Topic-1
தமிழ் இலக்கியச் சிந்தனைகள்
1. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மக்களால் பேசப்பட்டு வரும் தொன்மையான மொழி – தமிழ் மொழி;
பெரும்பாலும் அடிப்படைத் தன்மைகள் மாறாது தொடரும் உலகச் செம்மொழி – தமிழ் மொழி
திராவிட மொழிகளில் முதன்மை பெறும் மொழி – தமிழ்மொழி
2. இலக்கு என்பதற்கு விளக்கம், நோக்கம், கொள்கை எனப் பொருள் கொள்ளலாம்;
இயம் என்பதற்கு ஒலிப்பது, கூறுவது, வெளிப்படுத்துவது எனப் பொருள் கொள்ளலாம்;
அதனால் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் விளக்குவது-இலக்கியம் எனலாம்
3. தமிழ் இலக்கியம் – செய்யுள் வடிவம் மற்றும் உரைநடை வடிவம் என இரண்டு வகைகளைக் கொண்டது எனலாம்.
செய்யுள் வடிவம் – இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது எனலாம்.
உரைநடை வடிவம் – கதை – சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயணக் கட்டுரை, நாட்குறிப்பு, கடிதம் போன்றவை கொண்டது எனலாம். உரைநடை இலக்கியங்கள் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கொண்டது எனலாம்.
4. பொருளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இலக்கியங்களையும் – அகம், புறம் எனப் பிரித்துவிடலாம்.
அகம் – இன்பத்தில் அடங்கலாம் எனலாம்.
புறம் - அறம், பொருள் என அடங்கலாம் எனலாம்.
5. மேலும் அக இன்பத்தினை – சிற்றின்பம், பேரின்பம் எனப் பகுக்கலாம் எனலாம்.
சிற்றின்பத்தில் – காதல் போன்றனவும்,
பேரின்பத்தில் – இறைபக்தியும், தேசபக்தியும் பிறவும் எனலாம்.
மேலும் இறைபக்தி – சமயத் தோத்திர இலக்கியங்களும், சாத்திர
இலக்கியங்களும் கொண்டவை எனலாம்.
6. இலக்கியத்தின் புறப்பகுப்பான அறத்தின்கீழ் – இல்லறம், துறவறம் உள்ளன எனலாம். சமுதாயச் செய்திகளனைத்தும் – இல்லறத்தில் அடங்கும் எனலாம். அரசியல், போர் போன்றவை - பொருட்பகுப்பின் கீழ் வரும் எனலாம்.
7. செய்யுள் வடிவ இலக்கிய வகையை மீண்டும்
1. யாப்படிப்படையிலானவை எனவும்,
2. பிற அடிப்படையிலானவை எனவும் பிரிக்கலாம்.
8. மேலும் தமிழ் இலக்கியக் காலத்தை – காலத்தை அடிப்படையாகக் கொண்டு – தொல்காப்பியக்காலம், சங்க காலம், பதினெண்கீழ்கணக்குக் காலம், பக்திக்காலம், பிரபந்தக் காலம், தற்காலம் எனவும் பகுக்கலாம்.
***********