"சலியே குஞ்சன மோ தும் ஹம் மில் ஷ்யாம் ஹரி" என்று தொடங்கும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாளின் பிருந்தாவன சாரங்கா ராகக் கீர்த்தனையைக் கேட்டதும் அதன் கருத்தைத் தழுவி எழுதிய பாடல்:
. வருவாய் என்னழகா!
வருவாய் என்னழகா, மயக்கும் குழலழகா
மாலை மதிநிறையும், யமுனை நதிவிரையும்
பெருகும் புனலலைகள் பேசும் பலகதைகள்;
பிடித்த என்வளைக்கை பிணக்கில் விடுவாயா?
உருகும் ஒருகுயிலின் உணர்வில் எழுந்தகுரல்
ஒலிக்கும் அமுதவிசை உரைக்கும் காதலதைப்
பருகி இருசெவியில் , அருகில் வருத(ல்)முறை;
படரும் அன்புநகை, பரவும் இன்பநிலை!
-- தில்லைவேந்தன்.
...