குறத்தியை அணையும் முருகன்! - செங்குன்றாபுரத்தின் புதிய திருப்புகழ்

119 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 28, 2017, 9:43:37 AM2/28/17
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, Ramamoorthy Ramachandran, Vis Gop
முருகபக்தர் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் ஏப்ரல் 2006-ல் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் தொகுத்த ஓலைச்சுவடிகளில் திருப்புகழ்ச் சுவடிகளைப் பார்வையிட்டார். மூன்று புதிய திருப்புகழ்கள் இருக்கின்றன. ஆனால், இரண்டு சிதைவு பட்டுள்ளன. செங்குன்றாபுரம் என்னும் ஊரின் திருப்புகழ் மாத்திரம் முழுமையாகக் கிடைத்துள்ளது. செங்குன்றாபுரம் கேரளாவில் செங்கனூர் என நினைத்து எழுதிவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் பேரா. சு. பசுபதி சந்தவசந்தத்தில் இத் திருப்புகழ் பற்றிக் குறிப்பிட்டார். செங்குன்றாபுரம் என்பது விருதுநகர் அருகே எரிச்சநத்தம் என்னும் ஊரின் பக்கலில் உள்ளது எனவும், அங்குள்ள பழைய கல்வெட்டுகள் சிலவும் பற்றி எழுதினேன். 

அண்மையில் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. செங்குன்றாபுரம் என்பது விருதுநகர் பக்கத்திலே தான் என உறுதிப்படுத்தினார். 2017 தைப்பூச விழாவில் மைக்ரோஸாப்ட் கம்பெனியின் தலைமையிடமாக விளங்கும் ரெட்மண்ட், வாஷிங்டன் மாகாணம் உள்ள பெருமாள் கோவிலில் பட்டிமண்டபம் ஒன்றுக்கு நடுவராக இருக்க வாய்ப்பமைந்தது:http://nganesan.blogspot.com/2017/02/redmond-pattmanram.html 
அப்போது குறிப்பிட்டேன். 'Mond, Mound, Mount(ain)' தொடர்புடைய சொற்கள். ரெட்மண்ட் என்பது செங்குன்று. அப்பெயர் கொண்ட குன்றாலோ, அல்லது ஒரு மனிதர் பெயராலோ வந்திருக்கவேண்டும். செங்குன்றாபுரத்துக்கு ஒரு புதிய அழகான திருப்புகழ் ஓலைச்சுவடியில் இருந்து கிடைத்துள்ளது. அதையே ரெட்மண்ட் கோவில் முருகவேளுக்கும் உரிய திருப்புகழாகப் பாடலாம்.’ 

கணி என்றால் ஜோதிடன். கணி வாய்ப் பல்லி, கணி வாய் வேங்கை என்பது சங்க இலக்கியம். வேங்கை மரம் பூத்தால் தினை முதிர்ச்சி அடைந்துவிட்டது கொய்யலாம் என்று வேடர்கள் அறிவார்கள். எனவே தான் வேங்கை மரமாக முருகன் வள்ளியை மணம்புணர வந்து அணைந்தான் என்பது வரலாறு. வேங்கை மரத்தை கணி என்று கூறும் 2000 ஆண்டு பழைய அரிய தமிழ்மரபை அருணகிரிநாதர் பயன்படுத்தும் அரிய திருப்புகழ் செங்குன்றாபுரத் திருப்புகழ். ஓலைச்சுவடியில் அணவோனே என்றுள்ளது. குழைந்தை/குழந்தை, புடைவை/புடவை, பழைமை/பழமை என வருதல்போல, ஏடெழுதுவோர் அணைவோனே என்பதை எழுதியுள்ளார் எனக் கருதலாம். குறமகள் வள்ளியை அணைவோனே என்று 20 திருப்புகழ்கள் உள்ளன. அவற்றை ’முருகா சரணம்’ வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். இங்கும் இணைக்கிறேன்.

                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன தனதான

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
  வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
  மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
  ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
  தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே

அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
  இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
  மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
  எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
  செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.



செங்குன்றாபுரம் - விருதுநகர் அருகே உள்ள தலம்.

 20 திருப்புகழ்களில் குறத்தியை அணைவோன்!


(1)
சந்திதொறு நாண ...

துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
     மங்களம தாக ...... அணைவோனே

(2) 
கோல மறை யொத்த ...

சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
     சீரணி தனத்தி ...... லணைவோனே

(3) 
கருவாகியெ தாயுத ரத்தினி ...

 புகர்வாரண மாதுத னைத்திகழ்
          அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே

(4)
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு ...

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
     வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே

(5)
கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
    
எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
     யெற்பொற் புயத்தி ...... லணைவோனே 

(6)
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் ...

அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
     விக்குள் மறமகளை ...... யணைவோனே

(7)
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் ...

தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
     செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே

(8)
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் ...

கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு
     கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே

(9)
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் ...

கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
     கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே

(10)
ஐயுமுறு நோயு மையலும வாவி ...

மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
     செய்யபுய மீதுற் ...... றணைவோனே

(11)
விந்ததி னூறி வந்தது காயம் ...

சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி ...... லணைவோனே

(12) 
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில் ...

காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
     காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே

(13)
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள் ...

திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
     தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே

(14)
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி ...

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

(15)
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி ...

ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
     ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே

(16)
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்

தினைப்பு னந்தனி லேமய லாலொரு
     மயிற்ப தந்தனி லேசர ணானென
          திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே

(17)
வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு ...

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
     சீதவிரு கோட்டி ...... லணைவோனே

(18)
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை ...

அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
     அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
          அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே

(19)
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன ...

முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
          மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி

அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
     சதத ளம்பணிந் ததிவித கலவியு
          ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே

(20) 
செங்குன்றாபுரத் திருப்புகழ்

வம்புங் கோபமு மேவசு ராதிகள் ....

அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
. இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
. மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே 

-------------------

நா. கணேசன்

செங்குன்றாபுரம் திருப்புகழ் பல்லாயிரம் இந்தியர்கள் பணிசெய்யும்
 ரெட்மண்ட், வாஷிங்டனுக்கும் பொருந்தும்:

N. Ganesan

unread,
Feb 28, 2017, 9:50:34 AM2/28/17
to சந்தவசந்தம்

சந்தவசந்தக் கவிஞர்களுக்கு ஒரு கேள்வி. ஹரிகி, இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இதே சந்தத்தில் வேறு திருப்புகழ்கள் உண்டா?

இந்த சந்தத்திற்கு எந்த ராகம், தாளம் பொருந்தும்.

பதில்களுக்கு நனிநன்றி,
நா. கணேசன்
 
வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அனந்தையில் கண்ட திருப்புகழ்:

                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 10:01:08 AM2/28/17
to santhav...@googlegroups.com, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Ramamoorthy Ramachandran, Vis Gop


2017-02-28 20:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன தனதான

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
  வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
  மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
  ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
  தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே

அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
  இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
  மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
  எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
  செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.





இந்தப் பாடலை மீண்டும் இட்டு நினைவுறுத்தியதற்கு நன்றி கணேசன்.

பேரா பசுபதி அவர்கள் இதேபோல பல ஆண்டுகளுக்கு முன்னால் (2003-2004ஆக இருக்கலாம்)


வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்
    உருகிப் போனது தேற்றப்ப டாதினி
        மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென அழையாயோ?
    வலியப்போயுடல் கூச்சப்படாமையும்  இடியப்பேசிய நாச்சிக்கலாமையும்
        மறுசொற்காதுகள் கேட்கப்படாமையும் வரலாமோ
கறுவிப்பாய்புலி வேட்டைக்குளேவரு பசுவைப்போல்மிடி யாற்பட்டபாடெழு
        கதையைப்பாரினி லார்க்குச்சொல்வேனினம் அறியாயோ
    கவலைச்சாகர நீச்சுக்குளேயுயிர் தவறிப்போமேன ஓட்டத்திலோடியெ
        கருணைத்தோணியி லேற்றிக்கொள்வாயினி அலையாதே
குறைபட்டேயுயிர் காத்துக்கொள்வாய் என முறையிட்டோர்கரி கூப்பிட்டநாளொரு
        குரலிற்போயுயிர் காத்துக்கொள்வோர்திரு மருகோனே
    குளிர்முத்தாலணி மூக்குத்தியோடணி களபப்பூண்முகை பார்த்துப்பெண்மோகினி
        குவளைப்பார்வையில் மாட்டிக்கொளாதருள் குருநாதா
நிறையத்தேன்விழு பூக்கொத்திலேகனி கிழியத்தான்விழு காய்கொத்திலேமயில்
        நடனக்கால்படு தோப்புக்களேவயல் கயலூடே
    நதியைக்காவிரி யாற்றுக்குளேவரு வளமைச்சோழ நன் நாட்டுக்குளேரக
        நகரிற்சீர்பெறு மோட்சத்தையேதரு பெருமாளே. 

என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட திருப்புகழை அனுப்பியிருந்தார்.  நான் உரையெழுதிய முதல் திருப்புகழ் இது.    நான் எழுதிய அதே சமயத்தில் இலந்தையும் இதற்கு ஒரு உரையெழுதியிருந்தார்.  இருவர் உரையிலும் வேறுபாடு என்று எதுவும் பெரிய அளவில் காணப்பட்டதாக நினைவில்லை.

நீங்கள் அனுப்பியுள்ள இந்தப் புதிய பாடலுக்கும் விரைவில் தினமணியில் உரை எழுதுவேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 10:09:03 AM2/28/17
to santhav...@googlegroups.com

2017-02-28 20:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சந்தவசந்தக் கவிஞர்களுக்கு ஒரு கேள்வி. ஹரிகி, இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இதே சந்தத்தில் வேறு திருப்புகழ்கள் உண்டா?

எனக்குத் தெரிந்த வரையில், நினைவுக்கெட்டிய வரையில் இல்லை.

தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
                       தனதன தனதன தனதன தனதன

என்ற சந்தத்தில் 'குன்றுங் குன்றும்' என்று தொடங்குகிற பாடலுக்கு உரையெழுதியிருந்தேன்.

தந்தந் தனந்த தந்தந் தனந்த

என்ற சந்தத்தில் 'சந்தம் புனைந்து' என்று தொடங்கும் பொதுப்பாடலொன்று உண்டு.


தந்தந் தனதன தந்தந் தனதன

          தந்தந் தனதன              தனதான


என்ற சந்தத்தில் 'வங்கம் பெறுகட லெங்கும்' என்று தொடங்கும் திருத்தணிகைப் பாடல் உண்டு.  இவற்றை எழுதுவதற்காகக் குறித்து வைத்திருக்கிறேன்.

தந்தந் தானன தானன தானன

என்ற அமைப்பு மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது.  இந்தச் சந்தத்தில் வேறு பாடல்கள் உண்டா என்பது பசுபதியாருக்குத் தெரிந்திருக்கலாம்.

Pas Pasupathy

unread,
Feb 28, 2017, 10:09:15 AM2/28/17
to Santhavasantham
சேலம் திருப்புகழ் நூலில் உள்ளது இந்தத் திருப்புகழ்.


2017-02-28 10:01 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:


2017-02-28 20:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன தனதான

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
  வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
  மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
  ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
  தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே

அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
  இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
  மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
  எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
  செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.





இந்தப் பாடலை மீண்டும் இட்டு நினைவுறுத்தியதற்கு நன்றி கணேசன்.




Hari Krishnan

unread,
Feb 28, 2017, 10:12:45 AM2/28/17
to santhav...@googlegroups.com

2017-02-28 20:39 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
சேலம் திருப்புகழ் நூலில் உள்ளது இந்தத் திருப்புகழ்.

ஆமாம்.  இந்தப் பதிப்பு என்னிடத்திலும் இருக்கிறது.  நினைவூட்டியதற்கு நன்றி.

N. Ganesan

unread,
Feb 28, 2017, 10:14:51 AM2/28/17
to சந்தவசந்தம்


On Tuesday, February 28, 2017 at 7:09:15 AM UTC-8, பசுபதி wrote:
சேலம் திருப்புகழ் நூலில் உள்ளது இந்தத் திருப்புகழ்.



அடுத்த பதிப்பில் செங்குன்றாபுரம் செங்கனூர் அல்ல. விருதுநகர் அருகே உள்ள ஊர் என
திருத்திவிட்டார் வலையப்பேட்டை கிருஷ்ணன்.

சிரவையாதீனப் புலவர் ப. வெ. நாகராஜன் ‘அணைவோனே’ என்றிருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் பார்த்து அவருக்கும், வலையப்பேட்டை கிருஷ்ணனுக்கும் அனுப்பிய 19 திருப்புகழில்
குறமகளை அணைவோனே என்ற சான்றனுப்பியுள்ளேன்.

(1) எந்த ராகம், எந்த தாளம் - பொருந்தும் என இசைவாணர்கள் தெரிவித்தால் பாடச் செய்யலாம்.

(2) இந்தச் சந்தத்தில் வேறொரு திருப்புகழ் இல்லை என்றால் அதுவும் ஓர் முக்கியச் செய்தியே.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 28, 2017, 10:26:53 AM2/28/17
to சந்தவசந்தம்


On Tuesday, February 28, 2017 at 7:09:03 AM UTC-8, Hari Krishnan wrote:

2017-02-28 20:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சந்தவசந்தக் கவிஞர்களுக்கு ஒரு கேள்வி. ஹரிகி, இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இதே சந்தத்தில் வேறு திருப்புகழ்கள் உண்டா?

எனக்குத் தெரிந்த வரையில், நினைவுக்கெட்டிய வரையில் இல்லை.


நன்றி, கவிஞரே. உரை எழுதுங்கள்.

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 1, 2017, 10:36:04 AM3/1/17
to சந்தவசந்தம்

                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன தனதான

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
  வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
  மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
  ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
  தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே

அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
  இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
  மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
  எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
  செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.


பாடலை விளங்கிக்கொள்ள ஒரு கேள்வி: 

முதலாம் அடி: ம்பும் ... ண்டும்
இரண்டாம் அடி: ம்பம் ... ஞ்சம்
மூன்றாம் அடி: ம்பென்று ... ன்றுன்
நான்காம் அடி: செம்பொன் ... செங்குன்றாபுரம்

மற்ற மூன்று அடிகளிலும் மோனை உள்ளது போல
மூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாமா?

அதாவது,
அம்பென்றே விழி சேர் குறமாது தன் இன்பந் தேடி முன் ஓர் கணி ஆகவும்
  ன்றுன்பால் வர மோகமதா உற அணைவோனே!

கணி - வேங்கை. வேங்கை மரமாக முன்னொரு நாளில் முருகன் நிற்க, அன்றைக்கு அங்கே விரும்பி வந்த வள்ளியை (ஆன்மாவை) மோகத்துடன் அணைபவனே.

நா. கணேசன்


 

Pas Pasupathy

unread,
Mar 1, 2017, 10:39:52 AM3/1/17
to Santhavasantham
>>மற்ற மூன்று அடிகளிலும் மோனை உள்ளது போல
மூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாமா?

ஆம், பொதுவில் 1-3 அடிகளில் மோனை வருவது தான் திருப்புகழ் வழக்கம்.

N. Ganesan

unread,
Apr 4, 2017, 10:25:15 AM4/4/17
to சந்தவசந்தம், vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
On Wednesday, March 1, 2017 at 7:39:52 AM UTC-8, பசுபதி wrote:
>>மற்ற மூன்று அடிகளிலும் மோனை உள்ளது போல
மூன்றாம் அடிக்குப் பொருள் கொள்ளலாமா?

ஆம், பொதுவில் 1-3 அடிகளில் மோனை வருவது தான் திருப்புகழ் வழக்கம்.


2017-03-01 10:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன
                    தந்தந் தானன தானன தானன தனதான

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
  வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
  மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
  ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
  தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே

அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
  இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
  மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
  எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
  செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.


வேங்கை மரத்துக்கு கணி என்ற பெயரை சங்க இலக்கியத்திலும், பின்னர் எல்லாக் காலத்திலும் பார்க்கிறோம்.
ஜோதிடன் போல, வேங்கை பூத்தது என்றால் தினை முதிரும் காலம் என்று அறிவிப்பதால்.

அண்மையில் கிடைத்த செங்குன்றாபுரத் திருப்புகழில் அருணகிரிநாதர் கணி என்று இந்த வேங்கை மரத்தைப்
பாடியுள்ளார். அதன் உரையை சென்ற வாரம் சிரவை ஆதீனப் புலவர் ப. வெ. நாகராஜன் எழுதிக்
கௌமார மடத்திலிருந்து இ-மெயில் செய்துள்ளனர்.  அதனைப் பதிய வேண்டும்.

வேங்கை மரத்தை கணி (ஜோதிடன்) என்னும் 2000 ஆண்டுக்கால மரபிற்குப் பல பாடல்கள் தொகுத்தேன்.
அருணகிரிநாதர் ஏராளமான இடங்களில் இந்தச் சங்க மரபைப் பாடியிருக்கிறார்.
தத்துவபரமாகப் பார்த்தால் தினை முற்றுகிற காலத்திலே வேங்கை பூக்கிறது.
வள்ளி என்னும் ஆன்மாவை தன் நிழலில் விரவ வேலவன் கணியாக, அதாவது வேங்கை மரமாக நின்றான்.
விரகுதல்/விரசுதல்/விரவுதல் = கலத்தல் என்னும் பொருளுடைய, விர- என்னும் தாதுவேர் கொண்ட
நல்ல தமிழ்ச் சொல். விரகம் = விரஹ என்ற வடசொல் ஆகியுள்ளது வடக்கே. தம் மொழி - தம் மிழி (Cf. மிழற்று-).
தம்மிழி = தமிழ் என்றாகியுள்ளது. செய்ந்நன்றி/செய்நன்றி, கதிர்ஞெரி/கதிர்ஞ்ஞெரி. இதழ்ஞெரி/இதழ்ஞ்ஞெரி, நுனிமுரி/நுனிம்முரி ,
பூஞெரி/பூஞ்ஞெரி எனவும் (இலக்கண விளக்கத்து உதாரணங்கள்), நைமனம்/நைம்மனம் (வள்ளலார்),  கொய்ம்முறை/கொய்முறை (கம்பர்),  ...
போல தம்மிழி : தமிழ் என்க. இவ்வழக்கம் மிகப் பழையது என்பதற்கு ஆதாரம் சுமேரியாவில் உள்ள இரண்டாவது த்ராவிடச்
சொல் இதுவாம். (த) மிழகம் : மிலகம்/மெலுஹம் என எழுதப்பட்டுள்ளது (அசோகன் பார்ப்போலா கட்டுரை, நூல்).
பழம் சம்ஸ்கிருதத்திலே ழ இல்லாததால் பலம் என்றாதல் போல், (த)மிழகம் > மெலுஹ என்றாகியுள்ளது எனக் கருதுகிறேன்.
அதேபோல, இரு உயிரெழுத்திடையே ஆன ககரம் ஹகரம் ஆகிறது. விரக- (தமிழ்) > விரஹ (ஸம்ஸ்கிருதம்).
விரஹ தாபம் - இதில் இந்தியாவின் இரண்டு செம்மொழிகளும் விரவியிருத்தல் காண்க. தபஸ்/தவசி, தாபம் - சூடு என்று பொருள்.
விரவு குயில் - காளமேகம் வேம்பத்தூரில் சொன்ன யமக வெண்பா = கத்தும் குயில், பாரதியும் சொல்லியுள்ளார்.
இதன் பொருள்: விரகத்தால் பெடையை அழைக்கும் ஆண்குயில் என கவிமாமணி இலந்தை விளக்கினார்கள்.

பேரா. ப. பாண்டியராசா ‘என்னே தமிழின் இளமை’ என சங்கத் தொடர்களுக்கும், இன்றும், முக்கியமாக
நாட்டுப்புற மக்கள் வாயில் வழங்கும் மரபுத் தொடர்களுக்கும் ஒற்றுமை காட்டி பல கட்டுரைகள் தந்துள்ளார்.
கணி என்ற வேங்கை மரம், அதில் சைவ சித்தாந்த தத்துவமாய் முருகன் வேங்கை மரமாகிக் குறவள்ளியை
அணைதல் பின்னர் 18-ஆம் நூற்றாண்டிலே மாதவச் சிவஞான முனிவர், 19-ஆம் நூற்றாண்டிலே மகாவித்வான்
பிள்ளையவர்கள், வள்ளாலார் வரை இவற்றைச் சொல்லும் நெடிய மரபும் கண்டு
’என்னே தமிழின் இளமை!’ - என வியக்கலாந்தானே.

”மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலை” - புன்னை மரத்தடியாக சோமாஸ்கந்தரும்
கற்பக விருக்‌ஷத்தின் கீழாக கற்பகவல்லியையும்,
வேங்கை நிழலில் சிங்கார வேலரையும் திருவீதி உலா பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

வேங்கை மர நீழலில் சிருங்கார வேலவர் (2016):


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 4, 2017, 1:19:07 PM4/4/17
to சந்தவசந்தம்
ஓர் கணி ஆகவும்
  ன்றுன்பால் வர 

1,3 அடி மோனைக்கு மட்டுமன்றி, பொருளுக்கும் இவ்வாறிருப்பதே பொருந்தும்.  பசுபதி தந்த இந்தத் திருப்புகழின் ஒளிப்பதிவில்,  ’,,கணி ஆகவும் மன்றுன்பால்’ என்றிருப்பது தட்டச்சுப் பிழையாக இருக்க வாய்ப்புள்ளது. இதைப் போல,  ’மோகம தாவுற வனைவோனே’ என்றும் பிழையாகத்  தட்டச்சாகியிருக்கிறது. (ஒளிப்பதிவின் கீழ்ப்பாகத்தில், “புதிதாக்  கிடைத்த’, ’சரணக் கமலாலயத்தை’ என்றிருப்பதையும்   காணலாம்.)

அனந்த்  
   

2017-03-01 10:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Apr 5, 2017, 8:32:10 PM4/5/17
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, Bhavya Krishnan, bharathi...@gmail.com

                   

                   செங்குன்றாபுரத் திருப்புகழ்

                        அருணகிரிநாதர்  இயற்றியது


(திருவனந்தபுரத்தில் திருப்புகழ் ஓலைச்சுவடியில் உள்ள பாடல்)


                      உரை – பெரும்புலவர் ப. வெ. நாகராஜன்,

                   கௌமார மடம், சிரவணம்பட்டி, கோவை

                                 

                                     சந்தக் குழிப்பு

         தந்தந் தானன தானன தானன        தனதான

 

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
  வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
  மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா


தம்பம் போலுறு மூடர்கள் மீதுக

  ரும்புந் தேனிகர் பாவுரை யாதுன


  தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே


அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
  இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
  மன்றுன் பால்வர மோகம தாவுற வணைவோனே


செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
  எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
  செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.

 

பதவுரை:

 

அம்பு ஒன்றே விழிசேர் குறமாது தன் இன்பம் தேடி – கணையைத் தவிர வேறு எதையும் இணையாகக்   கூறமுடியாதபடி கூர்மையும் அழகையும் பெற்றுள்ள வள்ளிநாயகியின் உறவினை விரும்பி.     

 

முன் ஓர் கணி ஆகவும் – அக்காலத்தில் நீர் ஒரு வேங்கை மரமாக நிற்க.

 

அன்று உன்பால் வர – அப்பொழுது அந்த வள்ளி நாச்சியார் உம் பக்கமாக வந்து நெருங்க.

 

மோகமதா உற அணைவோனே – காதலோடு மார்பில் அணைத்துக் கொண்டவரே.

 

செம்பொன் மாமதில் வான் உற – சிறந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட பெரிய கோட்டைச் சுவர்கள் ஆகாயம் வரை உயர்ந்திருப்பதும்

 

வாவிகள் எங்கும் தாமரை மாமலர் சூழ்தரு – அனைத்து நீர்நிலைகளிலும் அழகிய கமலப்பூக்கள் நிறைந்திருப்பதும் ஆகிய

 

செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் பெருமாளே – செங்குன்றாபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்றவரும் வாலிபன் என்று வழங்கப்படுபவருமாகிய முருகப்பெருமானே.

 

வம்பும் கோபமும் மேவு அசுராதிகள் வந்து – வஞ்சனையும் கொடிய சினமும் மிகுந்த சூரபத்மன் முதலிய அசுரர்கள் எதிர்த்துவந்து

 

அஞ்சாமல் உம் வானவர் பாலினில் – சற்றும் பயம் இல்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களாகிய தேவர்களோடு

 

மண்டும் போர்செயும் வேளையில் – மிக நெருங்கிவந்து செய்யப்படும் யுத்தத்தில் ஈடுபட்டபோது

 

அன்னோரை வெல் வடிவேலா – அந்த அரக்கர்களை வெற்றிகொண்ட கூர்மையான வேலாயுதத்தை உடையவரே

 

தம்பம்போல் உறு மூடர்கள்மீது – (எந்த வகையான அறிவுணர்ச்சியும் இல்லாமல்) தூணைப்போல உள்ள அறிவற்ற செல்வர்களைப் பற்றி

 

கரும்பும் தேன் நிகர் பா உரையாது – கரும்பையும் தேனையும் போன்ற இனிய கவிதைகளை இயற்றிச்சென்று இரந்தலையாவண்ணம்

 

“உன தஞ்சம் பார்” என ஓதுவன் – அடியேன் உனது அடைக்கலம்; என்னைக் கண்டருளிப் பாதுகாப்பீராக என்று வேண்டுவேன்.

 

நீ அருள்புரிவாய் ஏ – அதற்கு உளம் இரங்கி நீங்கள் ஆட்கொள்ள வேண்டும்; ஏகாரம் அசை.

 

குறிப்புரை:

 

    வெல் வடிவேலா! உரம் அணைவோனே! பெருமாளே! மூடர்கள் மீது பா உரையாது “உன தஞ்சம்! பார்” என ஓதுவன்; அருள் புரிவாயே எனப் பொருள் முடிபு காண்க. வம்பு எனும் சொல் வஞ்சனைப் பொருள் தருவதை “மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் முலையணி கச்சும் படிறும் வம்பே” (4026) எனும் பிங்கலத்தால் அறியலாம். அசுரர்களை “செயல் உரை நஞ்சு உறழ் மயல் உறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான் கதர்” (வேல்வாங்கு வகுப்பு, கலை 3) என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் தேவர்களைப் பாதுகாக்க வந்திருப்பதை அறிந்திருந்தும் அசுரர்கள் போருக்கு வந்த பேதைமையைக் குறித்து அஞ்சாமலும் என்றார். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” (குறள் 428).

 

   மூடரைப் பாடுதல்: ஒப்பு – ”சுமடர் அருகுற்று இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியும் மருள்” (திருப்புகழ் 268). பார் என்றது நோக்கி அருள்புரி என்னும் கருத்தில். “கரு வெந்து வீழக் கடைக்கணித்து” (239) என்பது மணிவார்த்தை.

 

  தினைப்புனத்தைக் குறிஞ்சி நில இள மங்கையர் காவல்புரிவர். கதிர்முற்றி அறுவடைக்குத் தயார் ஆகும் போது வேங்கை மலர்கள் மலரும். இது திருமணம் செய்வதற்கு உரிய பருவம் ஆதலின் பெற்றோர் தம் மகளுக்குத் திருமணம் புரிய முயல்வர் என்பது தமிழ் அகப்பொருள் மரபு. அதனை இங்குப் பொருத்திப் பார்க்கத் தினைப்புனம் காத்திருக்கும் வள்ளிக்கு முருகன் வேங்கை மரமாகக் காட்சி அளித்தது அவளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்த்தும் குறியீடு ஆகும்.

 

  செவ்வேளை வீரம் நிறைந்ததோர் வாலிபனாகவும், அவ்வாறே வள்ளிதேவியின் காதலனாகவும் மட்டுமே நினைத்து ஊரார் குமரன் என்கின்றனர். அவனைச் “சிவனார் மனம் குளிர உபதேசம் மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர்செய் ஞானதேசிகனாகவோ” (திருப்புகழ் 113) “அரி அரன் பிரமாவோடே மூவகையர் இந்திர கோமான் நீள்வான் அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே” (திருப்புகழ் 1015) ஆகிய தேவாதி தேவனாகவோ நினைக்கவில்லை. இந்தப் பௌராணிக நிலையில் நிற்கும் தொடக்கநிலை அடியார்களுக்கே கந்தவேள் கருணை காட்டுகிறார் என்றால் கௌமார பரத்வம் உணர்ந்த ஞானிகளுக்கு என்ன செய்யமாட்டார் என்பது குறிப்பு.

 

  ”உன தஞ்சம்” என்புழி (உன்+அ) அகரம் ஆறன் உருபு, ஒருமைக்கு வந்ததை வழுவமைதியாகக் கொள்க. தேன் நிகர் என்றவிடத்து எண்ணும்மை விரிக்க. அம்பு ஒன்றே விழி என்றது நியம உவமையணி. துணையாகவும் என்னுமிடத்தில் உம்மை இசைநிறை, மோகம் அதா என்புழி “அது” பகுதிப் பொருள் விகுதி.

 

                                                          -சுபம்-

 

நன்றி: என் வேண்டுகோளுக்கு இணங்கி உரைதந்த புலவர் ப.வெ.நா. ஐயா அவர்களுக்கும், இ-மெயிலில் அனுப்பிவைத்த கௌமார மடாலயம் திரு. இராமானந்தன் அவர்களுக்கும் நனிநன்றி,            

       நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages