(வெருளி நோய்கள் 246 – 250 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 251 – 255
விளையாட்டுப்பயன்பாட்டு ஊர்தி(SUV) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆட்ட ஊர்தி வெருளி.
விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி என்பதை வி.ப.ஊ. எனச் சுருக்கமாகக் கூறலாம். [Sport utility vehicle (SUV)]
00
ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆட்டவெருளி
விளையாடும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தோல்வி மீதான பயம் போன்றவற்றால் விளையாட்டு வெருளிக்கு – ஆட்டவெருளிக்கு ஆளாகின்றனர். தோல்வியுறும் பொழுது மனம் தளர்தல், ஆட்டத்தில் தவறு செய்துவிட்டால் படபடப்பிற்கு ஆளாதல் போன்றவற்றால் இவ்வெருளி வளர்கிறது. சிறு பருவத்தில் ஏற்படும் இத்தகைய போக்கு வளர்ந்து முற்றுவதும் உண்டு.
பொதுவாக விளையாட்டு வெருளி எலலா விளையாட்டுகள் மீதும் வரலாம். குறிப்பிட்ட விளையாட்டுக்ள மீது மட்டும் வெருளி ஏற்படலாம். ஆட்டம்(game), விளையாட்டு(sport) இரண்டும் வெவ்வேறு எனத் தனித்தனியாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், விளையாட்டு வெருளி(Athlemaphobia/ Athlematophobia)ஐ இதனுடன் இணைத்துள்ளேன்.
ludus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆட்டம் /விளையாட்டு.
áthlēma என்னும் கிரேக்கச் சொல்லிற்கு விளையாட்டு என்று பொருள்.
00
ஆணம்(ketchup)குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆணவெருளி.
00
ஆணியல் பெண்(tomboy) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆணியல் பெண் வெருளி.
tomboy என்பது 16 ஆம் நூற்றாண்டு நடுவில் முரட்டுத்தனமும் மூர்க்கததனமும் கொண்ட சிறுவனைக் குறித்தது. 1590இல் காட்டுத்தனமாகத் துள்ளியாடும் சிறுவனைப்போல் செயல்படும் சிறுமியைக்(boyish girl) குறித்தது.
ஆணாகக் கருதிக்கொள்ளும் பெண்களைப் பெண்களாகக் கருதி ஆண்கள் பழகும் பொழுது சிக்கல் வருகிறது. இதனால் பேரச்சமும் வருகிறது.
00
ஆண் உறுப்பைப் பார்த்தால் அல்லது ஆண் உறுப்பு குறித்து எண்ணினால் விறைப்புத் தன்மை குறித்துக் கவலைப்படுவதால் ஏற்படக்கூடிய அச்சமே ஆணுறுப்பு வெருளி.
விரிந்த பொருளில் சொல்வதானால் ஆண்மை மீதான பேரச்சமே இது. விறைப்பு வெருளி என்பதும் ஆணுறுப்பு சார்ந்ததே என்பதால் அதனையும் இதனுடன் இணைத்துள்ளேன்.
தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதாக எண்ணி வருந்துதல், பாலுறவு வெறுப்பு போன்றவற்றாலும் ஆணுறுப்பு வெருளி வரலாம்.
phallo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆண் குறி.
Ithy என்னும் பழம்கிரேக்கச் சொல்லிற்கு நேரான என்று பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச்
சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச்
சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவியினிலே
வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துதுமே!
தங்கத்தாத்தா என அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத்து நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் அவர்களின் பாடல்.
“தமிழன்னையே! என்றும் அறிவுச் செல்வமும் இளமையும் மிக்க செந்தமிழ்ச்செல்வி நீ! அனைத்துக் கலைகளும் உடையவள் ஆதலால் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் நீயே! தென் பொதிகையில் நறுமணம் மிக்க சந்தனக்காட்டில் ஏழிசை கூவும் குயிலும் நீயே! புலவர் பெருமக்களின் சிந்தனையில் மலர்ந்து, அவர்கள் செம்மையான நாவில் செழுந்தமிழாய்ப் பழுத்து, இனிமை தரும் நூல்களாகக் கனிந்து செவியில் இன்பம் பயப்பவள் நீ! ஆதலின் உன்னை வாழ்த்துவோம்!”
தமிழிலக்கியம் பல பனுவல்களை (இலக்கியங்களை) உடைமையால் பனுவல் பிராட்டி என்கிறார்.(ஆட்டி – பெண்பால் விகுதி).
இளமை நலனும் இலக்கிய வளமும் கலைச்சிறப்பும் இசைமணமும் நிறைந்த தமிழின் செம்மைத் தன்மையை நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் உணர்த்துகிறார்.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே ஏழு சுரங்களாகும். இவற்றின் அடிப்படையில் ஏழிசை என்றனர். ஆனால், பிற்காலத்தில் சட்சம், ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என ஆரியப் பெயரிட்டு அழைப்பதும் இவ்வடிப்படையில் ச, ரி, க,ம,ப,த,நி எனக் குறிப்பதும் தவறாகும்.
தமிழன்னையைப் போற்றும் நாம் தமிழிசையையே போற்றுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்