Saravana Rajendran
unread,Aug 1, 2012, 2:08:13 AM8/1/12Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Jambulingam B, tamil_...@googlegroups.com, piravakam, thanthaiperiyar, kuppu.v...@gmail.com, dr lakshmanamoorthy, tanjore, dr murugesan, pondy, dr n poornachandran, tanjore, dr natarajan, tirukkovilur, dr selvaraj, kumbakonam, dr sivaraman, tanjore, dr sundaramoorthy,darasuram, institute of asian studies, madras, kancheepuram mr mohanraj, mayiladuthurai dr k r sankaran, mr ananthapuram krishnamurti, chennai, mr asaithambi, mannargudi, mr ashokkumar, tanjore, mr dhenuga, kumbakonam, mr k sridharan, chennai, mr kanaka ajithadoss, chennai, mr karanthai jayakumar, tanjore, mr khan, tanjore, mr madumithaa, mr manimaran, tanjore, mr mohanraj, chennai, mr nellai s muthu, mr rajasekaran, kumbakonam, mr ramachandran, nagapattinam, mr ramakrishnan, tiruttani, mr saravanan, ncbh, madras, mr selvaraj, ayyampet, mr stalin rajangam, madurai, mr thamizhiyalan, mr thandapani, tourist officer, mr thanjaiiniyan, thanjavur, mr thanya kumar, chennai, mr thillai govindarajan, tanjore
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம்,
தங்களின் பௌத்த சுவடு ஆய்வுப்படலம் மிக்க மகிழ்வான செய்திகளை தருகிறது, நன்றி,
ஆந்திரமாநிலம் தங்களுடைய வரலாற்று பாடங்களில் புத்தர் நாகர்சுனத்திற்கு வந்தாக குறிப்பிடுகிறது, அதே போல் யாழ்பாணத்திலும்(நாகதீவு) புத்தர் வந்ததாக குறிப்புகள் உள்ளது, அப்படி என்றால் புத்தர் ஆந்திரம் வந்தபிறகு தமிழகம் வந்து பிறகு தான் யாழ் சென்று இருக்கவேண்டும்,
அவர் வந்த இடங்கள் தான் இன்று திருப்பதி, திரு நின்றவூர், திருவலஞ்சுழி, அரிட்டாபட்டி, துவரங்குறிச்சி(துவராடை என்றால் காவி ஆடை என்று பொருள்) போன்றவைகள் இருக்கவேண்டும் .
முக்கியமாக யூவாங் சுவானும் தனது குறிப்பில் தம்மபட்டி பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆசியாவின் பல பகுதிகளுக்கு சென்ற அவர் காஞ்சியில் நீண்ட வருடங்கள் தங்குகிறார்.
இவ்வளவு முக்கியமான ஆய்வுகள் செய்தவர் தமிழகத்தில் நீண்டகாலம் தங்குகிறார்கள் என்றால் அவர் நீண்ட ஆய்வு நடத்தி இருப்பார் , துரதிஷ்டவசமாக இந்த ஆய்வுகள் எங்கு சென்றன என்று தெரியவில்லை,
புத்த சங்கம் தமிழகத்தில் நடந்து இருக்கவேண்டும், அது சங்ககிரியாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் அங்குதான் தொடர்ச்சியாகபுத்தம்பாளையம், தம்மபட்டி, , சங்ககிரி என ஊர்கள் உள்ளது. கடந்த 5 நூற்றாண்டுகளாக சங்ககிரி மலை ஆய்வுக்குட்பாடாமல் இருக்கிறது கிருஷ்ணதேவராயன் ஆட்சியில் அந்த மலை ஆயுதங்கள் வைக்கும் இடமாக மாறியது, அதன் பிறகு திப்பு சூல்த்தான், ஆங்கிலேயர் என பலர் ஆயுதகிடங்காக சங்ககிரி மலைக்கோட்டையை பயன்படுத்தி வந்தனர், அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்க பல கட்டுக்கதைகளை பரப்பி விட்டு அது இன்று வரை மூடநம்பிக்கையாய் வலம் வருகிறது, இதற்கு ஓர் உதாரணம் மலையில் மேற்குபுறம் இன்னும் குடியிறுப்புகள் இல்லாமல் இருக்கிறது, அங்கு உள்ள நிலங்கள் விவசாயம் செய்யாமலும் யாரும் வாங்காமலும் இருக்கிறது, மலைக்குகையும் நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் அண்டாத பிரதேசமாக இருக்கிறது, இந்த பகுதிகளில் ஆய்வு செய்தால் பல தகவல்கள் வெளிவரும்,
நன்றி
சரவணா மும்பை
2012/8/1 Jambulingam B
<jambu...@gmail.com>
அன்புடையீர், வணக்கம். மறுபடியும் மிக அழகான புத்தர் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில்
கிடைத்தது. இந்த சிற்பம் சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர்
சிற்பமாகும். நான் பார்த்த பெரிய சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த
வாரம் இச்சிற்பத்தைப் பார்த்தபோது பெற்ற பிரமிப்பையும், தற்போது இச்சிற்பம்
உள்ள நிலையை அறிந்தபின் பெற்ற வேதனையையும் பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு
அழைக்கிறேன். வாருங்கள் http:\\ponnibuddha.blogspot.com வழியாகக் கண்டிரமாணிக்கம் செல்வோம். படித்துவிட்டு தங்கள் கருத்தை வலைப்பூவில் கட்டுரையின் கீழுள்ள comments
என்ற பகுதியில் அளிக்க வேண்டுகிறேன். பிறரும் தங்களின் கருத்தை அறிய அது
வாய்ப்பாக அமையும்.அன்புடன், பா.ஜம்புலிங்கம்.
--
MumbailiveFind mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/
9029512535