சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத விஞ்ஞான பூர்வ திரைக்கதையாகவும் மணிரட்னத்தினால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 3014 ஆம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்படும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் பின்னரான உலகம், விஞ்ஞானம் என்பன பற்றிய மணிரத்னத்தின் சாத்தியமான அசாத்திய கற்பனையை எண்ணி அனைவரும் பேராச்சரியப்படுவர், அதேவேளை தமிழிலும் ஒரே வேளையில் இந்த படம் எடுக்கப்படுவதால் தமிழ் எழுத்துத்துறையில் விஞ்ஞான பூர்வக்கதைகளின் முன்னோடி அமரர் சுஜாதா என்பதுபோல, திரையிலே மணிரட்னம் மிளிர்வார் என திருமதி சுஹாசினி மணிரட்னம் தெரிவித்துள்ளார்.
அரசல் புரசலாக உலாவரும் கதை இதுதானாம்.........