கவிஞர் இளந்தேவன்

589 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jul 11, 2017, 5:08:29 PM7/11/17
to Santhavasantham
திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியது :

கவிஞர் இளந்தேவன் ஜூலை 11 செவ்வாய் மாலை காலமானார். தொடர்புத் தொலைபேசி 8667328939, முகவரி 39, எஃப் 1,க்வீன் சரசுவதி, பாரதியார் தெரு, மாருதி நகர், ஐய்பப்நதாங்கல், சென்னை.

-- Inline images 1

Subbaraman NV

unread,
Jul 11, 2017, 6:36:55 PM7/11/17
to santhav...@googlegroups.com
கவிஞர் இளந்தேவன் எனது உற்ற நண்பர். எனது  முதல் கவிதை நூல் “நிலவே நீ சொல்”லிற்கு அருமையான மதிப்புரை அளித்தவர். எனது ஆங்கில க் கவிதை நூல் “BREEZE" வெளியீட்டு விழாவை சிவசங்கர் பாபா, ஒளவை நடரசன் முன்னிலையில் நடத்தி வைத்தவர். அச்சமயத்தில் அவருக்குத் தனது அருமை மகன் விபத்தில் காலமான துயரம் வேறு. எனது வயது. அவரும் 1941ல் பிறந்தவர்.. என்னைப்போன்று கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்..
சொர்க்கத்தில் இருந்து கவிதைத் தொண்டை ஆற்றட்டும்.
என் வி சுப்பராமன் 

On Wed, Jul 12, 2017 at 2:38 AM, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (pas.pa...@gmail.com) Add cleanup rule | More info
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Kaviyogi Vedham

unread,
Jul 11, 2017, 7:27:42 PM7/11/17
to santhavasantham
 அவருடன் யான் 1980 முதல் எல்லா அரங்குகளிலும் பங்கேற்றிருக்கிறேன்.
 சிவசங்கர் பாபா நடத்திய சிவராத்திரி விழாவில் நீலாங்கரையில் யான் இளந்தேவன் தூண்டலால்
 இரவு 12 மணியிலி ருந்து 2 மணிவரை முருகன் எனும் கடவுள் நமக்குத் தெரிவிப்பதென்ன? எனும் தலைப்பில் பேசியது என்னாள் இன்றுவரை மறக்க முடியாத நிகழ்ச்சி. யானும் அவருக்கு ஆரம்ப காலத்தில் கோவில்களிலும் என் வீட்டில் பாபாஜி நினைவு அரங்குகளிலும் அரங்கம் ஏற்படுத்திதந்துள்ளேன்.
 அன்னாருக்கு என் பிரிய கவிஞருக்கு அஞ்சலிகள்,. காலனுக்கு நண்பர்கள் கவிஞர்களாக வேண்டியுளதோ
 யமப்பட்டணத்தில் கவியரங்கம் நடத்த? எனும் என் ஐயம் வலுப்பெற்றுள்ளதே! பூவை அமுதன், கல்பட்டார்,கவிக்கோ... ஆக நிறைய! 
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

 

Subbaiyar Ramasami

unread,
Jul 11, 2017, 8:30:01 PM7/11/17
to santhav...@googlegroups.com
அய்யகோ, என்ன இது, இளந்தேவன் காலமாகிவிட்டரா? அதிர்ச்சி அதிர்ச்சி! எத்தனை கவியரங்குகளிலும் கவிதைப்பட்டிமண்டபங்களிலும் அவரோடு கலந்துகொண்டிருக்கிறேன்!  தொப்பையும் கவிதைச் சுரங்கம் என அவரைப் பற்றி நான் சொல்வதுண்டு. வாழும்போதே வரலாறு என்று சுராஜ் அவரைப்பற்றிச் சொல்லுவார்! மிகச் சிறந்த கவிஞர். கவிதையை எப்படிச் சொல்ல்வேண்டும் என்பதை அறிந்தவர். திரைப்படத்துக்கு எழுதப்போனார் . அங்கே வெற்றி  பெறவில்லை. அரசியலுக்குப் போய் அம்மாவிற்குக் கட்டுரைகள் எழுதிக்கொடுத்தார். சிவசங்கர் பாபாவோடு தொடர்பு வைத்திருந்தார்.    அற்புதமான கவிஞரை இழந்துவிட்டோம்.  மூகாம்பிகையே முழுநிலவே, கனவுப்பூக்கள்புயலின் மைந்தன்   இன்னும் பல நூல்கள் கவிதை இலக்கியங்கள்.     புதுக்கவிதைத்தெறிப்பை மரபுக்கவிதையில் கொணர்ந்தவர். பல இரசிகர்களைப் பெற்றவர். அவர் ஆன்மா இறையடி நீழலில் தங்குக!

சந்தவசந்தம் அவர் குடும்பத்துக்குத் தன் ஆறுதலைத் தெறிவித்துக் கொள்கிறது.

Subbaiyar Ramasami

unread,
Jul 11, 2017, 8:36:28 PM7/11/17
to santhav...@googlegroups.com
அய்யகோ, என்ன இது, இளந்தேவன் காலமாகிவிட்டரா? அதிர்ச்சி அதிர்ச்சி! எத்தனை கவியரங்குகளிலும் கவிதைப்பட்டிமண்டபங்களிலும் அவரோடு கலந்துகொண்டிருக்கிறேன்!  தொப்பையும் கவிதைச் சுரங்கம் என அவரைப் பற்றி நான் சொல்வதுண்டு. வாழும்போதே வரலாறு என்று சுராஜ் அவரைப்பற்றிச் சொல்லுவார்! மிகச் சிறந்த கவிஞர். கவிதையை எப்படிச் சொல்ல்வேண்டும் என்பதை அறிந்தவர். திரைப்படத்துக்கு எழுதப்போனார் . அங்கே வெற்றி  பெறவில்லை. அரசியலுக்குப் போய் அம்மாவிற்குக் கட்டுரைகள் எழுதிக்கொடுத்தார். சிவசங்கர் பாபாவோடு தொடர்பு வைத்திருந்தார்.    அற்புதமான கவிஞரை இழந்துவிட்டோம்.  மூகாம்பிகையே முழுநிலவே, கனவுப்பூக்கள்புயலின் மைந்தன்   இன்னும் பல நூல்கள் கவிதை இலக்கியங்கள்.     புதுக்கவிதைத்தெறிப்பை மரபுக்கவிதையில் கொணர்ந்தவர். பல இரசிகர்களைப் பெற்றவர். அவர் ஆன்மா இறையடி நீழலில் தங்குக!

சந்தவசந்தம் அன்னாருடைய குடும்பத்திற்குத் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2017-07-11 17:27 GMT-06:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:

Subbaiyar Ramasami

unread,
Jul 11, 2017, 8:40:36 PM7/11/17
to santhav...@googlegroups.com
அவருக்குக் கவியரசுப் பட்டம்  இரத்தினகிரியில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நடந்த கவியரங்கில் 40 கவிஞர்களுக்குமேல் கலந்துகொண்டார்கள். நான் தான் தலைமை. 
தமிழ்மாறன் ஏற்பாட்டு செய்ய நாங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் கவிதைப் பட்டிமண்டபம் நிகழ்த்தியிருக்கிறோம்.    முத்துராமலிங்கம் என்பது இயற்பெயர். டி ஏ.வி பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றியவர். 
தமிழக அரசின் தமிழரசு பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். 

N. Ganesan

unread,
Jul 11, 2017, 9:14:45 PM7/11/17
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai


On Tuesday, July 11, 2017 at 2:08:29 PM UTC-7, பசுபதி wrote:
திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியது :

கவிஞர் இளந்தேவன் ஜூலை 11 செவ்வாய் மாலை காலமானார். தொடர்புத் தொலைபேசி 8667328939, முகவரி 39, எஃப் 1,க்வீன் சரசுவதி, பாரதியார் தெரு, மாருதி நகர், ஐய்பப்நதாங்கல், சென்னை.

பொன்மனச்செம்மல் கண்டெடுத்த இளங்கவிஞன் இளந்தேவன்!
..ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறதென்றால்.. அதை முன்னிட்டு அதில் பங்கேற்கவிருக்கும் பிரமுகரை.. சென்று சந்திப்பது.. பரிசுப் பொருள்கள் அளிப்பது.. நம்மைப் பற்றி அறிமுகம் தருவது.. நிகழ்ச்சியில் அவர் என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று விவாதிப்பது என பல்வேறு காரணங்கள் சொல்லலாம்.  

ஆனால், ஒரு விழா முடிந்தவுடன்.. அவருக்கான பிரத்யேகப் பாராட்டு மடலை அருமையான கையெழுத்தில் ஓவியர் வாயிலாக எழுதி.. பொன் வண்ணத்தில் சட்டத்தில் பதித்து .. பழங்கள் முதலான பரிசுப் பொருள்களுடன் நாங்கள் சென்ற இடம் கவிவேந்தர் இளந்தேவன் இல்லம்!

ஏன்.. எதற்கு.. என்கிற கேள்விகளுக்கு ஒரே பதில்.. கவியரங்கம் என்கிற ஒன்றை மாபெரும் வெற்றிச் சரித்திரமாக்கி.. தனது நயமான பேச்சால், மொழியின் திறத்தால், கற்பனை வளத்தால்,  கூட்டத்தைக் கட்டிப்போடும் கண்கட்டி வித்தையை 100% வெற்றிகரமாக செய்தளித்தமையால்தான் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றம் தனது முதலாம் ஆண்டுவிழா மூலமாக மக்களைச் சென்றடைந்தது என்கிற நன்றிப் பெருக்கில் நான் வரைந்த மடலிதோ..

இளந்தேவன் கொடிபறந்த இலக்கிய மாலை..

இளங்காற்று மெதுவாக வீசிய சோலை..

என்று தொடங்கிய அந்த மடல் நான் முதன் முதலாக கவிஞர் இளந்தேவன் அவர்களுக்கு எழுதியதாகும்.. (இதன் முழுமையை சென்னை சென்று பழைய ஆவணங்களைத் தேடிப் பிறகு தருகிறேன்).  இதற்குப் பிறகு எனக்கும் அவருக்குமான இலக்கியத் தொடர்பு இனிமையாகத் தொடர்ந்தது.  சென்னையில் எந்த இடத்தில் அவர் பேசினாலும் அந்த விழாவிற்கு எனக்கு செய்திகள் வந்து சேர்வதும்.. அலுவல் பணிக்கு குந்தகமின்றி அமையும்பட்சத்தில் அந்த விழாக்களுக்கு நான் சென்று வருவதும்.. அத்தோடு.. அந்தந்த விழாக்களில் அவர் பேசிய சிறப்புரையில் உள்ள சாரங்களை உள்வாங்கி நான் வரையும் மடல்.. என்பது வழக்கமான ஒன்றாக மாறியது.  அப்படி நான் எழுதிய எல்லா மடல்களும் கிடைக்கப்பெற்றால் அதையும் ஒரு நூலாக்க முயலுவேன். தாளிலே தருகிற தமிழே வாழ்க என்று கையொப்பமிட்டு ஊக்கம்தரும் இளைஞர் அவர்!  இன்னபிற இனிய செய்திகள் இவர்மூலம் அறியப்பெற்றதும்.. அவைகளில் சிலவற்றை இங்கே தருவதும் என்னைப் பற்றிய புகழ்ச்சிக்காக அல்ல..

செந்தமிழில் வந்துதித்தச் செம்மல்களில் இவர்போன்று காண்பதரிது என்னும் செய்தியினை இவ்வுலகம் அறியச் செய்வதே இதன் பொருட்டாகும்.  அன்பினில் பண்பினில் அகம்குளிர வரவேற்பதில் அவர் காட்டிய பரிவும் பாசமும் இன்னமும் என் கண்களில் நிறைந்திருக்கிறது. சொல்லாட்சித்திறம் .. இலக்கிய மரபுக்குள் பா புனையும் ஆற்றல், கலைஞர் பரணி முதல் பாடி வைத்த காப்பியங்கள்.. புரட்சித்தலைவர் அவர்களால் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கின் இறுதிக் கவிஞராக மேடையேறிய இளந்தேவன் .. முதலில் முழங்கிய இரண்டு வரிகள் அவர்தம் வாழ்க்கையின் திருப்புமுனையானதை மறக்க முடியுமா?  

ஆம்.. புரட்சித்தலைவர்.. பொன்மனச்செம்மல் என்று வாயாறப் புகழ்கிறோமே.. ஏன்.. அந்த வள்ளல்குணம் யாருக்கு வரும்.. வருகின்ற மனிதரையெல்லாம் வயிறார சாப்பிட வைக்கும் தன்மை எத்தனை பேரிடம் காண்கிறோம்.. வேண்டுவோன், வேண்டாதோன் இல்லாமல்.. தன்னை நாடிவரும் பகைவனையும் அன்பொழுக சாப்பிட்டுவிட்டு பிறகு வந்து என்னை சந்தியுங்கள் என்னும் தாயின் குணம்.. அவரை அழிக்க எண்ணும் பகைவரைக்கூட நாணச்செய்துவிடும் நயமான பண்பின் சிகரம் எம்.ஜி.ஆர்..

முன்னிலையில் நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற கவியரங்கம்.. கொட்டும் பனியில் பொன்மனச்செம்மலுடன் மதுரை மாநகரம் திரண்டு அங்கே காத்திருக்க.. தனது கவிதையை வழங்க வருகிறார் இளந்தேவன்.. இளைய கவிஞர் .. கவியரங்கின் நிறைவுக் கவிஞர் என்று கவியரசர் முன்னுரை தந்து வரவேற்க.. இளந்தேவனின் முதல் இரண்டு வரிகள்..

முன்னிலையில் சோறிருக்கும் நேரம்.. உங்கள்

முன்னிலையில் நானிருக்கலாமா??

எண்ணிலாப் பாடல்களையும்.. எண்ணிலா வசனங்களையும்.. எண்ணிலாத் தமிழறிவுப் பெட்டகங்களையும் தன்மனதில் நிறைத்துவைத்திருந்த எம்.ஜி.ஆர்.. துள்ளியெழுந்து மேடைக்குச் செல்கிறார்.. நீங்கள் யார்?  இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்கிறார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் கணக்கு வாத்தியராகப் பணிபுரிகிறேன் என்கிறார் இளந்தேவன்.  நாளை என்னை வந்து கோட்டையில் சந்தியுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். மறுநாள்.. எம்.ஜி.ஆர் அவர்களின் உத்தரவுப்படி பொதுஜனத் தொடர்புத் துறையில் அதிகாரியாக கவிஞர் இளந்தேவன் நியமிக்கப்படுகிறார்.  அப்போது வெளியான தமிழரசு பத்திரிக்கையின் ஆசிரியப் பொறுப்பையும் மக்கள்திலகம் கவிஞரிடம் ஒப்படைக்க அவரின் வாழ்க்கை புதிய பாதையில் பயணித்தது.  இந்தப்பெருந்தன்மை இதுவரை தமிழகம் கண்ட எந்தத் தலைவனிடமும் இருந்ததில்லை.. தமிழை, தமிழுக்காக.. தமிழ்மீது தான் கொண்டிருந்த பற்றுக்காக.. எத்தனையோ ஆண்டுகளாய் கிடப்பில் போடப்பட்ட பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைப்படுத்திய புரட்சித்தலைவர் .. இதோ ஒரு சராசரி.. சாமான்யனை தன் பக்கம் அழைத்து தக்கதோர் ஆசனத்தில் அமர்த்தி, உற்றதோர் வருமானமும் அரசுப் பணியென்னும் அடையாளமும் தந்தவரை தமிழ் உலகம் என்றேனும் மறக்க முடியுமா?  

அப்படி புரட்சித்தலைவரால் அடையாளம் காணப்பட்ட கவிஞரை.. கவியரசு கண்ணதாசன் தலைமையில் கவிதை பாடியபோது இந்தக் கவிதைக்குயிலின் அமுதகானம் கேட்டு தமிழக மக்களின் அன்பில் மலர்ந்த ரோஜா.. எம்.ஜி.ஆரின் கருணைமழை பொழிந்ததே.. அதற்கான நன்றியா.. இன்று சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் கண்ணதாசன் இலக்கிய மன்றத்தின் முதலாம் ஆண்டுவிழாவில் கவியரங்கத் தலைமையேற்றுப் பெருமை சேர்த்தது?  காலம் தான் எத்தனைக் கோடுகளைப் போடுகிறது?  அதன் கோலங்களில் எத்தனை அழகு என்பதை எண்ணிப்பார்க்கிறேன். 

வற்றாத தமிழ் அருவி வந்துவிழும் பேரழகு.. சொற்களால் சிலம்பாட்டம் நடத்துகின்ற பேராற்றல், எத்தனையோ திறமைகள் மிளிர்ந்தாலும் பணிவிலே உயர்ந்து நிற்கும் தன்மையால் இளைஞர்களுக்கெல்லாம் எங்கள் இளந்தேவன் என்கிற பந்தம் தந்த அந்தக் கவிஞரின் அடுத்தடுத்த மேடைகளில் நான் கேட்ட தமிழமுதம் பெற அன்பர்களே காத்திருங்கள்.. உங்களுக்காக நான் சிந்தனையில் மூழ்குகின்றேன்!

CATEGORIES : சிலை பிறந்த கதை/ AUTHOR : காவிரிமைந்தன்

N. Ganesan

unread,
Jul 11, 2017, 9:28:36 PM7/11/17
to Santhavasantham

தீபா அரசியலில் வெற்றி பெற இளந்தேவன் வாழ்த்து:

Dr Subramanian

unread,
Jul 11, 2017, 9:33:53 PM7/11/17
to santhav...@googlegroups.com
தாளாத சோகத்தில் மனம் ஆழ்ந்துவிட்டது. வாழும் போதே வரலாறாக வாழ்ந்த கவிஞர் இளந்தேவன். எண்பதுகளில் இளந்தேவனோடு, நாசீவ, இலந்தை, இளையவன் , மதிவண்ணன் நான் என நாங்கள் போகாத ஊரில்லை ; பாடாத அரங்கில்லை. அருமையான கவிஞன்; சிந்தனைச் செழுமையும் யாப்பில் ஆளுமையும் உள்ள அற்புதக் கவிஞன்; நாங்கள் ஆரம்பித்து தமிழகம் எங்கும் வெற்றிபெற நிகழ்த்தியது கவிதைப் பட்டிமண்டபம். 

பாரதி கலைக்கழகத்தின் முதல்  கவிதைப்  பட்டிமன்றம் இராயப்பேட்டையில் இளந்தேவன் இல்லத்தில் நிகழ்ந்தது. “ சீரிய பொழுது  இரவா? பகலா?” என்ற தலைப்பு; என்னுடைய தலைமை.. என் மீது அளப்பரிய அன்பு கொண்ட இளந்தேவன், ஈரோடு நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு “ கவி இள ஞாயிறு” என்று பட்டம் சூட்டியதை இன்றளவும் நான் மறவேன். 

நேற்றுதான் ஏதோ ஒரு பேச்சில் , இளந்தேவனைப் பற்றிய நினைவை ஒரு நண்பரோடு பகிர்ந்து கொண்டேன். கால ஓட்டத்திலும், பணிச்சுமையிலும்      நாங்கள் சென்ற பல ஆண்டுகளாகச் சந்திக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் , இசைக்கவி நடத்திய கவிதை நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் சந்த்தித்தது நினைவுக்கு வருகிறது.

“ வவேசுவுக்கு இயலும் இசையும், இசையும் இயலும்” என்று அவன் என்னைப்பற்றிக் கவியரங்கில் பாடிய வரிகள் இன்றென் நெஞ்சில் மோதிக் கண்களில் நீராய் உடைந்து வீழ்கின்றன.

ஆழ்ந்த இரங்கல்களுடன்
வவேசு
Dr.V.V.Subramanian -Prof Va.Ve.Su.
Educationist.

41/1, Ashok Balaji Apartments, 48th Street
9th Avenue, Ashok Nagar, Chennai, 600083
Land: 044-24748674
Mobile: 9381044470

Skype ID vavesu1

N. Ganesan

unread,
Jul 11, 2017, 9:39:54 PM7/11/17
to சந்தவசந்தம்


தீபா அரசியலில் வெற்றி பெற இளந்தேவன் வாழ்த்து:


Speech writer of Jayalalitha, Ilandevan passes away:


NG 

Ramamoorthy Ramachandran

unread,
Jul 11, 2017, 11:28:13 PM7/11/17
to santhav...@googlegroups.com, Thiruppur Krishnan
இளந்தேவன்  மறைந்தாரா? இதயம் நாளும் 
   இயங்குவதை  மறந்ததுவா? என்னை  அன்பால் 
அளந்திட்ட  கவிதைத்துலா சற்றே சாய்ந்து 
    அடிமேலாய்  முடிகீழாய்  ஆனதேயோ?
களங்கண்ட  மேடைகளில் எதிர்த்தும்  சார்ந்தும் 
    கலக்கியநற்  கதிர்வீச்சும்   கலைந்ததேயோ?
உளம்பொங்கப்  புலவரே!என்  றழைத்த  அன்பை 
    ஒருநாளும்  இனிக்காணல்  இயலாதேயோ?

தமிழரசி  ஏடதனில்  என்னைச் சேர்த்தே 
    தனிப்பொறுப்பை  அளித்தவரின் தயவை நானும் 
இமைப்போதும்  மறப்பேனோ? என்னை நல்ல 
     இடங்காட்டி  அமரவைத்தே எனக்கு மட்டும் 
சுமையில்லாச்  சுதந்திரத்தை  வழங்கி என்றும் 
     தோகைக்குள்  அடைகாத்தே இயங்கச் செய்த 
நுமை  இன்றே இழந்திட்டேன் ! நோயின் வாயில் 
     நொந்தாலும்  கவிபாடும் நுட்பம் போச்சே ;

நகரங்கள் பலவற்றில்  நடக்கும் நல்ல 
    நயமார்ந்த அரங்கினில்நின்   மனையா  ளுக்கோர்  
நிகரான நிலைத்தந்தக்   'கவிதைஜோடி'
     நெடுங்காலம்   வலம்வந்த நிலையைக்கண்டோம்! 
அகமகிழ்ந்தே ''கவிச்சக்ர வர்த்தி'' என்னும் பட்டம் 
      அளித்திட்டோம் !  இயக்குநராம்   பாலச் சந்தர்
மிகச்சிறந்த  கவிதைகளைத்  திரைப்ப  டத்தில் 
        மின்னவைத்த  புகழ்நின்னை  மேவிற்  றன்றோ? 

இனியிந்தக்  கவிதைமகள் திலகம்  இன்றி 
      ஏங்கிமிக  வாடிடுவாள்! எம்மைப் போன்றோர் 
தனிமையெனும்  அகச்சிறைக்குள் நீண்ட ஆயுள் 
       தண்டனையில்  மெலிந்திடுவோம்! தமிழ்நாட்  டாரோ,
கனிச்சுவைசேர்  கவிச்சுவையை மறந்தி  டாமல் 
        கண்ணீரில்  உன்நினைவைக்  கரைத்தி  டாமல் 
மனிதகுலம்  தத்தளிக்கும் ! இளந்தே  வாநின்
         மரணத்தின்  ரணம்நெடுநாள் மறையா தையா!

ஆழ்ந்த அஞ்சலியுடன்  - திருச்சி  புலவர் இராமமூர்த்தி.
 
 
  
        

    


--

Hari Krishnan

unread,
Jul 11, 2017, 11:46:29 PM7/11/17
to சந்தவசந்தம்
2017-07-12 6:10 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
அவருக்குக் கவியரசுப் பட்டம்  இரத்தினகிரியில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நடந்த கவியரங்கில் 40 கவிஞர்களுக்குமேல் கலந்துகொண்டார்கள். நான் தான் தலைமை. 
தமிழ்மாறன் ஏற்பாட்டு செய்ய நாங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் கவிதைப் பட்டிமண்டபம் நிகழ்த்தியிருக்கிறோம்.    முத்துராமலிங்கம் என்பது இயற்பெயர். டி ஏ.வி பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றியவர். 
தமிழக அரசின் தமிழரசு பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். 


என் திருமணக் கவியரங்கில் அவர் படித்த இன் கேமரா கவிதையை இன்னமும் என் குடும்பத்தார் நினைவு வைத்திருக்கிறர்கள்.

இளந்தேவன் கவிமாமணிதானே?

முதன்முதலில் 'மண்ணுலகத்து நல்லோசைகள்' என்ற தலைப்பில் டிஎன்ஆர் வீட்டில் நடந்த கவியரங்கில் வந்து on-the-spot composition என்று அன்று நடத்திய கிளையரங்கில் 'கிட்ணாம்பேட்டை துஸ்காணம்மன்' என்று முடியும் சந்தக் கவிதைதான் அவரை நினைத்தாலே நினைவுக்கு வருகிறது.

அமரருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Jul 11, 2017, 11:49:25 PM7/11/17
to சந்தவசந்தம்
2017-07-12 9:16 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:



முதன்முதலில் 'மண்ணுலகத்து நல்லோசைகள்' என்ற தலைப்பில் டிஎன்ஆர் வீட்டில் நடந்த கவியரங்கில் வந்து on-the-spot composition என்று அன்று நடத்திய கிளையரங்கில் 'கிட்ணாம்பேட்டை துஸ்காணம்மன்' என்று முடியும் சந்தக் கவிதைதான் அவரை நினைத்தாலே நினைவுக்கு வருகிறது.

அமரருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 



ரமணனுடைய பரபரபர நாக்குநாக்கு பரபரபர நாக் பாடல் படிக்கப்பட்ட கவியரங்கின் அடுத்த கவியரங்கம்.   

N. Ganesan

unread,
Jul 12, 2017, 8:02:09 AM7/12/17
to Santhavasantham
உணர்வு பூர்வமான அஞ்சலி.

அவரை நான் கேட்டதில்லை.
இளந்தேவன் கவிதைகள் சில அவரை தெரிந்தவர்கள் இட்டால் நன்று.

நா. கணேசன்

Pas Pasupathy

unread,
Jul 12, 2017, 8:12:15 AM7/12/17
to Santhavasantham

"ஒன்று தெய்வம் ராமனே 

உலகனைத்தும் கோயிலே

என்றுவாழும் தேவனே
எங்கள் ஆஞ்சநேயனே
அன்றரக்கர் வாலிலே
அஞ்சிலொன்றை வைப்பினும்
வென்றுவந்த வீரனே
வெல்க ராம தூதனே.

இரு நிலத்து வீரர்கள்
இருபுறத்தும் போரிட
குருநிலத்துப் பார்த்தனின்
கொடியில் வந்த மாருதி
அரிய வெற்றி அர்ஜுனன்
அன்றுபெற்ற காரணம்
கருதிவந்து நிற்கிறேன்
காக்கவேண்டும் ஐயனே

மூன்று தேவ தேவர்கள்
மூன்று தேவிமாருடன்
தோன்றுகின்ற போதிலே
தூயபிரம்மச் சாரியாய்த்
தோன்றுகின்ற வீரனே
துணையெனக்கு நின்னருள்
தோன்றுமாயின் என்னிடம்
தொடர்ந்து வெற்றி காணுமே

நாலு வேதம் நாவிலே
நல்லபக்தி மூச்சிலே
சீலம் அன்பு நெஞ்சிலே
சீர்த்தியென்றும் பேரிலே
நீலமேனி ராமனின்
நிலைத்தநாமம் உயிரிலே
நாளும் கொண்டு வாழும் உன்
நாமம் எங்கள் மந்திரம்

அஞ்சு பூதம் உன்னிடம்
அஞ்சும் பூதம் ஐயனே
மஞ்சுவண்ண ராமனை
மனதில் வைத்த மாருதி
தஞ்சமென்ற நேயரைத்
தாங்குகின்ற தெய்வமே
அஞ்சுவண்ண நாயகா
அஞ்சல் என்று காக்கநீ.

ஆறு வான மாகவே
அன்று சென்று ஜானகி
மீறு துன்பம் தீரவே
மீட்சிதந்த தூதனே
வீறுகொண்டு தூதர்கள்
மூவர்வந்து நிற்கையில்
கூற உண்டு மந்திரம்
கூவ உண்டு நெஞ்சகம்

ஏழு சாகரத்தையும்
இமைக்கும் முன்னர் தாவவே
மேலும் மேலும் ஓங்கும் உன்
மேன்மையென்ன புதியதா
பாலனான போதிலே
பரிதிநல்ல பழமென
நீளுகின்ற கையினால்
நீபறிக்கத் தாவினாய்

எட்டெழுத்தில் உள்ளவை
இரண்டெழுத்தில் உள்ளதைச்
சுட்ட வந்த மாருதி
சொல்லின் செல்வன் நீயெனக்
கட்டறுத்த ஞானியும்
கருதுகின்ற ராமனே
பட்டம் அன்று தந்தனன்
பல்கலைக்கும் வேந்துநீ.

ஒன்பதான வாசல்கள்
உள்ள வீட்டில் உள்ளநான்
இன்பவாழ்வு வாழவே
இராமநாமம் வேண்டுமே
அன்பிலாத கூட்டிலே
அச்சம் என்ற பேய்வரும்
என்பதாலே வேண்டினேன்
ஏற்றபக்தி நீகொடு

பத்து மொத்தம் திக்குகள்
பத்திடத்தும் உன்பெயர்
அத்தனென்று ஜானகி
அன்றழைத்த தன்மையால்
வித்து வேத வித்துநீ
வேட்கையற்ற ஞானிநீ
சித்து நீ அசித்துநீ
செய்கையற்ற பிரம்மம்நீ

தன்னை வெல்லும் ஒருவனே
தடையைவெல்லுவான் எனும்
உண்மைசொன்ன தேவனே
உன்னிடத்தில் வேண்டுகோள்
என்னுடம்பை எஃகிலும்
என்மனத்தை இடியிலும்
கண்ணிரண்டைக் கதிரிலும்
கடைந்துவைக்க வேண்டும் நீ

கன்னியர்க்குத் திருமணம்
காளையர்க்குப் பதவிகள்
சின்னவர்க்கு நெஞ்சுரம்
ஜெயம் எவர்க்கும் வேண்டுமே
பொன்னிறத்து மாருதி
புயலளித்த மைந்தனே
முன்னுகின்ற செயலெலாம்
முடித்துவைக்க வேண்டும் நீ

ஆழிதாவி ஆழியை
அன்று தந்த மாருதி
மீளவந்து நேரிலே
மெய்யர்காண நிற்கிறாய்
ஊழி ஊழி செல்லினும்
ஓங்கும் ஓங்கும் உன்புகழ்
வாழிராம மந்திரம்
வாழி ஆஞ்சநேயனே."  (  இளந்தேவன் ) 

[ நன்றி : க.ரவி ]



2017-07-12 8:01 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
உணர்வு பூர்வமான அஞ்சலி.

அவரை நான் கேட்டதில்லை.
இளந்தேவன் கவிதைகள் சில அவரை தெரிந்தவர்கள் இட்டால் நன்று.

நா. கணேசன்


Hari Krishnan

unread,
Jul 12, 2017, 8:23:36 AM7/12/17
to சந்தவசந்தம்
2017-07-12 17:42 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

"ஒன்று தெய்வம் ராமனே 

உலகனைத்தும் கோயிலே

என்றுவாழும் தேவனே
எங்கள் ஆஞ்சநேயனே
அன்றரக்கர் வாலிலே
அஞ்சிலொன்றை வைப்பினும்
வென்றுவந்த வீரனே
வெல்க ராம தூதனே.


இதில் அதிகம் தெரியாத ஒரு விஷயம்.  இளந்தேவன் இதைப் படித்தகாலத்தில் சிறுவயதாக, இளைஞர்களாக இருந்த பொடியன்களை அதிகமாக பாதித்தார்.

இந்தக் கவிதையை பாரதி கலைக் கழகத்தில்அவர் படிக்கும்போது எழுத்தாளர் பா ராகவன் மிக இளையவர்.  வயதில் சிறியவர்.  அப்போது இதே சந்தத்தில் அனுமனைப் பற்றி ஒரு கவிதை எழுதினார்.  என்னுடைய அனுமன்: வார்ப்பும் வனப்பும் வெளிவரும் சமயத்தில் படித்துக் காட்டினார்.  'எப்பய்யா எழுதினீரு' என்று கேட்டபோது, 'இளந்தேவன் எழுதின சந்தம் சார்.  கேட்டதும் பிடிச்சுப் போச்சு' என்றார்.

அடுத்த தலைமுறையை பாதிப்பது--நல்ல வகையில் பாதிப்பது--இளந்தேவன் அடைந்த வெற்றி. 

Pas Pasupathy

unread,
Jul 12, 2017, 8:40:46 AM7/12/17
to Santhavasantham
>>இளந்தேவன் கவிமாமணிதானே? >>

1986-இல் வழங்கப்பட்டதாக அறிகிறேன்.

2017-07-11 23:46 GMT-04:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

இளந்தேவன் கவிமாமணிதானே?

அமரருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

--
அன்புடன்,
ஹரிகி.


--

N. Ganesan

unread,
Jul 12, 2017, 8:41:42 AM7/12/17
to சந்தவசந்தம்
http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_3363.html

நல்ல எண்ணலங்காரப் பாடல்கள்.

M. Viswanathan

unread,
Jul 12, 2017, 9:15:47 AM7/12/17
to Santhavasantham
கவிமாமணி இளந்தேவன் அவர்களை முதல்முதலாக 1979ம் வருடம் ஒரு ஞாயிறு மாலையில் கடற்கரைக் கவியரங்கத்தில் சந்தித்தேன். அதன் பிறகு அவரது  கவிதைகளைப்   பலமுறை பாரதிகலைக்கழகக் கவியரங்கங்களில் கேட்டு மகிழ்திருக்கிறேன். அவர் கவிதையை வாசிக்கும் முறையும், கவியாழமும் அனைவரையும் அவர்பக்கம் திருப்பிவிடும் காந்த சக்தி கொண்டது. நல்ல நண்பர்.   அவரது மாருதிக் கவிதையைப்போலவே அவரது புகழ் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும்.
"ஊழி ஊழி செல்லினும்
ஓங்கும் ஓங்கும் உன்புகழ்
வாழிராம மந்திரம்
வாழி ஆஞ்சநேயனே." என்ற கவிதை வரிகளே அதற்குச் சான்று.
அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கறேன்.

மீ.விசுவநாதன்.

Vettai Ananthanarayanan

unread,
Jul 12, 2017, 3:38:05 PM7/12/17
to santhav...@googlegroups.com
Extremely sorry to hear the news. I have met him in Bharathi Kalaik kazaka meetings Have had nice conversations on poems incl my 1st one in Kavithai uravu 
Heartfelt condolences to the bereaved family 
Ananth
(Out of town)

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Jul 12, 2017, 6:40:25 PM7/12/17
to Santhavasantham

Kaviyogi Vedham

unread,
Jul 12, 2017, 6:58:14 PM7/12/17
to santhavasantham
அன்பரே பசுபதீ!
 நன்றி. மிக நல்ல நினைவுப்பதிவு! நீவிர் வாழ்க,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

 

Subbaraman NV

unread,
Jul 12, 2017, 10:08:44 PM7/12/17
to santhav...@googlegroups.com
இலக்கியச்சக்கரவர்தி கவியரசர் இளந்தேவன் அவர்கள்  5-12-1999 அன்று எனது “நிலவே நீ சொல்” என்ற கவிதைத்              தொகுப்பிற்கு அளித்த      அணிந்துரையை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில்பெருமைப்படுகிறேன். இளந்தேவன் அவர்களுக்கு நான் செலுத்தும் அஞ்சலியும் ஆகும்.

                                                                                 அணிந்துரை
                                                                   
                                                                  நிலாச் சொற்களின் உலா.  

                                                                                                                                                    இலக்கியச் சக்கரவர்த்தி
                                                                                                                                                      கவியரசர் இளந்தேவன்
                                                                                                                                                திரைப்படப்  பாடலாசிரியர்.

                                                        “பழகு தமிழில் பாக்கள் இயற்றி
                                                          அழகு தமிழில் அனைத்தையும் வாழ்த்தி”

                                              வாழவிரும்பும் கவிஞர் திரு என். வி. சுப்பராமன். 

“நிலவே நீ சொல்” என்பது இவரது தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு.

இது

நிலாச் சொற்களின் உலா !
நிறை ‘மதி’ தந்த வெகுமதி !
செந்தமிழ் நெஞ்சின் சந்திர அமைதி !

வார்த்தைகளை வார்த்தைகளுக்காக எழுதுபவர் இளந்தேவன் அல்லர்; இது நாடறியும்.

இங்கு கவிஞர் சுப்பராமனைப் பற்றிய இளந்தேவ வசனங்கள் கணக்கியல் நுட்பத்தின்  (with Mathematical Precision) கவனத்தோடு மொழியப்பட்டவை. (கவனத்தில் இருத்துங்கள். தேவனும் இந்த இராமனும் கணிதப்பட்டதாரிகள்)

கள்ள மற்ற ஒரு குழந்தையை இந்தக் கவிதைத்  தொகுப்பு நெடுகிலும் நான் காண்கிறேன். ‘வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை’ என்பார்கள். கவிஞர் சுப்பராமனின் சொற்களை ‘நிலாச் சொற்களின் உலா’ என்றதின் காரணம்  அதுதான்.

சுடத் தெரியாத சொற்கள்
சுட இயலாத சொற்கள் - கவிஞரின் சொற்கள்.

வார்த்தையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் இவர் அப்படித்தான் என்பதை நூலின் படி ஏந்தி என் வீட்டுப் படியேறி வந்த இளைஞர் சாரதி இயம்பினார். 

கவிஞர் சுப்பராமன் நல்லதையே கண்டு நல்லதையே சொல்லும் நல்லவர்.

மனங்கள் மரத்துப்போய், சந்தேகத்தைக் குடியேற்றி சந்தோஷத்தை நாடு கடத்திவிட்ட இன்றைய சமூகத்தில் இது வியப்பல்லவா?

உதறிவிட்ட  கையில்      
சிதறிவிட்ட சோற்றுப்
பருக்கைகள் போல,
இரைந்து கிடக்கின்ற
நட்சத்திரங்கள் கூட
இவருக்கு

“அழகாய் வரைந்த கோலம் போல
ஆகாய மெங்கும் விண்மீன்’ களாய்த்
தெரிவது ஆச்சரியமல்லவா !

இப்போது சொல்லுங்கள். சுப்பராமரின் சொற்கள் நிலாச் சொற்கள் தாமே !

அழகைப் பற்றிய இவரது கவிதை  - அழகு!

அழகியல் கவிஞர் இவர் என்பதற்கு இது ஓர் அழகிய சான்று. இந்தக் கவிதை, இவருடைய நிறைமதி தந்த வெகுமதி.

“உள்ளம் உயர்வெனில் வறுமையும் அழகே !”

என்று உறுதிபட உரைப்பது நிறைமதியின் வெளிப்பாடுதானே!

வாழும் முறையினை வரைகிறார் கவிஞர்;

”செய்யும் செயலில் செயலின் திறத்தில் 
உண்மையை நேர்மையை உளத்தில் நிறுத்தி
உயர்வை அடைந்தால் அதுவே அழகு !”  

மேகம் மறைக்காத  நிறை ‘மதி’ இது!

இருள் நிறைந்த அறையிலே
           கதவடைத்த சிறையிலே
முறைகளற்ற  நெறியிலே
          இறைவன் வாழவில்லையே

இந்தக் கவிதையை  சடங்குச் சமயவாதிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்கலாம்.

அருணகிரியார் அறைவதைப்போல  ’சளத்தில் பிணிபட்டு அசட்டு கிரியைக்குள் தவிக்கும் இந்தச் சமூகத்தின் மயக்கம் என்று மறையும்?

திரும்பத் திரும்ப இந்தக் கவிதையைச் சொல்லிப் பாருங்கள்.

‘கர்ப்பக் கிருகங்கள்
காராக் கிருகங்கள்
கடவுள்கள் இங்கே
ஆயுள் கைதிகள்”

என்னும்  ‘தேவ’ மொழியும் இங்கு தெரிசனமாகும்!

கவிஞர் சுப்பராமன் “இருள் நிறைந்த அறையிலே” என்று கவிதை எழுதினாலும் அதில் ஒளி இருக்கிறதல்லவா!

இதுதான் உண்மை!

கவிஞன் இருளைப்பற்றி எழுதினாலும் அதில் வெளிச்சம் இருக்கும்.

இந்தக் கவிதையை, சுப்பராமரின் “நிறைமதி தந்த வெகுமதி” என்று சொல்வது பொருத்தம்தானே!

இவருடைய  பெயர் என்.வி.சுப்பராமன். ஆங்கிலத்தில்  "ENVY Subbaraman" என்பது போல் இது ஒலிக்கிறது. என்ன வேடிக்கை! எவரிடத்தும் ‘Envy" இல்லாத சுப்பராமன் இவர். ! இதையே “Envy Subbaraman" என்று கட்டளையாகக் கொண்டால்  “சுப்பராமன் மீது பொறாமைப் படுங்கள்” என்று பொருள் படலாம்.

ஒருவேளை “Enviable Subbaraman" என்றிருக்குமோ! இருக்கலாம்.

என்ன காரணம்?

இவரது வாழ்வில் இருக்கும் அமைதி
இவரது வார்த்தைகளில் வழிகிறது.
மனநிறைவு என்பது பெரிய விஷயம்.
இட்டிலியைச் சாப்பிடும் போது
செட் தோசை வாங்கியிருக்கலாமோ
என்று சிந்திக்கும் மனதில்
என்று வரும் நிறைவு?

செல்வம் என்பது சிந்தையின் நிரைவு என்பார்கள். இப்படி நினைப்பதே சிந்தையின் நிறைவு.

இவருடைய சிந்தையின் நிறைவு
சிந்தனையின் நிறைவாக வெளிப்படுகிறது.

உணர்வலைகள் உறங்கும் வரை
            உயிராக மதித்திருப்பேன்
நினைவலைகள் நீங்கும்வரை
            நன்றியுடன் நானிருப்பேன்.

இது கவிஞரின் நிறைநெஞ்சின் பிரகடனம்!

இரவின் மீதும் இரக்கப்பட்டு உறங்கச் செல்லும் அருள் நெஞ்சம் இவர் நெஞம்!

              “என்னுடைய உறக்கத்தில்
               என் வேதனைகள் உறங்கும்
               என் இன்னல்கள் உறங்கும்
               என் பாபங்கள் உறங்கும்
               என் கொடிய நினைவுகள் உறங்கும் 
              மன விகாரங்கள் உறங்கும்.

இந்த வரிகளில் கவிஞர் தனியாகத் தூங்கப்போவதில்லை என்று தெரிகிறது.

கம்பன் என் நினைவிற்கு வருகிறான்.

இராமனைக் காட்டிற்கு அனுப்பும் போதும் கூட கம்பன் அவனைத் தனியாக அனுப்பமாட்டான்.

                   “இழைக்கின்ற விதிமுன் செல்ல
                    தருமம் பின் இரங்கி ஏக’ ச் சென்றானாம் இராமன்.

அப்படி

இவர் உறக்கத்தில்
இத்தனையும் ’உறங்கும்’.

எனும்போது, இது தனி உறக்கம் அன்று என்று நினைக்கிறோம். எல்லாம் உறங்கினால் நிம்மதிதானே !

“நிலவே நீ சொல்” என்னும் கவிதையில் 
                
                    இனிவரும் நூற்றாண்டு
                    இனியவைதம் தேன்கூடு”
என்னும் சுவிசேஷத்தைச் சொல்கிறார் கவிஞர்.

அலுவலகம்தோறும்  இந்த ஆணிப்பொன் வாசகத்தை எழுதிவையுங்கள்.

விரக்தியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் விரல்களுக்கு வலிமை வரும். அவர்கள் மேடேறி நின்று, இடுப்பில் இரு கை வைத்துப்  பாதாளத்தைப் பரிகசிப்பார்கள்.

உயிரீட்டுறுதிக் காப்பீட்டுக்கு இந்த உய்ருள்ள வரிகள் உத்தரவாதம் அளிப்பதை நான் பார்க்கிறேன்.

இந்தக் கவிதை இப்படி நிறைகிறது:

“எழுச்சிமிகு எண்ணத்தால்
மகிழ்ச்சியொடு மகிழ்கின்றாயோ
நிறைகின்றாயோ?
நிலவே நீ சொல்!     

நிறைவு நிலவுக்கு மட்டுமன்று, நமக்கும்தான்!
இந்த நிறைவே நிம்மதி!

அதனால்தான்,
“செந்தமிழ் நெஞ்சின் சந்திர அமைதி” என்று சான்றிதழ் தந்தேன்.

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உச்சபட்ச உயரத்தைத் தொட்ட அலுவலரானாலும் கவிதையில் கன்னித் தமிழில் - அமைதி காணும் கடமை வீரர் இவர்.!

“இடமுண்டோ?” எனக் கேட்கிறது இவரது கவிதை ஒன்று. 
இடமுண்டு! சொற்றமிழ்க் கவிதை வானத்தில் சுப்பராம நிலவுக்கும் இடமுண்டு!

            இது, தேவ நிலா இளந்தேவன் தீட்டுகின்ற தீர்ப்பு!

 சுவையுங்கள், இது பலாச் சுளையன்று! நிலாச் சுளை!

சுப்பராமரும் அவருடைய காவியக் குடும்பமும் வாழ்க!

  
5-12-1999                                                                                                   இன்ப அன்புடன்
23, பாண்டியன் சாலை                                                                          இ:ளந்தேவன்
முதல் தெரு
நீலாங்கரை
சென்னை 41.



சொர்க்கத்தில் இருந்து கவியரசர் இளந்தேவன் நல்லாசி கூறட்டும், நற் கவிதை அருளட்டும்.
காஞ்சிபுரத்தில் தண்டமிழ் ஞாயிறு காஞ்சி இராமமுர்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் கவியரசர் பங்கேற்று நடத்தியமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.


என் வி சுப்பராமன்                                   .      
   


Subbaiyar Ramasami

unread,
Jul 13, 2017, 12:21:08 AM7/13/17
to santhav...@googlegroups.com
மிக அருமையான முன்னுரை. . 

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaraman NV

unread,
Jul 13, 2017, 12:25:20 AM7/13/17
to santhav...@googlegroups.com
Thanks Ilandhaiyaar..
N V Subbaraman

Pas Pasupathy

unread,
Jul 13, 2017, 7:38:48 AM7/13/17
to Santhavasantham
மிக அழகாக எழுதியுள்ளார் இளந்தேவன். 

2017-07-12 22:08 GMT-04:00 Subbaraman NV <nvsubb...@gmail.com>:
இலக்கியச்சக்கரவர்தி கவியரசர் இளந்தேவன் அவர்கள்  5-12-1999 அன்று எனது “நிலவே நீ சொல்” என்ற கவிதைத்              தொகுப்பிற்கு அளித்த      அணிந்துரையை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில்பெருமைப்படுகிறேன். இளந்தேவன் அவர்களுக்கு நான் செலுத்தும் அஞ்சலியும் ஆகும்.



--

பசுபதி

Subbaraman NV

unread,
Jul 13, 2017, 9:06:34 AM7/13/17
to santhav...@googlegroups.com

Thanks Shri Pasupathy.
N V Subbaraman.

On Jul 13, 2017 5:08 PM, "Pas Pasupathy" <pas.pa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (sk.r...@gmail.com) Add cleanup rule | More info

என் வருத்ததையும் இரங்கலையும் அவருடைய குடும்பத்தாருக்குதெரிவித்துக்கொள்கின்றேன்
கலைமகள் ஹிதாயாரிஸ்வி -இலங்கை 


13 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 10:14 அன்று, Subbaraman NV <nvsubb...@gmail.com> எழுதியது:
Please read my ENVIUS THOUGHTS in https://nvsr.wordpress.com this Sunday Story on 9/7/17 titled WEEK OF DEATHS. 
N V Subbaraman  

2017-07-12 5:07 GMT+05:30 Subbaraman NV <nvsubb...@gmail.com>:
இது என்ன அநியாயம் இறைவா, ஏனிந்தக் கொடுமை.? காலையில் எழுந்திருந்து முதல் செய்தி இளந்தேவன், அடுத்து கல்பட்டாரா? இது என்ன சோதனை? சொர்கத்திலிருந்து பறவைகள் படம் பிடித்து அனுப்பட்டும். அனுபவிப்போம். 
என் வி சுப்பராமன்.. 

2017-07-12 5:02 GMT+05:30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:


-- நடராஜன் கல்பட்டு அய்யா இதய அறுவை சிகிச்சையின் போது இறந்துவிட்டார்.
 
88 வயதிலும் இணையத்தில் தொடர்ந்து எழுதி வந்தவர். இயற்கை ஆர்வலர், கருப்பு
வெள்ளை புகைப்படங்களில் அவர் செய்த வித்தைகள், பறவைகளை படம் எடுக்க அவர்
எடுத்துக் கொண்ட சிரத்தைகள், பறவைகள் மீது அவர்க் கொண்ட காதல் அளவிட
முடியாதது.
 
அவருடைய குடும்பத்தாருக்கும், அவர்பால் அன்பு கொண்ட அனைவருக்கும்
என் வருத்ததையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 யோகியார்
 

 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 13, 2017, 7:02:54 PM7/13/17
to சந்தவசந்தம்
உங்கள் நூலின் தரத்தையும் இளந்தேவனின் கவிதைத் திறத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் முன்னுரை.

அனந்த்

2017-07-12 22:08 GMT-04:00 Subbaraman NV <nvsubb...@gmail.com>:

Subbaraman NV

unread,
Jul 13, 2017, 7:09:57 PM7/13/17
to santhav...@googlegroups.com
Thanks aplenty Shri Ananth.
N V Subbaraman

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages