1. நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2.வெருளி நோய்கள் 746-750: இலக்குவனார் திருவள்ளுவன்

2 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 29, 2025, 1:42:56 PM (3 days ago) Nov 29
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

(நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: தொடர்ச்சி)

பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க!

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்

ஆஅயக் கண்ணும் அரிது.   

(நாலடியார், 184)

மழை பெய்யாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கேணி தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போலப், பெரியோர் வறுமையில் வாடித் தளர்ந்த காலத்திலும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம்  மிகுதியாக உள்ள காலத்திலும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.

பதவுரை:

உறைப்பு=மழை; அரு காலத்து=அருகிய இல்லாக் காலத்திலும்; ஊற்று நீர்=ஊற்று நீருள்ள; கேணி= கிணறானது; இறைத்து=நீரை இறைத்து; உணினும்=உண்டாலும்;ஊர் ஆற்றும்=ஊரைக் காப்பாற்றும்;  என்பர்=என்று சொல்வர்; (அதுபோல்); கொடை = பிறர்க்குக் கொடுக்கும்; கடனும்=முறைமையும்; சாயக்கண்ணும்=(வறுமையால்) தளர்ந்தவிடத்தும்; பெரியார் போல்=பெரியோர்களைப் போல்; மற்றையார்=சிறியோர்; ஆயக்கண்ணும்=செல்வம் உண்டாயினும்; அரிது= கொடுத்தல் அரிது.

ஆழிக்கிணறு, உறை கிணறு, கட்டுக்கிணறு, கூவம், கூவல், கேணி, தடம், தளிக்குளம், திருக்குளம், தொடு கிணறு, நடை கேணி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு என நீர்நிலைகள் ஏறத்தாழ 50 உள்ளன. இவற்றுள் ஊற்றுநீர்க் கேணியைக் குறிப்பிடுவதன் காரணம், இயற்கையாக நீர் ஊறும் தன்மையுடையது. எனவே ஊற்றுக்கேணி இயல்பான கொடைத்தன்மை யுடையவர்களைக் குறிப்பதற்காக உரைக்கப்பட்டுள்ளது.

பொருள் குறைந்த காலத்திலும் பிறர்க்கு இயன்றது உதவவுவதே நற்பண்பாகும்.

வறுமையுற்ற காலத்திலும் நற்குடிப்பிறந்தோர் ஊற்று நீர் போல உதவுவர் என நாலடியார் 150 ஆம் பாடலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரும்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்

[திருக்குறள் ௨௱௰௮ – 218)

என்கிறார்.

அஃதாவது, பிறருக்குக் கொடுக்க முடியாத வறுமைக் காலத்திலும் ஒப்புரவாளர்கள் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்வர் என்கிறார்.

“செல்வத்துப் பயனே ஈதல்” எனப் புறநானூற்றில்(400) புலவர் நக்கீரனார் குறிப்பிடுகிறார். கொடையைப் பிறவிக்குணமாகக் கூறுகிறார் ஒளவையார். கொடையை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தனர் தமிழ்ச்செல்வர்கள்.

செல்வம் இல்லாக் காலத்தும் உதவுவோர் பெரியோர். செல்வம் நிறைந்த காலத்தும உதவார் சிறியோர். நாம் பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 746-750: இலக்குவனார் திருவள்ளுவன்

image.png

(வெருளி நோய்கள் 742-745 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 746-750

  1. கார மண வெருளி – Aromaphobia

கார நறுமண உணவு(spices and spicy food) குறித்த வரம்பற்ற பேரச்சம் கார மண வெருளி.
Aroma என்னும் செருமானியச் சொல்லின் பொருள்கள் நறுமணம், நறுஞ்சுவை.
00

  1. காரச்சோமாரி வெருளி – Chotdonkphobia

காரச்சோமாரி(hot dog) குறித்த வரம்பற்ற பேரச்சம் காரச்சோமாரி வெருளி.
Chotdonk என்றால் காரச்சோமாரி எனப் பொருள்.
00

  1. கார்ஃபீல்டு வெருளி – Garfieldphobia

புனைவுரு கார்ஃபீல்டு(Garfield) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்ஃபீல்டு வெருளி.
சிம் தேவிசு(Jim Davis) என்பவரால் உருவாக்கப்பட்ட கார்ஃபீல்டு என்னும் படத்தின் முதன்மைப் பாத்திரமாக வரும் கற்பனைப் பூனையே கார்ஃபீல்டு.
00

  1. கார்லோசு வெருளி – Carlosphobia

புனைவுரு கார்லோசு இரமான் (Carlos Ramon) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்லோசு வெருளி.
கார்லோசு வாக்கர்வில் தொடக்கப்பள்ளி(Walkerville Elementary School)யின் மாணவன்.
00

  1. காலக் கடப்பு வெருளி -Telochronophobia

காலக் கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலக் கடப்பு வெருளி.
Telo என்றால் முடிவு என்றும் chrono என்றால் காலம் என்றும் பொருள். இணைந்து காலம் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தைக் குறிக்கிறது.
00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன் 

வெருளி அறிவியல் 2/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages