இது அகரமுதலிகளில் மெய்யெழுதின் அகர வரிசையைப் பற்றிய வினா.
என்னிடம் உள்ள AES பதிப்பகத்தின் விசுவநாத பிள்ளையின்
தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி மற்றும் சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி
ஆகிய இரண்டிலும் மெய் எழுத்து அதன் எல்லா உயிர்மெய்களுக்கும் பின்னராக
கடைசியில் வரும்மாறு வரிசைப்படுத்தல் அமைந்துள்ளன. காட்டாக அக்கம் என்பது
அ வின் பின் முதலில் க தொடங்கலாக அதன் பின் க வின் ஏனைய உயிர்மெய்கள்
வரிசைப்படி (அகக்கண்,...அகிலம்...அகோரம்) வரும் சொற்களைக் கடந்து பின்
வரும் அக்.. வரிசையில் இருக்கும்.
விசுவநாத பிள்ளை அகரமுதலி சென்ற நூற்றாண்டில் 1920 களில் எழுதப்பட்டது என
நினைக்கிறேன் ( இதை இடுகையில் அது கைவசம் இல்லையாதலால் நினைவின்
அடிப்படையிலான ஊகம்). சுராவின் அகரமுதலி 4-5 வருடங்கள் முன்னர்
பதிக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைகழக இணைய தமிழ் பேரகராதி( online tamil lexicon) இல்
முதலில் மெய் அதன் பின் அம்மெய்யின் உயிர்மெய்கள் என்ற வரிசையில் உள்ளன.
ஆனால் http://dsal.uchicago.edu/dictionaries/ வழியே பார்க்ககூடிய ஏனைய
இணைய அகரமுதலிகளான வப்பிரிசியசு, கதிரவேலுப்பிள்ளை, வின்சுலோ, மக்அல்பின்
ஆகியனவற்றில் மெய் அதன் எல்லா உயிர்மெய்கள் கடந்த பின்னரே வருகிற
வரிசையாக்கம் தான்.
சென்னைப் பல்கலைகழக இணைய தமிழ் பேரகராதியில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள
வரிசையாக்கம் தானே சரியானது?
சென்ற 2-3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பழைய அகரமுதலிகளில் மெய் அதன்
எல்லா உயிர் மெய்களினதும் பின் வரிசையாக்கப்பட்டது இலக்கணக்
காரணங்களுக்காகவா அல்லது ஏதாவது தொழிநுட்ப அவசியங்களினாலா?
~சேது
2008/4/8 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்கள் கருத்துக்கள் பலவற்றுடன்
உடன்படுகிறேன். சிலவற்றில் (ஒருங்குறி தொடர்பாக) சற்று வேறுபாடுகளும்
உண்டு. அவற்றைப்பற்றி விரைவில் இங்கு எழுதுவேன். தற்போது மேலதிகமாக ஒரு
வினா.
//
அது வடமொழித் தாக்கம். வடமொழி அகரமுதலிகளில் உயிர், உயிர்மெய், அப்புறமே
மெய் என்று வரும் காட்டாக அ, அகல்...அகுதை...அக்கரம் என்று வரும்.
ஆனால், தொல்காப்பியத்தின் வழியான தமிழ் நடைமுறையோ, அ, அக்கரம் ......அகல்
....அகுதை...... என்று வரும்.
//
உயிரும் அற்ற மெய்யும் அற்ற ஆய்த எழுத்து உயிர், மெய், உயிர்மெய் என்ற
வரிசையில் எங்கிருக்க வேண்டும்?
~சேது