மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து `` சன்மார்க்க சிந்தனைகள் - இறை தேடும் இழை

521 views
Skip to first unread message

praveen krishan

unread,
Apr 21, 2010, 11:17:49 AM4/21/10
to perur-pat...@googlegroups.com, chidambaramtemple, sivan...@googlegroups.com, kumar sk

---------- Forwarded message ----------
From: Nakinam sivam <nak...@gmail.com>



மூலாதாரத்து மூண்டெழு கனலை 
காலால் எழுப்பும் கருத்தரிவித்து

அன்பு சன்மார்க்க அன்பருக்கு,

மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து 
என்ற அவ்வையின் அகவலுக்கு விளக்கம் காண வேண்டும் என்றால் 
முதலில் மூலாதாரம் என்றால் என்ன என்பதும் மூண்டெழு கனல் எது என்பதும் கால் என்றால் என்ன என்பதும் பற்றிதான்.

முதலில் மூலாதாரம் என்றால் என்ன ?
மூலம் + ஆதாரம் = மூலாதாரம் 
மூலம் என்றால் நம்முடைய உடல் தோன்றுவதற்கு மூலமாய் விளங்கும் பொருள் எது ?

நமது உடலில் விளங்கும் ஜீவன் தான் நமது உடலுக்கு மூலமாக உள்ளது அந்த ஜீவனுக்குதான் ஆன்மா என்று பெயர்.

சரி ஆன்மாவின் உருவம் மற்றும் வடிவம் என்ன ?
ஆன்மா சிற்றணு வடிவினன் 
ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் கொண்ட உருவினன்.

அடுத்ததாக ஆதாரம் 
நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடத்திற்குத்தான் ஆதாரம் என்று பெயர்.

ஆக நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடமே மூலாதாரம் எனப்படும்.
அந்த இடத்தைதான் புருவ மத்தியம் என்று நமது சித்தர்களும், வள்ளல் பெருமானும் அழைக்கிறார்கள்.

ஆக மூலாதாரத்து மூண்டு ஏழு கனல் என்பது நமது அன்மாவைத்தான்.
சரி கனல் என்றால் நெருப்பு என்று பொருள் படும்.

நெருப்பை நீங்கள் தீபமாக மாற்ற வேண்டும் என்றால் காற்றை கொண்டு ஊத வேண்டும்.

இங்கு கால் என்றால் காற்று என்று பொருள் படும்.

மேலும் 
ஒரு தூலமான பொருளை தள்ள வேண்டும் என்றால் மற்றொரு தூலமான பொருளோ ஆயுதமோ வேண்டும்.
சூக்குமமான பொருளை மேலேற்ற வேண்டும் என்றால் அதே போன்ற சூக்குமமான பொருளை கொண்டுதான் மேலேற்ற முடியும்.

ஆக
சூக்குமமாய் உள்ள சிற்றணு வடிவாகவும் சூரிய பிரகாச ஒளியாகவும் உள்ள அந்த ஆன்மாவை சூக்குமை உள்ள காற்றின் உதவியுடன் மேலேற்றுவதைதான் இந்த பாடல் உணர்த்துகிறது.

மேலும்
அந்த காற்றும் நேரடியாக மனதின் துணை கொண்டு மேலேற்றாமல் 
அறிவின் துணை கொண்டு அதாவது உணர்வு கொண்டு மேலேற்ற வேண்டும் எனபதைதான் நமது அவ்வையார் சாகாக் கல்வியை  பற்றி பாடி உள்ளார்கள்.
மேலும் விளக்கம் அடுத்த மடலில்

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2010/4/18 O தோழன்:-} <guru...@gmail.com>

நடமாடும் சன்மார்க்க கலைககலஞ்சியமே மின் தமிழில்
நித்தம் வலம் வரும் போது எங்களுக்கு புத்தகங்களே தேவையில்லை

2010/4/17 Nakinam sivam <nak...@gmail.com>
அன்பு சகோதரி கமலா தேவி அவர்களுக்கு,

நீங்கள் காழி கண்ணுடைய பிள்ளையாரால் எழுதப்பட்டு திருபோரூர் சிதம்பர சுவாமிகளால் விளக்கம் எழுதப்பட்டு, வள்ளலார் ராமலிங்க சுவாமிகளால் பதிப்பிக்கப் பட்ட 
ஒழிவில் ஒடுக்கம் - புத்தகம் படிக்கவும்.
இது ஒரு சிறந்த ஞான நூல்.
சன்மார்க்க ரகசியங்கள் ஓரளவு வெளிப்படியாக எழுதப்பட்ட நூல்.
இந்த புத்தகம் சன்மார்க்க சங்கங்களில் கிடைக்கும்.
அன்புடன்
சிவம்


2010/4/17 Nakinam sivam <nak...@gmail.com>

அன்பு நண்பர் தமிழ் தேனீ அவர்களுக்கு.

மிக்க நன்றி. 
சகோதரி கமலா தேவி மற்றும் உங்களை போன்ற உயர்ந்த சிந்தனையாளர்களின் தூண்டுதலினால் இது வரை மறை பொருளாக இருந்து வந்த சித்தர் மற்றும் சன்மார்க்க ரகசியங்களை அனைவரும் பயன் பெரும் பொருட்டு எழுதி வருகிறேன்.
தொடர்ந்து எழுதுகிறேன்.
நன்றி பல உரித்தாகுக.
அன்புடன்
சிவம்


2010/4/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

நக்கினம் சிவம் அவர்களே  சுத்த சன்மார்க்க ரகசியங்களை அருமையாக எழுதுகிறீர்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
 
படித்துக்கொண்டிருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
17-4-10 அன்று, Nakinam sivam <nak...@gmail.com> எழுதினார்:
ஆன்மா அறிவென்னும் குரு

 
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

 
குரு என்பவர் நடை முறையில் 
இரு வகையாக பிரிக்கப் படுகிறார்.
காரிய குரு, காரண குரு.
ஞானத்தை தேடுபவர்கள் 
வாழ்வியலில் உள்ள உலகியல் குருக்களை 
விடுத்து சூக்குமமாய் உள்ள ஆன்மா குருவை
சரண் அடைந்தால்
அந்த ஆன்மா குரு நமக்கு
உண்மை வழியை காட்டுவார்.
வாழ்வியலில் உள்ள  குருக்களின் அனுபவங்கள்
மாயை வயப்பட்டது. ஏனென்றால் வாழ்வியலில்
உள்ளவர்கள் முழு ஞானத்தை அடைவது என்பது
மிகப்பெரிய சவால்.
அப்படி வாழ்வியலில் உள்ள உண்மை  குருவின் தன்மை
உலக விஷங்களை நாடாது.
அவருடைய அறிவு ஆன்மா அறிவாக இருக்கும்.
ஆகவே நாம் ஞான பாதையில் முன்னேற
சரியான குரு சூக்கும நிலையில்  உள்ள
ஆன்மா அறிவென்னும் குருவாகும்.
அதே போல் வாழ்வியல் குருக்களின் 
அனுபவங்கள் நமக்கு பாடமாக அமைவதை விட
நமக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லையே என்று
நமக்கு நம் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விடும்.
நமது அனுபவத்தை மற்றவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்து
அவரின் அனுபவம் எனக்கு ஏற்பட வில்லையே என்று
நம்மை வழி திருப்பி விட்டுவிட வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒவ்வொருவரும் நம்மிடம்  சூக்குமம் ஆக உள்ள  
ஆன்மா அறிவின் துணை கொண்டு 
ஞான அனுபவத்தை பெற முயல்வோம். 

 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

 

2010/4/16 Nakinam sivam <nak...@gmail.com>

வள்ளலார் புகைபடத்தில் ஏன் விழவில்லை ?



அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 


நமது வள்ளல் பெருமானாரை புகைப்படம் பிடிக்க அன்பர்கள் சிலர் 
பெருமானிடம் சம்மதம் கேட்டார்கள். 
ஆனால் பெருமானார் புகைப்படம் எடுப்பது 
இறைவனுக்கு சம்மதம் இல்லை என்று மறுத்து விட்டார்கள். 

இருப்பினும் சில அன்பர்கள் பெருமானுக்கு தெரியாமல் ? 
புகைப்படம் எடுக்க புகைப்படக் காரரை கூப்பிட்டு வந்து 
புகைப்படம் எடுத்தார்கள். ஒரு முறை இரு முறை அல்ல 
எட்டு முறை எடுத்தார்கள். 
ஆனால் பெருமானின் உருவம் பதிவாக வில்லை. 

ஏன் புகைப்படம் பதிவாகவில்லை என்றால் 
புகைப்படத்திற்கு தமிழில் நிழற் படம் என்றொரு பெயர் உண்டு. 
சுத்த தேகம் பெற்றவர்கள் மாயை மற்றும் சாயை அற்றவர்கள். 
அதாவது அசுத்த மாயை மற்றும் சுத்த மாயை நீங்கப் பெற்றவர்கள் 
மேலும் அவர்களது நிழல் கீழே விழாது. (சாயை என்றால் நிழல் என்று பொருள்) 
நிழல் கீழே விழாதவர்களின் உருவம் நிழற் படத்தில் பதிவாகாது. 
ஏனென்றால் அது நிழற் படம். 

நிழல் உள்ளவர்களுடைய உருவம் மட்டுமே 
நிழற் படமாக பதியும். 
நிழல் அற்றவர்களின் உருவம் தோற்ற உருவமாக மட்டுமே 
இருக்கும் அந்த உருவத்தில் வாளை எடுத்து சுழற்றினால் 
வாள் உடலின் உள்ளே சென்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் 
வெளியே வரும். மேலும் இயற்கை சீற்றங்கள் அவரை  ஒன்றும் செய்யாது. 

மேலும் அவர்களுக்கு கால பேதம் கிடையாது. 
கால பேதம் என்பது மூன்று காலங்களான 
நேற்று, இன்று நாளை. 
நேற்று என்பது முடிந்த ஒன்றாக நமக்கு இருக்கும். 
ஆனால் சுத்த தேகம் பெற்றவர்களால் 
முடிந்த காரியத்தை மாற்றி அமைக்க முடியும். 
இனி நடக்க போகின்ற காரியத்தை முன்பே முடித்திருக்க முடியும் 
நடந்து கொண்டிருக்கிற காரியத்தை எப்படி வேண்டுமானாலும் 
மாற்றி அமைக்க முடியும். 

எப்படி என்றால் 
கால தத்துவம் என்பது பூமியில் வாழும் நமக்கு ஒரு மாதிரியாகவும் 
மற்ற கிரகங்களில் வாழ்பவர்களுக்கு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளது. 
காரணம் நமது பூமி சூரியனை சுற்றி வர 365 1/4 நாட்கள் ஆகிறது 
அதுவே மற்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வர கால வேறுபாடு உள்ளது. 
நாம் எல்லோரும் சூரிய குட்ம்பத்தில் வாழ்கிறோம். 
ஆனால் சுத்த, ஞான, பிரணவ தேகம் எடுத்தவர் 
பிரபஞ்சங்களை தாண்டி அண்டங்களை தாண்டி போகக் கூடிய 
நிலை பெற்ற காரணத்தால் அவர்களுக்கு கால பேதம் கிடையாது. 


அன்புடன் 

விழித்திரு ஆறுமுக அரசு 


2010/4/15 Nakinam sivam <nak...@gmail.com>

சிதம்பர ரகசியம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

 
சிதம்பர ரகசியம் என்பது நடராஜரின் உருவத்திலேயே உள்ளது.
நாம் நடராஜரின் சிலையை உற்று நோக்கினால்
நடராஜரை சுற்றி ஜோதி வடிவம் உள்ளது.
நடராஜர் வலது காலை தூக்கி ஆடுகிறார்.
நடராஜரை சுற்றி உள்ள அக்னிதான் நமது ஆன்மா
அந்த ஆன்மா சிற்சபையில் உள்ளது.
சிற்சபை என்பது நமது புருவ மத்தியம்
அந்த ஆன்மா என்னும் அக்கினியின் உள்ளே
சிவமான இறைவன் நடம் இட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நடத்தை தற்போதம் அற்று அதாவது 
நான் என்கின்ற உணர்வு கடந்து
தரிசனம் காண்பதே ஜோதி தரிசனம் ஆகும்.
அதைதான் நமது வள்ளல் பெருமான் 
ஜோதி உள் ஜோதி என்று கூறி இருக்கிறார்கள்.

 
ஜோதி தரிசனத்தின் போது நான் என்கின்ற உணர்வு போய் விடுவதனால் 
அங்கே ஆணவம் கன்மம் மாயை மூன்று விலகி இருக்கும்.
துரியமும் கடந்த சுகம்  பூரணம் என்னும் நிலையினை
சுகாதீதம் என்னும் நிலையினை அடைந்து இருப்போம்.
இதைதான் கடவுள் நிலை அறிந்து அம்மையம் ஆதல்
என்று சித்தர் பெருமக்களும், நமது வள்ளல் பெருமானாரும் 
மறை பொருளாக பாடல்களாக பாடி உள்ளார்கள்.
இங்கே இறை தரிசனம் என்பது
நமது ஆன்மாவின் உள்ளே குடி கொண்டுள்ள 
சிவமான ஜோதி தரிசனம் பெறுவதுதான்.
தூலமான பொருளை  காண தூலமான கண்கள் பயன்படும்
சூக்குமமாய் உள்ள சிவத்தை நாம் ஆன்மாவினால் காண்பதனால் தான்
இது  ஆன்ம தரிசனம் என்றும் பெயர் பெறுகிறது.

 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக  அரசு

 

2010/4/14 Nakinam sivam <nak...@gmail.com>

பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ? 


அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 


சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து 
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும் 
பட்டினத்தாரும் மட்டுமே. 
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால் 
ஞானத்தை அடைந்தார். 

பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து 
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார். 
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார் 
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார். 
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன் 
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார். 
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது. 

பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக 
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும் 
என்று என்று கூறினார். 

பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. 
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான் 
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது. 
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று 
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் 
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது. 
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார் 
பேய் கரும்பு இனித்தது. 

இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து 
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் 
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து 
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன் 
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில் 
புதைத்தார்கள். அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து 
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 
அதே போல் மறுமுறையும் செய்தார். 
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை. 
சிவத்தோடு கலந்து விட்டார். 

இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில் 
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம் 
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து 
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும். 
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய் 
தேனின் சுவையாக மாறி விடும். 

அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம் 
தேனின் சுவையோடு இருக்கும். 
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால் 
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். 
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட 
முக்திக்கான அடையாளம். 

நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி 
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள். 
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது 
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம். 


அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால் 
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால் 
நாமும் இறை நிலையினை அடையலாம். 


 அன்புடன் 

விழித்திரு ஆறுமுக அரசு 


2010/4/11 Nakinam sivam <nak...@gmail.com>

முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே


அன்பு சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு, 


முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே 
 என்னுள வரைமேலெழுந்த செஞ்சுடரே 


நமது வள்ளல் பெருமானின் வரிகளுக்கு 
முன்னுறு மல இருள் என்றால் 
நமது ஆன்மா ஒன்றான சிவத்திலிருந்து பிரிந்து 
ஜீவன் என்ற நிலையை அடைந்து 
உடல் எடுத்தது. அந்த உடலுடன் அறிவும் சேர்ந்தது 
அறிவு தன்னுடைய நிழலாக மனதை கொண்டது. 
நமது ஆன்மா சிவத்திலிருந்து பிரிந்த போது 
சுத்த மாயை வயப்பட்டது. 
ஜீவன் நிலைக்கு இறங்கிய போது அசுத்த மாயை வயப்பட்டது. 

காரணம் ஜீவன் உடல் எடுக்கும் போது மனம் எனும் அசுத்த மாயையும் 
கூட வந்ததுதான். 

மனதின் வழி சென்ற ஜீவன் தன் செய்கையால் (கர்மங்களால்) 
நல் வினை தீ வினை என்ற வினைகளை சேர்த்துக்கொள்ள தொடங்கியது. இதன் பயனாய் பிறவி 
பிணி நம்மை தொடர தொடங்கியது. 

இந்த பிறப்பிற்கு வித்தான அசுத்த மாயையான இரு வினையினை தான் 
நமது வள்ளல் பெருமான் முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே 
என்னுள வரை என்பது என்னுடைய உள்ளில் விளங்கும் ஆன்மா வரை 
மேல் எழுந்த செஞ்சுடர் என்பது 
உள்ளே விளங்கும் ஞான சபையில் செஞ்சுடர் அனுபவத்தை 
ஆன்மா அனுபவிப்பதை குறிக்கிறது. 

அதே போல்தான் 

ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த 
 ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்த மெய்ச்சுடரே 

உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட 
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே. 


இந்த இரு வரிகளுக்கு 

ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய் சுடரே 
ஆன்மா ஜோதி தரிசனம் பெற்ற அனுபவமும் 
உள்ளொளி ஓங்கிட என்பதற்கு 
ஆன்மா மாயையால் மறைப்புண்டு இருப்பதனால் 
அதன் ஒளி மங்கி இருக்கிறது. 

அசுத்த மாயை விலகினால் ஆன்மாவின் ஒளி ஓங்கி ஒளி விடும். 
அதன் பயனாய் உயிர் எனும் ஜீவனும் ஒளி பெறும் 
அப்படிப்பட்ட மாயை வென்றதனால் 
சிவத்தின் உண்மை ஒளியான வெள்ளொளி தரிசனம் 
பெற்றதனை குறிப்பிடுகிறார். 


அன்புடன் 

விழித்திரு ஆறுமுக அரசு 


2010/4/11 Nakinam sivam <nak...@gmail.com>

இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்


அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 


நாம் வாழுகின்ற இந்த பூமி 
அண்டத்தில் உள்ள பால் வெளியில் - பிரபஞ்சத்தில் 
ஒரு சிறிய புள்ளி அளவே உள்ளது. 
அப்படிப்பட்ட புள்ளி அளவுள்ள பூமியில் உலகின் பணக்காரர் என்று 
சொல்லிக்கொல்பவரின் சொத்துக்கள் கண்ணுக்கு தெரியாத அணு அளவே உள்ளது. 
இந்த நாட்டை ஆள்கிறேன் என்று சொல்பவரின் எல்லை 
கண்ணுக்கு தெரியாத சிறிய அளவே உள்ளது. 

எனக்கு பத்து வீடுகள், பெரிய பண்ணை நிலம் உள்ளது என்று 
சொல்பவர்களின் சொத்துக்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில் 
கண்ணுக்கு தெரியாத அளவே உள்ளது. 
இறைவனின் படைப்பில் நமது பூமி மிக சிறியது. 
அப்படிப்பட்ட பூமியில் நமக்கு சொந்தமான சொத்துக்கள் 
வீடு, நிலம், கார், பைக், போன்ற அனைத்துமே 
பிரபஞ்சத்தை  அளவிடும்போது கண்ணுக்கு தெரியாத 
ஒரு சிற்றணு வடிவாகவே உள்ளது. 


ஆனால் நாம் 
இந்த உலகில் நான் பெரிய பணக்காரன், 
இந்த நாட்டில் நான் பெரிய பணக்காரன் 
இந்த மாநிலத்தில் பெரிய வசதியானவன் 
இந்த ஊரில் நான்தான் மிக உயர்ந்தவன் 
எங்கள் தெருவிலேயே நான் தான் வசதி படைத்தவன் 
என்னுடைய சொந்தகாரர்களிலேயே  நான்தான் பணக்காரன் 
என்னுடைய நண்பர்களிலேயே நான்தான் வசதியான பொருட்களை 
வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பொருள் யாரிடமும் இல்லை. 
என்று நான் என்கின்ற அகங்காரத்தின் காரணமாக பெருமை படுகின்றோம். 

ஆனால் நாம் வாழும் இந்த பூமி பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி அளவே. 
அப்படிப்பட்ட புள்ளியில் நாம் கண்ணுக்கு தெரியாத சிற்றனுவாக உள்ளோம். 

இது எப்படி இருக்கிறது என்றால் 
நமது உடம்பில் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றும் 
நான்தான் பெரியவன் நான்தான் பெரியவன் என்று 
கூறிக்கொண்டு இந்த பகுதியை நான் ஆட்சி செய்கிறேன் என்று 
கூறிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால்.அதை நாம் அறிந்தால் 
நமக்கு எப்படி சிரிப்பு வருமோ. 

அதுபோல மனிதர்களாகிய நமது செயல்கள் (அகங்காரங்கள்) 
இறைவனுக்கு சிரிப்பைதான் வரவழைக்கும். 


ஆகவே நமது சிறுமையை நினைத்தால் 
இறைவனின் பெருமையை நினைத்தால் 
நமக்கு நான் என்கின்ற அகங்காரம் தானே ஒழியும். 


ஆகவே நம்மிடம் இருக்கும் பொருட்களில் 
நமக்கு போக உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து 
அனைவரையும் சந்தோஷபடுத்தி 
நாமும் சந்தோஷமாக வாழ்வோம். 


அன்புடன் 

விழித்திரு ஆறுமுக அரசு 



ரூபா போனால் பாபா ஆகலாம்

 
ஒரு சமயம் வட நாட்டிலுள்ள ஒரு சாதுவை ஒரு பணக்காரர் பார்க்க சென்றார்.
வட நாட்டில் ஞானிகளை பாபா என்று அழைப்பார்கள்.
அங்கு நிறைய மனிதர்கள் அந்த பாபா விடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
அந்த பணக்காரரும் பாபாவை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது அவர் பாபாவை பார்த்து 
பாபா என்னிடம் பணம் நிறைய இருக்கிறது ஆனால்
நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
நீங்களோ பணம் எதுவும் இல்லாமல் மிகவும் நிம்மதியாக
காணப் படுகிறீர்கள். மேலும் அனைவருக்கும் ஆசி வழங்கி 
அனைவரையும் அமைதி படுத்துகிறீர்கள்.
ஆகவே நானும் பாபா ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பாபா ரூபா போனால் பாபா ஆகலாம். என்று பதிலளித்தார்.

 
பணக்காரர் வீட்டிற்கு வந்த உடன் தன்னிடம் இருந்த ரூபாய் 
அனைத்தையும் பாபாவின் ஆசிரமத்திற்கு அளித்து விட்டார்.
பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா 
என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று 
பழைய படியே கூறினார்.

 
பணக்காரர் வீட்டிற்கு சென்று தன்னுடைய நிறுவனங்கள் அனைத்தையும்
ஆசிரமத்திற்கு எழுதி வைத்தார்.
பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா 
என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று 
பழைய படியே கூறினார்.

பணக்காரர் வீட்டிற்கு சென்று அமைதியாய் இருக்க முயன்றார்.
ஆனால் அவரது மனைவி எல்லா பணத்தையும் ஆசிரமத்திற்கு 
எழுதி வைத்து  விட்டு என்னை ஏழை ஆகி விட்டீர்களே என்று திட்ட 
ஆரம்பித்தாள். 

 
இனி வீட்டில் இருக்க முடியாது என்று ஆசிரமத்தில் வந்து தங்க ஆரம்பித்தார்.
அப்போது உலகத்தில் எல்லா உயிர்களும் படுகின்ற கஷ்டங்களை உணர
ஆரம்பித்தார்.

 
இதன் காரணமாக அவருக்கு ஜீவ காருண்யத்தின் பயனாய் கிடைக்கும் 
ஒருமை நிலை ஏற்பட்டது. 
ஒருமை நிலையில் எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற தன்மை
ஏற்பட்டது.

அப்போதுதான் அவருக்கு பாபா சொன்ன ரூபா போனால் பாபா ஆகலாம் 
என்ற கருத்துக்கு பொருள் விளங்கியது.
மற்ற உயிர்களை அந்த ரூபத்தால் பார்க்காமல்
தன்னுடைய ரூபமாக கான்பதைதான் பாபா கூறினார்.
என்பதை உணர்ந்தார். 

 
இந்த முறை பாபாவை காண சென்றார். 
பாபா எழுந்து வந்து வாருங்கள் பாபா என்று ஆற தழுவி கொண்டார்.

 
ஆகவே அன்பர்களே 
ஜீவ காருண்யம் என்பது
எல்லா உயிர்களையும் தானாக காண்பதாகும்.
பிற உயிர்கள் படுகின்ற துன்பங்கள் 
தான் படுவதாக நினைத்து உதவுவது ஆகும்.
அதுவே ஒருமை கல்வி. அதன் அடுத்த படியே 
சாகா கல்வி.

 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
 

2010/4/6 Nakinam sivam <nak...@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

அன்பும் சிவமும் ஒன்றே !

 
அன்பே சிவம் என்பதே சன்மார்க்கத்தின் முடிந்த முடிபான கொள்கை.
அன்பும் சிவமும் ஒன்றே அன்பு வேறு சிவம் வேறல்ல
அப்படிப்பட்ட அன்பு மனிதர்களிடம் அவர்களது பக்குவ நிலைக்கு ஏற்ப
ஒவ்வொரு வடிவில் வெளிப்படுகிறது.
உயர்ந்த ஞான  நிலையில் உள்ளவர்களுக்கு 
அது ஜீவகாருன்யமாக அருளாக வெளிப்படுகிறது.
பக்குவப்பட்ட ஆன்மாக்களிடம் சுத்த அன்பாக வெளிப்படுகிறது.
பக்குவம் இல்லாத ஜீவர்களிடம் அது காமமாக வெளிப்படுகிறது.
அன்பின் உயர்ந்த நிலை ஜீவகாருண்யம்.
அன்பின் கீழ் நிலை காமம். 

 
அன்பின் கீழ் நிலையான காமம் ஏன் நம்மை பற்ற வேண்டும் ?
காரணம் நாம் அனைவரும் காமத்தினால் பிறந்தவர்கள்.
மேலும் நம்முடைய உடலில் 
ஆணாக இருந்தால் பெண் தன்மையும்
பெண்ணாக இருந்தால் ஆண் தன்மையும்
பிறக்கும் போதே நமது  உடலில் இணைந்துள்ளது.

 
மேலை நாட்டு மனோ தத்துவ ஞானி சிக்மன்ட் பிராய்ட் 
நமக்கு  காமம் ஏறபட முதல் காரணம் நாம் குழந்தையாக இருந்த போது
நாமருந்திய தாய் பாலில் ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்.
அதற்கு முன்பே  நமது வள்ளல் பெருமானாரும் 
குழந்தை பருவத்தில் பால் உணும் போதே  
அதில் அருவருப்பு ஏற்பட்டதாக எழுதி உள்ளார்கள்.
அவர்தான் கருவிலேயே திருவை அடைந்தவர் ஆயிற்றே.
ஆகவேதான் காமத்தை பால் உணர்வு என்று 
நமது தமிழில் காரண பெயராக அமைத்தார்கள்.

 
மேலும் திருவள்ளுவ தேவரும் 
மாதாந்த ரத்தமல்லோ சடலமாச்சு
என்று எழுதி உள்ளார்கள்.
அதாவது ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோநிததுடன் 
சேர்ந்து குழந்தையாக உருவெடுக்கிறது.
அந்த குழந்தை தாயின் ரத்தத்தினால் வளர்க்கப் படுகிறது.
அப்படி வளர்ந்த குழந்தை எப்படி காம வயப்படாமல் இருக்கும்.

 
ஆகவேதான் சித்தர்கள் இந்த காம உடலை 
தூய உடலாக மாற்றிக்கொள்ள வழி கண்டார்கள்.
தூய உடலாக மாறுவதற்கு மனம் ஒரு பெரிய தடையாக 
இருந்ததனால் முதலில் மனதை தன் வசப்படுத்தி 
அறிவே வடிவாக மாறினார்கள்.
சித்தர்கள் என்றால் அறிவே வடிவானவர்கள் என்று பொருள்.

 
நமது மனம் மட்டுமே உருவ பேதம் மற்றும்  
பால் பேதம் பார்க்கும் தன்மை உடையது. 
மனம் அறிவின் வழி நடக்க தொடங்கினால் 
பேதம் நீங்கி அனைத்து உயிர்களையும் 
சகோதர உயிராக காண தோன்றும்.
அங்கு அன்பு ஊற்று எழும்.
அன்பு ஊற்று எழும் நிலையில் அடுத்து
ஜீவ  காருண்யம் நம் நிலையாக ஒன்றி விடும்.
 ஜீவ காருண்யமே வடிவாக மாறினால் 
உயிர்களை தானாக காணும் ஒருமை தானே வந்தெய்தும்.

 
ஒருமை வந்தால்  இறை  அருள் தானே வரும்.
இறை அருள் வந்தெய்தினால் 
சிவமும் நாமும் ஒன்றாவோம்.

 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

---------- Forwarded message ----------
From: Nakinam sivam <nak...@gmail.com>
Date: 2010/4/2
Subject: சன்மார்க்க சிந்தனைகள் - இறை தேடும் இழை
To: mint...@googlegroups.com


நான் யார் விளக்கம்  


அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு  

நமது புராணங்களில், ஞான நூல்களில், சித்தர் இலக்கியங்களில், அற நூல்களில், 
நான் யார் என்ற கேள்விக்கு விளக்கங்கள் பலவாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. 
அதில் நமது ஆன்மாவே நான் என்றும், நமது ஜீவனே நாம் என்றும், 
வுடலோடு கூடிய ஜீவனே நான் என்றும் பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. 
ஆனால் நமது வள்ளல் பெருமானார் மற்றும் சித்தர்களும் 
ஜீவனும் சிவமும் ஒன்றாக கலப்பதற்கு முன்பு 
 விளங்கும் நிலையினை அதாவது நாம் வுலகில் வுடல் வுணர்வு, 
மன வுணர்வு, அறியும் வுணர்வு ஆகிய வுனர்வுடன்  கூடிய வுனர்வையே 
நான் என்று கூறுகிறார்கள். 

வுனர்வுறு வுணர்வும் வுனர்வெலாம் கடந்த 
அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி  

என்று நமது வள்ளல் பெருமான் கூறியிருப்பதிலிருந்து 
நான் என்பது வுனர்வாகவே இருக்கிறது.
அந்த நான் என்கின்றன வுணர்வு கடந்து ஜீவனும் ஆன்மாவும் 
கலக்கும் ஜீவ ஐக்கியமே சிவா நிலை அடைதலாம். 
ஆக நான் என்பது வெறும் வுணர்வு மட்டுமே.  
ஆதியில் சிவம் இயக்கமற்று நிலை கொண்டு இருந்த போது 
சக்தி என்னும் இயக்கம் சலனமாக தோன்றியது. 
சலனத்தின் விளைவாக ஒன்று என்ற நிலை மாறி 
இரண்டு என்கின்ற நிலையின் காரணமாக ஆன்மா ஜீவன் 
என்கின்ற இரு நிலை தோன்றியது. ஜீவன் நான் என்கின்ற 
 வுணர்வு பெற்றபோது இந்த வுலகம் தோன்றியது. 
அதன் பின் ஜீவன் செயலாற்ற தொடங்கியதும் வினை தோன்றியது. 
அது நல் வினை என்றும் தீ வினை என்றும் இரண்டாக பிறப்பிற்கு மூலமாய் அமைந்தது. 
ஆக நாம் நான் என்கின்ற வுணர்வை விடுத்து ஒருமை நிலையை அதாவது 
சிவ நிலையை அடைவதின் மூலமாய் பிறப்பிலிருந்து விடுபடலாம்.  
ஆக நான் என்பது வுணர்வு மட்டுமே என்பதை நாம் அறியலாம். 

அன்புடன் 


விழித்திரு ஆறுமுக அரசு 





--
Brotherly Athman
Nakinam Sivam



 
--
Brotherly Athman
Nakinam Sivam



--
Brotherly Athman
Nakinam Sivam



 
--
Brotherly Athman
Nakinam Sivam



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com
 



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com
 



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com
 



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com
 



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"
http://hariom.acnrep.com/

http://velmurugantemple.org.uk/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
You received this message because you are subscribed to the Google Groups "Sivan Kudil - Kovaipudur" group.
To post to this group, send an email to sivan...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to sivankudil+...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/sivankudil?hl=en-GB.

sangarmurthy v.s

unread,
Apr 21, 2010, 11:01:22 PM4/21/10
to sivan...@googlegroups.com
மூலாதாரம் என்பது புருவமத்தி என்பது தவறு'

2010/4/21 praveen krishan <kspravee...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages