இதழ் நெகிழும் மலர்வனம் இதில் எழுமோ கவிமணம்!

644 views
Skip to first unread message

kirikasan

unread,
Aug 29, 2014, 4:29:27 AM8/29/14
to santhav...@googlegroups.com
எனது முன்னைய இழையான  ”கவிதைச்சோலையில் கனவுப்பூக்கள்” மிக நீண்ட 
இழையாகப் போய்விட்டதால் இந்த புதிய இழையை தொடங்குகிறேன்.
இதை தொடங்கும் போது புதிய உற்சாகத்துடன் நிறைய மலர்கள்பூக்கும் என்ற 
நம்பிக்கை மனதில் கொண்டு  தொடங்குகிறேன்.
-அன்புடன் கிரிகாசன்


   ஆலமரத்தடிப் பிள்ளையார்


அழகான ஆலமர நிழலோடு அமர்ந்தாலும் 
அதிகாரம் உலகாளல் உனதா
பழமொன்றைத் தர ஈன்ற சரிபாதி தம்மில் கண்டோர் 
பகிர்ந்தந்த பழம்பாதி யளியா
முழுதான துனக்கீந்த முறையாலே முகம்கோணி 
மலைமீது  அமர்ந்தோனும் பெரிதாய்
தொழ ஆறுபடை வீடு தரைமீதில் குடிகொள்ளத்
தருவோடு வந்தமர் ஐங்கரனே

நிலைகொண்ட பொழுதே நின் நினைவோ நல்தெளிவாக
நெறிகண்ட தொரு உண்மை வரம்தா 
தலைதானும் கரியாக இருந்தாலும் மனம்வெள்ளை 
தருமத்தின் வழிகேட்டோம் தவறா
அலைகூந்தல் தனிமோந்தும் அதன்வாசம் எதுவென்றே 
அறிகின்ற எதுவேட்கை அறியா
தொலைவானில் இருந்தாலும் தொழ அண்மை எனநாடித்
தருதாரும் நிழலமர் கணேசா

நனிதேனை மறைவாக நடுவாயில் இனிதேந்தி
நறுவாசம் தனைநாடி வருவோர்
கனி காணத் துளைவண்டின் கனிவாம்முத் தங்காணக்
கலையோடு பல வண்ணப்பூக்கள்
தனியாகக் குளிர்தென்றல் தலை நீவி தொட்டோடத்
தடுமாறி உடலாடும் தனமாய்
பனிதானும் வீழிதழில் பளிங்காக உருண்டோடும்  
படியான பட்டுமலர் பொலியும்

இனிதாம்நல் லியற்கையின் எழில்தேசம் தனைக்கொள்ள
இரவோடு நிலம் சேரும் கயவர்
தனிக் குரோத நினைவோடு தமிழ்வெல்லப் பகைவந்தும்
தரும் பாதி உயர்தந்தை மனமாய்
குனியாதோர் இனம்கொண்ட ஒருதேசம் தனிற் பாதி
குடிகொள்ள இடமீந்த நிலையேன்
வனிதா அம்மணி பக்கம் இருதாரம் எனக்கொண்டும்
வாழ்வழியும் எமைக் காக்கவில்லை

அறுவீடு கொண்டாலும் அவன்வாழ நல்லூரில் 
அழகான கோவில்லம் கண்டோம்
பெறுவாழ்வில் பகைமேவிப் அரிதாம் நம்தமிழ்தேசம்
பறித்தாளப் பாராது நின்றார்
பொறுமைகொள் குணங்கொண்டும் பரிவோடெம் உயிர் காவாய்
பணிந்தன்பில் சுடுமோ தகங்கள்
கொறித்தே நல்சுவைகாணக் குறுவால்கொள் எலியேறிக்
குவலயம் தனில் வந்து அருள்தா

kirikasan

unread,
Aug 29, 2014, 10:08:37 AM8/29/14
to santhav...@googlegroups.com

                  காதலின் வலிமை பெரிது
 
காதலினைக் களவென்றும் குற்றம் என்றும்
 கன்னியரும் காளையரும் கருத்தில் ஒன்ற
மோதலினை உருவாக்கும் பெற்றோர்களே
  முற்றுமது தவறில்லை புரிந்துகொள்வீர்
சாதலினை ஏற்றாலும் ஏற்போம் அன்றி 
  சாகவிட மாட்டோம் எம்காதல் என்றே
பேதமதைக் கொண்டுயிரும் துச்சமென்று
  பிள்ளைகளும் எண்ணுவதன் ஆழம்நோக்கும்

காதலென்ப இயற்கையதன் வேகத்தூண்டல்
  கடிததனை தடுத்திடில் கரணம் போடும்
ஊத வருங் காற்றோடி உள்ளூர் மூச்சாய்
  ஓட்டையிட்ட தேகத்தில் உணர்வுத் தீயை
பாதகத்தை செய்தும் அனல் பற்றித்தீய்க்கும்
  பட்டதிலே ஈருயிரும் பாதை தேடும்
சேதமிடும் உள்மனத்தில் தீயாயால்ல
  சீறிஎரி மலை  போலத் தேகம் காணும்

வேதனையை உருவாக்கும் விளையும் பருவம்
  வீறுடனே செயலாற்றும் இளமைத்தேகம் 
சோதனையே அறிவென்ப துச்சமாக்கி
   சூழ்நிலையை மறந்துவிடச் செய்யும் தாகம்
ஆதரவு அப்போதே அவர்க்கு வேண்டும்\  
  அந்நியராய் எண்ணியதை அடக்கப்போயின்
போதனைகள் தன்னும் உதவாமற் போமாம் 
  பெண்மையுடன் ஆண்மை தனும் பிரியாதொன்றும்

உடல் குடைந்தும் உள்ளத்தில் வேட்கை மீறி
  உடைத்தெறியும் கட்டினை மாநதி போல்பாயும்
குடல் பிசையும் குறுகுறுக்கும் கொல்லும்மேனி
  குற்றமற்ற மதிதன்னை  கொடுமைசெய்து
விடலை எனும்பருவத்தில் விளையுந் துன்பம்
   வேற்று மனமாக்கி வெறிகொள்ளச் செய்யும்
அடக்கியதை நிறுத்தவெனக் காட்டு தீயை \
 அணைத்துவிடக் குடம்நீரை அதன்மேல் ஊற்றா,

காதல் மனம் இயற்கையதன் இச்சைத் தூண்டல்
  காதலெனும் உணர்வில்லா வாழ்வேயில்லை
காதல் வரும் வயதுக்கு கட்டுப்பாடு 
   காணும் வயதிது வென்று கணக்குபோடல்
வாதமதும் செய் தென்ன வைத்தோர் எல்லை
  வழமையிது என கூறி வாழ்வை மறுத்தால்
பாதகமே பால் ஈர்ப்பால்  பாதைமாறிப்
  பைங்கிளிகள் வானெழுந்து பறக்கக் கூடும்

காதல் செய திருமணத்தை காத்தே  நிற்போர்
  கதிர்வயலில் முற்றிப்பொலிந்தாடும்போது
பதமெனவே அறுவடைக்கு பாதைசெய்யா\
  படிப்புடனே வேலை பணம் பதவியென்று
பதரெனவே ஆகிப் போம்வரையும் காத்தே 
 பலமற்ற சமுதாயக் குலத்தை செய்யா
மிதமுடனே உடலிளைமை காணும்வேளை 
   மதிவீரம் கொள் வம்சம் மலரச்செய்வீர்

உரிமை தனும் உமக்குண்டு பிள்ளை வாழ்வை
 உருப்படியாய் வழிகாட்டும் தேவைஉண்டு
இருந்திடினும் காதல் தன்னில் இளையோர் மீது 
   எடுத்தவுடன் எதிர் நிற்கும் குணத்தை கண்டேன்
விரியு;லகில் வாலிபத்தை பிள்ளை தொட்டால்
  வயதெல்லை  தனையடையும் போதே மக்கள்
உரிமையுடன் ஒன்றிணைய விட்டே நிற்பர்   
  உலகினிந்த நீதி நமதுள்ளம் ஏற்கா

தனிமனித  பண்பாடும் தமிழுக் கென்றோர்
  தரமுயர்ந்த நாகரிகத்  தலைமுறையுண்டு
எனில் நமது வயதெல்லை இளையோர்க் கிங்கே
  எழுதிவைத்த எல்லையொன்றிருந்தபோதும்
கனிபழுத்து வீழும்வரை காத்தல்போலும்
  கல்யாணத்திருநாளும் கடக்கும் எல்லை
புனிதமுடன் கொள்நாளைக் கனவோ என்று
       பிறிதெண்ணிப் பிரியும் இவர் பிழறல் தவிரும்
 
************************

kirikasan

unread,
Aug 30, 2014, 5:04:39 AM8/30/14
to santhav...@googlegroups.com

எவரையும் (பெண்களை) புண்படுத்தும்நோக்கம் கிடையாது மன்னிக்கவும்

கனவு முடிந்தபோது  அவள்!


அன்று: 

இளங்கனி சுவையும் இதழ்மலர் அமுதும் 

எடுத்துரை மொழியும் இனிதெனும் ஊற்றாய் 

தளதள பருவம் தலை நிறை கேசம் 

திடமுறு விழிகூர் தெறி குளுபார்வை 

குளமலர் விரிவாய்க் குமுதமென் வதனம் 

குட வளை யிடையில் கொடிதெனும் நளினம் 

அளவில சுகமென் றைம்புலன் துய்த்தே 

அகிலமும் நிலையென் றறிவழிந் திருந்தேன்


இன்று: 

அழகுறு குழலோ பனிமலை வடிவாய் 

விளைகடல் சங்கின் இயல்நிறம் மருவி 

குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை 

அளவினில் மெலிதாய் அகமிடை தளர 

நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி 

பொழிலுடை அலையின் பொலிவடிவேந்த 

கழலுறு மணியின் கலகல நாதம் 

முழுதென இலதாய் மெதுநடை பழக 


சுழலொரு புயலின் செறிவலி குறுகி 

தழலெழ மனதை தகித்திட வைப்பாள் 

முழமொரு பூவை முகர்வினில்வாசம் 

எழ முடிவைத்த இயல்பது கனவாய் 

தளதளமேனி தகையிளந் தாடத் 

துளைவிழி யம்பு தொடுவலி குன்றிச் 

சுளை பலகனியின் சுவையிவள் அதரம் 

விளை வெனும் புகழும் விரயமென்றாகி 


தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை 

அடியெடு நடையும் அருகிட விழல்போல் 

துடிசெய லடங்கித் துறுதுறு பார்வை 

வெடித்திட முயலும் வெறியுணர் வோய 

கொடியிடை ஒடிவும் கணை மதன் மலரும் 

வடித்திடு சிலையாய் வந்தவள் இன்றோ 

அடித்திட அரவம் அதன் கிடைபோலே 

நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில் 


எடுத்திட முடிவாய் இளமையை நம்பி 

துடுப்பிழந் தோடம் திசைவிடும் நிலையாய் 

தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி 

கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம் 

அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி 

விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப் 

படுத்திடக் கனவும் பகலினில் தினவும் 

எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம் 


வெய்யினில் காய்ந்து விழுமழை புரவி 

பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி 

செய்வினை வஞ்சம் திரிந்திடமொழிந்து 

கையினில் களவும் கனிமலர் பேச்சும் 

மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு 

மெய்யிடை வாசம் மிகச் சுவைகண்டு 

தெய்வம் மறந்து திருவருள் வேண்டாம் 

உய்வது விட்டே உலகிடை நலிந்தேன் 


*************

Kaviyogi Vedham

unread,
Aug 30, 2014, 11:22:29 AM8/30/14
to santhavasantham, kana...@gmail.com
 My dEar Kirikasan,
 ASeers. This is very urgent. Pl send a new GOOD poem for our Shanmuga kavacham DeepavaLi malar, AS yu did last year!. Thanks,
 YUrs truly,
Yogiyar

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kirikasan

unread,
Aug 30, 2014, 12:20:03 PM8/30/14
to santhav...@googlegroups.com, kana...@gmail.com
ஐயா  தாங்கள் கேட்டுக்கொண்டதன் படி இப்பொழுதுதான் எழுதி முடித்தேன் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால் எப்படி இருக்கவேண்டுமென்று தெரியவில்லை. இதைபார்த்து  சரியானதா என அவசியம் பதில்தரவும் திருத்தி அல்லது விரைவாக வேறெழுதி தருகிறேன்

kirikasan

unread,
Aug 31, 2014, 2:55:26 AM8/31/14
to santhav...@googlegroups.com
ஒருபெண் தன் தந்தைமீது ஏற்பட்ட ஏதோ ஒரு சிறு காரணத்துக்காக சினம்கொண்டு தந்தையைப் பிரிந்து தனியே சென்றுவிட்டாள்.
பிரிவு  தகப்பனால பொறுத்துகொள்ள முடியவில்லை

  எங்கு சென்றாய் மகளே

மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாக
மண்ணிலே நீரைத் தேடும்
களை கொண்ட பயிரன்பு கயமைக்கு பொருளாகும் 
கரங்களால் அழிந்துபோகும்
முளை கொண்டு வளர்கின்ற சமுதாயத் தோட்டத்தில் 
மகளே வா நீயும் நானும்
பிழை என்றுஎது கொண்டு பிரிவென்று வந்ததோ 
பதில் கண்டதில்லை இன்றும்

பிரிவென்ப மாறாத நியதிதான் இருந்தாலும் 
பேசற்ற நிலைமை போதும் 
பரிவென்ப மனம் கொள்ளும் பரிசென்றபோது மேன்
படையற்ற போரும்காணும்
வரியன்பில் கலந்திங்கு வரும்பாடல் நின்செவியுள் 
வண்டுண்ணும் தேனையூற்றும்
சிரியெந்தன் மகளே நின்திருவிழிகள் எனைக்காணச் 
சிலிர்க்கின்ற உணர்வு போதும்

பறியென்றே காலமெனும் தேவனுனைப் பாதியிலே 
பக்கத்தி லிருந் தகற்றி
முறியென்று நின்னழகுப் பேச்சிலுளம் நான் மயங்க 
முன்நின்று பிரித்து வைத்தான்
தெறிஎன்று தந்தைகொளப் பாசமுயர் தேர்ச்சில்லை 
திருகியுடைத் தரை வீழ்த்துவான்
குறிஎன்றும் வாழ்வரையைக் கொள்பவன் தனையிங்கு 
கூப்பிட்டு விடவும்செய்வான் 

எரிகின்ற நின்மனதின் இடர்தாரும் சினந் தணியின் 
இதில் மிச்சம் இன்பமாகும்
புரிகின்ற வரைதானும் புகைகொண்டு காணும்மனம்
பொய்யுள் வாய் மைமறைக்கும்
விரியுந்தன் சிறகுகளை விண்ணேறிப் பறக்கின்ற 
விதமாக நீயும்காணும்
சரியென்னும் நம்பிக்கை தவறாதென் மீதெழுமின்
சற்றும் துயரற்றுப்போகும்

வளைகொண்ட நண்டுதனும் வழிமீது நடக்கையில் 
வழமைக்கு மாறிஓடும்
சுளைகொண்ட பழமான தேன்சுவைப் பலாக்கனி 
சுற்றிக்கை தொட முள்ளாகும்
விளைகின்ற பசி நீக்க வெளித்தோற்றம் மறுத்தாலும்
விரித்துபார் பொய்யுள் மெய்யாம்
மழை தூற வெயில்காண வரும்வான வில் அல்ல
மகளே நாம்வாழவேண்டும் 

Kaviyogi Vedham

unread,
Aug 31, 2014, 4:38:43 AM8/31/14
to santhavasantham
இப்பாடல் வேண்டாம். முருகன் பற்றி எழுதவும். அனுப்புக,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



Kana Rama

unread,
Aug 31, 2014, 6:02:51 AM8/31/14
to santhav...@googlegroups.com
ஐயா இன்னொன்றும் அனுப்பியுள்ளேன் .மின்னஞ்சல் காண்க 
அன்புடன் கிரிகாசன் 

Kaviyogi Vedham

unread,
Aug 31, 2014, 7:42:08 AM8/31/14
to santhavasantham
பார்த்துவிட்டேன்..சரி
யோகியார்

kirikasan

unread,
Sep 1, 2014, 3:19:30 AM9/1/14
to santhav...@googlegroups.com

        முன்னரும் இதே போன்றொரு கவிதை எழுதினேன். புதுமுயற்சி    


(இது கவியோகி வேதம் ஐயா அவர்களுக்காக)

             முருகா ,உருகும் மனம்
 
எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்
கத்திய ழைத்தாலும்
நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்
வித்து விடென்றாலும்
முத்தமிழின் இறை சித்திதரும் அருள்
அத்தனையும் ஈந்தாய்
பத்தியுடன் உனை நித்தமும் தொழுதிட
இத்தரை வாழ்ந்திடுவேன்

மத்தை யெடுத்திடல் போலும் கொடும் அர-
வத்தை யெடுத்து மமு-
தத்தைக் கொளக் கடைந்திட்ட போதேஉயிர்
சத்தை அழிக்கும் விடம்
மொத்தமெனத் திரள்கண்டுமே அஞ்சவி-
டத்தை குடித்தவரின்
புத்திரனே மனம் கொண்டருள் கேட்டேன்
புத்தொளிர் வாழ்வீயாய்

பத்தை யெடுத்துடன் பார்விழி நாலிடைப்
பாதியும் சேர்குமரா
வித்தகனில் வெறும் கையுடன் முன்னால்
கத்தலை யெழும்சாக-
ரத்திடை வீழ்ந்தவ னாகியும் தப்பிட
எத்திசை நீந்தலென
இத்திசை என்றொளி முன்னுவந் தீந்தாய்
அத்தனையருள் நினதே

சொத்தென ஏதுமே பொற்கலயம்நிறை          
முத்தொளி இரத்தினமில்
உத்தமனே வடிவேலவனே உனை
நித்தமும் தொழுமென்னை
சுத்தமெனும் மனதோடு நிறைகுணம்
புத்தி தெளிந் துயர
நித்தியமாகிட நிம்மதிகண்டுமின்-
பத்தை யெடுத்திட வை !!

kirikasan

unread,
Sep 1, 2014, 5:01:21 AM9/1/14
to santhav...@googlegroups.com
   புதிதாக ஒரு கற்பனையோட்டம் கவிதையாக  மலர்கிறது

               அழகின்  சிரிப்பு  பகுதி 1


 காயா கனியா ?


மயிலொன்று ஆடியதோ இல்லையில்லை
மழைமேகம் மண்டபத்துள் வருவதில்லை
ஒயில் நடன உயிர் பெற்ற சிலையுமில்லை
ஓடிவரும் மான்குதித்த உருவம் இல்லை
புயலடிக்கப் புதிதாய் இடியற்றோர் மின்னல்
புகுந்துருவம் தான்எடுத்த பெண்ணாயில்லை
செயல்விட்டுத் திசை நோக்கும் சிறு கண்பார்வை
சுவைமிகுந்த  தமிழ்மகளின் துடிப்பில் ஆழ

மணி நாதசந்தமுடன் ஆடும் மங்கை
மன்னவனோ விழிகண்டு மலர்ந்திருந்தான் 
அணி ஆடை பூண்ட அவள் அரசன்மீது
அழகான புன்சிரிப்பை அள்ளியீந்தாள்
பணிவோடு அவள்காணும் விழியினூடு
பரிசென்று தனை நல்கும்நாளும் என்று  
துணிவொடு அவள்மீது காதல்  கொண்ட
துரைக்கும் நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்

பொதுவாக அவள்மங்கை புன்சிரிப்பால்
பிறக்கும் இன்முகப் பாவம் காட்டினாலும்
இதுபோன்ற கண்ஞாடை துடிப்பதில்லை
இலைமேற்பனி துளியாக வியர்ப்ப தில்லை
மதுகொண்டபோதை குறைவில்லை இன்றோ
மன்னவனின் முகம் அதனில் மாற்றமில்லை
எதுவென்றே போதும் அவள் நர்த்தனமோய
எழுந்தான் அப்போதிலொரு சிறுமிநின்றாள்

அரசே ஒர் அஞ்சல் என அவளீந்ததை
அரசாளும் கையால் அவன் ஏந்திகொண்டான்
முரசறையா அறைகூவல் முடிந்தால் மலரும்
முன்னிரவில் பூங்காவில் துயர்கொண்டவள்
இரவில் தன் நெஞ்சத்தில் எழும் பாரத்தை
இயம்பத்தான் ஒருநீதி எனக்குரைப்பீர்
வரம்தாரீர் எனக் காண வந்தோர்முறுவல்
வாய்த்துவிட வழிகண்டே தோட்டம் சென்றான்

பொதுவாக பரிசொன்றை தருமன்னனின்
புரியாத முகம்கண்டு அகம்பூத்தவள்
பதுமைப் போலுணர்வின்றி அவன் நின்றதை
பகரென்று விழிசொல்ல மொழி கூட்டின
எதுதானும் நேர்ந்துளதோ இளை யோர் அரசே
இங்கே தாம் இல்லையது நெடுந் தூரமோ
புதுமங்கை யாரெழிலாள் புகுந்தே உள்ளம்
பிணிபோலும் இவள் வருத்தச் செயலாற்றினார்

மதுவான தரும்போதை மயங்க வைக்கும்
மதிவதனி நளினமதும் மனதில் கொண்டு
சதுராட்ட மிடும்மேனி தக தக வென்றே
சதிசெய்யும் இருவிழிகள் அவனைவெல்ல
பொதுவாக மன்னன் விழிகனவைப் போலே
பிறை வடிவ நுதலும் எழில் காணுமின்றோ
முதுமாது போலெந்தன் அழகை இழிந்தே
முன்நின்ற தேனென்று மொழியு மென்றாள்

அருமையென் றான் அகத்துள்ளே தீயென்றான 
ஆசையுணர் வோங்கஅதை ஓரம்வைத்தே
வருமதியோ வான்சிறக்க வைக்கும் ஆயின்
வண்ணமதி உன்னழகைக் கண்டுயானும்
பெருந்துயரம் கொண்டேனாம்  பேதை என்றான்
பிறைநுதலில் வரியுமெழப் பேச்சின் அர்த்தம்
தரும் தெளிவோ இல்லை ஏதென்றே பகரும்
தங்கள் மனம் காயமுற்ற விதமென் என்றாள்

திருமகளில் உறையழகை  தேனில்ஊற்றி
திங்களதன் பொன்னழகை தீட்டியும் மின்ன
பெருங்கடலின் நடன அலை நளினம் கற்க
பூங்காற்றோ மென்னசைவைத் தானும்பழக
சுருங்கவிரி விழியிரண்டால் உலகைவெல்ல
சுற்றும் விழி இமைதுடித்தும் இதயம்கொல்ல
வரும் உணர்வை வானளவாய் ஆக்கும் பெண்ணே
வடிவழகில் ஆபத்தின் வரவைக் கண்டேன்

(தொடரும்)

Kaviyogi Vedham

unread,
Sep 1, 2014, 8:09:11 AM9/1/14
to santhavasantham
ரொம்ப அழகு.. சந்தமும் கற்பனையும் மீன்போல் துள்ளுகின்றன, வாழ்க
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



kirikasan

unread,
Sep 2, 2014, 2:12:02 AM9/2/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா மிக்க நன்றிகள்!
அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Sep 2, 2014, 2:21:37 AM9/2/14
to santhav...@googlegroups.com
 அழகின்  சிரிப்பு  பகுதி 2

ஆபத்து

சிரிக்கின்றாள் சிலையென்பாள் அணிந்த மாலை
சிதறியதோ  முத்துக்கள் பளிங்குமேடை
விரிகின்றாள் மிகமென்மை வலையொன்றங்கே
விழியென்னும் அலைமீன்கள் வீழ்ந்ததாமோ
எரிக்கின்ற தீயைமனத் தடக்கி மன்னன்
எழும் சினத்தில் அவள் நோக்கத் தணிவும் கொண்டு
பரிகாசம் புரிவதெனில் பெண்ணே வல்லாய்
படைஎடுத்து வரவுள்ளான் பகைவன் இங்கே

இளமாதோ இதழ்கோணி இகழ்ச்சியாக
எவன் வந்தாலென்ன எம்தேசம் புக்கின்
களம்கண்ட போதில் அவர் காணும்சேதம்
கனவென்று பெறும்வெற்றி காட்டுமன்றோ
விளைசினமும் அவளழகின் விந்தை கூட்ட
வண்ணத்து மின்னலெனும் விழியும் சிவக்க
குளமலரின் முகையெனவே கொள்ளும் இதழ்கள்
கொல் என்னும் சதங்கையொலி கூடிக்காண

திருமகளே மேடையிலே தோன்றும் வண்ணம்
திகழ்வதல்ல போரென்றால் தொலையும்வாழ்வு
வரும் புயலை விடஇதுவோ வன்மை காட்சி
வாழ்வினையே கொள்ளுவதா விடவாஎன்றே
பெருகுதிரம் பாய வலி பிளக்கும் நெஞ்சை
பிணக்குவியல் மீதேறிப் பெறும் வெற்றிகாண்
உருகி அழும் குற்றுயிரைக் கொண்டோர் தம்மை  
உயிர்.அழிய விட்டவரைக் கடந்தே இல்லம்

வருமழகு வேண்டியதா வ]ஞ்சம்கொண்டால்
வாழுமந்த குடிமக்கள் வீணில் பலியேன்
பருகுமிதழ் பனிபடர்ந்து வெளுத்தாக 
பதறியவள் பரிதவித்து புகழின்வேந்தே
வரும்சினத்தால் அறிவிழந்தேன் வீணென்றானேன் 
விலைதானும் பெருமளவு உயிர்கள் ஈயா
ஒருவழியும் வேறிலையோ உரையும் என்றாள்
உள்ளதென எண்ணியவன் உரையாநின்றான்

குழல்மீது பூச்சூடும் கொடியானவள்
குரல் கொண்டு சிறு கேவல் வெளியாக்கினாள்
அழல்தீயை அணைகின்ற மழையானது
அகல்வான வெளிமீதே  பொழியுமன்றோ
சுழல் கோல விழிகூட சுடும் மேனியில்
சொரிகின்ற மழைகண்டு  அவன் ஏங்கினான்
நிழல் போலும்நெஞ்சத்தில் உயிர்மேவிய
நிகழ்வொன்று மனம்கொள்ள விழி நோக்கினான்

வளர் பெண்ணே சிறுகண்கள் அழும்போதிலும்
வளம்தன்னை குறையாமல் நிறைகொண்டனை
உளம் காணும் பொழுதுந்தன் உயிர்வாட்டிடும்
ஒயிலென்ன அனல்கொண்டு உடல்செய்ததோ
நெளிந்தாடும் அலைகூந்தல் நீள்வானிலே
நிலை கொண்ட முகில் என்ற நிகழ்வாகவே
அளந்தின்ப வகைகொண்டு அலையாடுதே
அதுமுன்னே பிறையென்னும் நுதல்மூடுதே

முகம்கொண்ட ஒளிமீள அவள் நோக்கினாள்
முடிதன்னை ஒருகையால் அயல் போக்கினாள்
இகம்கண்ட தமிழின்பத் தேனாம் அதை
இவள் சொல்லத் தேனூறும் மலரானதே
பகைகொண்டே  தனை முன்னால்  படைகொண்டவள்
பணி என்று மொழிசொல்ல வெகுநாளதோ
முகை கொண்டும் மலரம்பு எறிவானவன்
முனைந்திங்கே அயல்வந்தே முயல்வானவன்

அவன் தந்த உணர்வொன்றி உடல்சொல்மொழி
அதன் உண்மை அறிந்தாளோ மகிழ்வாகினாள்
இவனென்னை அகம்கொண்டான் தெளிவாகுதே
இதிலென்ன அவசரமென் றெண்ணிக் கொண்டாள்
தவறியது மனம் என்று தன்னில்கண்டு
தருவள் இவள் முழுதெனவும் தன்னையென்றால்
கவர்ந்த மனம் கையில்வரும் கவலைஇல்லை
காத்திருக்க வேண்டுமெனக் கண்ணாற் சொன்னாள்

(தொடரும்)

kirikasan

unread,
Sep 3, 2014, 5:24:17 PM9/3/14
to santhav...@googlegroups.com

   நடந்திடு நேரே !

நடக்கின்ற பாதைமீது 
.. இடர்க்கென்று முள்ளிருக்கும்
  அட’க்கண்டும் அல்லல் கொள்வதோ
தடக்கென்று கல்லை வைப்பார் 
.  நடக்கின்ற வேளைதன்னில்
.  கடக்காமல் தடுக்கி வீழவோ
அடக்காமல் சினமெடுக்க 
.  முடக்காமல் எதையும் செய்து
.  விடக்காலமென்னசொலுமோ
இடக்காலும் வலக்காலும் 
.  உள்ளம் சொல்ல போகுமங்கு
.  தடுக்காமல் கண்கள் கூறுமோ


குடத்தினுள் வைக்கும்தீபம் 
.  இடத்துக்கு ஒளிர்வதில்லை  
.  கிடக்கட்டும் என்று விடுவதோ
கடக்கின்ற முள்ளும் கல்லும் 
.  படத்தன்னும் உள்ளம்நோகும்
.  தடங்கற்கு ஏதுசெய்யவோ
விடங்கக்கும் அரவம் உண்டு 
.  விதியுமுண்டு தீண்டவந்தால்
.  சடமென்று ஆக்கவிடுவதோ
அடங்கென்று அவதியுற்று 
.   நிறங்கெட்டு உருவம்கெட்டு
.   தடமின்றி முற்றும்போவதோ

சுடர்கண்டு கடகடென்று 
. மடல்தன்னை மலர்விரிக்கும்
. உடம்புள்ளும் இதயமுண்டன்றோ
திடங்கொண்டு தெய்வம் வேண்டு 
.  நடந்திடும் மலர்வு நெஞ்சில் .  
.  புடம் செய்து பொன்னொளிர் வதாய்
முடமென்ற எண்ணமின்றி 
.  முடியுமென்று கொள்ளூ யாவும் 
.  படக் காணுமுந்தன்.கையிலே
கடமைகள் தன்னியெண்ணிக் 
.  கடும்வேகம் கொண்டு மேகு
.  கெடும் தீது நன்மை பொங்கவே 

************************ 

kirikasan

unread,
Sep 5, 2014, 2:59:59 PM9/5/14
to santhav...@googlegroups.com
            புதுமைத்தாய்

நீரும் நீயே நெருப்பும் நீயே நிகழ் வானத்தின் தீ
தாரும் வெம்மைத் தகிப்பும் நீயே தமிழும் பொறிகொள்ளச்
சேரும் வார்த்தை சிதறுமெண்ணம் திருவாய்மொழியாகி
ஊரும் கொள்ளும் உறவில் நட்பின் உவப்பும் தந்தாயே

தேரும் மனமும் தெரிவான் நிலவும் தேசம் உயர்வானம்
கூரும் கொள்ளும் அம்பும் ஏவும் வில்லும் விளைவாயும்
தீரும் உறவின் திரும்பல் வீணே திசைகள் வழிமாற்றம்
வாரும் முடிவும் வழியும் உந்தன் வண்ணத் திகழ்வாமே

பாரும் காலைப் பனியும் பகலும் பாறை மலைதந்தாய்
யாரும்கொள்ளா அறிவுதிறனுக் கப்பாற் தொலை நின்றாய்
ஏரும் உழவும் இதனால் விளையும் இனிமை அமுதுண்டு
காரும் முகிலும் கடைவான் மறையும் கதிரும் கனஇருளும்

நேரும் இரவின் நிசப்தம் நெஞ்சின் நெறிகொள் உணர்வோடு
நாரும் கோர்க்கும் நறுவாசப்பூ  நவிலும் தமிழ்த்தேனும்
தாரும் உந்தன் தகைதான் தந்தும் தனியே விட்டாலும்
சாரும் பிளவும் சலிப்பும் உள்ளம் தவறும் நிலையீந்தாய்

வாரும் மழையும் விரிவான் இடியும் வேகக்காற்றோடு 
தீரும் மின்னல் போலும் கணங்கள் திகழும் வாழ்வோடு
சீரும் செல்வச் சிறப்பும் என்றே திரிந்தே பெயர்சூட்டி
பேரும் கூடப் பிறழ்வும் தந்தாய் புதுமைத் தாய்நீயே

**************

kirikasan

unread,
Sep 6, 2014, 3:22:58 AM9/6/14
to santhav...@googlegroups.com

        தவறுகள் மலியும் தருணம்

அலைந்திடும் மனமதில் அலைகடலெனு மொரு
அவதியும்  உருவாகும்
கலைந்திடும் கனவுகள் கடுதியில் மறைவது
கவலையை உருவாக்கும்
குலைந்திடும் உறவுகள் கொடுமையென் பிரிவது
குமுறலை தரும் நாளும்
சிலையெனும் மனமதில் சிறுமையின் இழிவெழச்
சீற்றமும் எழுந்தாடும்

வலைதனில் புகுங்கயல் வாழ்விழந்திடத் தாய்
வீரிட்டு அழமோசை
விலைதனைக் பழியென வெறிகொண்டு எழுவது
விடைசொலும் செயலாகும்
கொலைசெயத் தினதினம் கூடியும் மனிதர்கள்
கொஞ்சிடும் ஆழிமகள்
நிலை கொண்ட குழந்தைகள் நெஞ்சழ பிரிப்பது
நினைவதில் துயர்விளைக்கும்

தினம்தினம்பொங்கியே துடிக்கின்ற கடல், மதி 
தேய்வதை சகிக்காதும்
மனமதில்.மகிழ்ச்சில் பொங்கிட எழுச்சியை  
முழுமதி வரப்; பெறலும்
வனமதில் கொடிமலர் வருமணம் எழும்வகை
வருடிய தென்றலொடு,,
இனமதில் ஒருத்தியின் இயற்கையின் குழந்தைகள்
என விதி இருந்திடவே

மனிதரின் செயலினில் மலிந்திடத் தவறுகள்
மலையெனப் பெரிதாயின்
புனிதமும் கெடப்  பெரும் புய லெனத் திரிவது
படைத்தவள் செயலாகும்
தனில் கொண்ட மனதினிற் தகிப்பில்லை தமிழ்சொலத்
தவறுகள் எனக்கூறின்
பனிப்புயல் கொடுமனல் குமுறிய விண்ணுறை
பெருமன்னை செயலாகும்

kirikasan

unread,
Sep 6, 2014, 7:57:17 AM9/6/14
to santhav...@googlegroups.com
ஒரு நட்பினை வருந்த செய்துவிட்டால்..

மாமடை யெனவிழி ஓடிடுவேளையில்
  மாமடை செய்கையென
மாமடு எண்ணங்கள் ஓடிட மாமுடை
 மாதிரிஆற்றிவிடின்
மாவிடை கூறிட மாமனதில் எது
 மாஇடி மாமழையாய் 
மாஇடர் தந்ததை மாமனம் கொண்டுளம்
 மாறிட வைத்தருளும்

மாசுக மென்றிவன் மாசுகள் எழமனம்
  மாசுதந் திரமோடு
மாகவி தையென மாமனம் கிலேச
  மாகிட வார்த்தைசொலின்
மாமலை மீதினில் மாசிவனோடுறை
  மாமகள் சக்தியின்பால்
மாகொடிதாகிட மாற்றியதேனென
  மாறுதல் வேண்டிநிற்பேன்

kirikasan

unread,
Sep 6, 2014, 12:36:30 PM9/6/14
to santhav...@googlegroups.com
        இதயங்கள்
 
அழகான இதயங்கள் அணீசேரலாம்  
அதன்மீது சினம்வந்து அரசாளவோ
பழகாத இதயங்கள் பலம் காணலாம் 
பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோ
இழகாத மனமென்று இருந்தாலும் சொல்
இசையாத மனந்தானே எதிராகிடும்
வளர்கின்ற தீயென்று வருமாயிடின்
வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொல்

புதுவெள்ளம் மனம்மீது பாய்ந்தோடலாம்
பிரவாகப் புனல் நெஞ்சைக் அழித்தோடவோ 
செதுக்காத சிலையென்று திரைமூடலாம் 
திரும்பாத வழிகண்டும் தொடர்ந்தோடவா
எதுகாண நினைத்தாலும் எழில்சோலைப் பூ 
இதழுக்கு ஓர் வண்ணம் வேறாகுமா
இதுகாக்க உன் எண்ணம் முடிவென்பதோ
இருக்கின்ற வரையின்பம் பெரிதல்லவோ

மதுகொண்ட மலர் தன்னும்தீ ஊற்றுமோ  
மதிஎன்னும் நிலவென்றும் இருள் போர்க்குமோ
இதுவென்ன அழகென்று மனம் கேட்கலாம்
இதயத்தின் நலிவெண்ணி நான்வேர்க்கிறேன்\
பொதுவாக உடல் நொந்து பகை காணலாம்
பிறிதாக இதயத்தின் குரல்கேட்குதே
அது வாழவேண்டுமெனில் அயலோடு நான்
அகம்கொள்ளும் உணர்வுக்கு அளவொன்|று வை

kirikasan

unread,
Sep 7, 2014, 5:49:56 PM9/7/14
to santhav...@googlegroups.com

  உலகம் பலவண்ணம்

மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர் 
 முகம் மனம் எதிரிருக்கும்
கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்
பிரித்திடக் கல்லிருக்கும்
வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள் 
  வலிஎழத் தீதும்வரும் 
தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம் 
  திரிந்திடும் புயலடிக்கும்

கனவுகள் எனநினந் தழுந்திடும் செயல் சில 
  கண்முன்னே நடந்து கொளும்
தனமென நிலமிடை புதையலும் வருமென 
  தலைவிதி வேறிருக்கும்
சினமெனக் கொள்வது சிலருக்கு உள்ளத்தில் 
  சிறுமையில் பெருமைதரும்
புனலிடை வலையெனப் போடுவர் பிடிபடப் 
  போவது உயிர் கணக்கும்

அனலிடை பொன்நிகர் அனுதின முதவிடும் 
  அறிஞரும் இடையிருப்பர்
தனதென நலமதை தாங்கிய மனமின்றித் 
  தருதலில் நிறைவுகொள்வர்
சனமென நடந்துடை சம நிலைஉருத்தென  
  சகலதும் பகிர்ந்தளிக்கும் 
உனதயல் பலசில உலகத்தில் சிறப்பெனும்
   உத்தமர்களு மிருப்பர்

நினதிரு விழிசொலும் வழிதனில் செலமுதல் 
  நிலைதனை மதியறிவாய்
என பெருங் குணமெடு எழுந்திடு பகுத்தறி 
 வெனும் வழிநடந்துவிடு
பனைமர அடியொடு பாலுண்ணப் பழகுதல்
  பலசிர மங்களையுந் தரும் 
நனவுகள் அதில்சில கனவுகள் எனின்உளம்
  நகைத்திடு நலனையெடு!

kirikasan

unread,
Sep 8, 2014, 2:33:48 AM9/8/14
to santhav...@googlegroups.com

          சக்தி எனும் சக்தி!  

அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல் 
 யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.
நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட
 நேர்மை வழியெடுப்பாய் கிளியே
துஞ்சி அழுதலும் தூறும் விழிகளும் 
 தேவை யுண்டோ நினை வீறுடனே
தஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு  
  தன்மை யுயரொளி தான்நினைந்தே

பஞ்சு மனம்கொள்ளு பண்பை அணைத்திடு
 பட்டதுயர் வெயில்கீழ்ப் பனியே 
எஞ்சும் மகிழ்வெனில் இன்னிசை யோடின்பம் 
 எய்குவை நிச்சயம் காண்கிளியே 
வஞ்சம் கொள்ளின்மனம் வாளைஎடுப்பது
 வில்லைவளைப்பது போல்கிளியே
நஞ்சை மனம்கொள்ள நாடவைத்தெம்மையே
  நாளில் விழுத்தி விடும் தனியே

கொஞ்சுந் தமிழ்கொண்டு கூடிக் கலந்திடு 
  கொள்கை நலமுடையோ ரிடையே
மிஞ்சும் அழகொடு மேன்மைத் தமிழின்பம்
  மொட்டு மலர்நிறை பூவனமே
வெஞ்சினம் என்பது வேண்டுவதில்லடி
  வெள்ளை யுள்ளம் கொள்ளுவோ ரிடையே
வஞ்சியுனை கண்டு வாழ்வில் நகைப்போரை
  வந்து தெய்வம் கேட்கும் வேண்டினையேல்

அஞ்சிலிரண் டுண்டு ஆறில் மூன்று மூன்று ;
 அஞ்சி மிரண்டு கொள்ளாதினியே
மிஞ்சும் சினம் ஆறில் மேதினியில் மூன்று
 மின்னும் எழுத்தைக் கொள்வாய் சக்தியே
வஞ்சமின்றி எண்ணும் உந்தன் நினைவுகள்
 பஞ்சினில் தீபற்றலாய் அவளே
மிஞ்சி வலிமையும் வேண்டுமன்பைக் கொண்டு
 மேகத்தொலைவில் நின்றாள் தனியே

...................*********

kirikasan

unread,
Sep 8, 2014, 4:31:00 AM9/8/14
to santhav...@googlegroups.com
        சக்தியே நிரந்த்ரம்

சக்தி சக்தி சக்தி யொன்றே நிச்சயம்
சத்தியத்தின் மொத்தரூப சித்திரம்
சகதி சக்தி சக்தி யொன்றே அற்புதம்
சக்தியெண்ணு காணு இன்பம் முற்றிலும்
சக்தி சக்தி சக்தி என்றும் கற்பகம்
சக்தி சாருவோர்க்கு நன்மை யைத்தரும்
சக்தி சக்தி சக்தி யுந்தன் அஸ்திரம்
சாப நீச பாவம் வெல்ல கைப்படும்

சக்தி சக்தி சக்தியே நிரந்தரம்
சக்தி யென்றும் உந்தன் தாரக மந்திரம்
சக்தி சக்தி சக்தி கால இயந்திரம்
சக்திவேண்டின் என்றும்நல் வரம்தரும்
சக்தி சக்தி சக்தி யே மகத்துவம்
சக்தி கேட்பின் மேன்மைநெஞ் சுரந்தரும்
சக்தி சக்தி எண்ணிக் கொள் பெருந்தவம்
சக்தியோடு காணுவாய் சு தந்திரம்

சக்தி சக்தி சக்தி தன்னை நெஞ்சில்வை
சற்குணத்தினோடு காணும் உள்ளமும்
சக்தி சக்தி சக்தி யொன்றே நித்தியம்
சக்தியோடு வாழ்வில் வெல்லு இலட்சியம்
சக்தி சக்தி சக்தி கூறு அப்பதம்
சாந்தியோடு தாரும் வீரம் வெற்றியும்
சக்தி சக்தி சக்தி யோடு சங்கமம்
சித்தியாகும் உந்தன்வாழ்வின் அந்தமும்!

***********

kirikasan

unread,
Sep 10, 2014, 12:26:17 PM9/10/14
to santhav...@googlegroups.com
   அழகின் சிரிப்பு  3

இந்த கவிதைக் கதையை முப்பரிமாணப் படங்களின்  காட்சிகளோடு தரலாமென எண்ணுகிறேன் 
( 3D  கவிதையாக ) சற்றுக் காலம் எடுக்கலாம் ஆனல் நிச்சயம் வரும். ஏற்கனவே ஆர்ம்பித்துவிட்டேன்


விடிந்தஓளி வெய்யவனின் வெம்மைகுன்ற
விசுமிளங் காற்றும் வெந்தகிப்பை விட்டான்
படிந்தபனி நீர்த்துளியாய் பசும்புல் மீது
பயமறியா துள்ளிவிளயாடப் பார்த்தே
மடிந்திடுவாய் மாசுடரும் வெம்மை கொள்ளின்
மறைந்திடு போ யுள்ளேயென  மறுத்தே உருளும்
படிந்திடுமோர் குணமின்றிப் பலமாய்த்துள்ளி
பாவமதோ பனித்துளி மண்விழுந்து மறைய

வடிந்தசெயல் கண்டதிலோர் வானக்குருவி
விழுந்தநிலை விதியோ இல் மதியின்கேடோ
கடிந்தவகை கதறிக் கொண்டெ ழுந்துவானில்
காற்றசைவில் பறந்தபோ தயலில் காணும்
வெடித்து முகை விரிந்தபூ வாசம் அள்ளி
வாவெனவே இச்சையுடன் அழைத்தபோது
துடித்ததொரு செங்கமலம் சுனைநீர்மிது
தோன்றியது பூவல்ல அவளே நின்றாள்

முழுக்க அவள் நீருள்ளே மறைந்தபோதும்
முகமெழுந்து நீரின்மேல் அசையக்கண்டு
விளக்கில்நெய் யூற்றித்தினம் வெளிச்சம் தூண்டும்
வழக்கமதைக் கொண்டவளாம் வஞ்சிதன்னும்
குழப்பமதை நினைப் போர்க்கு குறைவின்றீயும்
கோலமதை தூண்டும் மலர்க் கரங்கள்மீது
இழப்பதென்ன தன்,மனதின் திடமேயென்றே
ஏந்தலவன் எண்ணி மனம் இன்பங்கொண்டாள்

அழித்தவளின் நினைவின்பம் அகன்றுஓட
அங்கே நின்றாள் அவளின் அன்புத்தோழி
களிக்கும் அவன் உள்ளத்தே காதல்அமுதும்
கண்ணூடு பார்வையினால் கனிவோடூற்றும்
தெளிந்த உளம்கொள்தேவி சேதிகேளும்
திரண்ட படைகொண்டயலின் தேசம் ஆளும்
பழிக்குப் பழி எனவெகுண்டு பண்பேயறியா
படைநடத்திப் போர்தொடுக்க விளைந்தான் மன்னன்

வெறித்து மனம் விகாரமொடு வேட்டை நாயாய்
வெற்றி என்னும் நிலைகாண வெறியும்கொண்டு
குறித்தெமது செல்வங்கள் சேலைமாதர்
கொன்று குவித் தின்பமுடன்  கூடியாடி
அறுத்துதிரம் கொட்ட அதில் ஆனந்தம் கண்
டாவேசமுடன் நாட்டை சூறையிடவும் 
எறித்த வெயில் ஆறும்முன் இங்கே வரலாம்
எழில்சேரென் தலைவி உனதழகின் பாலோ

அன்னவர்கள் மோசம்செய் துன்னைவாட்டும்
அநியாயம் நடந்திடலா மென்றஞ்சித்தான்
மன்னவரும் ஏற்பாட்டைச் செய்தார் உன்னை
மறுபடியுமோர்  தடவைகாண விழைந்தான் 
இந்நேரம் அரண்மனையின் கிழக்கினோரம்
இருக்கும்ஓர் இரகசிய இடத்தின் காத்தே
பொன்னுதிரும்  பூமகளாம் உன்னைவேண்டிப்
பார்த்திருப்பான்சென்றுவிடு பாவாயென்றாள்

எதற்குன்னை அழைக்கின்றான் எண்ணம் அறியேன்
இதயத்தின் நல்லன்பை எடுத்துக் கூறும்
விதத்தில் உன்பேரழகை ரசிக்கவென்றே
பிறிதாக மூடியதோர் கதவின் பின்னால்
இதத்தைக் கண்டின்பம் கொள் எண்ணம்மேவி
ஏந்திழையே உன்னையுமங் கழைத்தானாயின்
சதமே யிச்சுகமென்றே நினைப்பாய் தேவி
சற்று முனை இழப்பதற்கு உள்ளம் ஈயாய்

சிலிர்க்க வெனப்பேசுங்கால்.திரியும் சுனைநீர்
சில்லென்றே ஆக்குமதற் கடுத்து நீயே
பலித்து விடப்போகுதடி பாவை நானும்
பட்ட துயர் போகும் அவன் பக்கமிருந்தால்
வலித்த உளம் வெம்புமொரு வீச்சைக்கொண்டு
வரும் இனிமை நோக்கி யவள் மயங்கும்போது 
அழைத்தவளின்  விதிபோட்டகணக்கு வேறு
அதிருமதை அவளுள்ளம்  அறியா நின்றாள்

(தொடரும்)

kirikasan

unread,
Sep 12, 2014, 6:34:09 AM9/12/14
to santhav...@googlegroups.com

           அழகும் இன்பமும்

பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு
பேரின ஒற்றுமை  சமூகத்தின் கழகு
வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு
வருந்துயர்  நீக்குதல் வீரத்தி னழகு
உருக்கலும் மெருகிடல் பொன்னதற் கழகு
உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு
வருந்துதல் நிறுத்திடின் வலியோர்க் கழகு
வாய்மையைப் போற்றுதல் ஆளுமைக் கழகு

கருத்தினைப் பகிர்வது சான்றோர்க் கழகு
கணித்திடல் ஆய்வுகள் கொள்மதிக் கழகு
பெருத்த நற் சோலையில் பூக்கள் அழகாம்
பெய்மழை யும்பாறை கொட்டும் அருவி
கருந்திரள் பற்றிடக் காணடி வானும்
கன்னியின் நாணத்தின் செம்மை யழகே
சரிந்துயர் வானத்து நீடுபறக்கும்
சின்ன எழிற்கோலப் புள்ளினம் யாவும்

நீடுறை வான்தொடு  கோபுர உச்சி
நேர்செல்லும் வெண்முகில் நீந்த லழகே
காடுகள் மாவனக் காட்சிகள் தோன்றும்
கற்பாறை அற்புதம் கண்ணுக்கழகே
போடும் தூறல் வானவில்லும் அழகு
போகும் வாழ்வும் வானவில்லென் றுணர்ந்து
தேடும் தெய்வம் காணத் திக்கெங்கும் ஓடி
தெய்வம் உள்ளதுளெனத் தேர்தலழகு                                                                    
                                                                                              
நாடும் நல்வாழ்வினில் நல்லரசாள
நாமும் சுதந்திர தேசமென்றாக
கூடும் உறவுகள் கொள்வதும் இன்பம்
கொள்கை சிறப்பதும் நேர்மையு மின்பம்
பாடுமிசை மகிழ்வாக்கிடும் இன்பம்
பள்ளிச் சிறுவரின் துள்ளொலி இன்பம்
வாடும் மலர்கலின் வாழ்வினைக்காண
வந்துயிர் கொளும்நாள் ஆண்டுகள் இன்பம்!

*********************

kirikasan

unread,
Sep 12, 2014, 1:34:32 PM9/12/14
to santhav...@googlegroups.com


            கண்ணீர்

ஆவென்றலறிய வேளையிலும் மனம் 
ஆனந்தம் கொண்டு திளைக்கையிலும்
பூவென்ற தாய் அள்ளிக்கொட்டுகிறாய் மழை
போலும் என்னில் வந்து சொட்டுகிறாய்
ஓவென்றே ஓடிபுயல் விளைக்கும் சத்தம்
உள்ளிருந்தே ஓசையாகிவிட
நாவொன்றும் சேதிசொல் லாமலேயே
நெஞ்சில் கொண்ட துன்பம் நீபகிர்ந்தாய்

கூவென்று கத்தி நடுநடுங்கி உளம்
கொண்ட வலிதனை நாவுரைக்க
சோவென்று கொட்டிச் சிலுசிலுத்தே உளம்
சோர்ந்து விடும் வகை நீபொலிந்தாய்
நோவென்றே உள்ளம் துடிதுடித்துக் கண்ட
நேர்மைவழி இன்னல் தீர்க்கவெனத்
தீஎன்று பூமிவெடித தனலைக் கக்க\
நீஅணைக்கும் மழையாய் விழுந்தாய்

போவென்றே உன்னை வெறுக்கவில்லை நினைப்
புன்னகையால் வெல்லும் நோக்கமில்லை
ஆ! வென்று ஆடிக் கூத்தாடி   ஆனந்திக்க
அன்னை சுதந்திரம் கொள்ளவில்லை
ஏவேடம் போட்டவ ருள்ளதினால் இன்னும்
எங்கள்திசைகாணக் காலையில்லை
’;போ வென்று வா’ எனக் கூறுமுள்ளம் உன்னில்
பின்னிற்பதேன் வீரம் காணவில்லை

தூவென்று துச்சமென்றே நினைத்து போரில்
தானின்று வந்தவன் மேனியிலே
கோவென்றே ஆயினும் கொள் விழுப்புண் வெங்
காயமெடுத்து  சிவந்தநிலை
தேவி திரௌபதியின் சேலையென அந்தச்சின்ன
வெங்காய மதை நானுரிக்க
நீவந்து மெல்லக் கசிந்ததென்ன கண்ணில்
நீலம் சிவந்தடி வானம் என

****************************

kirikasan

unread,
Sep 22, 2014, 3:21:41 PM9/22/14
to santhav...@googlegroups.com


         தன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்


தென்னைமரச் சோலையிலே
  திங்கள் எழும்போதினிலே
     என்னருகில் நீயிருந்தாய் இன்குயிலே அதில்
பின்னியிழை வெண்முகில்கள்
   பொன்னிலவைப் போர்த்திருக்க
      என்னை மனம் பூக்க வைத்ததுன் குரலே
சின்னமலர் சூடும் தரு
   சில்லெனவே வீசு தென்றல்
      சென்று விழிமீது மையல் தந்திடவே
கன்னமதில் நீ இணைந்து
     காணுமிசை பாடலிட்டு
        கண்ட இன்பம் ஏன்மறந்தாய் பொன்குயிலே

மென் னரும்பும் பூக்கள் சில
   மேனிமலர்ந் தின்பம் பெறும்
       மெல்லிருளில் மூழ்குமந்தி வேளையிலே
அன்புடனே நீ நெருங்கி
   ஆதரவென் றாகிவிட்ட
        அத்தனையும் எண்ணுகிறேன் வா குயிலே
அன்று கொண்ட நிலைமறந்து
     இன்றெனையும் வாடவிட்டு
         என்னசொல்லிக் கூவுகிறாய் இன்பமென்றே
நின்றழவும் ஈர்விழிகள்
    நீரிறைத்து ஆவலுற்று
        நிர்க்கதியில் வாடுகிறேன் இன்னலுற்றே

நன்னயல் நீர்ப் பொய்கையிலே
   நாம்நனைந்த வேளையன்று
      நீர்தெறிக்க மேனிசிலிர்த்தேன் குயிலே
என்னை மலர்மீது கண்டே
  உன்விழிகளால் வியந்த
    அன்பதனை ஏனிழந்தாய் சொல்குயிலே
வன்மைகொண்டு காணுவதேன்
    வண்ணமலர்த் தேனையுண்டு
      வாயினிக்கப் பாடிடலாம் வா குயிலே
இன்மை கண்டு வாடுகிறேன்
    எண்ணி மனம் பூக்களென
      இச்சை கொண்டேன் ஏக்கமுடன் இன்குயிலே

அன்புகொண்டு நானிருந்தேன்
   ஆவலுடன் காத்திருந்தேன்
       அற்பமென ஆக்கிவிட்டதேன் குயிலே
மின்லெனப் போனஅன்பு
  மெய்மையிழந் தாவதென்ன
      மேலும்வகை நானறியேன் வெல்வதற்கே
சின்னமனம் வாடுகின்றேன்
   செங்கரும்பும் வாய்கசந்தேன்
      சேரும் சுகம்தான் வெறுத்தேன் சொல்குயிலே
பன்நெடுத்த வான்பரப்பில்
   பைந்தமிழின் கானமழைப்
     பாட்டிசைக்கக் கூடிவாராய் என்குயிலே
*******************

kirikasan

unread,
Sep 23, 2014, 9:40:10 PM9/23/14
to santhav...@googlegroups.com

          மகிழ்வில ஆடும் உள்ளம்

கள்ளையுண்ட போதை நெஞ்சு காணுதே
  கண்கள் சுழன்றோடி வட்டம்போடுதே
உள்ளுணர்வு மெல்ல எட்டிப் பார்க்குதே
  உன்மத்தங் கொண்டோசை உள்ளம்போடுதே
வள்ளலென வாரியின்பம் நல்குதே
  வட்டநிலா போலுமெண்ணம் மின்னவே
தெள்ளினிய செந்தமிழின் பாவிலே
  தேகம் என்ன பூக்கள் உண்ட தேனீயே

வெள்ளரிக்காய்போலப் பற்கள் காணவே
   வந்த புன்னகை வெடித்து மீறுதே
குள்ளன் போடும் குட்டிக் கரணம் போலவே
   கூடிநிற்கும் நெஞ்சு குதித்தாடுதே
பள்ளிச்செல்வன் விட்டபோது பாதையில்
   பம்பரம் நின்றாடும் வண்ணம் ஆடவே
வள்ளி பெற்ற சின்னவனும் ஓடிவா
   வாணி, தேவி சுந்தரியும் கூடிவா

தள்ளிநிற்கும் தங்கநிலா வானிலே
     தாவிஆடும் மேகக்கூட்டம் சேரவே
புள்ளி போட்ட சட்டைக்காரி தோகையும்
     போடுமாட்டம் ஊதமகுடி நாகமும்
வெள்ளி நிலாகண்ட அல்லி நீரிலும்
    வீசுங்காற்றில் துள்ளும் அலை போலவும்
நள்ளிரவில் கூத்தனோடு பேய்களும்
    நாட்டியமிட்டாட  நாமுமாடுவோம்

அள்ளி யின்பம் கொண்டதென்றும் ஆடுவோம்
  ஆனந்தம் மென்மேலுமென்றே ஆடுவோம்
தங்கும் மனம்தங்கமே வெண்சங்கதே
  தந்தனதோம் என்றுகண்டு ஆடுவோம்
வெள்ளமென்ற அன்புகொண்ட ஊற்றிலே
  வீழ்ந்தவராய் நிர்மலங் கொண்டன்பிலே
முள்ளிலாத பூக்களென்றும் ஆடுவோம்
  மூங்கிலாடும் சோலையாக ஆடுவோம்

எள்ளிநகை யாட இந்தபூமியே
    எம்மதல்ல என்றபோதும் மாந்தரே
அள்ளிக்கொண்டு போக எண்ணி ஏங்கியே
  ஆசைகொண்ட தெண்ணி நாமுமாடுவோம்
கொள்ளி வைக்க சாம்பலாகும் மேனியில்
   கொண்ட ஆசைவன்மம் கொள்ளுமாவலும்
உள்ளதென்ன மீதிகாண என்றுமே
   எங்கள் கைகள் கொட்டி நின்றே யாடுவோம்

துள்ளிச் சுற்றி யோடுவ திப்பூமியே
  சொல்லவில்லை பூமி செல்லும்பாதையில்
நள்ளிரவோ முன்பகலோ  நாமுமே
   நாடிச் சுழன்றோடி நின்றுகாண்கிறோம்
வெள்ளம்வரும் பள்ளம், குதித்தாடிடும்
  வீசிடும் தென் றல்மலர்கள் போக்கிடும்
அள்ளியெறிந்தே உறவில் அன்பெழ  
  ஆலயத்தின் தீபமாக வாழுவோம்

kirikasan

unread,
Sep 25, 2014, 4:14:01 AM9/25/14
to santhav...@googlegroups.com

          தீரப்புயல் வேண்டும்,

பேசாதே உள்ளத்தில் சக்திகொண்டேன் - வெறும்
பேச்சில் இழந்திடச் சித்தமற்றேன்
பூசாத நீறணி நெற்றியென - இங்கே
போக்கிடும் வாழ்வில் வெறுமை கண்டேன்
ஆசா பாசங்களின் கட்டினிலே - நின்று
ஆடிக் கழித்திடவா பிறந்தேன்
வீசாத தென்றல்கொள் பூவனமா  - இந்த
வீணையை வீதியில் வீசுவதா

தேசமும் காலடி கீழ் இழந்தேன் - அதைத்
தேடியும் மாகடல் நீண்மைகண்டேன்
கூசாது பூமியில் கொல்லுமிச்சை -  கொண்டு
கூடிஅழித்திடும் நீசர் கண்டேன்
ஊசலாடுமுயிர் கொள்தமிழர் - என்னும்
உள்ள நிலவரம் நீளுவதா
நாசமெழுந் தெங்கும் கூடுவதா - அதை
நாமறிந்தும் வாயைமூடுவதா

வீசாத தேன்புயல் உள்ளத்திலே - அதில்
வீறுகொள்ளும் நெஞ்சம் வீரத்திலே
தீசேரின் மாஎரி பொங்கும் மலை - உந்தன்
தேகமும் கொள்ளுமென் றானநிலை
வாசேர்ந்து வாழ்வில் அறமெடுப்போம் -  அங்கு
வந்திடர் கொன்றுநம் வீடமைப்போம்
பூசாய்ந்து போகக் கதிர் விழுந்து - எங்கள்
பூமியிருளமுன் போய் விளக்கை

வாசலில் ஏற்றி வெளிச்சம் செய்வோம் - இயல்
வற்றிக் குறைகொண்டபெண்ணினத்தின்
வீசும் எழில்முகம்தான்மலர - அங்கு
வேள்வி யாகம்செய்து மேன்மை கொள்வோம்
நீசநெஞ்சங்களத் தீயிடுவோம் - அங்கு
நேர்மைத் தீ நெய்யிட்டு ஓங்கவைப்போம்
வாசிறிதும் இனிக் காத்திருந்தால் - எங்கள்
வாழ்வழியும் விழி  கண்டிடுவோம்

கேசமெழில் பூவை கொண்டவளின் - மென்மை
கொண்டபெண்ணின் இயல் தானழித்து
மாசுறச் செய்பவன் மன்னனெனில் - தானும்
மாற்றி அமைத்தொரு நாடு செய்வோம்
கூசிடும் செய்கைகொள் கேடி கள்ளன் - கெட்ட
காமுகரை விட்டு ஓட்டிடுவோம்
வீசகொடும் புயல் நாடழிக்கும் - எங்கள்
வீரப்புயல் தமிழ் வாழ்வமைக்கும்

*********************

kirikasan

unread,
Sep 29, 2014, 1:27:43 PM9/29/14
to santhav...@googlegroups.com
 
          சக்தியைப் போற்றுவோம்

ஆதிமூல சோதியான அன்னை சக்தியே
ஆளவென்று நீவகுத்த தாமிவ் வாழ்வதில்
பாதிதுன்ப மோடப் பாதி இன்ப மாகிடப்
பாரிலே பிழைத்துமேனி பக்குவம் பெற
தாதினம் அருள் எமக்குத் தாவும் வெண்ணலை
தூவிடும்மழை பெருத்துத் தோன்றுமாநதி
போதினில் புரண்டுவீழப் பொங்குதே புனல்
போலும்புத் துணர்வெடுத்த பொங்குமின்பம் தா

நாதியற்று நாம்கிடந்த வேளை போயினி
நல்ல வாழ்வு கொண்டெழுந்து நாளுலாவிட
ஊதியே பெருத்தமேனி உப்பினைக் கொண்டும்
உன்னதம் என்றேநினைத் துவந்து போற்றிட
காதில்லாதும் உமையாகிக் கண்கள் போனதாய்
காலகாலமாக வாழ்ந்து கந்தலாய் உடல்
ஊதியே பெருத்த வீம்பில் உள்ளம்தீதெண்ணா
உண்மை நேர்மைகொண்டு வாழ்வில் ஓங்கிடச் செய்வாய்


நீல வானில் மேகக்கூட்டம் நீந்தும் வேளையில்
நீயளித்த வெங்கனல் கொண்டே உயிர்தரும்
கோலமோ சிவந்து வானடிக்குத் தோன்றிடும்
குங்குமப்பொன்னாகி வெண்மைகொள்ளும் மாசுடர்
காலமான ஆதிவேளை காணும் நீரொடு
காய்ந்தமண் கலந்துமேனி காணுயிர்கொள
சாலநேர் கணிக்கும் தன்மை சார்ந்துன் சோதியால்
சுற்றியிவ் விரைநிலத்தில் செய்தமானிடம்

ஏழ்மையுற்று வாய்மைகெட்டே வாழ்நெறிக்கெதிர்
ஏற்றதான  பொய்யுடன்  பித்தான செய்கைகள்
காழ்மைகொண்டு நீசராகிக் காணுவர் பகை
கொண்டெவர்க்கும் தீங்கு செய்து கண்ணிழந்தராய்
வாழ்வுதன்னை ஏதென் றெண்ணி வந்தணைந்திடும்
வாய்ப் பனைத்தும் கைகள் விட்டு வாயரற்றியே
வீழ்ந்தும் மண்ணில் சோர்ந்துழன்று வீணெனப்படும்
விகற்பம் நீங்கி மேன்மைகொள்ள வாவரம் தாராய்

காலசூன்ய மாயிருள்கொள் கரும்முடக்கிலே
கங்கை வெள்ளம் போலொளிக் குழம்பின் வீறொடு
தூல ரூபமாய் வெடித்துச் சீறும்சக்தியால்
துன்பமற்றே ஆடிக்காணும் தோற்றுதல் செய்தாய்
ஞாலமும் நம்மேனியும் எண் நாட்கள் என்றுமே
யாத்திரை மற்றோர் விதம் எற்றெம் முயிர்தனை
நீல விண்ணின் சூட்சுமத்தில் நீவரைந்ததேன்’
நிர்மலக் கண்முன் மறைத்த நீதி யென்ன சொல்!
*****************

kirikasan

unread,
Oct 4, 2014, 4:12:28 AM10/4/14
to santhav...@googlegroups.com

    இருளும் ஒளியும் காணும் வாழ்விதே!

சந்தன மேனியும் கொண்டடி வான்கதிர்
   சகமதில் ஒளி மேவும்
சுந்தர வானின் சிவந்திடுங் கீழடி
    செங்கதிர் வரும் காலை
விந்தை எழில்பெற வேகமுடன் மலர்    
   விரிந்திடும் விடிவேளை
செந்தமிழில் இசை கொண்டெழும் உள்ளங்கள்
   சேர்ந் திறை அருள் நாடும்

சிந்தனைகொண்டு கலைந்திடும் எண்ணங்கள்
    சீர்பெற வளம் தேடும்
மந்தமெனும் உணர் வாகிக் கலங்கிய   
   மனமிடை தெளிவாகும்
எந்தவினோத விளைவது மின்றிமெய்
  இடர்கொள உயிர் நோகும்
குந்தகம் செய் உணர்வென்ப மனந்தனில்
   கொண்டநல் வழி மாற்றும்


செந்தமிழ் பாடலும் சேர்ந்திட வானெழும்
     சில்லெனும் குளிர்காற்றும்
நந்தவனப் பொழில் நல்லெழிற் பூவன
      நிறைபுனல் அலையோடும்
சிந்தனைஓவியம்  செய்யுமெழிற் கலை  
     செவ்வன காட்சிமயம்
வந்திவை துய்த்திட வாழ்வி லினித்திட
      வருமுணர் வானந்தம்,

அந்தி வரும் மனம் ஆடிக் களைத்தொரு
     ஆண்டவன் சந்நிதியில்
நந்தி தனும் மறை ஞானத்திரு பரன்
     நாடி யருள் வேண்டும்
சந்திரனோ பரம்கொண்ட சடாமுடி
  சேர்ந்தொளி பிறையாகி
விந்தைநிலை கொண்ட போதும் ஒளிர்ந்திட
     வாழ்வும் அதைப் பேணும்

எந்தையும் இந்த நிலாவிடை அம்மையும்
   இருந்திட வாழ்வோங்கி
முந்தைய நாளகம் ஒன்றெனக் கூடவென்
   மூச்சினில் காற்றோடும்
சிந்தை நிறை யன்பு திகழ்வதிலே எழும்
    செம்மையி லுயிர் நாதம்
வந்தும் உடல்தொடும் வாசமென் காற்றிடை
    வாழ்ந்திடச் சுவை காணும்

**********************

kirikasan

unread,
Oct 6, 2014, 8:31:56 PM10/6/14
to santhav...@googlegroups.com

          உறவா ? பகையா?

நிலை குலையும் நெஞ்சே  நீ எதிரிதானோ
நிர்க்கதி யென்றென்னை விட்டதேனோ
கலை மணந்த வாழ்வில்  காணும்இன்பந்தள்ளி
கருக உளம் வேதனை செய்வாயோ
சிலையுருவாய் கல்லாய் சேர்ந்துடனே நின்றாய்
சிரிப்பிரு ந்த காலமதை மாற்றி
மலையெனவே நம்பி மனதில் உயர்வைத்தும்
மறந்தெனையே வருத்தும் நிலை கொண்டாய்

பலசெயலும் கண்டும் பக்குவம்கொள்ளாது
பனியெழுந்த மலை முகிலாய் நின்றே
சிலதெ னுயிர் கொள்ளும் சிறப்பினைக் கண்காணா
சிறுமை கொண்டு உணர்வறியாப் போர்த்தாய்
கலகல வென்றாடிக் களிப்புடனாங் கென்றால்
கணமதி லேமாற்றித் துன்பம் தந்தாய்
இலதுலகில் இனிமை இதுவரையில் என்றே
இழி துயருள் ஏற்றி வைத்துப் பார்த்தாய்

எதை விழிகள் கண்டும் எதையறிந்துகொண்டும்
இறைவழியை நீமறைத்து நின்றாய்
வதை விழிகள் கொண்டாள் வனிதை எழிலென்றாய்
வழிதவறும் விதம் உணர்வைச் சாய்த்தாய்
புதைகுழியில் வீழும் புன்மை உடல்தன்னைப்
பொன்னெனவே போற்றும் குணம் தந்தாய்
அதையறிந்து நெஞ்சில் ஆசைதனைக் கூட்டி
அவளருகில் ஆடிவிழச் -செய்தாய்

மலம் நிறைந்த உடலும் மருந்தகற்றாப் பிணியும்
மனையுடனே இரந்தழியும் உறவும்
புலன்வழியே  இன்பம் புழுவெனும் கீழெண்ணம்
புனிதமென்று போற்றும் மனமீந்தாய்
கலகமென்று காணும் கருத்தில் முரண்கொண்டு
கண்டவரும் கேலிசெய்யும் வண்ணம்
உலகமென்னும் மாயை உருண்டலையும் கோளில்
உருகிமனம் அன்புகொள்ள வைத்தாய்

எதை எனக்குநன்மை எனவிழைத்தாய் நெஞ்சே
இதுவரையில் எதுவுமிலை இன்றோ
சிதை யிலிடும்  உடலில் தீங்கிழைக்க எண்ணி
சீர் எழுந்த வாழ்வசைவிற் தோற்றே
உதையும்கொண்ட வகையில் உனது சந்தம் விட்டே
உழன்றலையப் போதும் வலிசெய்தே
கதையும் முடிவாக்கிக் கரும்வெளியிற் தள்ளி
கனவை யொழித்தாக்க மனம்கொண்டாய்!

....................**************

kirikasan

unread,
Oct 9, 2014, 5:17:39 AM10/9/14
to santhav...@googlegroups.com
 வேறொரு இழையில் போட்ட கவிதை வரிகளுக்கு விளக்கம் தருகிறேன்
 
தருவாய் தரமென்றுண்ணத் தருவே 
தரமென் றுண்ணத் கனிவாய் கனிவாய் 
தருவாய் என்றே தருமென்றெண்ணித் 
தரமொன்றுண்ணும் நினைவும் கொள்ளத்
தருமோர்இன்பம் தருவொன்றெண்ணித் 
தருவன்காயின் தரமென்றானால்
தருமென்கனியாய் தருவன் என்னும் 
தருமம்விட்டோர் தருவாமன்றோ 


விளக்கம் 


தருவாய் (கொடுப்பாய்) தரமென்றுண்ணத் (உயர்தரம் கொண்ட உணவாக) தருவே (மரமே)
தரமென் றுண்ணத் (கொடுக்க அதைமென்று உண்ணக்) கனிவாய் (வாயில் கனிகொண்டு) கனிவாய் தருவாய் என்றே (மனம் கனிவோடு விளங்க தந்து கொள்வாய் என்றே)

//மனம் கனிவோடு வாயில் கனிகொண்டு உண்ண மரமே தரமான கனியொன்று
மென்று தின்னத் தருவாயோ என்று கேட்க//


தருமென்றெண்ணித் (தந்துவிடும் என்றே)
தரமொன்றுண்ணும் (ஒருதடவை உண்ணும்)நினைவும் கொள்ளத்
தருமோர்இன்பம் (ஒரு இன்ப உணர்வெழுந்ததபோது) தருவொன்றெண்ணித் (மரமானது வேறுகருதி
தருவன்காயின் தரமென்றானால் (தரும் கனி  வன்மையான காயின் தரத்தை ஒத்தால்)
தருமென்கனியாய் தருவன் என்னும் (மரமானது மிருதுவான கனிகள் தரும் என்ற)
தருமம்விட்டோர் தருவாமன்றோ (நீதியை மறந்த மரமாகிவிடுமன்றோ)

kirikasan

unread,
Oct 9, 2014, 11:15:45 AM10/9/14
to santhav...@googlegroups.com
  தெய்வத்தைத் தேடி...!

ஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்
ஆலயத்தின் உள்ளும்புறம் தேடினேன்’
நீண்டவழிநேர் நடந்து வாடினேன்
நிற்குமிடம் சுற்றிவந்து தேடினேன்
கூண்டினிடை நின்று கிளி பேசவும்
கோகிலமும் மாமரத்தில் கூவவும் 
தாண்டியெழும் தாமரைப் பூஏரியில்
தாவுமலைப் பேரழகில் தேடினேன்

சீண்டிமலர் உண்ணும் சிறுவண்டடெனச்
செந்தமிழின் இன்சுவைத்த பாதையில்
நீண்டவழி நேர்நடந்து தேடினேன்
நிர்ம வான் நோக்கி நினைந்தேற்றினேன்
தூண்டிமனம் கொள்மலரின் பூவிதழ்
தொட்டு மதுகொட்டியதார் தேடினேன்
ஆண்டுபல அருகிமுது மையிட
ஆற்றலிழந் தன்பை எங்கும் தேடினேன்

பூவினங்கள் புன்னகைத்துப் பார்த்தன 
பொன்னழகின் சூட்சுமத்தைக் காத்தன
ஆவினங்கள் அன்புதனை காட்டின
அருகிருந்த கன்றணைந்து நீவின
தாவினபூங் குருவிக ளின் போதையில்
தருவின்கிளை தனிலிருந்து ஆடிட
ஏ விநோதம் என்றியற்கை கண்டும்நான்
எமைப் படைத்த தார் உருவைத் தேடினேன் 

நீங்குமிருள் காலையொளி நேர்வதும் 
நேரடிவான் செந்நிறத்துக் கோலமும்
தேங்கு மலைநீரருவிப் பாய்ச்சலும்
துள்ளிவிழும் போதிலிடும் கூச்சலும்
பாங்கினிலே தெய்வத்தனம் பார்ப்பினும்
பாரினிலே உண்மையுருப் பார்த்திட
ஏங்கி மனக் கற்பனையில் ஓடினேன்
எத்தனை நாள் இம்சையுற்றும் வாடினேன்
தேடியுளம் நான்களைத்த போதினில்
தேவகுர லொன்றயலில் கேட்டது
நாடியெனைத்தேடும் வல்ல மானிடா 
நானிருப்பதென்றும் அயல் பாரடா
கூடியுந்தன் மேனிசுடும் வெம்மையில்
கோபுரத்தின் தீபமெழும் காட்சியில்
ஓடியெழும் உதயவேளை ஆதவன்
ஒங்கி வெடித் தீபரவும் மாமலை

தாயவளின் அன்புகொண்டபூமனம்
தாங்குமந்த தாயுதரத் தாமரை
போயுறங்க மேனிசுடும்தீயிலும்
புதுமை காணத் தொட்டவர் கைச் சூட்டிலும்
பாயும்மழை கொண்ட ஒளிமின்னலும்
பாரறிய உண்டுசெய் மின்சாரங்கள்
தூய்மையுடன் தீயும் கொண்டதோற்றங்கள்
தெய்வசக்தி யின்வடிவம் தெரிந்துகொள்

................

kirikasan

unread,
Oct 11, 2014, 7:10:51 AM10/11/14
to santhav...@googlegroups.com
         தலைவியின் சோகம்      (இலக்கியத்தில் எனக்குப்பிடித்த உணர்ச்சி)

         பொருளறியேன்

‘மாலை மயக்குதடி தோழி - மன
  மீறி யலை பெருகுதிந் நாழி
சாலை வழி இருளின் பயணம் - நிலை
  சற்றும் உணராத மௌனம்
சேலை மறைத்த உடல்மேவித் - தனி
  செல்லும் குளிர்வாடைத் தென்றல்
ஆலைக் கரும்பு பிழிந்தெனவே - வந்தே 
   ஆவி பிழிய விழி சொரிந்தேன்

தென்னை மரத்திரண்டு கிளிகள்   - தம்முள்
  தேனை யெடுத்த மொழிபேசிக்
கன்ன மிரண்டும் பட உரசி - அவை
  காதல்கொளும் காட்சிகண்டேன்
மின்னும் இருளெடுத்த மேகம் - எந்தன்
  மேனி குலுங்க இடிபரவி
இன்னும் வருத்தல் என ஆகி - எனை
  ஏக்கம் கொள வதைப்ப தோடி

மன்னன் என வரிந்தேன் அவனோ - முழு
 மாயக் கதையிர வில்பேசி
சொன்னோர் மொழி வரைகள்மீறி .எனில்
 சொர்க்கமிருக்குதெனக்கூறி
தன்னில் எனைக் கொண்டேன் என்றும் - எனில்
 தன்னின் இதயமுள தென்றும்
முன்னின் றெனைக் காணப் பொய்கள் - சொல்லி
 மோகம் கொள வைத்துச் சென்றான்

ஆடும் மயில் நடனம் வெறுத்தும் - ஒரு
அன்னை அன்புமனம் இழந்தும்
கூடும் எழில் தருக்கள் பூக்கா - உயர்
குன்றில் மலையருவி துள்ளா
காடும் இயற்கை வனப்பிழந்தே - விடி
கங்குல் பொழுதில் ஒளி பிறக்கா
நாடுமிருப்ப துண்டோ தோழி - இந்த
நாளில் எனக்கே னிந்தநீதி

பொன்னென் றழைக்க மகிழ்வுற்றேன் - தீயில்
போடக் கருதும் எண்ணமறியேன்
இன்பம் தருங்கிளியே என்றார் -என்னை
ஏனோ இலவங் கனிக் கேங்கும்
அன்ன வகையிருத்தி அன்னம்- நடை
அழகே எனப்போற்றி நின்றார்
பின்னை கதிரறுத்துத் தூற்ற எண்ணிப்
பேச்சில் அமுதமென மொழிந்தார்

தென்னங் குயிலினிசை குரலே - இவள்
தேம்பி அழும் பொழுதுமினிதே
என்னப் பலகதைகள்சொன்னார் - இவள்
ஏங்கிக் குரலிசைப்ப ளென்றோ
சின்ன விரலில் கணையாழி- கொண்டு
சேர்த்த நிலை மனதில் எண்ணம்
நின்னைச் சகுந்தலைக்கு நிகராய் - என்றும்
நெஞ்சில் கொள்வனென உரைத்தோ

சொல்லில் பொருளுணர்ந்துகொண்டால் - என்
சோகம் தவிர்த்தும் வாழ்ந்திருப்பேன்
கல்லைப் போலிவளின் உள்ளம் - எனக்
கருதி எழிற் சிலை யென்றாரோ
முல்லை மலர் சிரிப்பு கமலம் - எனும்  
மோகம்விளை வதனம் என்றார்
இல்லை எனும் வரையும்சுகித்தே - எழுந்
தோடும் வண்டினமென் றறியேன்

*************

M. Viswanathan

unread,
Oct 11, 2014, 9:17:04 AM10/11/14
to Santhavasantham
நல்ல கற்பனை. படிக்கத்தூண்டும் நடை. 
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மீ.விசுவநாதன்

--

துரை.ந.உ

unread,
Oct 11, 2014, 9:35:01 AM10/11/14
to santhavasantham
என்ன ஒரு கோணம்...என்ன ஒரு பார்வை

​வாழ்க ஐயா ... 
இந்த இழைக்குள் எங்கு நோக்கினும் ,
எல்லாயிடத்திலும் மீதமிருப்பது 
பிரமிப்பு மட்டுமே 

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

M. Viswanathan

unread,
Oct 11, 2014, 11:17:46 AM10/11/14
to Santhavasantham
அற்புதம்.
மீ.வி.

kirikasan

unread,
Oct 12, 2014, 8:11:01 AM10/12/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!

அன்புடன் கிரிகாசன்
******************************************

kirikasan

unread,
Oct 12, 2014, 8:14:21 AM10/12/14
to santhav...@googlegroups.com
பிரமிக்கச் செய்பவளே  இதனால்  பெருமையடைவாள் தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்!


அன்புடன் கிரிகாசன்


On Saturday, October 11, 2014 2:35:01 PM UTC+1, துரை.ந.உ wrote:
என்ன ஒரு கோணம்...என்ன ஒரு பார்வை

​வாழ்க ஐயா ... 
இந்த இழைக்குள் எங்கு நோக்கினும் ,
எல்லாயிடத்திலும் மீதமிருப்பது 
பிரமிப்பு மட்டுமே 

kirikasan

unread,
Oct 12, 2014, 8:17:19 AM10/12/14
to santhav...@googlegroups.com
               ஒளியானவள்
 
ஒளியொன்று பெருவானில் உருவானது - அது
உலகென்ற ஒருவிந்தைப் பொருள்செய்தது
வெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்
விருப்போடு அலைகாந்த வலைகொண்டது
வளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவி
வாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றது
நெளிகின்ற அலைபோலும் நிற்காதது - ஓர்
நெடுவானின் இயலோடு நெறிகண்டது

உளிகொண்டு சிலைசெய்யும் செயல்போலவே - உயிர்
உள்நிற்க உடலென்னும் பொருள்செய்தது
குளிர்மண்னில் அனல்சுட்டு குடமாகுது - இங்கு
குவிமண்ணில் ஒளிசுட்டுக் கருவானது
விழிதன்னில் ஒளிபட்டு உணர்வாக்கியும் - ஓடி
விலகென்ற புவிமீது அதிகாரமும்
மொழிகூறல் தனில்சப்த விசைகூட்டியும் - அவை
முடிவாக உருவாக்கி வழிசெய்தது

வெளிர் மேகம் விளையாடும் விண் மீதிலே - படர்
வெயில் என்று அவைவாழ ஒளி செய்தது 
அழி என்று பழமைகளைச் சிதைக்கின்றது - அதில்
அழகென்று மீண்டும் சிலபுதி தாக்குது
வெளியென்ற  பிரபஞ்சம் வியந்தோடிடும் - பல
விண்ணசைவுப் பின்னலென விதிபோட்ட பின்
களி கொண்டு வாழுருவம் உயிர் தன்னையே - ஒரு
காமஇசை போகமுனை வோடீந்தது 

புவிமீது பயிர் பச்சை மரமாக்கியும் - அதில்
புனல்பட்டு வளர்கின்ற வழிசெய்ததும்
குவிவானின் நிறையோட்டம் அசைவென்பதே - எனக்
கோடானு கோடிவகை அசைக்கின்றவள்
தவி யென்று தன்பாகம் தரைமீதிலே - விட்டுத்
தகும் வாழ்வில் துயர்தன்னைக் கொள விட்டவள்
செவி காணும் மொழி வகையில் பலவாகவும் அவை
செய்கின்ற துன்ப நிலை இடை வைத்ததென்?

********************************* 

kirikasan

unread,
Oct 28, 2014, 6:31:37 AM10/28/14
to santhav...@googlegroups.com

       முயன்றிடு நாளும்

ஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில்
உனக்கு மட்டுமேன் வரண்டிருக்குதே உள்ளம்
பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் 
பார்த்து வைத்துமென் காலில் குத்துதே முள்ளும்
தேர்ந்தது மென்ன மேற்படிப்புடன் பட்டம் - அவை 
தேவையற்றுமே வாழ்க்கை ’கண்டது  வட்டம்
வேர் குடித்திட நீர் இறைத்திடும் தோட்டம் - அங்கு
வெயில் மறைந்துபின் பூச் சுடுவதென் நியாயம்

சேர் உளத்திடை திண்மை கொண்டெழு எண்ணம் - பார்
தேர் அசைந்திடத் தெருமுழுவதும் ஓடும்
பேர் துலங்கிடப் பெரிது முந்தனைச் சொல்லும் - ஊர்
பிறை வளர்ந்திட முழுமதியு மென்றாகும்
காரிருட்டது விலகி விட்டிட விடியும் - எழும் 
கதிர் வெளிப்பென்று நின்முகம் அதில் மின்னும்
நேர் நடந்திட்ட பாதையும் உனதாகும் - எங்கும் 
நிழல் தருக்களும் மலிந்திடச் சுகம் மேவும்

வார் இறைத்திடக் கொட்டும் நீரின் ஓட்டம் - அது 
வாழ் செடிதனுக் குயிரளித்திடும் ஊட்டம்
போர்முடிந்திடக் கூடிடும்நி சப்தம் - அதில் 
புன்னகைகளின் பொய்நிறைந்திட்ட பாவம்
யார் எடுத்திட்ட வாளும் பையினுள் செல்லும் - உன் 
ஞானம் கண்டிடும் வீரம் சுகத்தை நல்கும்
கூர்மதிகொண்டு ஆளுமைதனும் கொள்வாய் - உன் 
குரல் பெருத்ததொரு மனம் இகத்தினை வெல்லும்

நம்பிக்கை யுடன் நடந்து செல்லும் வாழ்க்கை - அது 
நாளும் அன்புடன் காணும் வாய்மை நேர்மை
செம்மனத்தில் கொண்டு சென்றிடு என்றும் - இனம்
சேர்ந்து வாழ்ந்திடு சுதந்திரமே வேண்டும்
எம்மிடரிலும் காணல் விட்டிடு சோர்வும் - அது
உன்நிலைதனில்  கொண்டு தந்திடும் தாழ்வும்
எம்மினத்திடை காணுமின்னலும் தீர்க்கும் - அந்த
நாள்தனை யும் நீ எண்ணி யங்குதல் வேண்டும்

****************

M. Viswanathan

unread,
Oct 28, 2014, 7:06:01 AM10/28/14
to Santhavasantham

அன்புக் கவிஞர் கிரிகசன்  அவர்களுக்கு,

 

முயன்றிடு நாளும்" கவிதையில் என்னைக் கவர்ந்த வரிகள்:

 

நம்பிக்கை யுடன் நடந்து செல்லும் வாழ்க்கை - அது 

நாளும் அன்புடன் காணும் வாய்மை நேர்மை

செம்மனத்தில் கொண்டு சென்றிடு என்றும் - இனம்

சேர்ந்து வாழ்ந்திடு சுதந்திரமே வேண்டும்.

 

பாராட்டுக்கள்.

 

அன்பன்,

kirikasan

unread,
Oct 31, 2014, 2:03:06 PM10/31/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றிகள் ஐயா!

அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Oct 31, 2014, 2:11:11 PM10/31/14
to santhav...@googlegroups.com
        துரதிஷ்டம்

நீலமலையினின் சோலைக் குயிலொன்று 
   நின்று பாடுது - அது 
நேசமுடன் கூவ வானமழை மீறிச் 
    சோவெனக் கொட்டுது
மேலடி வானிடை மேகம் சிவந்திட  
   மேன்மை கொள்ளுது - அதை 
மாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமே    
   மாயம் கூட்டுது
கோலம் அதிவிரை கொஞ்சும் கடலலை 
   கூடி ஓடுது  - அது
கொள்ளுங் கரைமணல் துள்ளி விழுந்தபின் 
  கூசித் திரும்புது
சீலத்தொடு மனம் செந்தமிழ்ப் பாட்டினில் 
  சேர்ந்து காணுது - அதைச்
சோக மிழைந்தொரு சேதிவந்தே மனம் 
   சோரக் காணுது

வாலைக்  கொண்டோரினம் வந்து கிளைதொற்றி 
  வளைந்து தூங்குது  - அந்த 
வேளை கிளை முறிந்தாடி மண்ணில் வீழ 
   வெகிழும் குரங்கது
சாலை நடை பாதை தன்னந் தனியொரு 
  சீவன் போகுது - அது
சார்ந்து செல்லும் திசை மூங்கில் துளைகாற்று 
  சூவென் றூதுது
மூலைத் தெருவினில் கோவிலடிக் கடை 
   மாலை தொங்குது - அந்த
மாலைகள் சாமியின் தோளையெண்ண மங்கை 
     கூந்தல்  ஏறுது
நாலைக் குணம் கொண்ட நாரிகையின் நடை 
  நளினம் போடுது - அதில்
நீளக் கிடந்த கல் நேர்விழி. ஏய்த்திட 
  நடை தள்ளாடுது


************************* 

kirikasan

unread,
Oct 31, 2014, 9:17:21 PM10/31/14
to santhav...@googlegroups.com

     அருள்வாயே!

நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்
நிலைதனை நிதமெழ அருள்தாயே
குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு
குவலயம் மலர் என மடிதூங்க
மறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழ
மருவிய சுகமென மனமீதில்
இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்
இயல்பெழ நிறையன்பு தருவாயே

கருணையில் பெரிதென கரமெடு அருளென
கவலைகள் பொடிபட உடைதாயே 
வருவன வளம்மிகு தமிழுடன் இனிகவி
வரமிது எனஅளி இனிதாயே     
தரும் பொழுதினி லவை தவறிடும் வகையின்றித்
தகைமிக உடையவன் எனமாற
ஒருமையில்  துணிவெழ இயற்கையில் உரம் பெற
எனை நினதொளி தந்து அருள்வாயே

இருள் பல அறிவனென்  இரந்திடு நிலையெனும்
இரவுகள் இனியெனும் இலதாக
துருப்பிடி இரும்பெனும் துரும்பெனும் இழிவதும்
தொடஎன விடுநிலை அறுத்தெயென்
குருவென அறிவதைக் கொடு உளம் தெளிவுற
குருதியின் கொதி சினம் குறைவாக்கி
‘மெருகிடு மனமதை மகிழ்வுற தணிவெனும்
மிருதிடு மனம் கனிந்தெனை நீ`யே !

kirikasan

unread,
Nov 3, 2014, 5:00:30 PM11/3/14
to santhav...@googlegroups.com
(  என்மனதில் கவி சொல்லிதருபவள். இதையும் சொன்னாள். நானறியேன் தெய்வமே பொறுப்பு)

             நானிருந்தால்........
 
ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றி
எப்படியோ நானவனைக் கண்டேன்
தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்
தான் ஒழிக்கத் தேடியறி என்றான்
வாழுமுல கென்னிலவன் வந்தொழியும் இடமறிவேன்
வானத்திலே எப்படி நான் என்றேன்
தாழும் முகி லோடுமட்டும் தன்னிடத்தி லில்லையெனத்
தலையசைத்து நான் மகிழ்வுகொண்டேன்

ஓடியெழுந்தே மறைய உடனெழுந்து தேடுகிறேன்
ஒர்முகிலும் நேருருவம் காட்டா
நீடியைந்த ஊர்வலத்தில் நேர் பறந்துசெல்ல மனம்
நிர்கதிகொண்டென்ன செய்ய என்றேன்
தேடியும்நான் காணவிலை திசையெதனப் புரியவிலை
தேவிமனங் கொண்டுதவாய் என்றேன்
நாடி யொருதீ யெழவும் நல்லொளிர்ந்த சோதியிலே
நான்மயங்கக் காதில் ஒன்று சொன்னாள்

பூஇருந்தால் தேனிருக்கும் தேனிருந்தால் பூவினுக்கும்’
தேடும் வாழ்வில் ஆசைகொள்ளத் தோன்றும்
நாவிருக்க ருசியிருக்கும் நானிலத்தில்  ஈதுவிதி
நானிருக்கும் போது சொல்லிப் போனாள்
நீயிருக்க நானிலையேல் நின்னுருவம் காணுவனோ
நானிருந்தால் தானறிவேன் என்றே
நானில்லையோ நீயில்லையோ நானறியேன் காணவில்லை 
நானிருப்பதோ இல்லையோ என்றேன்

நானில்லை நான் எங்குமிலை என்னையும் நீ காண்பதென
நேருவதும் இல்லையென்று சொன்னான்
தானிருக்கும் இடமறிந்தேன் நேர் நடந்து கண்டவுடன்
தான்மனதில் கோபங்கொண்டு நின்றான்
நான் இலையே நன்கறிவேன் நீயுமெனைக் கண்டதென்ன
நானறியேன் என்றவனைகண்டு
நீயிருக்க நான்இலையேல் நெஞ்சில்தெய்வம் காணுமங்கே
நிசப்தமே நிகழ்ந்திருக்கும் என்றேன்

பூசிரிக்கும் புன்னகைக்கும் போதில் ஒலி தோன்றுவதில்
போலிருக்க வேண்டும் நினதுள்ளம்
வாயிருக்கும் வார்த்தைகளில் வந்துமௌனம் குடியிருக்கும்
வாழ்வி லுன்னை விட்டுநானும்போனால்
தேய்விருக்கும் உயர்வுவரும் தேடும் விழி சாந்தமெனும்
தெய்வசுகம்  ஒன்றுமட்டும்காண
தாயெனவே அன்பிருக்கும் தமிழ்கனிந்த மொழியிருக்கும்
தாங்குமனம் தெய்வ மன்றோ என்றாள்

Swaminathan Sankaran

unread,
Nov 3, 2014, 5:30:24 PM11/3/14
to santhav...@googlegroups.com
அருமை. பாரதியின் 'மங்கியதோர் நிலவினிலே...' பாட்டை நினைவூட்டியது.

kirikasan

unread,
Nov 4, 2014, 3:13:16 AM11/4/14
to santhav...@googlegroups.com
 நன்றிகள் ஐயா!!

அன்புடன் கிரிகாசன்

....................................................

kirikasan

unread,
Nov 4, 2014, 3:15:35 AM11/4/14
to santhav...@googlegroups.com
                                 நீ இருக்கும் வரை நானிருப்பேன்
 
நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை
நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை
தோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலை
தூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியை
நீற்றென உடலாக்கிய பின் நேரும் நற்சுகம்.
நிர்மலவிண் நீந்துகையில் நினைத்துப் பார்இதை
நாற்றம் கொண்டிட தேகமிட்டவள் ஊற்றித் தீயினை
நாளதில் நெருப்பாக்கிட நான் நீங்குவேன் உனை

சேற்றெனும் மணல் கொண்டுசெய்யுடல் சிந்தனைதனை 
 சீரழித்திடும் யாக்கை என்கிற தீமையுமில்லை
போற்றிட விண்ணில் போவதி லெந்தப் புதுமையும் இலை
 பூத்துக்கொண்ட இப்பொய்யுடல் விட்ட போது இன்நிலை 
ஏற்றிடுமவள் ஈற்றினிலெமை கொள்ளும் நாள்வரை
 இவ்வுலகினில் காண்பது மெய்யுணர்வின் பொய்நிலை
சீற்றம் கொள்ளுணர் ஆற்றலுமற்ற பேய்களின்நிலை
சிந்தி இந்நிலம் தந்தபின்கொள்ளும் குருதிக்கூட்டினை

காற்றினைக் கொண்டு ஊதிய இக்காமப் பையினை
கட்புலனொடு காட்சி விம்பமும் ஏற்றும் காதலை 
வேற்று எண்ணங்கள் வேண்டி மெய்யினில் ஆக்கும்வேட்கையை
விட்டொரு விதம் வெளியில்சென்றிட விரும்பினாலுனை
ஆற்றென அகமோடி கண்டந்த அன்புச்சோதியை
ஆக்கிடும் அகவேதனை தரும் நெஞ்சத்தோசையை
கூற்றென மெய்யைக் கூறின் யாக்கை தீயில் போம்வரை
கூடி உன்னுடன் நான் இருப்பது திண்ணம் வேறில்லை

 *****************

kirikasan

unread,
Nov 4, 2014, 10:14:34 AM11/4/14
to santhav...@googlegroups.com
சிந்தையில் சொந்தமே அற்றவன் நான்


என்மீது குற்றங் கண்டால் பெரியவர்கள் மன்னித்து சிறியவனின் கருத்தை பொறுத்தருளுக

 நான் யார்?”

சிந்தையில் சொந்தமே அற்றவன் நான்
செய்வதில் குற்றங்கள் கொண்டவன்
கந்தல்மனம் அழுக்குள்ளவன் நான்
காணுலகில் மந்தமானவன்
நிந்தைசெயும் குணமற்றவன் இறை
நீதி முன் கைகட்டி நிற்பவன்
விந்தை சக்தி மனம் கொண்டவன் அவள்
வேண்டியதை கவிசெய்`பவன்

பந்தியில் பாகலை ஒத்தவன் பனி
போலும் உருகும் குணத்தினன்
முந்துந் திராட்சையைப் போன்றவன் இன்னும்
மூடத்தனத்திலும் முன்னவன்
எந்தசபையிலும் பின்னவன் நான்
ஏதுமறியா குணத்தவன்
வந்தே அன்னைசொல வார்த்தையில் அதன் 
வண்ணங்களை சொல எண்ணுவன்

வந்ததைக் காணாதுசெல்பவன் - பின்
வாராததை எண்ணித் தவிப்பவன்
நொந்தவன் பூமியில் நின்றிட ஒரு
நேர் வலுவற்றுத் தவிப்பவன்
சொந்தமெனும் மொழி சொல்லவோர்
தேர்ச்சியும் அற்றுமென் சக்தியின்
விந்தை உணர்வினை சொல்பவன் அவள்
வார்த்தை தருவதாய் கொண்டவன்


kirikasan

unread,
Nov 4, 2014, 11:59:52 AM11/4/14
to santhav...@googlegroups.com

          ஒளி விளக்கு
 
எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம் 
அத்தனையும் ஒன்றுதானே
நித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னே
நிற்பதோர்  சூரியன்தானே
மத்தியில் உச்சியில் மாலயில் காலையில்
மாறிக் கோலம் கொண்ட போதும்
அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்
அன்பெனும் வாழ்வுக்கொளியே

சத்தியமும்கொண்டு நித்தியமாய் ஆதி 
சக்தியென்று நம்புகின்றேன்
புத்தியறிந்த வரையிலும் கண்டவன் 
பக்தியும் கொண்டதனாலே 
சித்தி கொண்டேயவள் சொல்லுங்கருத்தினை
செந்தமிழில் கவிசெய்தே 
உத்தம இன்பங்கள் காணுகிறேன் இது
ஏற்றிய தீபத்தொளியே

வற்றியும் போவதே யில்லை உலகினில் 
வாழ்வி லன்பெனும் நீதி
கற்றிருந்தும் பயன்கொள்வதில்லை அக
கண்களை மூடிடும் வேளை
உற்றதும் பெற்றதும் உள்ளவலிகளே 
ஓடிச்செல் தெய்வத்தைநாடு
சற்றுப்பொறு கூறு சஞ்சலம்  போக்கிட
சக்திதானே வேண்டும் சக்தி

*** 

kirikasan

unread,
Nov 5, 2014, 5:32:17 AM11/5/14
to santhav...@googlegroups.com
    கனலொளியே காவாய்
           
ஞானத்தை வேண்டி நடக்கிறேன் யானும்
நான் தவிர வேறதையுங் காணேன்
ஊனதைப் பிடித்தே உந்திடும் சக்தியென்
உள்ளத்தில் சொல்வதைச் சொன்னேன்
தேனதைத் தந்தாள் தித்திக்க நெஞ்சில்
தேவையா சஞ்சலம் ஈந்தாள்
நானாக கேட்கா நலிந்துள்ளம் வற்றி
நட்பிலே பகையெண்ண விட்டாள்

மோனத்தில் ஆழ்த்தி மூச்சினை அடக்க
முனைகின்ற விதியையும் நோக்கி
தானன்பைக் கொண்டு தடையங்குபோட்டு
தரணியில் வாழ்ந்திடச்செய்தாள்
ஞானத்தைத் தந்தால் நானின்பங் கொள்வேன்
நாடாது தடுமாற வைத்தகே
கானத்தைப் பாடும் கற்பனை தந்தும்
கடல்மீது ஒடமென் றிட்டாள்

பூநக்கும் வண்டும் பூமியில் காணும்
பூவெங்கும் தேடியே திரியும்
தேனுக்கு ஆசை திகட்டாது என்றும்
தேடியலைந் திடும் வாழ்வு காணும்   
வானுக்குள் கோடி வண்ணத்தீ சுற்ற
வையத்தை செய்தெம்மை வைத்தும்
எனென்னைச் சுற்றி எங்கெல்லாம்தேடி
இதயத்தில் நிறைவின்றி விட்டாள்
வானத்தி னொளியே  வாழ்வுக்கு அதிதி
வார்த்தை தந்தே கூறச் செய்தாய்
கூனுக் கென்றாகும் கொள்கையில் இன்றி
கொண்டுபல இன்னுறவு காப்பாய்
வீணுக்கு நானும் வெளியெங்கும் தேடி
விரைகின்ற முகில் மட்டும் கண்டேன்
காணுள்ளத்தூடே கனலென்றுஆக்கும்
கடும் உணர்  விட்டென்னைக் காவாய்

**************

kirikasan

unread,
Nov 5, 2014, 1:57:13 PM11/5/14
to santhav...@googlegroups.com

   அறியேன்

அறியேன் ஐயா அறியா அறிவை
   அறியேன் அதனாலே
அறியேன் என்றால் அறியாத்தொலைவில்
 அறியா நிற்கின்றேன்
அறியென் றறியாக் கலைகள் ஈந்தாள்
  அறிவேன் அவள்கோபம்
அறிவேன்  அகன்றால் அழிவும் வரலாம்
   அதனில் தெளிவுண்டாம்

kirikasan

unread,
Nov 5, 2014, 8:00:56 PM11/5/14
to santhav...@googlegroups.com

 
               இயற்கையின் அழகும் எமதுவாழ்வும்

கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார்
கானல் விம்பங்கள்
மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில் 
மாயக் கனவுகளாய்
எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்
எழுமாம் விகாரங்கள்
புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தே
புனிதம் போற்றென்றார் 

வண்ணங் கொண்ட நிலவைத் தந்தார்
வீசும் பொன் னொளியில்
தண்மை நீரில் தலையை ஆட்டும்
தாமரை நடமாட
விண்ணைக்கட்டி நீலவிதானப் 
பட்டில் மணி வைத்தார்
உண்ணக் கழியும் உடலைத் தந்தே
உயிர்கொள் வலிசெய்தார்

வட்டப் பரிதி வந்தே ஏறும் 
வானத்தின் வெம்மை
விட்டுத் திரும்பிச் செல்லும் முகிலோ 
விண்ணிற் பஞ்சணைகள்
நெட்டைப் பனையும் தென்னைகளூடே 
நிரவும் ஒளி செய்தார்
கட்டிப்போடும் பாசமென்னும்
காயப் பிணைப்பு வைத்தார்

மட்டும் அவற்கே உரிதாம் என்னும் 
மண்ணை பறித்திடுவர்
எட்டும் வரையில் தெய்வம் கேட்டும் 
எதுவும் அசைவுன்றி
கட்டும் மரத்தில் காணும் கடலில் 
காற்றில் பிரயாணம்
விட்டே திசைகள் வீணே அலையும் 
விம்பத் திரைக் காட்சி

kirikasan

unread,
Nov 6, 2014, 4:18:33 AM11/6/14
to santhav...@googlegroups.com
    உள்ளே வேண்டும் ஒளி

வானத்திலே வித்தாகியே நின்றதோர் 
 வண்ணத்தில் தீக்குழம்பு 
மோனத்திலே வெடித்தாழப் பரந்துநல்
  லாட்சியும் கொண்டதன்று ’
ஆனதிலே வெளியெங்கும் தனதென 
  ஆக்கி ஒளி விரித்தாள் 
ஈனத்திருள் ஓடி எங்கம் ஒளித்தது 
   இராவின் விடிவை யொத்து

ஏழு வண்ணங்களைக் கொண்டே ஒளிசக்தி 
  இயங்கிடும் கோள்கள் செய்தாள் 
ஏழுசுரங்களில் நாதம் மெழுந்திட 
 எங்குமே ஓசை யிட்டாள்
ஏழு தினங்களைக் கொண்டு வகுத்தது 
 ஏற்றதோர் காலமென்றும்
ஏழுவகை மூலமிட்டே உடல் செய்தாள்
  இங்கே மனிதமென்று

மண்ணொடு நீரையும் தீயும் வளி உயிர்
   மற்றும் காந்த, சத்தமாய்
எண்ணி இவைகொண்டு ஏற்றி இதயத்தில் 
   ஓசைக் கணக்குமிட்டே
அண்ணளவில் எங்கள் ஆயுள் வரைந்ததில் 
   அந்தமும் மேற்பொறித்தே
உண்ணும்  உணவிலும்  ஓடும் மழையிலும்
  ஒங்கி வளர விட்டாள்

கண்ணைத் தந்தே அதில் காட்சி விரிந்தின்பக் 
  காதல்  இயற்கை கொண்டே
பெண்ணை உருச்செய்து காந்த உணர்வுகள் 
  பின்னி வளர் மனிதம்
எண்ணிப் பெருகிட இட்ட கணக்கதை 
  இன்று மனிதர் விட்டே
விண்ணைப் பெருந்தீயை எண்ண மறந்திருள் 
 கொண்டுள்ளம் வாழுகிறார்

மின்னும் ஒளியெங்கள் உள்ளத்தில் சக்தியிட்
  டோங்கி வளருமெனில்
தன்மை கொண்டே யிந்த ஆழக்கருமிருள்
 தன்னை வென்றே பரவ
உன்னைப் படைத்துயிர் கொள்ளு முயர்சக்தி
 உள்ளே யிருத்தி விட
என்ன நினைத்தின்று உள்ளிருள் போற்றியிப்
 பூமியில் தீமைசெய்தீர்


***********

kirikasan

unread,
Nov 7, 2014, 10:32:07 AM11/7/14
to santhav...@googlegroups.com

   இதோ வெண் திரையில்  வண்ணக்கலை           

ஆடவெனக் கட்டிவிட்ட சலங்கை இன்னும்
  அழுகிறது நான் அசைந்து நடக்கும்போது
கூடவெனக் கோர்த்தெடுத்தமாலை தன்னும்  
  கூடையிலே காத்திருக்கு கொள்ளலின்றி
போடவென வஸ்திரமும் வெட்டித் தைத்து
   பூணவெனக் காத்திருக்கப் பொழுதும் சாய்ந்தே 
ஓடஒளி மேலடிவான்  சிறப்பைகொள்ளச்
   ஏங்குமுள்ளம் ஏதுநினைத்தின்பங் கொளுதோ?

ஓடவெனப் பிறந்த மலை நதியும்கூட
  ஒசையின்றித் தூங்குவது உலகிலுண்டோ
சூடவென மலரெடுத்த மங்கைமீண்டும் 
  சொல்லிமனம் வெறுத்ததனை விட்டதுண்டோ
தேட வரும் வலையிடையே சிக்கும்பறவை 
 தேறுமெனக் காத்திருந்த வேடன் போலும்
ஆடவென மேடைவர  அழகின்நங்கை
   அடுத் தெனவிருக்கும் எனஅகத்தைக்கொண்டேன்

காடுமலை தேடி ஒரு கனவைக் கண்டேன்
  காட்டில் நிலா எறிக்கையிலோர் பொருளைக் கண்டேன்
ஏடுகளைப் புரட்டி ஒரு  இன்பங்கொண்டேன்
  ஏனிருக்கு தென்றுபல வினவிக் கொண்டேன்
போடுவென புகுந்திடையில் போட்டும் இன்பம்
   புத்துணர்வுகொள்ளச் சில கவிதைசெய்தேன்
நீடு வழி நடந்தவிதம் நிற்கும் வேளை
  நெஞ்சினிக்க பெயர் வந்துஒலித்திடாதோ

kirikasan

unread,
Nov 8, 2014, 1:35:33 AM11/8/14
to santhav...@googlegroups.com
            விழுந்தும் எழல்  வேண்டும்
 
வலியெடுத்தும் அறமெடுத்தும் 
   பகைமுடித்த தமிழ இன்று
   வகை யடுத்து நடப்பதென்ன கூறு
கிலி பிடித்து குளிரெடுக்க 
   கிடுகிடென்று உடல்நடுங்க
   கீழ் கிடப்பதோ நினைந்து தேறு 
புலிவிரட்ட முறமெடுத்த 
   பெண்மணிக் கென்றான கதை
   புழுகிவைத்த பொய்தனுமோ அன்று
கலியெடுத்து தொகையுரைத்த
   களையெடுத்து தோள்பெருக்க
   கதைநிறுத்தி புதியவாழ்வு காணு

மலைசிறுத்தும் திடம்பெருக்கும் 
     மகிழ்வெடுத்துக் களம்புகுந்த
     மகன் குடித்ததனமறுக்க வென்று
தலை யடித்து கதறி மார்பில் 
     தான்விழுப் புண் தாங்கினானோ ’
     தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
 நிலை யெடுத்த வீரஅன்னை 
  நெறியெடுத்த பாவையர்கள் 
    நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்
குலை நடுங்கிக் கிடந்ததென்ன 
     குரல் கொடுத்தும் அவனியெங்கும்
     கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
 
சிலையெடுத்த நிலை யிருப்பின் 
  சிறுமைதரும் வாழ்விலென்றும்
  சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்
அலை யெழுந்து வீழ்ந்த பின்னே 
  அடங்கியுள்ளே கிடந்ததில்லை
  அதுவெழுந்து வளைந்து கரையேறும்
வலை விழுந்தபோது அஞ்சி 
   வாழ்விழந்த தென்று புறா
   வாடவில்லை வேடனை ஏமாற்றும்
தலைசிறந்த கதைகளிலே 
   தர்மவழிகாட்டும் அதைத்
   தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு


*********** 

kirikasan

unread,
Nov 10, 2014, 8:55:14 AM11/10/14
to santhav...@googlegroups.com
          மனத்தோட்டம்

கவிதை மலர்களும் காணும் மனதெழும்
  கற்பனைத் தோட்டத்திலே
புவியில் புலர்ந்திடும் பொழுதில் முகைவிடும் 
  பூக்களெனும் வகையே
செவியில் மதுவெனப் புகுமே இசையெழச் 
   சேரும் தமிழினிதே
குவியும் மலரிதழ் நெகிழும் விதம் மனம் 
    கொள்ளும் கவிதைகளே!

நிதமும் பூத்திடுமலராய் அழகுடன் 
  நினைவில் சுவை தருமே 
விதமும் உயிரிடை விளங்கும் உணர்வுகள்
  வெளிச்சம் தரும் அகலே
பதமும் பாங்கினில் இதமும் மகிழ்வெழப் 
   புதிதோர் சுகம் வருமே
உதயம் பொழுதெழும் கதிரின் ஒளிமிக
    உடையோர் பெருநிதியே
கவிதை கனிவது கலையின் எழுமனக்
   காட்சி பெருமிதமே
புவியில் கவிஞன்கண் பார்வை தரும்பொருள் 
  படைப்பில் தனிரகமே
குவியும் மனதிடை கொள்ளும் உணர்வுகள் 
   கீதம் இசைத்திடவே
கவிதை எனும்காட் டாற்றுடை வெள்ளம் 
   கட்டை மீறிடுமே

தவிப்பும் இளமையின் தாகம் மனமெழும் 
   துயரம் மகிழ்வுடனே
கவியின் பொருள் சினம் காதல் களிமனம்
   கனிவும் பெருகிடவே
செவிகொள் இழிமையும் சேரும் வியப்புகள்
    செழிக்கும் போதினிலே
குவிவன உணர்வுக் கிளர்வினில் கவிதை
     கொட்டும் அருவியதே

*****************

துரை.ந.உ

unread,
Nov 10, 2014, 8:58:05 AM11/10/14
to santhavasantham
வாழ்க ஐயா 

2014-11-08 12:05 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:
            விழுந்தும் எழல்  வேண்டும்

விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து
 
--

துரை.ந.உ

unread,
Nov 10, 2014, 9:07:37 AM11/10/14
to santhavasantham


2014-11-10 19:25 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:
          மனத்தோட்டம்



​ 
 

*****************

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

kirikasan

unread,
Nov 11, 2014, 9:14:26 AM11/11/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றிகள்! துரை அவர்களுக்கு! தங்கள் படம் பார்த்த்தும், இன்னுமொரு கவி பிறந்தது .அது கீழே உள்ளது நன்றிகள்!!

அன்புடன் கிரிகாசன்

n Monday, November 10, 2014 2:07:37 PM UTC, துரை.ந.உ wrote


இதழ் நெகிழும் மலர்வனம் இதில் எழுமோ கவிமணம்!
60 posts by 5 authors
 
 
Aug 29
 me எனது முன்னைய இழையான  ”கவிதைச்சோலையில் கனவுப்பூக்கள்” மிக நீண்ட இழையாகப் போய்விட்டதால் இந்த புதிய இழையை தொடங்குகிறேன்.இதை தொடங்கும் போது புதிய உற்சாகத்துடன் நிறைய மலர்கள்பூக்கும் என்ற நம்பிக்கை மனதில் கொண்டு  தொடங்குகிறேன்.-அன்புடன் கிரிகாசன்    ஆலமர
Aug 29
 me                   காதலின் வலிமை பெரிது காதலினைக் களவென்றும் குற்றம் என்றும் கன்னியரும் காளையரும் கருத்தில் ஒன்றமோதலினை உருவாக்கும் பெற்றோர்களே  முற்றுமது தவறில்லை புரிந்துகொள்வீர்சாதலினை ஏற்றாலும் ஏற்போம் அன்றி   சாகவிட மாட்டோம் எம்காதல் என்றேபேதமதைக
Aug 30
 me எவரையும் (பெண்களை) புண்படுத்தும்நோக்கம் கிடையாது மன்னிக்கவும்கனவு முடிந்தபோது  அவள்! அன்று:  இளங்கனி சுவையும் இதழ்மலர் அமுதும் எடுத்துரை மொழியும் இனிதெனும் ஊற்றாய் தளதள பருவம் தலை நிறை கேசம் திடமுறு விழிகூர் தெறி குளுபார்வை குளமலர் விரிவாய்க் கு
Aug 30
 yogiyaar  My dEar Kirikasan, ASeers. This is very urgent. Pl send a new GOOD poem for our Shanmuga kavacham DeepavaLi malar, AS yu did last year!. Thanks, YUrs truly,Yogiyar வாழ்க அனைவரும் வளமுடனே என் குருஜி லஹரி பாபாஜி ஆசியினால்.கவியோகி வேதம்(kaviyogi vedha
Aug 30
 me ஐயா  தாங்கள் கேட்டுக்கொண்டதன் படி இப்பொழுதுதான் எழுதி முடித்தேன் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால் எப்படி இருக்கவேண்டுமென்று தெரியவில்லை. இதைபார்த்து  சரியானதா என அவசியம் பதில்தரவும் திருத்தி அல்லது விரைவாக வேறெழுதி தருகிறேன்
Aug 31
 me ஒருபெண் தன் தந்தைமீது ஏற்பட்ட ஏதோ ஒரு சிறு காரணத்துக்காக சினம்கொண்டு தந்தையைப் பிரிந்து தனியே சென்றுவிட்டாள்.பிரிவு  தகப்பனால பொறுத்துகொள்ள முடியவில்லை   எங்கு சென்றாய் மகளே மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாகமண்ணிலே நீரைத் தேடும்களை கொண்ட பயிரன்பு
Aug 31
 yogiyaar இப்பாடல் வேண்டாம். முருகன் பற்றி எழுதவும். அனுப்புக, யோகியார்
Aug 31
 me ஐயா இன்னொன்றும் அனுப்பியுள்ளேன் .மின்னஞ்சல் காண்க 
Aug 31
 yogiyaar பார்த்துவிட்டேன்..சரியோகியார்
Sep 1
 me         முன்னரும் இதே போன்றொரு கவிதை எழுதினேன். புதுமுயற்சி     (இது கவியோகி வேதம் ஐயா அவர்களுக்காக)              முருகா ,உருகும் மனம் எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்கத்திய ழைத்தாலும்நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்வித்து விடென்றாலும்முத்தமிழி
Sep 1
 me    புதிதாக ஒரு கற்பனையோட்டம் கவிதையாக  மலர்கிறது                அழகின்  சிரிப்பு  பகுதி 1  காயா கனியா ? மயிலொன்று ஆடியதோ இல்லையில்லைமழைமேகம் மண்டபத்துள் வருவதில்லைஒயில் நடன உயிர் பெற்ற சிலையுமில்லைஓடிவரும் மான்குதித்த உருவம் இல்லைபுயலடிக்கப் புதிதா
Sep 1
 yogiyaar ரொம்ப அழகு.. சந்தமும் கற்பனையும் மீன்போல் துள்ளுகின்றன, வாழ்க யோகியார்
Sep 2
 me நன்றிகள் ஐயா மிக்க நன்றிகள்!
Sep 2
 me  அழகின்  சிரிப்பு  பகுதி 2 ஆபத்து சிரிக்கின்றாள் சிலையென்பாள் அணிந்த மாலைசிதறியதோ  முத்துக்கள் பளிங்குமேடைவிரிகின்றாள் மிகமென்மை வலையொன்றங்கேவிழியென்னும் அலைமீன்கள் வீழ்ந்ததாமோஎரிக்கின்ற தீயைமனத் தடக்கி மன்னன்எழும் சினத்தில் அவள் நோக்கத் தணிவும் கொண
Sep 3
 me    நடந்திடு நேரே ! நடக்கின்ற பாதைமீது .. இடர்க்கென்று முள்ளிருக்கும்  அட’க்கண்டும் அல்லல் கொள்வதோதடக்கென்று கல்லை வைப்பார் .  நடக்கின்ற வேளைதன்னில்.  கடக்காமல் தடுக்கி வீழவோஅடக்காமல் சினமெடுக்க .  முடக்காமல் எதையும் செய்து.  விடக்காலமென்னசொலுமோஇடக்கா
Sep 5
 me             புதுமைத்தாய் நீரும் நீயே நெருப்பும் நீயே நிகழ் வானத்தின் தீதாரும் வெம்மைத் தகிப்பும் நீயே தமிழும் பொறிகொள்ளச்சேரும் வார்த்தை சிதறுமெண்ணம் திருவாய்மொழியாகிஊரும் கொள்ளும் உறவில் நட்பின் உவப்பும் தந்தாயே தேரும் மனமும் தெரிவான் நிலவும் தேசம்
Sep 6
 me         தவறுகள் மலியும் தருணம் அலைந்திடும் மனமதில் அலைகடலெனு மொருஅவதியும்  உருவாகும்கலைந்திடும் கனவுகள் கடுதியில் மறைவதுகவலையை உருவாக்கும்குலைந்திடும் உறவுகள் கொடுமையென் பிரிவதுகுமுறலை தரும் நாளும்சிலையெனும் மனமதில் சிறுமையின் இழிவெழச்சீற்றமும் எழுந்
Sep 6
 me ஒரு நட்பினை வருந்த செய்துவிட்டால்.. மாமடை யெனவிழி ஓடிடுவேளையில்  மாமடை செய்கையெனமாமடு எண்ணங்கள் ஓடிட மாமுடை மாதிரிஆற்றிவிடின்மாவிடை கூறிட மாமனதில் எது மாஇடி மாமழையாய் மாஇடர் தந்ததை மாமனம் கொண்டுளம் மாறிட வைத்தருளும் மாசுக மென்றிவன் மாசுகள் எழமனம்  மா
Sep 6
 me         இதயங்கள் அழகான இதயங்கள் அணீசேரலாம்  அதன்மீது சினம்வந்து அரசாளவோபழகாத இதயங்கள் பலம் காணலாம் பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோஇழகாத மனமென்று இருந்தாலும் சொல்இசையாத மனந்தானே எதிராகிடும்வளர்கின்ற தீயென்று வருமாயிடின்வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொ
Sep 7
 me   உலகம் பலவண்ணம் மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர்  முகம் மனம் எதிரிருக்கும்கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்பிரித்திடக் கல்லிருக்கும்வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள்   வலிஎழத் தீதும்வரும் தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம்   திரிந்திடும் புய
Sep 8
 me           சக்தி எனும் சக்தி!   அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல்  யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட நேர்மை வழியெடுப்பாய் கிளியேதுஞ்சி அழுதலும் தூறும் விழிகளும்  தேவை யுண்டோ நினை வீறுடனேதஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு   
Sep 8
 me         சக்தியே நிரந்த்ரம் சக்தி சக்தி சக்தி யொன்றே நிச்சயம்சத்தியத்தின் மொத்தரூப சித்திரம்சகதி சக்தி சக்தி யொன்றே அற்புதம்சக்தியெண்ணு காணு இன்பம் முற்றிலும்சக்தி சக்தி சக்தி என்றும் கற்பகம்சக்தி சாருவோர்க்கு நன்மை யைத்தரும்சக்தி சக்தி சக்தி யுந்தன்
Sep 10
 me    அழகின் சிரிப்பு  3 இந்த கவிதைக் கதையை முப்பரிமாணப் படங்களின்  காட்சிகளோடு தரலாமென எண்ணுகிறேன் ( 3D  கவிதையாக ) சற்றுக் காலம் எடுக்கலாம் ஆனல் நிச்சயம் வரும். ஏற்கனவே ஆர்ம்பித்துவிட்டேன் விடிந்தஓளி வெய்யவனின் வெம்மைகுன்ற விசுமிளங் காற்றும் வெந்தகிப
Sep 12
 me அழகும் இன்பமும் பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு பேரின ஒற்றுமை  சமூகத்தின் கழகு வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு வருந்துயர்  நீக்குதல் வீரத்தி னழகு உருக்கலும் மெருகிடல் பொன்னதற் கழகு உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு வருந்துதல் நிறுத்திடின
Sep 12
 me கண்ணீர் ஆவென்றலறிய வேளையிலும் மனம் ஆனந்தம் கொண்டு திளைக்கையிலும் பூவென்ற தாய் அள்ளிக்கொட்டுகிறாய் மழை போலும் என்னில் வந்து சொட்டுகிறாய் ஓவென்றே ஓடிபுயல் விளைக்கும் சத்தம் உள்ளிருந்தே ஓசையாகிவிட நாவொன்றும் சேதிசொல் லாமலேயே நெஞ்சில் கொண்ட துன்பம் நீபக
Sep 22
 me தன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம் தென்னைமரச் சோலையிலே திங்கள் எழும்போதினிலே என்னருகில் நீயிருந்தாய் இன்குயிலே அதில் பின்னியிழை வெண்முகில்கள் பொன்னிலவைப் போர்த்திருக்க என்னை மனம் பூக்க வைத்ததுன் குரலே சின்னமலர் சூடும் தரு சில்லெனவே வீசு த
Sep 24
 me மகிழ்வில ஆடும் உள்ளம் கள்ளையுண்ட போதை நெஞ்சு காணுதே கண்கள் சுழன்றோடி வட்டம்போடுதே உள்ளுணர்வு மெல்ல எட்டிப் பார்க்குதே உன்மத்தங் கொண்டோசை உள்ளம்போடுதே வள்ளலென வாரியின்பம் நல்குதே வட்டநிலா போலுமெண்ணம் மின்னவே தெள்ளினிய செந்தமிழின் பாவிலே தேகம் என்ன பூ
Sep 25
 me தீரப்புயல் வேண்டும், பேசாதே உள்ளத்தில் சக்திகொண்டேன் - வெறும் பேச்சில் இழந்திடச் சித்தமற்றேன் பூசாத நீறணி நெற்றியென - இங்கே போக்கிடும் வாழ்வில் வெறுமை கண்டேன் ஆசா பாசங்களின் கட்டினிலே - நின்று ஆடிக் கழித்திடவா பிறந்தேன் வீசாத தென்றல்கொள் பூவனமா  - இ
Sep 29
 me   சக்தியைப் போற்றுவோம் ஆதிமூல சோதியான அன்னை சக்தியே ஆளவென்று நீவகுத்த தாமிவ் வாழ்வதில் பாதிதுன்ப மோடப் பாதி இன்ப மாகிடப் பாரிலே பிழைத்துமேனி பக்குவம் பெற தாதினம் அருள் எமக்குத் தாவும் வெண்ணலை தூவிடும்மழை பெருத்துத் தோன்றுமாநதி போதினில் புரண்டுவீழப்
Oct 4
 me இருளும் ஒளியும் காணும் வாழ்விதே! சந்தன மேனியும் கொண்டடி வான்கதிர் சகமதில் ஒளி மேவும் சுந்தர வானின் சிவந்திடுங் கீழடி செங்கதிர் வரும் காலை விந்தை எழில்பெற வேகமுடன் மலர் விரிந்திடும் விடிவேளை செந்தமிழில் இசை கொண்டெழும் உள்ளங்கள் சேர்ந் திறை அருள் நாடு
Oct 7
 me உறவா ? பகையா? நிலை குலையும் நெஞ்சே  நீ எதிரிதானோ நிர்க்கதி யென்றென்னை விட்டதேனோ கலை மணந்த வாழ்வில்  காணும்இன்பந்தள்ளி கருக உளம் வேதனை செய்வாயோ சிலையுருவாய் கல்லாய் சேர்ந்துடனே நின்றாய் சிரிப்பிரு ந்த காலமதை மாற்றி மலையெனவே நம்பி மனதில் உயர்வைத்தும்
Oct 9
 me  வேறொரு இழையில் போட்ட கவிதை வரிகளுக்கு விளக்கம் தருகிறேன்  தருவாய் தரமென்றுண்ணத் தருவே தரமென் றுண்ணத் கனிவாய் கனிவாய் தருவாய் என்றே தருமென்றெண்ணித் தரமொன்றுண்ணும் நினைவும் கொள்ளத் தருமோர்இன்பம் தருவொன்றெண்ணித் தருவன்காயின் தரமென்றானால் தருமென்கனியாய்
Oct 9
 me   தெய்வத்தைத் தேடி...! ஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்ஆலயத்தின் உள்ளும்புறம் தேடினேன்’நீண்டவழிநேர் நடந்து வாடினேன்நிற்குமிடம் சுற்றிவந்து தேடினேன்கூண்டினிடை நின்று கிளி பேசவும்கோகிலமும் மாமரத்தில் கூவவும் தாண்டியெழும் தாமரைப் பூஏரியில்தாவுமலைப் பேரழகில
Oct 11
 me          தலைவியின் சோகம்      (இலக்கியத்தில் எனக்குப்பிடித்த உணர்ச்சி) பொருளறியேன் ‘மாலை மயக்குதடி தோழி - மன மீறி யலை பெருகுதிந் நாழி சாலை வழி இருளின் பயணம் - நிலை சற்றும் உணராத மௌனம் சேலை மறைத்த உடல்மேவித் - தனி செல்லும் குளிர்வாடைத் தென்றல் ஆலைக்
Oct 11
 meev1955 நல்ல கற்பனை. படிக்கத்தூண்டும் நடை. வாழ்த்துக்கள்.அன்புடன்,மீ.விசுவநாதன் 2014-10-11 16:40 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:
Oct 11
 துரை.ந.உ என்ன ஒரு கோணம்...என்ன ஒரு பார்வை ​வாழ்க ஐயா ... இந்த இழைக்குள் எங்கு நோக்கினும் ,எல்லாயிடத்திலும் மீதமிருப்பது பிரமிப்பு மட்டுமே  2014-10-11 18:47 GMT+05:30 M. Viswanathan <meev...@gmail.com>:
Oct 11
 meev1955 அற்புதம்.மீ.வி. 2014-10-11 19:04 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
Oct 12
 me நன்றிகள் ஐயா! அன்புடன் கிரிகாசன்******************************************
Oct 12
 me பிரமிக்கச் செய்பவளே  இதனால்  பெருமையடைவாள் தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்!
Oct 12
 me                ஒளியானவள் ஒளியொன்று பெருவானில் உருவானது - அதுஉலகென்ற ஒருவிந்தைப் பொருள்செய்ததுவெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்விருப்போடு அலைகாந்த வலைகொண்டதுவளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவிவாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றதுநெளிகின்ற அலைபோ
Oct 28
 me        முயன்றிடு நாளும் ஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில்உனக்கு மட்டுமேன் வரண்டிருக்குதே உள்ளம்பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் பார்த்து வைத்துமென் காலில் குத்துதே முள்ளும்தேர்ந்தது மென்ன மேற்படிப்புடன் பட்டம் - அவை தேவையற்றுமே வ
Oct 28
 meev1955 அன்புக் கவிஞர் கிரிகசன்  அவர்களுக்கு,   " முயன்றிடு நாளும்" கவிதையில் என்னைக் கவர்ந்த வரிகள்:
Oct 31
 me மிக்க நன்றிகள் ஐயா!
Oct 31
 me         துரதிஷ்டம் நீலமலையினின் சோலைக் குயிலொன்று    நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச்     சோவெனக் கொட்டுதுமேலடி வானிடை மேகம் சிவந்திட     மேன்மை கொள்ளுது - அதை மாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமே       மாயம் கூட்டுதுகோலம் அதிவிரை கொஞ்சும
Nov 1
 me      அருள்வாயே! நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்நிலைதனை நிதமெழ அருள்தாயேகுறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடுகுவலயம் மலர் என மடிதூங்கமறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழமருவிய சுகமென மனமீதில்இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்இயல்பெழ நிறையன்பு தருவாய
Nov 3
 me (  என்மனதில் கவி சொல்லிதருபவள். இதையும் சொன்னாள். நானறியேன் தெய்வமே பொறுப்பு)              நானிருந்தால்........  ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றிஎப்படியோ நானவனைக் கண்டேன்தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்தான் ஒழிக்கத் தேடியறி என்றான்வாழு
Nov 3
 கடிச்சம்பாடி அருமை. பாரதியின் 'மங்கியதோர் நிலவினிலே...' பாட்டை நினைவூட்டியது. 2014-11-03 17:00 GMT-05:00 kirikasan <kana...@gmail.com>:
Nov 4
 me  நன்றிகள் ஐயா!!
Nov 4
 me                                  நீ இருக்கும் வரை நானிருப்பேன் நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லைநின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லைதோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலைதூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியைநீற்றென உடலாக்கிய பின் நேரு
Nov 4
 me சிந்தையில் சொந்தமே அற்றவன் நான் என்மீது குற்றங் கண்டால் பெரியவர்கள் மன்னித்து சிறியவனின் கருத்தை பொறுத்தருளுக  நான் யார்?” சிந்தையில் சொந்தமே அற்றவன் நான்செய்வதில் குற்றங்கள் கொண்டவன்கந்தல்மனம் அழுக்குள்ளவன் நான்காணுலகில் மந்தமானவன்நிந்தைசெயும் குண
Nov 4
 me           ஒளி விளக்கு எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம் அத்தனையும் ஒன்றுதானேநித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னேநிற்பதோர்  சூரியன்தானேமத்தியில் உச்சியில் மாலயில் காலையில்மாறிக் கோலம் கொண்ட போதும்அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்அன்பெனும் வாழ்வுக
Nov 5
 me     கனலொளியே காவாய்           ஞானத்தை வேண்டி நடக்கிறேன் யானும்நான் தவிர வேறதையுங் காணேன்ஊனதைப் பிடித்தே உந்திடும் சக்தியென்உள்ளத்தில் சொல்வதைச் சொன்னேன்தேனதைத் தந்தாள் தித்திக்க நெஞ்சில்தேவையா சஞ்சலம் ஈந்தாள்நானாக கேட்கா நலிந்துள்ளம் வற்றிநட்பிலே பகை
Nov 5
 me    அறியேன் அறியேன் ஐயா அறியா அறிவை   அறியேன் அதனாலேஅறியேன் என்றால் அறியாத்தொலைவில் அறியா நிற்கின்றேன்அறியென் றறியாக் கலைகள் ஈந்தாள்  அறிவேன் அவள்கோபம்அறிவேன்  அகன்றால் அழிவும் வரலாம்   அதனில் தெளிவுண்டாம்
Nov 6
 me                 இயற்கையின் அழகும் எமதுவாழ்வும் கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார்கானல் விம்பங்கள்மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில் மாயக் கனவுகளாய்எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்எழுமாம் விகாரங்கள்புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தேபுனிதம் போற்றென்றார்  வண்ணங் கொ
Nov 6
 me     உள்ளே வேண்டும் ஒளி வானத்திலே வித்தாகியே நின்றதோர்  வண்ணத்தில் தீக்குழம்பு மோனத்திலே வெடித்தாழப் பரந்துநல்  லாட்சியும் கொண்டதன்று ’ஆனதிலே வெளியெங்கும் தனதென   ஆக்கி ஒளி விரித்தாள் ஈனத்திருள் ஓடி எங்கம் ஒளித்தது    இராவின் விடிவை யொத்து ஏழு வண்ணங்க
Nov 7
 me    இதோ வெண் திரையில்  வண்ணக்கலை            ஆடவெனக் கட்டிவிட்ட சலங்கை இன்னும்  அழுகிறது நான் அசைந்து நடக்கும்போதுகூடவெனக் கோர்த்தெடுத்தமாலை தன்னும்    கூடையிலே காத்திருக்கு கொள்ளலின்றிபோடவென வஸ்திரமும் வெட்டித் தைத்து   பூணவெனக் காத்திருக்கப் பொழுதும்
Nov 8
 me             விழுந்தும் எழல்  வேண்டும் வலியெடுத்தும் அறமெடுத்தும்    பகைமுடித்த தமிழ இன்று   வகை யடுத்து நடப்பதென்ன கூறுகிலி பிடித்து குளிரெடுக்க    கிடுகிடென்று உடல்நடுங்க   கீழ் கிடப்பதோ நினைந்து தேறு புலிவிரட்ட முறமெடுத்த    பெண்மணிக் கென்றான கதை 
Nov 10
 me           மனத்தோட்டம் கவிதை மலர்களும் காணும் மனதெழும்  கற்பனைத் தோட்டத்திலேபுவியில் புலர்ந்திடும் பொழுதில் முகைவிடும்   பூக்களெனும் வகையேசெவியில் மதுவெனப் புகுமே இசையெழச்    சேரும் தமிழினிதேகுவியும் மலரிதழ் நெகிழும் விதம் மனம்     கொள்ளும் கவிதைகளே!
Nov 10
 துரை.ந.உ வாழ்க ஐயா  2014-11-08 12:05 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:
துரை.ந.உ 
Nov 10
Post
 
Discard

kirikasan

unread,
Nov 11, 2014, 9:23:05 AM11/11/14
to santhav...@googlegroups.com
சந்தவசந்தத்தில் எனக்குள் ஒருவன் எனும் தலைப்பில் இன்னொரு இழை உள்ளது. 
அதற்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை
 
இது சுயமாக மனதுள் எழுந்தது

                   நானா அவன்
 
எனக்குள் ஒருவன் இருகின்றான் - அவன்
இன்பமும் துன்பமும் ரசிக்கின்றான்
கனக்கும் துயர்மனம் கொண்டாலும் - அவன்
களிப்பில் பஞ்சென மிதக்கின்றான்
தனக்கெனப் பாதை வகுத்தவனாம் - அவன்
தனிவழிப் பயணம் நடப்பவனாம் 
வனத்தில் மானென வாழ்பவனாம் - பகை’
வரும்போ தஞ்சா வீரனுமாம்

குணத்தில் கோட்டையின் மன்னவனாம் - அவன் 
குலவும் தென்றலின் இளமகனாம்
கணக்கில் கவிதையின் ஆற்றோட்டம் - இவன்
கனவை ஆக்கிடப் போராட்டம் 
மணக்கும் மல்லிகை வாசமதோ - இவன் 
மனமும் வாய்மைசொல் பூவனமோ 
கணத்தில் கற்பனை ரதமேறி - அவன்
கைதொடும் தாரகை ஒருகோடி

தடைகள் வருவது தானுடையும் - அவை
தண்ணீர்க் குளத்திடை குமிழிகளாம்
நடைகொள் பாதையில் குளிர்காற்று - அதில் 
நந்த வனம் எனும் உணர்வூற்று 
இடையில் ஒருமயில் நடமாடும் -அது
இன்னிசைக் கூத்திடக் குயில்பாடும்
விடைகள் தேடியே ஓடும்நதி - என
விளங்கும் வாழ்வின் போக்கினிலே

இடையே விதியும் எழுந்தாட  - இவன் 
எண்ணத் திசையினில் காட்சிமுரண்
மடையும் உடையா நீர்த் தேக்கம் - எனும்
மதியின்  பொறுமை தோற்றாலே
உடையின் உண்மைப் பிரவாகம் - அதை
உணர்வோ கண்டால் வலி சேர்க்கும்
படைகள் கொண்டெழுந் தணிசேர்வாய் - உன்
பழமைத் தமிழ்க்கவி இடர் வெல்லும்

************************* 

Kaviyogi Vedham

unread,
Nov 11, 2014, 9:31:01 AM11/11/14
to santhavasantham
அழகு.. மெத்த ஆகிய சந்தம்.. கருத்து..
 வாழ்க கிரி..
யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.எம் ஆஸ்ரம  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள் அற்புத,அழகியபடைப்பும் 
அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

kirikasan

unread,
Nov 20, 2014, 2:42:30 PM11/20/14
to santhav...@googlegroups.com
மிக்க மிக்க நன்றிகள் ஐயா!
அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Nov 20, 2014, 2:43:20 PM11/20/14
to santhav...@googlegroups.com

               எங்கள் தாயகம்

ஆழநெடுங் கடல் சூழ எழில்கொளும்
அன்னைபூமி யெங்கள்தேசம்  - அதில்
வேழம் மிதித்திட வீசிடுங் காற்றினில்
வெட்டிய நெல்பதர் தூற்றி
சூழ வயல்களில் சுந்தரத் தென்றலில் 
சுற்றி நடந்திசைபாடி மகிழ்
வான நிலைகொண்ட வண்ணம் சிரித்துமே
வாழ்ந்திருந்தோம் அந்தநாளும்

தாழக் கிடக்குமோர் பாழுங் கிணற்றினுள்’
தாவும்,தவளையின் சத்தம் -  அது
வாழுங் கிணற்றிடை ஆகும் மதிகொள்ளின்
வந்து இருண்டிடும்  காலம்
நாளும் உயர்வெடு நேர் நிமிர் நில்லென
நீளுயர் தென்னைகள் கூறும் - பனை
ஆளுமை கொண்டுயர்  வாகும் தமிழ்எண்ணி
ஆனந்தக் கூத்திடை ஆடும்

தேளுடன் பாம்புகள் திரிந்திட நாணலும்
தென்றல் தொட வளைந்தாடும் - இந்த
நாளுமது வெனும் நாணம் இழந்திடில் 
நாடும் மொழி பலி போகும்
வேளை விடிந்திடப்  பூச்சிரிக்கும் அந்த
விந்தை உணர்வொடு வாழும் - புதுக் 
காலைக் கதிர்சுடக் கொள்ளும்உடல் வெம்மை
காணின் வாழும் எங்கள் தேசம் 

வானைத் தொடும் பெருங்கோபுரமும் 
அதில் வந்தொலிக்கும் மணி நாதம் - அங்கு
தேனைக் கொள்ளும் மலர் தூவித் தெய்வந் தொழத்
தேறும் துயர்கொண்ட உள்ளம்
மீனைக் கொண்டே குளம் மெல்லிய நீரலை
மாதவஞ் செய்திடும்  கொக்கு அங்கு
தானெழில் தாமரை யோடு மின்னும் ஒளி
தங்கும் நிலம் எங்கள்தேசம்

வீடுகளில் தமிழ் சிந்தும் அழகுடன் 
வீறுகொண்டே ஒலி காணும் - அங்கே
ஆடும் இளமங்கை கூட்டம் அசைந்தொரு  
ஆனந்தக் கும்மியும் ஆடும்
தேடும் மனங்களில் தேன் தமிழின் நிலை
தெய்வ சுகம் கொண்டபோதும் - இன்று
வாடும் வரை உயிர் போக வதைப்பவன் 
வந்து இருப்ப தென்னாகும்

பேசுந் தமிழ்கொண்ட அன்னையும் தந்தையும்  
பெற்று வளர்த்திட்ட மண்ணில் - இன்று
மாசுகொண்டோர்  எம்மை மண்டியிடச் செயும்
மாபெரும் கொடுமையின் கோரம்
வீசும்சுதந்திரம் வேண்டும் மனங்களோ
வீணடைந்தே விழுந்தாலும்    இனி
மாசுதந்திரம் என்றதோர் மந்திரம்
மாற்றம் தருவதெக் காலம்

***************************************** 

kirikasan

unread,
Nov 20, 2014, 2:52:48 PM11/20/14
to santhav...@googlegroups.com
இதில் சந்தம் பிழைக்கிறது ம்ன்னிக்கவும்

தேளுடன் பாம்புகள் திரிந்திட நாணலும்
தென்றல் தொட வளைந்தாடும் - இந்த


திருத்தம்{
தேளும் பாம்பும்வாழும்’திட்டுகளில்  நாணல்

kirikasan

unread,
Nov 20, 2014, 5:05:37 PM11/20/14
to santhav...@googlegroups.com

                 அக்கரை சிவப்பு

அழகென்று தமிழ் சொல்லி அரங்கேறவா - இல்லை
அழவென்று நிலை கண்ட கதை கூறவா
எழவென்று மனம்கொண்ட இசைபாடவா - இல்லை
எழுந்தோடி நிலம் வீழ்ந்த தொகை கூறவா
குழுவாகி இனம்காத்துக் குலம் ஓங்கவே - கொண்ட
குறிதன்னும்  தவறித்தோள் உரம் போனதும்
தழுவென்று மரணத்தாய் மடி தந்ததும் - அதில்
தலைவைத்து இளம் பிஞ்சு தனை ஈந்ததும்

உளம்மீதில் வடுவாகி இருந்தேகொள்ளும் - எங்கள்
உயிர் செல்லும்வரை துன்பம் இ|ணைந்தே வரும்
களவென்று வழிகண்டு கயமை கொண்டோர் - எங்கள்
கடை வாசல் வழிகண்டும் கண்மூடினோம்
வளம்கொண்ட தமிழ் மண்ணில் நிலம்கொள்ளவும் - இங்கே
வந்தேயெம் குடிமண்ணில் விசமாகவும்
நிழல் கூட எமைவிட்டுப் பிரிகின்றது - இங்கே
நிலை கெட்டு தமிழ் வாழ்வு சிதைகின்றது

வயல் தோட்டம் கை விட்டுப் போகின்றது - அதை
வரும்கூட்டம் தனதென்று சொல்கின்றது 
இதைக் கண்டே உலகமுள் சிரிக்கின்றது - இவர்
உதைவாங்கும் இனமென்று பெயர் தந்தது
கனவுக்கு நிறம் தீட்டி அழகென்றது - அதைக்
கைமீது கொள்ளென்று பொய் சொல்லுது
மனதுக்குள் வெறிகொண்ட உலகம் இது - வெறும்
மரியாதை உடைபோட்டுத் திரிகின்றது

நடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில் 
நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுது
கடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்
கடுத்தே நம் உதிரங்கள் வழிகின்றது
கிடந்தே நாம் துடிக்கின்றோம் குரல்மங்குது - இதை
கேட்போர்க்கு இதயங்கள்  தொலைவாகுது
திடங்கொண்டு வாழ்வெண்ணி கலங்கும் நெஞ்சம் - அதி
தொலதூரம் வரை இல்லை மனிதம் ஒன்றும்


*******************

Kaviyogi Vedham

unread,
Nov 21, 2014, 1:29:35 AM11/21/14
to santhavasantham

வயல் தோட்டம் கை விட்டுப் போகின்றது - அதை
வரும்கூட்டம் தனதென்று சொல்கின்றது 
இதைக் கண்டே உலகமுள் சிரிக்கின்றது - இவர்
உதைவாங்கும் இனமென்று பெயர் தந்தது
கனவுக்கு நிறம் தீட்டி அழகென்றது - அதைக்
கைமீது கொள்ளென்று பொய் சொல்லுது
மனதுக்குள் வெறிகொண்ட உலகம் இது - வெறும்
மரியாதை உடைபோட்டுத் திரிகின்றது
..
 பலே கிரிகாசன்..இதுதான் உலகம்.மேற்சொன்ன வரிகளை ரொம்ப ரசித்தேன்,சந்தம் நன்று.
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.எம் ஆஸ்ரம  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள் அற்புத,அழகியபடைப்பும் 
அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


--

kirikasan

unread,
Nov 27, 2014, 6:19:04 PM11/27/14
to santhav...@googlegroups.com
மீண்டும் நன்றிகள்! ஐயா தங்கள் வாழ்த்துக்கு இதயத்திலிருந்து நன்றிகள் தெரிவிக்கிறேன்

அன்புடன் கிரிகாசன்



M. Viswanathan

unread,
Nov 27, 2014, 8:07:23 PM11/27/14
to Santhavasantham
இயல்பு வாழ்க்கையைச் சொல்லும் அழகான வரிகள்.
அன்பன்,
மீ.வி.

துரை.ந.உ

unread,
Nov 27, 2014, 11:12:21 PM11/27/14
to santhavasantham
​வாழ்க ஐயா

2014-11-21 3:35 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:

                 அக்கரை சிவப்பு

நடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில் 
நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுது
கடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்
கடுத்தே நம் உதிரங்கள் வழிகின்றது
கிடந்தே நாம் துடிக்கின்றோம் குரல்மங்குது - இதை
கேட்போர்க்கு இதயங்கள்  தொலைவாகுது
திடங்கொண்டு வாழ்வெண்ணி கலங்கும் நெஞ்சம் - அதி
தொலதூரம் வரை இல்லை மனிதம் ஒன்றும்

Inline image 1 
​அருமை பா ​


kirikasan

unread,
Nov 28, 2014, 4:13:05 AM11/28/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றிகள் ஐயா, மிகவும் மகிழ்ச்சி!!

அன்புடன் கிரிகாசன்



kirikasan

unread,
Nov 28, 2014, 4:15:16 AM11/28/14
to santhav...@googlegroups.com
மிகமிக நன்றிகள்!

அன்புடன் கிரிகாசன்



On Friday, November 28, 2014 4:12:21 AM UTC, துரை.ந.உ wrote:
​வாழ்க ஐயா

2014-11-21 3:35 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:

                 அக்கரை சிவப்பு

நடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில் 
நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுது
கடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்
                                         :http://www.flickr.com/photos/duraian/

kirikasan

unread,
Nov 28, 2014, 4:33:18 AM11/28/14
to santhav...@googlegroups.com


      யாருக்கு எது அழகு?


ஆணுக்குப் பெண்ணழகே ஆராரோ பாடி மகள்
அணைப்பினில் தூங்க அவள் அன்னைக் கழகதுவே
வீணுக்கு வாழ்வழகு வேந்தனுக்குப் பொன்னழகு
காணும் வெறி வஞ்சகரைக் காப்பதுவும் யார்க்கழகோ


இளைஞன்

அன்னநடை மின்னவருங் கன்னிமயிற் பெண்ணாம்
ஆடுமெழில் தேவதையே அழகிலுயர்ந் தொன்றாம்
என்னை நடை கொண்டுலவி ஏந்திழையோ தன்றன்
ஏற்றமிகு தோற்றமதில் ஏழைமனம் வென்றாள்
தென்னை வளர்ந் தோங்க அதில் தோன்றிய தென்னோலை
தென்றல்தொடச் சிலுசிலுக்க திங்கள் பின்னின்றெட்டி
என்னவகை நாணு வதோ இங்கிவளும் அன்ன
ஏந்திழையாள் இன்னழகுப் பொன்னையும் நிகர்த்தாள்


அன்னை

அன்னையெனும் பேர் எனக்கு அன்பில் ஈந்த பெண்ணே
அன்னியர் முன் என்னுயர்வை ஆக்கிய செந்தேனே
சின்ன இதழ் தான்திறந்து செல்லமொழி பேசும்
செம்பருத்திப் பூவழகே சிரிப்பதும் பேரழகே
நின்னை எழில் கொள்விழிகள் நித்திரைக்குவேண்ட
நேசமுடன் என்மடியில் நீபடுத்துத் தூங்க
பென்னம் பெரு வானின் நிலா போகும்பாதைவிட்டு
பேசும் குரல் கொண்டுமடி வந்தழகே அழகாம்


 பேராசைக்காரன்

பெட்டியுள் தூங்கிடும் பேரழகே அரும்
பேறே கட்டி கொள்ள ஆசைப்பட்டேன்
வெட்டி அழகென வைத்தவர் யார் இந்த
வெண்ணிலவின் நிறம் தந்தவர்யார்
கொட்டிக் குவையெனப்போற்றிடுவேன் உனைக்
கொஞ்சிமகிழ்ந்து கொண்டாடிடுவேன்
கட்டித்தங்கம்  உன்னை விட்டுவிடேன் உன்னில்
காணும் அழகில் எனை இழந்தேன்


 துறவி

கொண்டது விட்டுகிடப்பது மழகு
கூடிச்செய் பாவங்கள் தீர்ப்பதுமழகு
கண்டதில் ஆசைகள் கைவிடலழகு
காமத்தில் மோகமும் கலைந்திட அழகு
தொண்டினைச்செய்து பின் துறவறம்கொள்ளு
தூய்மையில் இன்பம் காண்பது அழகு
பெண்டிரும் பிள்ளை பேசருந் துன்பம்
பிறவிக் கடலினை நீந்திடில் அழகே



நான்

விடையேறித் திரிநாத விமலனே யழகா
விரை வேங்கை அணிகொண்ட திருநடப்பிரியா
சடை சூடிப்பிறை காத்த சங்கரா உலகின்
கடையென்ற வகை மாந்தர் கலகங்கள் புரிய

முடைசெய்யும் தீயோரைச் சினம்கொண்டு சீற
மடைவெள்ள அனல் பாயும் முக்கண்ணில் ஒன்றோ
தடைகொண்டதேனோஅத் தழல் சாந்தமாக
இடைகொண்ட தென்ன கால் எடுத்தாடும் அரனே

சிலைகொண்ட அழகோடு தேவி அயல்நிற்க
அலைகொண்ட கங்கையுடன் அம்புலியுமாக
மலைவாழும் சிவனே நின்முடி கொண்டபோது
கலை மேவி எழிலோடு குளிர்கொண்டதாலே

நிலையென்ன ஈது வெகுஅனல் கொண்ட விழியும்
தலைகொண்ட மதி கங்கை தனை ஏற்றதாலே
இலையென்று விழிமூடி எழும் அனலும் தணியும்
நிலை கொண்டதோ அழகோ நெறிதானோ கூறாய்


*************************

kirikasan

unread,
Dec 7, 2014, 5:45:21 AM12/7/14
to santhav...@googlegroups.com
 நான் இப்போது புதிதாக ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுகிறேன்

கீபோட்.

திரை கானங்களை மீட்டுவது , சரியோ `பிழையோ என்பாட்டில் வாசிப்பது. மனதுக்கு உற்சாகத்தை தருகிறது.
கவிதைக்கு சிறிது ஓய்வு விட்டாலும் அது விரைவில் முடிந்து மீண்டும்.மீண்டும் புதுவேகத்தோடு வரும்


                      என் விரல்கள் மீட்ட




ஐம்பதிலே வந்ததிந்தக் காதல் அதை
  யாரிடத்தில் கூறிடுவேன் ஆனந்த மேவல்
இம்மையிலே ஏற்றமுடைத் தாவல்
  ஏற்றியெனைக் காட்டுமிடம் சொர்கத்தின் வாசல்
செம்மையிலே கூடுமிந்த நாளில்
  சென்று விரல் பற்றுகையில் சிலிர்த்திடத் தேகம்
விம்மியவள் பேசுகின்ற ஓசை
 வெண்பனியில் வீழ்ந்தெழுந்த விந்தையுணர்வாம்

சொல்லினிமை கொண்டவாளாம் நாளும்
  செய்வதென்ன சில்லறையை கற்றரைமேல்வீச
கொல்லெனவே சத்தமிடும் ஓசை
  கொஞ்சமதா கோடிஇன்பம் தொட்டதில் மீட்ட
வல்லதெனும் என்மனதைக் கொண்டே
  வெல்லமென ஆக்கியவள் வேதனையில் இனனல்
இல்லையெனதாக மனம் இன்புறவாக்கி
  ஏதுமறியாதவனை இன்னிசைக்குள் தோய்த்தாள்

நல்ல தமிழ் தந்தவளே இந்த
  நாதமெனும் மென்னுணர்வில் நான் மயங்கி வாழ
அல்லலென மெய்தனிலே காணும்
  ஆன்ம வதை நீங்கியொரு ஆசை யுணர்வோங்க
செல்லெனவே பாதை காட்டிநின்றே
  செல்லுமிடம் ஏழிசைகள் பூட்டிஅணி செய் தாள்
கல்லினையும் உருக வைக்கும்கீதம்
  காதில் நுழைதின்பமுறக் காணும் இசை நாதம்

அல்லதெனக் கானதல்ல என்றே
 யான்கருதும் திக்கெங்கும் தென்றலென ஒடி
மெல்ல மலர் வாசம் கொள்ள வைத்தாள்
  மேதினியில் என்னையிசை தேன்பருக விட்டாள்
கல்லையும் கரைக்குமடா கானம்
  கண்விழித்துக் காணெனவே மெல்ல ஒளிச் செய்தாள்
கொல்லை வழிக்கொண்டு செல்லக்கூற்றன்
  காத்திருக்க கண்மறைத்திக் காரியமும் செய்தாள்

****************

kirikasan

unread,
Dec 10, 2014, 4:42:21 AM12/10/14
to santhav...@googlegroups.com
              இது கேள்வி .?  பதிலல்ல..!
 
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க
அள்ளித்தீயை இட்டவரும் யாரோ
பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்
பூனையாகஎம் மிடம்வந்தாரோ
மீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்கு
மூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோ
பூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கி
பேசும்செந் தமிழ்அழித்த பாரோ

ஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டு
அந்நியர் எம்மண் பறிக்கலாமோ
கூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீது 
குண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோ
நீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்று
நீறு கொள்ளவென்று தீ சொரிந்து
வேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும் 
வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோ

தோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டு 
தாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்க
தீண்டியும் விலங்கினத்தை  தீதினில் செய்மானம் ஒப்ப
தீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்
சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணா
தூங்கியே கிடந்த சொந்தம் யாவும்
ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்
அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோர

மாண்டவர் எழுந்திடா  ரிம் மக்கள் வீரம் குன்றவைத்து
மாபழந் தமிழ்மொழிக்குக் கேடு
வேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்து
விட்டதை மறைக்க ஏங்கும் போது
ஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்ற
ஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாள
நீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்ற
நேரத்தில் உண்டான தெல்லை காணும் ????

பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டு
பத்தினில் அறுவன் ஆங்கிலத்தை
நோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்
நின்றிடில் தமிழ் சிதையக்காணும்
பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி  எங்கள்
பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்
பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்ன
பாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும்  ???
******************

kirikasan

unread,
Dec 17, 2014, 7:53:13 AM12/17/14
to santhav...@googlegroups.com

    
    
         உலகம் உறவா பகையா?
 
தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும்
  தேன்மலரில் பாசம் கொள்ளாது
தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம்
  தந்த மலர் தன்னைக் கொள்ளாது
மீனெடுப்பில் துள்ளுமிரு மெல்லிழையார் கண்ணசைவில்
  மோகமுண்டு பொய்த்திடும் வாழ்வு
ஊனெடுக்கும் இன்பமென்றே எண்ணிவிடின் மாறித்துன்பம்
 ஏற்றமுறும் இச்சக வாழ்வு

வீடிருக்கும் வாழவிதி வெற்றிடமென் றாக்கிப் புயல்
  வீசுமதில் விளைவு பொல்லாது
கூடிருக்கும் கூட்டிலுயிர் கொண்டிருக்கும் கூடியது
  குற்றமென்றோ குளுமை பெறாது
ஆடிநிற்கும் மேனியிலே ஆணவத்தின் சாயலெழ
   ஆனந்தமோ கூடிவராது
கேடிருக்கும் செல்லும்வழி கொள்ளதுயர் மேவியின்ப
  கோட்டினைக்கால் கொள்ளவிடாது

பேடிருக்கும் பாட்டிசைக்கும் பக்கமதன் துணையிருக்கும்
   பேதமை மை யல் கொளும்வாழ்வு
ஓடி ரத்தம் சூடெழவே உள்ளிருந்து பொங்கும்வகை
   ஊற்றெடுக்கும் உறங்கவிடாது
காடிருக்கும் காட்டின்வழி கடையிருக்கும் விதியமைத்த
  காட்சிவழி மாற்றமிராது
கோடித்தனம் கொண்டிருந்தும் கொள்கைநெறி நேர்நடந்தும்
  கூற்றுவன்முன் வெல்ல விடாது
 
மேடிருக்கும் தாழ்விருக்கும் மின்னல்இடி கொண்டிருக்கும்
  மேதினியில் எம்மரும் வாழ்வு
கோடிருக்கும் தாண்டிமனம்  கொண்டிருக்கும் ஆவலது
  கோண்லிடும் நேர் நிமிர் வாழ்வு
நாடிருக்கும் நாட்டிற் பல நல்லவரும் கெட்டவரும்
  நண்பரெனக் கண்டிடும்போது
கூடிநிற்கும் காவலதும் குன்றித்திரிந் தாழமெனக்
  கொள்ளும் முரண் குணமிருக்காது

மூடிநிற்கும் பச்சைமரக் கூடலிலே கள்ளொழுகும்
  மென்மலர்கள் பூத்திடும் பாரு
தேடியுறை கொள்ளவென நீநடந்தால் தேளுடனே
  தீண்டும் விஷப் பாம்பு விடாது
வாடிநிற்கும் உள்மனதில் வந்ததுயர் நீங்கிடவே
  வண்ணவிரி வா ன்வெளி யாளும்
கோடியொலிப் பேரதிர்வின் கூற்றினிலே நீகலக்கும்
   கொள்கைதனைக் கைதொழு வேண்டு!


*******************

kirikasan

unread,
Dec 19, 2014, 4:07:35 AM12/19/14
to santhav...@googlegroups.com

             அந்தநாள்

வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த
வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க
சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த
சோதியாக மின்னும் அன்பு கொண்டு
தொல்லையற்று நம்மைநாமே தோள் வலித்தவீரர்சூழ
தூக்கியகை வாளும்கொண்டு காக்க
எல்லையிட்டு நெல்வயல்கள் ஈரமுற்ற ஆழிசார்ந்த
மண்ணும் முல்லையோடு வாழ்வு கண்டோம்

நெல்வளைந்து மங்கை போலும் நீரில்தன் முகம்கணித்து
நீலவானின் செங்கதிர்க்கு நாணும்
வல்லகூச்சலிட்டும் ஓடி வானெழுந்து வட்டமிட்டு
வான்குருவி நெல்துணித்துக் காவும்
கல்லில் தெய்வரூபம் கண்டு கந்தன்வேலை முன்னிறுத்திக்
காணும் தெய்வக் கோவிலொன்று பக்கம்
இல்லை துன்பமென்று வாழ்ந்த எங்கள்தேச  மக்களன்றோ
இன்பங் கொண்டதோ மருதமாகும்

மென்னலைக்கு ஏற்ப ஆடும் மீன்பிடிக்கும் ஓடமேறி
மீண்டவர் கரையிலிட்டபோது
தன்வலைக்கு வீழ்ந்த மீன்கள் தான்துடிக்க கண்டுமாலை
தூயவள்அஞ் சும்விழிகள் நோக்கி
என்னதோ இரண்டுமீன்கள் என்னை தம்வலைக்குள்வீழ்த்தும்
ஈதொருநல் லற்புதம் என்றேங்க
வன்பகை முடிக்க வீரம் வாய்ந்த கப்பலோடும் மக்கள்
வாழ்க்கை நெய்தல் என்றதன்மை காணும்


சில்லென்றூதும் வண்டும்தேடும் செவ்விதழ்ப் பூ கானகத்தில்
சோவென்றோடி விழருவிகொட்டும்
கல்லின்மீது பட்ட நீர் தெறித்து சாரலாய் முகத்தில்
காதல் கொண்டு முத்தமிட்டே ஓடும்
எல்லைகாத்த வீரர் தூரம் இட்டசத்தம் வெற்றி கூறும்
ஏற்றதோர்  முழவின் ஓசை கேட்கும்
நல்லினித்த வாழ்வுகாணும் நாட்டுமக்கள் அச்சமின்றி
நாளுமன்று வாழ்ந்த காலம் யாவும்’

இன்றழிக்கத் தீயையிட்டு அள்ளிசாம்பல் மேட்டில் வீடு
அந்நியன் தன்சொந்தமென்று கட்டி
இன்பமென்று வாழ்ந்த வீடு எங்கள்மண்ணும் விட்டேயோடி
உண்ட நெல் விதைத்த காணி தோட்டம்.
இன்னமும் வலைபிடித்து ஏற்றவாழ்வி யைந்த மக்கள்
இல்லத்தோடு சொத்தும் சூறையாடி
கன்னமிட்ட வர்கரங்கள் காணும் ரத்தப்பூச்சு மாற்றக்
கைவிலங்கு போடும்நாளுமென்றோ

----------............

M. Viswanathan

unread,
Dec 19, 2014, 6:53:33 AM12/19/14
to Santhavasantham
"கல்லின்மீது பட்ட நீர் தெறித்து சாரலாய் முகத்தில்
காதல் கொண்டு முத்தமிட்டே ஓடும்"

கவிஞர் கிரிகசனின் வரிகள் முத்த ஒலிகள் கேட்கிறது...

மீ.வி.

kirikasan

unread,
Dec 19, 2014, 7:13:45 AM12/19/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா ,அன்புடன் கிரிகாசன்
kirikasan8thnool.pdf

kirikasan

unread,
Dec 19, 2014, 7:16:16 AM12/19/14
to santhav...@googlegroups.com
 எனது கவிதைகளின்  ஒரு தொகுப்பை இங்கே தருகிறேன்,.

அனைவரும் அன்புடன் பெற்றுக்கொள்ளவும்

மேலேஇணைத்துள்ளேன்

https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MTIxODQ5NDE1Mjc5NjM4NDgzMDYBMDU4ODk4MDIwODQ3NjUyMzI5MDEBRFRVRHJtZzF5bmdKATAuMQEBdjI&authuser=0
Message has been deleted

kirikasan

unread,
Dec 26, 2014, 10:36:01 AM12/26/14
to santhav...@googlegroups.com

          பாதைஒன்று  பயணம் இரண்டு 
 
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’
  காட்சி தெரியவில்லை
நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்  
   நேரும் நிலையுமில்லை
போரெனக் கீழே புரண்டெழு என்றதோர் 
   பேதமை தானுமில்லை
வாரவிழ் பூந்தளிர் போலும் மனதிலே 
   வந்ததென் தோன்றவில்லை

ஆயிரம் தந்தவள் ஆவியெனில் கொண்ட 
    அத்தனை எண்ணங்களில்
போயிருந்து செய்த போக்கினிலே என்ன 
   பூத்தது  அன்பின் வகை
வாயிருந்தும் சொல்ல வார்த்தையில்லை 
  வற்றிய தோ இலை யிலை
காயிருந்தும் கனிகொள்ள வில்லை 
   அந்தக் காரணம் சக்திநிலை

சேயெனவே நின்று காணுகிறேன் 
  எந்தத் தேசம் புதிய கலை 
தூயநிலை கொண்டு காணுகிறேன் எந்தன் 
  துன்பம் ஒழிந்த நிலை
தாயன்பு கொண்டதி னால் இதுவோ அட 
  சக்தியில் ஊற்று தனை
போயிருந்து காணப் பெற்றுவிட்டேன் எந்தன் 
   போக்கினில் சாந்தஎல்லை

மீதிகிடந்த வன் நோய்கள் கொண்ட தொல்லை 
  மாறியதாய் நிலைமை
ஏதிதில் என்மனம் கண்டது என்றுமே 
  இன்றுபோல் வந்ததில்லை
ஊதி வளரென்றே  உல்லாசத் தீயினை 
  ஓங்கிடச் செய்தவளை
யாது எனக் கண்டே வேண்டிட வந்தூற்றும் 
  மீண்டும் கவிதை மழை  

kirikasan

unread,
Dec 27, 2014, 7:16:03 AM12/27/14
to santhav...@googlegroups.com

          தமிழே சொல்லாயோ

தென்றலசைந்திடத் தேன்மொழி பேசிடும்
திங்கள் நிழலென வந்தாள் - அவள்
கன்னம் சிவந்திடக் கற்பனையால் எனைக்
கண்டு கலங்காதே என்றாள்
பொன்னை நிகர்த்திடும் மேனி யெழில் தன்னில்
பூவை இட்ட வண்ணமாக - அவள்
சின்னநடை கொண்டுவந்தவள் வந்துமுன்
சிந்தை மகிழ்ந்திட நின்றாள்

தென்னை யசைந்திடத் தேன்மலர் தூங்கிடச்
சில்லெனும் வண்டெழுந்தோட - வரும்
முன்னிலவை மறைதேகும் முகில் போலும்
மேவுங் கருங் குழலாட
புன்னகை பூத்தெனைப் கண்டுமனம்கொண்ட
பேதமை யெண்ணி வியந்தாள் - ஓர்
சின்னஞ் சிறுவனை நோக்குவதாய் என்னைச்
சொல்லெனச் சீண்டி மகிழ்ந்தாள்

அன்னையெனும் உயிர்த் தீந்தமிழே எந்தன்
ஆவிகலங்கிட நின்றேன் - இதில்
இன்னிசை தோன்றிட ஏழு மலர்களில்
என்முகம் கண்டு மகிழ்ந்தேன்
முன்னிருந்து கவிபாடும்நிலைதனும்
மீண்டும் முயிர்த்திடுமாமோ - இளங்
கன்னித்தமிழ் மகள்நீ யல்லவோ இதன்
காரணம் கூறிடவேண்டும்

மென்னிதழ் கொள்முகை கட்டு விட்டேநெகிழ்
வென்னும்  நிலைகொண்டாதாக - பழம்
தொன்மை வயதுடை கன்னித் தமிழ்மகள்
துல்லியமென் குரல்பேச்சில்,
அன்னியமல்ல உன் தன்மையிலேமனம்
எங்கலை பாய்ந்திட நின்றாய் - இந்த
இன்னல் கொண்டேங்கிட ஏது நினைந்தனை
உள்ளதியம்பிடு என்றாள்

உன்னையறிவேன் நல்உத்தமியே உனை .
இன்கவிதை கொண்டு போற்றும் - இந்தச்
சின்ன மனதினில்சேரும் புயலெழச்
சிந்தைபயம் கொண்டு நின்றேனென
மின்னல்களை அந்த மேகமதில் இட்டு
மோதுமெழில் காணும் சக்தி = உயிர்
பின்னலிலும் சிலவேடிக்கைகள் செய்து
பின்னின்று கண்டுநகைப்பாள்

என்னஇதுவென நானறியேன்  இசை
யேந்தும் முத்தமிழின் தேவி-  சுகம்
தன்னும் எழும் இசை கொள்வதினால் என்ன
இன்னல் விளைந்திடலாமோ
தின்னும் கனிதனில் வெல்லமிட்டாள் அந்த
தேன்சுவை கைப்பதுமுண்டோ -இது
என்னவகை என்று ஏளனம் செய்திசை
ஏழெனக் காட்டி மறைந்தாள்!

***நன்றி.(. இதுகற்பனை)
கிரிகாசன்

Subbaier Ramasami

unread,
Dec 27, 2014, 7:49:23 AM12/27/14
to சந்தவசந்தம்
தாதாதா என்றிங்கே தாகத் துடன்கேட்டால்
தீதேது. மேலும் சிறப்பு

கேட்கவேண்டிய இடத்திலே  தாதாதா  (மூன்று தா அதாவது முத்தா)கேட்டால் தீதேது?

இலந்தை


2014-12-27 6:16 GMT-06:00 kirikasan <kana...@gmail.com>:

         

kirikasan

unread,
Dec 27, 2014, 8:32:16 AM12/27/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா !

எனது உடல் நிலையிலும் பெரு மாற்றத்தை  உண்டாக்கும் பொழுத்போக்காக இது அமைகிறது.
இசைக் கருவியின் அனுபவமில்லாதவன் இந்தளவாவது முடிகிறதே

http://www.mediafire.com/listen/9tbz1s89ja2vq8y/kalangali_kir.mp3

http://www.mediafire.com/listen/519gx9ddbk4aid9/Aval_oru_kiri.mp3

http://www.mediafire.com/listen/ip2x368i7dd78ci/Rajavin_kiri.mp3

kirikasan

unread,
Dec 29, 2014, 4:48:44 PM12/29/14
to santhav...@googlegroups.com


    இருள் கொள்வதோ?


பனிமூடிப் பசும் புல்லும் பளிங்காகலாம்
பழிகூடும் அரச்சொன்று படைகாணலாம்
தனியோடும் முகில் மூடிச் சுடர் தாழலாம்
தரைமேவி இருள்மூடித் தடுமாறலாம்
கனிதேட இலைமூடும் காற்றோட நாம்
கனவோடும்  இமைமூடித் துயிலாகலாம்
இனி மூடி மனம் ஒன்று இருந்தாலுமே
இசைகொண்ட தமிழின்பம் இலையாகுமே

பணிகூடிப் பொழுதின்றிப் பகல்போகலாம்
பரிவின்றி மனைகூடிப் பலர் வாழலாம்
தணிவின்றிப் பெருஞ் சோகம் தனைவெல்லவும்
தமிழ்மீது வருந் தாகம் தலைகொள்ளவும்
மணியென்னும் இசைசந்தம்,மனமீதினில்
மறைகின்ற நிலைகொள்ள முகம் காண்பதோ
அணிகின்ற  துகில்ஆடை அழகாக்கலாம்
அகம்கொண்ட எழிலின்பம் அதை யாக்க வா

இனியில்லை எனும் எண்ணம் இடைவந்ததோ
இரவான போதில்விடி வில்லை என்பதோ
புனிதத்தை கொள்ளின்பம் பூஞ்சோலையும்
புயல் வந்து  விளையாடப் புவிசெ ய்வதென்
தனிவீழ்ந்தோம் என எண்ணல் தவறல்லவோ
தருமத்தின் செயலுக்கு அவம் அல்லவோ
குனியாது  நிலை கொள்ளக் குரலொன்று தா
குணமாக நில்லன்பைக் குறைவின்றித் தா

kirikasan

unread,
Dec 30, 2014, 8:26:11 AM12/30/14
to santhav...@googlegroups.com
 
                       வாழ்க்கை வாழ்வதற்கே

வண்ண மலர்த் தாமரைகள் கண்டேன் - அங்கு
   வந்து வளைந்தோடும் அலை தொட்டு விளையாட
கண்ணெதிரே  கோபுரமும் கண்டேன் - பக்கம்
   கற்கை நெறி ஓதுங் கலைக் கூடமொன்றும் கண்டேன்
விண்ணுயர்ந்த மாமலைகள் கண்டேன் - சுற்றி
   வீசிவருங் காற்றினொலி சத்தமிடக் கேட்டேன்
எண்ணமதில் இச்சை கொண்டு நின்றேன் அங்கு
  என்னை யொளி கொண்டயலில் ஏற்றமிடக் கண்டேன்
.
தண்ணிலவில் பொன்னொளித் தடாகம் - எழில்
   தன்னில் அது மின்ன அலை தென்றல் தொடஓடி
வண்ணமலர் .வாசனையும் ஏந்தி - அயல்
   வந்தெனையே தொட்டுவிட வாயடைத்து நின்றேன்
மண்ணிலிதை விட்டுமொரு வாழ்வா - என்று
    மங்கலமாய் உள்ளம்களி கொள் மயக்கம் கொண்டேன்
பண்ணி சைக்கும் ஆவலுடன் நானும்  ஒரு
  பாடும் குயிலன்ன வகை பாவம் கொண்டு நின்றேன்

உண்ணும் வகை தேனும் கனிவெல்லம் சேர்ந்து
   உள்ளதெனக் கொள்ளரிய தீஞ்சுவைப்பைக் கொண்டே
அண்ணளவாய் சொர்க்கமதை மேவும்- 0 ஒரு
   ஆற்றலுற உள்ளமதில் அழியலை போலும்
எண்ண மெழும் வேளை உயர்ந்தோடி அங்கு
   ஏற்றமிகு தோற்றமெழும் இன்பமதைக் கொண்டேன்
திண்ணம் ஒளிச்சக்தி தரும் வாழ்வில் - நானும்
   தென்றலெழும் திக்கிருந்து பாடுகிறேன் கீதம்


கண்ணருகில் தோன்றும் ஒருகாட்சி - அது
   காலமெனும் வெண்திரையில் தீட்டிதோ பார்நீ
வண்ணமெழ வானடியும் கொள்ளும் - அயல்
   வந்து மனம் பொங்கிடவே வீசும் எழில் காற்றும்
மண்ணிடையே மாண்பு கொண்டுவாழும் - மக்கள்
   மாற்றமின்றி அன்புகொண்டு வாழுகின்ற காலம்
எண்ணிலாத இன்ப வளம் சேரும் - அங்கு
    இட்டவிதி துன்பங்களை இடையிடையே தாரும்

விட்டுமதி கெட்டிடாது நாமும் - அந்த
   வேளைதனில் நம்மிடரை நாமெதிர்த்து மீண்டும்
பட்ட துயர் போக்கி வாழ்வு கொள்ளும் - ஒர்
    பக்குவத்தைப் போக்கினிலே கொண்டிருந்தால் நன்மை
சுட்ட சட்டி வல்லமை கொண்டாகும் - போல்
   சேர்ந்த துயர் தீயெரிக்க வெந்தெழுந்து வாழும்
இட்ட சக்தி தந்த வாழ்வில் தானும் - என்றும்
   எண்ணியிறை வேண்டிமனத் தீரம்கொள் நன்றாகும்

****************

Subbaier Ramasami

unread,
Dec 30, 2014, 8:48:01 AM12/30/14
to சந்தவசந்தம்
சுட்ட சட்டி வல்லமை கொண்டாகும் - போல்
   சேர்ந்த துயர் தீயெரிக்க வெந்தெழுந்து வாழும்
இட்ட சக்தி தந்த வாழ்வில் தானும் - என்றும்
   எண்ணியிறை வேண்டிமனத் தீரம்கொள் நன்றாகும்

நிதர்சனமான உண்மை.

கவிதை மிக அருமை

 காலமெனும் வெண்திரையில் தீட்டிதோ பார்நீ
தீட்டியதோ   என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்

இலந்தை


--

M. Viswanathan

unread,
Dec 30, 2014, 10:49:20 PM12/30/14
to Santhavasantham
"சட்டி சுட்டதடா" - நினைவு வந்தது....நல்ல கவிதை.

kirikasan

unread,
Dec 31, 2014, 7:02:55 PM12/31/14
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்

kirikasan

unread,
Dec 31, 2014, 7:04:34 PM12/31/14
to santhav...@googlegroups.com

           புத்தாண்டு 2015
 
மங்கல ஓசை எழுந்துவர 
  மங்கையர் கள் நடமாடிவர
சங்கு ஒலித்திடும் சத்தமெழ 
   சாய்ந்து மரங்கள் சலசலக்க
பொங்கும் தமிழிசை காதில்வர 
   பொய்கை இளந் தென்றல் வாசமிட
எங்கும் மணியொலித் தின்பமெழ 
   ஏழைகள் வாழ்வில் நிறைவுகொள்ள

வெங்கனல் வீசிடும் நீதியெழ 
   விட்டெழுந்து தீமை ஓடிவிட
தங்க ஒளிநிலா ஊற்றிவிட 
    தந்தன தந்தன தாளமெழ
சங்க தமிழிசை சந்தமிட 
    சார்ந்து குயிலிசை கானமெழ
செங்கனி கொண்டதை தேனழைந்து 
    தின்னவென பெண்கள் தந்திருக்க

மங்கிடும் மாலையின் மஞ்சள்வெயில் 
    மாறி இருள் போர்வைமூடிவிட
அங்குமிங்கும் வண்ணம் பூசியதாய் 
    ஆக்கும் வண்ணஒளிக் கோலமிட
பொங்கி விரிவன பூச்சரங்கள் 
    போலும் வெடிக்கும் மாத்தாப்புகளும்
தங்கிடும் இன்பத்தை வாழ்வுனிலே 
   தந்திடப் புத்தாண்டு வந்ததுவோ

வெள்ளி முளைத்து விடியுதென 
   வேண்டுவர் வாழ்வில் உதயமெழ
புள்ளியிட்ட மானும் துள்ளுதெனப் 
   பூவையர் சின்னவர் ஆனந்திக்க
அள்ளி யணைத்திடத் தாயவளும் 
    அன்புகொண்டதந்தை கூடிநின்றே
உள்ளமதில் பெருஆனந்தமும்
    உண்டு செய்யுமோ புத்  தாண்டுமிதே!

..............................
 

kirikasan

unread,
Jan 1, 2015, 3:30:46 AM1/1/15
to santhav...@googlegroups.com

           ஆண்டாண்டு கண்டோம்

ஆண்டாண்டு கள்கண்டோம் ஆண்டவ ரும்கண்டோம்
ஆண்டவனில் பல ரூபம் கண்டோம்
வேண்டாத நாளில்லை வேண்டாத வர் இல்லை
வேண்டாத தெய்வமும் ஏதுமில்லை
வேண்டாமல் விட்டேகோம் வேண்டு மெமக் கென்றோம்
வேண்டுமா சொல்விடு தலையென்று
வேண்டாத வேளையாய்  வேண்டாம் விடு தலை
வீழென்று வெட்டி புதைத்தவரை

தோண்டாக் குழி பறித்  துண்டாக்கி போடாமல்  
தூரத்தில் நின்றுள் விழுத்தியவர்
வேண்டா இனமென்று வேண்டி நிலம் கொள்ள
வேட்டையாடென்றெமை ஆண்டவரைத்
தூண்டி நிற்க நாமும் தூண்டில் புழுவெனச்
சீண்டிக் கொல்லும் பூனைக் கால்முன் எலி
தீண்டிய பாம்பின்கொல் ஆண்டியென எமைத்
திண்டாடக் கண்டும்பல் தேசத்தவர்

ஆண்டாண்டு காலமென் ஆண்டவரும் எம
தாண்டவனும் ஆடும் தாண்டவமோ
கூண்டோடு தீயிட்டு கூண்டில் சிறையிட்டு
கொண்டே மகிழ்ந்திடும் வேளையிலே
மூண்டெரி தீயுடன்  தீண்டுவர் மெய்யினை
வேண்டிக் கருக்க விசனமுற்று
தண்டாடும் தாமரை நின்றாடும் சேறெனத்
தண்ணீரில் கண்ணீராய் வாழுகின்றோம்

ஆண்டுகள் மாறலாம் ஆளுவர் மாறலாம்
ஆண்டவ னின்மனம் மீண்டுமெமை
நீண்ட துயர்கொண்ட ஆண்டுகளை யெண்னி
வேண்டாம் இனி இவர் தாழ்வெனவும்
பூண்டோ புல்லென்றமைத் தோண்டி எறிபவர்
நீண்ட சரித்திரம் போனதென
ஆண்டுகொள் ஆண்டிது மீண்டது வாழ்வெனும்
வேண்டும் வரம்தரும் ஆண்டுஎப்போ?
*******************

kirikasan

unread,
Jan 1, 2015, 6:23:53 PM1/1/15
to santhav...@googlegroups.com
 
(சில  ஆண்டுகளுக்கு முன் எழுதியது) 



 புத்தாண்டுப் பெண் வந்தாள்

தெள்ளு தமிழ்வாழும் தீம்பொழில் கொள்ளொரு
தேனிசை நாட்டினிலே
அள்ளி மதுரமென் றாசை கொள்ளத்தமிழ்
அன்புகொள் வீட்டினிலே
நள்ளிரவிலொரு கள்ளனைப் போல்வரும்
நல்லாள் புத்தாண்டுதனை
கொள்ளி யெடுத்துக் கொண்டோடினான் சின்னவன்
கொண்டாடவாம் வெளியே

சட்டுசடவெனத் துப்பாக்கி போல் சத்தம்
சூழ நிறைந்திருக்க
கிட்டப் போகாதேடா ஓடுஒடுவென்று
கத்திச் சிலரும்நிற்க
விட்ட புகைதனில் மூச்சுத் திணறிட
விரைந்து மூக்கழுத்தி
சொட்டும் விழிகளில் நீர்தளும்பப் புதுச்
சுந்தரி ஆண்டு வந்தாள்

விண்ணி லதிர்ந்தன வேடிக்கையாய் பல
வண்ண மலர்வெடிகள்
எண்ணம் நிறைந்திடக் கண்ணைக் கவர்ந்திடும்
இன்ப ஒளிச்சிதறல்
மண்ணிலே மாந்தரும் எண்ணியஎண்ணங்கள்
மற்றும் சுதந்திரங்கள்
கண்களின் முன்னே வெடித்துத்சிதறின
போலும் சிதறினவாம்

பொன்னெனும் நாளினில் பூமிவருமெங்கள்
புத்தம் புதுவரவே!
இன்பமெனஎண்ணி ஏழைமகிழ்ந் திடும்
ஆண்டு புதிய வளே
என்னவிழைத்திட எண்ணமெடுத்தனை
இந்த உலகமதை
உன்னத மாக்கிடுவாயோ? உள்ளவரின்
உயிரை வாங்கிடவா?

தேருதல் வந்திட தேசம் மகிழ்ந்திடும்
தென்றலும் பாட்டிசைக்கும்
மாறுதல் கொண்டிட ஆளுபவர் இடம்
மாறிப் புதுமைகொள்ளும்
ஆறுதல் என்பது ஏழை தனுக்கில்லை
ஆட்சியில் கொள்ளையிடும்
கூறுகள் போட்டுப் பிரிக்குமொருசில
கூட்டத்துக்கே மகிழ்வு

பத்தின் பின் நான்கு போய் ஐந்துவருகுது
பாரினில் மாறுதல்கள்
எத்தனைதான் நிகழ்ந்தாகிடுமோ இது
எங்களுக் கானதில்லை
சொத்துக்களும் அந்ததேசத்தை ஆண்டிடும்
சிம்மாசன த்தவரும்
மொத்தமும் என்னது உன்னது என்றிட
மொய்யெழுதும் நிலையோ

புத்தாண்டே நீயுமே போய்வரும் மாறுதல்
புத்தொளி தந்திடுமோ?
சத்திய நாயகர் போடும்சதிகளும்
 சுத்தமாய் நின்றிடுமோ
நித்தம் அடைந்திடும் நீசக்கொலைகளை
நின்றிடச் செய்துவிடு
இத்தரை மீதினில் உன்வரவை எங்கள்
உள்ளத்தில் போற்றிடுவோம்

கையெடுப்போம் உந்தன்கால்விழுவோமெங்கள்
கன்னத்தில் போட்டிடுவோம்
மெய்யுருட்டிப் பெருந் தேரிழுத்து உன்னை
தெய்வமெனத் தொழுவோம்
பொய்யை விரட்டியோர் பாதைவகுத்துமே
எம்மவரை உலகில்
உய்துவிட வெங்கள் வாழ்வு பிழைத்திட
ஓர்வழி செய்துவிடு!

**************

kirikasan

unread,
Jan 10, 2015, 7:02:59 PM1/10/15
to santhav...@googlegroups.com

          இன்பமா, துன்பமா?

இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில் 
ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென 
மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள் 
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்


எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும் 
எங்கிந்தோ மென்மை கொண்டே மான்களும்செய்து - அதில்
எழிலெழவே புள்ளியிட்ட வண்ணமுமாக்கி
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
பங்கமுறும் மேனிதந்தே பாதுகாத்திட - நீயும்
பழகு எனப் பாதையிலே முள்ளையுமிட்டாள்

எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்க மிருக்கும் - மனம்
எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் மேன்மைதனை போற்றிடவென்றே - இந்தப்
பூமியிலே வாழ்விற் பலதுன்பங்கள் வைத்தாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - அனல்
தூயஓளிக் கீற்றுகளை தோன்றச்செய்தவள்
மங்கும்சிறு துன்பங்களை மாதிரிக்காக்கி - அதில்
மாந்தருக்கு இன்பநலம் மேன்மைகொள்ளெனும்

மாற்றமுற இயல்பமைத்தே மானிடம்தன்னை - இந்த
மாறுதலில் ஆனந்தமும் கொள்ளவிட்டவள்
தோற்றம் பெறும் மேனிதனும் இன்பமும் துன்பம்
துய்க்கவென ஆக்கியுணர் வேற்றிய வேளை
தூற்றி யழித் தோர் இனத்தை துட்டரும் கூடி - இன்று
துன்பமிழைத் தின்பங் கண்டு கொள்வதுமேனோ
ஈற்றினிலே  பூமியெங்கும் துன்பமென்றாக்கி கொஞ்ச
இடையினிலே மின்னலின்பம் மாற்றியதாரோ

************* 

kirikasan

unread,
Jan 12, 2015, 5:09:11 PM1/12/15
to santhav...@googlegroups.com



            பொங்கல்

பொங்கட்டும் செங்குருதி புல்லர்களின் செயல்கண்டே
பொங்கட்டும் வெஞ்சினமும் பேடியரின் போக்கெண்ணிப் 
பொங்கட்டும் மக்கள் நலம் புதுவெண்ணம் புதியவழி 
பொங்கட்டும் புத்துணர்ச்சி போகட்டும் சோம்பல்தனும்
மங்கட்டும் மாயமெனும் மதிபிறளும் வெறியுணர்வு 
தொங்கட்டும் தோரணங்கள் தூய தமிழ்வீதியிலே
எங்கெட்டும் வாறிந்த இன்தமிழின் சுதந்திரத்தை
நன்கொட்டும் முரசினொலி நாலுதிசை காவாதோ

பெண்கட்டும் பூம்பொதியில் பிறந்துவளர்ந்.தோ முயிரை
மண்கொட்டும் உடலிட்டு மாமனிதஉருப்பெற்றோம்
வெண்பட்டும் போலழுக்கில் வீழாது மெய் காத்தோம்
புண்பட்டும் போகவென புல்லர்களின் செயலாலே                                                      ]
எண் கெட்டுப்போ எனவே ஏராளாமாய் இழந்தோம்
தண்குட்டை நீரினிலே தவிக்கின்ற மீனினமாய்
கண்கெட்ட வகையாகி கடுமிருட்டில்நடக்கின்றோம் 
விண்ணெட்டும் வகை இன்பம் விளைவதெப்போ விடைகூறு

இங்கெட்டும் வரை எங்கள் இன்பம் தழைத்திடவும்
திங்கட்கும் இல்லாத தேமதுரசுவை கொண்டு
திங்கட்கும் ஒளியீந்த செம்மலவன் ஒளிதாங்கி 
திங்கட்கும் பின்நாளில் தேனிசைக்கும் தமிழ்பாடி
திங்கட்குள் முன்னோனின் திருநாட் தினமொன்று
எங்கட்கும் வாராதோ இல்லாத மண்மீட்டு
தொங்கட்டும் தூயதமிழ் சுதந்திரக் கொடிபறக்க
சங்கிட்டும் முரசொலிக்க சேதிவான் எழுமாமோ

வெற்றியென் றொலிக்கட்டும் வீரத்தில் புதுப்பானை
பெற்றவராய் விடுதலையும் பெற்றின்பத் தீமூட்டி
முற்றிலுமெம் சுற்றமுடன் மற்றவரும் ஒன்றாகிக்
கற்றவரும் கன்னித்தமிழ் கல்லாக் குடிமகனும்
குற்றமற்ற தாயிருக்கக் கொடுமைசெய் பழிநீங்கி
விற்றுப் பகையுணர்வை வீறுடனே தமிழ்காத்த
அற்புதமென்றோர் காலம் ஆகாதோ அந்நாளில்
நற்றமிழின் சுவைபொங்க நாமுண்ண மாட்டோமா?
***********************************************

திங்கட்கும் -- தின் கள்ளுக்கும் (தேனுக்கும்)

திங்கட்கும்  --- சந்திரனுக்கும்

திங்கட்கும்  -- திங்கட் கிழமை--

திங்கட்குள்  -- மாதங்களுக்குள்

kirikasan

unread,
Jan 16, 2015, 6:01:12 AM1/16/15
to santhav...@googlegroups.com
 DUTAS ன்  கவிதைபோட்டிக்கு அனுப்பியது

                              இதைச் செயதவர் யார்


கொட்டிவைத்து மின்னுஞ்சிறு தாரகைகளை - வானில்
கெட்டியாக ஒட்டிவைத்து விட்டவர் யாரோ
முட்டி இடிமேக மழை கொண்ட மின்னலில் - ஒளிக்
கட்டி நிலா தான்பிடித் துருட்டி வைத்தாரோ 
வட்டநிலா அந்திவேளை எட்டிப் பாரென - முகில் 
முட்டவொரு மாமலையும்  கட்டிவைத்தாரோ
ஒட்டுரசி ஓடிவரும் வெண்முகில் கூட்டம் - அதை
விட்டு நிலா பஞ்சணையில் தூங்கச் செய்தாரோ 

கட்டழகு ஓவியமாய் காலைவானிலே - அந்த
கண்கவரும் காட்சிஎழில் தீட்டியதாரோ
மெட்டுநெகிழ் மென்மலரைக் கட்டவிழ்த்தாரோ - அதில் 
மோகமெழும் வண்டினத்தைத் துய்க்கவிட்டாரோ
தொட்டிழையும் தென்றலினால் பட்டுமேனியில் - இதழ்
தொக்கும்மலர் பட்டசுகம் கிட்டவைத்தாரோ
தட்டிஉளி கற்சிலைசெய் சிற்பியின் கைபோல் - விரல் 
தாங்கும் வீணைநாதம் மீட்டல் தந்ததும் யாரோ

வட்ட அலை நீர்க்குளத்தில் ஆடும் தாமரை - அதை 
விட்டெழுந்த பட்சி யோடிப் போம் வயற்கரை
தொட்டுவிட வான்சரிந்த தூரத்தோற்றமும் - மழைத்
தூறல் தந்ததேக்க நீரில் வீழ்ந்த வானமும்
கட்டைப் பசும்புல் வெளியில் பச்சை பூசியும் - பல 
கற்பனையின் அற்புதங்கள் செய்வதும்  யாரோ
சுட்டவெயில் நீர்தெளிக்கும் சின்ன வான்முகில் - கண்டு
சொல்லிஏழு வண்ணமிட்ட வில்லமைத்தாரோ

விட்ட துளி வானிறைந்து கொட்டியதேனோ - அது
அட்டகாச மிட்டதிரச் சத்தம் இட்டதோ 
பட்டு விழுந்தோடி மண்ணில் பாயுது வெள்ளம் - அதைப் 
பக்குவமாய் ஓடவழி பார்த்த மைத்தாரோ
நட்டமரம் நீளுயரச் செய்தவர் யாரோ - அதில் 
நட்சத்திரப் பூக்களினைத் தொங்கவிட்டாரோ
மட்டுமல்ல பூமலர்வில் வாசமிட்டவர் - அதில்
மாலையிளங் காற்றெடுத்துமயக்க விட்டாரோ

பட்டுவண்ண மேகமிட்டுப் பக்குவஞ்செய்து - அதன் 
பால்நிலவும் கூர்கதிரும்  பார்வைதந்திட
வட்டமெனச் சுற்றும்புவி செய்தவர் யாரோ - அவர்
வாழ்க்கைஎனும் சக்கரமும் சுற்றவைத்தாரோ
தொட்டிலாடும் பிள்ளையாகித் தோல்சுருங்கிடும் - இந்தத்
தோன்றலென்ற மானுடத்தை கட்டியாள்வரோ 
ஒட்டிஉடல் உள் நின்றோடும் இரத்தமோர்நிறம் - ஆயின் 
உள்ள தோற்றம் வண்ணபேதம் வைத்துவிட்டரோ

எட்டியடி போடுபவன் ஏய்ப்பவன் தன்னை - நீ
இத்தரையில் வாழு என்று இன்பமிட்டாரோ
பட்டிதொட்டியெங்கும் பகை பாய்ந்திடச்செய் தும் - அப்
பாவிகளை இம்சைசெயப் பார்த்திருந்தாரோ
கெட்டமனம் நல்லகுணம் கேடுகள் நன்மை - இவை 
கொட்டி புவிமக்களிடை தூவிவிட்டாரோ
நட்டமென வாழ்வின்வினை நாசமும்செய்து - அதில்
நன்மைகொண்டு வாழ நாலுபேரைவிட்டாரோ

சட்டமெலாம் செய்பவரின் பக்கம்நின்றாரோ - அதில் 
சற்றுமுலாம்பூசி மெய்யில் பொய்யொழித்தாரோ
கட்டிஉடல் தீயிலிட சுட்டெரிப்பாரோ - அதைக்
காவலென்று பேருமிட்டு காத்திடுவாரோ
வெட்ட வந்து கொட்டுதிரம் வேட்கை கொள்பவர் - பொய்யை 
விற்றுப் பல இரத்தினங்கள் கொள்ள வைப்பாரோ
கட்டழகே பொற்தமிழே காணும் இன்னலை - நின்றன்
கையளித்து விட்டவர்கள் யாரெவர் யாரோ

வட்டியுயோடு வாழ்விற்துயர் கொட்டவைப்பாரோ - அதில்
வந்துசில பேரைமட்டும் எட்டவைப்பாரோ
இட்டமுட னாடி என்ன பாவம் செய்யினும் - இந்த  
ஏழைகளை நீசமிட்டுத் தாழ்வு செய்யினும
குட்டி மிதித்தேறி அவர் கொல்வராயினும் - அது
குற்றமிலைக் கொள்ளிறைமை கோட்டுள் என்பரோ
விட்டுமனம் வேகிநின்றே நானும்கேட்கிறேன்  இந்த
விந்தையோடு வேதனைகள் யார் கொடுத்தார் யார?

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

kirikasan

unread,
Jan 17, 2015, 5:30:12 PM1/17/15
to santhav...@googlegroups.com


         அழகு உலகம்

தேயாத முழுமதியின் திகழ்வானத் தெழிலும்
திரிகின்ற முகில் விலகத் தினகரனின் ஒளியும்
காயாத புல்வெளியும் கனிதருமா மரமும்
கனல் மேவுங் கடும்வெயிலில் காண்நிழற் சோ லைகளும்
பாயாக விரியழகுப் படர் கடலின் திரையும்
பாய்ந்து விழும் மலையுச்சி பிறந்தவளாம் நதியும்
தாயாக இயற்கை அன்னை தரும் உலகின் அழகே
தனை மறந்து மனம்மகிழத்  தகுமியற்கை எழிலே

நேராக நிமிர் தருவும் நீட்டியதோர் கிளையும்
நின்று குரல் தந்தினிக்க நெஞ்சிணையும் கிளிகள்
கூரான ஏர் துளைத்துக் கொத்தி மண்ணை உழுது
கொட்டியபொன் தேறுமெனக் கொள் பயிரும் காணத்
தீராத நாணமுற்று தலை குனிநெற் கதிர்கள்
தென் திசையின் காற்றணைக்கச் சல சலக்கு மழகே
வேராக நாட்டில்வளம் விளைக்கு மிடம்தானும் 
வெகு வனப்பே அழகிலிது விலைமதிக்கா வகையே 

தேராக அசைந்துவரும் தேவதையோ பெண்ணில்
தினம் ஒளிரும் அழகுதனும்  தேர்வினி லோர்வகையே
நாராக மலர் தொடுத்து நறுமணத்தில் மாலை
நாம் வணங்கும் தெய்வ மிட நேர்வதும் ஓரழகே
தாராத இன்பமுடன் தென்றல் வந்து நீவும்
தண்பொழில் நீர் துள்ளும் கயல் தாமரையின் பூவும்
சேராது நீருருளச் செய்யும் அதன் இலையும் 
சொல்லின் எழில் மேதினியில் சிறப்புடைத்தன்றோ

வானாற நடைபயிலும் வளை முகிலின் ஓட்டம்
வந்திடையில் மின்னுகின்ற இடிமழையின் தூறல்
பூநாற மலர் தேடும் புள்ளினமும் வண்டும்
போகு மெழில் வான்பரப்பில் புள்ளியெனக்காணும்
வீறாக நடைபோட்டே விரைந்து காளை ஓடும்
வெகுண்ட யலில் இருந்தஒரு வான்குருவி ஓலம்
ஆநூறாய் அற்புதங்கள் ஆக்கியதார் உலகில்
அழகு தனும் இயற்கையதன் அழகு பெரும் அழகே

*******************

kirikasan

unread,
Jan 19, 2015, 3:40:32 AM1/19/15
to santhav...@googlegroups.com

      மாறும் இயல்போ

மலை போலும் நிலைகொண்டு
.. மாறாது எதுதானும்
.. மாவுலகில் நிலைப்பதுண்டோ
கலை கொண்ட வாழ்வதிலும்
. காணுபவை எல்லாமே
.. கரைகாணும் வரை நிற்குமோ
அலை என்று மனம்கூறி
.. ஆக்கியதோ இந்நாளில்
.. அக்கரை பச்சை யென்றே
நிலைகொண்டு திசை மாறின்
.  நீதியிலை எனநீயும்
.  நெஞ்சமே அழுவதேனோ

தலைகொண்ட விதியென்று
.  தகுதிக்கே ஒவ்வாத
..  தரம்காண ஏற்றும் விதியே
விலையென்று வகைகூறி
. விற்கவெனப் பொருளீந்து
. விற்றபின் வேண்டிநின்றால்
குலையென்றே ஒன்றாகக்
. கூட்டாக வாழ்ந்தும்பின்
. கூறாமல் விட்டும் ஓடும்
நிலைகொண்ட வாழ்வுமிது
. நெஞ்சமே  நீ ஓடும்
. நிலை தன்னைக் குறை கூறவோ

சிலையென்று கணம்தானும்  
. செய்வதும் அறியாது
. சிந்தனை மருகி நின்றே
உலையென்று கலைபேசும்
.  உள்ளமென்ப தோய்வின்றி
.  உலகெங்கும் தேடிஓடி
இலையென்றும் ஆனபின்னே
..  இருப்பதுமென் இல்லாமை
.  இருப்பதே இயல்பொன்றாக
தொலை தூர அடிவானில்
.  திகழும் அனல்கூடும்வரை
.  திடமும் கொள் எந்தன்மனமே

kirikasan

unread,
Jan 19, 2015, 3:47:44 AM1/19/15
to santhav...@googlegroups.com
               விதியும் மதியும்

நில வொளிர்ந்திட வெண்முகிலதை மூடும் - நல் 
  நினை வெழவொரு விதி யெழுந்ததைச் சாடும்
பலமிருந்திடும் போதிலு முயிர் தானும் - ஒரு
  பழிசுமந்தெமை பாரென உளம் வாட்டும்
நிலமிருந்துமென் வாழ்வதிலென்ன லாபம் - எனும்
  நினை வெழுந்துயிர் விடமனமதும் நாடும்
குலமழித்திடப் போய் முடியெனும் தாகம் - வந்து 
  குமைந் தழியுமவ் வேளையில் ஒளிவேண்டும்

மதி மறைந்திடக் கதிர் விடியலில் தோன்றும் - நம்  
  மதியிழந்திடும் வேளையில் ஒளிவேண்டும்
புதிதென அடிவான் சிவந்தொளி ஏறும்  - அங்கு
  பூவிதழ் தொடப் போய்வரும் தென்றலோடும்
முதிர் அலைசுனை தனில்சல வென ஓடும் -  ஒளி
  முகமதில் நதி யெனப் புரளு முற்சாகம்
கதியிழந்த தன்  நிலை திரிந்திடும் போதும்  - அங்கு
  காண் மனதிடை ஓங்கிடும் பெரு ஞானம்

அறிவென்ப தெது மனதிடை எழும்சூர்யன் -  அது
  எழ விடிந்திடும் இருள் மறைந்திடும் வாழ்வும்
நெறிகொளும் நெஞ்சில் நிறைவொடு வரும் காலம் -அது 
  நெடுவிரி பெருவானிடை  அளவாகும்
குறிகொண்டு பெரும் அறிவெனும் இறைதானும் - இந்தக்
  குவலயமதில் நினை அறிவினை ஈயும்
பொறிமனதினில் உணர்வுகொண் டுமெந் நாளும் - நீ
  பொலிந்திடும் சுகம் வேண்டி நில் கரம் சேரும்


அறியென மனங்  கூறிடு மொளிதானும் - அந்த 
அருள்தரு மொளி பெரிதெனும் சக்தியாகும்
பொறி பறந்திடும் எரிமலையதன் வேகம்  - இன்னும்
புதுமலர் பெறும் எழிலெனும் மெருகோடும்
எறிதுளிவிரி பேரலை யெழும் ஆழி - அதில்
ஒளிபட அலைமினுங் கிடும்  எழிற்காட்சி
அறியிவை செயும் அருங்குணம் கொண்ட ஆட்சி - அது
அகிலமென் னுமிந்  நிலமிடை வருங்காட்சி

உயிர்தனும் எமதுடலுட னொன்று சேரும் -  நிலை
  உணர்வெனு மொருசூடெழு மசைவாகும்
பயிரென வளர்பாங்குடன் எமையாக்கிப் - பின்
 பறித்திடும் வரை நடந்திடும் செயலாற்றி
வயிற்றிடைப் பசி வெந்திடும் தீயூற்றி -  அதை 
  வழிந்திடும்தேன் சுவைகனி கொண்டும் ஆற்றி
கயிறென அன்புக் கட்டிட ஊஞ்சலாட்டி - அதில்
 கனவொடு  வாழ் கணி எனும்  நிலையாக்கி

ஓளியென நமதறிவினை மிஞ்சும் அறிவே - அந்த 
  உயர்வெழு பெரு வெளி யெனும்பிர பஞ்சம் 
ஒளிர்வது திண்ணம் உள்ளிடை அன்புகொண்டே - அதை
  உயிரென நினை ந்தெழு தொழு நிதமென்றும்
களிகொள்ள நின தரிதெனும் புவி வாழ்வில் - அருள்
   கரம்கொடுஎன  தரும் வரமதைக் கேட்டால்
ஒளிபெறும் நல முயர்ந்திடும்  புகழ் ஞானம் - உடன்
  ஒருபெருமறி வெனும் இறை வரம் நல்கும்

*******************/
It is loading more messages.
0 new messages