14
to தமிழ் மன்றம்
அன்புகூர்ந்து அந்த முயற்சியில் ஈடுபடவும், ஐயனே. 

புளிக்குழம்பு : புலிக்குழம்பு போன்ற வேறுபாடுகளையாவது இளைய தலைமுறை புரிந்துகொள்ளட்டும். 

பேச்சு மொழி சரிப்பட்டு வரலே-ன்னா எழுத்திலெயாச்சும் ஏதாவது சரியா இருந்தா நல்லதுங்க! ;-) 

உருதுவும் தமிழும் கற்றுத் தேர்ந்த தங்கள் குடும்பமும் என் நண்பர்களும் இக்காலத் தமிழுக்கு மிக நன்றாகவே உதவலாம். 

தெரியுமில்லெ … என் மாணவி சஃப்ரா பீகம் புறநானூற்றை உருதுவில் மொழிபெயர்த்திருக்கிறாள் என்று? விரும்பினால், இயன்றால், அந்த முயற்சியை வெளியுலகுக்குத் தெரிவித்து மேலும் ஊக்குவிக்கவும். 

பிற பின்னர்.

நாளைய தமிழ்

unread,
Feb 18, 2014, 6:04:09 PM2/18/14
to tamil...@googlegroups.com
//உருதுவும் தமிழும் கற்றுத் தேர்ந்த தங்கள் குடும்பமும் //

அன்னையே, 

பல நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தேன் ...
இந்த வரியை படித்து.

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தமிழ் ஆங்கிலம் தவிர எந்த பிற மொழியும் தெரியாது.....

முஸ்லீம்கள் என்றாலே ஹிந்தியும் உருதுவும் வீட்டில் பேசி மகிழ்பவர்கள் என்று நம்பும் மக்களுள் நீங்களும் ஒருவரா ?

என்ன செய்வது .....

உங்களை அப்படி நம்ப வைத்த சமூகத்தை என்னவென்று சொல்வது .......

100 % சுத்தமான தமிழர்கள் நாங்கள் 

நாங்கள் மட்டுமல்ல 

எங்கள் குடும்பத்தில் யாருக்குமே ஹிந்தியும் உருதுவும் தெரியாது 

அநேகமாக 100 வருடங்களுக்கு முன்னர் எங்கள் முன்னோர்கள் ஹிந்து சமயத்தினராக இருந்திருக்க வேண்டும்.... 

தீண்டாமை கொடுமை காரணமாக ...மதம் மாறி ... முஸ்லீம்களாக பரிணமித்து (முழுமையான மனித உரிமைகளுடன்) முஸ்லீம்களாக மாறியிருக்க வேண்டும்.

என் அண்ணனின் பெயர் - அண்ணல் 

என் அக்காவின் பெயர் - தேன்மொழி 

எனது பிள்ளைகளின் பெயர்கள் - எழில், மலர் 

தமிழ் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுள் Sanskrit வார்த்தைகள் சேர்க்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தவர்கள் மட்டும் கை தூக்கவும்......

மு.செம்மல் 
  

 




iraamaki

unread,
Feb 18, 2014, 7:28:13 PM2/18/14
to tamil...@googlegroups.com
பிள்ளைகளுக்குச் சங்கதங் கலக்காத பெயர் வைப்பதில் விருப்பமிருந்தாலும், வீட்டுப் பெரியவர்களின் பெயரைப் பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கதிலிருந்து  மீற  முடியவில்லை. அதோடு தாத்தா பெயர் வைப்பதுதானே பெயரனுக்கு அழகு? (பெயரன் என்ற சொல்லின் இலக்கணம் அது தானே?) நானும் விரும்பினேன். எனவே முத்தவன் பெயர் இராமசாமி ஆனது. (என் தந்தையார் பெயர்.) இரண்டாமவன் இலட்சுமணன் (என் மாமனார் பெயர்.). ஆனாலும் அவனைக் கூப்பிடுவது பூங்குன்றன் என்றுதான். பேரன்களுக்கு தமிழ்ப்பெயர் இடும்போது என் மக்களும் ஒத்து வந்தார்கள். இனியன், முகிலன், கதிரவன் என்று பெயர் வைத்தோம்.
 
தமிழ்ப்பெயர்  வைக்கவேண்டும் என்பதில் நண்பர்கள் பலரும் ஆர்வங் கொள்ளவேண்டும்.   தமிழ்நாட்டில் ஏனோ இச்சிந்தனை வளராதிருக்கிறது. அளவிற்கு மீறிச் சங்கதப் பெயர்களை ஆள்கிறோம்.  தமிழரென்றால் தமிழ்ப்பெயர் மட்டுமே பெரிதும் இருக்கும் என்ற நிலை வாராதோ?. சீனப் பெயர் வைக்காத சீனர் உண்டா? சப்பானியப் பெயர் வைக்காத சப்பானியர் உண்டா? (இதில் கிறித்துவஞ் சார்ந்த ஓரிரு மேலைப் பெயர்களைப் பார்த்திருக்கிறேன்.) நம்மவர் “இஷ், புஷ்” பெயர்களையும், பொருளே புரியாத பெயர்களையும் வைப்பதைக் குறைப்பது நல்லது. 
 
அன்புடன்,
இராம.கி.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

வேந்தன் அரசு

unread,
Feb 18, 2014, 8:30:01 PM2/18/14
to தமிழ் மன்றம்
பெயருடன் அன் விகுதி சேர்த்துவிட்டால் தமிழன் என அடையாளப்படுத்திக்கலாம்


ராஜேந்தர் = வடநாடு
ராஜேந்திரா = தெலுகு
ராஜேந்திரன் = தமிழ்

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Feb 18, 2014, 9:43:23 PM2/18/14
to தமிழ் மன்றம்
பிள்ளைகளுக்குக் கடவுளர் பெயரை வைப்பதுக்குக் காரணம் என்ன என்று என் கொள்ளுப்பாட்டி (முத்தம்மா) சொன்னது — நோயுற்றுப் படுக்கையில் கிடந்து தொல்லைப்படும் காலத்திலும் பிற நேரங்களிலும் பிறரைக் கூப்பிட்டு உதவி கேட்கும்போது அந்த இறைவனையே கேட்பது போன்று இருக்குமாம். சாவுப் படுக்கையில் உலகப்பற்றை விட முடியாமல் உறவுப்பற்று விஞ்சும்போதும் இறைவனை அழைப்பது தானாக அமைந்துவிடுமாம். என் கொள்ளுப்பாட்டி அவருடைய 80+ அகவையில் 3+ ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் படுக்கையில் கிடந்தபோது மூன்றே மூன்று சொற்களை மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது: ராமா, நாராயணா, முருகா. இவை மூன்றும் வீட்டில் இருந்தவர்களின் பெயர்கள்! 

என் தாய்வழிக் குடும்பம் பெரிய குடும்பம். ஒவ்வொரு கிளையிலும் ஒரு முத்தம்மா, ஒரு மீனாம்மா இருக்கோம். எனக்கு-னு ஒரு பேத்தி பொறந்தா அதும் பேரு ‘முத்து மீனா!’ அந்தப் பேறு எப்போது கிடைக்குமோ, அந்த மீனாளுக்கு மட்டுமே தெரியும்!!

************

/// சீனப் பெயர் வைக்காத சீனர் உண்டா? சப்பானியப் பெயர் வைக்காத சப்பானியர் உண்டா? (இதில் கிறித்துவஞ் சார்ந்த ஓரிரு மேலைப் பெயர்களைப் பார்த்திருக்கிறேன்.///

எனக்குத் தெரிந்த அளவில், அமெரிக்காவில் நான் பார்த்துப் பழகிய ஒவ்வொரு தொலைகிழக்கு நாட்டவருக்கும் இரண்டு பெயர் இருக்கு. ஒன்று, அவரவரின் ஊர்/வீடு/நாடு சார்ந்த அந்தந்த மொழிப் பெயர்; இன்னொன்று, தொழிலகத்தில் வழங்கும் பெயர். 

எனக்குப் பல நாட்டு நண்பர்கள். என் இந்தோனேசிய நண்பர் ஒருவர் சீனர். அவருடைய surname (மொழிபெயர்ப்பு தெரியவில்லை, மன்னிக்கவும்) ஆங்கில எழுத்துகளில் உள்ளதைச் சரியாக ஒலிக்க நம் தமிழ்நாவு நாட்டியமாட வேண்டும்! எங்கள் தொழிலகத்தில் நான் ஒருத்திதான் அக்கறையோடு அதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு சரியாக ஒலித்தேன், அதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி! ‘ச்சஹ்யாதி’ என்று ஒலிக்கப்படும் அந்தப் பெயர் Tjahjadi என்று எழுதப்படும்! கூர்ந்து நோக்கினால் … இது நம் இந்திய “யயாதி” என்ற பெயரின் நிழல் என்பது புலப்படும். அடுத்து, ஒரு கொரியப் பெண் ஒரு சப்பானியரை மணந்ததால் பெற்ற இரண்டாவது பெயர் நம் தமிழின் “மூக்காயி” என்பது-போல் ஒலிக்கும்! இவர்கள் எல்லாரும் மிகவும் இனியவர்கள். (இல்லாவிட்டால் ... அவர்கள் என்னை அணுக முடியுமா?!!!)

இப்படிப் பல நாட்டவரின் (சீன, சப்பானிய, கொரிய, வியட்நாமிய …) பலவகைப்பட்ட பெயர்களைப் பார்த்துக் கேட்டுப் பழகியதால் ஒரு விரிந்த நோக்கு வளர்ந்துவிட்டது. பெயரைப் பார்த்து மட்டுமே ஒருவரின் பண்பை எடையிடக்கூடாது என்பதும் புரிந்தது.

************

மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம்

என் இசுலாமிய நண்பர்கள், தோழியர் அனைவருக்கும் உருதுவும் தமிழும் இரட்டைக் குழந்தைகள். பள்ளிப் பருவத்தில் என் உயிர்த்தோழி நூர்ஜஹான் என் பெயரை உருதுவில் எழுதக் கற்றுக்கொடுத்தாள். 

உருது மொழி மிகவும் அழகானது. அதன் எழுத்தின் செவ்வி அதை உருவாக்கிய மக்களின் கலையுணர்வைக் காட்டும். இதை விட்டுக் கொடுக்க உங்களால் எப்படி முடிந்தது? 

என் கடைசித் தங்கைச்சி ஓர் இசுலாமிய இளைஞனை மணந்தாள். அன்பு வாழ்க்கை, அழகான ஒரு பெண் குழந்தை (Shagufta). எங்களுக்கும் எங்கள் இசுலாமிய மருமகனுக்கும் இடையே வேறுபாடு இல்லையப்பா. 

அதோடு … 45 ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குருதி கொடுத்த இளைஞன் பஷீர் ஓர் இசுலாமிய இளைஞன். அவனுக்கும் அவன் தோழருக்கும் தேவையான உதவிகளை அவர்கள் வேண்டிய காலத்தில் அப்போது நான் செய்ய முடிந்ததால் பிற்காலத்தில் அவர்கள் எனக்கு உதவினார்கள். 

இங்கே, ஒரு தொழிலகத்தில், ஒசாமா, அஹமத் இருவருக்கும் தொழில்வழியில் நான் உதவியதால் இருவருக்கும் என்மேல் மிகவும் அன்பும் மதிப்பும். 

ஆக,  எல்லாம் இறைவன் செயல்.  இங்கே மதம் குறுக்கிடாது. 

************

///100 % சுத்தமான தமிழர்கள் நாங்கள்///

செம்மல் ஐயா, 100% சுத்தமான தமிழர் என்று யாருமே இல்லை. எல்லாருமே கலப்படம்தான்.  மருத்துவரான தாங்கள் இந்த 100% அளவையை எந்தக் கணக்கில் சொல்லுகிறீர்கள்?


///தீண்டாமை கொடுமை காரணமாக ...மதம் மாறி ... முஸ்லீம்களாக பரிணமித்து (முழுமையான மனித உரிமைகளுடன்) முஸ்லீம்களாக மாறியிருக்க வேண்டும்.///

இதை ஒத்துக்கொள்கிறேன்.  அப்படி மாறியதில் தவறில்லை என்பதுவே என் கருத்தும்

அந்தக் காலத்தில் … 'ஆலயப் பிரவேசம்” என்று ஒன்று நடந்தது, நினைவிருக்கா? அப்போது, என் அம்மாவழித் தாத்தா அதை முன்னின்று நடத்தினார் நெல்லையில் சேரன்மகாதேவி ஆலயத்தில். அதைப் பற்றி எனக்கு மிகவும் பெருமை. 

************

மருத்துவர் ஐயா, எது எப்படி ஆனாலும் தாங்கள் உருது மொழியைப் பயின்றால் … தமிழ் உலகுக்குப் பெருமையும் நன்மையும் வளர்ச்சியும் உருவாக்கி உதவ முடியும். தமிழ் வளர்ச்சிக்குப் பணம் தேவை. தங்களைப் போன்றவர்களின் ஆதரவு இல்லாமல் தமிழ் நாட்டில் தமிழ் வளருவது அரிது, ஐயா.இது தங்களுக்குத் தெரியாததில்லை. 

************

இழைத்தலைப்பிலிருந்து மிகவும் விலகிவிட்டேன், பொறுத்தருளவும். 

சீறாப்புராண முற்றோதலைத் தொடர்ந்து கேட்க ஆவல். 

நன்றியுடன்,
ராஜம்

iraamaki

unread,
Feb 18, 2014, 10:21:55 PM2/18/14
to tamil...@googlegroups.com
மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம். 

----------------------------------------
இந்த முன்முடிவு சரியில்லை. தமிழ்நாட்டு முசுலீம்களில் தமிழ் முசுலீம், உருது முசுலீம் என்று இரு வகையினர் இருக்கிறார்.  தமிழ் முசுலீம்களுக்கும் உருதுவுக்கும் தொடர்பு கிடையாது. பொதுவாகத் தென்மாவட்டங்களில், திருச்சிக்குத் தெற்கே தமிழ் முசுலீம்களே நிறைய. (காட்டாகக் கீழக்கரை, காயல்பட்டினம், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் வாழ்பவர்கள். ) வடமாவட்டங்களில் (காட்டாக வேலூர், ஆரணி, இராணிப்பேட்டை, வாலாசாபாத் போன்ற இடங்களில் வாழ்பவர்கள்) உருது முசுலீம்கள் நிறைந்திருப்பார்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே பெண் கொடுப்பு, எடுப்பு கூடப் பெரிதும் குறைவாகவேயுண்டு. அதுதான் உள்ளமை நிலை. 
 
முசுலீம் அல்லாதவரே இப்படி “முசுலீம்களா, உருது தெரிந்திருக்கவேண்டுமே?” என்று தவறாகக் கற்பித்துக் கொள்கிறார். இருவேறு முசுலீம்களுக்கும் குரான் படிப்பதன் காரணமாய், அரபி தெரிந்திருக்கலாம். அதில் புலமை பெறுவது அவரவர் முயற்சி.
 
உருது அவர்களை இணைக்கும் மொழியல்ல. உருது வட இந்திய முசுலீம்களுக்கும், வட இந்தியத் தொடர்புள்ள தெக்கனி (தெலிங்கானா, வடகர்நாடகா சேர்ந்தவர்)
முசுலீம்களுக்கும் ஆன மொழி.

அன்புடன்,
இராம.கி.
 

iraamaki

unread,
Feb 18, 2014, 10:22:25 PM2/18/14
to tamil...@googlegroups.com
மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம். 

----------------------------------------
இந்த முன்முடிவு சரியில்லை. தமிழ்நாட்டு முசுலீம்களில் தமிழ் முசுலீம், உருது முசுலீம் என்று இரு வகையினர் இருக்கிறார்.  தமிழ் முசுலீம்களுக்கும் உருதுவுக்கும் தொடர்பு கிடையாது. பொதுவாகத் தென்மாவட்டங்களில், திருச்சிக்குத் தெற்கே தமிழ் முசுலீம்களே நிறைய. (காட்டாகக் கீழக்கரை, காயல்பட்டினம், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் வாழ்பவர்கள். ) வடமாவட்டங்களில் (காட்டாக வேலூர், ஆரணி, இராணிப்பேட்டை, வாலாசாபாத் போன்ற இடங்களில் வாழ்பவர்கள்) உருது முசுலீம்கள் நிறைந்திருப்பார்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே பெண் கொடுப்பு, எடுப்பு கூடப் பெரிதும் குறைவாகவேயுண்டு. அதுதான் உள்ளமை நிலை. 
 
முசுலீம் அல்லாதவரே இப்படி “முசுலீம்களா, உருது தெரிந்திருக்கவேண்டுமே?” என்று தவறாகக் கற்பித்துக் கொள்கிறார். இருவேறு முசுலீம்களுக்கும் குரான் படிப்பதன் காரணமாய், அரபி தெரிந்திருக்கலாம். அதில் புலமை பெறுவது அவரவர் முயற்சி.
 
உருது அவர்களை இணைக்கும் மொழியல்ல. உருது வட இந்திய முசுலீம்களுக்கும், வட இந்தியத் தொடர்புள்ள தெக்கனி (தெலிங்கானா, வடகர்நாடகா சேர்ந்தவர்)
முசுலீம்களுக்கும் ஆன மொழி.

அன்புடன்,
இராம.கி.
 
From: rajam
Sent: Wednesday, February 19, 2014 8:13 AM

rajam

unread,
Feb 18, 2014, 10:59:01 PM2/18/14
to tamil...@googlegroups.com
///இந்த முன்முடிவு சரியில்லை. தமிழ்நாட்டு முசுலீம்களில் தமிழ் முசுலீம், உருது முசுலீம் என்று இரு வகையினர் இருக்கிறார்.  தமிழ் முசுலீம்களுக்கும் உருதுவுக்கும் தொடர்பு கிடையாது.///

ஒத்துக்கொள்கிறேன், ஐயா! ஆனாலும் ... மொழி என்ற நோக்கில் ஏதோ ஒன்றைத் தெரிந்துகொள்ளும் மிக நல்ல வாய்ப்பைத் தவறவிட்டனரோ என்ற பரிவே எமக்கு. 

யார் என்ன மொழி பேசினால் என்ன? இக்காலத்தில் எல்லாமே உலகச்சந்தை வணிகத்தில் வெறும் 00101001 x 2  போன்ற தவறான குறியீடுகளே. 
 


On Tuesday, February 18, 2014 7:22:25 PM UTC-8, iraamaki wrote:
மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம். 

----------------------------------------
///  பொதுவாகத் தென்மாவட்டங்களில், திருச்சிக்குத் தெற்கே தமிழ் முசுலீம்களே நிறைய. (காட்டாகக் கீழக்கரை, காயல்பட்டினம், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் வாழ்பவர்கள். ) வடமாவட்டங்களில் (காட்டாக வேலூர், ஆரணி, இராணிப்பேட்டை, வாலாசாபாத் போன்ற இடங்களில் வாழ்பவர்கள்) உருது முசுலீம்கள் நிறைந்திருப்பார்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே பெண் கொடுப்பு, எடுப்பு கூடப் பெரிதும் குறைவாகவேயுண்டு. அதுதான் உள்ளமை நிலை. 

iraamaki

unread,
Feb 19, 2014, 12:58:07 AM2/19/14
to tamil...@googlegroups.com
இந்தப் பொதுமை நோக்கெல்லாம் செவிநிறையக் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பொதுப்புத்தியில் தமிழனுக்கு மட்டுமே இது கற்பிக்கப் படுகிறது. இந்தியப் பெருநாட்டில் வேறு யாருக்கும் இது கற்பிக்கப் படுவதில்லை. மற்றவர் எல்லாம் அவரவர் மொழியைப் பொன்னேபோற் காப்பாற்றி வளர்த்திக் கொண்டு தான் இருக்கிறார். தமிழன் மட்டும் தன் மொழி காப்பாற்ற  ஏதேனுஞ் செய்தால்  உடனே வெறியன் என்று சாடப்படுகிறான். ”அல்லது பொதுமை நோக்கைப் பார்” என்று சொல்லப்படுகிறான். (ஆந்திரம், கன்னடம், மலையாளம் எங்கணும் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகளைப் படிக்காது  தேர்வடைய  முடியாது. அந்தந்த மொழி படித்தவருக்கே மாநில அரசில் வேலையுண்டு. தமிழ்நாட்டிலோ, தமிழ் படிக்காது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிடலாம். தமிழ் தெரிந்தோருக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்பது கிடையாது. இங்கு தான் ஆங்கில வழி அடிமைத்தனம் ஊறிக்கிடக்கிறதே?)
 
இந்திய நாட்டில் மிடையங்களும் (media),  பொதுப்புத்தியாளரும்,  தம் விவரணைகளில் பலமுறை தமிழரைச் சாடுவதைக் கண்டு, அதிலிருந்து விலகித் தம் அடையாளங்களை ஆழ மூடி  மறைப்பதற்கே  தமிழர் தமிழ்ப்பெயர் தொலைத்து, கருந்தோலை மாவு பூசி மறைத்து, சந்தையில் விற்கும் சிவப்பூட்டுக் குழைவுகளை தோல்மேற் தடவி,  வடவரின் சிவந்த தோலை வியந்து, நுனிநாக்கு ஆங்கிலம் பேசித் திரிகிறாரோ? - என்ற  ஐயம் எனக்குண்டு. கிட்டத்தட்ட அமெரிக்க நாட்டுக் கருப்பர் நிலையிலேயே  பொதுவான தமிழர் மனநிலை இருக்கிறது. தம் பிறப்பைக் கண்டு பெரும்பாலான தமிழரே வெட்கப்படுகிறார்.  அந்த அளவிற்கு மிடையங்களும், பொதுப்புத்தியும் இங்கு வேலை செய்கின்றன. எந்தத் தொலைக்காட்சியையும், தாளிகைகளையும் வேண்டுமானால் எடுத்துப் பாருங்கள். தமிழிற் தமிழனை இழிவு செய்வதே குறியாக இருக்கின்றனர்.
 
இன்றைக்கு மேற்கு ஆப்பிரிக்க ஒலாவ் - wolof - மொழிப் பெயர்கள் அமெரிக்கக் கருப்பினத்தவரிடம் இல்லவேயில்லை. (அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடிமையாய்க் கொண்டுவரப் பட்டவரில் பெரும்பாலோர் ஒலாவ் இன மக்கள் தாம்.)  400 ஆண்டுகளில் ஒலாவ் பெயர்களெல்லாம் மறைந்தே போயின. அதுமாதிரி  தமிழரிடமும் தமிழ்ப் பெயர் வெகு விரைவில் மறைந்து வருகிறது.  தமிழ்ப்பெயரிட்டவர் இன்று ஒற்றையிலக்க விழுக்காட்டளவிலேயே இருப்பர்.  தமிழ்ப்பெயரைக் கண்டு வெட்கப்படும் நிலைக்கு தமிழரிற் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.  எதிர்காலத்தில் ஒலாவ் இனத்தவர் போலவே நாமும் ஆவோம் போலும்!  இப் பொதுமை நோக்கைக் கேட்டு மனந் தேற்றிக் கொள்ளவா? 
 
1400/1700 ஆண்டுகளுக்கு முன் பத்திக் (பக்திக்) காலத்திற்குச் சற்றுமுன், களப்பாளர் காலத்திலோ, சங்கம் மருவிய காலத்திலோ,  தொடங்கிய சங்கதப் பெயர் வைக்கும் சீரழிவுப் பழக்கம் எங்கு வந்து நம்மைக் கொணர்ந்திருக்கிறது,  பாருங்கள்?  எவ்வளவு பெரிய சோகம் இது?
 
அன்புடன்,
இராம.கி.  
From: rajam
Sent: Wednesday, February 19, 2014 9:29 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: சீறாப்புராணம் முற்றோதல்

வேந்தன் அரசு

unread,
Feb 19, 2014, 4:22:49 AM2/19/14
to தமிழ் மன்றம்



18 பிப்ரவரி, 2014 9:43 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:



மருத்துவர் செம்மல் ஐயா, உருதுவும் இந்தியும் தெரியாது என்று தாங்கள் சொல்லுவதைக் கேட்க மிகவும் வருத்தம்


தமிழ் முஸ்லீம்கள் ஏன் உருது கற்கணும். இஸ்லாமியர்களின் வேதம் அரபியில்தான் இருக்கு.

இந்திமொழியில் அரபி, துருக்கி பார்சி சொற்களை கலந்தால் அதுக்கு உருது என பேர். அதை அரபி எழுத்துவடிவில் எழுதிக்கொள்ளலாம். அல்லது தேவநாகரியிலும் எழுதலாம்

லோக் என்றால் இந்தி,  துனியா என்றால் உருது. பாஜக இந்தியில்  செங்கிருத சொற்களை அதிகம் பயன்படுத்தணும் என்னும். நமக்கு அப்போது இந்தி எளிதாகும். பாக் மக்கள் இந்தி படங்களை பார்ப்பதால் மும்பை திரை உலகம் உருதுமொழியையே அதிகம் பயன்படுத்தும்.

 
இன்றைய பேச்சு தமிழுக்கும் வேறு பெயர் சூட்டலாம்.

rajam

unread,
Feb 19, 2014, 1:51:55 PM2/19/14
to தமிழ் மன்றம்
நண்பர்களே, 

கீழே தரப்பட்டுள்ள கருத்துரைக்கும் சீறாப்புராண முற்றோதலுக்கும் தொடர்பில்லை என்பதால், இந்த இழை "சீறாப்புராணம் முற்றோதல்” என்ற இழையிலிருந்து கிளைத்தது. இராம.கி ஐயா அவர்கள் தமிழருக்கு மொழிப்பற்று இல்லாமையைச் சுட்டிச் சொன்ன கருத்தே இதன் அடிப்படை. அவருக்காக என் நன்றியுடன் என் கருத்தையும் இங்கே பதிகிறேன்.

ஐயா, 

///யார் என்ன மொழி பேசினால் என்ன? இக்காலத்தில் எல்லாமே உலகச்சந்தை வணிகத்தில் வெறும் 00101001 x 2  போன்ற தவறான குறியீடுகளே. /// 
என்று சொன்ன என் கசப்பு நிலையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்று ஐயுறுகிறேன். 

'தமிழ் தமிழ்' என்று உருகி, எதிர்காலம் பற்றி நினைக்காமல், உறவினர் நண்பர்கள் (பேராசிரியர் இலக்குவனார், மதுரைக்கல்லூரி முதல்வர் தோத்தாத்திரி ஐயங்கார் உட்பட!!) எல்லார் சொன்னதையும் மீறித் தமிழ் படித்தேன். என் பிடிவாதத்துக்கு என் பிறந்த வீட்டில் ஆதரவு கிடைத்தது என் வெற்றியே! ஆனால், அதன் பிறகு … என் தமிழுக்கு எங்குமே ஆதரவும் இல்லை, மதிப்பும் இல்லைபென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் முனைவர் பட்டப் படிப்புக்கு வாய்ப்பு இருந்தது, அப்போதும் அதைப் புறக்கணித்து, 'தமிழ் தமிழ்' என்று தொடர்ந்தேன். பயனில்லை, வடமொழி கற்பித்தவர்களுக்கும் வெள்ளைக்காரருக்கும் மட்டுமே உயர்நிலைப் பதவி என்று போய்விட்டது. இப்போதும் பாருங்களேன், இங்கே அமெரிக்காவில் தமிழ் படிக்காதவர்களுக்குத்தான் நல்ல வேலையும் பணமும் பதவியும். ஒன்று, நீ வெள்ளையினத்தவனாக இருக்கணும் அல்லது தமிழாசிரியனாக இருக்கக்கூடாது. தமிழாசிரியனுக்கு உயர்நிலைப் பதவி இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில், 'எதுக்காக ஐயா தமிழ் படிக்கணும்’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 


வயிற்றுப் பிழைப்புக்காகவோ வேறு எதற்காகவோ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் 'தமிழ் புழங்காத இடங்களில் வேலை செய்யமாட்டோம்' என்று இருக்க முடியுமா அவர்களுடைய 'தமிழ்ப்பற்று’ என்பதெல்லாம் அவரவருடைய வீட்டளவில், தனியாக அமைக்கப்படும் மன்றங்களில், மட்டுமே. இதுவே உண்மையான நிலை. அந்த நிலை பிடிக்காவிட்டால் அவர்கள் எல்லாரும் தமிழகத்துக்குத் திரும்பவேண்டும், இல்லையா?

தமிழகத்திலேயே … நான் தமிழ் முதுகலை வகுப்பில் படித்த காலத்தில் (1961-1963) … திடீரென்று ஒரு நாள் … பேராசிரியர் இலக்குவனார் ஊதா நிறச் சட்டையும் ஊதா நிறத்தில் இரட்டைக்குழல் கால்-உடுப்பும் அணிந்த தோற்றத்துடன் வகுப்புக்கு வந்தார். திடுக்கிட்டுப்போனோம். தோழியர்கள் அதைப் பற்றிப் பேசிச் சிரித்தோம்: 'இதென்ன, நம் ஐயா ஒரு ரெயில்வே க்லீனர் போலக் கருநீலச் சட்டை-சராயுடன்’ என்று. இது உண்மை. அதன் பிறகு, ஔவை + அ.கி.ப இருவரைத் தவிர்த்து எல்லா ஆசியர்களுமே அந்த ‘மேலை நாட்டு’ உடையில் வகுப்புக்கு வந்தார்கள்; ஆனாலும் அவர்கள் கற்பித்தது தமிழ்தானே!! ஒருவரின் உடைக்கும் அவருடைய மனதில் இருக்கும் தமிழுக்கும் தொடர்பேயில்லை என்பது புலனாயிற்று.

நிற்க. 

எத்தனை மொழிகள் படித்தாலும் நல்லதே. மூளையின் சுறுசுறுப்புக்கு அது மிகவும் உதவும். என் இனிய நண்பர் டேவிட் ஷுல்மன் (David Shulman) பல மொழிகள் படித்ததினால்தான் சுந்தரர் தேவாரத்தை மொழிபெயர்க்க முடிந்தது!

நிற்க … 

உலகப் பேரளவில், இந்தியப் பெருநாட்டளவில், நடப்பதை மாற்றுவதுக்குத் தேவையான அறிவும் திறமையும் எனக்கு இல்லை. என்னால் இயலாததைச் செய்ய முடியாத நிலையில், குற்றம் சொல்லாமல் ஒதுங்கி நின்று, என்னளவில், என் வீட்டளவில், நான் செய்யும் தொழிலளவில் என்ன செய்ய இயலுமோ அதை மட்டும் செய்து மன நிறைவு அடைகிறேன்; அவ்வளவே. 

தமிழகத்தில் நீங்கள் பார்க்கும் அருவருப்பு நிலையை உங்களால் மாற்ற முடிந்தால் செய்யவும், பின்னணியில் நின்று உதவுவேன். [நம் பழைய கால இந்தி எதிர்ப்புப் போராட்டம் நினைவிருக்கா? அப்போது நான் கல்லூரி ஆசிரியை, வெளிப்படையாகப் போராட்டத்தில் ஈடுபடவில்லை; ஆனால் … மறைமுகமாக … போராளிகளுக்கு என் அம்மா வீட்டில் இடம் கொடுத்து உதவி செய்தேன். இது பிறருக்குத் தெரியாது!! ;-) ] 



///1400/1700 ஆண்டுகளுக்கு முன் பத்திக் (பக்திக்) காலத்திற்குச் சற்றுமுன், களப்பாளர் காலத்திலோ, சங்கம் மருவிய காலத்திலோ,  தொடங்கிய சங்கதப் பெயர் வைக்கும் சீரழிவுப் பழக்கம் எங்கு வந்து நம்மைக் கொணர்ந்திருக்கிறது,  பாருங்கள்?  எவ்வளவு பெரிய சோகம் இது?//

ஐயா, அந்தக் காலத்தில் நாம் இருந்தோமா இல்லையா தெரியவில்லை (மறுபிறப்பில் நம்பிக்கை இருந்தால்). எப்படியோ இன்று இப்படி நாம் இருக்கிறோம். நம் முன்னவரைக் குறை சொல்லி என்ன பயன்? 

ஐயா, சங்கதப் பெயர் வைக்கும் பழக்கம் 'சீரழிவுப் பழக்கம்' என்ற நெருடலான உணர்வு உங்களை வாட்டிக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. ஆனாலும் … பாட்டனின் பெயர் பின்னவருக்கு இருப்பதையும் சுவைக்கிறீர்கள் என்றும் புரிகிறது. இது என்னைக் குழப்புகிறது. 

மேற்கொண்டு இனி என்ன செய்யலாம் என்று சொல்லவும். 

இப்படிக்கு,
தமிழாசிரியை ராஜம்

rajam

unread,
Feb 19, 2014, 2:02:21 PM2/19/14
to தமிழ் மன்றம்
ஏதோ கணினிச் சிக்கல்!! இழையின் தலைப்பில் யான் இட்ட “மொழிப்பற்றுச்சிக்கல்” என்பதில் உள்ள ஒற்று விடுபட்டிருக்கிறது. 
அதோடு, “சீறாப்புராணம்” என்ற் சொல்லில் இருக்க வேண்டிய “ப்” காணாமல் போயிற்று! ஏனென்று இப்போது தெரியவில்லை. கண்டுபிடிப்போம்

:-) :-) :-) 


வேந்தன் அரசு

unread,
Feb 19, 2014, 8:36:41 PM2/19/14
to தமிழ் மன்றம்



19 பிப்ரவரி, 2014 2:02 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

ஏதோ கணினிச் சிக்கல்!! இழையின் தலைப்பில் யான் இட்ட “மொழிப்பற்றுச்சிக்கல்” என்பதில் உள்ள ஒற்று விடுபட்டிருக்கிறது. 
அதோடு, “சீறாப்புராணம்” என்ற் சொல்லில் இருக்க வேண்டிய “ப்” காணாமல் போயிற்று! ஏனென்று இப்போது தெரியவில்லை. கண்டுபிடிப்போம்

:-) :-) :-) 

அலகிலா விளையாட்டு உடையான் அன்னவர்க்கே சரண் நாங்களே 
360.gif

iraamaki

unread,
Feb 19, 2014, 10:21:28 PM2/19/14
to tamil...@googlegroups.com
உங்கள் மடலுக்கு மறுமொழி அளிக்க விழைகிறேன். ஆனாற் சொந்தவேலை காரணமாய் வேறூர் செல்வதால் உடன் பங்குகொள்ள முடியவில்லை. போன இடத்தில் இணையத் தொடர்பு கிடைத்தால் பங்குகொள்கிறேன். இல்லையேல் 2 வாரங்களுக்குப் பொறுத்திருக்க வேண்டும். என்னை மன்னியுங்கள்.
 
அன்புடன்,
இராம.கி.  
From: rajam
Sent: Thursday, February 20, 2014 12:21 AM

rajam

unread,
Feb 19, 2014, 11:00:27 PM2/19/14
to தமிழ் மன்றம்
///… ஆனாற் சொந்தவேலை காரணமாய் வேறூர் செல்வதால் உடன் பங்குகொள்ள முடியவில்லை.///

அச்சோச்சோ, மன்னிக்கவும் தமிழைத் தவிரத் தங்களுக்குச் ‘சொந்தவேலை’ என்று ஒன்று தனியாக இருப்பதை உணராத முட்டாள் எனக்குத் தமிழே வேலை!!!!!! :-( 

என்னுடைய மடலுக்கு மறுமொழியை யான் எதிர்பார்க்கவில்லை. கவலற்க. 


Hari Krishnan

unread,
Feb 20, 2014, 2:51:05 AM2/20/14
to தமிழ் மன்றம்

2014-02-20 0:32 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அதோடு, “சீறாப்புராணம்” என்ற் சொல்லில் இருக்க வேண்டிய “ப்” காணாமல் போயிற்று! ஏனென்று இப்போது தெரியவில்லை. கண்டுபிடிப்போம்

யாரையும் சீறாத புராணமோ?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

rajam

unread,
Feb 20, 2014, 1:38:26 PM2/20/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
///யாரையும் சீறாத புராணமோ?///

இதுக்கு மருத்துவர் செம்மல் ஐயா அவர்கள்-தான் விளக்கம் சொல்ல இயலும். 


காசு கொடுக்காமலே படிக்காமலே ‘இலக்கணக்காரி மட்டுமே' என்ற பட்டத்தைப் பெற்ற எனக்குத் தெரிந்தது: 

1. “சீறாத புராணம்” என்ற பொருளில் “த”கரம் இல்லாமல் புழங்கினாலும் “சீறா” என்ற (ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகிய) சொல்லுக்கும் “புராணம்” என்ற சொல்லுக்கும் இடையில் “ப்” என்ற ஒற்று வந்தே ஆகணும்!  வேந்தன் ஐயா விலக்கும் ‘ஒற்று' இங்கே வந்தே ஆகணும்! இல்லே … என் தமிழாசிரியர்கள் இலக்குவனார், ஔவை, அ.கி.ப, சுப.அண்ணாமலை … எல்லார் கிட்டெயும் சொல்லிக் கொடுத்திடுவேன்!!!

2. “சீறா” என்பது வினையெச்சமானால் (செய்யா எனும் வாய்பாட்டு வினயெச்சம் ஆனால்) அதைத் தொட்டடுத்து வரும் பெயர்ச்சொல்லை (‘புராணம்') மட்டுமே கொண்டு “சீறா புராணம்” என்று ஒரு முழுமையான தொகைச் சொல்லை உருவாக்க முடியாதே. அடுத்தடுத்துப் பல வினையெச்சங்கள் வந்து ஒரு வினைமுற்றில் எல்லாம் ‘சுபமாக' முடியவேண்டும்! :-) அந்த வினைமுற்று இங்கே “சீறா புராணம்” என்று தவறாக மின்னாக்கப்பட்ட தொடரில் இல்லையே.

**********************
என் கணினிக்குக் குளிர்காலக் காய்ச்சல்-போல. ஊரே ‘கணினியூர்' ஆனதினாலே பல பெரும் குழப்பம் எப்போதும் மிகுந்துகொண்டேயிருக்கும். ஆனாலும், பேரரசன் இராசராச சோழனின் ‘நாடு பிடி வெறி’யைக் காட்டிலும் திறமிக்க தொழிலகங்களின் பரவல் வியக்கத்தக்கது; அதை விளக்க எனக்குத் திறமையில்லை. என்ன நடக்கிறது என்று புரியாது. ஆனால், மின்வழியே போகும் தமிழ் எழுத்துகள் தலைதடுமாறுகின்றன; யார் பொறுப்பு என்று தெரியவில்லை. எனவே, என் தட்டச்சுப் பிழைகளை நேரிய முறையில் பொறுத்தருளவும்.

எப்போதும்போல் … யான் ஒரு 'சீறு தமிழச்சி’யே.  No ஒற்று! ;-) 

அன்புடன்,
ராஜம்


--

Mani Manivannan

unread,
Feb 20, 2014, 1:49:28 PM2/20/14
to tamilmanram, Hari Krishnan
2014-02-21 0:08 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

என் கணினிக்குக் குளிர்காலக் காய்ச்சல்-போல. ஊரே ‘கணினியூர்' ஆனதினாலே பல பெரும் குழப்பம் எப்போதும் மிகுந்துகொண்டேயிருக்கும். ஆனாலும், பேரரசன் இராசராச சோழனின் ‘நாடு பிடி வெறி’யைக் காட்டிலும் திறமிக்க தொழிலகங்களின் பரவல் வியக்கத்தக்கது; அதை விளக்க எனக்குத் திறமையில்லை. என்ன நடக்கிறது என்று புரியாது. ஆனால், மின்வழியே போகும் தமிழ் எழுத்துகள் தலைதடுமாறுகின்றன; யார் பொறுப்பு என்று தெரியவில்லை. எனவே, என் தட்டச்சுப் பிழைகளை நேரிய முறையில் பொறுத்தருளவும்.

அன்புள்ள முனைவர் ராஜம் அவர்களுக்கு,

உங்கள் கணினிக்கோ அல்லது எர்த்லின்க் சேவைக்கோ அல்லது உங்கள் உலவிக்கோ ஏதோ ஒன்றுக்கு நிச்சயம் பூச்சி பிடித்திருக்கிறது.  அவ்வப்போது அது சில எழுத்துகளை விழுங்கி விடுகிறது.  இதை சி-தமிழ் குழுமத்திலும் பார்த்திருக்கிறேன்.  என்னிடமும், மேக் கணினியும், எர்த்லின்க் சேவையும் இருக்கிறது.  அதில் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

rajam

unread,
Feb 20, 2014, 7:23:02 PM2/20/14
to தமிழ் மன்றம்
அன்புள்ள நண்பர் மணிவண்ணனுக்கு வணக்கம். 

Thanks *so much*! 

Still not able to figure out the source of the corruption; nevertheless, I have a feeling that there’s been some foul play. 

கவனமாக இருப்போம். 

மிக்க நன்றியுடன்,
ராஜம்

--

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2014, 8:10:09 PM2/20/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



20 பிப்ரவரி, 2014 1:38 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

///யாரையும் சீறாத புராணமோ?///

இதுக்கு மருத்துவர் செம்மல் ஐயா அவர்கள்-தான் விளக்கம் சொல்ல இயலும். 


காசு கொடுக்காமலே படிக்காமலே ‘இலக்கணக்காரி மட்டுமே' என்ற பட்டத்தைப் பெற்ற எனக்குத் தெரிந்தது: 

1. “சீறாத புராணம்” என்ற பொருளில் “த”கரம் இல்லாமல் புழங்கினாலும் “சீறா” என்ற (ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகிய) சொல்லுக்கும் “புராணம்” என்ற சொல்லுக்கும் இடையில் “ப்” என்ற ஒற்று வந்தே ஆகணும்!  வேந்தன் ஐயா விலக்கும் ‘ஒற்று' இங்கே வந்தே ஆகணும்! இல்லே … என் தமிழாசிரியர்கள் இலக்குவனார், ஔவை, அ.கி.ப, சுப.அண்ணாமலை … எல்லார் கிட்டெயும் சொல்லிக் கொடுத்திடுவேன்!!!



சீறா     புராணம் என்றாலும் சீறாப்புராணம் என்றாலும் ஒன்றே போல ஒலிக்கணும். தமிழ்ச்சொற்களில் முதலாக வரும் வல்லினம் வலிந்துதான் ஒலிக்கும்.  அதனால் பொருளும் ஒன்றே. சீறா உரை, சீறாவுரை பொருள் மாறுமா?
சீறாபுராணம் என்பது பிழை. புகரம் அன்பு எனும் சொல்லில் வரும் புகரம் போல் ஒலிக்கும் அதனால் ஒற்று இடணும்.

பலரும் கல்கண்டு என எழுதுகிறார்கள், இதை கல்க்கண்டு அல்லது கற்கண்டு என எழுதணும்
கல்த்தாழை அல்லது கற்றாழை


Hari Krishnan

unread,
Feb 20, 2014, 9:52:50 PM2/20/14
to வேந்தன் அரசு, தமிழ் மன்றம்

2014-02-21 6:40 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கல்த்தாழை அல்லது கற்றாழை

ம்க்கும்.  கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர்.  :D

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2014, 7:33:36 AM2/21/14
to Hari Krishnan, தமிழ் மன்றம்



20 பிப்ரவரி, 2014 9:52 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-02-21 6:40 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

கல்த்தாழை அல்லது கற்றாழை

ம்க்கும்.  கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர்.  :D



அது கற்று எனும் கிளவியின் கிளர்ந்த கிளை. 

Hari Krishnan

unread,
Feb 21, 2014, 8:52:59 PM2/21/14
to வேந்தன் அரசு, தமிழ் மன்றம்

2014-02-21 18:03 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ம்க்கும்.  கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர்.  :D



அது கற்று எனும் கிளவியின் கிளர்ந்த கிளை. 

ஆமாம்.  கல்த்து என்ற கிளவியினின்றும் கிளர்ந்த கல்த்தாழையைப் போன்றே.

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2014, 10:15:13 PM2/21/14
to Hari Krishnan, தமிழ் மன்றம்



21 பிப்ரவரி, 2014 8:52 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-02-21 18:03 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

ம்க்கும்.  கல்த்தாரை கல்த்தாரே காமுறுவர்.  :D



அது கற்று எனும் கிளவியின் கிளர்ந்த கிளை. 

ஆமாம்.  கல்த்து என்ற கிளவியினின்றும் கிளர்ந்த கல்த்தாழையைப் போன்றே.


நீங்க சொல்லுவதும் சரியாக இருக்கலாம்

நல் துணை = நல்த்துணை= நற்றுணை ஆவது நமச்சிவாயமே
கல் + தூண் = கல்த்தூண்= கற்றூண்

rajam

unread,
Feb 22, 2014, 2:19:03 AM2/22/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
யப்பப்பா … தொல்காப்பியருக்குத் தலைநோவாம், தெரிவிக்கச் சொன்னார்! ;-)

வேந்தன் அரசு

unread,
Feb 22, 2014, 8:56:03 AM2/22/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



22 பிப்ரவரி, 2014 2:19 முற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
சொல்+ கள் = சொல்க்கள் = சொற்கள்

 

வேந்தன் அரசு

unread,
Feb 22, 2014, 9:08:09 AM2/22/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



22 பிப்ரவரி, 2014 2:19 முற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

யப்பப்பா … தொல்காப்பியருக்குத் தலைநோவாம், தெரிவிக்கச் சொன்னார்! ;-)

ராஜம் அம்மா

தொல்காப்பியன் எனக்கு தலைவலி உண்டாக்குகிறார்.

ஊரன், பெயரன், பேரன், நக்கீரன்ம் மரன் என்ற சொற்கள் தவறு. ரகத்தை அடுத்து  ணகரம்தான் வரணும். ரகரமும்  ணகரமும் பிறக்கும் இடம் ஒன்று. றகரமும் னகரமும் பிறக்கும் இடம் ஒன்று. நான் ஊரந், பெயரந், பேரந், நக்கீரந், மரந்  என்றுதான் பலுக்க இயலும். 

ஊரண், பெயரண் என்பன பலிக்க எளிது. அரண்மனை,

ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), ருகரத்துகக்கு நா இன்னும் மடிய வேண்டும்

காய்தல் உவத்தில் இன்றி எண்ணிப்பாருங்கள்

சில பேர் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். அவர்களாலும் இயலாது.

DEV RAJ

unread,
Feb 22, 2014, 2:29:58 PM2/22/14
to tamil...@googlegroups.com, Hari Krishnan
On Saturday, 22 February 2014 06:08:09 UTC-8, வேந்தன் அரசு wrote:
ஊரண், பெயரண் என்பன பலிக்க எளிது. அரண்மனை,
ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), ருகரத்துகக்கு நா இன்னும் மடிய வேண்டும்
காய்தல் உவத்தில் இன்றி எண்ணிப்பாருங்கள்

 
ஐயா சொல்வது சங்கத இலக்கண அமைப்புக்கு மிக நெருக்கமாக
இருக்கிறது



தேவ்

வேந்தன் அரசு

unread,
Feb 22, 2014, 2:36:19 PM2/22/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



22 பிப்ரவரி, 2014 2:29 பிற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
ஓசை ஒலிப்பு பொதுமைதானே.
இதே காரணத்தால் தமிழுக்கு Thamirl  என எழுத்துக்கூட்டு கொடுக்கலாம்.  ழகரமும் ரகரும் ஓரிடத்து பிறக்கும். அதலா rl, ழகரம் போல் பலுக்கப்படும். EARL  எனும் கிளவியை பலுக்கிப்பாருங்கள்.


--

C.R. Selvakumar

unread,
Feb 24, 2014, 4:34:17 PM2/24/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
வேந்தனாரே,

நீங்கள் சொல்வன ஏற்புடைதல்ல! //
//சொல்+ கள் = சொல்க்கள் = சொற்கள்//
என்று  நீங்கள் கொள்வது தவறு என்பேன். லகர ஒற்றை அடுத்து வல்லின ஒலிப்பு வந்தால்
லகர ஒற்றை வலித்து ஒலிக்க வேண்டுமாகையால், லகர ஒற்று
றகர ஒற்றாகத் திரிகின்றது (அல்லது திரித்துக்கொண்டால் இயைபுடையதாக
மாறுகின்றது- இது புணர்ச்சிவிதிகளுள் ஒன்று).
சொல்கள் என்று கட்டாயம் சொல்லலாம், ஆனால் அதில் வரும் ககரம்
மெலிந்த ககரமாக இருக்கும்.  இதனால்தான்  "பல்கிப்பரவ வேண்டும்", "நல்கினேன்"
என்று சொன்னால் பல்கி, நல்கி என்பதில் வரும் கிகரம் மெலிந்த கிகரம்.
கல்கி என்னும் கிழமை இதழின் சரியான
தமிழ் ஒலிப்பு பல்கி என்பதில் வரும் மெலிந்த கிகரம் போன்ற மெலிந்த ஒலிப்பு.
"கல்க்கி"  என்றால் (இப்படித் தமிழில் கூடாது, ஆனால் முயன்றால் சொல்லக்கூடியதே,
அதிக ஆற்றல் தேவை))  அதனைத் தமிழில் கற்கி என்று சொல்ல வேண்டும். நல்+கல்வி
நற்கல்வி என்று ஆவது போன்று. நற்கிழமை, தற்கிழமை (தன்னுரிமை) என்றெல்லாம்
ஆகும். தமிழின் ஒழுக்க முறை ஆற்றலைச் சுருக்குமாறும்,  ஒலியெழுப்பும் முறையை நுணுகி ஆய்ந்ததன்
அடிப்படையாகவும் அமைந்தது. தமிழர்கள் தொன்முது காலத்திலேயே, மொழி ஓர்
கருவி என்றும் அதனை நாம் முறையாக தேவைக்கு ஏற்ப ஆக்கிக்கொள்ளலாம்  என்று
அறிந்திருந்தார்கள். தேவைக்கு ஏற்ப என்பதை எப்படிவேண்டுமானாலும் என்று பொருள்
கொண்டுவிடாதீரகள்!. ஆற்றல் குறைவாகவும் நிலைப்புத்தன்மை கூடுதலாகவும், இனிமை உடையதாகவும், 
முறைமைக்குட்பட்டதாகவும் ஆக்கிக்கொள்ளலாம்
என்று அறிந்தாக்கி இருக்கின்றார்கள் என்றே துணியலாம்.  

அன்புடன்
செல்வா


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

C.R. Selvakumar

unread,
Feb 24, 2014, 4:38:50 PM2/24/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
//ரகரமும்  ணகரமும் பிறக்கும் இடம் ஒன்று. //

தவறு ஐயா! ணகரம் பிறப்பது நடுவண்ணம். ரகரம் பிறப்பது பல்லண்ணம்.
றகரமும் னகரமும் ஒரே இடத்தில் பிறக்கின்றது என்பது சரி,

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

வேந்தன் அரசு

unread,
Feb 24, 2014, 7:19:11 PM2/24/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



24 பிப்ரவரி, 2014 4:38 பிற்பகல் அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

//ரகரமும்  ணகரமும் பிறக்கும் இடம் ஒன்று. //

தவறு ஐயா! ணகரம் பிறப்பது நடுவண்ணம். ரகரம் பிறப்பது பல்லண்ணம்.

தொல் சூத்திரம்: 

நுனி நா அணரி அண்ணம் வருட 
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

டகார ணகாரம் நுனி நா அண்ணம்.

 இவற்றின் விளக்கம் சொல்லுங்க செல்வா

--

வேந்தன் அரசு

unread,
Feb 24, 2014, 7:41:45 PM2/24/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



24 பிப்ரவரி, 2014 4:34 பிற்பகல் அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

வேந்தனாரே,

நீங்கள் சொல்வன ஏற்புடைதல்ல! //
//சொல்+ கள் = சொல்க்கள் = சொற்கள்//
என்று  நீங்கள் கொள்வது தவறு என்பேன். லகர ஒற்றை அடுத்து வல்லின ஒலிப்பு வந்தால்
லகர ஒற்றை வலித்து ஒலிக்க வேண்டுமாகையால், லகர ஒற்று
றகர ஒற்றாகத் திரிகின்றது

 அதேதான் நானும் சொல்லுகிறேன். சொல்க்கள் எனபதே திரிந்து சொற்கள் ஆகிறது.
படிப்படியாகத்தானே மொழி வளரும்


C.R. Selvakumar

unread,
Feb 25, 2014, 11:33:39 AM2/25/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
அன்புள்ள முனைவர் இராசம் அவர்களே,

என் கருத்தில் குற்றம் இருப்பின்  தயங்காது சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றேன்.
நாண் புரிந்துகொண்டிருப்பதையும், அறிந்ததையும் கீழே கூறுகின்றேன்.

தொல்காப்பியத்தில் கூறியுள்ள சில செய்திகளைக் கீழே இட்டுள்ளேன்:

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11



அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12



நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13



நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14
இந்நூற்பாக்களில் தகர-நகார பிறப்பியல் ஐயத்துக்கு இடம் இன்றியும்,
தெளிவு மிக்கதாகவும் கூறியிருக்கின்றார். அண்ணத்தில் எப்பகுதி என்றும்
நாவின் எப்பகுதி எப்படியான முறையில் உடன் இயைந்து ஒலிகள்
பிறக்கின்றன என்று கூறுகின்றார். இவற்றிலும் தகரகும் நகரமும் கொள்ளும்
ஒலி வேறுபாட்டை எப்படி உருவாக்குகின்றது என்பதை அவர் கூறவில்லை
(இந்நூற்பாவில்), ஆனால் நூற்பா 18 இல் கூறுகின்றார்.

நூற்பா 12 இல்  அணரி நுனி நா  என்று கூறுவதால் (அணர்தல் = உயர்தல், மேலெழுதல்,
அண்ணம், அண்ணாந்து பார்த்தல், அண்ணல் ஆகிய பல சொற்களுக்கும் ஒரே
வேர்ச்சொல்லே.)
நாவின் பகுதியைத் தெளிவாகக் கூறினார், ஆனால் அண்ணத்தில் எப்பகுதி
என்பதைத் தெளிவாகச் சுட்டவில்லை. இது பல்லை ஒட்டி இருக்கும் பல்லண்ண
மேட்டுக்கும் உட்பகுதி என்பது என் கணிப்பு (என் பட்டறிவாலும், இலங்கைத் தமிழர்கள்
முதற்கொண்டு தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலரின் பலுக்கலை, ஒலிப்பை
உற்றுக்கேட்டும், ஒலிப்பவர்களிடத்திலேயே குறுக்குக்கேள்விகள் கேட்டு  மீண்டும்
ஒலிக்கச்செய்து அவர்களால் உணரச்
செய்தும்  உறுதிப்பட்டு அறிந்து கூறுகின்றேன். இதனை மறுக்கொணாத வகையில் அகவயமாக இல்லாமல்
நிறுவ முடியும். ஆனால் அது பின்னர்.). நூற்பா 12 இன் முக்கிய செய்திகளுள் ஒன்று  "ஒற்ற " என்று
நுனிநா அண்ணத்தோடு உறவாடும் இயைபு கொள்ளும் முறையை விளக்கியதாகும்.
நூற்பா 11 இல் தகர-நகார விளக்கத்தில் சொன்ன  "நா நுனி பரந்து மெய் உற ஒற்ற"
என்பதோடு ஒப்பிட்டுக் காண வேண்டியது. அங்கே நுனிநா பரந்தும் மெய்யுறவும் ஒற்றும், ஆனால்
றகர-னகர ஒலிகளுக்கு நுனிநா மெய்யுற பரவ ஒற்றாது.  இந்த வேறுபாட்டைக் காட்டும் முகமாகவும்
அடுத்துக் கூறுகின்றார்.

அடுத்ததாக, ரகர ழகர ஒலிகளின் பிறப்பைக் கூறும் நூற்பா 13 இல், நுனிநா என்று நாவின் எப்பகுதி
என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார், ஆனால் அண்ணத்தின் எப்பகுதி என்று கூறவில்லை,
ஆனால் அண்ணத்தை வருடும் என்று தெளிவாகக் கூறுகின்றார்.
இங்கே அண்ணத்தை, அணரிய நாவின் நுனி நா, எவ்வாறு
அண்ணத்தோடு இயங்கி ஒலி எழுப்புகின்றது என்பது முக்கியம். வருட என்பதால் அண்ணத்தில் எங்கிருந்து
எங்குவரை என்னும் கேள்வி எழும். இவ்வொலிகள் அண்ணத்தை நுனிநா வருடுவதை வலியுறுத்துவதாகவே
கொள்கின்றேன். ழகரத்தின் ஒலிப்பில், நுனி நா எப்படித் தொட்டும் தொடாமலும் நடுவண்ணம் அல்லது
பல்லண்ணத்துக்கும் உட்பகுதியான  நடுவண்ன அண்மைப் பகுதியான அண்ணப்பகுதியில் வருடுகின்றது
என்பது விளக்க அரிதானது. ரகரத்தின் ஒலியும் வருடி எழுப்புவதே, அந்த வருடலும் நுனிநாவே செய்கின்றது,
ஆனால் ழகரம் தொடும் இடத்துக்கு அருகே பல்லைநோக்கிய  அண்ணப்பகுதியில் வருடுகின்றது.
ழகரத்தை இன்று ஒலிப்பவர்களில் பலர் ளகரத்துக்கு நூற்பா 14 இல் கூறுகின்றாரே "நா விளிம்பு வீங்கி"
அப்படி நா விளிம்பு வீங்கியும் நுனிநா நடுவண்னப்பகுதியில் வருடவும் ழகரம் எழுப்புகின்றார்கள்.
நானும் அப்படித்தான் செய்கின்றேன். ஆனால்  நா விளிம்பு அதிகம் வீங்காமலும் என்னால் தெளிவாக
ழகரம் ஒலிக்க இயலும்.  பழ்ழ்ழம் என்று அழுத்திச்சொல்லிப்பாருங்கள், நா விளிம்பு வீங்கி ஒலிப்பதைப்
பார்க்கலாம். ஆனால் அழுத்திச்சொன்னாலும் நாவிளிம்பு வீங்காமல் சொல்லவும் முடியும்.
ரகர ஒலிப்பு ஏறத்தாழ ழகரம் வருடும் அண்ணப்பகுதி, ஆனால் அதே  பகுதி என்றோ, அதே போன்ற
வருடல் என்றோ கொள்ள வேண்டுவது தேவை இல்லை. மற்ற ஒலிகள் போல் இல்லாமல், இவை
இரண்டும் நுனிநா அண்ணத்தை வருட எழுப்பும் ஒலி.

தொல்காப்பிய நூற்பா 14இல் கூறுவது மிக விளக்கமானது. ளகர ஒலிப்பு துல்லியமானது, ஆனால்
இன்றைய லகர ஒலிப்பு நூற்பா 14 இல் இருந்து சற்றேவேறானது (அதாவது நா விளிம்பு ளகரத்துக்கு
வீங்குவது போல் அவ்வளவு வீங்கவோ, ளகரத்துக்கு ஒற்றி வருடும் அளவு ஒற்றி வருடவோ செய்வது
கிடையாது (நான் உணர்ந்த அளவிலே).  இங்கே நூற்பா 13 இல் இருந்து வேறுபடுத்தி,
ஒற்றி வருடுதல் பற்றியும் நா விளைம்பு வீங்குவதைப் பற்றியும்  அண்பல் வீங்கிய நாவிளிம்பு
அண்பல் உறவைப் பற்றியும் கூறுகின்றார். நுனிநாவைப் பற்றியோ நாவின் எப்பகுதி
ஒற்றி வருடுகின்றது என்பதைப் பற்றியோ ஐயம் திரைபற கூறவில்லை என்று நினைக்கின்றேன்.
நான் மேலே கூறிய அனைத்தும் நேரடியாக தொல்காப்பிய நூற்பாக்களை நான் உணர்ந்து
அறிந்தவை. இனி உரையாசிரியர்களும் முனைவர் இராசம் போன்ற உயர் அறிஞர்களும்
கூறுபவையும் யாவை என்று அறிந்து ஓர்ந்து பார்த்து என் கருத்துகளைத் திருத்திக்கொள்வேன்.

நூற்பாக்கள் 7,8, 9 ஆகியவற்றில் க-ங, ச-ஞ, ட-ண, ஆகியவற்றுக்கு கூறிய
விளக்க வகையையும் அடுத்து வரும் 11, 12, 13, 14 ஆகிய நூற்பாக்களின் விளக்கத்தின்
முறையையும் அடுத்து வரும் நூற்பாக்களின் விளக்கத்தின் முறைகளையும் பிரித்தறிய
வேண்டும் என்பது என் கருத்து. நூற்பா 16 இல் "பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16"
என்று கூறியதால் அது மேல் வரிசை முன்பற்களோடு கீழிதழ் இயைதல் என்று கூறாமலே
உணரப்படுவது.  அதுபோலவேதான் ரகர-ழகர வருடலும்.

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

C.R. Selvakumar

unread,
Feb 25, 2014, 12:22:02 PM2/25/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
சில எழுத்துப்பிழைகள் உள்ளன. பொருத்தருள்க!

நாண் --> நான்
தகரகும் --> தகரமும்
திரைபற  --> திரிபற
விளைம்பு  --> விளிம்பு

அன்புடன்
செல்வா

C.R. Selvakumar

unread,
Feb 25, 2014, 12:32:37 PM2/25/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
//அதேதான் நானும் சொல்லுகிறேன். சொல்க்கள் எனபதே திரிந்து சொற்கள் ஆகிறது.
படிப்படியாகத்தானே மொழி வளரும்//

வேந்தனாரே,

நான் கூறுவது லகர ஒற்று திரிகின்றது என்பது. நற்கல்வி என்றாலும் நற்புரவி என்றாலும், நற்சிந்தனை என்றாலும்
நற்தலைவர் என்றாலும் எந்த வல்லினமாக இருந்தாலும் லகர ஒற்று றகர ஒற்றாக மாறுகின்றது.

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

C.R. Selvakumar

unread,
Feb 25, 2014, 12:35:49 PM2/25/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
அன்புள்ள வேந்தன் என்று எழுத வந்தவன் 
ஏனோ அன்புள்ள முனைவர் இராசம் என்று  எழுதிவிட்டேன்.
இருவ்ருமே என் அன்புக்குரியவர்கள் ஆயினும்,வேந்தனார்
மடலைக் குறித்தே எழுதினேன். 

அன்புடன்
செல்வா
2014-02-25 11:33 GMT-05:00 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:

C.R. Selvakumar

unread,
Feb 25, 2014, 12:37:35 PM2/25/14
to தமிழ் மன்றம், Hari Krishnan
அன்புள்ள வேந்தன் என்று எழுத வந்தவன் 
ஏனோ அன்புள்ள முனைவர் இராசம் என்று  எழுதிவிட்டேன்.
இருவருமே என் அன்புக்குரியவர்கள் ஆயினும்,வேந்தனார்
மடலைக் குறித்தே எழுதினேன். 

அன்புடன்
செல்வா
2014-02-25 11:33 GMT-05:00 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:

rajam

unread,
Feb 25, 2014, 10:39:14 PM2/25/14
to தமிழ் மன்றம், C.R. Selvakumar
///அன்புள்ள வேந்தன் என்று எழுத வந்தவன் 
ஏனோ அன்புள்ள முனைவர் இராசம் என்று  எழுதிவிட்டேன்.///

ஆகா … 'எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவாகிய என்னை உணர்ந்துகொண்டது தங்கள் பிறவிப் பயனே, ஐயனே, செல்வா!!!’ ;-) 
என்னிடம் அன்பு செலுத்தாத “தமிழர்” இருக்கமுடியாது, எனவே யாம் உம்மை மன்னித்தோம்!!! :-) :-) :-)  

பகடிக்கு மன்னிக்கவும். 

நிற்க.

இந்த நாசமாய்ப் போகவேண்டிய ’சாதிப் பேய்' பற்றிய கட்டுரையை உருப்படியாக எழுதவும் அன்றாட வாழ்க்கை நிலைக்கும் நேரம் தேவையாகிவிட்டது, என்ன செய்ய. சில நாள் சென்று வருவேன். அதற்குள் … அன்பர்களும் நண்பர்களும் ஆர்வலரும் தொல்காப்பியத்தையும் சங்கப்பாடல்களையும் அதுக்கப்பாலெ இறையனார் களவியல் உரையையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துக்கொள்ளவும்.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்

C.R. Selvakumar

unread,
Feb 26, 2014, 8:37:51 AM2/26/14
to rajam, தமிழ் மன்றம்
//ஆகா … 'எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவாகிய என்னை உணர்ந்துகொண்டது தங்கள் பிறவிப் பயனே, ஐயனே, செல்வா!!!’ ;-) 
என்னிடம் அன்பு செலுத்தாத “தமிழர்” இருக்கமுடியாது, எனவே யாம் உம்மை மன்னித்தோம்!!! :-) :-) :-)  //

நன்றி, நன்றி!!  :) தமிழர்களுக்குத் தமிழாசிரியர் என்றால் இறையே!

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் அல்லவா, அதுபோல்
தமிழர்களுக்குத் தமிழாசான், தமிழ் ஐயை என்றால்  அவர்கள் எல்லாம் ஒன்றே!
அன்பு, அறிவு, ஆற்றல், ஆழகுணர்வு அனைத்தும் அளிக்கும் இன்னொளி!

அன்புடன்
செல்வா

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2014, 8:41:06 PM2/26/14
to தமிழ் மன்றம், Hari Krishnan



25 பிப்ரவரி, 2014 11:33 முற்பகல் அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள முனைவர் இராசம் அவர்களே,

என் கருத்தில் குற்றம் இருப்பின்  தயங்காது சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றேன்.
நாண் புரிந்துகொண்டிருப்பதையும், அறிந்ததையும் கீழே கூறுகின்றேன்.



செல்வா

தொல்காப்பியத்துக்கு ராஜம் அம்மாதான் ஆசான்.

ரகரமும் னகரம் இணைந்து வரும் சொற்கள் ஆண்பால் பெயர் சொற்களின் இறுதி மட்டுமே. (மரன் எனும் போலி அன்மையில்)

பாணர்,  பரணர், புணர், கரண், பரண். வீணர்,  வீராணம், 

ரகரத்தை நாம் வெள்ளையர்கள் R  உச்சரிப்பது போல் பலுக்கணும்,

ஆங்கிலத்தில் R பல இடங்களில் ஒலிஅமைதியாக இருக்கும். தெலுகு மொழியிலும் அவ்வாறே. பருப்பு= பப்பு, மருந்து = மந்து, விருந்து = விந்து

அதனால் ரகரமும்  ணகரமும் பிறப்பிடம் ஒன்றே. அதனாலே  ரகரமும் னகரமும் ஒருங்கு வராது என்பது என் சிற்றறிவு.

DEV RAJ

unread,
Feb 27, 2014, 3:34:38 PM2/27/14
to tamil...@googlegroups.com
On Saturday, 22 February 2014 06:08:09 UTC-8, வேந்தன் அரசு wrote:
ஊரண், பெயரண் என்பன பலிக்க எளிது. அரண்மனை,
ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), 


ப்ர + நவ - ப்ரணவ
உத்தர + அயநம் - உத்தராயணம்
ராம + அயநம் - ராமாயணம்



தேவ்
 

Hari Krishnan

unread,
Feb 27, 2014, 9:21:22 PM2/27/14
to தமிழ் மன்றம்

2014-02-28 2:04 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
ராம + அயநம் - ராமாயணம்

அரவான் என்று பெரிய அளவில் பேசப்படும் மகாபாரதக் கதாபாத்திரத்தின் வடமொழிப் பெயர் (வில்லியும் இதே வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்) இராவன்.   ரகரத்துக்கு முன்னால் இகரம் சேர்ந்தும் அன் விகுதியுடன் முடிந்துமிருப்பதால், இதன் மூல வடிவம் என்னவாக இருக்கும் என்று பலகாலாம் தேடியிருக்கிறேன்.  வடமொழி மூலத்திலும் இராவன் என்றுதான் இருக்கிறது.

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் ஷண்முகநாதா சுப்ரம்மண்யம் என்றும் கோவிந்தம் பஜே என்றும் கேசவம் நாராயணம் மாதவம் ஹ்ரிஷீகேஸம் என்றும் அம் விகுதியில் முடியும் பெயர்கள்/விளிகள் வடமொழியில் ஏராளம்.

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2014, 9:41:08 PM2/27/14
to தமிழ் மன்றம்
ஐயன்மீர்

நான் சொல்லியது அரன், கீரன் எனும் சொல்லைப்போல் ரகரமும் அனகரமும் அண்டை எழுத்துகளாக உள்ள சொல். 

ரகர குறிலும் ருகரமும் தான் இயலபாக இல்லை, அரன், அருன் எனும் சொற்கள் இல்லை


27 பிப்ரவரி, 2014 9:21 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Hari Krishnan

unread,
Feb 27, 2014, 9:49:40 PM2/27/14
to தமிழ் மன்றம்

2014-02-28 8:11 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஐயன்மீர்

நான் சொல்லியது அரன், கீரன் எனும் சொல்லைப்போல் ரகரமும் அனகரமும் அண்டை எழுத்துகளாக உள்ள சொல். 

இராவன்.

DEV RAJ

unread,
Feb 27, 2014, 10:23:58 PM2/27/14
to tamil...@googlegroups.com
இராவாந் - சரியான வடிவம்
இராவதி - பெண் பால்

irA -
इरा
a draught (especially of milk) ,food , refreshment, comfort , enjoyment ,the earth 

இராவாந் - [பொதுவாக] செல்வ வளம் மிக்கவன் என்று பொருள் 
இராவதி - கத்ருவின் மகள்,

கோவிந்தம், நாராயணம், மாதவம் - இரண்டாம் வேற்றுமையுருபு
இணைவதால் தோன்றுவன

Nominative - GovindaH
Accusative - Govindam


தேவ்

C.R. Selvakumar

unread,
Feb 27, 2014, 11:20:39 PM2/27/14
to தமிழ் மன்றம்
அன்புள்ள வேந்தனாரே,

//ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), ருகரத்துகக்கு நா இன்னும் மடிய வேண்டும்

காய்தல் உவத்தில் இன்றி எண்ணிப்பாருங்கள்//

எனக்குப் புரியவில்லை.  உரன், மரன் என்பன தமிழ்ச்சொற்கள் அல்லவா?
அவருன் மகனாமே? அவருன் தந்தையாமே? யாருன்னுடைய நண்பன்?
அவரை யாருன்னு நினைச்சே! இவரு யாருன்னே தெரியலையே!

ஏன் இப்படியெல்லாம் இல்லையா? நான் ஏதும் தவறுதலாகப் புரிந்துகொன்டிருக்கின்றேனா?

அன்புடன்
செல்வா

C.R. Selvakumar

unread,
Feb 27, 2014, 11:38:04 PM2/27/14
to தமிழ் மன்றம்
அன்புள்ள தேவ்,

ஏன்  ப்ர + நவ - ப்ரணவ என மாறுகின்றது? இங்கே ர+ந = ரண
ஆனால்  அடுத்த இரண்டு காட்டுகளில் புணர்ச்சிவிதியால் (நிலை மொழியில் அகர உயிர் + அகர  வருமொழி)
ஆகாரமாக நீளுவது சரி, ஆனால் ஏன் யகரத்தை அடுத்து வரும் நகரம் ணகரமாகத் திரியவேண்டும்?
அயநம் என்பதில் யகரத்தை அடுத்து நகரம் நிற்கின்றதே?! இது முதலில் வரும் ர+ந போன்றதும் அன்றே?

அன்புடன்
செல்வா



தேவ்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Feb 28, 2014, 1:43:23 AM2/28/14
to tamil...@googlegroups.com
On Thursday, 27 February 2014 20:38:04 UTC-8, செல்வா wrote:
அன்புள்ள தேவ்,
ப்ர + நவ - ப்ரணவ
உத்தர + அயநம் - உத்தராயணம்
ராம + அயநம் - ராமாயணம்

ஏன்  ப்ர + நவ - ப்ரணவ என மாறுகின்றது? இங்கே ர+ந = ரண
ஆனால்  அடுத்த இரண்டு காட்டுகளில் புணர்ச்சிவிதியால் (நிலை மொழியில் அகர உயிர் + அகர  வருமொழி)
ஆகாரமாக நீளுவது சரி, ஆனால் ஏன் யகரத்தை அடுத்து வரும் நகரம் ணகரமாகத் திரியவேண்டும்?
அயநம் என்பதில் யகரத்தை அடுத்து நகரம் நிற்கின்றதே?! இது முதலில் வரும் ர+ந போன்றதும் அன்றே?

 
சங்கத இலக்கண விதி அவ்வாறுள்ளது. 
ந’ ரகரத்தை அடுத்ததாக இருக்க வேண்டும் என
இல்லை. ஒரு சொல்லில் ரகரம் முன்னரும், நகரம்
பின்னரும் இடம் பெற்றால் போதுமானது. பாதராயண போன்ற பல
காட்டுகள். ஹரிகி அவர்கள் சொன்ன இராவாந் போன்றவை
மதுப் ப்ரத்யமாவதால் ’ந்’ ண் என மாறுவதில்லை -
எ கா: ப்ரஜாவாந், ஸ்ரீமாந்


தேவ்

Hari Krishnan

unread,
Feb 28, 2014, 1:46:34 AM2/28/14
to தமிழ் மன்றம்

2014-02-28 12:13 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
மதுப் ப்ரத்யமாவதால் ’ந்’ ண் என மாறுவதில்லை -
எ கா: ப்ரஜாவாந், ஸ்ரீமாந்

சூர்ப்பம் நகா = சூர்ப்பணகா.  (மூன்று சுழி ணகரம் ஏன் போட வேண்டும் என்று மணி மணிவண்ணன் கேட்ட ஆரம்ப காலங்களில் இதை விளக்கத் தெரிந்திருக்கவில்லை.  அவர் கேட்டதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்த விதியை அறிந்து கொண்டேன்.  [சூர்ப்பணாகவுல ஃபெல்லிங் மிஷ்டீக் இர்க்கலாம்.. கரீட் பண்ணீருங்கோவ்]!)

DEV RAJ

unread,
Feb 28, 2014, 2:08:21 AM2/28/14
to tamil...@googlegroups.com
On Thursday, 27 February 2014 22:46:34 UTC-8, Hariki wrote:
சூர்ப்பம் நகா = சூர்ப்பணகா.  (மூன்று சுழி ணகரம் ஏன் போட வேண்டும் என்று மணி மணிவண்ணன் கேட்ட ஆரம்ப காலங்களில் இதை விளக்கத் தெரிந்திருக்கவில்லை.  அவர் கேட்டதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்த விதியை அறிந்து கொண்டேன்.  
 

பவாநி, சிவாநி எனும் அம்பிகையின் பெயர்கள்  
ருத்ர, சர்வ இவற்றை ஒட்டியதாக வரும்போது
ருத்ராணி, சர்வாணி என ஆகிவிடும். சொல்லில்
ரேபம் இருப்பதால். இதுபோலவே இந்த்ராணி,
ப்ரஹ்மாணி


தேவ்

வேந்தன் அரசு

unread,
Feb 28, 2014, 7:00:14 AM2/28/14
to தமிழ் மன்றம்



27 பிப்ரவரி, 2014 11:20 பிற்பகல் அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள வேந்தனாரே,

//ருன் என் முடியும் சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. காரணம் (காரனம் அல்ல), ருகரத்துகக்கு நா இன்னும் மடிய வேண்டும்

காய்தல் உவத்தில் இன்றி எண்ணிப்பாருங்கள்//

எனக்குப் புரியவில்லை.  உரன், மரன் என்பன தமிழ்ச்சொற்கள் அல்லவா?
அவருன் மகனாமே? அவருன் தந்தையாமே? யாருன்னுடைய நண்பன்?
அவரை யாருன்னு நினைச்சே! இவரு யாருன்னே தெரியலையே!

ஏன் இப்படியெல்லாம் இல்லையா? நான் ஏதும் தவறுதலாகப் புரிந்துகொன்டிருக்கின்றேனா?



ஆம் செல்வா. நான் சொல்லியது ருன் ருல் எனும் ஈறுகொண்ட தனி சொற்கள்.
நீங்க சொல்லியது தனிச்சொற்கள் அல்ல.
 

வேந்தன் அரசு

unread,
Feb 28, 2014, 7:03:38 AM2/28/14
to தமிழ் மன்றம்



28 பிப்ரவரி, 2014 2:08 முற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
ரகரமும் அணகரமும் ஓரிடம் பிறப்பதே இத்திரிபுக்கு காரணம்

அதே பேல் ர்ழ்

GIRL = கேர்ழ்


Reply all
Reply to author
Forward
0 new messages