தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னும் தேன்.
இவ்வெண்பாவில் வரும் மருவா, தேன் என்னும் சொற்களை
மாணிக்கவாசகரே ஒரு வெண்பாவில் பயன்படுத்தியுள்ளார்:
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.
மருவுதல் என்னும் தமிழ்/த்ராவிட வினைச்சொல் ஏராளமான சொற்களைத் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் தந்திருக்கிறது. மருவு- = தழுவுதல், புணர்தல், பிணைத்தல், பொருந்துதல், கிட்டுதல், பதித்துவைத்தல் என்று ஒன்றுக்கொன்று நெருங்கிய பொருள்களில் இலக்கியங்களில் பரக்கக் காண்கிறோம்.
மாணிக்கவாசகர் ஆமாத்திய அந்தணர் [1]. அவர்களது முக்கியமான தொழில் மருத்துவம் என்னும் பண்டுவம் பார்த்தல். மருந்தைத் தேனில் குழைத்து அளிப்பவர்கள் மருத்துவர்கள். அதுபோல, பிறவிப்பிணிக்கு மருத்துவராக திருவாசகம் என்னும் தேனில் குழைத்து சைவசித்தாந்த மருந்தை ஊட்டியவர் மாணிக்கவாசகர் என்றாலும் திருவாசக பாயிரத்துக்குப் பொருந்தும். துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் மாணிக்கவாசகர் தேனில் குழைத்துத் தரும் பிறவிமருந்து எப்படிப்பட்டது எனப் புகழ்கிறார்:
நேரிசையாசிரியப்பா | ||
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேத மோதின் விழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகா லோதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுந ரன்றி மன்பதை யுலகின் மற்றைய ரிலரே. |
தேனில் குழைத்துத் தருதலாலும், உடலுடன் மருவி (பொருந்தி) நோய் நீக்குதலாலும் மருந்து என மருத்துவன் தரும் பண்டுவ (ட்ரீட்மெண்ட்) பொருளை அழைக்கலாயினர் தமிழர்கள். வழிவழியாக மருவி இருப்பது மரபு என்றும், அகக்காழொடு மண்ணை மருவி இருப்பது மரம் என்றும் மருவு- என்னும் வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்கள். சிறிய அளவில், புன்மை, மண்ணை புல்லும்/மருவும் ஸ்தாவரங்கள் புல் என்று பெயர்பெற்றன. புறக்காழொடு இருப்பன புல், அகக்காழொடு இருப்பன மரம். புல், மரம் இரண்டுக்கும் புல்லுதல்/மருவுதல் என்பது தாது. புல், மரம் இரண்டும் வளர வானில் இருந்து நிலத்தை மருவும் மாரி வேண்டும்.
மருவுதல் வினையில் இருந்து மருமம் = மார்பு (மார்வம், மார்). இதுவே, மர்மம் என்று நெஞ்சுக்கும், மர்மஸ்தானங்களுக்கும் பெயரானது.
மர்மன் - சமுதாயத்திற்கு மார்புக் கேடயம் போன்றவன் என்ற பொருளில் வர்மன் என்று க்ஷத்ரியர்களுக்குப் பெயர் வடமொழியில் உண்டானது.
தேசியகவி பாரதியார் மறைந்தபோது சரமகவி பாடிய ஒரே கவிஞர் சேலம் அர்த்தநாரீச வருமரே. மர்மக்கலை நாகர்கோவிலில் வருமக்கலை ஆகிறதும் நோக்கலாம். நெருநல் நென்னல் என்றாதற்போல, மருமம் = முலை, தாய்ப்பால். மாரில் சுரக்கும் பால் மருமம் மம்மம் என்றாகிறது.
பேச்சு வழக்கில் மம்மம் ஊட்டுதல் என்கிறோம். தயிர்ச் சோறு ஊட்டல் தை மம்மம் (அ) தச்சு மம்மம் எனவும், பருப்பஞ்சோறு
பப்பு மம்மம் என்றும் தாய்மார்கள் ஊட்டுகின்றனர். -மார் என்னும் விகுதி, - உ-ம்: கொங்குநாட்டின் காவியம் அண்ணன்மார்கதை -பொருந்துதல் கருத்துடையதுதான். நங்கைமார், தம்பிமார், ஆசிரியன்மார், அண்ணன்மார், ... இதில் எல்லாம் கூட்டாகப் பொருந்தியுள்ள தொகுதியினர் என்ற பொருள் மருவு என்பதில் இருந்து வருகிறது.
அன்றாடல் லக்ஷக்கணக்கான குழைந்தையருக்கு சொல்லி ஊட்டும் பப்பு மம்மம், தச்சு மம்மம் என்பது மருமம்/மம்மம் என்னும் தாய்ப்பால் உணவில் இருந்து குழந்தையுணவாக வளர்ச்சிபெற்ற சொல். ஏராளமான சொற்களில் சொன்முதல் ம் இழப்பதைக் காண்கிறோம்: உ-ம்: மலர்:அலர். அதேபோல,
மருமம்/மம்மம் - மாரில் சுரக்கும் தாய்ப்பால் அம்மம் என்றாகிறது.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=85&Itemid=61
பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்
வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து
மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
அம்மம் தருதல் = முலை கொடுத்தல் (பழைய வியாக்கியான உரைகளில்).
அம்மம் < மம்மம்/மருமம் (chest, milk from chest. Cf. alar < malar etc.,)
சட்னி அரைக்கும் குழைவிக்கல் தட்டையான கல்லை மருவுகிறது.
எனவே, குழவிக் கல் மருவும் கல் = மர்மி/மம்மி. இதனை அம்மிக்கல் என்கிறோம்.
அம்மி < மம்மி/மர்மி (மருவுதல் என்னும் வினைச்சொல்லால்). அலர் < மலர் போலென்க,
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் - ஆண்டாள்
வலம்கொடு தீயை வணங்கினர். வந்து.
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி.
இலங்கு ஒளி அம்மி மிதித்து. எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். - கம்பர்
அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். - ஔவை
கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை’
- ஓரடிக்குள் சொல்மாறு பழம்பாட்டு
நா. கணேசன்
[1] திருவாசகம் அளித்த மாணிக்கவாசக சுவாமிகள் ஆமாத்திய அந்தணர் மரபினர். ஆமாத்தியர் என்னும் வடசொல் அமைச்சர் என்று தமிழாக்கம் செய்கிறார்கள் திருவள்ளுவர் போன்றோர். படைப்பயிற்சி, போரில் நிகழும் காயங்களுக்கு வைத்தியம் - இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் (கன்கஷன் படம் பார்த்தால் அமெரிக்கன் ஃபுட்பால் பின்விளைவு புலனாகும்), war zone medicine - செய்தவர்கள் மங்கலர்கள். மங்களாதிராசன் என்று மங்கலர்கள் பல கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகின்றனர். மருத்துவர் சமூகம் என்று அழைக்கப்படும் இவ் அந்தணர்களின் சமயப் பணிகளை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம்.
பாண்டிநாட்டுப் பொதிகைமலையின் தட்சிணாமூர்த்தி, சோழநாட்டுச் சிதம்பரத்து நடராஜர் வழிபாடுகளை ஒருங்கிணைத்து ஆகமவழி நிற்கும் சைவசித்தாந்தம் உருவாக்கியதில் மாணிக்கவாசகர் பங்கு பெரிது. வடக்கே இருந்து வந்த கோகழிச் சைவ ஆகமங்கள் மரபையும், தமிழ்ப் பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைத்தவர் மாணிக்கவாசகரே. எல்லாக் கோவில்களிலும் நடராஜர் அருகே மாணிக்கவாசகர் இருப்பார். மார்கழி உற்சவத்தில் திருவெம்பாவை நடராஜருக்குப் பாடப்பெறும். மாணிக்கவாசகர் குலம் ஆமாத்திய அந்தணர் குலம். அமாத்திய அந்தணர் என்னும் மங்கல அந்தணர்கள் வரலாற்றை விரிவாக ’மாணிக்கவாசகர் மகாசபை’ மாநிலத் தலைவர் நந்தன் என்கிற நாமக்கல் தங்கம் விசுவநாதன் “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று” நூலில் எழுதியுள்ளார். நாமக்கல் நந்தன் கேட்டுக்கொண்டதன் பேரில் எஸ். இராமச்சந்திரன் தலைமையில் கல்வெட்டாய்வாளர்கள் சென்று கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆவுடையார்கோயிலின் 13-ஆம் ஆண்டுத் தோற்றத்தை விளக்கியுள்ளனர். ”மாணிக்கவாசகர் கட்டியதல்ல அக்கோவில்” என்றும் தெளிவுபடுத்தியுளர் (தினமலர், மார்ச் 1, 2014). இசுலாமியரும் வந்து தொழும் குதிரை ராவுத்தர் மண்டபத்தில் தூண்களுக்கு மேலே பாவுகற்கள் பாவி உள்ளனர். இதன் காலம் கி.பி. 1581. பத்திரிகைகளில் வெளிவராத ஆவுடையார்கோவில் பிற்காலக் கல்வெட்டுக்கள் படிப்போமா? கல்வெட்டறிஞர் வை. சுந்தரேசவாண்டையார் 50+ ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்வெட்டுப் பாடல் இதுதான்:
கட்டளைக் கலித்துறை
திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறுநான்கு
உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப்
பதிக்கும் கனக சபைமண்ட பந்தனிற் பாக்கலெலாம்
மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!
மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். ’கண்காண வேமுகித் தாள்யோக நாயகக் காரிகையே’ என அம்பிகையும்,
‘பலஞ்சேரும் நாளில் கனக சபைதனில் பாக்கலெலாம்
நலஞ்சேர வேமுகித் தானெங்கள் ஆளுடை நாயகனே’
என ஆளுடையார் ஆத்மநாதரும்,
‘பாக்கலெலாம்
வேடிக்கை யாகச்செய் தானெங்கள் கோபுர வேலவனே’
ஆக, மணிமொழியார், வேலன் போன்றோர் செய்த தெய்வ அருளால் பாக்கல் பாவிய செய்தி கவித்துவமான செய்யுள்களாகச் சொல்லப்பட்டுள்ளது. கி. வா ஜகந்நாதன் அவர்களும் ‘வாருங்கள் பார்க்கலாம்’ என்னும் நூலில் இந்தப் 16, 17-ஆம் நூற்றாண்டுப் பாடல்கள் ’மாணிக்கவாசகர் கட்டியது ஆவுடையார்கோவில்’ என்பதன் சான்றாகா என விளக்கி எழுதியுள்ளார். 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் மறைந்தபின் 13, 14-ஆம் நூற்றாண்டில் திருவிளையாடல் புராணக்கதைகள் கட்டப்பெற்றுச் சிதம்பரத்தையும், பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைக்கும் வகையில் இந்த இரு கோவில்கள் இவ்வூரிலே ஏற்பட்டுள்ளன. பழைய திருவிளையாடற் புராணம் (கி.பி. 1200) பின்னர் கல்லாக உருப்பெற்றது ஆவுடையார்கோவிலிலே! இப்போது 200 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை முழுதும் தனிநூலாக வெளிவர வேண்டும். எங்குமே இல்லாத வகையில் தென்னன் (தக்ஷிணாமூர்த்தி) கோவிலாக தெற்குப் பார்த்தவகையில் ஆவுடையார்கோவில் மூலஸ்தானம் டிஸைன் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சம். தென் (பொதியில் தென்னன்), வட (காளாமுக சைவம், ஆனந்தநடராஜர் தோற்றத்தில் அவர்கள் பங்கு) நாடுகளின் சைவங்களை எல்லாம் தொகுத்து, synthesize செய்த திருவாதவூர் அடிகள் பேரில் அவர் மறைந்து ஓரிரு நூற்றாண்டுகள் சென்றபின்னர் புராணக்கதைகள் திருவிளையாடல் புராணமாகக் கட்டப்பட்டு, அவருக்காகப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட நினைவுச்சின்னக் கோவில் ஆவுடையார்கோவில். ஆனால், அவர் குருந்த மரநிழலில் குருமூர்த்தியைத் தரிசித்ததாய் வரலாறும், இலக்கியங்களும், மரபும் காட்டும் திருப்பெருந்துறை சோழநாட்டில் இருக்கிறது. சோழநாட்டின் ஒரு பகுதியான மிழலைநாடு அது என்று சங்க இலக்கியங்கள் விவரிக்கும் பிரதேசம்.
http://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.html
On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:அலர்முலை ஆகம்.தான்மலர்முலை ஆகம் இல்லைமலர்முலை > அலர்முலை.மலர்முலை:”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்”------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).”மலர்முலை மடவார் கலவிகா முறுநருமிரண்டறு கலப்பி னின்பநச் சுநருமினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)கணேசருநான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்“ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியதுஅலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்குஇல்லை. மலர், மாலை என்பது ஆதி. அலர்ந்தது < மலர்ந்தது.ஒரு சொல் சங்க இலக்கியத்தில் வந்துவிட்டால் உடனே அதுதான் பழசு என்பதெல்லாம் இல்லை.வேத இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம். ரிக்வேதத்தில் இல்லாமல், பின்னால் வரும்இலக்கியங்களில் உள்ள சொற்களே பழமை எனக் காட்டியுள்ளனர்.அதுபோல், மலர்முலை ஆகம் > அலர்முலை ஆகம்.மருமம்/மம்மம் > அம்மம் ஆதற்போல.நா. கணேசன்அவற்றிலும்,மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்என்பதைமருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத்எனவும் வாசிக்கலாம்.நீங்க வினவுது ஏன் ஆரம் மாரம் ஆகலை என்பது போல் இருக்குமூன்று எனும் சொல் மூனு, மூடு, மூரு என கொச்சைத்தமிழ்,தெலுகு கன்னட மொழிகளில் திரியும். ஆனால் மகரம் திரியவில்ல்லை.,
NG> மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.மடுப்பு > அடுப்பு
அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குதுஇதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்கமடுத்தல், மடையன்/மடைச்சி (வண்ணான் புலையன்/புலைத்தி என்பது போல),மடைப்பள்ளி, மடம், மடுப்பு, ....
மடுப்பு = மூட்டுதல், அடைவு ; நிறைப்பு ; உண்கை, சேர்த்தல், ....நீரை நிரப்பிச்/மூட்டிச் செல்லும் மடை. மடுத்துச் செல்தலால் மடை.சமையல்காரனுக்குப் பழைய பெயர் மடையன்/மடைச்சி.அடுப்பில் தீ மடுக்கும் இடம் மடைப்பள்ளி. அங்கேபக்தர்களுக்கு உணவு கிடைக்கும். எனவே, மடம் (< மடுத்தல் = சமைத்தல்).மடுத்தல் = அடுப்பில் ஏற்றித் தீ மூட்டிச் சமைத்தல்.எனவே, மடுப்பு > அடுப்புவளைத்து நின்று ஐவர் கள்வர்வந்துஎனை நடுக்கம் செய்யத்தளைத்து வைத்து உலையை ஏற்றத்தழல் எரி மடுத்து நீரில்திளைத்து நின்று ஆடுகின்றஆமைபோல் தெளிவு இலாதேன்இளைத்து நின்று ஆடுகின்றேன்என்செய்வான் தோன்றினேனே.சமணமுனிவர் தோலாமொழித் தேவர்சூளாமணியில் மடுப்பு > அடுப்பு என்றசொல்முளை காட்டும் பாடல் தந்துள்ளார்:
மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ
மறிகட லறவிறைத் திடுகோ
வுலைமடுத் துலகம் பதலையா வூழித்
தீமடுத் துயிர்களட் டுண்கோ
சிலையிடத் துடையார் கணைவலத் துடையார்
சிலர்நின்று செய்வதீங் கென்னோ
நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே
னேடுமின் சென்றென நின்றான்.
(இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத்
தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ!
அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப்
போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி, உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு
பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ
மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச்
சமைத்து உண்பேனோ, (என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,)
சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் -
அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று
செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?,
நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு
நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர்
சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.)
அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச்
செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல்
தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின்
அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க.
நா. கணேசன்10 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:29 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:மகர ஒலி என்றும் மருவாது.பொருள் என்ன?அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும் திறந்தலா ஒலிப்பது.பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லைஅதுபோல் ஓகாரமும்மகள் - மோளே(மலையாளம்)கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.ஆம் = ஓம் ( ஈழம்)ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை
Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917
*Also in early Upanisads "Om" means just "yes," equivalent to *"tathaa." Is it possible that it could have first just been an *affirmative particle that later gained its cosmic signifcance *and was not fabricated from the vowel tables of the Sanskrit *alphabet? Please see the important publication establishing 'Om' to be of Dravidian origin: Parpola, Asko, 1981. On the primary meaning and etymology of the sacred syllable ôm. Pp. 195-213 in: Asko Parpola (ed.), Proceedings of the Nordic South Asia Conference held in Helsinki, June 10-12, 1980. (Studia Orientalia, 50). Helsinki: The Finnish Oriental Society. Summary of the main theses: Original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ = 'yes' also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm is expressly said to be a word expressing agreement. Etymology: < Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)', â labialized by the following m as Jaffna Tamil ôm < âm.
|| செய்யுட்கண் ஆகாரம் ஓகாரமாதல்
505. யாப்பினுள் ஆ, ஓ வாகலு முளவே.
(இ-ள்.) செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிதலுமுளவா மென்க.
(வ-று.) வில்லான், வில்லோன், தொடியான், தொடியோன், நல்லார், நல்லோர்.
(வி-ரை.)
‘பெயர்வினை யிடத்து னளரய ஈற்றயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே’ (பொது - 2)
என்ற நன்னூல் நூற்பாவைக் கொண்டு இதன் கருத்தை நன்கறியலாம்.
எடுத்துக்காட்டில் னளர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதற்கு மட்டுமே உள்ளன.
‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) என்பதால் யகர ஈற்றயலும் ஆ
ஓவாகும் என அறியலாம். (48) ||
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!””நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
திருவாசகம் சிவபுராணத்தில்”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைமுந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”
நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,
On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு > அடுப்பு
”போர் அடுதானை சேரலாத!”
”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”
அது சரியே. ஆனால் நான் கேட்பது,அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?
கண்டேன் சீதையை - இரு ராமாயணங்களிலும் :
த்ருஷ்டா ஸீதா மஹாபாஹோ ......
த்ருஷ்டா தேவீ ந ஸந்தேஹ: .......
(வால்மீகி)
கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் (கம்பர்)
மணி ஸ்ப²டிக முக்தாபி⁴: மணி குட்டிம* பூ⁴ஷிதை: |
தப்த ஹாடக நிர்யூஹை: ராஜத அமல பாண்டு³ரை: || 5-3-9||
(வா0 ரா0)
மணி கொள் குட்டிமம்* மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து .......
(க0 இரா0)
மணி குட்டிமம் - மணிகொள் குட்டிமம் (pials inlaid with precious stones)
இரண்டும் சுந்தர காண்டத்தில்.”
ரொம்ப பாடுபடுறீங்க. நன்றி
17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:23 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டாநம் கொங்கு மண்டிலத்தில் அதிகம் புழங்கும் ஒரு சொல்லையே தருகிறேன்.மட்-/மாட்- என்ற தாதுமுளை பொருந்து-/பூசு/-இணை- என்ற பொருளுடையது.மாடம்/மாடி. மாட்சி/மாண்பு =உயர்ச்சி, பெருமை, அழகு.மாண்டார் = உயர்ந்த நிலையில் வாழ்பவர்கள்.மட்டி/மட்டம் = oyster. அதனால் மட்டக் களப்பு, இதனை சிங்களத்தில்மடக்களப்பு என எழுதுவர். மரத்தாலாய சித்தம்பலம் சிதம்பரம்,வெங்காலூரில் காட்டுமல்லேசுரம் காடுமல்லேசுரம், கார்த்திகை கார்திகை,அரத்தனம் அரதனம் (ரத்னம்), நக்கர் நகர் (திருநள்ளாற்றில் நகவிடங்கர் லிங்கம்- நேற்று நெட்ரம்பாக்கத்தில் கண்ட லிங்கம் வருணனைக் குறிப்பதாக தெரிகிறது.)என ஃபோனடிக் ஸ்க்ரிப்ட்ஸ் எழுதலை ஒத்தது - மட்டக்களப்பை மடக்களப்பு என எழுதல்.
மட்டனம் maṭṭaṉam, n. . Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கல வைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45).
மட்டிகை maṭṭikai, n. Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks; களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலியவற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.)
Oyster = மட்டி/மட்டம் (due to its joined shell). ஆய்ஸ்டர்கள் மிகுந்த பகுதி மட்டக்களப்பு.களர் நிலம் - களப்பு. Batticola எனப்படும் ஈழ நாட்டு ஊர். மரமணம் > அரமணம் என்னும்ரமண தேசம், மரமண > வரமண > Burma என அழைக்கப்படுதலுக்கு மட்டக்களப்பு Batticolaஆதலை ஒப்பிடுக. மண்ணான்:வண்ணான், மருமம்:வரும- (க்ஷத்ரியர் பெயர், உடற்காப்புக்கலை)போல. மட்டி/மட்டம் ஆய்ஸ்டர்-மீனின் ஓடு. எப்பொழுதும் ’ஆய்ஸ்டர் ஷெல்’ மட்டித்து (= சேர்ந்து,
இணந்து, பூண்டு) இருப்பதால் மட்டச்சிப்பி மீன் எனப்படுகிறது. அதனால் கடற்கரை நகரப் பெயரும்.
மட்டிச் சிப்பி = Oyster shell. இதே வேர்தான், தேங்காய் மட்டைமேலே, சேர்த்துக்கட்டிய வீடு மாடி/மாடம். அட்டாலை/அட்டாலி - மேல்வீடு (< மட்டாலை).
அட்டிகை < மட்டிகை (cf. மட்டி = oyster shell); அட்டியல் < மட்டியல்
அட்டிகை aṭṭikai, n. < K. aḍḍike. cf. அட்டு-. Closely fitting necklace of gold wires or of precious stones; கழுத்தணிவகை.அட்டியல் aṭṭiyal, n. [T. aḍḍigalu.] Closely fitting necklace. See அட்டிகை.அட்டியல் < மட்டியல்.அட்டாளை aṭṭāḷai, n. < aṭṭāla. Covered platform for watching a garden; காவற்பரண். (J.)அட்டாளைப்பெட்டி aṭṭāḷai-p-peṭṭi , n. < id. +. Case of shelves; தட்டுக்கள் உள்ள பேழை. Loc
--ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது, எனவே: அட்டாளை < மட்டாளை.கோத்தல் என்னும் வினையால் தமிழர் உடையான கோமணம்/கோவணம் பெயர் பெறும்.கௌபீனம் என்னும் வடசொல் இதுதான். பழனி முருகவேள் தரித்துநிற்பது. கொங்கு/கங்கு எனில்வளைவு வளைவுடைய ஆண்கள் அணிகலன்: கங்கணம். பூர- = தண்ணீர், எனவே பூரண (கும்பம்).இதுபோல் -ண விகுதிபெறும் சொற்கள்பல. சம்மணம் > அம்மணம், மட்டணம் > அட்டணம் பார்ப்போம்.பண்டை இந்தியாவில் மக்கள் இருக்கையில் அமரும் முறைகள் இரண்டு:(1) சம்மணங்கால் - சமழ்த்துதல்/சமட்டுதல்/சவட்டுதல் வினை போலும்.சமணம் (ச்ரமணம்) என்ற சொல் இதிலிருந்தாகலாம். தீர்த்தங்கரர், புத்தர் தியானத்தில் அமரும்நிலை. எனவே அவர்களுக்கு ஆழ்வார் எனப் பெயர். ஆழ்ந்த தியானம் ஆழ்வார். இருகாலும்மடங்கி இருப்பது சம்மணம் போட்டு உட்காருதல். சம்மணம் > அம்மணம் ‘nude' சமண அடிகளைக்கண்டு மக்கள் கொடுத்த பெயர். இதே போல, இன்னொன்று, நிர்வாணம் ‘nude' இதுவும் சிரமணசமயங்கள் கொடுத்த பெயரே. தவசிகள் அமரும் நிலை சம்மணங்கால் போட்டு உட்காருதல்.உட்கார்தல் = உட்கு ஆர்தல் (உட்கு - உள்ளுக்கு) - திருவாய்மொழி ஈடு.(2) அரசர்களும், மடத் தலைவர்களும் உட்காரும் நிலை அதிகார தோரணை காட்டுவது.இதனை, அட்டணங்கால் போட்டு உட்காருதல் என்கிறோம். 4300 ஆண்டுக்கு முன்னேகொற்றவையின் பூசகன் கதிர மரத்தில் அட்டணங்கால் போட்டு அமர்ந்துள்ளான்:Figure 11 inAlso see, the Gharial croc "Proto-Pasupati" has the same "shaman" in the same mode,மட்- என்னும் தாதுவினால் மட்டை (தேங்காய் மட்டை), மட்டி/மட்டம் (ஆய்ஸ்டர் சிப்பி ‘shell'ஒன்றின் ஒன்று இருத்தலால்), மட்டனம் - பூசுதல், ... போல, மட்டணம் - ஒன்றின் மேல் ஒன்றுபொருத்துதல். எனவே அட்டணங்கால் < *மட்டணங்கால், அட்டாலை < *மட்டாலை, ...நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.