ல,ள,ழ எழுத்துக்கோர்வையில் ஒரு ஐயம

10,361 views
Skip to first unread message

Bala Swaminathan

unread,
Feb 12, 2013, 2:39:42 PM2/12/13
to tamilmanram GoogleGroups
தமிழில் ண-கரம், ந-கரம், ந-கரம் என்பதில் எதை பயன்படுத்த வேண்டும் என்னும்போது டண்ணகரம், தந்நகரம், அல்லது றன்னகரம் என்று சொல்வோம். ல-கரம் ள-கரம் ழ-கரம் முதிலியவற்றை எப்படி வேறுபடுத்திச் சொல்வது? வளி என்று எழுதச்சொல்லும்போது, எந்த ல போடவேண்டும் என்று என் மகன் கேட்ட கேள்விக்கு ன-போன்று இருக்கும் ள-கரம் என்று பதில் சொலிவிட்டேன். ஆனால் இப்படிச் சொல்வது எனக்குச் சரி எனப்படவில்லை.

அப்படியே  to spell மற்றும் spelling என்பதை தமிழில் எப்படி உரைப்பது?
நட்புடன்,
-பாலா

C.R. Selvakumar

unread,
Feb 12, 2013, 3:02:10 PM2/12/13
to tamil...@googlegroups.com


2013/2/12 Bala Swaminathan <drb...@yahoo.com>

தமிழில் ண-கரம், ந-கரம், ந-கரம் என்பதில் எதை பயன்படுத்த வேண்டும் என்னும்போது டண்ணகரம், தந்நகரம், அல்லது றன்னகரம் என்று சொல்வோம். ல-கரம் ள-கரம் ழ-கரம் முதிலியவற்றை எப்படி வேறுபடுத்திச் சொல்வது? வளி என்று எழுதச்சொல்லும்போது, எந்த ல போடவேண்டும் என்று என் மகன் கேட்ட கேள்விக்கு ன-போன்று இருக்கும் ள-கரம் என்று பதில் சொலிவிட்டேன். ஆனால் இப்படிச் சொல்வது எனக்குச் சரி எனப்படவில்லை.

ண,ந, ன என்பவை வல்லினம் பிறக்கும் இடத்திலேயே பிறக்கும் மெல்லினம் என்பதால் எளிதாகச் சொல்லிக்
காட்ட இயலும். ஆனால் ல, ள, ழ  என்பன இடையினம். இவற்றைக் கூற இதே முறையைப் பயன்படுத்த
முடியாது. லகரத்தைப் பல்லணை லகரம் என்று சொல்லலாம் ஆனால் அதனால் கேட்பவர் புரிந்துகொள்வார்
என்று சொல்ல இயலாது. ளகரம் என்பது நாவளையொலி, இதனை வலிந்த நாவளையிலி ளகரம் என்றும்,
ழகரம் என்பதைக் குழைந்த நாவளையொலி ழகரம் என்றும் சொல்லலாம். ஆனால் பொதுமக்களுக்கு
உடனே புரிய லகரத்தைப் 'பல்'-லகரம் என்றும், ளகரத்தை வள்ளி-ளகரம் என்றும், ழகரத்தைத் தமிழ் ழகரம் என்றும் சொல்லாம். வள்ளி என்பது வல்லியா வள்ளியா என்னும் குழப்பம் ஏற்படலாம், என்பதால் வளையல்
ளகரம் எனலாம். (அதாவது பல்லை ஒட்டி இருப்பதால் பல்லகரம் என்றும், வளைவதால் வளை-ளகரம், தமிழின் சிறப்பு ழகரம் என்பதால் தமிழ்-ழகரம் என்று குறிக்கலாம்). 


அப்படியே  to spell மற்றும் spelling என்பதை தமிழில் எப்படி உரைப்பது?

எழுத்துக்கூட்டல் என்பது  spelling. எழுத்துக்கூட்டிக் காட்டுங்கள் என்பது to spell. 

அன்புடன்
செல்வா

நட்புடன்,
-பாலா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Bala Swaminathan

unread,
Feb 12, 2013, 3:45:19 PM2/12/13
to tamil...@googlegroups.com
நன்றி செல்வா.பல்-லகரம், தமிழ்-ழகரம் என்பவை அருமை. சற்று முன்பு எனது மூத்த மகனுக்கும் சொல்வதெழுதுதல் (dictation) பயிற்சி அளிக்கும்போது, அவனாகவே இது plural-ஆக்கும்போது வரும் ள-வா என்று கேட்டான்! அப்படியானால் இதை பன்மை ள-கரம் என்று சொல்லலாமா? ஒருபடித்தான‌ முறைமை இருந்தால் தெரிந்துகொள்ள ஆவல்.

நட்புடன்,
-பாலா



From: C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Sent: Tuesday, February 12, 2013 3:02 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] ல,ள,ழ எழுத்துக்கோர்வையில் ஒரு ஐயம

C.R.(Selva) Selvakumar --

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Feb 12, 2013, 4:56:36 PM2/12/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
ல,ள,ழ, என்பன முறையே
குண்டு லகரம்,
பொது ளகரம் ( பேச்சு வழக்கில் சின்ன ளகரம)
சிறப்பு ழகரம் அல்லது  மகர ழகரம்  (பேச்சு வழக்கில்பெரிய ழகரம்)

என நீங்கள் படித்ததில்லையா?


2013/2/13 Bala Swaminathan <drb...@yahoo.com>



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Bala Swaminathan

unread,
Feb 12, 2013, 6:54:26 PM2/12/13
to tamil...@googlegroups.com
நன்றி, ஐயா. இப்பொழுது கொஞ்சம் ஞாபகம் வருகிறது. குண்டு, சிறப்பு, சரி... ஆனால், பொது/சின்ன ளகரம் என்பது கேள்விப்பட்ட ஞாபகமில்லை. சரி, இவை ஏன் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?

நட்புடன்,
-பாலா


Sent from my Samsung Galaxy Note II 
Reply all
Reply to author
Forward
0 new messages