Vairavan
unread,Jul 23, 2008, 6:41:42 AM7/23/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to ஞானம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
Please note GanaSambandar has sung this song only with "nedil" none of
the words are "kuril".
Its meanings as follows
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
(1)
யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!
Are we GOD?
The only truth is that YOU alone are GOD!
O HE who bears a great Lyre;( something like a harp)
HE who is adored by everyone;
HE who visibly adorns snakes;
HE who made Manmatha vanish!
O LORD of Sirkaalzi!
O Creator of great illusions!
Deliver me from the dark Maya
(2)
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க
HE who is the ultimate goal of sacrices!
HE who plays the harp;
HE who attains compassionate form;
HE who functions as the Destroyer;
HE who is Mother to all whomsoever;
HE who is imponderable;
HE who adorns a garland of "Aththi " flowers;
HE who is surrounded by the flock of the wives of the Thaarukaa Forest
Rishis!
O LORD of Sirkaalzi!
Deliver me from all miseries!
(3)
தாவா = அழியாத
மூவா = முதுமை அடையாத
தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
மா = பெருமை மிகுந்தவனே
மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின்மேல்
யாநீ = ஏறி வருபவனே
தாந ஆழி = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
சா கா = சாதலினின்று காத்தருள்க
காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
தா = எல்லா வரங்களும் தருக
வா = எங்கள் முன்னே வருக
மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே
HE who is Unperishable;
HE who does not age;
HE who is the Resultant of the ten Kaaryaa's;
O LORD of Sirkaalzi!
He who dances in the fearsome cremation ground;
O ESTEEMED ONE!
He who rides the majestic elephant, Airaavanam;
HE who is the sea of Bestowal;
Deliver me from Death!
HE who is resplendant with golden lustre!
Give me all the blessings and boons!
Come before us!
HE who precedes all Time;
HE who is in the form of the elements like Air!
(4)
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
நீவா = நீங்குதல் இல்லாத
வாயா = மெய்ப்பொருளானவனே
கா = காவுகின்ற
யாழீ = யாழையுடையவனே
வான் நோ = கொடிதாகிய பிறவித்துன்பம்
வாராமே = எங்களை அடையாமல்
கா வா = வந்து காப்பாற்றுக
வான் நோவா வா = தேவர்கள் வருந்தாதபடி
மேரா = மேரு மலையை வில்லாக ஏந்தியவனே
காழீயா = சீர்காழி இறைவனே
காயா = ஆகாய வடிவினனே
வாவாநீ = நீ விரைந்து வருவாயாக
HE who is the Unremitting TRUTH;
HE who bears the Harp;
Deliver us so that the terrible misrey of Birth does not afflict us!
HE who bore the Meru Mountain as the Divine Bow to succour the Deva's;
O LORD of Sirkalzi!
HE who is the form of Aakaash;
Come speedily to us!
(5)
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
யா = எப்பொருள்களுக்கும்
காலா = காலவடிவமாக உள்ளவனே
மேயா = (எல்லாவற்றிலும்) மேவியிருப்பவனே
மேதாவீ = அறிவில் மேம்பாடு மிக்கவனே
தாய் ஆவி = (எல்லோருக்கும்) தாயாகவும், உயிராகவும் விளங்குபவனே
வீயாதா = எக்காலத்தும் அழிவில்லாதவனே
வீ தாமே = கின்னரம் என்னும் பறவைகள் தாமே (இசையில் மயங்கி விழுமாறு)
யாழீ = யாழை மீட்டுபவனே
யாம் = யாங்கள்
மேல் = மேற்கொண்டு
ஆகு = ஆவனவற்றிற்காக
ஆயா = ஆராய்ந்து வருந்தாதபடி
கா = காத்தருள்க
HE who is in the form of Time to everything
HE who is in, around and outside everything
HE who is the Embodiment of Wisdom
HE who is the Mother and Life of everything
HE who is Imperishable
HE who entices the Divine Kinnara birds with harp music
Deliver us, so that we do not brood and regret for whatsoever
hereafter
(6)
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகாலேலாகா ழீதேமேகா போலேமே
மேலே = மார்க்கண்டேயரின் மீது
போகாமே = கூற்றுவன் வெகுண்டு செல்லாமல்
தேழீ = அதட்டித்தெழித்தருளியவனே
காலாலே = திருவடியினாலே
கால் ஆனாயே = காலனுக்கும் காலனாய் விளங்கினையே
ஏல் = எற்றுக்கொள்ளத்தக்க
நால் = சனகர், சனந்தனர், சந்த்குமாரர், சனாதனர் என்னும் நாஉ
முனிவர்களுக்கும்
ஆகு = ஞான ஆசிரியராக எழுந்தருளி
ஆல் = கல்லால மர நிழலில்
ஏலா = அவர்களை ஏற்றருளியவனே
காழீதே = சீர்காழியில் விளஉம் முழுமுதல் தெய்வமே
மேகா = மேகம் போன்ற கொடைத்தன்மையுடையவனே
போலேமே = அடியார்களாகிய நாங்கள் உன் தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவரைப் போல
ஆக மாட்டோமா
HE who scorned and scared Death to prevent him from afflicting
Maarkandeyaa;
HE who with the kick of HIS Sacred Foot became the Death of Death;
HE who became the PRAECEPTOR OF WISDOM for the four illustrious
Muni's,
And received them unto HIS fold under the Kal Aala Tree;
O LORD SUPREME of Sirkaazi!
HE who possesses Philanthropy like a rain cloud!
Will we not also, ever become like one of YOUR Followers?
(7)
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
நீயா = நீங்குதல் இல்லாத
மாநீ =உமாதேவியை உடையவனே
ஏயா = ஒப்பில்லாத
மாதா = தாயாக விளங்குபவனே
ஏழீ = ஏழு இசையின் வடிவாகத்திகழுபவனே
கா நீ தானே = நீயே எம்மைக் காப்பாற்று
நே = நேயம் மிகுந்த நெஞ்சை
தாநீ = இடமாகக் கொண்டருள்பவனே
காழீ = சீர்காழியில் விளங்கும்
வேதா = வேதங்களின் பொருளானவனே
மாய் = எங்களைக் கொல்லவரும்
ஆநீ = துன்பங்களை
மாயாயே = நீ மாய்த்தருள மாட்டாயா
HE who possesses the Inseparable Uma Devi;
HE who is the Incomparable Mother;
He who is the seven svara's;
YOU alone save us!
HE who has Love-filled Heart As HIS abode;
The Meaning of the Vedas!
Won't you not vanquish the miseries that come to kill us?
(8)
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே
(சம்பந்தரின் தேவாரப்பதிகங்களில் எட்டாவது பாடலில் இராவணனைக்
குறிப்பிட்டிருப்பார். அந்த மரபைப்பின்பற்றியே இந்தப் பாடலும் இராவணனைக்
குறிக்கிறது.)
நே = நேயம் மிகுந்து
அணவர் = திருவடியை நெருங்கி நிற்கும் மெய்யடியார்களின்
ஆ = ஆவிகள்
விழ = தம் வயமற்று கிடக்க
யா = யாத்துக் கட்டிய
சை = ஆசையாகிய கயிற்றினை
ழியே = (அருளால்) அவிழ்த்தருள்பவனே
வேக = வேகத்தினுடைய மானின்
அதள் ஏரி = தோலினை அழகு பெற அணிந்தருள்பவனே
அளாய = துன்பங்கள் கலந்த
உழி = இடங்களில்
கா = எம்மைக் காத்தருள்க
காழியுளாய் = சீர்காழிப் பதியில் வீற்றிருப்பவனே
அரு = மன்னிப்பதற்கு அரிய
ஏது = குற்றங்களை
இளவெள = எம் சிறுமைத்தன்மையினால் யாம் செய்துவிட்டோம்
அகவே = (ஆதலின்) அவை நின்னருளால் பொறுத்தருளத்தக்கனவே ஆகும்
ஏழிசை = ஏழிசையும் பாடுதலில் வல்ல
இராவணனே = இராவணனும்கூடத் தான் செய்த பெரும்பிழைகளை நின்னால்
பொறுக்கப்பட்டனன் அல்லனோ?
True devotees, with boundless love, stand close to THINE Sacred Feet;
Their souls lose themselves; because THOU untie the knot of passionate
desire;
Thou art beautifully clad in the skin of the fleet-footed deer!
Please save us from misery!
O DWELLER of Siirkaazi!
We, with fickle mindedness, have committed wrongs which are difficult
to be forgiven;
But they can be tolerated by THEE!
Did you not pardon the great wrongs of Ravana, talented in the seven
svaras?
(9)
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
(ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மாவும் தேடியும் அடிமுடி காணமுடியாத
பெருஞ்சிறப்பைப் பாடுவார்)
காலேமேலே = எல்லாப் பொருள்களுக்கும் முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = அடியார்களுக்குப் பெரும் செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = எல்லாரையும் மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும் பிரம்ம தேவனும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = எம்மைக் காத்தருள்க
HE who is the BEGINNING and END of everything;
WHO is the Great Wealth of devotees;
O RESIDENT of Kaazi!
THe ILLUDER of all!
Thou wert determined to prevent Vishnu and Brahma- the dweller of
Lotus,
from finding your Crown ad Sacred Feet!
Please save me!
(10)
வேரியுமேணவ காழியயே யேனைனிணே மடளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே
(பத்தாவது பாடலில் சமணர்களையும் பௌத்தர்களையும் சம்பந்தர்
சாடியிருப்பார்).
வேரியும் = வாசனையும்
ஏண் = பெருமையும்
நவம் = புதுமையும் கொண்ட
காழியயே = சீர்காழிப் பதியில் உள்ளவனே
ஏனை = பிறிதாகிய வெறுப்பையும்
நீள்நேம் = நீண்ட நேயத்தையும்
அடு = அடுத்தலும்
அள் = அள்ளுதல்
ஓகரது ஏ = யோகிகளுடைய செயலேயாகும்
தேரகளோடு = புத்தர்களின் சொற்களையும்
அமணே = சமணர்களின் சொற்களையும்
நினை = நினைத்தலையும்
ஏய் = அவர்களுடன் கூடுதலையும்
ஒழி = ஒழியும்படி செய்து
காவணம்(ஏ) = அந்நெறிகளில் யாம் சேராமல் எம்மைக் காக்கும் தன்மைகள்
உரிவே = உமக்கு உரியனவேயாகும்
O RESIDER of Sirkaazi which possesses fragrance, glory, and novelty!
To discard hatred and engage perpetual love is the art of Yogi's.
The dispelling of the thoughts of words of the Jains and Buddhists and
their company;
The prevention of me joining their fold;
And thus delivering me;
These are all THINE deeds!