|
தமிழகம்
சிறப்புப்பகுதி
இலங்கை கல்வி / வேலை வாய்ப்பு விளையாட்டு |
|||
|
சங்கமம் லைவ் செய்திகள்
இன்றைய செய்திகள் திருச்சி தர்கா விழா : நாகூர் ஹனிபா கச்சேரி திருச்சி, திருச்சி-மதுரை ரோட்டில்
உள்ள ஹஜ்ரத்தப்லே ஆலம் பாதுஷா
நத்தஹர்வலி தர்காவில் 1012-வது ஆண்டு
சந்தனக்கூடு விழா வெகு விமர்சியாக
நேற்று இரவு நடைபெற்றது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையும் - தமிழக அரசின் கடமையும் -1
பாகம் -1
தமிழ் மக்கள் உலகில் எங்கு
பாதிப்புக்கு உள்ளானாலும் அதனைத்
தடுக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு,
அத்தகைய கடமையைப் புறக்கணிக்கும்
தமிழக அரசு, அரசியல் கட்சி
எக்காலத்திற்கும் கண்டனத்துக்கு
உரியது என்று திமுக நிறுவனர்
தலைவரும் முன்னாள் முதல்வருமான
பேரறிஞர் அண்ணா வலியுறுத்திக்
கூறியுள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இன்றைய தமிழர்கள் - இந்தியத் தமிழர்கள் - தமிழக அரசு எத்தகைய உறுதிப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை 1956 முதல் அன்றைய முதல்வர் கர்மவீரர் கு.காமராஜர், இநதிய தேசிய காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு உணர்த்தியுள்ளார். அது இன்றும் இந்திய கட்சிகளுக்கும், தமிழக அரசுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் நூறுசதம் பொருத்தமுடையதாக விளங்குவது, அண்ணா எத்தகைய கீர்த்திமிகு தொலைநோக்கு உடைய தமிழர் தலைவர் என்பதை இன்றைய மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது. வேலைவாய்ப்புக்காக 23 ஆண்டு காத்திருந்தவர் பெயரை அரசு பணிக்கு பரிந்துரை செய்ய கோர்ட் உத்தரவு சென்னை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்து 23 ஆண்டுகள்
காத்திருந்தவருக்கு 5 ஆண்டு வயது
வரம்பு தளர்த்தி வேலைக்கு பரிந்துரை
செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சேலம்
மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த
ஸ்ரீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்த வழக்கில்
கூறியிருப்பதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் ஐடி துறையில் ஒரு கோடி பேருக்கு வேலை சண்டிகர், உலக பொருளாதார மந்தநிலை
மெல்ல மறைந்து வரும் நிலையில், தகவல்
தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி இரு
மடங்காகும் என்று நாஸ்காம் தலைவர்
பிரமோத் பாசின் தெரிவித்தார்.
சண்டிகரில் தகவல் தொழில்நுட்ப
துறையினரின் இரண்டு நாள் கூட்டம்
நடந்தது. இதில் மின்னணு நிர்வாகம்
குறித்து விவாதிக்கப்பட்டது. இதில்
கலந்து கொண்ட தேசிய சாப்ட்வேர்
மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கத்தின்
(நாஸ்காம்) தலைவர் பிரமோத் பாசின்
கூறியதாவது:
மலேசியாவில் அடைத்து வைக்கப்பட்ட 30 பேர் சென்னை திரும்பினர் சென்னை, வேலைக்கு என்று
அழைத்துச்செல்லப்பட்டு மலேசியாவில்
தனி அறையில் அடைத்துவைக்கப்பட்ட
நெல்லை வாலிபர்கள் உள்பட 30 பேர்
மீட்கப்பட்டு சென்னைக்கு
கொண்டுவரப்பட்டனர்.
எம்.ஆர்.எப். ஊழியர் ஸ்டிரைக் காரணமாக ரூ. 1000 கோடி நஷ்டம் சென்னை: எம்.ஆர்.எப். நிறுவனத்தின்
அரக்கோணம் மற்றும் புதுச்சேரி
தொழிற்சாலை ஊழியர்கள் நடத்தி வரும்
ஸ்டிரைக் 118வது நாளை எட்டியுள்ளது.
இந்த ஸ்டிரைக்கால் நிறுவனத்திற்கு
இதுவரை ரூ. 1000 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளதாக சென்னை எம்.ஆர்.எப்.
நிறுவன நிர்வாக இயக்குநர் கே.எம்.
மேமன் கூறியுள்ளார்.
செப்டம்பர் 7, 8-ல் மதுரை, நெல்லையில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் தூத்துக்குடி, : அகில இந்திய காங்கிரஸ்
பொதுச்செயலர் ராகுல்காந்தி மதுரை
மற்றும் திருநெல்வேலிக்கு செப். 7, 8
ஆகிய தேதிகளில் வரவுள்ளதாக தமிழ்நாடு
காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
எஸ்.டி.ஆர். விஜயசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பால் தாக்கரேவை கைது செய்ய : நீதிமன்றம் உத்தரவு பாட்னா, சிவசேனா கட்சித் தலைவர் பால்
தாக்கரேக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர
முடியாத கைது வாரண்டை பிறப்பித்து
பீகார் மாநில ஜூடிசியல் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், ஒய்.எஸ்.ஆர் : மக்கள் சேவை மகேசன்கள்
TNI
- சென்னை, ஆந்திராவின் தேவுடு
என்.டி.ராமாராவ், தமிழ் நாட்டின்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஆந்திராவின்
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகிய
முப்பெரும்தலைவர்கள் 'மக்கள் பணியே
மகேசன் பணி' என்ற கொள்கை வழி வாழ்ந்த
தலைவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.என்.டி.ஆர், எம்.ஜி.ஆர் இறந்த போது மக்களும் ரசிகர்களும் தற்கொலை செய்ததை, மொட்டை போட்டதை, சினிமா நடிகர்களுக்காக கூத்தாடிகளுக்காக இம்மாநில மக்கள் செயல்படுவதை நவீன அரசியல்வாதிகள், சித்தாந்தம் பேசித்திரியும் முற்போக்கு விமர்ச்சகர்கள் கேலியும் கிண்டலும் தெறிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் 'முட்டாள் ஜனங்கள்' என்று வர்ணித்தனர். இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை : என்.வரதராஜன் திருவாரூர்,: இலங்கைத் தமிழர்
வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய
அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலர் என்.
வரதராஜன்.
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் என். வரதராஜன் பேசியது: “காஞ்சிவரம்” படத்துக்கு 2 தேசிய விருதுகள் சென்னை,சிறந்த திரைப்படங்கள் மற்றும்
நடிகர்களுக்கான தேசிய விருதுகள் நாளை
மறுநாள் (திங்கட்கிழமை)
அறிவிக்கப்படுகின்றன. சிறந்த
நடிகருக்கான தேசிய விருதுக்கு
பிரகாஷ்ராஜ் தேர்வாகியுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது. “காஞ்சிவரம்”
படத்தில் நடித்ததற்காக இந்த விருது
அவருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த
படத்துக்கான தேசிய விருதையும்
இப்படம் தட்டிச்செல்கிறது. மொத்தம்
இரண்டு விருதுகள் கிடைக்கின்றன.காஞ்சிவரம் படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். மத்திய மந்திரி வயலார் ரவி மனைவி மரணம்: கருணாநிதி நேரில் அஞ்சலி சென்னை, மத்திய மந்திரி வயலார்
ரவியின் மனைவி மெர்சி ரவி (வயது 63).
கேரளாவை சேர்ந்த இவர் உடல் நல கோளாறு
காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
அவரது சிறுநீரகம் செயல் இழந்ததால் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்று அதிகாலையில் அவர் மரணம் அடைந்தார். 70 நாளுக்கு பிறகு ஜாக்சன் உடல் அடக்கம் லாஸ்ஏஞ்சல்ஸ், பிரபல பாப் இசை பாடகர்
மைக்கேல் ஜாக்சன் இறந்த 70 நாட்களுக்கு
பிறகு அவரது உடல் எளிய முறையில்
அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரது
பெற்றோர், 3 குழந்தைகள், முன்னாள்
மனைவி கலந்து கொண்டனர். பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தனது 50வது வயதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ரகசிய எண்ணை பயன்படுத்தி ரூ.2.13 லட்சம் கையாடல், வங்கி மேலாளர் மீது புகார் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் மர
வியாபாரியின் வங்கிக் கணக்கில்
இருந்த 2.13 லட்சம் ரூபாயை ரகசிய எண்ணைப்
பயன்படுத்தி வேறு கணக்குக்கு
மாற்றியதாக வங்கி மேலாளர் மீது
போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் நியமனத்துக்கு தடை மதுரை, அரசு உதவி பெறும் தனியார்
பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்
நியமனத்துக்கு உயர் நீதிமன்ற கிளை
இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக
அங்கீகரிக்கப்பட்ட தனியார்
பள்ளிகளின் மேலாளர் சங்க தலைவர்
பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில்
தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தின விழா, 354 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த
நாளை முன்னிட்டு இன்று ஆசிரியர் தின
விழா கொண்டாடப்படுகிறது.
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி கருணாநிதி உத்தரவு சென்னை, இந்த ஆண்டு கூடுதலாக 500 நலிந்த
கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி
வழங்க முதல்-அமைச்சர் கருணாநிதி
உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆரின் அண்ணன் பேரன் அ.தி.மு.க.வில் இணைந்தார் சென்னை, எம்.ஜி.ஆரின் அண்ணன் பேரன்
ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில்
இணைந்தார். தே.மு.தி.க.வுக்கு சென்ற
முன்னாள் எம்.பி. அர்ச்சுனன், முன்னாள்
எம்.எல்.ஏ. வெங்கடாசலம் போன்றவர்களும்
அ.தி.மு.க.வுக்கு திரும்பி
வந்துள்ளனர்.
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 4 என்ஜினீயரிங் கல்லூரிகளில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு சென்னை, தமிழ்நாட்டில் 4 என்ஜினீயரிங்
கல்லூரிகளில் நேற்று
சி.பி.ஐ.அதிகாரிகள் திடீர் சோதனை
நடத்தினார்கள். என்ஜினீயரிங்
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடிய
ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் சிலரும் இந்த
கல்லூரிகளின் விதிமுறை மீறலுக்கு
உடந்தையாக இருந்தது இந்த சோதனையின்
போது தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கவேண்டுமென்றால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி பெறவேண்டும். இதற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் நிபுணர் குழு, தொடங்கப்பட உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்யும். அப்போது திருப்தி இருந்தால்தான் அந்த கல்லூரிக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி வழங்கும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.656 கோடி இழப்பீட்டு தொகை தமிழக அரசு அறிவிப்பு சென்னை, நிஷா புயலால் பாதிக்கப்பட்ட 5
லட்சத்து 36 ஆயிரம் விவசாயிகளுக்கு
ரூ.656 கோடியே 66 லட்சம் இழப்பீட்டுத்
தொகை வழங்கப்படும் என்று
முதல்-அமைச்சர் கருணாநிதி
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் துப்பாக்கி சூடு -இந்திய ராணுவ தளபதி குற்றச்சாட்டு புதுடெல்லி, இந்தியாவிற்குள்
தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யவே
காஷ்மீர் எல்லைப்பகுதியில்
பாகிஸ்தான் அடிக்கடி துப்பாக்கி சூடு
நடத்துகிறது என இந்திய ராணுவத் தளபதி
தீபக் கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.
முழு அரசு மரியாதையுடன் ராஜசேகர ரெட்டி உடல் அடக்கம் ஐதராபாத், மறைந்த ஆந்திர முதல் -
மந்திரி ராஜசேகர ரெட்டியின் உடல்
அடக்கம் அவருடைய சொந்த ஊரில் 21
குண்டுகள் முழங்க முழு அரசு
மரியாதையுடன் நடந்தது. இறுதி
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங்,
சோனியா காந்தி, அத்வானி ஆகியோர்
நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் உடல் கர்னூல் மாவட்டம், நல்லமலை பகுதியில் இருந்து மீட்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை ஐதராபாத் கொண்டு வரப்பட்டது. ஐதராபாத்தில் பேகம்பேட் பகுதியில் உள்ள முதல்-மந்திரியின் அரசு இல்லத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸில் விஜய் ? ஓரிரு நாளில் அறிவிப்பு சென்னை, பல்வேறு பரபரப்புகளுக்கிடையே
நடிகர் விஜய் , இந்திய தேசிய காங்கிரஸ்
கட்சியில் சேரப் போவது ஏறக்குறைய
உறுதியாகி விட்டது; இருப்பினும்
கட்சியில் அவர் ஏதாவது முக்கிய
பதவியை ஏற்பாரா அல்லது சாதாரண
தொண்டனாக இருந்து செயல்படுவாரா
என்பது இதுவரை தெரியவில்லை.தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும், அதை அரசியல் வாயிலாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் விஜய், ஏற்கெனவே மக்களின் ஆதரவைப் பெற்ற தேசியக் கட்சியில் இணைந்து அதில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார். சேதுசமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வழக்கு புது தில்லி, சேது சமுத்திரத்
திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்
என்று ஜனதா கட்சித் தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி உச்ச
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு
தாக்கல் செய்துள்ளார்.
|
||||
| Click here to end all Your subscriptions | ||||
|
(This is an autogenerated news mail, please do not respond
)
|
|
தமிழகம்
|
| இனி என்ன செய்யப்போகிறோம்?
- கவிமதி, துபாய்
அன்பின் தமிழ் உறவுகளே... நம் உறவுகளான ஈழத்தமிழருக்காக உலகத்தமிழர்களாகிய நாம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதா அடிப்படையிலும் நம் ஆற்றலுக்கு மீறிய விதத்தில் ஒன்று திரண்டு பலவகையில் ஈழத்தமிழரோடு இணைந்து போராடியபோதெல்லாம் உலக முதலாளிய வர்க்கமும், இன அழிப்புகளில் கைகோர்த்த இந்திய தேசியவாதிகளும், பொய்யே பரப்புரைச் செய்த ஊடகங்களும், நம்மை விடுதலைப்புலிகளின் அதாரவாளர்கள் என்று நமது சனநாயக போராட்டங்களை திசைத்திருப்பியதோடு அல்லாமல், போராட்டம் குறித்து பேசியவர்களை எல்லாம் சிறைப்படுத்தியும், அச்சப்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தி நம்மை முடக்கிவைத்தது. எனவே நம் இனம் சிங்கள பேரினவாதத்தால் அழிக்கப்படும் நிலைக்கண்டும் தமிழகம் தழுவி நடைபெறவேண்டிய போராட்டங்கள் வெகு சிலவாக குறைந்தே நடைப்பெற்றதாலும், தமிழக தமிழராகிய நாம் பொங்கவேண்டிய நேரத்தில் பொருமை காத்ததாலும் நம் இனத்தின் பெரும்பகுதியை அழித்தும், எஞ்சியவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஊனப்படுத்தியும் இந்திய,சிங்கள தேசிய பேரினவாதம் எக்காளமிடுகிறது. |
| அத்வானி மீண்டும் யாத்திரை
புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தலில்
பா.ஜனதா கட்சி எதிர்பார்த்த அளவில்
வெற்றியை பெறவில்லை. இதனால் கட்சி
தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே
மந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே
தொண்டர்களுக்கு உற்சாகத்தை
ஏற்படுத்தி கட்சிக்கு
புத்துணர்ச்சியை ஏற்படுத்த அக்கட்சி
தலைவர் எல்.கே.அத்வானி நடவடிக்கை
எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
நாடு முழுவதும் யாத்திரை நடத்த
திட்டமிட்டுள்ளனர். |
| இந்திய அர்ச்சகர்கள் மீது தாக்குதல்:
நேபாள அரசு மன்னிப்பு கேட்டது
காத்மாண்டு, நேபாள தலைநகர்
காத்மாண்டுவில் 1,500 ஆண்டுகள் பழமையான
பசுபதிநாதர் கோவில் உள்ளது. அங்கு
இந்தியாவின் தென்மாநிலங்களை சேர்ந்த
ஆச்சாரமிக்க பிராமண இளைஞர்களை
அர்ச்சகர்களாக நியமிப்பதை பாரம்பரிய
வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி,
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிஷ் பட்,
ராகவேந்திர பட் ஆகிய 32 வயது இளைஞர்கள்,
அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். |
| சென்னை-டெல்லி இடையே மின்னல் வேக
ரெயில்
சென்னை, இடையில் எங்கும் நிற்காமல்
செல்லும் சென்னை-டெல்லி மின்னல் வேக
ரெயில் (டோரண்டோ ரெயில்) போக்குவரத்தை
14-ந் தேதி சென்னையில் ரெயில்வே
மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி
வைக்கிறார். சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடையே இடையில் எங்கும் நிற்காமல் செல்லும் புயல்வேக ரெயில்கள் (டோரண்டோ ரெயில்) இயக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படி, சென்னை-டெல்லி மின்னல்வேக ரெயில் போக்குவரத்து தொடக்க விழா வரும் 14-ந் தேதி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது. |
| ராஜசேகர ரெட்டி மகனுக்கு பதவியா?
காங்கிரஸில் சிக்கல் நீடிப்பு
ஐதராபாத், ஹெலிகாப்டர் விபத்தில்
பலியான ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர
ரெட்டியின் மகனுக்கு மத்திய மந்திரி
பதவியை அளிக்கலாமா? என்பது குறித்து
காங்கிரஸ் கட்சி மேலிடம் பரிசீலித்து
வருகிறது. ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி கடந்த 2-ந் தேதி அன்று ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினார். எனவே, அந்த மாநிலத்தின் இடைக்கால முதல்-மந்திரியாக நிதி மந்திரி ரோசய்யா பதவி ஏற்று இருக்கிறார். இதற்கிடையே, ராஜசேகர ரெட்டியின் மகனும் தொழிலதிபருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்-மந்திரி பதவியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. |
| கால்வாயில் மிதந்த குழந்தை உயிரோடு
மீட்பு
புனே, புனேயில் இருந்து 6 கி.மீ.
தொலைவில் வாத்கான் புத்ருக் என்ற
கால்வாய் உள்ளது. 30 அடி ஆழம் உள்ள இந்த
கால்வாயில் கடந்த 3-ந் தேதி விநாயகர்
சதுர்த்தியையொட்டி சிலைகள் கரைப்பு
நிகழ்ச்சி நடந்தது. |
| சென்னையில் போலீசாருடன்
விடுதலைசிறுத்தைகள் கட்சியினர்
மோதல்
சென்னை, சென்னை அசோக்நகரில் உள்ள நில
ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
மற்றும் போலீசார் இடையே மோதல்
ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக புகார் கூறப்பட்டது. |
| சமச்சீர் கல்வி முறைக்கு எதிர்ப்பு -
மெட்ரிக் பள்ளிகள் அக்டோபர் 9-ல்
ஸ்ட்ரைக்
ஈரோடு, சமச்சீர் கல்வி முறைக்கு
எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 9-ந்
தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுவது என்று தமிழ்நாடு நர்சரி
மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சங்க
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு
உள்ளது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி- மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் சங்க ஈரோடு மாவட்ட கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- |
2012-ல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில்
செலுத்தப்படும் - விஞ்ஞானி மயில்சாமி
அண்ணாதுரை தகவல்
சென்னை, சந்திரயான்-1 தனது பணியை 100
சதவீதம் நிறைவேற்றியதாகவும்,
சந்திரயான்-2 திட்ட பணிகள் முடிந்து
2012-ல் அனுப்பப்படும் என்றும் விஞ்ஞானி
மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.சென்டனேரியன் அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், அறக்கட்டளை நிர்வாகி அப்பாஸ் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
செருப்பு அணிந்து கிரிவலம் ஏன்?'' நடிகை
சினேகா விளக்கம்
சென்னை, திருவண்ணாமலையில் செருப்பு
அணிந்த படி கிரிவலம் சென்றது ஏன்
என்பது பற்றி நடிகை சினேகா விளக்கம்
அளித்துள்ளார்.நடிகை சினேகா 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அன்று அதிகாலையில் அவர் கோவிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தூரத்தை கிரிவலம் வந்தார். அப்போது, அவர் கால்களில் செருப்பு அணிந்திருந்ததாக சர்ச்சை கிளம்பியது. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல்தான் கோவிலைச் சுற்றி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
சிறப்புப்பகுதி
|
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| கொல்கத்தா விமான நிலையத்தில் அரபு
ஆயுத விமானம் : சிறைபிடிப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில்
எரிபொருள் நிரப்புவதற்காக
தரையிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
நாட்டு விமானப் படை விமானத்தில்
ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருந்ததால்
அந்த விமானம் சிறை
பிடிக்கப்பட்டுள்ளது. |
| டுவென்டி 20 போட்டிகளிலிருந்து ரிக்கி
பான்டிங் ஓய்வு
சிட்னி: ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி
பான்டிங், சர்வதேச டுவென்டி 20
போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்துள்ளார். மேலும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். |
நடிகர்-பிரகாஷ் ராஜ்ஜிற்கு தேசிய
விருது
புதுடெல்லி, 2007ம் ஆண்டில் நாட்டின்
மிகச் சிறந்த திரைப்படமாக காஞ்சிவரம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருந்த நாட்டின் 55வது திரைப்பட தேசிய விருதுகள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தையடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இன்று அறிவி்க்கப்பட்டன. |
| இலங்கை பத்திரிகையாளர் திசநாயகத்தை
விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்
பத்திரிக்கையாளர் கூட்டம்
சென்னை: தமிழர்கள் வாழ்வுரிமைக்காக
பாடுபட்ட இலங்கைப் பத்திரிக்கையாளர்
ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்யக்
கோரி சென்னையில் நாளை கூட்டம்
நடைபெறுகிறது. |
| நல்லமலா காட்டுப் பகுதியில் : ராஜசேகர
ரெட்டிக்கு நினைவுச் சின்னம்
நகரி, ஆந்திர முதல்- மந்திரி ராஜசேகர
ரெட்டி நல்லமலா காட்டுக்குள்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது திடீர் மரணம் ஆந்திர மக்களை
கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவர் இறந்த இடத்தில் நினைவுச்சின்னம்
அமைக்க வேண்டும் என்று ஏராளமானோர்
கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர சுற்றுலா மந்திரி கீதா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- |
| செங்கம் அருகே செந்நாய் கடித்து 15
ஆடுகள் சாவு
செங்கம், செங்கம் அடுத்த
மண்ணாண்டிபட்டி கிராமத்தை
சேர்ந்தவர் கணேசன். ஆடு மேய்க்கும்
தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு
கணேசன் தனக்கு சொந்தமான 22 செம்மறி
ஆடுகளை பட்டி யில் அடைத்து வைத்து
இருந்தார். நள்ளிரவில் வனப்பகுதியில்
இருந்து வந்த செந்நாய் செம்மறி ஆடு
களை கடித்து குதறியது. இதில் 5 ஆடுகள்
பலியாகின. 2 ஆடுகள் ரத்த வெள்ளத்தில்
உயிருக்கு போராடி கொண்டு இருந்தன. |
| மாற்று கட்சி ஜனநாயகத்தை மதிக்கிறோம்
- திருமணவிழாவில் கருணாநிதி பேச்சு
சென்னை, தமிழக சபாநாயகர்
ஆவுடையப்பனின் மகன்
செல்வேந்திரனுக்கும், நெல்லையைச்
சேர்ந்த மோகனின் மகள்
ராஜராஜேஸ்வரிக்கும் ராஜா
அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ்
அரங்கில் இன்று காலை திருமணம்
நடந்தது. முதல்வர் கருணாநிதி
திருமணத்தை நடத்தி வைத்து
பேசியதாவது: |
| ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர்
மலையில் மோதவில்லை - முதல் கட்ட
விசாரணை தகவல்
சித்தூர், மறைந்த ஆந்திர முதல்வர்
ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர்
மலையில் மோதவில்லை என்பது முதல்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க
மத்திய குழு நாளை ஐதராபாத் வருகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கடந்த 2ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜசேகர ரெட்டி உள்பட அதிலிருந்த 5 பேர் உடல் சிதறி பலியாயினர். இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில உளவுப்பிரிவு போலீசார் மற்றும் விமானத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கறுப்பு பெட்டி எனப்படும் 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' உள்பட ஹெலிகாப்டரின் அனைத்து உதிரி பாகங்களும் ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. |
| ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை
வரலாறு காணாத பாதுகாப்பு
சென்னை, காங்கிரஸ் தேசிய பொதுச்
செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக
நாளை தமிழகம் வருகிறார். இதையட்டி
வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 3 ஆயிரம் போலீசார்
பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். |
| சமூகநல அமைச்சர்கள் மாநாடு மன்மோகன்
தொடங்கி வைத்தார்
புதுடெல்லி, அனைத்து மாநில மற்றும்
யூனியன்பிரதேச சமூக நலத்துறை
அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை
டெல்லியில் இன்று காலை பிரதமர்
மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். |
| கணவன், மனைவி என்பதற்கு பதிலாக
துணைவன், துணைவி என்று அழைக்க
வேண்டும் -ரஜினி பேச்சு
சென்னை, கணவன், மனைவி என்பதற்கு பதிலாக,
துணைவன், துணைவி என்றுதான் அழைக்க
வேண்டும் என்று டைரக்டர் மணிவண்ணன்
மகள் திருமண விழாவில் ரஜினி பேசினார். திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் மகள் ஜோதிக்கும், சதீஷுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது. சுயமரியாதை முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ரஜினியும், சத்யராஜும் தாலி எடுத்து கொடுக்க, மணமகன், மணமகள் கழுத்தில் கட்டினார். பின்னர் மணமக்களை வாழ்த்தி ரஜினி பேசியதாவது: |
| விடுதலைப்புலிகள் தளபதி பொட்டு
அம்மான், சூசை உயிரோடு உள்ளனர்?
கொழும்பு, விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரனுடன் உளவுப்படை தலைவர்
பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர்
சூசை ஆகியோரையும் கொன்று விட்டதாக
இலங்கை ராணுவம் அறிவித்தது. இதில் பிரபாகரன் உடல் என ஒரு உடலை காட்டினார்கள். பொட்டு அம்மான், சூசை உடலை காட்டவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். |
| ``என் டைரக்ஷனில், பாலசந்தர்
நடிப்பார்'' கமலஹாசன்
`உன்னைப்போல் ஒருவன்' படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழாவை அடுத்து,
கமலஹாசன் அவருடைய அலுவலகத்தில்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட
கேள்விகளும், அவற்றுக்கு கமலஹாசன்
அளித்த பதில்களும் வருமாறு:- |
| செருப்பு அணிந்து கிரிவலம்: நடிகை
சினேகா உருவப்படத்துக்கு செருப்பு
மாலை
வேலூர்,செருப்பு அணிந்தபடி நடிகை
சினேகா திருவண்ணாமலையில் கிரிவலம்
சென்றதால், அதற்கு கண்டனம்
தெரிவிக்கும் வகையில் வேலூரில்
சினேகா உருவப்படத்துக்கு அனுமன்சேனா
இயக்கத்தினர் செருப்பு மாலை
அணிவித்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர் |
| சுருதிஹாசன் உலகநாயகியாக வருவார் -
இயக்குநர் பாலச்சந்தர் ஆருடம்
சென்னை, கமலஹாசன்-மோகன்லால் ஆகிய
இருவரும் இணைந்து நடித்து, சக்ரி
டைரக்டு செய்துள்ள புதிய படம்,
`உன்னைப்போல் ஒருவன்.' இந்த
படத்துக்கு, கமலஹாசனின் மகள்
சுருதிஹாசன் இசையமைத்து இருக்கிறார்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா,
சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று
காலை நடந்தது. பாடல்களை, பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார். விழா நிகழ்ச்சிகளை, நடிகை கவுதமி தொகுத்து வழங்கினார். அவர் கூறியதாவது:- |
இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண
தமிழக தலைவர்கள் ஒன்றாக வேண்டும் -
சுதர்சன நாச்சியப்பன்
சென்னை, இலங்கை தமிழர்களின் துன்பம்
தீர, இனியாவது தமிழக அரசியல் கட்சி
தலைவர்கள் நிரந்தர தீர்வு காண
வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி
சுதர்சன நாச்சியப்பன்
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சுதர்சன நாச்சியப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து இலங்கை தமிழர்களின் துன்பம் தீர நிரந்தர தீர்வு காண வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கும், சுதந்திரத்தை பேணி காப்பதிலும் தமிழர்களின் பங்கும், தொண்டும் கணிசமாக இருந்துள்ளது. |
| இந்திய பகுதிக்குள் புகுந்து புதிய
எல்லை குறியீடு - எல்லையில் சீன
ராணுவம் தொடர்ந்து அத்து மீறல்
லே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும்
இடையே எல்லைத் தகராறு உள்ளது. அது
பற்றி பேச்சு வார்த்தை நடந்து
வருகிறது. இந்தியாவின் ஒரு மாநிலமான
அருணாசல பிரதேசத்துக்கும் சீனா
சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம்
காஷ்மீரின் லடாக்கில் சுமர் மலைப்
பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன
ஹெலிகாப்டர்கள் அத்து மீறி பறந்து
காலாவதியான உணவுப் பொருட்களை
வீசிவிட்டு சென்றன. |
| ஜனாதிபதி மாளிகையில் திருட்டு -
போலீஸ் விசாரணை
புதுடெல்லி, டெல்லியில் ஜனாதிபதி
மாளிகை வளாகத்தில் உள்ள உடல் பயிற்சி
மையத்தில் கம்ப்யூட்டர், உடல்
பயிற்சி கருவிகள் திருட்டு போனது. இது
பற்றி போலீசார் விசாரித்து
வருகின்றனர். |
| ஆந்திராவில் ஒரே நேரத்தில் 34
அமைச்சர்கள் பதவியேற்பு
ஐதராபாத், ஆந்தி ராவில் ஒரே நேரத்தில்
34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்று
கொண்டனர். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து இடைக்கால முதல்வராக நிதி அமைச்சர் ரோசய்யாபதவியேற்றார். ஆனால், அமைச்சரவையில் இருக்கும் 34 அமைச்சர்களும் மீண்டும் பதவி பிராமணம் செய்து கொள்ள வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து முதல்வர் ரோசய்யா, ஆளுநரிடம் பழைய அமைச்சர்களையே மீண்டும் அமைச்சர்களாக தொடர விரும்புகிறோம் என்றும், இதுகுறித்து சட்ட ரீதியாக எங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். |
| இளைஞர் காங்கிரசில் இனி மாவட்டம்,
வட்டம் - அசோக் தன்வர்
நெல்லை, இளைஞர் காங்கிரஸ் அமைப்பில்
இனி மாவட்ட, வட்ட நிர்வாகிகள் முறை
நீக்கப்பட்டு, சட்டசபை, நாடாளுமன்ற
முறையில் நிர்வாக நடைமுறை
செயல்படுத்தப்படுகிறது என்று அகில
இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்
அசோக் தன்வர் எம்.பி. தெரிவித்தார். |
| சமச்சீர் கல்வியை எதிர்த்தால்
மெட்ரிக். பள்ளிகள் மீது நடவடிக்கை -
அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை
சென்னை, சமச்சீர் கல்வி முறையை
எதிர்த்து மெட்ரிக். பள்ளிகள்
ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், அரசு
நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளி
கல்வி துறை அமைச்சர்
எச்சரித்துள்ளார். தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேனிலை
பள்ளிகள் சங்க மாநில மாநாடு ஈரோடில்
நடந்தது. மாநாட்டில், சமச்சீர் கல்வியை எதிர்த்து அக்டோபர் 9ம் தேதி 4,000 மெட்ரிக். பள்ளிகள், 6,000 நர்சரி பள்ளிகள் ஒரு நாள் ஸ்டிரைக் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தெரிவித்ததாவது: |
| ராஜசேகர ரெட்டியின் மகனை முதல்வராக்க
கோரி, இரங்கல் கூட்டத்தில் அமளி
ஐதராபாத், ராஜசேகர ரெட்டியின்
மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து
ஐதராபாத்தில் நடந்த இரங்கல்
கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டியை
முதல்வராக்க கோரி அவரது ஆதரவாளர்கள்
அமளியில் ஈடுபட்டனர். மறைந்த ராஜசேகர
ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தும்
இரங்கல் கூட்டம் ஐதராபாத்தில்
காங்கிரஸ் தலைமை அலுவலகமான காந்தி
பவனில் நேற்று காலை நடந்தது.
கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த
இளைஞர்களும், பெண்களும் பெருமளவில்
கலந்து கொண்டனர். இவர்களில்
பெரும்பாலோர் ஜெகன் மோகனின் தீவிர
ஆதரவாளர்கள். கூட்டத்தில் தற்காலிக
முதல்வர் கே.ரோசய்யா, மாநில காங்கிரஸ்
தலைவர் டி.சீனிவாஸ், மத்திய
அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி,
புரந்தேஸ்வரி, பல்லம் ராஜூ உட்பட பலர்
கலந்து கொண்டனர். |
| வரி ஏய்ப்பு நிரூபித்தால், பதுக்கல்
கறுப்பு பணம் குறித்து தகவல் -
சுவிட்சர்லாந்து அரசு தகவல்
புதுடெல்லி, சுவிஸ் வங்கிகளில் உள்ள
இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய
தகவல்களை இந்தியா பெறலாம் என்று
சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. |
|
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள www.sangamamlive.in உடன் இணைந்திருங்கள் |
புதுடெல்லி, 2007ம் ஆண்டில் நாட்டின்
மிகச் சிறந்த திரைப்படமாக காஞ்சிவரம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
|
தமிழகம்
|
| தமிழ் மரபு அறக்கட்டளையின் 8 ம் ஆண்டு
விழா
சென்னை, தமிழ் மரபு அறக்கட்டளையின் 8ம்
ஆண்டு விழா மயிலையில் நடைபெற்றது.
விழாவுக்கு எழுத்தாளர் இந்திரா
பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் நரசய்யா, திவாகர் ,
டாக்டர்.நா. கணேசன் ஆகியோருக்கு
'மரபுச் செல்வர்' விருது
வழங்கப்பட்டது. விழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பேசும்போது "தெரிந்தெடுத்து இன்னவற்றைத்தான் பாதுகாக்க வேண்டும் என்பதில்லாமால் எல்லாவற்றையும் பாதுகாக்கவேண்டும். எதை நிரந்தரமாகப் பாதுகாக்கவேண்டும் என்பதை எதிர்கால மக்கள் தீர்மானிக்கட்டும்" என்றார். |
| சென்னை, தமிழ் சினிமா கலைஞர்கள்
திறமையானவர்கள் என்று டைரக்டர்
பிரியதர்சன் புகழாரம்
சூட்டியுள்ளார்.
புதுடெல்லி, சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு
தேர்வு அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல்
ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு
பதில் `கிரேடு' முறை
அமல்படுத்தப்படும் என்றும் மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி
கபில்சிபல் அறிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதில் `கிரேடு' முறையில் மதிப்பெண் அளிக்கும் முறை கடைப்பிடிக்கப்படும். |
| தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த
நச்சுக் கழிவுகள் திருப்பி அனுப்ப
முடிவு
தூத்துக்குடி, தூத்துக்குடி
துறைமுகத்துக்கு வெளிநாட்டில்
இருந்து வந்த 9 கண்டெய்னர் நச்சுக்
கழிவு பொருட்களை சுங்க இலாகா
அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். தூத்துக்குடி துறைமுகத்துக்கு வெளிநாட்டில் இருந்து பழைய நச்சு கழிவு பொருட்கள் வேறு பொருட்களின் பெயரில் அனுப்பப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த 9 கண்டெய்னர்களில் நச்சு கழிவு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| தமிழ் சினிமா கலைஞர்கள்
திறமையானவர்கள் - பிரியதர்சன்
புகழாரம்
சென்னை, தமிழ் சினிமா கலைஞர்கள்
திறமையானவர்கள் என்று டைரக்டர்
பிரியதர்சன் புகழாரம்
சூட்டியுள்ளார். |
| மனிதநேயம் அறக்கட்டளை சார்பில்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு இலவச பயிற்சி
மையம் துவக்கம்
சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேய
அறக்கட்டளை சார்பில் 600 மாணவர்களுக்கு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு இலவச
பயிற்சி அளிக்கும் மையம் சென்னை
அண்ணாநகரில் தொடங்கப்பட்டது. சென்னை சி.ஐ.டி. நகரில் கடந்த 2006-ம் ஆண்டு சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. முதல் வருடத்திலேயே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு 25 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரிலும் பயிற்சி மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டு நேற்று அந்த மையம் தொடக்கவிழா நடைபெற்றது. |
| பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெயலலிதாவை
விடுவிக்க கோரும் மனு மீது விசாரணை
|
சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதா 1993-ம் ஆண்டு முதல்-அமைச்சராக
இருந்தபோது தனக்கு வந்த பிறந்த நாள்
பரிசு தொகை ரூ.2 கோடி டி.டி.யை அரசு
கஜானாவில் சேர்க்காமல் தனது கணக்கில்
சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு
தொடர்ந்திருந்தது. இதில் ஜெயலலிதா,
செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு
மீதும் குற்றம்
சுமத்தப்பட்டிருந்தது. 1996-ம் ஆண்டு போடப்பட்ட இந்த வழக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் இன்னும் முடியாமல் நடந்து வருகிறது. |
சிறப்புப்பகுதி
|
|
கல்வி / வேலை வாய்ப்பு விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| சேலத்தில் லினக்ஸ் ஒருநாள் பயிற்சி
மற்றும் கருத்தரங்கம்
சேலத்தில் விரைவில் லினக்ஸ் குறித்த
ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம்
நடைபெறுகிறது. இது குறித்த விவரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது: |
| உத்தப்புரம் செல்ல முயன்ற பிருந்தா
காரத் திடீர் கைது
மதுரை, உத்தப்புரம் கிராமத்துக்கு
செல்ல முயன்ற பிருந்தா காரத் எம்.பி.யை
போலீசார் தடுத்து நிறுத்தி கைது
செய்தனர். திருப்பரங்குன்றம் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அவரை அழைத்துச்
சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| வாஹா எல்லையில் இந்திய வீரர்கள் மீது
பாக்.ராணுவம் ராக்கெட் வீசி
தாக்குதல்
அமிர்தசரஸ்,வாகா எல்லை அருகே இந்திய
பாதுகாப்பு படை வீரர்கள் மீது
பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட்
குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்திய தரப்பில் பதிலடி
கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம்
காரணமாக இருதரப்பிலும் உயிர்ச்சேதம்
எதுவும் ஏற்படவில்லை. |
| அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க
ரூ.1.45 லட்சம் கோடி தேவை - திட்டக் குழு
அறிவிப்பு
புதுடெல்லி, நாடு முழுவதும் உயர்
நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்க ரூ.1.45 லட்சம் கோடி தேவை என்று
திட்டக் குழு அறிவித்துள்ளது. உயர்
நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்
சேர்க்கையை அதிகரிப்பது பற்றி ஆராய
மத்திய திட்டக் குழு ஒரு சிறப்பு
குழுவை அமைத்தது, அந்தக் குழு தனது
அறிக்கையை திட்டக் குழுவில்
சமர்ப்பித்துள்ளது. |
ஜெட்ஏர்வேஸ் பைலட்டுகள் ஸ்டிரைக்
நீடிப்பு 281 விமானங்களின் சேவை ரத்து
புதுடெல்லி, ஜெட்ஏர்வேஸ் பைலட்கள்
ஸ்டிரைக் இன்று 5-வது நாளாக
நீடிக்கிறது. நேற்று நடந்த
பேச்சுவார்த்தையில் எந்த
முன்னேற்றமும் ஏற்படாததால், இன்றும்
281 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தில் 2 பைலட்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனத்தின் 400க்கும் மேற்பட்ட பைலட்களும் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக 700 விமான சேவைகளை ஜெட்ஏர்வேஸ் ரத்து செய்தது. |
குடும்பத் தகராறில் ஆத்திரம், மனைவியை
தீர்த்து கட்டிய ஏட்டு கைது
சென்னை, குடும்ப சண்டையில் மனைவியை
எரித்துக் கொன்றுவிட்டு சிலிண்டர்
வெடித்து இறந்ததாக நாடகமாடிய போலீஸ்
ஏட்டு கைது செய்யப்பட்டார். இந்த
சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் துரைமுருகன் (38). மணலி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (35). இவர்களுக்கு மித்ரா (10), பிரியங்கா (7) என்ற மகள்கள் உள்ளனர். நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த துரைமுருகன் சாப்பிட்டுவிட்டு மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகள் இருவரும் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். கணவன், மனைவிக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. துரைமுருகன் சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சத்தம் நின்றுவிட்டது. |
| உசிலம்பட்டியில் கலவரம் : 30
பேரூந்துகள் உடைப்பு
மதுரை, தியாகி இமானுவேல் சேகரன்
நினைவு தினம் நேற்று
கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி
பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன்
நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர்
அஞ்சலி செலுத்தினர். இதேபோல தேனி பகுதியை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்த உசிலம்பட்டி வழியாக வந்தனர். அப்போது ஒரு கும்பல் வாகனங்களை வழிமறித்து தாக்கியது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஒரு பிரிவினர் திரண்டு வந்து பஸ்கள், வாகனங்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் 20 அரசு பஸ்கள் சேதமானது. இது தொடர்பாக 40 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற
சட்டத்தை திரும்ப பெற வேண்டும்;
ஜெயலலிதா
சென்னை, தமிழ்நாடு மாநில வேளாண்மை
மன்ற சட்டத்தினை திரும்ப பெற
வேண்டும் என அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் ஜெயலலிதா
விடுத்துள்ள அறிக்கையில்
கூறியுள்ளார். “தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம் தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையில் எதிர்க் கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், விவசாயப்பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் மேற்படி சட்டம் அறிவிக்கை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 10.9.2009 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. |
| 2011 க்குள் அனைத்து பள்ளிகளளுக்கும்
பிராட்பேண்ட் வசதி : அமைச்சர்
பூங்கோதை உறுதி
சென்னை, தமிழ்நாட்டில் 2011-ம்
ஆண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும்
பிராட்பேண்டு இணைப்புடன் கூடிய
கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும்
என்று அமைச்சர் பூங்கோதை கூறினார். இந்திய தொழில்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- |
| பள்ளிகள் பிராட்பேண்ட் வசதி: அமைச்சர்
பூங்கோதை உறுதி
சென்னை, தமிழ்நாட்டில் 2011-ம்
ஆண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும்
பிராட்பேண்டு இணைப்புடன் கூடிய
கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும்
என்று அமைச்சர் பூங்கோதை கூறினார். இந்திய தொழில்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- |
| கேரளாவில் அதிகரிக்கும் பாலியல்
குற்றங்கள்: மாதத்திற்கு 45 பெண்கள்
கற்பழிப்பு
கண்ணூர்: கேரளாவில், ஒரு மாதத்தில்
சராசரியாக 45 இளம்பெண்கள்
கற்பழிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு,
முதல் ஐந்து மாதங்களில் மட்டும், 225
பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகி
உள்ளனர். திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்ட காவல் நிலையங்களில் தான், கற்பழிப்பு சம்பவங்கள் குறித்த வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில், 21 சதவீதம் பெண்கள், 18 வயது கூட நிரம்பாதவர்கள். 15 வயதுக்குக் கீழ் 9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| சென்னை-நிஜாமுதீன் புயல் ரயில்
துவக்கவிழா - மம்தா வருகை ரத்து
சென்னை,- இடையில் எங்கும் நிற்காமல்
செல்லும் சென்னை-நிஜாமுதீன் புயல்வேக
ரெயில் (டோரண்டோ ரெயில்) போக்குவரத்தை
ரயில்வே அமைச்சர் மம்தா துவக்கி
வைப்பதாக இருந்தது. தற்போது வரும் 18-ந்
தேதி சென்னையில் மத்திய உள்துறை
மந்திரி ப.சிதம்பரம் தொடங்கி
வைக்கிறார். சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடையே எங்கும் நிற்காமல் செல்லும் புயல்வேக ரெயில்கள் (டோரண்டோ ரெயில்) இயக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் மம்தா பானர்ஜி அறிவித்தார். |
| உலகம் முழுவதும் காய்ச்சலுக்கு 12
லட்சம் குழந்தைகள் பலி
வாஷிங்டன், அமெரிக்காவில் இருந்து
வெளிவரும் லேன்செட் என்ற மருத்துவ
இதழ், உலகம் முழுவதும் ஒவ்வொரு
ஆண்டும் ஒரு கோடியே 45 லட்சம் பேர்
நிமோனியா காய்ச்சலால்
பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 12
லட்சம் குழந்தைகள் பலியாவதாகவும்
ஆதாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. |
| வன்னி முகாம்களில் இருந்து 10 ஆயிரம்
தமிழர்கள் விடுதலை
கொழும்பு, இலங்கையில்
விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த
இறுதி கட்ட போரின்போது 3 லட்சம்
தமிழர்கள் இலங்கை ராணுவத்தின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
அவர்கள் வன்னி தடுப்பு
முகாம்களுக்குள் அடைத்து
வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளானார்கள். இது குறித்த செய்திகள் பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகின. இதனை அடுத்து, முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீண்டும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியமர்த்தும்படி இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. |
மக்கள் வரிப்பணத்தில் தலைவர்களுக்கு
சிலை: மாயாவதிக்கு சுப்ரீம் கோர்ட்டு
தடை
புதுடெல்லி, மக்களின் வரிப்பணம் ரூ.2,500
கோடியில் தலைவர்களுக்கு சிலை
அமைக்கும் மாயாவதிக்கு சுப்ரீம்
கோர்ட்டு தடை விதித்து உடனடியாக
கட்டுமான பணியை நிறுத்த உத்தரவு
பிறப்பித்துள்ளது.உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், பசுமை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதான இடத்தில் அம்பேத்கார் பூங்கா உள்ளது. அந்த இடத்தில் அம்பேத்கார், கன்ஷிராம், உ.பி. முதல்-மந்திரி மாயாவதி ஆகியோரின் சிலைகளும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளும் அமைத்து, 35 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான நினைவு பூங்காவாக மாற்ற மாயாவதி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. |
| ``படுக்கை அறை காட்சியில் நான்
நடிக்கவில்லை'' - நடிகை சுனைனா
சென்னை, நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக
நடித்து, டைரக்டு செய்துள்ள படம்,
`மதன்.' இந்த படத்தில் இடம்பெறும் ஒரு
பாடல் காட்சியில், ஜெய் ஆகாசுடன்
சுனைனா நடித்த ஒரு படுக்கை அறை காட்சி
இடம்பெறுகிறது. அதில், ஜெய் ஆகாசுடன்
சுனைனா மிக நெருக்கமாக நடித்து
இருக்கிறார். ``ஆனால் நான் அந்த காட்சியில் ஆபாசமாக நடிக்கவில்லை. `டூப்' நடிகையை பயன்படுத்தி ஆபாசமாக படமாக்கி இருக்கிறார்கள்'' என்று நடிகை சுனைனா கூறுகிறார். இதுபற்றி அவர், `செய்தியாளர்களிடம் கூறியதாவது:- |
| பல்கலை மாணவர்களை சந்தித்து
அரசிலுக்கு வாருங்கள் என கூறுவது
தவறு - ராகுல்காந்திக்கு வைகோ கண்டனம்
சென்னை, பல்கலை மாணவர்களை அந்தந்த
பல்கலை கழகங்களுக்கே சென்று
சந்தித்து அரசிலுக்கு வாருங்கள் என
கூறுவது தவறு - ராகுல்காந்திக்கு வைகோ
கண்டனம் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் இமயம் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் ஜெபராஜ் மற்றும் ஊழியர்கள் நேற்று ம.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று வைகோ பேசியதாவது:- |
| தேசிய அளவில் நதிகள் இணைப்பு குறித்த
ராகுல்காந்தியின் கருத்துக்கு
தா.பாண்டியன் கண்டனம்
திருச்சி, தேசிய அளவில் நதிகளை
இணைத்தால் ஆபத்தாகிவிடும் என்று
ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு
தா.பாண்டியன் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார். புதுக்கோட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொது செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| லஞ்சம்: குடிநீர் வடிகால் வாரிய
என்ஜினீயரிங் இயக்குனர் கைது- ரூ.31/2
லட்சம் பறிமுதல்
சென்னை, சென்னையில் தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயரிங்
இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் வசூலித்த
லஞ்சப்பணத்தை பைகளில் கொட்டிய போது
போலீசார் மடக்கிப்பிடித்தனர். ரூ.31/2
லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள என்ஜினீயரிங் இயக்குனர் அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் லஞ்ச நடமாட்டம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இங்கு அதிகாரிகள் மாதாந்திர கூட்டம் நடக்கும் போது தமிழகம் முழுவதும் இருந்து வரும் அதிகாரிகள் லஞ்ச பணத்தை கொண்டு வந்து லட்சக்கணக்கில் கொட்டி விடுவார்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. |
| லஞ்சம்: குடிநீர் வடிகால் வாரிய
என்ஜினீயரிங் இயக்குனர் கைது- ரூ.31/2
லட்சம் பறிமுதல்
சென்னை, சென்னையில் தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயரிங்
இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் வசூலித்த
லஞ்சப்பணத்தை பைகளில் கொட்டிய போது
போலீசார் மடக்கிப்பிடித்தனர். ரூ.31/2
லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள என்ஜினீயரிங் இயக்குனர் அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் லஞ்ச நடமாட்டம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இங்கு அதிகாரிகள் மாதாந்திர கூட்டம் நடக்கும் போது தமிழகம் முழுவதும் இருந்து வரும் அதிகாரிகள் லஞ்ச பணத்தை கொண்டு வந்து லட்சக்கணக்கில் கொட்டி விடுவார்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. |
| ``சாய்மீராவால் ரூ.40 கோடி இழந்தேன்''
கமல் வருத்தம்
சென்னை, ``சாய்மீரா நிறுவனத்தால் ரூ.40
கோடி பணத்தை இழந்தேன். ஒரு வருட
உழைப்பு வீணானது'' என்று கமல்ஹாசன்
கூறியிருக்கிறார். பிரமிட் சாய்மீரா பட நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ``மர்மயோகி படத்துக்காக கொடுத்த ரூ.10 கோடியே 90 லட்சத்தை 24 சதவீத வட்டியுடன் திரும்ப தரவேண்டும். அப்படி தரவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கை சந்திக்க நேரிடும்'' என்று கூறப்பட்டிருந்தது. |
|
தமிழகம்
|
| அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை -
ரஜினி
சென்னை, அரசியலுக்கு வரும் திட்டம்
இப்போது இல்லை என்று நடிகர்
ரஜினிகாந்த் கூறினார். |
| மாற்றுத்திறன் குழந்தையை கருவிலேயே
கண்டறியலாம் சென்னையில் சோதனை
சென்னை, தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம்
அமைப்பின் தலைவர் டாக்டர் ரேகா
ராமச்சந்திரன் கூறியதாவது: |
லஞ்சஅதிகாரிகள் சொத்துகள் பறிமுதல்
செய்ய புதிய சட்டம்- தலைமை நீதிபதி
யோசனை
புதுடெல்லி, லஞ்ச வழக்கில் தண்டனை
பெறும் அதிகாரிகளின் சொத்துகளை
பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வர
வேண்டும். அதிக சாட்சிகளை
சேர்ப்பதால் வழக்கு விசாரணைகள்
இழுத்து அடிக்கப்படுகின்றன. எனவே,
வழக்கை விரைவாக முடிக்க உறுதியான சில
சாட்சிகளை மட்டும் சேர்த்தால் போதும்
என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்
யோசனை தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் எல்லா மட்டத்திலும் ஊழல் அதிகரித்து விட்டது. இதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும், ஊழல் தொடர்கிறது. இந்த நிலையில், ஊழல் குற்றங்களை எதிர்த்து போராடுதல் என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பேசியதாவது: |
| தே.மு.தி.க. 5-வது ஆண்டு விழா: பெண்
குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட்
விஜயகாந்த் தாராளம்
சென்னை, தே.மு.தி.க.வின் 5-வது ஆண்டு
தொடக்க விழா இன்று நடந்தது. இதையொட்டி
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.
தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்
விஜயகாந்த் கட்சி கொடியையும்,
தொழிற்சங்க கொடியையும் ஏற்றி
வைத்தார். பின்னர் கட்சி
தொண்டர்களையும், நிர்வாகிகளையும்
சந்தித்தார். தொண்டர்களுக்கு
இனிப்புகளை வழங்கினார். |
| பன்றி காய்ச்சல், சென்னை, கோவையில்
பாதிப்பு அதிகம் - அரசு செயலாளர்
சென்னை, அகில இந்திய மருத்துவ
அதிகாரிகள் கூட்டமைப்பின் 12வது மாநில
மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது.
இதுதொடர்பான கருத்தரங்கை, தமிழக
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர்
வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைத்து
பேசியதாவது: |
| தீபாவளி பண்டிகை நெருங்குவதால்
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்
நடக்கலாம்- அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன், கடந்த ஆண்டு மும்பையில்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய
தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 195
பேர் பலியானார்கள். இந்த நிலையில்
இந்தியா செல்லும் மற்றும்
இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க
மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்
அறிக்கை விட்டு உள்ளது. அதில் கூறி
இருப்பதாவது: |
| திருச்சி,பெல் நிறுவன ஊழியர்கள்
ஸ்டிரைக்
திருச்சி, ஊதிய வரன்முறை கோரி
தென்மண்டல பெல் நிறுவன ஊழியர்கள்
இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான
ஊழியர்கள் வேலைக்குச் செல்லாததால்
பணிகள் பாதிக்கப்பட்டன. |
| கமலின் உன்னைப் போல் ஒருவன்
படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு
சென்னை, சென்னையைச் சேர்ந்த
பிரமிட்சாய்மீரா நிறுவனத்தின்
தலைவர் என்.நாராயணன் ஐகோர்ட்டில்
தாக்கல் செய்துள்ள வழக்கில்
கூறியிருப்பதாவது: |
| திருவண்ணாமலை அருகே பர்வதமலையில் இடி
தாக்கி பக்தர்கள் 4 பேர் பலி
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே
உள்ள பர்வதமலை சிவன் கோயிலுக்கு
ஆன்மீக சுற்றுலா சென்ற சென்னை
பக்தர்கள் 4 பேர் மலை உச்சியில் நேற்று
இரவு இடி தாக்கி பரிதாபமாக
பலியாயினர். தீக்காயம் அடைந்த 5
பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. |
| நாளை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா: 5
ரூபாய் நாணயம் வெளியீடு
சென்னை, அண்ணா நூற்றாண்டு விழா
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி
தொடங்கியது. ஆண்டு முழுவதும்
கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா, நாளை
(செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை கோலா
கலமாக கொண்டாட தமிழக அரசு சார்பிலும்,
தி.மு.க. சார்பிலும் பல்வேறு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா பிறந்த நாளான நாளை காலை 8 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அமைச்சர் அன்பழகன், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்கள். |
| இஸ்ரேலுடன் தொடர்பை துண்டிக்க
வேண்டும் - அமெரிக்காவிற்கு
பின்லேடன் மிரட்டல்;
வாஷிங்டன், அல்கொய்தா தீவிரவாத
இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன்
அமெரிக்க மக்களுக்கு புதிய மிரட்டல்
விடுத்துள்ளான். இந்த மிரட்டலை
பின்லேடனின் பத்திரிகை தொடர்பு
அமைப்பான அஸ்-சாகப் வெளியிட்டுள்ளது.
அட்ரஸ் டூ த அமெரிக்கன் பப்ளிக் என்ற
தலைப்பில் அந்த இணையத்தள செய்தி
வெளியிடப்பட்டுள்ளது. பின்லேடனின்
படம் ஒன்று வீடியோ திரையில் தெரிய
ஆடியோவில் பின்லேடன் பேசி உள்ளது ஒலி
பரப்பாகிறது. முழுமையாக வீடியோ
காட்சிகள் எதுவும் அதில் இல்லை. |
| இந்தியர்களின் கறுப்பு பணம் எதுவும்
இல்லை `சுவிஸ்' வங்கிகள் கை விரிப்பு
புதுடெல்லி, இந்தியர்களின் ரூ.70 லட்சம்
கோடி கறுப்பு பணம் பதுக்கி
வைக்கப்பட்டு இருப்பதாக வெளியான
தகவலில் உண்மை இல்லை என்றும், அது
தொடர்பான எந்த விவரமும் தங்களிடம்
இல்லை என்றும், சுவிஸ் நாட்டு
வங்கிகள் அறிவித்து உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் ஏறத்தாழ ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பண விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| ஊழல் அதிகாரிகள் மீது உடனடி
நடவடிக்கைக்கு புதிய சட்டம் -
வீரப்பமொய்லி அறிவிப்பு
புதுடெல்லி, சி.பி.ஐ. சார்பில், `ஊழல்
குற்றங்களுக்கு எதிரான போர்' என்ற
தலைப்பில் டெல்லியில் 2 நாள்
கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள்
கருத்தரங்கில் பேசிய சுப்ரீம்
கோர்ட்டு தலைமை நீதிபதி
கே.ஜி.பாலகிருஷ்ணன், லஞ்ச ஊழல் குற்ற
வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு
அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல்
செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்
என்று, மத்திய அரசுக்கு யோசனை
தெரிவித்தார். |
| உலகில் எந்த மூலையில் இருந்தும்
இந்தியாவுக்கு ஒரு மணி நேரத்தில்
பணம் அனுப்பலாம்
சென்னை, உலகில் எந்த இடத்தில்
இருந்தும் ஒரு மணி நேரத்தில்
இந்தியாவுக்கு பணம் அனுப்பும் புதிய
வசதியை அஞ்சல்துறை சென்னையில்
அடுத்தமாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக
மத்திய மந்திரி ஆ.ராசா கூறினார். பொதுமக்களுக்கு தபால் சேவையை விரைவாக வழங்கும் வகையில் இந்திய அஞ்சல்துறை விமான சரக்கு போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கொல்கத்தா-டெல்லி-நாக்பூர், கொல்கத்தா-கவுகாத்தி-இம்பால்-அகர்தலா, மும்பை-நாக்பூர் ஆகிய 3 வழித்தடங்களில் தபால் சேவைக்கென சிறப்பு விமானங்கள் இயங்கி வருகின்றன. தற்போது சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு தபால் சரக்குகளை விமானத்தில் எடுத்துச்செல்லும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. |
| கச்சத்தீவு அருகே மீன்பிடித்த
ராமேசுவரம் மீனவர்கள் மீது
தாக்குதல்; இலங்கை ராணுவம் மீண்டும்
அட்டூழியம்
ராமேசுவரம், கச்சத்தீவு அருகே மீன்
பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம்
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்
தாக்குதல் நடத்தி அவர்களது படகுகளை
சேதப்படுத்தினர். இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 22 நாட்களுக்கு பிறகு வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். ராமேசுவரம் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன் துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனர். |
| திராவிடர் கழகத்தை கண்டித்து
ஆர்ப்பாட்டம் - இந்து முன்னணி,
சிவசேனாவினர் கைது
சென்னை, திராவிடர் கழகத்தை கண்டித்து
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட இந்து முன்னணி, சிவசேனா
அமைப்புகளை சேர்ந்த ஏராளமான
தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். திராவிடர் கழகம் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாதி ஒழிப்பு மற்றும் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இந்து முன்னணி, சிவசேனாவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வேலூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள்
கைது- வைகோ கண்டனம்
சென்னை, வேலூர் ம.தி.மு.க.
நிர்வாகிகள் கைதுக்கு வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேதைகளும், நிபுணர்களும் நதிகள் இணைப்பு தான் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறிவரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்ததை நான் விமர்சித்தேன். அதுபோலவே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியனும் விமர்சித்தார். |
| ஒரே நேரத்தில் 7 செயற்கை கோள்களை
`இஸ்ரோ' விண்ணில் செலுத்துகிறது
சென்னை, வருகிற 23-ந் தேதி
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒரே
நேரத்தில் 7 செயற்கை கோள்களை இஸ்ரோ
விண்ணில் செலுத்துகிறது. கடந்த ஆண்டு `இஸ்ரோ' விஞ்ஞானிகள் நிலவுக்கு சந்திரயான் என்னும் ஆளில்லாத விண்கலத்தை அனுப்பினர். அண்மையில் இந்த விண்கலம் தனது ஆயுளை இழந்தது. எனினும், சந்திரயான் தனது பணியை முழுமையாக நிறைவேற்றியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். |
| மேடைகளில் இலங்கை தமிழர் பிரச்சனையை
டைரக்டர் பாரதிராஜா பேச மறுப்பது ஏன்?
டைரக்டர் சேரன் விளக்கம்
சென்னை, இலங்கை தமிழர்களுக்காக,
மேடைகளில் பேசுவதில்லை என்று
டைரக்டர் பாரதிராஜா மவுன விரதம்
இருப்பதாக, டைரக்டர் சேரன் கூறினார். டைரக்டர் அமீர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து இருக்கும் படம், `யோகி.' இந்த படத்தை சுப்பிரமணிய சிவா டைரக்டு செய்து இருக்கிறார். மதுமிதா, சுவாதி, கவிஞர் சினேகன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். `யோகி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டார். ஆனால், அவர் மேடை ஏறி பேச மறுத்து விட்டார். மேடைக்கு கீழே அமர்ந்திருந்து, நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார். |
| தேசிய நதிகள் இணைப்பு திட்டம் குறித்த
ராகுல்காந்தி பேச்சு கருணாநிதி
விளக்கம்
சென்னை, அகில இந்திய காங்கிரஸ்
கட்சியின் பொதுசெயலாளர்
ராகுல்காந்தி நதிகள் இணைப்பு
குறித்து தெரிவித்த கருத்திற்கு
பதில் அளிக்கும் வகையில் தமிழக
முதல்வர் கருணாந்தி வெளியிட்டுள்ள
கேள்வி-பதில் விவரம் வருமாறு:- |
ஹிதேந்திரன் இருதயம் பொருத்தப்பட்ட
சிறுமி மரணம்
சென்னை, சென்னையில் சாலைவிபத்தினால்
மூளைச்சாவு ஏற்பட்ட ஹிதேந்திரனின்
இருதயத்தை தானமாக பெற்றுக்கொண்ட
சிறுமி நேற்று மருத்துவமனையில்
உயிரிழந்தார்.காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 44). இவரது மனைவி புஷ்பாஞ்சலி (40). இந்த டாக்டர் தம்பதிகளுக்கு ஹிதேந்திரன் (16) என்ற மகன் இருந்தார். ஹிதேந்திரன் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தன்னுடைய தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பரை பார்ப்பதற்காக சென்ற ஹிதேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார். உடனே, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஹிதேந்திரன் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். |
சென்னை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல்காந்தி நதிகள் இணைப்பு குறித்து தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கருணாந்தி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-
ஹிதேந்திரன் இருதயம் பொருத்தப்பட்ட சிறுமி மரணம்
சென்னை, சென்னையில் சாலைவிபத்தினால் மூளைச்சாவு ஏற்பட்ட ஹிதேந்திரனின் இருதயத்தை தானமாக பெற்றுக்கொண்ட சிறுமி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அடப் பாவமே!
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 44). இவரது மனைவி புஷ்பாஞ்சலி (40). இந்த டாக்டர் தம்பதிகளுக்கு ஹிதேந்திரன் (16) என்ற மகன் இருந்தார். ஹிதேந்திரன் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தன்னுடைய தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பரை பார்ப்பதற்காக சென்ற ஹிதேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார். உடனே, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஹிதேந்திரன் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
Click here to end all Your subscriptions (This is an autogenerated news mail, please do not respond )
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள www.sangamamlive.in உடன் இணைந்திருங்கள்
சிறப்புப்பகுதி
இலங்கை |
|
கல்வி / வேலை வாய்ப்பு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
"செவ்வாழை" - அறிஞர் அண்ணாவின் சிறுகதை
"அறிஞர் அண்ணா படைத்தளித்துள்ள
சிறுகதைகள் அவருடைய நாடகங்கள் போலவே
ஆற்றல் மிக்க நடையில் அமைந்தவை.
ராஜாதி ராஜா, பேய் ஓடிப்போச்சு,
சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல்
முதலான சிறுகதைகள் புதிய கற்பனைச்
செல்வங்கள். அவருடைய படைப்புகள்
சமுதாய நலத்திலும்
சீர்திருத்தத்திலும் அவருக்கு
இருந்த ஆர்வத்தை விளக்குவன. அந்த
வரிசையில் அறிஞர் அண்ணாவின் சிறுகதை
ஒன்று "செவ்வாழை". இந்தச் சிறுகதை
வெளியானபோது படித்துக் கண்ணீர்
சிந்தாதவர் யாருமில்லை எனச்
சொல்லலாம். அத்தகைய தாக்கம்
மிகுந்தது "செவ்வாழை" சிறுகதை! |
| ராஜசேகர ரெட்டி வாழ்க்கை
சினிமாவாகிறது
ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர்
ராஜசேகர ரெட்டி வாழ்க்கை,
சினிமாவாகத் தயாரிக்கப்படுகிறது. |
| ஊழல் இன்ஜினியரிங் கல்லூரி
நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன்
சென்னை, சிபிஐ பதிவு செய்த ஊழல்
வழக்கில் சென்னையை அடுத்த தனியார்
இன்ஜினியரிங் கல்லூரி
நிர்வாகிகளுக்கு ஐகோர்ட் இன்று
நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டது. |
| நெட் போன் சேவை தடுக்க உளவுத்துறை
கோரிக்கை
புதுடெல்லி, நாட்டின்
பாதுகாப்புக்காக நெட் டெலிபோன்
சேவையை தடுக்க தொலை தொடர்புத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என
உளவுத்துறை வேண்டுகோள்
விடுத்துள்ளது. |
| காலியாக உள்ள 603 உள்ளாட்சி
இடங்களுக்கு: அக். 7 இல் தேர்தல்
சென்னை, தமிழ்நாட்டில் உள்ளாட்சி
அமைப்புகளில் காலியாக உள்ள 603
இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம்
7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று
மாநில தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. நாளை வேட்பு
மனுதாக்கல் தொடக்கம். |
| அண்ணா அரசியலில் ஈடுபட்டதால் ஜனநாயக
நெறி தமிழகத்தில் புதுவடிவம் பெற்றது
: கருணாநிதி பேச்சு
சென்னை, அண்ணா நூற்றாண்டு நிறைவு
விழாவையொட்டி, முதல்- அமைச்சர்
கருணாநிதி இன்று வானொலியிலும் தொலைக்
காட்சியிலும் உரை நிகழ்த்தினார். அதன்
விவரம் வருமாறு:- பேறிஞர் அண்ணா ஆற்றல் மிக்க எழுத்தாளர், அருவி எனத் தமிழ் கொட்டும் அருமையான சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், பத்திரிகையாளர், தந்தை பெரியாரின் தலைமகன், திராவிட இயக்கத்தின் தளபதி, தி.மு.க. வின் நிறுவனர், தமிழ் மக்களின் இதயமெனும் அரியணையில் கொலுவீற்றிருக்கும் மிகச்சிறந்த மனித நேயக்சிற்பி, தமிழக முதல்- அமைச்சர் எனப் பல்வேறு நிலைகளில் புத்தம் புதிய வரலாறுகளைப் படைத்த மாமேதை. |
| 30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த :
மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை, அரையாண்டு சொத்துவரியினை
30.09.2009க்குள் செலுத்த வேண்டும்
பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி
வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநகராட்சி செய்திக்குறிப்பு: |
| ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி
தாக்குதல்
மெல்போர்ன்: சில நாட்கள் அமைதிக்கு
பின்னர் தற்போது ஆஸ்திரேலியாவில்
மீண்டும் இந்தியர்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று
இந்தியர்கள் காயமடைந்தனர். அவர்கள் சுக்தீப் சிங்(26), அவரது சகோதரர் குர்தீர் சிங் மற்றும் அவரது உறவினர் முக்தையர் சிங் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரும் மெல்போர்னின் கிழக்கு பகுதியான எப்பிங்கில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது கடந்த 12ம் தேதி சில ஆஸ்திரேலியர்களால் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். |
| மாநில சுயாட்சி. தமிழ் மொழிக்கு
மரியாதை : கலைஞர் உறுதி
சென்னை, மாநிலங்களுக்கு கூடுதல்
அதிகாரங்கள் வழங்க வேண்டும் எனவும்,
இந்தியை போல தமிழ் உட்பட அனைத்து
மொழிகளுக்கும் சம உரிமையும்
மரியாதையும் வழங்கப்பட வேண்டும்
எனவும் முதலமைச்சர் கருணாநிதி
உறுதிபட தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து பொண்டு விழா மலரை வெளியிட்ட பேசிய திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி பேசியது: |
| எக்காலமும் போற்றும் இணையற்ற தலைவர்
அண்ணா - பிரணாப் முகர்ஜி புகழாரம்.
சென்னை, இந்திய வரலாற்றில்
முக்காலத்துக்கும் மிகச்சிறந்த
முன்மாதிரி தலைவராக விளங்குபவர்
பேரறிஞர் அண்ணா. இந்தியாவுக்கும், நம்
தலைவர்களுக்கும் மிகச் சிறந்த
வழிகாட்டியாக என்றும் திகழ்பவர்
இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர்
பேரறிஞர் அண்ணா என்று மத்திய
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கூறினார். பேரறிஞர் அண்ணா நிறைவு விழாவில், அண்ணா உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டுப் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியது |
| ரூ.50 லட்சம் அருந்ததியர்
மாணவர்களுக்கு நன்கொடை நிதி
கருணாநிதி வழங்கினார்.
சென்னை- பேரறிஞர் அண்ணாவின்
நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவின்
நிறைவுவிழா சென்னை பல்கலைக்கழக
நூற்றாண்டு விழா மண்டபத்தில்
கோலாகலமாக துவங்கியது. விழாவில்
தனக்கு கிடைத்த நிதி ரூ.50 லட்சத்தை
தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியிடம்
அருந்ததியர் மாணவர் நிதிக்கு
முதல்வர் கருணாநிதி நன்கொடையாக
வழங்கினார். |
| இந்தியாவிற்கு நக்சலைட்டுகள் பெரும்
அச்சுறுத்தலாக - மன்மோகன்
புதுடெல்லி, டெல்லியில் போலீஸ்
டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாடு
நிறைவு விழா இன்று நடந்தது. இதில்
பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு
பேசினார். அவர் பேசியதாவது:- |
| கருணாநிதியின் கலை வாரிசு கனிமொழி :
அன்பழகன் பேச்சு
சென்னை, முதல்வர் கருணாநிதியின் கலை
வாரிசாக கனிமொழி உருவெடுத்துள்ளார்
என்று நிதியமைச்சர் க. அன்பழகன்
தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கவிஞர் கனிமொழியின் "சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற கவிதை நூலை வெளியிட்டு அவர் பேசியது: |
| புஷ் மீது ஷூ வீசிய நிருபருக்கு இன்று
விடுதலை
பாக்தாத்,: அமெரிக்க முன்னாள் அதிபர்
ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசியதாக கைது
செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்ற
தனியார் தொலைக்காட்சி நிருபர்
முண்டாஸர் அல்-ஜைதி செவ்வாய்க்கிழமை
விடுதலை செய்யப்படுகிறார். அவருடைய தண்டனைக் காலம் திங்கள்கிழமையுடன் முடிவடைந்த போதிலும் அவர் ஒருநாள் தாமதமாக செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட இருப்பதாக அல்-ஜைதியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக அல்-ஜைதியின் சகோதரர் தர்காம் திங்கள்கிழமை செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: |
| சென்னையில் தொலைதொடர்பு தீர்ப்பாயம் :
தமிழக எம்.எஸ்.ஓ. கூட்டமைப்பு
அழகியிடம் வேண்டுகோள்
சென்னை- தமிழ்நாட்டில் சென்னையில்
தொலைத்தொடர்பு தகராறுகளை தீர்த்து
வைக்கும் மேல்முறையீட்டு
தீர்ப்பாயமான டிடிசாட்-கிளை
ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக
எம்.எஸ்.ஓ. கூட்டமைப்பின்
பொதுச்செயலாளர் பாலிமர் கல்யாண
சுந்தரம் கூறியுள்ளார். |
| தூர்தர்ஷன் : பொன் விழா கொண்டாட்டம்
புதுடில்லி: தூர்தர்ஷன் "டிவி' சேனல்
துவங்கி, 50 ஆண்டுகள் முடிவடைவதை
நினைவுப்படுத்தும் வகையிலான பொன்
விழா கொண்டாட்டம், இன்று மும்பையில்
நடைபெறுகிறது. |
சாதி வாரியாக மக்கள் தொகை
கணக்கெடுப்பு நடத்த வீரப்ப மொய்லி
கோரிக்கை
புதுடெல்லி, இந்திய மக்கள் தொகை
கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு நடக்க
உள்ளது. இந்த கணக்கெடுப்பை சாதி
வாரியாக நடத்த வேண்டும் என்று மத்திய
சட்டமந்திரி வீரப்ப மொய்லி கோரிக்கை
விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம்
எழுதி உள்ளார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் எடுக்க வேண்டும் என்று வீரப்ப மொய்லி கூறியதாவது:- |
| ஆவின் - புதிய சுவீட் : முகஸ்டாலின்
அறிமுகம்
சென்னை, துணை முதலமைச்சர் திரு
மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவின்
பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை
வழங்கி, ஆவின் புதிய இனிப்பு வகைகளை
அறிமுகம் செய்து வைத்தார் |
| “மாநில சுயாட்சிக்கு இணைந்து குரல்
கொடுப்போம்” கருணாநிதி
சென்னை, அண்ணா நூற்றாண்டு நிறைவு
விழாவையொட்டி முதல்- அமைச்சர்
கருணாநிதியிடம் கேட்கப்பட்ட
கேள்வியும் அதற்கு அவர் அளித்த
பதிலும் வருமாறு:- |
| தீபாவளிக்கு ஒரு பவுன் தங்கம் : ரூ.16
ஆயிரம்
சென்னை, தங்கம் உற்பத்தி குறைவான
நேரத்தில் தேவை அதிகரிப்பதால்
தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் தங்கம்
ரூ.16 ஆயிரமாக உயரும் என்று தங்க
வர்த்தக நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர். |
| பாராளுமன்றத்தில் தமிழில் பதிலளிக்க
அனுமதி : மு.க.அழகிரி பேட்டி
சென்னை, தமிழகு மத்திய அமைச்சர்கள்
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு
தமிழில் பதிலளிக்க வாய்ப்பளிக்க
வேண்டும் என்று திமுக சார்பில்
பாராளுமன்றச் செயலகத்தில்
வலியுறுத்தப்பட்டுள்ளது. என்று
மத்திய ரசாயன மற்றும் உரத்துறை
அமைச்சர் முகஅழகிரி கூறினார்.
சென்னையில் இன்று பேரறிஞர் அண்ணா
வாழ்ந்த நுங்கம்பாக்கம் அவன்யூ
ரோட்டில் கேபிள் டிவி துறையில்
எம்எஸ்ஓ எனப்படும் மல்டி சிஸ்டம்
ஆபரேஷன் சேவை நிறுவனத்தை அழகிரி
குத்து விளக்கு ஏற்றி துவக்கி
வைத்தார். இதனைத் தொடர்ந்து
செய்தியாளர்களுக்கு அமைச்சர் அழகிரி
அளித்த பேட்டி. |
|
தமிழகம்
|
சிறப்புப்பகுதி
|
|
கல்வி / வேலை வாய்ப்பு விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| சிக்கன நடவடிக்கை: காங்கிரஸ்
எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பு- சோனியா
அதிரடி
புதுடெல்லி, நாட்டில் பல பகுதிகளில்
வறட்சி நிலவுவதால் சிக்கன நட
வடிக்கைகளை மேற்கொள்ள காங்கிரஸ்
முடிவு செய்தது. இதன்படி மத்திய
மந்திரிகள் 5 நட்சத்திர ஓட்டலில்
தங்ககூடாது, விமானங்களில் சாதாரண
பிரிவிலேயே பயணம் செய்ய வேண்டும்
என்று உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி மற்றும் மத்திய மந்திரிகள் பின் பற்றி வருகிறார்கள். |
| தமிழக அரசு ஊழியர்களுக்கு
அகவிலைப்படி உயர்வு ரூ.300 முதல் ரூ.3
ஆயிரம் வரை சம்பளம் அதிகரிக்கும்
சென்னை, 6-வது ஊதியக்குழு
பரிந்துரையின்படி சம்பளம்
உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மத்திய,
மாநில அரசு ஊழியர்கள் மிகவும்
மகிழ்ச்சியில் உள்ளனர். கடைநிலை
ஊழியர் முதல் உயர் பதவி வகிக்கும்
அதிகாரி வரை அதிகபலன் பெற்று
வருகின்றனர். சம்பளமாக கிடைக்கும் பெரும் தொகையில் ஒருபகுதி வருமான வரியாக அரசுக்கு மீண்டும் போய் விடுவதாக அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் ஊதிய உயர்வால் கிடைக்கும் பலன்களை மறுக்க இயலாது. |
தென்கச்சி கோ.சுவாமிநாதன் மறைவு
புகழ்பெற்ற
பேச்சாளரும்,எழுத்தாளருமான
தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்கள்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனையில்
இன்று(16.09.2009)இயற்கை எய்தினார்.அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கிய இவர் தமது எளிமையான குரல்வளத்தால் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உள்ளிட்டவர்களால் மதிக்கப்பட்டவர்.சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர்.திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். |
| பன்றிக்காச்சல்: இந்தியாவில் 201 பேர்
பலி
புதுடெல்லி, நாடு முழுவதும்
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 201 ஆக
அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை
தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| இலங்கை தடுப்பு முகாம் தமிழர்கள்
நிலை: இலங்கை அரசுக்கு ஆஸ்திரேலிய
நாடாளுமன்றம் கண்டனம்
கொழும்பு, இலங்கையில் ஊடக சுதந்திரம்
எதுவுமே நடைமுறையில் இல்லை என்பது
வெளிப்படையாகத் தெரிவதாக
குற்றம்சாட்டியுள்ள
ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஜோன் மேர்பி, கருத்துச்
சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில்
இலங்கை அரசு மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கப்பட
வேண்டியவை எனவும் அந்நாட்டு
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்
உரையாற்றும் போது
தெரிவித்திருக்கின்றார். |
| டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் : கோர்ட்
உத்தரவு
கரூர்: நீதிமன்றவிசாரணைின் போது
ஆஜராகாத குளித்தலை டிஎஸ்பி உள்ளிட்ட
மூன்று
பேருக்குநீதிமன்றம்பிடிவாரண்ட்
வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் வீரராக்கியம் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(47). |
| லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
தர்மபுரி:
நில உரிமை சான்று வழங்க, விவசாயியிடம்
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை,போலீசார்
கைது செய்தனர். தர்மபுரி அருகே
காரிமங்கலம் அடுத்த சின்ன பேகாரஹள்ளி
கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி
அன்பழகன் (29). |
| கலெக்டருக்கே பன்றிக் காய்ச்சல்
சுகாதார அமைச்சர் அதிர்ச்சி
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம், நலகொண்டா மாவட்ட
கலெக்டர், பன்றிக் காய்ச்சலால்
அவதிப்படுவதாக, மாநில சுகாதாரத் துறை
அமைச்சர் தானம் நாகேந்தர்
தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில்,
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு
தீவிரமடைந்துள்ளது. நலகொண்டா
கலெக்டர் சையது அலிமுர்தாஜா நிஜ்வி,
சில நாட்களாக காய்ச்சலால்
அவதிப்பட்டு வந்தார். அவர்
ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று
வருகிறார். சிகிச்சைக்கு பின்னர்
வீடு திரும்பினார் |
| மழை குறைவுவால் உணவுப் பொருட்கள்
உற்பத்தி பாதிப்பு
மும்பை:
நாட்டில் போதிய மழை பெய்யாததால், இந்த
நிதியாண்டிற்கான உணவுப் பொருட்கள்
உற்பத்தி, 10 சதவீதம் முதல் 15 சதவீதம்
வரை குறையும் வாய்ப்பு உள்ளதாக, அரசு
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, விவசாயத்துறை
அமைச்சகத்தின், விவசாயம் மற்றும்
கூட்டுறவுத் துறை கூடுதல் செயலர்
என்.கே.தாஸ் கூறியதாவது: |
| சாந்தி பதக்கம் சாந்தி கிடைக்குமா?
புதுடில்லி:
தென் ஆப்ரிக்க தடகள நட்சத்திரம்
கேஸ்டர் செமன்யாவின் பாலின சோதனை
முடிவுக்காக இந்திய தடகள கூட்டமைப்பு
காத்திருக்கிறது. இவரது பதக்கம்
பறிக்கப்படாவிட்டால், சாந்திக்கு
மீண்டும் பதக்கம் கிடைக்க வாய்ப்பு
உள்ளது. |
| 45 அனாதை பிணங்களை சமூக தொண்டு
நிறுவனம் மூலம் அடக்கம்
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனை
பிணவறையில் இருந்த 45 அனாதை பிணங்களை,
சமூக தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம்
செய்யப்பட்டன. சென்னை அரசு பொது
மருத்துவமனை பிணவறையில், 110
பிரேதங்கள் வைக்க மட்டுமே வசதி
உள்ளது. |
| தர்மபுரியில் உரிமம் இல்லாத 105
துப்பாக்கிகள் ஒப்படைப்பு
தர்மபுரி:
"தர்மபுரியில், உரிமம் இல்லாத 105
துப்பாக்கிகள், ஒப்படைக்கப்பட்டன' என,
எஸ்.பி., சுதாகர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், உரிமம் பெற்ற,
487 நாட்டுத் துப்பாக்கிகள் உள்ளன. சில
மாதங்களில், கள்ளத்துப்பாக்கி
வைத்திருந்ததாக, 18 வழக்குகள் பதிவு
செய்து, 19 பேர் கைது செய்யப்பட்டு
உள்ளனர் |
| அ.தி.மு.க. அதிரடி மாற்றம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க., செயலர்
உட்பட மூன்று பேர் அதிரடியாக
மாற்றப்பட்டுள்ளனர்.நடந்து முடிந்த
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு
ஏற்பட்ட பின்னடைவு குறித்து, கட்சி
நிர்வாகிகளுடன் அ.தி. மு.க., பொதுச்
செயலர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். |
| பம்பா- வைப்பாறு நதி இணைக்க கேரள அரசு
தடை
திருவனந்தபுரம்:
பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகளை
இணைக்கும் தமிழக அரசின் முயற்சியை
அனுமதிக்க மாட்டோம் என்று, கேரள
நீர்பாசனத் துறை அமைச்சர்
பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.கேரள
சட்டசபையில் உறுப்பினர்கள் நடத்திய
விவாதத்துக்கு பதிலளித்து அவர்
கூறியதாவது: |
| திருக்குடை ஊர்வலம் 21ம் தேதி திங்கள்
கிழமை கவுனி தாண்டுகிறது
சென்னை:
திருப்பதி திருமலை பிரம்மோத்ஸவத்தை
முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ திருமலை
திருப்பதி திருக்குடை ஊர்வலம் 21ம்
தேதி திங்கள் கிழமை கவுனி
தாண்டுகிறது |
| திருச்சி மத்திய சிறையில் கைதிகள்
மோதல்
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில்,
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்
ஒருவருக்கு மண்டை உடைந்தது. |
| ஆயுத பூஜைக்கு பொரி உற்பத்தி தொழில்
சுறுசுறுப்பு
உடுமலை:
ஆயுத பூஜைக்காக ஆர்டர் குவிவதால்,
உடுமலை பகுதியில் முடங்கியிருந்த
பொரி உற்பத்தி தொழில்
சுறுசுறுப்படைந்துள்ளது. கோவை
மாவட்டம் உடுமலையில், ஏரிப்பாளையம்,
கொழுமம், கணியூர் பகுதிகளில்,
பெருமளவில் பொரி உற்பத்தி
செய்யப்படுகிறது. |
| ஏர்இந்தியா விமான கட்டணம் குறைப்பு
புதுடெல்லி, தனியார் ஜெட் ஏர்வேஸ்
விமான நிறுவனம், 50 சதவீத கட்டண
தள்ளுபடியை அறிவித்துள்ள நிலையில்,
பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியா, 20
முதல் 46 சதவீதம்வரை கட்டண குறைப்பை
அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட
உள்நாட்டு வழித்தடங்களில் 18-ந்
தேதிவரை இச்சலுகை நீடிக்கும்.
இதற்கான முன்பதிவு, நாளைவரை
செயல்படும். இதன்படி, டெல்லி-சென்னை இடையிலான 3 விமானங்களிலும், சென்னை-டெல்லி இடையிலான 2 விமானங்களிலும் கட்டணம், ரூ.3,079 ஆக இருக்கும். டெல்லி-பெங்களூர் மற்றும் பெங்களூர்-டெல்லி வழித்தடங்களில் தலா 2 விமானங்களில் கட்டணம் ரூ.3,229 ஆகும். |
| திருப்பதி லட்டுக்கு காப்புரிமை
புதுடெல்லி, திருப்பதி ஏழுமலையான்
கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக
வழங்கப்படும் திருப்பதி லட்டு
உலகப்புகழ் பெற்றது. இதன் சுவையும்,
மணமும், தரமும் வேறு எந்த லட்டுக்கும்
கிடையாது. திருப்பதியைத் தவிர, வேறு
எங்கும் இந்த லட்டுகள்
தயாரிக்கப்படுவது இல்லை |
| சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க
தமிழக அரசுக்கு உரிமை உண்டு -
ஐகோர்ட்டு தீர்ப்பு
சென்னை, "சிதம்பரம் நடராஜர் கோவிலை
நிர்வகிக்க தமிழக அரசுக்குஉரிமை
உண்டு'' என்று தீட்சிதர்கள் தொடர்ந்த
வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு
தீர்ப்பு வழங்கி உள்ளது. |
| அண்ணா பிறந்தநாள்: தி.மு.க-அ.தி.மு.க.
மோதல்
வேலூர், அண்ணா பிறந்தநாளை ஒட்டி
வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள
அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க வந்த
போது தி.மு.க-அ.தி.மு.க. வினர்
மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
`எம்.ஏ.' பட்டதாரி ஆனார் நடிகை ஷெரீன்
`துள்ளுவதோ இளமை' படத்தில், டைரக்டர்
கஸ்தூரிராஜாவினால் தமிழ் படத்தில்
கதாநாயகியாக அறிமுகம்
செய்யப்பட்டவர், ஷெரீன். இவர், விசில்,
உற்சாகம், ஸ்டூடண்ட் நம்பர்-1 உள்பட பல
படங்களில் நடித்து இருந்தார்.மும்பையை சேர்ந்த ஒரு இளைஞருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, ஷெரீன் இடையில் காணாமல் போய்விட்டார். சினிமா உலக தொடர்புகளை துண்டித்துக்கொண்டார். |
| தமிழரின் உரிமைகளை பாதுகாக்க,
தமிழர்களும், தமிழகமும் எழுச்சி பெற
ஜெயலலிதா சபதம்
சென்னை, அண்ணா பிறந்த நாளையொட்டி
ஜெயலலிதா வெளியிட்டுள்ள
அறிக்கையில்,தமிழரின் உரிமைகளை
பாதுகாக்கும் வகையில், தமிழர்களும்,
தமிழகமும் எழுச்சி பெறும் வகையில்,
எம்.ஜி.ஆரின் நல்லாட்சி தமிழகத்தில்
மீண்டும் மலர நாம் அனைவரும்
அண்ணாவின் 101-வது பிறந்த நாளில் உறுதி
ஏற்போம். என்று கூறியுள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தனித்
தமிழ் ஈழமே ஒரே தீர்வு - திருச்சி
ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்
திருச்சி, இலங்கையில் நடந்து வரும்
தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தனித்
தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பதால், தமிழ்
ஈழம் மலர்வதற்கு தமிழகத்திலும்,
இந்தியாவிலும், உலகெங்கிலும் மக்கள்
ஆதரவை திரட்ட ம.தி.மு.க. அர்ப்பணிப்பு
உணர்வோடு பாடுபடும் - திருச்சி
ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, ம.தி.மு.க திருச்சி மண்டல மாநாடு தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார். மாநாட்டு திடலுக்கு பகல் 1 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். சுமார் 3.45 மணியளவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாநாட்டு திடலுக்கு வந்தார். |
| நாளை, சென்னையில் கலெக்டர்-போலீஸ்
அதிகாரிகள் மாநாடு
சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில்
மாவட்ட கலெக்டர்-போலீஸ் அதிகாரிகளின்
கூட்டு மாநாடு நாளை (வியாழக்கிழமை)
தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
| கனடாவில் கணனி மூலம் தமிழ்
கற்பித்தல் பட்டறை
கனடாவின் ஸ்காபறோ அற்லான்டா
மண்டபத்தில் கணனி மூலம் தமிழ்
கற்பித்தல் பட்டறை கனடா எழுத்தாளர்
இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது .
இதில் ஏறக்குறைய 30 ஆசிரியர்களும்
தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இலண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக கணினித் துறையில் பணிபுரியும் பேரா.சிவா பிள்ளை இதனை வெகு சிரப்பாக நடத்தினார். "பவர் பாய்ன்ட் என்னும் மென்பொருள் மூலம் தயாரித்த பல ஒளிப்படங்களையும் விடியோ சிறு துண்டுகளையும் பயன்படுத்தி நல்லதோர் பட்டறையை தயாரித்திருந்தார்.வழக்கமான சம்பிரதாய முறைகளைப் பின்பற்றாமல் பேச்சு , எழுத்து , வாசிப்பு என்ற முறைகளைப் பின்பற்றி மாணவரைக் கவரும் வகையில் எவ்வாறு விளையாட்டுப் போன்று கற்பிக்கலாம் என நல்ல பல உதாரணங்களைக் காட்டிச் சிறப்பாகச் பட்டறையை நடத்திய விதம் பலரும் பாராட்டும் விதமாக இருந்தது. |
| தீவிரவாதிகள்ஊடுருவலை தடுக்க
நடவடிக்கை;கலெக்டர்கள்- போலீஸ்
அதிகாரிகள் மாநாட்டில் கருணாநிதி
பேச்சு
சென்னை, முதல்-அமைச்சர் கருணாநிதி
தலைமையில் கலெக்டர்கள்- போலீஸ்
அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை
கோட்டையில் இன்று தொடங்கியது.
மாநாட்டில் கருணாநிதி பேசியதாவது:- மக்களின் வாழ்க்கைத் தேவைகளை உணர்ந்து, அடிப்படை வசதிகளைப் பெருக்கிடும் வகையில், பல முன்மாதிரித்திட்டங்களை நாம் உருவாக்கி இருக்கிறோம். விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை நாம் தள்ளுபடி செய்தோம்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை நாம் கொண்டுவந்து செயல் படுத்தினோம். |
| கமல் படத்துக்கு தடை இல்லை
“உன்னைப்போல் ஒருவன்" நாளை ரிலீஸ்:
சென்னை: கமல் நடித்த உன்னைப்போல்
ஒருவன் படம் 18-ந்தேதி (நாளை) ரிலீசாகும்
என அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த
படத்தை எதிர்த்து பிரமிட் சாய்மீரா பட
நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தது. மர்மயோகி படம் எடுக்க
கமலுக்கு ரூ.7 கோடியே 82 லட்சத்து 47
ஆயிரம் முன் பணம் கொடுத்தோம் என்றும்
அந்த தொகையை திருப்பி தருவதுவரை
படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்
என்றும் அந்நிறுவனம் கோர்ட்டில்
வற்புறுத்தியது. |
| ஏபிசி தலைவராக சுபவிரத சட்டோபாத்யாய
தேர்வு
சென்னை,: பத்திரிகைகள்
விற்பனையைக் கண்காணிக்கும் ஆடிட்
பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏபிசி)
அமைப்பின் தலைவராக சுபவிரத
சட்டோபாத்யாய
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெனின்சுலா ஃபவுண்டேஷனின் தலைவராக இவர் உள்ளார். 2009-10-ம் ஆண்டுக்கான தேர்தலில் இவர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்
தப்பினேன்; நடிகர் பரத் பேட்டி
சென்னை, அமெரிக்க ஹெலிகாப்டர்
விபத்தில் நடிகர் பரத் அதிர்ஷ்டவசமாக
உயிர் தப்பினார். இதுகுறித்து பரத்
அளித்த பேட்டி வருமாறு:- நான் அமெரிக்காவை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு அங்கு சென்றேன். இந்த பயணத்தில் பெரிய அதிர்ச்சியை சந்தித்தேன். அமெரிக்காவில் ஹட்சன் ஆறு இருக்கிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்படும். உயரே சென்று ஹட்சன் ஆற்றை சுற்றி வரும். இந்த சுற்றில், பல ஊர்கள், நகரங்களை மேலிருந்து பார்க்கலாம். இருபது நிமிட பயணத்தில் அமெரிக்காவை ரவுண்ட் அடித்த மாதிரி இருக்கும். |
| சென்னை மெரினாவில் கலவரம்: போலீசார்
குவிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் இரு
பிரிவினரிடையே நடந்த மோதலில் அங்கு
நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர
வாகனங்கள் அடித்து
நொறுக்கப்பட்டதுடன், தீ வைத்தும்
எரிக்கப்பட்டன. |
ஈரோட்டில் பிரபாகரன் படத்தை
அகற்றக்கோரி நடுரோட்டில் இளங்கோவன்
மறியல்
ஈரோடு, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்
அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை
அணிவிக்க இன்று காலை முன்னாள் மத்திய
மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வந்தார். அவருடன் விடியல் சேகர்
எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ்
தொண்டர்களும் வந்தனர்.அப்போது
பெரியார் சிலை அருகே பெரியார்
திராவிடர் கழகம் மற்றும் தமிழர்
தேசிய பொது உடமை கட்சி சார்பில்
பெரியாருடன் விடுதலைப்புலி தலைவர்
பிரபாகரன் சேர்ந்து இருப்பது போல்
தட்டி வைக்கப்பட்டிருந்தது. |
| திருப்பூரில், கல்லூரி மாணவர்கள்
மோதல்: 3 மாணவர்கள் படுகாயம்
திருப்பூர், திருப்பூர் காலேஜ்
ரோட்டில் சிக்கண்ணா அரசு
கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஆண்- பெண்
இருபாலரும் படித்து வருகின்றனர்.
கல்லூரி வளாகத்திலேயே விடுதியும்
செயல்பட்டு வருகிறது. சில
நாட்களுக்கு முன் இந்த விடுதியில்
தங்கி படிக்கும் மாணவரை உள்ளூர்
மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் அவர்களுக்குள் பகை இருந்து
வந்துள்ளது |
| 2010 பிப்ரவரியில் உலகத்தமிழ் மாநாடு :
கருணாநிதி அறிவிப்பு
சென்னை., தமிழக மாவட்ட
ஆட்சித்தலைவர்கள் காவல்துறை
கண்காணிப்பாளர்களில் 2 நாள் மாநாடு
முதல்வர் தலைமையில் தலைமைச்
செயலகத்தில் இன்று துவங்கியது தனது
தலைமை உறையில் உலகத்தமிழ் மாநாடு
வரும் பிப்ரவரி மாதம் 2010ல் நடை பெறும்
என்று முதலமைச்சர் கருணாநிதி
அறிவித்தார். மக்கள் தொண்டே மகேசன்
தொண்டு என்று எங்களுக்கு அறிவுறுத்தி
மக்களுக்கு உழைக்க வழிகாட்டிய
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள்
வெற்றியடைய நீங்கள் அனைவரும்
அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
அரசின் நலத்திட்டங்கள் தேசிய அளவில்
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழலில்
பத்திரிகைகளும் நடுநிலையாளர்களும்
நம் அரசின் திட்டங்களை மனமார
பாராட்டுகின்றனர். |
| பெங்களூரில் கன மழை: 1 1/2 வயது குழந்தை
உட்பட 5 பேர் பலி
பெங்களூர், நேற்று முன்தினம்
பெங்களூரில் விடிய விடிய கன மழை
பெய்ததால் தாழ்வான பகுதிகளில்
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பெங்களூர், ஹுலி மாவு பி.டி. லே-அவுட்
பகுதியில் உள்ள குடிசைப்பகுதியை
சேர்ந்த வரதராஜ் என்பவரின் 1 1/2 வயது
குழந்தை விஜய், விளையாடிக்கொண்டு
இருந்தபோது அருகில் உள்ள சாக்கடையில்
தவறி விழுந்துவிட்டான். பலத்த மழையில்
சாக்கடை கரை புரண்டு ஓடியதால் குழந்தை
விஜய் வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டான். போலீசாரும்
தீயணைப்பு படையினரும் 10 மணி
நேரத்துக்கும் மேல் தேடியும் விஜயின்
உடல் கிடைக்கவில்லை. குழந்தை விஜயின்
பெற்றோர், தமிழ்நாட்டில்
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். |
| வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்
கீழ் 3 ஆண்டுகளில் ரூ.2,569 கோடி செலவு -
மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, தேசிய ஊரக வேலைவாய்ப்புத்
திட்டத்தின்கீழ், தமிழகத்தில் கடந்த 3
ஆண்டுகளில் ரூ.2,569 கோடி
செலவிடப்பட்டுள்ளது என்று துணை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
| 3 மகள்களை கற்பழித்த காமக்கொடூரத்
தந்தைக்கு 50 ஆண்டு ஜெயில்
வேலூர், 3 மகள்களை கற்பழித்த வழக்கில்
தந்தைக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை
விதித்து ராணிப்பேட்டை விரைவு
நீதிமன்றம் நேற்று தீர்ப்பு
அளித்தது. இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:- |
| சென்னை-நிஜாமுதின் புயல்வேக ரெயில்
கட்டணம் நிர்ணயம்
சென்னை, சென்னை-நிஜாமுதின் புயல்வே
ரெயில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது. சாப்பாடுடன் இரண்டாம்
வகுப்பு படுக்கை கட்டணம் 760 ரூபாய்
ஆகும். சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு இடையே எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும் புயல்வேக ரெயில்கள் (டோரண்டோ ரெயில்) இயக்கப்படும் என்று பட்ஜெட்டில் ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படி, இந்திய ரெயில்வே முதல்முறையாக புயல்வேக ரெயில்களை இயக்க உள்ளது. முதல் புயல்வேக ரெயிலை மேற்கு வங்காள மாநிலம் செல்டா ரெயில் நிலையத்தில் நாளை (18-ந் தேதி) நடைபெறும் விழாவில் செல்டா-புதுடெல்லி புயல்வேக ரெயிலை மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார் |
| கிருஷ்ணகிரி அருகே கனமழையால் பள்ளி
கட்டிடம் இடிந்து விழுந்தது:
மாணவர்கள் தப்பினர்.
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் பெய்த கன மழையால்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
கட்டிடம் நேற்று காலை இடிந்து
விழுந்தது. இதில் 150 மாணவ-மாணவிகள்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் ஆறுபோல ஓடியது. |
| சென்னையில் ரூ.1000, ரூ.500 கள்ள
நோட்டுக்கள் அதிகரிப்பு: போலீஸ்
கமிஷனர் எச்சரிக்கை
சென்னை, சென்னையில் கள்ள நோட்டுகள்
நடமாட்டம் அதிரித்து இருப்பதால்,
ரூ.1000, 500 நோட்டுகளை கவனமாக பார்த்து
வாங்கும்படி, போலீஸ் கமிஷனர்
ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்து
இருக்கிறார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு தடை
விதிக்கக்கூடாது: கமல்ஹாசன்
ஐகோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை, `உன்னைப்போல் ஒருவன்' படத்தை
திரையிட தடைவிதிக்க கூடாது என்று
நடிகர் கமல்ஹாசன் தரப்பில்
சந்திரஹாசன் சென்னை ஐகோர்ட்டில்
பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். பிரமிட் சாய்மீரா படநிறுவன இயக்குனர் நாராயணன் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து `மர்ம யோகி' படத்தை தமிழ் மற்றும் இந்தியில் தயாரிக்க ஒப்பந்தம் செய்தோம் என்று மனுவில் கூறியிருந்தார். ஆனால் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்து தராமல், அவரது நிறுவனம் சார்பில் தயாரித்த `உன்னைப்போல் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார் என்றும், எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரத்தை தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். அதுவரை இந்த படத்தின் பிரிண்டுகளை பிரசாத் லேப்பிலிருந்து வெளியில் கொண்டுவர அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார். |
| வேலூர் மாவட்டத்தில் கன மழை,
காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி 5 பேர்
பலி
வேலூர், வேலூர் மாவட்டத்தில் விடிய,
விடிய பெய்த கன மழையின் காரணமாக
ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில்,
வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
ஆனார்கள். மேலும் வீடுகள் அடித்து
செல்லப்பட்டதால் பரிதவித்த 200 பேரை
தீயணைப்பு படையினர் மீட்டனர். |
| சீன எல்லையில் இந்திய படைகள் குவிப்பு
- எல்லையில் பதட்டம் அதிகரிப்பு
புதுடெல்லி, காஷ்மீர் மாநிலத்தின் சீன
எல்லையில் இந்திய படைகள்
குவிக்கப்பட்டு உள்ளன.இதனால்
அப்பகுதியில் பதட்டம் நிலவி
வருகிறது. இந்நிலையில் இன்று தேசிய
பாதுகாப்பு கமிட்டி கூடி,
எல்லைப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை
குறித்து அவசர ஆலோசனை நடத்துகிறது. |
சிறப்புப்பகுதி
இலங்கை
|
|
கல்வி / வேலை வாய்ப்பு |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
கனடாவில் கணனி மூலம் தமிழ் கற்பித்தல் பட்டறை கனடாவின் ஸ்காபறோ அற்லான்டா
மண்டபத்தில் கணனி மூலம் தமிழ்
கற்பித்தல் பட்டறை கனடா எழுத்தாளர்
இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது .
இதில் ஏறக்குறைய 30 ஆசிரியர்களும்
தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
|
| சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற
சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு
வழங்கும்: ஜி.கே.வாசன்
சென்னை, எண்ணூர் துறைமுகம் கடந்த
நிதி ஆண்டில் ரூ.41.46 கோடி நிகர லாபம்
ஈட்டி உள்ளது. எனவே முதல் முறையாக அதன்
பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கி
உள்ளது. இதில் நிகர லாபத்தில் 15
சதவீதம் ஈவுத் தொகையாக
வழங்குகிறார்கள். ஈவுத் தொகையின்
மொத்த மதிப்பு ரூ.6.22 கோடி ஆகும். இதில் மத்திய அரசுக்கு ரூ.4.15 கோடியும், எண்ணூர் துறைமுகத்தின் இன்னொரு பங்குதாரரான சென்னை துறைமுகத்துக்கு ரூ.2.07 கோடியும் வழங்கப்பட்டது. |
| பட அதிபர் மீது மோசடி வழக்கு: அர்ஜுன்,
கவுதமி கோர்ட்டில் சாட்சியம்
சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த
சுந்தராம்பாள் என்பவர் “சுதா இண்டர்
நேஷனல் பிரைவேட் லிமி டெட்” என்று பட
கம்பெனி மூலம் சினிமா படம்
எடுக்கப்போவதாக அந்த பகுதியில் உள்ள
இந்தியன் பாங்கியில் 1988ல் கடன் கேட்டு
அணுகினார். படத்துக்கு “அக்னி
வளையம்” என்று பெயர் வைத்து
இருப்பதாகவும், அதில் அர்ஜூன், கவுதமி,
வினுசக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க
உள்ளதாகவும் இளையராஜா இசை
அமைக்கிறார் என்றும் பணம் கேட்டார். |
| சச்சின், டோனி, காம்பீருக்கு விருது
மும்பை, மும்பையில் கேஸ்ட்ரோல்
நிறுவனம் சார்பில் நேற்று நடந்த
விழா�®
�ில் சிறந்த கிரிக்கெட்
வீரர்களுக்கான விருது வழங்கப்பட்டது. ஒரு நாள் போட்டி சிறந்த வீரராக டோனி தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் வீரர் விருது ஷேவாக்கிற்கு கிடைத்தது. அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. ஆண்டின் சிறந்த வீரர் விருது ரூ.5 லட்சம் பரிசு தொகையுடன் காம்பீருக்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத்துக்கும், சிறப்பு விருதுகளாக டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன் கடந்த சச்சின் மற்றும் அதிக கேட்சுகள் செய்த டிராவிட்டுக்கு விருது கொடுக்கப்பட்டது. |
மாட்டுத் தொழுவ சர்ச்சை மன்னிப்பு
கேட்டார் சசிதரூர்
புதுடெல்லி, விமானத்தில் சாதாரண
வகுப்பில் பயணம் செய்பவர்களை
கால்நடைகளுடன் ஒப்பிட்ட
விவகாரத்தில் மத்திய
வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார்.பருவ மழை பொய்த்ததன் எதிரொலியாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் எம்பிக்களுக்கு 20 சதவீத சம்பள வெட்டு, விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணிப்பது என பல சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. |
| செங்கல்பட்டு தாசில்தார் மீது கோர்ட்
அவமதிப்பு வழக்கு
சென்னை, சென்னை ஐயம்பாக்கத்தைச்
சேர்ந்த சாந்தகுமாரி சார்பாக அவரது
பவர்ஏஜெண்ட் குடியரசு ஐகோர்ட்டில்
தாக்கல் செய்துள்ள கோர்ட் அவமதிப்பு
வழக்கில் கூறியிருப்பதாவது |
ஆசிரியை திட்டியதால் 5 ம் வகுப்பு
மாணவன் தீக்குளித்து தற்கொலை
சென்னை, ஆசிரியை திட்டியதால் 5-ம்
வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் சோழவரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சோழவரம் நேரு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (எ) ஞானபிரகாஷ். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரதீஷ் (10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். |
மகாளய அமாவாசை, ராமேஸ்வரம்
அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித
நீராடினர்
ராமேஸ்வரம், மகாளய அமாவாசை தினமான
இன்று ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம்
அக்னி தீர்த்த கடலில் புனித
நீராடினர்.மகாளய அமாவசை தினமான இன்று பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆண்டு முழுவதும் உள்ள அமாவசைகளில் தர்ப்பணம் செய்வதும், அஞ்சலி செய்வதும் விடுபட்டால் கூட இந்த மகாளய அமாவசையில் கடலில் நீராடி முன்னோரை நினைத்தாலே ஆண்டு முழுவதும் அஞ்சலி செய்வதற்கு சமம் என்பது ஐதீகம். இதனால் இன்று கடற்கரை பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்வர். இன்று அதிகாலையிலேயே ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் தமிழகம் முழுவதிலிருந்து ஏராளமான கார், வேன் போன்ற வாகனங்களில் அதிகம் பேர் வந்து புனிதநீராடினர். பின்னர் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். |
| பள்ளிகளில் காலாண்டு தேர்வை
கண்காணிக்க சூப்பர்வைசர்களுக்கு
பற்றாக்குறை
சென்னை,தமிழகத்தில் காலாண்டு
தேர்வுகள் கடந்த செப்.15ம் தேதி
துவங்குவதாக இருந்தது. அண்ணா
நூற்றாண்டு நிறைவு விழாவையட்டி அன்று
நடக்கவிருந்த தமிழ் தேர்வுகளை வரும்
19ம் தேதி நடத்த வேண்டும் என அரசு
திடீர் உத்தரவு பிறப்பித்தது. |
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்
கடத்தல் - கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை, தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் தாக்கி, கடத்தி
சென்றிருப்பதற்கு முதல்வர்
கருணாநிதி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார். முதல்வர்
கருணாநிதி தலைமையில் 2வது நாளாக
தலைமைச் செயலகத்தில் நடந்து வரும்
கலெக்டர்கள் மற்றும் போலீஸ்
அதிகாரிகள் மாநாட்டில் இக் கண்டனத்தை
முதல்வர் தெரிவித்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: |
| பெரியார் கொள்கைகளுக்கு உயிர்
கொடுக்கும் திமுக : முதல்வர் கலைஞர்
பேச்சு
சென்னை, பெரியார் களஞ்சியம் குடியரசு
முதல் தொகுதியினை முரசொலி
அலுவலகத்திலிருந்து வீடியோ
கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர்
கருணாநிதி வெளியிட்டு பேசினார். |
| சென்னையிலிருந்து புறப்படும்
தீபாவளி சிறப்பு ரயில்கள் விபரம்
சென்னை,: தீபாவளியை முன்னிட்டு
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை,
நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட
பல்வேறு முக்கிய இடங்களுக்கு சிறப்பு
எக்ஸ்பிரஸ் ரயில்களை தெற்கு ரயில்வே
இயக்கவுள்ளது. இதற்கான முன்பதிவு
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18)
தொடங்குகிறது. சிறப்பு ரயில்கள்
விவரம்: |
| சார்... இந்தாங்க... காபி, காபி
குன்னூர், உலக அளவில், நடப்பு 2009
காலண்டர் ஆண்டில், காபி பயன்பாடு
சுமார் 780 கோடி கிலோவாக (13 கோடி
மூட்டைகள்) இருக்கும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற
2008-ஆம் ஆண்டில், 12.80 கோடி மூட்டைகளாக
இருந்தது. ஒரு மூட்டை என்பது 60 கிலோ
காபியைக் கொண்டதாகும். காபி
உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்தியா
போன்ற நாடுகளில், இதன் பயன்பாடு மொத்த
காபி உற்பத்தியில் சுமார் 25-30 சதவீதம்
என்ற அளவில் உள்ளது. |
| கள்ளநோட்டை தடுக்க பிளாஸ்டிக் ரூபாய்
நோட்டுகள்: ரிசர்வ் வங்கி முடிவு
சென்னை, கள்ள நோட்டுப் புழக்கத்தை
தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் ரூபாய்
நோட்டுகளை மக்களிடையே புழக்கத்தில்
பரீட்சார்த்தமாக வெளியிட இந்திய
ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பண்டிகை தினங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை சமூகவிரோதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். முன்பு ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற மதிப்பு குறைந்த ரூபாய் தாள்களை கள்ள நோட்டுகளாக அச்சடித்து வெளியிட்டு வந்தனர். தற்போது ரூ.100, ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிடத் தொடங்கிவிட்டனர். |
| தொடக்க பள்ளி கல்வித் துறையில் 2,404
ஆசிரியர்கள் மாறுதல்
சென்னை,: தொடக்கக் கல்வித்
துறையில் இருந்து 2,404 ஆசிரியர்கள்
பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல்
செய்யப்பட உள்ளனர். இதற்கான பாடவாரியான கலந்தாய்வு செப்டம்பர் 25, 26 ஆகிய இரு நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளன. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: |
| என்.எல்.சி. : புதிய இயக்குநர்
பொறுப்பேற்பு
நெய்வேலி,: என்.எல்.சி.யின் திட்டம்
மற்றும் செயலாக்கத்துறை இயக்குநராக
ஆர்.கந்தசாமி வியாழக்கிழமை
பொறுப்பேற்றுக் கொண்டார். |
| கல்விக் கடன் வட்டிக்கு மானியம் :
மத்திய அமைச்சர் பதில்
காஞ்சிபுரம்,: கல்விக் கடனுக்கான
வட்டி மானியம் வழங்குவது குறித்த
திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில்
உள்ளது என மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
டி.புரந்தேஸ்வரி கூறியுள்ளார். ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: |
| சென்னை- டெல்லி புயல்வேக ரெயில்
முன்பதிவு தொடங்கியது
சென்னை, சென்னை சென்ட்ரல்- டெல்லி
நிஜாமுதீன் இடையே புயல் வேக ரெயில்
இயக்கப்படுகிறது. இந்த ரெயில்
இடையில் எங்கும் நிற்காது. திங்கட்கிழமை தோறும் காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். (வண்டி எண்.2269) மறுநாள் காலை 10.35 மணிக்கு டெல்லி சென்றடையும். |
| மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவேன் :
எல்.கே.அத்வானி
புதுடெல்லி:
என்னிடம் அதிகாரம், சட்டம் இருந்தால்
மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவேன்.
மதமாற்ற யோசனையே ஒரு பிழை.
மிஷனரிகளின் செயல்பாடு இந்துக்களின்
வாழ்வில் குறுக்கீடு செய்வதாக உள்ளன
என்று தேசப்பிதா மகாத்மா காந்திஜி
கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், பாரதத்தின் முன்னால் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி மதமாற்றம் குறித்த இந்தியப் பார்வை பற்றி தனது வாழ்க்கை வரலாற்றான என் தேசம் என் வாழ்க்கையில் எழுதி உள்ளார். அது வருமாறு: |
| ரயில்வே பணி நியமனத்தில் ஊழல் சிபிஐ
விசாரிக்க மம்தா பரிந்துரை
புதுதில்லி,:
லாலு பிரசாத் பதவிக் காலத்தில்
ரயில்வே பணி நியமனம் மற்றும்
டெண்டர்களில் முறைகேடுகள்
நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்கள்
குறித்து சிபிஐ விசாரணைக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான
உத்தரவை ரயில்வே அமைச்சர் மம்தா
பானர்ஜி பிறப்பித்துள்ளதாக ரயில்வே
வட்டாரங்கள் தெரிவித்தன. |
| மின்தடையால் மதுரை அரசு
மருத்துவமனையில் அறுவைச்
சிகிச்சைகள் நிறுத்தம்
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4
நாள்களாக நீடித்த மின்தடை காரணமாக
300-க்கும் மேற்பட்ட அறுவைச்
சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. கடந்த சனிக்கிழமை இரவு லாரி உரசியதால் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள மின்கேபிள் சேதமடைந்தது. இதையடுத்து மின் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது. |
| ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியும்
செலவழிக்கப்படாத விவசாய மானியம்
கடலூர்,:
கடலூர் மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த விவசாயிகளின்
முன்னேற்றத்துக்காக, அவர்கள் 50 சதவீத
மானியத்தில் ஆழ்குழாய்க் கிணறு
அமைக்க, விண்ணப்பித்த 148 மனுக்கள்,
வங்கிகளில் ஓராண்டாக முடங்கிக்
கிடக்கின்றன |
| சிறுநீரக மோசடி தடுக்க புதிய சட்டம்
புதுதில்லி:
சிறுநீரக மோசடியைத் தடுக்கும்
வகையில் உறுப்பு மாற்று சட்டத்
திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை
வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது |
| சதாப்தி ரயில் மீது கல் வீசிய 2
இளைஞர்கள் கைது
பானிபட் (ஹரியாணா):
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்
ராகுல் காந்தி பயணம் செய்த சதாப்தி
ரயில் மீது கல் வீசிய 2 இளைஞர்களை
போலீஸôர் கைது செய்துள்ளனர். |
| அரசு விரைவு பஸ்களை வேறு
கோட்டங்களுக்கு மாற்றமில்லை
அமைச்சர் நேரு விளக்கம்
சென்னை:
""அரசு விரைவு பஸ்களை வேறு
கோட்டங்களுக்கு பிரித்து அளிக்கும்
திட்டம் எதுவும் இல்லை'' என
போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.
நேரு விளக்கம் அளித்துள்ளார். |
| தொழில்துறை வரிச் சலுகை வாபஸ்
ஹைதராபாத் :
சர்வதேச பொருளாதார தேக்க
நிலையிலிருந்து மீட்பதற்காக
தொழில்துறைக்கு அளிக்கப்பட்ட வரிச்
சலுகைகள் படிப்படியாக விலக்கிக்
கொள்ளப்படும் என்று பிரதமரின்
பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர்
சி. ரங்கராஜன் தெரிவித்துள்ளார் |
| மது ஒழிப்பை வலியுறுத்தி 22-ம் தேதி
பேரணி
சென்னை:
தமிழ்நாட்டில் பூரண மது ஒழிப்பை
வலியுறுத்தி காந்திய அமைப்புகள்
சார்பில் வரும் 22-ம் தேதி சென்னையில்
பேரணி நடைபெறுகிறது. இது தொடர்பாக மகாத்மா காந்தி சேவை மையத்தின் வி. விவேகானந்தன் சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது: |
| கடவுளின் பெயரால் நடத்தப்படும்
சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிவு
சென்னை, : ""கடவுளின் பெயரால்
நடத்தப்படும் சடங்குகளால் தமிழ்
கலாசாரம் அழிந்தது'' என்று நிதி
அமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார். "ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை'யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது: |
| தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழா
சென்னை: "தகவல் பெறும் உரிமைச் சட்ட
வார விழாவை அக்டோபர் 6 முதல் 12 வரை
கடைப்பிடிக்க வேண்டும்' என்று தமிழக
அரசு அறிவுறுத்தியுள்ளது. |
| "துரந்த்' புயல் ரயில் 21-ம் தேதிக்கு
ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை சென்ட்ரல் -தில்லி (நிஜாமுதீன்)
இடையே "துரந்த்' எனப்படும் அதிவேக
எக்ஸ்பிரஸ் ரயில் (2269) சேவை தொடக்க விழா
21-ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| பெரியாருடன் பிரபாகரன் காங்கிரஸார்
மறியல்
ஈரோடு,:
ஈரோட்டில் பெரியாருடன் பிரபாகரன்
இருக்கும் சுவரொட்டியை அகற்ற
வேண்டும் என வலியுறுத்தி, மத்திய
முன்னாள் அமைச்சர்
ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில்
காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை
திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை காலை மாலை அணிவித்தனர். |
| கோவை உலகத் தமிழ் மாநாடு முதல்
ஆலோசனைக் கூட்டம்
சென்னை :
"ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவை
நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படுவது
குறித்து முதல் ஆலோசனைக்கூட்டம்
நடைபெற்றது, |
| மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக
தண்ணீர் திறப்பு
சென்னை. மேட்டூர் அணையிலிருந்து
கூடுதலாக 20 ஆயிரம் கன அடி நீர்
திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது |
| அடிப்படை வசதிகள் இல்லாத 30
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு
நோட்டீஸ் - அண்ணா பல்கலை நடவடிக்கை
சென்னை, சென்னையில் உள்ள 4 தனியார்
என்ஜினீயரிங் கல்லூரிகளில்
சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
செய்தனர். அப்போது அகில இந்திய தொழில்
நுட்ப கல்வி கழகம் முறைகேடாக அனுமதி
அளித்திருப்பது தெரிய வந்தது. போதிய
உள்கட்டமைப்பு வசதி, தகுதியான
ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது
கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. |
| ஊழல் அதிகாரிகள் பெயர் இணையதளத்தில்
வெளியீடு
புதுடெல்லி, நாடு முழுவதும் ஊழல்
புகார்களில் சிக்கியுள்ள அதிகாரிகள்
குறித்த விபரங்களை மத்திய ஊழல்
ஒழிப்பு ஆணையம் மாதந்தோறும்
வெளியிட்டு வருகிறது. அதில், ஊழல்
குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்கள்
மற்றும் விசாரணையை எதிர்நோக்கி
இருப்பவர்கள் பற்றிய விபரங்கள்
இருக்கும். ஆனால், எந்த துறையில்
எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற
எண்ணிக்கை மட்டுமே இதுவரை வெளியிடப்
பட்டது. |
| ரெயில்வே ஊழியர்களுக்கு 75 நாள்
சம்பளம் போனஸ் மந்திரி சபை
கூட்டத்தில் ஒப்புதல்
புதுடெல்லி, ரெயில்வே ஊழியர்களுக்கு 75
நாள் சம்பளத்தை போனசாக அளிக்க மத்திய
மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டது. மத்திய மந்திரிசபையின் வாராந்திர கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டவை பற்றிய விவரங்களை மத்திய மந்திரி அம்பிகா சோனி, நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- |
| முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை -
வைகோ கண்டனம்
சென்னை, முல்லைப் பெரியாறு அணைக்கு
அருகே புதிய அணை கட்ட கேரள அரசு
ஆய்வுக்கு அனுமதி வழங்கியது
தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய
அரசின் நடவடிக்கையாகும் என்று வைகோ
கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| ``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் மீது பல
கோடி மோசடி புகார் முதலீட்டாளர்கள்
முற்றுகை போலீஸ் தடியடி
சென்னை, சென்னை நிதி நிறுவனம் மீது பல
கோடி மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.
பணம் கட்டிய முதலீட்டாளர்கள் நேற்று
நிதி நிறுவனத்தை
முற்றுகையிட்டனர்.இதனால் போலீசார்
தடியடி நடத்தி கூட்டத்தினை
கலைத்தனர். |
| தமிழக மீனவர்கள் 21 பேர் கடத்தல்
இலங்கை கடற்படை அட்டூழியம் மீனவர்களை
மீட்க கோரி வேலைநிறுத்தம்
ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 21
பேரை 5 படகுகளுடன் இலங்கை
கடற்படையினர் கடத்திச் சென்றனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர். அந்த நேரத்தில் இலங்கை ராணுவத்தினர் சிறிய கப்பல்களில் அணி அணியாக வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி தமிழக மீனவர்களை நோக்கி நெருங்கி வந்தனர். அவர்களை கண்டதும் மீனவர்கள் கடலில் விரித்த வலையை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டனர். |
| உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய
அரசிற்கு அக்கறையில்லை - ஜெயலலிதா
குற்றச்சாட்டு
சென்னை, உள்நாட்டு பாதுகாப்பில்
மத்திய அரசு அக்கறையின்றி நடந்து
கொள்வதாக அதிமுக பொதுசெயலாளர்
ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது; எவ்வித தூண்டுதலும், காரணமுமின்றி பாகிஸ்தானிய ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி துப்பாக்கி சூடு நடத்துவது; ஆபத்து விளைவிக்கக்கூடிய கழிவுகளை இந்திய எல்லைக்குள் அயல்நாட்டு படைகள் குவித்து வைத்திருப்பது போன்ற அச்சம் விளைவிக்கக்கூடிய ஊடக செய்திகளுக்கு கடந்த சில நாட்களாக நாம் ஆளாகிக் கொண்டிருக்கிறோம். |
திருநாவுக்கரசர் விரைவில்
பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில்
சேருகிறார்
சென்னை, பாரதீய ஜனதா கட்சியின்
தேசிய செயலாளராக இருந்து வரும்
திருநாவுக்கரசர் விரைவில்
காங்கிரசில் இணைகிறார்.
சோனியாகாந்தியை சந்திக்க அவர் 20-ந்
தேதி டெல்லி செல்கிறார்.1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.திருநாவுக்கரசர். அவர் எம்.ஜி.ஆரால் அப்போது துணை சபாநாயகராக்கப்பட்டார். அப்போது முதல் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் பதவியில் இருந்த காலம் முழுவதும் அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் திருநாவுக்கரசர் இருந்தார். |
| இலங்கையில் தமிழர்களை மீண்டும் குடி
அமர்த்த ரூ.500 கோடியில் உதவி
கருணாநிதிக்கு, பிரதமர் கடிதம்
சென்னை, இலங்கையில் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை
மீண்டும் அவர்களது சொந்த இடத்தில்
குடி அமர்த்துவதற்கு உதவிகரமாக ரூ.500
கோடியிலான திட்டங்களை செயல்படுத்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
பிரதமர் மன்மோகன் சிங்
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- |
சிறப்புப்பகுதி
|
|
கல்வி / வேலை வாய்ப்பு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| “மலை மலை” படத்தை கண்டித்து
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சென்னை, நடிகர் அருண்விஜய், பிரபு
இணைந்து நடித்துள்ள படம் மலை மலை.
திரைக்கு வந்து 50 நாட்களுக்கு மேல்
ஆகிவிட்டன. சென்னையில் சில
தியேட்டர்களில் பகல் காட்சியாக
மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ராகுல் காந்தியை அவமதிப்பதாக கூறி இந்த படத்துக்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| சென்னை அருகே 180 ஏக்கரில் நிதி நகரம் :
ஸ்டாலின் ஆய்வு
சென்னை, சென்னை அருகே 180 ஏக்கரில் நிதி
நகரம் அமைப்பது தொடர்பாக நிலம்
தேர்வு செய்யும் பணியை துணை முதல்வர்
ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
சென்னைக்கு அருகே நிதி நகரம்
அமைப்பது தொடர்பாக சோழிங்கநல்லூர்
மற்றும் பெரும்பாக்கம் கிராமங்களில்
180 ஏக்கர் நிலம் தேர்வு செய்வது
தொடர்பான ஆய்வுப்பணியை துணை முதல்வர்
மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
செய்தார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ.
ராஜா, தொழில் துறை முதன்மைச் செயலாளர்
எம்.எஸ்.பரூக்கி, டிட்கோ தலைவர் அனிதா
பிரவீன் மாவட்ட கலெக்டர் சந்தோஷ்
கே.மிஸ்ரா, துணை முதல்வரின் செயலாளர்
தீனபந்து, டி.ஆர்.ஓ. நம்பிராஜன்
ஆகியோரும் உடன் சென்றனர். ஆய்வுப்
பணியின்போது ஸ்டாலின் நிருபர்களிடம்
கூறியதாவது: |
பன்றிக்காய்ச்சலை தடுக்க புதிய
மருந்து அமெரிக்காவில்
கண்டுபிடிப்பு
வாஷிங்டன், உலகை அச்சுறுத்தும்
பன்றிக்காய்ச்சல் நோய் எச் 1 என் 1
வைரஸ் கிருமிகளால் பரவுகிறது.
இந்நோய்க்கு உலகம் முழுவதும் இதுவரை
3,205 பேர் உயிர் இழந்துள்ளனர்.2 லட்சத்து 77 ஆயிரத்து 607 பேர் இந்நோய் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் எச் 1 என் 1 வைரஸ் கிருமிகளை கட்டபடுத்தவும், அதை தடுக்கவும் புதிய மருந்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். |
| இந்து மதம் குறித்து அன்பழகன்
விமர்சனம் : பாஜக கண்டனம்
சென்னை,: ""முஸ்லிம்களின் இஃப்தார்
விருந்தில் இந்து மதத்தை விமர்சனம்
செய்த நிதி அமைச்சர் அன்பழகனின்
செயல் கண்டனத்துக்குரியது'' என்று
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்
தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: |
| ஜனவரி 21, 22, 23, 24 தேதிகளில் உலகத் தமிழ்
மாநாடு : கலைஞர் அறிவிப்பு
சென்னை, ஜனவரி 21, 22, 23, 24 தேதிகளில் உலகத்
தமிழ் மாநாடு நடைபெறும் என்று தமிழக
முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். |
| ஜெர்மனிக்கு அல்- கொய்தா தீவிரவாதிகள்
மிரட்டல்
நிகோசியா, ஜெர்மனியில் வருகிற 27-ந்தேதி
அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த
நிலையில் அந்நாட்டு மக்களுக்கு அல்-
கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல்
விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அல்-கொய்தா தீவிரவாதி அபு தல்கா தோன்றி பேசியுள்ளான். |
பிரம்மோற்சவம் : திருப்பதி
திருமலைக்கு வரும் பக்தர்கள் முக
கவசம் அணிந்து வரவேண்டும்;கோவில்
நிர்வாகம்
நகரி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில்
பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதி
முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான
ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து
வருகிறது. பிரம்மோற்சவ ஏற்பாடுகள்
தொடர்பாக தேவஸ்தான அறங்காவலர் குழு
தலைவர் ஆதிகேசவலுநாயுடு, முதன்மை
நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ்
ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| ஜனவரிக்குள் தமிழர்கள் மீள்
குடியேற்றம் செய்யப்படுவார்கள் ;
ஐ.நா.விடம் ராஜபக்சே உறுதி
கொழும்பு, ஐக்கிய நாடுகள் சபையின்
அரசியல் செயலாளர் பாஸ்கோவே 3 நாள்
பயணமாக இலங்கை சென்றுள்ளார். சொந்த
நாட்டிலேயே அகதிகளாக பிடித்து
முகாம்களில் அடைத்து
வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் நிலை
குறித்து அவர் ஆய்வு செய்தார். வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு சென்று அவர் பார்வையிட்டார். இலங்கை வடக்கு பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணியையும் அவர் பார்வையிட்டார். |
மத்திய மந்திரி பதவியில் இருந்து
சசிதரூர் நீக்கம்?
புதுடெல்லி, விமானத்தில் சாதாரண
வகுப்பை மாட்டு தொழுவ வகுப்பு என்று
கூறிய மத்திய மந்திரி சசிதரூர் மீது
உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி
கூறி உள்ளது. இதனால் அவரது மந்திரி
பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு
இருக்கிறது.மத்திய அரசு மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி சசிதரூர், ``இனிமேல் விமானத்தில் மாட்டு தொழுவத்தில் புனித பசுக்களுடன் பயணம் செய்ய வேண்டியதுதான்'' என்று கிண்டலாக கூறினார். |
நடிகர் விஷால் மீது பட அதிபர் புகார்
சென்னை, நடிகர் விஷால் மீது, தமிழ்
திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்கத்தில், பட அதிபர் ரமேஷ் புகார்
செய்து இருக்கிறார். அதில்,
``விஷாலுக்கு கொடுத்த அட்வான்ஸ்
தொகையை திருப்பி தர உத்தரவிட
வேண்டும்'' என்று ரமேஷ்
கூறியிருக்கிறார்.தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், விஷால். இவரை வைத்து, பட அதிபர் ரமேஷ் (`போக்கிரி' படத்தை தயாரித்தவர்), `தீராத விளையாட்டு பிள்ளை' என்ற புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டார். |
| விடுதலைப்புலி போல் செயல்படும்
டைரக்டர் சீமான் மீது சட்டப்பூர்வ
நடவடிக்கை தேவை - காங் புகார்
சென்னை, டைரக்டர் சீமான் இந்திய
இறையாண்மைக்கு எதிராகவும்,
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்
செயல்படுகிறார். அண்மையில் அவர் ஒரு
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்
சொன்ன தகவல்களை வைத்து
பார்க்கும்போது தமிழகத்தில் அவர் ஒரு
விடுதலைப்புலியாகவே செயல்படுகிறார்
என்பது நிரூபணமாகி உள்ளது. அவர்மீது
சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று காங்கிரஸ் பிரமுகர் தனது புகார்
மனுவில் குறிப்பிட்டுள்ளார். |
| தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம்
தொடர் தாக்குதல் கண்டித்து
டெல்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதம்
சென்னை, தமிழக மீனவர்கள் மீது
தொடர்ந்து இலங்கை கடற்படையினர்
நடத்திவரும் தாக்குதல்களை தடுத்து
நிறுத்தத் தவறிய மத்திய அரசை
கண்டித்து டெல்லியில் 29-ந் தேதி
உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கூறியுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு
தேவை - சரத்குமார்
சென்னை, தமிழக மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் தாக்கப்படுவதை
தடுக்க மத்திய, மாநில அரசுகள் நிரந்தர
தீர்வு காண வேண்டும் என்று
சரத்குமார் கூறியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| துணை முதல்வரின் பாதுகாப்பிற்கு
சென்ற ஈரோடு பெண் போலீஸ்
சுடுகாட்டில் பிணமாக கிடந்தார்
ஈரோடு, திருப்பூர் அருகே கடந்த மாதம்
23-ந்தேதி துணை முதல்வர் ஸ்டாலின்
வருகையை ஒட்டி பாதுகாப்பு பணிக்குச்
சென்று காணாமல் போன பெண் போலீஸ்
ஜெயமணி சுடுகாட்டில் பிணமாக
கிடந்தார். இது குறித்து போலீசார்
தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். |
| தர்மபுரி மருத்துவ கல்லூரி, மாணவர்
சேர்க்கை 25-ந் தேதி சென்னையில்
கவுன்சிலிங்
சென்னை, இந்திய மருத்துவ கவுன்சில்
அனுமதி மறுக்கப்பட்ட தர்மபுரி
மருத்துவ கல்லூரிக்கு இந்த கல்வி
ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்கைக்காக
25-ந் தேதி சென்னையில் கவுன்சிலிங்
நடக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகளில் தர்மபுரியும் ஒன்று. இந்த கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர்சேர்க்கை முடிந்து ஒருவருட படிப்பை மாணவர்கள் முடித்துவிட்டனர். அவர்களுக்கு 2-ம் ஆண்டு வகுப்பு நடந்துவருகிறது. ஒவ்வொரு புதிய மருத்துவக்கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக்குழு வருடந்தோறும் ஆய்வு செய்து அந்தந்த வருடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்குவது உண்டு. |
|
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கடத்தல் - கருணாநிதி கடும் கண்டனம் சென்னை, தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் தாக்கி, கடத்தி
சென்றிருப்பதற்கு முதல்வர்
கருணாநிதி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார். முதல்வர்
கருணாநிதி தலைமையில் 2வது நாளாக
தலைமைச் செயலகத்தில் நடந்து வரும்
கலெக்டர்கள் மற்றும் போலீஸ்
அதிகாரிகள் மாநாட்டில் இக் கண்டனத்தை
முதல்வர் தெரிவித்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: |
வெளிவரத்துவங்கும் ஊழல்
பெருச்சாளிகளின் பட்டியல்…
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு
இந்தியா. 28 மாநிலங்கள், 7 யூனியன்
பிரதேசங்களை உள்ளடக்கி, ஏறத்தாழ 110
கோடிக்கும் மேலான மக்களைப் பெற்ற
நாடு… மனித ஆற்றல் நிரம்பிக் கிடக்கிற இந்நாட்டில் பொருளாதாரம் ஓங்கி விட்டது… இந்தியா வளர்ந்து விட்டது என்று பீற்றிக் கொள்கிறது அரசு. ஆனால், நமது மக்கள்தொகையில், 45 சதவீத மக்கள் இன்னும் வறுமையின் மடியில்தான் படுத்திருக்கிறார்கள் என்பது கண்கூடு. இதனைக் களைவதற்கு அரசால் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்காகவும், குறிப்பாக ஏழை வர்க்கத்தினருக்காகவும்தான் அனைத்து நலத்திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. அதனை அரசியல்வாதிகள் உருவாக்கினாலும், நமது அரசியலமைப்பின்படி அவற்றை செயல்படுத்த அரசு ஊழியர்கள் வேண்டும்… |
சிறப்புப்பகுதி
இலங்கை
கல்வி / வேலை வாய்ப்பு |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| ரம்ஜான் : கருணாநிதி வாழ்த்து
சென்னை, முதல்- அமைச்சர் கருணாநிதி
ரம்சான் வாழ்த்து செய்தியில் கூறி
இருப்பதாவது:- ஒரு மாத காலம் பசியின் வலிமையை அனுபவத்தால் உணர்ந்து உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையாக நோன்புக் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன் ரம்சான் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயம் கனிந்த ரம்சான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரிதும் உவகை அடைகிறேன். |
சென்னையில் ரவுடி கொலை : பேரூராட்சி
தலைவர் உட்பட 16 பேர் கைது
சென்னையை அடுத்த திருநின்றவூர்
பேரூராட்சி தலைவர் விச்சு என்ற
விஸ்வநாதன். துணைத் தலைவர் ரவி.
இருவரும் தொழில் முறையிலும்
நெருங்கிய நண்பர்கள். எங்கு
சென்றாலும் ஒன்றாகவே போய்
வருவார்கள்.சம்பவத்தன்று இருவரும் தங்களது ஆதர வாளர்களுடன் 3 கார்களில் லட்சுமி நகர் வழியாக வந்து கொண்டிருந்தனர். ரெயில்வே பாலம் அடியில் மர்ம கும்பல் ஒன்று ரவியின் காரில் கல்வீசி தாக்கியது. காரை நிறுத்தாமல் வேகமாக தப்பி சென்றனர். தங்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்ததாக ரவி திருநின்றவூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். |
| ``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் மீது 1000
பேர் புகார்; கோடம்பாக்கம் அலுவலகம்
முற்றுகை
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள
``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம்
ஒன்று வாடிக்கையாளர்களிடம்
கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து
மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ரூ.1 1/2 லட்சம் செலுத்தினால் 5 ஆண்டில் 5
லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறி
இந்நிறுவனம் சார்பில் விளம்பரங்கள்
செய்யப்பட்டது. இதனை நம்பி 30
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம்
கட்டி வாடிக்கையாளர் ஆனார்கள்.
இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு
கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு புகார்
மனுக்களை கொடுத்தனர். |
| திருப்பதி பிரம்மோற்சவம் நாளை
கொடியேற்றம்
நகரி, திருப்பதி திருமலை பிரம்மோற்சவ
விழா நாளை மாலை கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது. இதையட்டி பாதுகாப்பு
பணியில் 3400 போலீசார்
ஈடுபடுத்தப்படுகின்றனர். பூலோக
வைகுண்டம் என போற்றப்படும் திருப்பதி
திருமலை ஏழுமலையான் கோயிலில்
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில்
பிரம்மோற்சவ விழா விமரிசையாக
நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நாளை
மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் காலையிலும்,
மாலையிலும் பூதேவி, ஸ்ரீதேவி
தாயார்களுடன் மலையப்ப சுவாமி நான்கு
மாட வீதிகளில் வலம் வந்து
பக்தர்களுக்கு காட்சி தருவார். |
| பெண்களுக்கு எதிரான குற்றம், உடனே
கைது செய்ய வழி வகை - மத்திய அரசு
அதிரடி
புதுடெல்லி, பெண்களுக்கு எதிரான
குற்றங்களை தடுக்க மத்திய அரசு 21 அம்ச
திட்டத்தை அமல்படுத்துகிறது. இதை
உடனடியாக பின்பற்றும்படி எல்லா மாநில
அரசுகளுக்கும் அவசர கடிதம்
எழுதியுள்ளது. |
| வங்கி கடன் கிடைக்கவில்லையா?
விளக்கம் பெற புது வசதி அறிமுகம்
புதுடெல்லி, நீங்கள் அளித்திருந்த
கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்து
விட்டதா? உங்கள் கடன் வாங்கும் சக்தி
பற்றி அறிய Ôசிபில்Õ அமைப்புக்கு ரூ.142
செலுத்தி விவரம் பெறலாம். |
| நியூசி.யுடன் இன்று பயிற்சி ஆட்டம்,
முழுபலத்துடன் வெற்றி பெறுவோம் -டோனி
போட்ச்ஸ்ட்ரூம், மினி உலககோப்பை
கிரிக்கெட் போட்டி என அழைக்கப்படும்
சாம்பியன் கோப்பை போட்டி தென்
ஆப்ரிக்காவில் வரும் 22-ம் தேதி
துவங்குகிறது. இதில் இந்தியா உள்பட 8
அணிகள் கலந்துகொள்கிறது. இந்த
தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள்
தற்போது நடந்து வருகிறது. |
| 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாவட்ட தலை நகரங்களில் நவ.5-ம் தேதி
தர்ணா -அரசு ஊழியர்கள் முடிவு
கோவை, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 5-ம்
தேதி தர்ணா போராட்டம் நடத்த
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
தீர்மானித்துள்ளது. தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க வெள்ளி விழா ஆண்டு 9-வது
மாநில மாநாடு கோவையில் நடந்தது. மாநில
தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
|
| "பேஸ் புக்' பயனர்களுக்கு அமெரிக்க
அதிபர் ஒபாமா அறிவுரை
வாஷிங்டன் : "பேஸ் புக்' போன்ற சோஷியல்
நெட்வொர்க் வலைத்தளங்களில்
சுயவிவரங்கள் பதிவதில் எச்சரிக்கை
தேவை' என்று இளைஞர்களுக்கு அமெரிக்க
அதிபர் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார். இணையத்தில் ஆர்குட், பேஸ் புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட் வொர்க் வலைத்தளங்கள் ஏராளமாக செயல்படுகின்றன. பிரிந்த நண்பர்களைத் தேடுதல்; வேலைவாய்ப்புகள்; குழு விவாதங்கள்; சுயவிவரங்கள் வெளியிடுதலுக்கு இந்த வலைத் தளங்கள் உதவுகின்றன. |
| தனியார் கல்லூரிகளை அரசு ஊக்குவிக்க
வேண்டும்: விஐடி வேந்தர் விஸ்வநாதன்
சென்னை: சிறந்த கல்வியை அளிக்கும்
தனியார் கல்லூரிகளை அரசு ஊக்குவிக்க
வேண்டுமென வேலூர் விஐடி பல்கலைக்கழக
வேந்தர் ஜி. விஸ்வநாதன் கேட்டுக்
கொண்டார்.போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா
மருத்துவப் பல்கலைக்கழகத்தின்
நிறுவனர் நாள் சென்னையில் சனிக்கிழமை
நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜி. விஸ்வநாதன் பேசியது: |
| திருவாரூரில் 22-ந் தேதி அ.தி.மு.க.
ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, விவசாயிகளுக்கு தடையில்லாமல்
கடன் வழங்க கோரி திருவாரூரில் அதிமுக
நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
நடத்தப்போவதாக அக்கட்சியின் பொது
செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாகவும், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 50 நாட்களாகியும் கடை மடை பகுதிகளுக்குச் சென்றடையாததன் காரணமாகவும், ஆற்றுப்பாசனம், நிலத்தடி நீர் பாசனம் இரண்டையும் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருப்பதாகவும், உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் முதலானவை மானிய விலையில் கிடைப்பதில்லை என்றும், சென்ற ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை என்றும், கூட்டுறவுக்கடன், நகைக்கடன் ஆகியவை இன்னமும் வழங்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. |
| பழ.நெடுமாறன் தவறான தகவல்களை
பரப்புகிறார்; கருணாநிதி
சென்னை, ஈழத்தமிழர் பிரச்சனையை தவறான
தகவலகளை கூறி பழ.நெடுமாறன் திசை
திருப்புகிறார் என முதல்-அமைச்சர்
கருணாநிதி வெளியிட்டுள்ள
கேள்வி-பதில் அறிக்கையில்
கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- |
|
சிறப்புப்பகுதி
|
|
இலங்கை |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில்
வெடிகுண்டுடன் பெண் புலி கேரளாவில்
பரபரப்பு
திருவனந்தபுரம், கன்னியாகுமரி
எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுடன்
பெண் விடுதலைப்புலி வருவதாக மர்ம
போன் வந்ததால் கேரளாவில் பரபரப்பு
ஏற்பட்டது. |
| பெரியாறு புதிய அணை ஆய்வுக்கு மத்தி
அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை
கேரள அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம், முல்லை பெரியாறில்
ஆய்வு நடத்த மத்திய அரசின் அனுமதி
கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. அது
கிடைத்த உடன் ஆய்வுப்பணிகள்
தொடங்கும் என்று கேரள நீர்பாசனத்துறை
அமைச்சர் என்கே பிரேமச்சந்திரன்
கூறினார். |
| ஈரான், வடகொரியாவுக்கு அணு ஆயுத
ரகசியத்தை பரப்பியது பாகிஸ்தான்
லண்டன், அணு ஆயுத ரகசியங்களை ஈரான்,
வடகொரியா, சீனா ஆகிய நாடுகளுடன்
பாகிஸ்தான் பகிர்ந்து கொண்ட ரகசியம்
அந்நாட்டு அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான்
எழுதிய கடிதம் மூலம்
அம்பலமாகியுள்ளது. |
| பிஎஸ்எல்வி சி14 பயணம் - கவுன்ட்-டவுன்
தொடங்கியது
சென்னை, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து
பிஎஸ்எல்வி சி-14 ராக்கெட் நாளை
மறுதினம் காலை விண்ணில்
ஏவப்படுகிறது. அதற்கான கவுன்ட் டவுன்
இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. |
| தமிழகம் முழுவதும் சலூன்களுக்கு நாளை
விடுமுறை
சென்னை, தமிழ்நாடு மருத்துவர் சமூக நல
சங்கத்தின் மாநில நிர்வாகக் கூட்டம்
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்
நேற்று நடைபெற்றது. மாநில தலைவர்
எம்.நடேசன் தலைமை தாங்கினார்
பொதுச்செயலாளர் எம்.ஜி.பாக்கியநாதன்
முன்னிலை வகித்தார். நிர்வாகிகள்
கலந்துகொண்டனர். |
| ஆசிய கராத்தே போட்டி இந்திய அணி
அறிவிப்பு
சென்னை,ஆசிய கராத்தே போட்டியில்
கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்திய
அணி பங்கேற்கிறது.ஆசிய கராத்தே
சாம்பியன் போட்டி இன்று முதல் 27-ம்
தேதி வரை சீனாவில் உள்ள குவாங்சி
நகரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான
இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கராத்தே சம்மேளனத்
தலைவர் கராத்தே ஆர். தியாகராஜன்
தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது. |
| டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.1.68
லட்சம் கொள்ளை
சென்னை, மதுபானக் கடை ஷட்டரை உடைத்து
ரூ.1.68 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம
ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. |
| சிட்டி குரூப் நிதி நிறுவன வழக்கு
பொருளாதார குற்றப்பிரிவுக்கு
மாற்றம்
சென்னை, சிட்டி குரூப் நிதி நிறுவனம்
மீது 2 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதால்
வழக்கை பொருளாதாரக்
குற்றப்பிரிவுக்கு மாற்றும்படி
டிஜிபி ஜெயினுக்கு, போலீஸ் கமிஷனர்
ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். |
| 2011க்குள் அனைவருக்கும் தேசிய அடையாள
அட்டை
சென்னை, 2011 க்குள் நாட்டில்
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை
வழங்கப்படும் என சென்னையில் இன்று
உள்துறை அமைச்சர் தெரிவித்தார்: |
| விடுதலைப்புலிகள் கப்பலில்
பணிபுரிந்த இன்ஜினியர் கைது
கொழும்பு, சிங்கப்பூரில் இருந்து
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு
வந்த, தமிழ் இன்ஜினியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த ரட்ணசேகரம் என கூறப்படும் அவர். ஆரம்ப விசாரணைகளில் இருந்து கொழும்பில் உள்ள தமது உறவினரை பார்க்க வந்ததாக தெரிகிறது. |
| மும்பை தாக்குலுக்கு காரணமான ஹபீஸ்
முகமது சயீத்துக்கு வீட்டுக் காவல்-
பாக். அரசு நடவடிக்கை
லாகூர், மும்பை தாக்குதல்
சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட
ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ்
முகமது சயீத், பாகிஸ்தான் லாகூரில்
இன்று வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டார். |
நடிகை மேக்னா நாயுடு காதல் திருமணம்
சென்னை, நடிகை மேக்னா நாயுடு திருமண
நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது.சிம்புவுடன் ‘சரவணா’, சரத்குமாருடன் ‘வைத்தீஸ்வரன்’ உட்பட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை மேக்னா நாயுடு. இவரும் இந்தி நடிகர் குஷால் பஞ்சாபியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இதைப் பற்றி கேட்டபோது இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். |
| புதுவை ராஜ்யசபா தேர்தல் காங்.
வேட்பாளராக கண்ணன் அறிவிப்பு
புதுச்சேரி, தனிக்கட்சியை
கலைத்துவிட்டு சமீபத்தில்
காங்கிரசில் சேர்ந்த கண்ணனை புதுவை
ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ்
அறிவித்துள்ளது. |
| வன்னியர் கூட்டமைப்பு கருத்தரங்கில்
கலாட்டா, 15 பாமகவினர் கைது; பாமக
எம்எல்ஏமீது வழக்கு
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
திருவிழந்தூர் குருஞானசேகர் திருமண
மண்டபத்தில் நேற்று மாலை ' வன்னியர்
கூட்டமைப்பு சோழமண்டல கருத்தரங்கம்'
நடைபெற்றது, கருத்தரங்குக்கு சீனி.
கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
பாக்கம் ராமகிருஷ்ணன், ஜெயபால்,
கல்யாணசுந்தரம், டபீர் ராஜேந்திரன்,
மாணவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மாலை 5 மணியளவில் மாநில
செயல்தலைவர் சி.என்.ராமமூர்த்தி
பேசிக்கொண்டிருந்தார். |
| வன்னி முகாம்களில் இருந்து மேலும் 5320
பேர் விடுதலை
கொழும்பு, விடுதலைப்புலிகளுடன் நடந்த
இறுதி கட்ட போரின் போது இடம்
பெயர்ந்து சுமார் 2 லட்சம் தமிழர்கள்
வவுனியாவில் உள்ள முகாம்களில்
அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக
நாடுகளின் நிர்பந்தத்தின் பேரில்
இவர்கள் மீண்டும் அவர்களது சொந்த
ஊரில் குடியமர்த்தப்பட்டு
வருகின்றனர். |
| முல்லைப்பெரியாறு அணை பகுதியில்
புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்;
ஜெயலலிதா
சென்னை,முல்லைப் பெரியாறு அணையின்
குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு
கேரளா அரசு திட்டமிட்டுள்ளது
உடனடியாக இந்த அணை கட்டப்படுவதை
தடுத்து நிறுத்த வேண்டும் என
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா
விடுத்துள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:- கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஆதரவுடன் இந்தத்திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. |
| சென்னை- டில்லி துரந்தோ எக்ஸ்பிரஸ்
இயக்கம் ப.சிதம்பரம் கொடி அசைத்து
தொடங்கி வைத்தார்
சென்னை சென்ட்ரலில் இருந்து
டெல்லிக்கு புயல் வேக ரெயில்
(பாயின்ட் டூ பாயின்ட்) துரந்தோ
எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று
ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி
அறிவித்தார். திங்கட்கிழமைதோறும் காலை 6.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 10.35 மணிக்கு டெல்லி சென்றடையும். இடையில் எங்கும் நிற்காது 27 மணி நேரம் 55 நிமிடங்களில் டெல்லி செல்கிறது. |
| மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு
தொடர்பு ப.சிதம்பரம் பேட்டி
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்
26-ந்தேதி மிக கொடூரமான முறையில்
தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த
தாக்குதலுக்கு பாகிஸ்தானில்
செயல்படும் ஜமாத் உத்தவா தீவிரவாத
அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகம்மது
சயீத் மூளையாக செயல்பட்டுள்ளான். இது
பற்றி பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பல
முறை வற்புறுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. |
விடுதலைப்புலிகளை பிரிந்த யானை
தனித்திருந்து சோகம் காக்கும் அவலம்
அரசியல் அனாதைகள் என்று
கேள்விப்பட்டிருப்பீர்கள். அடைக்கல
அனாதைகள் என்பதை கேள்விப்பட்டிருக்க
முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால்
ஒருவர், தான் அன்போடு வளர்த்து வந்த
விலங்கை விட்டு சென்றால் அந்த
வளர்ப்பு பிராணி அடைக்கல
அனாதையாகிறது. வேறு ஒருவரிடம்
அடைக்க்லம் தேடி இப்படி அடைக்கல
அனாதையாகி இருக்கிறது ஆஜானுபாகுவான
'பிடி' ஒன்று.இந்த பெண் யானைக்கு பெயர் என்ன என்பது தெரியாவிட்டாலும் அது வளர்ந்த இடம் கண்ணி வெடிகள் காலைக் கவ்வும் யுத்த முனை. ஆம்... விடுதலைப்புலிகளின் மிச்ச சொச்சங்களில் இந்த பிடியும் ஒன்று... |
| ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு : 80% ஊதிய உயர்வு
புது டில்லி: மத்திய அரசில்
பணியாற்றும் கூடுதல் செயளாளர்
நிலையிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு 80%
ஊதிய உயர்வு
அளிக்கப்பட்டிருக்கிறது.ஆறாவது
ஊதியக் குழு பரிந்துரைகளின்படி ஊதிய
உயர்வு வழங்க்பட்டு இன்னும்
ஓராண்டுக்கூட நிறைவடையாத நிலையில்
,இந்த அளவு ஊதிய உயர்வு
அளிக்கப்பட்டுள்ளது. |
| தினம் தோறும் செத்த பிழைப்பு :
எம்.கே.நாராயணன் கவலை
புது டில்லி: இந்தியா சிறந்த முறையில்
தயாராக இருந்தாலும் மீண்டும் ஒரு 26/11
மும்பை தாக்குதல் வருமோ என்று
நாள்தோறும் எதிர்பார்த்து செத்து
பிழைத்து கொண்டிருப்பதாக தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்
தெரிவித்துள்ளார். |
| கோவையில் உலகத் தமிழ் மாநாட்டிற்கான
இடங்கள் தேர்வு
கோவை: உலகத் தமிழ் மாநாட்டின்
நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடங்களை
தேர்வு செய்யும் பணி
துவங்கப்பட்டுள்ளது என்று கோவை
மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்
தெரிவித்தார். இதுதொடர்பாக ஆட்சியர் உமானாத் கூறியது: |
| இலங்கை தமிழர் பாதுகாப்பு அவசியம்
:அசோக் சிங்கால் பேட்டி
சென்னை: உலக இந்துக்களைப் பாதுகாக்க
மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்
அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால்
கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் "விஸ்வ இந்து டி.வி' என்ற இணையதள தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. |
| ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு:
குளிக்கத் தடை
தருமபுரி: ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்
அருவிகளில் குளிக்க சுற்றுலா
பயணிகளுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது. |
| இன்று வட தமிழகப் பகுதிகளி இடியுடன்
கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வட தமிழகம் மற்றும்
புதுவையில் சில இடங்களில் இடி,
மின்னலுடன் கூடிய பலத்த மழை
திங்கள்கிழமை பெய்யும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: |
| முல்லை பெரியாரில் புதிய அணை : தமிழக
காங்கிரஸ் கண்டனம்
மதுரை, முல்லைப் பெரியாறில் கேரளம்
புதிய அணை கட்டுவதை ஒருபோதும்
அனுமதிக்க முடியாது என்று தமிழக
காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு
தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: |
| முகாமில் உள்ள தமிழர்களை குடியமர்த்த
தாமதித்தால்? : இலங்கைக்கு இந்தியா
எச்சரிக்கை
கொழும்பு: தமிழர்களை அகதி முகாம்களில்
இருந்து அவரவர் ஊர்களில்
குடியமர்த்தத் தாமதமானால்
தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது
ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை
இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார். |
| உள்ளாட்சி இடைத்தேர்தல் : அ.தி.மு.க.
கூட்டணியில் அதிருப்தி
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான
இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.
முடிவு செய்துள்ளது. அக்கட்சியின்
சார்பில் வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதன்
கூட்டணி கட்சிகளோ என்ன நிலை எடுப்பது
எனத் தெரியாமல் தவிக்கின்றன. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. மனுக்களை திரும்பப்பெற வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும். |
| பீகார், ஜார்க்கண்ட் தேர்தல்: லல்லுவை
கூட்டு சேர்க்க காங்கிரஸ் தலைவர்கள்
தயக்கம்
புதுடெல்லி, பீகார், ஜார்க்கண்ட்
மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில்
தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். |
| முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை:
மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில்
புகார்; கருணாநிதி அறிவிப்பு
சென்னை, முதல்-அமைச்சர் கருணாநிதி
வெளியிட்டுள்ள கேள்வி - பதில்
வடிவிலான அறிக்கையில்
கூறியிருப்பதாவது:- கேள்வி:- இலங்கைப் பிரச்சினை குறித்து தாங்கள் எழுதிய கடிதத்தையொட்டி மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?. பதில்:- பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளதோடு நிறுத்திக்கொள்ளாமல், தி.மு.க, மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து நமது கோரிக்கையை விளக்கவும் உள்ளார்கள். |
| கொல்கத்தாவில் பாகிஸ்தான் பெண்
உளவாளி கைது
கொல்கத்தா, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு
அமைப்பின் பெண் ஏஜெண்ட் ஒருவர்
இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக
டெல்லி போலீசார் நோட்டீஸ்
வெளியிட்டனர். இந்த சூழ்நிலையில், பாங்காங்கில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று வந்த ஒரு விமானத்தில் அந்த பெண் இருப்பதை குடியுரிமை துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். உடனடியாக, அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்பது தெரிய வந்தது.37 வயதான அந்த பெண்ணுக்கு ஜோதி ரானா, மெகருன்னிசா, நிஷா சர்மா ஆகிய பெயர்கள் உள்ளன. பஞ்சாப், காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தீவிரவாத இயக்கங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்வது அந்த பெண்ணின் வேலையாகும். |
| ஈரான், வடகொரியாவுக்கு அணு ஆயுத
ரகசியத்தை பரப்பியது பாகிஸ்தான்
|
லண்டன், அணு ஆயுத ரகசியங்களை ஈரான்,
வடகொரியா, சீனா ஆகிய நாடுகளுடன்
பாகிஸ்தான் பகிர்ந்து கொண்ட ரகசியம்
அந்நாட்டு அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான்
எழுதிய கடிதம் மூலம்
அம்பலமாகியுள்ளது. |
பாகிஸ்தான் அணு ஆயுதங்களின் தந்தை
என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டவர்,
விஞ்ஞானி ஏ.க்யூ கான். பாகிஸ்தான் அணு
ஆயுத திட்டங்களை வெற்றிகரமாக
முடித்தவர். ஆனால், இவர் அணு ஆயுத
ரகசியங்களை ஈரான், வடகொரியா போன்ற
நாடுகளுக்கு விற்றதாக கடந்த 2003ம்
ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு கைது
செய்யப்பட்டார். |
| கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில்
வெடிகுண்டுடன் பெண் புலி கேரளாவில்
பரபரப்பு
|
திருவனந்தபுரம், கன்னியாகுமரி
எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுடன்
பெண் விடுதலைப்புலி வருவதாக மர்ம
போன் வந்ததால் கேரளாவில் பரபரப்பு
ஏற்பட்டது. |
கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ்
கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6
மணி அளவில் ஒரு போன் அழைப்பு வந்தது.
'கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர்
செல்லும் ஐலாண்ட் எக்ஸ்பிரஸில் எஸ்-10
பெட்டியில் ஒரு பெண் விடுதலைப்புலி
இருக்கிறார். அவரது பையில்
வெடிகுண்டு இருக்கிறது' என்று
கூறிவிட்டு இணைப்பை
துண்டித்துவிட்டார். |
| ``தமிழ்ப் படங்களின் வெற்றி
குறைந்துகொண்டே வருகிறது'' கவிஞர்
வைரமுத்து கவலை
சென்னை, ``தமிழ்ப் படங்களின் தயாரிப்பு
எண்ணிக்கை அதிகமாகிறது. ஆனால்
படங்களின் வெற்றி குறைந்துகொண்டே
வருகிறது'' என்று கவிஞர் வைரமுத்து
வருத்தத்துடன் கூறினார். ஜெயம் ரவி நடித்து, எஸ்.பி.ஜனநாதன் டைரக்ஷனில், ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள `பேராண்மை' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை மந்திரி நெப்போலியன் வெளியிட, சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார். |
| தமிழர்கள் மீதான அவலங்கள் நீடித்தால்
இலங்கையில் முதலீடுகளை தவிர்க்க
வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
சென்னை, ஈழத்தமிழர்கள் மீதான அவலங்கள்
நீடித்தால் இலங்கையில் தொழில்
முதலீடு செய்யமாட்டோம் என்று மத்திய
அரசு அறிவிக்க வேண்டும் என்று
டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| முன்னாள் எம்.பி. துரை
அதிமுகவிலிருந்து நீக்கம் ஜெயலலிதா
நடவடிக்கை
சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:- |
| பிரபுதேவாவுடன் திருமணம், நயன்தாரா
நடிப்புக்கு முழுக்கு?
நடிகை நயன்தாராவுக்கும்,
டைரக்டர்-நடிகர் பிரபுதேவாவுக்கும்
இடையே காதல் இருந்து வருகிறது.
இருவரும் திருமணம் வரை
நெருங்கிவிட்டதாக தமிழ்-தெலுங்கு பட
உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவா, திருமணம் ஆனவர். அவருக்கு ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். ரமலத்தும், பிரபுதேவாவும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
| விடுதலை செய்யக்கோரி நளினி சாகும் வரை
உண்ணாவிரதம்
வேலூர், வேலூர் சிறையில் இருக்கும்
ராஜீவ் கொலைக் கைதி நளினி, தன்னை
விடுதலை செய்ய கோரி சாகும் வரை
உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார். 18 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்து வருவதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை ஆலோசனைக் கமிட்டி நிராகரித்தது. |
| பஸ் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அரசு
அறிவிப்பு
சென்னை, தமிழக அரசு போக்குவரத்து
கழகங்களின் ஊழியர்களுக்கு 20 சதவீத
போனஸ் வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 1/4
லட்சம் பேர் பயன் அடைவார்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. |
| 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 14
ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது
ஸ்ரீஹரிகோட்டா, இந்தியா கடல் தட்ப
வெப்ப நிலை மற்றும் கடல் வளங்களை
பற்றி ஆய்வு நடத்துவதற்காக ஓசியான்
சாட்-2 என்ற செயற்கைகோளை இந்திய
விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதை
பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் மூலம்
விண்ணில் செலுத்த ஏற்பாடு
செய்யப்பட்டது. இத்துடன் ஐரோப்பிய
பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 6 சிறு ரக
செயற்கைகோள்களும் சேர்த்து
அனுப்பப்பட இருந்தன. இவற்றை அனுப்ப பி.எஸ்.எல்.வி.-சி 14 என்ற ராக்கெட் உருவாக்கப்பட்டது. இது 44.4 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் இருந்தது. |
| மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து
ராமேஸ்வரத்தில், 25-ந்தேதி அ.தி.மு.க.
ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப
சென்னை, இலங்கை கடற்படையினரால் தமிழக
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை
கண்டித்து வரும் 25 ம் தேதி
ராமேஸ்வரத்தில் அதிமுக சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளார். |
| நளினி, ராபர்ட் பயசை விடுதலை செய்ய
வேண்டும் வைகோ கோரிக்கை
சென்னை, வேலூர் சிறையில் இருக்கும்
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள்
என கருதப்படும் “நளினி, ராபர்ட் பயசை
விடுதலை செய்ய வேண்டும் என ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார். வேலூர் மத்திய சிறையில் 18 ஆண்டுகளாக வாடி வதங்கும் சிறைவாசிகளான ராபர்ட் பயஸ், நளினி ஆகியோர் தங்களை விடுவிக்கக் கோரி, காலவரையற்ற உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டு உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களை எல்லாம் தமிழக அரசு விடுத்து வருகிறது. ஆனால் நளினி, பயஸ் இருவரையும் 18 ஆண்டுகளாக அடைத்து வைத்து இருப்பது அவர்களுடைய வாழ்க்கையை நரக வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. |
| இலங்கை தமிழர்களின் நலன் குறித்து
இந்திய அரசு நடவடிக்கை
எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம்
ஜெயலலிதா
சென்னை, இலங்கை அரசு தமிழர்களை
கவுரவத்துடன் நடத்த இந்திய அரசு
நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும்
போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும்
என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| கேரளாவில் புதிய அணை கட்ட தமிழக
அரசின் ஒப்புதல் தேவையில்லை கேரள
நீர்ப்பாசனத்துறை மந்திரி
திருவனந்தபுரம், கேரளாவில் புதிய அணை
கட்ட தமிழக அரசின் ஒப்புதல்
தேவையில்லை என்று, கேரள
நீர்ப்பாசனத்துறை மந்திரி
என்.கே.பிரேமச்சந்திரன்
கூறியுள்ளார். தமிழ்நாடு எல்லையை யொட்டி கேரளாவுக்கு சொந்த மான இடத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து உள்ளது. மதுரை, தேனி உள்பட தமிழகத்தின் தென் மாநில விவசாய நிலங்களின் நீர்ப்பாசன ஆதாரமாக இந்த அணை விளங்குவதால் தமிழக அரசு இந்த அணையை பராமரித்து வருகிறது.. |
| பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம்
போனஸ் தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, பொதுத்துறை ஊழியர்களுக்கு 10
சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
நயந்தாராவை எங்கே பார்த்தாலும்
அடிப்பேன் - நடிகர் பிரபு தேவா மனைவி
பேட்டி
சென்னை, என் 2 குழந்தைகளின்
நல்வாழ்வுக்காக, நயன்தாராவின்
மாயவலையில் இருந்து என் கணவரை
மீட்க வேண்டும்'' என்று
பிரபுதேவாவின் மனைவி ரமலத்
கண்ணீர்மல்க கூறினார்.நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவுக்கும் இடையே காதல் இருந்து வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (1 1/2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். |
| சீனாவில் இருந்து இறக்குமதி
செய்யப்பட்ட தரமற்ற விளையாட்டு
பொம்மைகள் பறிமுதல்
சென்னை, சீனாவில் இருந்து இறக்குமதி
செய்யப்பட்ட ரூ.5.50 கோடி மதிப்புள்ள
தரமற்ற குழந்தைகளின் விளையாட்டு
பொம்மைள் வந்த 45 கண்டெய்னர்கள்
சுங்கத்துறையினரால் பறிமுதல்
செய்யப்பட்டது. இதுகுறித்து நிருபர்களுக்கு சுங்கத்துறை கமிஷனர் (துறைமுகம்-இறக்குமதி) சி.ராஜன் அளித்த பேட்டி வருமாறு:- |
| அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி
உயர்வு - தமிழகஅரசு அறிவிப்பு
சென்னை, தமிழக அரசு அலுவலர்களுக்கும்,
ஓய்வூதியதாரர்களுக்கும் 5 சதவீதம்
அகவிலைப்படியை உயர்த்தி
முதல்-அமைச்சர் கருணாநிதி
உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம்
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.955 கோடி
கூடுதலாக செலவாகும். |
| இலங்கை முகாம்களின் நிலையை நேரில்
கண்டறிய இலங்கைக்கு தமிழக
எம்.பி.க்கள் குழு
புதுடெல்லி,இலங்கை தமிழர் பிரச்சினை
தொடர்பாக, தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள்
நேற்று டெல்லியில் பிரதமர்
மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி
ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, இலங்கையில் முகாம்களில்
உள்ள தமிழர்களின் நிலையை நேரில்
கண்டறிய தமிழக எம்.பி.க்கள் குழுவை
மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்
என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் அங்கு போர் முடிந்த பிறகும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். |
|
தமிழகம்
|
| கரும்பு விலை, டன்னுக்கு ரூ. 1550 ஆக
உயர்வு: கருணாநிதி அறிவிப்பு
சென்னை, அதிக பிழி திறன் கொண்ட
கரும்புக்கு விலை உயர்வு தமிழக அரசு
அறிவிப்பு:- |
| ரூ.1,500 கோடி முதலீட்டில் போர்டு கார்
தொழிற்சாலை விரிவாக்கம்; கருணாநிதி
முன்னிலையில் ஒப்பந்தம்
சென்னை, அமெரிக்க நாட்டின் போர்டு
மோட்டார் கார்ப்பரேஷன்
நிறுவனத்திற்கு சொந்தமான போர்டு
இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம்
1996-ம் ஆண்டில் சென்னைக்கு அருகில்
மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில்
கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றினை
நிறுவி, ஏறத்தாழ 2100 தொழிலாளர்களை
நியமனம் செய்து போர்டு ஐகான், போர்டு
என்டவர், போர்டு ப்யூஷன் மற்றும்
போர்ட பியஸ்டா ரக கார்களைத்
தயாரித்து வருகிறது. |
| தமிழ்நாடு காகித நிறுவன
ஊழியர்களுக்கு தங்க காசு
சென்னை, தமிழ்நாடு செய்தித்தாள்
காகித நிறுவனத்தின் மேலாண்மை
இயக்குனர் முகமது நசீமுத்தீன்
வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறி
இருப்பதாவது:- |
| சிட்டி லிமோனியர் நிறுவன மேனேஜர் கைது
சென்னை, சிட்டி குரூப் நிதி
நிறுவனத்தின் மேனேஜர் முகமது நேற்று
கைது செய்யப்பட்டார். அவரிடம்
போலீசார் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர். சிட்டி குரூப் நிறுவன
சொத்துக்களை முடக்க பொருளாதாரக்
குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
எடுத்து வருகின்றனர். |
| காஷ்மீர் பகுதியில் 2 தீவிரவாதிகள்
சுட்டுக் கொலை
ஸ்ரீநகர், காஷ்மீரில் குல்காம்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 2
தீவிரவாதிகளை ராணுவத்தினர் இன்று
காலை சுட்டு கொன்றனர். |
| வேட்டைக்காரன் பாடல் வெளியீடு
சென்னை, வேட்டைக்காரன் படத்தின் பாடல்
வெளியீட்டு விழா, சென்னையில்
பிரமாண்டமாக நடந்தது. விஜய் - அனுஷ்கா நடிப்பில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் படம் வேட்டைக்காரன். பாபுசிவன் இயக்கியுள்ள இப்படத்துக்கு விஜய் ஆன்டனி இசை. கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா, சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதற்காக விழா மேடையில் வெள்ளை குதிரையில் அமர்ந்து கவ்பாய் காஸ்ட்யூமில் விஜய் பாய்ந்து வருவதுபோன்ற பின்னணி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் பல கெட்டப்பில் விஜய்யின் பேனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாடல்களின் சி.டி.யை டைரக்டர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார் வெளியிட, விழாவில் பங்கேற்ற நட்சத்திர வி.ஐ.பி.க்கள் பெற்றுக்கொண்டனர். |
| உடற்கல்வி ஆசிரியர் தகுதி பட்டியல்
வெளியீடு
சென்னை, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி
முடித்து வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்து
காத்திருப்போரில், வேலைக்கு தகுதி
உள்ளவர்களின் பட்டியலை ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. |
| இறக்குமதிக்கு தடை , வளர்ந்த நாடுகள்
கைவிட வேண்டும் -ஜி-20 மாநாட்டில்
வலியுறுத்த மன்மோகன் முடிவு
புதுடெல்லி, உலக பொருளாதார
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக
அமெரிக்காவில் நடைபெறும் ஜி-20
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று
அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
வளர்ந்த நாடுகள் சுய வர்த்தக
பாதுகாப்பு கொள்கையை கடைபிடிப்பதை
எதிர்த்து மாநாட்டில் குரல்
எழுப்புவேன் என்று பிரதமர் மன்மோகன்
சிங் கூறினார். |
| 3 ஆண்டு பி.எல். படிப்பு கவுன்சலிங்
தொடக்கம்
சென்னை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு
பிஎல் படிப்பிற்கான 2009-2010ம் ஆண்டு
மாணவர் சேர்க்கை வரும் 25ம் தேதி
தொடங்குகிறது. |
| கூவம் சுத்தப்படுத்தும் திட்டம் அமல்,
தமிழகஅரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை, கூவம், அடையாறு ஆறுகள்
சுத்தப்படுத்தும் திட்டத்தை
அமல்படுத்துவது குறித்து பதில் மனு
தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு
ஐகோர்ட் உத்தரவிட்டது. |
| நிலம் மோசடி, ஒட்டப்பிடாரம்
சப்-ரிஜிஸ்திரர், பத்திர எழுத்தர்
கைது
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்
பகுதியில் 995 ஏக்கர் நிலம் மோசடியாக
விற்பனை செய்யப்பட்ட வழக்கில்
கடம்பூர் சப்-ரிஜிஸ்திரர்,
விருதுநகரைச் சேர்ந்த பத்திர
எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| மின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அரசு
அறிவிப்பு
சென்னை, மின்வாரிய ஊழியர்களுக்கு 20
சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை
வழங்கப்படும் என்று அமைச்சர் ஆற்காடு
வீராசாமி அறிவித்தார். |
நடிகை சினேகாவிடம் “சில்மிஷம்' நிதி
நிறுவன அதிபருக்கு அடி உதை
திருச்சி, திருச்சி சின்னகடை
வீதியில் செயல்படும் பிரபல நகை கடை
ஒன்றின் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று
நடந்தது. இதில் நடிகை சினேகா கலந்து
கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு
இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று
காலையே சின்னகடைவீதியில் ஏராளமான
ரசிகர்களும், பொது மக்களும் கூடினர்.
சுமார் 11 மணி அளவில் நடிகை சினேகா
சுடிதார் அணிந்து நகைக் கடைக்கு
வந்தார். அப்போது அங்கு அவரை பார்க்க
ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்தனர்.அப்போது கூட்டத்தில் சிக்கிய சினேகாவின் இடுப்பை வாலிபர் ஒருவர் கிள்ளி “சில்மிஷம்” செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
| நிலவில் தண்ணீர்: சந்திரயான்
கண்டுபிடிப்பு
புதுடெல்லி, இந்தியா அனுப்பிய
சந்திரயான் செயற்கைக்கோள்
செயலிழப்பதற்கு முன்பாக, நிலவில்
தண்ணீர் இருப்பதை பற்றிய முக்கிய
தகவலை அனுப்பியிருப்பதாக
கூறப்படுகிறது. இதுகுறித்த முக்கிய
தகவலை அமெரிக்காவின் நாசா மையம்
இன்று வெளியிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. நிலவு பற்றிய ஆராய்ச்சிக்காக சந்திரயான்-1 செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த அக்டோபர் 22-ம் தேதி அனுப்பியது. சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான், நிலவின் மேற்பரப்பை படங்களாக எடுத்து அனுப்பியது. அதன்மூலம் நிலவில் இருக்கும் கனிமங்கள் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். |