--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நற்குரு பெருமை யெல்லாம்
நலம்தரும் சொற்க ளாலே
விறபன மாக இங்கே
விரித்தனர் சந்தர், வாழ்வின்
நற்பயன் குருவின் பார்வை
நம்வயின் கிட்டச் சேரும்
அற்பனும் குருவின் வாழ்த்தால்
அறிஞனாய் மாற லாகும்
இலந்தை
அன்பு சந்தர்பலே ..இந்த உணர்வுதான் கவிதையின் தளம்; கற்பனையின் களம்.
பாட்டுடைப் பொருளாய் கண்ணில்
.. படும்பொருள் யாவும் மாறும்;
பூட்டிய நெஞ்சின் தாழ்ப்பாள்
.. பொடியுறத் துவங்கும் பாட்டும்;
வவேசு
உங்கள் கருத்துக்கு நன்றி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
முந்தியன போல இதுவும் கருத்துச் செறிவும் கவித்துவமும் கலந்து பயில்கிறது. பாராட்டுகள்
அனந்த்
2010/7/7 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
அன்புள்ள சந்தர்,
அற்புதமான கவிதை! ஆற்றொழுக்காக ஓடும் எளிமையான நடையில் மரபு வழுவாமல் சுற்றுப்புரச் சூழ்நிலையைப் பாழ் செய்யும் மனித இனத்தைச் சாடும் கவிதையில் ஆவேசமும் அறிவுரையும் கலக்கும் அழகைக் காண்கிறேன். இறுதியில் வைத்த முத்தாய்ப்பு வரிகள் அருமை. இதுபோன்ற நடைமுறைப் பிரச்சினைகளைப் பேசும் கவிதைகள் நமக்கு நிறையத் தேவை
அன்புடன்,
தங்கமணி.
On Jul 17, 6:03 pm, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
மட மனிதனும், மழைத்துளியும் - ஒரு பேட்டிஎத்தனை நாட்கட் பின்னர்
.. எழுந்ததோ கருத்த மேகம்;
முத்தெனப் பொழியும் மாரி
.. முழுமலர்ச் சரமாய் மண்ணில்
'பொத்'தென விழுந்தும் எக்கிப்
.. பெருமுகில் நெருங்க வெண்ணும்
அத்துளி துணிச்சல் கண்டேன்,
.. அதன்வழி வளரும் பாட்டு. (1)
'சொற்பநாள் முகில ளித்த
.. சுகத்தினால் விளைந்த நோயோ?
கற்பனை மழைசேர் வாழ்க்கை,
.. கடலதுன் பிறந்த வீடு,
பெற்றவள் பரந்த பூமி,
.. பெருமையே செழுமை வண்ணம்',
நிற்குமத் துளியைக் கேட்டேன்,
.. 'நினதுவேர் மறக்க லாமோ?' (2)
வேரினை மறக்க நானோர்
.. மனமிலா மனித னாமோ?
பாரினை அடைத்து நஞ்சாய்
.. பாலிதின் நிரப்பி வைத்தாய்;
ஊரிலே உலைகள் கட்டி
.. வெளியெலாம் அமிலம் சேர்த்தாய்;
யாரினி இருப்பார் இந்த
.. நஞ்சுடை உலகில், கூறு? (3)
உப்பினை ஒதுக்கி நானுன்
.. உயிர்ப்பசி காக்க வந்தேன்;
அப்பினாய் முகத்தி லெல்லாம்
.. அளவிலா அமிலச் சேற்றை;
துப்பினான் முகிலன் மேலே
.. தொலைந்துபோ புவிக்கே யென்றான்;
தப்பினேன் என்றே நானும்
.. தரைவிழுந் தடங்கி நின்றேன் (4)
விட்டதா மாசு என்னை
.. விழுந்துமிக் கடற்ப ரப்பில்?
கெட்டதே நீரும், சேர்ந்தே
.. கெடும்பல உயிர்கள் ஆங்கே;
பட்டஅம் மாசே நீந்தும்
.. பறவைதன் சிறகொ டிக்கும்;
துட்டனே, உன்வன் நெஞ்சால்
.. தொலையுதே உயிர்கள் வீணாய் (5)
மண்ணிடை விழுந்த நானோ
.. மாசுடை அமிலம் ஊற்ற,
நுண்துளை நுழைத்து வேரால்
.. நுகர்மரம் விடத்தைச் சேர்க்கும்;
விண்ணிறை கிளைகள் வீழ
.. வரண்டது விறகாய் மாறும்;
கண்களாம் மரங்கள் போயின்
.. காட்சியே கருமை ஆகும் (6)
வானுயர் வளர்ந்த மாடம்,
.. வளைக்குமென் கருத்த நீரும்;
போனதாய்க் கொள்க என்பேன்
.. பொலியுமச் சுவற்றின் வண்ணம்,
நானதைக் கெடுத்தேன் என்றே
.. நினைப்பினும் உன்றன் நெஞ்சம்
தானதாய்த் தெரிந்து கொள்ளும்,
.. 'தன்வினை தன்னை வாட்டும்' (7)மண்ணினாற் பாண்டம் செய்தாய்
.. மிகுபல ஆண்டு முன்னர்;
இன்றுமப் பொருளைச் சிந்து
.. சமவெளி நகரிற் காண்க;
மண்ணதே இயற்கை ஆயும்
.. மடியவே இல்லை இன்னும்,
பின்னைநீ நினைத்துப் பாராய்,
.. பாலிதின் என்றே மாளும்? (8)சூழடர் பிளாஸ்டிக் மண்ணில்
.. தோய்ந்திட நிரப்பி வைத்தாய்;
ஊழெனக் கொள்க, இஃதே
.. வந்துறுத் தூட்டும் ஓர்நாள்;
பாழிடர் வழியை நீயே
.. பண்படச் செய்தாய்; மக்கட்
தாழியாய் உலகே மாறும்
.. நாளினி வந்தே தீரும் (9)
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
சில கருத்துகள் / ஐயங்கள்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்2010/7/14 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
மட மனிதனும், மழைத்துளியும் - ஒரு பேட்டிஎத்தனை நாட்கட் பின்னர்
.. எழுந்ததோ கருத்த மேகம்;
முத்தெனப் பொழியும் மாரி
.. முழுமலர்ச் சரமாய் மண்ணில்
'பொத்'தென விழுந்தும் எக்கிப்
.. பெருமுகில் நெருங்க வெண்ணும்
அத்துளி துணிச்சல் கண்டேன்,
.. அதன்வழி வளரும் பாட்டு. (1)
'கருத்த மேகம்' - கரிய மேகம் எனில் இன்னும் சரியாக இருக்கும்.
'சொற்பநாள் முகில ளித்த
.. சுகத்தினால் விளைந்த நோயோ?
கற்பனை மழைசேர் வாழ்க்கை,
.. கடலதுன் பிறந்த வீடு,
பெற்றவள் பரந்த பூமி,
.. பெருமையே செழுமை வண்ணம்',
நிற்குமத் துளியைக் கேட்டேன்,
.. 'நினதுவேர் மறக்க லாமோ?' (2)
நல்ல தத்துவ வினா!
வேரினை மறக்க நானோர்
.. மனமிலா மனித னாமோ?
பாரினை அடைத்து நஞ்சாய்
.. பாலிதின் நிரப்பி வைத்தாய்;
ஊரிலே உலைகள் கட்டி
.. வெளியெலாம் அமிலம் சேர்த்தாய்;
யாரினி இருப்பார் இந்த
.. நஞ்சுடை உலகில், கூறு? (3)
'நான் ஓர் மனிதன் ஆமோ?'
இங்கே 'ஆமோ' என்பது சரியான பிரயோகமா? அறிந்தோர் சொல்லின் உதவும்.
உப்பினை ஒதுக்கி நானுன்
.. உயிர்ப்பசி காக்க வந்தேன்;
அப்பினாய் முகத்தி லெல்லாம்
.. அளவிலா அமிலச் சேற்றை;
துப்பினான் முகிலன் மேலே
.. தொலைந்துபோ புவிக்கே யென்றான்;
தப்பினேன் என்றே நானும்
.. தரைவிழுந் தடங்கி நின்றேன் (4)
நல்ல தற்குறிப்பேற்றம்!
விட்டதா மாசு என்னை
.. விழுந்துமிக் கடற்ப ரப்பில்?
கெட்டதே நீரும், சேர்ந்தே
.. கெடும்பல உயிர்கள் ஆங்கே;
பட்டஅம் மாசே நீந்தும்
.. பறவைதன் சிறகொ டிக்கும்;
துட்டனே, உன்வன் நெஞ்சால்
.. தொலையுதே உயிர்கள் வீணாய் (5)
மாசு என்னை - புணர்ச்சியை நோக்கவும்.
/ அம் மாசே நீந்தும்.. பறவைதன் சிறகொ டிக்கும்/
இந்த இடத்தை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
/தொலையுதே/ - இலக்கணப்படிச் செல்லும் பாடலில் இங்கே கொச்சைமொழி வாராதிருப்பின் இன்னும் சிறக்கும்.
'தொலையுமே' என்று கொள்ளலாம்.
மண்ணிடை விழுந்த நானோ
.. மாசுடை அமிலம் ஊற்ற,
நுண்துளை நுழைத்து வேரால்
.. நுகர்மரம் விடத்தைச் சேர்க்கும்;
விண்ணிறை கிளைகள் வீழ
.. வரண்டது விறகாய் மாறும்;
கண்களாம் மரங்கள் போயின்
.. காட்சியே கருமை ஆகும் (6)
/வரண்டது / - வறண்டது?
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நடைமுறையில் நாம் காணும் நிகழ்வுகளைக் கற்பனை,சொல் வளத்துடன் யாப்பிலக்கணம் பிறழாமல் அற்புதமாக கவிதை வடிக்கிறீர்கள். இந்தக் கவிதையில் ஐம்புலன்களை எதிர்க்கட்சியாகவும், அவற்றோடு போராடும் மனத்தை நம் கட்சியாகவும் உருவகம் செய்த அழகை மிகவும் இரசித்தேன். பாராட்டுகள்!
.. அனந்த்
நல்ல உவமை/உருவகம்.
மன ஆட்டத்திற்கு நடுவர் நனவு!
வளமான எண்ண ஓட்டம்.
நன்றி.
// கழிவென் றேதிங் கஃதும் //
இவ்விடத்தில் வாய்பாடு பிறழ்கிறதோ?
ஆமாம். மடலில் இட்ட பிறகே அதை கவனித்தேன். 'கழிவென ஏதிங் கஃதும்' என வரவேண்டும்.
// காற்றுச்
சுழிதனில் இலையைப் போலே
.. சொல்லொனா உயரம் செல்வோம் //
இலை சுய முயற்சி இன்றிக் காற்று எடுத்துச்செல்லும் வழியில் செல்கிறது. நீங்கள் சொல்லவந்தது அதுவா? ஒருவேளை, 'பருந்தைப் போல' என்பது போல் இருந்தால் இன்னும் பொருந்துமோ?
வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொண்டால் அவ்வாய்ப்புகளே நம்மை உயர்த்தும் என்னும் பொருளில் அமைத்தேன். வாய்ப்புகளால் நாம் விரைவாகவும் எளிதாகவும் உயர முடியும் என்பதை சொல்ல வந்தேன்.
'சொல்லொணா'.
சுட்டியதற்கு நன்றி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தலவுலா (2. அண்ணாமலையான் அருள் - திருவண்ணாமலை)-----
........
களைமலிந்த வாழ்வின் கரையென்று காண்பேன்
விளைஉயர்வென் வாழ்வில் விரைந்து - துளையிருந்தென்,
காற்றுலா வாராது காணா திசை;குழலென்
ஊற்றுநீ வந்துயிர் ஊட்டு (2)-----
........
-----
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஒரு ஐயம்...துன்புள தெனினன்றோ சுகமுள ததுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுள தெனஉன்னேல்
முன்புளே மொருநால்வேம் முடிவுள தெனவுன்னா
அன்புள இனிநாமோர் ஐவர்க ளுளரானோம்
"கூவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்" எனும் வாய்ப்பாட்டில் வரும் இப்பாடலின் ஈற்றடியில், மூன்றாம் சீர் கூவிளமாக உள்ளதற்கான காரணங்கள் ஏதேனும் உளவா? விளக்கவும்.
--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தலவுலா (3. நெஞ்சே மயிலை நினை - திருமயிலை)-----அருளன்றி வேறுண்டோ ஐயன்ஆர் சீரூர்திருமயிலை சேர்ந்தோர்க்கு? செல்நீ - கருநெஞ்சேஎண்ணத்தில் செய்கையில் ஏற்றந்தான் என்றுமிதுதிண்ணம் அவன்பாதம் தேடு (1)-----தேடற் கரியானை தேவியே ஓர்மயிலாய்ஆடிப் பணியும் அழகைக்காண் - ஓடுநெஞ்சேதாணாடு, மாமயிலை சங்கரன்றன் கோலவெழில்காணாத கண்ணன்று கண் (2)தாணாடு = தாள் + நாடு
-----கண்மூடி இவ்வுலகில் காலம் கழித்தபின்மண்மூடும் வாழ்வே மனிதம்காண் - புண்ணெஞ்சேகொள்வினை வேரறுக்கும் கோவன் மயிலையில்உள்ளவன் என்றுணர்ந் தோது (3)
-----ஓதவனை மாவோ டுறைவோனை பாழுலகில்ஆதரவாய்க் காப்பிங் கவனன்றி யேதுநெஞ்சேஓடேந்திக் காக்கின்ற ஊழிக்கூத் தன்பதத்தைநாடி ஒடுங்கல் நலம் (4)
-----நலங்காக்க ஓடேந்தும் நம்பன் மயிலைநிலங்காத்து நிற்பான் நிதமும் - மலநெஞ்சேதீவினை யாவையும் தீர்க்க வரமளிக்கும்கோவனையே உன்நினைவிற் கொள் (5)-----கொண்ணங்கை என்றான் குடநீற்றைப் பெண்ணாக்கிப்பண்ணொன்றை சம்பந்தன் பாடியே - அண்ணெஞ்சேஆற்றுப் பெருக்காய் அவனருள், உன்னகத்தேநீற்றான்றன் எண்ணம் நிறை (6)கொண்ணங்கை = கொள் + நங்கைஅண்ணெஞ்சே = அள் + நெஞ்சே-----நிறையன்பன் நாடிவந்து நிற்போர்க் கருள்வான்பிறைசூடி மாமயிலைப் பெம்மான் - குறைநெஞ்சேஇல்லாப் பொருள்வேண்டி இன்றேனும் சென்றங்கேத்(து)எல்லாம் அவனே என்று (7)
-----என்றேகும் என்றறியேன் என்பிணைகள் மாமயிலைசென்றேனும் தீதெலாம் தீருமோ - வன்நெஞ்சேவந்தோர்க் கருளி வரும்பிணையும் நீக்குமந்தமுந்தையன்றாள் எண்ணி முனை (8)-----முனைவோர்க் கருளும் முழுமுதல்வன் ஆடிஅனையேத்தும் மாமயிலை ஐயன் - வினைநெஞ்சேதொக்குமூழ் அற்றுத் தொடரா நிலைவேண்டிசொக்கன் பதியிற் றொழு (9)-----தொழுவார்க் கருள்கின்ற தோடுடையான் பாதத்(து)ஒழுகாதார் உண்டோ உலகில் - எழுநெஞ்சேஉன்னை உழற்றும் உறுவினையைத் தீர்க்குங்காண்அன்பொழுகும் அத்தன் அருள் (10)-----அருளன்றி வேறுண்டோ அத்தனவன் தாள்நினைந்துப்பொருள்காண் பிறப்பில் புதிதாய் - இருள்நீங்கஅஞ்செழுத்தன் அன்பன்றி ஆதரவாய் வேறேதுநெஞ்சே மயிலை நினை
-----
உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன்.
சில ஐயங்கள் / கருத்துகள்.2010/8/22 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
தலவுலா (3. நெஞ்சே மயிலை நினை - திருமயிலை)-----அருளன்றி வேறுண்டோ ஐயன்ஆர் சீரூர்திருமயிலை சேர்ந்தோர்க்கு? செல்நீ - கருநெஞ்சேஎண்ணத்தில் செய்கையில் ஏற்றந்தான் என்றுமிதுதிண்ணம் அவன்பாதம் தேடு (1)-----தேடற் கரியானை தேவியே ஓர்மயிலாய்ஆடிப் பணியும் அழகைக்காண் - ஓடுநெஞ்சேதாணாடு, மாமயிலை சங்கரன்றன் கோலவெழில்காணாத கண்ணன்று கண் (2)தாணாடு = தாள் + நாடு
மாமயிலைச் சங்கரன் - என்று ஒற்றுமிகும் என எண்ணுகிறேன்.
இப்பாடலிலும் வேறு சில பாடல்களிலும் சில இடங்களில் வல்லொற்று மிகவேண்டும்.
-----கண்மூடி இவ்வுலகில் காலம் கழித்தபின்மண்மூடும் வாழ்வே மனிதம்காண் - புண்ணெஞ்சேகொள்வினை வேரறுக்கும் கோவன் மயிலையில்உள்ளவன் என்றுணர்ந் தோது (3)
மனிதம் = ?
-----ஓதவனை மாவோ டுறைவோனை பாழுலகில்ஆதரவாய்க் காப்பிங் கவனன்றி யேதுநெஞ்சேஓடேந்திக் காக்கின்ற ஊழிக்கூத் தன்பதத்தைநாடி ஒடுங்கல் நலம் (4)
"ஓதவனை, மாவோடு உறைவோனைப், பாழ் உலகில்ஆதரவாய்க் காப்பு இங்கு அவன் அன்றி ஏது நெஞ்சே"
சொல்லமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவையோ?
-----நலங்காக்க ஓடேந்தும் நம்பன் மயிலைநிலங்காத்து நிற்பான் நிதமும் - மலநெஞ்சேதீவினை யாவையும் தீர்க்க வரமளிக்கும்கோவனையே உன்நினைவிற் கொள் (5)-----கொண்ணங்கை என்றான் குடநீற்றைப் பெண்ணாக்கிப்பண்ணொன்றை சம்பந்தன் பாடியே - அண்ணெஞ்சேஆற்றுப் பெருக்காய் அவனருள், உன்னகத்தேநீற்றான்றன் எண்ணம் நிறை (6)கொண்ணங்கை = கொள் + நங்கைஅண்ணெஞ்சே = அள் + நெஞ்சே-----நிறையன்பன் நாடிவந்து நிற்போர்க் கருள்வான்பிறைசூடி மாமயிலைப் பெம்மான் - குறைநெஞ்சேஇல்லாப் பொருள்வேண்டி இன்றேனும் சென்றங்கேத்(து)எல்லாம் அவனே என்று (7)
குறைநெஞ்சே - இதன்பொருள் என்ன?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இரவல் வாழ்க்கைதந்தையே உயிர்ப்பைத் தந்தான்;
.. தாயினள் ஊனைத் தந்தாள்;
முந்தையன் உணர்வைத் தந்தான்;
.. முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
.. உலகமோர் பெயரைச் சேர்க்கும்;
சொந்தமாய் ஏதும் அற்ற
.. தொடர்கதை இரவல் வாழ்க்கை (1)
ஆவதின் கன்றாய் மாறி
.. அருந்துவோம் இரவற் பாலை;
பூவதைத் தொடரும் நெல்நாம்
.. புசித்திடும் இரவற் சோறு;
பாவதில் நெய்த ஆடை
.. பருத்தியின் இரவல் நூலால்;
தேவைதான் வசிக்க வீடு,
.. செய்வதும் மரம்மண் தானே (2)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ரசனை இதழில் வெளியான எனது பாடலை குழுமத்தில் இட்ட திரு கவியோகி அவர்களுக்கு எனது நன்றி. இவ்வாய்ப்பினை அளித்த திரு இலந்தையார் அவர்களுக்கும் என் நன்றி.பாடலை இங்கு இடுகிறேன்.நிழலின் நிஜங்கள்...ஓவியனே தூரிகையாய் உருவில் மாறி.. ஓய்வின்றி வரைகின்றான் நிழலை மண்ணில்;ஆவியென ஊனுடலை அணைத்துக் கொண்டே.. அந்திவரை நிழல்நிஜத்தை அடுத்துச் செல்லும்;சாவியிலா எந்திரனோ? தன்செல் க்ளோனோ?.. தன்நிஜத்தின், அகமுகத்தின் தன்மை தானோ?ஏவியெவர் விட்டவினை? என்றும் பின்னே.. இடைவிடாது செல்கின்ற இருட்டுச் சாத்தான் (1)ஆடியென நிலப்பரப்பை ஆக்கித் தானே.. அடிகீழே அடியொன்றை அளந்து வைக்கும்,சோடியென நிஜத்தோடு திரிந்த போதும்.. சுடுவெய்யில் படும்வேளை தேய்ந்துப் போனபேடியென உருசுருங்கி புதைந்து நின்றும்.. பிற்பகலும் முற்பகலும் பெரிதாய் நீளும்;ஓடிடுமே இரவினிலே ஒளியைக் கண்டால்.. ஒளிந்துகொளும், நிஜமறைவில் ஒடுங்கி நிற்கும் (2)
காலுடைய மனசாட்சி கண்டோம் இங்கே,.. கருநிழலே; அதுநமக்குக் காட்டும் நம்மை;காலணியாய் நம்கால்கள் கடந்து வந்த.. காலமெலாம் அதுவாழும்; காவல் நிற்கும்;காலனவன் உயிர்பறிக்க காற்றுப் போயும்.. கடமையிலே தவறாது காயம் காக்கும்;காலத்தால் அழியாத கருப்புச் சாமி.. கண்கண்ட கடவுளிது, கண்ணே சாட்சி (3)
தலவுலா (4. ஏகம்பனுக்கு ஏது இணை? - திருக்கச்சி)-----நினைந்தவனை நின்றவற்றன் நிட்டை கலைக்கச்சுனைவழி வெள்ளம் சொரிந்தான் - நனைகணிகம்கட்டியன்றோ காத்திருந்தாள் காமாட்சி இப்பதியைஒட்டிநில் ஓடும் வினை (1)கணிகம் = தாற்காலிக பூசைக்குரியதாய் மண் முதலியவற்றால் செய்யப்பெறும் இலிங்கம்குறிப்பு:-காஞ்சியில், கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பார்வதி பரமசிவனை பூஜித்து வந்தார். சிவபெருமான், பார்வதியின் தவத்தைக் கலைக்கச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகச் செய்தார். வெள்ளம் கண்டு பார்வதி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார்.-----வினையறுக்க வல்லான் விழியொன்றை மீட்டுதனைத்தொழும் தோழனுக்குத் தந்தான் - நினைப்பவர்க்(கு)எண்ணிய யாவையும் எண்ணிய வாறளிக்கும்அண்ணற்றன் பாதம் அடை (2)
-----அடைவோர்க் கருள்கின்ற அத்தன்வாழ் கச்சிவிடையீனும் எல்லா வினைக்கும் - மடையில்லாஆற்றுப் பெருக்காம் அவனருள வன்புகழைபோற்றிச்சேர் வாழ்வின் பொருள் (3)-----பொருட்தேடி ஓடும் புவிவாழ்க்கை கான்வாழ்இருட்தேடும் பேயின் இயல்பே - அருட்தேடிஅண்ணலின் தாளண் டவன்நினைவால் உண்டினிகாண்உண்மை ஒளிரும் உளம் (4)
-----உள்குவார் உள்ளத் துறைவோனை கம்பைநதிவெள்ள விளையாட்டு வித்தகனை - கொள்கஉன்நெஞ்சகத்தே; கொண்டவினை நீங்கிட கச்சிவாழ்பிஞ்ஞகனின் பாதம் பிடி (5)-----பிடித்தகை என்றும் பிழையாதெ னுஞ்சொல்விடுத்தவன்றன் பார்வையை மீட்டான் - அடுத்தரனைஎச்சுவோர் வாழ்வெல்லாம் ஏற்றந்தான்; தாழ்வுதனிற்கச்சியான் தாளே கதி (6)குறிப்பு:-சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரிடம் பிரியமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து மணம் புரிந்தார். பின்னர் அவர் சங்கிலியாரை விட்டுப்பிரிந்ததால் தன் கண்பார்வையை இழந்தார். பின் காஞ்சியை அடைந்து திருவேகம்பத்தில் இறைவனை வழிபட இறைவன் இடக்கண்ணை அளித்தான்.-----கதியற்று வாழ்க்கை கரையுமுன்னர் கச்சிப்பதியொட்டி நெஞ்சைப் பதஞ்செய் - நதிகொட்டிஅம்மைக் கருட்தந்த அண்ணலவன் பாதங்காண்மும்மைவினை கட்கும் முடிவு (7)
-----முடிவின்றி எண்ணங்கள் மோதும்போ(து) ஐயன்அடிபோற்றி வாழ்தல் அழகு - நொடிப்போதில்எண்ணத்தை மாற்றும் இயல்புடைத்து நின்புறக்கண்காண் கனவுக் கடை (8)-----கடைவரை கேள்வியேன்? கச்சிநகர் ஆங்கண்விடைஆர் திசையும் விளங்கும் - சடையன்மேற்கல்லெறிந்த சாக்கியனும் கண்டுவந்தான்; ஓங்காரச்சொல்லறிந்து நீயும் தொழு (9)குறிப்பு:-புத்தமதத்தை சார்ந்த சாக்கியர் என்பவர் அன்றாடம் உணவுக்குமுன் ஈசன் மீது கல்லை ஏறிந்து வழிபடுவார். ஒருநாள் அதை மறந்து உண்ணப் புகுந்தார். அப்போது கல்லெறியும் நினைவு வர எழுந்து வந்து சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்தார். அவருடைய செயலில் மனம்மகிழ்ந்த இறைவன் அவருக்கு காட்சி தந்து அவரை ஆட்கொண்டார்.-----தொழுவார்தம் ஆடை துவைப்பானை சோதித்(து)அழவைத்தான் வேடங்கொண் டையன் - மழைவானால்அன்றளந்தான் அன்பனின் அன்பினை; கச்சிவாழ்நின்றளந்தான் பாதம் நினை (10)
குறிப்பு:-சலவைத் தொழிலாளியான திருக்குறிப்புத் தொண்டர் ஏகம்பனின் மேல் இருந்த அளவிடற்கரிய பக்தியால் சிவனடியார்களின் ஆடைகளை துவைப்பதையே தன் தொண்டாகச் செய்து வந்தார். இறைவன் சிவனடியார் வேடத்தில் அழுக்குத் துணியைக் கொடுத்து அன்று மாலைக்குள் துவைத்து உலர்த்தித் தருமாறு கேட்டு உறுதியையும் பெற்றார். சிவன் தன் திருவிளையாடலால் அன்று முழுவதும் மழையைப் பெய்யச் செய்தார். சலவைத் தொழிலாளியான அவர் தன் வாக்கு தவறியதை எண்ணி வேதனை கொண்டு துணி துவைக்கும் கல்விலேயே தன் தலையை மோதி நாயனார் உயிர்விடத் துணிந்தார். அப்போது திருவேகம்பர் காமாட்சியோடு எழுந்தருளிக் காட்சி தந்தார்.-----நினையவனை மாயைசூழ் நீள்வாழ்வில் சேரும்வினையாவும் வேரற்று வீழும் - அனையொருபாகத்தான் மால்காணா பாதத்தான் கச்சிவாழ்ஏகம்ப னுக்கே(து) இணை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தனியன்கள்:-தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும்முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினைஅற்றொழித் தன்பர்க் கருளூட்டி இப்புவியின்உற்றார்தம் உள்ளத் துறை
இருளை விரட்டுமொளி, ஈதுண்மை என்பர்பொருளறியார் கண்மூடும் போழ்து - வருமொளியைகாயும் கதிராக்க கார்ஆர் திரையாகிஈயும் இருட்கே திணை
அடுக்கி யழகாக அமைந்திருக்கும் வாழ்க்கைதொடுத்த மலரொக்கும் தோற்றம் - கொடுத்தவன்நம்செய்கைகள் யாவையும் தேர்ந்தன்றோ சேர்க்கின்றான்மெய்வெறும் மேடையிதே மெய்ஆதியில் வண்ணம் அதுவொன்றே பச்சை,பின்நாள்சோதித்த வண்ணங்கள் தோல்விதான் - யாதிலுமேஉள்ளங் கவரும் உணர்வேது? நெஞ்சத்தைஅள்ளும் பசுமை அழகுநோக்கும் நினைவே நுழையாத நம்நெஞ்சப்போக்கின்பின் ஓடும்நாம் புல்லரோ - தாக்கும்வன்பேச்சிற் கழிப்போம் பெருவாழ்வை, தீதுவமை;பூச்சிக்கு வாழ்வளிக்கும் புல்தூக்கமாய் உள்ளத் துயிலெழுப்பி நன்நினைவுத்தேக்கமாய் உட்திரண்டு தெள்ளியதாய் - ஆக்கமாய்ஆங்கார் பொருளாகி அப்பொருளின் உட்கருவாய்த்தூங்கும் நிலையான் செயல்
2010/9/10 Chandar Subramanian <chandarsu...@gmail.com>தனியன்கள்:-தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும்முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினைஅற்றொழித் தன்பர்க் கருளூட்டி இப்புவியின்உற்றார்தம் உள்ளத் துறை
வினை அற்று ஒழித்து - அமைப்பைத் திருத்தவேண்டுமோ?
அருள் ஊட்டுதல்? அருள்புரிந்(து) என்பதும் பொருந்தலாம்.
இருளை விரட்டுமொளி, ஈதுண்மை என்பர்பொருளறியார் கண்மூடும் போழ்து - வருமொளியைகாயும் கதிராக்க கார்ஆர் திரையாகிஈயும் இருட்கே திணை
இப்பாடலின் பொருள் எனக்குத் தெளிவாகவில்லை.
அடுக்கி யழகாக அமைந்திருக்கும் வாழ்க்கைதொடுத்த மலரொக்கும் தோற்றம் - கொடுத்தவன்நம்செய்கைகள் யாவையும் தேர்ந்தன்றோ சேர்க்கின்றான்மெய்வெறும் மேடையிதே மெய்ஆதியில் வண்ணம் அதுவொன்றே பச்சை,பின்நாள்சோதித்த வண்ணங்கள் தோல்விதான் - யாதிலுமேஉள்ளங் கவரும் உணர்வேது? நெஞ்சத்தைஅள்ளும் பசுமை அழகுநோக்கும் நினைவே நுழையாத நம்நெஞ்சப்போக்கின்பின் ஓடும்நாம் புல்லரோ - தாக்கும்வன்பேச்சிற் கழிப்போம் பெருவாழ்வை, தீதுவமை;பூச்சிக்கு வாழ்வளிக்கும் புல்தூக்கமாய் உள்ளத் துயிலெழுப்பி நன்நினைவுத்தேக்கமாய் உட்திரண்டு தெள்ளியதாய் - ஆக்கமாய்ஆங்கார் பொருளாகி அப்பொருளின் உட்கருவாய்த்தூங்கும் நிலையான் செயல்
உள் திரண்டு - உட்டிரண்டு.
திருத்தத்திற்கு நன்றி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
மிக அழகாகக் குழந்தைகள் மனப்பாங்கிற் கேற்றவாறு அமைந்துள்ள பாடல்கள். குறிப்பாக ஒளிப்பெட்டி பற்றிய கற்பனைகள் அருமை. பாராட்டுகள்.
’தொப்பென்றே நான் என்றன்’ - ஓசை குறைகிறது; ’தொப்பென்றே நான் என்அருமை’ என்று மாற்றலாம்.
கடிகாரப் பாடலின் இறுதி அடியில்- முன்னடிகளைப் பார்க்கும் போது- நடையின் எளிமை சற்றுக் குறைகிறது.
அனந்த்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தமிழ் பெருமக்கள் |
ஒன்றை படியுங்கள்|----------> Insert ப்
சந்தி பிழை |
புரிந்துக் கொள்கிறார் போல் ----------> Delete க், Change ர் into ற்
and insert ப்
தமிழ் சேவையாக ------------------> Insert ச்
காலத்திற்கேத்த ---------------------> correct the end as ற்ற
ஆடல்மன்.இளமுருகு
[All in good humour please!]
*******************************************************************
On Sep 4, 3:13 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> இங்கிருக்கும் தமிழ் பெருமக்கள் யாராவது இந்த ஒற்று விஷயங்களை எளிய நடையில்
> சிறுகச் சிறுகச் சொன்னால் நன்றாக இருக்கும்.
>
> ஒரேயடியாக ஏதாவது கட்டுரை ஒன்றை படியுங்கள் என்று அனுப்பி விடாமல் ஒவ்வொரு
> மடலாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
>
> சந்தி பிழை, ஒற்று விஷயங்களை தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்கிறார் போல்
> யாராவது எழுதினால் அதுவே இந்த காலத்திற்கேத்த தமிழ் சேவையாக இருக்கும்.
>
> 2010/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
> > அருமை!
>
> > அனந்த்
>
> > ஒற்று: தேய்ந்து போன; உரு*ச்*சுருங்கி; மன*ச்*சாட்சி (?); உயிர்பறிக்க*க்*
> > காற்று,
>
> > 2010/9/2 Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
>
> > ரசனை இதழில் வெளியான எனது பாடலை குழுமத்தில் இட்ட திரு கவியோகி அவர்களுக்கு
> >> எனது நன்றி. இவ்வாய்ப்பினை அளித்த திரு இலந்தையார் அவர்களுக்கும் என் நன்றி.
>
> >> பாடலை இங்கு இடுகிறேன்.
>
> >> *நிழலின் நிஜங்கள்...*
> >>www.MovingMoon.com<http://www.movingmoon.com/>
>
> >> --
> >> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> >> பெறுகிறீர்கள்:
> >> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> >> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> >> santhavasanth...@googlegroups.com.
> >> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >>http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -