காவேரிப்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 8, 2026, 6:43:55 AM (yesterday) Jul 8
to தமிழ் மன்றம்
காவேரிப்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு 

image.png       image.png


வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் காவேரிப்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் கருவறை மேற்கு தெற்கு சுவரில் உள்ள 4 வரிக் கல்வெட்டு.
  1. ஸுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ மந் மஹாமண்டலேஸ்வரன் ஹரிஹரராய விபாடபாஷைக்குத் தப்புவராய கண்டந் மூவராயர் பூர்வ பூ ததக்ஷிமா உத்தர தக்ஷிண  சது சமுத்ராதிபதி வீரப்ரதாப தேவராயர் குமாரர் மல்லிகார்ஜுன ராயர் ப்ரிதிவி ராஜ்யம் பன்னியருளா நின்ற ஸகாப்தம்   13
  2. 77 ன் மேல் செல்லாநின்ற யுவ வருஷம் ஆடி மாதம் 2 நாள் சங்ககிரி ராஜ்யத்தில் _ _ காவேரிப்பாக்கமான விக்ரம சோழ சதுர்வேதி மங்கலத்து நகரத்தார் நடுத்தெருவில் கேசவப்பெருமாள் கோயிலுக்கு இத்தெருவில் வைஸ்ய வாணிகர் தர்ம்ம தாவள அபயதா 
  3. வள நகரத்தார்  பண்ணிக் கொடுத்த தர்ம்மஸாஸனம் எங்கள் தெருவில் கல்லியாணப் பணம், யாத்திரைப்பணம் கைவிடு மோதிரப்பணம்  பூசை பொன் வகை பத்துக்கு மூன்று பணம் இந்த வகைப்படியிலுள்ளது எங்கள் தெருவில் கேசவப்பெருமாள் கோயிலுக்கு திருப்பணிக்கும் 
  4.  உபயத்துக்கும் நடத்தக் கடவதாகவும் இக்கோயிலில் தர்ம்மத்து அஹிதம் நினைத்தவன் கெங்கைக்கரையில்க் காராம் பசுவைக் கொன்ற பாபத்திலும் ப்ரஹ்மானைக் கொன்ற பாபத்திலும் போகக்கடவராகவும் நகரக்கணக்கனெழுத்து  
விளக்கம்:  சக ஆண்டு 1377 கிபி 1455 இல் நாற்கடலை எல்லையாக கொண்ட  விசயநகர வேந்தர் இரண்டாம் தேவராயரான வீரபிரதாப தேவரின் மகன் மல்லிகார்ச்சுணராயர் ஆட்சிசெய்த போது யுவ ஆண்டு ஆடி மாதம் 2 ஆம் நாள் சங்ககிரி அரசில் அடங்கிய காவேரிப்பாக்கமான விக்ரமசோழ சதுர்வேதி மங்கல நகரத்து வணிகர்தம் நடுத் தெருவில்  உள்ள கேசவ பெருமாள் கோவிலுக்கு வைசிய வணிகரின் தர்மதாவளத்தாரும்  அபயதாவள வணிகரும் சேர்ந்து செய்து வைத்த அற ஆவணம் யாதெனில் எமது தெருவில் தண்டப்படும் திருமண வரி, திருச்செலவு வரி, மோதிர வரி ஆகியன பூசை பொன் வகையில் பத்திற்கு மூன்று பணம் என்ற மேனிக்கு எமது தெரு கேசவ பெருமாள் கோயில் திருப்பணிக்காகவும் உபயத்துக்கும் பயன்படுத்திக் கொள்வதாக விட்டோம். இந்த அறத்தை தடுக்க நினைப்பவர் கங்கை கரையில் காரம் பசுவை கொன்ற பாவத்தையும் பிராமணரை கொன்ற பாவத்தையும் அடைவாராக என்று வணிகர் கணக்கன் எழுதி கொடுத்துள்ளார். இக்கல்வெட்டில் வணிகர் திருமண வரி, திருச்செலவு வரி, மோதிர வரி தண்டும் உரிமை பெற்றிருந்தனர் என அறிய முடிகிறது.      

பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி 27, பக்கம் 237
Reply all
Reply to author
Forward
0 new messages