*முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுகள்! வலி சுமந்த வரலாறு !*
#எங்கள் #இளையோரே! நீங்களே எங்கள் நம்பிக்கை; நீங்களே எங்கள் எதிர்காலத்தின் பாலம்.
உலகம் இன்று பல்வேறு தீவிரப் போர்களையும், அங்கு நிகழும் உயிர்ச் சேதங்களையும் உற்று நோக்குகிறது. ஆனால், 21-ஆம் நூற்றாண்டின் முதல் இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய போது, இந்த உலகம் மௌனம் காத்தது. அந்த மௌனம் இன்றும் தொடர்கிறது.
இது வெறும் வரலாறு அல்ல; உங்கள் சொந்த இரத்தமும் சதையுமான உறவுகள் அனுபவித்த ஆறாத வடு. இலங்கை அரசு, மிருகங்களை விடக் கேவலமாக வதைத்த அந்த இருண்ட காலத்தின் சாட்சியாக இந்த மாதம் நிற்கிறது.
*எங்கள் இளையோரே!*
*உங்கள் பெற்றோர்கள் அந்தத் துயரத்தை ஒரு தீராத வலியாகத் தங்கள் இதயங்களில் இன்றும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் உங்களில் அந்த வலி ஒரு லட்சியமாக உருமாறுகிறது. நீங்களே எங்கள் நம்பிக்கை; நீங்களே எங்கள் எதிர்காலத்தின் பாலம்.*
நமது பாரம்பரியத் தாயகம் விடுதலை பெறும் வரை, இந்தப் போராட்டத்தின் சுடரை ஏந்திச் செல்லும் புனிதமான கடமை உங்களுக்கு இருக்கிறது. உங்கள் குரல் வழியாக நமது வரலாறு வாழும்; உங்கள் உறுதி வழியாக நமது நீதி வெல்லும்.
*பிரித்தானிய தமிழர் பேரவை*
https://youtu.be/L5K0Z39GrZg?si=pCoJwX-7qTZ0Vp0m