தமிழே என்னை…?
ஓ! இயற்கையே!
என் ஆயுளை
இன்னும் அதிகப்படுத்து!
வாழ்வில்
செல்வம் சேர்க்க அல்ல!
செந்தமிழைக் காக்க!
என்
சின்ன விரல்களே
இன்னும்
உறுதிப்படுங்கள்!
உங்களை ஊன்றி
நான் எழ அல்ல!
உயிர்த் தமிழை எழுதத்தான்!
கற்பனைகளே
நீங்கள் ஒரு முகப்படுங்கள்!
உங்களின்
ஒருமுகத்தால்
தமிழின் திருமுகத்தை அலங்கரிக்கத்தான்!
அன்னைத் தமிழே!
உன்னை எனக்கு
அடையாளம் தெரியும்!
என்னைப் பிறர்க்கு
அடையாளம் காட்ட
காலக் கரங்களில்
என்னை நீ
ஒப்படைப்பாயா?
- நன்றி மஞ்சை மயிலன் ஐயா அவர்களுக்கு!!!
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
கல்விச்சேவை anudhinam
குறிப்பு: தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananth...@drcet.org