சந்த வசந்தம் சந்திப்பு

276 views
Skip to first unread message

sk natarajan

unread,
Dec 8, 2012, 6:01:29 AM12/8/12
to santhavasantham, sk natarajan
சந்த வசந்தம் சந்திப்பு 


இன்று காலை  10:30 மணியளவில் சந்த  வசந்தம் சந்திப்பு இனிதே துவங்கியது
தலைவர் இலந்தை அவர்கள் குழு ஆரம்பித்ததன் நோக்கம்
கடந்த ஆண்டுகளில் இந்த குழுமத்தின் செயல்பாடுகள்
குறித்து பேசினார்
அப்போதே பதினைந்து உறுப்பினருக்கு மேல் வந்திருந்தனர்
பிறகு கவிஞர்.சவகர்லால் , திரு. ரமணன் இசைகவி, மேலும் பலர் வந்திருந்தனர் , நான் ஹரிகி ஐயாவுடனும் கவிஞர் சவகர்லால் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன்
பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துக் கொண்டிருந்த போது
அவசர வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் ஹரிகி ஐயாவிடம் சொல்லிவிட்டு சென்றேன் , மீண்டும் வருவதாக
ஆனால் மாலை  3 மணிக்கு திரும்பி வர நினைத்தேன் துரை ஐயாவிடமிருந்து எனக்கு  அழைப்பு வந்ததைக் கண்டு , ஆனால் பல முறை முயற்சி செய்தும் அலை பேசியை எடுக்காததால் கூட்டம் முடிந்து விட்டது என எண்ணினேன்
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன்   .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
ஆனால் அங்கு வந்திருந்த அனைவரையும் கண்டு பேசி மகிழ இருந்த வாய்ப்பு தவறி போனது
better luck next time

Inline image 1Inline image 2

Inline image 3Inline image 4

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



DSC03950.JPG
DSC03948.JPG
DSC03951.JPG
DSC03949.JPG

Akila Ramasami

unread,
Dec 8, 2012, 7:01:11 AM12/8/12
to santhav...@googlegroups.com

அருமையான புகைப் படங்கள்.. அழகான சூழலில் .. குழும நண்பர்களுடன்.. அருமை 
அன்புடன் அகிலா 

 
2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>




--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

DSC03949.JPG
DSC03950.JPG
DSC03948.JPG
DSC03951.JPG

Pas Pasupathy

unread,
Dec 8, 2012, 7:04:50 AM12/8/12
to santhav...@googlegroups.com
படங்களுக்கு நன்றி, நடராஜன்.

2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--

DSC03951.JPG
DSC03948.JPG
DSC03949.JPG
DSC03950.JPG

Suganthi

unread,
Dec 8, 2012, 7:17:29 AM12/8/12
to santhav...@googlegroups.com
Dear all
It is nice to the pictures.
Thanks for sharing.
With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

On Dec 8, 2012, at 7:01 AM, Akila Ramasami <akilac...@gmail.com> wrote:


அருமையான புகைப் படங்கள்.. அழகான சூழலில் .. குழும நண்பர்களுடன்.. அருமை 
அன்புடன் அகிலா 

 
2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>
சந்த வசந்தம் சந்திப்பு 


இன்று காலை  10:30 மணியளவில் சந்த  வசந்தம் சந்திப்பு இனிதே துவங்கியது
தலைவர் இலந்தை அவர்கள் குழு ஆரம்பித்ததன் நோக்கம்
கடந்த ஆண்டுகளில் இந்த குழுமத்தின் செயல்பாடுகள்
குறித்து பேசினார்
அப்போதே பதினைந்து உறுப்பினருக்கு மேல் வந்திருந்தனர்
பிறகு கவிஞர்.சவகர்லால் , திரு. ரமணன் இசைகவி, மேலும் பலர் வந்திருந்தனர் , நான் ஹரிகி ஐயாவுடனும் கவிஞர் சவகர்லால் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன்
பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துக் கொண்டிருந்த போது
அவசர வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் ஹரிகி ஐயாவிடம் சொல்லிவிட்டு சென்றேன் , மீண்டும் வருவதாக
ஆனால் மாலை  3 மணிக்கு திரும்பி வர நினைத்தேன் துரை ஐயாவிடமிருந்து எனக்கு  அழைப்பு வந்ததைக் கண்டு , ஆனால் பல முறை முயற்சி செய்தும் அலை பேசியை எடுக்காததால் கூட்டம் முடிந்து விட்டது என எண்ணினேன்
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன்   .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
ஆனால் அங்கு வந்திருந்த அனைவரையும் கண்டு பேசி மகிழ இருந்த வாய்ப்பு தவறி போனது
better luck next time

<DSC03948.JPG><DSC03951.JPG>

<DSC03949.JPG><DSC03950.JPG>


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 8, 2012, 10:02:46 AM12/8/12
to santhav...@googlegroups.com
ஆவலுடன் வெளியே காத்திருக்கும் எங்களுக்கு விரைவில் படங்களுடன் செய்தியைத் தந்ததற்கு மிக்க நன்றி.
 
.. அனந்த் 

2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>
சந்த வசந்தம் சந்திப்பு 


இன்று காலை  10:30 மணியளவில் சந்த  வசந்தம் சந்திப்பு இனிதே துவங்கியது
தலைவர் இலந்தை அவர்கள் குழு ஆரம்பித்ததன் நோக்கம்
கடந்த ஆண்டுகளில் இந்த குழுமத்தின் செயல்பாடுகள்
குறித்து பேசினார்
அப்போதே பதினைந்து உறுப்பினருக்கு மேல் வந்திருந்தனர்
பிறகு கவிஞர்.சவகர்லால் , திரு. ரமணன் இசைகவி, மேலும் பலர் வந்திருந்தனர் , நான் ஹரிகி ஐயாவுடனும் கவிஞர் சவகர்லால் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன்
பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துக் கொண்டிருந்த போது
அவசர வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் ஹரிகி ஐயாவிடம் சொல்லிவிட்டு சென்றேன் , மீண்டும் வருவதாக
ஆனால் மாலை  3 மணிக்கு திரும்பி வர நினைத்தேன் துரை ஐயாவிடமிருந்து எனக்கு  அழைப்பு வந்ததைக் கண்டு , ஆனால் பல முறை முயற்சி செய்தும் அலை பேசியை எடுக்காததால் கூட்டம் முடிந்து விட்டது என எண்ணினேன்
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன்   .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
ஆனால் அங்கு வந்திருந்த அனைவரையும் கண்டு பேசி மகிழ இருந்த வாய்ப்பு தவறி போனது
better luck next time





என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

sk natarajan

unread,
Dec 8, 2012, 8:59:25 PM12/8/12
to santhav...@googlegroups.com
Inline image 1

Inline image 2

Inline image 3

Inline image 4

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
DSC03956.JPG
DSC03954.JPG
DSC03958.JPG
DSC03957.JPG

sk natarajan

unread,
Dec 8, 2012, 9:12:52 PM12/8/12
to santhav...@googlegroups.com
Inline image 1

Inline image 2

Inline image 3
Inline image 4

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/9 sk natarajan <sknatar...@gmail.com>








DSC03962.JPG
DSC03960.JPG
DSC03963.JPG
DSC03959.JPG

sk natarajan

unread,
Dec 8, 2012, 9:18:15 PM12/8/12
to santhavasantham, sk natarajan
Inline image 1

Inline image 2

Inline image 3

Inline image 4

Inline image 5
DSC03970.JPG
DSC03966.JPG
DSC03964.JPG
DSC03973.JPG
DSC03967.JPG

Pas Pasupathy

unread,
Dec 8, 2012, 9:21:45 PM12/8/12
to santhav...@googlegroups.com
பலே! பலே!
சபாஷ்! சபாஷ்!

2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 
DSC03966.JPG
DSC03967.JPG
DSC03970.JPG
DSC03973.JPG
DSC03964.JPG

Hari Krishnan

unread,
Dec 8, 2012, 9:31:39 PM12/8/12
to santhavasantham, sk natarajan


2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>

நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன்   .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது


அன்புள்ள திரு நடராஜன்,

இவ்வளவு விரைவில் படங்களையும் செய்தியையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.  நான் நாளை வீடு திரும்பியதன் பிறகு, கொஞ்சம் எடிடிங் வேலைகளைச் செய்த பிறகே என்னுடைய பதிவை யூட்யூபில் ஏற்ற முடியும்.  அதற்கு ஓரிரு நாள் பிடிக்கலாம்.  (கிட்டத்தட்ட நான்கு மணி நேர நிகழ்ச்சி பதிவாகி உள்ளது.  இடையில் தலைவர் அல்லது பேச்சாளர் செல்ஃபோனில் பேசுவதை எல்லாம் நறுக்க வேண்டியிருக்கும். செய்து வலையேற்றுகிறேன்).

உங்களைக் குறித்த அறிமுகம் அங்கே தெரிவிக்கப்படாமல் போனது தற்செயலே.  நேரநெருக்கடி ஏராளமாக ஆகி விட்டது.  காலை 10.30க்கு நிகழ்ச்சி தொடங்கியது.  ஐந்தே கவிஞர்கள் படிப்பதற்கு, ஒருமணிநேரம்தான் ஆகும்.  ஆனால், இதற்கே மதியம் இரண்டு ஆகிவிட்டது.

எல்லோரும் சுய அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பிருந்தது.  எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  ரமணனுக்குக் கிடைக்கவில்லை.  கோபாலுக்குக் கிடைக்கவில்லை.  நிகழ்ச்சியின் நேர நெருக்கடி அவ்வாறு ஆகிவிட்டது.  ஒவ்வொருவரயும் தனித்தனியாக சுய அறிமுகம் செய்துகொள்ள நேரம் கொடுத்ததே எண்பது சதம் நேரத்தை விழுங்கிவிட்டது.  அப்படியும் ஒரு இருபது பேரால்தான் பேச முடிந்தது.  இன்னும் இருபது, இருபத்தைந்துபேர் அறிமுகப்படுத்தப்படவில்லை.  அல்லது, சுய அறிமுகமாய் ஏதும் பேச நேரமில்லை.  

ஆகவே, வருத்தப்பட வேண்டாம்.  இதுபோன்ற சம்பவங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் எப்போதும் நடைபெறும் ஒன்றுதான். சந்தவசந்தக் கவியரம் (மண்ணுலகில்) மறுபடியும் நடக்கும்.  உங்கள் பெயரைத் தலைவர் இலந்தையே அறிமுகம் செய்வார்.  

நீங்கள் உடனக்குடன் படங்களை இட்டு, செய்தியையும் சொன்னதற்கு நன்றி.  (ஆனால், என் படம் ஒன்றைக்கூட போடவில்லையே!  ம்ஹூம்.  நான் வருத்தப்பட மாட்டேன். நீங்கள் இவ்ளவு தூரம் செய்ததே பெரிய செயல். நன்றி.)

ஒலி, ஒளிப்பதிவுகள் என்னிடம் உள்ளன.  நான்கு  மணிநேர நிகழ்ச்சியையும் ஓடவிட்டால்தான், நறுக்க வேண்டியதை நறுக்க முடியும்.  எனவே, இரண்டுநாள் பிடிக்கக்கூடிய வேலை இது.  அதுவும், நாளை வீடு திரும்பிய பின்னர்தான் தொடங்க முடியும்.

அன்பர்கள் அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கவியரங்கம் மிக அற்புதமாக நடந்தது.  இலந்தையின் ஏற்பாடுகள் விரிவாக இருந்தன.  ஓடு ஓடென்று ஓடவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், என்னால் எதையும் செய்யமுடியவில்லை.  வாக்களித்தபடி, கோபாலுடன் கல்பாக்கத்துக்குக்கூடப் போக முடியவில்லை.  இரண்டு மணி அளவில் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம்.  இழப்பு எனக்கே.

நகுபோலியனார் அங்கே படித்த முழுக் கவிதையையும் இங்கே இட்டால், நிதானமாகப் படித்து ரசிக்கலாம்.  
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

sk natarajan

unread,
Dec 8, 2012, 9:31:30 PM12/8/12
to santhavasantham, sk natarajan
Inline image 1

Inline image 2

இது காலை வரை எடுத்த புகைப் படங்கள். .
பிறகு மீண்டும் ஐந்து மணியளவில் சந்திப்பில் பங்கு கொண்டேன் .
அது குறித்த தகவல்களையும், படங்களையும், நாளை வெளியிடுகின்றேன்.


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/9 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
DSC03972.JPG
DSC03971.JPG

sk natarajan

unread,
Dec 8, 2012, 9:49:58 PM12/8/12
to Hari Krishnan, santhavasantham, sk natarajan
அன்பு ஹரிகி ஐயா
வணக்கம்
நான் மீண்டும் மாலையில் ஐந்து மணியளவில் சந்திப்பில் கலந்துக் கொண்டேன் .7:30மணி வரை சந்திப்பு நடைபெற்றது.
உங்களது படத்தை வெளியிட்டுவிட்டேன் ஐயா ,மீண்டும் உங்களுக்காக ,ஒரு சில கூடுதல் படங்களுடன்..........Inline image 1


Inline image 2

Inline image 3

Inline image 4

மாலையில் மற்ற உறுப்பினர்கள் தங்களது அறிமுகத்தை தந்தனர் ,தங்களது படைப்புகளை வாசித்தும் பாடியும் வெளிப்படுத்தினர் .
இறுதியாக எனது அறிமுகத்தையும் தந்தேன் .
நான் சாதரணமாணவன் ஐயா ,எனக்கும் வெண்பாவிற்கும் எட்டுக்காத தூரம் .
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா
நிறைய அறிஞர்களையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியே .
இலந்தை ஐயா அவர்களுக்கும் , அவரது மனைவி அவர்களுக்கும் மிக்க நன்றி .
வரவேற்பதில் இருந்து ஒவ்வொரு வேலைக்கும் உணவு தந்து சோர்வே தெரியாமல் அசதி விட்டனர் .
அவர்களின் விருந்தோம்பலுக்கு எனது தலை வணக்கம் .
(விடை பெறும்போது இருவருக்கு சைகை மொழியில் எண்களை கற்றுக் கொடுத்தேன்:)))  )


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/9 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>

DSC03967.JPG
DSC03961.JPG
DSC03968.JPG
DSC03956.JPG

Karuannam Annam

unread,
Dec 8, 2012, 10:01:09 PM12/8/12
to santhav...@googlegroups.com, sk natarajan
பெரியவர்களின் படங்களை உடனடியாக வெளியிட்டுப் பதிந்தமைக்கு நன்றி திரு நடராஜன். படங்களில் பெயர்கள் குறிப்பும் அறிந்தவரை கொடுத்திருந்தால் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இயன்றால் நண்பர்கள் தரவும்.
பொற்கிழிக் கவிஞர் ச.சவகர்லால் அவர்கள் படம் இல்லையே. நிகழ்வுக்குப் பிறகு வந்திருக்கலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2012/12/9 sk natarajan <sknatar...@gmail.com>
DSC03971.JPG
DSC03972.JPG

sk natarajan

unread,
Dec 8, 2012, 10:06:08 PM12/8/12
to Karuannam Annam, santhav...@googlegroups.com
படங்களை சுருக்கி பெயர்களை ஹரிகி ஐயாவோ , அல்லது வேறு பெரியவர்களோ வெளியிட்டால் நன்மை பயக்கும் .
கவிஞர் சவகர்லால் அவர்களையும் மற்ற நண்பர்களையும்  மாலையில் படம்பிடித்தேன் ஐயா ,
அதனை நாளை வெளியிடுகின்றேன் ஐயா .


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/9 Karuannam Annam <karu...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 8, 2012, 10:58:32 PM12/8/12
to santhavasantham, Karuannam Annam


2012/12/9 sk natarajan <sknatar...@gmail.com>

படங்களை சுருக்கி பெயர்களை ஹரிகி ஐயாவோ , அல்லது வேறு பெரியவர்களோ வெளியிட்டால் நன்மை பயக்கும் .
கவிஞர் சவகர்லால் அவர்களையும் மற்ற நண்பர்களையும்  மாலையில் படம்பிடித்தேன் ஐயா ,
அதனை நாளை வெளியிடுகின்றேன் ஐயா .


புகைப்படங்களை, பெயர் விவரங்களுடன் நாளை வலையேற்றுகிறேன்.  

K.R. Kumar

unread,
Dec 8, 2012, 10:59:53 PM12/8/12
to santhav...@googlegroups.com
இன்று காலை “சந்த வசந்த சந்திப்பில்” கலந்து கொண்ட அனைவருக்கும் வணக்கம்

பல காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும் வணக்கம்.

இன்று கலந்து கொண்டோரின் பெயர்களைச் சிவப்பு வண்ணத்தில், தடித்த எழுத்துகளில் கீழே பட்டியல் இடுகிறேன்.

இன்று கவிதைகள் பாடிய அனைத்து கவிஞர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.

தயவு செய்து இந்த மடலிலேயே உங்கள் படைப்புகளைத் தட்டச்சு செய்து கூடிய சீக்கிரம் அனுப்பிவிடுங்கள். அப்பொழுதுதான், சந்த வசந்த சந்திப்புக்கு வர இயலாதவர்களும் படைப்புகளை ரசிக்க முடியும்.

1)இலந்தை ஐயா தலைமைப் பொறுப்பேற்று கூட்டத்தை தொடக்கி வைத்தார். இசைக்கவி ரம்ணன் மிக அற்புதமாக ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பக்தி மண்ம் சொட்ட பாடினார். அவரது கவிதைகளை மடலேற்ற வேண்டுகிறேன்.

2)சிங்கை குமார் ஒரு சிறிய வரவேற்பு உரை அளித்தார். அதன் பின் இலந்தை ஐயா, சந்த வசந்தத்தின் ஆரம்பகால நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். ஒரு சில கவிதைகளைப் படைத்தார். அவற்றை மடலேற்ற வேண்டுகிறேன்.

3)பிறகு அறிமுகப் படலம் ஆரம்பமாகியது. ஒரு சிலர் மதியத்தின் பின் வேறு பல காரணங்களுக்காக திரும்பிச் செல்ல வேண்டியிருந்ததால் அறிமுகப் படலத்தை பாதியில் நிறுத்திவிட்டு கவியரங்கத்தைத் தொடங்கினோம். கவியரங்கம் பாரதியைப் பற்றியேதான் இருந்தது..

நேரப் பற்றாக்குறை காராணத்தால் வந்திருந்த அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஆகவே அறிமுகப் படலம் உணவுக் பின்னான கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

4)இலந்தையார் கவி மழை பொழிந்து பின் 5 கவிஞர்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்தார்.
முதலில் கவிஞர் ஜவகர்லால்
பிறகு புலவர் ராமமூர்த்தி
பிறகு வ வே சு
பிறகு ஹரிகிருஷ்ணன்
இறுதியாக இசைக்கவி ரமணன்...

கவிதைகளைப் படித்தோரும் பாடியோரும் தம் தம் க்விதைகளை இந்த மட்லிலேயே பதிய வேண்டுகிறேன்.

5)பிறகு நகுபோலியன் ஐயா ஆங்கிலமும் தமிழும் சமஸ்கிருதமும் அவ்வப்போது வரும்படி ஒரு கவிதை படைத்தார். அவரது கவிதையை மடலிட வேண்டுகிறேன்.

6)அடுத்து கவிஞர் வீரராகவன் தன் கணீரான குரலில் பாரதியைப் பற்றி ஒரு கவிதை படித்தார். அந்த கவிதையை இந்த மடலிலேயெ பதிவு செய்யும் படி வேண்டுகிறேன்.

7)நேரம் 2 மணியை நெருங்கிவிட்டதால் இலந்தையார் ஏற்பாடு செய்திருந்த அற்புதமான் வாழை இலையிலே சாப்பாடு. மிக அன்பாகப் பரிமாறிய திருமதி பானுமதி இலந்தையார் , அவர்களது மைத்துனி ஜெயஸ்ரீ, அவரது கணவர் போகன், தங்கமணி அம்மாளின் மகள் உஷா , புலவர் ஐயாறப்பனின் மகள் சுந்தரி  ஆகியோர் வயிற்றை மட்டுமின்றி மனத்தையும் இன்புறச் செய்தார்கள்.

8)தூத்துக்குடியிலிருந்து 700 கிலோமீட்டர்கள் காரில் பயணம் செய்து
துரை ந. உ  மதிய உணவிற்கு சிறிது நேரத்திற்கு முன் வந்து கலந்துகொண்டார்.

9)மதிய உணவு உண்ட பின் வேறு பணிகள் நிமித்தமாக சிலர் விடை பெற்றுக்கொண்டனர். (சிவ சூரி, ஹரிகி, வ வே சு,, இசைக்கவி ரமணன், புலவர் ராமமூர்த்தி, கோபால், வீரராகவன், கானடா ஆர்.எஸ் மணி,அவரது மனைவி,சுந்தர்ஜீ, நாராயணன்)

.10)சுமார் மாலை 3.15க்கு மீண்டும் கூட்டம் கூடியது.இராஜ தியாகராஜ்னின் நண்பர்கள் திரு.கிருஷ்ணன் பாலா, பேராசிரியர். பீ.கிருஷ்ணன், முகைவை ராம்குமார் ஆகியோர் புதிதாக வந்து கலந்துகொண்டனர்.

11)இந்தக் கூட்டதத்தில் இலந்தை ஐயா, சிங்கை குமார், இராஜ தியாகராஜன், நகுபோலியன், சந்தர் சுப்பிரமணியன்,  (சிவ சிவா நாயன்மார்) -சுப்பிரமணியன், அப்பன் ராஜகோபாலன்,தங்கமணி அம்மாள், அவரது மகள் உஷா, மருமகன் சங்கர், சா.கி. நடராஜன் ஐயா, அரவிந்த்.(மிஸ் தமிழ்), அஷோக் சுப்பிரமணியன், கார்த்திகேயன்,எழிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். சிலர் கவிதைகள் படைத்தனர். கவிதை படைத்த கவிஞர்கள் அனைவரையும் தம் தம் கவிதைகளை இதே மடலில் பதியுமாறு வேண்டுகிறேன்.

12)இலந்தையார் ஒரு முக்கியமான முடிவுக்கு சந்தவசந்தத்தினர் அனைவரது கருத்துகளையும் வேண்டினார். மடலிடும் அனைவரும் தனது மடல்களை சந்த வசந்தக் குழுவுக்கு அனுப்பும்போது அனுப்பும் முகவரியில் சந்த வசந்த குழுவினருக்கு மட்டும் அனுப்பும்படியும் மற்ற குழுமங்களை சேர்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சந்த வசந்த மடல்களை அப்படியே மற்ற குழுமங்களுக்கு “பார்வார்டு” செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். குழுமியிருந்த அனைவரும் அவரது கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர்.

இது போன்ற சந்திப்புக் கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை (முடிந்தால் டிசம்பர் மாதத்தில்) ஏற்பாடு செய்து முடிந்தோர் அனைவரும் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்தனர்.

இடையிடையே  வறுத்த பாதாம் பருப்பு, மிள்குத்தட்டு, நேந்திரங்காய் வறுவல் , குளிர் இனிப்பு நீர், காப்பி, மற்றும் குடிநீர் தொடர்ந்து வழ்ங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஹரிமணிகண்டன் முதல் நாளே சில குறுந்தகடுகளை இலந்தையாரிடம் தந்து கல்ந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு பிரதி தரும்படி சொல்லியிருந்தார். தவிர்க்க முடியாத சில காரண்ங்களால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.

புலவர் ராமமூர்த்தி, கவிஞர் ஜவகர்லால், புலவர் எழிலவன் ஆகியோர் தம் தம் புத்தகப் படைப்புகளின் பிரதிகளை வந்திருந்தோர் அனைவருக்கும் வழங்கினர்.

இலந்தையாரின் 4 புத்தகங்களின் படிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன.

சமீபத்தில் சிங்கை வாழ் நண்பர் அ.கி.வரதராஜன் சிங்கையில் வெளியிட்ட சாமிநாதான் வெண்பா என்ற் புத்தகமும், கடந்த மூன்றாண்டுகளாக சிங்கை திருமுறை மாநாட்டில் அவர் படைத்த வெண்பாப் பாடல்கள் அடங்கிய ஒப்பிலா ஒருமூவர் என்னும் புத்தகமும், அவரது  குரலில் அந்த வெண்பாப் பாடல்கள் பதியப்பட்டகுறுந்தகடும் வரதராஜன் சார்பில் சிங்கை குமாரால் வழங்கப்பட்டன., இவற்றின் எடை அதிகமாக இருந்த காரணத்தால் 22 பிரதிகளே கொண்டுவரப்பட்டன.  அதானால் முதலில் வந்த சிலருக்கே அவற்றைத் தர முடிந்தது. இந்த படிகள் கிடைக்காத சந்த வசந்தத்தினர் அகிவ ஐயாவுடன் சந்த வச்ந்தத்தின் மூலம் நேரடியாகவே தொடர்புகொள்ளலாம். புத்தகங்களைப் படித்தோர்தங்கள் கருத்துகளை சந்த வசந்தத்தில் பதியுமாறு அகிவ ஐயா வேண்டிக்கொண்டார்.

சுமார் 6.15 மணிக்கு இலந்தையாரும் சிங்கை குமாரும் நன்றி நவின்ற பின் கூட்டம் இனிதே முடிந்தது  .

பிகு:பெரும்பாலான படங்கள் இலந்தையாரின் ஐபேடில் எடுக்கப்பட்டன. சாகி நடராஜன் ஐயாவும் மற்றும் சிலரும் சில புகைப்படங்களை எடுத்தனர்.நேரம் கிட்டும்போது இலந்தை அவர்களையும் புகப்படம் எடுத்தோர்களையும்  சில படங்களைத் தேர்ந்தெடுத்து இந்த மடலுடன் இணத்து அனுப்புமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்,
குமார் (சிங்கை-தற்போது சென்னையில்)
 


2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>
DSC03948.JPG
DSC03951.JPG
DSC03950.JPG
DSC03949.JPG

Hari Krishnan

unread,
Dec 8, 2012, 11:12:04 PM12/8/12
to santhavasantham


2012/12/9 K.R. Kumar <krish...@gmail.com>

தயவு செய்து இந்த மடலிலேயே உங்கள் படைப்புகளைத் தட்டச்சு செய்து கூடிய சீக்கிரம் அனுப்பிவிடுங்கள். அப்பொழுதுதான், சந்த வசந்த சந்திப்புக்கு வர இயலாதவர்களும் படைப்புகளை ரசிக்க முடியும்.

இரண்டு மூன்று நாளில் பார்த்தும் கேட்டும் ரசிக்கிலாம்.  யூட்யூபில் பதிவுகளை வலையேற்றிவிடுகிறேன்.  கவிதைகளை எழுத்தாக சேமிப்பதும் நல்லதுதான்.  என்னுடைய கவிதை 2004ம் ஆண்டு சந்தவசந்தக் கவியரங்கில் இட்டதுதான்.  பாரதிக்கு அஞ்சலியாக நேற்று எழுதிப் படித்தது இதோ இங்கே:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அவரைப் பருவத்தில் நெஞ்சிடை வைத்தேன்

தவ்விமு ளைத்தகவி வெள்ளம் - என்னுள்
தழைத்துக் கிளர்ந்ததோ ஆங்கதன் கள்ளம்

ஒற்றைப் பொறியினி்ல் கிளைத்து - விண்
உதைத்துக் கிளம்புதீப் பரம்பரை முளைத்து

அக்கினிக் குஞ்சுகள் கோடி - அவன்
ஆற்றலி னாலெழும் பாட்டுகள் பாடி.

மேகத்தின் நீருக்குள் முளைத்து - இங்கு
மின்னல்வி ளைத்திடும் தீயொரு கோடி.

காலத்தை யுகமெனல் அற்பம் - இந்தக்
காலத்தின் பேரினி பாரதி கற்பம்.

விண்ணுக்குள் பேதங்கள் உண்டோ - அக
வெளிக்குள்ளும் கிழக்கென்றும் மேற்கென்றும் உண்டோ..

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - தானத்
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

Swaminathan Sankaran

unread,
Dec 8, 2012, 11:24:39 PM12/8/12
to santhav...@googlegroups.com
அற்புதம்! 

பாரதியினால் கவரப் பட்டும், அவருடைய மானசீக சீடனாகத் தங்களைத் தாங்களே பாவித்துக் கொண்டவர்களுக்கும், ஆனால் உங்களைப் போல அதை இவ்வளவு அழகாக வெளிப் படுத்த முடியாதவர்களுக்கும், இக்கவிதையின் கருத்துக்கள், இதன் நயங்கள் மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியவை.

சங்கரன்


2012/12/8 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
 Swaminathan Sankaran

K.R. Kumar

unread,
Dec 9, 2012, 12:21:22 AM12/9/12
to santhav...@googlegroups.com
நன்றி, ஹரிகி.

சொன்னதை உடனுக்குடன் செய்ததற்கு நன்றி.

அன்புடன்
குமார்(சிங்கை)


2012/12/9 Hari Krishnan <hari.har...@gmail.com>

R. Vaidyanathan Vaidyanathan

unread,
Dec 9, 2012, 3:48:24 AM12/9/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள சந்தவசந்த அன்பர்களுக்கு பாரதி எழிலவனின் இனிய்
வணக்கங்கள்.
நேற்று நடைபெற்ற இனிய விழா இனிமை நிறைந்தது. கவிதையுடன் உறவு கொண்ட நாம் அனைவரும் (சிலரைத்
தவிர) நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து கொண்ட்தை நினைக்க
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.   நான் அடிக்கடி இணையத்தில் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றாலும் சந்தவசந்த கவிஞர்களையும், அறிஞர்களையும் நான் நன்கு அறிவேன்.
என்னை உரிமையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்த திரு
இலந்தையார் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. திரு. வேதம்
அவர்கள் வராத்துதான் சற்று மனக்குறையைத்தருகிறது.
நிகழ்ச்சியில் நானும் என்னை அறிமுகம் செய்துகொண்டு நான்
சென்றமாதம் வெளியிட்ட கவிதை நூலிலிருந்து பாரதி பற்றிய்
ஒரு கவிதையைப் படித்தேன்.  அதை இங்கு உங்கள் அன்பிற்கு
சமர்ப்பிக்கிறேன். (என் கவிதை நூலின் பெயர் `எழிலவனின்
கவிதைப்பூங்கா”
                     எங்கள் கவிப்பாட்டன்.
தித்திக்கும் தேனாக தெவிட்டாத தெள்ளமுதாய்
       தனித்தன்மை ஒளியாக ஒளிர்ந்தான் - அவன்
எத்திக்கும் புகழ்மணக்க எண்ணத்தை எழுத்தாக்கி
       இன்னமுதக் கவியாக மிளிர்ந்தான் - தன்
சித்தத்தில் தமிழ்தேக்கி சீர்படவே பலமொழிகள்
        சிக்கனவே பயின்று மேம்பட்டான் - என்றும்
புத்தன்போல் புதுமைநெறி போதனைகள் புகுத்தியவன்
          பெண்ணடிமை களைய தலைப்பட்டான்.

பக்திநெறி வழுவாது அன்புநெறி கடைப்பிடித்து
           பாரிலுள்ள உயிர்களை நீநேசி - தெய்வ
சக்தியுனைத் தேடிவரும், சகலவினை எளிதாகும்
            சத்தியமாய் தெய்வமு னைச்சேறும் - என்றும்
எத்திசையும் வென்றிடலாம் இமைப்ப்பொழுதும் சோராதே
             இச்சையுடன் தர்மமதைச் செய்வாய் - என
நித்தமுமே நவின்ற எங்கள் நேர்மைநெறி பிறழாத
             நித்திலமே எங்கள் கவிப்ப்பாடன்.

எல்லோரும் ஓரினமே எல்லோரும் ஓர்குலமே
             எல்லோரும் இன்னாட்டு மன்னர் - என
கல்லாரும் கற்றோரும் வறியோரும் எளியோரும்
             கட்டாயம் உணரவரும் பின்னர் - என
நல்முத்து ஆரமென நவின்றநம் பாரதியார்
            நம்பிக்கை நனவான தென்னே! - அன்று
கல்லுடைத்து செக்கிழைத்து விடுதலைக்காய் உயிர்விடுத்த
            கர்மவீரர் இவநண்பர் அன்றே!

சக்திஓம் சக்தியென அம்பிகையைப் பாடிடுவார்
             சகலமும் அவள்வடிவே என்பார் - மேலும்
பக்தியிலே திளைத்தவராய் கண்ணனையே காதலியாய்
             பக்கமிருத்திக் காதல் செய்வார் - இவர்
முக்திநிலை கண்டவராய் முழுமனதும் பரவசமாய்
             முகிழ்ந்திருந்து தன்னைமறந் திருப்பார் -  இவர்
சத்தியத்தின் வடிவுடையார் பாரதத்தின்  தவப்புதல்வர்
              சரித்திரத்தில் இடம்பெற்ற தீரர்!

பொதுவுடைமைக் கொள்கைகளைப் பொதுவாகக் கடைப்பிடித்து
              புதுவுலகைக் கண்டிடலாம் என்றார் - அவர்
சதுர்வேதம் படித்தவ்ரே, சகலமதம் அறிந்தவரே
              சமத்துவமே அவர்படைத்த வேதம் - என்றும்
விதியென்று இருக்காமல் வீண்பொழுது கழிக்காமல்
              விரும்பும் தொழில்செய்வதே யாகம் - என
பொதுவறையாய் எழுதிவைத்தார் புவியில்நிலை நாட்டிவைத்த
               புதுமைக்கவி எங்கள்கவிப் பாட்டன்.!

கவிமாமணி பாரதி எழிலவன்.






9 டிசம்பர், 2012 10:51 am அன்று, K.R. Kumar <krish...@gmail.com> எழுதியது:

Pas Pasupathy

unread,
Dec 9, 2012, 6:59:51 AM12/9/12
to santhav...@googlegroups.com
என்னத்தைச்சொல்ல ? எல்லாவற்றையும் பார்த்து,படித்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

அடுத்த டிசம்பர்
அங்கே வர 
ஆசை பொங்குது

2012/12/9 R. Vaidyanathan Vaidyanathan <kmezi...@gmail.com>



--

KrishnanBalaa

unread,
Dec 9, 2012, 6:28:51 AM12/9/12
to santhav...@googlegroups.com
’சந்தவசந்தம்’ சந்திப்பு
------------------------------

சென்னை நங்க நல்லூரில் சந்த வசந்தம் கவிதை குழுமத்தின் சார்பில் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுக்கென்று பாண்டிசேரியிலிருந்து வந்து இன்று (8.12.2012) கலந்து கொள்ள இருப்பதாகவும் வாய்ப்பிருந்தால் என்னையும் வந்து கலந்து கொள்ளும்படியும் நண்பர் திரு. பாவலர் இராஜ.தியாகராஜன் எனக்குச் செய்தி அனுப்பினார்.

நானும் அவரும் இதுவரை நேரில் சந்தித்துக் கொண்டதில்லை.

முகநூல்நட்பின் கருத்துப் பறிமாற்றங்களால்,எங்கள் இருவருக்கும் 
பரஸ்பரம் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் தாகமும் கடந்த பல மாதங்களாகவே இருந்தது.

ஆயினும் நேரில் சந்திக்க இயலாத நிலையே நீடித்து வந்தது.

நான் இராஜஸ்தான் சென்று மூன்று நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பி இருந்தேன். சென்னையில் சில நண்பர்களுடன் எனக்குப் பணி அழுத்தம் இருந்தபோதும் பாவலர் திரு.இராஜ.தியாகராஜனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் நானும் எனது நண்பர் முனைவர் ப.கிருஷ்ணன் அவர்களுடன் காரில் நங்க நல்லூரில் உள்ள கவிமாமணி திரு இலந்தை இராமசாமி அவர்களின் இல்லத்துக்கு மாலை 4;30 மணி அளவில் சேர்ந்தேன்.

பாவலர் இராஜ.தியாகராஜன் அவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து இறங்கி வந்து மேலே நடந்து கொண்டிருக்கும் சந்தவசந்தம் நண்பர்களின் உரையாடல் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்.

மேல் மாடிக்குச் சென்ற போது, எல்லோரும் சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருக்க நண்பர் ஒருவர் தன் கவிதையை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

சுமார் 20 நாற்காலிகளை நீள் வட்டமாகப் போட்டு,அதன் நடு நாயகராக கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்கள் இருக்க முகநூல் நண்பர்கள் இரண்டு பேர் தவிர மற்றவர்கள் சந்த வசத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் என்று பாவலர் என்னிடம் அவர்களை விரல் அசைவுகளில் அறிமுகப் படுத்தினார்.

நிகழ்ச்சிக்கு நடுவே யாருடைய கவனமும் சிதைவதாக இல்லை. அவ்வளவு சுரஸ்யமாக,கேட்டு இன்புறும் வண்ணம் சந்த வசந்தத்தின் உறுப்பினர்கள் தங்கள் கவிதைகளையும் அது எப்படி எழுதப் பட்டது என்ற அனுபவத்தின் பின்னணியையும் சொல்லி செவிகளை இன்பத்தேன் ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அத்தனையும் மரபு வழிக் கவிதைகள். வெண்பா, கட்டளைக் கலித்துறை,ஆசிரியப்பா என்று கவிதைகளின் வகைகள் அத்தனையும் உணர்த்தும் வகையில் வியப்பூட்டும் ஞானச் செறிவில் படைக்கப் பட்டவை.

கவிதைகளை மரபு வழி சிந்தித்துப் படைப்பதன் மூலம்தான் தமிழ்ப் பண்பாட்டின் மரபையும் நாம் வளர்க்க முடியும் என்ற நோக்கில், நான் எழுதிவரும் விஷயங்களை முகநூல் நண்பர்கள் அறிவார்கள்.

எனது இயல்பான இலக்கியப்பார்வையை இந்நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு ரசித்துக் கொண்டமர்ந்தேன்,அருகில்
இராஜ.தியாகராஜன் .

இலந்தை கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களின் 20 வயது வெண்பாத் திறமை பற்றி அவரே விளக்கியபோது வியப்பின் உச்சிக்கே மனம் சென்றுவிட்டது. மகாகவி பாரதி விழாக்களில் அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே பங்கெடுத்தும் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கப் பணிகளில் தலைமைப் பொறுப்பேற்றும் பல்வேறு தமிழ்ப் பணிக்கென்று தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட நேரங்களில் கூட அவரிடம் இருந்த கவிதை இலக்கண முழுமை எனக்குத் தெரியாதிருந்தது உண்மை

ஆனால் இன்று எதிர்பாராமல் நண்பர் பாவலர் திரு இராஜ தியாகராஜனின் அழைப்பில் சென்றதில் அடடா,,இவரை பல ஆண்டுகளுக்கே நெருங்கி பழகாமல் போய் விட்டோமே’ என்ற குற்ற உணர்வுக்கு ஆளானேன்..

நிகழ்ச்சியில் பாண்டித்யம் படைத்தவர்களே கலந்து கொண்டு தங்கள் கவிதைகளைப் படித்துக் காட்டினார்கள்;பிறர் கவிதைகளையும் ரசித்து ருசித்துக் கரவொலி செய்தனர். 

பாவலர் இராஜ.தியாக ராஜன் தனது கவிதையை தனக்கே உரிய இசைஞானத்தோடு தொடங்கி கவிதையின் அசைகளை இசைபட எடுத்து பாடிக் காட்டியதை வெகுவாக ரசித்தேன் . ஒரு குழந்தையின் துள்ளலோடு அவர் கலந்துரையாடியது கண்டு நானும் குதூகலித்தேன்.

நிகழ்ச்சியில் முகநூல் நண்பர் திருமதி உஷா டிவி.சங்கர் (எனக்கு ஏற்கனவே நேரிலும் அறிமுகமான இனிய தோழைமையுள்ள நண்பர்தான்)தனது கணவர் திரு சங்கருடனும் தாயார் திருமதி தங்கமணியுடனும் கலந்து கொண்டிருந்தார். 

திருமதி தங்கமணி அவர்கள் அற்புதமான சொல்லாற்றலுடன் மரபுக் கவிதைகளை சந்த வசந்தம் இணையதளத்தில் பதித்துக் கொண்டிருக்கிறவர்.

சந்தவசந்தம், மிகச் சிறந்த இலக்கியப் பணியைத் தூண்டுவகையில் உருவாகி, மொழிப் பண்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு வளர்ந்து வருகிறது என்பதை இன்று இந் நிகழ்வில் கலந்து கொண்டபோதுதான் உணர்ந்தேன்.

நிகழ்வின் இடையிலேயே நான் வேறு பணிகளுக்காகச் செல்ல வேண்டியிருந்ததால் சந்தவசந்தம் குழுமத்தினரிடம் என்னை நானே அறிமுகம் பேசி விட்டு குழுமத்தை தமிழ்ப் பண்பாட்டின் செழுமைப்பீடமென உருவாக்கி,அறச் சிந்தனையோடு அதில் கவிதைமரபு உறவுகளை வளர்க்கும் கவிமாமணி இலந்தைஇராமசாமி அவர்களுக்கு நன்றி கூறி, அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன்.

தமிழின் இலக்கணவழி மரபுக் கவிதைகளின் செழுமையை வளர்க்கவும் பரப்பவும் அதில் ஆற்றல் பெற்றவர்களை ஒன்றிணைத்து ”சந்தவசந்தம் - மரபியலுக்கு முன்னுரிமை தரும் முதல் குழுமம். ஆயினும் தமிழில் எந்த வடிவாயிருப்பினும் கவிதை, கட்டுரை, திறனாய்வுகளைப் போற்றுதற்கு முன்னிற்கும் தமிழ் வளர்ச்சிக் குழுமமும் கூட.” என்று அறிவித்துக் கொண்டு ஒரு குழுவாக வழுவாத நன்னெறிப் பாதையில் தமிழ்ச் சிந்தனையாளர்களின் பயன் மிகும் நட்பை வளர்க்கும் சந்தவசந்தம் குழுமத்தில் இணைத்துக் கொண்டுவிட்டேன் நான்

குறிப்பு: படங்களைத் தனியே எனது முகநூல் பக்கத்தில் காணுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
9.12.2012


குறிப்பு;

எனக்கு இந்தச் சந்திப்பின்போது நான் பார்த்த நண்பர்களில் பலரது பெயர்கள் மற்றும் விவரம் தெரியாது. 8.12.2012 அன்று மாலையில்தான் ‘இந்த சந்திப்பு;நிகழ்விடம் வந்தேன். அதே இரவில் (8.12.2012) இப்பதிவை எனது முகந்நூல் பதிவிலும் நுகநூல் முற்றம் பதிவிலும் பதித்தேன்.

முழுமையான விவரங்கள் பற்றி எழுதாமல் பதிப்பித்திருப்பதற்கு நண்பர்கள் வருந்தற்க.
-கிருஷ்ணன்பாலா

2012/12/9 K.R. Kumar <krish...@gmail.com>



--
உலகத் தமிழர் உள்ளங்களை எல்லாம் ஈர்த்து,உன்னதத் தமிழின் உயர்பண்பாட்டை உரைக்கும் வலைத்தளம்: ‘உலகத் தமிழர் மையம்’  57 நாடுகளிலிருந்து தமிழர்களால் விரும்பிப் படிக்கப்படும் இத்தளம் உயர் நடைத் தமிழில் கவிநயம் கலந்து, உரைவளம்பூட்டி உலகெங்கும் வலம் வருகிறது.பார்க்க: http://ulagathamizharmaiyam.blogspot.com

மேலும் எனது முகநூல் பக்கத்துக்கும் நீங்கள் வரலாம்.www.facebook.com/Krishnan Balaa/
அன்புடன்,
DSC03948.JPG
DSC03951.JPG
DSC03949.JPG
DSC03950.JPG

Pas Pasupathy

unread,
Dec 9, 2012, 7:48:02 AM12/9/12
to santhav...@googlegroups.com
நன்றி, குமார்.

சந்திப்பில் எடுத்த ஒரு முக்கிய முடிவு என்பதால் ஒரு தகவலை மீண்டும் எல்லோர் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன்.

இங்குள்ள எல்லா அன்பர்களும் கீழே இருப்பதை மீண்டும் படிக்கவும்.




========================

>>12)இலந்தையார்ஒருமுக்கியமானமுடிவுக்கு சந்தவசந்தத்தினர் அனைவரது கருத்துகளையும் வேண்டினார். மடலிடும்அனைவரும் தனது மடல்களை சந்த வசந்தக் குழுவுக்குஅனுப்பும்போது அனுப்பும் முகவரியில் சந்த வசந்த குழுவினருக்கு மட்டும் அனுப்பும்படியும் மற்ற குழுமங்களை சேர்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சந்த வசந்த மடல்களை அப்படியே மற்ற குழுமங்களுக்கு “பார்வார்டு” செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். குழுமியிருந்த அனைவரும் அவரது கருத்தை ஆமோதித்து >>ஏற்றுக்கொண்டனர்.
======

2012/12/8 K.R. Kumar <krish...@gmail.com>
DSC03950.JPG
DSC03949.JPG
DSC03948.JPG
DSC03951.JPG

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 9, 2012, 10:14:34 AM12/9/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள குமார்,
 
உங்கள் உள்ளத்தில் உதித்த கருத்து இத்தனை அருமையாகச் செயல்படுத்தப்பட்டதை அறிய மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பங்கெடுத்த அனைவருக்கும் தலைமை தாங்கி அற்புதமாக ஏற்பாடுகள் செய்த இலந்தையாருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  
 
அடுத்த டிசம்பரை எதிர்நோக்கி இருக்கும்,
 
.. அனந்த்   

2012/12/8 K.R. Kumar <krish...@gmail.com>

Ashok Subramaniam

unread,
Dec 9, 2012, 12:11:02 PM12/9/12
to santhav...@googlegroups.com
அன்பு சந்தவசந்தர்களுக்கு:

கவிக்கூட்ட கார்மேகம் நங்கநல்லூர் வந்து
திவிக்காட்டி தேன்மாரி பெய்ததனால் நேற்று
அழகுவெள்ளம் சூழ்ந்தததில் ஆனந்தம் கொண்டு
குழந்தைபோலே ஆனேனே இன்று.

நான் எடுத்த சிலருடைய நிழற்படங்கள் இதோ... மற்றவற்றையும் விரைவில் வெளியிடுவேன்.

கார்த்திகேயன், 

உங்கள் மின்னஞ்சல் என்னிடம் இல்லை.. தயவுசெய்து அனுப்பவும்.

..அஷோக் சுப்ரமணியம்


2012/12/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
Ashok Subramaniam
http://ashokpennathur.blogspot.com/

"Transient is Permanent"

Ashok Subramaniam

unread,
Dec 9, 2012, 12:12:12 PM12/9/12
to santhav...@googlegroups.com


2012/12/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Girija Varadharajan

unread,
Dec 9, 2012, 12:24:01 PM12/9/12
to santhav...@googlegroups.com
டிசம்பரில் சென்னை வருவதறகுச் சாக்கு,  இனியும் சங்கீதம் மட்டுமன்று.  சந்த வசந்தமும் தான் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்திவிட்டது இக்கூட்டம்.

அனந்த் சொன்னபடி குமார் விதைத்த வித்து நேற்று விருட்சமாகப் பூத்துக் குலுங்கியது.  .


சிங்கையார் கொண்ட சிறப்பான சிந்தையால்  
நங்கையூர் கண்டது  நற்கூட்டம். - பங்கமறப் 
பாட்டரங்கில் சாற்றினார் பாரதியின் மேன்மைதனை
தேட்டையுடன் தேனைத் தெளித்து.  

இல்ல மடைந்தோர்க் கிலைந்தைக் குடும்பத்தார் 
நல்ல விருந்தளித்தார் நாட்ட்முடன். - எல்லையறு 
பாட்டின்பம் மாந்திப் பரவச முற்றனர் 
கூட்டமாய்  ஆங்குக்  குவிந்து. 


அன்புடன் 

வரதராசன்.அ.கி. 

 


 

.         

2012/12/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
Thanks and Regards
Girija

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Ashok Subramaniam

unread,
Dec 9, 2012, 12:26:08 PM12/9/12
to santhav...@googlegroups.com
இணைப்பை அனுப்ப ஏதோ குழப்பம் ஜிமெயிலுக்கு! மீண்டும் முயற்சிக்கிறேன்.


2012/12/9 Ashok Subramaniam <ashok...@gmail.com>
DSC00707.JPG
DSC00719.JPG
DSC00696.JPG
DSC00706.JPG
DSC00704.JPG
DSC00699.JPG

N. Ganesan

unread,
Dec 9, 2012, 1:36:30 PM12/9/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com
On Dec 9, 7:14 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அன்புள்ள குமார்,
>
> உங்கள் உள்ளத்தில் உதித்த கருத்து இத்தனை அருமையாகச் செயல்படுத்தப்பட்டதை அறிய
> மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பங்கெடுத்த அனைவருக்கும் தலைமை தாங்கி
> அற்புதமாக ஏற்பாடுகள் செய்த இலந்தையாருக்கும் என்
> பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
>
> அடுத்த டிசம்பரை எதிர்நோக்கி இருக்கும்,
>
> .. அனந்த்
>

கவிமாமணியார் இல்லத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஒவ்வொருவர்
இல்லத்திலோ, ஒரு திருமண மண்டபத்திலோ நடக்கவேண்டும். சபாக்களில் சங்கீதம்
கேட்க டிசம்பரில் சென்னை வருவோருக்கு ஆசுகவிகளின் சந்தவசந்தக்
கூடல்களும்
இனி இனிப்பு அளிக்கும்.

இம்மென்னும் முன்னே எழுநூறு மெண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா
இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம்
பொழிந்தால் கவிகாள மேகம்!
- என்றதுபோல்,

ஆசுகவி காளமேகங்கள் சந்திர சூர்யாதித்தர் இருக்கும் வரை
வாழையடி வாழையாகத் தமிழுக்கு உருவாக இட்ட
கால்கோள் இது! விண்ணில் மட்டுமின்றி, மண்ணிலும்
சந்தவசந்தக் குடும்பம் கூடிக் குலவட்டும் - ஆண்டுக்கோர்முறை!

யுனிகோடை நடைமுறையாக்க வலைப்பதிவர்கள் கூட்டங்களை
நடத்தப்பெற்றன. இன்று 12000 ஆக வளர்ந்ததால் பல கூட்டங்கள்.
ஆனால், மரபுக் கவிக்கோர் புதுமை சந்தவசந்தக் கூடல்!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்!

வாழ்த்து
--------

சங்கத் தமிழ் மூன்றும் தா! - தமிழ்க்கிழவி

“நிலனாவிற்றிரிதருஉம் நீண்மாடக்கூடலார்
புலனாவிற் பிறந்த சொற்புதிதுண்ணும் பொழுதன்றோ” – கலித்தொகை

“தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்” – மதுரைக்காஞ்சி 761 – 763.

“புகலி ஞானசம்பந்தன் உரை செய்
சங்கமலி செந்தமிழ்கள்”

”சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!"

நா. கணேசன்


> 2012/12/8 K.R. Kumar <krishra...@gmail.com>> இன்று காலை “சந்த வசந்த சந்திப்பில்” கலந்து கொண்ட அனைவருக்கும் வணக்கம்

Soundar

unread,
Dec 9, 2012, 1:39:15 PM12/9/12
to santhav...@googlegroups.com
தமிழ்க் கவிஞர் கூடிய பெருவேள்வி!
பெருவேள்வி என்றால் மஹாமகம்.
மஹாமகம் என்றால் எல்லா நதிகளும் ஒன்று கூடும் நிகழ்வுதானே! பாரத நாட்டு
நதிகள் மட்டுமன்றி, ராரிடன் நதி (Raritan river flows in New Jersey
USA), மஹா நதி (Grand river flows by Cambridge ON, Canada), சிங்கை நதி
(flows thru Singapor) முதலாய பன்னாட்டு நதிகளும் சங்கமித்த மஹாமகம்
என்று சொல்லும் அளவிற்குச் சிறப்பாக நடந்தேறிய நிகழ்ச்சியைப் பற்றி
அறியத் தந்தமைக்கு நன்றி.

மஹாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இது போன்றில்லாமல், 12
மாதங்களுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட நிகழ்ச்சி அமைவதுதான் முறை. இதற்கு
வித்து 12-ம் ஆண்டின் 12-ம் மாதத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சி ஒரு நல்ல
தொடக்கமாக இருக்கட்டும்.

சௌந்தர்

Soundar

unread,
Dec 9, 2012, 1:53:53 PM12/9/12
to santhav...@googlegroups.com
மிகவும் முக்கியமான முடிவு. இந்நாள்வரை இந்தக் கருத்தை எப்படிச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தலைவரே முன்வந்து சொல்லிவிட்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

சந்தவசந்தக் குழு ஏனைய பல குழுக்கள் போன்றில்லாமல் தமிழ் மொழிமேல் உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள் பங்கேற்பது. இதில் இடப்படும் இடுகைகள் தரமானவை. இந்தப் பாரம்பர்யத்தைக் கட்டிக் காப்பது நம் அனைவரின் கடமை. இதில் அங்கத்தினராக இருப்போருக்கு "பாதிவ்ரத்யம்" தேவை. மற்ற பல குழுக்களுக்கு எழுதும்போது, ஏதோ இருக்கட்டும் ச.வ. குழுக்கும் ஒரு c.c அனுப்புவோம் என்று அனுப்பவேண்டாம். மேலும் அர்த்தமற்ற வீண் வாதங்களையும், விவாதங்களையும் தோற்றுவிக்கும இடுகைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் நம் கடமை.

சௌந்தர்


2012/12/9 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
DSC03948.JPG
DSC03951.JPG
DSC03949.JPG
DSC03950.JPG

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 9, 2012, 1:58:49 PM12/9/12
to santhav...@googlegroups.com

<> நங்கைநல்லூரில் தமிழ்த் தரு <>

 

நங்கநல் லூரிலோர் தோட்டம்  - அங்கு

நாற்பதின் மேலான கவிஞரின் கூட்டம்

எங்கள் தமிழ்மொழிக்(கு) ஊட்டம் – தரும்

எண்ணமே அங்குள்ள யாவரின் நாட்டம் (நங்கை)

 

சிங்கையில் தோன்றிய வித்து – அது

செந்தமிழ் நாட்டில் முளைத்துத் தழைத்து

நங்கநல் லூரில்நி லைத்து – இன்று

நல்கிய தேகவி தைக்கனிக் கொத்து

 

சந்த வசந்தத் தருவாம் – அது

தமிழை வளர்க்கச் சனித்த உருவாம்

வந்(து)அண்டி னோர்க்கு விரைவாய்ச் - செய்யுள்

வடிக்கும் வகைதனைச் செப்பும் குருவாம்

 

இந்தத் தருவடிக் கூட்டம் – பல

சாதனை செய்து மரபினை நாட்டி

அந்தமில் லாப்புகழ் ஈட்டும் – அதற்(கு)

எங்கள் இறைவனே! நீவழி காட்டு!

 

..அனந்த் 9-12-2012


2012/12/9 Soundar <rsou...@gmail.com>

Pas Pasupathy

unread,
Dec 9, 2012, 2:00:58 PM12/9/12
to santhav...@googlegroups.com
அருமை, அனந்த்!

2012/12/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Swaminathan Sankaran

unread,
Dec 9, 2012, 2:01:51 PM12/9/12
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு படத்துடனும் படத்தில் இருப்பவர்கள் பெயர்களை வரிசைக் கிரமமாக சுட்டிக் காட்டினால் நல்லது. இந்த சந்தர்ப்பத்தை இழந்தவர்களுக்கு படங்களும் படிக்கப்பட்ட கவிதைகளும் மிகவும் உதவியாக இருக்கும்.

சங்கரன்


2012/12/9 Ashok Subramaniam <ashok...@gmail.com>



--
 Swaminathan Sankaran

Swaminathan Sankaran

unread,
Dec 9, 2012, 2:03:54 PM12/9/12
to santhav...@googlegroups.com
அருமையாக இருக்கிறது, அனந்த். எல்லோர் மனதிலும் தோன்றுவதை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது,

சங்கரன்


2012/12/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
 Swaminathan Sankaran

Pas Pasupathy

unread,
Dec 9, 2012, 2:07:49 PM12/9/12
to santhav...@googlegroups.com
>>மற்ற பல குழுக்களுக்கு எழுதும்போது, ஏதோ இருக்கட்டும் ச.வ. குழுக்கும் ஒரு c.c >>அனுப்புவோம் என்று அனுப்பவேண்டாம்
ச.வ -க்கு எழுதினதையும் மற்ற குழுக்களுக்கு cc - என்றும் அனுப்ப வேண்டாம்.
மேலும், ச.வ -மடலை மற்ற குழுக்களுக்கும் fwd செய்யவும் வேண்டாம்.
 
இப்படி இனிமேல் இப்படி ஏதாவது நடந்தால், தயவு செய்து அனுப்பியவருக்கு இ்ந்த முடிவை  நினைவுறுத்துவது  எல்லோருடைய கடமை.
2012/12/9 Soundar <rsou...@gmail.com>
DSC03949.JPG
DSC03951.JPG
DSC03950.JPG
DSC03948.JPG

Balasubramanian N.

unread,
Dec 9, 2012, 2:58:14 PM12/9/12
to santhav...@googlegroups.com
Hari! You asked for it - You had it! 1.என்னத்தைச்செய்துவிட்டான்?!2.பாரதி யார்?  3.ஜேபர்வாக்கியம் [சொக்கன் அருளியது]
 I attach a pdf of this also, in case the formt of the verses gets dishevelled in reception on your screens .     Nahupoliyan
 

என்னத்தைச்செய்துவிட்டான்?!

என்னத்தைச்செய்துவிட்டான், பாரதி

என்னத்தைச்செய்துவிட்டான்?

சொன்னத்தையெல்லாம் பொன்னொத்ததாக்கிடச்

சோதிக்கவி தீய்த்த சொப்பிடுவித்தைக்காரன்        என்னத்தைச்செய்துவிட்டான்?

மண்ணிற் புரண்டு மதிமக்கினோமுக்கு

மானத்தைக் காட்டிவிட்டான்! - மண்ணில் அந்த

மானத்தைக் காட்டிவிட்டான்! – பின் என்னத்தைச் செய்துவிட்டான்?

        தாயாம் மொழியென்றும்

       தந்தையர் நாடென்றும்

       தாளத்தில் பாடிவிட்டான் - தட்டிக் கேட்கும்

      தாளத்தில் பாடிவிட்டான் - வே(று)      என்னத்தைச் செய்துவிட்டான்?

நாயென்றும் பேயென்றும்

நாடகபாணியில்

நம்மையே திட்டிவிட்டான்! - நாணமுற

நம்மையே யேசிவிட்டான்! - நாணங்கெட

வீரம் புகட்டிவிட்டான்! - இன்னும் வே(று) என்னத்தைச் செய்திடவாம்!

      நெட்டைக்கலங்கரை

      நீள விளக்கொளி

      கிட்டத் தெரியாது போல் - வட்டமிட்டும்

      கிட்டே தெரியாது போல் - அந்த

      வெட்ட வெளிச்சத்து

     வேதக் கதிரொளி

     யெட்ட நமக்குறுமோ? - இன்றேனும்

     எட்ட நமக்குறுமோ! - பாரதீ! என்னத்தைச்செய்துவிட்டாய்!

 

[புகழ் பெற்ற பேராசிரியர் கி.சுவாமிநாதன் பழுத்த வெள்ளரியாய் 90 தாண்டிய முதிர்வில் அமர்ந்திருந்த ஒரு வேளையில் க்கவிதையைக் கையில் வாங்கி மௌனமாகக் கவனித்துக் கண்ணோட்டம் விட்டார். அவருடைய முகபாவப் போக்குகளைப் பயபக்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தலையை நிமிர்த்தித் தன் வழக்கமான ஸன்னக்குரலை உயர்த்தித் தன் மனைவியாரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். அவரும் 90+; மெதுவாக வந்தார். அவரிடம் "தைக்கேளு!" என்ற இவர், தன்னால் முடிந்த வரை உரக்க, "என்னத்தைச் செய்துவிட்டான் இந்தப் பாரதி! ..." எனக் கவிதையை ஓதத்தொடங்கிவிட்டார். "கவிதை எப்படி யிருக்கு" என்று கேட்கும் அபிஷ்டுத்தனத்தை நான் செய்வேனா என்ன!]

 

பாரதி யார்?

['கண்ணன் என் ---- '  எனப் பாரதி எழுதியது போல் 'பாரதி என் ---' எனக்கவிதைகள் 

யற்றப்பட்ட ஒரு தொகுப்பில் டப்பட்ட கடைசிக் கவிதை]

ஆஹாஹா பாரதியார்! ஓஹோஹோ பாரதியார்!

ஞானரதமேறி ஞாலமெல்லாம் சுற்றியதும்,

வானத்துத் தேவர்களை வசனகவி பாடியதும்,

கண்ணனென் தாய், தந்தை,குரு, காதலி, சேவகனென்றே

பாடியதும், சாடியதும், தேடியதும், கூடியதும்

[இத்தியாதி இத்தியாதி எத்தனையோ தும்தும்தும்]

-  -  - -  - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஆஹாஹா பாரதியார்! ஓஹோஹோ பாரதியார்!

வாரீர் பப்ளிஷர்காள்! வாரவிதழதிபர்காள்1

சேரீர் இட்டாபிக்கை வழங்கிடவே! - தாரீர்

வீரமணிக்கொரு 'காலம்', விக்ரமனுக்கொரு 'காலம்'!

பாரதி நம் கடைச்சரக்கு! 

-----------------------------------------------------------------------------

 

ஜேபர்வாக்கியம்

சொக்கன் அருளியது

அருளச்செய்தது நகுபோலியன்

தில்லிக்த்தமிழ்ச்சங்கத்தின் கண் 1980-களில் ஒரு பாரதி தினத்தன்று மேடையேறிப் பின்னர் வானொலியின் கிழக்காசிய நேயர்க்கான ஒலிபரப்பிலும் இடப்பட்ட. நையாண்டி- நக்கல் கவிதை.

 [முற்குறிப்பு: சொக்கன் = சொந்தக்கணி = PC]

காப்பு

கண் சிமிட்டும் நேரத்திற் கணக்கின்றிப் பல கோடி

யெண் சிமிட்டும் எந்திரம் என் காப்பு.

அல்டாப்பு

என்ன கவி பாடி யென்னத்தைக்கண்டோம்?

சொன்னத்தையே திருப்பிச் சொன்னத்தையே ... சொன்னோம்!

சொன்ன நகையரைத்தாற் சொன்னத்தகடாகும்,

சொன்ன சொல்லையே அரைத்தால்? ... புளிமா!

கித்தாப்பு

ஏனோ எனக்கின்றிம் 'மூடு'! எகத்தாள

ஞானோதயம் பொங்கு(ம்) நைம்'மூடு'!   -    நீணோக்கில்,

வாடிக்கையாய்ப் பேசும் வழக்கத்துக்கோர் ஓய்வாம்

வேடிக்கைப் பேச்சென்றறி!

வியப்பு, பின், தொகுப்பு, அதன் உகுப்பு

விடாப்பிடியாய்க்கூட்டும் விரைவுக்கவியரங்கில்

அடாவடியாய் யாக்கும் ஆத்திரக் கவிகள் பிறர்

தொடாததெப்பொருள் நான் தொடுவதற்கே, என வியந்து,

படாத பாடு பட்டுப் பர்ஸனல் கம்ப்யூட்டரிலே

பேட்டர்ன் ரெகக்னிஷனாம் பெரியதொரு ஸாஃப்ட்வேரால்,

பாட்டன் காலத்துப் பழங்கவிதை முதலாக -

முந்தைத் தொற்காலத்து முதற்சங்க யாப்பு முதல் -

இந்தத் தற்காலத்துக் கடைச்சங்க 'மோஸ்தர்' வரை

['மோஸ்தரா'? ஆம்! இச்சங்கக்கட்டிடத்தே நடக்கும்

புடைவை 'ஸேல் ஸேல்' யாவருமறிந்ததே!]

எல்லாக் கவிதை வகை எக்ஸாம்ப்பிளுந் தொகுத்துக்

கம்ப்யூட்ட்ர்க்குட் புகுத்திக் "கற்றுக் கொள்" என்றேன்.

": > கொண்டேன்" எனக் கணியும் கோணக் கண் சிமிட்டியதே.

"கொண்டா காண்போம் உன்றன் கொள்ளறிவை" யென்றே நான்

குமிழ் தட்டிக் கூப்பிட்டேன்; குறுந்திரையை யொளிர்த்ததுதான்

உமிழ்ந்திட்ட்தே எ எ ஓர் உயர் காவியம் ம் ம்!

உற்ற வரி மேலேறப் புதிய வரி பின்றொடர

உயரும் வரித் தொடர்; அதனால் 'உயர் காவியம்' என்றேன்.

உரைநடையும் உதாரணத்துச் செயுள் நடையுங் கலந்தேதான்

'திரை நடை'யில் தெரிவித்த தேங்காப்பியம்! - தலைப்பு

'ஜேபர்வாக்யம்' - பேர்தான் ஜெனித்தவிதமென்னவென்று

கிண்டினேன். விளக்கிற்றே கிழ்க்கண்ட காப்(பு) இயற்றி:

'லுக்கிங்கிளாஸ் ஊ(டு)' என்று லூயிஸ்கரோல் எழுதியுள்ள

புக்கில் வரும் போயம் என் காப்பு!

மேலும் வேறு

சின்ன சங்கரன் பன்னிய யமகம்

சொன்ன அப் பாரதியும் காப்பு.

பெருங்ங்ங்காப்பியம். பகுதிகளே இங்குத் தரப்படும்.

முதற்கவிதை தா என்றேன்.

ஆதிக் கவிதையென்றே அர்த்தமது செய்துகொண்டு

தந்ததே தனி வரியாய்த் திரை முழுதின் நடுவினிலே:-

உலகில் முதலில் தோன்றிய கவிதை :"வாள்! வாள்!".

விளக்கச்சொல்லி விசைத்தேன், அது விருட்டெனவே திரைத்த சொற்கள்:-

" கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே

முன் தோன்றிய மூத்த குடியின் முதல் அரற்றல்?   'வாள்!வாள்!' "

[வரலாரறியாதார்தாம் வாய் மூடிக் கிடப்பீர்!

தமிழன் புகழறியாதார் தற்கொலைதான் செய்துகொள்வீர்!]

சரிசரி, வாள் வாளென்று கத்தும் குடியின் வழித்தோன்றலாம்

முதற்சங்கக் காலத்துக்கு வருவோம் என விளித்தேன்.

வரிகள் பல மேலோட, எதோ ஒரு கணத்தில் சட்டென ஒரிடத்தில்

நிலைகுத்தி நின்றது சொக்கன். அது காட்டிய கவிதை வரிகள்:

" ஊழ் பிழற்றுழற்றுழி செந்நீர்ப் பொழீஇய

தறுகணோர்ந்(து) அருவாப் பூழினம் பொழிகுற்ற்ற் ..."

 [மேலே வரிகள் விளங்கவில்லை. பஃறுளியாற்றின் வெள்ளத்தில் நனைந்து

எழுத்துகள் சிதைந்துபோயிருக்கவேண்டும்.] ஊழிப்பிரளயத்துக்கும் முந்தியதான அருவா நாட்டுப் பெயர்க்குறிப்பு காண்க].

சரி சரி, கடைச்சங்கப் பாடல் கொடு என்றேன்.

கணி தந்த வரிகள்:

" தெண்ணீர்ப் புலத்துத் தெளியொழி புக்க

ஏரிழவுகழ்த்துப் பொல்லாப்பொசிவின்

அயல் நிலச் சழக்குறு முகிழ்த்தெழு கொங்கை

- - - - - - - - - - - - - - - - - "

பொருள்:

கதிரவன். உதய சூரியன். கீழ்த்திசையில் உதிக்கிறான். அம்புலி, தண்மதி, பூரணச் சந்திரன், மேற்றிசையில் மறைந்து ஒரு கடிகை ஆய்விட்டது. வயலிலே, ஏர்க்காலிலே எருது கட்டி உழவன் - தமிழன்தான், வேறு யார் - உழுகிறான். ஓரத்துச் சுனைகளிலும் கால்வாய் மதகுகளிலும் தமிழருக்கே உரிய  செங்கால் நாரைகள் [சைபீரியாவிலிருந்து வந்தவை] ஓடு மீன் ஓட ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கின்றன.

அண்டை நிலப்பரப்பில் - ஜஸ்ட் அடுத்த வயலில் - நேற்று மாலை நடந்து முடிந்திருந்த வெம்போரின் பிணக் குவியல்கள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றின் நடுவே யிடறியிடறி நடந்து 'இது என் மகனா, இது என் மகனா' எனப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கடைசியில் தன் மகனுடலைக்கண்டுபிடித்துவிட்ட தமிழத்தாய் அவன் முதுகில் ஏதோ சிறாய்த்திருப்பது கண்டு  "சீ இவனுக்கா பாலூட்டினாய்' என்று தன் முலைகளைச் சினந்து 'எனக்கு நீ ஒரு கேடா' என வெகுண்டு, பக்கத்தில் கிடந்த பட்டாக் கத்தி யொன்றால் அவற்றைப் ப(ச்)சக்கென்று அறுத்தெறிய, - - - கொங்கைக் குவியல்கள் - - - - - எங்ங்கும் தமிழ்மணம்!

சரித்தான் சரித்தான் என வினைக்குமிழை, ரிட்டர்ன் ஸ்விச்சை, தட்டினேன். அடுத்த சில நூற்றாண்டுகளை எண்சிமிட்டிவிட்டுத் தமிழ்க் கவி வரலாற்றின் இன்னொரு கட்டத்துக்கு வந்து நின்றது சொக்கன். திரையோரத்திலே கரை கட்டிப் பலகணிக்காட்சி போன்று சில சதுரக் கட்டத்து அடுக்குகளில் உள் தெரிந்த 'மெனுச்' சொற்கள்: - பக்தி, வீரம் ... என இன்னும் பல பல. 'பக்தி'யை உயரொளிர்த்து - 'ஹைலைட் செய்து' - வினைதட்டினேன். பசபசவென்று படர்ந்த்தே கவிதையொன்று - தமிழ்ப்பாடல்:

 "வைகாச பாத்ரபத கைலாச மால்மருக   

பைசாச மந்த்ர குரு மருகோனே!

மெய்சோர் கதிற்றுழலு மைசேர் விழிப் பிரகட    

கைசோரகத் திரவிட முருகேசா!

வேறு

வந்தார்ப்படி வளனுறு புலனுறு செந்தேள்க்கடி சிறகறு செவுளொடு

மொந்தாக்குடி மொறுமொறு நொறுநொறு - உணவாகித்

தந்தோர்க்கரம் தகுதகு நகுநகு சிந்தூரக சிறுமியர் ஜிகுஜிகு

செந்தூர் வயல் செருவுரு செவிடனே சிவனேசா!

பிரமாதம் பிரமாதம் படிக்கவே படுஜோராயிருக்கிறதே, என்ன அர்த்தம் என்று

கேட்டேன். பதில் சொல்லாமல், ஒளிர்ப்பை இடம் மாற்றி 'வைத்தியம்' என்ற

விண்டோவில் நின்று கவிதை தந்தது சொக்கன்.

“ கட்டித்திரிகடுகம் காட்டாமணக்கும் சேர்

 எட்டி முருக்கை எரி பசலை - தட்டு நிறை

ஆடாதொடையும் அரு நாய்க்குடையும் உணத்

தேடாது செல்வாய் கதி”.

[இதை விடச் சற்றே எளிய பொருளில்:-]

“செக்கப் பழுத்த சிறுநீரில் சித்தரத்தை

ஒக்க வறுத்த ஒரு துவரை - நக்கி நக்கிப்

பாலில் கரைத்து நெடி பாராமல் உள்ளருந்த

ஓலமிடும் பாங்கே தனி”.

  என்ன சொக்கா, பழங்காலத்துப் புரியாக் கவிதைகளையே

கொடுத்துக்கொண்டிருக்கிறாயே? இறங்கி வா, இறங்கி வா! மக்களுக்குப்

புரிகிற மக்கள் கவிதை, இக்காலத்து இலக்கியம், கொடு என்றேன். உடனே

சடசட படபட சர சர பர பர சத்தத்துடன் எண்கள் சுழல ரௌலட்-வீல்

கணக்காய் ஏதோ ஒரிடத்தில் வந்து நிலை கொண்டது கணித்திரை.

மக்கள் கவிதையென்றால் கொச்சையாக என்று கொள்ளாதே.

இந்தக்காலத்து உயர்தர இலக்கியம், ஆழ்ந்த கருத்துச் செறிவுடன் - தருக

என்றேன்.  இதோ என்றது அதுவும்:-

“ மங்கல் வெளி வானத்து மஸ்லின் கருவூலம்! -

திங்கள் நிலவொளியில் தேனூறும் பொற்பிழம்பு!

கங்குல் களிமூட்டக் கார்விளக்கின் கண்ணோட்டம்!

எங்கண் இயம்புதற்கோ ஏந்திழையின் முகவாட்டம் ...”

புரிந்த சொல் போல் இருக்கிறது, ஆனால் புரிகிறமாதிரி தோன்றவில்லை

“ நீங்காத வெண்முகிலின் நித்திலமோ - நித்திலத்தில்

தூங்காதியற்றி நின்ற தொல்கவியோ - தொல்கவியின்

தேங்காதெயிற்றோடும் தேந்தமிழோ - தேந்தமிழன்

பூங்கா துகிலுரித்த பொன்மலரோ - என்றெல்லாம்

எண்ணியிறுமாந்து இறும்பூது எய்தினின்று ......”

இவ்வளவு உயர்ந்த சொற்கட்டுநயமிக்கது உயர்ந்த கவிதையாகத்தான்  இருக்கவேண்டும் என்ற ஒரு பொது உணர்வு மட்டும் மேலோங்க, நான் - மரபுக்கவிதைகள்! சரி, புதுக்கவிதைகள்? என்று வினா போட்டேன். கேட்டதுதான் தாமதம், சட் - பட்ட் - சடபட சடபட என வெவ்வேறு நீளத்து வரிகளைத் தட்டெழுதி வடித்தது சொக்கன்.

 இரவு பகல் முக்கோணங்கள்.

எரியாதொழியும் பாலைவனக் காட்சியின்

மேர்ப்பரப்பு நீர்ப்

பரப்பு -

அடிப்

புறம் பனிமலை - எரிமலை!

கண் திறக்கும்

ஏழைச்சிறுமியின்

பாவாடை நுனி -

யெஹோவா யெஹோவா லெம்மா ஸபக்தானி!

கிறிஸ்து எப்போது வருவார் ? ஹ்ம் !

தட்டித் திறக்காத கதவுகள், கேட்கத்தெரியாத கேவல்களை

அடைக்க,

வட்டமிட்டு வழக்காடும் வானவில்லின் வாசனை . . .

[ கவிஞர் என்ன சொல்லவருகிறார்? - ஆங்கிரஸன், கணையாழி]

எனக்கே தாங்கவில்லை. அடடே அத்தனை ஆழமான கவிதைகள் வேண்டாம்.            

இன்று பாரதி விழா. பாரதிக்குப் பாமாலை சூட்டேன், என்றேன் பாருங்கள், திரையிலே படுவேக வரியியக்கம். 

ஓய்ந்த பின் - ஒரு லைன்: ஒரே ஒரு லைன்:-

'பாரதிர முழங்கிய பாரதீ . . . ! 34000'

அடுத்த லைன்:

'பாரதிவீரக் கவிஞன் பாரதியை . . . ! 35380'

இதென்ன, ஒரு வரிக்கவிதைகளா என வினவினேன்.

இல்லை. முதல் வரிகள் மட்டும் என்றது கம்ப்யூட்டர்.

அதென்ன நம்பர், வலப்புறம், என்றேன்.

அந்த வரிகளுள்ள கவிதைகளின் புள்ளிவிவரம் என்றது.

ஓ, அப்போது நீ புதிதாக ஒரு பாட்டு பாரதியார் மேலே இட்டுக்கட்டேன் 

என்றேன். திரையில் வந்த வரிகள்:-

"ஓடி விளையாடு பாப்பா என்றான்!

ஓய்ந்திருக்கலாகாது என்றுமே சொன்னான்!

சிந்து நதியின் மிசை

சேர நன்னாட்டு இளம்பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த

சுதேசியக் கவிஞன் - சுயபுத்திக்கவிஞன் - பாரதி!

பாரதி சின்னப் ..."

ஒகோகோ என்று இடைவெட்டிச் சொக்கா சொக்கா சொந்தக்கவிதைக்கு நன்றி! அது போகட்டும். என்று சப்ஜெக்டை மாற்றினேன் - தமிழனின் கவிதை மாண்பு, சிறப்பாக, ஜசைக்கும் கவிதையிலல்லவா உள்ளது! இசையும் ஓசையும் ஒன்று கலந்த நசைதானே விளங்கு தமிழின் விசையே! என்று எடுத்துவிட்டேன் பாருங்கள்,  ஒகோ, பாட்டாக வருங்கவிதை வேண்டுமா என்ற சொக்கன் சினிமாப்பாட்டுகளைத்தரத்தொடங்கிவிட்டது - ஸிச்சுவேஷனுடன்!

ஹீரோ நொடித்த மனநிலையில், செய்வதறியாது, கால் போன வழியில் கடுகிக்கொண்டே, கழுத்தை வெட்டிக் கையை நீட்டி முட்டியைச் சுழற்றிப் பாடும் தமிழ்ப்பாட்டு

“ உலகமென்பது ஓரிடமென்றால் பலகணி வழியே தெரியாதோ? - ஏன்,

மனிதனென்பவன் ஓர்குலமென்றால் மானமென்பது புரியாதோ?          

                                                                                                    (உலக)

கண்ணைப்போலக் காத்தேன் அவளை!

கண்ணுக்குள் கைவிரல் விட்டுவிட்டாய்!

கட்டழகுத்தமிழ்ப் பெட்டகமவளைத்

தொட்டுவிட்டாய்! கனி பிட்டுவிட்டாய்! - ஐயோ!

தொட்டுவிட்டாய்! கனி பிட்டுவிட்டாய்!                                          

                                                                                                    (உலக)

ஸிந்தனையென்பது ஸிறகானால் அங்கு நிந்தனை யென்பது நீளிரவே!

நிந்தனையென்னுமந் நீளிரவில் நான் நேரிடை ஸொல்வேன் ஒரு வாக்யம்!

- ஆஹா - நேரிடை ஸொல்வேன் ஒரு வாக்யம்!

- ஓஹோ - நேரிடை ஸொல்வேன் ஒரு வாக்யம் !

அட போடா - நேர்ந்துவிட்டால் அது என் பாக்யம் ! ”

அடுத்து -

மறந்துபோனது நினைவுக்கு வந்து மருகும் மன்னன் (துஷ்யந்தன் தான், வேறு

யார்) மலங்க மலங்க விழித்துக்கொண்டு மன்றத்து அரியணையில் மண்டி யிட்

டமர்ந்து பாடுகிறான்:

- - - - - [ஆண்குரல் voice over] - - - -பின் மன்னன் குரல் அ-து பின்னணிப்பாடகர் குரல்:

“ ஓஹோஹோ . . . . ஏஹேஹே . . . .

அரணைக்கு மறதி . . . அதன் வாலில்!

நரனுக்கு மறதி அவன் நாவில்!

- சுரணை கெட்டவன் இருந்தென்ன?

- சூடு கெட்டவன் போயென்ன?

[பின்னிசை: ஹுர்ராஅ ... ஹுர்ராஅ ... ங்ர்ர்ர் ... அ இ உ ண் ... ஐ ... ஔ .... !]

 மீண்டும் மன்ன(னுக்குப்பின்னணிப்பாடக)ர் குரல். எதிரே சபையில்

நாட்டியமென்ன, கழைக்கூத்தென்ன என்று மந்திரியார் மன்னனின் மயங்கிய

மனநிலையைத் தேற்றுவதற்காகச் செய்துள்ள ஏற்பாடுகள் இயங்குவதை

லட்சியம் செய்யாமல் மன்னன் அரற்றுகிறான்:

“ கரணந்தப்பினால் மரணம்! - ஓ!

கருமந்தப்பினால் ஜனனம்!

தரணியிலே நியதியடா !

தரும சங்கடச் சகதியடா!

[ஓ ஒ ஒ ... ஓ ஒ ஒ ... [எனப்பெண்குரல்]

ஆடவந்தவன் ஆடுகிறான் !

பாட வந்தவன் பாடுகிறான் !

ஓட எண்ணினால் ஓடுகிறான் - அவனைத்

தேட எண்ணிக் கால் தேயாதே! - ஓ!

தே...ஏ..ட எண்...ண்...ணிக் க-அ-ஆல்ல்ல்ல் தே ஏ ய அ ஆ தே எஎ எ ..........

                                                                                                [அரணைக்கு]

என்ன சொக்கன்! அந்தக்காலத்துத் திரைப்படப் பாட்டுதான் சொல்வாயா?

ஜந்த ஜன்றைய காலத்துக்கு வா - மக்களுக்காக ஜயற்றும் மன மகிழ் பாட்டு,

ஜயல் தமிழில் மக்கள் ரசிக்கும் மதி உயர் பாட்டு - என்றேன்.

அவ்வளவுதான். பின்வரும் வரிகளைத் திரையில் மூலைக்கு மூலை போட்டுத்

தோற்றியது. வரிகளை மட்டும் தருகிறோம். ஸிச்சுவேஷன்? அட இது கூடவா சொல்ல

வேண்டும் - எந்தெந்த வரிகளுக்கிடையில் கழுத்தைச் சுளுக்கிக் கையைச்

சொடுக்கிப் புடுக்கைக் குலுக்கிக் காலை விளுக்கிடும் இளைஞரும், எந்த வரி

களில் சிணுங்கிக் குலுங்கி, நடனம் என்று என்னவெல்லாமோ காட்டும்

இளைஞிகளும் மாறி மாறி அணைக்கட்டு அடிவாரங்களிலும் ஐந்துநட்சத்திர

ஓட்டல் தாழ்வாரங்களிலும் புகுந்து புகுந்து குதிக்கிறார்கள் என்று கூட

ஊகிக்கத் தெரியாத அ-ரசிக முண்டங்களுக்க்கில்லை

இக்கவியரஙக் காணிக்கை! சரி. வரிகள்:

 “ கங்கைக்கரை - - -

- - - கல கல கல கல -

சங்கத்தமிழ் - - - -

சல சல சல சல -

ஆ - வாராங்கோ ஒரங்கட்டு!

தாராங்கோ! சேலை தொட்டு !

இன்னாடீ அசிங்கம் - - - முருங்கக்கா புசிங்கம் !

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு

  "     "      "      "     "      "      "     "   

  "     "      "      "     "      "      "     "    

   அவள் இடை! அளபெடை!

அவள் தொடை! தமிழ் நடை!

புதிர் விடை! மெது வடை!

ஆ - - - ஆ - - -[கோரஸாகக் குரல்கள் ஊளைச்சங்கு போல்    ஏ...றி  ஜறங்......க]

- - - ஆ- - - தயிர்வடை!

எங்கள் வளநாட்டில் பொங்கு தமிழ்ப் பாட்டில் தொங்கட தொம்மாலா!

சேர வளநாட்டில் செப்பு தமிழ்ப் பாட்டில் ஜிங்கிடி ஜிங்காலா!

சோழ வளநாட்டில் சொக்கு தமிழ்ப் பாட்டில் ஜும்மண ஜுக்காலா!

[பின் ஒரே சீரான ஒலிமட்டத்தில்]

சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்புச்

சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்புச்

சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்புச்

     "                    "                 "                    "

      "                    "                 "                    "

              [ நூறு முறைக்குப் பின்னும் ஓயாமல் ]

      "                    "                 "                    "

      "                    "                 "                    "    

என்ன சொக்கா என்ன சொக்கா என்ன இது என்ன இது என்று நான் அலறி

என்னென்னவோ 'கண்ட்ரோல் கீ' முதலான கீகளைத் தட்டி அமுக்கி என்னவெல்லாமோ பண்ணிப்பார்த்தேன். பலனே இல்லை.

சொந்தக் கணி நிற்காமல் நிறுத்தாமல்

"சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்பு"

என்று வரியின் கீழ் வரியாய் அடித்துக்கொண்டே போயிற்று!

கடைசியில் டெஸ்பரேட்டாக நான் எல்லாக் கீகளையும் சேர்த்து

அழுத்தியதும், திரையிலே ஓர் ஆயிரவாட்டு பல்பு ஃபியூஸ் போனது மாதிரி

கண்ணைக் குருடாக்கும் ஒளிவீச்சுடன்,

“ இயல் தமிழ் இதுவே!

இதுதாண்டா கவிதை! ரசி!"

என்று பளிச்சிட்டுவிட்டு - ஐயகோ என் சொல்வேன் - கம்ப்பியூட்டரின்

கபாலம் வெடித்து புஸ்ஸென்று புகை மண்டலத்தில் - - -

எல் - - - லாம் போச்சு!

ஓம் தத் ஆஸீத்!

*****************************************************************************

2012/12/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன்   .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது


அன்புள்ள திரு நடராஜன்,

இவ்வளவு விரைவில் படங்களையும் செய்தியையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.  நான் நாளை வீடு திரும்பியதன் பிறகு, கொஞ்சம் எடிடிங் வேலைகளைச் செய்த பிறகே என்னுடைய பதிவை யூட்யூபில் ஏற்ற முடியும்.  அதற்கு ஓரிரு நாள் பிடிக்கலாம்.  (கிட்டத்தட்ட நான்கு மணி நேர நிகழ்ச்சி பதிவாகி உள்ளது.  இடையில் தலைவர் அல்லது பேச்சாளர் செல்ஃபோனில் பேசுவதை எல்லாம் நறுக்க வேண்டியிருக்கும். செய்து வலையேற்றுகிறேன்).

உங்களைக் குறித்த அறிமுகம் அங்கே தெரிவிக்கப்படாமல் போனது தற்செயலே.  நேரநெருக்கடி ஏராளமாக ஆகி விட்டது.  காலை 10.30க்கு நிகழ்ச்சி தொடங்கியது.  ஐந்தே கவிஞர்கள் படிப்பதற்கு, ஒருமணிநேரம்தான் ஆகும்.  ஆனால், இதற்கே மதியம் இரண்டு ஆகிவிட்டது.

எல்லோரும் சுய அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பிருந்தது.  எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  ரமணனுக்குக் கிடைக்கவில்லை.  கோபாலுக்குக் கிடைக்கவில்லை.  நிகழ்ச்சியின் நேர நெருக்கடி அவ்வாறு ஆகிவிட்டது.  ஒவ்வொருவரயும் தனித்தனியாக சுய அறிமுகம் செய்துகொள்ள நேரம் கொடுத்ததே எண்பது சதம் நேரத்தை விழுங்கிவிட்டது.  அப்படியும் ஒரு இருபது பேரால்தான் பேச முடிந்தது.  இன்னும் இருபது, இருபத்தைந்துபேர் அறிமுகப்படுத்தப்படவில்லை.  அல்லது, சுய அறிமுகமாய் ஏதும் பேச நேரமில்லை.  

ஆகவே, வருத்தப்பட வேண்டாம்.  இதுபோன்ற சம்பவங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் எப்போதும் நடைபெறும் ஒன்றுதான். சந்தவசந்தக் கவியரம் (மண்ணுலகில்) மறுபடியும் நடக்கும்.  உங்கள் பெயரைத் தலைவர் இலந்தையே அறிமுகம் செய்வார்.  

நீங்கள் உடனக்குடன் படங்களை இட்டு, செய்தியையும் சொன்னதற்கு நன்றி.  (ஆனால், என் படம் ஒன்றைக்கூட போடவில்லையே!  ம்ஹூம்.  நான் வருத்தப்பட மாட்டேன். நீங்கள் இவ்ளவு தூரம் செய்ததே பெரிய செயல். நன்றி.)

ஒலி, ஒளிப்பதிவுகள் என்னிடம் உள்ளன.  நான்கு  மணிநேர நிகழ்ச்சியையும் ஓடவிட்டால்தான், நறுக்க வேண்டியதை நறுக்க முடியும்.  எனவே, இரண்டுநாள் பிடிக்கக்கூடிய வேலை இது.  அதுவும், நாளை வீடு திரும்பிய பின்னர்தான் தொடங்க முடியும்.

அன்பர்கள் அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கவியரங்கம் மிக அற்புதமாக நடந்தது.  இலந்தையின் ஏற்பாடுகள் விரிவாக இருந்தன.  ஓடு ஓடென்று ஓடவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், என்னால் எதையும் செய்யமுடியவில்லை.  வாக்களித்தபடி, கோபாலுடன் கல்பாக்கத்துக்குக்கூடப் போக முடியவில்லை.  இரண்டு மணி அளவில் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம்.  இழப்பு எனக்கே.

நகுபோலியனார் அங்கே படித்த முழுக் கவிதையையும் இங்கே இட்டால், நிதானமாகப் படித்து ரசிக்கலாம்.  
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

nahupolianic verses.pdf

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 2:22:58 AM12/10/12
to santhav...@googlegroups.com


2012/12/9 Girija Varadharajan <girijavar...@gmail.com>

இல்ல மடைந்தோர்க் கிலைந்தைக் குடும்பத்தார் 
நல்ல விருந்தளித்தார் நாட்ட்முடன். - எல்லையறு 
பாட்டின்பம் மாந்திப் பரவச முற்றனர் 
கூட்டமாய்  ஆங்குக்  குவிந்து. 



-- மேற்படி வெண்பாவை இன்னும் செம்மையாக்கிப் போடலாமே!!,
.
 இல்லம் அடைந்தோர்க்(கு) இலந்தைக் குடும்பத்தார்
 நல்ல விருந்தளித்தார் நாட்டமுடன்..-எல்லையிலாப்
 பாட்டின்பம் மாந்திப் பரவசம் உற்றார்கள்
கூட்டமாய் ஆங்குக் குவிந்து

. செப்பலோசை இப்போது எவ்வளோ அழகாய்க் குந்திக்கினது பாத்தீங்களா?
 யோகியார்

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 2:34:57 AM12/10/12
to santhav...@googlegroups.com
அப்படிப்  போடும் கவிஞர்!!- உங்க
..அற்புதச்சொல் லில்நீர்  சுவைஞர்!
செப்படி வித்தைகள்  காட்டுறீர்! -சந்தச்
..சிமிழினில் முத்துக்கள் நீட்டுறீர்!
 யோகியார்--10-12


2012/12/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 2:39:37 AM12/10/12
to santhav...@googlegroups.com
ஆம் பலர் யார் என்றே தெரியவில்லை!!
ரொம்ப வெள்ளை?யாக இருக்காரே அவர்தான் சிவசிவாவோ?
 அடுத்து வரும் அந்த அழகிய மீசைக்கவிஞர் யார்?
 இந்த சமயத்தில் யான் மும்பையில் உள்ளேனே என் நங்கையுடன் நங்கையில் இல்லையே
 எனும் ஏக்கம் எனுள் நசுங்கியது
 யோகியார்

2012/12/10 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 2:51:39 AM12/10/12
to santhav...@googlegroups.com
அந்த என்னத்தைச் செய்துவிட்டான்... எனும் உங்க கவியை ரொம்பவும் ரசித்தேன்.. பலே பேஷ் போட்டேன்..
 அத்துடன் நீங்க சபாஷ் பெற்று அமர்ந்திருக்கலாமோ..!
 அதற்கப்புறம்  வந்த நீள நீளவரிகள்? ஜோக்கா!
 அங்கே ஆடியன்ஸ் எப்படி ரசித்தனர் என்பதைத் தயவு செய்து சொல்லோணும்!
 யோகியார்


2012/12/10 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 3:21:53 AM12/10/12
to santhav...@googlegroups.com
அடடா! அற்புதம் அழகு// ஒரே தூக்காகத் தூக்கிவிட்டய் ஹரீ!
யோகியார்

2012/12/9 Hari Krishnan <hari.har...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 3:26:21 AM12/10/12
to santhav...@googlegroups.com
ரொம்ப அழகு உங்க கவி.. எழிலவன்! இப்போதுதான் புதிதாக அதைப்படிக்கின்றேன்.
 மகிழ்ந்தேன்..வாழ்க.. என்ன செய்ய? சுதா அழைப்பின் பேரில் அவள் புக் செய்த விமானத்தில் திசம்பர் 1 அன்றே மும்பை வந்துவிட்டேனே!,(டோமே..)-
 யோகியார் வேதம், மும்பை

2012/12/9 R. Vaidyanathan Vaidyanathan <kmezi...@gmail.com>
அன்புள்ள சந்தவசந்த அன்பர்களுக்கு பாரதி எழிலவனின் இனிய்

துரை.ந.உ

unread,
Dec 10, 2012, 3:31:39 AM12/10/12
to santhav...@googlegroups.com
ஆசான்களுக்கு என் முதல் வணக்கம் 
 வார்த்தைப் பேராழியுள் சொற்புயலும் வீசிய இடத்தில் அமைதியாய் உண்டு மகிழ்ந்து வந்திருக்கிறேன் ...
என்னிடம் சொல்ல வார்த்தைகள் ...ஏன் எழுத்துகள் கூட இல்லை :)) என்னாலானது ... 
சில காட்சிகளைப் பகிர்ந்து கொள்வேன் இங்கு ...

Inline image 2

இவரை நாங்களெல்லாம் முன்னிருந்து பார்த்திருந்தோம்...
அவனே பின்னாலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் :)


--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

BeFunky_DSC_1823.jpg

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 4:23:11 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படங்களும், காணொளிகளும் இருப்பதால் சற்றே கால தாமதமாகிறது.  பொறுத்திருங்கள்.
 
இப்போது படங்களில் இருப்பவர் பற்றி....
 
 
 
----- Original Message -----
Sent: Sunday, December 09, 2012 7:29 AM
Subject: Re: சந்த வசந்தம் சந்திப்பு

Inline image 1
நடுவில் கருப்பு(கரும்பச்சை) சட்டையணிந்து தாடி/மீசையுடன் சாட்சாத் நானே!  என் வலதுபுறம்
புலவர் இராமமூர்த்தி,  இடதுபுறம் அற்புதக் கவிஞர் வ.வே.சு.  என்னுடைய பின்னால் அமர்ந்து
கவிதை வெள்ளத்தில் தேனில் விழுந்த தும்பி போல கிறங்கிக் கிடப்பவர் வேறு யாருமில்லை;
ஆசுகவி ஆதவமால் (வேற யாருமில்லைங்க கவிஞர் சிவசூரியார்)


Inline image 2
முதலில் ஹரியண்ணா அடுத்து கலர்ப்பட கதாநாயகன் போல, ஜிலுஜிலுவென்று டிசைன் சட்டையில்
இருப்பவர்தாம் இந்த கலந்துரையாடலுக்கு வழிகோலியவர்: சிங்கை குமார்.  அடுத்து டீ-சர்ட்டில்
இருப்பவர் கவிஞர் வீரராகவன்.  சிங்கை குமாருக்கு பின்னால் கோடு போட்ட சட்டையுடன் இருப்பவர்
அசோக் சுப்ரமணியன். சிங்கை குமாரின் தலைமேலே எட்டிப் பார்ப்பவர் அ. இராஜகோபாலன். திருப்பதிக்கு
போய்விட்டு பை நிறைய பஞ்சாமிர்தத்துடன் வந்து எல்லோரையும் இனிப்புக் கடலில் ஆழ்த்திய்வர்
அசோக் சுப்ரமணியத்திற்குப் பின்னால்; அரவிந்த் (எம்.எஸ். தமிழ்)

Inline image 3
இரண்டு வேலவர்கள்:  அசோக் சுப்ரமணியன், சந்தர் சுப்ரமணியன்

Inline image 4
கவிஞர் கோபால் அவர்கள் அவருடைய இடப்பக்கத்தில், வாய் நிறைய சிரிப்புடன் இருக்கின்ற சின்னபிள்ளை
யார் தெரியுமோ? அவர்தான் சிவகவி சிவசிவா.

அன்பன்
DSC03954.JPG
DSC03956.JPG
DSC03957.JPG
DSC03958.JPG

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 4:35:28 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள சந்தவச்ந்தம் அன்பர்க்கு
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
புதுவையில் 8/9/10/11 ஆகிய நான்கு நாட்கள் பாரதிவிழா, அரசுப் பணிகள், எல்லாவற்றையும் விலக்கிவிட்டு, சந்தவசந்தம் விழாவில் கலந்தே தீர வேண்டும் என்ற ஒரு முனைப்புடன்,  தனியாக என்னுடைய மகிழுந்திலே புறப்பட்டு வந்தே சேர்ந்துவிட்டேன் (குடும்பத்துடன் தவிர்த்து, இதுவரை நான் மகிழுந்திலே தனித்து பயணப்பட்டதில்லை, காரணம், இரவு 7/8க்கு மேல் சரியாக கண்பார்வை கை கொடுக்காததால் (அஸ்டிக்மேட்டிசம் பிரச்சனை).
 
இலந்தையார் இல்லத்து விருந்தோம்பல் வெகு ப்ரமாதம்; வெகு ப்ரமாதம்.  என்னே சுகம் என்னே சுகம்!
 
அடுக்கி வைத்த பலாப்பழ வறுவல் தட்டுகள் என்ன!
கொட்டி வைத்த உப்பிட்ட பாதாம் பருப்புத் தட்டுகள் என்ன!
நிரப்பி வைத்த தட்டைகளுடன் (எங்களூரில் எள்ளடை என்போம்) தட்டுகள் என்ன!
 
குடிப்பதற்கு நிறைய பாட்டிலகள்; நெகிழ்மக் கோப்பைகள் (!!!!!!!!!!!)  (கற்பனை கன்னாபின்னாவென்று ஓடவிட வேண்டாம்!!!!!!!!!!.)
மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், கனிம நீர்.
 
இன்னும் வரும்
இராஜ.தியாகராஜன்.
 
 

Inline image 1
முதலில் இருக்கும் இருவரையும் நான் அறிமுகம் செய்து கொண்டேன்; ஆனால் பாழும் மறதி; மற்றவர்
யாராவது சொல்லுங்களேன்.  திருநீற்றுப் பட்டையுடன் இருப்பவர் கவிஞர் பாரதி எழிலவன்.

Inline image 2
அ. இராஜகோபாலனும்,  அர்விந்தும் (எம்.எஸ்.தமிழ்)

Inline image 3
உள்ளம் நிறைய கவிதை; வாய்நிறைய சிரிப்புடன், இலக்கிய வித்தகர் ஹரியண்ணா.
Inline image 4
சிவனருட்கவி தங்கமணி அம்மையார்.


 
DSC03959.JPG
DSC03960.JPG
DSC03962.JPG
DSC03963.JPG

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 4:55:21 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள சந்தவசந்தம் அன்பர்க்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
எல்லொரும் விருந்திற்குப் பின்னர் தான்  வாயூறும் தாம்பூலம் தருவர்.  இங்கே பாருங்கள்.
 
விருந்தின்முன் குடந்தையின் வெற்றிலைக்குச் சோடியென
விருவிருக்கும் சுண்ணாம்பும் மாயவரம் நெய்ப்பாக்கு
விருவிருக்க தந்தாரே! வெண்நெகிழ்மத்  தட்டதனில்;
இருக்கிறது விருந்தென்று எல்லொரும் அறிந்தோமே!
 
  
 
 
 

Inline image 1
அசோக் சுப்ரமணியம் கணோளிக் கருவியுடன்.

Inline image 2
தங்கமணி அம்மையாரின் புதல்வி திருமதி உஷா டி.வி.சங்கர்.

Inline image 3
கவிஞர் கோபாலுடன் வெள்ளன்னத் தூவியென நரைத்திட்ட தாடியுடன் இசைக்கவி இரமணன்.

Inline image 4
முன்சொல்லாத இருபெண்மகளிர் இலந்தையாரின் இல்லப் பெண்மணிகள்.  எப்பேர்ப்பட்ட உதவி
அவர்களுடையது!  இத்தனை பேர்க்கு உணவு பரிமாறி, வயிறாறச் செய்து, அவ்வப்போது பானங்கள்,
நொறுக்குத் தீனி இடையிடையே அளித்து, சும்மா சொல்லக் கூடாது. நின்று கொண்டு பானங்கள் வேண்டுமா
என்று விசாரிப்பவர் சுந்தரி அவர்கள்.  கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர், இலந்தையாரின் துணைவியார்
பானுமதி அம்மையின் தங்கை ஜெயஸ்ரீ, அவருக்கு அருகில் அவர்தம் துணைவர் போகன். மீண்டும் ஆண்கள் பற்றி
முதலில் இருப்பவர் டி.வி.சங்கர் தங்கமணி அவர்களின் புதல்வர், அடுத்து கவிஞர் பாரதி எழிலவன், அடுத்து
கோபால், அடுத்து எல்லோரையும் இசைவெள்ளத்தில் ஆழ்ந்த்திய இசைக்கவி இரமணன்.

Inline image 5
தத்தரிகிட தத்தரிகிட என்று பாட்டு படிக்கிறார் இலக்கியவித்தகர் ஹரியண்ணா.

 
DSC03964.JPG
DSC03966.JPG
DSC03970.JPG
DSC03973.JPG
DSC03967.JPG

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 4:58:20 AM12/10/12
to santhav...@googlegroups.com
மீண்டும்
பானகத் துரும்பாக, இராஜ.தியாகராஜன்.
 

Inline image 1
கவிஞர் வ.வே.சு பாட்டுப் படிக்கவில்லை;  வேட்டுப் வெடிக்கிறார்.


Inline image 2
சந்தவசந்த அன்பர்கள் பலரையும் ஒரு சேர கண்டதில் நெஞ்சு கொள்ளா மகிழ்ச்சி இலந்தையாருக்கு.

 
DSC03971.JPG
DSC03972.JPG

Hari Krishnan

unread,
Dec 10, 2012, 5:12:30 AM12/10/12
to santhavasantham


2012/12/10 Raja.Tyagarajan <thia...@dataone.in>

நின்று கொண்டு பானங்கள் வேண்டுமா
என்று விசாரிப்பவர் சுந்தரி அவர்கள்.

பாரதி கலைக்கழக அந்நாள் பொருளாளார், அமரர் கவிமாமணி ஐயாறப்பன் (பஞ்சநதீசன்) அவர்களுடைய மகள்.  திருவான்மியூரிலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.  கலைக் கழகக் கவியரங்கள் எல்லாவற்றிலும் உபசரிப்பு, அந்த நாளிலிருந்தே இவர்களுடைய பங்குதான்.  பாவாடை சட்டை சிறுமியாக இருந்த நாள் முதலாகவே. :)

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 5:17:34 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள சந்தவசந்தம் அன்பர்க்கு
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
விரைவில் படங்களையும் காணொளிகளையும் சற்றே மாறுதல்களுடன், வலையேற்றுகிறேன்.
 
உணவு இடைவேளைக்குப் பின்னர் அறிமுக படலம் மீண்டும் தொடர்ந்த போது, நான் பாடிய கவிதை (நெசமாலும் தமிழ் வணக்கத்தைப் பாடினேங்க!!)
கீழே!
 

தமிழ் வணக்கம்
கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தைக் கூட்டி,
அடிவானம் தீட்டு மழகெழிலைச் சேர்த்து,
படிக்கின்ற செம்மரபுப் பாட்டே! தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!

அவை வணக்கம்.
தெள்ளுதமி ழினழிப்போர் சிதறிவிட வெடித்தெழுந்து
அள்ளுகின்ற அழகுச்சீர் அடுக்கிவிட்ட அடியெடுத்து
துள்ளுஞ்சொல் தொடுத்தவரி சொடுக்கிவிடும் வசந்தமவை
உள்ளத்தால் வணங்குகிறே னோர்ந்து!

நானும் தமிழன்தான்
சொல்லரசுச் சித்தன்;  துயிலிலும் பம்பரமாய்
வல்லரசை ஆட்டிவைத்த வம்பன்! கவிகொண்டு
நல்லவரைச் சொக்கவைத்த நண்பன்! தமிழ்மொழி
கொல்பவரை கண்டால் கொதித்தெழுந்த கொம்பன்!
தேர்ந்தநறுஞ் செங்கனியாய்த்
தேனாய் அமிழ்தாய்
நேர்த்திமிகு பாப்புனைந்த நேர்கவியாம் பாரதியை
சீர்த்தமிழின் சாரதியைச் சேந்திய நற்புதுவை
சேர்ந்திட்ட ஈகவர சென்றும் தமிழன்தான்.

தீமை எரிக்க வந்த தீக்கவியே
ஆத வனாயொளி வீசு(ம்) அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் சாற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவிப் பேச்சுரைத்தாய் -

வீதி யுலாவரும் தேர தனைநிகர் வேந்தனென,
மாத வமாய்வளர் ஆற்ற லுடந்தமிழ் மாந்தியதால்
காத லனாய்நெடு மால னிடம்மையல் காட்டியதால்,
மேதி னியேபுகழ் கோகி லமாய்கவி மீட்டிவிட்டாய் -

ஏதி லியாயழும் ஏழை களுக்குணர் வேற்றிடவே
சூது களையனற் சூரி யனாய்நிதம் சுட்டெரிக்கப்
பூத லமும்புகழ்  பாடி  டவேபல போர்ப்பரணி
வேத மதைசொலும் பாக்க ளெனுங்கவி வேட்டெடுத்தாய்

தீமை யெரிந்திட பாக்க ளியற்றிய தீக்கவியே!
சீமை யளந்திட வேண்டிய நூதனச் சீர்க்கவியே!
நாமி னிதுஞ்சிடக் கால மிலையென்ற நேர்க்கவியே!|
பூமி யதன்கொடுங் கோல முரைத்திடும் போர்க்கவியே!

அன்பன்

Subbaier Ramasami

unread,
Dec 10, 2012, 5:31:11 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்பர்களே,

சந்தவசந்தம் சந்திப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஒருவாரமாக அதே சிந்தனைதான்.
மூன்றுவீடுகள் தள்ளி சாப்பாடு தயாரித்துக்கொடுக்கிறார்கள். அவர்களிடம்
ஏற்பாடு செய்தேன். அவர்கள் கொடுக்காத பாயசம், பப்படம், பச்சடியெல்லாம்
வீட்டிலேயே தயார்செய்தோம். அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம்
பாதாம்கீராக மாறியது. கலந்துகொள்பவர்கள் அவ்வப்பொழுது கொறிப்பதற்காக,
பலாக்காய் வறுவல், காரசாரமான தட்டை, ரோஸ்டட் பாதாம், மாம்பழ ஜூஸ்,
கொக்கோகோலா போன்றவை வைக்கப்பட்டன. மொட்டைமாடியில் கொட்டகையின் கீழ்
சுற்றிலும் மரங்கள் தோப்பாகக் காட்சியளிக்க வேர்வை அடிக்கடி
எட்டிப்பார்க்காத சூழலில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருக்கைகள், மேசைகள் விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வேண்டுமென்றே(வேண்டாமென்றே) ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யவில்லை.

சந்தவசந்தம் லோகோவோடு நிகழ்ச்சிபற்றிய அறிக்கை வேண்டும் என்று முதல்நாள்
மாலையில் தான் இராஜ தியாகராஜனிடம் சொன்னேன். அவர் மிகச் சிறப்பாக அதைத்
தயாரித்துக்கொண்டுவந்தார். 9மணிக்கெல்லாம் அவர் வந்துவிட்டார்.கவிஞர்
கர்ர்த்திக் வழிகாட்டி அட்டைகள் தயாரித்து அங்கக்கே பொருத்தியிருந்தார்.
மேடை அமைப்பு போன்ற பல ஏற்பாடுகள் அவரால் செய்யப்பட்டன . ஹரிகிருஷ்ணன்
ஒலி ஒளிப்பதிவுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக
நடத்திக்காட்டினார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இரமணனும்
சிவசூரியும் வந்திருந்தனர். அன்று மாலை காஞ்சீபுரத்தில் சொற்பொழிவு
நிகழ்ச்சியிருந்தும் புலவர் இராமமூர்த்தி அவர்கள் முதலிலேயே
வந்துவிட்டார். கவிமாமணி சவர்கர்லால் தூத்துக்குடியிலிருந்து வந்த
முத்து நகர் எஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் அவ்ர் தமது துணைவியாருடனும்
மூட்டை முடிச்சுகளுடனும் நேரடியாக அரங்கிற்கு வந்துவிட்டார். தங்கமணி
அம்மையார் தனது மகளுடனும் மருமகனுடனும் வந்தார். சிவ சிவா, வ.வேசு,
சந்தர் சுப்ரமணியம், அஷோக் சுப்ரமணியம் பா வீரராகவன், நகுபோலியன், மிஸ்
தமிழ், அரவிந்த. சா.கி.நடராஜன், சுந்தர்ஜி , சிங்கைக் குமார். எழிலவன் ,
அப்பன் ராஜகோபாலன் ,கல்பாக்கத்திலிருந்து கோபால் .ஆகியோர் வந்தனர்.
முதல்நாள் மாலையில் ஹரிமணிகண்டன் அவர்கள் கவிஞர்களுக்குக் கொடுப்பதற்காக
ஆன்மீக உரைகள் அடங்கிய 20 குறுந்தகடுகள் கொண்டுக் கொடுத்தார். ஞாபக
மறதியால் இன்னும் சிலரின் பெயர் விடுபட்டிருக்கலாம். சுட்டிக்காட்டினால்
சேர்த்துக்கொள்ளலாம். மதுரபாரதிக்கு வேறு நிகழ்ச்சி
ஏற்பாடாகியிருந்ததால் தான் வரஇயலாது என்று முன்னமேயே தெரிவித்துவிட்டார்.
நிரஞ்சன் மட்டுமே நிச்சயமாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை.
அரங்கின் தொடக்கத்திலேயே பழனிப் பஞ்சாமிர்தம் வந்துவிட்டது. ஹோட்டலில்
ஆர்டர் செய்யப்பட்டிருந்த மசால்வடையும் வந்து சேர்ந்தது.. துரை
தூத்துக்குடியிலிருந்து காரை ஒட்டிக்கொண்டு வதுகொண்டிருந்தார். 2மணி
அளவில் வந்து சேருவார் என்று கணித்துவைத்திருந்தார். அவசரமாக வந்து சேர
வேண்டு மென்பதற்காக அவர் காரை வேகமாக ஓட்டாமல் வரவேண்டுமே என்ற கவலை ஒரு
மூலையில் உறுத்திக்கொண்டிருந்தது.
காலையில் முன்னதாக வந்தவர்களுக்க்ச் சுவையான உப்புமா வழங்கப்பட்டது.

சவகர்லால் வந்து சேர்ந்த்வுடன் கவியரங்கத்தைத் தொடங்கலாம் என்ற
எண்ணத்தில் முதலில் அறிமுக நிகழ்ச்சியை நடத்தினோம். இசைக்கவி ரமணன்
அருமையாகக் கடவுள் வாழ்த்துப்பாட சிங்கைக்குமார் வரவேற்பளித்தார். பிறகு
நான் சந்தவசந்த வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தேன். பிறகு அறிமுக உரை
தொடங்கியது. ஒவ்வொருவரும் தம்மைப்பற்றியும் சந்தவசந்தத்தோடு
தனக்கிருக்கும் தொடர்பு பற்றியும் எடுத்துரைத்தனர். நேரம் 12 மணியை
எட்டிவிட்டது. சவகர்லால் வந்து சேர்ந்துவிட்டார். எனவே
வந்திருந்தவர்களின் அனுமதியோடு அறிமுக நிகழ்ச்சியை இடையில்
நிறுத்திவிட்டுக் கவியரங்கத்தைத் தொடங்கினோம். சர்க்கரைவியாதிக்காரகள்
எவரேனும் இருந்தால் சாப்பிடுவதற்கு நேரமாகிவிடக்கூடாதே என்ற கவ
தவறவிட்டுவிடக்கூடாதே லை வேறு. நொறுக்குத்தீனி இருந்ததால் அவர்கள்
அதன்மூலம் பசியை ஓரளவு தணித்துக்கொள்ளாலாம் என்றார் ஒருவர். சாப்பாடு
12-30 மணிக்கே தயாராக வந்துவிட்டது அவசரமாகச்செல்லவேண்டும் என்று சிலர்
சொன்னதால் அவர்கள் கவியரங்கைத் என்பதற்காகக் கவியரங்கைத் தொடங்கினோம்.


On 12/10/12, Raja.Tyagarajan <thia...@dataone.in> wrote:
> அன்புடையீர்,
> இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
>
> நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படங்களும், காணொளிகளும் இருப்பதால் சற்றே
> கால தாமதமாகிறது. பொறுத்திருங்கள்.
>
> இப்போது படங்களில் இருப்பவர் பற்றி....
>
>
>
> ----- Original Message -----
> From: sk natarajan
> To: santhav...@googlegroups.com
> Sent: Sunday, December 09, 2012 7:29 AM
> Subject: Re: சந்த வசந்தம் சந்திப்பு
>
>
>

> நடுவில் கருப்பு(கரும்பச்சை) சட்டையணிந்து தாடி/மீசையுடன் சாட்சாத் நானே!
> என் வலதுபுறம்
> புலவர் இராமமூர்த்தி, இடதுபுறம் அற்புதக் கவிஞர் வ.வே.சு. என்னுடைய
> பின்னால் அமர்ந்து
> கவிதை வெள்ளத்தில் தேனில் விழுந்த தும்பி போல கிறங்கிக் கிடப்பவர் வேறு
> யாருமில்லை;
> ஆசுகவி ஆதவமால் (வேற யாருமில்லைங்க கவிஞர் சிவசூரியார்)
>
>
>

> முதலில் ஹரியண்ணா அடுத்து கலர்ப்பட கதாநாயகன் போல, ஜிலுஜிலுவென்று டிசைன்
> சட்டையில்
> இருப்பவர்தாம் இந்த கலந்துரையாடலுக்கு வழிகோலியவர்: சிங்கை குமார். அடுத்து
> டீ-சர்ட்டில்
> இருப்பவர் கவிஞர் வீரராகவன். சிங்கை குமாருக்கு பின்னால் கோடு போட்ட
> சட்டையுடன் இருப்பவர்
> அசோக் சுப்ரமணியன். சிங்கை குமாரின் தலைமேலே எட்டிப் பார்ப்பவர் அ.
> இராஜகோபாலன். திருப்பதிக்கு
> போய்விட்டு பை நிறைய பஞ்சாமிர்தத்துடன் வந்து எல்லோரையும் இனிப்புக் கடலில்
> ஆழ்த்திய்வர்
> அசோக் சுப்ரமணியத்திற்குப் பின்னால்; அரவிந்த் (எம்.எஸ். தமிழ்)
>
>

> இரண்டு வேலவர்கள்: அசோக் சுப்ரமணியன், சந்தர் சுப்ரமணியன்
>
>

> கவிஞர் கோபால் அவர்கள் அவருடைய இடப்பக்கத்தில், வாய் நிறைய சிரிப்புடன்
> இருக்கின்ற சின்னபிள்ளை
> யார் தெரியுமோ? அவர்தான் சிவகவி சிவசிவா.
>
> அன்பன்
> இராஜ.தியாகராஜன்.
>

Subbaier Ramasami

unread,
Dec 10, 2012, 5:41:05 AM12/10/12
to santhav...@googlegroups.com
அடடா, மிக முக்கியமான ஒருவரை விட்டுவிட்டேனே கனடாவிலிருந்து
வந்திருக்கும், ஓவியர், கவிஞர் பாடகர் , இசைக்கலைஞர் திரு ஆர். எஸ் மணி
தம் துணைவியாருடன் வந்திருந்தார்.

இலந்தை


On 12/10/12, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
>

Dr Subramanian

unread,
Dec 10, 2012, 5:52:48 AM12/10/12
to santhav...@googlegroups.com
கலந்து கொண்டதைப் போன்றே, அது பற்றிப் படிப்பதிலும் நண்பர்கள் புகைப்படங்களை ( அவர்கள் பாராத போது எடுக்கப்பட்டவை ) பார்ப்பதிலும், இன்னும் மக்ழ்ச்சி ஊறுகின்றது.இலந்தையார் வீட்டு விருந்தை நினைத்தால் நாவில் சுவைநீர் ஊறுகின்றது. சென்னையில் இனி இது ஆண்டுதோறும் தொடரப்போகும் நிகழ்வாக அமைய இருப்பதால், இதை எவ்வாறு நடத்தலாம் என்று யோசித்து முடிவெடுக்க நமக்கு இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய நேரம் இருக்கின்றது. எனினும் இதை மறவாமல் இருக்க, உங்கள் கவிதைப் பட்டாடையில் ஒரு மூலையில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
வவேசு

2012/12/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta





--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

துரை.ந.உ

unread,
Dec 10, 2012, 5:59:13 AM12/10/12
to santhav...@googlegroups.com
படம் :2 
மிக மிக முக்கியமானவர் இவர் ... சொல்லப்போனால் இவர்தான் இந்த நிகழ்வின் முதன்மையானவருக் கூட ..
ஒருவராய் இருந்து ..ஒரு குழுவினையே கட்டியாண்டிருக்கிறார் ..

இந்த ‘சந்த வசந்த சந்திப்பு’ அறிவியல் விதிகளை உடைக்கும் இடமாக இருந்தது என்பார்வையில் 

ஆம் ...
ஆணிவேரென்றால் அசையாமல் இருக்குமாம் ...
அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்...

ஆனால் 
அனைத்துக்கும் ஆதாரமாய் இருந்தவர் - இங்கு 
ஒரு நொடி கூட அமைதியாய் நின்று நான்பார்க்கவில்லை 

அவர்....அம்மா 
Inline image 1Inline image 2Inline image 3




2012/12/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta


BeFunky_DSC_1844.jpg
BeFunky_DSC_1845.jpg
BeFunky_DSC_1846.jpg

Subbaier Ramasami

unread,
Dec 10, 2012, 7:21:07 AM12/10/12
to santhav...@googlegroups.com
விடுபட்ட இன்னொருவர் முகவை இராம்குமார்

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 7:56:02 AM12/10/12
to santhav...@googlegroups.com
ஐயகோ ஐயகோ.. மிஸ் பண்ணிட்டேனே...அந்த  நொறுக்குத்தீனி லிஸ்டை..;;-

 “. சமையல்காரர்கொடுக்காத பாயசம், பப்படம், பச்சடியெல்லாம்எங்க 
வீட்டிலேயே தயார்செய்தோம். அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம்
பாதாம்கீராக மாறியது.  கலந்துகொள்பவர்கள் அவ்வப்பொழுது கொறிப்பதற்காக,
பலாக்காய் வறுவல், காரசாரமான தட்டை, ரோஸ்டட் பாதாம், மாம்பழ ஜூஸ்,
கொக்கோகோலா போன்றவை வைக்கப்பட்டன...”
..
. முன்னமேயே எனக்கு மடலில் ரகசியமாய்த் தெரிவித்திருந்தால் ஐயகோ! மும்பை 4000 ரூ டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு இலந்தையார் வீட்டுக்கு முதல் நாள் ராத்திரியே (கையில் இஞ்சியுடன்?)-டேரா போட்டு பானு அம்மையாரையும் காக்காய் பிடித்து ஒரு நொறுக்கு நொறுக்கியிருப்பேனே!..(ஆங்க்.. கொழுப்புங்காணும் உமக்கு..
 பையில்(வயிறு) சுகரை வைத்துக்கொண்டு நெய்யில் முந்திரி கேட்குதோ.. என்று இதோ எனக்குத் தெரியாமல் படித்துவிட்ட என் கஷ்டப்பட்டுத்தாலி கட்டிய நங்கை!(மாமி) பின்னாலிருந்து ஒரு கும்மாங்குத்து.. ஆ!
யோகியார்


2012/12/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

அன்பர்களே,

சந்தவசந்தம் சந்திப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஒருவாரமாக அதே சிந்தனைதான்.
மூன்றுவீடுகள் தள்ளி சாப்பாடு தயாரித்துக்கொடுக்கிறார்கள். அவர்களிடம்
ஏற்பாடு செய்தேன். அவர்கள் கொடுக்காத பாயசம், பப்படம், பச்சடியெல்லாம்
வீட்டிலேயே தயார்செய்தோம். அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம்
பாதாம்கீராக மாறியது.  கலந்துகொள்பவர்கள் அவ்வப்பொழுது கொறிப்பதற்காக,
பலாக்காய் வறுவல், காரசாரமான தட்டை, ரோஸ்டட் பாதாம், மாம்பழ ஜூஸ்,
கொக்கோகோலா போன்றவை வைக்கப்பட்டன. மொட்டைமாடியில் கொட்டகையின் கீழ்
சுற்றிலும் மரங்கள் தோப்பாகக் காட்சியளிக்க வேர்வை அடிக்கடி
எட்டிப்பார்க்காத சூழலில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருக்கைகள், மேசைகள் விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வேண்டுமென்றே(வேண்டாமென்றே) ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யவில்லை.

சந்தவசந்தம் லோகோவோடு நிகழ்ச்சிப
http://kaviyogi-vedham.blogspot.com/
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,2/682,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp.
Hotchips new HOTEL)-சென்னை-600115(போன்044- 6456 5979

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 8:03:15 AM12/10/12
to santhav...@googlegroups.com
ஆமாம்.. அந்த பானுமதி அம்மையர் ஏன் தலையில் கைவைத்துக்கவலையோடு நின்றுகொண்டிருக்கின்றார்..?
 ஓ புரிந்துபோச்சு..
எக்குத்தப்பாய் நிறைய 100 பேருக்கு.. எதிர்பார்த்து நொறுக்குத்தீனி முதலியன  தயார் செய்துவிட்டோமே..
 அவ்வளோ பேர் வரலையே.. அட! இந்த வேதம் யானை ஒருத்தர் வந்தால் கூட ஒரு பருப்பு, முந்திரி கூட மிஞ்சியிருக்காதே!(பழைய அனுபவம்!)-.... ஏமாத்திப்புட்டாரே இப்படி என்ர கவலையோ?
யோகியார்

2012/12/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
BeFunky_DSC_1845.jpg
BeFunky_DSC_1844.jpg
BeFunky_DSC_1846.jpg

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 9:54:02 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இத்துடன் முதல் பகுதி நிழற்படங்களை அளவு குறைத்து இணைத்துள்ளேன்.  முழு அளவில் வேண்டும் அன்பர்கள் தனிமடலில் தொடர்பு கொண்டால் அப்படத்தை தனியாக அனுப்பித் தருகிறேன்.  ஏனெனில்ல ஒவ்வொரு படமும் 4000x3000 அளவுள்ளது.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
 
 
 
 
 
 
 
 
IMG_1044.jpg
IMG_1051.jpg
IMG_1052.jpg
IMG_1050.jpg

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 10:14:14 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
முன்பு அனுப்பி வைத்த படங்களின் விவரம்:
 
1) முதல் படத்தில் இருப்பவர்கள் கவிஞர் வ.வே.சு வும் கவிஞர் ஹரியண்ணாவும்.
2) இரண்டாம் படத்தில் இருப்பவர் புலவர் இராமமூர்த்தி.
3) மூன்றாம் படத்தில் இருப்பவர் ஆசுகவி ஆதவமால் (கவிஞர் சிவசூரி என்றழைக்கப்படும் சூர்யநாராயணன்)
4) நான்காவது படத்தில் எண்ணக்குவையில் ஆழ்ந்திருப்பவர் கவிஞர் வீரராகவன்.
 
இப்போது இரண்டாவது தொகுப்பினை இத்துடன் இணைத்துள்ளேன். 
 
 
கவிஞர் சந்தர் சுப்ரமணியன்
 
 
 
கவிஞர் அ. இராஜகோபாலன்
 
 
கவிஞர் பாரதி எழிலவன்
 
 
கவிஞர், அணுவிஞ்ஞானி, கோபால்
 
 
 
IMG_1053.jpg
IMG_1054.jpg
IMG_1055.jpg
IMG_1056.jpg

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 10:20:04 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம்.
 
சென்ற மடலில் அசோக் சுப்ரமணியத்தை தவறுதலாக சந்தர் சுப்ரமணியம் என்றுரைத்துவிட்டேன்.  அன்பர்கள் மன்னிக்கவும்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.

VKNSVN

unread,
Dec 10, 2012, 10:31:41 AM12/10/12
to santhav...@googlegroups.com
ஐயா உங்கள் படங்களுக்கும் அறிமுகத்திற்கும் நன்றி


With regards
SuganthiVenkatesh

Sent from my iPhone

On Dec 10, 2012, at 10:14 AM, "Raja.Tyagarajan" <thia...@dataone.in> wrote:

அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
முன்பு அனுப்பி வைத்த படங்களின் விவரம்:
 
1) முதல் படத்தில் இருப்பவர்கள் கவிஞர் வ.வே.சு வும் கவிஞர் ஹரியண்ணாவும்.
2) இரண்டாம் படத்தில் இருப்பவர் புலவர் இராமமூர்த்தி.
3) மூன்றாம் படத்தில் இருப்பவர் ஆசுகவி ஆதவமால் (கவிஞர் சிவசூரி என்றழைக்கப்படும் சூர்யநாராயணன்)
4) நான்காவது படத்தில் எண்ணக்குவையில் ஆழ்ந்திருப்பவர் கவிஞர் வீரராகவன்.
 
இப்போது இரண்டாவது தொகுப்பினை இத்துடன் இணைத்துள்ளேன். 
 
<IMG_1053.jpg>
 
கவிஞர் சந்தர் சுப்ரமணியன்
 
<IMG_1054.jpg>
 
 
கவிஞர் அ. இராஜகோபாலன்
 
<IMG_1055.jpg>
 
கவிஞர் பாரதி எழிலவன்
 
<IMG_1056.jpg>
 
கவிஞர், அணுவிஞ்ஞானி, கோபால்
 
 
 

--

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 10:33:14 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இத்துடன் மூன்றாம் பகுதி படங்களை இணைத்திருக்கிறேன்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
 
 
வெள்ளன்னத் தூவியென ஒளிர்கின்ற தாடியுடன் இசைக்கவி இரமணன்.
 
 
 
 
மிஸ் தமிழ் என்றழைக்கப்படும் அர்விந்த் - பழநி பஞ்சாமிர்தச் சுவை பொங்கியது அன்று இவரால்.
 
 
 
பொங்கும் மகிழ்ச்சியுடன் கவிவேழம் சந்தவசந்தம் உருவான கதை சொல்கிறது.
 
 
 
இலக்கிய வித்தகர் ஹரியண்ணா.  பின்னால் இருப்பவர்தான் சிங்கை. குமார்.
 
 
 
இரட்டைப் புலவர்களை அறிவீர்கள்.  இங்கே இரட்டை புலவர்கள் மட்டுமல்ல, இரட்டை வேலவரும் சந்தவசந்தம் சந்திப்பிற்கு
வருகை தந்தனர்.   கவிஞர் அசோக் சுப்ரமணியனும், கவிஞர் சந்தர் சுப்ரமணியனும்.
 
 
 
 
 
IMG_1057.jpg
IMG_1058.jpg
IMG_1059.jpg
IMG_1061.jpg
IMG_1062.jpg

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2012, 11:58:47 AM12/10/12
to santhav...@googlegroups.com
அன்ப, சந்தர்,
உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் வசந்தம் மூலம் சுவையுடன் மாந்தினேன். உன் கவி இவண் இடுக!,
 யோகியார்,
 மும்பை..10-12

2012/12/10 Raja.Tyagarajan <thia...@dataone.in>
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இத்துடன் மூன்றாம் பகுதி படங்களை இணைத்திருக்கிறேன்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
இரட்டைப் புலவர்களை அறிவீர்கள்.  இங்கே இரட்டை புலவர்கள் மட்டுமல்ல, இரட்டை வேலவரும் சந்தவசந்தம் சந்திப்பிற்கு
வருகை தந்தனர்.   கவிஞர் அசோக் சுப்ரமணியனும், கவிஞர் சந்தர் சுப்ரமணியனும்.
 
 
 
 
 

-- 
IMG_1062.jpg

Subbaier Ramasami

unread,
Dec 10, 2012, 12:45:59 PM12/10/12
to santhav...@googlegroups.com
collaged photos attached

Ramasami
On 12/10/12, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
>
svphotos4.jpg

Subbaier Ramasami

unread,
Dec 10, 2012, 12:49:16 PM12/10/12
to santhav...@googlegroups.com
sv photos2.jpg
sv photos 1.jpg
sv photos 3.jpg
svphotos4.jpg

Balasubramanian N.

unread,
Dec 10, 2012, 1:54:58 PM12/10/12
to santhav...@googlegroups.com

"பலே பேஷ் போட்டேன்.."

 

போட்டீரே அப்படியொரு போடு! அட்டஹாஸம்!

 

அப்புறம் வந்த அந்த நீள வரிகள் நடுவே குட்டையாயும் வந்ததே பல வரிகள்,

அவை பற்றிக்கவலையில்லை, அந்த நீள நீள வரிகள்தான் உம் யோகத்தைக் குலைக்கின்றனவோ? அடட, என் செய்வேன்!

 

ஆ!அதையெல்லாம் எப்படி ரசித்தனர் என்று நானா சொல்லோணும் - அச்சச்சோ, மீண்டும் ஜோக் காக்க ஜொள்ளிழுக்குப்படும் என்னையேயா கேட்பது! அதையெழுதிப்போடக் குறிப்புரைத்த அந்த ஹரியையல்லவா கேட்கவேண்டும்?

ஹரி கேட்டுக்கொண்டதை நீங்கள் படிக்கவில்லையா, அல்லது, அவர் கேட்டதைக்குறிப்பிட்டு நான் முதல் வரிகள் ஆங்கிலத்தில்  எழுதியிருக்கிறேனே அது புரியவில்லையா?!

 

சரி அதெல்லாம் விடும், ஹரி உட்பட மற்ற ஆடியன்ஸாரையும் நேரே கேட்கவேண்டியதுதானே - "என்னய்யா, என்னம்மா இந்த நீளநீள வரிகளில் என்ன ஜோக்கு? நீரேதும் கண்டீரோ" என்று?

 

அன்று மண்ணைத் தலையில் சுமந்த பரமயோகிக்கு இந்தாரும் என்று புட்டு தரப்பட்டதுபோல இன்று இந்த யோகிக்கும் பொருளைப் புட்டு வைக்க நிறையப்பேர் உள்ளோம்!


2012/12/10 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 6:18:32 PM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இத்துடன் நான்காம் பகுதி படங்களை இணைத்துள்ளேன்.  திரு சிங்கை குமார் அவர்கள் அனைவரின் பேச்சு/ பாட்டொலியை அதி
கவனமாக மின்னணுக் கருவியில் பதிவு செய்தார்.   அவற்றின் எம்.பி.3 வடிவம்/  ஏ.எம்.ஆர் வடிவத்தினை இங்கே பகிர்ந்து கொள்ள
வேண்டுகோள் விடுக்கிறேன்.  நான் பதிவு செய்தவை பெரும்பாலும் படங்கள்/  கொஞ்சம் காணொளிகள் மட்டுமே.  தனியாக ஒலிக்
கோப்பாக எதையும் நான் சேமிக்கவில்லை.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
 
இந்தச் சந்தவசந்தம் சந்திப்பிற்குப் பிள்ளையார் சுழி போட்டக் கலர்ப்பட கதாநாயகன்;  இளைஞர்: Young, Energitic, Enthusiastic, சிங்கை குமார்.
 
 
 
இசைக்கவி இரமணன் அவர்களின் காளீநீ, த்ரீசூலிநீ, அருள்மாரீநீ, பவதாரீநீ -  அட அட அட!  உருகினோம் இசை வெள்ளத்தில்
இதன் காணொளியை கொஞ்சம் தான் பதிவு செய்ய இயன்றது.  மறுபடியும் சிங்கை குமாருக்கு வேண்டுகோள், இதன் எம்.பி.3 வடிவை
எனக்கு அனுப்புங்கள். ஏ.எம்.ஆர் வடிவில் அல்லது அளவு குறைந்த எம்.பி.3 வடிவில் மாற்றி நானே மீண்டும் சந்தவசந்தத்திற்கு
அனுப்புகிறேன்.
 
 
80வயது இளைஞர் நகுபோலியனார்.  அவர் ஒரு கேள்வி கேட்டார்!  என்ன எல்லோருமே கவி ஜாம்பவன், ஜாம்பவன் என்று கரடி
ஆக்குவது எதற்கு?  நாமெல்லாம் கவிகள் ஐயா கவிகள் (கவின்னா குரங்கன்றோ!!!!!!)
 
 
என்றும், என்றென்றும் இளைமை துள்ளும் முனைவர் கவிஞர் சவகர்லால், பாவலர் தங்கமணி அம்மையாரின் வருகை.
 
 
 
கவிஞர், முனைவர் சவகர்லால் அவர்கள்.
IMG_1064.jpg
IMG_1065.jpg
IMG_1068.jpg
IMG_1070.jpg
IMG_1083.jpg

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 7:01:16 PM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
 
இந்த சந்திப்பை முழுவதும், உளமார்ந்து சுவைத்தவன் நான்.  ஏனெனில், புதுவையின் பாரதிவிழா நிகழ்வுகள்.  அலுவலகப் பணிகள் இவற்றை சற்றே விலக்கிவிட்டுச் சந்தவசந்தம் பாரதிவிழா (இது வெறும் சந்தவசந்தம் சந்திப்பு என்று நான் கருதவில்லை; அந்த மாகவிக்கு சந்தவசந்தம் எடுத்த பாரதி விழாவென்றே என் மனத்தில் பதிந்துவிட்டது!).  கூடவே வ.வே.சு அவர்களின் வானவில் பண்பாட்டு மையம், திருவல்லிகேணி பாரதி இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த பாரதிவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டதும், இலந்தையார், அவரைக் கையில் ஏந்திக் காத்துநிற்கும் திருமதி பானுமதி அம்மையார் அவர்கள் அன்பு வெள்ளம் இவை எனை அப்படியே சென்னையில் ஆணி அடித்தாற் போல கவிமாமணி இலந்தையார் இல்லத்தில் 8-12-2012  தொடங்கி  10.12.2012 காலை வரை இருக்க வைத்துவிட்டது.  நான் என்னுடைய உறவினர் இல்லங்கள் எதற்குமே செல்லவில்லை.  இந்த சந்தவசந்தச் சந்திப்பினை ஒரு பாரதி விழாவாக ஆண்டுதோறும் மேம்படுத்தப்படல் வேண்டுமென அனைவர்க்கும் நான் வேண்டுகோள் வைக்கிறேன்;
 
என்னுடைய மாளாத விருப்பம்:
 
1) ஆண்டுதோறும், சந்தவசந்தம் உறுப்பினர் ஒருவர் இல்லத்தில் அல்லது அவர் ஏற்பாடுகள் செய்யும் ஒரு பொதுவான வரவேற்பு/திருமண இல்லத்தில் ”சந்தவசந்தம் மகாகவி பாரதி விழா”  என்றழைக்கப்படும் மாபெரும் விழாவாக, அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இச்சந்திப்பு நடைபெற வேண்டுமென்பது என்னுடைய அவா! (இதில் சென்னை மட்டுமின்றி, உறுப்பினர் அனைவரின் ஊர்களும் இருக்க வேண்டும்!  (புதுச்சேரி, பெங்களூரு, தூத்துகுடி, இப்படி!!)
 
2) இந்தச் சந்திப்பில், கவிஞர்கள் நிறைய பேர் தங்களின் படைப்புகளை, நூல்களை சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவர்க்கும் இலவயமாகவே அளித்தது (இன்னும் சொல்லப்போனால், வரதராசனின் நூல்களை (சாமிநாத வெண்பா), சிங்கை குமார் அவர்கள் அவர் சார்ப்பாக, சிங்கையிலிருந்து கொண்டு வந்து அனைவர்க்கும் வழங்கியது) என்னுடைய உளம் பற்றிய மிகவும் விருப்பமான செயலாய் இருந்தது.   என்ன அவற்றிற்கான தொகையை அளிக்கவே என்னுடைய உள்ளம் விரும்பினாலும், அவ்வன்பர்கள் தவறாக
எண்ணிவிடுவார்களே என்ற அச்சம் காரணமாக நான் அங்கே நேரில் சொல்லவில்லை. ஆதலால்  இங்கே சொல்கிறேன்.  ஒரு நூல் வெளியீடு என்பது எவ்வளவு கடினமான பெரிய செயல் என்பதை நான் நிச்சயம் அறிவேன்.
 
 
இத்துடன் ஐந்தாம் பகுதி படங்களை இணைத்திருக்கிறேன்.
 
இன்னும் வரும்
 
அன்பன்
இராஜ.தியாகராஜன். 
 
 
 
 
முதலில் இருப்பவர் கவிஞர் வீரராகவன், நடுவில் இலந்தையார் அவர்களின் ஆருயிர் துணைவியார் பானுமதி அவர்கள் அடுத்து
சிவனருட்கவி தங்கமணி அம்மையார் அவர்கள். கையில் நிழற்படக் கருவியுடன் நிற்பவர், ஹைதராபத் கவிஞர் கார்த்திக் அவர்கள்.
அவருடைய பங்கு நிச்சயம் அளவிட முடியாதது; தமிழ், தமிழ், தமிழ் என்று எம்போன்றவரின் உள்ளம் துள்ளித் துடித்தாலும், அகவை
காரணத்தால் உடல் நிச்சயம் ஒத்துழைக்கவில்லை. ஆனால் பம்பரமாய்ச் சுழன்று, அத்துணை செயல்களை அனாயாசமாக நடத்திய
செயல்வீரர் அவர்.
 
 
அன்று ஒரு ழகரக் கவிதை பாடி,  என்னுளம் பற்றிய கவியேந்தல், புலவர் இராமமூர்த்தி அவர்கள்.
 
 
கவிஞர் வ.வே.சு வின் ஆவேசப் பாட்டு.
 
 
 
தத்தரிகிட தத்தரிகிட என்று கைதட்டிப் பாடுகிறார், இலக்கிய வித்தகர், என் போன்றவர்களால்,  ஹரியண்ணா என்றழைக்கப்படும்
கவிஞர் ஹரிகிருஷ்ணன்.
 
 
சந்தவசந்தம் நிகழ்விற்காகவே 700 கல் தொலைவிலிருந்து தன் மகிழுந்தை தனியாக ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்த படமொழிக்
கவிஞர் திரு ந.உ. துரை அவர்கள்.
 
 
 
 
 
 
 
IMG_1071.jpg
IMG_1077.jpg
IMG_1076.jpg
IMG_1089.jpg
IMG_1094.jpg

Chandar Subramanian

unread,
Dec 10, 2012, 8:07:20 PM12/10/12
to santhav...@googlegroups.com
மிக இனிய சந்திப்பு!
 
திரு இலந்தை அவர்கள் இல்லத்து விருந்தோம்பல் மிகச் சிறப்பு. செவிக்குக் கவியும், கண்களுக்கு நூல்களும், நாவுக்கு நாலாவிதமும், நாசிக்குச் சந்தனமும் மெய்க்குத் தென்றலுமாய் ஐம்புலன்களுக்கும் விருந்து அமைத்த விதம் அருமை. நன்றிகள் பல, திரு இலந்தை அவர்களின் குடும்பத்தார்க்கு.
 
இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கூறி, திரு கே ஆர் குமார் புண்ணியம் கட்டிக்கொண்டார். தன்னடக்கத்தின் உயரம்!
 
நகுபோலியன் பாணியில் சொல்லவேண்டும் என்றால் தென்னை மரங்களுக்கிடையே கவிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை! வாலறிந்தவர்கள்! அதுவும் இறுதியில் திரு நகுபோலியன் அடித்தார் பாருங்க சிக்ஸர்! வார்த்தை விளையாட்டுகள் மிகப் பிரமாதம். சொன்னத்தையே சொன்னா எப்படி?
 
வழக்கம் போல் இசைக்கவி ரமணன் அவர்களின் இசைமழை! ஹரியண்ணா காலத்தை இங்குமங்குமாகக் கடத்தினார்! ஜவஹர்லால் அவர்களின் இனிய கவிமுழக்கம். தொடர்ந்த தூறலும் சாரலுமாய் திரு வவேசு அவர்களும் திரு இராமமூர்த்தி அவர்களும். சிந்து மழையில் நனைய வைத்தார் புலவர்.
 
இன்னும் நினைத்து பிரமிப்பு அடங்காதது திரு துரை அவர்களின் 700 கிமீ தொலைவு கவிப்பயணம்! அவரைப் பற்றிய சுயவிபரங்கள் அன்றே தெரிய வந்தது. கல்லும் மண்ணும் எடுத்தாளும் கைகளில் சொல்லும் பண்ணும்! அவர் எழுதிய 'திருக்குறள் கவியுரை' பதிப்பில் வரவிருப்பதைக் கேள்விப் பட்டேன். வாழ்த்துகள்!
 
அ ரா அவர்களின் மனமுருக்கும் முன்னுரை மனதைத் தொட்டது. அவரின் படைப்புகளை மென்மேலும் எதிர்பார்க்கிறேன்.
 
கார்த்திகேயனின் கவிதை மிக மிக அருமை.
 
முரண்களை கவிதையில் கொணர்ந்த மிஸ் தமிழுக்கு நன்றி. (எப்பத்தான் மிஸ் செய்யாய்த் தமிழாக ஆவீர்கள்?)
 
திரு ஸ் கே நடராஜன் அவர்களின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
 
திருமதி தங்கமணி அம்மா வந்தது குறித்து மிகவும் சந்தோஷம்.
 
பாடி அரங்கினைக் களிப்புறச் செய்த திரு தியாகராஜனுக்கு நன்றி.
 
எங்கும் சிவமயம்!
 
அ கி வரதராஜன் வெண்பா நூல்களை இனிமேல் தான் படிக்க வேண்டும். மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
 


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Raja.Tyagarajan

unread,
Dec 10, 2012, 7:41:48 PM12/10/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இத்துடன் ஆறாம் பகுதிப் படங்களை இணைத்திருக்கிறேன்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
 
 
கவிதை வாசிக்கிறார், கவிஞர் வீரராகவன்.
 
 
இலந்தையாரும்,  முகவை இராம்குமாரும்.
 
 
முகவை இராம்குமார் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறார்.
 
 
சிங்கை குமார் தன்னைப் பற்றி சொல்கிறார்
 
 
புலவர் இராமமூர்த்தி, இலந்தையார்க்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்கிறார்.
 
 
 
IMG_1097.jpg
IMG_1098.jpg
IMG_1101.jpg
IMG_1080.jpg
IMG_1078.jpg

Raja.Tyagarajan

unread,
Dec 11, 2012, 12:50:19 AM12/11/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
எனதருமை முகநூல் நண்பர்; அழகாக சந்தமிழைய, எதுகை மோனைகளுடன் கவிபடைக்கும், சந்தக்கவிமணி கிருஷ்ணன் பாலா அவர்களின் படத்தை இணைத்திருக்கிறேன்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்
 
IMG_1102.jpg

Kaviyogi Vedham

unread,
Dec 11, 2012, 1:01:25 AM12/11/12
to santhav...@googlegroups.com
ஆகா பாலு சார்.. நன்றி..ஆயின் உங்க குறிப்புக்கு கேட்ட ஆடியன்ஸ் தரப்பில் எனக்கு மெயில் தனி-- அடித்தால் நலம்..
 யோகியார்

2012/12/11 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

"பலே பேஷ் போட்டேன்.."

 

போட்டீரே அப்படியொரு போடு! அட்டஹாஸம்!

 

அப்புறம் வந்த அந்த நீல

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2012, 4:17:43 AM12/11/12
to santhav...@googlegroups.com

(சென்னைக் கூட்டத்திற்காக நான் எழுதிய கவிதை அஞ்சலி):

சென்னைக் கூட்டம் கவியரங்கம் - பாரதிக்கு அஞ்சலி

1)

நீள்நெடும் விழியுடைத் தேவியவள் - நம்
நெஞ்சினில் நிறைந்திடும் ஆவியவள்
நின்றருள் செய்திடும் நல்லூரில் - துயர்
நீக்கிடும் கவிவளர் சொல்லூரில்

வாணியின் பூசையைச் செய்திடவே - அருள்
வாக்கினைத் தந்தாள் உய்திடவே.


2)

பாரதி பாடலைப் படித்திடவே -அந்தப்
பாமலர் தேனைக் குடித்திடவே
சீருடைப் பாவலர் கூடிடவே -அவர்
சிந்தையை நாமகள்  நாடிடவே

காணக் கிடைக்காக் கூட்டமடி - இது
கண்டிடப் போக்கும் வாட்டமடி.

3)

குட்டிக் குயிலியின் பாட்டினையே - அவன்
கொண்டு கொடுத்திட ஏட்டினிலே
மட்டில் காதலைக் காட்டிடவே - புகழ்
மண்டிட நமக்கும் ஊட்டிடவே

கொட்டிய எண்ணம் காவியமோ -இலை
கொஞ்சிடும வண்ணம் ஓவியமோ.

4)

ஒன்பான் சுவைதில் கூட்டிவைத்தான் -நம்
தை வேகம் மீட்டிவைத்தான்
ண்மையை உள்ளே ஒளித்துவைத்தே - அதில்
உள்தை உரெவிளித்துவைத்தே

புவியைக் காலைக் குடிக்வைத்தான் - மைக்
விதைப் பைத்தியம் பிடிக்வைத்தான்.


5)

மாஞ்சோலைக் காதலை நாடியவன் -அந்த
மாயக் குயிலால் வாடியவன்
பாஞ்சாலி சீரைக் கூறுகையில் - அவன்
பற்பல இடங்களில் சீறுகையில்

மூலம் தாண்டி மொழிபெயர்த்தான் - நாம்
முன்னே சென்றிட வழிவகுத்தான்.

6)

முன்னை ளை உலென்றார் -அந்
மன்வன் தன்னை உயிரென்றார்
பின்னை மக்ளை உயிரென்றார் - புவி
மன்னை உயிருள உலென்றார்

பாராள் மன்னைக் கானாய் - இவன்
பாட்டில் காட்டிபானே.

7)

கண்ணனைப் பற்பல நிலைகளிலே - நாம்
கண்டிடக் காட்டிய கலைகளிலே -
எண்ணக் கோயிலைப் படைத்திடவே - பேர்
இன்பம் நமக்கும் கிடைத்திடவே


காசினி காட்டும் பக்திநிலை - இவன்
பேசிடும் இதயச் சக்திநிலை.

8)

பாரதத் தாய்க்கோர் உருகொடுத்தான் - நாம்
பாடிட பற்பல கருகொடுத்தான்
பாமர மக்களும் படித்திடவே - பல
பாக்களைப் படைத்துக் கொடுத்திடவே

பற்பல விடுதலை வேண்டியவன் - தினம்
பக்கலில் நின்று தூண்டுபவன்


9)

அன்னிய விலங்கை உடைத்திடவே - கவி
ஆதவன் கதிரால் படைத்திடவே
அச்சம் மக்கள் கடந்திடவே - இனி
அஞ்சா நெஞ்சுடன் நடந்ததிடவே


பாதையைக் காட்டிய கவிராசன் - கவி
போதையை ஊட்டிய மகராசன்


10)


பெண்கள் உரிமைக் கடைவைத்தான் - அதில்
பேதையைர் தம்மைக் குடிவைத்தான்
வீட்டில் அடைந்து கிடந்தவரை - மனம்
வீணில் புழுங்கி உடைந்தவரைக்

கண்ணென நமக்குக் காட்டிவிட்டான் - அதைக்
கட்டியம் கூறிப் பாட்டிலிட்டான்


11)

சந்த வசந்தம் கூடுகையில்- தினம்
சந்தம் பற்பல ஆடுகையில்
சிந்தையில் நறுமண வாடையினை - நம்
செந்தமிழ்க் கவிதை ஓடையினைக்

கண்டு களிப்பதால் சிவசூரி - நான்
மொண்டு வருகிறேன் கவிமாரி.


1)


சேய்நான் எழுதத் திருருள் செய்திடும் தெய்வமெனும் 
தாய்தான் ழுப்பித் தனித்துக் கொடுத்த தமிழமுதென் 
வாய்தான் உதிர்த்திட ந்திடும் சொல்லால் கிழ்வுனே
பாய்நான் விரிப்பது பாவலர் உம்புகழ் பாடிடவே.


2)

திரைகண்ட தில்லைசேர் கங்கை நகரத் திருமனையில்
கரைகண்ட ஆனந்தம் கண்ணில் தெரியும் கவிபலரின்
நிரைகண்ட நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்து நிமிர்ந்திடவும்
மரைகண்ட சூரியன் வந்தேன் வழங்கிட அஞ்சலியே.

3)

பண்டிதர் மட்டிலும் பாடிப் பரவிய பைந்தமிழை
மண்டிணி நாட்டில் வசித்திடும் பாமர மக்களுமே
கண்டிட இன்னரும் கற்கண் டெனநற் கனியெனவும்
மண்டிட நாவில் மலர்த்திய மாகவிக்(கு) அஞ்சலியே.

சிசூரிநாராணன்.



2012/12/11 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Girija Varadharajan

unread,
Dec 11, 2012, 6:46:09 AM12/11/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள இராஜ தியாகராஜன், வணக்கம்.

என்னுடைய நூல்களுக்குக் காசு தரவில்லையே  உங்கள் ஆதங்கம் புரிகிறது. 
நன்றி ஐயா. இது குறித்து எந்தவித ஆதங்கமும் கொள்ள வேண்டாம். 

”ஒப்பிலா ஒரு மூவர் , சாமிநாத வெண்பா” இரு நூல்களின் விற்பனைத் தொகை முழுவதுமே
நன்கொடைக்குத்தான்  போகின்றன.
 
”ஒப்பிலா ஒரு மூவர்” விறபனை முழுவதும் சிங்கப்பூர் திருமுறை மாநாட்டிற்கும், 
”சாமிநாத வெண்பா”  விற்பனை முழுவதும் சிங்கப்பூர் இந்தியர் முன்னேற்றக் கழகத்திற்கும் 
(SINDA - Singapore Indian Development Association) தான் போகின்றன.

மேலும் அன்று நங்கநல்லூரில் வழங்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே நன்கு படித்துச் 
சுவைகப் படும் என்பது என்றன் திடமான நம்பிக்கை. ஆக இந்தக்  கொடையால் மட்டும் தான் 
நான் மிகவும் மகிழ்கிறேன். சேர வேண்டிய கைகளில் நூல்கள் சேர்ந்திருக்கின்றன.  
இன்னும் அதிகமான புத்தகங்களை அனுப்ப இயல வில்லையே என்பது தான் என்னுடைய  ஆதங்கம். 

புத்தகங்களைப்  படியுங்கள். ஒலிவட்டையும் கேளுங்கள். உங்கள் அபிப்பிராயங்களை வரவேற்கிறேன். 
குறிப்பாக, என்னை இன்னும் செம்மைப்  படுத்திக் கொள்ள வைக்கும்  உங்கள் அறிவுரைகளைக் கூறுங்கள்

இதுவொன்றுதான் என்னுடைய வேண்டுகோள்.


அன்புடன் ,

வரதராசன். அ.கி.   . 

   
2012/12/11 Raja.Tyagarajan <thia...@dataone.in>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
Thanks and Regards
Girija

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com
IMG_1089.jpg
IMG_1094.jpg
IMG_1071.jpg
IMG_1077.jpg
IMG_1076.jpg

Ms. Tamil

unread,
Dec 11, 2012, 1:21:40 PM12/11/12
to santhav...@googlegroups.com
குடும்பமும் கவிஞரும் கூடிடும் விழாதரும்
கடலினில் ஆடிடும் களியே
கடலினில் ஆடிடும் களியது தொடர்ந்திட
உடன்வரும் கிளிஞ்சலின் ஒலியே

(கிளிஞ்சல்—சந்திப்பில் பெற்றவை எல்லாம்.)

சுய அறிமுகத்தின்போது வாசித்த இரண்டு paradox குறட்பாக்களும் முன்பே
இங்கு இட்டவைதாம்:

பொய்யா மொழி

ஈற்றடி சுத்தப்பொய் இக்குறளில்; மற்றைய
ஈற்ற யலடிமெய் யாம்.

நாவிதர் கலகம் (barber paradox)

தீவில் சுயசவரம் செய்யார்க்கு மட்டுமொரே
நாவிதர்; யார்அவர்க்கு? நாட்டு.

நன்றி.
அர்விந்த்

Subbaier Ramasami

unread,
Dec 11, 2012, 9:37:36 PM12/11/12
to santhav...@googlegroups.com
bharathi vizha photos
hari2.jpg
kumarin action.jpg
ramanan1.jpg

Akila Ramasami

unread,
Dec 12, 2012, 1:55:47 AM12/12/12
to santhav...@googlegroups.com
நேரில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது உங்கள் படங்கள்.
மிக்க நன்றி.
அன்புடன் அகிலா 

2012/12/11 Raja.Tyagarajan <thia...@dataone.in>

--
IMG_1102.jpg

Hari Krishnan

unread,
Dec 12, 2012, 1:58:27 AM12/12/12
to santhavasantham


2012/12/12 Akila Ramasami <akilac...@gmail.com>

நேரில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது உங்கள் படங்கள்.
மிக்க நன்றி.
அன்புடன் அகிலா 

ஒரு வாரம் காத்திருங்கள்.  நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை யூட்யூபில் இடுகிறேன்.  16 ஜிபி உள்ள கோப்பை வெட்டித் திருத்தி சுருக்கிய பிறகே விண்ணேற்ற முடியும்.  பணியின் நெருக்கடி மறுபடியும் தொடங்கிவிட்டது.  (இருந்த போதிலும் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாப்யாமி வேலை வரையில் செய்துவிட்டேன்.)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Akila Ramasami

unread,
Dec 12, 2012, 2:09:36 AM12/12/12
to santhav...@googlegroups.com
ஆஹா..காத்திருக்கிறோம்..
அன்புடன் 
அகிலா 

2012/12/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Dec 13, 2012, 5:25:40 AM12/13/12
to santhav...@googlegroups.com
அருமை.அருமை.அனந்த் .

2012/12/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

<> நங்கைநல்லூரில் தமிழ்த் தரு <>

 

நங்கநல் லூரிலோர் தோட்டம்  - அங்கு

நாற்பதின் மேலான கவிஞரின் கூட்டம்

எங்கள் தமிழ்மொழிக்(கு) ஊட்டம் – தரும்

எண்ணமே அங்குள்ள யாவரின் நாட்டம் (நங்கை)

 

சிங்கையில் தோன்றிய வித்து – அது

செந்தமிழ் நாட்டில் முளைத்துத் தழைத்து

நங்கநல் லூரில்நி லைத்து – இன்று

நல்கிய தேகவி தைக்கனிக் கொத்து

 

சந்த வசந்தத் தருவாம் – அது

தமிழை வளர்க்கச் சனித்த உருவாம்

வந்(து)அண்டி னோர்க்கு விரைவாய்ச் - செய்யுள்

வடிக்கும் வகைதனைச் செப்பும் குருவாம்

 

இந்தத் தருவடிக் கூட்டம் – பல

சாதனை செய்து மரபினை நாட்டி

அந்தமில் லாப்புகழ் ஈட்டும் – அதற்(கு)

எங்கள் இறைவனே! நீவழி காட்டு!

 

..அனந்த் 9-12-2012


2012/12/9 Soundar <rsou...@gmail.com>
தமிழ்க் கவிஞர் கூடிய பெருவேள்வி!
பெருவேள்வி என்றால் மஹாமகம்.
மஹாமகம் என்றால் எல்லா நதிகளும் ஒன்று கூடும் நிகழ்வுதானே! பாரத நாட்டு
நதிகள் மட்டுமன்றி,  ராரிடன் நதி (Raritan river flows in New Jersey
USA), மஹா நதி (Grand river flows by Cambridge ON, Canada), சிங்கை நதி
(flows thru Singapor) முதலாய பன்னாட்டு நதிகளும் சங்கமித்த மஹாமகம்
என்று சொல்லும் அளவிற்குச் சிறப்பாக நடந்தேறிய நிகழ்ச்சியைப் பற்றி
அறியத் தந்தமைக்கு நன்றி.

மஹாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இது போன்றில்லாமல், 12
மாதங்களுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட நிகழ்ச்சி அமைவதுதான் முறை. இதற்கு
வித்து 12-ம் ஆண்டின் 12-ம் மாதத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சி ஒரு நல்ல
தொடக்கமாக இருக்கட்டும்.

சௌந்தர்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


Kavingar Jawaharlal

unread,
Dec 13, 2012, 11:05:27 PM12/13/12
to santhav...@googlegroups.com
           சந்திப்புக் கவியரங்கம்

பூவாகி வந்ததொரு பொலிவே! காலைப்
   பொழுதாகி வந்ததொரு நலமே! சங்கப்
பாவாகி வந்ததொரு சுவையே! பாட்டின்
   பண்ணாகி வந்ததொரு திறமே! என்றன்
நாவாகி வந்ததொரு மொழியே! நாவில்
   நடமாகி நின்றவிளந் தமிழே! இன்று
பாவாகி வந்தென்னைக் காப்பாய் நீயே!
   பணிவாகி வேண்டுகிறேன் உயிரே! தாயே!
           தலைவர்

என்னருமை நண்பரிவர்; கவிதை யென்னும்
   இன்மணத்துக் குளிர்சோலை நடுவே எங்கும்
என்கையைப் பிணைத்தொன்றாய் உலவி வந்த
   எடுப்பான இலந்தையிவர்; சந்தங் கள்தாம்
என்றைக்கும் இவர்சொந்தம்; அவர்தாம் கண்ட
   ஈடில்லாக் குழுமத்தில் இணைந்து லாவி
இன்றைக்கு மகிழ்ச்சியெனும் சிகர மேறி
  இங்குநின்றேன்; இலந்தையாரை வணங்கு கின்றேன்

இப்படியோர் சந்திப்பு நிகழு மென்றே
   எங்கனவில் கூடநானே நினைத்த தில்லை;
அப்படியோர் சந்திப்பை அருமை நண்பர்
   அருமைமிகும் குமாரிங்கே அமைத்து விட்டார்;
எப்படியும் வந்துவிட வேண்டு மென்ற
   என்துடிப்பே எனைத்தள்ள வந்து வீழ்ந்தேன்;
இப்படிநான் நிற்கின்றேன்; என்ன செய்ய?
   என்கவிதைச் சொல்வீச்சால் தாக்க வாநான்?

தாக்கிடலாம் எனிலிங்கே இருப்போ ரெல்லாம்
   தன்னிகரில் அன்பாலே இணைந்த சுற்றம்;
ஆக்கிடலாம்; பரிமாறி மகிழ்ச்சி வெள்ளம்
   அழுந்திடலாம் எனவந்த உறவுக் கூட்டம்;
பாக்களிலே மயிலிறகை விரித்தே கொஞ்சும்
   பக்குவத்தில் உம்நெஞ்சை நீவு வேன்நான்;
தாக்கிடினும் தமிழ்த்தாக்கு மகிழ்ச்சி யூட்டும்;
   தமிழுறவுக் குடும்பத்தை வணங்கு கின்றேன். 





           சந்திப்புக் கவியரங்கம்

பூவாகி வந்ததொரு பொலிவே! காலைப்
   பொழுதாகி வந்ததொரு நலமே! சங்கப்
பாவாகி வந்ததொரு சுவையே! பாட்டின்
   பண்ணாகி வந்ததொரு திறமே! என்றன்
நாவாகி வந்ததொரு மொழியே! நாவில்
   நடமாகி நின்றவிளந் தமிழே! இன்று
பாவாகி வந்தென்னைக் காப்பாய் நீயே!
   பணிவாகி வேண்டுகிறேன் உயிரே! தாயே!
           தலைவர்

என்னருமை நண்பரிவர்; கவிதை யென்னும்
   இன்மணத்துக் குளிர்சோலை நடுவே எங்கும்
என்கையைப் பிணைத்தொன்றாய் உலவி வந்த
   எடுப்பான இலந்தையிவர்; சந்தங் கள்தாம்
என்றைக்கும் இவர்சொந்தம்; அவர்தாம் கண்ட
   ஈடில்லாக் குழுமத்தில் இணைந்து லாவி
இன்றைக்கு மகிழ்ச்சியெனும் சிகர மேறி
  இங்குநின்றேன்; இலந்தையாரை வணங்கு கின்றேன்

இப்படியோர் சந்திப்பு நிகழு மென்றே
   எங்கனவில் கூடநானே நினைத்த தில்லை;
அப்படியோர் சந்திப்பை அருமை நண்பர்
   அருமைமிகும் குமாரிங்கே அமைத்து விட்டார்;
எப்படியும் வந்துவிட வேண்டு மென்ற
   என்துடிப்பே எனைத்தள்ள வந்து வீழ்ந்தேன்;
இப்படிநான் நிற்கின்றேன்; என்ன செய்ய?
   என்கவிதைச் சொல்வீச்சால் தாக்க வாநான்?

தாக்கிடலாம் எனிலிங்கே இருப்போ ரெல்லாம்
   தன்னிகரில் அன்பாலே இணைந்த சுற்றம்;
ஆக்கிடலாம்; பரிமாறி மகிழ்ச்சி வெள்ளம்
   அழுந்திடலாம் எனவந்த உறவுக் கூட்டம்;
பாக்களிலே மயிலிறகை விரித்தே கொஞ்சும்
   பக்குவத்தில் உம்நெஞ்சை நீவு வேன்நான்;
தாக்கிடினும் தமிழ்த்தாக்கு மகிழ்ச்சி யூட்டும்;
   தமிழுறவுக் குடும்பத்தை வணங்கு கின்றேன். 


         நீயும் நானும்

பாரதி,
சொல்லுக்குச் சொல்லழகு தோன்றிவந்து நடமாட
வில்லுக்கு நாணேற்றி விட்டாற்போல் பாடியவன்;

உள்ளத்தை வயலாக்கி உரம்போட்டுத் தாய்ப்பற்றாம்
வெள்ளத்தைப் பாய்ச்சிவிட்டு விடுதலைக்கே ஏங்கியவன்;

நரம்புகளில் முறுக்கேற்றி நல்லுணர்வில் துடிப்பேற்றி
வரம்பில்லாப் பெருஞ்சக்தி வந்தடையப் பாடியவன்;

சுற்றிவர முடியாத சிறைவைப்பில் இருந்தாலும்
பெற்றுவிட்டோம் விடுதலையென் றாடியவன்; பாடியவன்;

துன்பத்துச் சேற்றினிலே தோய்ந்து நைந்தாலும்
இன்பத்தைக் கோடியென எண்ணிக்கை காட்டியவன்;

பாரதியே! உன்பாட்டு மழையில் நனைந்துசிறு
தூறலாய்ப் பாட்டுக்கள் சிந்தித் திரிபவன்நான்;

வானத்து நிலவுநீ! உன்னொளியில் உளங்குளித்து
நாணமின்றிக் கண்சிமிட்டி நடக்கும் மின்மினிநான்;

உன்னைநான் பாடுவதும் உயர்கவிதை சூட்டுவதும்
அன்னைத் தமிழுக்கே அளிக்கின்ற அஞ்சலியாம்;

எனக்கென்ன தகுதி உனைப்பாட? நீபிறந்த 
மணக்கும் தமிழ்மண்ணில் நானும் பிறந்ததுதான்;

தொட்டால் வெடிக்கும் சீறுவெடிக் குண்டுநீ!
பட்டுப்போய் ஈரப் பதங்கொண்ட வாணம்நான்;

புலிக்கும் அஞ்சாமற் போராடும் மறவன்நீ!
எலிக்கும் பயப்பட்டுத் தினம்சாகும் கோழைநான்;

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சமெனத் துடித்தவன்நீ!
சோற்றுக்கே பிறந்தவன்நான்; சோற்றா லடித்தபிண்டம்;

செய்யும் பாதகத்தைத் தூவென் றுமிழ்ந்தவன்நீ!
அய்யா எனக்குனிந்தே அவர்பாதம் தொழுபவன்நான்;

தீமையைக் கண்டுமனம் சீறிப் பாய்ந்தவன்நீ!
தீமை எதுவென்றே தெரியாமல் திகைப்பவன்நான்;

துப்பாக்கி வெடிப்பொலிக்கும் துவளாமல் நின்றவன்நீ!
செப்புக் காசொலிக்கே தெண்டனிடும் பேர்வழிநான்;

நானென்று சொன்னதெலாம் நாட்டுச் சோதரர்தாம்;
நானவரின் சார்பாக நின்று கவிசொன்னேன்.










.






.

2012/12/13 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 13, 2012, 11:24:10 PM12/13/12
to santhav...@googlegroups.com
ஆஹா! அவையடக்கக் கவிதை, பாரதிக் கவிதை இரண்டும் மிக அருமை!
 
அனந்த்

2012/12/13 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Niranjan Bharathi

unread,
Dec 13, 2012, 11:51:42 PM12/13/12
to santhav...@googlegroups.com
தமிழமுதைப் பருகியது போல் இருக்கிறது 

Pas Pasupathy

unread,
Dec 14, 2012, 6:51:37 AM12/14/12
to santhav...@googlegroups.com
மிக அருமை, ஜவகர்!

2012/12/13 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>



--

வித்யாசாகர்

unread,
Dec 14, 2012, 6:59:41 AM12/14/12
to santhav...@googlegroups.com
டனிராத ஏக்கம் தரும் சந்திப்பு என்றாலும், தமிழின் உச்சத்தை கவிதையினால் எட்டும் புலமை கொண்டோர் மத்தியில் மடலாடிக் கொள்ளும் மகிழ்ச்சி நிறைவானது..

அடுத்த சந்திப்பிலேனும் கலந்துக்கொள்ள முயற்சிக்கவேண்டுமெனும் எண்ணத்துடன்.. எல்லோருக்குமான வணக்கமும் அன்பும்..

வித்யாசாகர்

2012/12/14 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

sk natarajan

unread,
Dec 14, 2012, 7:14:05 AM12/14/12
to santhav...@googlegroups.com
அருமை ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/14 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

N. Ganesan

unread,
Dec 14, 2012, 11:49:33 AM12/14/12
to சந்தவசந்தம், mintamil, vall...@googlegroups.com

On Dec 13, 8:05 pm, Kavingar Jawaharlal


<kavingar.jawahar...@gmail.com> wrote:
>            சந்திப்புக் கவியரங்கம்
>
> பூவாகி வந்ததொரு பொலிவே! காலைப்
>    பொழுதாகி வந்ததொரு நலமே! சங்கப்
> பாவாகி வந்ததொரு சுவையே! பாட்டின்
>    பண்ணாகி வந்ததொரு திறமே! என்றன்
> நாவாகி வந்ததொரு மொழியே! நாவில்
>    நடமாகி நின்றவிளந் தமிழே! இன்று
> பாவாகி வந்தென்னைக் காப்பாய் நீயே!
>    பணிவாகி வேண்டுகிறேன் உயிரே! தாயே!


அன்புள்ள கவிஞர் சவகர்லால்,

கவிமாமணி இல்லத்தில் நீங்கள் பாடிய கவிதை
படிக்கக் காத்திருந்தேன்.

சந்திப்பையும், பாரதியையும் அழகாகத் தமிழில்
பிழிந்து வடித்து தேம்பாவு ஆக்கித் தந்துவிட்டீர்கள்.

அன்புடன்,
நா. கணேசன்

> தீமை எதுவென்றே தெரியாமல்...
>
> read more »

Subbaier Ramasami

unread,
Dec 15, 2012, 1:16:29 AM12/15/12
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் கலந்துகொண்ட கவிஞர்கள் தங்கள் இடுகைககளை
இடத்தொடங்கிவிட்டார்கள். நான் தலைமைக் கவிதையை இடுகிறேன். பிறகு ஒவ்வொரு
கவிஞரை அழைத்ததையும் அவர்கள் கவிதை வழங்கி முடித்ததும் உடனுக்குடன்
பின்னூட்டம் கவிதையிலேயே வழங்கியதையும் ஒவ்வொன்றாக இடுகிறேன்.
கவிதை அரங்கத்திற்கு முன் சந்தவசந்த முழக்கம் ஒன்று நடைபெற்றது. நான்
முன்னிரு சொற்களைக் கூற வந்திருந்தவர்கள் அனைவரும் சந்தவசந்தம் என்று
குரல் கொடுக்க மிக இனிமையாகவும் எழுச்சியாகவும் அமைந்தது. இதோ அந்த
முழக்கம். நீங்களும் சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

சந்த வசந்தம் ஆமாம் சந்த வசந்தம்
தமிழ்க்கவிதைக் குழுமமெது
சந்தவசந்தம்
செந்தமிழின் சிந்தயெது
சந்தவசந்தம்
இணையத் தெழுச்சியெது
சந்தவசந்தம்
இலக்கணப்பேழையெது
சந்தவசந்தம்
அணையாத தீபமெது
சந்தவசந்தம்
ஆக்கம் கொடுப்பதெது
சந்த வசந்தம்
பயிற்சி அளிப்பதெது
பாவலர்கள் சங்கமெது
சந்தவசந்தம்
முயற்சி உடையதெது
சந்தவசந்தம்
முன்னிலை வகிப்பதெது?
சந்தவசந்தம்
இங்கிதத்தின் உச்சமெது
சந்தவசந்தம்
இலக்கியச் சந்தையெது
சந்தவசந்தம்
எங்கள் இயக்கமெது?
சந்தவசந்தம்
என்றென்றும் வாழியவே
சந்தவசந்தம்

சந்தவசந்தம் ஆமாம் சந்தவசந்தம்
தமிழ்க்கவிதை குடும்பமிது
சந்தவசந்தம்


On 12/10/12, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
> அன்பர்களே,
>
> சந்தவசந்தம் சந்திப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சிறப்பாக நடைபெற்றது.
>
> கடந்த ஒருவாரமாக அதே சிந்தனைதான்.
> மூன்றுவீடுகள் தள்ளி சாப்பாடு தயாரித்துக்கொடுக்கிறார்கள்.

Kaviyogi Vedham

unread,
Dec 15, 2012, 2:03:45 AM12/15/12
to santhav...@googlegroups.com
ஆகா! ரொம்ப அழகிய கவிதை நீங்க படித்தது ஜவகர்!..நேரில் கேட்பது போன்ற உணர்ச்சி என்னுள் மிகுந்தது! வாழ்க வாழ்க!,
 யோகியர்

2012/12/14 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>
           சந்திப்புக் கவியரங்கம்

பூவாகி வந்ததொரு பொலிவே! காலைப்
   பொழுதாகி வந்ததொரு நலமே! சங்கப்
பாவாகி வந்ததொரு சுவையே! பாட்டின்
   பண்ணாகி வந்ததொரு திறமே! என்றன்
நாவாகி வந்ததொரு மொழியே! நாவில்
   நடமாகி நின்றவிளந் தமிழே! இன்று
பாவாகி வந்தென்னைக் காப்பாய் நீயே!
   பணிவாகி வேண்டுகிறேன் உயிரே! தாயே!
           தலைவர்

என்னருமை நண்பரிவர்; கவிதை யென்னும்
   இன்மணத்துக் குளிர்சோலை நடுவே எங்கும்
என்கையைப் பிணைத்தொன்றாய் உலவி வந்த
   எடுப்பான இலந்தையிவர்; சந்தங் கள்தாம்
என்றைக்கும் இவர்சொந்தம்; அவர்தாம் கண்ட
   ஈடில்லாக் குழுமத்தில் இணைந்து லாவி
இன்றைக்கு மகிழ்ச்சியெனும் சிகர மேறி
  இங்குநின்றேன்; இலந்தையாரை வணங்கு கின்றேன்

இப்படியோர் சந்திப்பு நிகழு மென்றே
   எங்கனவில் கூடநானே நினைத்த தில்லை;
அப்படியோர் சந்திப்பை அருமை நண்பர்
   அருமைமில்ல
தொடக்கமாக இருக்கட்டும்.

சௌந்தர்

-- 
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
 Pl. SEE MY NEW BloG and comment on the contents..
this contains wonderful poems on new topics
http://kaviyogi-vedham.blogspot.com/
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,2/682,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp.
Hotchips new HOTEL)-சென்னை-600115(போன்044- 6456 5979

Subbaier Ramasami

unread,
Dec 15, 2012, 7:29:00 AM12/15/12
to santhav...@googlegroups.com
கவியரங்கத் தொடக்கத்தில் வழக்கமாகக் கூறும் வஞ்சத்தில் ஒன்றானைப்
பாடலுடன், நீலமணி கண்டனின் பாகமணி கொண்டவள் என்ற பாடலையும் ஹரிகிருஷ்ணன்
கேட்டதால் ஓங்குகிற ஓர் செய்தி பாடலையும் சொல்லித் தொடங்கினேன்.

தலைமைக் கவிதை

சந்த வசந்தத் தளத்தினுயிர் நாடிகளே
சொந்தத் திறமைகொண்ட தோன்றல்களே, இந்நாளில்
எங்கெங் கிருந்தோ இவண்வந்த சான்றோரே
உங்களுக் கென்றன் உளமார் வரவேற்பு..
இன்னார் இனியரென எண்ணாமல், எல்லோரும்
ஒன்றாய்க் கருதி உறவாடு கின்றோம்நாம்
செய்ய தமிழ்க் கவிதை ஜீவன் நமக்கெல்லாம்.
மெய்யொன்றே இத்தளத்தின் வேராய் இருக்கிறது.
ஆணிவேர் தன்னை அறுப்போம் எனத்தம்முள்
வீணவா கொண்டுள்ள வெற்று மனிசர்கள்முன்
வேரைப் பலப்படுத்தி விண்ணோங்கச் செய்துள்ளோம்
காரியத்தை நாமிங்கே கச்சிதமாய் ஆற்றியுளோம்
ஆன்ற மரபின் அவசியத்தை மக்களிடம்
ஊன்றி நிறுத்தும் ஒருதொழிலைச் செய்கின்றோம்
இங்கே புதுக்கவியும் ஏற்றம் பெறுகிறது
எங்களுக் குள்ளே எரிச்சல் எதுவுமில்லை
சந்த வசந்தத் தளத்தில் எழுதுவதை
வந்தபெரும் பேறாய் மனங்கொள்வார் இங்குண்டு
கற்கின்றோம், கற்றுக் கொடுக்கின்றோம், கண்ணியத்தில்
நிற்கின்றோம், நெஞ்சில் நெகிழ்கின்றோம், இவ்வண்ணம்
சாதனை பெற்றுள்ள சந்த வசந்தத்தின்
மேதகு நண்பர்களை வேண்டிவர வேற்கின்றேன்
நண்பர்களே,
இனத்தாலே நீங்களிதில் இணைய வில்லை
இடத்தாலும் நீங்களிதில் இணைய வில்லை
கனமான பணத்தாலே இணைய வில்லை
கல்வியினால், பட்டத்தால் இணைய வில்லை
எனைத்தானும் பதவியினால் இணைய வில்லை
ஏதுநலம் எனக்கருதி இணைய வில்லை
தனிப்பீடுத் தமிழாலே இணைந்துள் ளீர்கள்
தமிழால்தான் இதுமுடியும் உண்மை, உண்மை.

பாரதி பற்றியிங்குப் பாப்பாட வந்துள்ள
ஊரறிந்த பாவலர்காள் உம்மை வர வேற்கின்றேன்

செய்வன யாவும் திருந்தவே செய்கின்ற
ஐவர் கவிஞர் அரங்கிற்கு வந்துள்ளார்

புலவர் ராம மூர்த்தி - புகழ்
பூக்கும் ஹரி கிருஷ்ணன்
நிலவும் பாடல் ரமணன் - நெஞ்சில்
நிற்கும் கவிஞர் ஜவஹர்
பலவும் கற்ற மேதை - புகழ்
பாங்குகொள் வ. வே.சு
நலமாய் ஐவர் பாட்டு -கேட்டு
நல்குவோம் பாராட்டு
இவர்கள்,

நேரும் இணையத்திலே சேரும் கவிகொடுத்து
நேசம் படைக்கும் அரும் பாவலர் - இவர்
நித்தம் எழுகலையின் காவலர் - மன
ஈரக் கசிவினிலே வீரக் கவிபலவும்
எண்னும் படிமொழியும் நாவலர் - இவர்
என்றும் கவியெழுதும் ஆவலர்- பொருள்
சாரப் புதுமைகளை ஆரத் தழுவிவரும்
தாளம் விரவிவரப் பூட்டுவார் - உளம்
தாவும் சுவைகள் பல ஊட்டுவார்- செலும்
நேரம் கடந்துவெகு தூரம் தொலைந்துவரும்
நீதம் தனைக் கவியில் கூட்டுவார் - நலம்
நேரும் கனவுகளைத் தீட்டுவார்

தொடரும்

kalam kader

unread,
Dec 15, 2012, 8:37:42 AM12/15/12
to santhav...@googlegroups.com
டனிராத ஏக்கம் தரும் சந்திப்பு என்றாலும், தமிழின் உச்சத்தைக் கவிதையினால் எட்டும் புலமை கொண்டோர் மத்தியில் மடலாடிக் கொள்ளும் மகிழ்ச்சி நிறைவானது.. 

அடுத்தச் சந்திப்பிலேனும் கலந்துக்கொள்ள முயற்சிக்கவேண்டுமெனும் எண்ணத்துடன்.. எல்லோருக்குமான வணக்கமும் அன்பும்.. 

-கலாம்

2012/12/15 Subbaier Ramasami <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta





--
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
 
மின்னஞ்சல் முகவரி: kalam...@gmail.com
                                       shaic...@yahoo.com
                                       kalaam...@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844
 
 

Subbaier Ramasami

unread,
Dec 15, 2012, 5:48:00 PM12/15/12
to santhav...@googlegroups.com
கவிஞர்களே நீங்களெலாம் காலத்து நெஞ்சத்
தவிசமர்ந்து வார்த்தைச் சதிராடும் வித்தகர்கள்
மூங்கில் குழாயில் முகிழ்த்த துவாரங்கள்
ஏங்கி வருங்காற்றின் எண்ணப் பிழிவதனை
வாங்கி இசையாய் வடிக்கும் பிரம்மாக்கள்
நெருப்புக்குக் குளிரெடுத்தால் உம்கவிதை கேட்கும்
நீள்காற்று வேகத்தைப் பெறவந்து பார்க்கும்
சிரிப்புக்கும் உருக்கத்தின் சிறப்புக்கும் நெஞ்சத்
தினவுக்கும் தீனிதரும் தெளிவுக்கும் ஞான
விரிப்புக்கும் அந்நாளின் நினைப்புக்கும் இற்றை
விளைவுக்கும் நாளையதன் நேர்வுக்கும் சொல்லின்
வரிப்பிற்கும் இயற்கையெழில் வனப்பிற்கும் நல்ல
வரலாறு பெறப்போகும் கவிஞர்களே வருக!

கடிவாளப் பார்வையல்ல கவிஞனே உன் பார்வை
காலத்தை இடத்தினையும் அளப்பதுன்றன் தேவை
முடிவான தென்றிங்கே ஏதொன்றும் இல்லை
முடிந்தவரை எட்டிப்பார், ஏதிங்கே எல்லை
அடிவானம் பக்கம்தான், கடல்சிறிய ஓடை
ஆளுகின்ற கற்பனைக்கீழ் இமயமொரு மேடை
குடைவானம் பக்கம்தான் , கூப்பிடு தூரம்தான்
கூப்பிடுதற் கறிந்தவரே, பாவலரே வருக!

என்சொல்லாம் தூதுவருக் காணை கொடுத்துள்ளேன்
இவ்வரங்கம் சிறப்பிக்க வருங்கவிஞர் தம்மை
பொன்வேய்ந்த அம்பாரி யானையின்மேல் ஏற்றி
புகழ்கின்ற கட்டியங்கள் தனித்தனியாய்ப் போற்றி
முன்னின்று வாத்தியங்கள் முழங்கிவர், மக்கள்
முன்வாசல் ஆரத்தி முறையாகச் சுற்ற
என்னென்ன வாசமலர் இவ்வுலகில் உண்டோ
இவர்களுக்கு மேல் தூவி வரவேற்க வேண்டும்

சாலுவைகள், தலைப்பாகை, பூமாலை, பாடல்
தரமாக எழுதுகிற தங்கமயப் பேனா
நாலுவகை ஒவ்வொன்றும் நல்கிடவே வேண்டும்
நையாண்டி மேளமொடு கும்மிகோ லாட்டம்
சீலமுயர் கரகம் பொய்க் கால்குதிரை ஆட்டம்
சிலம்பாட்டம்,ஒயிலாட்டம், மயிலாட்டம் கூத்து
ஞாலமதில் இதைப்போல கண்டதில்லை என்றே
நாவரப் புகழ்ந்திடவே வரவேற்க வேண்டும்

அரங்கத்தில் அலங்காரம் செய்வதற்கு மயனை
அழைத்துள்ளேன், மண்டபத்தின் முகப்பில்நவ ரத்னச்
சுரங்கஹ்ட்தை வைத்ததுபோல் சுடர்கற்கள் பதித்த
துய்யமணிக் கோபுரம் முன் நுழைவாயிற பக்கம்
அரங்கத்ஹ்டின் தலைவருக்கு நவரத்ன மேடை
ஆணிப்பொன்னால் செய்த அழகுமணிப் பீடம்
வரம்பெற்ற கவிஞருக்கு மயிலா சனங்கள்
வந்தவர்கள் அனைவருக்கும் மனம்போல் இருக்கை

இப்படியே நடக்குமென என்மேலே நம்பி
ஏற்கிறவர்க் கெண்ணம்போல் செய்கின்றோம் என்றார்
அப்படியே ஆகட்டும் எனச்சொல்லி யுள்ளேன்
அதனாலே நம்புங்கள், தூதுவர்கள் செய்வார்
எப்படியென்(று) இம்மியும்நீர் சந்தேகப் பட்டால்
இங்குள்ள இருக்கைகள்தாம், என்செய்யக் கூடும்
செப்பமுயர் கவிஞர்களே சுவைஞர்களே வருக
சிறப்பாகக் கவிதருக செவிதருக, வருக!

Subbaier Ramasami

unread,
Dec 15, 2012, 6:30:40 PM12/15/12
to santhav...@googlegroups.com
இன்றைய அரங்கின் இனிய தலைப்பு
“பாரதி”
பாரதிக்குப் பாட்டரங்கம், தமிழின் வெற்றிப்
பாட்டனுக்குப் பாட்டரங்கம், மறும லர்ச்சிச்
சாரதிக்குப் பாட்டரங்கம், புதிய பாட்டின்
சரித்திரத்தின் பாட்டரங்கம், சுதந்திரப்போர்
வீரனுக்குப் பாட்டரங்கம், எங்கள் நெஞ்ச
வேந்தனுக்குப் பாட்டரங்கம், நாட்டுப் பற்றுக்
காரனுக்குப் பாட்டரங்கம், கனலின் உச்சிக்
கவிஞனுக்குப் பாட்டரங்கம் காணு கின்றோம்

வானத்தை எதிர்கொள்ளும் மீசை, சற்றே
வால்விட்ட தலைப்பாகை, பார தத்தின்
மானத்தைக் காக்கின்ற வார்த்தைச் செவ்வாய்
மாகாளி குங்குமத்தை வழங்கும் நெற்றி
ஈனத்தை எரிக்கின்ற கூர்மைக் கண்கள்
இதயத்தைக் காக்கின்ற கறுப்புக் கோட்டு
ஞானத்தின் ஒளிகூட்டும் வதனம் எங்கள்
நாயகனாம் பாரதியைப் பாடுகின்றோம்

சித்திர பானு கார்த்திகை மூலம் தேசத்தில் ஓர் ஒளி தோன்றியது
சிந்தனை வாய்க்கால் செத்தை எரித்துச் சீரிய ஓர் நெறி ஊன்றியது
முத்திரையாக இத்தரைமீதில் மூலச் சுவடி எழுதியது
முன்னே நெளிந்த எளியவர் வாழ்வின் மொழியை அதுவும் தழுவியது

நின்ற சுடரின் நிழலில் இருட்டு நிம்மதியின்றிக் குறுகியது
நீண்ட காலம் தன்னை மறந்த நினைவு உளத்தில் மறுகியது
அன்று பிறந்த அக்கினிக் குஞ்சில் அன்னை விலங்கு கருகியது
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனுமோர் எண்ண எழுச்சி பெருகியது

ஏற்றிய தீபம் ஏற்றிய தாலே எத்தனை தீபம் எரிகிறது
எத்தனை காட்சி எத்தனை மாட்சி இந்த ஒளியில் விரிகிறது!
போற்றிய ஒளியில் ஏற்றிய பக்கம் புரட்டப் புரட்ட இனிக்கிறது
புதிதாய்ப் புதிதாய்ப் பிறப்பது போலப் புனிதம் நெஞ்சில் ஜனிக்கிறது


தோன்றிய ஒளியும் ஊன்றிய தாலே தோற்றம் இனிமேல் மறைவதில்லை
தொன்மை அண்மை கடந்த நிலையில் ஜோதி என்றும் குறைவதில்லை
ஆன்ற கவிதை ஆலய மாகும் அன்பால் வணங்கித் தொழுகின்றோம்
அந்த ஒளியின் அழகில் குளித்தோம் ஆடி ஆடிக் களிக்கின்றோம்

இனி,
வந்துள பாவலர் வார்ப்பர் கவிதைகள்
சிந்தையை உங்கள் செவியினில் ஏற்றுக!

Lalitha & Suryanarayanan

unread,
Dec 15, 2012, 9:39:00 PM12/15/12
to santhav...@googlegroups.com
மனனம் செய்து சொல்லி மகிழவேண்டிய அருமையான பாடல்கள்!

சிவசூரி.

2012/12/16 Subbaier Ramasami <elan...@gmail.com>

Swaminathan Sankaran

unread,
Dec 15, 2012, 11:32:32 PM12/15/12
to santhav...@googlegroups.com
ஆஹா! எண்ண கவிதை ஊற்று!
கவிஞரின் இலக்கணத்திற்கு என்றே எழுதியதல்லவா இவ்வரி:
'முடிவான தென்றிங்கே ஏதொன்றும் இல்லை'

நம் பாரதியின் வீச்சுக்கும் தாக்கத்துகும் முழுவதும் பொருத்தமான, நினைவில் என்று நிற்கும் வரிகள் இவை:


"நின்ற சுடரின் நிழலில் இருட்டு நிம்மதியின்றிக் குறுகியது
நீண்ட காலம் தன்னை மறந்த நினைவு உளத்தில் மறுகியது
அன்று பிறந்த அக்கினிக் குஞ்சில் அன்னை விலங்கு கருகியது
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனுமோர் எண்ண எழுச்சி பெருகியது

ஏற்றிய தீபம் ஏற்றிய தாலே எத்தனை தீபம் எரிகிறது
எத்தனை காட்சி எத்தனை மாட்சி இந்த ஒளியில் விரிகிறது!
போற்றிய ஒளியில் ஏற்றிய பக்கம் புரட்டப் புரட்ட இனிக்கிறது
புதிதாய்ப் புதிதாய்ப் பிறப்பது போலப் புனிதம் நெஞ்சில் ஜனிக்கிறது


தோன்றிய ஒளியும் ஊன்றிய தாலே தோற்றம் இனிமேல் மறைவதில்லை
தொன்மை அண்மை கடந்த நிலையில் ஜோதி என்றும் குறைவதில்லை
ஆன்ற கவிதை ஆலய மாகும் அன்பால் வணங்கித் தொழுகின்றோம்
அந்த ஒளியின் அழகில் குளித்தோம் ஆடி ஆடிக் களிக்கின்றோம்"

நன்றி.

சங்கரன்.





2012/12/15 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Dec 16, 2012, 1:21:32 AM12/16/12
to santhav...@googlegroups.com
முதல் அழைப்பு
முனைவர் சவகர்லால்
நெஞ்சக் குழிக்குள் நினைவுகளை
நீள எழுப்பித் தான்கண்ட
விஞ்சை எல்லாம் சொல்நிலத்தில்
விதைத்து வண்ணப் பயிராக்கி
நஞ்சை மகசூல் தான்கண்டு
நமக்குத் தரவே வருகின்றார்
கஞ்சம் இல்லா வார்த்தைகளால்
கவிமா மணிநம் சவகர்லால்

அவையிலே வந்து சவகர்லால பாடச்
செவியெல்லாம் பாவின்பத் தேன்

சவகர்லால் இங்கே பாடலை இட்டுவிட்டார்.

அவர்கவிதைக்குப் பின்னூட்டமாக நான் அங்கே சொன்ன பா

சந்தங்கள் இவருக்குச் சொந்தமென்றே
சவகர்லால் எனைப் பற்றிப் புகழ்ச்சி சொல்லி
விந்தைமிகு நம்குழுமம் தனையும் போற்றி
விவேகமுடன் கைவந்த கலையாய், இங்கே
செந்தமிழில் கவிதையினைத் தந்தார், ஆகா
சிறப்பதனை என்சொல்வேன், எப்பா நற்பா
முந்தியவை அறியேன்நான் என்ற போதும்
முனைவரிவர் பொற்கிழிகள் பெற்ற மேதை

தாக்குங்கள் கவலையில்லை, அன்பரே உம்
தமிழெம்மேல் விழுகையிலே மலராய் மாறும்
வாக்குக்குள் சிக்குகின்ற கவிதை வெள்ள
வல்லமையைப் போற்றுகிறோம், நீங்கள் செய்த
ஊக்கமிகு பாரதியின் பாடல் தந்த
உன்னதத்தை என்சொல்வேன், ஐயா இங்கே
ஆக்கமிகு கவிதைகளை அள்ளித் தந்தீர்
அத்தனையும் தேந்தேனென் றறிவித்தேனே!

நாட்டுச் சகோதரராய் நான்நின்றேன் என்றுரைத்த
பாட்டு, பரவசம் பார்

தெற்கில் உதித்த தினகரன் பற்றியே
விற்பனம் செய்தார் விழைந்து

சூரியனை, சாதியினைத் தொட்டிங்கே பாடிய பா
சாரம் மிகுந்த தமிழ்

சொல்ல முடியாத் துடிப்பாய்ச் சவகர்லால்
நல்கிய பாடல் நயம்.

Kaviyogi Vedham

unread,
Dec 16, 2012, 1:33:07 AM12/16/12
to santhav...@googlegroups.com
ரொம் ப அற்புதம் இலந்தைத் தலைவரே. சொல்லோட்டம், பின்னோட்டம்,கருத்துத்தோட்டம்
 யாவும் அழகு,
 யோகியார்

2012/12/16 Subbaier Ramasami <elan...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Dec 16, 2012, 1:52:28 AM12/16/12
to santhav...@googlegroups.com
அடுத்த அழைப்பு
முனைவர் வ.வே.சு

தாவரங்கள் பாடலினைத் தானறி வ.வேசு
தமிழ்க்கவிதை நெஞ்சங்கள் இணைக்கும்பத் தாசு
பாவகைகள் கொடுப்பதிலே அவரும்கில் லாடி
பரவசத்தில் ஆழ்த்திடுவார் பாட்டுக்கள் பாடி
காவினிலே தலையாட்டும் மலர்களதன் வாசம்
கவிதையிலே காட்டிடுவார் யாவுமட்ட காசம்
கூவுகின்ற நெஞ்சத்தின் குரலதனைக் கேட்டு
கொஞ்சுதமிழ் கொடுக்கின்ற வ.வே.சு வருக!

வந்துவிழும் சொல்லழகு வ.வே.சு. வந்திங்கு
தந்திடுவார் நல்ல தமிழ்

வ.வே. சு கவிதைக்குப் பின்னூட்டம்

காதுவழிப் பயணமாய்க் கவிதையினைத் தந்தார்
கனிவாக வரவேற்புப் பற்றிப்பு கழ்ந்தார்
நாதமெழு சுசீந்திரத்தின் தூண்களவை போலே
நாதத்தைப் பொழிகின்ற கவிதந்தான் என்றார்
சேதமிலா வகையினிலே தேசத்தைப் பாட
சிகரத்தை இமயமதும் நிமிர்த்தியதைச் சொன்னார்
பாதையிலே புதுமை செய்த பாரதியைப் போற்றிப்
பாட்டொன்றை இற்றையநாள் எழுதியதைத் தந்தார்

என்னால் குரலெடுத்தே இசைபாட முடியாது
என்றாலும் என்னஎன்சொல் இசைகூட்டத் தடையேது
தோழனாய் வந்தவன் துணைசெய் விதமெல்லாம்
ஆழமாய்ப் பாடலில் அளித்தனர் வ.வே.சு
பாரதி என் தோழன் - என்றே
பாடிய பா அருமை
சாரம் மிகுந்த தமிழ் - அது
சந்த வசந்தமடி

Hari Krishnan

unread,
Dec 16, 2012, 2:04:56 AM12/16/12
to santhavasantham


2012/12/16 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

ஆஹா! எண்ண கவிதை ஊற்று!
கவிஞரின் இலக்கணத்திற்கு என்றே எழுதியதல்லவா இவ்வரி:
'முடிவான தென்றிங்கே ஏதொன்றும் இல்லை'

ஒளிப்பதிவை யூட்யூபில் ஏற்றுவதற்குமுன் கொஞ்சம் எடிட் செய்ய வேண்டியிருக்கிறது.  மொத்தப் பதிவின் அளவு 16 ஜிபி.  நான்கைந்து மணி நேரம் பதிவாகி இருக்கிறது.  தலைவர் முன்னுரை ஒரு பகுதியாகவும், தனித் தனிக் கவிஞர்களின் வாசிப்பு ஒவ்வொரு பகுதியாகவும் துண்டாக்கி, கொஞ்சம் வெட்டி ஒட்டி செய்ய வேண்டியிருக்கிறது.  நாளாக ஆக, குறுகுறுப்பாக இருக்கிறது.  இன்னும் நான்கைந்து நாட்களில் முடித்துவிடுகிறேன்.  

கவியரங்கை நேரடியாகப் பாருங்கள்.  

Kaviyogi Vedham

unread,
Dec 16, 2012, 6:43:54 AM12/16/12
to santhav...@googlegroups.com
ஆகா.. வர்ராத எங்களுக்கும் குறுகுறு என்று எங்கோ செய்கிறது. ஆவலுடன் காத்திருப்போம்.
யோகியார்.

2012/12/16 Hari Krishnan <hari.har...@gmail.com>
It is loading more messages.
0 new messages