தினம் ஒரு பாடல்

165 views
Skip to first unread message

AKR

unread,
Dec 4, 2009, 1:15:24 PM12/4/09
to tamila...@googlegroups.com
சிறிது காலத்துக்கு முன்னர் வரை நம் நாட்டில் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பின்னர் இல்லத்தரசிகளாகவே வாழ்ந்தனர். குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் கடமை அவர்களது கணவன்மார்களையே சேர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் ஒருவனது வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழித்து, தங்களது குழந்தைகளையும் ஆளாக்க முடிந்த நிலை நிலவியதேயாகும். பின்னர் உருவான அரசியல் சமுதாய சூழ்நிலைகளினால் விலைவாசி பரமபதப் பாம்பு போல் ஏறிய காரணத்தாலும், ஆடம்பரமாக வாழ வேண்டுமெனும் ஆசையினாலும் ஆண், பெண் இரு சாராரும் பணிக்குச் செல்வதும் திருமணமான பின்னரும் கணவன், மனைவி இருவரும் அலுவல் செய்து குடும்ப நிர்வாகத்துக்கான பொருளீட்டுவதும்  வாடிக்கையாகி விட்டன. இருப்பினும் இக்காலத்திலும் பல பெண்கள் திருமணம் முடிந்த பின்னர் இல்லத்தரசிகளாக வாழ்க்கை நடத்துவதையே பெரிதும் விரும்பி ஏற்கின்றனர்.
 
இத்தகைய பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்களிடத்தில் காதல் கொண்டால் அவர்களது மனதில் எழும் எண்ணங்கள் பெரும்பாலும் தம் கணனுடன் சேர்ந்து இல்லற வாழ்வை இன்பமாகச் சுவைப்பதிலேயே இருப்பது வழக்கம். காதலித்தவனைக் கைப்பிடிக்க இயலாத சூழல் உருவானால் அத்தகைய பெண் வருத்தமுற்று வாடுவதும் பெரும்பாலும் தான் விரும்பிய ஆடவனுடன் சேர முடியவில்லையே எனும் ஏக்கத்தினாலேயே ஏற்படுகிறது.
 
 
படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா
ஆண்டு: 1962
 
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
 
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது
 
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
 
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 5, 2009, 3:49:04 PM12/5/09
to tamila...@googlegroups.com
திரைப்படங்களுக்குத் திகில் கதை எழுதித் தாயாரிப்பதில் ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள் மிகவும் முயற்சியெடுத்து அதற்காக விசேஷமான அரிதாரம், காட்சியமைப்புகள் எனப் பல விதத்திலும் மிகவும் பாடுபட்டு, நிறைய செலவு செய்து தயாரிப்பார்கள். நம் இந்தியத் தயாரிப்பாளர்கள் மிகவும் புத்திசாலிகள். இத்தகைய அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, மிகவும் எளிய முறையில் இத்தகைய திகில் கதைகளை எழுதிப் படமாக்கி விடுவார்கள். இதற்கு இவர்கள் கடைபிடிக்கும் தொழில் நுட்பம் ஒரு பெண்ணுக்கு வெள்ளைச் சேலையைக் கட்டி விட்டு இரவு நேரத்தில் நிழலும் ஒளியும் கலந்த சூழ்நிலையில் நடமாட வைத்து, காட்சிக்கேற்றாற்போல் இசையமைத்து அசத்திவிடுவதே.
 
 
திரைப்படம்: அதே கண்கள்
இயற்றியவர்: தெரிந்தால் தெரிவியுங்கள்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1967
 
ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ
 
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா
 
பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒரு
நிழல் போலே அது நடந்து வரும்
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கண்ணும் கனிந்துருகும்
 
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா
 
சிறைக் கதவை ஏன் திறக்கவில்லை? - நீ
விடுதலையே கொடுக்கவில்லை
நானிருப்பேன் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு குரல் கொடுத்தே நிதம் அணைத்திருப்பேன்
 
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 6, 2009, 3:53:40 PM12/6/09
to tamila...@googlegroups.com
நமது நாடு வெள்ளையரிடமிருந்து சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை. ஒரு சாரார் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிற மக்களைச் சுரண்டிப் பண முதலைகளாக மிக ஆடம்பரமாக வாழ்கையில் மற்றொரு சாரார் அன்றாடம் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்றனர். கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு முதலான பாதகங்கள் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணமாகவே தைரியமாக இத்தகையோரால் அனுதினமும் நடைபெறுவது சகஜமாகிவிட்டது.
 
பெண் விடுதலை பற்றி அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும் சமுதாய அக்கரை கொண்ட பல தலைவர்கள் தொடர்ந்து
எடுத்துரைத்து, பெணகளுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டி வருகின்ற போதிலும், நம் நாட்டில் பல பெண்களை ஏமாற்றி அவர்களது பெண்மையைச் சூரையாடுவதுடன் அவர்களை மாடுகளுக்கொப்பாகக் கருதி விலைமாதர்களாக விற்று விடும் கொடுமைகளும் பகிரங்கமாகப் பல நகரங்களில் தினமும் நடைபெறுவதை அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்த போதிலும், இக்கொடுமைகளைத் தடுக்கவும் இதில் பாதிக்கப் பட்ட பெண்ணினத்தைக் காக்கவும் ஒருவரும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.
 
இருப்பினும் நாட்டு மக்களிடையே பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கு மறுவாழ்வளித்துக் காத்து வருகின்றனர். ஒரு விபத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டு தன் சுய நினைவுகளை இழந்த நிலையி்ல் விலைமாதாக விற்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றிய நமது இன்றைய பாடலின் நாயகன் அவளைப் போற்றிப் பாதுகாத்து, அவளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கச் செய்து, அவள் சுயநினைவை அடைய வழி கோலுகிறான், அவள் மேல் காதலும் கொள்கிறான். சுயநினைவடைந்த பின்னர் அப்பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டாளா? அவனை ஏற்றுக் கொண்டாளா?
 
விடை சொல்கிறது மூன்றாம் பிறை.
 
 
திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982
 
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
 
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது
 
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
 
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி
 
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 7, 2009, 12:30:06 PM12/7/09
to tamila...@googlegroups.com
சாதாரண மனிதனின் தேவைகளுக்கும் அவனது வருவாய்க்கும் இடைவெளி என்றுமே மிக அதிகம். "அன்றாடங்காய்ச்சி" என்று அழைக்கப்படும் ஏழை வர்க்கத்துக்கு தினமும் வயிற்றுப் பசிக்கு சோறு கிடைத்தாலே போதும் எனும் எண்ணம் இருக்கும். நடுத்தர வர்க்கத்தாருக்கு, உணவு, உடை, இருப்பிடம் உட்படப் பல விதமான செலவினங்களையும் பூர்ததி செய்ய வேண்டியுள்ளது. மேல்மட்ட வர்க்கத்தாருக்கு இருக்கும் பணம் போதாது மேலும் மேலும் பணம் ஈட்ட வேண்டுமென்னும் தேவை. இவர்களுள் நடுத்தர வர்க்கத்தார், அதிலும் குறிப்பாக மாத சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலைமை என்றுமே தருமசங்கடமானதாகும்.
 
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி என்று வரும், கடும்பத் தலைவரின் சம்பளம் வந்தவுடன் அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதும், முதல் தேதி வந்து சம்பளம் கிடைதத பின்னர் ஒரு சில தினங்களுக்குள்ளே சம்பளத் தொகை முழுவதும் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போவதும், அடுத்த மாதம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது.
 
இவர்களுள் சிலர் பல சமயங்களில் கல்வி, மருத்துவ சிகிச்சை முதலிய எதிர்பாராத செலவினங்களினால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதும்  சகஜமாகவே நிகழ்கின்றது.
 
 
திரைப்படம்: முதல் தேதி
இயற்றியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
ஆண்டு: 1955
 
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
 
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே
 
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
 
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
 
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே
 
கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே
 
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே
எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே
 
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 8, 2009, 3:01:24 PM12/8/09
to tamila...@googlegroups.com
கோகுலத்துக் கண்ணன் புல்லாங்குழலெடுத்து இசைமழை பொழிய, கோபியர்கள் யாவரும் தம்மை மறந்திடுவராம். இந்தக் கதை உண்மையோ என்னவோ தெரியாது, ஆனால் புல்லாங்குழல் இசையை யார் வாசிக்கக் கேட்டாலும் சாதாரணமாக இசையில் மயங்காதவர் மனங்களும் மயங்கும். அத்தகையதொரு இனிமை புல்லாங்குழலுக்குண்டு.
 
அது சரி, கண்ணன் தற்காலத்தில் நேரில் வருவதுண்டோ? உண்டு என்பது போல் அமைந்ததொரு கிராமத்துக் கதையில் கததாநாயகியின் மனதில் ஒரு இனிய கீதம் அடிக்கடி இசைக்க, அதில் மயக்கமுற்று ஒரு புதுவிதமான உணர்ச்சியில் தத்தளிக்கும் அவளது மனதின் ராகத்தைப் புல்லாங்கழலில் யாரோ வாசிக்க, ஒரு நாள் அவள் மெய்யாகவே தன் காதால் கேட்கிறாள். தன் இதயத்தின் ஆழத்தில் இருக்கும் ராகத்தை இசைப்பது யார் என ஆவலுடன் தேடி ஓடுகிறாள். அவளது மனம் கவர்ந்த ராகத்தைத் தனது புல்லாங்குழலில் இசைத்துக்கொண்டு ஒரு அழகிய வாலிபன் செல்லக் காண்கிறாள். அவள் அவ்விளைஞனைக் கண்டு பேசித் தன் காதலைக் கூறினாளா? அவன் உண்மையாகவே கண்ணன் தானா? அவளை அவன் மணந்தானா? மகிழ்வான வாழ்வு தந்தானா?
 
இக்கேள்விகளுக்கு விடை காணக் கவிக்குயில் திரைப்படம் பார்க்க வேண்டும்.
 
 
திரைப்படம்: கவிக்குயில்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எம். பாலமுரளி கிருஷ்ணா
ஆண்டு: 1977
 
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
 
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி - என்றும்
காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை - அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
 
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
 
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா - உன்
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்
 
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 9, 2009, 2:54:07 PM12/9/09
to tamila...@googlegroups.com
பசுவின் பாலைக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருமே தினந்தோறும் அருந்துகிறோம், அது தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவாக விளங்குகிறது. பாலாக அருந்துவதுடன் தயிர், மோர், வெண்ணை, நெய், பாலாடைக் கட்டி (cheese), பனீர் (paneer), பால்கோவா, ரசகுல்லா முதலிய பலவிதமான சுவை மிகுந்த உணவுப் பொருட்களையும் பாலிலிருந்து தயார் செய்து அருந்தி மகிழ்கிறோம். பாலைத் திட நிலைக்கு மாற்றி அதனைப் பால் பவுடராக மாற்றிப் பல காலம் கெடாத வண்ணம் பாதுகாத்து, நீரில் கலந்து அருந்துகிறோம், குழந்தைகளுக்கான பல உணவுப் பொருட்களில் (baby food) பால் பவுடர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
இத்தனை அரிய குணமுள்ள மதிப்பு மிக்க உணவான பாலை நமக்குத் தரும் பசுவை கோமாதா எனக் கொண்டாடுகிறோம். பசுவின் பாலை ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்துகிறோம். வருடந்தோறும் பொங்கலன்று பசு மாடுகளுக்கு அலங்காரம் செய்து பூஜித்து வழிபடுகின்றோம். ஆனால் நாம் உண்மையிலேயே பசுவை மதிக்கிறோமா என்று அறிவுபூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது, காரணம் பசுவின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறித்து, அதன் கன்றை ஏமாற்றி அதன் பாலை நாம் களவாடுகிறோம். ஒவ்வொரு முறையும் அப்பசுவைக் கருத்தரிக்கச் செய்கையில் அதனை நாமெல்லோரும் அனுபவிப்பது போல ஒரு காளைமாட்டுடன் சேர்த்து இயற்கையாக அதற்குக் கிடைக்க வேண்டிய காதலின்பத்தை அளிக்க மறுதது, செயற்கையாக அதனைக் கருத்தரிக்கச் செய்கிறோம்.
 
ஒரு கறவை வற்றியதும் தக்க இடைவெளி விடாது மறு கறவைக்கு அதனைக் கருத்தரிக்கச் செய்கிறோம். இவ்வாறு அது அடுக்கடுக்காகக் கன்றுகள் ஈன்று, தன் ரத்தத்தையெல்லாம் பாலாக்கி நமக்களித்த பின்னர் இறுதியில் இனியும் அப்பசு கருத்தரிக்க லாயக்கற்றது எனும் நிலையை அடைகையில் அப்பசுவை "அடிமாடாக" விற்று விடுகிறோம். இத்தகைய அடி மாடுகள் பசி பட்டினியுடன், லாரிகளிலும் கால்நடையாகவும் கேரளம் போன்ற இடங்களுக்கு இட்டுச் செல்லப் பட்டு அங்கே கொல்லப்படுகின்றன. கொன்று கிடைக்கும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் உள்நாட்டிலும் அதை உணவாக சமைக்கும் உணவு விடுதிகளுக்கு விற்கிறோம்.
 
பசுவிற்கு நாம் செய்யும் இத்தகைய கெடுதல்களால் மனிதராக இருக்கவே நாமெல்லோரும் லாயக்கற்றவர்களாகிறோம். குறைந்த பட்சம் கறவை வற்றிய பசுக்களைக் கொல்லாது அவற்றை உணவளித்துப் பராமரிக்க வேண்டும். நம்மால் முடியவில்லையெனில் இத்தகைய பணியைச் செய்யும் "கோசாலா" எனும் இடங்களைக் கண்டறிந்து அங்கே அவற்றைச் சேர்க்க வேண்டும். மனிதத்தன்மையை சிறிதேனும் காக்க இது வழிகோலும்.
 
 
திரைப்படம்: எங்க ஊருப் பாட்டுக்காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ
 
பட்டுப் பட்டுப் பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு வாசம் வரும் மல்லிகையும்
தொ்ட்டுத் தொட்டு நான் கறக்க துடிக்குதந்த ஷெண்பகம்
 
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
 
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதியாச்சு என் மனம் தானா பாடி்டலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்னைப் பின்னாலே
எப்போதும் உன்னைத் தொட்டுப் பாடப் போறேன் தன்னாலே
 
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
 
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலைமுடி தானோ?
இழுத்தது என்ன பூவிழி தானோ?
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக் காரன் பாட்டு ஒன்னை விட்டுப் போகாது
 
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 12, 2009, 12:09:36 PM12/12/09
to tamila...@googlegroups.com
வாழ்க்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதனை எப்படி வாழ்வது என்பது நம் கையிலேயே உள்ளது. அளவோடு ஆசைப்பட்டு, உலகில் எங்கும் நிறைந்திருக்கும் இன்பங்களை முழுமையாக சுவைத்து, அனைவருடனும் அன்புடன் பழகி எந்நாளும் இன்புற்றிக்க வேண்டும். எப்பொழுதும் முகமும் அகமும் மலர்ந்து சிரித்து வாழ வேண்டும். பிறரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்வில் துன்பங்கள் நம்மை மீறி வந்தெய்துகையில் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் முயற்சியில் பெரும்பான்மையான நேரம் செலவாகிய பொழுதும், மீதமிருக்கு சொற்ப நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்றவாறு, தரமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப் படும் திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டும். 
 
தற்காலக் கல்வி முறை குழந்தைகளை இயந்திர கதியில் இயங்க வைப்பதால் அவர்களுக்கும் தக்க பொழுது போக்காக இத்தகைய திரைப்படங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பை அளிக்க வேண்டும். திரைப்படங்களில் நகைச்சுவை மிகுந்து இருத்தல் சிறப்பு. திரைப்படங்களுள் பல முழு நீள நகைச்சுவைச் சித்திரங்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் சிறந்த திரைப்படங்களுள் ஒன்று காதலிக்க நேரமில்லை. அக்காலத்தில் பெரும்பாலும் கருப்பு வெள்ளைப் படங்களே மிகுதியாகத் தயாரிக்கப் பட்ட நிலையில் இது ஒரு மூழு நீள ஈஸ்ட்மென் கலரில் வெளியானது. எத்துணை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்ட வல்ல திரைப்ப்டம் இது. படம் முக்காலே மூணு வீசம் பொள்ளாச்சியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைத்திருக்கும் ஆளியார் அணைக்கட்டுப் பகுதியிலேயே தாயாரிக்கப் பட்டது. சிறந்த கதையம்சத்துடன், தரமான காதல் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் கொண்டு இனிமையான பாடல்களுடன் அமைந்தது இப்படம்.
 
 
திரைப்படம்: காதலிக்க நேரமில்லை

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1964
 
என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
என்ன பார்வை உன்தன் பார்வை 
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக் 
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
 
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு 
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு 
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை 
எண்ண எண்ண அம்மம்மா ஹோய்
 
கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு 
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ?
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும் 
இன்பம் என்ன சொல்லம்மா ஹோய்
 
என்ன பார்வை உன்தன் பார்வை 
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக் 
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
 
மை கொண்ட கண்கள் மெல்ல மூடும் 
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
மை கொண்ட கண்கள் மெல்ல மூடும் 
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக் 
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா ஹோய்
 
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் 
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் 
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை 
வெட்கம் என்ன சொல்லம்மா ஹோய்
 
என்ன பார்வை உன்தன் பார்வை 
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து 
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
 
ஆகிரா
_________________________
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 13, 2009, 1:08:34 PM12/13/09
to tamila...@googlegroups.com
நமது உடலில் நாம் மிகவும் இன்றியமையாததாய்க் கருதும் உறுப்பு கண்ணேயாகும். இதனாலேயே நாம் மிகவும் உயர்வாக எண்ணும் எதனையும் நம் கண்ணுக்கு நிகராகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் கருத்து நிலவுகிறது, நாம் பெற்ற பிள்ளையைக் "கண்ணே, கண்மணியே" எனக் கொஞ்சி மகிழ்வதும், கல்வியைக் கண்ணுக்கு நிகராகக் கொண்டு,
 
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று ஔவையார் தனது கொன்றை வேந்தன் கவிதைத் தொகுப்பில் கூறியதும்,
 
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்
 
என்று வள்ளுவர் உரைத்த பொன்மொழியும் இக்காரணம் கொண்டே.
 
நம்மிடையே கண் பார்வையின்றித் தவிப்போர் பலரும் வாழ்கின்றனர். பார்வையின்மைக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று கண்ணின் பாவையை மூடியிருக்கும் கருப்பு நிறத்திலான Cornia எனும் கருவிழி சேதமுற்றிருப்பதாகும். அதிர்ஷ்டவசமாக இக்காரணத்தால் பார்வை இழந்தவர்கள் வேறொருவரது கருவிழியை தானமாகப் பெற்றுக் கண்பார்வை பெற வாய்ப்பிருப்பதால், நம்மில் பலர் தமது கண்களை இத்தகையவர்களுக்கு தானமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டு நாளடைவில் மேலும் அதிகப் படியானோர் கண்தானம் செய்ய முனவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
கண்தானம் செய்த ஒருவரது கண்களிலிருந்து கருவிழிகளை மட்டும், அவர் இறந்த சிறிது நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவற்றை முறைப்படி கருவிழிகள் பாதிக்கப்பட்டதால் பார்வையிழந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, கண் பார்வை கிடைக்கச் செய்கின்றனர்.
 
நாம் உயிருடனிருக்கையில் வேறு தான தருமங்கள் செய்கிறோமோ இல்லையோ, இறந்த பிறகாவது தானம் செய்வோமே. நமது கண்கள் நாம் இறந்த பின்னரும் தொடர்ந்து உலகத்தைப் பார்க்க வைக்க ஒரே வழி கண்தானமே.
 
 
திரைப் படம்: காசி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
ஆண்டு: 2001
 
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
 
உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு
 
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
 
இறைவனிடம் வரங்கள் கேட்டேன் வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில்............ இதை யாரும் அறிவாரோ?
நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ?
பூமியில் இதை யாரும் உணர்வாரோ?
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்?
 
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
 
பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டேயாகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே
வாழ்க்கை எனும் மேடை தனில் நாடகங்ககள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி
 
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
 
உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு
 
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

sri balamurali

unread,
Dec 14, 2009, 2:33:00 PM12/14/09
to tamila...@googlegroups.com
எனக்கு மிகவும் பிடித்த அருமையானதொரு பாடல்.

--
தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!



--
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
www.vetrinadai.blogspot.com
http://groups.google.com/group/tamilamutham?hl=ta

AKR

unread,
Dec 15, 2009, 2:58:01 PM12/15/09
to tamila...@googlegroups.com
நாம் ஒவ்வொருவாரும் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் குழந்தைப் பருவத்தில் கழியும் சில காலம் நம் கண் முன்னே நிகழும் நிகழ்ச்சிகளோ, பிற புலன்களால் உணரும் விஷயங்களோ நாம் வளர்ச்சியடைந்த பின்னர் நம் நினைவுக்கு ஒரு போதும் வருவதில்லை. குழந்தைப் பருவத்தில் ஆணவ மலம் இருப்பதில்லை, உலகிலுள்ள அனைவருடனும், அனைதது ஜீவராசிகளுடனும், இயற்கையுடனும் மிகவும் இயைந்து வாழும் தன்மை அப்போது நிலவுகிறது. வளர்ச்சியடைந்த பின் ஒவ்வொருவருக்கும் ஆணவம் மேலிடுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தமது உடலைத் தானாக உணர்ந்து நான் எனும் உணர்வுடன் எனது எனும் உணர்வும் வளருகின்றது.
 
இத்தகைய மன மாற்றத்தினால் சுயநல உணர்வு மிகுந்து பிறரிடம் போதிய அன்பு செலுத்தத் தவறுவதுடன், உலகிலுள்ள பொருட்களில் சிறப்பு மிக்கவை யாவும் தன்னையே சேர வேண்டுமெனும் பேராசையையும் வளர்த்துக் கொள்கிறோம். இக்காரணத்தால் பலர் தரும நெறி தவறி முறையற்ற வழிகளில் பிறரை ஏமாற்றி வாழவும் தயங்குவதில்லை. இத்தகைய மன நிலையுடன் வாழ்பவர் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் திரும்பத் திரும்பப் பாபங்கள் பலவற்றைத் தொடர்ந்து செய்கின்றனர். ஆன்மிக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஒருவரின் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்பது இயற்கை நியதி. பாவ மன்னிப்பு என்பது இயற்கைக்கு முரணானது, உண்மையில் கிடைக்காது. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது.
 
பாபம் செய்யச் செய்ய, கர்ம வினையால் ஒருவர் இறந்த பின்னர் திரும்பவும் பிறப்பெடுத்து முற்பிறவியில் தான் செய்த பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டால் மாயையால் நமது ஐம்புலன்களும் கட்டுண்ட நிலையில் நமது அறிவு குறைந்து விளங்குவதால் நமக்கு எடுத்துச் சொல்லி விளங்காது. நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும் எனும் சாதாரண உலக நீதியே இவ்விடத்திலும் செயல்படுகிறது என்பதை உணர்வால் அறிந்து அதற்கொப்ப நாம் மனமாறப் பிறருக்கு யாதொரு தீங்கும் இழைக்காது, நன்மைகளையே பெரும்பாலும் செய்து வருகையில் நமது கர்ம வினைகள் குறைந்து, பிறவா நிலை எய்தலாம் எனப் பல ஞானியர்கள் உணர்த்தியுள்ளனர். இத்தகைய நிலையை அடைய பக்தி மிகவும் இன்றியமையாதது.
 
அன்பும் சிவமும் இரண்டென்ப அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
 
எனும் கருத்துக்கிணங்க நாம் முக்தியடைய மேலான வழி சிவபெருமானின் கருணையை நாடுவதேயாகும்.
 
 
திரைப்படம்: நவீன சாரங்கதாரா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
அஅண்டு: 1936
 
சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் வேண்டும்..
 
அவலப் பிறப்பொழிய வேண்டும் ஆ...ஆ..
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும்?
 
சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும்
வேண்டும் வேண்டும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
 
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுக வாழ்வு வாழ வேண்டும்
சுக வாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும்?
 
சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 17, 2009, 2:37:25 PM12/17/09
to tamila...@googlegroups.com
வேதங்கள், பகவத் கீதை, திருக்குறள் முதலான அறநெறியை உபதேசிக்கும் நூல்கள் அனைத்தும் அஹிம்சையையும், சாந்த குணத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியும் நம் நாட்டில் அனேகர் அவ்வாறு நடக்காமல், மதத்தின் பெயராலும், இறை வழிபாட்டின் பெயராலும் யாகங்கள் உள்ளிட்ட விழாக்களிலும் இதர சந்தர்ப்பங்ககளிலும் பலி எனும் பெயரால் தொடர்ந்து உயிர்க் கொலை புரிந்து வந்ததால் நாளடைவில் ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் குறைந்து பெரும்பாலோர் புத்த மதத்தைத் தழுவிய காலம் இந்திய வரலாற்றில் மறக்க முடியாததாகும். இருப்பினும் புத்த மதம் புலால் உண்பதைத் தடை செய்யவில்லை என்பதால் நாளடைவில் நம் நாட்டில் அது வேரூன்றவில்லை. மாறாக சீனம், சிங்களம், பர்மா, மலேயா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்கே வேரூன்றியது.
 
புத்தரின் பின்னர் அவதரித்த ஆதி சங்கரர், அஹிம்சையை வலியுறுத்தியதுடன், புலால் உண்ணாமையையும் வலியுறுத்தி, நலிவடைந்திருந்த ஹிந்து மதத்துக்குப் புத்துயிரூட்டினார்.
 
கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
 
என்ற வள்ளுவர் வாக்கையே புறக்கணித்த நமது மக்கள் சமூகம் ஆதி சங்கரர் அறிவுரையை மட்டும் அவ்வளவு எளிதில் கேட்டு விடுமா என்ன? இன்று பலர், ஜாதி மதங்களின் பெயரால் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தவும், உண்மை இல்லாத  பலவித  சாத்திரங்களையும்,  சடங்குகளையும் கூறி,  தாம் சுயலாபம் அடையவும் முயன்று, ஊரையும் உலகையும் ஏமாற்றி, பல பாப காரியங்களைச் செய்து வருவது வருந்தற்குரியது.
 
 
படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: கவிஞர் வாலி
இயற்றியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி
அஅண்டு: 1982
 
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்...
நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி ஆஆஆ
அத த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்யஹ ப்ரபவதீ
ஆ...ஆ.....
 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
 
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
 
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
 
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
தொழும் பூங் கழலே மலை மாமகளே
 
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
 
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
 
சக்தி பீடமும் நீ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 19, 2009, 2:53:40 PM12/19/09
to tamila...@googlegroups.com
இவ்வுலகமும், இவ்வுலகை உள்ளடக்கிய எல்லையில்லாப் பிரபஞ்சமும் எண்ணிறந்த உயிர்களுக்கு வாழ்விடமாக என்றம் விளங்குகின்றன. நம் கண்ணுக்கும் பிற புலன்களுக்கும் புலப்படுவனவும் புலப்படாதனவுமான இவ்வுயிர்கள் அனைத்தும் என்றேனும் ஒரு நாளில் தோன்றி, பல விதமான இன்ப துன்பங்களுக்குள்ளாகி, என்றோ ஒரு நாள் உயிர் நீக்கும் உண்மை நிலையை மனதாலும் அறிவாலும் நாம் உணர்ந்தபோதிலும் நமக்கு மட்டும் என்றும் இன்ப வாழ்வே நிலைக்கே வேண்டும், துன்பங்களே நேரக்கூடாது, மரணமடையாமல் என்றென்றும் சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் எனும் நப்பாசை இல்லாதவர் உலகில் மிகவும் அரிதே.
 
நம்மில் மகா ஞானிகளாக விளங்கிடும் ஒரு சிலர், இவ்வுண்மையை ஏற்று, இவ்வுலக இன்ப துன்பங்களைத் துறந்து, தான் யார் என்பதை உணரவைக்க வல்லதான மெய்ஞான மார்க்கத்தில் தம் மனதையும் அறிவையும் செலுத்துவதையும் நாம் அறிவோம். இஞ்ஞான மார்க்கம் ஒரு சிலருக்கு மட்டும் உரியதா? நம்மில் பிறர் அனைவரும் இதற்குத் தகுதியற்றவரா? எனும் கேள்வி நம் மனதில் எழுமாகில், நாமும் அத்தகைய உயர்ந்த ஞான மார்க்கத்தில் நம் மனதையும் அறிவையும் செலுத்தத் தொடங்கியுள்ளோம் என்பதை அறிவோமாக.
 
 
திரைப்படம்: சின்ன ஜமீன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இசை ஞானி இளையராஜா
ஆண்டு: 1993
 
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
 
என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
உரைச் சுத்தி நாள் முழுக்க ஓடும் ஆறு நானம்மா
சின்னப் பிள்ள நான் தானுன்னு சொல்லும் இந்த ஊரம்மா
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா? ஹோய்
 
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
 
ஓ...
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசெப் பாக்கலே
எங்கதையப் பாசமாக ஒன்னப் போலக் கேக்கல்லே
கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா? ஹோய்
 
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 21, 2009, 3:49:46 PM12/21/09
to tamila...@googlegroups.com
தமிழ்க் கவிஞர்களுள் சாமான்ய மக்கள் முதல் கல்வியிலும் தமிழ் இலக்கிய ஞானத்திலும் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் கவியரசு கண்ணதாசன். கருத்தைக் கவரும் தமிழ்க் கவிதைகளை எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு எளிமையாகவும், இனிமையாகவும் திகழும் வித்த்தில் இயற்றும் திறனுடன் கவியரசர் இயல்பாகவே இசை ஞானம் கொண்டு விளங்கியதால் இவரது பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதைகளான திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி,கே. இராமமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் முதலானோர், இசையுடன் இசைந்த இவரது செந்தமிழ்க் கவிதைகளுடன் இணைந்து விளங்குமாறு பல பாடல்களையும், இராகமாலிகைகளைத் தமிழ்த்திரையில் சிறப்புடன் வழங்கியுள்ளனர்.
 
கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் யான் கண்டு களித்தவை ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர் கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை விட்டகலாததாகும்.
 
இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:
 
அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே!
 
இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான் உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப் போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு.
 
 
 
திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டி: 1975
 
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்
 
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்
 
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
 
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்
 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி
 
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 22, 2009, 1:31:48 PM12/22/09
to tamila...@googlegroups.com
"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எனும் பழமொழியை அனைத்து இந்திய மக்களுக்கும் நன்கு விளங்க வைத்தது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களி்ன் ஆதிக்கம். அவர்கள் நம் நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்த ஏதுவாயிருந்தது கி.பி. 1608 ஆண்டில் அவர்கள் நம் நாட்டினுள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன்  கிழக்கிந்தியக் கம்பெனி எனும் பெயரில் உள்ளே நுழைந்த காலத்தில் நம் நாடு பல்வேறு சிறு தேசங்களாகப் பிரிந்திருந்து அவற்றை ஆண்ட மன்னர்கள், சிற்றறரச்கள் முதலானோ்ர்  ஒருவரோடொருவர் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காகப் போரிட்டு வந்த நிலைமையேயாகும்.
 
நம் நாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு சுதந்திர இந்தியாவை உருவாக்க எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து 90 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து போராடி, வெற்றி கண்டு நாமெல்லோரும் சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தித் தந்தனர். அவ்வாறு அவர்கள் அரும் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே முற்றிலும் இழந்து விட்டோம். இன்று நம் நாட்டில்  அரசு நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டமடைந்த நிலையில் அந்நிய நாட்டவர் மூலதனத்தில் தொழிற்சாலைகள் நடப்பதும், அவற்றில் நம் நாட்டவர்கள் ஊதியத்துக்காகப் பணி செய்வதும் வாடிக்கையாகியுள்ளது.
 
இத்தகைய இழிநிலையடையக் காரணம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை உருவானதுவே ஆகும். இதற்கு சாதிமத பேதமும் தனி மனித ஒழுக்கக் குறைவுமே முக்கியக் காரணங்கள். "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?" என்ற பாரதியின் பாட்டு இக்காலத்திற்கும் பொருந்துவதாகும். சாதிமத பேதத்தைத் துறந்து ஒற்றுமையாய் வாழ்ந்து நாட்டை உயர்த்தப் பாடுபடுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
 
 
திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965
 
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
 
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகததை நிறுத்த முடியுமா?
 
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
 
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை
 
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
 
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்
 
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

sri balamurali

unread,
Dec 24, 2009, 2:19:50 PM12/24/09
to tamila...@googlegroups.com
இது போன்ற பாடல்கள் கேட்கக் கேட்க சலிக்காதவை..

AKR

unread,
Dec 30, 2009, 1:44:48 PM12/30/09
to tamila...@googlegroups.com
நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நம் மனதில் நிலைநிறுத்திச் செயல்படும் லட்சியம் "வெற்றி" ஆகும். வெற்றி என்பது ஒருவரின் நோக்கத்துக்கேற்றவாறு தனித்தன்மை பெறுகிறது. ஒருவரது வெற்றி மற்றொருவரது தோல்வியாகலாம் அல்லது மற்றவரது வெற்றியும் ஆகலாம், மற்றவரின் வெற்றி தோல்வியுடன் தொடர்பின்றியுமிருக்கலாம்.
 
ஒரு மருத்துவரது வெற்றி அவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை குணப்படுத்துவதில் கிடைக்கிறது. ஒரு நோயாளியின் வெற்றி நோயிலிருந்து குணமடைந்து வாழ்வதில் கிடைக்கிறது. இங்கே மருத்துவர் வெற்றி கண்டால் நோயாளியும் வெற்றி காண்கிறார். சூதாட்டத்தில் பொருளை இழப்பவன் தோல்வியடைகையில் அவன் இழந்த பொருள் தனக்குக் கிடைக்கப்பெற்ற வேறொருவன் வெற்றியடைகிறான்.
 
வியாபாரி விற்பனை அதிகரித்து லாபம் நிறைய ஈட்டுகையில் வெற்றி பெறுகிறான். ஒரு சமூக சேவகன் சமூக நீதியை நிலை நாட்டுவதில் வெற்றியைக் காண்கிறான், அச்சமூக சேவையில் அவன் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரையும் இழந்தாலும் வெற்றிபெற்றவனாகவே கருதப்படுகிறான்.
 
ஒரு துறையில் வெற்றி பெற்றவன் அதே துறையில் வெற்றி பெறாத மற்றொருவனைத் தோல்வியடைந்ததாக எண்ணுதல் அறிவுடைமை ஆகாது. மற்றவன் எத்துறையில் வெற்றி பெற்றான் என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்தறிதல் நன்று.
 
எத்துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி மிகவும் அவசியம். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்க முயல்கையில் பல இடையூறுகள் வந்துற்ற போதும், அவற்றால் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விடாமல், தொடர்ந்து பாடுபடுபவன் வெற்றி இலக்கை எய்துவது திண்ணம்.
 
 
திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1986
 
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
 
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
 
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
 
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Dec 31, 2009, 1:46:39 PM12/31/09
to tamila...@googlegroups.com
மனிதத் தாயின் கருவறையிலிருந்து வெளியேறி பூமித்தாயின் மடியில் விழுந்த நாள் முதலாய் நாம் காண்பவற்றையும், பிற புலன்களால் உணர்பவற்றையும் தெரிந்து கொள்ளும் முயற்சியில் புதிய அறிவையும் அனுபவங்களையும் பெற்று வாழ்ந்து வருகின்ற நிலையில், பொறுப்பேதுமின்றி விளையாடித் திரியும் பிள்ளைப் பருவம் முடிந்ததும், வாழ்க்கை ஒரு போராட்டம் என உணர்கிறோம். அப்போராட்டத்துக்கு நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொண்டு பல விதமான இலக்குகளை விதித்துக் கொண்டு அவற்றை அடையும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுகிறோம். காலம் செல்லச் செல்ல இலக்குகள் மாறுவதும், வெற்றி, தோல்வி எனும் இருவேறு நிலைகளால் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அலைபாய்வதும் எனப் பல காலம் இருந்த பின்னர் உலகே மாயம், வாழ்வே மாயம் எனப்பல தத்துவங்களைப் பற்றிப் பேசி ஒரு வித விரக்தி நிலையில் நாம் காலத்தைக் கழிக்கிறோம்.
 
இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவும், கோடை, வசந்தம், குளிர்காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருதல் போலவும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு நிலைகளை உணர்ந்த போதிலும் அவ்வித வேற்றுமைகளால் மனம் சஞ்சலமடையாமல், அமைதியான நிலையில் சலனமற்றிருக்கும் தன்மையை நாம் அடைவோமேயானால் வாழ்வின் இடர்ப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் தொடர்ந்து வாழ்வை உற்சாகமுடன் வாழ வழி காணலாம்.
 
புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில் சென்ற ஆண்டின் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் உடன் அழைத்துச் செல்கையில், கடந்த காலத்தின் துன்பங்களையும் தோல்விகளையும் மூட்டை கட்டி எங்காவது போட்டுவிட்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனும் மனப்பாங்குடன் வருங்காலத்தை வரவேற்போம்.
 
மஹாகவி பாரதியார் தமது பகவத் கீதை உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
 
"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.
 
"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ்
செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்"
 
 
திரைப்படம்: நூற்றுக்கு நூறு

இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்

பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1971
 
பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ
 
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
 
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
 
மாதா கோவில் மணியோசை நம்மைப் போற்றும் அருளோசை
தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளியுண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு
உயிரே நெருங்கிவா
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத் தேடி வாராயோ?
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
 
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
 
இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடிவா
ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும்
அழகைத் தேடி வா
உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
 
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Jan 1, 2010, 3:54:19 PM1/1/10
to tamila...@googlegroups.com
இவ்வுலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. நாமே நமக்கு சொந்தமில்லாத போது பிற பொருட்கள் நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும்? இவ்வுண்மையை உணராத மனிதன் ஆணவ மிகுதியால் தன்னிலும் வலிமை குறைந்த சக மனிதரை அடக்கி ஆளும் எண்ணம் கொண்டு பொருளாராதார ஏற்றத் தாழ்வை உருவாக்கி, பொருளற்ற ஏழை எளியோரைப் பிறர் செய்யத் தயங்கும் துப்புறவு முதலிய பணிகளைச் செய்ய வைத்து, நாளடைவில் தீண்டாமை எனும் பேயை உருவாக்கினான். இதனை மனிதர் குலத்துக்கு உணர்த்தி, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சேவை மனப்பான்மை கொண்ட பல ஞானிகள் தங்களது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து உலகுய்யவென்று வகுத்ததுவே இறைத் தத்துவம்.
 
தீண்டாமை உணர்வினால் பிற மனிதர்களால் இழிகுலத்தவர் என்று கருதித் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் தன் இறை பக்தியால் பிற மனிதர் அனைவரிலும் மேம்பட்டு, இறையருளைப் பெற்ற கதையே நந்தனார் சரித்திரம். இதனை "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" என்ற அழகிய பாடல் தொகுப்பாக இயற்றி நமக்களித்தவர் கோபாலகிருஷ்ண பாரதி. ஒரு கிராமத்தில் ஒரு நிலச்சுவான்தாரரிடம் பணியாளாக இருக்கும் நந்தன் மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் குடிகொண்டிருக்கும் நடராஜப் பெருமானுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாட்டைக் காண விரும்ப, "மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?" என்று அவனது எஜமானர் அவரைத் தடுக்க, நந்தன் மீண்டும் மீண்டும் மன்றாடி சிதம்பரம் போக அனுமதி வேண்ட, அவனை எவ்வாறாகிலும் தடுத்து நிறுத்தவும் அதே சமயம் அவனது நச்சரிப்பிலிருந்து விடுபடவும் எண்ணிய எஜமானர் ஒரே நாளில் அவரது நிலத்தில் விளைந்திருந்த பயிர்களையெல்லாம் அறுவடை செய்தால் அவரை சிதம்பரம் போக அனுமத்திப்பதாக வாக்களிக்க, செய்வதறியாது நந்தன் திகைத்து நிற்கவும், இறைவனருளால் விடியுமுன்னரே அனைத்துப் பயிர்களும் அறுவடை செய்யப்பட்டிருக்கக் கண்டு ஆண்டவனின் மகிமையை எண்ணி வியக்கிறார்.
 
வேறு வழியின்றித் தன் வாக்குறுதியைக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட எஜமானரும் அவரை அனுமதிக்க, நந்தனார் தில்லை நடராஜரைத் தரிசித்து முக்தி பெற்றதாக நந்தனார் சரித்திரம் கூறுகிறது.
 
வாருங்கள், நந்தனார் கண்டு மகிழ்ந்த சிவலோக நாதனை நாமும் தரிசிப்போம்.
 
 
திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்
ஆண்டு: 1942
 
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
 
அற்ப சுகத்தை நினைந்தோம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம் - நாம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம்
 
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கானல் ஜலம் போலே எண்ணி
 
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
 
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம் - நாம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம்
 
பாசமகல வழி தேடாமல்
எமப் பாசமகல வழி தேடாமல்
பரதவிக்கும் பாவியானோம்
 
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages