கடவுளுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கொலை, விபசாரம், பொய்யாணை போன்ற திருச்சட்டத்துக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக் கிறது. தம் சகோதரரையோ சகோதரியையோ 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் என்று இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என கடுமையான அறிவுரையை அவர் நமக்கு வழங்குகிறார். எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல்மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப் பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததுமில்லை.
1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி
4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! பல்லவி
17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி
33 ஆண்டவரே! உம்
விதிமுறைகள் காட்டும் வழியை
எனக்குக் கற்றுத்தாரும்;
நான் அவற்றை இறுதிவரை
கடைப்பிடிப்பேன். 34 உம்
திருச்சட்டத்தின்படி நடக்க
எனக்கு மெய்யுணர்வு தாரும்.
அதை நான் முழு உள்ளத்தோடு
கடைப்பிடிப்பேன். பல்லவி
சகோதரர் சகோதரிகளே,
முதிர்ச்சி பெற்றவர்களோடு
நாங்கள் ஞானத்தைப் பற்றிப்
பேசுகிறோம். ஆனால் இது உலக
ஞானம் அல்ல; உலகத்
தலைவர்களின் ஞானமும் அல்ல.
அவர்கள்
அழிவுக்குரியவர்கள்.
வெளிப்படுத்தப்படாமல்
மறைபொருளாய் இருக்கும் இறை
ஞானத்தைப் பற்றியே நாங்கள்
பேசுகிறோம். அது நாம் மேன்மை
பெறவேண்டும் என்னும்
நோக்குடன் உலகம் தோன்றும்
முன்பே கடவுளின்
திட்டத்தில் இருந்தது.
இவ்வுலகத் தலைவர்கள் எவரும்
அதை அறிந்துகொள்ளவில்லை.
அறிந்திருந்தால், அவர்கள்
மாட்சிக்குரிய ஆண்டவரைச்
சிலுவையில் அறைந்திருக்க
மாட்டார்கள். ஆனால்
மறைநூலில் எழுதியுள்ளவாறு,
“தம்மிடம்
அன்புகொள்ளுகிறவர்களுக்கு
என்று கடவுள் ஏற்பாடு
செய்தவை கண்ணுக்குப்
புலப்படவில்லை; செவிக்கு
எட்டவில்லை; மனித உள்ளமும்
அதை அறியவில்லை."
இதைக் கடவுள் தூய ஆவியாரின்
வழியாக நமக்கு
வெளிப்படுத்தினார். தூய
ஆவியாரே அனைத்தையும் துருவி
ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த
எண்ணங்களையும்
அறிகிறார்.
அக்காலத்தில், இயேசு தம்
சீடரை நோக்கிக் கூறியது:
“திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ நான் அழிக்க
வந்தேன் என நீங்கள் எண்ண
வேண்டாம்; அவற்றை
அழிப்பதற்கல்ல,
நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து
போகுமுன் திருச்சட்டம்
யாவும் நிறைவேறும். அதன் ஒரு
சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ
ஒழியாது என உறுதியாக
உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச்
சிறியது ஒன்றையேனும் மீறி
அவ்வாறே மக்களுக்கும்
கற்பிக்கிறவர் விண்ணரசில்
மிகச் சிறியவர் எனக்
கருதப்படுவார். இவை
அனைத்தையும்
கடைப்பிடித்துக்
கற்பிக்கிறவரோ விண்ணரசில்
பெரியவர் எனக்
கருதப்படுவார். மறைநூல்
அறிஞர், பரிசேயர் ஆகியோரின்
நெறியைவிட உங்கள் நெறி
சிறந்திருக்கட்டும்.
இல்லையெனில், நீங்கள்
விண்ணரசுக்குள் புக
முடியாது என உங்களுக்குச்
சொல்கிறேன்.”
“கொலை செய்யாதே; கொலை
செய்கிறவர் எவரும் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவர்”
என்று முற்காலத்தவர்க்குக்
கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: “தம் சகோதரர்
சகோதரிகளிடம்
சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்; தம்
சகோதரரையோ சகோதரியையோ
‘முட்டாளே’ என்பவர்
தலைமைச் சங்கத்
தீர்ப்புக்கு ஆளாவார்;
‘அறிவிலியே’ என்பவர்
எரிநரகத்துக்கு ஆளாவார்.
ஆகையால் நீங்கள் உங்கள்
காணிக்கையைப் பலிபீடத்தில்
செலுத்த வரும்பொழுது உங்கள்
சகோதரர் சகோதரிகள்
எவருக்கும் உங்கள் மேல் ஏதோ
மனத்தாங்கல் உண்டென அங்கே
நினைவுற்றால், அங்கேயே பலி
பீடத்தின்முன் உங்கள்
காணிக்கையை வைத்துவிட்டுப்
போய் முதலில் அவரிடம்
நல்லுறவு ஏற்படுத்திக்
கொள்ளுங்கள். பின்பு வந்து
உங்கள் காணிக்கையைச்
செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதி
மன்றத்துக்குக் கூட்டிச்
செல்லும்போது வழியிலேயே
அவருடன் விரைவாக உடன்பாடு
செய்துகொள்ளுங்கள்.
இல்லையேல் உங்கள் எதிரி
நடுவரிடம் உங்களை
ஒப்படைப்பார். நடுவர்
காவலரிடம் ஒப்படைக்க,
நீங்கள் சிறையில்
அடைக்கப்படுவீர்கள்.
கடைசிக் காசு வரை திருப்பிச்
செலுத்தாமல் அங்கிருந்து
வெளியேற மாட்டீர்கள் என
உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்.”
“ ‘விபசாரம் செய்யாதே’
எனக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்
பட்டிருக்கிறீர்கள். ஆனால்,
நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: ஒரு பெண்ணை
இச்சையுடன் நோக்கும் எவரும்
தம் உள்ளத்தால் ஏற்கெனவே
அப்பெண்ணோடு விபசாரம்
செய்தாயிற்று.
உங்கள் வலக்கண் உங்களைப்
பாவத்தில் விழச்செய்தால்
அதைப் பிடுங்கி எறிந்து
விடுங்கள். உங்கள் உடல்
முழுவதும் நரகத்தில்
எறியப்படுவதைவிட உங்கள்
உறுப்புகளில் ஒன்றை நீங்கள்
இழப்பதே நல்லது. உங்கள்
வலக்கை உங்களைப் பாவத்தில்
விழச்செய்தால் அதையும்
உங்களிடமிருந்து வெட்டி
எறிந்து விடுங்கள். உங்கள்
உடல் முழுவதும்
நரகத்திற்குச் செல்வதைவிட
உங்கள் உறுப்புகளில் ஒன்றை
நீங்கள் இழப்பதே நல்லது.
‘தன் மனைவியை விலக்கி
விடுகிறவன் எவனும்
மணவிலக்குச் சான்றிதழைக்
கொடுக்கட்டும்’ எனக்
கூறப்பட்டிருக்கிறது. ஆனால்
நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: எவரும் தம்
மனைவியைப் பரத்தைமைக்காக
அன்றி வேறு எந்தக்
காரணத்திற்காகவும்
விலக்கிவிடக் கூடாது.
அப்படிச் செய்வோர் எவரும்
அவரை விபசாரத்தில் ஈடுபடச்
செய்கின்றனர்.
விலக்கப்பட்டோரை
மணப்போரும் விபசாரம்
செய்கின்றனர்.”
“மேலும், ‘ பொய்யாணை
இடாதீர். ஆணையிட்டு
நேர்ந்துகொண்டதை
ஆண்டவருக்குச்
செலுத்துவீர்’ என்று
முற்காலத்தவர்க்குக் கூறப்
பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: ஆணையிடவே
வேண்டாம். விண்ணுலகின்
மேலும் ஆணையிட வேண்டாம்;
ஏனென்றால் அது கடவுளின்
அரியணை. மண்ணுலகின் மேலும்
வேண்டாம்; ஏனெனில் அது
அவரின் கால்மணை. எருசலேம்
மேலும் வேண்டாம்; ஏனெனில்
அது பேரரசரின் நகரம். உங்கள்
தலைமுடியின் மேலும் ஆணையிட
வேண்டாம்; ஏனெனில் உங்கள்
தலைமுடி ஒன்றையேனும்
வெள்ளையாக்கவோ
கறுப்பாக்கவோ உங்களால்
இயலாது.
ஆகவே நீங்கள் பேசும்போது
‘ஆம்’ என்றால் ‘ஆம்’
எனவும் ‘இல்லை’ என்றால்
‘இல்லை’ எனவும்
சொல்லுங்கள். இதைவிட
மிகுதியாகச் சொல்வது
எதுவும்
தீயோனிடத்திலிருந்து
வருகிறது.”
ஞானத்தின் நிறைவே
இறைவா,
எம்
திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார்
அனைவரும் இறை ஞானத்துடன்,
உமது மீட்புத் திட்டத்தை உலக
மக்களிடையே கொண்டு சேர்க்க
உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
நன்மையின் ஊற்றே
இறைவா,
உலகில்
வாழும் மக்கள் அனைவரும்
நல்லவற்றை விரும்பித்
தேடவும், தீயவற்றை துணிவோடு
எதிர்த்துப் போராடவும்
தேவையான ஞானத்தை வழங்க
வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
உண்மையின் உறைவிடமே
இறைவா,
உலக
ஞானத்தின் கவர்ச்சியால்
ஈர்க்கப்பட்டு
அழிவுக்குரிய நெறிகளைப்
பின்பற்றி வாழும் எம்
நாட்டவர் அனைவரும், உம்மிடம்
மனந்திரும்பி வர உதவ
வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
வாழ்வின் வழியே
இறைவா,
கொலை,
விபசாரம் போன்ற தீமைகளின்
பிடியில் சிக்கி உமது
திட்டத்துக்கு எதிராக
செயல்படுவோர் அனைவருக்கும்,
தூய வாழ்வுக்கான வழியைக்
காட்ட வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
மகிமையின் அரசரே
இறைவா,
உமது
கட்டளைகளுக்கு எதிரான
தீமைகளில் இருந்து விலகி
புனித வாழ்வு வாழும் வரத்தை,
எம் பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு
மக்கள் அனைவருக்கும் அருள
வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
கடைப்பிடித்துக்
கற்பிக்கிறவர் !
இறையாட்சியின் செய்திகளை
அறிவிக்கிறவர்களாக வாழவே
இயேசு சீடர்களைத்
தேர்ந்துகொண்டார்.
அச்சீடர்களை இரு
பிரிவினராகப் பிரிக்கிறார்
இயேசு. அவரது கட்டளைகளில்
மிகச் சிறியது ஒன்றையேனும்
மீறி, அவ்வாறே பிறருக்கும்
கற்பிக்கிறவர்கள்
விண்ணரசில் சிறியவர் என
அழைக்கப்படுவர். ஆனால்,
அக்கட்டளைகளைக்
கடைப்பிடித்து, அப்படியே
பிறருக்கும் கற்பிக்கிறவர்
பெரியவர் எனப்படுவர். இன்றைய
திருச்சபையில் நாம்
சிறியோர் பலரைப்
பார்க்கிறோம். ஆனால்,
கடைப்பிடித்துக்
கற்பிக்கும் பெரியோரைக்
காண்பது அரிதாகவே உள்ளது.
இறைவனின் கட்டளைகளை முழு
மனதோடு கடைப்பிடிப்பது
என்பது மிகப் பெரிய சவால்.
அதற்கு இறையாசி தேவை.
கடைப்பிடிப்பதைப்
பிறருக்கு அறிவிப்பதே
நற்செய்தி அறிவிப்புப் பணி.
அப்பணியில் நம்மை
ஈடுபடுத்திக்கொள்வோமாக.
கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft
www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich
austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail
haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse
in...@tamilcatholic.de.
www.tamilcatholicnews.com என்ற
இணையத்தளகுழுவினரால்இந்த
மின்னஞ்சல் உங்களுக்கு
அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த மின்னஞ்சல்களை நீங்கள்
பெற்றுக்கொள்ள
விரும்பாவிடில் அல்லது இவ்
மின்னஞ்சல்களில் ஏதாவது
அசௌகரியங்கள் இருப்பின்,
in...@tamilcatholic.de என்னும்
மின்னஞ்சல் முகவரிக்கு
அறியத்தரவும்.
This Email is sent by the web design team of
www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list
or if you have some difficulties with this email, please contact us via our
email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************
Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.
http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge