|
இலங்கை
சிறப்புப்பகுதி
சினிமா ஆன்மீகம் விளையாட்டு |
|||
|
சங்கமம் லைவ் செய்திகள்
இன்றைய செய்திகள் இலங்கை பயணம் தோல்வி - நியூயார்க் திரும்புகிறார் விஜய் நம்பியார்
கொழும்பு:
இலங்கையில் போரினை நிறுத்தி , மோதல்
பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கான
உடனடித் தேவைகளை கவனிப்பதற்காக
கொழும்பு சென்ற ஐக்கிய நாடுகள்
சபையின் பிரதம அதிகாரி விஜய்
நம்பியார், தனது பயணம் எந்தவிதமான
பயனையும் பெற்றுத்தராத நிலையில்
இன்று நியூயார்க் திரும்புகின்றார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்
தனது சிறப்புப் பிரதிநிதியாகவே அவரை
கொழும்புக்கு அனுப்பி
வைத்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தா.பாண்டியன் மீது வழக்குப் பதிவு
மதுரை
, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்
மாநில செயலாளர் தா.பாண்டியன். இவருடைய
குடும்பத்துக்கு சொந்தமான விவசாய
பண்ணை உசிலம்பட்டி அருகே உத்தப்ப
நாயக்கனூரில் உள்ளது.
இலவச புத்தகம்: பள்ளி செல்கிறது
சென்னை
, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு
இலவச பாடப்புத்தகம் நேரடியாக அனுப்பி
வைக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:- லட்சுமி மில்ஸ் : ஜி.கே. சுந்தரம் மரணம்
கோவை
, கோவை தொழில் வளர்ச்சிக்கு
வித்திட்டவர்களில் ஒருவரான லட்சுமி
மில்ஸ் குழுமத் தலைவர் ஜி.கே. சந்தரம்
இன்று காலை காலமானார். இறுதி
சடங்குகள் இன்று மாலை நடக்கிறது. கோவை
பாப்பாநாயக்கன் பாளையத்தை
சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ஜி.கே.
சுந்தரம் (95). நேற்று நள்ளிரவு திடீரென
ஏற்பட்ட நெஞ்சு வலியால்
சிகிச்சைக்காக தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 1.30
மணிக்கு இறந்தார்.
ஆசிரியர் கல்வி படிப்பு : மே 20 - ஜீன் 3 வரை மனு
சென்னை
, ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கான
விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல்
விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும்
2009-10ம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியல்
கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்,
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
மற்றும் உதவி பெறும், உதவி பெறாத
தனியார் சிறுபான்மை மற்றும்
சிறுபான்மையினர் அல்லாதோர் ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர்
கல்வி பட்டய பயிற்சிக்கும், ஆங்கிலோ
இந்திய ஆசிரியர் பட்டய பயிற்சிக்கும்
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
ஒற்றை சாளர முறையில்
தேர்ந்தெடுப்பதற்காக விநியோகம்
செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை
சென்னை
, தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணி
நேரத்தில் மழை பெய்யக் கூடும் என்று
சென்னை வானிலை ஆய்வு நடுவம் நேற்றுத்
தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல்: சிறப்புச் சலுகை
சென்னை
, பி.எஸ்.என்.எல். செல்பேசி முன் கட்டண
முறை வாடிக்கையாளர்களுக்கு இரண்டு
சிறப்புக் கட்டண உறுதிச் சீட்டுகளும்
(வவுச்சர்கள்), இந்தியா கோல்டன் 50 என்ற
புதிய திட்டமும் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அனல்மின் நிலையம் உற்பத்தி பாதிப்பு
சென்னை
, வடசென்னை, தூத்துக்குடி அனல்மின்
நிலையங்களில் மின் உற்பத்தி
பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரியவந்துள்ளது. இதனால், இதுவரை ரூ.250
மில்லியன் யூனிட் மின் உற்பத்தி
இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட
வெளிமாநிலங்களில் இருந்து கூடுதல்
விலைக்கு மின்சாரத்தை வாங்குதால்,
தமிழக மின்வாரியததுக் இதுவரை ரூ.250
கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், விஷ வாயு தாக்கி 4 பேர் பலி
தாம்பரம்
, தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம்
பிள்ளையார் கோயில் தெருவைச்
சேர்ந்தவர் குப்புசாமி கட்டிட
மேஸ்திரி. அங்கு பழைய கட்டிடத்தை
இடித்துவிட்டு, புதிதாக சொந்த வீடு
கட்டி வருகிறார். அந்த வீட்டுக்குள்
சிறிய பாழடைந்த கிணறு உள்ளது. அதை
நிரந்தரமாக மூடாமல், கிணற்றின் மீது
சிமென்ட் பலகை வைத்து
அடைந்திருந்தனர்.
இன்போசிஸ் வேலை: ஊழியரின் மதிப்பு ரூ.97 லட்சம்
பெங்களூர்
, நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப
நிறுவனமான இன்போசிஸ் டெக்னாலஜியின்
ஒவ்வொரு ஊழியரின் மதிப்பு ரூ.97 லட்சம்
என்று அந்நிறுவன ஆண்டு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
ஆங்சாங் சுகி நலமாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தகவல்
யாங்கூன்
, மியான்மர் நாட்டின் ஜனநாயகத்தின்
காவலராக விளங்கும் ஆங்சாங் சுகி எந்த
வழக்கையும் சந்திக்கத் தயாராக
இருக்கிறார். அவர் உடல்நலத்துடன்
இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர்
கீவின் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பேட்டி
சென்னை
, திமுகவின் பொருளாளரும், உள்ளாட்சித்
துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின்
தனக்கு முதலமைச்சர் பதவி
வேண்டுமென்றோ துணை முதலைமைச்சர் பதவி
வேண்டுமென்றோ கேட்க மாட்டார் என்று
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி
கூறியுள்ளார்.
பிரபாகரன் மறைவு குறித்த செய்திக்கு பதிலளிக்க கருணாநிதி மறுப்பு
சென்னை
, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரன் மரணம் என்று வெளிவரும்
செய்திகள் குறித்து
உறுதிபடுத்தப்பட்ட தகவல்களோ
அறிவிப்புகளோ தமக்கு எதுவும்
வரவில்லை என்றும், இதுகுறித்து தாம்
எதுவும் சொல்ல விரும்பவில்லை என
திமுக தலைவர் கருணாநிதி
கூறியுள்ளார்.
சென்னை பல்கலை தபால் படிப்பு: 30-ந் தேதி வரை விண்ணப்பம்
சென்னை
, சென்னை பல்கலைக்கழக அஞ்சல்
வழிக்கல்வி திட்டத்தில் இளநிலை,
முதுநிலை பட்ட படிப்புகளுக்கான
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி
நாள் நீட்டிக்கப் பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து இளநிலை பட்ட
தேர்வுகளுக்கும் அபராத கட்டணத்துடன்
வருகிற 21-ந் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். இதே போல், அனைத்து
முதுநிலை படிப்புகளுக்கான
தேர்வுகளுக்கும் 26-ந் தேதி வரை
விண்ணப்பம் செய்யலாம். அபராத
கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி
நாள் 30-ந் தேதி ஆகும்.
இந்திய தேர்தல்: ஒபாமா பாராட்டு
வாஷிங்டன்
, இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல்
சுமுகமாக நடந்து முடிந்ததற்கு
அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரான்ஸ்: அணு ஒப்பந்தம்
பாரிஸ்
, இந்தியாவும், அமெரிக்காவும்
அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது
போல பாகிஸ்தானுடன் அணுசக்தி
ஒப்பந்தம் செய்து கொள்ள பிரான்ஸ்
முன் வந்துள்ளது.
குவைத் தேர்தல்: 4 பெண்கள் தேர்வு
குவைத் சிட்டி
, குவைத் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்
நடந்தது. 50 உறுப்பினர்களை கொண்ட
நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில்
210 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 16
பேர் பெண்கள் குவைத் பெண்களுக்கு
ஓட்டு உரிமையும், தேர்தலில்
போட்டியிடும் உரிமையும் கடந்த 2005-ம்
ஆண்டு வழங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு
மற்றும் 2008-ம் ஆண்டு நடந்த
தேர்தல்களில் பெண்கள்
போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றி
பெறவில்லை.
பிரபாகரன் மரணம் செய்தி : பா.ம.க. தொண்டர் தீக்குளிப்பு
அரியலூர்
, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்
அருகேயுள்ள குவாகம் கிராமத்தை
சேர்ந்தவர் அன்பழகன். பா.ம.க. பிரமுகர்
இவர் கூலிவேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு வேலைக்கு சென்றவிட்டு
வீட்டுக்கு திரும்பினார். அப்போது
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன்
பற்றி பரவிய தகவலால் அதிர்ச்சி
அடைந்தார். மனம் உடைந்த அவர் இரவு 11
மணியளவில் உடலில் மண்எண்ணை ஊற்றி
தீவைத்துக் கொண்டு தெருவுக்கு ஓடி
வந்தார்.
பிரபாகரன் குறித்த வதந்தி : தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை
, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்
பிரபாகரன் குறித்து வதந்தி
பரவியதால், சென்னை உள்பட தமிழகம்
முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகள்
அமைப்பினை தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட
முக்கியத் தலைவர்கள் ராணுவத்
தாக்குதலில் கொல்லப்பட்டதாக
வதந்தி பரவியது. இதையடுத்து, சென்னை
உள்பட தமிழகம் முழுவதும் போலீஸார்
உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடலோரப் பாதுகாப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் குறித்த தகவல், சென்னையில் முன்னெச்சரிக்கை : 300 பேர் கைது
சென்னை
, சென்னையில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக 300 பேர் கைது
செய்யà
��்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்
போர் முனையில் கொல்லப்பட்டதாக
வெளியான தகவல் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
பிரபாகரன் கதி என்ன? என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை. பிரபாகரன் பற்றிய தகவல்களால் தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வியாசர்பாடியில் அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. பிரபாகரன் சுட்டுக் கொலை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்
கொழும்பு
:விடுதலைப் புலிகளின் முக்கியத்
தலைவர்கள் இன்று காலை
போர்ப்பகுதியில் இருந்து
தப்பிச்செல்லும் பொழுது இலங்கை
ராணுவத்தினால் சுட்டுக்
கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம்
தெரிவித்துள்ளது.
பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி பலி?, உடலை கண்டுபிடித்ததாக இலங்கை ராணுவம் தகவல்
கொழும்பு
: கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில்
இன்று காலை விடுதலைப் புலிகள்
இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன்
சார்லஸ் அந்தோணியின் உடல்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம்
கூறியுள்ளது.அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோரும் இறந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தமிழின அழிப்பின் இறுதிக் கட்டம்: கனரக பீரங்கி தாக்குதலை தொடங்கியது இலங்கை ராணுவம்
கொழும்பு:
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப்
பெரும் சக்திகள் சிலவற்றின்
துணையுடன் - இலங்கை நடத்திவரும்
தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக்
கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை
அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும்
மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால்
கிராமத்தில் இருந்து தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தமிழருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படாதவரை போர் முடிவடைந்ததாகக் கருதிவிட முடியாது - ஜோன் ஹோம்ஸ்
அரசியல் ரீதியான தீர்வின்
திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு்
சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத
வரையில் போர் முடிவடைந்து
விட்டதாகக் கருதமுடியாது. என
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான
விவகார உதவிச் செயலாளர் ஜோன்ஹோம்ஸ்.
கூறியுள்ளார் .
புலிகள் உள்ள சிறுபகுதியில் பீரங்கித் தாக்குதலை நிறுத்துவது என்ற பேச்சுகே இடமில்லை - கோத்தபாய இராசபக "இலங்கையில் விடுதலைப் புலிகள் என்ற
அமைப்பே தற்பொழுது கிடையாது.
எஞ்சியுள்ள சின்னஞ்சிறு பகுதியில்
புலிகள் மட்டுமேஉள்ளனர்.
அப்பகுதியில் தொடர்ந்து பீரங்கித்
தாக்குதல்கள் நடைபெறும். அதை
நிறுத்துவது தொடர்பாக எந்தப்
பேச்சுக்கும் இடமில்லை.'
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சரின் செயலர் கோத்தபாய இராசபக்சே கூறியுள்ளார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; பத்மநாதன் அளித்த நேரலை பேட்டி விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக
விடுதலைப்புலிகளின் அனைத்துலக
தொடர்பாளர் செல்வராசா பத்மநாபன்
இங்கிலாந்தின் சேனல் 4 ஊடகத்திற்கு
வழங்கிய நேரலை பேட்டி
புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளதாக - நார்வே அமைச்சர் தகவல் நார்வே: தமிழீழ விடுதலைப் புலிகள்
மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை
ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளனர் என
நார்வேயின் அபிவிருத்தி அமைச்சர்
எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.
மரண பூமியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால்
கொழும்பு:
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள
முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு
புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள
இலங்கைப் படையினர், பொதுமக்கள்
மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய
பகுதி மீது தொடர்ந்து கனரக
ஆயுதங்களைப் பயன்படுத்தி
குண்டுகளைப் பொழிந்து
கொண்டிருப்பதாக இன்று காலை
அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
2வது சுதந்திரம் கிடைத்ததாக சிங்களர்கள் பால் பொங்கல் வழங்கி கொண்டாட்டம்
கொழும்பு
:பிரபாகரன் மரண வதந்திச்
செய்தி கேட்டு நேற்று ஞாயிறு அன்று
இலங்கையில் ஜனாதிபதி தரையிறங்கி
மண்ணை முத்தமிட்ட போது நாட்டில்
பட்டாசுகள் வெடித்துக் சிதறின.
சிங்கள மக்கள் நாட்டிற்கு இரண்டாவது
தடவையாகக் சுதந்திரம்
கிடைத்துவிட்டதெனக் கூறி பால்
பொங்கல் பொங்கி உண்டு மகிழ்ந்து
கொண்டாடினர்.
பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பாதுகாப்பான பகுதிளுக்கு தப்பினர். கொழும்பு:முல்லைத்தீவு நந்திகடல்
களப்பு பகுதியில்
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்
கட்டுப்பாட்டிலுள்ள
பகுதியிலிருந்து பிரபாகரன் பொட்டு
அம்மான் உள்ளிட்டவர்கள்
பலபடகுகளில் பாதுகாப்பான
இடங்களுக்கு தப்பினர், என்று
ஊர்ஜிதம் செய்யப்பட்ட
தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுவிபரமாவது:-
சனிக்கிழமை இரவும் ஞாயிறு அதிகாலையிலும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன. இதில், முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக இலங்கை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். |
||||
| Click here to end all Your subscriptions | ||||
| This is an autogenerated news mail, please do not respond |
|
இலங்கை
|
சிறப்புப்பகுதி
|
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| உதயசூரியன் கொண்டுவரும் சேதி..! - துரை
|
| பள்ளியே வேலை வாய்ப்பகம்: கல்வித்துறை
ஏற்பாடு
நாகர்கோவில்
, பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு
மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் வேலை
வாய்ப்பு அலுவலக பதிவுக்கு
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்னையா கூறியது. |
| மணல் திருட்டு: 20 லாரி, பறிமுதல்
திருவள்ளூர்
, திருட்டுத் தனமாக மணல் அள்ளிச் சென்ற
20 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. |
| ரூபாய் மதிப்பு உயர்வு:தங்கம் விலை
சரிவு
சென்னை
, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி
நிலையான ஆட்சியை கொடுக்கும் என்பதன்
எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு
உயர்ந்ததால் தங்கத்தின் விலை ஒரே
நாளில் பவுனுக்கு ரூ.296 குறைந்தது. |
| நோபல் பரிசு எழுத்தாளர் மீது மான நஷ்ட
வழக்கு
துருக்கி, நோபல் பரிசு பெற்ற துருக்கி
எழுத்தாளர் ஆரஹன் பமூக் மீது
நீதிமன்றத்தில் 23 மில்லியன் டாலர்
நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துருக்கி எழுத்தாளர் ஆரஹன் பமூக்
எழுதிய சுனோ, மை நேம் இஸ் ரெட் ஆகிய
நூல்களுக்காக 2006ம் ஆண்டு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு
பெற்றார். இவர் 2005-ம் ஆண்டு சுவிஸ் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் முதலாவது உலகப் போரில் 30 ஆயிரம் குருதுஸ்களும் 10 லட்சம் ஆர்மினியர்களும் கொல்லப்பட்டனர் என்று கூறியிருந்தார். |
| பிரபாகரன் மரணம் சந்தேகமே : டாக்டர்
ராமதாஸ் பேட்டி
சென்னை
, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
போர்க்களத்தில் கொல்லப் பட்டதாக
இலங்கை அதிபர் ராஜபக்சே குறிப்பிட்டு
எதுவும் நாடாளு மன்றத்தில்
தெரிவிக்கவில்லை என்றும்,
தீவிரவாதிகள் பலரை இலங்கை ராணுவம்
கொன்றுள்ள தாகத்தான் கூறியுள்ளார்
என்று பாட்டாளி மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ்
கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மருத்துவர் ராமதாஸ் கூறியது. |
| விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோடைகால
விளையாட்டுப் பயிற்சி
தஞ்சை
, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட
விளையாட்டுப் பிரிவு சார்பாக
கீழ்கண்ட விவரப்படி சிறப்பாக நடைபெற
உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்னை சத்யா விளையாட்டரங்கில் 18.05.2009 முதல் 02.06.2009 முடிய கீழ்கண்ட விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி முடியவும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி முடியவும் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. |
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 50
ஆண்டு விழா
சென்னை
, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்
வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு
விழா மே 16 அன்று சென்னையில் உள்ள
ரஷ்யக் கலாச்சார மையத்தில் சிறப்பாக
நடைபெற்றது. இதையொட்டி கண்காட்சி
ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை
ரஷ்யக்கலாச்சார மையத்தின் இயக்குனர்
ஸ்டானிஸ்லாவ் சியகோவ் திறந்து
வைத்தார். |
| விஐடி மாணவரின் லிம்கா சாதனை
வேலூர்
, விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவர்
சந்தீப் ஜோஷி. ராஜஸ்தான் மாநிலம்
உதய்பூரைச் சேர்ந்த இவர் விஐடி
பல்கலைக்கழகத்தில் பயோ
டெக்னாலஜியில் பி.டெக் முடித்து
தற்போது சென்னை காக்னிசன்ட்
டெக்னாலஜி சொலுசன்ஸ் தகவல்
தொழில்நுட்ப நிறுவனத்தில்
பணிபுரிந்து வருகிறார். இவர்
பதின்மான முறைக்குப் பின்னதாக 10
ஆயிரம் இலக்கங்களை நினைவில் கொள்ளத்
தக்க திறன் உள்ளவர். இவர் பதின்மான எண்
எனப்படும் டெசிமலுக்கு பின்னர் 132
இலக்கங்களின்பை மதிப்பை நினைவு
கூர்ந்து அறியச் செய்யும் வகையில்
அல்கோரிதம் என்னும் பாடலையும்
உருவாக்கியுள்ளார். |
| சென்னை பத்திரிகையாளர் சங்க புதிய
நிர்வாகிகள் தேர்வு
சென்னை
, சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின்
நிர்வாகிகள் தேர்விற்கான தேர்தல்
நேற்று நடைபெற்றது. மொத்தம் 11
பொறுப்புகளுக்கு 15 பேர் மனுச்
செய்திருந்தனர். வேட்பு மனுக்களைத்
திருப்பப் பெறுவதற்கான கடைசி நாளான
நேற்று 4 பேர் தங்கள் வேட்பு
மனுக்களைத் திரும்பப் பெற்றனர். |
| பங்குச் சந்தை: 2100 புள்ளி உயர்வு
மும்பை, மக்களவைத் தேர்தலில்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்குக் கூட்டணிக்கு, நிலையான
ஆட்சி அமைப்பதற்குக் கிடைத்துள்ள
உறுதியான வெற்றியினால் ஏற்பட்டுள்ள
ஊக்கத்தினால் மும்பை பங்குச்
சந்தையில் நேற்று முதலீட்டாளர்களின்
பங்கு மதிப்பு ஒரே நிமிடத்தில் ரூ.6.5
லட்சம் கோடி அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் ஒட்டு மொத்த மதிப்பு ஒரே நிமிடத்தில் 6,56.477 கோடி ரூபாய் அதி கரித்திருக்கிறது. |
| பிரபாகரன் மரணம், உலகத் தமிழர்கள்
ஏற்க மறுப்பு
குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனின் இறப்பு குறித்து முரண்பட்ட செய்திகளையே இலங்கை அரசு இதுவரை தெரிவித்துள்ளது. பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித ஹோஹன்னவும், இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வல்லவும் கூறினர். |
| சென்னையில் ஆயத்த ஆடை பயிற்சி
சென்னை
, ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி
மையத்தின் (ஏடிடிசி) சார்பில் ஆயத்த
ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு
பயிற்சிகள் நடைபெற உள்ளன. இது குறித்து பயிற்சி மையத்தின் இணைப்பதிவாளர் டி.சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:- |
| இலங்கையில் மனித உரிமை மீறல்:
ஐரோப்பிய ஒன்றியம்
பிரசல்ஸ்
, இலங்கையில் மனித உரிமை மீறல்கள்
குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த
வேண்டும் என்று ஐரோப்பிய
ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ள 27
நாடுகளின் வெளியறவு அமைச்சர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். பிரசல்ஸில்
நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்
கூட்டத்தில் இந்தக் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. |
| தமிழகத்தில் மீண்டும் மின் தடை அரசு
ஆலோசனை
சென்னை
, வீடுகளுக்கு 24 மணி நேரம் தடையில்லா
மின்சாரம் வழங்க தினமும் 25 முதல் 35
கோடி ரூபாய் செலவு செய்து வாரியம்
மின்சாரம் வாங்குகிறது. லோக்சபா
தேர்தல் முடிந்ததால் வீடுகளுக்கான
மின் தடை மீண்டும் தடை முறைக்கு
வருமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய மின் தேவை 9,500 மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் ஆக உள்ளது. சராசரியாக 1,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. |
| மீண்டும் ஓட்டு சீட்டு முறை தேவை: மனித
நேய மக்கள் கட்சி கோரிக்கை
சென்னை
, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறையை
நீக்கிவிட்டு, மீண்டும்
ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர
வேண்டும் என மனித நேய மக்கள்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,
தமுமுகவின் தலைவருமான ஜவாஹிருல்லா
கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள
அறிக்கை:- |
| இலங்கை தமிழ் மக்களுக்கு உடனடியாக
அரசியல் தீர்வு நடவடிக்கை :
மார்க்.கம்யூ வலியுறுத்து
சென்னை
, இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கான துயர்
துடைப்பு மற்றும் அரசியல்
தீர்வுக்கான உடனடி நடவடிக்கையை
எடுக்க வேண்டும். என மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. |
| (வீடியோ)பிரபாகரன்
உயிருடனும்,நலமுடனும் உள்ளார் -
விடுதலைப்புலிகள் அறிவிப்பு
விடுதலைப்புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,
நலமுடனும் இருப்பதாக விடுதலைபுலிகள்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின்
அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா
பத்மநாதன் பிரிட்டனனைச் சேர்ந்த
சேனல் 4 தொலைக்காட்சிக்கு நேற்று மாலை
இந்திய நேரப்படி 7 மணியளவில் தொலைபேசி
வாயிலாக அளித்த பேட்டியில் இதனை
உறுதிப்படுத்தியுள்ளார். |
|
இலங்கை
சிறப்புப்பகுதி
|
|
ஆன்மீகம் விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| கருணாநிதி, பிரணாப் பதவி பேரம், இழுபறி
புதுடெல்லி
, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான
புதிய அமைச்சரவையில் நான்கு கேபினட்
அமைச்சர், மூன்று இணை அமைச்சர்
பதவிகளை திமுக கோருவதாகவும்
இதுகுறித்து இரண்டாவது கட்ட
பேச்சுவார்த்தையின் போது முடிவு
செய்யப்படும் என்று காங்கிரஸ்
தெரிவித்துள்ளது. |
| சிவகங்கை, விருதுநகர் வெற்றி, நிஜம் :
நரேஷ்குப்தா உறுதி
சென்னை
, சிவகங்கை, விருதுநகர் உட்பட அனைத்து
மக்களவை தொகுதிகளிலும் தேர்தலும்,
வாக்குப்பதிவும், முடிவுகளும்
நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து
முடிந்துள்ளன என்று தமிழக தலைமைத்
தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா
கூறியுள்ளார். |
| வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி :
ஜெயலலிதா
சென்னை
, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை
பொதுத் தேர்தலில், தமி்ழ்நாடு
மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40
நாடாளுமன்ற மக்கள் அவைத்
தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த
வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும்
நன்றி தெரிவிக்கிறேன் என்று ஜெயலலிதா
கூறியுள்ளார். |
| மன்மோகன் பிரதமராக மே.22 ல் பதவியேற்பு
புதுடெல்லி
, மக்களவையில் 322 உறுப்பினர்களின்
ஆதரவுடன் வரும் 22ம் தேதி பிரதமராக
பதவி பிரமாணம் எடுக்க உள்ளதாக
காங்கிரஸ் கட்சியின் தலைவர்
சோனியாகாந்தி முன்னிலையில் மன்மோகன்
சிங் அறிவித்துள்ளார். |
| ஆந்திர முதல்வர் : பதவியேற்பு
ஹைதராபாத்
, ஆந்திர மாநிலத்தில் முதல்வராக
இரண்டாம் முறையாக டாக்டர். ராஜசேகர
ரெட்டி பதவியேற்றார். ஹைதராபாத்தில்
உள்ள எல்.பி. மைதானத்தில் நடந்த
விழாவில் முதலமைச்சருக்கான
பதவியேற்பு உறுதிமொழியை ஆளுநர்
ஒய்.பி. சவான் செய்து வைத்தார். |
| எம்.கே. நாரயணன் : இலங்கை பயணம்
புதுடெல்லி
, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.
நாராயணன் இலங்கை செல்கிறார்.
டெல்லியில் முதல்வர் கருணாநிதியை
சந்தித்த பின் இத்தகவலை அவர்
தெரிவித்தார். டெல்லியில் இன்று காலை
10.20க்கு முதல்வர் கருணாநிதியை தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்
சந்தித்தார். இலங்கை நிலவரம்
குறித்து இருவரும் 15 நிமிடங்கள்
பேசினார். |
| சிறுமி பலாத்காரம் போலிச்சாமிக்கு 16
வருடம் ஜெயில்
திருவனந்தபுரம்
, சிறுமிகளை பலாத்காரம் செய்த
வழக்கில் போலிசாமியார் சந்தோஷ்
மாதவனுக்கு 16 ஆண்டு சிறை மற்றும் ரூ.2
லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து
கோர்ட் உத்தரவிட்டது. கேரள மாநிலம்
எர்ணாகுளம் இடப்பள்ளியில்
சாந்திதீரம் என்ற பெயரில் ஆசிரமம்
நடத்தி வந்தவர் சந்தோஷ் மாதவன் (40).
ஆசிரமத்துக்குள்ளேயே சரணாலயம் என்ற
பெயரில் ஏழை பெண் குழந்தைகளுக்காக
இல்லம் நடத்தி வைத்தார். |
| இலங்கைத் தமிழர் நிவாரணம் : கருணாநிதி
பேட்டி
சென்னை
, இலங்கைத் தமிழர் பகுதிகளில்
நிவாரணத்ககாக எவ்வளவு தேவையோ
அவ்வளவையும் நிறைவு செய்வோம் என
பிரதமர் மன்மோகன்சிங்
உறுதியளித்திருப்பதாக முதல்வர்
கருணாநிதி நிருபர்களிடம்
தெரிவித்தார். டெல்லியில் ஐக்கிய
முற்போக்கு கூட்டணி தலைவர்களின்
கூட்டம் நடந்தது. ஐ.மு. கூட்டணி
தலைவராக சோனியாகாந்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக
முதல்வர் கருணாநிதியை தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன்
சந்தித்து பேசினார். கருணாநிதி பேட்டியில் கூறியிருப்பது : |
| காது கேளாதோர் : பள்ளி மாணவர் சேர்க்கை
விருதுநகர்
, காது கேளாதோருக்கான அரசு
உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள்
சேர்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே
சூலக்கரையில் காது கேளாதோருக்கான
அரசு உயர்நிலைப்பள்ளியில் 2009-10ம்
கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகள்
சேர்க்கப்பட உள்ளனர். இப்பள்ளியல்
சேருவதற்கு பிறவிலேயே காது கேளாத
மற்றும் வாய் பேச இயலாத மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம். |
| ஈழத் தமிழர் மறுவாழ்வு : அமெரிக்கா
வலியுறுத்து
வாஷிங்டன்
, தமிழர்களின் மறுவாழ்வுக்கு
முக்கியத்துவம் கொடுத்து இலங்கை அரசு
செயல்படவேண்டும் என்ற அமெரிக்க
வெளிவிவகாரத்துறை செய்தித்
தொடர்பாளர் ஹான் கெல்லி
கூறியுள்ளார். இலங்கை அரசு தனது
நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய
தருணம் வந்துவிட்டது. நாட்டில்
ஜனநாயகம், சகிப்புத்தன்மை, மனித
உரிமைகள் காக்கப்படவேண்டும் என்று
கெய்லி கூறினார். |
| சென்னையில் ரயில் டிக்கெட் விற்பனை : 18
தரகர் சிக்கினார்.
சென்னை
, பயணிகள் கவுன்டரில் ரயில் டிக்கெட்
எடுத்த 18 தரகர்கள் கையும் களவுமாக
சிக்கினர். அவர்களுக்கு ரூ.20 ஆயிரம்
அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே
வெளியிட்ட செய்திக்குறிப்பு : |
| சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்
மே. 28 ல்
சென்னை
, மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், கடந்த
பிப்ரவதி மாதம் 21ம் தேதி நடந்தது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான
அறிவிப்பு மார்ச் 3ம் தேதி
அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடைத்தை
விதி அன்றைய தினமே நடைமுறைக்கு
வந்தது. ஒவ்வொரு மாதமும் நடக் வேண்டிய
மாநகராட்சி மன்ற கூட்டம்
நடக்கவில்லை. |
| மும்பையில் 1 சதுர அடி ரூ.56,000 !
மும்பை
, ரியல் எஸ்டேட் வர்த்தகம் முடங்கி
இருப்பதாக கூறப்படும் நிலையில்,
மும்பையில் ஒரு பழைய அடுக்குமாடிக்
குடியிருப்பு ரூ.14 கோடிக்கு விற்பனை
ஆகி உள்ளது. 2500 சதுர அடி கொண்ட வீடு, ஒரு
சதுர அடி ரூ.56,000க்கு விலை போயுள்ளது.
தெற்கு மும்பை பகுதியில் சொகுசு
குடியிருப்புகளுக்கு மவுசு அதிகம்.
காரணம், கடற்கரையை ஒட்டி
அமைந்திருப்பதுடன், தொழிலதிபர்கள்,
திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட
பிரபலங்கள் அதிக அளவில் இங்கு
வசிக்கின்றனர். |
| ஐஏஎஸ், ஐபிஎஸ் வேலையை விட தனியார் துறை
வேலையை நேசிக்கும் இளம் தலைமுறை
புதுடெல்லி
, வருமானம் அதிகம் என்பதால், அரசு
வேலையை விட தனியார் நிறுவனங்களில்
பணியாற்றுவதையே இளைஞர்கள்
விரும்புகின்றனர். இதை ஐஏஎஸ்
முதல்நிலை தேர்வில் 50 சதவீத
விண்ணப்பதாரர்கள் ஆப்சென்ட் ஆனது
நிரூபிக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட
சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்வதற்கான
பல கட்டத் தேர்வுகளில் முதல்நிலை
தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும்
நடத்தப்பட்டது. அதில் பங்கேற்க
ஏராளமானோர் விண்ணப்பித்தனர். ஆனால்,
அவர்களின் 50 சதவீதம் பேர் தேர்வில்
பங்கேற்கவில்லை. |
| 3வது அணிக்கு மூடு விழா : மார்க்சிஸ்ட்
ஒப்புதல்
புதுடெல்லி
, காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு
மாற்றாக 3வது அணியை மக்கள் ஏற்கவில்லை
என்று மார்க்சிஸ்ட் ஒப்புக்
கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் பொலிட்
பீரோ கூட்டம் நடந்தது. இதில் தேர்தல்
தோல்வி பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
பொலிட் பீரோ வெளியிட்ட அறிக்கையில்
கூறியுருப்பது: |
| பிரபாகரன் இறந்ததாக தவறான தகவல்
பரப்பும் இலங்கை அரசை கண்டித்து
தமிழகத்தில் போராட்டம்
|
| இயல், இசை, நாடக மன்றத் தேர்தல் :ஜூன்
15.ல் மனு தாக்கல்
சென்னை
, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற
செயலாளர் இளையபாரதி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு : தமிழ்நாடு இயல்,
இசை, நாடக மன்றத்தின் புதிய
பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு
செய்வதற்கான தேர்தல், விரைவில்
நடைபெற உள்ளது- |
| பாகிஸ்தான் இரட்டை வேடம் : அமெரிக்க
குற்றச்சாட்டு
வாஷிங்டன்
, தலீபான்களை ஒடுக்குவதில் பாகிஸ்தான்
உளவுத்துறை இரட்டை வேடம் போடுகிறது
என்று அமெரிக்க ராணுவம்
குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக
அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட்
கேட்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| இனி தமிழத்தில் தடையின்றி மின்சாரம் -
மின்வாரியம் தகவல்!
சென்னை
, "அனைத்து நுகர்வோருக்கும் தங்கு
தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்'
என, தமிழ்நாடு மின்சார வாரியம்
அறிவித்துள்ளது. செய்திக்குறிப்பு
வருமாறு: கடந்த நாட்களில்
தமிழகத்தின் மின்தேவை 9,300 முதல் 10
ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது.
தற்போது, தமிழகத்தில் பரவலாக மழை
பெய்து வருவதால் மின் தேவை 8,700
மெகாவாட்டாக குறைந் துள்ளது. |
| ஆண்டிபட்டி அருகே மின் கம்பியில்
சிக்கி கரடி பலி
ஆண்டிபட்டி
, ஆண்டிபட்டி அருகே
டி.ராஜகோபாலன்பட்டியில் உள்ள
தோட்டத்தில் அறுந்து கிடந்த
மின்கம்பியில் சிக்கிய கரடி
பலியானது. ஆண்டிபட்டி வடக்கு
காப்புகாடு பகுதியில் கரடிகள்
நடமாட்டம் அதிகம் உள்ளது.
குடிநீருக்காக இரவு நேரங்களில்
கரடிகள் மலையடிவாரத்தில் உள்ள
தோட்டங்களுக்கு வந்து செல்லும்.
நேற்று அதிகாலை ஐந்து வயது
மதிக்கத்தக்க ஆண் கரடி அழகர்சாமியின்
தோட்டப்பகுதியில் தண்ணீர் குடிக்க
வந்துள்ளது. |
| மலேசியாவில் இந்தியர்களின்
உரிமைக்காக புதிய கட்சி உதயம்
கோலாலம்பூர்
, மலேசியாவில், சிறுபான்மையின இந்திய
மக்களுக்கு சம உரிமை கோரி, நேற்று
"இண்ட்ராப்' அமைப்பின், முன்னாள்
தலைவர் புதிய அரசியல் கட்சியை
துவக்கினார். "இண்ட்ராப்' அமைப்பின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து, பின்
அவ்வமைப்பில் இருந்து வெளியேறியவர்
ஆர்.எஸ். தனேந்திரன். |
| சென்னையில் வேலை வாய்ப்பு பதிவு :
சிறப்பு முகாம்
சென்னை
, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிய
சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.சென்னை
கலெக்டர் அறிக்கை:வரும் 26ம் தேதி முதல்
29ம் தேதி வரை நான்கு நாட்கள்
திருவல்லிக்கேணி காமராஜர் சாலையில்
உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்
பள்ளியிலும், தங்கசாலை அரசு தொழிற்
பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் வேலை
வாய்ப்பு பதிவிற்கான சிறப்பு முகாம்
நடைபெறும். |
| +12 பொதுத்தேர்வில் ஆதிதிராவிட
பள்ளிகள் அபார சாதனை
சென்னை
, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை பள்ளிகளின் தேர்ச்சி
சதவீதம் 75 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 23
ஆண்டு கால வரலாற்றில், இந்த ஆண்டு தான்
முதன் முறையாக இந்த சாதனை எட்டப்
பட்டுள்ளது என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை ஆசிரியர்கள், காப்பாளர்கள்,
அலுவலர் கள் நலச் சங்கங்களின்
கூட்டமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கை :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையில் மொத்தம் 77 மேல் நிலை
பள்ளிகள் உள்ளன. இவற்றில், சேலம்
மாவட்டம், மாட்டுக்காரனூர்
ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலை
பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று
மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ளது. |
| பா.ம.க., செயற்குழு : 24ம் தேதி கூடுகிறது
சென்னை
, லோக்சபா தேர்தலில் பா.ம.க.,
போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும்
தோல்வி அடைந்தது. தேர்தல்
தோல்விக்கான காரணங்களை ஆராய, வரும்
24ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில்
அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம்
கூடுகிறது. இது குறித்து பா.ம.க., தலைவர்
மணி வெளியிட்ட அறிக்கை: பா.ம.க.,வின்
தலைமைச் செயற்குழுக் கூட்டம், வரும்
24ம் தேதி காலை 11 மணியளவில் தைலாபுரம்
தோட்டத்தில் நடக்கிறது. ராமதாஸ்
முன்னிலை வகிக்கிறார். |
| மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் புதிய
மதில்சுவர் : தலைமை ஸ்தபதி தகவல்
மதுரை
: ""மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச்
சுற்றி, 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய
சுற்றுச்சுவர் கட்டப்படவுள்ளது,''
என்று அரசு தலைமை ஸ்தபதி முத்தையா
கூறினார். இக்கோவில் கும்பாபிஷேகம்
கடந்த மாதம் 8ம் தேதி, 14 கோடி ரூபாயில்
நடந்தது. கடந்த 6ல் சித்திரைத்
திருவிழா முடிந்தநிலையில், கடந்த 16ல்
கீழசித்திரைவீதியில் காந்தி மண்டபம்
அருகேயுள்ள பிரம்மாண்ட
சுற்றுச்சுவரின் ஒரு பகுதி
இடிந்துவிழுந்தது. உயிர்ச்சேதம்
இல்லை. சேதமடைந்த சுவரை சீரமைப்பது
குறித்து, அரசு தலைமை ஸ்தபதி முத்தையா
நேற்று ஆய்வு செய்தார். நமது
நிருபரிடம் அவர் கூறியதாவது: அரை
அங்குலம் வரை தரைக்குள் சுவர்
இறங்கியதும், இடிந்ததற்கு காரணமாக
இருக்கலாம். |
| (வீடியோ)இந்தோனேஷியா விமான விபத்து 78
பேர் பலி
ஜகார்தா
, இந்தோனேஷியாவில் இன்று காலை
ராணுவத்துக்கு சொந்தமான விமானம்
ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில்
பயணம் செய்த 68 பேர் உடல்கருகி
பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேஷியா
விமான படைக்கு சொந்தமான சி-130 ஹெர்குல்
ரக விமானம் ஒன்று 112 பயணிகளுடன் இன்று
காலை கிழக்கு ஜாவாமாகாணத்தில் உள்ள
விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான
பயிற்சிக்கு புறப்பட்டது- |
| எய்ட்ஸ் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
இல்லம் தொடக்கம்
சென்னை,
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளக்கான ‘பிரத்யக்ஷா‘ என்ற
இல்லம் மெல்லோ சர்க்கிள் அமைப்பால்
தொடங்கப்பட்டுள்ளது. சென்னை
ஆவடியில் உள்ள வேல் டெக் பொறியியல்
கல்லூரிக்கு அருகில் உள்ள வெள்ளனூர்
கிராமத்தில் பிரத்யக்ஷா தெருவில்
இந்த இல்லம் தொடங்கப்பட்டுள்ளது. |
| தமிழகம் முழுவதும் புத்தகக்
கண்காட்சி
சென்னை,
தமிழகம் முழுவதும் 125 தாலுகா
தலைநகரங்களிலும், 30 மாவட்ட
தலைநகரங்களிலும் ஆகஸ்ட் மாதம் முதல்
புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
அநுராகம், வானதி, கிழக்கு உள்ளிட்ட 30
பதிப்பகங்கள் இணைந்து இந்தக்
கண்காட்சியை நடத்துகின்றன.
பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட
இடங்களிலும் கண்காட்சி
நடைபெறவுள்ளது.
|
| ஆற்காட்டில் மே 21ல் தேசிய சிலம்பப்
போட்டி
சென்னை
, ஆறாவது தேசிய சிலம்பப் போட்டி வேலூர்
மாவட்டம் ஆற்காட்டில் மே 21 முதல் 23-ம்
தேதி வரை நடைபெற உள்ளது. அங்குள்ள
மகாலெட்சுமி கல்லூரியில் 3 நாள்
நடைபெறும் இப் போட்டியில் 22
மாநிலங்களில் இருந்து 400 வீரர்,
வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 40
நடுவர்களும் பங்கேற்கின்றனர்.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய
பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப் போட்டி மூலம் இந்திய அணி தேர்வு
செய்யப்பட உள்ளது. அகில இந்திய
சிலம்பாட்டக் கழக பொதுச் செயலாளர் மீ.
அமானுல்லா செய்திக் குறிப்பில்
இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
|
| தனி ஈழம் போராட்டம் தீவிரமடையும்:
விஜயகாந்த்
சென்னை
, இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு
கோரிக்கை மேலும் தீவிரமடையுமே தவிர,
அப்போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது
என தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கூறியுள்ளார். இது குறித்து அவர்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: |
| கல்லூரிகளின் தரப் பட்டியல் இன்று
வெளியீடு
சென்னை
, உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத
பொறியியல் கல்லூரிகள் பற்றிய
விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக
இணையதளத்தில் புதன்கிழமை
வெளியிடப்படுகிறது.சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,
திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய
மாவட்டங்களில் 135 பொறியியல்
கல்லூரிகள் உள்ளன. |
| ஆசிரியர் பட்டயப் படிப்பு விண்ணப்பம்
இன்று முதல் வி்நியோகம்
சென்னை
, ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பம்
புதன்கிழமை முதல் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக ஆசிரியர் கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்
குறிப்பு: |
| சிபிஎஸ்சி (+2) தேர்வு முடிவு :
தமிழ்நாடு, கர்நாடகம் சாதனை
சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் இன்று
அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 94.25
சதவீதமும், கர்நாடக மாநிலத்தில் 96.11
சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இரு மாநிலங்களிலும்
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில்
தேர்வாகியுள்ளனர் என்று சிபிஎஸ்சி
கல்வித்துறையின் தென்மண்டல அதிகாரி
என். நாகராசு இன்று கூறினார். |
இருபத்து நான்கு மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டால் என ஆக போகிறது ?போநிஒ.
www.gtr24.com
2009/5/21 bala murali <nagaisba...@gmail.com>
இனி தமிழத்தில் தடையின்றி மின்சாரம் - மின்வாரியம் தகவல்!
சென்னைஇன்றைய மாலை நாளிதழ் ஒன்றில் மீண்டும் மின்வெட்டு தொடரும் என்று செய்தி வந்திருந்ததே..
இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இன்னும் வளர்ந்து கொண்டு தான் இருககிறது வளர்ந்து நிற்க வில்லை இன்னும் சில வருடங்கள் போனால் சரியாகும்.நம் ஊரில் ஒரு பாலம் கட்டவேண்டும் என்று அதிகாரிகள் கணக்கு போடுகிறார்கள் அவர்கள் அன்றைய வருட வாகன கணககிர்க்கும்அடுத்த சில வருட கனக்கும் போட்டு பாலம் கட்ட நினைகிறார்கள் ஆனால் பாலம் கட்டி முடியும் பொது பாலம் போதுமானதாக இல்லை அது போலதான் மின்சாரமும்
www.gtr24.com
2009/5/21 bala murali <nagaisba...@gmail.com>
On 5/21/09, fonio sivakumar <fsiva...@gmail.com> wrote:இருபத்து நான்கு மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டால் என ஆக போகிறது ?போநிஒ.ஒன்றும் குடி முழுகிவிடாது என்று சொல்வதற்கில்லைபொது மக்களும், பல்வேறு தொழில்நிறுவனங்கள்.. பாதிகப்படுகின்றன..தடையற்ற ஒரு சேவையை தர வேண்டியது ஒரு அரசின் கடமை..
www.gtr24.com
2009/5/21 bala murali <nagaisba...@gmail.com>
இனி தமிழத்தில் தடையின்றி மின்சாரம் - மின்வாரியம் தகவல்!
சென்னைஇன்றைய மாலை நாளிதழ் ஒன்றில் மீண்டும் மின்வெட்டு தொடரும் என்று செய்தி வந்திருந்ததே..
--
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
ஐயா உங்கள் தெருவில் ரோடு போட்டால் பதினைந்து நாட்களாவது கரடு முரடான பாதை தான். அதன் பிறகு தான் நல்ல ரோடு உங்களுக்கு கிடைக்கும் .மின்சாரத்திற்கு சற்று நாட்களாகும் புரிந்து கொள்ளவும் .
என்ன ம்ம்ம்ம் ?அப்படிதான் நடக்கும் அமைச்சர் பதவி ராஜினாமா செய்தால் உடன் உமக்கு எங்கிருந்து மின்சாரம் வரும் ?நீங்கள் மின்சார அமைச்சர் ஆக வேன்டியதுதா னே? அல்லது எப்படி முறையாக மின்சாரம் வழங்க ஆலோசனை தருவது????????????.
உற்பத்தியினை பெருக்கதான் ஐயா நடவடிக்கை எடுக்கச் சொல்லுகிறோம்..
|
சிறப்புப்பகுதி
|
|
|
சினிமா ஆன்மீகம் |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| எங்கு நீ இருக்கிறாய் -- கவிமதி
|
| யு.கே.ஜி., எல்.கே.ஜி. படிப்பு : தனியார்
பள்ளிகள் கொள்ளை : பெற்றோர்கள்
கொதிப்பு
சென்னை
, மதுரை, கோவை, சென்னை, போன்ற நகரங்களில்
எல்.கே.ஜி. பள்ளிக்கட்டணம் 30 ஆயிரமாக
உயர்ந்துள்ளதை அரசு கடும் நடவடிக்கை
எடுத்து தடுக்க வேண்டும் என்று
பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். |
அம்பும் வில்லும் எதிரெதிராய்....!? -
துரை
![]() |
கேட்ட இடம் தராததால் கருணாநிதி
ஆத்திரம் - மன்மோகன் பதவியேற்பு விழா
புறக்கணிப்பு
புதுடெல்லி
, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான
காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து
ஆதரவு தருவோம் என திமுக
அறிவித்துள்ளது. மத்திய
அமைச்சரவையில் திமுகவிற்கு உரிய
பிரதிநிதித்துவம் தராததால் திமுக -
காங்கிரஸ் இடையிலான நல்லுறவில்
விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை முடித்துகொண்டு சென்னை விரைவதாகவும், மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என எடுத்துள்ள முடிவு குறித்து தொடர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடும் என்று புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| திறமையற்ற நீதிபகளுக்கு கட்டாய ஓய்வு!
அகமதபாத்
, முறைகேடு மற்றும் திறமையின்மை
காரணமாக கீழ் கோர்ட்டில் பணியாற்றும்
17 நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு
அளித்து அனுப்ப குஜராத் ஐகோர்ட்
உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| ஊழியர் சாவு : சம்பள, அலவன்ஸ் நஷ்டஈடு
வழங்க வேண்டும்
புதுடெல்லி
, விபத்தில் பலியாகும் ஊழியருக்கு
நஷ்டஈடு கணக்கிடும்போது அகவிலைப்படி
வீட்டு வாடகையையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
பரபரப்பு தீர்ப்பு வழங்கி
இருக்கிறது. |
| அரவக்குறிச்சி அருகே விபத்து : 5 பேர்
பலி
அரவக்குறிச்சி
, அரவசக்குறிச்சி அருகே அதிகாலை
வேனும், டிப்பர் லாரியும் மோதிக்
கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தின் 4
பேர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி
பலியாயினர். தர்மபுரி மாவட்டம்
போச்சம்பள்ளி அத்திக்கானூரை
சேர்ந்தவர் கோவிந்தசாமி. மாம்பழ
வியாபாரி. இதற்காக கிருஷ்ணகிரி
சக்கரப்பள்ளியை சேர்ந்த சந்திரசேகர்
வேனை வாடகைக்கு எடுத்திருந்தார். |
| (புகைப்படம்)இலங்கைத்தமிழரை
பாதுகாக்க தமிழகம் முழுவதும்
எழுச்சிப் பேரணி
இலங்கைத்தமிழரை பாதுகாக்க எழுச்சிப்
பேரணி: இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ்
மக்களை பாதுகாக்கும்படி உலக நாடுகளை
வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இயக்கத்தின் சார்பில் பேரணி நடந்தது.
மதுரையில் நடந்த பிரம்மாண்ட பேரணி. |
| ஆசிரியர் பள்ளி இடமாறுதல் கலந்தாய்வு:
மே 23-ல் ஆரம்பம்
சென்னை
, அரசு நகராட்சி, ஊராட்சி தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
மற்றும் பதவி உயர்விற்கான
காலந்தாய்வு மே 23-ம் தொடங்குகிறது. |
| சென்னை இளைஞர் கொலை: குண்டர்
சட்டத்தில் மூவர் கைது
சென்னை
, கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் கொலை
செய்யப்பட்ட வழக்கில் புதன் கிழமை
சிறையில்
அடைக்கப்பட்டனர்.யானைக்கவுனி
பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (25).
இவர் தனது நண்பர்குளடன்
பெரியமேட்டில் உள்ள கண்ணப்பர் திடல்
மைதானத்தில் ஏப்ரல் 4-ம் தேதி
கிரிக்கெட் விளையாடிக்
கொண்டிருந்தார். |
| 6400 ஊழியர்கள் பணி நீக்கம்: எச்.பி.
நிறுவனம் முடிவு
வாசிங்டன்
, உலகில் உள்ள முன்னணி கணினி
நிறுவனங்களில் ஒன்றான எச்.பி.
நிறுவனம் லாப இழப்பை சந்தித்து வரும்
நிலையில், 6400 ஊழியர்களைப்
பணியிலிரந்து நிறுத்த முடிவு
செய்துள்ளது. |
| இலங்கைப் போர்ப் பகுதிகளில்
ஆதாரங்கள் அழிப்பு
கொழும்பு
, இலங்கையில் போர்ப் பகுதிகளைப்
பார்வையிட வரும் பன்னாட்டுக்
குழுவினரை ஏமாற்றும் பொருட்டு கொடிய
வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது
தொடர்பான ஆதாரங்களை அழிக்கும்
பணியில் சிங்களப் போர்ப்படையினர்
ஈடுபட்டுள்ளனர். |
| இலங்கை அரசு வெளிப்படுத்தியது
பிரபாகரன் உடலா? : தடயவியல் ஐயம்
|
| எல்லை பாதுகாப்பு படையில் 29 ஆயிரம்
காலிப் பணி இடங்கள்
புதுடெல்லி
, எல்லைப் பாதுகாப்பு படைக்குப்
புதிதாக 29 ஆயிரம் பேர் வி்ரைவில்
எடுக்கப்பட இருப்பதாக அதன் டைரக்டர்
ஜெனரல் தெரிவித்தார். எல்லைப்
பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல்
எம்.எல்.குமாவத் பேசியது. |
| பிளஸ் 2 முடித்தால் நேரடியாக எம்.ஏ
படிக்கலாம்
சென்னை
, பிளஸ் 2 படித்தவர்கள் ரேநடியாக
சேர்ந்து படிக்கும் வகையில் 5 ஆண்டு
எம்.ஏ. பட்டப்படிப்புகளை சென்னை
பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர்
ராமச்சந்திரன் கூறியது. |
| பெட்ரோல் விலை உயரும்?
புதுடெல்லி
, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2
உயரும். டீசல் லிட்டருக்கு 30 பைசா
குறையும் என்று தெரிகிறது. |
| இலவச ஆன்லைன் பல்கலை.: ஐ.நா.சபை
நியூயார்க்
, தகவல் தொடர்புத் துறை வளர்ச்சியின்
முக்கிய கட்டமாக ஆன்லைன்
பல்கலைக்கழகம் அமைக்க ஐ.நா
திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கல்வித் துறையின் வளர்ச்சிக்கு இது
பேருதவியாக இருக்கும் என்று ஐ.நா.வின்
உலகளாவிய தகவல் தொடர்பு கூட்டமைப்பு
அறிவித்துள்ளது. |
| இலங்கையில் அதிகாரப் பகிர்வு:
அமெரிக்கா யோசனை
வாஷிங்டன்
, இலங்கையில் வசிக்கும் தமிழர்கள்,
சிங்களர், மற்ற பிரிவினர்
அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்து
வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படவேண்டும் என்று
அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. |
| சென்னையில் மே 23,24 ல் ரஷிய கல்விக்
கண்காட்சி
சென்னை
, ரஷிய கல்விக் கண்காட்சி மே 23, 24 ஆகிய
தேதிகளில் நடைபெற உள்ளது. இது
தொடர்பாக ரஷிய கலாச்சார மையம்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:- |
| திமுக கோட்டை: சென்னையில் ஓட்டை
சென்னை
, திமுகவின் கோட்டை என கூறப்படும்
சென்னை மாநகரில் 14 தொகுதிகளில் அதிமுக
கூட்டணிக்கு திமுகவைவிட அதிக
வாக்குகள் கிடைத்துள்ளன. வட சென்னை
தென் சென்னை, மத்திய சென்னை,
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் ஆகிய
மக்களவைத் தொகுதிகள் சென்னை மாநகர்
மற்றும் புறநகர் பகுதியில்
அமைந்துள்ளன. |
| ஜூன்-2 ல் அகில இந்திய கைப்பந்து:
சென்னை
, 13 முன்னணி அணிகள் பங்கேற்கும் அகில
இந்திய கைப்பந்து போட்டி சென்னையில்
வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது. பனிமலர் பி.ஜான் நினைவு அகில இந்தி கைப்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர். வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர். |
| சந்தோஷ் கோப்பை: கால்பந்து போட்டி
சென்னை
, சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி
சென்னை உள்பட 4 இடங்களில்
நடைபெறுகிறது. இந்த போட்டியை வருகிற
24-ம் தேதி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன்
தொடங்கி வைக்கிறார். |
| திருச்செந்தூர் முருகன் கோவில் ஜூலை
2-ல் குடமுழுக்கு
சென்னை
, திருச்செந்தூர் முருகன் கோவிலில்
ஜூலை 2-ந் தேதி குடமுழுக்க
நடத்தப்படும் என்று இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் பெரிய
கருப்பன் அறிவித்தார்.இதுகுறித்து
தமிழக அரசு செய்திக்குறிப்பு:- |
| பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.800 கோடி
உதவி
வாஷிங்டன்
, பாகிஸ்தான் ராணுவம், ஸ்வாட்
பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுக்கு
எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் 20 லட்சம் மக்கள் அந்த பகுதியை
விட்டு இடம் பெயர்ந்து பெஷாவர்
பகுதியில் தற்காலிகமாக தஞ்சம்
புகுந்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை
செய்வதற்காக ரூ.500 கோடியை அமெரிக்கா
அளிப்பதாக அறிவித்து உள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே 300 கோடி ரூபாயை
ஸ்வாட் மக்களுக்காக வழங்கி உள்ளது.
அதோடு சேர்த்தால் அமெரிக்க உதவி ரூ.800
கோடி ஆகிவிடும். |
| மரம் நடுவதால் மனம் தூய்மையாகும் -
டிஜிபி நடராஜ்
திருவள்ளூர்
, மரங்களை நட்டு பராமரிப்பதால் மழை
வளத்தோடு மனமும் தூய்மையாகும் என
டிஜிபி நடராஜ் பேசினார்.சென்னை புழல்
மத்திய சிறையை பசுமை நிறைந்ததாக
மாற்றும் வகையில் 3,000 மரக்கன்றுகள் நட
திட்டமிடப்பட்டுள்ளது. |
| மின் திருட்டு குறித்து தகவல் தரலாம்
சென்னை
, மின் திருட்டு பற்றிய தகவல்களை
தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என்று
மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்
குறிப்பு:- |
| தா.பாண்டியனுக்கு நிபந்தனையற்ற
முன்ஜாமீன்
மதுரை
, சொத்து பிரச்சனை தொடர்பாக சகோதரர்
சவுந்திரராஜன் கொடுத்த புகார்படி
இந்திய கம்யூ., மாநில செயலர்
தா.பாண்டியன், மற்றொரு சகோதரர் ராஜன்,
சகோதரிகள் ராஜாமணி ஜேம்ஸ், பவுலின்
ஜெயராஜ், உறவினர்கள் கோடாங்கி,
ஜீவானந்தம் மீது உத்தப்பநாயக்கனூர்
போலீசார் வழக்கப் பதிவு செய்தனர். முன்ஜாமீன்கேட்டு பாண்டியன் உட்பட ஆறு பேரும் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். இம்மனு நீதிபதி ராஜ இளங்கோ முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சாமி துரை ஆஜராகினார். |
| கர்நாடகா, மாட்டுவண்டி ஆற்றில்
கவிழ்ந்து 17 பேர் மரணம்
சித்ரதுர்கா
, மாட்டுவண்டி ஆற்றில் கவிழ்ந்ததில், 18
பேர் மூழ்கி உயிரிழந்தனர். இருவர்
காயமடைந்தனர். |
| திருப்பதி: தரிசனத்துக்கு
சென்னையிலிருந்து ஆந்திர சுற்றுலாத்
துறை ஏற்பாடு
சென்னை
, சென்னை தி. நகரிலிருந்து திருப்பதி
சென்று சாமி தரிசனம் செய்து
திரும்பும் சுற்றுலா திட்டத்தை,
ஆந்திரா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
அறிமுகப் படுத்தியுள்ளது.
செய்திக்குறிப்பு:- |
"கண்ணை திறக்கும் கல்வி இன்று குருடாய் போனதே
காசு கொடுத்தால் கதவை திறக்கும் வணிகம் ஆனதே !
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி எய்தினாள்
வீணையை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்!!!
குடிக்கும் தாய் பாலுக்கு விலை ஒன்று வைக்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே !!!"
புதுடெல்லி , பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என திமுக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு உரிய பிரதிநிதித்துவம் தராததால் திமுக - காங்கிரஸ் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதுஎன்ன சொல்லவேண்டும்?
அரசியல் வாதிகளின் இந்த நடவடிக்கைகளுக்கும் வக்காலத்து வாங்குவீர்களோ?
ஒ நீங்கள் என்னை தான் சொன்நீர்கள ?சிவா பலர் உண்டுஎன்னை கேட்டால் போநிஒசிவா /சென்னை சிவா என்று சொலுங்கள் போநிஒ
எபிடித்ததை உங்களிடம்
ங்களுக்கு கேட்டால் உங்களால் முடிந்ததைத்தான் தரமுடியும்னு சொன்னால்.. இல்லை இல்லை எங்களுக்கு எல்லாமே வேணும்னு நாங்க அடம் பிடிச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?
எல்லாத்தையும் குடுக்க நாங்க என்ன <ஈ காரவங்களா?>
|
இலங்கை
|
சிறப்புப்பகுதி
|
|
சினிமா |
|
ஆன்மீகம் விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| திமுகவுக்கு அழைப்பு : பிரதமர்
மன்மோகன்சிங்
புதுடெல்லி
, திமுக தனது முடிவை மறுபரிசீலனை
செய்து தனது அமைச்சரவையில் இடம்பெற
வேண்டும் என்றும், டி.ஆர். பாலு, ஆ. ராஜா
ஆகியோர் தமது கௌரமிக்க அமைச்சரவை
சகாக்களாக செயல்பட்டவர்கள் என்று
பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். |
| பிரதமர் மன்மோகன் சிங் : அமைச்சரவை
பதவியேற்பு
புதுடெல்லி
, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 20
கேபினட் அமைச்சர்களை கொண்ட புதிய
அமைச்சர்கள் இன்று மாலை
பதவியேற்றனர். குடியரசு தலைவர்
பிரதீபா பாட்டீல் பதவி பிரமாணமும்,
ரகசிய காப்பு பிரமாணமும் செய்து
வைத்தார். |
| பிரபாகரன் குடும்பம் பலி :இலங்கை
ராணுவம் மறுப்பு
கொழும்பு
, விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின்
மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2வது மகன்
பாலச்சந்திரன் ஆகிய மூவரும்
இங்கிலாந்தில் பாதுகாப்புடன்
உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும்
போரில் கொல்லப்பட்டு விட்டதாக
அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல்
வெளியானது. |
| பிரபாகரன் என அடையாளம் காட்டப்பட்ட
உடல் தகனம் : சிங்கள ராணுவம் அவசரம்
இலங்கை
, இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக்
கடல் பகுதியில் நடந்த சண்டையில்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை
கொன்று விட்டதாக ராணுவம் அறிவித்தது.
பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள்
இயக்கத்துக்கு துரோகம் செய்து
அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை
அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர். |
| தமிழகத்தில் இலங்கை அகதிகள் : 75,000 பேர்
தஞ்சம்
சென்னை
, தமிழ்நாட்டில் 75 ஆயிரம் இலங்கை
அகதிகள் 117 முகாம்களில் தஞ்சம்
புகுந்துள்ளனர். இலங்கையில்
விடுதலைப்புலிகளுக்கும்,
ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக
தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்றது.
இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து
தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு
வந்தனர். |
பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவர்
ஆயுள் 72 வயது :மதுரை ஜோதிடர் கணிப்பு
மதுரை
, எண்கணித ஜோதிடப்படி பிரபாகரன்
உயிருடன் உள்ளார் என்று மதுரையை
சேர்ந்த ஜோதிடர் வளர்பிறை சோழன்
என்பவர் கூறியுள்ளார். மதுரையை
சேர்ந்த எண்கணித ஜோதிடர்
வளர்பிறைசோழன் இதுதொடர்பாக கூறியது: |
| அரபு சிறைகளில் 1500 தமிழர்கள்
சென்னை
, தமிழர்களின் வெளிநாட்டு மோகம்
அவர்களை பல இன்னல்களில் மாட்டி
விடுகிறது. தமிழகத்தின் பல
பகுதிகளில் இருந்து சவூதி அரேபியா,
குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் பலர்
வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு
நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு
அங்கிருந்து வேறு நிறுவனத்திற்கு
செல்லும்போது அரபு நாட்டு சட்டப்படி
அவர்களது விசா காலாவதி ஆகி விடுகிறது. |
| பிஎன்ஆர் ஸ்டேடஸ் : 139 - எஸ்எம்எஸ் மூலம்
அறியலாம்
சென்னை
, ரயில் பயணிகளின் வசதிக்காக தெற்கு
ரயில்வே எஸ்எம்எஸ் மூலம் தகவல்
பெறும் வசதியை செய்துள்ளது. ரயில்கள்
மற்றும் டிக்கெட் ரிசர்வேஷன் பற்றிய
விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.
பயணிகள் தங்கள் பின்ஆர் எண்ணை டைப்
செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ்
செய்து தங்கள் டிக்கெட் நிலை பற்றிய
தகவல் பெறலாம். இந்த வசதியை
பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் தவிர மற்ற
எல்லா மொபைல் இணைப்புகளிலும்
பெறலாம். |
| எனக்கு சிபாரிசு தேவையில்லை :
இளையராஜா
சென்னை
, இசைதான் எனக்கு எல்லாம் எனக்காக
யரும் சிபாரிசு செய்ய தேவையில்லை
என்று இசையமைப்பாளர் இளையராஜா
கூறியுள்ளார். விகடன் டாக்கீஸ்
தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘வால்மீகி‘
படத்தின் இசை வெளியிட்டு விழாவில்
இளையராஜா பேசியதாவது: |
| தங்கம் விலை உயர்வு: 2 நாளில் ரூ.136
கூடியது
சென்னை
, கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில்
ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன்தினம்
ஒரு பவுன் ரூ.10,664 ஆக இருந்தது. நேற்று
ஒரு கிராமுக்கு ரூ.11 வீதம் உயர்ந்து
ரூ.1344 ஆக விற்றது. பவுனுக்கு (8 கிராம்)
ரூ.88 கூடி ரூ.10,664 ஆனது. இன்று காலை மேலும் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.1350 ஆகவும், ஒரு பவுன் ரூ.10,800 ஆகவும் உள்ளது. கடந்த 2 நாளில் ஒரு பவுனுக்கு ரூ.136 கூடியுள்ளது. 10 கிராம் ரூ.14,565 ஆக விற்கப்படுகிறது. பார் வெள்ளி ரூ.23,535 ஆகவும், ஒரு கிராம் ரூ.25.15 ஆகவும் உள்ளது. |
| கோவை ராமகிருஷ்ணன் மீது தேசிய
பாதுகாப்புச் சட்டம்
கோவை
, போர்ப்படை ஊர்திகள் தாக்கப்பட்ட
நிகழ்வில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு
சிறையில் இருக்கும் பெரியார்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
கு.ராமகிருஷ்ணன் இப்போது தேசியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப் பட்டிருக்கிறார். |
| வருமான வரி: உச்சவரம்பு ரூ.2 லட்சமாக
உயர்த்த முடிவு
புதுடெல்லி
, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான
புதிய அரசின் புதிய நிதிநிலை
அறிக்கையில் வருமான வரி விலக்கு
வரம்பு இப்போதுள்ள ரூ.1:5 லட்சத்தில்
இருந்து ரூ.1.75 லட்சம் அல்லது ரூ.2 லட்சம்
ஆக உயர்த்தப்படலாம். |
| தமிழக அரசு ஊழியர்களுக்கு : சூன் 3 ல்
ஊதிய உயர்வு
சென்னை
, வரும் சூன் 3 ஆம் தேதி முதல்வர்
கலைஞரின் பிறந்த நாளையொட்டி தமிழக
அரசு ஊழியர்களுக்கு நடுணரசுக்கு
இணையான ஊதிய உயர்வு வழங்குவதற்கான
நடவடிக்கைகள் முழுவீச்சில்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| கைவினைப் பொருள் : விழிப்புணர்வு
கருத்தரங்கம்
நாகர்கோவில்
, கைவினைப் பொருட்கள் குறித்த
விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாகர்கோவிலில் நடைபெற்றது. கைவினைப்
பொருட்கள் குறித்த விழிப்புணர்வு
கருத்தரங்கம் நாகர்கோவில் ரோட்டரி
ஹாலில் நடைபெற்றது. |
| ரூபாய்க்கு மதிப்பு, மரியாதை
கூடுகிறது
புதுடெல்லி
, கடந்த சில தினங்களாக அமெரிக்க
டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி
மதிப்பு ரூ.47.39 ஆக அதிகரித்துள்ளது. இது
சென்ற புதன் கிழமை அன்று ரூ.47.49-ஆக
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. |
| மராட்டியம்:நக்சல் தாக்குதல் - 16
போலீசார் கொலை
கத்சிரோலி
, மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள்
மறைந்திருந்து தாக்குதல்
நடத்தியதில் 16 போலீசார் சுட்டுக் கொலை
செய்யப்பட்டனர். மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள கத்சிரோலி மாவட்டத்தில் கதிதோலா என்னும் கிராமத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து 2 வாகனங்களில் அந்த கிராமத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். |
| திமுக செயற்குழு : இப்போது இல்லை
சென்னை
, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான
மத்திய அமைச்சரவையில் திமுக
இடம்பெறுவது தொடர்பாக செயற்குழுவில்
முடிவெடுக்கப்படும் என்று
புதுடெல்லியில் இருந்து வந்த
தகவல்கள் உண்மையல்ல என திமுகவின்
முன்னணி தலைவர்கள் கூறியுள்ளனர். |
| செயற்கை முறையில் பழுக்க வைத்த
மாம்பழம் பறிமுதல்: மாநகராட்சி
அதிரடி
சென்னை
, செயற்கை முறையில் பழுக்க
வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்களை
சென்னை மாநகராட்சி பறிமுதல் செய்து
அழித்தது. சென்னை மாநகராட்சி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:- |
| திரையரங்க உரிமையாளர்கள்
விருப்பம்போல் படங்களை திரையிடலாம் :
ராம.நாராயணன் அறிவிப்பு
சென்னை
, சேலம், தர்மபுரி, நாமக்கல்,
கிருஷ்ணகிரி ஏரியாவை சேர்ந்த
திரையரங்க உரிமையாளர்கள், அவர்கள்
விருப்பம்போல் படங்களை திரையிடலாம்
என்று ராம.நாராயணன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| பிரபாகரன் இறப்புச் சான்று வழங்க
இலங்கை உறுதி : எம்.கே.நாராயணன்
கொழும்பு
, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்
பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை
இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு
வாக்குறுதி அளித்துள்ளதாக தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்
தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு
திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக
இலங்கை அதிபர் ராஜபட்சவுடன்
விவாதிக்க புதன்கிழமை கொழும்பு
சென்றார் எம்.கே.நாராயணன். அவருடன்
வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர்
மேனனும் சென்றுள்ளார்.ராஜபட்சவுடனான
சந்திப்புக்குப் பின், நாராயணன்
கூறியது: |
| சாலை விபத்தில் இன்போசிஸ்
என்ஜினீயர்கள் 5 பேர் சாவு
பெல்காம்
, பெல்காம் அருகே பஸ் கவிழ்ந்ததில்
இன்போஸிஸ் நிறுவன சாப்ட்வேர்
பொறியாளர்கள் 5 பேர் இறந்தனர்; 8 பேர்
காயமடைந்தனர். கர்நாடக மாநிலம்
பெல்காமிலிருந்து 40 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள சங்கேஷ்வர் நடந்த
விபத்து குறித்து போலீஸ் தரப்பில்
கூறப்பட்டது : |
| 5,773 இடைநிலை ஆசிரியர் நியமனம் : மே 28
சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை
, தமிழகத்தில் காலியாக உள்ள 5,773 இடைநிலை
ஆசிரியர் பணியிடங்களுக்கான
சான்றிதழ் சரிபார்த்தல் அந்தந்த
மாவட்டங்களில் மே 28-ம் தேதி தொடங்கி
ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கு 27,956 பேர் போட்டியிடுகின்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர்
இடைநிலை ஆசிரியர் பணிக்கான
இறுதிப்பட்டியல் ஜூன் 15-க்குள்
வெளியிடப்படும் என்று தெரிகிறது. |
| புதிய கவர்னர்கள் நியமனம்
புதுடெல்லி
, மன்மோகன்சிங் அரசு மீண்டும் பதவி
ஏற்றவுடன், தமிழ்நாடு உள்ளிட்ட பல
மாநிலங்களில் புதிய கவர்னர்கள்
நியமிக்கப்படுவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஆசிரியர் பயிற்சி் படிப்பு ஆர்வம்
இல்லை
சென்னை,
ஆசிரியர் பயிற்சியில் சேர
மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைவாக
உள்ளது. ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி
முடித்துவிட்டு 11/2 லட்சம் பேர்
வேலைக்காக காத்திருப்பதால்
தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்று
அவர்கள் அச்சப்படுவதே இதற்கு காரணம். |
| எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட்
சென்னை
, ஒன்பது லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன்
எதிர்பார்த்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியாகிறது.
அன்றைய தினமே பள்ளிகளில் மதிப்பெண்
விவரங்களை தெரிந்துகொள்ள ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. |
| புதிய ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு
மத்திய அரசு எதிர்ப்பு
சென்னை
, வரும் கல்வியாண்டில் புதிய ஆசிரியர்
பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதி
வழங்கக் கூடாது என்று மத்திய அரசு,
தமிழக அரசுக்கு கடிதம்
அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு பதில் அளிக்க உள்ளது. |
| 1,050 கூட்டுறவு வங்கிகளில் விரைவில்
ஏ.டி.எம். வசதி
காஞ்சிபுரம்
, தமிழகம் முழுவதும் 1,050 கூட்டுறவு
வங்கிக் கிளைகளில் வரும் செப்டம்பர்
மாதத்துக்குள் ஏ.டி.எம். வசதி
தொடங்கப்படும் என கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளர் யதீந்திர
நாத்ஸ்வைன் தெரிவித்துள்ளார். அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி வருமாறு:- |
| அனிமேஷன் தொழில்: 2012-ல் 75 ஆயிரம்
வல்லுநர்கள் தேவை
சென்னை
, அனிமேஷன் தொழிலுக்கு 2012-ல் 75,000 பேர்
தேவைப்படுகின்றனர். ஆனால்
வருடத்திற்கு 1,000பேர் தான் படிப்பு
முடித்து வெளி வருகின்றனர் என்று
சி.சி.எக்ஸ், அனிமேஷன் அகாதெமி தலைவர்
ராம் வி.மணி கூறினார். ராம்.வி.மணி கூறியது. |
| பீடி தொழிலாளர் குறித்த ஆவணப்படம்
சென்னை
, பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள
பெண்கள், சிறார்களின் வாழ்க்கையை
வெளிப் படுத்தும் ஆவணப்படம்
வெளியிடப் பட்டது. இந்த ஆவணப்படத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல சிறப்புச் செயலாளர் அபூர்வா வெளியிட்டார். |
| திரைப்படக் கல்லூரி டிப்ளமோ படிப்பு
மாணவர் சேர்க்கை
சென்னை
, எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 3
ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் சி.காமராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:- |
| இலங்கை பிரச்சனையில்
மார்க்சிஸ்ட்கள் தங்களது
நிலைப்பாட்டினை மாற்ற வேண்டும் -
ராமதாஸ்
சென்னை
, இலங்கை பிரச்சனையில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்
தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள
வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தினார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேரணியில் ராமதாஸ் பேசியது. |
| தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.:
நன்கொடை கொள்ளை?
சென்னை
, தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
தனியார் மருத்துவ
பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு
எம்.பி.பி.எஸ். நன்கொடை ரூ.15 லட்சம்
முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும். பி.இ.படிப்புகளில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிப்பு, தகவல் தொழில் நுட்பத் துறை சரிவு ஆகியவை காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரமாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு போட்டி அதிகரித்துள்ளதால், பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்வர். |
| பி.இ. விண்ணப்பம்: 1.50 லட்சம் விற்று
சாதனை
சென்னை
, பி.இ.படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை
1,50893 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. |
| பொருளாதார தீர்வு நடவடிக்கைகளில்
இந்தியா முன்னிலை
புதுடெல்லி
, இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு
தீர்வு காண்பதில்
இந்தியாவிடமிருந்து சில பாடங்களை
அமெரிக்க சுற்றுக் கொள்ள
வேண்டியிருக்கலாம். ஏனெனில்
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு
காணும் திறன் அடிப்படையில்
இந்தியாவுக்கு 13-வது இடத்தையும்
அமெரிக்காவுக்கு 28-வது இடத்தையும்
ஸ்விஸ் நிறுவனம் ஒன்று தந்துள்ளது. |
| கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
பெற புதிய இணைய தளம்
சென்னை
, கல்வி நிறுவனங்களில் வேலை
தேடுபவர்களுக்காக எஜுடெக் சொலூஷன்ஸ்
www.cjobs.in என்ற இணையதளம்
தொடங்கப்பட்டுள்ளது. |
| திருவாரூர் மருத்துவக் கல்லூரி:
மாணவர் சேர்க்கை
திருவாரூர்
, திருவாரூர் கலெக்டர் அலுவலக
பெருந்திட்ட வளாகத்தில் ரூ.100 செலவில்
புதிய மருத்துவ கல்லூரி அமைக்கும்
பணி நடந்து வருகிறது. இதை
பால்வனத்துறை அமைச்சர் மதிவாணன்
நேற்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியது. |
| மே.27 ல் அதிமுக செயற்குழு: ஜெயலலிதா
அறிவிப்பு
சென்னை
, அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும்
27-ம் தேதி கூடும் என்று இக்கட்சியின்
பொதுச் செயலாளர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். |
| கோயில் திருவிழா: பங்கேற்க 400 மாட்டு
வண்டியில் கிராமத்தினர் பயணம்
கமுதி
, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே
உள்ளது அகத்தாரிப்பு. இக்கிராமத்தை
தாய் கிராமமாக கொண்டு 56 கிராமங்கள்
உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விருது
நகர் மாவட்டம் சிவகாசி அருகே
புதுப்பட்டியில் உள்ள கூட முடையார்
கோயில், மல்லி பகுதியில் உள்ள
காளீஸ்வரிகோயில், ராஜபாளையம் அருகே
கீழ் ராஜகுலராமனில் உள்ள இருளப்ப
சுவாமி கோயில் போன்றவை குல தெய்வ
கோயில்களாக உள்ளன. |
| செயற்குழு முடிவே இறுதியானது:
கருணாநிதி பேட்டி
புதுடெல்லி
, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான
அமைச்சரவையில் திமுக இடம் பெறுவது
குறித்து தனிப்பட்ட முறையில் நான்
ஒருவனாக மட்டும் எந்த முடிவும்
எடுக்க முடியாது என்றும் திமுக
தலைவரும், தமிழக முதலமைச்சருமான
கருணாநிதி திட்டவட்டமாக
அறிவித்துள்ளார். |
| ‘அலைபாயுதே' ஸ்டைல் திருமணம் -
உச்சநீதிமன்றம் ஆதரவு
புதுடெல்லி
, கலப்பு திருமணம் செய்த பெண் 18 வயதை
கடந்து இருந்தால் அச்சுறுத்தி
துன்புறுத்தக் கூடாது என்று உச்ச
நீதிமன்றம் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அஞ்சுகம் என்ற பெண்ணும் பியாஸ் என்ற வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அஞ்சும், மதம் மாறிய பிறகு இந்த திருமணம் நடந்தது. இதற்கு அஞ்சும் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து பியாஸ் மீது வழக்குத் தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் சென்றும் பிரச்சனை தீரவில்லை. |
விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரன் உயிருடன் உள்ளார் -
விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்
துறை அறிவிப்பு
கொழும்பு
:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு
எதிரான போர் முடிவந்ததுள்ளதாகவும்,
இறுதிப் போரில் பல
விடுதலைப்புலிகளின் உயர்மட்ட
தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும்
இலங்கை அரசும் அதன் ஊடகங்கள்
கூறிவருகின்றன.குறிப்பாக விடுதலைப்
புலிகளின் தலைவர் பிராபாகரனின்
இறப்பு குறித்து முரண்பட்ட
செய்திகளையே இலங்கை அரசு இதுவரை
தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின்
தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டோம்
என்றும், அவரது உடலை கைப்பற்றி
விட்டோம் என்றும் கூறி ஒரு உடலை
வீடியோவாக்கி உலகில் உள்ள அனைத்து
ஊடகங்களுக்கும் இலங்கை அரசு
வழங்கியது. இதனை இந்தியா மற்றும்
இலங்கையில் உள்ள ஊடகங்கள் திரும்பத்
திரும்ப ஒளிபரப்பின.இருந்தாலும்
உலகில் உள்ள தமிழர்கள் இந்த
காட்சிகளை பார்த்து விட்டு பல்வேறு
சந்தேகங்களை
எழுப்பினர்.இந்நிலையில்
பிரபாகரனின் உடல் என காட்டப்பட்ட
உடலை இலங்கை அரசு அவசர அவசரமாக இன்று
எரித்து விட்டது. |
|
இலங்கை
|
சிறப்புப்பகுதி
|
|
ஆன்மீகம் விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
'ஒரு (கதை) கவிதை'-சு.வேதாராமன்
![]() |
| 10 வது பொதுத்தேர்வு,தக்கலை மாணவர்
முதலிடம்
சென்னை
, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
இன்று வெளியிடப் பட்டன. மொத்தம் 81.6
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம்
அதிகம். கன்னியாகுமரி மாவட்டம்
தக்கலையைச் சேர்ந்த மாணவன் 500-க்கு 496
மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில்
முதலிடத்தை பிடித்துள்ளார். |
| போர்ப்பகுதியில் மனித தடையங்களே
இல்லை : விஜய் நம்பியார் அதிர்ச்சி
கொழும்பு
:இலங்கை இராணுவத்திற்கும்
விடுதலைப்புலிகளுக்கும் இடையில்
இறுதியாக கடும் சண்டை நடைபெற்ற
பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு
ஏற்பட்டுள்ளதை தாம் கண்டதாகவும்
அப்பகுதிகளில் மனிதர்கள்
வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண
முடியவில்லை எனவும் ஐ.நா. செயலாளரின்
பிரதம அதிகாரி விஜய் நம்பியார்
தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தனது பயணத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மத்தியில் பேசும் பொழுது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். |
| ராஜபக்சே போர்க்குற்றவாளி : ஈழத்
தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்
சென்னை
, ஈழத் தமிழர்களைக் காப்போம் என்னும்
பெயரில் சென்னையில் பொதுக்கூட்டமும்,
திருச்சி, மதுரையில் பேரணி
பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் தலைமையில் நடந்தது. தொல். திருமாவளவன் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பொன். குமார், கவிஞர் மு. மேத்தா கலந்துகொண்டனர். |
| எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக்: ஜூன் 15 மார்க்
பட்டியல்
சென்னை
, பத்தாம் வகப்பு, மெட்ரிக்குலேஷன்
தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு
ஜூன் 15-ம் தேதி மதிப்பெண் பட்டியல்
வழங்கப்படும் என்று தேர்வுத் துறை
அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வு முடிவகளை அரச தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார். |
| எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு : தக்கலை மாணவன்
சாதனை
சென்னை
, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 41
ஆயிரத்து 853 மாணவ- மாணவிகள்
எழுதினார்கள். இவர்களில் 6 லட்சத்து 71
ஆயிரத்து 437 (81.6 சதவீதம்) மாணவ- மாணவிகள்
தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| ராகிங் : ஒரு லட்சரூபாய் ‘பைன்‘
ஆஜ்மீர்
, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள
சுவாமி தயானந்த சரஸ்வதி
பல்கலைக்கழகம், ராகிங்கை தடுக்க புது
சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த
பல்கலைக்கழகத்துடன் 250 கல்லூரிகள்
இணைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில்
மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ள
நிலையில், பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது : |
| இப்கோ: விவசாய பணி வாய்ப்பு
புதுடெல்லி
, புதுடெல்லி யிலுள்ள இந்திய
விவசாயிகள் உரக் கூட்டுறவ நிறுவனம்
இப்கோ என அழைக்கப்படுகிறது. இது ஒரு
பெரிய உர தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்திய தவிர வேறு சில நாடுகளிலும் இது
செயல்பட்டு வருகிறது. இது தற்போது
விவசாய பட்டதாரிகளுக்கான
பயிற்சியாளர் (டிரெய்னி) பணியிடங்களை
அறிவித்துள்ளது. |
வழிப்பறி போலீஸ் 27 பேர் சஸ்பெண்ட்
லக்னோ
, பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக 27
போலீசாரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு
அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது-
பதேபூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு
காவல் நிலையங்களில் பணிபுரியும்
போலீசார் கான்ட்ராக்டர்கள்,
வணிகர்கள், கடைக்கார்களை மிரட்டி
பணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள்
வந்தன.இதைத் தொடர்ந்து அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 21 போலீசார் மீது கூறப்பட்ட புகார்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. |
| இடம் இழந்த தமிழர்: உரிய இடத்தில்
குடியேறலாம்- இலங்கை அரசு
கொழும்பு
, இலங்கை ராணுவ நடவடிக்கையால் இடம்
பெயர்ந்த 3 லட்சம் தமிழர்கள் இந்த
ஆண்டு இறுதிக்குள் அவர்கள் சொந்த
இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்
என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. |
| விடுதலைப்புலிகள் ஓயவில்லை:
பழ.நெடுமாறன்
சென்னை
, விடுதலைப் புலிகள் ஓய்வில்லை.
அவர்கள் தொடர்ந்து கொரில்லா போரை
நடத்துவார்கள் என்று இலங்கைத் தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். |
| தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ : தேர்வு
முடிவு
சென்னை
, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வுக்குழு கூடுதல் டிஜிபி
ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாடு காவல் துறையில் 2006ம்
ஆண்டுக்கான 209 சார்பு ஆய்வாளர் (எஸ்ஐ)
நியமனத்துக்கு, பிப்ரவரி 22ம் தேதி
எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில்
வெற்றி பெற்றவர்களின் எண்கள் www.tn.gov.in/tnursb
என்ற இணையதளத்தில்
வெளயிடப்பட்டுள்ளது. |
| தமிழ்நாடு மின்வாரியம் : பிரிப்பு
சென்னை
, தமிழ்நாடு மின்வாரியத்தை 3 அரசு
கம்பெனிகளாக பிரித்து செயல்பட அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு
மின்வாரியத்தை 3 அரசு கம்பெனிகளாக
பிரிக்க, மத்திய அரசு ஏற்கனவே
உத்தரவிட்டது. பல்வேறு காரணங்களால்
இத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. |
| உ.பி.யில் இடி, மழை 20 பேர் சாவு
லக்னோ
, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2
நாட்களில் கடுங்காற்றுடன் கூடிய இடி,
மழைக்கு 20 பேர் இறந்தனர். |
| இலங்கை தமிழர்களுக்கு ரூ.50 கோடி
மருந்துப்பொருட்கள் நாராயணி பீடம்
வழங்குகிறது
வேலூர்
, மே 22: உள்நாட்டுப் போரில்
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ. 50
கோடி மதிப்பில் உயிர்காக்கும்
மருந்துகள் அமெரிக்காவின் "டைரக்ட்
ரிலீப் இன்டர்நேஷனல்' தன்னார்வ
அமைப்பின் மூலம் அனுப்ப ஸ்ரீநாராயணி
பீடம் நடவடிக்கை எடுத்துள்ளதாக
ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தார். |
| இலங்கையில் தமிழர்களை விரைவில்
குடியமர்த்த வேண்டும் - அன்னான்
கொழும்பு
, மோதல்களால் இடம் பெயர்ந்தவர்களை
விரைவாகக் குடியமர்த்துவதன் மூலம் 25
ஆண்டுக்கால போரினால் தமிழ்
மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைச்
சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள்
அவையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி
அன்னான் இலங்கை அரசை கோரியுள்ளார். |
| அகர்ஸசென் கல்லூரியில் குற்றவியல்
படிப்பு அறிமுகம்
சென்னை
, மாதவரம் அகர்ஸசென் கல்லூரியில்
குற்றவியல் மற்றும் காவல்
நிர்வாகவியல் பட்டப்படிப்பு
அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. |
| ஜூன் 22 ல் ஆசிரியர் கல்வி:
பட்டயத்தேர்வு
சென்னை
, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுகள்,
ஜூன் 22ம் தேதி முதல் நடைபெறுகின்றன.
தேர்வுத்துறை கூறியிருப்பதாவது:
ஆசிரியர் கல்வி முதலாம் ஆண்டு
பட்டயத் தேர்வுகள், ஜூன் 22, 23,24
தேதிகளில் நடைபெறும். |
| ஆசியாவிலேயே முதல் முறையாக,
ஹைதராபாத்தில் விமானப் பணிமனை
சென்னை
, ஏர் இந்தியா சார்பில் ஆசியாவிலேயே
முதன் முறையாக ஹைதராபாத் சம்சாபாத்
விமான நிலையத்தில் பணிமனை அமைக்கப்பட
உள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா
நிறுவன சென்னை அலுவலகத்தில் இருந்து
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| தமிழர்களுக்கு அரசியல் தீர்வு:
ராஜபட்சே உறுதி
கொழும்பு
, இலங்கைப் பிரச்னைக்கு அரசியல்
தீர்வு காண உடனடி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு
அதிபர் மஹிந்த ராஜபட்சே மீண்டும்
உறுதி தெரிவித்துள்ளார். இந்திய
பிரதமராக பொறுப்பேற்றுள்ள மன்மோகன்
சிங்குக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்
செய்தியில் அவர் இந்த உறுதியை
அளித்துள்ளதாக கொழும்பு செய்திகள்
தெரிவிக்கின்றன. |
| டைப்பிஸ்ட் ரிசல்ட்:டி.என்.பி.எஸ்.சி.
தலைவர் பேட்டி
சென்னை
, தட்டச்சர் பதவிக்கு தேர்வு
செய்யப்பட்டோரின் இறுதி பட்டியல்
ஜூன் மாதம் முதல் வாரத்தில்
வெளியிடப்படும் என்று
டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
ஏ.எம்.காசிவிஸ்வநாதன் கூறினார். |
| கிராமத்து சப்ஜெக்ட்டா? -
ஒட்டமெடுக்கும் தமிழ் ஹீரோக்கள்
“அழகான ஆறு. சுற்றிலும்
பச்சைப்பசேல்னு வயல்வெளிகள்.
அப்போ, ஒரு தாலாட்டு குரல் மெதுவா
கேட்குது. வேஷ்டியை மடித்துக்கட்டிக்
கொண்டு ஹீரோ வந்துகிட்டு
இருக்கார்......... அப்போ......” என்று
இயக்குனர்கள் கதை சொல்ல ஆரம்பித்தாலே
கோலிவுட் கதாநாயகர்கள் அரண்டு
போகிறார்கள். நிறுத்துங்க...
நிறுத்துங்க...... இப்படிப்பட்ட கதை
வேணாம். நல்ல சிட்டி சப்ஜெக்ட்டா
யோசிசிட்டு வாங்க, என்று திருப்பி
அனுப்பிவிடுகிறார்கள். |
| இந்திய ஆங்கில டி.விக்கள் : வெட்கம்
கெட்ட கூட்டம் - கி.வீரமணி தாக்கு
சென்னை,
ஆங்கிலேயத் தொலைக்காட்சிகளின் திமுக
எதிர்ப்பு வெட்கம் கெட்ட
கூட்டத்தினரின் பொய் என திராவிடர்
கழகத் தலைவர் கி. வீரமணி
கூறியுள்ளார். |
சிறப்புப்பகுதி
|
|
சினிமா |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
'ஒரு (கதை) கவிதை'-சு.வேதாராமன் |
| நேதாஜி: டிரைவர்: மரணம்
பாலக்காடு
, கேரள மாநிலம் வடசேரியை சேர்ந்தவர்
சிண்டன் நாயர். இவர் நேதாஜி சுபாஷ்
சந்திரபோசின் இந்திய தேசிய
ராணுவத்தில் (ஐஎன்எஸ்) பணி புரிந்தார்.
அப்போது சுபாஷ் சந்திரபோசின் கார்
டிரைவாகவும் இருந்தார். |
| ராஜ்தாக்கரே: நன்றி கெட்டவர் -
உத்தவ்தாக்கரே
மும்பை
, மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர்
ராஜ்தாக்கரே நன்றி கெட்டவர் என
சிவசேனா செயல் தலைவர் உத்தவ்தாக்கரே
கடுமையாக தாக்கியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மும்பையில் சிவசேனா பலத்த தோல்வியை தழுவியது. மராத்தியர் வாக்குகளை மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பிரித்ததே தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். மராத்தியர் வாக்குகளை ராஜ்தாக்கரே திருடிக் கொண்டதாக சிவசேனா குற்றம் சாட்டியது. மும்பையில் மராத்தியர் அல்லாத மகேஷ் ஜெத்மலானிக்கு (பா.ஜ) ஆதரவாக சிவசேனா பிரச்சாரம் செய்ததே தோல்விக்கு காரணம் என ராஜ்தாக்கரே பதிலடி கொடுத்தார். |
| ஐ.நா. பான்-கீ-மூனுக்கு இலங்கை
எதிர்ப்பு
கொழும்பு
, இலங்கைத் தமிழர் முகாம்களில்
புலிகள் மறைந்திருக்கவில்லை என்பதை
உறுதி செய்த பின்னரே அவற்றை
சுதந்திரமாக பார்வையிட
ஐ.நா.அதிகாரிகளுக்கு அனுமதி
வழங்கப்படும் என இலங்கை அதிபர்
ராஜபக்சே அறிவித்துள்ளார். இது
தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர்
பான்கிமூன் முன் வைத்த கோரிக்கையை
இலங்கை அரசு நிராகரித்துள்ளது. |
| கடல் சீற்றம்: படகு போக்குவரத்து
ரத்து
கன்னியாகுமரி
, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்
மண்டபம் மற்றும் திருவள்ளுவர்
சிலைக்கு பூம்பகார் கப்பல்
போக்குவரத்து கழகம் சார்பில் படகு
போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது.
தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை படகு
போக்குவரத்து நடக்கும். இன்று
காலைபடகு சேவையை ஊழியர்கள் தொடங்க
தயாராயினர். அப்போது கடலில் சீற்றம்
அதிகமாக காணப்பட்டது. |
| நாளை மழை: தமிழகம் வருகை
சென்னை
, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த
தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்
தமிழக கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு
மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. |
| நாளை மே-25 ல் பாமக பொதுக்குழு
சென்னை
, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப்
பொதுக் குழுக் கூட்டம் நாளை திங்கள்
கிழமை (25.05.2009) சென்னையில் கூடுகிறது. |
| ஊழல் வழக்கு: கொரிய அதிபர் தற்கொலை
சியோல்
, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
முன்னாள் தென்கொரிய அதிபர் ரோமூஹைன்
மலை மீது இருந்து குதித்து தற்கொலை
செய்துக் கொண்டார். இந்தக் தகவலை அவரது வழக்கறிஞர் முன் ஜெ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| இலங்கையில் நாஜி பாணியில் 3 லட்சம்
தமிழர்கள் வதை
கொழும்பு
, சுமார் 3 லட்சம் அப்பாவித் தமிழர்களை
பன்னாட்டு சட்டங்களுக்கு விரோதமாக
நாஜி பாணி வதை முகாமில் இலங்கை அரசு
அடைத்து வைத்துள்ளதாக பன்னாட்ட சட்ட
நிபுணரும் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக
சட்டப் பேராரிசியருமான பாய்ல்
தெரிவித்துள்ளார்.அதாவது 1948-ம் ஆண்டு
கொண்டுவரப்பட்டஇனப்படுகொலை
பிரகடனத்தின் பிரிவு 2 சி பிரிவின்
கீழ் இது இலங்கை அரசின்
இனப்படுகொலைச் செயல் என்றுபாய்ல்
குற்றம் சாட்டியுள்ளார். |
| கரூரில் மே 26: அகில இந்திய கூடைப்பந்து
போட்டி
கரூர்
, கரூரில் கே.சி.பி. இந்திராணி நினைவு
அகில இந்திய கூடைப் பந்து போட்டி மே
26-ம் தேதி தொடங்குகிறது. கரூர் டெக்சிட்டி கூடைப் பந்துக் கழகம் சார்பில் இங்குள்ள திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 16 ஆடவர் அணிகளும் 4 மகளிர் அணிகளும் கலந்துகொண்டுள்ளன. |
| சிமெண்ட் விலை நிர்ணயம்:
ஒப்பந்ததாரர்கள் அதிருப்தி
சென்னை
, அரசு கட்டடப் பணிகளுக்கான சிமெண்ட்
விலை நிர்ணயத்துக்கு
ஒப்பந்ததாரர்கள் அதிருப்தி
தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்ந்த அனைத்துத் துறைகளுக்கும் பொதுவான கட்டுமானத் தொழிலுக்கான விலைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும்.அதில், சிமெண்ட் விலை, ஆள் கூலி ஆகியன நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டுக்கான பட்டியல் சிமெண்ட் மூட்டைக்கு ரூ. 220, இரும்புக் கம்பிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 32 ஆயிரம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற கட்சிகள்
ஒத்துழைப்பு வேண்டும்: அமைச்சர்
துரைமுருகன்
சென்னை
, நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில்
ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை
அகற்றும்போது அதற்கு அரசியல்
கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும் என்று பொதுப்பணித் துறை
அமைச்சர் துரைமுருகன்
கேட்டுக்கொண்டார். |
| 20 ரூபாய் சீசன் பாஸ்: மம்தா தாராளம்
புதுடெல்லி
, ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.20
கட்டணத்தில் ரெயில் ‘சீசன்’ டிக்கெட்
வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி
கூறினார்.மத்திய ரெயில்வே மந்திரி
மம்தா பானர்ஜி, அவர் கூறியது:- |
|
இலங்கை
|
|
சிறப்புப்பகுதி
|
|
|
சினிமா ஆன்மீகம் |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| பாலாற்றில் அணை: சந்திரபாபு நாயுடு
மிரட்டல்
சித்தூர்
, பாலாற்றின் குறுக்கே அணை
கட்டாவிட்டால் தெலுங்கு தேசம்
சார்பில் போராட்டம் நடத்தப்படும் என
சந்திரபாபு நாயுடு மிரட்டல்
விடுத்துள்ளார். குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் முதல்முறையாக தெலுங்குதேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு முன் தினம் சித்தூர் மாவட்டம் வந்தார். |
| + 2 தேர்வில் முதலிடம் பெற்ற
மாணவர்களுக்கு முதல்வர் பரிசு
சென்னை
, + 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல்
3 இடம் பிடித்த மாணவர்களுக்கான
உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை மற்றும்
பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர்
கருணாநிதி வழங்கினார். |
| காற்றாலை மின் உற்பத்தியால்
தமிழகத்தில் மின் வெட்டு தளர்வு
சென்னை
, காற்றாலைகள் மூலம் ஆயிரத்து 500 மெகா
வாட் மின்சாரம் கிடைப்பதால் சிறு
தொழில் மற்றும் வணிகவளாகங்களுக்கு
அறிவிக்கப்பட்ட 20 சதவிகித மின்வெட்டு
நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது
என்று தமிழ்நாடு மின் வாரியம்
அறிவித்துள்ளது. |
| குமரிக்கடல் சீற்றம்: மீனவர் அச்சம்
நித்திரவினை
, குமரி கடலில் 3-வது நாளாக கடல் சீற்றம்
ஏற்பட்டதால் குளச்சல், நித்திரவிளை,
கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதி
மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. |
| தனியார் வங்கிகள் கிராமக் கிளைகளை
துவங்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்
புதுடெல்லி, இரண்டாயிரம் பேருக்கு ஒரு
கிளை என்ற அளவில் கிராமப் புறங்களில்
நெட்வொர்க் ஏற்படுத்த தனியார்
வங்கிகள் முன்வருமாறு ரிசர்வ் வங்கி
வலியுறுத்தியுள்ளது. |
| டெபாசிட் காலி வேட்பாளர்களால்
தேர்தல் கமிஷனுக்கு வசூல்:
சென்னை
, தமிழ்நாட்டில் நடந்த மக்களவை
தேர்தலில் போட்டியிட்ட 745 போர்
டெபாசிட் இழந்துள்ளனர். இவர்கள்
செலுத்திய டெபாசிட் தொகை ரூ.70.40 லட்சம்
தேர்தல் கமிஷனுக்கு வருமானமாக
கிடைக்கிறது. |
| பூக்களின் விலை பெரும் சரிவு
சென்னை
, கோடை விடுமுறை மற்றும் முகூர்த்த
நாட்கள் பண்டிகை நாட்கள் இல்லாததால்,
ஒரு மாதமாகவே கோயம்பேடு
மார்க்கெட்டில் பூக்களின் விலையில்
பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. |
| தேசிய அடையாள அட்டை: அறிமுகம்
பெங்களூர்
, மக்களுக்கு குடியுரிமையை உறுதி
செய்வது, பாதுகாப்பு காரணங்களுக்காக
தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை சோதனை முயற்சியாக கர்நாடகாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. |
| திருச்சி மேயர்; ஜூன் 3-ல் தேர்தல்
திருச்சி
, திருச்சி மாநகராட்சி புதிய மேயரை
தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 3-ம்
தேதி நடைபெறும் என மாநகராட்சி
ஆணையரும், தேர்தல் அதிகரியுமான
பால்சாமி அறிவித்துள்ளார். |
| காங்கிரஸ் வெற்றியால் ரிலையன்ஸுக்கு
ரூ.90,000 கோடி லாபம்
மும்பை
, தேர்தல் முடிவுகளால் யாருக்குப்
பலன் இருந்ததோ இல்லையோ-அம்பானி
குழுமம் அடித்தது ஜாக்பாட். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு துவங்கிய வர்த்தக நேரத்தில் ஜஸ்ட் இரண்டு நாட்களில் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் குழுமத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.90,000 கோடி உயர்ந்துள்ளது. |
| அமெரிக்கா இந்தியா: ராணுவ ஒப்பந்தம்
புதுடெல்லி
, இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு
மற்றும் நிர்ப்பந்தங்களிலிருந்து
விடுபட்டு விட்ட இந்தியாவின் புதிய
ஆளும் கூட்டணி அரசு விரைவில்
அமெரிக்காவுடன் ராணுவ அமைப்பு
ஒப்பந்தம் ஒன்றினை மேற்
கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்கா இந்தியப்
பகுதிகளில் தங்களது நடவடிக்கைகளை
மேற்கொள்ள முடியும். |
| திருச்சியில் தேசிய கால்பந்து போட்டி
திருச்சி
, திருச்சி மாவட்ட கால்பந்து கழகம்
சார்பில் 63ஆம் ஆண்டு தேசிய அளவிலான
கால் பந்தாட்டப் போட்டி திருச்சி, தூய
வளனார் கல்லூரி மைதானத்தில்
ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
தொடக்க போட்டியில் ஜம்மு-காஷ்மீர்,
மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில்
இரண்டு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில்
போட்டி டிராவில் முடிந்தது. |
| சீனாவில் பஜாஜ் ஆலை துவக்கம்
மும்பை
, பஜாஜ் ஊர்தி தயாரிப்பு நிறுவனம்,
நைசீரியாவின் குறைந்த விலை இருசக்கர
ஊர்தி சந்தையை மனதில் வைத்து
சீனாவில் புதிய ஆலை அமைத்து அதில் இரு
சக்கர ஊர்திகளை உருவாக்கி இதுவரை
இந்திய வழியாக ஏறக்குறைய 1000 ஊர்திகளை
ஏற்றுமதி செய்துள்ளது. |
| நேபாள புதிய பிரதமர்: நாளை பதவியேற்பு
காட்மாண்டு
, நேபாளத்தில் புதிய பிரதமராக
போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த
கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ்குமார்
நேபாள நாளை பதவியேற்றுக் கொள்ள
இருக்கிறார். |
| ஆந்திராவில் 15 தொழிலாளர் புதையுண்டு
பலி
அடிலாபாத்
, ஆந்திராவில் அடிலாபாத் அருகே மின்
நிலைய கட்டுமான பணியில்
ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 15 பேர்
சுவர் இடிந்து விழுந்து
பலியானார்கள். ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டம் மஞ்செரியல் பகுதியில் மின்நிலைய பணிக்காக 21 தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே இருந்த பெரிய சுவர் திடீரென இடிந்து விழுந்தது. |
| ஆன்-லைன்' வர்த்தகத்தால் விலைவாசி
உயர்வு
சென்னை
, ஆன்-லைன் வர்த்தகத்தால், அத்தியாவசிய
பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்களை,
பதுக்குவதாலும், பெரிய முதலீட்டாளர்
களே, ஏஜன்ட்டுகளை கொண்டு பொருட் களை
கொள்முதல் செய்வதாலும், விலைவாசி
ஏற்றம் ஏற்படுகிறது. இது குறித்த செய்தி குறிப்பு: |
| சோப்பு விலை:மீண்டும் உயர்வு
மும்பை
, சோப்புகளின் விலையை மீண்டும்
உயர்த்த வேண்டிய கட்டாயம், அதை
தயாரிக்கும் நிறுவனங்களுக்கு
ஏற்பட்டுள்ளது; அடுத்த மாதம் இந்த
விலை உயர்வு அமலாகலாம். அதிகம்
விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்
விஷயத்தில் கடந்த ஓராண்டாக பெரும்
மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, சோப்புகள் விலையில்
தொடர்ந்து மாற்றம் காணப்படுகிறது.
சோப்பு விற்பனையில் கணிசமான இடத்தை
பெற்றுள்ள இந்துஸ்தான் யுனிலீவர்
நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள்,
சோப்பு விலையை மீண்டும் உயர்த்தும்
எண்ணத்தில் உள்ளன. இதற்கு காரணம்,
சோப்பு தயாரிப்புக்கு தேவையான
மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருவது
தான். குளியல் சோப்பு தயாரிப்புக்கு
தேவையான பாமாயில் விலை அதிகரித்து
விட்டது; அதுபோல, பேக்கேஜிங் செலவும்
அதிகரித்து வருகிறது. சந்தையில்
போட்டி காரணமாக விலையை
உயர்த்துவதற்கு யோசித்து வந்த
நிறுவனங்கள் இப்போது, விலையை
கட்டுப்படியான அளவில் உயர்த்த
திட்டமிட்டுள்ளன. |
| அவுட்சோர்சிங்: இந்தியா முதலிடம்
புதுடில்லி
, கால்சென்டர் பணியில் இந்தியா,
உலகிலேயே மிகச்சிறப்பாக
செயல்படுவதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. வெளிநாட்டு
நிறுவனங்களின் அலுவலக பணிகளை,
மற்றொரு நாட்டிலிருந்து செய்து
தரப்படும் பணியில் இந்தியா, சீனா,
மலேசியா உள்ளிட்ட பல நாடுகள்
ஈடுபட்டுள்ளன. இந்தியா, சீனா போன்ற
நாடுகளில் ஊழியர்களின் சம்பளம்
குறைவு என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட
மேற்கத்திய நாட்டு நிறுவனங்கள்
தங்கள் அலுவலக வேலைகளை இந்தியா போன்ற
நாடுகளில் செயல்படும்
பி.பி.ஓ.,க்களிடம் ஒப்படைக்கின்றன. |
| பழைய வரலாறு திரும்பும் - இலங்கைக்கு
பான்-கீ-மூன் எச்சரிக்கை
கொழும்பு
, கருத்து வேறுபாடுகளையும், சமூக
பாரபட்சங்களையும் நீக்கி, அமைதியை
உண்டாக்கும் நடவடிக்கைகளை இலங்கை
அரசு மேற்கொள்ளவில்லை எனில், பழைய
வரலாறு மீண்டும் திரும்பி விடும்,'' என,
இலங்கை அரசுக்கு ஐ.நா., பொதுச் செயலர்
பான் -கி-மூன் எச்சரிக்கை
விடுத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை பான்-கீ-மூன் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பின், ஐ.நா., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியது. |
| மக்களவை திமுக நிர்வாகிகள் பட்டியல்
சென்னை
, திமுக மக்களவை கட்சியின்
நிர்வாகிகள் பட்டியலை திமுக
அறிவித்துள்ளது. |
| பஞ்சாபில் கலவரம்
வியன்னா
, ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில்
உள்ள குருத்வாராவில்
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கோஷ்டி
மோதலில் 11 பேர் காயமடைந்தனர். |
| செஞ்சி கோயிலுக்கு மலேசிய அமைச்சர்
நன்கொடை
சென்னை
, செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள
வரலாற்று சிறப்பு மிக்க
அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு மலேசிய
அமைச்சர் கே.ஆர்.சோமசுந்தரம் ரூ.5
ஆயிரம் நிதி வழங்கி உள்ளார். |
| புதுச்சேரியில் ஜூன் 3 ல் அகில இந்திய
கூடைப்பந்து
சென்னை
, முன்னிலை ஆடவர், மகளிர் அணிகள்
பங்கேற்கும் அகில இந்திய அழைப்பு
கூடைப்பந்து போட்டி புதுச்சேரியில்
ஜூன் 3 முதல் 7-ம்தேதி வரை நடைபெற
உள்ளது. பால்ராஜ் நினைவுக்
கோப்பைக்காக நடத்தப்படும் இப்
போட்டியின் ஆடவர் பிரிவில் 6 அணிகளும்,
மகளிர் பிரிவில் 4 அணிகளும்
பங்கேற்கின்றன. |
| பாகிஸ்தானில் 200 பள்ளிகள் எரிப்பு -
தாலிபான்கள் அட்டூழியம்
லண்டன்
, பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில்
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 200
பள்ளிக்கூடங்களை எரித்துவிட்டனர்
தலிபான்கள்.காரணம், அந்த
பள்ளிக்கூடங்களில் சிறுமிகள் படிக்க
வந்ததுதான். பாகிஸ்தான்
ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவினாலும்,
பாராமுகத்தாலும் தலிபான்கள் மெல்ல
மெல்ல வளர்ந்து இப்போது பெரும்
செல்வாக்கு பெற்றுவிட்டனர்.
பாகிஸ்தான் அரசின் போலீஸôரையும்
ராணுவத்தினரையும் எதிர்த்து
துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும்
அளவுக்கு அவர்கள்
துணிந்துவிட்டார்கள். |
| லண்டன் ஹோட்டல் வழக்கு: வாபஸ் கோரி
தமிழக அரசு மனு
பெங்களூர்
, தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக
பொதுச் செயலருமான ஜெயலலிதா மற்றும்
தினகரன் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை
வாபஸ்பெற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு
தாக்கல் செய்த மனு மீது பெங்களூர்
சிறப்பு நீதிமன்றம் விசாரணை
நடத்துகிறது. |
| மீன்பிடிக்கத் தடை: நிவாரணம் கிடக்க
தாமதம் மீனவர்கள் வருத்தம்
தூத்துக்குடி
, கடலில் மீன்பிடிக்க
விதிக்கப்பட்டுள்ள தடை முடிய இன்னும்
5 நாள்களே உள்ள நிலையில், விசைப்படகு
மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி
வருகின்றனர். அதேவேளையில் அரசு வழங்கும் நிவாரண உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். |
| தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு
ஆங்கில சிறப்புப் பேச்சுப் பயிற்சி
மதுரை
, தமிழகத்தில் உள்ள தொடக்கப்
பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்,
ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும்
ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும்
சிறப்புப் பேச்சுப் பயிற்சி
அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்கமானது பிரிட்டிஷ் கவுன்சில், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து நடத்த உள்ளது. |
| சி.ஏ.க்கு இணையான வேலைவாய்ப்பினை
வழங்கும் புள்ளியியல் படிப்பு
சென்னை
, வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதும், சி.ஏ.
படிப்புக்கு இணையானதுமான
புள்ளியியல் துறை படிப்பு பற்றி
தமிழக மாணவர்களிடம் போதிய
விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்
பொறியியல், மருத்துவம் போன்ற
படிப்புகளில் சேரவே அதிகம் ஆர்வம்
காட்டுகின்றனர். இந்த படிப்புகளைத்
தவிர, உயரிய அந்தஸ்து, வருமானம் தரும்
மற்ற படிப்புகளும் உள்ளன. உதாரணமாக
புள்ளியியல் துறை படிப்பு. அரசு, அரசு
உதவி பெறும் மற்றும் தனியார் கலை,
அறிவியல் கல்லூரிகளில் இந்த படிப்பு
வழங்கப்படுகிறது. பிளஸ் 2
முடித்தவர்கள் இதில் சேரலாம். |
| இஸ்லாம் போதிக்க சென்னையில் புதிய
கல்லூரி
சென்னை
, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில்
இஸ்லாமிய சமய கண்ணோட்டத்துடன்
"பிரிஸ்டன் இன்டர்நேஷனல்' கல்லூரி
தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தக் கல்லூரி தரப்பில் கூறியிருப்பது: இந்தியாவிலேயே முதல் முறையாக, இஸ்லாமிய கண்ணோட்டத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. |
| ஆங்கில பயிற்சி: வீடுவீடாக வீட்டா
பிரசாரம்
சென்னை
, ஆங்கிலத்தில் பேசுவது பற்றி
வீடுவீடாக சென்று பிரசாரம்
செய்யப்படும் என்று வீடா நிறுவனம்
தெரிவித்துள்ளது. இது தொடர்பான
செய்திக் குறிப்பு: |
| ஓவியர் ஏ.பி. சந்தானராஜ்: காலமானார்
சென்னை
, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின்
முன்னாள் முதல்வரும், பிரபல
ஓவியருமான ஏ.பி. சந்தானராஜ் காலமானார்.
|
| பட்டயத் தேர்வு: ஜயேந்திர சரஸ்வதி
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதலிடம்
சென்னை
, ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்
தேர்வுகளில் காஞ்சிபுரத்தை அடுத்த
ஏனாத்தூர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
சுவாமி ஆசிரியர் பயிற்சி நிறுவன
மாணவி மாவட்டத்திலேயே முதலிடம்
பெற்றுள்ளார். |
| பெரியாறு அணை: கேரள அதிகாரிகள் ஆய்வு
கம்பம்
, பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள்
ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு
மேற்கொண்டனர். இதையடுத்து,
தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர்
திறந்து விட தடை விதிக்க முடிவு
செய்துள்ளதாக அவர்கள் கூறினர். |
| போர் குற்றம்:இலங்கையை விசாரிக்கும்
முன் அமெரிக்கா,இங்கிலாந்தை
விசாரிக்க வேண்டும்-கோத்தபய ராஜபக்சே
கொழும்பு
, போர் குற்றங்களுக்காக எங்களை
விசாரிக்கும் முன்பாக
அமெரிக்காவையும், இங்கிலாந்தை யும்
விசாரிக்க வேண்டும் என்று கோத்தபய
ராஜபக்சே கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் கடந்த 16-ந் தேதி அன்று மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேலான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. |
பிரபாகரன் வீரமரணமடைந்தார் -
செல்வராசா பத்மநாபன்
விடுதலைப்புலிகளின் தலைவரும், அந்த
இயக்கத்தின் தலைமைத் தளபதியுமான
பிரபாகரன் சிங்கள இராணுவத்தினர்
உடனான போரில் வீர மரணம் அடைந்தார்
என விடுதலைப்புலிகளின் சர்வதேச
வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா
பத்மநாதன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் செல்வராசா பத்மநாபன் தெரிவித்துள்ளதாவது: |
|
சிறப்புப்பகுதி
|
|
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| பொறியியல் கல்வி வழங்க தகுதி உள்ள
ஆசிரியர்களுக்கே பணி!
சென்னை
, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல்
கல்லூரிகளில் தகுதி வாய்ந்த,
தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி பெற்ற
ஆசிரியர்களையே கல்லூரிகள்
பணியமர்த்த வேண்டும் என்று அகில
இந்திய தொழில்நுட்ப கவுன்சி்லுக்கு
பரிந்துரை செய்துள்ளதாக தேசிய
தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்
இயக்குநர் டாக்டர். பி. மோகன்
கூறினார். |
| பொறியியல் கவுன்சிலிங் : 5ம் தேதி
ஆரம்பம்
சென்னை, பொறியியல் சேர்க்கை
கலந்தாய்வு அடுத்த மாதம் 5ம் தேதி
தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை
நடக்கிறது. தமிழக உயர்கல்வித்துறை
அமைச்சர் பொன்முடி, கூறியது : |
| இலங்கையை எதிர்ப்பீர் : கருணாநிதி
சென்னை
, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்துள்ள இலங்கை அதிபர்
ராஜபச்சேவுக்கு எதிராக பல்வேற
நாடுகளும் ஓரணியில் திரண்டுள்ளன.
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் கழகத்தில்
தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் இலங்கை அரசை
இந்தியா ஆதரிக்கக் கூடாது என்ற
மன்மோகன்சிங்கிற்கு கருணாநிதி அவசர
கோரிக்கை விடுத்துள்ளார். |
| இலங்கைக்கு இந்தியத்தீர்வு : நீதியும்
நியாயமும் அமைதியும்
போருக்குப் பிந்தைய வளர்ச்சித்
திட்டங்களுக்கு மட்டும்
இடமளித்துவிட்டு, அரசிய்ல அதிகார
பகிர்வு குறித்து இந்தியாவும்,
சர்வதேச அமைப்புகளும், தமிழக
முதலமைச்சர் கருணாநிதியும் கவனம்
செலுத்தாமல் இருந்து விடக்கூடாது
என்று பிரபல எழுத்தாளர் ஏ.எஸ்.
பன்னீர்செல்வம் கூறியுள்ளார். |
| சினிமா வசூல் 'டல்' தியேட்டர்களுக்கு
மூடு விழா
சென்னை, சினிமா தியேட்டர்கள்
மூடப்படுகின்றன. சினிமா வசூல்
குறைகிறது, ரசிகர்களை ஏமாற்ற
நினைத்தால் சினிமா தொழில் அழியும்
என்று சினிமா தியேட்டர் சங்க தலைவர்
எச்சரித்துள்ளனர். |
| தலைமைச் செயலகத்தில் ரெயில், பஸ்
ரிசர்வேஷன் வசதி
சென்னை, தலைமைச் செயலக அஞ்சலகத்தில்,
ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களில்
செல்வதற்கு முன்பதிவு வசதி
தொடங்கப்பட்டுள்ளது. |
| சென்செக்ஸ் உயர்வு:
புதுக்கோடீஸ்வரன்கள் உதயம்
மும்பை, கடந்த இரண்டு மாதங்களில்
மும்பை பங்குச் சந்தை உயர்வால் ரூ.100
கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள
123 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி
உள்ளனர். |
| பிரபல அமெரிக்க நிறுவனத்தை எஸ்
குமார் வாங்குகிறது
புதுடெல்லி, அமெரிக்க அதிபர் ஒபாமா
உட்பட அந்நாட்டின் முக்கிய
பிரமுகர்கள் விரும்பி அணியும் கோட்
சூட்டுகளை தயாரிக்கும் ரெடிமேட் ஆடை
நிறுவனத்தை இந்தியாவின் எஸ் குமார்
நிறுவனம் வாங்க உள்ளது. |
| 100% தேர்ச்சி காட்ட பள்ளிகள் குறுக்கு
வழி : சிபிஎஸ்இ எச்சரிக்கை
சென்னை, 10, + 2 தேர்வுகளில் 100 சதவித
வெற்றியை குறிக்கோளாக கொண்டு
மாணவர்களை தேர்வு எழுத விடாமல்
தடுக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்
புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட
பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்வது
உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சிபிஎஸ்இ தமிழ்நாடுமண்டல
அதிகாரியும் இணைச் செயலாளருமான
என்.நாகராஜு கூறியுள்ளார். |
| சி.பி.எஸ்.இ.-10-ம் வகுப்பு: மாணவிகள்
சாதனை
சென்னை,
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில்
தமிழ்நாட்டில் 98.61 சதவிதமும்,
கர்நாடகாவில் 98.48 சதவிதமும் மாணவர்கள்
தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று
சிபிஎஸ்இ-யின் தமிழ்நாடு மண்டல
அதிகாரியும், இணைச் செயலாளருமான
என்.நாகராஜு கூறினார். |
| தமிழகஅரசின் வயாக்கராவிற்கு
கிராக்கி
சென்னை, தமிழக அரசு நிறுவனம்
தயாரிக்கும் மூலிகை வயாகரா லபூப்
சகீருக்கு கடும் கிராக்கி
ஏற்பட்டுள்ளது. அதனால் சப்ளை செய்ய
முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். |
| அண்ணா பல்கலை என்ஜினியரிங்
சீட்டுக்கு கடும்போட்டி
சென்னை, சென்னை அண்ா
பல்கலைக்கழகத்தில் கட் ஆப் மார்க் 200
இருந்தால் தான் என்ஜினியரிங் இடம்
கிடைக்கும். |
| அமெரிக்காவில் ஐந்து மாதங்களில் 36
வங்கிகள் திவால்
நியூயார்க், நடப்பு 2009-ம் ஆண்டில்
இதுவரையிலான காலத்தில் (சுமார் ஐந்து
மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள்
திவால் ஆகி உள்ளன. சென்ற 2008 காலண்டர்
ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி
இருந்தன. ஆக. பொருளாதாரத்தில்
ஏற்பட்டுள்ள சீர்குலைவிலிருந்து
அமெரிக்கா இன்னும் மீளவில்லை என்பதை
இது எடுத்துக் காட்டுகிறது. |
| ஆங் சான் சூ கிக்கு மகாத்மா காந்தி
விருது
டர்பன், மியான்மரில் ஜனநாயகத்தை
மீட்கப் போராடி வரும் ஆங்சான் சூ
கி-க்கு மகாத்மா காந்தி அமைதி விருது
அறிவிக்கப் பட்டுள்ளது. |
| தேனி மருத்துவ கல்லூரிக்கு
அங்கீகாரம்
தேனி
, தேனி மருத்துவ கல்லூரியில் வரும்
கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., முதலாம்
ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
கிடைத்துள்ளது. |
| வவுனியாவில் உள்ளாட்சித் தேர்தல்
கொழும்பு
‘சண்டையால் பாதிக்கப்பட்ட
வவுனியாவில் வரும் ஆகஸ்ட்
மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல்
நடத்தி முடிக்கப்படும்' என, இலங்கை
அரசு தெரிவித்துள்ளது. |
| ரூ.21 கோடி தங்கம்: கொள்ளை மும்பை
விமானநிலையத்தில் துணிகரம்
மும்பை
, மும்பை உள்ளநாட்டு விமான
நிலையத்தில், பலத்த பாதுகாப்பையும்
மீறி ஆயுதம் தாங்கிய மூன்று பேர்,21
கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்
மற்றும் வெள்ளி காசுகளை
கொள்ளையடித்துச் சென்று விட்டதாக
விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. |
சிறப்புப்பகுதி
சினிமா ஆன்மீகம் |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| துபாயில் மே 29 ஆம் தேதி
தொழிலாளர்களுக்கான சிறப்பு
இலவச மருத்துவ முகாம்
துபாயில் இந்திய பெண்கள்
சங்கத்தின் சார்பில் மே 29 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12
மணி வரை இந்தியன் கன்சுலேட்,
கேட்வெல் கிளினிக் ஆதரவில்
இந்தியன் கன்சுலேட்
ஆடிட்டோரியத்தில் சிறப்பு இலவச
மருத்துவ முகாம் நடைபெற
இருக்கிறது. |
| துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும்
சமையல், ஓவியம் மற்றும் வினாடி
வினா போட்டிகள்
துபாய் இந்திய கன்சுலேட் ( CONSULATE )
ஆதரவுடன் செயல்பட்டு வரும்
இந்திய கம்யூனிட்டி நல கமிட்டி (
INDIAN COMMUNITY WELFARE COMMITTEE ) அங்கீகாரத்துடன்
செயல்பட்டு வரும் துபாய் தமிழ்ச்
சங்கத்தின் சார்பில் அதன்
உறுப்பினர்கள் மற்றும்
குடும்பத்திற்காக மே மாத
நிகழ்வாக பல்வேறு போட்டிகளை
அறிவித்துள்ளார் துபாய் தமிழ்ச்
சங்க பொதுச்செயலாளர் சி.
ஜெகநாதன். |
| இலங்கை ராணுவத் தாக்குதலில் முடமான
குழந்தைகள், மருத்துவமனைகளில்
கதறும் தமிழர்கள்
இலங்கையில் ராணுவத்தாக்குதலில்
கைகால்கள் இழந்து முடமாகி
மருத்துவமனைகளில் பரிதவிக்கும்
தமிழ் குழந்தைகளின் அவலநிலையைத்
தாங்க முடியாமல் பெற்றோர் கதறிக்
கொண்டிருப்பதாக இங்கிலாந்தின்
‘கார்டியன்' பத்திரிக்கை வேதனை
கட்டுரை வெளியிட்டுள்ளது. கார்டியன் பத்திரிகையில் கெதின் சாம்பர்லின் என்ற பிரபல செய்தியாளர் எழுதிய இலங்கை நிலவர கட்டுரை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கெத்தின் குறிப்பிட்டுள்ள வேதனை நிலவர விபரம்: இலங்கையில் கடந்த 4 மாதங்களாக நடந்த கடும் பேரில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 17 ஆயிரம் பேர் படுகாயமடைந்தாகவும் அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதில், கடைசி 3 நாட்களாக நடந்த உச்சக்கட்ட தாக்குதலில் பலி, படுகாய விவரங்கள் சேர்க்கப்படவில்லை. பலி, படுகாய புள்ளி விவரங்கள் தங்களிடம் இல்லை என இலங்கை சுகாதாரத்துறை கூறுகிறது. |
| மின்னணு வாக்குப் பதிவு முறையை ரத்து
செய்ய அதிமுக செயற்குழு தீர்மானம்
சென்னை
, மின்னணு வாக்குப் பதிவு
இயந்திரங்கள் பெருமளவில் தேர்தல்
முறை கேடுகளுக்கு வாய்ப்பு
அளிப்பதால், இந்த முறையை ரத்து
செய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை
இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்த
வேண்டும் என்று அதிமுக செயற்குழு
தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. |
| தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி
மாற்றம்
சென்னை
, தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள்
இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
போக்குவரத்து செயலாளராக இருந்த
தேவேந்திர நாத் சாரங்கி வனத்துறைக்கு
மாற்றப் பட்டுள்ளார். புதிய
போக்குவரத்து செயலாளராக அதுல்யா
மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். |
| சீக்கியர் கலவரம்: காரணம் என்ன?
ஜலந்தர்
, பஞ்சாப், அரியானா மற்றும் காஷ்மீர்
ஆகிய மாநிலங்களில் நடைபெறும்
சீக்கியர்கள் கலவரத்துக்கு காரணம்
என்ன என்பது பற்றிய தகவல்
கிடைத்துள்ளது. |
| சென்னை ரேஷன் கடைகளில் : 10 கிலோ கோதுமை,
ஒரு கிலோ கோதுமை மாவு
சென்னை
, சென்னை யிலுள்ள ரேஷன்
கார்டுதாரர்களுக்கு 10 கிலோ
கோதுமையும், ஒரு கிலோ கோதுமை மாவு
வழங்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. தமிழக இது குறித்து வெளியிட்ட அறிக்கை:- |
| அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும்
‘ஜாக்பாட்' - முதல்வரிடம் ஊதியக்குழு
பரிந்துரை
சென்னை
, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான
சம்பள உயர்வினை தமிழக அரசு
ஊழியர்களுக்கும் வழங்க வழி வகை
சொல்லும் ‘6-வது சம்பள கமிஷன்’
பரிந்துரைகளை ஆய்வுக் குழுவினர்
முதல்வர் கருணாநிதியிடம் இன்று
ஒப்படைத்தனர். மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசு அலுவலர்களுக்கு நடை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. |
| உயிர் ஆபத்து: பிநாயக் அச்சம்
ராய்ப்பூர்
, மனித உரிமைக்கான மக்கள்
கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிநாயக்
சென்னுக்கு நக்சலைட்டுகளுடன்
தொடர்பு இருப்பதாகக் கூறி சட்டீஸ்கர்
அரசு 2 ஆண்டுகளுக்கு முன்னர் கைது
செய்து ராயப்பூர் சிறையில் அடைத்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை
அடுத்து ஜாமீனில் பிநாயக் வெளியே
வந்தார். |
| பிரசார் பாரதி தலைவர் திடீர் ராஜினாமா
புதுடெல்லி
, பிரசார் பாரதி தலைவர் அருண் பட்நாகர்
ராஜினாமா செய்துள்ளார். பிரசார்
பாரதியின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
அதிகாரி அருண் பட்நாகரை கடந்த ஆண்டு
மத்திய அரசு நியமித்தது. 3 ஆண்டுகள்
அவர் இப்பதவியில் நீடிப்பார் என்று
தெரிவிக்கப்பட்டது. ஆனால் அருண்
பட்நாகருக்கு பிரசார் பாரதியின்
தலைமை செயல் அதிகாரி
பிஎஸ்.லாலிக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. |
| பிரான்ஸ்-பாகிஸ்தான்: அணுசக்தி
ஒப்பந்தம்
அபுதாபி
, பிரான்ஸ் பாகிஸ்தான் இடையே அணுசக்தி
ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
என்று பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ்
சர்கோஷிக்கு நெருக்கமான தகவல்களை
தெரிவிக்கின்றன. |
| வாங்கிய கடன் வட்டிக்காக கொள்ளை:
திருட்டு தொழில் அதிபர் கைது
சென்னை
, வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி
வாங்கியதால், கூலிப்படையினரைக்
கொண்டு 200 சவரன் நகைகளை
கொள்ளையடித்தேன் என சென்னை
தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்து
கைதான மனோகரன், போலீசாரிடம்
தெரிவித்துள்ளனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிதம்பரம் வீட்டில், 200 சவரன் நகை, கடந்த 6-ம் தேதி கொள்ளைப் போனது கொள்ளையர்களைப் பிடிக்க, மயிலாப்பூர் துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் பாலமுருகுன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. |
| மின் திருடர்களிடம் ரூ. 15.49 கோடி வசூல்
சென்னை
, நடப்பாண்டில் 4,425 மின் திருட்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களிடம்
இருந்து இழப்பீட்டுத் தொகை 15 கோடியே 49
லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது
என்று கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன்
தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார வாரிய அமலாக்கப் பிரிவு கஊடதல் டிஜிபி பாலச்சந்திரன் கூறியது:- |
| சோனியின் விளையாட்டு சேனல் விரைவில்
மும்பை
, சோனி நிறுவனம் விளையாட்டு சேனலை
புதிதாக துவக்க உள்ளது. செய்தி, பொழுது
போக்கு என எட்டு சேனல்களை தந்து
கொண்டிருக்கும் சோனி நிறுவனம்
புதிதாக விளையாட்டு சேனல்களை துவக்க
முடிவு செய்துள்ளது. |
| அல்போன்சா மாம்பழம்: அமெரிக்காவில்
பற்றாக்குறை
புதுடெல்லி
, அமெரிக்கர்கள் விரும்பும் அல்போன்சா
மாம்பழம் இந்த ஆண்டு அதிக அளவு
உற்பத்தியாகவில்லை. இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவில் நீண்ட காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. தரமான பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. |
| ஜூனியர்களுக்கு சீனியர்கள் வழிவிட
வேண்டும் : உச்ச நீதிமன்றம்
வக்கீல்களுக்கு அறிவுறை
புதுடெல்லி
, ஜூனியர் வக்கீல்களும் கொஞ்சம்
சம்பாதிக்க சீனியர் வக்கீல்கள் வழி
விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்
அறிவுரை கூறியுள்ளது. கோர்ட்களின் வழக்கமான நாட்களில், சீனியர் வக்கீல்கள் வாதாடுவதற்கான சட்டப் பிரிவுகள், பள்ளி விவரங்களை ஜூனியர் வக்கீல்கள் தயாரித்து கொடுக்கின்றனர். ஜூனியர் வக்கீல்கள் தாங்களாகவே புது வழக்குகளில் ஆஜராவதும், வாதிடுவதும், பணம் ஈட்டுவதும் சிரமமான விஷயமாக இருக்கிறது. |
| எம்.ஜி.ஆரின் கொள்கை வழியில் என் மகனை
வளர்த்தேன் - எஸ்.எஸ்.எல்.சி முதல்
மாணவரின் தந்தை பெருமிதம்
சென்னை
, எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில்
தமிழ்நாட்டிலேயே முதல் மாணவனாக
வெற்றி பெற்றுள்ள ஜோஸ் ரிஜனின் தந்தை
பயஸ், தலைவர் எம்ஜிஆரின் கொள்கைகளை
பின்பற்றி தன் மகனை படிக்க வைத்து
வெற்றி பெற்றேன் என்று கூறியுள்ளார். |
| பார்தி-எம்டிஎன் நிறுவனங்களுக்கு ரூ.1
லட்சம் கோடி நஷ்டம்
புதுடெல்லி
, பார்தி ஏர்டெல் நிறுவனம்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த
எம்டிஎன் நிறுவனத்தைக் கையகப்படுத்த
முடிவு செய்தது. ஆனால் பல்வேறு கட்ட
பேச்சு வார்த்தைக்குப் பிறகு
தென்னாப்பிரிக்க நிறுவனத்தைக்
கையகப்படுத்தும் முயற்சி
தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு இரு நிறுவனங்களிடையிலான பேச்சுவார்த்தை முறிந்து போனதால் இரு நிறுவனங்களுக்கும் பங்கு மூலதனத்தில் ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. |
| மதுரை, திருச்சியில் தாமஸ் குக் கிளை
புதுடெல்லி,
அன்னியச் செலாவணி பணப் பரிமாற்றம்,
வெளிநாட்டு பயண ஏற்பாடு, விமான
டிக்கெட் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு
வரும் தாமஸ் குக் இந்தியா நிறுவனம்
தற்போது சிறிய நகரங்களிலும் தனது
கிளைகளைத் தொடங்க முடிவு
செய்துள்ளது. |
| மலேசியாவில் 60 தமிழ் பள்ளிகள்
சீரமைப்பு
கோலாலம்பூர்
மலேசியாவில் மேலும் 60 தமிழ்ப்
பள்ளிகள் 2-வது கட்டத்தின் கீழ் ரூ.130
கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று
மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் சாமி
வேலுதெரிவித்தார். அநேகமாக இந்த
பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்
கட்டப்படும். |
| மலேசியா விமான நிலையத்தில் தமிழில்
அறிவிப்பு
கோலாலம்பூர்
, மலேசியாவில் உள்ள விமான
நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள்
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அந்நாட்டு தமிழ் அமைப்புகள்
கோரிக்கை விடுத்துள்ளன. |
| சென்னையில் கம்யூட்டர்: இலவசப்
பயிற்சி
சென்னை
, தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில்
தாழ்த்தப்பட மற்றும் பழங்குடி
மாணவிகளுக்கு இலவச அடிப்படை கணினி
பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |