தமிழகத்தின் மிகத்தொன்மையான,சமயம் போற்றும்திருமடங்களில் ஒன்று:இன்று
அருணகிரி ஞான தேசிகரால் கேலிக்கும் கேவலத்துக்குமான கருப்பொருள்
ஆக்கப்பட்டிருக்கும் மதுரைஆதீன மடம்.
மூன்றாந்தர அரசியல் மேடைப் பேச்சுக்காரர்களை விடவும் கீழ்த்தரமான
சவாலும் சண்டாளத் தனமுமாக முண்டாத் தட்டிக் கொண்டு முழங்குகிறார்
293 ஆவது ஆதீனம் என அறிவிக்கப் பட்டுள்ள நித்தி.
அன்பும் அறநெறியும் அருளும் பெருநெறியும் கொண்டு திகழ்ந்த
‘மதுரை ஆதீனம்’ என்ற சைவத் திருமடம் நித்தியாலும் அவர்தம் ’அடியாள்’ திருக்கூட்டத்தாலும் அசைவக் கிடங்கு போல் நாறிக் கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும்
அடியார் திருக்கூட்டம் எல்லாம் ‘.சிவ,சிவ’ என்று செவியைப் பொத்திக்
கொள்ளும்வகையில் அங்கு நித்தியானந்த நீச செபங்கள் நடக்க,
இன்று ஆன்றோரும் சான்றோரும் அவமானப்பட்டுத்
தலை குனிந்துபோய் இருக்கிறார்கள்.
”மதுரை ஆதீனத்தை மீட்கும் போராட்டக் குழுவினர் கூடிய கூட்டம்
தேவையான எழுச்சியை மதுரைத் தமிழர்களுக்கு தரவில்லையோ?”
என்ற புழுக்கத்தை,மதுரை ஆதீன மீட்புக் கூட்டத்துக்குப்
போக இயலாத மக்களின் நெஞ்சில்,புகுத்திவிட்டிருக்கிறது,
நித்தி விட்ட புளுகு அறிக்கைகள்.
இந்த ஆதீனத்தின் இப்போதுள்ள குருமகா சந்நிதானம் எனப்படும்
292 ஆவது பட்டம் தான் அருணகிரி ஞான தேசிகர். இனி தனது அடுத்த
வாரிசென 293-ஆவது பட்டத்துக்குரிய
குருமகா சந்நிதானமாக – நிதானமின்றி இவாரால்
நியமிக்கப்பட்டிருப்பவர், சர்ச்சைக்குரிய ‘யோகவியாபாரி’
நித்யானந்தா. ’யோக வியாபாரி’ என்று
சொல்வதை விட ‘போக வியாபாரி’என்று சொல்வதே பொருந்தும்.
அருளாளரும் ஆன்மநேயப் பொருளாளரும் ‘நோக’ ஆன்மீக வியாபாரியாக
நேர்மை,தூய்மை.வாய்மை,எளிமை.,
பொறுமை,உண்மை அனைத்தையும் துறந்து விட்டு
துராக்கிரமத்தின் துணை கொண்டு வாழும் துஷ்டனாக
அடையாளம் காணப்பட்டிருக்கும் நித்தியை, தேடிச் சென்று,
சரணாகதி அடைந்து சீடனாக ஏற்றுக் கொண்டு
‘’பட்டாபிஷேகம்’ செய்திருக்கும் இந்தக் ‘குருமுட்டை’மகா சந்நிதானத்தை
நாம் என்ன என்று சொல்ல?
இந்த முறைகெட்ட,தகுதி கெட்ட பட்டாபிஷேகமானது நமது
சமயப் பற்றாளர்களர்களை மட்டும் அல்ல;
சமயம் சாராத சான்றோர்களையும் மனம் சரியச் செய்துவிட்டிருக்கின்றது.
மரபுகளும் மாண்புமிக்க நெறிமுறைகளும் மதுரை ஆதீனத்தில்
குழி தோண்டிப் புதைக்கப்பட்டு,
கும்பிடத்தக்க கோவிலெனத் திகழ்ந்த இடம் கோட்டானைக்
குடிவைத்த மடம் என மாற்றப்பட்டுள்ளது.
இதை மாற்றி, மறுபடியும் மதுரை ஆதீனத்தின் பழம் பெருமையை
மீட்க வேண்டியதும் அதை இனி வரும் காலம்தோறும் காக்க
வேண்டியதும் நம் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின் கடமை.
இந்த உணர்வோடு,நமது சமய நெறிகள் சரிந்து போகாதிருக்கவும்;
சான்றோர்களின் மனம் நோகாதிருக்கவும்
தமிழ்க்கடலும் சைவக் கடலுமாகிய அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களை
முன்னிலை வகிக்கச் செய்து ‘மதுரை ஆதீன மீட்பு மாநாடு’ ஒன்றை
திருவாவடுதுறை,தருமை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்களின்
நெறிகாட்டுதலின் கீழ், மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் ’சமயநெறிக் காவலர்’
திரு. அர்ஜுன் சம்பத்.சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றச் செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் 13.5.2012 அன்று மதுரையில் நதடத்தினர்.
சைவ நெறிச் சட்டங்களையும் அதன் நீதிநெறிமுறைகளையும்
பழந்தமிழ்ப் பண்பாட்டு முறையோடு எடுத்துச் சொல்லும்
முழுத்தகுதி படைத்தவர் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள்.
அவர் சொல்லுக்கு எதிர்ச் சொல் ஆடும் அருகதை அற்றவன் நித்தி.
ஆனால் அனல் வாதமும் புனல் வாதமும் செய்யத் தயார் என்கிறான்.
இந்த மந்திரப் புரட்டு வித்தையை எல்லாம் அவன் பிடதியோடு
வைத்திருக்க வேண்டும்.அங்குதான் ஆடுகளும் மாடுகளும்
மந்தை மந்தையாய் வளர்க்கப் படுகின்றன..மேற்கத்திய கசாப்புக்
கடைகளுக்கு வேண்டுமானால் அவை பயன்படலாமே தவிர, இங்கல்ல.
அனல் வாதமும் புனல் வாதமும் திருஞானசம்பந்தப் பெருமானால்
எப்படி நடத்தப் பட்டன என்கிற
வரலாறு 293 என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பிடதிக் கோட்டானுக்கும்
இவனைத் தன் வாரிசென வகைப்படுத்திக் கொண்ட 292 ஆவது
மதுரை ஆதீனத்துக்கும் வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்;
ஆனால் நாம் தெரிந்து கொண்டு சிந்திக்காமல் இருக்க முடியாது.
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்.....
(தொடர்ச்சி கீழே உள்ள link ல்)
திருஞானசம்பந்தர் வாழ்வின் சுருக்கமான வரலாறும் அவர் இந்த
மதுரை ஆதீனத்தின் முதல் தலைவாரக்ப் பொறுப்பேற்றதும்
ஆதீனகர்த்தராக வரவேண்டியவரின் தகுதிகள் யாதென்பது
அறிய கீழே உள்ள லிங்கை ‘கிளிக்’செய்யுங்கள்.
அதில் நமது உலகத் தமிழர் மையம் தோன்றும்.அதில்
’மறவாதீர் மதுரை ஆதீனம்’ கட்டுரையை முழுமையாகப் படித்தால்
இந்த விஷயங்கள் யாவும் விளங்கும்.
http://ulagathamizharmaiyam.blogspot.com
நன்றி,
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
Krishnan Balaa