கிரந்த எழுத்துக்கள்

473 views
Skip to first unread message

Sivakumar

unread,
Mar 9, 2008, 1:47:26 AM3/9/08
to விக்சனரி
கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துநடையில் எப்போதில் இருந்து
பயன்படுத்தப்படுகிறது?

amachu

unread,
Mar 9, 2008, 9:52:30 AM3/9/08
to விக்சனரி
On Mar 9, 11:47 am, Sivakumar <sivakumar...@gmail.com> wrote:
> கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துநடையில் எப்போதில் இருந்து
> பயன்படுத்தப்படுகிறது?

கம்பர் காலம் வரை பலுக்கியே பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன! இலக்குவன் -
இலக்ஷ்மணன், விபிஷணன் - வீடணன்.

இராஜஇராஜ சோழன் எவ்வாறு வழங்கப்பட்டார் எனத் தெரியவில்லை!

இது, நாயக்க மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டிய மன்னர்களின்
ஆளுகைக்கு கீழ் இருந்த சமயம், அவர்கள் அரசாணைகள் வெளியிடும் போது,
சான்றோர்களை கவுரவிக்கும் போதும் அதிகம் புழக்கத்தில் வந்திருக்கலாம்!

மகோமகோபாத்தியாய! ஸ்ரீலஸ்ரீ இப்படி பல வற்றை தஞ்சை பூமியில்
வளர்ந்தமையால் காண நேரிட்டது!

அன்புடன்,
ஆமாச்சு

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 10, 2008, 12:42:48 PM3/10/08
to tamil_wi...@googlegroups.com
பத்தாம் நூற்றாண்டு இராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகளில் ' ஜ' என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 
நடராஜன்.
 

Sivakumar

unread,
Mar 11, 2008, 3:45:28 AM3/11/08
to விக்சனரி
ஓ! கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக. தகவலுக்கு நன்றி நடராஜன்.

On Mar 10, 9:42 pm, "NATARAJAN SRINIVASAN" <engee...@gmail.com> wrote:
> பத்தாம் நூற்றாண்டு இராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகளில் ' ஜ' என்றே
> குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>
> நடராஜன்.
>

செல்வா

unread,
Mar 11, 2008, 11:07:30 AM3/11/08
to விக்சனரி
கல்வெட்டுக்களில், இன்னமும் முன்னமே கூட கிரந்த எழுத்துக்கள் பதிவாகி
இருக்கக்கூடும்.
ஆனால், கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் நடை, இலக்கணம், எழுத்துமுறை
எல்லாமும் பல வழுக்கள் நிறைந்தவை.
ஓலைச்சுவடிகளிலும் கூட கிரந்த எழுத்துக்கள் பலகாலம் வழங்கி இருக்க
கூடும்.
ஆனால் தமிழ் என்று போற்றப்படும் பொது மொழியிலும், மக்கள் பேச்சு
மொழிவழக்கிலும்,
கிரந்தம் ஏற்கப்படவில்லை. தொல்காப்பியர் காலத்திலும், அதற்கு
முன்னமும்கூட தமிழர்கள்
பிற மொழியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர், பற்பல ஒலியன்களை
அறிந்திருந்தனர், ஆனால்,
தமிழ்மொழியை சீருடன் போற்றி வந்துள்ளனர். தமிழ் ஒலியன்களைத் துல்லியமாய்
வரையறை செய்து
வகுத்து வைத்திருந்தனர். அதில் கிரந்தம் ஒருபோதும் கிடையாது.
கம்பன் கூட விபீடணன், இலக்குவன், அனுமன் என்றுதான்
எழுதினான். அண்மைக்காலத்து பாரதி கூட கிரந்தம் அதிகம் கலக்காமல்தான்
பாடல்கள் எழுதினான். ஆனால்
பாரதி தன் உரைநடையில் ஏராளமாக கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினான்
(அது மணிப்பிரவாளம் நடை மருவிய காலம்). 15-16 ஆவது நூற்றாண்டு
காலப்பகுதியில் கிரந்த எழுத்தின் பயன்பாடு (சமசுகிருதத்தின் தாக்கம்) மிக
அதிகமாக எழத்தொடங்கியது.
கல்வெட்டுக்களில் கிரந்தம் மட்டுமல்ல, கூட்டெழுத்துக்கள் கூட
இருந்துள்ளன. கடந்த 40-50 ஆண்டுகளுக்கு
முன்னர் கூட கடிதங்கள் எழுதும்பொழுது -த்த, த்து முதலான
எழுத்துக்கூட்டலுக்குத் தனி வடிவம் இருந்தன.

செல்வா

செல்வா

unread,
Mar 12, 2008, 10:38:53 AM3/12/08
to விக்சனரி
வேறொரு கூகிள் குழுமத்தில் (மின் தமிழ்) ஆமாச்சு
கேட்டிருந்த கேள்விக்கு நான் இட்ட மறுமொழியை இங்கும்
இடலாம் என்று ஒரு படியெடுத்து பதிவு செய்கின்றேன்:

On Mar 11, 10:51 pm, ஆமாச்சு <shriramad...@gmail.com> wrote:

> On Mar 11, 10:58 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:

> > சமசுகிருதத்திற்கு என்று சொந்தமாக *எந்த* வரிவடிவமும் கிடையாது.
> > சமசுகிருதம், தமிழ்நாட்டிலும் தென்னகத்திலும் இருந்த கிரந்த எழுத்து
> > முறையிலும்
> > பிற பல்வேறு எழுத்து முறைகளிலும் எழுதப்பட்டு வந்தது.

> இருக்கும் இரண்டில் எது தொன்மையானது எனவே அறிய விரும்பினேன்! தமிழகத்தில்
> இன்றும் கிரந்த வழக்கு இருக்கிறது!

ஆங்கில விக்கியின் படி,
தேவநாகரி 1200 கி.பி.
கிரந்தம் 600 கி.பி.

தேவநாகரி எழுத்து, சித்தம் என்னும் எழுத்துமுறை (கி.பி 770 முதல் கி.பி.
1200 வரை இருந்தது)யில்
இருந்து வந்தெனென்றும்,
அதற்கு முன் குப்தா எழுத்து முறை (கி.பி 400) இருந்ததென்றும்,
அதற்கும் முன்னர் பிராமி எழுத்து முறை (கி.மு 300) ஆகியவை இருந்ததென்றும்
கொள்கிறார்கள்.
காசுமீரத்தில் சமசுகிருதம் எழுத ^சாரதா (sharada) எழுத்து முறை கி.பி 800
ஆண்டளவில் இருந்து
பயன்பட்டு வந்துள்ளது என்றும் ஆங்கில விக்கி கூறுகிறது.

எனவே,

* பிராமி (~ கி.மு 300) --> குப்தா (கி.பி 400) --> சித்தம் (கி.பி.
770-1200) --> தேவநாகரி (கி.பி. 1200).
(இது தவிர ^சாரதா (கி.பி. 800) )

* கிரந்தம் (கி.பி. 600 முதல் கி.பி. 1600 வரை)

கிரந்தமே முன்னது.

இதனோடு தமிழ் எழுத்துக்களையும் ஒப்பிடலாம். தமிழ்-பிராமி (கி.மு. 500
உக்கும் முன்னர்; அசோகன் பிராமிக்கும்
முன்னது). தமிழ் வட்டெழுத்தும் கி.பி 200 ஆண்டளவில் தொடங்கி பயன்பட்டு
வந்துள்ளது.

[..]

> அன்புடன்
> ஆமாச்சு

அன்புடன் செல்வா

amachu

unread,
Mar 13, 2008, 1:10:21 AM3/13/08
to விக்சனரி
> தமிழ் ஒலியன்களைத் துல்லியமாய்வரையறை செய்து வகுத்து வைத்திருந்தனர்.

ஒலிகள் பொதுவானவை! அவை மொழிகளுக்கு அப்பாற்பட்டவை என்பது எமது எண்ணம்.
தொல் தமிழகத்தில் பழக்கதிலிருந்த ஒலியமைப்புகளில் ஶ ஷ ஸ ஹ ஜ இவை இல்லாது
இருந்தன எனச் சொல்வதை ஏறகலாம்! பொதுவாக சிறு உச்சரிப்பு வேறுபாடுகளால்
பொருள் மாறும் தன்மையுடையன நமது மொழிகள்!

காலஞ்செல்ல செல்ல இத்தகைய ஒலிகளை கேட்க நேரிட்டது! பின்னர் புழங்க
நேரிட்டது எனக் கொள்ளலாம்! இதனை கூடுமானவரை தவிர்ப்பது நல்லதுதான்!
உதாரணத்திற்கு, விடயம், நிமிடம், வருடம் இப்படித்தான் தமிழ் பயிற்றுவித்த
ஆசிரியர்கள் எமக்கும் பயிற்றுவித்தனர். தவிர்த்துதான் தீர வேண்டும் எனக்
கட்டாயமொன்றுமில்லை என்றே கருதுகிறேன்!

இது வடமொழி சொற்கலப்பு என்பதனையும் தாண்டி இன்று அறிவியற் பெயர்கள்
உள்ளிட்ட பல இடங்களுக்கு விரிகின்றன! உதாரணத்திற்கு ஹைபிஸ்கஸ் என்பதை
ஐபிசுகசு என்றெழுதுவதனைக் காட்டிலும் ஹைபிஸ்கஸ் என எழுதுவதே பொருத்தமாகத்
தோன்றுகிறது! இது ஒரு உதாரணந்தான்!

பொருளும் எளிதில் போய்ச் சேர வேண்டுமென்பதையும் நாம் கருத்தில்
நிறுத்துதற் வேண்டும்! பணி, பனி போன்றவற்றுள் நாவின் சிறு சுழற்சியால்
ஏற்படும் பொருள் மாற்றங்களைப் போன்றதே இதுவும்! நகைச்சுவைக்கு சொல்ல
வேண்டுமாயின் சட்டி - ஜட்டி ஒரு உதாரணம்! இராஜஇராஜனையும் தாண்டி, இன்று
ஸ்டாலின், ஜனனி, ஜான், முஸ்தபா இப்படி தற்காலத்தில் வழங்கப்படும்
பெயர்களும் இவற்றை அவசியமாக்குகின்றன! எமது பெயருந்தான்!

இப்பெயரையெல்லாம் சூட்ட மொழிக்கும் அப்பாற்பட்டு நல்ல காரணங்கள்
இருக்கத்தான் செய்கின்றன. மொழியைத் தாண்டி நல்ல காரணங்களே இருக்கக்
கூடாதென்று நினைத்தாலேயன்றி இப்பெயர்களை ஏற்பதில் மனம் நோக வாய்ப்பில்லை.

மேலும் கிரந்த எழுத்து வடிவங்கள் தென்னக முறையை ஒத்துயிருக்கின்றன!
இவற்றை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வதில் எந்த நெருடலும்
இல்லை! இவற்றை பயன்படுத்துவதால் தமிழைக் கொலை செய்கிறோம் என்ற
குற்றவுணர்ச்சியெதுவும் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை! மொழிச்சிதைவிற்கு
வித்திடா வண்ணம் இவை ஒரு அளவிற்குள் இருக்க வேண்டுமென்று சொல்வதுதான்
ஏற்கத்தக்கதாக தோன்றுகிறது!

இப்படித்தான் இருக்கணும், இவ்வெழுத்துக்களைச் சேர்ப்பது தமிழுக்கே
விரோதம் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தலே! காலத்தின் தேவை!
பிற மொழிச் சொற்களை பலுக்கி ஏற்பதையும் தாண்டி, புது எழுத்துக்களை கூட
ஒலித் தேவைகளுக்காக ஏற்றுக் கொள்கிறதென்றால், அதனை "எமது மொழி
காலத்திற்கேற்றவாறு பரிணாமம் பெருமொன்று" என்கிற கோணத்தில் பெருமைத் தரக்
கூடிய ஒன்றாகவே கருதுகிறோம்!

செல்வா

unread,
Mar 13, 2008, 10:01:46 AM3/13/08
to விக்சனரி


On Mar 13, 1:10 am, amachu <shriramad...@gmail.com> wrote:
> > தமிழ் ஒலியன்களைத் துல்லியமாய்வரையறை செய்து வகுத்து வைத்திருந்தனர்.
>
> ஒலிகள் பொதுவானவை! அவை மொழிகளுக்கு அப்பாற்பட்டவை என்பது எமது எண்ணம்.

ஆமாச்சு, நீங்கள் அழகாக, நயமுற உங்கள் கருத்துக்களை எடுத்து
வைத்துள்ளீர்கள். பின்னர் விரிவாக
உங்கள் மடலில் உள்ள கருத்துக்களுக்கு என் மறுமொழி தருகின்றேன்.
முதலில் ஒன்றை விளக்க வேண்டும். "தமிழ் ஒலியன்களை" என்று நான் கூறியதை
நீங்கள் பிரித்துப் படித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
ஒலிகள் பொது, ஒலியன்களும் (எழுத்தொலிகளும்) ஓரளவிற்குப் பொது,
ஆனால் இன்ன இன்ன (எழுத்து)ஒலிக்கள் இப்படி இப்படி இருத்தல் வேண்டும்,
இப்படி இப்படி உருவாகும்(வாயில், தொண்டையில்..),
இன்ன இன்ன ஒலியன்கள் இன்ன இன்ன ஒலியன்களுக்கு அடுத்தாற்போல்தான் வரலாம்,
இன்ன இன்ன ஒலியன்கள் தான் சொல்லின் இறுதியில் வரும்,
இன்ன இன்ன ஒலியன்கள்தான் சொல்லின் முதலில் வரும்,
இன்ன இன்ன ஒலியன்களுக்கு அடுத்தாற்போல இன்ன இன்ன ஒலியன்கள் வந்தால்
இப்படி இப்படி
ஒலிப்பு மாற்றங்கள் நிகழும்,
குற்றியலுகரம், குற்றியலிகரம் முதலான *வரைமுறைகள்* தமிழில் உள்ளன.
இதுபோல "வரையறை செய்து தொகுத்து வைத்து"ள்ள மொழிகளைக் காட்டுங்கள்,
அது எப்படிப் "பொது" என்று கூறுகின்றீர்கள் என்று கூறுங்கள்.

பின்னர் மற்ற கருத்துக்களுக்கு மறுமொழி இடுகின்றேன்.

Ravishankar

unread,
Mar 13, 2008, 10:05:30 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
ஆமாச்சு,

புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வது தான் காலத்துக்கேற்ற மாற்றமா? இப்படி காலத்துக்கு ஏற்ப புதிய சொற்களைச் சேர்த்துக் கொண்ட தமிழுக்கு ஒப்பான தொன்மை உடைய மொழிகள் விவரங்கள் தாருங்களேன்??

எனக்குத் தெரிந்து பல மொழிகள் ஏற்கனவே கூடுதலாய் இருந்த தேவையற்ற எழுத்துக்களை களைந்திருக்கின்றன. தெலுங்கில் இப்படி சில எழுத்துக்களை சில பத்தாண்டுகள் முன்பு ஒழித்ததாய் நண்பர் சொன்னார். டாய்ட்ச் மொழியில் எனக்குத் தெரிந்தே ஓரிரு ஆண்டுகள் முன்னர் சில எழுத்துக்களை ஒழித்தனர்.

ரவி

Ravishankar

unread,
Mar 13, 2008, 10:12:11 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
காலத்துக்கு ஏற்பு புதிய சொற்கள் என்பதற்குப் பதில் காலத்துக்கு ஏற்பு புதிய எழுத்துக்கள் என்று இருந்திருக்க வேண்டும்.

செல்வா

unread,
Mar 13, 2008, 10:59:03 AM3/13/08
to விக்சனரி
> எனக்குத் தெரிந்து பல மொழிகள் ஏற்கனவே கூடுதலாய் இருந்த தேவையற்ற எழுத்துக்களை
> களைந்திருக்கின்றன. தெலுங்கில் இப்படி சில எழுத்துக்களை சில பத்தாண்டுகள்
> முன்பு ஒழித்ததாய் நண்பர் சொன்னார். டாய்ட்ச் மொழியில் எனக்குத் தெரிந்தே ஓரிரு
> ஆண்டுகள் முன்னர் சில எழுத்துக்களை ஒழித்தனர்.

ரவி, கன்னடத்திலும் 1980களில் கூட இரண்டு சுழி னகரத்திற்கு இணையான
எழுத்தை
நீக்கினர். அதற்கு முன்னர் ழகரத்தை நீக்கினர். றகரத்தை நீக்கினர்.
ஆங்கிலேயர்கள்
தகரத்திற்கான ஓரெழுத்தாகிய "தார்ன்" [thorn or þorn (Þ, þ) ] என்னும்
எழுத்தை நீக்கிவிட்டு
ஈரெழுத்துக் கூட்டாக "th" என்பதனை வைத்துக்கொண்டனர். இந்த ஈரெழுத்து
முறையை
digraph என்கின்றனர். இத்தனைக்கும்
இந்த தார்ன் என்னும் எழுத்து, பழைய ஆங்கில மொழியாகிய
ஆங்கிலோ-சாக்சன் மொழியில் இருந்த ஒன்று.
பார்க்கவும்:
http://en.wikipedia.org/wiki/Thorn_%28letter%29

தமிழில் புதிய எழுத்துக்களை பலரும் நுழைத்து வருகின்றனர்.
இன்னும் குறைந்தது மூன்று எழுத்துக்களையும் (ba, ga, da)
(அதற்கான உயிர்மெய் வடிவங்களையும்) நுழைக்க ஏற்பாடுகள்
நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் சமசுகிருதத்தில் உள்ள
51 எழுத்துக்களையும் தமிழில் வடித்து, தமிழ் சமசுகிருதத்தின் ஓரு
வழிமொழிதான் தமிழ் என்று ஆக்கும் வரை ஓய மாட்டார்கள்.
இவர்களுக்குத் துணை போவோர் பலர் உள்ளனர்.
தமிழின் பேரைச் சொல்லியே தமிழை வளர்க்கிறோம்
என்று கூறிக்கொண்டு, தாங்களும் தமிழர்கள்தாம் என்று
கூறிக்கொண்டு தமிழைக் கெடுக்கின்றார்கள்.
உலகத்தில் உள்ள மொழிகளில் உள்ள மிக அதிகமாக
ஆய்ந்து அவ்வவ் மொழிகளில் உள்ள இலக்கியங்களை
மிக விரிவாக அலசும் ஆங்கிலம், மற்றும் ஐரோப்பிய
மொழிகள் எதுவும், அவ்வவ் மொழிகளில் உள்ள எழுத்துக்களை
தங்கள் அகரவரிசையில் சேர்த்துக்கொண்டு திரிவதில்லை.
ஒலிப்புகளை, *சில* இடங்களில் சற்றேனும் துல்லியமாய்க் காட்டுதல்
வேண்டும் எனில் ஒலித்திரிபுக் குறிகளைப் பயன்படுத்தலாம்
(ஆங்கிலம் ஆள்வது போல்). ஒலித்திரிபுக்குறிகள் கொண்ட
எழுத்துக்களை மொழியின்
அடிப்படை அகரவரிசையிலேயே கொண்டு
உள்ள மொழிகள் உலகில் எத்தனையோ
உண்டு (எ.கா: எசுப்பானியம் (ஸ்பானிஷ்), பிரான்சிய (பிரெஞ்ச்சு) மொழி,
போலந்து மொழி என்று பல).
அதுவும் உயிர்மெய் வடிவங்கள் கொண்ட தமிழ் மொழியில்
புதிய எழுத்துக்களை நுழைப்பது என்பது நல்வழி அறியாமை ஆகும்.
தமிழைக் கெடுக்கும் முயற்சி என்பது உணர வேண்டியது.

செல்வா







On Mar 13, 10:05 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> ஆமாச்சு,
>
> புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வது தான் காலத்துக்கேற்ற மாற்றமா? *இப்படி
> காலத்துக்கு ஏற்ப புதிய சொற்களைச் சேர்த்துக் கொண்ட தமிழுக்கு ஒப்பான தொன்மை
> உடைய மொழிகள் விவரங்கள் தாருங்களேன்??*

amachu

unread,
Mar 13, 2008, 11:19:08 AM3/13/08
to விக்சனரி
ஐயா,

இது கடந்த இரு ஆண்டுகளில் பலவிடங்களில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு
வாதங்களைப் பார்த்து அலசி கடைசியாக எமக்கு ஏற்புடையதாய் தோன்றிய
கருத்துக்கள் இவை.

ஶ ஷ ஸ ஹ ஜ எழுத்துக்களை பயனபடுத்தலாகாது என்பதற்கு நான் கண்ட காரணங்கள்
திருப்தியளிக்காதே இருக்கின்றன. அதே போல் எடுத்ததற்கெல்லாம் அவற்றை
பயன்படுத்தி மீண்டுமொரு மணிக்கிரவாளத்தை உருவாக்கும் போக்குடனும்
இசைவில்லை.

தேவையிருக்கும் போது அதனைப் பயன்படுத்துவதில் எமக்கு சிக்கலில்லை. வலுவான
ஏற்புடைய காரணங்கள் எதிர் காலங்களில் வருமாயின் மாற்றிக் கொள்வதில்
எமக்கு உடன்பாடே. இதுவரை அப்படியொரு விளக்கத்தை காணவில்லை. அவ்வளவே!

அன்புடன்,
ஆமாச்சு.

amachu

unread,
Mar 13, 2008, 11:21:19 AM3/13/08
to விக்சனரி
On Mar 13, 8:19 pm, amachu <shriramad...@gmail.com> wrote:
>அதே போல் எடுத்ததற்கெல்லாம் அவற்றை
> பயன்படுத்தி மீண்டுமொரு மணிக்கிரவாளத்தை உருவாக்கும் போக்குடனும்
> இசைவில்லை.
>

மணிப்பிரவாளம் என வாசிக்க.

Sathia Narayanan

unread,
Mar 13, 2008, 11:25:54 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
Selva,
 
 Pre-script :- Sorry for English, Using a PC in customer premises.Didn't want to install software. I couldn't resist responding.Sorry for that again( even though it is an irony).
 
 I disagree on Ravi's point.
 
 1) We can accomodate new words (nouns in fact and as much as possible tranlated verbs). But new letters will totally ruin the language. I dont know the politics behind introducing new letters in Tamizh. But just out of interest, if English can survive so many centuries with 26 alphabet then why cannot Tamizh with 30 alphabet?  May to put it correclty English is accomodating so many new words from languages and they try to change the words as it can blend into Engi
 
2) Even today we see lots of names in Christians where they blended their names into Tamizh(Susai, yesuvadian) etc., Only thing that is needed is to modify those names to sound like Tamizh names and make it blend with the existin language constructs.
 
3)If we start adding letters to accomodate new sounds (today Enlish, tomorrow for example nasal language like chinese) then it will ruin the language totally and in centuries together the language will loose its identify.
 
-Sathia

Ravishankar

unread,
Mar 13, 2008, 11:26:12 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
ஆமாச்சு,

வாதத்துக்காக கேட்கவில்லை. உண்மையிலேயே, புதிய  முழு எழுத்துக்களை ஏற்றுக் கொள்வது பிற மொழிகளில் உள்ள வழக்கம் தானா என்ற பொது அறிவைப் பெறுவதற்காகவே கேட்டேன். ஏனெனில், காலத்துக்கு ஏற்ப புதிய எழுத்துக்களை ஏற்பதால் தமிழ் வளரும் என்று திரும்பத் திரும்ப பல இடங்களில் ஒரே வாதத்தை பலரும் முன்வைப்பதைக் காண முடிகிறது. பல மொழிகளிலும் இருக்கிற எழுத்துக்களைக் குறைக்கப் பார்க்கிறார்களே தவிர கூட்டப் பார்ப்பதில்லை :) தமிழில் ஞ, ங உயிர்மெய் வரிசையில் சில  எழுத்துக்களை ஒழிக்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்களும் இருக்கிறார்கள் ;)

செல்வா,

விரிவான விளக்கத்துக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் பல சமயம் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தி எழுதி இருக்கிறீர்கள். விக்கிப்பீடியா போக மன்றங்கள், தளங்கள், பதிவுகளிலும் எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது.

ரவி

Ravishankar

unread,
Mar 13, 2008, 11:31:25 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
சத்தியா,

என்னோடு ஏன் மாறுபடுகிறீர்கள் என்று புரியவில்லை??? இந்த இழையில் நீங்கள் சொன்னதே தானே நானும் சொல்லி இருக்கிறேன்??? ஒரு இடத்தில் எழுத்து என்பதற்குப் பதில் சொல் என்று எழுதி திருத்தி விட்டேன் ..

ஆமாச்சுக்குப் பதிலாக என் பெயரைத் தவறுதலாக இட்டு விட்டீர்களா?

ஆனால், உங்கள் மடலின் மூன்றாவது கருத்து ஆங்கிலச் சொற்களைக் கண்மூடித் தனமாகப் பெறுவதற்கும் பொருந்தும். முன்பு வட மொழி இந்தியாவில் தாக்கம் மிக்க மொழியாக இருந்து அதில் ஏராளமான சொற்கள் புகுத்தப்பட்டன. பிறகு அதற்கு ஒரு தனித்தமிழ் இயக்கம் தேவைப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சும் நடப்பு நூற்றாண்டில் ஆங்கிலமும் உலக மொழியாக இருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் இது சீனமாகவும் கூட ஆகலாம். அந்தந்த நூற்றாண்டுக்கும் ஒவ்வொரு மொழியில் இருந்து தமிழில் சொற்களைக் கடன் வாங்கிக் கொண்டிருந்தோம் என்றால் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு தனித்தமிழ் இயக்கம் நடத்த வேண்டி இருக்கும் :(

ரவி

Sathia Narayanan

unread,
Mar 13, 2008, 11:36:48 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
/*காலத்துக்கு ஏற்பு புதிய சொற்கள் என்பதற்குப் பதில் காலத்துக்கு ஏற்பு புதிய எழுத்துக்கள் என்று இருந்திருக்க வேண்டும் */
 I responded to this. Sorry for addressing Selva or anyone. It is just point to the group.
 
-Sathia

 

Ravishankar

unread,
Mar 13, 2008, 11:39:02 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
குழப்பத்துக்கு மன்னிக்கவும் சத்தியா. அதற்கும் முந்திய மடலில் உள்ள தடித்த எழுத்துக்களைப் பார்க்கவும். அதைக் குறித்த பிழை திருத்தமே இந்த மடல். பழைய மடலோடு ஒட்டிப் படித்தால் குழப்பியிருக்காது...

Ravishankar

unread,
Mar 13, 2008, 11:40:05 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
குழப்பம் தவிர்க்க பிழை திருத்திய மடல், மீண்டும்:

ஆமாச்சு,

புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வது தான் காலத்துக்கேற்ற மாற்றமா? இப்படி காலத்துக்கு ஏற்ப புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்ட தமிழுக்கு ஒப்பான தொன்மை உடைய மொழிகள் விவரங்கள் தாருங்களேன்??

எனக்குத் தெரிந்து பல மொழிகள் ஏற்கனவே கூடுதலாய் இருந்த தேவையற்ற எழுத்துக்களை களைந்திருக்கின்றன. தெலுங்கில் இப்படி சில எழுத்துக்களை சில பத்தாண்டுகள் முன்பு ஒழித்ததாய் நண்பர் சொன்னார். டாய்ட்ச் மொழியில் எனக்குத் தெரிந்தே ஓரிரு ஆண்டுகள் முன்னர் சில எழுத்துக்களை ஒழித்தனர்.

ரவி

Sathia Narayanan

unread,
Mar 13, 2008, 11:44:15 AM3/13/08
to tamil_wi...@googlegroups.com
Got it. Sorry. So my points then directs to Amachu :-))

On 3/13/08, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:

amachu

unread,
Mar 13, 2008, 11:57:20 AM3/13/08
to விக்சனரி
On Mar 13, 7:05 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> ஆமாச்சு,
>
> புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வது தான் காலத்துக்கேற்ற மாற்றமா? *இப்படி
> காலத்துக்கு ஏற்ப புதிய சொற்களைச் சேர்த்துக் கொண்ட தமிழுக்கு ஒப்பான தொன்மை
> உடைய மொழிகள் விவரங்கள் தாருங்களேன்??*
>

இரவி,

கிரந்த எழுத்துக்களின் உச்சரிப்பு வரும் இடங்களில் மாற்றி எழுத முற்படும்
போது அவற்றை உச்சரிப்பதற்கு என்று தனியாக குறிப்பெழுதும் முறைக்கு
வித்திடாது இருக்கும் பல இடங்களில் அவற்றை தவிர்ப்பது ஏற்புடையதே.

ஆனால் உச்சரிப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதும் இடங்களில்
கிரந்த எழுத்துக்கள் இடுவதில் எமக்கு சம்மதமே. இரண்டாயிரம் வருடத்துக்கு
முன்னர் இலக்கணம் வகுத்த போது இவ்வொலிகளை தமிழர் பயன்படுத்தியிருக்கவே
மாட்டார்கள் என்பது சரிதான். இவ்வொலிகள் இன்று நமக்கொன்றும் புதிதல்லவே.

எமக்கு இரண்டு வழிகள் தென்பட்டன. ஒன்று மிக அவசியமாகக் கருதும் இடங்களில்
கிரந்த எழுத்துக்களை இட்டு எழுதுவது. இல்லையெனில் அங்கேயும் பலுக்கி
எழுதிவிட்டு ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லையும் ஒரு மாதிரி எழுதிவிட்டு
அதனை உச்சரிப்பதற்கென்று தனியாக ஒரு முறையில் எழுதிக்காட்டுவதுபோல் ஒரு
முறையைக் கொள்வது.

இரண்டுள் முதலாவது உகந்ததென்று (புழக்கத்தில் இருக்கும் காரணமுமொன்று)
கருதியதால் அம்முடிவிற்கு வந்தேன். முந்தைய மடலில் கூறியது போல் இவற்றைத்
தவிர்க்கத்தான் வேண்டுமென்பதற்கு வலுவானக் காரணத்தை நான் இன்னும்
காணவில்லை. இவ்வறைப் பயன்படுத்துவதால் தமிழ் சிதைவுறும் எனும்
கருத்தையும் ஏற்கவில்லை.

அன்புடன்
ஆமாச்சு

பி.கு: இதை எழுதிவிட்டு மேலே பார்த்தேன். பத்திகளில் எந்தவொரு கிரந்த
எழுத்தும் இல்லை. :-) சரி ஒன்னாவது இருக்கட்டும். ரொம்ப சீரிய"ஸா" இதை
இனி அணுகப் போவதில்லை. ;-) ஏற்புடைய காரணத்தை எதிர்பார்த்து...






பிந்தையதைக் காட்டிலும் முந்தையதே எமக்கு சரியெனப்பட்டது. மற்றபடி
ஒன்றுமில்லை!

amachu

unread,
Mar 13, 2008, 12:46:13 PM3/13/08
to விக்சனரி
On Mar 13, 8:26 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> ஆமாச்சு,
>
> வாதத்துக்காக கேட்கவில்லை. உண்மையிலேயே, புதிய முழு எழுத்துக்களை ஏற்றுக்
> கொள்வது பிற மொழிகளில் உள்ள வழக்கம் தானா என்ற பொது அறிவைப் பெறுவதற்காகவே
> கேட்டேன். ஏனெனில், காலத்துக்கு ஏற்ப புதிய எழுத்துக்களை ஏற்பதால் தமிழ் வளரும்
> என்று திரும்பத் திரும்ப பல இடங்களில் ஒரே வாதத்தை பலரும் முன்வைப்பதைக் காண
> முடிகிறது. பல மொழிகளிலும் இருக்கிற எழுத்துக்களைக் குறைக்கப் பார்க்கிறார்களே
> தவிர கூட்டப் பார்ப்பதில்லை :) தமிழில் ஞ, ங உயிர்மெய் வரிசையில் சில
> எழுத்துக்களை ஒழிக்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்களும்
> இருக்கிறார்கள் ;)
>
இரவி,

எட்டை படுக்கப் போட்டு ழகரமாக மராத்தியில் புழங்குவதாகக் கேள்வி. ஆழ்வார்
என்பதை ஹிந்தியில் எழுதுவோர் சிலர் எட்டை படுக்கப்போடும் இம்முறையைப்
பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இதை சேர்ப்பதற்கு அங்கே என்ன சண்டை
நடக்குதோ நாமறியோம்!

மெலும் ஹிந்தியில் ஆங்கிலச் சொற்களை ஹிந்திப்படுத்துவதும் அதிக
வாதங்களின்றி ஏற்கப்படுகிறது என்றே கருதுகிறேன். இப்படித் தான் நாம
செய்ணுங்கறதில்லை. தகவலே! நல்லதெனப்பட்டால் ஏற்கலாம்.

தேவையாயின் எழுத்துக்களைக் கூட்டவும் செய்லாம் குறைக்கவும் செய்யலாம்.
அதோ போல் ஆற்றலுடைய பெரியோர்கள் (இப்போதைக்காவது நானில்லை சாமி!)
இலக்கணங்களைக் கூட அவசியமாயின் உரிய விதத்தில் எளிமைப்படுத்துவது
நல்லதே.

உடைநடைகள் எல்லாம் தமிழில் வளர்ந்தது இதனால்தானோ! இல்லையெனில் நாமெல்லாம்
விருத்தங்களில் விவாதித்துக் கொண்டிருப்போமோ!
Reply all
Reply to author
Forward
0 new messages