திருமகள் அருள்விழி மகிமை

5 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 25, 2025, 9:45:18 PM (23 hours ago) Nov 25
to santhavasantham
திருமகள் அருள்விழி மகிமை
(கலிவிருத்தம்)

தெறிகடல் திரையெனத் திரிமனம் திருகறும்
சிறுமைவெஞ் சிறையறச் செறிவிருள் திரிவுறும்
தெறுதுயர் செறவெழுந் திறலொடு தெருள்மிகும்
சிறவுறு திருமகள் திருவிழி திறக்கவே.

பதவுரை:
சிறவு உறு திருமகள் = சிறப்பு மிகுந்த திருமகளின்
திருவிழி திறக்க = கடைவிழிப் பார்வை காட்டி அருள் பாலித்தால் -
தெறி கடல் திரை எனத் = தெறித்து எழுகின்ற கடல் அலைகளைப் போல
திரி மனம் = அலைந்து திரிகின்ற மனம்
திருகு அறும் = கோணல் நீங்கும்
சிறுமை வெஞ் சிறை அற = மூடத்தனத்தால் நமக்கு நாமே எழுப்பிக் கொண்ட கொடிய மனச் சிறை நீங்கும்
செறிவு இருள் = அடர்ந்த இருள்
திரிவு உறும் = அழிந்து விடும்
தெறு துயர் = சுடுகின்ற துயரை
செற எழும் திறலொடு = அழிக்க எழுகின்ற வலிமையுடன் 
தெருள் மிகும் = தெளிவு மிகும்

- இமயவரம்பன் 

Siva Siva

unread,
Nov 25, 2025, 10:01:43 PM (23 hours ago) Nov 25
to santhav...@googlegroups.com
Nice.

/ செறிவு இருள் = அடர்ந்த இருள் /

செறியிருள் ?

வி. சுப்பிரமணியன்

On Tue, Nov 25, 2025 at 9:45 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
திருமகள் அருள்விழி மகிமை
(கலிவிருத்தம்)

தெறிகடல் திரையெனத் திரிமனம் திருகறும்
சிறுமைவெஞ் சிறையறச் செறிவிருள் திரிவுறும்
தெறுதுயர் செறவெழுந் திறலொடு தெருள்மிகும்
சிறவுறு திருமகள் திருவிழி திறக்கவே.

பதவுரை:

இமயவரம்பன்

unread,
5:46 AM (15 hours ago) 5:46 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you. செறியிருள் good suggestion.
Reply all
Reply to author
Forward
0 new messages