தேவர் மாலை

216 views
Skip to first unread message

Thevan

unread,
Oct 6, 2012, 11:05:17 AM10/6/12
to panb...@googlegroups.com
நண்பர்களை வேண்டுதலை தொடர்ந்து தேவர் மாலை என்ற இந்த ஒற்றை இழையை தொடங்குகிறேன். இதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவேன். தேவர் குரு பூஜையை முன்னிட்டு இந்த இழை விசேஷமாக தொடங்கப்படுகிறது. அதற்குப் பின்னரும் தொடரும். 

இணைப்பில் தேவர் தனது வளர்ப்புத் தாயின் உடலை பார்க்க முஸ்லீம் பெரியவராக மாறுவேடத்தில் வந்து சென்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



பி.கு.- எனது பதிவுகளை விரும்பாவிட்டால் குழுமத்தினர் என்னை நீக்கிவிடலாம். 

நன்றி.

--

பேசாத பொருளில்லை அவனியிலே, அவ்வாறிருந்தால் அங்கே தேவனுக்கு இடமில்லை.

 


Regards,

Thevan, 
Mumbai.

 



198517_416945418369530_1403620745_n.jpg

Thevan

unread,
Oct 8, 2012, 11:44:26 PM10/8/12
to panbudan
பாராளுமன்றத்தில் தேவரின் கன்னிப் பேச்சு...

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி... 

FILE
அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது....

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழகள் மூட மறந்தன. 

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு. 

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது. 

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள். 

ஐயா, 

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட. 

காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம். 

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும். 

அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு. 

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர். 

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்! 

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை. 

கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. 

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன். 

யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ச்சியை கீழேகொடுத்துள்ள இணைப்பில் படிக்கலாம்.

Thevan

unread,
Oct 11, 2012, 5:48:19 AM10/11/12
to panb...@googlegroups.com
2008ம் ஆண்டு மதுரையில் தேவர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மதிமுக தலைவர் வைகோ அவர்கள் தேவர் பற்றி ஆற்றிய உரையின் காணொளி

http://www.youtube.com/watch?v=Si---T7v6ww&feature=related



http://www.youtube.com/watch?v=fG6vuKEKdw4


http://www.youtube.com/watch?v=n-ai_ghWv5M


http://www.youtube.com/watch?v=aCEWsEbXmDw&feature=related


http://www.youtube.com/watch?v=lA8Y9TUVHqE&feature=related


http://www.youtube.com/watch?v=sYj8bQL0vG4&feature=related


http://www.youtube.com/watch?v=PoJZ7te_-XY&feature=related

Thevan

unread,
Oct 12, 2012, 9:25:18 PM10/12/12
to panb...@googlegroups.com

தனக்குப் பிடித்த தலைவர் தேவர் என்றும், அவர் அரசியலில் எவ்வாறு இறங்கினார், அவர் அரசியலில் என்னென்ன சவால்களை சந்தித்தார், அவரது செல்வாக்கு, அவரது சமகால தலைவர்களைப் பற்றியும் பேசும் வரலாற்று ஆய்வாளர் மருது மோகனின் பேட்டியை காண்பீர்.  


http://www.youtube.com/watch?v=NwLohEMyXkk&feature=related

Thevan

unread,
Oct 18, 2012, 12:04:09 AM10/18/12
to panb...@googlegroups.com
தலித் மக்கள் மீதான தேவரின் பரிவு

ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்பு தேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அதில் ஒரு சிலபெண்கள் கிணற்றுக்கு அருகில் வராமல் தங்கள் குடங்களுடன் கொஞ்சம் தள்ளி தனியே நின்று கொண்டிருக்க அந்த செல்வந்தரின் மகனான சிறுவன்தான் இறைத்து அந்த பெண்களுக்கு நடந்து போய் ஊற்றிகொண்டிருந்தார். எதனால் இப்படி அந்த பெண்களையே எடுத்துகொள்ள சொல்லலாமே என்று தேவர் தன் நண்பரிடம் கேட்க அதற்கு அவர் இவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைசேர்ந்த பெண்கள் எனவே அவர்கள் இந்தகிணற்றில் தண்ணீர் பிடித்தால் தீட்டாகிவிடும், மற்ற யாரும் தண்ணீர் பிடிக்கமாட்டார்கள், அதனால் தான் இந்த ஏற்பாடு என்றார்.


உடனே தேவர் கூறினார் சரி நான் கிளம்புகிறேன், இனிமேல் இங்கு வரவும் மாட்டேன், இப்போது இங்கே விருந்தும் உண்ணபோவதில்லை, தாழ்த்தப்பட்ட பெண்களும் மனிதர்கள்தானே அவர்களை இந்தநிலையில் வைத்திருக்கும் இடத்தில் என்னால் கைநனைக்க என் மனம் இடம் தரவில்லை என்று கூறினார்.

உடனே அந்த நண்பர் பதறிபோய், ஐயா மன்னித்துவிடுங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது, இப்பொழுதே அவர்களை எடுக்க சொல்கிறேன் என்று கூறி அந்தப்பெண்களை உடனே கிணற்றில் தாங்களாகவே தண்ணீர் பிடித்துக்கொள்ள அனுமதி அளித்தார்.

பின்பு தேவரும் விருந்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். அன்றிலிருந்து அந்தவீட்டில் உயர்ஜாதி மக்களை போலவே தாழ்த்தப்பட்ட மக்களும் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கபட்டார்கள்.

குறிப்பு: இந்தசம்பவத்தில் வரும் தேவரின் நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களுடைய தந்தை ஆவார். தண்ணீர் இறைத்துக் கொடுத்த அந்த சிறுவன்தான் திரு. தா.பாண்டியன் அவர்கள். இதை தா.பா அவர்கள் ஒரு பேட்டியின் போது சொன்னார்.

Thevan

unread,
Oct 23, 2012, 5:30:04 AM10/23/12
to panbudan

இம்மானுவேல் கொலை வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி

 

விடுவிக்கப்பட்ட பின்னர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்,

 

காங்கிரஸின் அரசியல் பிறழ்வு பற்றிப் பேசும் தேவரின் உரையை

 

கேட்பீர்.

 

துரதிர்ஷ்டவசமாக இதில் முதல் பாகம் மட்டுமே கிடைத்துள்ளது.

 

http://www.youtube.com/watch?v=O1zS4pj6wng

Thevan

unread,
Oct 25, 2012, 11:06:10 PM10/25/12
to panbudan, anb...@googlegroups.com, beyo...@googlegroups.com, dinamo...@googlegroups.com, eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com, ethi...@googlegroups.com, germa...@yahoogroups.com, housto...@googlegroups.com, il...@googlegroups.com, indonesia...@googlegroups.com, indray...@googlegroups.com, kee...@googlegroups.com, malaysianta...@googlegroups.com, musli...@googlegroups.com, mutht...@googlegroups.com, naalo...@googlegroups.com, naamt...@googlegroups.com, nallana...@googlegroups.com, namak...@googlegroups.com, namb...@googlegroups.com, namtho...@googlegroups.com, nanji...@googlegroups.com, oviyat...@gmail.com, paga...@googlegroups.com, periyarvizhippuna...@googlegroups.com, pira...@googlegroups.com, puduvai...@googlegroups.com, save-...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com, tamiln...@googlegroups.com, thamil...@yahoogroups.com, thamiz...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thami...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, thantha...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, thiruma...@googlegroups.com, unita...@googlegroups.com, vijaymakk...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamilmanram, உலகத்தமிழ், தமிழாயம், lightacand...@googlegroups.com, may17members@googlegroups.com "vallamai", mintamil
பயண விவரம்

நண்பர்களே,

தேவர் குருபூஜை விழாவை ஆய்வு செய்வதற்காக அக்டோபர் 27 முதல் 30 வரை
பசும்பொன்னில் தங்கி இருக்கிறேன்.

31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன். 1ம் தேதி
மதுரையில் நண்பர்களை சந்திக்கிறேன்.

3ம் தேதி காலை 11 மணி முதல் 4ம் தேதி மதியம் 1 மணி வரை தஞ்சையில் இருக்கிறேன்.

5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் தங்குகிறேன். நவம்பர் 11ம் தேதி
சென்னையில் நண்பர்களை சந்திக்கிறேன்.

நவம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை எனது சொந்த ஊரான தேனி மாவட்டம்
தேவதானப்பட்டியில் தங்குகிறேன்.

சந்திக்க விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி

09833753808

Thevan

unread,
Oct 27, 2012, 1:53:40 PM10/27/12
to panbudan

பசும்பொன் தேவர் நினைவு மண்டபத்தின் முகப்புத் தோற்றம்.

 

உள்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலை மற்றும் சமாதி.

 

புதிதாக திறக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தின் வெளித்தோற்றம்.

 

தியான மண்டபத்தின் உட்புறத் தோற்றம்.

 

இரண்டு தினங்களில் வெளிநாடு செல்ல இருப்பதால் இன்றே தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே. மணி. நிருபர்களிடம் பேசிய அவர், தேவர்கள் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. எனவே அவர்களுக்கு விசேஷ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

முகநூல் நண்பர் திரு. மூர்த்தி மற்றும் எஸ். மரியூர் நகர தேவர் இளைஞர் அணியினர் விருப்பத்திற்கேற்ப நான் ஜோதியை திரு. பசும்பொன் அவர்களின் கையில் கொடுத்து தொடரோட்டத்தைத் துவக்கி வைத்தேன்.

Image1730.jpg
Image1732.jpg
Image1729.jpg
Image1728.jpg
Image1733.jpg
Image1734.jpg

Thevan

unread,
Oct 28, 2012, 7:28:10 AM10/28/12
to panbudan
புகைப்பட அடிக்குறிப்பு

தேவரின் திருக்கோவிலின் இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ளது புகைப்படக் கண்காட்சி அரங்கு. இதில் தேவர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

புகைப்படக் கண்காட்சி அரங்கின் உட்புறம்.
Image1737.jpg
Image1736.jpg
Image1735.jpg

Thevan

unread,
Oct 28, 2012, 7:54:41 AM10/28/12
to panbudan
புகைப்பட அடிக்குறிப்பு

தேவர் வாழ்ந்த இல்லம் திருக்கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது. 

வீட்டின் உள்ளே முற்றமும். இருபுறமும் மூன்று அமைந்துள்ளன. வலதுபுறம் அமைந்துள்ள முதல் அறைக்கு வல்லளார் இல்லம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தேவரின் தியான அறையாகும்.  


வீட்டின் இருபுறமும் தேவருக்கு பல்வேறு பொதுக்கூட்டங்களில் பல்வேறு சமுதாயத்தினரால் வழங்கப்பட்ட வாழ்த்ப்பாக்கள் வைக்கப்பட்டுள்ளன.

Image1743.jpg
Image1738.jpg
Image1741.jpg
Image1785.jpg

Thevan

unread,
Oct 28, 2012, 12:19:34 PM10/28/12
to panbudan
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவில் திருவிழா


இதனை திருக்கோவில் திருவிழா என்று குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது. 

இங்கு வரும் மக்களுக்கு தேவர், ஒரு சுதந்திரப்போராட்ட வீரரோ, அரசியல்வாதியோ, ஆன்மீகவாதியோ  கிடையாது. அவரை முருகப்பெருமானின் மறு அவதாரமாகத்தான் காண்கிறார்கள்.  

அதோடு ஒரு காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழாவைப் போலவே இந்த திருவிழா நடைபெறுகிறது. மொட்டையடித்தல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், ஜோதி தொடரோட்டம், விளக்குப் பூஜை போன்றவை காப்புக் கட்டி எடுக்கப்படுகிறது.

அதற்காக இங்கு வருபவர்கள் முழுக்க யோக்கியர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இங்கு வரும் கிராம மக்களில் எந்தவித கள்ளங்கபடமற்ற தன்மையையே காண முடிகிறது. 

பொதுவாக தேவர் ஜெயந்தி விழாவைப் பற்றி பலர் தவறாக எழுதுகிறார்கள். இங்கு வரும் மக்களில் பலர் அடாவடித்தனம் செய்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் மும்பையில் கணபதி ஊர்வலங்களை நடத்துபவர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் அடாவடிக்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது. சாதிச்சாயம் பூசப்படுவதால் இது பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. 
Image1782.jpg
Image1788.jpg
Image1800.jpg
Image1803.jpg

Mani Kandan

unread,
Oct 29, 2012, 9:09:03 AM10/29/12
to tamil_...@googlegroups.com
நாளை நடைபெற இருக்கும் தேவர் ஜெயந்தி விழா இனிமையான முறையில் நடைபெற எமது
வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

28 அக்டோபர், 2012 9:49 pm-ல், Thevan <apth...@gmail.com> எழுதியது:

> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

Thevan

unread,
Oct 31, 2012, 11:05:56 AM10/31/12
to panbudan
நண்பர்களே,

சார்ஜர் பழுது, பயணம், நண்பர்கள் சந்திப்பு காரணமாக தேவர் குருபூஜை தகவல்களை போட இயலவில்லை. விரைவிலேயே விவரங்களை எழுதுகிறேன்.


நாளை மதியம் 3 மணி முதல் 6 மணிவரை மதுரை மஹாத்மாகாந்தி நகர் பேரூந்து அருகே நண்பர்கள் சந்திப்பு நடக்கிறது எனது எண் 9655155825.

தஞ்சை சந்திப்புக திருச்சியிலேயே நடைபெறும். சென்னைச் சந்திப்பு திட்டமிட்டபடியே நவம்பர் 11ம் தேதி நடைபெறும். 

நன்றி

Thevan

unread,
Nov 1, 2012, 1:30:14 PM11/1/12
to panbudan
திருவிழாவில் விற்கப்படும் தேவர் சிலைகள். 

தேவர் சிலைகளை எடுத்துச் செல்லும் சிறுவர்கள்.
Image1819.jpg
Image1851.jpg
Image2038.jpg

Thevan

unread,
Nov 3, 2012, 5:31:50 AM11/3/12
to panbudan
அமெரிக்கன் பள்ளியில் படிக்கும்போது முத்துராமலி்ங்கத் தேவர் சகமாணவர்களுடன் எடுத்துக்கொண்ட படம். படத்தில் வலமிருந்து மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் தேவர், நான்காவதாக அமர்ந்திருப்பவர் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் தந்தை சூரிய நாராயணா. படத்தை வழங்கியவர் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
thevar.jpg

Thevan

unread,
Nov 4, 2012, 8:56:04 PM11/4/12
to panbudan
சிலா குத்துதல் என்ற வீர விளையாட்டு / நடனம்

பசும்பொன் திருவிழாவில் நான் கண்ட நிகழ்வுகளில் ஒன்று சிலா குத்துதல் அல்லது கம்பி குத்துதல்.

இதில் விலா எலும்புகளின் மேலே தோலில் ஒரு சிறு கத்தியின் உதவியுடன் கம்பிகளை சொருகுகின்றனர். பின்னர் எண்ணெய் விட்டு அந்த கம்பிகளை முன்னும் பின்னும் இழுத்து சரி செய்கின்றனர். பின்னர் முன்புறம் உள்ள கம்பிகளை ஒரு கயிற்றால் கட்டி அதனை கழுத்தைச் சுற்றி கட்டிக் கொள்கின்றனர். ஒவ்வொருக்கும் பல வருடங்கள் குத்திய அனுபவம் உள்ளது.

அதன் பின் மேளத்திற்கேற்ப நடனமாடுகின்றனர். இந்த வழக்கம் தஞ்சையைச் சுற்றியுள்ளவர்களுக்கு சாதாரணமானதே என்கின்றனர். பசும்பொன்னில் நடனமாடியவர்கள் இந்துக் கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 
Image1865.jpg
Image1900.jpg
Image1867.jpg
Image1868.jpg
Image1869.jpg
Image1870.jpg
Image1871.jpg
Image1873.jpg
Image1898.jpg
Image1899.jpg

Thevan

unread,
Nov 5, 2012, 9:40:02 PM11/5/12
to panbudan
தேவர் ஜெயந்தியின்போது மொட்டை அடித்துக் கொள்பவர்கள்
Image1920.jpg

Thevan

unread,
Nov 7, 2012, 8:36:56 PM11/7/12
to panbudan
தேவர் குருபூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த அன்னதான மற்றும் கலைநிகழ்ச்சி பந்தல்கள். 

அன்னதானத்தில் உணவு பரிமாறுவோர், உணவருந்துவோர்.
Image1908.jpg
Image1910.jpg
Image1912.jpg
Image1914.jpg

Thevan

unread,
Dec 4, 2012, 11:42:30 AM12/4/12
to panb...@googlegroups.com
வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவரைப் பார்க்கலாம். அவரின் பெயர் ஏ.ஓ. முகமது இப்ராஹிம். 86 வயதாகும் இவர் அருப்புக்கோட்டை நல்லூர் பள்ளிவாசல் ரோட்டில் வசிப்பவர் ஆவார். 

இவர் தேவருடன் 15 ஆண்டுகள் அரசியல் சமுதாயப்பணிகள் செய்தவர் ஆவார். இவர் பாரத தாயின் வீரத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் தேவர் மீசையை எடுத்ததற்கான காரணத்தை எழுதியுள்ளார். ஒருமுறை தேவரைப் பார்த்த ஒரு பெண் தேவரின் மீசை எவ்வளவு அழகாக இருகிறது என்று தேவரின் காதுபட பேசுகிறார். 

அதைக் கேட்ட தினமே தேவர் தன் தோற்றம் எந்த பெண்ணையும் கவரும்படி இருக்கக் கூடாது என்று கூறி மீசையை எடுத்து விட்டார் என்ற தகவலை இவர் பதிவு செய்திருக்கிறார். 


இவர், சாதி மத வேறுபாடு இல்லாமல் இருந்த மக்களை காங்கிரஸ் எவ்வாறு சாதி மதத்திற்குள் தள்ளியது என்று காங்கிரஸின் அரசியலை சாடுகிறார். 

இவரது பேட்டியை பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

-----------------------------------------------------------------
பசும்பொன்னில் அந்த பெரியவருடன் நான் எடுத்துகொண்ட படம்
Image1828.jpg

Thevan

unread,
Feb 24, 2013, 10:11:10 PM2/24/13
to panb...@googlegroups.com

பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்

ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.


ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.


தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.


ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது. 

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.


அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.



வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.


நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.


ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.


உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.


யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்…? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.

Thevan

unread,
Mar 13, 2013, 11:10:51 PM3/13/13
to panb...@googlegroups.com, anb...@googlegroups.com, housto...@googlegroups.com, naamt...@googlegroups.com, nanji...@googlegroups.com, oviyat...@gmail.com, paga...@googlegroups.com, pira...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, unita...@googlegroups.com, tamil_...@googlegroups.com, தமிழாயம்

வியாசர் விருந்து

 

வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது.

 

அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட வேண்டிய கருத்தல்ல. சாதாரண பேச்சின் ஓட்டமாகத்தான் இருந்தது.

 

ஆனால் கைதட்டல் பலமாக இருந்தது. காரணம் என்னவென்று தெரியாமல் ராஜாஜி திகைத்து திரும்பிப் பார்த்தபோது தேவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் மக்கள் கைதட்டினர் என்பதை ராஜாஜி புரிந்துகொண்டார்.

 

“இப்போதுதான் நீங்கள் எதற்காக கைதட்டினீர்கள் என்று புரிந்தது” என்று சொன்ன ராஜாஜி தொடர்ந்து பேசி முடித்தார்.

 

ராஜாஜி பேசி முடிப்பதற்குள் தேவர் மேடையில் வந்து அமர்ந்தார். ராஜாஜி பேசி முடித்தததும் தேவரைப் பேசச் சொன்னார். புத்தகத்தில் கை வைத்து புத்தகத்தை பற்றி மட்டும் பேசுமாறு சைகை மூலம் தெரிவித்தார். அதைப் புரிந்துகொண்ட தேவர் பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே ராஜாஜி காட்டிய சைகை பற்றி பேசும் தோரணையில், “அடியேன் எப்போதும் எடுத்துக் கொண்ட பொருள் மீது எல்லை மீறாமல் பேசுகிற பழக்கம் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார். அந்த சொற்பொழிவின் சாரம்.

 

 

தெய்வீகத்தை பெறுவதற்கு தடையாக இருப்பவை மூன்று ஆசைகள். அதில் ஒன்றைக் குறைத்து இரண்டாக்கினார்கள் ஞானிகள். மண், பொன், பெண் என்று மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும், பொன்னாசையும் பொருள் ஒன்றுதான். மண் இருந்தாலும் பொன் கிடைக்கும், பொன் இருந்தாலும் மண் கிடைக்கும். ஆகையால் இந்த இரண்டையும் சேர்த்து ‘காஞ்சனம்’ என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் என்று கருதினார்கள்.

 

பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள். ஆக, மூவாசை என்று வைத்த மண், பொன், பெண் என்ற மூன்றையும், ‘காம-காஞ்சனம்’ என்ற இரண்டாகக் குறைத்தார்கள். இந்த காம-காஞ்சனம் மூலம் வருகிற அழிவு என்ன? என்பதை, அகில இந்தியாவுக்கும் காட்டுவதற்காக,  தமிழ் மூலம், நாட்டில் சிறப்பாக இலக்கியம் மூலம் காட்டுவதற்காகத்தான் இரண்டு நூல்கள் வந்தன.

 

“காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன்

காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன்”

 

காமத்தின் மூலம் உலகம் எந்நிலை பெறும்? எந்நிலையில் உள்ளவனும் எவ்வாறு கெடுவான் என்பதை காட்டுவதற்காக ‘ராமாயனம்’ ஒரு நூலாக வந்தது.

காஞ்சம் என்ற மண்ணாசையையும், பொன்னாசையையும் வைத்து, பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்காகவே ‘பாரதம்’ வந்தது.

 

அந்த இரண்டு முறையில், சாதாரணமாக வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிக்கோளை கவனிப்பார்கள். ஒரு கட்டடத்தை பார்க்கும் இருசாரரைப் போல. சாதாரணமாக ஒரு கட்டடத்தை அலங்காரத்திற்காக பார்க்கிற நபர்கள் மேலேயுள்ள சித்திரங்கள், சிற்பங்களை பார்ப்பார்கள். ஆனால் கட்டடம் எந்நிலையில் எவ்வளவு காலத்திற்கு உறுதியாக இருக்கும் என்பதை பார்க்கிற என்ஜினீயரிங் தொழிலில் இருப்பவர்கள் அதைப் பார்க்க மாட்டார்கள்.

 

புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை. புறத்தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம்.  அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூல்களும் இரண்டு புதையுண்ட பொருட்களை வைத்துள்ளன. ராமாயணம் வைத்திருக்கின்ற புதைபட்ட பொருள்தான் வாதிஷ்டம் என்கின்ற ஞான நூலாகும். அதுபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைபட்ட பொருள்தான் ‘பகவத் கீதை’ அதிஞான நூலாகும்.

 

பாரதம், ராமாயணம் ஆகிய இரண்டில் ஞானிகள் எடுத்துக் கொள்வது வாதிஷ்டம், பகவத் கீதை என்ற இரண்டைத்தான். சாதாரண மனிதர்கள் எடுத்துக்கொள்வது நடந்த முறைகளைத்தான் என்பது பெரியோர் அறியோர் அறிந்ததே. அம்மாதிரியாக நின்ற இரண்டில், இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் பல விபரீத எண்ணங்கள் எழுந்துள்ளன. இப்படி விபரீத எண்ணங்கள் பல வரும் என்று கருதியே தமிழ் முன்னோடிகள் என்ன சொன்னார்கள்?

 

“முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,

அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”

 

என்று குறிப்பிட்டார்கள். முகத்தின் கண்கொண்டு புறத்தோற்றத்தை பார்க்கின்ற நபர்கள், அகத் தோற்றமாக இருக்கின்ற ஒன்றை காணச் சக்தியற்று, காணுவதற்கு முயற்சி செய்யாது, முயற்சி செய்பவனை வீணாக முயற்சி செய்பவன் என்று இகழ்ந்து, நல்ல காரியங்கள் அனைத்தையும் அவைகள் எல்லாம் கையாளுவதற்கு அனுபவத்திற்கு வராதவை, வர முடியாதவை, வரவேண்டாதவை என்று பலவீனத்தினால் மூன்றாக பிரித்துப் பேசி விடுகிறார்கள்.

 

இதை ஆங்கிலம் படித்தவன், அதெல்லாம் நடைமுறைக்கு உதவாத வெறும் தத்துவங்கள் என்று பிதற்றி, இப்படிப் பிதற்றுபவன் பெரிய மனிதனாகி, அவன் மூலம் ஞானம் பாழான காலம்தான் இந்தக் காலம். ஏனென்றால் நம்முடைய தாய்மொழித் தமிழிலேயே தகராறு ஏற்பட்டிருக்கும் காலம் இது.  வடமொழி-தென்மொழி ஆகிய இரண்டும் நமது சொந்த மொழிகள்தான். இது அடியேன் சாகசத்திற்காகச் சொல்லுவதல்ல, சமாதானத்திற்காக சொல்வதல்ல, ஒப்புக்காகச் சொல்லுவதல்ல. இப்படிச் சொன்னால் கிடைக்கும் பலன் கருதி ‘பாப்புலாரிட்டிக்காகவும் சொல்லுவதல்ல. அந்த முறைக்குப் போவதும் எனக்குப் பழக்கமும் அல்ல. என் பிறவிக் குணமும் அதுவல்ல. நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்பர் சுவாமிகளை உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு தெய்வீகத் தமிழர். அவரைப் பற்றி இங்கு யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர் நமது மொழி பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?

சிவ பெருமானுக்கு லட்சணம் சொல்கின்ற பொழுது,

 

“வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்

வடமொழியும் – தென் தமிழும் ஆணவன் காண்’’

 

என்று குறிப்பிடுகிறார்.  இது தெரிந்தால் சைவ சித்தாந்தியாக இருக்கின்ற எவரும் அப்பரை விட பெரிய சைவ சித்தாந்தியாக இருக்க முடியாது. வட மொழி நமக்கு உரியதல்ல என்று சொல்லும் பாவத்தை உடனே கைகழுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

அதற்கடுத்தாற்போல் வடமொழி என்ற சமஸ்கிருதம் வருகின்ற காலத்தில் வட மொழிக்கு முக்கிய கர்த்தாவாக இருந்தவர்கள் பலர். இருப்பினும் வடமொழியை நன்றாக பயின்று தெய்வ கிருபையாலே 16 வயதிலேயே சர்வகாரியங்களையும் விரிவாக எழுதத் தெரிந்த நிலையில் இருந்தவர் ஆதிசங்கராச்சாரியார் ஆவார். அவர் பராசக்திக்கு மீனாட்சிக்கு லட்சணம் கூற வருகின்ற காலத்தில், மீனாட்சியின் முலைப்பாலுக்கு லட்சணம் கொடுக்கிறார்.

 

நாம் ஏன் மீனாட்சி என்று பெயர் கொடுத்தோம் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும். நம்முடைய முன்னோர்கள் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் அல்ல. மெய்ஞானத்தை குருட்டு நம்பிக்கை கொண்டவர்கள் என்று நினைக்கின்ற ஆங்கிலப் படிப்பு இன்றைக்கு இருக்கின்றது. ஆகையால் நான் இதனை உங்களுக்கு வெளியிட ஆசைப்படுகிறேன்.

 

மீன்ட்சி என்பது வடமொழி. அங்கயற் கண்ணி என்பது தென்மொழி. இந்த இரண்டையும் தெரிவிக்க வேண்டிய இடம் மதுரை. அங்கயற் கண்ணி என்ற பெயரையும் மீனாட்சி என்ற பெயரையும் ஏன் பராசக்திக்குக் கொடுத்தார்கள்? என்று நாம் கருதுவோமானால், உலகிலேயே நித்திரையற்ற ஒரு ஜென்மம் இருக்கிறதென்றால், அது மீன்தான். நித்திரையற்ற நிலையில் இருக்கின்றதெல்லாம் யோகாரூடமான நிலையில் வசிக்கிறது என்பதுதான் சித்தாந்தம். அந்த முறைக்கு வருவதைத்தான்,

 

“நித்திரை கெட்டு நினைவோடு இருப்போருக்கு

முத்திரை ஏதுக்கடி குதம்பாய்?”

 

என்று குறித்து, ஆசனங்கள், முத்திரைகள் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களின் உடல் என்றைக்கும் நல்ல நிலையில் இருக்கும் என்று கண்டார்கள். அவ்வாறு நின்றதால்தான் உலக லௌகீக தோரணையில் அந்த மீனினம் உற்பத்தியாவதில்லை. ஆண் மீன் பெண் மீனை நோக்க – பெண் மீன் ஆண் மீனை நோக்க கருக்கொள்ளும், பார்வையால் கருக்கொண்டு, அது சினப்படைந்து முட்டைகளை ஈனும். அந்த முட்டைகள் தண்ணீரில் மிதந்து நிற்கும். அதற்கு ஒரு காலம் வருகின்ற காலத்தில்  மீண்டும் அந்த இரு மீனும் அவற்றை நோக்க  அவை குஞ்சுகளாக மாறும்.

 

நோக்கால் கர்ப்பம், நோக்க உற்பத்தி மீனினம் ஒன்றுக்கேதான். அவைகள் அப்படியானதன் பிறகு மிகச்சிறிய ரத்த அணுக்களாக மிதந்து கொண்டு நிற்கும் காலத்தில், விரால் போன்ற பெருத்த மீன்கள் பாய்ந்து சென்று இரையெடுக்கச் போகுமானால், அவை சின்னாபின்னமாக சிதைந்து அழிந்து போகும்.

இதற்காக அந்த ரத்தமாக நிற்கின்ற கொடி போன்ற  இளம் மீன் குஞ்சுகள் கெட்டிபடும் வரை மீண்டும் பார்த்துப் பார்த்து பசியமர்த்தும் அந்த மீன் வர்க்கம். இதைத் தெரிந்துதான் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற பெரும்பாடலை மீனாட்சி குறித்துப் பாடினான் நமது தமிழன்.

 

இது பெருமைக்காகப் பாடியதல்ல. லௌகீகமாக, காம ரீதியாக வாழ்கின்ற வாழ்க்கையில் முலைப்பாலைத் தந்து பசியமர்த்த வேண்டும். தாய் பராசக்தி பார்வையாலேயே பசியமர்த்துவாள். அந்தப் பெருமைக்குரிய பராசக்தியை வணங்குபவர்கள் தமிழர்கள். இதை நாகரீகப் பெயரால் நமது விஞ்ஞானிகள் மீனினம் இப்படி வாழ்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இதைத் தெரிந்து பெயர் வைத்திருக்கிற நமது முன்னோர்கள்?

 

“எங்கள் தத்துவ ஞானிகள் எல்லாரும் சாதாரண விஞ்ஞானிகள் மட்டுமல்ல. அவர்கள் அனைவரும் அதிமேதையான விஞ்ஞானிகள்” என்று அன்றே குறிப்பிட்டார்கள். ஆகையால் ஒன்றும் தெரியாதிருந்த காலத்தில், மூடபக்தியை உண்டாக்கி தெய்வம் என்று மக்களை பாழ்படுத்தி விட்டார்கள் என்று கூறுபவர்களுடைய சித்தாந்தம், விவரமற்றவர்களின் சித்தாந்தமாகும். அப்படிப்பட்ட மீனாம்பிகைக்கு முலைப்பால் எப்படிப்பட்டது என்பதை அவர் குறிக்கின்ற நிலைமை வரும்பொழுதுதான் அந்த முலை உன்னாமுலை குறிக்கின்றார்கள். ஏன் அதை அப்படிக் குறிக்கின்றார்கள் என்று நீங்கள் கேட்பீர்களோயானால், அது சாதாரணமாக இயங்குவது அல்ல என்பதற்காகத்தான். சிவசக்திக் கூறையும்  இரண்டாகப் பிரித்தது போன்றும் அவை ஒன்றே என்று குறிக்கின்றார்கள். அப்படி குறிக்கின்ற பொழுதுதான்,

 

“சிவம் சக்தி தன்னை ஈன்றும்

சக்தி சிவம் தன்னை ஈன்றும்

உவந்து இருவரும் புணர்ந்து உலகு உயிர்

எல்லாம் என்றும் பவன் பிரம்மச்சாரியாகும்

பான் மொழி கன்னியாகும்

தவம் தரும் ஞானத்தோருக்கு

இத்தன்மைதான் தெரியும் அன்றோ.”

 

என்று குறித்தது தமிழ் நாகரீகம். இந்த தன்மையில் நிற்கின்ற பொழுதுதான், அந்த பராசக்தியின் முலைப்பால் எத்தன்மையுடையது என்று சொல்லும் பொழுது, அது திருஞான சம்பந்த குழந்தைக்கு தரப்பட்ட காலத்தில், அதைப் பெறுவதற்காக  நின்ற குழந்தையை யார் என்று ஆதிசங்கரர் குறிக்கிறார் என்று கேட்டால், ‘திராவிட சிசு’ என்று குறிக்கின்றார். எப்படி?

 

“வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்

வடமொழியும் – தென் தமிழும் ஆணவன் காண்’’

 

என்று அப்பர் குறித்தாரே அதுபோல. இப்படி அம்பிகையின் திருமுலைப்பாலை வாங்குவதற்காக நின்ற குழந்தையை அவர் ‘திராவிட சிசு’ என்று குறிக்கின்றார். இதை ஆதிசங்கரரே குறிப்பாரேயானால், திராவிட என்ற ஒரு நாகரீகமே கிடையாது. தமிழ் என்ற ஒரு மொழியே கிடையாது. அதற்கு ஒரு அறிவு கிடையாது. எல்லாம் சமஸ்கிருதத்தினின்று மொழி பெயர்க்கப்பட்டவை என்று பேசும் பிராமணர்கள் அத்தனை பேரும் சங்கரருக்குப் பாவம் செய்தவர்கள் ஆவர். துரோகம் செய்தவராவார்கள்.

 

ஆகையால் இங்கே வடமொழி, தென்மொழி என்பவை இரண்டு பிளவை.  இரண்டு சாரரும் உண்டு பண்ணினார்கள். ஒரு சாரர் மட்டுமல்ல இந்த இருசாரரும் பண்ணின பாவம்தான் இந்த இருசாரரையும் அழித்த, தனித்த நாஸ்தீகத்தில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறது.

 

இந்த வீண் சண்டை இல்லாதிருக்குமேயானால், இந்த விரயமான புத்தி தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டாது.  அது தீர வேண்டும் என்பதுதான் இன்றைக்கு நாம் அடைய வேண்டிய விருந்தாகும். அந்த நிலைமைக்கு நாம் வருவோமேயானால், வாதிஷ்டத்தில் இருக்கின்ற ஞானத்தையும் நம்முடைய சிவஞானபோதத்திலும் திருக்குறளிலும் இருக்கின்ற ஞானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து நின்றதல்ல. ஒன்றை விட்டு ஒன்று இயங்க முடியாது என்பதை உத்தம இந்தியன் உணர்வான். இந்த நிலைக்கு வருகின்றபொழுது இது மற்றொன்றைக் காட்டுகின்றது,

 

“முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,

அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”

 

என்று மகான்கள் சொன்னார்களே, அவர்கள் எதன் மூலம் சொன்னார்கள் என்று கேட்டால், பகவான் இந்த பகவத் கீதையைச் சொல்கின்ற காலத்தில் “அர்ஜுனா, என்னுடைய விஸ்வரூபத்தை நான் உனக்குக் காட்டுகின்றேன். நீ அதை இந்தக் கண்கொண்டு பார்க்க முடியாது. அதைப் பார்ப்பதற்கு ஒரு கண் தருகிறேன்” என்று சொல்கிறார். அதே நேரத்தில் தான் குருடாக உள்ள அந்த அரச பரம்பரையில் உள்ள ஒருவருக்கு, “உனக்குத் கண்ணைத் தருகிறேன் நடக்கின்ற பாரதத்தை பார்க்கிறாயா?” என்று வியாசர் கேட்கிறார். அவர், “இந்தக் கொடுமையைப் பார்க்க எனக்கு கண் வேண்டாம்” என்று சொல்கிறார்.  

 

ஆனால் தூரத்தில் இருக்கின்ற ஒன்றை, என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டே, அந்த முறையிலே வியாசர் அதைக் குறிக்கின்றார். கிருஷ்ண பரமாத்மா சொல்லுகின்ற இடத்திலிருந்து குறித்ததல்ல இது. நீண்ட தூரத்திற்கப்பாலிருந்து, “ஆத்ம சக்தியால் காதின்றி கேட்கலாம், கண்ணின்றி பார்க்கலாம், மூக்கின்றி முகரலாம், முடவனும் மலையேறலாம்” என்று சொல்லுகின்ற உபநிஷத்தின் லட்சணங்களுக்கிணங்க, தூரத்திலிருந்து கிருஷ்ண பரமாத்மா போதித்த ஒன்றை, இன்னதை போதித்தார் என்று எழுதியவர் வியாசர்.  

 

அந்த நிலைக்கு வருகின்றபொழுது நெற்றிக் கண் என்ற ஞானக் கண் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே உலகிற்கு வந்த நூல் பாரதமாகும். ஆனால் இது இருக்க முடியுமா? அப்படி மூன்றாவது கண்ணைப் பார்த்தவர்கள் யார்? அப்பொழுது ஒற்றைக் கண் ஞானி என்று புத்தகத்தில் எழுதி இருக்கின்றார்களே அப்படி கேலிக் கூத்தாக இருப்பதா? என்று கேட்கின்ற காலம் இந்தக் காலம். நம்பு என்று சொல்லுகின்ற மாடல் 57 அல்ல.

 

உதாரணமாக காட்டவேண்டுவது கடமையாகும். இதிலே இரண்டு பேர் பிரசாங்கிகள், இரண்டு தன்மையில் தவறிழைக்கிறார்கள். பண்டிதர்கள் என்பவர்கள் பேசுகின்ற பொழுது தங்கள் பாண்டிதத்தை காட்டவேண்டியதற்காக பாமரனுக்குப் புரியாத நிலைமையில் பேசிப் பாழாக்குகின்றார்கள். அதேபோல பாமரனுக்குப் புரிகின்ற நிலையில் இலக்கியம் பேசுகிறேனென்று சொல்லி பண்டிதத் தன்மையிலுள்ள லட்சணம் தெரியாதவர்கள் வீணாக வார்த்தைக்கு மேல் வார்த்தைகளைக் கொட்டி மக்களைப் பாழாக்குகின்றார்கள்.

 

உத்தமப் பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற பொழுதுதான், பண்டிதனுக்கும் ரசிக்க வேண்டும், பாமரனுக்கும் புரியவேண்டும் என்று சொன்ன நாடு இந்த நாடு. அதுதான் பிரசங்கியின் கடமையாகும். அப்படி பிரசங்கத்திற்கு வருகின்ற பொழுது, மூன்றாவது கண் எத்தன்மையது என்பதை உங்களுக்கு உதாரணமாக அடியேன் காட்ட வேண்டும்.  

 

மனிதனுக்குச் சும்மா இருக்கின்ற காலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சாக்கிராவஸ்தைக் காலம். இதே நபர்களுக்கு நித்திரையவஸ்தை என்ற ஒன்று உண்டு. அதுதான் சொப்பன அவஸ்தை என்று சொல்லப்படுகின்ற காலம்.  சொப்பனத்திலே, தூக்கத்திலே இருக்கின்ற காலத்திலே கண்ணைத் திறந்து கொண்டு தூங்குகின்றவர்களும் உண்டு. சிறுபான்மையினோர் பாதிக் கண்ணை திறந்துகொண்டு தூங்குகின்றவர்களும் உண்டு. பூராக் கண்ணையும் மூடிக் கொண்டு தூங்குகின்றவர்கள்தான் பெரும்பான்மையோர் ஆவார்கள். பூராவும் திறந்து தூங்கினாலும், சரிபாதி திறந்து தூங்கினாலும் சரி.

 

நித்திரை காலத்தில் பார்வை கிடையாது போனதன் காரணம் என்ன?  அடியேன் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற காலத்திலேயே உங்களுக்கு ஞாபகம் பசி அதிகமாகிவிட்டது என்று வந்தாலோ, நேரமாகிவிட்டது என்று வந்தாலோ, வீட்டை நினைத்தாலோ என்ன ஆகும்? நான் பேசுகின்ற வார்த்தைகள் அலைகள் ரூபமாக வந்து உங்கள் காதுகளில் விழுந்தாலும் உள்ளே இருக்கின்ற சுலோதாம் என்கின்ற இயந்திரம் அதை வாங்கி ஒழுங்காக உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தாலும் ஞாபகம் ஆகிய மனம் வேறிடத்திற்குச்  சென்றுவிட்டதால், நான் பேசியது உங்களுக்குக் கேட்காது. “என்ன சொல்லுகின்றீர்கள்? ஐயா, என்ன சொல்லுகின்றீர்கள்? ஒரு ஞாபகமாகவல்லவா இருந்தேன்” என்று சொல்வீர்கள். இது மனிதப் பழக்கம்.

 

அப்படியானால் மனிதன் உடம்போடு எங்கு இருந்தானோ, இந்த இடத்தில் ஐம்புலனும் இருந்தாலும் மனம் அதனோடு ஒன்றியில்லாதபோது அது மனம் இருக்கின்ற இடத்திற்குப் போகுமே தவிர, உடல் இருந்த இடத்திற்குப் போகாது என்பது சித்தாந்தம். ஆகையால்தான்,

 

“எத்தொழிலைச் செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும்

முத்தர் மனம் இருக்கும் மோனத்தே”

 

என்று குறித்தார்கள். அந்த நிலையைப் பெற்ற பெரியோர்தான் பூலோகத்தில் வாழ்ந்தாலும் வானுலகில் வாழ்ந்தார்கள் என்று குறித்தார்கள். அவர்கள் எழுதிய நூல்தான் பாரதமே தவிர, பூலோகத்தில் தன்னைப் பெரிய மனிதனாக்கிக் கொள்ள வேண்டுமென்று, அரசியல்வாதியைப் பின்பற்றி, பத்திரிகைக்காரனைப் பின்பற்றி வாழ்க்கையைப் பெரிது படுத்துவதற்காக இன்றைக்கு நூல் எழுதுகின்றார்களே நபர்கள், அப்படி எழுதிய நூல் அல்ல இந்த வியாசர் விருந்து. அந்த நிலைக்கு வருகின்றபொழுது மனம் ஒன்றிப்போனதால் நம்முடைய ஐம்புலனாகிய கண்ணுக்குப் பார்வை கிடையாது. அப்படி இருக்கின்ற பொழுது சொப்பனம் என்ற ஒன்று வருகின்றது.

 

சொப்பனம் வருகின்ற காலத்திலே அழகாக வருகின்ற உருவத்தைக் கண்டு நாம் சந்தோஷிக்கின்றோம். அருவருப்பான உருவத்தைக் கண்டும் நாம் அருவருப்படைகின்றோம். பயங்கரமான உருவத்தைக் கண்டு நாம் பயபீதியடைகின்றோம். இதைப் பார்ப்பது எந்தக் கண்? இதுதான் இந்த சபைக்கு நான் கொடுக்கக் கூடிய கேள்வியாகும். இந்தக் கண்ணுக்குப் பார்வை கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது சொப்பனத்தில் பார்வைகள் நடைபெறுகின்றன என்றால் அதைப் பார்ப்பதுதான் அகக்கண். அதைப் பார்ப்பதுதான் மனக்கண் என்பதை யோகிகளும் ஞானிகளும் கண்டார்கள். இதைக் கருமிகள் நித்திரையிலே அனுபவிக்கிறார்கள். அந்தக் கண் கிடைத்தது வியாசருக்கு. அதைக் கொண்டு எழுதினார் இந்த புத்தகத்தை என்பதுதான் அடியேன் இன்றைக்குச் சொல்ல வேண்டுவதாகும்.

 

அந்த நிலைமையில் அந்தத் தன்மையில் உயர்ந்து நின்றதுதான் இந்த பாரதம். அப்பாரதத்துக்குள்ளே பெருமணியாகக் கிடைத்ததுதான் இந்த பகவத் கீதை. எனவே வியாசர் முனிவர் எழுதிய மகாபாரதம் என்பதை ‘வியாசர் விருந்து’ என்பதன் பெயரால் ராஜாஜி அவர்கள் எழுதி வழங்கி உள்ளார்கள். அதனை வாங்கிப் படித்து பயனடைவது நமது கடமை”

இவ்வாறு தேவர் அந்த விழாவில் பேசினார்.

-       முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

---------------------------------

 

 

 

 

 

 

 

Thevan

unread,
Jul 2, 2013, 9:49:25 AM7/2/13
to panbudan
thevar spritual march.JPG

Thevan

unread,
Jul 3, 2013, 6:29:18 AM7/3/13
to panbudan

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும்

ஆன்மீக நடைபயணம்

பாசத்திற்குரிய உறவினர்களே, அன்புக்குரிய நண்பர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அண்மைக் காலமாக இந்த குருபூஜையின்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே இந்த குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டுகோள் விடுத்து, அந்த தேவர் பெருமகனார் மற்றும் பெரியோர்களின் நல்லாசியுடன் ஆன்மீக நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆகஸ்டு 15ம் தேதி பசும்பொன்னில் ஆரம்பிக்கும் இந்த பயணம் தென் மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் பசும்பொன்னில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு, பேறையூர், திருமங்கலம், மதுரை, உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், பழனி, கரூர், திருச்சி, கும்பகோணம், நாகபட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்திற்கான வழித்தடங்களை தீர்மானிக்க அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தோர் ஆலோசனை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பயணத்தில் தேவர் குருபூஜைக்கு வருவோருக்கு தேவரைப் பற்றிய விழிப்புணர்வும், பூஜைக்கு அமைதியாக வந்து செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படும். இந்த பயணத்திற்கு அனைவரும் நல்லாதரவு தருமாறு கோருகிறேன். இந்தப் பயணம் பற்றி அதிகம் அறிய விரும்புவோர் 9047440542 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.

இப்படிக்கு

உங்கள் அன்பன்

அ. பெருமாள் தேவன்

Thevan

unread,
Jul 7, 2013, 9:23:00 PM7/7/13
to panbudan

அன்பு நண்பர்களே,

 

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரி ஆன்மீக நடைபயணம் நடத்த இருப்பதை அறிவித்ததும் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எப்போது வருவீர்கள், நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும், நாங்கள் எப்படி கலந்துகொள்வது என்று விசாரித்து தங்களின் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே, இந்த தகவலுடன் ஆன்மீக நடைபயணத்திற்கான தோராயமான வரை படத்தை இணைத்திருக்கிறேன். இன்னமும் இந்தப் பாதை இறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு வட்டம், மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் எந்தப் பாதையில் செல்வது இந்தப் பயணம் பயன் மிக்கதாக இருக்கும் என்பதை தெரிவித்தால் அதற்கேற்ப இந்தப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே, தோராயமாக 2000 கி.மீ. நீளமுள்ள இப்பாதையை 75 நாட்களில் கடக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த பயணத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக இதில் யார் கலந்துகொள்ளலாம்? எவ்வாறு கலந்துகொள்ளலாம்? எவ்வாறு உதவலாம்? என்பதை விவரிக்க விரும்புகிறேன்.

 

யார் - எவ்வாறு கலந்துகொள்ளலாம்?

1. இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக 18 வயது நிறைவடைந்தவர்களாக, 45 வயதுக்கும் அதிகமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.

 

2. பங்குபெறுபவர்கள் தன்னிச்சையாகவே பங்கேற்க வேண்டும், யாரையும் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.

 

3. மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

 

4. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும்.

 

5. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

 

6. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்னதாக ஒரு படிவம் அளிக்கப்படும் அதில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பித் தரவேண்டும்.  

 

7. வேலை பாதிக்கப்படுவது, சம்பள இழப்பு ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது.

 

8. தான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும் என்ற நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

 

9. இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ஒருநாள் முழுவதுமாக பங்கேற்க வேண்டும். அதாவது 30 கி.மீ. தூரம் வரை பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொள்பவர்கள் மட்டுமே இந்த பயணத்தில் கலந்துகொள்பவர்களாக கருதப்படுவர். அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு இறுதியில் ஆன்மீக நடைபயணத்தில் பங்கேற்றதற்கானச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

10. அதற்கும் மேலாக, 3, 7, 11, 15 நாட்கள், ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை என்ற கால அளவிலும் கலந்து கொள்ளலாம்.

 

11. இதில் ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக பயணத் துவக்கத்தில் நடைபெறும் திருப்பணி அர்ப்பணிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். அதாவது அவர்கள் துறவு மேற்கொள்வது போல தலையை மொட்டையடித்து, மஞ்சள் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். பயணம் நிறைவடையும் வரை சவரம் செய்ய அனுமதிக்கப்படாது.

 

12. நடை பயணத்தில் ஒரு நாள் பங்கேற்பவராக இருந்தாலும் அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டும்.

 

13. மஞ்சள் நிற ஆடையில் எந்தவித எழுத்துக்களோ, அடையாளங்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஜிப்பா, சட்டை, வேட்டி, பேன்ட் அனிந்துகொள்ளலாம்.

 

14. அதேபோல நடைபயணத்தின்போது புகைப்பிடித்தல், மது அருந்துதல், வேறு எந்த வகையிலான போதைப் பழக்கங்களிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.

 

15. முக்கியமாக நடை பயணத் திட்டக் குழுவின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும்.

 

மேலும் ஏதாவது விவரம் தேவைப்படுபவர்கள் 9047440542-ல் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

 

நன்றி.

 

 

 

 

thevar spritual march 2.JPG
route map tamil 1.JPG

Thevan

unread,
Aug 13, 2013, 4:30:31 AM8/13/13
to panbudan

அன்புள்ள நண்பர்களே, சொந்தங்களே,

 

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும் ஆன்மீக நடை பயணத்திற்கான அனுமதி கோரும் விண்ணப்பத்தை நேற்று மாலை 4 மணியளவில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான திரு கதிரவன் உடன் சென்று தமிழக காவல்துறை தலைவரான (டிஜிபி) ராமானுஜத்தைச் சந்தித்துக் கொடுத்தேன்.

 

அவர், சிபிஐ போலீசாருடன் கலந்தாலோசனை செய்துவிட்டு பதில் சொல்வதாக தெரிவித்துள்ளார். எனவே ஆகஸ்டு 15ம் தேதி துவங்க இருந்த இந்தப் பயணம் மேலும் ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்குத் தள்ளிப் போடப்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஒருவேளை இந்தப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி தராவிட்டால் பசும்பொன்னை சுற்றிலும் 50 கிமீ தூரம் வரையுள்ள கிராமங்களுக்குச் சென்று குருபூஜைக்கு வருபவர்களை அமைதியாக வந்துசெல்லுமாறு வேண்டுகோள்  விடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

 

முன்னதாக நேற்று முன்தினம் (ஆகஸ்டு 11ம் தேதி) தி.நகரில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் பார்வேர்டு பிளாக் கட்சியின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த பல்வேறு தேவர் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களின் மத்தியில் நடைபயணம் குறித்து அறிவித்தேன். பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதுவரை இந்தப் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Thevan

unread,
Aug 15, 2013, 7:38:41 AM8/15/13
to panbudan
நண்பர்களே, சொந்தங்களே,

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும் ஆன்மீக நடைபயணம் குறித்து விசாரிக்க இன்று எங்கள் ஊர் காவல் நிலையத்திலிருந்து சப் இன்ஸ்பெக்டர் திரு உதயக் குமார் என்னை தொலைபேசியில் அழைத்தார். 

நடைபயணம் குறித்த விவரங்களுடன் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் ஸ்டேஷன் சென்றேன்.

இன்ஸ்பெக்டரை ஏற்கனவே என் தம்பிகளின் சொத்துப் பிரச்சனை காரணமாக சிலமுறை சந்தித்திருந்ததால் அவர் என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு நீங்கள்தானா அது என்று கேட்டார். 

எனது பயண விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் அவரை போனில் தொடர்புகொண்ட கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு ஆனந்தன் என்னிடமும் பேசினார். நாங்கள் 144 போட இருக்கிறோம். நீங்கள் அனுமதி பெறாமல் நடைபயணத்தை நடத்தக் கூடாது என்று சொன்னார். நானும் நடத்தப் போவதில்லை என்று சொன்னேன்.

ஆகஸ்டு 15ம் தேதி துவங்க இருப்பதாக அனுமதிக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததால் எங்கே அனுமதி பெறாமல் ஆரம்பித்திருக்கலாமோ என்று கமுதி போலீசார் சந்தேகப்பட்டனர் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. 

பின்னர் அனுமதியில்லாமல் நடைபயணத்தை துவக்க மாட்டேன். மீறி ஆரம்பித்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்று என்று எழுதித் தரச் சொன்னார்கள் நானும் கையொப்பமிட்டு கொடுத்தேன். அந்த ஒப்புதலின் பிரதி ஒன்றை நான் பெற்றுக் கொண்டேன். 

தகவலுக்காக மட்டும். 

Thevan

unread,
Aug 24, 2013, 8:19:47 AM8/24/13
to panbudan
நண்பர்களே, சொந்தங்களே,

இதுதான் தமிழக போலீஸ் டிஜிபி எனக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் ஸ்கேன் காப்பி.

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரிக்கை விடுத்து நடைபயணம்
மேற்கொள்வதற்காக அனுமதி வேண்டி டிஜிபியிடம் விண்ணப்பிந்திருந்தேன்.

அவர் யூனிட் அதிகாரிகளிடம் தகவல் சொல்லி இருப்பதாகவும் அவர்களிடம் அனுமதி
பெற்றுக் கொள்ளுமாறும் பதில் அளித்துள்ளார்.

விரைவில் இந்த கடிதத்தை அவர்களுக்கு அனுப்பி அனுமதி கேட்க இருக்கிறேன்.
DGP_ LETTER.jpg

Thevan

unread,
Sep 29, 2013, 1:46:35 AM9/29/13
to panbudan
தேவரின் ஆன்மீக பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு நேற்று பசும்பொன் தேவர் ஆலயத்தில் துறவு மேற்கொண்டபோது எடுத்த படம். படத்தில் இடது புறம் இருப்பவர் என் உடன் பிறந்த சகோதரர் மூர்த்தி, உத்திராட்ச மாலையை அணிவிப்பவர் தேவரின் மாமா மகன் சத்தியமூர்த்தி. 
DSC01313.JPG

Thevan

unread,
Oct 3, 2013, 10:23:26 PM10/3/13
to panbudan

மதம் இல்லாமல் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லையேல் ஆட்சியில்லை. இன்றைய நிலைமை எப்படி வந்திருக்கிறது என்றால், ஆங்கிலப் படிப்பினால் ஒழுக்கத்தையே மறந்து சமுதாய, திறமை என்பதை மாத்திரம் பிரதானமாகக் கொண்டு வயிறு பிழைப்பதற்கு என்னென்ன முறைகளைக் கையாள வேண்டுமோ அவைதாம் அறிவாளிகளின் முறைகள் என்று கொண்டு, ஆத்மீக வளர்ச்சி, பழமை கர்நாடகமென்று ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.

 

-       29.5.1956 அன்று தேவர் மதுரை (தற்போது தேனி) மாவட்டம் பெரியகுளம் அர்ச்சகர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் ‘ஆகமம்’ என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றியபோது பேசியது. 

Thevan

unread,
Oct 7, 2013, 2:09:27 AM10/7/13
to panbudan
நேற்று கோடம்பாக்கம் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேவரின் 106 வது குருபூஜை சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய முருகையா பதிப்பகத்தின் உரிமையாளரும் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான திரு முத்துசாமி பேசும்போது குரு பூஜை என்று ஏன் சொல்ல வேண்டும் என்று விளக்கிப் பேசினார். 
அப்போது அவர்  பேசியதாவது- 

தேவர் ஒரு சித்தர். அவர் மதுரையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அங்கு வந்த வல்லநாடு சாது சுவாமிகள் வாருங்கள் பசும்பொன் சென்றுவிடலாம் என்று கூறினார். 

ஆனால் தேவர் சிரித்துக் கொண்டே, இன்னும் 5 நாட்களில் இறந்து விடுவேன். நான் இங்கு இருந்தால் என்ன? அங்கு இருந்தால் என்ன என்று சொன்னார். 

மேலும் நான் இறந்த பிறகு எனது உடலை வள்ளலார் கூறிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று தானே ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். 

அதேபோல அக்டோபர் 29ம் தேதி இறந்து விட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது. சாது சுவாமிகளும் அங்கு சென்றார். ஆனால் அரசியல் தலைவர்கள் அங்கு குழுமி இருந்த காரணத்தால் அவரை யாரும் தேவரின் உடலின் அருகே விடவில்லை. 

உடனே சுவாமிகள் தன்னிடமிருந்த தேவரின் கடிதத்தை சேதுபதி ராஜாவிடம் கொடுத்தார். அதைக்கண்ட பின்னர் மற்றவர்களை விலகச் செய்து வள்ளலாரின் முறைப்படி தேவரின் உடல் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் வகையில் அடக்கம் செய்யப்பட்டது.

தன் சாவை கணித்து அதை சமரச சன்மார்க்க முறைப்படி அடக்கம் சென்ன தேவருக்கு குருபூஜை இதன் காரணமாகவே நடத்தப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேசிய லீக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு ஃபைரோஸ் அகமது பேசினார். 

பேசினார் என்று சொல்வதை விட தமிழையும், அங்கிருந்த தமிழர்களையும் ஆட்சி செய்தார் என்றே சொல்ல வேண்டும். 

முன்னதாக பேசிய ஒரு பேச்சாளர் முத்துராமலிங்கத் தேவர் பத்து ராமலிங்க அடிகளாருக்குச் சமம் என்று பேசினார். அந்த அளவு அடிகளார் மீது நன்மதிப்பும் பற்றும் கொண்டு ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இது பற்றிப் பேசிய திரு அகமது, பசும்பொன் தேவர் பத்து ராமலிங்கத்திற்கு சமமானவர் என்பதைப் போல மாணிக்கவாசகர் கூறிய பத்துப் பாடல்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களைப் பின்பற்றி வாழ்ந்தவர் என்று கூறினார். 

குறிப்பாக அச்சப்பத்துவில் வரும் ‘புற்றிள் வாள் அரவம் அஞ்சேன்’ முதலான பத்துப் பாடல்களையும் பாடி அவற்றின் பொருளைக் கூறி. இந்து போன்ற அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்று பேசினார். 

முருகனின் நிறம் சிவப்பு, அவரது தந்தையின் நிறம் திருநீற்றின் வெண்மை, அவரது தாயின் நிறம் பச்சை. இதுதான் நமது தேசியக் கொடியின் வண்ணம். முருகனின் வாகனம் மயில்தான் நமது தேசியப் பறவை. அப்படி அந்த முருகனின் பக்தரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாக பாவித்து வந்தவர் என்று பேசினார். 

அதேபோல, ஒருமுறை ஒரு பள்ளிவாசலில் “மனிதன் பறவை போல பறக்கிறான். மீன்களைப் போல நீந்துகிறான். அவனால் ஏன் மனிதாக இருக்க முடியவில்லை” என்ற தலைப்பில் மூன்று மணிநேரம் பேசினார். அந்தப் பேச்சை இன்று வரை வேறு எந்த தலைவரும் முறியடிக்கவில்லை. அது போன்ற ஒரு ஒப்பற்ற பேச்சாளர். 

அவர் இந்து மதத்தில் தீவிரப் பற்றுக் கொண்டவராக இருந்தாலும் மாற்று மத, சமுதாய மக்களிடம் நற்பெயர் பெற்றவர். மாற்று மதங்களை நன்கு அறிந்தவர் என்று பேசினார். 

மேலும், கிருபானந்த வாரியார் மாற்று மதங்கள் பற்றிப் பேசும்போது ஏழும் மூணும் பத்து, எட்டும் இரண்டும் பத்து, ஒன்பதும் ஒண்ணும் பத்து என்று சொன்னவர். விடை ஒன்றுதான் வழிமுறைதான் வேறு. அனைத்து மதங்களும் ஒரு பரம்பொருளையே விளக்குகின்றன என்று சொன்னவர். அதுபோல வாழ்ந்து காட்டியவர்தான் முத்துராமலிங்கத் தேவர். 

இவர் அவர் பேசுகையில் கரஓசை அதிரும் வண்ணம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவரது பேச்சை ரசிக்காதவரோ, அதில் மயங்காதவரோ இல்லை என்று சொல்லலாம். இவரைப் போல மாற்று மதங்களை நன்கு அறிந்தர்கள் அனைத்து மதங்களிலும் பெருகும்போதுதான் உண்மையான மத நல்லிணக்கம் ஏற்படும். 

இந்த விழாவில் சென்னை நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான திரு வள்ளிநாயகம் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். 

ஒருமுறை தேவர் தனது இஸ்லாமிய நண்பரின் வீட்டுத் திருமணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் பேச்சு பதிவு செய்யப்படவில்லை. 

வாழ்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நாமம்.

Elangovan N

unread,
Oct 7, 2013, 2:38:04 AM10/7/13
to tamil_ulagam
//முன்னதாக பேசிய ஒரு பேச்சாளர் முத்துராமலிங்கத் தேவர் பத்து ராமலிங்க அடிகளாருக்குச் சமம் என்று பேசினார். அந்த அளவு அடிகளார் மீது நன்மதிப்பும் பற்றும் கொண்டு ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டார்.
//

இப்படியான பேச்சுப் போதையில் நல்ல ஆன்மீகம் நடந்ததில்லை.


அன்புடன்
நாக.இளங்கோவன்



2013/10/7 Thevan <apth...@gmail.com>

--
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ulagam...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

k.m.sulaiman Thambi

unread,
Oct 8, 2013, 6:57:39 AM10/8/13
to tamil_...@googlegroups.com
"போதை"

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 3316 சாலை விபத்துக்களில்
போதை ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்து 620 மட்டுமே;
மற்றவைகள் அனைத்துமே போதையில்லாதவர்களால்
ஏற்பட்ட விபத்துகள் என தினகரனில் செய்தி வந்துள்ளது!

ஆக,

நமது 'குடி'மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!;-)

மது போதை குடித்தவனை(வளை) மட்டுமே தன் நிலை மறக்கச் செய்யும்...

ஆனால்,

புகழ் போதை, போற்றியவரையும்-போற்றப்பட்டவரையும் சேர்த்தே மதிமயக்கும்!

Thevan

unread,
Feb 22, 2014, 10:18:01 PM2/22/14
to panbudan
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் “தேவர் சேர்” சார்பில் 2014 மார்ச்
14, 15, 16 தேதிகளில் “இந்தியாவில் சீர் மரபினரின் (டிஎன்டிகள்) சமூக,
பொருளாதார மற்றும் அரசியல் நிலையின் கள ஆய்வு மற்றும் டிஎன்டிகளின்
உரிமைகள் மற்றும் நலனில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு” என்ற
தலைவில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தங்களது ஆய்வுக்
கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். இணைக்கப்பட்டுள்ள படத்தில் தேவர் சேரின்
இயக்குனர், துணை இயக்குனரின் தொடர்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1902736_535434779902958_217836590_n.jpg

Thevan

unread,
Mar 9, 2014, 11:29:33 PM3/9/14
to panb...@googlegroups.com
இதை நம்புவதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்...

இன்று நான் நடை பயிற்சி சென்று திரும்பியதும், இங்கே வாருங்கள், ஒரு
விஷயம் சொல்கிறேன் என்று படுக்கையில் அமரச் சொன்னார். அதை உங்களால் நம்ப
முடியாது என்று சொன்னார்.

நானும் என்னவென்று கேட்டேன்.

இன்று என் கனவில் யானைக் குட்டி என் மடி மீது தலைவைத்துப் படுத்துக்
கொண்டது. எனக்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அதன் நட்பு எனக்கு அந்தப்
பயத்தை போக்கியது. இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது அது
தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது.

என் மனைவியின் கனவில் அடிக்கடி யானை வருவது, அதைக் கண்டு அவர் பயந்து
ஓடுவது. சில நேரங்களில் யானை ஆசி வழங்குவது என்பது அவருக்கு தொடர்ச்சியாக
வரக் கூடியதுதான். அதனால் நான் இதை பெரிது படுத்தவில்லை.

மேலும் அவர் சொன்ன கனவுதான் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதாவது சிறிது நேரத்தில் என் உறவுக் காரப் பெண்கள் ஏதோ சச்சரவில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். என் மனைவியும் தன் பங்கிற்கு சச்சரவில்
ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென, “யாரோ வானத்திலிருந்து வந்திருப்பதாக“ பெண்கள் பேசிக்
கொள்ள ஆரம்பித்தனர். இவரும் சென்று பார்த்தார்.

தேவர் வெள்ளை நிற ஜிப்பா வேட்டியில் வந்துகொண்டிருந்தார். அவரது முகம்
ஒளிரக் கூடியதாக இருந்தது. அவரோடு நீல நிறச் சட்டையில் ஒருவர் வந்து
கொண்டிருந்தார். பெண்கள் அனைவரும் அவரை வணங்கினர்.

என் மனைவி எனது இரு குழந்தைகளுடன் அங்கே நின்று அவரை வணங்கினார். என்
இளைய மகனிடம், “ஐயா வணக்கம்” என்று சொல் என்று சொல்கிறார்.

அவனும், “ஐயா வணக்கம்” என்று சொல்கிறான்.

உடனே, தேவர் “நீ பெருமாள் தேவனின் மகன்தானே? நல்லா இருப்பீர்கள்” என்று
ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

இதுதான் என் மனைவிக்கு இன்று காலையில் தோன்றிய கனவு.

இதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு தேவர் எனக்கு கனவில் தோன்றினார் என்று நான் சொன்னபோது என்
மனைவியால் அதை நம்ப முடியவில்லை.
16.jpg

Thevan

unread,
May 10, 2014, 10:35:16 PM5/10/14
to panb...@googlegroups.com
தேவர் குருபூஜையை அமைதியாக நடத்த சமுதாயத் தலைவர்கள், காவல்துறை
அதிகாரிகள் அடங்கிய ஒரு விழாக் குழுவை அமைக்க வேண்டும் என்று
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தேன்.

அந்த மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனை தெரிவிக்கும்
கடிதம்தான் இது.
Graphic1.JPG
Graphic2.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages