Fwd: கருவாழக்கரை அந்தாதி

303 views
Skip to first unread message

Vis Gop

unread,
Jun 27, 2015, 12:12:28 PM6/27/15
to santhav...@googlegroups.com

எங்கள் குலதெய்வம் மாயவரத்தின் அருகே உள்ள கருவாழக்கரை என்ற சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் காமாட்சி அம்மன். அந்த அம்மனின் பேரில் அந்தாதி மாலையாக நூறு செய்யுள்கள் எழுதியிருக்கிறேன். மன்றத்தின் ஆசி பெறவும் குறைநிறை அறியவும் இந்த இழையில் பத்து பத்தாக இட விழைகிறேன். தங்கள் உதவியைப் பணிவுடன் வேண்டுகிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி மாலை


காப்பு

உன்னனையே என்னன்னை உன்னிஅவள் பேர்பாட

முன்னவனே நீவந்து முந்திக்கொள் – இன்னே

கருவாழ் கரைஉமையின் அந்தாதி நூற்றை

ஒருகொம்போய் என்வாயால் ஓது!

 

காத்தவராயன் துதி

காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!

ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்தேன்

அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை

எந்தாயை ஏற்றருளச் செய்!


 

கருவாழக் கரையமரும் கருமாரீ காமாட்சீ

பெருவாழ்வொன்(று) எனக்கருளப் பேரருள்நீ புரிவாயேல்

திருஆக்கும் சீரடிகள் திரமாயென் நெஞ்சத்தை

ஒருவீடாய் ஏற்றங்கே உறவைத்தே அமர்ந்திடுக!                       (1)

 

அமரர்களின் ஆற்றல்;சித் தக்கினியில் உன்தோற்றம்;

குமரனும்அக் குஞ்சரனும் கொஞ்சுகிற அன்பன்னை;

சுமந்துவரும் பாவங்கள் சூழ்ந்திருக்கும் என்நெஞ்சில்

நிமலைநீ வந்தமர நிச்சயமாய் இடமுண்டு!                            (2)

 

இடம்பெற்றே வலம்தந்தாய் ஈசனுக்கு;உன் திருக்கரத்தால்      

விடங்கொண்ட கண்டத்தை விழுங்குமுனர் பற்றியதால்

தொடங்குமுன்ஓர் அவலத்தைத் துருதமுடன் தீர்த்தாய்;இச்

சடங்கண்டு தயைஅருளத் தருணமினும் வரவிலையோ?                (3)

 

விலையேதுஉன் சிலம்புகளின் வீரத்தின் கொஞ்சல்கள்

அலையலையாய் இசைதந்துன் அன்னநடை அழகோடு

மலைமகளே! லயமாகி மந்திரம்ஆம் மகிமைக்கு?

கலைஅறியாக் கசடன்எனைக் கசிந்தருளிக் காப்பாயோ?                 (4)

 

பாய்கின்ற நதியாவாய்ப் பள்ளத்தில் தேங்குவையாம்

ஓய்வற்ற கடலலையாய் ஓங்குமலை அருவியுமாய்

தாய்மழையாய்ப் பனியுருவாய்த் தண்ணீராய் அமுதானாய்;

சேய்மீ(து)உன் பதம்பட்ட சிறுதுளிகள் தெரித்திடுமோ?             (5)


தெரிவதும்உன் நிலைநோக்கித் தெளிவதெனல் பொய்யன்றோ?

புரிவதெனப் புலவரெலாம் புகலுவதும் புதிரன்றோ?

அரியவள்;எவ் வறிவாலும் அறியொண்ணா ஆற்றல்நீ!

பரிவுடன்இப் பாமரற்குன் பதம்புகலாய்த் தந்திடுக!                      (6)

 

தந்திமுகன் ஒருமடியில் தமிழ்க்கடவுள் மறுமடியில்

சந்திரனும் கங்கையும்சேர்ச் சடைமகுடன் கைஅணைப்பில்

நந்தியின்மீ(து) அமர்ந்தபடி நாரதன்பா சுவைத்திருக்கச்

சுந்தரி!இத் தரிசனத்தில் சொக்கஎனக்(கு) அருளுவையோ?               (7)

 

வையத்தை யாத்(து)அகன்ற வானையுமே யாத்தனைநீ!

தையல்நீ யாத்தவற்றைத் தாயாகிப் பேணுகிறாய்!

கையருளால் ஊட்டுகிறாய்! கண்ணருளால் வாழ்த்துகிறாய்!

ஐயனுடன் ஐக்கியமாய் அமையப்பன் ஆனவள்நீ!                       (8)

 

ஆனதுவும் ஆவதுவும் அன்னைஉன(து) எண்ணம்போல்!

போனதெலாம் உன்சரணம் புகுந்துலயம் உற்றிருக்கும்!

வானவர்உன் வரையரையுள் வாழ்ந்தபினர் உனையடைவர்!

தானவர்உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்!              (9)

 

சேர்ந்தொருசற் சங்கத்தில் சென்னியிலுன் பாதத்தைத்

தேர்ந்தவர்கள் மருள்நீங்கித் திருவொளியைக் காண்பாராம்;

நேர்ந்தஇருள் சகதிவிட்டு நின்பதத்தை நாடஅருள்

கூர்ந்(து)என்னைக் காப்பாற்றிக் கும்பிடும்பே(று) அளிப்பாயோ?           (10)

 

 

 


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 27, 2015, 12:49:53 PM6/27/15
to சந்தவசந்தம்
உணர்ச்சிப் பெருக்காக ஓடும் அன்னையின் துதி வெள்ளத்தில் சொல்லழகும் கருத்தழகும் பளிச்சிடுகின்றன. 

..அனந்த்

குறிப்பு:
பாய்கின்ற நதியாவாய்ப் பள்ளத்தில் தேங்குவையாம் - நதியாவாய் என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன். வேறேதேனும் கருத்தில் எழுதியதா?
அருவியுமாய் தாய்மழையாய் - ஒற்றுத்தேவை
தெரித்திடுமோ- தெறித்திடுமோ (?)
கங்கையும்சேர்ச் சடைமகுட - ஒற்றுமிகை
உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்! - இதன் பொருளை விளக்கினால் நன்று.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Subbaier Ramasami

unread,
Jun 27, 2015, 5:57:49 PM6/27/15
to சந்தவசந்தம்
பாடல் நன்றாக இருக்கிறது.  சிறு பிரபந்தங்களில் தொடக்கச்சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, உயர்வதைகுறிப்பதாய், அல்லது உலகம்  என்னும் சொல்லி தொடங்குவதாய் அமையவேண்டும். பொங்கு, உலகம், உதித்தல், எழுதல்  , வளர்தல்,   போன்ற சொற்களால் தொடங்கலாம். பாடு பொருளின் பெயரைச் சொல்வதானால் கூடக் கரு  என்று தொடங்குவது சிறப்பல்ல. 

Subbaier Ramasami

unread,
Jun 27, 2015, 6:04:27 PM6/27/15
to சந்தவசந்தம்

பாட்டியல் இலக்கணம்

இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவதுபாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன.

பொருத்தங்கள்

1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்

எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம், மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

Kaviyogi Vedham

unread,
Jun 28, 2015, 12:48:05 AM6/28/15
to santhavasantham
உண்மை கோபால். நல்ல ஆற்றொழுக்கான அந்தாதி,
 வாழ்க
 யோகியார்

வாழ்க..!..
எமது  ஆஸ்ரமத்தின்..அற்புத-  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள், மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும் 
அனுப்புங்கள். இரண்டாவது ஆண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
 கவியோகி வேதம்(kaviyogi vedham)-
 pl.See my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--
cel no=095000-88528
 

R. Vaidyanathan Ezhilavan

unread,
Jun 28, 2015, 2:10:32 AM6/28/15
to santhav...@googlegroups.com

அந்தாதி அருமை.  தொடர்க அந்தாதி.  வாழ்க வளர்க.

பாரதி எழிலவன்

28 ஜூன், 2015 ’அன்று’ 10:18 முற்பகல் அன்று, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> எழுதியது:

Vis Gop

unread,
Jun 28, 2015, 5:00:11 AM6/28/15
to santhav...@googlegroups.com

ஸ்ரீ அனந்த்,

உங்கள் உடனடிப் பின்னூட்டத்திற்கு மிக நன்றி. ஒற்று முதலிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்கிறேன். 


ஆனதுவும் ஆவதுவும் அன்னைஉன(து) எண்ணம்போல்!

போனதெலாம் உன்சரணம் புகுந்துலயம் உற்றிருக்கும்!

வானவர்உன் வரையரையுள் வாழ்ந்தபினர் உனையடைவர்!

தானவர்உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்!    


நடந்து முடிந்தது, நடக்கவிருப்பது அனைத்தும் உன் சித்தப் படியே ஆகும். முடிந்துவிட்டவை எங்கு முடிந்திருக்க இயலும்? உன் சரணத்தில் லயம் அடைவதே உலகத்தில் முடிவென்று கருதப்படும்! உலக நன்மைக்காகப் படைக்கப்பட்ட தேவர்கள் நீ தந்த கடமைகளை ஆற்றிய பிறகு முடிவாக உன்னிடமே வந்து சேர்வார்கள். கூடவே களையாகப் பிறந்துவிட்ட அசுர சக்திகள் உன் தயை இன்றித் தமக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை மறந்து, அகங்காரத்தால் அழிக்கப் படும்போது, அவர்களுடைய முடிவும் உன் சரணத்திலேயே அமையும். (எழுப்பி விடுவதும், வாழ்வித்துப் பேணுவதும், உறங்கச் செய்வதும் அன்னை அல்லவா?) ]



2015-06-27 22:19 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

Vis Gop

unread,
Jun 28, 2015, 5:12:08 AM6/28/15
to santhav...@googlegroups.com
தங்கள் சுட்டல்கள் விலைமதிப்பற்ற பாடங்கள்! நன்றி!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2015, 5:14:28 AM6/28/15
to santhav...@googlegroups.com
தங்கள் ஆசிகளுக்கு நன்றி.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
2015-06-28 10:18 GMT+05:30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:
உண்மை கோபால். நல்ல ஆற்றொழுக்கான அந்தாதி,
 வாழ்க
 யோகியார்

.

Vis Gop

unread,
Jun 28, 2015, 5:17:01 AM6/28/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2015, 5:34:03 AM6/28/15
to santhav...@googlegroups.com

தங்கள் சுட்டலுக்கு நன்றியுடன் திருத்தி அமைக்கப் பட்ட செய்யுள்:


திருஆக்கும் நின்னடியில் திரமாயென் சிரமமைக!

பெருவாழ்வொன்(று) எனக்கருளப் பேரருள்நீ புரிவாயேல்

கருவாழக் கரையமரும் காமாட்சீ என்நெஞ்சை 

ஒருவீடாய் ஏற்றங்கே உறவைத்தே அமர்ந்திடுக!                       (1)


நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

K.R. Kumar

unread,
Jun 28, 2015, 7:11:58 AM6/28/15
to santhav...@googlegroups.com
அன்புள்ள கோபால் ஜீ,

இதுதான் ஒரு சிறந்த திறமைமிக்க புலவனுக்கு அடையாளம்.

வாழ்க ! உங்கள் திருப்பணி.!!

அன்புடன்,
குமார்(சிங்கை)

Subbaier Ramasami

unread,
Jun 28, 2015, 7:31:13 AM6/28/15
to சந்தவசந்தம்
அருமை

Kaviyogi Vedham

unread,
Jun 28, 2015, 8:54:03 AM6/28/15
to santhavasantham, R. Vaidyanathan Ezhilavan
 vaazga ezilavan. uurilthhan irukkiRiiraa?
 என் பழைய கேள்விக்குப் பதிலே இல்லையே. ஒழுங்காக எம் இலக்கியவேல் வருகிறதா உமக்கு?
 உடன் மடல் இடல் கடன்,
 யோகியார்

வாழ்க..!..
எமது  ஆஸ்ரமத்தின்..அற்புத-  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள், மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும் 
அனுப்புங்கள். இரண்டாவது ஆண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
 கவியோகி வேதம்(kaviyogi vedham)-
 pl.See my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--
cel no=095000-88528
 


2015-06-28 11:40 GMT+05:30 R. Vaidyanathan Ezhilavan <kmezi...@gmail.com>:

Siva Siva

unread,
Jun 28, 2015, 9:49:38 AM6/28/15
to santhavasantham
வாழ்க!

சில கருத்துகள் / ஐயங்கள் - கீழ்க்காண்க.

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

2015-06-27 12:12 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:

எங்கள் குலதெய்வம் மாயவரத்தின் அருகே உள்ள கருவாழக்கரை என்ற சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் காமாட்சி அம்மன். அந்த அம்மனின் பேரில் அந்தாதி மாலையாக நூறு செய்யுள்கள் எழுதியிருக்கிறேன். மன்றத்தின் ஆசி பெறவும் குறைநிறை அறியவும் இந்த இழையில் பத்து பத்தாக இட விழைகிறேன். தங்கள் உதவியைப் பணிவுடன் வேண்டுகிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி மாலை


காப்பு

உன்னனையே என்னன்னை உன்னிஅவள் பேர்பாட

முன்னவனே நீவந்து முந்திக்கொள் – இன்னே

கருவாழ் கரைஉமையின் அந்தாதி நூற்றை

ஒருகொம்போய் என்வாயால் ஓது!

 

காத்தவராயன் துதி

காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!

ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்தேன்

அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை

எந்தாயை ஏற்றருளச் செய்!


--> /காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!/
"காத்தவரா யா!நின் கழலைப் பணிகின்றேன்!"
என்று இருந்தால் இன்னும் சிறக்கும் என்று எண்ணுகின்றேன்.

--> /யாத்தேன் அந்தாதி/
தளை?

--> /அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை/
இவ்வடியை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?



 

கருவாழக் கரையமரும் கருமாரீ காமாட்சீ

பெருவாழ்வொன்(று) எனக்கருளப் பேரருள்நீ புரிவாயேல்

திருஆக்கும் சீரடிகள் திரமாயென் நெஞ்சத்தை

ஒருவீடாய் ஏற்றங்கே உறவைத்தே அமர்ந்திடுக!                       (1)

 

அமரர்களின் ஆற்றல்;சித் தக்கினியில் உன்தோற்றம்;

குமரனும்அக் குஞ்சரனும் கொஞ்சுகிற அன்பன்னை;

சுமந்துவரும் பாவங்கள் சூழ்ந்திருக்கும் என்நெஞ்சில்

நிமலைநீ வந்தமர நிச்சயமாய் இடமுண்டு!                            (2)

 

இடம்பெற்றே வலம்தந்தாய் ஈசனுக்கு;உன் திருக்கரத்தால்      

விடங்கொண்ட கண்டத்தை விழுங்குமுனர் பற்றியதால்

தொடங்குமுன்ஓர் அவலத்தைத் துருதமுடன் தீர்த்தாய்;இச்

சடங்கண்டு தயைஅருளத் தருணமினும் வரவிலையோ?                (3)


-->  /முனர் பற்றியதால்/
"முனர்ப் பற்றியதால்" என்று ப் மிக்குவரும்.

--> /தொடங்குமுன்னோர் அவலத்தைத்
அவலம் = ?

--> /இச் சடங்கண்டு/
சடம் = ?

 

விலையேதுஉன் சிலம்புகளின் வீரத்தின் கொஞ்சல்கள்

அலையலையாய் இசைதந்துன் அன்னநடை அழகோடு

மலைமகளே! லயமாகி மந்திரம்ஆம் மகிமைக்கு?

கலைஅறியாக் கசடன்எனைக் கசிந்தருளிக் காப்பாயோ?                 (4)

 

பாய்கின்ற நதியாவாய்ப் பள்ளத்தில் தேங்குவையாம்

ஓய்வற்ற கடலலையாய் ஓங்குமலை அருவியுமாய்

தாய்மழையாய்ப் பனியுருவாய்த் தண்ணீராய் அமுதானாய்;

சேய்மீ(து)உன் பதம்பட்ட சிறுதுளிகள் தெரித்திடுமோ?             (5)


தெரிவதும்உன் நிலைநோக்கித் தெளிவதெனல் பொய்யன்றோ?

புரிவதெனப் புலவரெலாம் புகலுவதும் புதிரன்றோ?

அரியவள்;எவ் வறிவாலும் அறியொண்ணா ஆற்றல்நீ!

பரிவுடன்இப் பாமரற்குன் பதம்புகலாய்த் தந்திடுக!                      (6)

 

தந்திமுகன் ஒருமடியில் தமிழ்க்கடவுள் மறுமடியில்

சந்திரனும் கங்கையும்சேர்ச் சடைமகுடன் கைஅணைப்பில்

நந்தியின்மீ(து) அமர்ந்தபடி நாரதன்பா சுவைத்திருக்கச்

சுந்தரி!இத் தரிசனத்தில் சொக்கஎனக்(கு) அருளுவையோ?               (7)

 

வையத்தை யாத்(து)அகன்ற வானையுமே யாத்தனைநீ!

தையல்நீ யாத்தவற்றைத் தாயாகிப் பேணுகிறாய்!

கையருளால் ஊட்டுகிறாய்! கண்ணருளால் வாழ்த்துகிறாய்!

ஐயனுடன் ஐக்கியமாய் அமையப்பன் ஆனவள்நீ!                       (8)


-->  /கண்ணருளால் வாழ்த்துகிறாய்!/
இறைவன் அருள்வான். வாழ்த்துவானா? அத்தகைய பிரயோகம் இலக்கியத்தில் உண்டா?

கண்ணருளால் = அருட்கண்ணால் என்று பொருகொள்கின்றேன்.
கண் என்றதால் அதன் செயலான பார்த்தல்/நோக்குதல் தானே வரவேண்டும்?

/அமையப்பன்/
அம்மையப்பன் என்றே சொல்லலாமே.



 

ஆனதுவும் ஆவதுவும் அன்னைஉன(து) எண்ணம்போல்!

போனதெலாம் உன்சரணம் புகுந்துலயம் உற்றிருக்கும்!

வானவர்உன் வரையரையுள் வாழ்ந்தபினர் உனையடைவர்!

தானவர்உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்!              (9)

 

சேர்ந்தொருசற் சங்கத்தில் சென்னியிலுன் பாதத்தைத்

தேர்ந்தவர்கள் மருள்நீங்கித் திருவொளியைக் காண்பாராம்;

நேர்ந்தஇருள் சகதிவிட்டு நின்பதத்தை நாடஅருள்

கூர்ந்(து)என்னைக் காப்பாற்றிக் கும்பிடும்பே(று) அளிப்பாயோ?           (10)

 

--> /காண்பாராம்
ஆம் = ?

Vis Gop

unread,
Jun 28, 2015, 2:10:43 PM6/28/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு குமார்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2015, 2:15:54 PM6/28/15
to santhav...@googlegroups.com
நான் அறியாமைக் கலப்போடு உருவாக்கிய ஓரடியை, திருவாக்கும் சீரடியாகச் செப்பனிட்டுக் கொடுத்த பெருமை உங்களையே சாரும்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2015, 2:19:35 PM6/28/15
to santhav...@googlegroups.com
திரு வேதம் அவர்களுக்கு நமஸ்காரம்.
இலக்கிய வேல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நன்றி. நான் சில மாதங்கள் முன்னர்  'நதி'என்ற தலைப்பில் ஒரு 8 வரி கவிதை அனுப்பினேன். அது ஏற்றுக் கொள்ளப் படவில்லையா என்று அறிய நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2015, 3:11:04 PM6/28/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசிவா. திருத்தங்களும் பதில்களும் பதில்களும் காண்க!

2015-06-28 19:19 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
வாழ்க!

சில கருத்துகள் / ஐயங்கள் - கீழ்க்காண்க.

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி மாலை


காத்தவராயன் துதி

காத்தவரா யாநின் கழலைப் பணிகின்றேன்!

ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்திருக்கும் 

அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை

எந்தாயை ஏற்றருளச் செய்!

--> /காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!/
"காத்தவரா யா!நின் கழலைப் பணிகின்றேன்!"
என்று இருந்தால் இன்னும் சிறக்கும் என்று எண்ணுகின்றேன். [திருத்திக் கொண்டேன்]
--> /யாத்தேன் அந்தாதி/
தளை?                                                     [சரி செய்திருக்கிறேன்]

--> /அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை/
இவ்வடியை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?

[இறையைத் துதித்து, நம் முறையீடுகளையும், வேண்டுதல்களையும் தெரிவித்து, அருளை நாடி எழுதப் படும் பாடலை அலங்கல் என்னலாம் என நினைத்தேன். இங்கே எழுதப் படும் பாடல் அந்தாதிமாலையாக அமைந்த அலங்கல்.]
 
இதில் பிழை இருப்பின் தெரிவிக்கவும்.
 

இடம்பெற்றே வலம்தந்தாய் ஈசனுக்கு;உன் திருக்கரத்தால்      

விடங்கொண்ட கண்டத்தை விழுங்குமுனர்ப் பற்றியதால்

தொடங்குமுன்ஓர் அவலத்தைத் துருதமுடன் தீர்த்தாய்;இச்

சடங்கண்டு தயைஅருளத் தருணமினும் வரவிலையோ?                (3)

-->  /முனர் பற்றியதால்/
"முனர்ப் பற்றியதால்" என்று ப் மிக்குவரும். [சரி செய்துள்ளேன்]

--> /தொடங்குமுன்னோர் அவலத்தைத்
அவலம் = ?        [கேடு.}

--> /இச் சடங்கண்டு/
சடம் = ?                [ஜடம் ஆகிய என்னை]


வையத்தை யாத்(து)அகன்ற வானையுமே யாத்தனைநீ!

தையல்நீ யாத்தவற்றைத் தாயாகிப் பேணுகிறாய்!

கையருளால் ஊட்டுகிறாய்! கண்ணருளால் வாழ்த்துகிறாய்!

ஐயனுடன் ஐக்கியமாய் அம்மையப்பன் ஆனவள்நீ!                       (8)


-->  /கண்ணருளால் வாழ்த்துகிறாய்!/
இறைவன் அருள்வான். வாழ்த்துவானா? அத்தகைய பிரயோகம் இலக்கியத்தில் உண்டா?

கண்ணருளால் = அருட்கண்ணால் என்று பொருகொள்கின்றேன்.
கண் என்றதால் அதன் செயலான பார்த்தல்/நோக்குதல் தானே வரவேண்டும்?
[நான் நினைத்தபடி: வாழ்த்துதல் என்பது நல்வாழ்வு கிட்டுவதை எண்ணி அந்த எண்ணத்தை வெளிப்படுத்துவது. கண்ணருள் என்பது கண்ணோக்கில் வெளிப்படும் அருள். அந்த அருளின் மூலம் வெளிப்படுவது இறைவியின் வாழ்த்து]
/அமையப்பன்/
அம்மையப்பன் என்றே சொல்லலாமே.[சரி செய்துள்ளேன்]




சேர்ந்தொருசற் சங்கத்தில் சென்னியிலுன் பாதத்தைத்

தேர்ந்தவர்கள் மருள்நீங்கித் திருவொளியைக் காண்பாராம்;

நேர்ந்தஇருள் சகதிவிட்டு நின்பதத்தை நாடஅருள்

கூர்ந்(து)என்னைக் காப்பாற்றிக் கும்பிடும்பே(று) அளிப்பாயோ?           (10)

 

--> /காண்பாராம்
ஆம் = ?                             [காண்பார்கள் என்று அறிகிறேன்]


Ramamoorthy Ramachandran

unread,
Jun 28, 2015, 11:23:33 PM6/28/15
to santhav...@googlegroups.com
வணக்கம். சந்த வசந்தக் கவிஞர் அவையில் அரங்கேறும் 
உங்கள் ''கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி''  மிகச் சிறப்பாக 
அமைய வாழ்த்துகிறேன்! கவிக்கடல் அரங்கசீநிவாசன் இயற்றிய 
பொன்மலைப் பொன்னேஸ்வரி அந்தாதியின் ,

மாதாவே நின்றன்  வரவுசெல  வுக்கணக்கில் 
ஆதாய  ஏட்டில் அடியேனைச்  சேர்க்காமல் 
சேதார  ஏட்டினிலே  சேர்ப்பாயேல்  அதுவெந்தன் 
போதாத  காலம்தான்  பொன்மலைப்பொன்  னேஸ்வரியே!
 
என்ற பாட்டை நினைவூட்டுகிறது! வாழ்க, வளர்க!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

Vis Gop

unread,
Jun 29, 2015, 12:49:39 AM6/29/15
to santhav...@googlegroups.com
தங்கள் ஊக்குவிப்புக்கு மிகவும் நன்றி. தங்கள் விமரிசனங்கள், குறிப்பாகப் பிழைச்  சுட்டல்கள், எனக்கு மிகவும் பயன் தரும்.

சேதார ஏட்டிலின்று சேர்ந்தாலும் கணக்குத்தான்;
மாதாவின் பார்வைக்கு மறுநாளே வந்துவிடும்.
பாதார விந்தத்தைப் பணிந்தோர்க்கும் நினைந்தோர்க்கும்
போதாத தேதுமில்லை போதாத காலமெது?

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 29, 2015, 11:00:23 PM6/29/15
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவசிவா,
என் பதில்கள், குறிப்பாக அலங்கல் பற்றிய விளக்கம் ஏற்கப்பட்டதா என அறிய விரும்புகிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
2015-06-29 0:41 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:

Siva Siva

unread,
Jun 29, 2015, 11:19:00 PM6/29/15
to santhavasantham
பொதுவாக அலங்கல் = மாலை என்று வரும்.

அந்தாதி மாலை என்றபின் அலங்கல் என்றதே ஐயத்தின் காரணம்.

"அந்தாதி ஆன அருந்தமிழ் மாலையை" என்பது போல் இருக்கலாமோ?

ramaNi

unread,
Jun 29, 2015, 11:43:20 PM6/29/15
to santhav...@googlegroups.com
அமுத மழையாக ஆரம்பிக்கும் அந்தாதி அலங்கல் தொடர்ந்து பெய்து உள்ளங்கள் செழிக்கட்டும்!
ரமணி

Vis Gop

unread,
Jun 30, 2015, 12:45:52 AM6/30/15
to santhav...@googlegroups.com

நன்றி சிவசிவா.     அருந்தமிழ் என்று சொல்வது மிகையாகி விடும் என்பதால் தங்கள் குறிப்பிலிருந்து சற்று மாற்றித் திருத்தியிருக்கிறேன்.

காத்தவராயன் துதி

காத்தவரா யாநின் கழலைப் பணிகின்றேன்!

ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்திருக்கும் 

அந்தாதி நூற்றினால் ஆனஇம் மாலையை 

எந்தாயை ஏற்றருளச் செய்!


நல்வாழ்த்துக்களுடன்,

கோபால்.

Vis Gop

unread,
Jul 4, 2015, 1:52:56 PM7/4/15
to santhav...@googlegroups.com
சந்தவசந்த அன்பர்களுக்கு வணக்கம். காமாக்ஷி அந்தாதியின் அடுத்த 10 பாடல்கள் தங்கள் பார்வைக்காக இடுகிறேன்.

அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும் 
ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம் 
நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள் 
எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ?       (11)

புகுமுன்னென் னுயிர்பிரிந்திப் பூதவுடல் எரிகாட்டுள், 
தகுதியடைந் தென்னெஞ்சில் தரிசனத்தைக் காண்பேனோ?
வெகுவாய்நான் இறைஞ்சியுமே விரைந்திலைநீ இரங்கிடவே 
நகுவரையில் பிறந்திறந்து நாயேனுன் சரணடைவேன்.            (12)

அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீ
நடையழகில் அன்னப்புள் நடனத்தில் நீலமயில் 
இடைகண்டால் ஈசல்நீ இன்குரலில் கூங்குயில்தான் 
விடைபேசும் பைங்கிளியே வேதம்தான் உன்மொழியே!           (13)

உன்மொழிதான் அயனுக்கிவ் வுலகியற்றும் சூத்திரமாம் !
நின்மொழிதான் சுழற்சியிலே நிற்றலுடைச் சூக்குமஞ்சொல் 
மன்பதையின் நிலைகாக்கும் மாதவனின் மந்திரமாம் !
தன்வசமாய் அனைத்தையுமே சங்கரிப்ப துன்உள்மூச்சாம்!       (14)

மூச்சாகிக் குருதியுமாய் மூளைநரம் பென்பாவாய்ப் 
பேச்சாவாய்ப் புலனாவாய்ப் பெருவிலங்கும் புழுவினமும் 
நீச்சலினம் பறவையுநீ நின்கருணைக் கடைக்கண்ணின் 
வீச்சன்றோ உயிரினங்கள் விழிப்பென்றே அறிவதெலாம்.          (15)

அறிவுமனம் இதயம்நீ அந்தரங்கம் ஆன்மாநீ 
நெறிமுறையும் விதிகதியும் நியதியுநீ தேற்றம்நீ 
குறிப்பறிதல் அனுமானம் கொள்கையெலாம் நின்மாயை 
அறியாமை யன்றோயான் அறிவேனென்(று) எண்ணுவது?         (16)

எண்ணுவதற்(கு) உத்தமமாம் என்னனையின் திருவுருவைக் 
கண்ணுதலான் அங்கத்தில் கலந்திருக்கும் கோலத்தில் !
கண்படைத்த பயனென்கில் கணநேரம் அதைமூடி 
உண்மனத்தில் உன்பதத்தை ஒளிமிளிரக் காண்பதுவே!                 (17)

காண்பதுயான் கண்ணெதிரே கருவாழக் கரையூரில் 
காண்'பதுமை'க் கோலத்தில் கருணையுடன் அன்பர்களைக் 
காண்'பதும'க் கண்ணாளை! காமாட்சீ யானுன்னைக் 
காண்பதுமெய் யாகட்டும் கண்விடுத்து நீங்காதே!                            (18)

காதிலிழைத் தோடெறிந்து காரிருளில் கதிர்காட்டி 
வேதியரைக் காத்திட்டாய் வேந்தனிட்ட சோதனையில் !
ஆதியிலா அந்தமிலா அபிராமி நினைச்சொலும்அந் 
தாதியெனும் தோத்திரத்தைச் சதகமேனப் பாட்டுவித்தாய்.            (19)

வித்துக்குள் மரம்வைத்த விஞ்ஞான வடிவினளே 
வித்தையெனத் தவச்சித்தர் வித்தகர்க்குத் தெரிபவளே                        [ஸ்ரீவித்யா]
பத்துடனா(று) எழுத்தாகப் பரிணமித்த தத்துவமே                                  [ஷோடசாக்ஷரீ]
சித்துருநீ சத்துடனே சேர்ந்ததனிச் சத்தியமே !                                    (20)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
[4.7.2015]






























 


Siva Siva

unread,
Jul 4, 2015, 3:32:34 PM7/4/15
to santhavasantham
2015-07-04 13:52 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
சந்தவசந்த அன்பர்களுக்கு வணக்கம். காமாக்ஷி அந்தாதியின் அடுத்த 10 பாடல்கள் தங்கள் பார்வைக்காக இடுகிறேன்.

அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும் 
ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம் 
நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள் 
எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ?       (11)

-->  /அளியாரும் மலர்த்தாரும்/
Not sure which meaning you intended - அளியாரும்? அளியார்க்கும்?

/ஓங்கரத்தின் ஒய்யாரம் / = ?



புகுமுன்னென் னுயிர்பிரிந்திப் பூதவுடல் எரிகாட்டுள், 
தகுதியடைந் தென்னெஞ்சில் தரிசனத்தைக் காண்பேனோ?
வெகுவாய்நான் இறைஞ்சியுமே விரைந்திலைநீ இரங்கிடவே 
நகுவரையில் பிறந்திறந்து நாயேனுன் சரணடைவேன்.            (12)

--> நகுவரையில் = ?
 

அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீ
நடையழகில் அன்னப்புள் நடனத்தில் நீலமயில் 
இடைகண்டால் ஈசல்நீ இன்குரலில் கூங்குயில்தான் 
விடைபேசும் பைங்கிளியே வேதம்தான் உன்மொழியே!           (13)

--> /அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீ/ 
Nice. (especially given that அண்டம் = Egg; முட்டை).

உன்மொழிதான் அயனுக்கிவ் வுலகியற்றும் சூத்திரமாம் !
நின்மொழிதான் சுழற்சியிலே நிற்றலுடைச் சூக்குமஞ்சொல் 
மன்பதையின் நிலைகாக்கும் மாதவனின் மந்திரமாம் !
தன்வசமாய் அனைத்தையுமே சங்கரிப்ப துன்உள்மூச்சாம்!       (14)

மூச்சாகிக் குருதியுமாய் மூளைநரம் பென்பாவாய்ப் 
பேச்சாவாய்ப் புலனாவாய்ப் பெருவிலங்கும் புழுவினமும் 
நீச்சலினம் பறவையுநீ நின்கருணைக் கடைக்கண்ணின் 
வீச்சன்றோ உயிரினங்கள் விழிப்பென்றே அறிவதெலாம்.          (15)

-->  / என்பாவாய்ப் பேச்சாவாய்ப் புலனாவாய்ப் பெருவிலங்கும்/
ப் - does not not occur in these places - as these are விளி I think.


அறிவுமனம் இதயம்நீ அந்தரங்கம் ஆன்மாநீ 
நெறிமுறையும் விதிகதியும் நியதியுநீ தேற்றம்நீ 
குறிப்பறிதல் அனுமானம் கொள்கையெலாம் நின்மாயை 
அறியாமை யன்றோயான் அறிவேனென்(று) எண்ணுவது?         (16)

எண்ணுவதற்(கு) உத்தமமாம் என்னனையின் திருவுருவைக் 
கண்ணுதலான் அங்கத்தில் கலந்திருக்கும் கோலத்தில் !
கண்படைத்த பயனென்கில் கணநேரம் அதைமூடி 
உண்மனத்தில் உன்பதத்தை ஒளிமிளிரக் காண்பதுவே!                 (17)

--> /என்னனையின் திருவுருவைக் / 
பின்னர் "உன்பதத்தை" என்று சொன்னதால், இவ்விடத்தில் "என்னனையுன் திருவுருவைக் " என்றிருந்திருக்கவேண்டுமோ?



காண்பதுயான் கண்ணெதிரே கருவாழக் கரையூரில் 
காண்'பதுமை'க் கோலத்தில் கருணையுடன் அன்பர்களைக் 
காண்'பதும'க் கண்ணாளை! காமாட்சீ யானுன்னைக் 
காண்பதுமெய் யாகட்டும் கண்விடுத்து நீங்காதே!                            (18)

காதிலிழைத் தோடெறிந்து காரிருளில் கதிர்காட்டி 
வேதியரைக் காத்திட்டாய் வேந்தனிட்ட சோதனையில் !
ஆதியிலா அந்தமிலா அபிராமி நினைச்சொலும்அந் 
தாதியெனும் தோத்திரத்தைச் சதகமேனப் பாட்டுவித்தாய்.            (19)

--> /சதகமேனப் பாட்டுவித்தாய்/ = ?


வித்துக்குள் மரம்வைத்த விஞ்ஞான வடிவினளே 
வித்தையெனத் தவச்சித்தர் வித்தகர்க்குத் தெரிபவளே                        [ஸ்ரீவித்யா]
பத்துடனா(று) எழுத்தாகப் பரிணமித்த தத்துவமே                                  [ஷோடசாக்ஷரீ]
சித்துருநீ சத்துடனே சேர்ந்ததனிச் சத்தியமே !                                    (20)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
[4.7.2015]





--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Vis Gop

unread,
Jul 4, 2015, 9:47:13 PM7/4/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசிவா. 
பதில்கள்/திருத்தங்கள் கீழே:

2015-07-05 1:02 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும் 
ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம் 
நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள் 
எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ?       (11)

-->  /அளியாரும் மலர்த்தாரும்/
Not sure which meaning you intended - அளியாரும்? அளியார்க்கும்?
அளி = வண்டு, தேனீ.; வண்டாரும் என்பது போல.
/ஓங்கரத்தின் ஒய்யாரம் / = ?
அவளுடைய ஒய்யாரமான அமர்ந்த கோலம் ஓங்கரத்தைக் காண்பதுபோல அமைந்திருக்கிறது! 

புகுமுன்னென் னுயிர்பிரிந்திப் பூதவுடல் எரிகாட்டுள், 
தகுதியடைந் தென்னெஞ்சில் தரிசனத்தைக் காண்பேனோ?
வெகுவாய்நான் இறைஞ்சியுமே விரைந்திலைநீ இரங்கிடவே 
நகுவரையில் பிறந்திறந்து நாயேனுன் சரணடைவேன்.            (12)

--> நகுவரையில் = ?
நீ சந்தோஷப்பட்டு என்பால் இரங்கும் வரையில் இகத்தில் பிறந்திறக்கும் சுழற்சியில் தொடர்வேன். நீ மகிழ்ந்து ஏற்கையில் உன் சரணடைவேன். 
 
அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீ
நடையழகில் அன்னப்புள் நடனத்தில் நீலமயில் 
இடைகண்டால் ஈசல்நீ இன்குரலில் கூங்குயில்தான் 
விடைபேசும் பைங்கிளியே வேதம்தான் உன்மொழியே!           (13)

--> /அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீ/ 
Nice. (especially given that அண்டம் = Egg; முட்டை).
நன்றி. எழுதியவுடன் அந்தப் பொருத்தத்தை நானும் கவனித்தேன். ஆனால் இது என் புதிய கற்பனை அல்ல எனத் தோன்றுகிறது.

உன்மொழிதான் அயனுக்கிவ் வுலகியற்றும் சூத்திரமாம் !
நின்மொழிதான் சுழற்சியிலே நிற்றலுடைச் சூக்குமஞ்சொல் 
மன்பதையின் நிலைகாக்கும் மாதவனின் மந்திரமாம் !
தன்வசமாய் அனைத்தையுமே சங்கரிப்ப துன்உள்மூச்சாம்!       (14)

மூச்சாகிக் குருதியுமாய் மூளைநரம் பென்பாவாய்
பேச்சாவாய் புலனாவாய் பெருவிலங்கும் புழுவினமும் 
நீச்சலினம் பறவையுநீ நின்கருணைக் கடைக்கண்ணின் 
வீச்சன்றோ உயிரினங்கள் விழிப்பென்றே அறிவதெலாம்?         (15)
 
-->  / என்பாவாய்ப் பேச்சாவாய்ப் புலனாவாய்ப் பெருவிலங்கும்/
ப் - does not not occur in these places - as these are விளி I think.
இது என் தவறுதான். ஏற்கனவே   இதுபோன்ற இடத்தில் ஸ்ரீ அனந்த் அவர்கள் திருத்தினார். நான் நூறு செய்யுளையும் எழுதி முடித்த பின்னர் இவ்விழையைத் தொடங்கியதால் அப்பிழைகள் திருத்தப் படாமல் இடம் பெற்றன. நன்றியுடன் திருத்திவிட்டேன்.

அறிவுமனம் இதயம்நீ அந்தரங்கம் ஆன்மாநீ 
நெறிமுறையும் விதிகதியும் நியதியுநீ தேற்றம்நீ 
குறிப்பறிதல் அனுமானம் கொள்கையெலாம் நின்மாயை 
அறியாமை யன்றோயான் அறிவேனென்(று) எண்ணுவது?         (16)

எண்ணுவதற்(கு) உத்தமமாம் என்னனையுன் திருவுருவைக் 
கண்ணுதலான் அங்கத்தில் கலந்திருக்கும் கோலத்தில் !
கண்படைத்த பயனென்கில் கணநேரம் அதைமூடி 
உண்மனத்தில் உன்பதத்தை ஒளிமிளிரக் காண்பதுவே!                 (17)

--> /என்னனையின் திருவுருவைக் / 
பின்னர் "உன்பதத்தை" என்று சொன்னதால், இவ்விடத்தில் "என்னனையுன் திருவுருவைக் " என்றிருந்திருக்கவேண்டுமோ?
நன்றி. மாற்றிவிட்டேன். 

காண்பதுயான் கண்ணெதிரே கருவாழக் கரையூரில் 
காண்'பதுமை'க் கோலத்தில் கருணையுடன் அன்பர்களைக் 
காண்'பதும'க் கண்ணாளை! காமாட்சீ யானுன்னைக் 
காண்பதுமெய் யாகட்டும் கண்விடுத்து நீங்காதே!                            (18)

காதிலிழைத் தோடெறிந்து காரிருளில் கதிர்காட்டி 
வேதியரைக் காத்திட்டாய் வேந்தனிட்ட சோதனையில் !
ஆதியிலா அந்தமிலா அபிராமி நினைச்சொலும்அந் 
தாதியெனும் தோத்திரத்தைச் சதகமெனப் பாட்டுவித்தாய்.            (19)

--> /சதகமேனப் பாட்டுவித்தாய்/ = ?
typo நுழைந்திருக்கிறது. திருத்திவிட்டேன். 100 செய்யுள்கள் கொண்ட தோத்திரம் என்பதால் சதகம்.

Siva Siva

unread,
Jul 4, 2015, 10:44:01 PM7/4/15
to santhavasantham
2015-07-04 21:47 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
மிக்க நன்றி சிவசிவா. 
பதில்கள்/திருத்தங்கள் கீழே:

2015-07-05 1:02 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும் 
ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம் 
நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள் 
எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ?       (11)

-->  /அளியாரும் மலர்த்தாரும்/
Not sure which meaning you intended - அளியாரும்? அளியார்க்கும்?
அளி = வண்டு, தேனீ.; வண்டாரும் என்பது போல.

--> What was the meaning you intended? வண்டு நிறையும் / வண்டு பொருந்தும்? வண்டு ஒலிக்கும்?

 
/ஓங்கரத்தின் ஒய்யாரம் / = ?
அவளுடைய ஒய்யாரமான அமர்ந்த கோலம் ஓங்கரத்தைக் காண்பதுபோல அமைந்திருக்கிறது! 

-->  Is it not ஓங்காரம்? Is there prior usage example of ஓங்கரம்? 

Vis Gop

unread,
Jul 5, 2015, 1:54:13 PM7/5/15
to santhav...@googlegroups.com
What was the meaning you intended? வண்டு நிறையும் / வண்டு பொருந்தும்? வண்டு ஒலிக்கும்?
 அழகான அல்லிவட்டங்களும் நறுமணமும் தேனும் கொண்ட சிறந்த மலர்களுக்கு அவற்றைச் சூழும் வண்டுகள் ஒரு அடையாளம் என்று படித்திருக்கிறேன், பள்ளிக்காலங்களில். அப்படிப்பட்ட மலர்களினாலான மாலையாதலால் வண்டுகள் மொய்க்கச் சூழும் மலர்மாலையைக் குறிப்பது என்னுடைய intention ஆக இருந்தது.

 Is it not ஓங்காரம்? Is there prior usage example of ஓங்கரம்
  அகாரம் என்பது தமிழில் அகரம் என்றும் குறிப்பிடப் படுவது போல, ஓங்காரம் என்பதை ஓங்கரம் என்று குறிக்கும் உரிமையை நானே எடுத்துக் கொண்டேன். இப்போது தவறு என்று உணர்கிறேன். "'ஓங்காரத்(து) ஒய்யாரம்" என மாற்றலாம். பொருளில் இடிக்கிறதா என்பது உங்கள் கருத்தில் இருந்து தெரிந்து கொள்ள விழைகிறேன். 

prior usage:

பாங்கிலகு பாணிநியம் பொற்காலாக

வாங்கரிய யாக்கியமோர் விட்டமாக

ஓங்குபல பூங்கலைகள் பந்தலாக

ஆணிமறைச் சங்கிலிகள் நான்குமாக

ஆங்கு திருப்பாடியமே ஆட்டமாகப்

பாதுகை யாயிரமறையே போகமாக

ஓங்கர நாவொலிக் கோலராடிரூசல்

வேதசிரத் தேசிகனாராடி ரூசல்.                        .2.




மிக்க நன்றியுடனும் நல்வாழ்த்துக்களுடனும் 
கோபால்.

Vis Gop

unread,
Jul 8, 2015, 1:56:06 PM7/8/15
to santhav...@googlegroups.com
கருவாழக்கரை அந்தாதி (21-30)

சத்தியுனைக் கண்டுசொலும் சதுரனிந்தப் பூமியிலார்?
புத்திசெலும் எல்லையுநீ புனைந்ததெதோ அம்மட்டே 
வித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்!
நித்தியையென் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நிலைத்திடுக!                  (21)

நிலையில்லா உலகத்தை நீஅமைத்தாய் விளையாட !
மலையாறு மரஞ்செடிகள் மாரியொடு மாருதமும் 
குலைகுலையாய்க் கனிவகைகள் கொத்தெழிலாய் மலர்விதங்கள் !
அலைந்துழல விலங்குகளோ(டு) அழகுறவே படைத்திட்டாய் !     (22)

திட்டமிட்டோ அதைப்போன்றே கேளிக்கைச் சிரிப்புக்காய் 
மட்டில்லா ஆசைகளை மலர்க்கொத்தாய் மண்டவிட்டும் 
எட்டிவிடும் ஆவலைத்தந்(து) ஏராளப் பழங்களிட்டும் 
சட்டென்றே இதற்கதற்குத் தாவுமனக் குரங்கைவிட்டாய்!            (23)

விட்டிலனிவ் விகத்துழல்கை வினையுந்து வாழ்முறையை ! 
பட்டபினும் உணர்ந்துநல்ல பாடமெதும் கற்றிலனே!
வட்டமுளே சிக்கியிங்கு வாடிடுமோர் விட்டில்எனைச் 
சட்டெனவே தூக்கிவிட்டுச் சரணளித்துக் காத்திடுவாய்!                 (24)

வாய்ப்பேச்சில் வாய்மையிலன் மனத்தினிலும் உண்மையிலன் 
தேய்ந்திறக்கும் தேகத்தால் மெய்ம்மையொடு சேர்ந்துமிலன் 
ஆய்ந்துணரும் அறிவறத்தை அணுவளவும் தேர்ந்துமிலன் 
சேய்எனக்குன் சேவடியின் திருநிழலும் புகல்தருமோ?                     (25)

புகலுவதும் பிதற்றுவதும் புகழாரம் என்றேற்றால் 
அகலுவதும் அணுகுவதும் அருந்தவமாய் நீஏற்றால் 
சகதிஇதில் சுகங்கண்ட தவளையிது கரையேறும்!
இகபரத்தில் என்னன்னை இன்றேனும் மீட்பாயோ?                    (26)

மீட்டுகிற மாணிக்க வீணையொரு கையினிலே! 
காட்டுகிற கரும்பொன்றில், கன்னலெலாம் வாய்மொழியில்!
ஏட்டடுக்கோ இன்னொன்றில் இசைக்கும்அது நின்புகழே!
சூட்டுகிற கிண்கிணியின் சொற்கள்நின் முறுவலிலே!                (27)

வலிதந்தேன் வாழ்வளித்த பெற்றவட்கக் காரணத்தால் 
கிலிகொண்ட சூழலிலே கீழ்மையிலே வாழுகிறேன்!
கலிகொண்ட பூமியிதில் கருவாழக் கரையிருக்க 
நலிவுண்ட பாமரர்க்கு நல்லபுகல் வேறுண்டோ?                (28)

உண்டென்றால் உலகோருக்(கு) உன்னுறவே; ஏனென்கில் 
அண்டங்கள் யாவைக்கும் அன்பன்னை ஆவதனால்!
வண்டொன்றை மாங்கனிக்குள் வளர்க்குமருள் என்சொல்வேன்!
சண்டனையும் பண்டனையும் சாய்த்துலகைக் காத்தவளே!        (29)

காத்திருந்தும் பசித்திருந்தும் கானகத்தில் தவமிருந்தும் 
நேத்திரங்கட்(கு) இடையிறுத்தி நினைவுமுற்றும் நினைநிறுத்தி 
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும் எட்டிலள்நீ !           [பீஜாக்ஷர ஜபம்]
பாத்திரமே அற்றவெற்குன் பாதமென்று கிட்டிடுமோ!                 (30)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.







Vis Gop

unread,
Jul 9, 2015, 11:22:34 PM7/9/15
to santhav...@googlegroups.com

கருவாழக்கரை அந்தாதி (21-30) க்கு இன்னும் அறிஞர்களின் ஆசிகள் கிடைத்தில்லை. நேரம் கிடைத்ததால் அடுத்த பத்தையும் SV இன் பார்வைக்காய் இடுகிறேன். பிழைகள் நீக்கும் ஆவலுடன்!

கருவாழக்கரை அந்தாதி (31-40)

கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்த
மட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும் 
கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!
சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க!           (31)

ஆட்டத்தின் அரசனுடன் அங்கமரை பகிர்ந்தவளே 
தோட்டங்கள் நெல்வயல்கள் சூழ்ந்தபெரும் சிற்றூரில் 
வீட்டில்அமர் கோலத்தில் வீற்றிருந்து கருணைக்கண் 
காட்டுகிற கருவாழக் கரைவாழும் கலைவடிவே             (32)

வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ 
சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!
படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ!   (33)

இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!
அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?
துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !
இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ!       (34)

நாளெல்லாம் நலமாகும் நனவெல்லாம் வளமாகும் 
கோளெல்லாம் நமைஉயர்த்திக் கொண்டாட இடங்கொள்ளும்!
ஆளும்பேர் அரசாட்சி ஆதரிக்கும்! அன்னையுமை 
தாளிணையைச் சென்னியிலே தாங்கிடும்பே(று) எய்திடிலே!       (35)

எய்தவொரு மலர்க்கணையால் எரிந்தழிந்த மன்மதன்தான் 
செய்தவற்றை அறிந்திலனே! சிவகாமி உனக்குன்றன் 
மெய்பகிர்ந்த காமேசன் மிசையிருந்த காதலெனும் 
தெய்வமுறை உள்ளுறவைத் தேவர்களும் அறியாரே!            (36)

யாருக்கும் எட்டாத யாமளையே நின்கருணை 
ஊருக்கே உடைத்தாக்க உட்கார்ந்த உருவேற்றாய்!
ஏருக்குப் பேர்பெற்ற எங்கள்மா யூரத்தின் 
சீருக்குச் சிறப்பேற்றும் சிற்றூரைத் தேர்ந்தவளே!       (37)

தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!
குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!
சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!
பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே!       (38)

தரிசனைத்தும் தளிர்த்துவிடும், தழைத்துயிர்க்கும் காய்ந்தவனம்,
விரிசலுற்ற வரள்நிலமும் விளைந்துவளம் கூடிவிடும்,
சரிகணக்கில் மழைபொழியும், சனங்களிக்கத் தனங்கொழிக்கும்,
கரிசனத்தால் நின்கடைக்கண் காசினியைக் கண்டிடிலே!       (39)

கண்டத்தைத் தாண்டாமல் கருமணியாய் விடம்நிறுத்திக் 
கண்டத்தைத் தாண்டஅரன் கழுத்தினிலுன் கைவைத்தாய் !
கண்டத்தில் மங்கலநாண் கட்டியவன் கண்ணொத்துக் 
கண்(டு)அத்த னையுலகும் கருணையினால் படைத்தாயே!   (40) 

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2015-07-08 23:26 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
கருவாழக்கரை அந்தாதி (21-30)

சத்தியுனைக் கண்டுசொலும் சதுரனிந்தப் பூமியிலார்?
புத்திசெலும் எல்லையுநீ புனைந்ததெதோ அம்மட்டே 
வித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்!
நித்தியையென் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நிலைத்திடுக!                  (21)
.
.

Siva Siva

unread,
Jul 10, 2015, 3:12:43 PM7/10/15
to santhavasantham
2015-07-09 23:22 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:

கருவாழக்கரை அந்தாதி (21-30) க்கு இன்னும் அறிஞர்களின் ஆசிகள் கிடைத்தில்லை. நேரம் கிடைத்ததால் அடுத்த பத்தையும் SV இன் பார்வைக்காய் இடுகிறேன். பிழைகள் நீக்கும் ஆவலுடன்!

கருவாழக்கரை அந்தாதி (31-40)

கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்த
மட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும் 
கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!
சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க!           (31)

--> ஆட்கொள்ளாய் என்னாமல் ஆட்கொள்க என்றது ஏன்?
 

ஆட்டத்தின் அரசனுடன் அங்கமரை பகிர்ந்தவளே 
தோட்டங்கள் நெல்வயல்கள் சூழ்ந்தபெரும் சிற்றூரில் 
வீட்டில்அமர் கோலத்தில் வீற்றிருந்து கருணைக்கண் 
காட்டுகிற கருவாழக் கரைவாழும் கலைவடிவே             (32)

--> பெரும் சிற்றூர் = ? 


வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ 
சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!
படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ!   (33)

--> /வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ / 
பொற்சிலை, பிரம்மாவின் ஒப்பற்ற படைப்பு, என்பனவெல்லாம் மனிதர்களை வர்ணிக்கும் வார்த்தைகளல்லவோ? தெய்வத்தையும் அப்படிச் சொல்வது உண்டா?


இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!
அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?
துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !
இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ!       (34)

--> /அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ/  = ?

--> /என்னாளோ/
எந்நாளோ


நாளெல்லாம் நலமாகும் நனவெல்லாம் வளமாகும் 
கோளெல்லாம் நமைஉயர்த்திக் கொண்டாட இடங்கொள்ளும்!
ஆளும்பேர் அரசாட்சி ஆதரிக்கும்! அன்னையுமை 
தாளிணையைச் சென்னியிலே தாங்கிடும்பே(று) எய்திடிலே!       (35)

எய்தவொரு மலர்க்கணையால் எரிந்தழிந்த மன்மதன்தான் 
செய்தவற்றை அறிந்திலனே! சிவகாமி உனக்குன்றன் 
மெய்பகிர்ந்த காமேசன் மிசையிருந்த காதலெனும் 
தெய்வமுறை உள்ளுறவைத் தேவர்களும் அறியாரே!            (36)

யாருக்கும் எட்டாத யாமளையே நின்கருணை 
ஊருக்கே உடைத்தாக்க உட்கார்ந்த உருவேற்றாய்!
ஏருக்குப் பேர்பெற்ற எங்கள்மா யூரத்தின் 
சீருக்குச் சிறப்பேற்றும் சிற்றூரைத் தேர்ந்தவளே!       (37)

தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!
குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!
சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!
பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே!       (38)

--> /செம்பொன்னாம் திருமேனி!... பசுமைநின தரிசனமே/ 
?


தரிசனைத்தும் தளிர்த்துவிடும், தழைத்துயிர்க்கும் காய்ந்தவனம்,
விரிசலுற்ற வரள்நிலமும் விளைந்துவளம் கூடிவிடும்,
சரிகணக்கில் மழைபொழியும், சனங்களிக்கத் தனங்கொழிக்கும்,
கரிசனத்தால் நின்கடைக்கண் காசினியைக் கண்டிடிலே!       (39)

கண்டத்தைத் தாண்டாமல் கருமணியாய் விடம்நிறுத்திக் 
கண்டத்தைத் தாண்டஅரன் கழுத்தினிலுன் கைவைத்தாய் !
கண்டத்தில் மங்கலநாண் கட்டியவன் கண்ணொத்துக் 
கண்(டு)அத்த னையுலகும் கருணையினால் படைத்தாயே!   (40) 

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Subbaier Ramasami

unread,
Jul 10, 2015, 8:58:40 PM7/10/15
to சந்தவசந்தம்
வித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்! என்ன பொருள்?

ஆவலைத்தந்து  ஆவல்தந்(து)  என்றிருந்தாலே போது
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும்- என்ன பொருள்?

இலந்தை









0
 

Kaviyogi Vedham

unread,
Jul 10, 2015, 9:16:44 PM7/10/15
to santhavasantham
என் அன்பரே!,
தங்கள் அந்தாதி என்னைப் பலசமயம் பரவசப்பட வைத்தது.  வைக்கிறது.எவ்வளவு நுணுக்கமாக இவர் ஆன்மிகக் கருத்துக்களை-- பக்தியை நுழைத்துச் சொல்கின்றார் என வியப்பேன். தங்கள் முயற்சி வெல்க.
 எனக்குத் தனி இழையில் உங்கள் 101 பாடல்களையும் என் தனி மடலுக்கு அனுப்புவீரேயாயின்{திருத்திய பதமுடன்}
மிக்க நன்றி.இதேபோல் யான் நேரம் கிட்டுகையில் என் காளியைப் பற்றி எழுத உத்தேசம்.. அவளேதான் எனக்கு அபிராமியும் ஆவள்,
 யோகியார்

வாழ்க..!..
எமது  ஆஸ்ரமத்தின்..அற்புத-  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள், மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும் 
அனுப்புங்கள். இரண்டாவது ஆண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
 கவியோகி வேதம்(kaviyogi vedham)-
 pl.See my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--
cel no=095000-88528
 


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 10, 2015, 10:35:09 PM7/10/15
to சந்தவசந்தம்
சத்தியுனைக் கண்டுசொலும் சதுரனிந்தப் பூமியிலார்?
புத்திசெலும் எல்லையுநீ புனைந்ததெதோ அம்மட்டே
வித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்!
நித்தியையென் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நிலைத்திடுக!                  (21)

வித்தியையுன்  - வித்யை உன் என்பதன் தற்பவம்?
வித்தியையாய் ?

நிலையில்லா உலகத்தை நீஅமைத்தாய் விளையாட !
மலையாறு மரஞ்செடிகள் மாரியொடு மாருதமும்
குலைகுலையாய்க் கனிவகைகள் கொத்தெழிலாய் மலர்விதங்கள் !
அலைந்துழல விலங்குகளோ(டு) அழகுறவே படைத்திட்டாய் !     (22)

அலைந்துழல – அலைந்துலவ என்னலாம்.

திட்டமிட்டோ அதைப்போன்றே கேளிக்கைச் சிரிப்புக்காய்
மட்டில்லா ஆசைகளை மலர்க்கொத்தாய் மண்டவிட்டும்
எட்டிவிடும் ஆவலைத்தந்(து) ஏராளப் பழங்களிட்டும்
சட்டென்றே இதற்கதற்குத் தாவுமனக் குரங்கைவிட்டாய்!            (23)

நிலையில்லா உலகம், நிலையில்லா மனம்!


விட்டிலனிவ் விகத்துழல்கை வினையுந்து வாழ்முறையை !
பட்டபினும் உணர்ந்துநல்ல பாடமெதும் கற்றிலனே!
வட்டமுளே சிக்கியிங்கு வாடிடுமோர் விட்டில்எனைச்
சட்டெனவே தூக்கிவிட்டுச் சரணளித்துக் காத்திடுவாய்!                 (24)

இவ்)விகத்துழல்கை வினையுந்து – உழல்கை?


வாய்ப்பேச்சில் வாய்மையிலன் மனத்தினிலும் உண்மையிலன்
தேய்ந்திறக்கும் தேகத்தால் மெய்ம்மையொடு சேர்ந்துமிலன்
ஆய்ந்துணரும் அறிவறத்தை அணுவளவும் தேர்ந்துமிலன்
சேய்எனக்குன் சேவடியின் திருநிழலும் புகல்தருமோ?                     (25)

அழகு!



வலிதந்தேன் வாழ்வளித்த பெற்றவட்கக் காரணத்தால்
கிலிகொண்ட சூழலிலே கீழ்மையிலே வாழுகிறேன்!
கலிகொண்ட பூமியிதில் கருவாழக் கரையிருக்க
நலிவுண்ட பாமரர்க்கு நல்லபுகல் வேறுண்டோ?                (28)

பெற்றவட்கக் காரணத்தால்?



காத்திருந்தும் பசித்திருந்தும் கானகத்தில் தவமிருந்தும்
நேத்திரங்கட்(கு) இடையிறுத்தி நினைவுமுற்றும் நினைநிறுத்தி
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும் எட்டிலள்நீ !           [பீஜாக்ஷர ஜபம்]
பாத்திரமே அற்றவெற்குன் பாதமென்று கிட்டிடுமோ!                 (30)

எழுத்துபற்றி – வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் ஒற்றுமிகும்.  எண்பவர்க்கும்? (எண்ணுபவர்?)



கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்த
மட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும்
கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!
சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க!           (31)

சுட்டவித்து?
ஆட்கொள்ளே என ஏகாரத்தில் முடிக்கலாம்.



வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ
சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!
படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ!   (33)

> சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
அவளே சங்கரி என்னும்போது சங்கரியின் ஓவியமோ என்னல் சரியாகுமா?



இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!
அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?
துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !
இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ!       (34)

அன்னையன்றி அரவாமோ?


தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!
குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!
சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!
பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே!       (38)

அருமை!


தரிசனைத்தும் தளிர்த்துவிடும், தழைத்துயிர்க்கும் காய்ந்தவனம்,
விரிசலுற்ற வரள்நிலமும் விளைந்துவளம் கூடிவிடும்,
சரிகணக்கில் மழைபொழியும், சனங்களிக்கத் தனங்கொழிக்கும்,
கரிசனத்தால் நின்கடைக்கண் காசினியைக் கண்டிடிலே!       (39)

சரிகணக்கில்?  சரி=சரிகை?


கண்டத்தைத் தாண்டாமல் கருமணியாய் விடம்நிறுத்திக்
கண்டத்தைத் தாண்டஅரன் கழுத்தினிலுன் கைவைத்தாய் !
கண்டத்தில் மங்கலநாண் கட்டியவன் கண்ணொத்துக்
கண்(டு)அத்த னையுலகும் கருணையினால் படைத்தாயே!   (40)

அழகு!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Vis Gop

unread,
Jul 11, 2015, 1:10:23 AM7/11/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசிவா. திருத்தங்களும், என்மந்த்திற்பட்ட பதிலையும் இவண் தந்திருக்கிறேன்.!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2015-07-11 0:42 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

கருவாழக்கரை அந்தாதி (31-40)

கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்த
மட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும் 
கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!
சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க!           (31)

--> ஆட்கொள்ளாய் என்னாமல் ஆட்கொள்க என்றது ஏன்? எனக்கு மிகுந்த வேறுபாடு புரியவில்ல.
வேறோர் இடத்தில் ஸ்ரீ அனந்த் சுட்டியிருப்பதைப் போல் ஆட்கொள்ளே! என மாற்றிக் கொள்கிறேன்.

ஆட்டத்தின் அரசனுடன் அங்கமரை பகிர்ந்தவளே 
தோட்டங்கள் நெல்வயல்கள் சூழ்ந்தபெரும் சிற்றூரில் 
வீட்டில்அமர் கோலத்தில் வீற்றிருந்து கருணைக்கண் 
காட்டுகிற கருவாழக் கரைவாழும் கலைவடிவே             (32)

--> பெரும் சிற்றூர் = ? [சிறிய ஊரே ஆயினும் பெருமை வாய்ந்தது!]


வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ 
சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!
படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ!   (33)

--> /வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ / 
பொற்சிலை, பிரம்மாவின் ஒப்பற்ற படைப்பு, என்பனவெல்லாம் மனிதர்களை வர்ணிக்கும் வார்த்தைகளல்லவோ? தெய்வத்தையும் அப்படிச் சொல்வது உண்டா? [அலங்காரம் செய்து திரையைத் திறக்கையிலே கண்ட காட்சி, ஊனக்கண்ணால் காணும் விக்கிரகத்தின் திருக்காட்சி! அந்த அழகில் எல்லோரும் சொக்குவதுண்டு!]


இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!
அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?
துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !
இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ!       (34)

--> /அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ/  = ? [அரவணைப்பு என்று அணைப்பை உயர்த்திப் பேசுவது வழக்கம். அன்னையின் அணைப்பு என்று சொல்கையில் அரவணைப்பு என்பது அதன் சிறப்பை இழந்து விடும் அல்லவா?]

--> /என்னாளோ/
எந்நாளோ [நன்றி. மாற்றிக் கொள்கிறேன்.]


நாளெல்லாம் நலமாகும் நனவெல்லாம் வளமாகும் 
கோளெல்லாம் நமைஉயர்த்திக் கொண்டாட இடங்கொள்ளும்!
ஆளும்பேர் அரசாட்சி ஆதரிக்கும்! அன்னையுமை 
தாளிணையைச் சென்னியிலே தாங்கிடும்பே(று) எய்திடிலே!       (35)

எய்தவொரு மலர்க்கணையால் எரிந்தழிந்த மன்மதன்தான் 
செய்தவற்றை அறிந்திலனே! சிவகாமி உனக்குன்றன் 
மெய்பகிர்ந்த காமேசன் மிசையிருந்த காதலெனும் 
தெய்வமுறை உள்ளுறவைத் தேவர்களும் அறியாரே!            (36)

யாருக்கும் எட்டாத யாமளையே நின்கருணை 
ஊருக்கே உடைத்தாக்க உட்கார்ந்த உருவேற்றாய்!
ஏருக்குப் பேர்பெற்ற எங்கள்மா யூரத்தின் 
சீருக்குச் சிறப்பேற்றும் சிற்றூரைத் தேர்ந்தவளே!       (37)

தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!
குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!
சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!
பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே!       (38)

--> /செம்பொன்னாம் திருமேனி!... பசுமைநின தரிசனமே/ ? [உன் திருமேனி பொன்னைப் போல் மின்னுவது; உன் பாதங்கள் பவ வினைகளை நீக்குபவை; இவ்வாறு முகம் முதல் பதம் வரை கண்ட தரிசனம் என்மனத்தில் பசுமையாய்ப் பதிந்திருக்கிறது.]

Vis Gop

unread,
Jul 11, 2015, 1:23:38 AM7/11/15
to santhav...@googlegroups.com
நன்றி திரு இலந்தை!

2015-07-11 6:28 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:
வித்தியை!உன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்! என்ன பொருள்?
வித்தியை! என்பதை விளியாகக் கொள்ளவும். அது அம்பிகையின் சிறப்புப் பெயர். நான் வித்தியை கற்றதாக எண்ணுவதெல்லாம் உன் திருவிளையாட்டே (அன்றி உண்மையில் கற்றேன் என்பதற்குப் பொருளேது)!

ஆவலைத்தந்து  ஆவல்தந்(து)  என்றிருந்தாலே போதும். [ஏற்றேன்]
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும்- என்ன பொருள்? [ஏத்தி = புகழ்ந்து. வித்தாம் எழுத்து = பீஜாக்ஷரம். எண்பவர்க்கு = ஜபிக்கையில் எண்ணுபவருக்கு.]
இலந்தை

Vis Gop

unread,
Jul 11, 2015, 1:25:36 AM7/11/15
to santhav...@googlegroups.com
தங்கள் ஆசிக்கு நன்றி. அறிஞர்களின் திருத்தங்கள் ஏற்றப் பட்டவுடன் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jul 11, 2015, 2:23:58 AM7/11/15
to santhav...@googlegroups.com
நன்றி ஸ்ரீ அனந்த்!
என் பதில்கள் தாழ்மையுடன் இவண்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2015-07-11 8:04 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
சத்தியுனைக் கண்டுசொலும் சதுரனிந்தப் பூமியிலார்?
["कः चतुरोभुवि देवि पुरेशि भवानि तवस्तवने भवेत्?" ஸ்ரீ லலிதா அபராத க்ஷமாபன ஸ்தோத்ரம்]]
புத்திசெலும் எல்லையுநீ புனைந்ததெதோ அம்மட்டே
வித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்!
நித்தியையென் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நிலைத்திடுக!                  (21)

வித்தியை!உன்  - வித்யை உன் என்பதன் தற்பவம்? [ஆம்! இங்கு வித்தியை விளி ]
வித்தியையாய் ? [என் கல்வி என]


நிலையில்லா உலகத்தை நீஅமைத்தாய் விளையாட !
மலையாறு மரஞ்செடிகள் மாரியொடு மாருதமும்
குலைகுலையாய்க் கனிவகைகள் கொத்தெழிலாய் மலர்விதங்கள் !
அலைந்துழல விலங்குகளோ(டு) அழகுறவே படைத்திட்டாய் !     (22)

அலைந்துழல – அலைந்துலவ என்னலாம். [நன்று. ஏற்றேன்.]


திட்டமிட்டோ அதைப்போன்றே கேளிக்கைச் சிரிப்புக்காய்
மட்டில்லா ஆசைகளை மலர்க்கொத்தாய் மண்டவிட்டும்
எட்டிவிடும் ஆவலைத்தந்(து) ஏராளப் பழங்களிட்டும்
சட்டென்றே இதற்கதற்குத் தாவுமனக் குரங்கைவிட்டாய்!            (23)

நிலையில்லா உலகம், நிலையில்லா மனம்! [ஆம்!]


விட்டிலனிவ் விகத்துழல்கை வினையுந்து வாழ்முறையை !
பட்டபினும் உணர்ந்துநல்ல பாடமெதும் கற்றிலனே!
வட்டமுளே சிக்கியிங்கு வாடிடுமோர் விட்டில்எனைச்
சட்டெனவே தூக்கிவிட்டுச் சரணளித்துக் காத்திடுவாய்!                 (24)

இவ்)விகத்துழல்கை வினையுந்து – உழல்கை? [வினைப் பயனால் உந்தப் பட்டு மீண்டும் வினைசெய்து வாழ்கின்ற இந்த உலக வாழ்வில் உழலுகின்ற முறையை விடமுடியாதவனாய் இருக்கிறேன்!]


வாய்ப்பேச்சில் வாய்மையிலன் மனத்தினிலும் உண்மையிலன்
தேய்ந்திறக்கும் தேகத்தால் மெய்ம்மையொடு சேர்ந்துமிலன்
ஆய்ந்துணரும் அறிவறத்தை அணுவளவும் தேர்ந்துமிலன்
சேய்எனக்குன் சேவடியின் திருநிழலும் புகல்தருமோ?                     (25)

அழகு!


வலிதந்தேன் வாழ்வளித்த பெற்றவட்கக் காரணத்தால்
கிலிகொண்ட சூழலிலே கீழ்மையிலே வாழுகிறேன்!
கலிகொண்ட பூமியிதில் கருவாழக் கரையிருக்க
நலிவுண்ட பாமரர்க்கு நல்லபுகல் வேறுண்டோ?                (28)

பெற்றவட்கக் காரணத்தால்? [பெற்றவளுக்கு; பெற்ற அன்னைக்கு வலிதந்த காரணத்தால்]



காத்திருந்தும் பசித்திருந்தும் கானகத்தில் தவமிருந்தும்
நேத்திரங்கட்(கு) இடையிறுத்தி நினைவுமுற்றும் நினைநிறுத்தி
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும் எட்டிலள்நீ !           [பீஜாக்ஷர ஜபம்]
பாத்திரமே அற்றவெற்குன் பாதமென்று கிட்டிடுமோ!                 (30)

எழுத்துபற்றி – வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் ஒற்றுமிகும். [ஒற்று பூச்சீராய் ஆக்கிவிடும். இங்கு இது இரண்டாம் வேற்றுமைத் தொகை. எழுத்தைப் பிடித்துக்கொண்டு என்ற பொருளில். ஒற்று அவசியமா? ஆம் என்றால் திருத்திக் கொள்கிறேன்.]
 
எண்பவர்க்கும்? (எண்ணுபவர்?) [எண்ணுவோர்க்கும் என மாற்றிக் கொள்கிறேன். 'உம்' தேவை என்பதால்.]]


கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்த
மட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும்
கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!
சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க!           (31)

சுட்டவித்து? [புடம் போட்டு, தண்டித்து.]
ஆட்கொள்ளே என ஏகாரத்தில் முடிக்கலாம். [நன்று. ஏற்றேன். இதபோல வேறு சில இடங்களிலும் முடித்திருக்கிறேன்.]



வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ
சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!
படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ!   (33)

> சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
அவளே சங்கரி என்னும்போது சங்கரியின் ஓவியமோ என்னல் சரியாகுமா?
[ஈசனின் சிந்தையில் இடம்பெறும் அழகு சங்கரியின் ஓவியம் இங்கு வெளிப்பட்டிருக்கிறதோ!]

இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!
அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?
துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !
இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ!       (34)

அன்னையன்றி அரவாமோ? [அன்னையின் அணைப்புக்கு 'அரவணைப்பு' என்பது ஈடாகாது.]


தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!
குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!
சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!
பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே!       (38)

அருமை!

தரிசனைத்தும் தளிர்த்துவிடும், தழைத்துயிர்க்கும் காய்ந்தவனம்,
விரிசலுற்ற வரள்நிலமும் விளைந்துவளம் கூடிவிடும்,
சரிகணக்கில் மழைபொழியும், சனங்களிக்கத் தனங்கொழிக்கும்,
கரிசனத்தால் நின்கடைக்கண் காசினியைக் கண்டிடிலே!       (39)

சரிகணக்கில்?  சரி=சரிகை? [குறைவுமில்லாமல், அதிகமுமில்லாமல், சரியான அளவில்]
["சரிகணக்கில் மழைபொழிய வேண்டும் அருள்வேண்டும்" ஸ்ரீ ஸ்ரீ சாதுராம சுவாமிகளின் நங்கநல்லூர் வினாயகனைப் பற்றிய பாடலில் இடம் பெறுவது.]

Vis Gop

unread,
Jul 12, 2015, 6:30:43 AM7/12/15
to santhav...@googlegroups.com
கருவாழக்கரை அந்தாதி (1-40)இல் கண்ட பிழைகளைத் திருத்தி ஊக்கமளித்த அறிஞர்களுக்கு நன்றியுடன் இங்கே அடுத்த பத்து பாடல்கள் இட்டுள்ளேன். தங்கள் ஆசிகளுக்காக!

தாயேநீ தந்ததுதான் தரணியெலாம்; நீயேதான் 
நாயேனின் பிறப்பீந்து நாதந்து மொழிதந்தாய்!
சேயேனுன் நாமத்தைச் செபிப்பதிலே மனமிறுத்தி 
ஓயேனாய் ஆகுவனேல் ஒண்மை,அதிற் பெரிதுண்டோ?        (41)

பெரிதுனது பேர்எண்ணும் பேறு,உன்பேர் ஆயிரத்தைப் 
பரிமுகனே மறைஎன்று பதுக்கிவிட,க் குறுமுனிவன் 
தெரிந்துகொள வேண்டியதால் திருமாலின் அருளோ(டு)உன் 
அரியதொரு திருலலிதை ஆயிரத்தைப் பெற்றனமே!                (42)

பெற்றங்கள் மேய்ப்பவனாம் பெண்சுற்றம் பேணுபவன் 
பெற்றோரை விட்டோடிப் பெயர்ந்தெங்கோ வளர்ந்தவனாம் 
சுற்றும்சீர்ச் சுதரிசனம் சுமப்பவன்,து வாரகையின் 
கொற்றவனாம் குழலூதும் கோவிந்தன் சோதரியே!                  (43)

சோதனைசெய்(து) அடியாரைத் தூய்மையுறக் கொள்வானைக் 
காதலனாய்க் கொண்டவளே கருவாழக் கரையமர்ந்து 
தீதகலத் திருச்செய்யும் தேவிகரு மாரி!அம்மா 
பாதகங்கள் ஐந்தகற்றிப் பரம்தருமுன் பதமலரே!                    (44)

மலர்க்கண்கள் விரிகையிலே மங்கிவிடும் பரிதி!நின்கைத் 
தலத்தருள்கைக் கண்டகற்பத் தருகுனிந்தே வியந்திருக்கும்!
வலப்புறத்தான் வள்ளலுக்கும் வழங்குமுன்னை நிகர்ப்பருண்டோ?
குலத்துதெய்வ மாயெமக்குக் குடைவிரித்துக் காப்பவள்நீ!       (45)

வள்ளியைச்சேர் முருகனையும் வல்லபைசேர் முதல்வனையும் 
பிள்ளையென்று பெற்றபின்னே பெற்றனைநீ மற்றனைத்தும் 
புள்ளியுள்ளே வீற்றிருந்தே புறமனைத்தும் சூழ்ந்தவள்நீ!
உள்ளிலுள்ளாய், திரையகற்றி உணரறிவு நல்குவையே!           (46)

நல்கூர்ந்து மூப்பெய்தி நரையோடிச் செவிசெத்துப் 
பல்கொட்டிக் கண்மங்கிப் பலமற்றே என்பிற்றுச் 
சொல்குழறி நிலைகுலைந்து சுயமிழந்து கிடப்புறினும் 
நில்!கருணைக் கடலே!என் நினைவலையில் நித்தமுமே          (47)

நித்திலமுன் பல்வரிசை நின்னுதடோ செம்பவழம் 
அத்திலகம் மாணிக்கம் அங்கமெலாம் மரகதந்தான் 
பத்துதிசை வைரம்போல் பளிச்சிடுமுன் கருணையொளி!
அத்தனையும் இக்கரியை அடையாளம் கண்டிடுமோ?               (48)

கண்ணெதிரே ஆணைக்காய்க் காத்திடும்காத் தவராயன்,
பெண்தெய்வம் பேச்சியம்மை, பெருவீரன் உடனிருக்க,
வண்ணஎழில் மண்டபத்தில் வாரணமும் மகிழ்ந்திருக்க,க் 
கண்கவரும் கருவறையில் காட்சிநின(து) அற்புதமே!           (49)

அற்பகலாய்த் துதிசெய்துன் அடிதொழுவார் அருட்கேங்கிக் 
கற்பனையால் பாட்டிசைத்துக் கவிதொடுத்துக் களிப்பளிப்பார்!
பொற்பதமே புரிந்தோர்க்கும் புரியார்க்கும் புகலிடமாம்!
அற்பனுனைத் தொழஅறியா(து) அழுமெனக்கும் அடைக்கலம்நீ!      (50)

Vis Gop

unread,
Jul 16, 2015, 1:15:01 AM7/16/15
to santhav...@googlegroups.com
கருவாழக்கரை அந்தாதி (51-60) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காகவும் பிழைத் திருத்ததிற்காகவும் வணக்கத்துடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்.

கலங்கரைகாண் விளக்கு,இகத்துக் கடல்கடக்கத் துடுப்பு,பந்த 
விலங்குடைக்கும் பொறி,அகந்தை வேரறுக்கும் வாள்,அலையும் 
புலனடக்கும் கட்டு,அறத்தில் புத்திசெல்லத் துணை,எமக்குக் 
குலந்தழைக்க உறவிலொன்றாய்க் கூடநிற்கும் கொற்றவள் நீ!     (51)

கொற்றத்தை வீழ்த்திஅந்தக் கொடுமகிடன் தலைகொய்து,
சுற்றத்தைச் சுவடழிக்கத் துர்க்கையாய்க் காளியுமாய் 
வெற்றிபெற அரிஏறி வீரக்கைப் பதினெட்டும் 
தெற்றுப்பல் நாதெரியத் தென்பட்ட தீச்சுடரே!        (52)

சுடரேஉன் சூலத்தைச் சொப்பனத்தில் கண்டாலும் 
படர்கின்ற உட்பயத்தால் பதைத்திடுவர் தானவர்கள்!
இடரேநீ கொடுத்தாலும் எம்மன்னை என்பதனால் 
கடலாம்உன்  கருணைக்காய்க் காத்திருப்பர் அன்பர்கள்!      (53)

அன்புக்கோர் வடிவுண்டேல் அன்னைதான் அதுவாகும்;
அன்புக்கே தாயென்றால் ஆராகும் நீயன்றி !
உன்பார்வை ஓரத்தால் உண்டென்றால் உலகத்தில் 
துன்பங்கள் பொய்யாகும் துணைவேறே வேண்டாவே !        (54)

வேண்டுமுனர் வேண்டுவதை விழைந்துதரும் தாய்நீயே !
வேண்டாத வைகசக்கும் வேம்பரசி காமாட்சி!
பாண்டியனின் புத்திரியே! பரசிவனின் பத்தினியே!
மாண்டகுமா மதுரையுறை மாராணி மீனாட்சி!          (55)

மீனத்தின் உத்திரத்தில் மேனியுடன் தனைத்தந்து 
மோனத்தில் ஆழ்ந்தசிவன் முக்கண்ணன் உளங்கவர்ந்து  
வானத்து மீன்களுடன் வட்டநிலா ஒளிர்நாளில் 
கானத்தாய் மறையொலிக்கக் கடவுளுடன் இணைந்தவளே!    (56)

இணையேதுன் திருநாமம் இசைக்கின்ற இன்பத்திற்(கு)
அணையேதுன் அருளுக்கும் ஆற்றலுக்கும் அருமைக்கும் 
கணையேதுன் காப்பளிக்கும் கண்நோக்கை விஞ்சிவிடத் 
துணையேதுன் தயவிலையேல் துதிக்கின்றேன் பாதத்தை!       (57)

பாதங்கள் வழிபடமா பாவங்கள் தொலைந்துவிடும் 
மாதங்கும் மார்புடைய மாதவனின் சோதரியே!
மாதங்கீ மரகதமே மாணிக்க யாழ்க்கையளே 
நீதங்கா நெஞ்சம்பாழ் நினைவும்பாழ் நிர்மலையே!       (58)

மலையரசன் மகப்பேறே மஞ்சள்வாழ் மங்கலமே 
அலைகடல்கள் குவிந்தடங்கி அணைக்கின்ற தென்குமரி 
சிலைவடிவில் அடியாரின் சேவைகளை ஏற்றருளக் 
கலையாகக் கருவாழக் கரைதேர்ந்தங்(கு) அமர்ந்தவளே !     (59)

அமரர்களைக் காத்தருள அசுரர்களை அகற்றியவள் 
நிமலைமல மூன்றினையும் நிழலறவே நீக்குபவள் 
சமமில்லாச் சமர்செய்து சண்டமுண்டர் சங்கரித்த 
கமலக்கண் காமாட்சி! கருவாழக் கரைவாழ்வே!         (60)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
[15.7.2015]

M. Viswanathan

unread,
Jul 16, 2015, 4:23:10 AM7/16/15
to Santhavasantham
அன்புமிக்க திரு.கோபால்ஜி அவர்களுக்கு,
உங்களின் ''கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி'' நன்றாக இருக்கிறது. கவிமாமணி இலந்தை இராமசாமி, பேராசிரியர் அனந்த் , கவியோகி போன்ற சான்றோர்கள் எடுத்துச் சொல்லும் கருத்தை நானும் கவனித்துக் கொள்கிறேன். (யானைகள் உண்ணும் பொழுது கீழே சிந்துகிற சிறு பருக்கைதானே எறும்புக்கு நல்விருந்து.) உங்கள் கவிதை ஓட்டம் அழகாக இருக்கிறது. முழுதும் படித்து உள்வாங்கிக் கொள்ள முயலுகிறேன். நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்

Vis Gop

unread,
Jul 16, 2015, 6:22:16 AM7/16/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு விஸ்வநாதன்.
கருவாழக்கரை அம்மன் அனைவர்க்கும் அருள் புரிய வேண்டுகிறேன்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

--

Lalitha & Suryanarayanan

unread,
Jul 16, 2015, 6:50:38 AM7/16/15
to santhav...@googlegroups.com
காவேரிக் கரையிருக்கும் - எழில்
கருவாழக் கரையிருக்கும்
பூவாசம் மிகுந்திருக்கும் - புகழ்
புண்ணியர்கள் தொழுதிருக்கும் - உயர் 
நாவாசம் சுமந்திருக்க - அதில் 
நற்றமிழும் கமழ்ந்திருக்க - நீ 
பாவாசம் தொடுத்திருக்க - நாம் 
பரவசத்தை மடுத்திருப்போம்.

சிவசூரி.

Vis Gop

unread,
Jul 16, 2015, 7:35:54 AM7/16/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சிவசூரி!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

--

N. Ganesan

unread,
Jul 17, 2015, 2:30:06 AM7/17/15
to santhav...@googlegroups.com


On Thursday, July 16, 2015 at 3:50:38 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
காவேரிக் கரையிருக்கும் - எழில்
கருவாழக் கரையிருக்கும்
பூவாசம் மிகுந்திருக்கும் - புகழ்
புண்ணியர்கள் தொழுதிருக்கும் - உயர் 
நாவாசம் சுமந்திருக்க - அதில் 
நற்றமிழும் கமழ்ந்திருக்க - நீ 
பாவாசம் தொடுத்திருக்க - நாம் 
பரவசத்தை மடுத்திருப்போம்.

சிவசூரி.


கருவாழைக்கரை = கருவாழக்கரை என நினைக்கிறேன்.
பசிய வாழை உள்ள ஊர் பைஞ்ஞீலி. சுந்தரர் தாருகாவன ரிஷிபத்தினிகள்
முன் விடங்கராய் தோன்றிய புராணத்தை அழகாகப் பதிகம் பாடின ஊர்.
இப் பதிகத்தை உலக சம்ஸ்கிருத மாநாட்டில் தமிழ்ச்சொல் விடங்கர் என்பதை விளக்கும்போது
குறிப்பிட்டேன்.

பைஞ்ஞீலி போல, கருவாழையால் உண்டான ஊர்ப்பெயர்போலும்.

நா. கணேசன்

Vis Gop

unread,
Jul 18, 2015, 10:50:25 AM7/18/15
to santhav...@googlegroups.com
கருவாழக்கரை அந்தாதி (61-70) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காகவும் பிழைத் திருத்ததிற்காகவும் வணக்கத்துடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்.

வாழ்விதற்குப் பொருளிலையே வனிதையுன(து) அருளிலையேல் 
ஆழ்விரதம் அகண்டசபம் அசடனெனால் ஆகாதே! 
சூழ்நிலையும் சுயநினைவும் சுத்தமில்லை; அகந்தையினால் 
கீழ்மையிலே வாடுமிந்தக் கீடத்தைக் கண்ணுருவாய்!                      (61)

கண்ணுதலின் கண்ணோடு கண்ணுற்றுக் கணபதியை 
விண்ணோர்க்கு மூத்தவனாய் வேதத்தின் முன்னிசைக்கும் 
ஒண்ணொலியாம் பிரணவமாம் ஓங்கார எழுத்துருவாய்த் 
தண்ணருளால் தரணியின்ஆ தாரமெனத் தந்தவளே!                 (62)

தந்தனையுன் சக்தியினால் தந்திமுகன் தம்பினனாய்க் 
கந்தனை,ச்செந் தமிழ்முருகக் கடவுளினை, அறுமுகனாய் 
வந்தவனை, அழகுமயில் வாகனனை, வேல்பிடித்துச் 
சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் சிங்கார வேலவனை!                (63)

வேலொத்த விழியாள்நீ வில்லொத்த புருவத்தாள் 
மாலொத்த நீலநிறம் மழலையினும் இன்மொழியாள் 
பாலொத்த உள்ளத்தாள் பட்டொத்த மென்மேனி 
சூலத்தை ஏந்தியவள் சூரத்த னத்துரியாள்!                                      (64)

உரியுடுத்தான் பத்தினிநீ உறிஉடைத்தான் சோதரிநீ 
கிரிகொடுத்த புத்திரிநீ கரிபடைத்த அன்னையுநீ 
வரிவொலிக்கு நாயகிநீ எரிஎழுந்த சித்துருநீ 
விரிமனத்து வள்ளலுநீ சரிசமத்தில் அற்றவள்நீ!                        (65)

அற்றதுமற் றுள்ளதுமாய்  அருவமுமாய் உருவமுமாய் 
பெற்றதுமாய்ப் பிறந்தவையாய்ப் பெரியதுமாய்ச் சிறியதுமாய் 
நிற்றலுமற் றசைதலுமாய் நிற்குணியாய்ச் சுகுணியுமாய்க் 
கற்றலுமாய்க் கற்பனவாய்க் கரைவரைகள் கடந்தவளே!           (66)

கடன்பட்டேன் கருமத்தால் கால்விலங்குக் கட்டுற்றேன் 
கடம்போக்கும் உன்னபயக் கைகண்டே காப்பறிந்தேன்!
கடன்பிச்சைக்(கு) ஏங்குவதே கரையேறும் வரைஎனக்கு,க் 
கடன்உனக்குக் கருணைஅடைக் கலந்தந்து கொள்ளுவதே!      (67)

கொள்ளையெனக் கொண்டிடவோ கொலுக்கொண்டாய் கோவிலுக்குள் 
உள்ளமெலாம், சேர்ந்துவிட்ட ஊழ்வினையின் பாரமெல்லாம்!
கள்ளத்த னத்தாலே கருவாழக் கரைத்தேவி!
வள்ளன்மை காட்டியன்பர் வறுமைஎலாம் திருடுகிறாய்!           (68)

திருக்கூட்டும், தெளிவேற்றும், திசைகாட்டும் வீடுபெற!
தருக்கிறக்கும் மருள்மறைக்கும் தயைநிறைக்கும் சாந்திதரும் 
விருப்பகற்றும் சினமொழிக்கும் வீண்விலக்கும் அறம்விளக்கும் 
திருப்பதங்கள் நெஞ்சத்தில் திரமாகப் பதிந்திடிலே!                  (69)

பதினாறு வித்தெழுத்தில் படர்ந்ததிரு மந்திரம்நீ 
சதியேநீ சகச்சனனீ தந்திரம்நீ யந்திரம்நீ 
விதியும்நீ வினையும்நீ வீரச்சு தந்திரம்நீ 
கதியுன்றன் கால்தூசென் கருத்தொட்டிப் படிவதுவே!               (70)

Siva Siva

unread,
Jul 18, 2015, 8:53:13 PM7/18/15
to santhavasantham
2015-07-18 10:50 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
கருவாழக்கரை அந்தாதி (61-70) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காகவும் பிழைத் திருத்ததிற்காகவும் வணக்கத்துடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்.

வாழ்விதற்குப் பொருளிலையே வனிதையுன(து) அருளிலையேல் 
ஆழ்விரதம் அகண்டசபம் அசடனெனால் ஆகாதே! 
சூழ்நிலையும் சுயநினைவும் சுத்தமில்லை; அகந்தையினால் 
கீழ்மையிலே வாடுமிந்தக் கீடத்தைக் கண்ணுருவாய்!                      (61)

--> இந்தக் கீடம் -- This is a pretty strong word. If it truly reflects your feeling, then fine.

--> /கண்ணுருவாய்/ - Check the typo
 

கண்ணுதலின் கண்ணோடு கண்ணுற்றுக் கணபதியை 
விண்ணோர்க்கு மூத்தவனாய் வேதத்தின் முன்னிசைக்கும் 
ஒண்ணொலியாம் பிரணவமாம் ஓங்கார எழுத்துருவாய்த் 
தண்ணருளால் தரணியின்ஆ தாரமெனத் தந்தவளே!                 (62)

தந்தனையுன் சக்தியினால் தந்திமுகன் தம்பினனாய்க் 
கந்தனை,ச்செந் தமிழ்முருகக் கடவுளினை, அறுமுகனாய் 
வந்தவனை, அழகுமயில் வாகனனை, வேல்பிடித்துச் 
சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் சிங்கார வேலவனை!                (63)

--> /தந்திமுகன் தம்பினனாய்க்/ 
தம்? தன்?



வேலொத்த விழியாள்நீ வில்லொத்த புருவத்தாள் 
மாலொத்த நீலநிறம் மழலையினும் இன்மொழியாள் 
பாலொத்த உள்ளத்தாள் பட்டொத்த மென்மேனி 
சூலத்தை ஏந்தியவள் சூரத்த னத்துரியாள்!                                      (64)

--> /விழியாள், புருவத்தாள், etc/ 
In the second person context, விழியாய், புருவத்தாய், etc. usage may be more appropriate? 


உரியுடுத்தான் பத்தினிநீ உறிஉடைத்தான் சோதரிநீ 
கிரிகொடுத்த புத்திரிநீ கரிபடைத்த அன்னையுநீ 
வரிவொலிக்கு நாயகிநீ எரிஎழுந்த சித்துருநீ 
விரிமனத்து வள்ளலுநீ சரிசமத்தில் அற்றவள்நீ!                        (65)

--> /உறிஉடைத்தான் / 
உறியை உடைத்தல்  = ?
வரிவொலிக்கு = ?
சரிசமத்தில் அற்றவள்நீ = ?



அற்றதுமற் றுள்ளதுமாய்  அருவமுமாய் உருவமுமாய் 
பெற்றதுமாய்ப் பிறந்தவையாய்ப் பெரியதுமாய்ச் சிறியதுமாய் 
நிற்றலுமற் றசைதலுமாய் நிற்குணியாய்ச் சுகுணியுமாய்க் 
கற்றலுமாய்க் கற்பனவாய்க் கரைவரைகள் கடந்தவளே!           (66)

--> /நிற்குணி/ 
Typo? நிர்க்குணி?

Lalitha & Suryanarayanan

unread,
Jul 18, 2015, 8:58:53 PM7/18/15
to santhav...@googlegroups.com
கள்ளத்த னத்தாலே கருவாழக் கரைத்தேவி!
வள்ளன்மை காட்டியன்பர் வறுமைஎலாம் திருடுகிறாய்!  

பழகுதமிழ் வண்மையிது  ! பாடிவரும் உண்மையிது!

​​


கொள்ளையெனக் கொண்டிடவோ கொலுக்கொண்டாய் கோவிலுக்குள் 
உள்ளமெலாம், சேர்ந்துவிட்ட ஊழ்வினையின் பாரமெல்லாம்!

கொள்ளைகொள்ளும் கோலமிது! கூட்டு விக்கும் பாலமிது!


கதியுன்றன் கால்தூசென் கருத்தொட்டிப் படிவதுவே!   

பத்தியிலே காலெடுத்துப்  பாடிவரும் மாலையிது!
முத்தியிலே சேர்த்துவிக்கும் முத்தமிழின் மோகமிது!
நித்தியத்தின் பாட்டமிது நிர்மலத்தின் ஆட்டமிது!
சத்தியத்தின் கோட்டமிது சாதனையின் நீட்டமிது !

சிவசூரி.


Vis Gop

unread,
Jul 19, 2015, 10:05:27 AM7/19/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசிவா.
வாழ்விதற்குப் பொருளிலையே வனிதையுன(து) அருளிலையேல் 
ஆழ்விரதம் அகண்டசபம் அசடனெனால் ஆகாதே! 
சூழ்நிலையும் சுயநினைவும் சுத்தமில்லை; அகந்தையினால் 
கீழ்மையிலே வாடுமிந்தக் கீடத்தைக் கண்ணுறுவாய்!                      (61)

--> இந்தக் கீடம் -- This is a pretty strong word. If it truly reflects your feeling, then fine.

--> /கண்ணுருவாய்/ - Check the typo  திருத்திவிட்டேன்.
 I prefer retaining கீடம்.


தந்தனையுன் சக்தியினால் தந்திமுகன் தம்பினனாய்க் 
கந்தனை,ச்செந் தமிழ்முருகக் கடவுளினை, அறுமுகனாய் 
வந்தவனை, அழகுமயில் வாகனனை, வேல்பிடித்துச் 
சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் சிங்கார வேலவனை!                (63)

--> /தந்திமுகன் தம்பினனாய்க்/ 
தம்? தன்?
தம்முனன் (தம்முன், தம்முனார்) = அண்ணன்;   தம்பினன் (தம்பின்)= தம்பி  
தவறென்றால் திருத்தம் செய்கிறேன்.  


வேலொத்த விழியாள்நீ வில்லொத்த புருவத்தாள் 
மாலொத்த நீலநிறம் மழலையினும் இன்மொழியாள் 
பாலொத்த உள்ளத்தாள் பட்டொத்த மென்மேனி 
சூலத்தை ஏந்தியவள் சூரத்த னத்துரியாள்!                                      (64)

--> /விழியாள், புருவத்தாள், etc/ 
In the second person context, விழியாய், புருவத்தாய், etc. usage may be more appropriate? 
I accept the suggestion. I will think a little more to incorporate the corrections.

உரியுடுத்தான் பத்தினிநீ உறிஉடைத்தா ன் சோதரிநீ 
கிரிகொடுத்த புத்திரிநீ கரிபடைத்த அன்னையுநீ 
வரிவொலிக்கு நாயகிநீ எரிஎழுந்த சித்துருநீ 
விரிமனத்து வள்ளலுநீ சரிசமத்தில் அற்றவள்நீ!                        (65)

--> /உறிஉடைத்தான் / 
உறியை உடைத்தல்  = ?    உறியிலிருப்பவைகளை உடைத்தல்; ஆகுபெயராகக் கொள்ளலாம் என நினைக்கிறேன். [உறியும் கூடப் பாழ்பட்டு (அறுந்து) போகலாமே]
வரிவொலிக்கு = ?    வரிக்கும் ஒலிக்கும் 
சரிசமத்தில் அற்றவள்நீ = ?    சரி சமமான நிலையில் (தகுதியில்) யாரும் இருக்க முடியாத உயர்ந்த நிலையில் உள்ளவள். [அஸமா]

அற்றதுமற் றுள்ளதுமாய்  அருவமுமாய் உருவமுமாய் 
பெற்றதுமாய்ப் பிறந்தவையாய்ப் பெரியதுமாய்ச் சிறியதுமாய் 
நிற்றலுமற் றசைதலுமாய் நிர்க்குணியாய்ச் சுகுணியுமாய்க் 
கற்றலுமாய்க் கற்பனவாய்க் கரைவரைகள் கடந்தவளே!           (66)
--> /நிற்குணி/ 
Typo? நிர்க்குணி?  
திருத்திவிட்டேன்.

நல்வாழ்த்துக்களுடன், நன்றியுடன்,
கோபால்.


Vis Gop

unread,
Jul 19, 2015, 10:13:59 AM7/19/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசூரி!
பாரட்டுக்கள் மிகையானவையே! தங்கள் ஆசிகளாய் ஏற்கிறேன் நன்றியுடன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Subbaier Ramasami

unread,
Jul 20, 2015, 12:30:01 AM7/20/15
to சந்தவசந்தம்
பாடல் மிகச் சிறப்பு

 கொற்றவள் நீ!    கொற்றவை நீ!

துணைவேறே வேண்டாவே-     வேண்டாவே என்பது பன்மை
அமரர்களைக் காத்தருள அசுரர்களை அகற்றியவள் 
நிமலைமல மூன்றினையும் நிழலறவே நீக்குபவள் 
சமமில்லாச் சமர்செய்து சண்டமுண்டர் சங்கரித்த 
கமலக்கண் காமாட்சி! கருவாழக் கரைவாழ்வே!         (60)


டர்கையில் தொடங்கி முன்னிலையில் முடிகிறதே

Vis Gop

unread,
Jul 20, 2015, 2:03:40 AM7/20/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு இலந்தை!


கொற்றவள் நீ!    கொற்றவை நீ!
கொற்றவை கொற்றவனுக்குப் பெண்பால் என்றறியேன். அவ்வாறாயின் மாற்றிக் கொள்கிறேன். [கொற்றவள் என்கிற பிரயோகமும் ஒருசில இடங்களில் கண்டேன்.]

துணைவேறே வேண்டாவே-     வேண்டாவே என்பது பன்மை

http://www.tamilvu.org/slet/l6600/l6600son.jsp?subid=3673

1-5  

ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம்
    
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 

*`வேண்டாம்'- என்னும் இச்சொல், `வேண்டா' என்றிருத்தல்வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது.

------------

பாஞ்சாலி சபதம், ஹரியின் இழையிலிருந்து:

வல்லவன் வென்றிடுவான் - தொழில்
    வன்மை யிலாதவன் தோற்றிடுவான்
நல்லவன் அல்லாதான் - என
    நாணமி லார்சொலுங் கதைவேண்டா
வல்லமர் செய்திடவே - இந்த
    மன்னர்முன்னே நினை அழைத்துவிட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் - மனத்
    துணிவிலையேல் அதுஞ் சொல்லுகென்றான். (177)

--------------

படர்க்கையில் தொடங்கி முன்னிலையில் முடிகிறதே

 . . .சண்டமுண்டரைச் சங்கரித்த காமாட்சி . . . .அகற்றியவள், கருவாழக் கரையில் வாழ்பவள். [முழுதும் படர்க்கை அல்லவா?]

நல்வாழ்த்துக்களுடன்,

கோபால்.

Siva Siva

unread,
Jul 20, 2015, 9:01:06 AM7/20/15
to santhavasantham
வேண்டா என்ற பிரயோகத்தையே  தேவாரத்தில் பார்த்த நினைவு.

உதாரணமாக:

சம்பந்தர் தேவாரம் - 2.48.2
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே




-- 

Vis Gop

unread,
Jul 22, 2015, 1:37:14 PM7/22/15
to santhav...@googlegroups.com
கருவாழக்கரை அந்தாதி (71-80) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!

படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப் 
படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!
படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப் 
படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்?      (71)

பயநிலையும் எழுவாய்செய் படுபொருளும் மொழியும்நீ 
தயவும்நீ கருவமுநீ தாய்மையுநீ சேய்மையுநீ 
நியமம்நை மித்திகமும் நித்தியமாம் கருமமுநீ 
அயலும்நீ சுயமும்நீ அதிர்வலைவென் றனைத்தும்நீ                  (72)

அனைத்துயிர்க்கும் அன்பான அனைநீயே ஆயிடினும் 
எனைத்தனய னாயேற்க ஏனிந்தத் தாமதமோ ?
தினைத்துணையே னும்நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் 
நினைத்துன்னை நெக்குருகி நிதம்பாடக் கவித்துவந்தா!               (73)

தாவறவே விருப்பற்ற தானற்ற உள்ளம்தா 
நீவந்து நிலைகொள்ள நெஞ்சத்தில் நிருமலம்தா 
நாவற்றிப் போனாலும் நாமஞ்சொல் நலனைத்தா 
சாவறவும் பிறப்பறவும் சரணத்தில் சரணம்தா!                           (74)

சரணம்உள்ளில் பதிந்துவிடச் சஞ்சலங்கள் அடங்கிவிடும் 
கரஅபயம் கண்டுகொளக் கலிமிரட்டல் ஓய்ந்துவிடும் 
பரம்பொருள்உன் தொடர்பெனக்(கு)உன் பரிவின்றிக் கிட்டா(து)என் 
சிரமுனக்(கு)உன் சரணெனக்(கு)என் சீவனைக்கொண்(டு) அருள்கொடுநீ  (75)

அருளுதற்காய்த் தனைத்தானே அழகுருவாய் அமர்வித்துக் 
கருவாழக் கரைதன்னில் கழனியிடைத் தளிர்த்தவளே!
திருபுரமும் எரித்தசிவன் தேகத்தைப் பகிர்ந்தவளே!
திருபுரத்துச் சுந்தரியே திரவிடத்தில் மிளிர்கனலே!         (76)

கனற்பானைச் சிவன்பிடிக்கக் கன்னற்கோல் பிடித்தவள்நீ 
கனப்பானை வயிற்றோனைக் கைப்பிடித்த எயிற்றோனை 
வனப்பானை முகத்தோனை, வள்ளிதனைத் தினைவிளையும் 
புனம்பார்த்துக் கவர்ந்தானைப் பதல்வர்களாய்க் கொண்டவள்நீ!     (77)

கொண்டையிலே கொத்துப்பூ குரல்மழலைத் தித்திப்பு!
வண்டழரும் தார்மறைக்கும் வண்ணப்பூ மாராப்பு!
கண்டவர்கள் கைக்குவிக்கக் கால்மடித்த வீராப்பு! 
மண்டியிட்ட மக்கட்கு மனமெல்லாம் பூரிப்பு!                         (78)

பூரிதமாய்ப் பொன்னிகடல் புகுநகரம் ஒருமருங்கில் 
பேரிலுயர் மாயவரப்  பெருநகரம் மறுமருங்கில் 
மாரியம்மை இவைக்கிடையே மகிமைபெறும் ஊர்தேர்ந்து 
வாரியருள் மாரியென வந்தமர்ந்த வள்ளல்நீ!                           (79)

வள்ளன்மை, மனத்திட்பம், வாய்மைநலம், நாவினிமை,
உள்ளுவதில் உயர்வு,ஒண்மை, உடல்வலிமை, நோயின்மை,
கள்ளமின்மை, கலைமேன்மை, கயமையின்மை, அழுக்காறென்(று)
எள்ளளவும் இல்லாமை, எலாம்வரும்உன் தயவாலே!                            (80)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Siva Siva

unread,
Jul 22, 2015, 6:40:27 PM7/22/15
to santhavasantham
2015-07-22 13:37 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
கருவாழக்கரை அந்தாதி (71-80) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!

படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப் 
படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!
படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப் 
படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்?      (71)

-->
 
/நீ சரணமெனப் படிப்பினையாய்ப் பெறவிலையேல்/
நீ என்றதனால் இப்பாடல் நெஞ்சுக்கோ பிறருக்கோ சொல்வது.
ஆயின், "என் பயன் ஆவேன்" என்று முடிகின்றதே!



பயநிலையும் எழுவாய்செய் படுபொருளும் மொழியும்நீ 
தயவும்நீ கருவமுநீ தாய்மையுநீ சேய்மையுநீ 
நியமம்நை மித்திகமும் நித்தியமாம் கருமமுநீ 
அயலும்நீ சுயமும்நீ அதிர்வலைவென் றனைத்தும்நீ                  (72)

அனைத்துயிர்க்கும் அன்பான அனைநீயே ஆயிடினும் 
எனைத்தனய னாயேற்க ஏனிந்தத் தாமதமோ ?
தினைத்துணையே னும்நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் 
நினைத்துன்னை நெக்குருகி நிதம்பாடக் கவித்துவந்தா!               (73)

-->  /நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் /
கடவுளுக்குக் கல் நெஞ்சு என்பது போல் இலக்கியங்களில் வந்ததுண்டா?



தாவறவே விருப்பற்ற தானற்ற உள்ளம்தா 
நீவந்து நிலைகொள்ள நெஞ்சத்தில் நிருமலம்தா 
நாவற்றிப் போனாலும் நாமஞ்சொல் நலனைத்தா 
சாவறவும் பிறப்பறவும் சரணத்தில் சரணம்தா!                           (74)

சரணம்உள்ளில் பதிந்துவிடச் சஞ்சலங்கள் அடங்கிவிடும் 
கரஅபயம் கண்டுகொளக் கலிமிரட்டல் ஓய்ந்துவிடும் 
பரம்பொருள்உன் தொடர்பெனக்(கு)உன் பரிவின்றிக் கிட்டா(து)என் 
சிரமுனக்(கு)உன் சரணெனக்(கு)என் சீவனைக்கொண்(டு) அருள்கொடுநீ  (75)

அருளுதற்காய்த் தனைத்தானே அழகுருவாய் அமர்வித்துக் 
கருவாழக் கரைதன்னில் கழனியிடைத் தளிர்த்தவளே!
திருபுரமும் எரித்தசிவன் தேகத்தைப் பகிர்ந்தவளே!
திருபுரத்துச் சுந்தரியே திரவிடத்தில் மிளிர்கனலே!         (76)

--> /திருபுர.../ 
Typo? 




கனற்பானைச் சிவன்பிடிக்கக் கன்னற்கோல் பிடித்தவள்நீ 
கனப்பானை வயிற்றோனைக் கைப்பிடித்த எயிற்றோனை 
வனப்பானை முகத்தோனை, வள்ளிதனைத் தினைவிளையும் 
புனம்பார்த்துக் கவர்ந்தானைப் பதல்வர்களாய்க் கொண்டவள்நீ!     (77)

கொண்டையிலே கொத்துப்பூ குரல்மழலைத் தித்திப்பு!
வண்டழரும் தார்மறைக்கும் வண்ணப்பூ மாராப்பு!
கண்டவர்கள் கைக்குவிக்கக் கால்மடித்த வீராப்பு! 
மண்டியிட்ட மக்கட்கு மனமெல்லாம் பூரிப்பு!                         (78)

--> வண்டழரும் = ?

/மண்டியிட்ட மக்கட்கு/

மண்டியிட்டு வழிபடும் வழக்கம் இந்திய மரபில் உண்டா?

"இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம்" (சுந்தரர் தேவாரம் 7.95.10)

 

பூரிதமாய்ப் பொன்னிகடல் புகுநகரம் ஒருமருங்கில் 
பேரிலுயர் மாயவரப்  பெருநகரம் மறுமருங்கில் 
மாரியம்மை இவைக்கிடையே மகிமைபெறும் ஊர்தேர்ந்து 
வாரியருள் மாரியென வந்தமர்ந்த வள்ளல்நீ!                           (79)

--> /மாயவரப்  பெருநகரம்/ - ?


வள்ளன்மை, மனத்திட்பம், வாய்மைநலம், நாவினிமை,
உள்ளுவதில் உயர்வு,ஒண்மை, உடல்வலிமை, நோயின்மை,
கள்ளமின்மை, கலைமேன்மை, கயமையின்மை, அழுக்காறென்(று)
எள்ளளவும் இல்லாமை, எலாம்வரும்உன் தயவாலே!                            (80)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 22, 2015, 10:21:43 PM7/22/15
to santhav...@googlegroups.com
தேகத்தைக் கொண்டுவிட்டு -  எனக்குன்றன்
சீரடி தந்துவிடு - எனுமுயர் 
வேகத்தில் பாடுகின்றார் -  பக்தியால் 
விண்ணினைத் தீண்டுகின்றார்!
யாகத்தைச் செய்துநிற்கும்  - முனியென 
யாசகம் செய்யுகின்றார் -  தம்நெஞ்ச 
மோகத்தைக் கொல்லுகின்ற - சன்னிதி 
முன்னிவர் கூடுகின்றார்!

கொஞ்சிடும் பாவெழுதி - தண்ணருள் 
கொட்டும் பதமலரை - ஈயெனக் 
கெஞ்சிடும் போதினிலே - இன்பம் 
கிட்டிடும் என்றுணர்ந்தார் - அன்னை 
கஞ்சமலர்ப் பாதங்களே - பூக்கும் 
கயமாய் இருந்தவணம்  - தன்மனச் 
சஞ்சலம் போக்கிடவே - அங்கே 
தன்சிரம் வைத்துவிட்டார்!

சிவசூரி.

Vis Gop

unread,
Jul 23, 2015, 2:16:42 AM7/23/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசிவா. என் விடைகள் கீழே:

படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப் 
படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!
படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப் 
படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்?      (71)
/நீ சரணமெனப் படிப்பினையாய்ப் பெறவிலையேல்/
நீ என்றதனால் இப்பாடல் நெஞ்சுக்கோ பிறருக்கோ சொல்வது.
ஆயின், "என் பயன் ஆவேன்" என்று முடிகின்றதே!
பரதெவீ! 'நீ'யே தான் சரணம் என்பதைப் படிப்பினையாய்ப் பெறுவதே படிப்பின் பயன்! அவ்வாறு பெறவில்லையேல் பல கலை படித்தும் பயனில்லை!  நானோ உன் மகிமையை அனுபவிக்கும் அடியார்களுக்குப் பணிசெய்வதைக் கூட இன்னும் அறிந்திலனே! என் பயன் ஆவேன்?


அனைத்துயிர்க்கும் அன்பான அனைநீயே ஆயிடினும் 
எனைத்தனய னாயேற்க ஏனிந்தத் தாமதமோ ?
தினைத்துணையே னும்நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் 
நினைத்துன்னை நெக்குருகி நிதம்பாடக் கவித்துவந்தா!               (73)

-->  /நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் /
கடவுளுக்குக் கல் நெஞ்சு என்பது போல் இலக்கியங்களில் வந்ததுண்டா?
 அறியேன். அன்னையாய் இருந்தும் என்னைப் பிள்ளையாக ஏற்கத் தாமதிப்பதால் அவள் நெஞ்சம் இன்னும் கரையாமல் திடமாக இருப்பதாக எனக்குள் எழுகிற உணர்ச்சி.


அருளுதற்காய்த் தனைத்தானே அழகுருவாய் அமர்வித்துக் 
கருவாழக் கரைதன்னில் கழனியிடைத் தளிர்த்தவளே!
திருபுரமும் எரித்தசிவன் தேகத்தைப் பகிர்ந்தவளே!
திருபுரத்துச் சுந்தரியே திரவிடத்தில் மிளிர்கனலே!         (76)

--> /திருபுர.../ 
Typo?
 typo இல்லை. தவறான பிரயோகமே. ஆனால் தமிழில் பல மொழிபெயர்ப்புகளில், பலர் எழுத்துக்களில், பலர் பெயர்களில், மேலும் பலவிடங்களில் திருபுரம், திரிபுரம் என்பவை வேறுபாடின்றிக் கையாளப் படுவதைக் காண்கிறேன், ஒரு இலக்கணப் போலி போல! வடமொழியிலும் ஹிந்திப் பெயர்ப்புகளிலும் கூட त्रिपुर, तृपुर என்கிற பிரயோகங்கள் காணப்படுகின்றன. तृपुर என்பது ஏற்கப் படுமானால், திருபுரம் ஏற்கப்படலாம். கிருஷ்ணன் என்பது போல. எதுகைக்குத் துணைசெய்ததால் இந்தப் போலியை ஏற்றுக் கொண்டேன். If you feel it better to change it, I will manage.


கொண்டையிலே கொத்துப்பூ குரல்மழலைத் தித்திப்பு!
வண்டழரும் தார்மறைக்கும் வண்ணப்பூ மாராப்பு!
கண்டவர்கள் கைக்குவிக்கக் கால்மடித்த வீராப்பு! 
மண்டியிட்ட மக்கட்கு மனமெல்லாம் பூரிப்பு!                         (78)
--> வண்டழரும் = ?    'வண்டயரும்' என்றிருந்திருக்க வேண்டும். நன்றி.
/மண்டியிட்ட மக்கட்கு/   மண்டியிட்டு வழிபடும் வழக்கம் இந்திய மரபில் உண்டா?
மண்டியிடுதல் பணிந்து வணங்குவதைக் குறிக்கும். Not necessarily/literally an accepted/prescribed posture during worship.

பூரிதமாய்ப் பொன்னிகடல் புகுநகரம் ஒருமருங்கில் 
பேரிலுயர் மாயவரப்  பெருநகரம் மறுமருங்கில் 
மாரியம்மை இவைக்கிடையே மகிமைபெறும் ஊர்தேர்ந்து 
வாரியருள் மாரியென வந்தமர்ந்த வள்ளல்நீ!                           (79)

--> /மாயவரப்  பெருநகரம்/ - ?  மாயவரம் என்னும் பெரிய நகரம். இந்தப் பிரயோகத்தில் காணும் குறை/பிழை புரியவில்லை. சரியான பிரயோகத்தைச் சற்று விளக்க வேண்டுகிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2015-07-23 4:10 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

Vis Gop

unread,
Jul 23, 2015, 2:24:55 AM7/23/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசூரி!
பக்தியால் விண்ணினைத் தீண்டுகின்றார்!     இது மிகை
யாசகம் செய்யுகின்றார் !             இதுவே உண்மை.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Siva Siva

unread,
Jul 23, 2015, 8:21:24 AM7/23/15
to santhavasantham
2015-07-23 2:16 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
மிக்க நன்றி சிவசிவா. என் விடைகள் கீழே:
படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப் 
படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!
படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப் 
படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்?      (71)

/நீ சரணமெனப் படிப்பினையாய்ப் பெறவிலையேல்/
நீ என்றதனால் இப்பாடல் நெஞ்சுக்கோ பிறருக்கோ சொல்வது.
ஆயின், "என் பயன் ஆவேன்" என்று முடிகின்றதே!
பரதெவீ! 'நீ'யே தான் சரணம் என்பதைப் படிப்பினையாய்ப் பெறுவதே படிப்பின் பயன்! அவ்வாறு பெறவில்லையேல் பல கலை படித்தும் பயனில்லை!  நானோ உன் மகிமையை அனுபவிக்கும் அடியார்களுக்குப் பணிசெய்வதைக் கூட இன்னும் அறிந்திலனே! என் பயன் ஆவேன்?


அனைத்துயிர்க்கும் அன்பான அனைநீயே ஆயிடினும் 
எனைத்தனய னாயேற்க ஏனிந்தத் தாமதமோ ?
தினைத்துணையே னும்நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் 
நினைத்துன்னை நெக்குருகி நிதம்பாடக் கவித்துவந்தா!               (73)

-->  /நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் /
கடவுளுக்குக் கல் நெஞ்சு என்பது போல் இலக்கியங்களில் வந்ததுண்டா?
 அறியேன். அன்னையாய் இருந்தும் என்னைப் பிள்ளையாக ஏற்கத் தாமதிப்பதால் அவள் நெஞ்சம் இன்னும் கரையாமல் திடமாக இருப்பதாக எனக்குள் எழுகிற உணர்ச்சி.


அருளுதற்காய்த் தனைத்தானே அழகுருவாய் அமர்வித்துக் 
கருவாழக் கரைதன்னில் கழனியிடைத் தளிர்த்தவளே!
திருபுரமும் எரித்தசிவன் தேகத்தைப் பகிர்ந்தவளே!
திருபுரத்துச் சுந்தரியே திரவிடத்தில் மிளிர்கனலே!         (76)

--> /திருபுர.../ 
Typo?
 typo இல்லை. தவறான பிரயோகமே. ஆனால் தமிழில் பல மொழிபெயர்ப்புகளில், பலர் எழுத்துக்களில், பலர் பெயர்களில், மேலும் பலவிடங்களில் திருபுரம், திரிபுரம் என்பவை வேறுபாடின்றிக் கையாளப் படுவதைக் காண்கிறேன், ஒரு இலக்கணப் போலி போல! வடமொழியிலும் ஹிந்திப் பெயர்ப்புகளிலும் கூட त्रिपुर, तृपुर என்கிற பிரயோகங்கள் காணப்படுகின்றன. तृपुर என்பது ஏற்கப் படுமானால், திருபுரம் ஏற்கப்படலாம். கிருஷ்ணன் என்பது போல. எதுகைக்குத் துணைசெய்ததால் இந்தப் போலியை ஏற்றுக் கொண்டேன். If you feel it better to change it, I will manage.

--> I think it is better to avoid such (திருபுர) usage.

 


கொண்டையிலே கொத்துப்பூ குரல்மழலைத் தித்திப்பு!
வண்டழரும் தார்மறைக்கும் வண்ணப்பூ மாராப்பு!
கண்டவர்கள் கைக்குவிக்கக் கால்மடித்த வீராப்பு! 
மண்டியிட்ட மக்கட்கு மனமெல்லாம் பூரிப்பு!                         (78)
--> வண்டழரும் = ?    'வண்டயரும்' என்றிருந்திருக்க வேண்டும். நன்றி.
/மண்டியிட்ட மக்கட்கு/   மண்டியிட்டு வழிபடும் வழக்கம் இந்திய மரபில் உண்டா?
மண்டியிடுதல் பணிந்து வணங்குவதைக் குறிக்கும். Not necessarily/literally an accepted/prescribed posture during worship.

--> If something is not indian worship practice, I think we should avoid it in the song intended for indian audience.



பூரிதமாய்ப் பொன்னிகடல் புகுநகரம் ஒருமருங்கில் 
பேரிலுயர் மாயவரப்  பெருநகரம் மறுமருங்கில் 
மாரியம்மை இவைக்கிடையே மகிமைபெறும் ஊர்தேர்ந்து 
வாரியருள் மாரியென வந்தமர்ந்த வள்ளல்நீ!                           (79)

--> /மாயவரப்  பெருநகரம்/ - ?  மாயவரம் என்னும் பெரிய நகரம். இந்தப் பிரயோகத்தில் காணும் குறை/பிழை புரியவில்லை. சரியான பிரயோகத்தைச் சற்று விளக்க

--> I am used to other name such as மயிலாடுதுறை / மயிலை. 

Vis Gop

unread,
Jul 24, 2015, 1:23:04 AM7/24/15
to santhav...@googlegroups.com
தங்கள் கருத்துகளுக்கு மிகமிக நன்றி சிவசிவா. அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2015-07-23 17:51 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com

--> I think it is better to avoid such (திருபுர) usage.  OK !
--> If something is not indian worship practice, I think we should avoid it in the song intended for indian audience.      OK !
--> I am used to other name such as மயிலாடுதுறை / மயிலை. 
'மாயூரப் பெருநகரம்' என்று மாற்றிக் கொள்கிறேன். இவ்வூரின் பெயரான மாயவரம் என்பது திருத்தப்பட்டு மாயூரம் என்று மாற்றப்பட்டது. பின்னர் மயிலாடுதுறை என்று தமிழாக்கப்பட்டது. மயிலை என்பது சென்னை மயிலாப்பூரைக் குறிப்பதன்றோ?

Lalitha & Suryanarayanan

unread,
Jul 24, 2015, 2:02:45 AM7/24/15
to santhav...@googlegroups.com
 மாயூரத்துக்கு அருகில் இருக்கும் நல்லத்துக்குடி என்னும் ஊரில் தோன்றிய ஸ்ரீ  கிருஷ்ண சாமி  என்னும் அந்தணர் பாடியருளிய ஸ்ரீ அபயாம்பிகை சதகத்தில்  " மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே, அபயம்பிகைத் தாயே"  என்னும் மகுடம் அமைத்துப் பாடியுள்ளார்.

சிவசூரி.

Vis Gop

unread,
Jul 24, 2015, 2:37:28 AM7/24/15
to santhav...@googlegroups.com
மயில் இறைவனை வழிபட்டதால் வந்த இரண்டு பெயர்களும் (மயிலாப்பூர், மயிலாடுதுறை) இரண்டு ஊர்களுக்குமே பொருந்தும் என்றே நானும் நம்புகிறேன். ஆயினும், புழக்கத்தின்படி மயிலையும், மயிலாடுதுறையும் வெவ்வேறாகி விட்டன அல்லவா?
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 24, 2015, 2:41:07 AM7/24/15
to santhav...@googlegroups.com
​ஆம் ஐயா. நான் இயற்றிய ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிட்டுள்ளேன்:

மாயூரம் என்னுமெங்கள் மன்னுபுகழ் ஊரதிலே - எழில்
       மாதானத் தெருவென்னும் வீதி -அது
       நீளத்தில் மைலொன்றில் பாதி
​​


ஆயிரமே ஆனாலும் ஆகாது நிகரென்று - பெரும்
      ஆன்றோர்கள் சொல்லென்றும் வழங்கும்  - அங்கு
      ஆலயத்தின் மணியோசை முழங்கும்

சிவசூரி.

Siva Siva

unread,
Jul 24, 2015, 8:39:36 AM7/24/15
to santhavasantham
It is not uncommon for 2 different places to have the same name.

For example, there are even multiple thevaram sthalams with same names - காட்டுப்பள்ளி, முல்லைவாயில் .


புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித் தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன தடியிணை பணிவாரே.      (10)

In the urai:
...மயிலை-மயிலாடுதுறை;  மாயூரம்.  இஃதே இவரது அவதாரத்தலம் என்பது இதனால் அறியப்படும்.  .....

Siva Siva

unread,
Jul 24, 2015, 8:44:14 AM7/24/15
to santhavasantham
/பின்னர் மயிலாடுதுறை என்று தமிழாக்கப்பட்டது./

Just a minor note on this place name. The name மயிலாடுதுறை is the old name for this place.

........கல்வெட்டுக்களும் தேவாரமும் மயிலாடுதுறையார், மயிலாடுதுறையரன் எனக் குறிக்கின்றன. .........

Vis Gop

unread,
Aug 17, 2015, 1:20:57 AM8/17/15
to santhav...@googlegroups.com
கருவாழக்கரை அந்தாதி (81-100) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!
அறிவாலும் இறையுணர்வாலும் மூத்தவர்களின் நல்வாழ்த்தின்றி இச்சிறியேனின் இம்முயற்சி முழுமையடைந்திருக்க இயலாது. மன்றத்தின் நல்ல உள்ளங்களை எண்ணி என் சிரம் தாழ்கிறது.

வாலையென வேதியர்கள் வணங்குகிற தெய்வம்நீ!
மேலையூரும் கீழையூரும் மேவுகிற வழித்தடத்தில் 
மேலப்பா தியினருகில் மிளிர்கின்ற திருவூரில் 
சோலைகளின் சூழலிலே சுந்தரிநின் திருக்கோவில்!           (81)

கோவிலின்முற் கூடத்தில் கொண்டாடிக் குலப்பெண்கள் 
காவியிட்டுக் கோலமிட்டுக் கஞ்சிவைத்துக் கூழ்சமைத்து 
மாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்து 
தேவியுன்னைப் புகழ்ந்துபாடத் தேன்பிறந்து செவிநிறைக்கும்!       (82)

செவிக்கினிப்புன் சீர்நினைந்து செப்புகிற தோத்திரங்கள் !
கவிபடைத்துன் கவின்புகழ்ந்தால் கற்பனையின் வளம்சிறக்கும் !
அவிடேகம் செயக்கணுற்றால் அகம்குளிர்ந்து புனிதமுறும்!
புவிப்பிறப்புப் பயன்பெறும்கற் பூரவொளித் தரிசனத்தால்!      (83)

தரிசனத்தைக் காண்பதுமெம் தந்தையரின் தவப்பயனே!
கரியனையே! கருவாழக் கரையமரும் கருமாரீ!
கிரிமகளே! இப்பிறவி கிடைத்ததெனக் குன்னருளே!
பரிவுடனென் இதயத்தில் பதம்பதித்து நிலைகொள்வாய்!       (84)

நிலையற்ற தேயிங்கு நீதந்த நிலவாழ்வு;
அலைகின்ற பேய்மனமும் அழுக்காறும் அகந்தையுமே 
குலைத்(து),அதற்குக் கேடுசெயக் கூடப்பி றந்தவையாம்!
வலையிட்டே வடிக்கினும்துர் வாசமதைப் பிரியாதே!        (85)

பிரியமுடன் கருணையெனும் பேரமுதின் சிறுதிவலை 
அரியநின பதநிழலில் அடைந்திடுவே னாமாகில் 
பெரியதொரு பதவியது பேறதுவே யாமாகும்!
சரியதற்குச் சமமெனஇச் சகத்தினிலின் னொன்றிலையே!     (86)

ஒன்றியவள் ஈசனுடன் ஒம்ஒன்றும் மகரம்போல்! 
குன்றரசன் குழந்தாய்!எம் குலத்தேவீ! கௌமாரீ!
உன்றிறனை விளைவாலே உணர்வார்கள்; நேரிலுனை 
என்றெவரும் காணார்கள்; இணையற்ற பரம்பொருளே!       (87)

பரமேசன் விடப்பணியும் பணிவிடமும் சூழ்மிடற்றோன்,
கரங்குவித்துப் பணிவிடையும் காத்திருக்க,க் கடுந்தவத்தில் 
நிரந்தரமாய் நிலைகொண்ட நிருமலன்அத் திகம்பரனாம் 
அரன்கரத்தை அருட்கரத்தால் அடைந்தசதீ! சத்தியம்மே!       (88)
 
சத்தியமும் சிதைகுழியில் சறுக்கிவிழுந் தழுகிறது!
புத்தியுமே மனம்போலே  போக்கிடமற் றலைகிறது!
பத்தியொடு பவித்திரதை பாழாகிப் போகிறது!
சுத்திசெய்தே மன்பதையைச் சுட்டேனும் மீட்டருள்வாய்!     (89)

மீட்டுவிரல், யாழ்,குழலில், மெல்லிசையில், மழலையினில்,
தீட்டியநல் ஓவியத்தில், சிற்பத்தில், கவிதையினில்,
பாட்டினில்,உட் பொருளில்எனப் பயில்கலையி லெலாம்சுவையைக் 
கூட்டுமுயிர் ஓட்டமெனக் கூடுமுன தாற்றலென்னே!                                   (90)

ஆற்றினிலே நல்லவையோ(டு) அல்லவையும் கலப்பதுபோல் 
நோற்றென்தாய் பெற்றிருந்தும் நூறுவகைத் தீயவற்றை 
ஏற்றதனால் மாசடைந்தேன்; இன்றிறைமைக் கடலுனையே 
தேற்றமுடன் அணுகிவிட்டேன்; திருவடியில் சேர்த்துக்கொள்!         (91)

சேர்ந்துவிட்ட பாவந்தான், தெரிகிறது! நமக்கிடையே 
நேர்ந்துவிட்ட இடைவெளியாய் நெடுஞ்சுவராய் நிற்பது;அருள் 
கூர்ந்தெனைநீ நோக்கிடவே குறுக்கிடவோர் தடையேது?
சார்ந்தஎனைத் துகள்தட்டிச் சரணத்தில் வீடுகோடு!                               (92)

வீடமைத்துக் குடிகொண்டாய் வீராச னத்திருப்பில்! 
தேடவொணாத் தெய்வம்நீ! திருவருளை நல்க,வயல் 
காடடர்ந்த கருவாழக் கரைதேர்ந்தாய்! கருணையுடன் 
கேடறவே காக்கின்றாய் கேளிரெமை! குலவிளக்கே!                            (93)

குலமற்ற காதலனைக் கூடிடநீ பிறந்தனையாம் 
பலகுலத்தில், ஈசனையே பகைத்ததக்கன் மகளாக,
மலையரசன் குமரியுமாய், மதுரைக்கோ பாண்டியனின் 
செலப்பெண்ணாய்! அகிலத்தின் சீவனுக்குப் பிறப்பிடமே!               (94)

பிறப்பீந்த தாய்நீயே, பேணுவதும் உன்கடனே!
மறப்பதுவோ முனிவதுவோ மகவிடத்தில் ஆகாதே!
இறப்புக்கு முன்னேயே இரங்கியருள் தந்திடுவாய்;
சிறப்பேதும் இலையெனினும் சிதையுமுனே ஆட்கொள்வாய்!       (95)

ஆட்கொல்லிப் புலிபோலே அதருமங்கள் மானுடத்தை 
வேட்டைதான் ஆடி,மறை வேரறுக்க லாயின!நின் 
சாட்டையைக்கொண்(டு) அடக்கிநலச் சன்மார்க்கம் தழைத்திடவே 
காட்டைப்போல் வளர்ந்துயரும் களைகளெலாம் நீக்கியருள்!         (96)

நீக்கமற நிறைந்தபர நித்தியமே! நிருமலமே!
நாக்கருளி நினைத்துதிக்க நனவினிலே மூகனுக்கு 
வாக்கருளிக் கவித்திறத்தை வழங்கியதைப் போல,நைந்து 
போக்கிடமே புரியாத புல்லனுக்கிப் பணியளித்தாய்!!                         (97)

பணிவேறே எண்ணாதுன் பதம்பணியும் அடியார்கால் 
அணியாகிப் போவதுவே அமுதன்றோ! அதுகிட்டில்,
பிணியென்றும் சாவென்றும் பேரச்சம் அண்டிடுமோ?
மணில்வந்த மனிதர்க்குன் மாணடியே அரணன்றோ?                          (98)

அரண்டோடி அழிந்தார்கள் அசுரருனைப் பகைத்ததனால்!
மிரண்டொளிந்த தேவர்கள் மீண்டார்கள் உனைப்பணிந்தே!
இரண்டில்லை நலம்விடுத்து,உன் இணையடியை நம்பினோர்க்கு!ச் 
சரண்டருமுன் சரணங்கள், சாமளையுன் சரண்போற்றி!                       (99)

போற்றிஅன்ன பூரணியே! போற்றிநின பொன்னடிகள்!
ஆற்றலினால் அகிலமெலாம் அமைதிஅருள்! அடிஅடையும் 
பேற்றினையே நல்குக!என் பெற்றவளே! என்மூச்சுக் 
காற்று,எனுயிர், என்னந்தக் கரணத்தில் வாழ்திருவே!                    (100)

சுபமங்களம்!

அந்தமெது முதலேது பிரபஞ்சத்(து) அன்னைக்கு!ச் 
சிந்தையுளே தான்புகுந்து சிற்றறிவை ஊக்குவித்தே 
இந்தவொரு சிறுபடைப்பை என்வழியே அவள்செய்தாள்!
மந்தனிந்த அந்தனுக்கும் மகத்தான பேறளித்தாள்!

கருவாழக் கரைசென்று காமாட்சி யைப்பணிந்தால் 
திருவாழும் அவர்இல்லில், தீராத குறைதீரும், 
மருவில்லா நலவாழ்வு மலர்ந்தங்கே வளம்பொங்கும்,
பெருகிவரும் வமிசவழி, பெருமகிழ்ச்சி மங்களந்தான்!
-----------

2015-07-22 23:07 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
கருவாழக்கரை அந்தாதி (71-80) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!

படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப் 
படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!
படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப் 
படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்?      (71)
;

Siva Siva

unread,
Aug 17, 2015, 10:31:18 PM8/17/15
to santhavasantham
2015-08-17 1:20 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
கருவாழக்கரை அந்தாதி (81-100) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!
அறிவாலும் இறையுணர்வாலும் மூத்தவர்களின் நல்வாழ்த்தின்றி இச்சிறியேனின் இம்முயற்சி முழுமையடைந்திருக்க இயலாது. மன்றத்தின் நல்ல உள்ளங்களை எண்ணி என் சிரம் தாழ்கிறது.

வாலையென வேதியர்கள் வணங்குகிற தெய்வம்நீ!
மேலையூரும் கீழையூரும் மேவுகிற வழித்தடத்தில் 
மேலப்பா தியினருகில் மிளிர்கின்ற திருவூரில் 
சோலைகளின் சூழலிலே சுந்தரிநின் திருக்கோவில்!           (81)

கோவிலின்முற் கூடத்தில் கொண்டாடிக் குலப்பெண்கள் 
காவியிட்டுக் கோலமிட்டுக் கஞ்சிவைத்துக் கூழ்சமைத்து 
மாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்து 
தேவியுன்னைப் புகழ்ந்துபாடத் தேன்பிறந்து செவிநிறைக்கும்!       (82)

-> /மாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்து /
"மாவிளக்குப் படைத்துமலர் மாலைகட்டி அலங்கரித்துத்"
என்பது போல் இருக்கலாமோ?

 

செவிக்கினிப்புன் சீர்நினைந்து செப்புகிற தோத்திரங்கள் !
கவிபடைத்துன் கவின்புகழ்ந்தால் கற்பனையின் வளம்சிறக்கும் !
அவிடேகம் செயக்கணுற்றால் அகம்குளிர்ந்து புனிதமுறும்!
புவிப்பிறப்புப் பயன்பெறும்கற் பூரவொளித் தரிசனத்தால்!      (83)

->  /அவிடேகம் செயக்கணுற்றால்/
"அவிடேகம்" என்ற சொல் இலக்கியங்களில் உள்ளதா?

Vis Gop

unread,
Aug 18, 2015, 2:06:19 AM8/18/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சிவசிவா!
தங்கள் இரண்டு சுட்டல்களுமே பயனுள்ளவை. நன்றியுடன் என் செய்யுள்களை கீழ்க்காண்பவைபோல் மாற்றியிருக்கிறேன்.

2015-08-18 8:01 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

-> /மாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்து /
"மாவிளக்குப் படைத்துமலர் மாலைகட்டி அலங்கரித்துத்"
என்பது போல் இருக்கலாமோ?
அர்ச்சகர் அல்லாத பத்தர்கள் யாரும் அம்மனை நேரில் அங்கு அலங்கரிக்க இயலாதென்பதால் 'நினக்களித்து' என்பதை வைத்துக் கொண்டேன்.

கோவிலின்முற் கூடத்தில் கொண்டாடிக் குலப்பெண்கள்
காவியிட்டுக் கோலமிட்டுக் கஞ்சிவைத்துக் கூழ்சமைத்து 
மாவிளக்குப் படைத்துமலர் மாலைகட்டி நினக்களித்துத்
தேவியுன்னைப் புகழ்ந்துபாடத் தேன்பிறந்து செவிநிறைக்கும்!       (82)
->  /அவிடேகம் செயக்கணுற்றால்/
"அவிடேகம்" என்ற சொல் இலக்கியங்களில் உள்ளதா?

நீங்கள் சுட்டியபின்தான் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை; ஆகவே 3ஆவது அடியை மாற்றினேன்.
செவிக்கினிப்புன் சீர்நினைந்து செப்புகிற தோத்திரங்கள் !
கவிபடைத்துன் கவின்புகழ்ந்தால் கற்பனையின் வளம்சிறக்கும் !
குவிந்திருக்கும் வினையகலும், குறைதீரும், திருநிறையும்,
புவிப்பிறப்புப் பயன்பெறும்,கற் பூரவொளித் தரிசனத்தால்!      (83)

Siva Siva

unread,
Aug 18, 2015, 6:39:11 PM8/18/15
to santhavasantham
2015-08-18 2:06 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
மிக்க நன்றி சிவசிவா!
தங்கள் இரண்டு சுட்டல்களுமே பயனுள்ளவை. நன்றியுடன் என் செய்யுள்களை கீழ்க்காண்பவைபோல் மாற்றியிருக்கிறேன்.

2015-08-18 8:01 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

-> /மாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்து /
"மாவிளக்குப் படைத்துமலர் மாலைகட்டி அலங்கரித்துத்"
என்பது போல் இருக்கலாமோ?
அர்ச்சகர் அல்லாத பத்தர்கள் யாரும் அம்மனை நேரில் அங்கு அலங்கரிக்க இயலாதென்பதால் 'நினக்களித்து' என்பதை வைத்துக் கொண்டேன்.

--> This following is just a theoretical discussion - It is not intended to question your choice of words.

If someone does an action as our representative, is it not our action?

Vis Gop

unread,
Aug 18, 2015, 10:12:11 PM8/18/15
to santhav...@googlegroups.com

2015-08-19 4:09 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

--> This following is just a theoretical discussion - It is not intended to question your choice of words.

If someone does an action as our representative, is it not our action?

Thanks Sivasiva. My humble response is as follows, but views must differ with the interpreting mind:

         Of course, my representative's action is my action. However, the description or the reporting of such actions, especially the physical ones, should bring out what really happens in the given context. The reader, not a part of the happenings, will assume/understand/capture/appreciate the rest. The present context describes my view of the happenings there. People do different things there. Each one does some contribution which, in one's own thought, is an undoubtedly direct arpanam to the Goddess, which is invisible to the observer (me). I attempt to describe what is seen and heard there, which itself is so holy and unique that steels my emotions!
         Sometimes, I make a garland with which the archaka does the decoration. He does it much more beautifully than how I would have done. I silently and loudly express this feeling too. Some times, my garland takes a wrong place, or is invisible, though has become a part of the decoration. Thus doing it through the archaka is felt/seen to be more than or less than my intended action. However, no one feels dissatisfied, because one feels happy to have done the samarpanam, ('aLiththal').
         Thus the physical presentations of materials by a devotee takes the intermediate step, the samarpanam stemming from the devotion, is between the devotee and the Goddess. 
         This is my response to your theoretical question. However, I do not think/feel/say that 'alankariththu' in the place of 'aliththu' does not fit the context. 
          I remain grateful to you, Sivasiva, for your valuable comments and directions that drive me to grow.
          Regards.
          gopal.
Reply all
Reply to author
Forward
0 new messages