1. செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010): இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன் +++ 3. வெருளி நோய்கள் 509-513: இலக்குவெருளி நோய்கள் 509-513: இலக்குவனார் திருவள்ளுவன்வனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 11, 2025, 3:24:28 AM (3 days ago) Oct 11
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்      10 October 2025      கரமுதல


(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி)

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010)

11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும்  மொழியான  சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப்  பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப் போய்விட்டதே என்று கவலைப்படுவதைவிட நமக்கு வேறு வழியில்லை.

  1. 12. கேந்திரிய இந்தி சிக்(கு)சான் மண்டல் (ஆகுரா) என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, முழுமையும் இந்திய அரசின் நிதிஅளிப்பில் செயல்படும் தன்னாட்சி நிறுவனமாகும். இந்தி மொழியின் பயிற்சி, ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாக 19.3.1960 இல் தொடங்கப்பெற்ற கேந்திரிய இந்தி சன்சுதான் என்னும் நிறுவனத்தின் தில்லி, மைசூர், ஐதராபாத்து. கௌகாத்தி, சில்லாங்கு, திமாப்புர் ஆகிய ஆறுஇடங்களில் உள்ள 6 மண்டலப் பயிலகங்கள் மூலம்  அயல்நாட்டில் இந்தியைப் பரப்புதல் என்னும் திட்டத்தின் கீழ், 71 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்தி கற்பிக்கப்படுவது போல் அயல்நாட்டினருக்குத் தமிழைக் கற்பிக்கத் தனி அமைப்பை இந்திய அரசு ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான தகுதி நமக்கு இல்லை என்பதுபோல் இந்திய அரசு நடந்து கொள்கிறது.
  1. 13. இந்தியா முழுமையும் சமசுகிருதம் பேசுவோர் எண்ணிக்கை 50,000-இற்கும் குறைவே. ஆனால், 1974 இலிலிருந்து அனைத்து இந்திய வானொலிகளில் சமசுகிருதத்தில் குறுஞ்செய்தி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோல், பிற மாநிலங்களின் அனைத்து வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச் செய்தி ஒலி பரப்பவும் ஒளிபரப்பவும் செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். பத்து கோடிக்கும் மேலாகத் தமிழ்பேசுவோர் இருப்பினும் தமிழ்ச் செய்தித் திட்ட நினைவுகளுக்கே புறக்கணிப்புதான் என்பது   வேதனையல்லவா? 
  1. 14. வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமசுகிருத வகுப்பு, கூட்டுப்பாடல் பயிற்சி சமசுகிருத நாடகம் அளிக்கப்படுவது போல், தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்படும்; சமசுகிருதத்தில் திரைப்படம் உருவாக்கவும் நாடகம் உருவாக்கவும்  முழு நிதியுதவி அளிக்கப் படுவது போல், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலை நாகரிகச் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் விளக்கும் நாடகங்களுக்கும் திரைப் படங்களுக்கும் குறும் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் உலக அளவில் நிதியுதவி அளிக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தது நம் அறியாமையே என இந்திய அரசு நடந்துகொள்கிறது.
  1. 15. இந்திய அரசின் துறைகளும் கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் தங்கள் குறிக்கோள் முழக்கங்களாகச் சமசுகிருத முழக்கங்களை வைக்க ஊக்கப்படுத்தப் படுகின்றன. இந்திய அரசின் முழக்கமாகச் சத்தியமேவ செயதே அறிவிக்கப்பட்டுள்ளது போல், ஆயுள்காப்பீட்டுக் கழகம் –  யோகசேமம் வகாமியாகம் (Yogakshemam Vahāmyaham), இந்தியக் கப்பற்படை – சன்னோ வருணா(Shanno Varuna), இந்திய வான்படை – நாப சுபர்சம் தீபிதம் (Nābha Sparsham Dīptam),    இந்தியக் காவல் துறை – சாத் ரக்கசனய் கலா நிக்ரனயா (sadd rakshanay khalah nighranayah), இந்தியக் கடலோரக் காவல் படை – வயம் ரக்சாமகா (Vayam Rakshāmaha), அ.இ.வானொலி  – பகுசன இதய பகுசன சுகய (Bahujanahitāya bahujanasukhāya), அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் – சரீர்மத்தியம் கலூதர்ம சாதனம் (Shareermadhyam Khaludharmasādhanam), ஆந்திரப் பல்கலைக்கழகம் – தேசசுவி நாவதிட மசுது (Tejasvi Nāvadhitamastu), பனசுதாலி வித்யாபீடம் – ச வித்யா ய விமுக்தயெ (Sa Vidyā Ya Vimuktaye),  பிருலா தொழில்நுட்ப அறிவியல் பயிலகம், பிலானி – ஞானம் பரமம் பலம்  (Jnānam Paramam Balam) எனச் சிலவற்றை எடுத்துக்காட்டிற்குக் கூறலாம். இவைபோல் தமிழ் முழக்கங்களைப் பொது முழக்கங்களாக வைப்பர்; செய்மதி, ஏவுகணை, படைக்கலன்கள், வானூர்திகள், கப்பல்கள் முதலியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவார்கள் என எதிர்பார்த்தது நமது அளவு கடந்த ஆசை என்பதுபோல் இந்திய அரசு நடந்து கொள்கிறது.
  1. 16. தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பின்னும் தாய் நிலத்தில் தமிழ், தலைமை யிடத்தில் இல்லாவிடில் இழுக்கெனக் கருதியாவது ஆட்சித்துறையில், கல்வித் துறையில், நீதித்துறையில், சமயத்துறையில், பிற துறைகளில் என எங்கும் தமிழே ஆட்சி செய்யும் நிலை மலரும் என எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்னும் அவலநிலை தானே இன்னும் தொடருகிறது. உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டி வழக்குரைஞர்கள்  மடியும்வரை உண்ணா நோன்பிருப்பினும் இந்தியஅரசு படிய வில்லையே!
  1. 17. சமசுகிருத அகராதி வெளியீட்டிற்கெனப் பொருள் உதவி  வழங்கப்படுவதுபோல் தமிழ் மொழியில் பல்வேறு துறைகளில் அகராதிகள் வெளியிட இந்திய அரசு உதவும் என்ற எதிர்பார்ப்பு ஈடேறும் நிலை இல்லையே!
  1. 18. சமசுகிருதச் செய்தி இதழ்களும் இலக்கிய அறிவியல் இதழ்களும் வெளியிடப் பொருள் உதவி வழங்குவதுபோல் தமிழ் இதழ்களுக்கும் மலர்களுக்கும் பொருளுதவி கிடைக்கும்; ஒவ்வொரு துறைகளிலும் புதுப்புது இதழ்கள் பெருகும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவையெல்லாம் சமசுகிருதத்திற்கு மட்டும்தான் உனக்கில்லை என மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு நடந்து கொள்கிறதே! 
  2. 19. தேசியச் சிந்து மொழி மேம்பாட்டுக் குழு, தேசிய உருதுமொழி மேம்பாட்டுக் குழு முதலான அமைப்புகள் மூலம் சிந்து மொழியையும் உருது மொழியையும் வளர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பௌத்த படிப்பு மத்திய மையத்தின் மூலம் பாலி, திபேத்தியன், ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி மொழி பயில உதவி வழங்கப்பட்டு வருகிறது. பௌத்தக் கல்வித் திட்டத்தின் மூலம் சிங்களம் படிக்கவும் படிப்பிக்கவும்  இந்திய அரசு உதவி வருகிறது. இவைபோல்  செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்னராவது  தமிழ் பயிலவும் பயிற்றுவிக்கவும்  இந்திய அரசு உதவும் என்ற எதிர்பார்ப்பு நீர்மேல்எழுத்தாகக் கூடாது எனக்கவலை வருகிறது.

    (தொடரும்)

    இலக்குவனார் திருவள்ளுவன்

    ++

    வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்

     


    ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      10 October 2025      கரமுதல


    (வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி)

    வெருளி நோய் 504-508

    1. எரிமீன் வெருளி-Meteorophobia

    எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.
    கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம் எரிமீன் என்ற எளிய சொல்லையே பயன்படுத்தலாம்.
    meteoro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் விண் பொருள் என்பதே. பின்னர் விண்ணிலிருந்து பூமியைத் தாக்கும் விண்கற்களைக் குறித்தது. எனவே இப்போதைய பொருள் விண்வீழ் கொள்ளி எனப்படும் எரிமீன் ஆகும்
    00

    1. எரிவளி மானி வெருளி – Gasgaugephobia

    எரிவளி மானி(Gasgauge) குறித்த வரம்பற்ற பேரச்சம் எரிவளி மானி வெருளி.
    ஊர்தி ஓட்டிக்கொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்து விடுமோ என்ற பேரச்சம் எழுவதை இது குறிக்கிறது.
    எரிவளி நிலைய வெருளியுடன்(aerostatiophobia) தொடர்புடையது.
    00

    1. எரிவாயு குழாய் வெருளி – Zapsaulphobia

    எரிவாயு குழாய் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எரிவாயு குழாய் வெருளி.
    காற்று எங்கும் பரந்து விரிந்து வாய்த்திருத்தலால் வாய்வு எனப்பட்டது. இதுவே சமக்கிருதத்தில் எங்கும் பரந்து இருப்பதைக் குறிக்க வியாபி என்றானது. வாய்வு, பின்னர் வாயு என்றும் அழைக்கப்பெற்றது. தமிழ் வாயு-வையும் சமக்கிருத வழிச்சொல்லாகத் தவறாகக் கருதுகிறோம்.
    00

    1. எருது வெருளி – Vodiphobia/ Taurophobia எருது குறித்த வரம்பற்ற பேரச்சம் எருது வெருளி.
      எருது அஞ்சத்தக்க விலங்கு. முட்டிக் கீழே சாய்த்து விடும், குடலைக் கிழித்துவிடும்,அல்லது கீழே தள்ளி மிதித்துக் கொன்று விடும் என்ற தேவையற்ற அளவுகடந்த அச்சங்களுக்கு ஆளாவோர் உள்ளனர். எருது அஞ்சத்தக்க விலங்கு என்பதால் அதனை அடக்குவோரைத் தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்தனர்.
      காளையின் கொம்பு கண்டு அஞ்சுபவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம். இக்கருத்தைக்
      “கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமையும்
      புல்லாளே ஆய மகள்”
      என்கிறது கலித்தொகை (103:63-64).
      கொல்லேறு என்றால் கொல்லுகின்ற ஏறு; கோடு என்பது கொம்பினைக் குறிக்கும்; புல்லுதல் என்றால் கணவனாக ஏற்றுத்தழுவுதல்; மறுமையும் என்றால் அடுத்த பிறவியிலும்; ஆயமகள் என்பது முல்லை நிலப் பெண்.
      மஞ்சு விரட்டு/ஏறுதழுவுதல்/சல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் அல்லது திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் பார்த்து அஞ்சுவோரும் உள்ளனர்.
      Tauro என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளை.

    00

    1. எலிவெருளி-Musophobia/Murophobia/Suriphobia/Muriphobia

    எலி அல்லது எலி வகைகள் குறித்த அச்சமே எலி வெருளி.
    எலியினால் வரும் தொல்லைகள் குறித்தும் எலிக்காய்ச்சல் குறித்தும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எலி இல்லாவிட்டாலும்கூட எலிவந்து தொல்லை தரும் என அஞ்சுவோரும் உள்ளனர். சுண்டெலி வெருளி என்றும் சொல்லலாம்.
    Muso என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சுண்டெலி.
    souris என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் எலி.
    எலி என்னும் பொருள் கொண்ட mur- என்னும் இலத்தீன் சொல்லை வேராகக் கொண்ட murine என்னும் சொல் எலி சார்ந்த அல்லது எலிக் குடும்பம் என்னும் பொருளில் கையாளப்படுகிறது.
    00
    (தொடரும்)
    இலக்குவனார் திருவள்ளுவன்
    வெருளி அறிவியல் தொகுதி 2/5

    ++

    வெருளி நோய்கள் 509-513: இலக்குவனார் திருவள்ளுவன்

     


    ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      11 October 2025      கரமுதல


    (வெருளி நோய்கள் 504-508 தொடர்ச்சி)

    வெருளி நோய்கள் 509-513

    1. எலுமிச்சை வெருளி – Lemoniphobia

    எலுமிச்சை(lemon) குறித்த அளவுகடந்த பேரச்சம் எலுமிச்சை வெருளி.
    எலுமிச்சை எளியோரும் பயன்படுத்தக் கூடிய எல்லாக் காலத்திலும் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த ஒன்றாகும். எனினும் எலுமிச்சைச்சாறு பற்சிப்பியைப்(tooth enamel) பாதிக்கும், பற் சிதைவு அடையும், நெஞ்சு எரிச்சல் வரும், வயிற்றுப் புண்ணை உண்டாக்கும், வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் என்றெல்லாம் பக்க விளைவுகளை எண்ணி, அளவோடு பயன்படுத்தும் எண்ணம் கொள்ளாமல் அஞ்சுவோர் உள்ளனர்.

    00

    1. எலுமிச்சைப் பான வெருளி – Lemonadaphobia

    எலுமிச்சைப் பானம்(lemonade)மீதான மிகையான பேரச்சம் எலுமிச்சைப் பான வெருளி.
    எலுமிச்சை வெருளி உள்ளவர்களுக்கு எலுமிச்சம் பழப்பானம் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சங்கள் வருவது இயற்கையே. எலுமிச்சை வெருளிக்குக் கூறியவையே இதற்கும் பொருந்தும்.
    00

    1. எலுமோ வெருளி – Elmophobia

    பொம்மலாட்டப் புனைவுருவான எலுமோ (Elmo) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எலுமோ வெருளி.
    எள் தெரு(Sesame Street) என்னும் புனைவுரு பாத்திரத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு பாத்திரம் என்மோ/எலுமோ(Elmo).இப்பாத்திரம் குறித்த பகுத்தறிவற்ற பேரச்சமே எலுமோ வெருளி. எலுமோ குறித்த கொடுங்கனவும் என்மோ வெருளிக்குக் காரணமாகும்.
    00

    1. எலும்புக் கூடுகள் வெருளி – Skelephobia

    எலும்புக் கூடுகள்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எலும்புக் கூடுகள் வெருளி.
    பேய்க்கதைகளில் அல்லது பேய்ப்படங்களில் பேயாக எலும்புக்கூட்டு உருவத்தைக் காட்டுவது வழக்கமாக உள்ளது. இதனால், எலும்புக்கூட்டைப் பார்ப்பவர்களுக்குப் பேயைப் பார்த்ததாக் கருதித் தேவையற்ற அச்சம் வருகிறது. எலும்புக் கூட்டின்மூலம் எதிரிகள் அல்லது வேண்டாதவர்கள் செய்வினை செய்திருப்பார்கள் என்ற அச்சமும் கொள்கின்றனர்.
    00

    1. எழு நாள் முயல் வெருளி – Paschakounephobia

    நாட்டுப்புறக் கதை உருவமான உயிர்த்தெழு நாள் முயல் (Easter Bunny/ Easter Rabbit/Easter Hare) பற்றிய பேரச்சம் எழு நாள் முயல் வெருளி.
    முயல் வெருளி(leporiphobia) உள்ளவர்களுக்கு எழுநாள் முல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. ((lepus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முயல்.)
    00

    (தொடரும்)

    இலக்குவனார் திருவள்ளுவன்

    வெருளி அறிவியல் 2/5

    ++





    --
    அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

    இலக்குவனார் இல்லம்,
    23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
    மனை பேசி 044 2242 1759
    அலை பேசி 98844 81652

    / தமிழே விழி! தமிழா விழி!
    எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பின்வரும் பதிவுகளைக் காண்க:


    www.ilakkuvanar.com
    thiru2050.blogspot.com
    thiru-padaippugal.blogspot.com
    http://writeinthamizh.blogspot.com/
    http://literaturte.blogspot.com/
    http://semmozhichutar.com

    Reply all
    Reply to author
    Forward
    0 new messages