--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOin%2BB9DeXNXGTD_NoJ2EcwZjCK-R_OAz1ejXC%2BYNsMe-QrNzQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BUgLfB8-pSvQ%3D5mHwLae6YJZ%3D2sGZkwst_OovAcSoJUtA%40mail.gmail.com.
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்!”
On Jul 15, 2024, at 7:59 PM, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BUgLfB8-pSvQ%3D5mHwLae6YJZ%3D2sGZkwst_OovAcSoJUtA%40mail.gmail.com.
தோத்திரப் பாடல்கள் பக்தி [ராகம் -- பிலஹரி] பல்லவி பக்தியி னாலே -- தெய்வ -- பக்தியி னாலே. சரணங்கள் |
பக்தியி னாலே -- இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும், -- இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும், -- நல்ல வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத் தத்துவ முண்டாம், -- நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும், | (பக்தியி னாலே) | 1 |
காமப் பிசாசைக்-குதி கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத் தாமசப் பேயைக் -- கண்டு தாக்கி மடித்திட லாகும்; எந் நேரமும் தீமையை எண்ணி -- அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகி யெறிந்துபொய்ந் நாம மில்லாதே -- உண்மை நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும், | (பக்தியி னாலே) | 2 |
ஆசையைக் கொல்வோம், -- புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாச மறுப்போம்,-இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல் -- உண்மை முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி -- இன்பம் யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், | (பக்தியி னாலே) | 3 |
சோர்வுகள் போகும், -- பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும், நற் பார்வைகள் தோன்றும், -- மிடிப் பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும், -- பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும், -- பிணி தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும், | (பக்தியி னாலே) | 4 |
கல்வி வளரும், -- பல காரியங் கையுறும், வீரிய மோங்கிடும், அல்ல லொழியும், -- நல்ல ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும், சொல்லுவ தெல்லாம் -- மறைச் சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய் வல்லமை தோன்றும், -- தெய்வ வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம், உண்மை | (பக்தியி னாலே) | 5 |
பாம்பு மடியும் மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும், | (பக்தியி னாலே) | 6 |
சந்ததி வாழும், -- வெறுஞ் சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், ‘இந்தப் புவிக்கே -- இங்கொர் ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன் கந்த மலர்த்தாள் -- துணை; காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என் சிந்தை யறிந்தே -- அருள் செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும், | (பக்தியி னாலே) | 7 |