Enlightment for all

47 views
Skip to first unread message

satheesh M

unread,
Jul 5, 2010, 1:51:43 PM7/5/10
to vallalar8, siddhargroups
எல்லோரும் பெறலாம்
"ஞானம் "

ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் ,

வந்தனம் ! இந்தியா ஞான பூமியில் பிறந்த நீவீர் புண்ணிய சாலிகள் தாம் !
எண்ணிலா ஞானிகள் பிறந்த, சித்தர்கள் இருக்கின்ற , திரும்பும் இடமெல்லாம்
திருக்கோயில்கள் நிரம்பிய ஞான பூமியில் பிறந்த நாம் கொஞ்சமாவது ஞானத்தை
பற்றி அறிய வேண்டாமா ? " கல்தோன்றி முன்தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்த தமிழ் !" வாழும் தமிழ்நாட்டில் வாழும் நீவீர் வாழ்வது ஒரு வாழ்வா
? சற்று சிந்தித்து பார்க்க !

மனிதன் முதலில் மனிதனாக வாழ வேண்டும் !? நல்லொழுக்கம் அவசியம் வேண்டும் !
நற்பண்புகள் இருக்க வேண்டும் ! சத்தியம் தவறாது வாழ வேண்டும் !
எவ்விதத்திலும் அறிவை மயக்கும் , உடலை கெடுக்கும் போதை பொருட்களை
உபயோகிக்கவே கூடாது ! மாமிச உணவை எக்காரணம் கொண்டு உண்ணக்கூடாது !
சுத்த சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் !


மாதா ,பிதாவை பெற்ற நீவீர் குருவை பெற்றதுண்டா ? குரு வழியேதான் கடவுளை
காண முடியும் ! குருவே பரப்ப்ரமம் ! பிறந்ததில் இருந்து நீங்கள்
தெரிந்து கொண்ட ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் சொன்னது தானே ! அவரெல்லாம்
குருவல்ல ! நீ யார் ? என அறிவித்து உன்னை நீ அறிய உபதேசிப்பவர் , தீட்சை
தருபவர் யாரோ அவரே குரு ! சற்குரு ! அப்படி ஒரு குருவை தேடு !!


எல்லாம் வல்ல இறைவன் , எங்கும் நிறைந்த இறைவன் மனித தேகத்தில் உயிராக சிற
- நாடு - உள் - ஜோதியாக துலங்குகிறார் ! ? இது தேவ ரகசியம் ! வேத
ரகசியம் ! ஞான ரகசியம் ! உன் உயிரான இறைவனை நீ காணவேண்டாம ? கண்டாலே
ஞானம் ! கண் தானே காண வேண்டும் ? அந்த கண் வழியாக விழியை காண்பிப்பார்
ஞான குரு !!

கண் தானம் எல்லோரும் செய்யலாம் அல்லவே ? எவர்க்கும் எவர் கண்ணையும்
கொடுக்கலாம் அல்லவா ? எப்படி ? எல்லோர் கண்மணியும் ஒரு போல
இருப்பதால்தான் !!கடவுள் ஒருவரே ! ஆத்மா ஒன்றே ! கண்மணியும் உலகில்
உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரு போலவே உள்ளது ! ? " ஒத்தது அறிவான்
உயிர் வாழ்வான் " என்கிறார் திருவள்ளுவர் ! மக்கள் அனைவருக்கும்
ஒன்று போல ஒத்திருக்கும் கண்ணை அறிதவன் உயிர் வாழ்வான் ! சாகமாட்டான் !
ஞான பெறுவான் என்கிறார் !


தாயின் கருவிலே உருவாகும் முதல் உறுப்பு கண் ! பிறந்ததிலிருந்து சாகும்
வரை 100 வயதனாலும் வளராதது கண் ! கண்மணியில் ரத்தம் இல்லை ! எலும்பில்லை
! நரம்பில்லை ! நம் உடலில் இருந்தாலும் உடம்பில் ஒட்டாது , பூமி
ஆகாயத்தில் இருப்பது போல் , கருவிழியுள் கண்மணி
சுற்றிக்கொண்டிருக்கிறது !? தேவே ரகசியம் இது !

குரு உபதேசம் பெற்று மெய்பொருள் - திருவடி - நம் இரு கண்கள் என உணர்ந்து
தவம் செய்தால் கிட்டும் " ஞானம் ! "

கன்னியாகுமரி " தங்க ஜோதி ஞான சபை " இது பற்றி விரிவாக 25 ஞான நூற்கள்
எழுதி வெளியிட்டுள்ளார்கள் ! எல்லோரும் ஞானம் பெற வேண்டும் ! இதுவே
குறிக்கோள் ! " வாலை " தான் கன்னியாகுமரி ! திருவருட்ப்ரகச வள்ளலார்
இராமலிங்க சுவாமிகளே எமது ஞான சற்குரு !

வருக ! பெறுக ! உணர்க ! வாழ்க !

என்றும் உண்மையுள்ள ,
சிவ செல்வராஜ்

ஞானசற்குரு சிவ செல்வராஜ்
தங்க ஜோதி ஞானசபை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
17/49P ,கலைஞர் குடியிருப்பு,
மாதவபுரம்,
கன்னியாகுமரி - 629702
செல் – 9245153454
www.vallalyaar.com

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஞானசற்குரு சிவ செல்வராஜ் அருளிய ஞானநூற்கள் !

* 1 கண்மணிமாலை
* 2 அருள் மணி மாலை
* 3 ஸ்ரீ பகவதி அந்தாதி
* 4 அருட்பெருஞ்ஜோதி அந்தாதி
* 5 சன்மார்க்க தெய்வம்
* ஞான வழி
* 6 சற்குரு கோவிந்தா சுவாமிகள்
* 7 அஷ்ட மணிமாலை
* 8 செல்வமே சீர்தாருமே
* 9 செந்திலாண்டவர் பாமாலை
* 10 அன்பு உதய மலர்
* 11 வள்ளலார் வழியே
* 12 ஜோதி மணி மாலை
* 13 ஜோதி ஐக்கு அந்தாதி
* 14 சற்குரு ஜக்கி வாசுதேவ்
* 15 சத்திய சாய்பாபா
* 16 சனாதன தர்மம்
* 17 வள்ளல் யார்
* 18 இயேசு எழுபது
* 19 ஞானக்கடல் பீர் முகமது
* 20 திருவருட்பா மாலை – பாகம் 1
* 21 திருவருட்பா மாலை – பாகம் 2
* 22 திருவருட்பா மாலை – பாகம் 3
* 23 திருவருட்பா மாலை – பாகம் 4
* 24 சாகாக்கல்வி

Reply all
Reply to author
Forward
0 new messages