இந்த ஆதீனத்தை உருவாக்கியவரே கற்பழிக்க அருள்தாரும் திருவுள்ளமே என்று
1800 வருடங்களுக்கு முன்பே கூறி இருக்கிறார்,
திரை மறைவில் எத்தனை "யுத்தம் செய்" காட்சிகள் நடந்ததோ காலம் தான் அவைக்கு சாட்சி
இதோ சம்பந்தன் பெண்களை கற்பழிக்க திறன்வேண்டி பாடிய பாடல்
"மண்ணகத்தில் பெண்ணகத் தெழிற் சாக்கிய பேயமண் தெண்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே"
அதாவது இங்கு வாழும் சாக்கிய(பௌத்த) பெண்துறவிகளையும் அவர்கள்
வழிநடக்கும் பெண்களையும் இரக்கமின்றி பேய்போல கற்பழிக்க உத்தரவு
என்கிறார், உலகத்தில் உள்ள மனித குலம் அனைத்தும் பழிக்கும் அநாகரீக செயலை
அதிலும் இரக்கமின்றி பேய்போல் கற்பழியுங்கள் என்றும் அதற்கு இறைவன்
அருளும் வேண்டுகிறார் ஞானசம்பந்தர். உலகத்தில் எந்த நாட்டிலும் மனிதராக
பிறந்த எந்த ஒருவரும் இத்தகைய இழிச்செயலை புகழ்ந்து எழுதவில்லை, ஆனால்
நம் தமிழ் மொழி இந்த பாதக செயலை பாசுரமாக சுமந்து கொண்டிருக்கிறது.
மட்டையுடன் மட்டை தான் பரன் ஏறும் என்ற முதுமொழிக்கு 1800 வருடங்களுக்கு
பிறகு சான்று கிடைத்துள்ளது.
நித்தியானந்தம் நித்தியானந்தம்
--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535
தெண்ணர் teṇṇar, perh. திண்-மை. Senseless or dense persons, fools; அறிவிலிகள். தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா. 1207, 1).
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
நீங்கள் கூறியுள்ளது போல
திருஞானசம்பந்தரின் தமிழில் தூசியளவும் இல்லாத திராவிடத்தின் தமிழ்
இப்படித்தான்
இருக்கும் என்பதில் எனக்கு ஏதும் ஐயமில்லை. திராவிடத்தின் தமிழ்
அக்கிரசேனாதிபதியை "தலைவர்" என்று ஆக்கியதோடு சரி - அதற்கு மேல் பெரிய
முட்டைதான் :-))))
"மண்ணகத்தில் பெண்ணகத் தெழிற் சாக்கிய பேயமண் தெண்ணற் கற்பழிக்கத்
திருவுள்ளமே"
இதன் பொருள்
மண்ணகத்தில் - உலகத்தில்
பெண்ணகத்தெழிற் - பெண்களின் மேல் கொள்கின்ற மோகத்தை போன்ற
சாக்கிய பேயமண் - சாக்கியம் என்னும் பேய் போன்ற அமணர்களின்
தெண்ணற கற்ப - தெண் எனப்படுவது இவ்விடத்தில் அறிவு அல்லது ஞானம்
எனப்படும். கற்பு எனப்படுவது இவ்விடத்தில் கற்றது எனப்பொருள்படும்.
அழிக்க தருவுள்ளமோ - அவர்களது அறிவென்னம் ஞானத்தை, அவர்கள் கற்றதை அழிக்க
தருவுளமோ என பாடுகிறார்.
முழுப்பொருள் -
உலகத்தில் பெண்களின் மேல் கொள்கின்ற மோகத்தை போன்று விளங்கும் சாக்கியம்
எனும் சூனியவாதம் கற்ற பேய் போன்ற அமணர்களின் அறிவினால் பெற்ற அவர்களின்
ஞானமான கல்வியினை அழித்து அவர்களுக்கு சிவஞானம் கிடைக்க அருள் தருவாய் என
இறைவனை வேண்டுகிறார்.
அதை விடுத்து அவர் பெண்களை கற்பழிக்க சொன்னார் எனச் சொல்வது சொல்பவரின்
அறியாமையையே காட்டுகிறது.
ஏட்டுக் கல்வியினால் இதை பெற முடியாது என்பதை பல முறை உணர்ந்துள்ளேன்.
இப்போது மீண்டும் ஒரு முறை.
--
அன்பு சகோதரன்
சிவம்
சம்பந்தனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கற்பு பற்றி வள்ளுவன்
கூறியது, அவருக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியன் கற்பு பற்றி தெளிவாக
கூறியுள்ளார்.
"தனது தாயின் கற்பு பற்றி பொதுலில் சிலர் கூறியதை கேட்டு நானிக்குறுகிய மைந்தன்"
அப்படியே இங்கு மதிப்பிற்குறிய பெரியவர்கள் கூறியது போல் சம்பந்தன்
கற்பழிப்பு என்ற வார்த்தையை இங்கு மட்டும் பயன்படுத்தி இருந்தால்
பரவாயில்லை
(இப்படியும் இருக்கலாம் என்ற ஊகம் தான் பிற்காலத்தில் வந்தவர்கள் கூறியது).
ஆனால் சம்பந்தன் தனது பதிகங்களின் "கழுவில் ஏற்றுவேன்,
தலையையறுப்பேன், செக்கிலிடுவேன், வன்கொலை செய்வேன்" என பல இடங்களில்
கூறியுள்ளார்.
"கூடலால வாய்கோனை விடைகொண்டு வாடன் மேனி யமணரை வாட்டிட மாடக்கழிச் சம்பந்தன்".
அமணரை வெட்டி வதைத்துக்கொல்ல மதுரை ஆலவாய் இறைவனிடம் அனுமதியும் அருளும்
பெற்றுள்ள சம்பந்தன் நான் என்று கூறுகிறார்.
அமணர்களில் பெண் துறவிகள் இல்லை, ஆகையால் அமணர்களை கொலை செய்வேன்
என்கிறார். இதை சாதுர்யமாக ஒப்புக்கொள்கின்றனர். ஏன்?
ஐயா மயிலை சினிவாசனும், சிவசுப்பிரமணியன் இருவரும் தெளிவாக
கூறியுள்ளனர்.
அதாவது ஞானசம்பந்தரை காப்பாற்ற அதற்கு விளக்கம் எழுதியவர்கள் நிறைய
இடங்களில் மிகுந்த சிரமப்பட்டு சாமணியத்தில் முடிவு எட்டவிடாமல்,
ஊகத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கச் செய்திருக்கின்றனர்.
ஆகையால் தான் எளிமையாக புரியும் பாடல்களைக்கூட நீன்ட விளக்கம் கொடுந்து
நியாயப்படுத்த முனைந்திருக்கின்றனர். கண்ணுக்கு முன்பு நடந்த
காணைளிகலையே மதநம்பிக்கையீன் காரணமாக புறந்தள்ளு அவ்வகிங்க செயலை
செய்தவர்களை பாதுகாத்து ஆதீணபட்டமளித்து பெருமை படுத்துபவர்கள்
அக்காலத்தில் தங்கள் தலைமைமீது களங்கம் வராமல் இருக்க என்னமும்
செய்திருப்பார்கள். கொலை செய்வேன் கழுவிலேற்றுவேன் என்று சென்னவர்
கற்பழிப்பேன் என்று செல்லி இருக்கமாட்டார் என்று சொல்வதை நடுநிலையாளர்கள்
யாவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
On 5/7/12, Sankarkumar <ommur...@gmail.com> wrote:
>>
>> தொடர்ந்து இது போன்ற பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது
>> மிகவும்
>> அயர்ச்சியாக இருக்கிறது.
>>
>
> பின்னூட்டங்கள் அயர்ச்சி அளித்தது ஏனெனத் தெரிந்துகொள்ளலாமா, ஸ்வாதி?:)))
> மற்றபடி நீங்க சொன்னதில் மாற்றுக் கருத்தில்லை!:))
>
> --
> "தமிழ் பிரவாகம்"
> "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> Pira...@googlegroups.com
இங்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்ளை எங்கும் குறை கூறவில்லை,
கோவில் கருவரை களமிடும் பூசாரிகளையும, துறவாடை பூண்டு களவாடை புரியும
காமுகர்களையும் காணோலியில் கண்டபிறகும் கைகூப்பி பூசிக்கும்
மதநம்பிக்கையாளர்களை விட சிறந்த பகுத்தறிபவர்கள் என்று கூறுபவர்கள்
கூற்றில் உண்மையை காண்கிறேன்.
சைவ சமய பாசுரங்கள் தமிழ் அழகு இருக்கிறது
அரிதாரம் பூசி பசி தீர்க்க பரத்தையாகும் பெண்கூட அழகுதான் ஆனால் அவர்
குடும்பபெண்களாகார்.
தொல்காப்பிமும், திருக்குறளும், நன்னெறியும், ஐம்பெரும் காப்பியங்கள் இவைகள்
"மனைகூடி நல் விளக்கேற்றி மனவாளன் தகவனுக்கும், தமக்கைக்கும், நல்
அன்னையாகி, அத்தைக்கு என்றும் மாசில்லா மணி(மரு)மகளாகி சுற்றத்தோர் உவகை
பொங்க வாழ்த்தும் நல் இல்லாள் போன்றவை.
சைவ பதிகஙகள் சிறந்த இலக்கிய மென்று வைனவத்தார் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்,
சைவசமய பற்றாளர்கள் வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.
"வெறுப்போடு சமணர் முண்டர், வீதியில் சாக் கியர்கள் நின்பால் பொறுப்பரிய
ங்கள் பேசில் போவ நோயதாகிக் குறிப்பெ னக கடையுமாகில் கூடுமேல், தலையை
யாங்கே அறுப்ப்தே கருமமாய் கண்டாய் அரங்கமா நகருளானே" இதை புரிந்து
கொள்ள தமிழ் 100% பாண்டித்யம் பெற்றவரை தேடிச்செல்ல அவசிமமில்லை என்று
என்னுகிறேன்
இது என்னுடைய பதிவே. தமிழில் சமண பௌத்தம் பற்றிய தேடலின் போது, நான்
சிறுவயதில் ரசித்த கழுவேற்று வைபவம் அன்று அகிம்சையை போதித்த
சமணர்களையும், அன்பை போதித்த பௌத்தர்களையும் கொலை செய்ததின் நினைவில்
கொணடாடுகிறார்கள். ஏன் என்றால் மீன்டும்அந்தமதங்களை பிறர்
பின்பற்றக்கூடாது என்பதற்காக கொண்டாடப்ப்டுகிறது. என்பதை நினைக்கும் போது
இப்படி கொடும்பாவம் புரிந்தவர்கள் தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் அதை
தெரிந்தும் புகழ்கிறவர்களை பார்த்து ஆச்சர்யமாய் இருக்கிறது.
தங்களை இரஜபக்செ அனுப்பி வைத்தானா? அல்லது நித்தி, ரஞ்சியை தங்களுக்கு அறிமுகம் செய்தான?
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - உருக் காட்டு படலம்
பேர் உருவை ஒடுக்குமாறு அனுமனைச் சீதை வேண்டுதல்
வஞ்சிஅம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
'துஞ்சினர் அரக்கர்' என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
'அஞ்சினேன் இவ் உரு; அடக்குவாய்' என்றாள். 106
'முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு; இனி, குறுகுவாய்' என்றாள்,-
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள்
அரக்கர்கள் தூங்கி விட்டனர். விழித்திருப்பது சீதையும் அனுமனும் மட்டும்!
"தோள்களைத் தழுவினளாம்" என வருகிறது. "சீதை அனுமனனின் தோள்களைத்
தழுவினாள் எனப் பொருள் கொள்வீர்களா? அல்லது "இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள்" எனப் பொருள் கொள்வீர்களா?
திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257
"கோயில் சுடுகாடு" என வருகிறது. இதன் பொருள் என்ன?
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.(மூன்றாம் திருமுறை, 47 திருவாலவாய், பாடல் எண் : 3)
குறிப்புரை :பால பருவத்தில் சுற்றுலாவிற்கு தந்த பணத்தைதமுக்கம் மைதானத்தில்
அமைந்திருந்த போராளிகளின் நன்கொடை உண்டியில் போட்டு விட்டு இரண்டு
நாட்களாக மதுரை ரெயில் நிலையத்தில் சுற்றிக்கழித்தவன்,
மும்பையில் உள்ள இலங்கை கன்சுலேட்டில் தனியாளாக நின்று பதாகை
ஏந்தியதால் பன்னாட்டு நிறுவனத்தில் இருந்து பனி நீக்கப்பட்டவன்,
பக்கம் பக்கமாகஎழுதிவிட்டு உலர்பழம் தின்றுகொண்டு ஐ பி
எல்லும், மேற்கத்திய போப் இசையும் ரசிப்பவனல்ல, களமிரங்கி காண்பதை
எழுதுபவன், 1999-ல்இருந்து எழுதுகிறேன், வேண்டுமென்றால் என்னுடைய
மின்னஞ்சலின் பெயரை தேடுபடலத்தில் இட்டுப்பாருங்கள், யாஹூ
குழுமத்திலும்,கூகல் குழுமத்திலும் என்னுடைய பதிவுகளில் அநாவசியமான
பதிவுகள் எங்கே இருக்கிறதென்று, ஆங்காங்கே தட்டச்சுப்பிழை வேண்டுமென்றால்
காணலாம், ஆனால் சொல்லும் கருத்தை தெளிவுற சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
முயல்வேட்டைக்கு
செல்பவர் சிங்கவேட்டைக்கு தயாராக இருக்கவேண்டும் என்ற புறநாறூற்றுப்பாடலை
நானும் படித்திருக்கிறேன். நீங்கள்தந்த விளக்கம் ஊகம் தான் இதை யாரிடமும்
கேட்டுப்பாருங்கள், அவன் கொலை செய்வேன், கழுவேற்றுவேன், கழுத்தறுப்பேன்,
என்று பதிகத்தில் எழுதும் போது கற்பழிப்பேன் என்று எழுதிவில்லை என்று
வாதிடுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
இருந்திருந்தும் கம்பராமாயனத்தையா முன்வைக்கிறீர், வேறுஒரு இழையை
ஆரம்பியுங்கள், அந்த நாற்றத்தை தவிற்க்க முடியாதபட்சத்தில்
கிளரிப்பார்ப்போம், ------------------------------------------------
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய
இனத்தை மொழியைசிறிய காலக்கெடுவில் வாழும்மனிதரால் அழிக்க முடியாது, ஆனால்
சமயம் பற்றி! தமிழரின்சமயம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்,
கருனாடகத்தில் இருந்து உள் நுழையும் போது தருமபுரி, ஆந்திராவில் இருந்து
உள் நுழையும் போது அறக்கோணம், வாணியம்பாடி, வலங்கைபுறம் என்ற
விழுப்புரம், உள் வந்தால் அறந்தாங்கி, புத்தம் தம்மம் சங்கம் என்ற
பதத்திற்கொப்பிய புத்த பாளையம், தம்மபட்டி, சங்ககிரி, பஞ்சசீலம் கூறிய
சீலம் பெயர் மாறிய சேலம், போதிநாயகனூர் முதல் குமரி முனையில் உள்ள
புத்தன்சாவடிவரை மேலும் தமிழ் நாகரீகம் வாழ்ந்த இடம் என்று
ஆகழ்வாய்வாளர்கள் கூறும் ஆதி ஆச்சன் நல்லூர்(என்ற) ஆதிச்சநல்லூர்
திருச்சிராப்பள்ளி, ஆணைமலை,அமனகுன்று, அருகனூர், அறியலூர், திண்டுக்கல்,
தருமம் வழங்கும் பதமான கொடைஎன்ற பதத்தை கொண்ட கொடைக்கானல் அறஹத்துக்கள்
தங்கிய அறந்தாங்கி, என பல்லாயிரம் சமண பௌத்த ஊர்கள் சொல்லும் தமிழனின்
சமயம் எதுவென்று, ராமேச்சுவரமும், கிருட்டினகிரியும், சேதுபதிபதியின்
காலத்திலும் கிருஸ்னதேவராயன் காலத்திலும் வைக்கப்பட்ட பெயர்கள், ஆனால்
மேற்சொன்ன பெயர்கள் கிருத்துவிற்கு முன்பிலிருந்தே நீட்டித்திருக்கிறது.
ஆகையால் இங்கு அழிந்தது எதுஅழித்தது யார் என்று தெளிவு நடுநிலையாளர்களை
கேட்டால் விளக்குவார்கள்
பெரியவர் தான் சார்ந்தசமயத்தின் பால் வைத்த பற்றால் அனுப்பிய
ஆள், என்றும் சைவச்சீலரின் வைப்பு பற்றி கூறியதாலும்,
சகோதரியும் தனது சமயத்தின் பால் உள்ள பற்றால் இந்த ஒரு பதிவின் மூலம்
இனம் மொழி சமயம் அழிக்கிறதே என்ற விசனத்திற்காக முடிவுபட்ட(முத்தமிழ்
குழுமத்தில்) இந்த இழையில் பதிலை எழுதவேண்டிய நிலைக்கு ஆளக்கப்பட்டேன்,
புரிதலுக்கு நன்றி
சரவணா மும்பை
On 5/8/12, சிவ அறிவொளியன் <ariv...@gmail.com> wrote:
>
>
> *தங்களை இரஜபக்செ அனுப்பி வைத்தானா? அல்லது நித்தி, ரஞ்சியை தங்களுக்கு
> அறிமுகம் செய்தான?**
> *
>
> *
> *
>
> **கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
முயல்வேட்டைக்கு
செல்பவர் சிங்கவேட்டைக்கு தயாராக இருக்கவேண்டும் என்ற புறநாறூற்றுப்பாடலை
நானும் படித்திருக்கிறேன். நீங்கள்தந்த விளக்கம் ஊகம் தான் இதை யாரிடமும்
கேட்டுப்பாருங்கள், அவன் கொலை செய்வேன், கழுவேற்றுவேன், கழுத்தறுப்பேன்,
என்று பதிகத்தில் எழுதும் போது கற்பழிப்பேன் என்று எழுதிவில்லை என்று
வாதிடுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.//
சிவ அன்புடன்
சிவ அறிவொளியன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பன்னிரண்டாம் திருமுறை. திருச்சிற்றம்பலம் இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 1776 திருச்சிற்றம்பலம்
--
உங்களுடைய தமிழரின் சமயம் எது என்கிற தேடுதல் வரவேற்க கூடியதே.
இருப்பினும் உங்களுடைய முடிவு தவறானது என்பது உங்களுக்கு
புலப்படவில்லையா ?
1. புத்தர் தோன்றுவதற்கு முன்பு பௌத்தம் எனும் மதம் இருந்ததா ?
2, சமணத்தின் மகாவீரர் தோன்றவதற்கு முன்பு வரை சமணம் அனைவரிடமும்
சென்றிருந்ததா ?
3, இவ்விருவரும் தோன்றுவதற்கு முன்பு வரை தமிழர்கள் இல்லையா ?
4, அப்படி இவர்கள் தோன்றுவதற்கு முன்பு தமிழர்கள் இருந்தார்கள் என்றால்
அவர்கள் சமய நெறி எதையும் வைத்திருக்காமல் காட்டுமிராண்டிகளாக
இருந்தார்கள் என கூறுகிறீர்களா ?
புத்தர் தோன்றுவதற்கு முன்பும், மகாவீரர் தோன்றுவதற்கு முன்பும்
தமிழர்களின் சமயம் எது என நீங்கள் தேடுதலை வைத்தால் அது சைவ சமயம்தான்
என்பதனை உணர முடியும்.
அடுத்தது ஒருவர் சொல்லக்கூடிய வார்த்தையை அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை
புரிந்து கொள்வதில் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு நிகழ்கிறது. காரணம்
புரிதலில் உள்ள மாறுபாடு அல்லது பிழை.
உதாரணத்திற்கு
அக்காளை ஏறி பெருமானே என ஒரு புலவர் சிவபெருமானை பார்த்து பாடியுள்ளார்
அதற்காக சிவபெருமான அவரது அக்காவை புணர்ந்தார் என அர்த்தம் கொள்ளலாமா ?
அக்காளை - அந்த காளையின் மீது ஏறி அமர்ந்திருக்கும் பெருமானே எனதான்
பொருள் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து இல்லை அந்த புலவர் அக்காவைதான் புணர்ந்ததை பற்றி எழுதி
உள்ளார் என வாதம் செய்தால் உங்கள் புரிதலில் உள்ள குறைபாடே
வெளிப்படுகிறது.
அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்
> *அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும்
> பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும்
> மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே
> பொறுத்தருள்க.
>
> *அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
> / தமிழே விழி! தமிழா விழி!
> எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
>
> பின்வரும் பதிவுகளைக் காண்க:
>
> thiru2050.blogspot.com
> thiru-padaippugal.blogspot.com
> http://writeinthamizh.blogspot.com/
> http://literaturte.blogspot.com/
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
நேற்றுப் படித்த ப்லாக் ஒன்று:
http://donashok.blogspot.com/2012/05/blog-post_07.html
சரவணன் சிந்தனைக்கு. கற்பு என்றால் வேதம், மறை - சங்க இலக்கியம்/
கற்பழிப்பு சமணர், பௌத்தர் நூல்களை அழிப்பா? அல்லது அந்நூற் கருத்துக்களை
அழிப்பா?
தமிழுக்குச் சமணர்கள் தொல்காப்பியர், வள்ளுவர் கொடைகள் பற்றி
எழுதியுள்ளேன்:
http://groups.google.com/group/tamil_ulagam/browse_frm/thread/1de743ab1a1d7a7a#
என் வடக்குவாசற் கட்டுரை - திருவள்ளுவர் திருநாளும்,
தொல்காப்பியர் திருநாளும் - பற்றி என்ன நினைக்கிறார் சரவணன்
என அறிய அவா.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/97f288d951b00fbb
நா. கணேசன்
> 2012/5/8 Saravana Rajendran <rajesarav...@gmail.com>
> > On 5/7/12, Sankarkumar <ommurug...@gmail.com> wrote:
>
> > >> தொடர்ந்து இது போன்ற பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது
> > >> மிகவும்
> > >> அயர்ச்சியாக இருக்கிறது.
>
> > > பின்னூட்டங்கள் அயர்ச்சி அளித்தது ஏனெனத் தெரிந்துகொள்ளலாமா, ஸ்வாதி?:)))
> > > மற்றபடி நீங்க சொன்னதில் மாற்றுக் கருத்தில்லை!:))
>
> > > --
> > > "தமிழ் பிரவாகம்"
> > > "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> > > Pira...@googlegroups.com
>
> > --
> > *Mumbailive <http://mumbailive.mobie.in>*
> > Find mumbai follow mumbai
> > TPI-Mumbai
> > 09819166850/9029512535
>
> > --
> > "தமிழ் பிரவாகம்"
> > "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> > Pira...@googlegroups.com
>
> --
> *அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும்
> பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும்
> மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே
> பொறுத்தருள்க.
>
> *அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
> / தமிழே விழி! தமிழா விழி!
> எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
>
> பின்வரும் பதிவுகளைக் காண்க:
>
> *www.ilakkuvanar.org
> thiru2050.blogspot.com
> thiru-padaippugal.blogspot.comhttp://writeinthamizh.blogspot.com/http://literaturte.blogspot.com/...
>
> read more »
// அடுத்தது ஒருவர் சொல்லக்கூடிய வார்த்தையை அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை
புரிந்து கொள்வதில் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு நிகழ்கிறது. காரணம்
புரிதலில் உள்ள மாறுபாடு அல்லது பிழை.உதாரணத்திற்கு
அக்காளை ஏறி பெருமானே என ஒரு புலவர் சிவபெருமானை பார்த்து பாடியுள்ளார்
அதற்காக சிவபெருமான அவரது அக்காவை புணர்ந்தார் என அர்த்தம் கொள்ளலாமா ?
அக்காளை - அந்த காளையின் மீது ஏறி அமர்ந்திருக்கும் பெருமானே எனதான்
பொருள் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து இல்லை அந்த புலவர் அக்காவைதான் புணர்ந்ததை பற்றி எழுதி
உள்ளார் என வாதம் செய்தால் உங்கள் புரிதலில் உள்ள குறைபாடே
வெளிப்படுகிறது.//
--
சமண பௌத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தமிழகத்தில் காட்டுமிராண்டிகள் அல்ல, உலகிற்கு நாகரீகத்தை காட்டும்மிரர்கள்(mirror) தான் இருந்தார்கள். பழந்தமிழர் வழிபாடு என்பது சைவம் அல்ல (இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் இதை ஏற்றே ஆகவேண்டும்) தமிழர் நாகரீகம் என்பது அங்கிருந்து வந்தது அல்ல, எப்படி இன்று நம்மிடம் இந்து, கிருத்துவம், இசுலாம், மேலும் ஜைனம் என்ற சமணம் சாக்கியம் என்ற பவுத்தம் இருக்கிறதோ அதே போல் தான் அன்றும் சைவம், நடுகல்வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இதர இருந்தது,
இன்று பெரும்பான்மையாக இந்துமதம் இருப்பது போல் அன்று ஆசீவகம் இருந்தது,
ஆசீவகத்தின் வழிபாட்டு முறை இன்றும் நாம் பின்பற்றுகிறோம், அதுதான் பொங்கல், பொங்கல் பற்றி கூறாத தமிழ் இலக்கியங்கள் இல்லை, ஆசிவகத்தின் தத்துவமே நன்றி கூறுதல் தான், கிருத்துவிற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசீவகம் மெல்ல மெல்ல உருமாரத்துவங்கியது, அதாவது ஆசீவகத்தின் கோட்பாடுகளும் சமண சாக்கிய கோட்பாடுகளிலும் அதிக அளவு வேறுபாடு கிடையாது,
மேலும் ஆசீவகம் கூறும் நல்லொழுக்கம் இல்லறம், பெரியோரை பேனுதல் சமண சாக்கியத்தில் இருந்தது, ஆசீவகம் வெகுசனமக்களின் தலைமுறை வழி காட்டுதலே, ஆசிவகத்திற்கு என்று மத குரு இல்லாத காரணத்தால் சமண பௌத்தங்கள் ஆசிவகத்தை ஒத்து இருப்பதும்,நெறிகளை வரிசைப்படுத்த சமண முனிகள், பௌத்த அரஹத்துக்கள் அவர்களின் நல்லோழுக்கங்கள், அகிம்சா, அன்பு குணங்கள் போன்றவை மக்களை மிகவும் கவர்ந்ததால் தென்னகத்தில் நுழைந்த மிகக்குறுகிய காலத்திலேயே தமிழர்களின் மனதில் வேறுன்றியது,
இதைத்தான் எம்பாட்டன் வள்ளுவன்
“அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு”
இதன் பயன் தான் நாம் அனைவரும் இன்றும் படிக்கும் நன்னேறிகள், வள்ளுவர் தந்த குறள், ஐம்பெருங்காப்பியங்கள் தொல்காப்பியங்கள் மூதுரைகள்,
சங்க காலத்து ஔவை தான் உலகின் முதல் மொழிபெயர்ப்பாளர் தம்மபதத்தை பாலியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கடையேழு வள்ளர்கள் இன்றும் நம் நினைவில் வாழ காரணமாக இருந்ததும் இந்த சமண சாக்கிய மதங்கள் தான்,(வரலாறு எக்காரணம் கொண்டு எவ்வளவு அழகிய சிலையாக இருந்தாலும் அதில் சிறிய கறை இருந்தால் அதை ஏற்காது)
எத்தனையோ மன்னர்களை பற்றி படித்திருக்கிறோம், ஆனால் வரலாறு ஏன் மூவரை மட்டும் சக்கரவர்த்தி என்று பதித்திருக்கிறது, பிறர் ஆயிரம் சொல்லிக்கொண்டு போகட்டும் அசோகனின் தன்னலமற்ற மக்கட் தொண்டு, அலக்சாண்டர் தான் மாவீரன் என்றாலும் பிறரையும் மதிக்கும் பேருங்குணம், அக்பரின் மதச்சார்பின்மை போன்ற குணங்கள் வரலாறு அவர்களை (The Great) சக்ரவர்த்தி என்று அழைக்கிறது.
அது போல் தான் காப்பியங்களும் எவ்வளவு அழகான தமிழ் விளையாடும் பாசுரங்களும் பதிகங்களும் “மொழி அழகிற்காக கூவும் சேவலையே கோழியாக்கி வர்ணித்த ஆழ்வார்களின் பாடல்கள் நடையழகில் வார்த்தைகளிலேயே இளம்பெண்ணின் நடனத்தை காட்டிய கம்பராமாயணம் ஆனால் இவைகள் கடைச்சரக்கில் அழகாக வணக்கமிடும் ஆடையனிந்த பொம்மைகளே இவைகள் எக்காலத்திலும் வீட்டு பெண்களாகா,
ஆனால் திருக்குறளும், நன்னெறிகளும், ஐம்பெருங்காப்பியங்களும் அப்படி அல்ல, அதனால் தான் தமிழ் இலக்கியம் என்று நினைத்தால் மணிமேகலை சீவகசிந்தாமனியும் குண்டலகேசியும், சிலப்பதிகாரமும், வ்ளையாபதி போன்றவை நினைவிற்கு வருகின்றன.
மணிமேகலையை எங்கிலும் ஆசிவகத்தை சாடவில்லை, அது வழிதவறிய முறைதவறிய வழிபாட்டையே சாடியது, அப்படியே மணிமேகலையை குறை கூறினால் என்றால் தன்னாலேயே திரிகுறளையும், நன்னேறியையும், தொல்காப்பியத்தையும் சாடவேண்டி இருக்கும், அதற்கு முன்வந்த அத்தனை நூலையும் குறை கூறவேண்டும் வேண்டி இருக்கும் ஏனென்றால் அவைகள் சைவத்தை முன்னிருந்த வில்லை,
ஆழ்வார்களும் சைவபெரியாரும் சமண சாக்கியங்களை முடிந்தவரை சம்பந்தமே இல்லாமல் சாடி இருக்கின்றனர். இது ஒரு தீவிர மத காழ்ப்புணர்வு, அதாவது களப்பிரர்கள் காலம் முடிந்து சைவம் தழைத்த பிறகு இவை நடந்தவைகள், மாமிசம் உண்பவர்களை விட மாமிசம் உண்ணாதவர்கள் உடலில் துர்நாற்றம் அடிக்காது, இது குறித்து பல அறிவியல் சார்ந்த ஆய்வுகள் வந்துவிட்டன, மேலும் சாக்கியர்கள் தருமம் ஏந்தி பள்ளிகளுக்கு சென்று மற்றவர்களுடன் சேர்ந்தே உண்டு வந்தனர். எந்த ஒரு சாக்கிய துறவியும் தான் ஏற்ற பிச்சையை அங்கே உண்டு செல்ல மாட்டார். ஆனால் கீழுள்ள பாடலில் எந்த அளவிற்கு தூற்றமுடியுமே அந்த அளவிற்கு தூற்றி இருக்கின்றனர்.
கையிலுண்டுழல் வருங்கமழ் துவராடையான்
மெய்யைப் போர்த்துழல்வாரு முரைப்பன் மெய்யல”,
”உறிப்பிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிப்பிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளமின்”
”குண்டரைக் கூறையின்றித் திரியும்
சமண் சாக்கியரை பேய்
மிண்டரை கண்ட தன்மை
விரலாகிய தென்னை கொலோ”
”வைதீகத்தின் வழியொழு காதவக்
கைதம் முடிக் காரமணன் தேரரை
மறைவ் ழக்கமில் லாத பாவிகள்
முறிய வாது செய்த்திரு வுள்ளமே”
“அந்தனர் புரியு மருமறை
சிந்தை செய்யா தவர்கள்”
”வெந்தலாகிய சாக்கிய ரோடு
சமணர்கள்”
இந்த பாடல்களில் தெளிவாக பல இடங்களில் மிகுதியாகவே சாடி இருக்கிறார்கள். முதலில் தனது சமயம் உயர்வானது என்று அழுத்திபேசுதல்,பிறகு பிறமதங்களை தாழ்த்தி பேசுதல், அம்மதக்காரர்களை சாடிப்பேசுதல்,
இங்கு தான் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று
அதாவது முழுக்க முழுக்க சைவ சமயத்தவரின் கைகளில் அதிகாரம் சென்ற அந்த அதிகாரத்தை தீவிரமாக பயன்படுத்துதல்,
சம்பந்தர் பற்றிய கதைகளில் சமணர்கள், சம்பந்தரின் நூல்களை எரிப்பதும், வைகையில் எறிவதும், அவரை கொலைசெய்ய முற்படுவது, இதர பல வாய்மொழிக்கதைகள் உண்டு,
கீழுள்ள எடுத்துக்காட்டை காண்பீர்,
இரண்டு உணவகத்தார் இருக்கிறார்கள், இரண்டு பேருமே தங்கள் உணவுதான் மிகச்சிறந்தது என்று சொல்கிறார்கள், நாளைடைவில் எதிர் உணவகத்தாரை எப்படியோ ஒழித்து விட்டார். இப்போது தனக்கு எதிர் உணவகத்தாரை பற்றி இவர் புகழ்வாரா? இகழ்வாரா? இவரிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் முன்னாள் இருந்த உணவகத்தார் பற்றி முழுக்க முழுக்க குறைதான் கூறுவாரே அன்றி முன்பு ஒருத்தர் இருந்தார் அவரது உணவகத்தில் இது சிறப்பாக இருக்கும் அது சிறப்பாக இருக்கும் என்று தன் வாயால் கூறுவாரோ?
இது இயற்கையாகவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று
சமணமும் பௌத்தமும் ஆரிய மதம் என்ற கூற்றை ஏற்க முடியாது, மேலும் நாவலம் தீவு, இந்திர தேசம், நாகர்பூமி என்று கூறப்படும் இந்திய தீபகற்பத்தில் தான் இந்த புத்தனும் அருகனும் தோன்றினார்கள். ஹரப்பா முகன்சாதரா, போன்றவற்றை திராவிட நாகரீகம் என பேசுபவர்கள் அந்த பகுதியில் வந்த சமண பௌத்தங்களை ஆரியம் என்று கூறுவது விசித்திரமாக உள்ளது, மைய ஆசியாவில் இருந்து வந்தது தான் ஆரியம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம், அப்படி இருக்க சமணத்தையும் பௌத்ததையும் எப்படி ஆரியம் என்று கூறமுடியும்??
நாகர்கள் பூமி என்றால் அது தமிழர்கள்நிலம் என்று மத்திப்பிற்குறிய பெரியவர்கள் அறிந்தது தான்,
இன்று நாம் கானும் நகர்கோவில், நாகப்பட்டினம், நாக நெறி(நாங்குநேறி) நாகார்ச்சுனம், நாகபூர், இலங்கையில் உள்ள நாகதீவு( யாழ்பானம் அருகில் உள்ளது)போன்றவை அனைத்தும் தமிழர் கிருஸ்து முன்பு இந்தியா எங்கும் வாழ்ந்தனர், என்று அறியவருகிறது,
சமண பௌத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தமிழகத்தில் காட்டுமிராண்டிகள் அல்ல, உலகிற்கு நாகரீகத்தை காட்டும்மிரர்கள்(mirror) தான் இருந்தார்கள். பழந்தமிழர் வழிபாடு என்பது சைவம் அல்ல (இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் இதை ஏற்றே ஆகவேண்டும்) தமிழர் நாகரீகம் என்பது அங்கிருந்து வந்தது அல்ல, எப்படி இன்று நம்மிடம் இந்து, கிருத்துவம், இசுலாம், மேலும் ஜைனம் என்ற சமணம் சாக்கியம் என்ற பவுத்தம் இருக்கிறதோ அதே போல் தான் அன்றும் சைவம், நடுகல்வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இதர இருந்தது,எ
" இன்று பெரும்பான்மையாக இந்துமதம் இருப்பது போல் அன்று ஆசீவகம்
இருந்தது"
இந்த ஆசீவகம் என்பதன் உண்மை பொருள் அறிவீரோ ?
ஆ என்றால் பசு
சீவ என்றால் உயிர்
அகம் என்றால் வீடு
ஆக ஆசீவகம் என்பதன் பொருள் பசுவாகிய உயிர் கட்டுண்டு உள்ள இந்த தளையாகிய
பாசம்
அதன் உண்மை இருப்பிடமான இறை எனும் பதி
ஆக இது சைவத்தின் உயிர். தளை. இறை எனும் பதி பசு பாசம் என்பதேதான்
குறிக்கும் என்பதை அறிவீரோ ?
மேலும் சைவத்தின் உண்மையை நீங்கள் உணராத காரணத்தினால் தான்
தமிழரின் உண்மை சமயமான சைவத்தை குறை கூறுகிறீர்கள்.
ஒன்று தெரியுமா ?
சமணம் என்பதே சைவத் தேடுதலின் உச்சம்தான்.
மேலும் சமணம் சைவத்திலிருந்தே பிரிந்துள்ளது எனப்படுகிறது.
காரணம் இந்த சமணத்தை தோற்றுவித்தவராக ஆதி தீர்த்தங்கராக சொல்லப்படுபவர்
ரிடப தேவர்.
அவரே சைவ சமயம் சொல்லும் ரிடபம் எனும் நந்தி தேவர்.
சைவத்தின் உச்சம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்.
அதுவே சமயத்தில் பின்பற்றப்பட்டது.
சைவம் எப்போதுமே வாழ்வின் நிலையாமையை உணர்த்திக்கொண்டே இருக்கும்.
ஆகவேதான் அதன் கடவுளான சிவபெருமான் சுடுகாடில் உறைபவராக காட்டப்பட்டார்.
பிற்காலத்தில் சைவ சமயம் மற்றம் சமண சமயம் இரண்டிலும் அதன்
கருத்தாக்கங்கள் வலுவிழந்து சடங்குகள் முக்கியத்துவம் பெற்றன. அந்த
சடங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையே சைவ - சமண சண்டையாக உருவெடுத்தன.
எப்போதுமே எந்த சமயத்திற்குமே மற்றொரு சமயத்தின் மீது சண்டை தோன்ற
வாயப்பே இல்லை. அந்த சமயத்தில் பிற்காலத்தில் தோன்றிய சடங்குகளே சமயச்
சண்டைகளுக்கு காரணகர்த்தாவாக அமைந்துள்ளன.
இனியும் மதச் சண்டைகளுக்கு அதுவே காரணமாக அமையும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’
என்பது திருமூலர் அருட்பாடல். உடலே கோயில் என்றார்.
"மெய் கண்ட சாத்திரம்" சுர, பர பக்கங்கள் படித்ததுண்டா!? படித்தால் தமிழ்ச் சைவச் சமயம் எவ்வாறு மற்ற சமயங்களை விட உயர்ந்தது என்று புரியும்!!
மேலும் சமணம் சைவத்திலிருந்தே பிரிந்துள்ளது எனப்படுகிறது.//
நிச்சயமாக சைவத் தேடுதலின் உச்சம் சமணம் இல்லை!
பிறவாமையே சைவத் தேடுதலின் உச்சம்!!
வள்ளலார் காட்டிய சன்மார்க்கம் சைவத் தேடுதலின் உச்சம்!!!
நீங்கள் சொன்னதில் சன்மார்க்கம் எப்படி சைவத்தின் உச்சமோ
அதே போல சமணமும் சைவத்தின் கூறுகளை உள்ளடக்கியதே.
பிற உயிர்களிடத்து அன்பு செய்தல் என்பதும்
பிற உயிர்களிடத்து தீங்கு செய்யாதிருத்தல் என்பதும்
பிற உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தல் என்பதும்
இறை நிலையை அடைய வழி என சைவத்தின் நிலைப்பாடு.
அதே கொள்கையை கொண்டதுதான் சமணமும்.
அதில் இறை கொள்கை வேறுபடலாம்.
ஆனால் உலகில் முதலில் சீவகாருண்யம் போதித்தது சமணமே.
அதே போல சைவத்தில் நிர்வாண தீக்கை என்பது உண்டு.
அதுவே சமணத்தில் நிர்வாணம் ஆனது. பிற்காலத்தில்
அது சடங்காக மாற்றப்பட்டு நிர்வாண நிலை அம்மண நிலையாகி விட்டது.
அதுவே அம்மணம் எனும் சொல் மறுவி அமணர்கள் என்றும்
சமணர்கள் என்றும் உரு பெற்று விட்டது.
ஆக சமணத்தின் வேர் நிச்சயமாக சைவத்திலிருந்தே சென்றிருக்க வாய்ப்புள்ளது.
இறை கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் தேடுதலில் இரண்டும் ஒரே வழியையே
கொண்டுள்ளது ஆய்வு செய்தால் புலப்படும்.
சைவத்தில் உள்ள புராணங்களை விடுத்து சைவத்தின் உண்மை நிலையை நோக்கினால்
உலகின் அனைத்து சமயங்களிலும், மதங்களிலும் சைவத்தின் தாக்கம் ஏதாவது ஒரு
விதத்தில் இருக்கவே செய்யும் என்பதை உணரலாம்.
மேலும் சைவம் தமிழரின் தாய் சமயமாக இருப்பினும் அது வடபுலத்திலும்
பரவியிருந்தது.
அதன் தாக்கமே சமண, பௌத்த சமயங்கள் என்பது பொய்யுரையாகாது.
எப்போதுமே ஒரு சமயம் காலத்தை கடந்து நிற்க வேண்டுமானால் அது
பொதுமக்களுக்கு சுலபமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது வாழ
முடியும். ஆகவேதான் சாதாரணனும் கைகொள்ளக்கூடிய சடங்குகள் உண்மை
கருத்துக்களை மறைபொருளாக கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாராவது தேடுதல்
உள்ளவர் இதை அக ஆய்வு செய்தால் அவருக்கு புலப்படும் வகையில் ஒவ்வொரு
சமயத்திலும் சடங்குகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
எவ்வளவு உயர்ந்த கருத்துக்களை கொண்டிருந்தாலும், வெறும் கருத்துக்களை
மட்டும் கொண்ட மதங்களோ, சமயங்களோ காலத்தின் ஓட்டத்திற்கு தாக்கு பிடிக்க
முடியாமல் அழிந்து படுகின்றன.
நிர்வாண நிலை காலத்தின் மாறுபாட்டால் சடங்காக மாறி அம்மணமாக மாறியது,
அப்படியும் அது கால ஓட்டத்தில் நிற்க வேண்டி அய்யா நாக இளங்கோவன் கூறியது
போல வணிகர்கள் தங்களுக்க தகுந்தாற்போல் சடங்குகளை புகுத்தி உயிரிறக்கம்
என்பதையும் சடங்காக மாற்றி விட்டார்கள்.
அந்த சமயம் எந்த உயர் காரணத்திற்காக தோன்றியதோ அது மறைந்து சடங்குகள்தான்
நிலை நிற்கின்றன. சைவ சமயத்திலும் இதே நிலைதான் உள்ளது.
சைவ சித்தாந்தத்தை எந்த சிவ ஆலயத்தில் போதிக்கிறார்கள்.
சரி சிவ ஆலயத்தில் இலிங்கம் வைத்திருக்கின்றார்களே,
அதன் உண்மை நிலை தெரியுமா ?
இலி + அங்கம் என்பதே இலிங்கம் என்றாயிற்று
இலி என்பதற்கு இல்லை என்பது பொருளாகும்
அங்கம் என்பதற்கு உருவம் என்பது பொருளாகும்
இலிங்கம் என்பதற்கு உருமற்றது எனபதே உண்மை பொருள்
எத்தனை பேருக்கு இதன் உண்மை புலப்படும்.
எனக்கு தெரிந்து படித்தவர்களே நிறையபேர் ஆண் குறியைதான் இலிங்கமாக
ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள் என்று புரியாமல் கூறுவதை
கேட்டிருக்கிறேன்.
சரி ஆலயம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ?
ஆ என்றால் பசு எனும் உயிர்
அது இலயமாகக் கூடிய அதாவது அதன் மயக்கம் தீர்ந்து ஒடுக்கம் பெறுவதை
குறிப்பதற்கே ஆலயம் என பெயர் வைத்தார்கள் நம் சித்தர் பெருமக்கள்.
அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்
//நீங்கள் சொன்னதில் சன்மார்க்கம் எப்படி சைவத்தின் உச்சமோ
அதே போல சமணமும் சைவத்தின் கூறுகளை உள்ளடக்கியதே.
பிற உயிர்களிடத்து அன்பு செய்தல் என்பதும்
பிற உயிர்களிடத்து தீங்கு செய்யாதிருத்தல் என்பதும்
பிற உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தல் என்பதும்
இறை நிலையை அடைய வழி என சைவத்தின் நிலைப்பாடு.
அதே கொள்கையை கொண்டதுதான் சமணமும்.
அதில் இறை கொள்கை வேறுபடலாம்.
ஆனால் உலகில் முதலில் சீவகாருண்யம் போதித்தது சமணமே.//
சிவ அன்புடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பழந்தமிழர் நாகரீகத்தை முழுக்க முழுக்க சைவமே என்று கூற்றை ஏற்றுக்கொள்ளாததற்கு மற்றோரு காரணம், ஒரு மரம் முளைக்க விதையில் இருந்து கொழுந்து, இலை, செடி, தண்டு, கிளை, மரம் என வந்த பிறகு தான் பழம் கொடுக்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டிற்குள் சமண பௌத்தம் தழைத்தது எப்படி ஆதி சைவம் என்று சொல்லும் சிவ வழிபாடு தீடீரென்று சிறுபான்மையானது எப்படி என்று புரியாத புதிராக இருக்கிறது.
கொஞ்சம் இஸ்லாத்திற்கு செல்வோம் நாம் பாடப்புத்தகத்தில் படித்தது முகமது நபிகள் கொண்டு வந்த மார்க்கம் இசுலாம் என்று ஆனால் உன்மை அதுவல்ல அவருக்கு முன்பு பல நபிகள் இருந்திருக்கிறார்கள்,
அது போல் தான் சமணமும், பௌத்தமும் இருக்கலாம். மஹாவீர தீர்த்தங்கள் இறுதி பிறப்பு என்று சொல்லுவார்கள், இது குறித்து சாரனாத்தில் உள்ள தீர்த்தங்கர ஆலயத்தில் எழுதப்பட்டுள்ளது. அதே போல் தாய்லாந்து பர்மா ,சிலோன் நாடுகள் கவுதம புத்தர் 8 பிறப்பு என்றும், சிலர் 13 பிறப்பு என்று இனி வரும் பிறப்பு தான் மைத்திரேயா என்றும் கூறுவர்.
இங்கு தான் எனது கேள்வி 10-ம் நூற்றாண்டுகளில் நுழைந்த இசுலாம், 16-ம் நூற்றாண்டில் நுழைந்த கிருத்துவம் போன்றவை நீண்டகாலமாக ஏற்படுத்தாத பாதிப்பை 100-ஆண்டுகளுக்குள் எப்படி சமணமும் பௌத்தமும் தமிழர் கலாச்சாரத்தில் எழுச்சி பெற்று இருக்க முடியும், திருக்குறள் போன்ற பொதுமறை இதர காப்பியங்கள் இவை யாவும் சில நூற்றாண்டில் வடக்கில் இருந்து தோன்றிய மதங்களால் உருவானவையாக இருக்காது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம்(புத்தநகரம்) மற்றும் குமரியில் உள்ள புத்தநேந்தல்(புத்தன் ஏந்தல்) புத்தவழிபாடு இரண்டு ஊர்களின் வரலாற்றை படிக்கும் போது இந்த ஊர்களின் பெயர்களும் கிமு 5-ம் நூற்றாண்டு அல்லது 4-ம் நூற்றாண்டில் தோன்றியதாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதாவது புத்த மதம் தமிழகத்தில் வந்த உடனே இந்த பெயர்கள் வந்து விட்டன. ஆச்சர்யமான ஒரு தகவல்.
முத்துக்குழித்துறையில்(தூத்துக்குடி) உள்ள நாரைக்கிணறு என்னும் ஊர் உள்ளது கூந்தன்குளத்திற்கு செல்லும் பறவைகளில் நாரைவகைகள் இந்த ஊரில் இருக்கும் நாவல் தோப்பில் தங்கி கூடுகட்டி வாழும் மேலும் அந்த ஊரைசுற்றியும் பல கிராமங்களில் குளத்துப்பாசனம் ஆகையால் கோடையில் நாரைகள் அதிகம் இங்கு வரும் இந்த நாவல் தோப்பில் நன்னீர் கிணறு ஒன்று உண்டு, கிணற்றுக்கும் நாரைக்கும் தொடர்பு இல்லை, இருப்பினும் ஊரில் அடையாளத்திற்காக நாரைதோப்பு கிணறு என்று அழைப்பார்கள், பல நூற்றாண்டிற்கு பிறகு இந்த பெயர் நாரைக்கிணறு என்று நிலைத்தது(சவேரியார் நாரைக்கிணற்றை நார் என்று குறிப்பிட்டுள்ளார்-16-ன் நூற்றாண்டு) இப்படி ஒரு பெயர் நிலைக்க பல நூற்றாண்டுகள் ஆகிறது. அப்படி இருக்க புத்தமதம் வந்த சில ஆண்டுகளுக்குள் புத்தநகரம் புத்தநேந்தல் போன்ற பெயர் எப்படி வந்தது இருக்க முடியும்,
புத்தரும் மஹாவீரரும் அந்த அந்த சமயத்தை உருவாக்கியவர் என்றாலும் அவருக்கு முன்பு வந்தவர்களில் சிலர் இதே பாணியில் அன்பு மற்றும் அகிம்சையை போதித்து உள்ளனர். இது குறித்து கம்பரும் கூறியிருக்கிறார். ரிடபதேவர் என்பவர் மகன் வழி வந்தது சமணம் என்றும் ஒரு பதிப்பில் படித்திருக்கிறேன்.
இங்கு மும்பை சமூக ஆர்வலர் திரு துரைராஜ் அவர்களின் ஒருவர் கூறிய கருத்தை தருகிறேன் . இதுவும் அவரது கற்பனையே இது இப்படி ஏன் இருக்ககூடாது என்று என்னிடம் சொல்லியது(அக்காலத்தில் பல நூறு ஆண்டுகள் வாழும் திறமை உண்டு அனைவரும் அறிந்ததுதான், அதன் படி ஆதாம் ஏவாள் ஆப்ரிக்க கண்டத்தில் தங்களது சந்ததிகளை பெருக்கிய உடன், இடம்பெயர்ந்து இந்தியா வந்து இமயமலையில் தங்கினர், இங்கு இருந்து பல சந்திகளை உண்டாக்கிய பிறகு இருவரில் பிணக்கு ஏற்பட்டு சிவன் இமயத்திலேயே தங்கிவிட்டார்,
சக்தி தெற்கு நோக்கி தனது புதல்வர்களுடன் வந்து விட்டார். இன்றும் குமரி என்ற தென்முனை குமரி(குமரி என்பது பெண் பதம்) இமயமலையில் இருந்தவர் தனித்து இருக்கையில் வாழ்க்கையின் சுக துக்கங்கள் குறித்து சிந்தனையில் இருந்தவர், ஒவ்வோரு உயிரனத்திலும் புகுந்து அவைகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சுக துக்கங்களை கண்டறிந்து புத்தராக பிறந்தார் மஹாவீராக பிறந்தார், கான்பூசியசாகவும், ஏசுவடிகளாவும் நபிகள் நாயகமாகவும் பிறந்தார் என்பார் இதற்கு அவர் உதாரணம் தரும் போது ஆப்பூஸ்(மல்கோவா) மாம்பழத்தை உதாரணமாக தருவார், சுவையான மாம்பழத்தின் விதையில் இருந்து முளைக்கும் மாமரத்தின் அனைத்து பழங்களுமே சுவையாகத்தான் இருக்கும் என்பார்.
சைவமும் வைனவமும் சமண பவுத்த வழிபாட்டு முறைகள் பலவற்றை தன்னுள் எடுத்துக்கொண்டது, நந்தி போன்றவை சமணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அதே போல் ஆமை அவதாரம் பௌத்ததில் இருந்து எடுக்கப்பட்டது, ஆமைபற்றி பவுத்தம் ஒழுக்கம் குறித்த பதத்திலும் மழை பற்றிய இயற்கை காலக்கனிப்பானாகவும் பார்த்தது, (பார்க்க Battle of Red Cliffs (208-209 AD)
மேலும் சம்பந்தர், அப்பர் சுந்தரர் போன்றோர் வாழ்வில் நடந்தாத கூறப்படுபவைகள் கதைக்கு வேண்டுமென்றால் வா வா என்று கூறலாமே ஒழிய நிசத்தில் தள்ளி நிற்கவேண்டி இருக்கிறது, ஏனெனில் 8-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் கடுமையான பஞ்சம் வந்த ஒரு பதிவு இருக்கிறதும் அது எந்த பகுதி என்று தெரியவில்லை. ஒரு சுந்தரருக்கு சம்பந்தருக்கு அப்பருக்கு பிலிம் காட்டிய சிவபெருமான் பெரும்பகுதி மக்கள் பஞ்சத்தால் அல்லரும் போது என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பும் போது நீ பெரியாரிஸ்டு என்று சப்பை காரணம் கூறி எஸ்கேப் ஆனவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
மேலோட்டமாக பழந்தமிழர் நாகரீகத்தை வேறும் சைவம் என்று கூறி சைவர்கள் வேண்டுமென்றால் உற்சாகப்படலாம், ஆனால் அதையும் மீறி ஒன்று அல்ல பல இருக்கிறது, மேலும் சிவவழிபாடு எங்களுடையது என்று டில்லியில் உள்ள லாலாக்களிடமும் வரனாசியில் உள்ள பண்டித்துகளிடமும் சொன்னால் கங்கையில் வாயை கழுவு, என்கிறார்கள், தமிழ் சிவன் அவ்வளவு சூத்திரனா அப்படி என்றால் அவர்கள் கொண்டாடும் சிவன் யார்?
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en