நர்த்தகி இயக்கம் G.விஜயபத்மா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா ,இரவி

39 views
Skip to first unread message

RRavi Ravi

unread,
May 16, 2011, 12:27:19 PM5/16/11
to anbudan, kee...@googlegroups.com, beyo...@googlegroups.com, Indian-M...@yahoogroups.com, beyout...@yahoogroups.com, thantha...@googlegroups.com, namtamilar, தமிழ் அமுதம், Minthamil, paga...@googlegroups.com, theyva-...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
நர்த்தகி                           
இயக்கம்  G.விஜயபத்மா

திரைப்பட விமர்சனம்       கவிஞர் இரா ,இரவி

அதிசயம் ஆனால் உண்மை .திரை அரங்குகளில்     ரூ 200,ரூ 150,ரூ 100வாங்கும் காலத்தில் ,மதுரை ஷா .திரைஅரங்கில் வெறும் ரூ20
மட்டும் பெற்றுக்கொண்டு நுழைவுச் சீட்டு வழங்கினார்கள் .மிகக் குறைந்த கட்டணம் .அதற்காகவே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
திருநங்கைகளின் உள்ளத்து உணர்வுகளை உண்மையை அப்படியே படம் பிடித்து காட்டிய முதல் திரைப்படம் .கல்கி என்ற திருநங்கையின் கதையை அப்படியே மலரும் நினைவுகளாகப் படம் பிடித்து உள்ளனர் .இந்தப்படத்தை மிக தையிரியமாகத் தயாரித்த புன்னகை பூ கீதாவைப் பாராட்ட வேண்டும் .திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை, மன வலியை,வேதனையை விளக்கும் மிக நல்ல  திரைப்படம் நர்த்தகி .
கதை ,திரைக்கதை,  வசனம் இயக்கம்  G.விஜயபத்மா .     மிகச் சிறப்பாக ஒரு திருநங்கை எப்படி? உருவாகுகின்றனர் .என்பதை மிக விளக்கமாக திரையில் காட்டி உள்ளார் .G.V.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது .பாடல் ஆசிரியர் நர். முத்துக்குமார் பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றது .ஒளிப்பதிவாளர் M.கேசவன் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார் .இதுவரை வந்த பெரும்பாலான திரை ப்படங்களில் திருநங்கைகளை  கேலியாகவே  சித்தரித்து உள்ளனர் .முதன் முறையாக இந்தப் படத்தில்தான்  திருநங்கையை கதையின் நாயகியாகச் சித்தரித்து உள்ளனர் .முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளனர் .இந்தப் படத்திற்கு விருது வழங்கலாம் .
சிறுவன் சிறுமியாக இருக்கும் போதே ,இவன்தான் உன் கணவன் ,இவள்தான் உன் மனைவி என்று சொல்லி வளர்க்கும் கிராமத்து மூடநம்பிக்கையைச் சாடி உள்ளனர் .ரத்த சொந்தகளுக்குள் திருமணம் செய்ய வேண்டாம் என்று இன்று ஆய்வுகள் சொல்கின்றன .பல விழிப்புணர்வை விதைக்கும் விதமாக படம் உள்ளது .பாராட்டுக்கள் .
குழந்தைகளிடம் தேவையற்ற ஆசைகளை வளர்த்து விடாதீர்கள் என எச்சரிக்கை செய்கின்றது படம் .
 
  சிறுவனுக்கு ஜோடியாக மாமா மகளைச் சொல்லி வளர்க்கின்றனர் .நாளைடைவில் அவனுக்குள் அவள் என்ற உணர்வு வருவதை  மாமா மகளிடம் சொன்னால் அவள் ஏற்க  மறுக்கிறாள் .சிறு வயதில் இருந்த காதலித்த அவளுக்கு ஏமாற்றம் .தந்தை சிலம்பம் ஆசிரியர் .அவர் மகனுக்கு சிலம்பம் சொல்லித் தருகிறார் . ஆனால் அவனோ  சிலம்பம் சொல்லிதரும் போது நாட்டியம் ஆடுகிறான் .அப்பா சினம் கொள்கிறார். அம்மா ஆடும் போது உடன் ஆடிப் பழகுகின்றான் .வீட்டில் சகோதரிகளின்
சட்டை ,பாவாடையை போட்டுப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறான் .பாஸ்கர் என்ற நண்பன் தொட்டபோது பெண்ணாக உணர்கிறான் .தன்னுள் உள்ள பெண்மையை அம்மா ,அப்பாவிடம் சொன்னபோது ஊருக்குப்   பயந்து அவனை அடித்து விரட்டுகின்றனர்.மாமா மகளிடம் பணம் பெற்று ஊரை விட்டுச் செல்கின்றான் . திருநங்கைகளின் உதவியுடன் மும்பை செல்கிறான் .அங்கு சென்று அவன் அவளாக மாறுகின்றாள் .அவள்தான் கல்கி .மும்பையில்  திருநங்கையாக மாறுவதற்கு அங்கு நடக்கும் சடங்குகள் மிக விரிவாக படமாக்கி உள்ளனர் .மும்பை திருநங்கைகள் இந்தியில் பேசுவதை தமிழாக்கம் செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் .
அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியதும் பாலியில் கொடுமை நடக்கின்றது .மனம் வெறுத்து பக்கத்துக்கு வீட்டு மலையாளப் பெண்ணிடம் நாட்டியம் பயில்கின்றாள்.பின் அவள் ஆலோசனையின் பெயரில் திருவையாறு வருகிறாள் .நாட்டிய ஆசிரியரை தந்தையாக மதித்து அவரிடமும்  நாட்டியம் பயில்கின்றாள்.அவர் இறந்து விடுகிறார் .மில் அதிபர் மகன் வருகிறான் கல்கியைக் காதலிக்கிறான் .தாலி கட்டி மனம் முடிக்கிறான் .தங்கி சுகம் கண்டுஏமாற்றி செல்கிறான் .அவனைத்  தேடிச்   சென்று அவன் அப்பாவை சந்திக்கும் போதுதான் உண்மை தெரிகின்றது .வருடமாகக் குழந்தை இல்லை.சோதிடர் பரிகாரம் சொல்கிறார் குழந்தை பிறக்க திருநங்கையை அணைந்தால் பிறக்கும் என்று சொன்னதற்காக கல்கியை ஏமாற்றியது அறிந்து கவலை கொள்கிறாள் கல்கி .
கல்கி பாரத நாட்டிய கலைஞராக வளர்ந்து விடுகிறாள் .
கல்கியின் குழந்தைப் பருவத்து சிறுவர்களாக நடித்த இருவரும் ,மாமா மகளும் ,மாமாவும் அப்பாவும் அம்மாவும் அனைவரும் போட்டிப் போட்டு நடித்து உள்ளனர் .உள்ளதைக் கொள்ளை கொள்கின்றனர் .பாராட்டுக்கள்.
  திருநங்கையை பெற்றோர்களே வெறுக்காதீர்கள் ஒதுக்காதீர்கள் அன்பு செலுத்துங்கள் என்று புத்தி புகட்டும் சிறந்த படம் .   திருநங்கைகள் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வந்து உள்ள நல்ல படம் ..படம் பார்த்த வந்தவுடன் ஒரு ஹைக்கூ வந்தது எனக்கு .

குழந்தை பிறத்தது
திருநங்கையை ஏமாற்றியவருக்கு
திருநங்கையாக


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி     

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com             
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

   ண் தானம் செய்வோம் !!!!!
 


download-latest-narthagi-tamil-mp3-songs-free.jpg

RRavi Ravi

unread,
May 16, 2011, 11:42:42 PM5/16/11
to anbudan, kee...@googlegroups.com, beyo...@googlegroups.com, Indian-M...@yahoogroups.com, beyout...@yahoogroups.com, thantha...@googlegroups.com, namtamilar, தமிழ் அமுதம், Minthamil, paga...@googlegroups.com, theyva-...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்த
உயிர் மெய் எழுத்துக்கள் திருநங்கைகள்

உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லை
திருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை

ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள்
அன்பு செலுத்துங்கள் அப்புறம் பாருங்கள்

அவர்களைப் போல நல்லவர்கள்
அகிலத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்

நடனத்தில் சாதனை புரிந்த நர்த்தகி நடராஜ்
ஊடகத்தில் சாதனை புரிந்த ரோஸ்

ஆண்பால் பெண்பால் இரண்டும் இல்லாத
மூன்றாம் பால் இவர்கள் திருநங்கைகள்

ஆண் இனத்திலும் சேர்ப்பதில்லை
பெண் இனத்திலும் சேர்ப்பதில்லை

தனி ஒரு இனமாகஎல்லோரும் பார்க்கிறார்கள்
தனிப்படுத்தப் பட்டதை எண்ணி வருந்துகிறார்கள்

குடும்பத்தில் தொடங்கியப் புறக்கணிப்பு
குமுகாயத்திலும் தொடர்வது வெறுப்பு

திரைப்படங்களில் காட்டிய கேலி கிண்டல்
தெருவெங்கும் தொடர்கையில் வேதனை

பார்ப்பவர்கள் சிரிக்கையில் உள்ளத்திற்குள்
அழுகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை

ஏன்? இப்படி ஆனோம் என்று தினமும்
எண்ணி எண்ணி வருந்துகின்றனர்

திருநங்கையாகப் பிறந்தது அவர்கள் பிழையன்று
இயற்கை செய்த பிழைதான் இன்று

ஆதியில் தெரிவதில்லை திருநங்கை என்று
பாதியில் வந்த மாற்றம்தான் இது

உழைத்து வாழ விரும்பினாலும்
உழைக்க வாய்ப்பு வழங்குவதில்லை

மனிதநேயம் மனிதர்களுக்கு வேண்டும்
மனிதநேயம் மறந்தால் மனிதனே அன்று

சங்கடப் படும் படி தயவுசெயதுப் பார்க்காதீர்கள்
சக மனுசியாக எல்லோரும் நேசியுங்கள்
--


2011/5/16 RRavi Ravi <erae...@gmail.com>
 
[Attachment(s) from RRavi Ravi included below]

RRavi Ravi

unread,
May 16, 2011, 11:44:16 PM5/16/11
to anbudan, kee...@googlegroups.com, beyo...@googlegroups.com, Indian-M...@yahoogroups.com, beyout...@yahoogroups.com, thantha...@googlegroups.com, namtamilar, தமிழ் அமுதம், Minthamil, paga...@googlegroups.com, theyva-...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
சோதனைகளை சாதனைகளாக்கிய கலைமாமணி திருநங்கை நர்த்தகி நடராஜ் - கவிஞர்:இரா.இரவி
 
 
உலகில் வாழும் மனித இனங்களில் ஆண்,பெண் என்ற இருபாலர் தவிர மூன்றாவதாக திருநங்கை என்ற ஒரு இனமும் உண்டு. சமுதாயத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்பு இன்று தான் அவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. கல்லூரி பேராசிரியராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அனுப்பானடி என்ற பகுதியில் பிறந்த திருநங்கை நர்த்தகி நடராஜ் குழந்தைப் பருவத்திலிருந்து பின் திருநங்கை காலம் தொட்டு அவர் சந்தித்த சோதனைகள்,வேதனைகள்,அவமானங்கள்,சொல்லடி இவை எல்லாம் சொல்லில் அடங்காது.வார்த்தைகளில் வடிக்க முடியாது. இவரைப் போன்ற திருநங்கை சக்தியின் நட்போடு, ஆடல் கலை பயின்று, இன்று அந்தக் கலையின் உச்சம் அடைந்து உள்ளார். கண்களில் கவிதை பாடுகிறார்.நடன அசைவுகளில் அசத்தி விடுகிறார்.

பரதநாட்டியம் என்றால் அது தமிழர்களின் கலை அல்ல,அது புரியாத மொழியால் பாடுவார்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்தக் கருத்து தவறு. தமிழர்களின் இலக்கியங்களில் ஆடல் கலை பற்றி பல்வேறு சான்றுகள் உள்ளன. தொல்காப்பியத்தில் சதிர் என்ற சொல்லில் ஆடல் இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஆடலே கதைக்கு கருவாக உள்ளது. இப்படி தமிழர்களின் கலையான நடனக் கலையை தொலைத்து விட்டு நிற்கிறோம். இது போன்ற பல கருத்துக்களை தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேல்தட்டு வகுப்பினருக்கு மட்டுமே சொந்தம் என்று உள்ள பரத நாட்டியக் கலையை மேல்தட்டு வகுப்பினரிடமிருந்து பயின்று கற்றுத் தேர்ந்து இன்று இமாலய வளர்ச்சி பெற்று விட்டார் திருநங்கை நர்த்தகி நடராஜ். மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பே, நான் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பார்த்து இருக்கிறேன். தற்போது 14.08.2009 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 15-வது ஆண்டு விழா கலை இரவு நிகழ்ச்சி நாகமலை பகுதியில் நடைபெற்றது. கரகம்,காவடி,தப்பாட்டம் நடுவே நர்த்தகி நடராஜின் பரத நாட்டியமும் இடம் பெற்றது. மக்கள் வெள்ளம் மழை என்றும் பாராமல் வந்து குவிந்து இருந்தனர்.

மகாகவி பாரதியார் பாடல்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்,கவிஞாயிறு தாராபாரதியின் பாடல் அரங்கேற்றமானது. மேல்தட்டு நடன மகளிராக இருந்தால் இந்த மேடை ஏறி இருக்க மாட்டார்கள். ஆனால் நர்த்தகி நடராஜ் மேடை ஏறி அற்புதமாக ஆடினார்கள். முதலில் பேசத்தான் அழைத்தார்கள்,ஆனால் ஆடி விட்டு பேசுகிறேன் என்று சொல்லி மிகச்சிறப்பான ஆடினார்கள். மக்களில் கைதட்டலால் நாகமலையே எதிரொலித்தது.1980-களில் எந்த மக்கள் கேலி செய்தார்களோ,கல்லால்,சொல்லால் அடித்தார்களோ அதே பிறந்த மதுரை மண்ணில் அமெரிக்கா,இலண்டன்,கனடா போன்ற நாடுகளுக்கு சென்று உலகப்புகழ் அடைந்து விட்டு, பிறந்த மதுரை மண்ணில் வந்து ஆடி பாராட்டைப் பெற்ற போது மெய் சிலிர்த்துப் போனேன்.

கவிஞாயிறு தாராபாரதியின் �வெறுங்கை என்பது மூடத்தனம்� என்ற பாடலுக்கு, அந்த வரிகளுக்கு ஏற்ப மிகச்சிறப்பான அபிநயம்,நொடிக்கு நொடி முகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. புகழ்பெற்ற பெண் நடனக் கலைஞர்களை விஞ்சிடும் வண்ணம் மிகச்சிறப்பான நடனம். உலகில் இனி,இவரளவிற்கு நடனம் பயின்று வேறு யாராலும்,எந்த ஒரு திருநங்கையாலும் ஆட முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம்.அந்த அளவிற்கு மிகச் சிறப்பான நடனம். உழைக்கும் மக்கள் அனைவரும் மக்கள் மொழியான தமிழிலேயே பாடல்கள் இருந்தததால் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். ஆட்டம் சிறப்பு என்றால் அவரது பேச்சோ சிறப்போ சிறப்பு. அந்த அளவிற்கு எல்லோருக்கும் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக மிகச் சிறப்பான உரையாற்றினார்கள்.கலைமாமணி உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்கள்,எந்தவித செருக்கும் இல்லை.

ஒரு காலத்தில் கடலை விற்றுக் கொண்டு, காசு யாசகம் கேட்டுக் கொண்டு,பாடல் பாடிக் கொண்டு கேலிப் பொருளாக இருந்த திருநங்கை சமுதாயத்தில் பிறந்து ,இன்று ஆண்,பெண் இருபாலரையும் விஞ்சிடும் வண்ணம் மிகச்சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து,நடனப் பள்ளி தொடங்கி நடனத்தை வளர்த்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார். இவரது இந்த வளர்ச்சிக்கு,சாதனைக்கு,புகழுக்கு,உற்ற துணையாக, தோழியாக,தாயாக இருந்து வரும் திருநங்கை சக்தியும் பாராட்டுக்குரியவர். இன்றைக்கு திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டதன் காரணமாக ஊடகங்களில் திருநங்கையே தொகுப்பாளராக வந்து முத்திரை பதித்து வரும் காலத்தில்,திருநங்கைகளுக்கான தவறான பிம்பத்தை உடைத்து எறிந்து, அவர்களது உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்று விழிப்புணர்வை விதைக்கும் விதமாக கிராமியக்கலை நடைபெறும் கலை இரவில் பரதநாட்டியம் என்னும் தமிழர்களின் தொன்மைக் கலையை அரங்கேறி அற்புத உரையாற்றி சாதித்த நர்த்தகி நடராஜ் பாராட்டுக்குரியவர். வாழ்க்கையில் விரக்தி,சோகம் அடைந்த மக்களுக்கு சுறுசுறுப்பையும், தன்னம்பிக்கையையும் விதைத்துள்ளார்

உலகின் முதல் மனிதன் தமிழன், உலகின் முதல் மொழி தமிழ்மொழி, உலகின் முதல் நடனம் தமிழர்களின் சதிர் நடனம். நடனம் என்பது தமிழர்களின் ரத்தத்தோடு,உணர்வோடு கலந்த ஒன்று. எனவே தமிழர்கள் இது நமது கலை அல்ல என்று ஒதுக்குவதை விடுத்து குழந்தைகளுக்கு தமிழர் கலையை பயிற்றுவிப்போம். தமிழர்கள் தொலைத்து விட்ட அடையாளங்களை மீட்டெடுப்போம்,வாருங்கள்.

முதலில் இவர் திருநங்கை என்று சொல்லாமல்,நடனம் மட்டும் ஆடச் சொன்னால் பார்ப்பவர்களால் இவர் திருநங்கை என்பதையே கண்டுபிடிக்க முடியாது.அந்த அளவிற்கு பிரபல நடன மங்கைகளையும்,மிஞ்சுகின்ற வண்ணம் மிகச்சிறப்பானதொரு நடனம் புரியும் திருநங்கை நர்த்தகி நடராஜ் மனித குலத்திற்கே ஒரு பாடமாக திகழ்கின்றார். தானும் உயர்ந்து திருநங்கை இனத்திற்கும் பெருமை சேர்த்து வரும் நர்த்தகி நடராஜ்,சக்தி வாழ்க பல்லாண்டு!


| Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio |

2011/5/17 RRavi Ravi <erae...@gmail.com>

RRavi Ravi

unread,
May 17, 2011, 11:56:00 AM5/17/11
to anbudan, kee...@googlegroups.com, beyo...@googlegroups.com, Indian-M...@yahoogroups.com, beyout...@yahoogroups.com, thantha...@googlegroups.com, namtamilar, தமிழ் அமுதம், Minthamil, paga...@googlegroups.com, theyva-...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
அன்பு நண்பர் ரவி தங்களது பணி சிறப்பானது.வாழ்த்திற்கு உரியது.ஆனால்,
ரீமிக்ஸ் எனும் பெயரால் இன்று ஒப்பற்ற காவியங்களெல்லாம் குப்பைக்குக்கூட,லாயக்கற்றவையாவதுதான் முடிவு.
அதேபோல் மிகுந்த வலியும்,போராட்டமும்,நெடும்பயணம் கொண்டுபெற்ற நர்த்தகி எனும் உழைப்பின் பெயர் 
மிக சாதாரணமாக வீணாக்கப்பட்டதைத் தவிர, இதுவும் மேற்ச்சொன்ன ரகம்தான்.தங்களின் விமரிசனப்படி,
துணிச்சலான முயற்சி!!? என்பதைத்தவிர....சொல்ல ஒன்றும் இல்லை.
பாவம் நாங்கள் ...பரிதாபம் ....அந்த இயக்குனர்....
முடிந்தால் ...வலைத்தளங்களில் என் கருத்தைப் பகிருங்கள்.இது எனது சொந்தக்கருத்து.
அன்புடன்,
நர்த்தகி நடராஜ் 

narthaki...@yahoo.com


2011/5/16 RRavi Ravi <erae...@gmail.com>
 
[Attachment(s) from RRavi Ravi included below]

நர்த்தகி                           

.

__,_._,___


Reply all
Reply to author
Forward
0 new messages