பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/M83tOYbXVcc
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: திரு. கோபி
பாடியவர்: திரு. கோபி
சில மாதங்களுக்கு முன்பு தானியங்கியில் (auto) செல்ல முயற்சித்து ஒரு ஓட்டுநரின் வண்டியில் பயணித்தோம். மூத்த மகள் ரிதன்யா விடம் keyboard ற்கான இசைப்பயிற்சி செல்வதற்கான நேரம் குறித்து பேசிக் கொண்டே சென்றோம். உடனே ஓட்டுநர் என் மகளிடம் இசைப்பயிற்சி குறித்து விரிவாகப் பேசினார். நான் குறுக்கிட்டு "இசையில் ஆர்வம் உண்டா?" என்று கேட்டேன். அவரும் "நான் ஒரு இசையமைப்பாளர். என் மகனுக்கு பயிற்சி அளித்து அவன் தற்போது keyboard நன்றாக வாசிப்பான்" என்றபடியே அவரின் youtube channel ன் சிலவற்றை அனுப்பி பார்க்கச் சொன்னார்.
அதன்பிறகு நான் வெளியிடும் youtube விழியங்களை அவருக்கு அனுப்புவேன். அவர் எனக்கு அனுப்பினார். நேற்று நான் மெட்டமைத்து எழுதி பாடிய பாடலின் இணைப்பை அனுப்பிய உடனே பாடல் வரிகளை அனுப்புங்கள், ரிதன்யாவின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி நேற்று மாலை எனக்கு என் பாடல் வரிகளில் அவரின் வேறு ஒரு மெட்டில் அவரின் குரலில் இசை சேர்த்து இந்த விழியத்தை அனுப்பினார்.
குரலும் இசையும் அருமை. ஒரு மணி நேரத்தில் வேறு ஒரு மெட்டில் பாடலை உருவாக்கி விட்டார். இசையமைப்பாளர் கோபி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.