இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
ஆவினிலே ஐந்தேற்பான் ஆனைத்தோல் போர்த்திடுவான்
மூவிதழ் மாலை முடியணிவான் - நாவாலே
ஐந்தெழுத் தோதுகின்ற அன்பர் தமக்கருள்வான்
எந்தைசிவன் செய்கை இவை.
(ஆவினிலே ஐந்து - > பசு கொடுக்கின்ற பால், தயிர், நெய், கோசலம், கோமலம் ஆகிய ஐந்தின் கலவை, பஞ்சகவ்வியம்; மூவிதழ் மாலை - மூன்று இதழ்கள் கொண்ட வில்வ மாலை.)