தொடையை துட என்பர் மலையாளியர். அதே ஒலித் திரிபைத் தான் தொடங்கு > துடங்கு என்பதிலும் காணவியல்கின்றது. இதில் பார்க்கப் படவேண்டியது என்னவென்றால் எது முதலில் தோன்றிய சொல் என்பது தான். தமிழில் உகரம் தான் ஒகரமாக மாறும். காட்டாக, உட்கார் .> ஒக்கார்; உடம்பு > ஒடம்பு; உடைந்து > ஒடஞ்சி. எனவே துடங்கு தான் தொடங்கு என்று ஆகி இருக்க வேண்டும். துல் > துள் > துள்ளு என்பது முனைப்புக் கருத்து. ஆதலால் துல் > துள் > துட் + அங்கு = துடங்கு என முனைப்புக் கருத்துடையது தொடங்கு என்பது - சேசாத்திரி
On Wednesday, August 8, 2012 3:05:35 AM UTC-7, Niranjan Bharathi wrote:அனைவர்க்கும் வணக்கம்,ஒரு சிறிய சந்தேகம்.தொடக்கம், துவக்கம் இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?இந்தச் சொற்களை எப்படி, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் ?இவற்றை உதாரணங்களோடு விளக்க முடியுமா ?விளக்கமுடியும் என நினைக்கிறேன். மதறாஸ் லெக்ஸிகான்துவக்கு என்னும் வினைச்சொல்லை துடக்கு/தொடக்கு என்னும்சொல்லுடன் தொடர்பு இருக்கலாம் என்கிறது. அவ்வாறுஏதும் இல்லை என்கிறனர் மொழியியல் பேராசிரியர்கள்.மேலும், மலைவாழ் ஆதிவாசிகளிடம் இச்சொல் இருக்கிறது:Dravidian Etymological Dictionary:DEDR 3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-)3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-) to begin, enter upon; tuvakkam beginning, commencement. Ko. tovk- (tovky-) to begin. ? To. twïQx- (twïQxy-) to be at the point of, be ready to; twïQk- (twïQky-)to start, begin. DED 2754.
தோக்குதல் என்னும் பழைய வினைச்சொல் ஆதிகாலத்தில் தமிழில் இருந்திருக்க வேண்டும்.இந்த வினைச்சொல் தோக்கு- துவக்கு என்று ஆகும். ஒப்புமை: கோடு - குவடு, சூறு- : சுவறு, etc.,தோக்கு- வினைச்சொல் தரும் பெயர்ச்சொல் தோக்கை - சீலையின் முந்தானை.அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி (திவ். பெரியதி. 4, 4, 3தோக்கையந் துகிலினாடன் (சீவக. 2477)துவக்கு என்னும் பொருள்கொண்ட தோக்கு என்னும் பழமையான வினைச்சொல்லைத் தமிழ்இன்று இழந்திருந்தாலும், துவக்கு என்னும் வினையிலும், தோக்கை - சீலைத் துவக்கம் -இன்னும் இருந்துகொண்டுதான் உளது.நா. கணேசன்த்ராவிட பாஷைகளின் மிகப் பழைய சொற்களில் ஒன்றாக துவக்கு/துவங்கு இருக்கிறது. இதற்கும்
வடமொழிச் சொற்களுக்கும் தொடர்பில்லை. Refer Madras Lexicon and DED.
கோதர்கள், தொதுவர், இருளர், மலசர், ... பண்பாடுகளை ஆராய்வதால் துவக்கம் போன்ற சொற்களின் தொடக்கம் தெரிந்துகொள்கிறோம். மேலும், சங்க இலக்கியச் செய்திகளை - உ-ம்: கலந்தொடா மகளிர் (புறநானூறு 299) - அறிந்துகொள்ளவும் உதவும். இவ்வாய்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு: காட்டாக, ஆணி (< ஆழ்தல்) என்பது ரிக்வேதத்தில் எப்படி தமிழில் இருந்து செல்கிறது என்பதற்கு Pangolin என்னும் விலங்கின் தமிழ்ப் பெயர்கள் உதவுகின்றன. https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2013-10/msg00051.html
நா. கணேசன்
அன்புடன்,நிரஞ்சன்
தொடங்கு என்பது ஏற்கனவே நடைபெறுவதை நின்று போனால் மீண்டும் செய்வது.தொடர் என்பது ஏற்கனவே நடைபெறுவதை தொடர்ந்து செய்வது.துவங்கு என்பது முதன் முதல் செய்வது.
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்