மணிமேகலையை அவள் பெயர் கொண்ட தெய்வம் மணி பல்லவத் தீவில் விட்டது. அங்கிருந்த தீவதிலகை என்னும் தெய்வம் தோன்றிப் பல்வேறு அறிவுரைகள் கூறியது. அது பசியின் கொடுமையைப் பற்றி விவரித்தது.
யாருக்கு அன்னதானம் வழங்குதல் வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறியது. பசித்தவர்க்கு அன்னை. அவளுக்கு அபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி கிடைத்தது. அது....,
''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி "
நீக்கும் பான்மையது; அள்ள அள்ளக் குறையாதது. அந்த அழுதசுரபியை ஏந்திய அருள்மகள் மணிமேகலை,
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
என்னுந் தகைமையால்.
"ஊர் ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர் ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்"
அவளுக்கு ஆபுத்திரன் கையிலிருந்த அமுத சுரபி கிடைத்தது.
தருமம் செய்வது பெரிதன்று; அதைத் தக்கோர்க்குச் செய்தல் வேண்டும் என்பதை அடுத்து வரும் பாடல் மூலம் விளங்கும். இதனைத்தான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள்.
ஆற்றுநர்க்கு அள்ப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்டினி ஞாலத்து வாழ்வோர் கெல்லாம் ''உண்டி கொடுத்தோர் உயிர் தானாகத் தேடி உணவு உண்ணத் தகுந்தவர்க்கு உணவை வழங்குவது என்பது பெருமை பரவுதற்காகவோ அல்லது வேறு பயன் கருதி செய்வதற்கு ஒப்பாகும்.
இஃது அறத்தை விற்பதற்கு ஒப்பான வாணிகச் செயலாகும்
மாறாகத்தானே முயன்று தனது உணவைத் தேனே சம்பாதிக்க முடியாத ஒருவர்க்குத் தரும் உணவு அவர்க்கு உயிர் கொடுத்தற்கு நிகரான செயலாகும்.இவ்வாறு செய்பவரின் வாழ்க்கையே செம்மையான சிறப்பான வாழ்க்கையாகும் என்று
தீவதிலகை தெய்வம் கூறி அவ்வழி நடக்க ஆணையிட்டு சென்றது