Re: [Rathnamaalai] பிரதோஷப் பாடல்

36 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 1, 2026, 10:34:40 PMMar 1
to சந்தவசந்தம்
Nice.

நாவாலே /

நாவினால் - may possibly fit as well - and may enhance the edhugai.

V. Subramanian


On Sat, Feb 28, 2026 at 8:10 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.



திருச்சிற்றம்பலம்



ஆவினிலே ஐந்தேற்பான் ஆனைத்தோல் போர்த்திடுவான்

 மூவிதழ் மாலை முடியணிவான் - நாவாலே

 ஐந்தெழுத் தோதுகின்ற அன்பர் தமக்கருள்வான்

  எந்தைசிவன் செய்கை இவை


(ஆவினிலே ஐந்து - > பசு கொடுக்கின்ற பால், தயிர், நெய், கோசலம், கோமலம் ஆகிய ஐந்தின் கலவை, பஞ்சகவ்வியம்; மூவிதழ் மாலை - மூன்று இதழ்கள் கொண்ட வில்வ மாலை.)


Siva Siva

unread,
Mar 16, 2026, 8:48:40 AMMar 16
to சந்தவசந்தம்
Nice.

விண்ணவர் புடைசூழ நாட்டியம் /

கணம்சூழ ஆடுவதாகத்தானே பொதுவாக வரும்?

V. Subramanian

On Sun, Mar 15, 2026 at 11:16 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                            திருச்சிற்றம்பலம்

                             <> அருளாயோ?

பாட்டினால் உன்னைப் பரவிய பழவடியார்

காட்டிய வழியில் கடையனும் நடந்துபர

வீட்டினை அடைய விண்ணவர் புடைசூழ

நாட்டியம் புரியும் நாதநீ அருளாயோ?    

                                                             … அனந்த் 15-3- 2026


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 29, 2026, 11:57:26 PMMar 29
to சந்தவசந்தம்
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.

                                                                                                                        ஆனந்தத்தாண்டவர் அந்தாதி

                                                               

                                                                                                    திருச்சிற்றம்பலம்


                                                                                             

                                                                                                      மாறுகால் நடராஜர்-மதுரை.jpg          காப்பு

 

                                                                                சந்தனக் காப்பணிந்தோய்! சார்ந்தேன் நினதடியை

                                                                                உந்தை நடிப்பில் உணர்விழந்தோர் உந்தலினால்

                                                                                வந்திங்(கு) அடியேன் வடிக்க முயலுமிந்த

                                                                                அந்தாதிக் குன்றனருள் தா.

 

                                                                                                செய்யுள்

 

                                                                1.             வெள்ளித் திரைக்கிடையில் தங்கநிறச் செங்கதிரோன்

                                                                                மெள்ளவே மூழ்குமந்த வேளையிலே - வெள்ளமுடன்

                                                                                வெண்டிங்கள் தாங்கிடும் வேணியனின் ஆடலகக்

                                                                                கண்கொண்டே உண்டிடுவேன் யான் 

 

                                                                2.             யானென் றறியாமை யால்நினைக்கும் நோய்தீர்ந்து

                                                                                ஞான நிலையென்று நானடைவேன்? - மோனமாய்

                                                                                நின்றிருந்தே காலத்தை நீட்டிவிட்டீ ராதலினால்

                                                                                இன்றே இறுப்பீர் விடை                                                                                                              

 

                                                                3.             விடையிருப்பீர்  நல்லதொரு வேடம்போட் டெங்குங்

                                                                                கடைவிரிப்பீர் கால்தூக்கி யாடித் - தடையின்றி

                                                                                ஈவேன்யான் என்றெனக்குக் கைச்சமிஞ்ஞை காட்டிடுவீர்

                                                                                போவேனோ வேறோ ரிடம்                        

 

                                                                4.             இடப்பாகம் நீர்ஏற்ற ஈசுவரி தேவி

                                                                                அடக்காமல் விட்டதனால் ஆடிஇடக்காக

                                                                                ஏதேதோ கூறியெனை ஏமாற்றப் பார்க்கின்றீர்

                                                                                யாதேயான் செய்யவிய லும்?

               

                                                                5.             உம்மென்  றிருந்திடினும் ஊழிமுடி வெய்திடினும்

                                                                                சும்மா விடேனுமைச் சுந்தரரே - அம்மா

                                                                                பரதேவி பால்சென் றழுவே னதற்குள்

                                                                                வரமளிப்பீர் வேண்டாமிவ் வம்பு

 

                                                                6.             அம்பளித்தீர் அன்றவ் வருச்சுனனுக் காதரவாய்க்

                                                                                கம்பேந்தும் வேடனாய்க் கானகத்தில் - எம்பவநோய்

                                                                                தீர்த்திடென் றாலேன் திகைக்கின்றீர் உம்முடைய

                                                                                கீர்த்தியறி வான்அம் புலி

               

                                                                7.             புலித்தோ லணிந்த பசுபதியே! போற்றிப்

                                                                                புலிப்பாதர் பேணுங்கால் தூக்கித் - தளுக்காய்ச்

                                                                                சலிக்காம லாடும் சதானந்தக் கூத்தில்

                                                                                வலிக்காதோ உன்றனிடக் கால்?

 

                                                                8.             கால்மாற்றி யாடக் கனகசபை விட்டெங்கள்

                                                                                சேல்விழியாள் தென்மதுரை சேர்ந்திட்டீர் - பால்வண்ண!

                                                                                ஆதிரையில் உன்நடனம் ஆங்குநான் கண்டன்றோ

                                                                                வாதின்று செய்யவந் தேன் 

               

                                                                9.             தேனார் மலர்ப்பாதம் தூக்கி யிஇடவலமாய்த்

                                                                                தான்தோன்றி யாகநீர் மாற்றுவதைத் - தானறிந்து

                                                                                கண்டிலேன் தாளென்று கைவிரித்தான் ஏழுலகும்

                                                                                உண்டவன்முன் நாளதனில் ஓர்ந்து

               

                                                                10.           ஓரோர் கணமும்ஐய! உன்நினைவே யென்னகத்தில்

                                                                                நீரோட்ட மாக நிலைத்ததனால் - பார்கடந்து

                                                                                நாதாந்தத் துள்நடிக்கும் நாத!உனை யான்கண்டேன்

                                                                                வேதாந்த ஞானவெளி யில்

               

                                                                                                முடிப்பு

 

                                                                                அம்போ ருகபாதன் ஆனந்தத் தாண்டவத்தை

                                                                                என்போற் சிறுவனு மின்பமுடன் - தன்போக்கில்

                                                                                கூறி மகிழத் துணிந்தேன் குறைபொறுப்பீர்

                                                                                மாறிடா மாண்புடனே நீர்

 

குறிப்புகள்:

 

பாடல் 1. காப்புப் பாடல்: மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள முக்குறுணிப் பிள்ளையாரின் சந்தனக் காப்பணிந்த கோலத்தை நினைவு கொண்டு, "ஐயனே! உன் தந்தையின் நடனத்தில் மெய்ம்மறந்து எழுந்த உள்ளத் தூண்டுதலால் அவனது தாண்டவத்தை அந்தாதிப் பாடலாக எழுத நினைக்கும் இந்த அடியவனுக்கு அருள்புரிவாய்!" என வேண்டுவது.

 

பாடல் 2. மதுரையில் உள்ள வெள்ளியம்பல நடராசனின் ஆனந்தக் காட்சியையும், தில்லையிலுள்ள பொன்னம்பலத்தாடுவானின் அழகிய காட்சியையும், வெள்ளிநிற அலைக்கடலில் தங்கநிறக் கதிரோன் அத்தமனமாகும் பிரதோஷ வேளையின் மாட்சி ஒருங்கே மனத்தகத்தில் நினைவுறுத்தும் என்பது.

 

பாடல் 6. முன்பு வேடன் (கிராத) வடிவில் வந்து அர்ச்சுனனுனுக்குப் பாசுபதமென்னும் அம்பை அளித்துள்ளீர், சாபத்தினால் தேய்ந்து மறைந்துகொண்டிருந்த சந்திரனை உம் தலையில் தரித்துக் காப்பாற்றினீர்; இன்று என்னுடைய பிறவிப் பிணியை அகற்றல் உமக்கு எளிய செயலேயன்றோ என்று இறைஞ்சுதல்.

 

பாடல் 8: ஐயன் தில்லையில் தூக்கியாடும் இடது கால் வலியாதோ என்ற கவலையால், இமுன்னம் மதுரையில் பாண்டிய மன்னன் ஒருவன் காலை மாற்றியாடும்படி கேட்ட வேண்டுகோளுக்கிணங்கித் தன் வலதுகாலைத் தூக்கியாடிக் காட்சி தந்து 'அதிரவீசியாடி' என்னும் பேர்கொண்ட இறைவனின் சொல்லொணாத் திருக்கோலத்தைத் திருவாதிரை நன்னாளில் மதுரையம்பதியில் கண்டு களித்ததை நினைவு கூர்தல்.

 

 

...அனந்த் 29-3-2026
---------------------

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 6:33:12 AMMar 30
to santhav...@googlegroups.com
பாடல்கள் அருமை! எப்போதும் போல் உரிமை மேலோங்கும் உணர்வுப் பாடல்கள். 

கோலோச்சும் கோமகள்சீர் கொண்டாடப் பூமியிலே
காலூன்ற வேண்டியிடக் கால்பதித்தான்! - மேலோட்டப்
பார்வையிலே உண்மை பதுங்கும் சமரசத்திற்(கு)
ஓர்வேந்தன் சுந்தரனே ஓர்!

எண்ணம் அவன்சரணில் இட்டபினர் ஏனையம்?
திண்ணம் அருள்நோக்கால் சிந்தைதனை - மண்ணி
ஒளிர்வித்(து) உலகோர் உணரொண்ணா இன்பக்
களிகூட்டு வானிருநீ காத்து!

கோபால். 
[I feel it would be better and more convenient if the texts are left justified
rather than centered.]

On Mon, Mar 30, 2026 at 9:27 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.

                                                                                                                        ஆனந்தத்தாண்டவர் அந்தாதி

                                                               

                                                                                                    திருச்சிற்றம்பலம்


                                                                                             

                                                                                                                காப்பு

...அனந்த் 29-3-2026
---------------------

Parthasarathy S

unread,
Mar 30, 2026, 7:01:15 AMMar 30
to சந்தவசந்தம்

அடியேன் அத்தனை அந்தாதி வெண்பாக்களும் அருமை!!!


அந்தாதி யென்றிட்ட அத்தனை வெண்பாவும்
சிந்தாமல் கொள்ளச் சிறந்தது - வந்தாடும்
இந்துசடைக் கொண்டானாம் ஈசனிடம் இப்பிறப்பின்
பந்தமறப் பாடியவை பாகு

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Parthasarathy S

unread,
Mar 30, 2026, 7:03:22 AMMar 30
to சந்தவசந்தம்
திரு ஆனந்த் அவர்களே!  தங்கள் அனுமதியுடன் அடியேன் இருக்கும் மற்றைக் குழுக்களில் இதை இடலாமா?

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Siva Siva

unread,
Mar 30, 2026, 8:44:07 AMMar 30
to santhav...@googlegroups.com
இனிய அந்தாதி.
அந்தாதி காரணமாகச் சில ஈற்றடிகளில் மோனை இல்லை போல்.

5 & 6 - வம்பு & அம்பளித்தீர் 
அந்தாதித்தொடை என்று கொள்ளப்படுமா?

6. / கம்பேந்தும் வேடனாய்க் /
வில் உண்டு. கம்பும் உண்டுபோல்!

வி. சுப்பிரமணியன்

On Sun, Mar 29, 2026 at 11:57 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.
செய்யுள்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 30, 2026, 5:44:40 PMMar 30
to santhav...@googlegroups.com
You may freely post my poem in other groups
ananth 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/a34d7b64-7939-4059-b7ef-e1140e7649ban%40googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 30, 2026, 6:03:52 PMMar 30
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thanks Siva Siva for your useful comments. This andhadhi was written in 2005 along with a Guru sthuthi to Swami Nithyana dhagiri of Thirukkoviloor. I dug it out from my disk, made a few corrections in a hurry and posted at 12.30 in the night That’s not a valid excuse I will try to fix it with your corrections and post it back. Thanks 
Ananth 


Sent from my iPhone

On Mar 30, 2026, at 8:44 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 14, 2026, 12:05:31 AMApr 14
to சந்தவசந்தம்

இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.  

                         திருச்சிற்றம்பலம்

                     

                <> நிம்மதி நிலவிட அருள் <>

 

            

 

                  <> நிம்மதி நிலவிட அருள் <>

 

உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்

.. உறுமலும் அதுவிளைக்கும் உற்பாத மும்காணும்


நிலைமையுள்ள இந்நாளில் நீதியினை நிலைநாட்டி

.. நிம்மதியை நிலவிடச்செய் நேசமிகு ’பராபவ’த்தில்*


கலகமெலாம் தீர்ந்தொழிந்து காசினியோர் களிப்பெய்தக்

.. கனகசபை நடுவிலெழில் நாட்டியமொன் றா(டு)ஈசா


அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள் அடங்கிடு(ம்)அவ்

.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ அருள்வாயே.


                                            .. அனந்த் 14-4-2024

(பராபவத்தில் - -> இது பராபவம் என்னும் பெயர் கொண்ட தமிழ்ப் புத்தாண்டைக் குறிப்பது; வான்நதி -> ஆகாச கங்கை)


=======================================
On Sun, Mar 29, 2026 at 11:57 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.

                                                                                                                        ஆனந்தத்தாண்டவர் அந்தாதி

                                                               

                                                                                                    திருச்சிற்றம்பலம்


                                                                                             

                                                                                                                காப்பு

GOPAL Vis

unread,
Apr 14, 2026, 12:46:29 AMApr 14
to santhav...@googlegroups.com

அரிய பிரார்த்தனை. 

I tried a small change. 


அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள் அடங்கிடு(ம்)அவ்

.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ அருள்வாயே.


அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடியடியில் முயலகன்போல்

.. அத்தனையும் அசைவிழந்தே அடங்கிடநீ அருள்வாயே.


கோபால்


On Tue, Apr 14, 2026 at 9:35 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.  

                         திருச்சிற்றம்பலம்

                     

                  <> நிம்மதி நிலவிட அருள் <>

 

உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்

.. உறுமலும் அதுவிளைக்கும் உற்பாத மும்காணும்


நிலைமையுள்ள இந்நாளில் நீதியினை நிலைநாட்டி

.. நிம்மதியை நிலவிடச்செய் நேசமிகு ’பராபவ’த்தில்*


கலகமெலாம் தீர்ந்தொழிந்து காசினியோர் களிப்பெய்தக்

.. கனகசபை நடுவிலெழில் நாட்டியமொன் றா(டு)ஈசா


அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள் அடங்கிடு(ம்)அவ்

.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ அருள்வாயே.


                                            .. அனந்த் 14-4-2024

(பராபவத்தில் - -> இது பராபவம் என்னும் பெயர் கொண்ட தமிழ்ப் புத்தாண்டைக் குறிப்பது; வான்நதி -> ஆகாச கங்கை)


=======================================

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 7:01:59 AMApr 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான பாடல், திரு. அனந்த். 

Siva Siva

unread,
Apr 14, 2026, 9:23:43 AMApr 14
to சந்தவசந்தம்
Nice.

 நேசமிகு ’பராபவ’த்தில்* 
கலகமெலாம் தீர்ந்தொழிந்து /

பராபவம் parāpavam , n. < parā-bhava. (W.) 1. Discomfiture, defeat; தோல்வி. பராபவத் தீச்சுட (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 5). 2. Disrespect; அபசாரம்.

Given that normal meaning of parAbhavam, it may be clearer if you can adjust the phrasing.

பராபவப் புத்தாண்டில்?
பராபவ வருடத்தில்?

V. Subramanian


On Tue, Apr 14, 2026 at 12:05 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.  

                         திருச்சிற்றம்பலம்

                     

                  <> நிம்மதி நிலவிட அருள் <>

 

உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2026, 10:09:13 PMApr 15
to santhav...@googlegroups.com
 மிக்க நன்றி சிவசிவா. 

பராபவப் புத்தாண்டில்?  பராபவ வருடத்தில்?
’பராபவப் பேராண்டில்’ என மாற்றுகிறேன் 

பாடலில் பராபவம் என்பது இந்த வருடத்தின் பெயரைச் சுட்டுவதன்றி அதன் பொருளை/பண்புகளை அன்று எனக் கொள்க. மேலும், தன் திருவடியைச் சார்வோர் தியோராயினும், அவர்களைத் தகுந்த முறையில் பண்படுத்தித் தன்னிடம் சேர்த்துக்கொள்ளும் கருணையாளன் நடராஜப் பெருமான் எனவும் விளக்கலாம்.   

பாடல் எழுதிய ஆண்டு 2026 என்பதற்குப் பதிலாக 2024 எனத் தவறாகத் தட்டச்சாகி விட்டது. மன்னிக்கவும்  

                                            .. அனந்த் 14-4-2026

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 15, 2026, 11:28:33 PMApr 15
to santhav...@googlegroups.com
பாடலுக்குப் பின்னுட்டம் தந்ததற்கு மிக்க நன்றி சிவசிவா. 

> Given that normal meaning of parAbhavam, it may be clearer if you can adjust the phrasing.

பாடலின் அடிக்குறிப்பில் கொடுத்துள்ள விளக்கப்படி, பராபவம் என்ற சொல் இவ்வாண்டின் பெயரைச் சுட்டுவதன்றி அதன் பொருளை அன்று. 

அனந்த்


On Tue, Apr 14, 2026 at 9:23 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 28, 2026, 10:47:08 PM (2 days ago) Apr 28
to சந்தவசந்தம்

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 

              <> உய்ய அருள் <>
















இன்பப் பெருக்காய்நீ என்றுமென்றன் உள்ளிருக்கத்
.. துன்பக் கனலில்நான் துடிப்பதுமேன் பரமேசா

அன்பின் திருவுருவாய் அத்தனென நீயிருக்க
.. வம்புச் சுழலில்நான் வீழ்வதுமேன் பரமேசா

தன்பால் வருவோர்க்குத் தாயின்மே லோனென்று
.. சாற்றும் அடியார்தம் சொற்கேட்டேன் பரமேசா

ன்போல் இழிந்தோனை இதுவரைநீ ண்டிலையென்(று)
.. உரையா(து) அருள்புரியின் உய்வேன்யான் பரமேசா

                                                    …. அனந்த் 29-4-2026 

(வாய்பாடு தேமா காய்  காய் காய் தேமா காய் காய் காய்:
தாயுமான சுவாமிகளின் ’பராபரக் கண்ணி’யின் அமைப்பை ஒட்டியது )

----------------------

On Tue, Apr 14, 2026 at 12:05 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.  

                         திருச்சிற்றம்பலம்

                     

                <> நிம்மதி நிலவிட அருள் <>

 

            

 

உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்

Siva Siva

unread,
Apr 29, 2026, 8:00:52 AM (20 hours ago) Apr 29
to santhav...@googlegroups.com
4-ஆம் அடியில் அரையடியில்  மோனை இல்லையோ?

V. Subramanian

On Tue, Apr 28, 2026 at 10:47 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 

              <> உய்ய அருள் <>


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 29, 2026, 10:42:06 PM (5 hours ago) Apr 29
to santhav...@googlegroups.com
ஈற்றரையடியில் பிழை சுட்டியமைக்கு மிக்க நன்றி.
திருத்தி அமைத்த வடிவம்:



திருச்சிற்றம்பலம்

             <> உய்ய அருள் <>

இன்பப் பெருக்காய்நீ என்றுமென்றன் உள்ளிருக்கத்

.. துன்பக் கனலில்நான் துடிப்பதுமேன் பரமேசா


அன்பின் திருவுருவாய் அத்தனென நீயிருக்க

.. வம்புச் சுழலில்நான் வீழ்வதுமேன் பரமேசா


தன்பால் வருவோர்க்குத் தாயின்மே லோனென்று

.. சாற்றும் அடியார்தம் சொற்கேட்டேன் பரமேசா


என்போல் இழிந்தோனை இதுவரைநீ கண்டிலையென்(று)

.. எண்ணா(து) அருளியெனை ஏற்றிடுவாய் பரமேசா


                       …. அனந்த் 29-4-2026

(வாய்பாடு தேமா காய்  காய் காய் தேமா காய் காய் காய்: தாயுமான சுவாமிகளின் பராபரக் கண்ணியின் அமைப்பை ஒட்டியது )

 

--------

GOPAL Vis

unread,
Apr 29, 2026, 11:26:21 PM (4 hours ago) Apr 29
to santhav...@googlegroups.com
அருமை!
சொல் கேட்டேன் - இரண்டாம் வேற்றுமைத் தொகை. ல் ற் ஆக மாற்றம் பெற வேண்டுமா?

பதிதனைக் காக்கப பரமேசன் நேரார்?
விதிகள் அவன்முனே வெற்றாம்! - கதியவன்
பூவடி என்றே புலனூன் அருப்பணிக்கக்
காவல் கழலின் கடன்!

கோபால்
Reply all
Reply to author
Forward
0 new messages