PLEASE CIRCULATE to all.
http://www.un.org/en/rights/pdf/POE%20Notice%20-%20Public%20Submissions%20%2815%20Oct%202010%29.pdf
தனது கடமையில் இருந்து தவறிக ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார்.
இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.
அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்
ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்
ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி - panelofexpe...@un.org
இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது. அனுப்பி வைப்பதற்கான
காலக்கெடு: டிசெம்பர் 15, 2010
இது தொடர்பாகச் செயற்படும் உலகத் தமிழர் பேரவை (
in...@globaltamilforum.org)
பிரித்தானிய பேரவை
அவுஸ்திரேலிய தமிழர் பேரவை,
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு (
mte.f...@gmail.com - 00 33 615 88 4221)
கனடா போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் (
u...@cwvhr.org -
416-628-1408)
Danish Tamil Congress : 004552173671
German Tamils:
justicef...@rocketmail.comNetherland Tamils Forum :
netherland...@gmail.com : 0031685294322
Italian Tamils federation:
consigli...@gmail.comNorway Tamils: 004793422229
Swiss Tamils:
th...@gmx.ch
கனடாவில் :
http://www.yarl.com/...showtopic=77196சுவிசில்:
http://www.yarl.com/...showtopic=77852
பிரித்தானியா:
http://www.yarl.com/...showtopic=77182அமெரிக்காவில் :http://www.yarl.com/forum3/index.php?showtopic=78399
பிரான்சில் :
http://www.yarl.com/...showtopic=77677போன்ற அமைப்புகளோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு பிரதியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (
u...@cwvhr.org ) வைக்கலாம்.
சிறீலங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி ஐ.நா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்க குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில் நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றை ஐ.நா.அவைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை அமைத்தல்.
எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. நாம் அனைவரும் எழுதுவதுடன் ஏனையவர்களையும் எழுத வைப்போம். சர்வதேச விசாரணை அமைய விரைந்து எழுதுவோம்.
தொடர்புபட்ட ஒலி,மற்றும் ஒளிப்பதிவுகளின் இணைப்புக்களையும் சேர்த்து அனுப்பவும்
PLEASE CIRCULATE to all.
"Coming together is a beginning; keeping together is progress; working together is success"