வண்ண விருத்தம் - 4 (ராம்)

3 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Sep 7, 2025, 7:07:43 PM (11 days ago) Sep 7
to santhav...@googlegroups.com


வண்ண விருத்தம் - முயற்சி 4 (ராம்)

தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

திருப்புகழ் - திருச்செந்தூர்

"விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய"



கணநாத னென்ப  னுமைபாகன் தந்த
கனியால்ம கிழ்ந்த   ........... குணநேயன்

கனிவான அன்பி லுருவான வன்பர்

கணநாத ரென்ற      ….......  அருள்நேசர்


பணியாலு வந்து பழிநாண லொன்றி

பகமேவ  நின்ற     ........   மதியாளர்

படைபோலு மன்ப ரொருசேர நின்று

பலபாட லென்று    .........   மவரீவார்


அணிமாலை கொன்றை சிவனார ணிந்து

மழகான சந்தை    ..........   வலமேக

அகிலாளு மங்கை அவள்பாலு முண்ட

அருள்ஞான ரென்று .......   முளமாவார்   


கணநாத ரிந்த வகையான தொண்டில்

கடையாணி யன்ன  ........   விசுவாசி

விணைநாடு மன்பர் சிவலோக மண்டும்

கருநீல கண்ட     ..........    னருளாலே.


பழிநாணல் – பழிக்கு அஞ்சுதல்

பகம் - அவாவின்மை, ஈச்வரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம் என்னும் அறுகுணம்

கடதீபம் – குடத்திலேற்றும் விளக்கு

இந்த வண்ண விருத்தம் கணநாதர் என்பவரைப் பற்றியது.

சீகாழியில் பிறந்து வளர்ந்த கணநாதர் என்ற சிவ பக்தர் சிவத் தொண்டு செய்வதிலே காலத்தைக் கழித்தார். திருஞான சம்பந்தப் பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர், அவரை மூன்று வேளைகளிலும் தரிசித்து வந்தார். கணநாதர் செய்து வந்த திருத் தொண்டைப் பாராட்டி எம்பெருமான்  அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி அளித்தார்.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Sep 7, 2025, 8:36:14 PM (11 days ago) Sep 7
to santhav...@googlegroups.com
Please check the sandham / sandhi aspects in a few places.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 7, 2025, 8:49:27 PM (11 days ago) Sep 7
to santhav...@googlegroups.com
Thanks, Sri. Sivasivaa.

I will correct the cited places and re-post.
Much obliged.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 7, 2025, at 20:36, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPSKqO%3DzUroW-q%2B9cTTTaT8H01n1k7RMxBCx28iT85Kjg%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Sep 7, 2025, 10:13:07 PM (11 days ago) Sep 7
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா:

திருத்திய வண்ண விருத்தம் கீழே:

வண்ண விருத்தம் – 4

தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான


திருப்புகழ் - திருச்செந்தூர்


'விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய'


கணநாத னென்ப  னுமைபாக னின்றன்

கனியால்ம கிழ்ந்த .......   குணநேயன்   

கனிவான அன்பி லுருவான வன்பர்

கணநாத ரென்ற …….      அருள்நேசர்


பணியாலு வந்து பழிநாண முள்ள

பகமேவ  நின்ற ......     மதியாளர்

படைபோலு மன்ப ரொருசேர நின்று

பலபாட லென்று ......    மவரீவார்


அணிமாலை கொன்றை சிவனார ணிந்து

மழகான சந்தை .......     வலமேக

அகிலாளு மங்கை அவள்பாலு முண்ட

அருள்ஞான ரென்று .....  முளமாவார்   


கணநாத ரிந்த வகையான தொண்டர்

கடையாணி யன்ன.......   விசுவாசி

விணைநாடு மன்பர் பவமேகி வெல்வர்

கருநீல கண்ட   .....      னருளாலே.


பழிநாணல் – பழிக்கு அஞ்சுதல்

 

பகம் - அவாவின்மை, ஈச்வரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம் என்னும் அறுகுணம்.

கடதீபம் – குடத்திலேற்றும் விளக்கு


இந்த வண்ண விருத்தம் கணநாதர் என்பவரைப் பற்றியது.

சீகாழியில் பிறந்து வளர்ந்த கணநாதர் என்ற சிவ பக்தர் சிவத் தொண்டு செய்வதிலே காலத்தைக் கழித்தார். திருஞான சம்பந்தப் பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர், அவரை மூன்று வேளைகளிலும் தரிசித்து வந்தார். கணநாதர் செய்து வந்த திருத் தொண்டைப் பாராட்டி எம்பெருமான்  அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி அளித்தார்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


GOPAL Vis

unread,
Sep 8, 2025, 2:35:15 AM (11 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
அருமை!

கணநாத னென்பன் .......... குணநேயன்

கணநாத ரென்ற      ….......  அருள்நேசர்

என்று இருமுறை பெயரால் அறிமுகப் படுத்துவதைத் தவிர்க்கலாமோ?

கோபால்.

On Mon, Sep 8, 2025 at 6:06 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Please check the sandham / sandhi aspects in a few places.

V. Subramanian

On Sun, Sep 7, 2025 at 7:07 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
வண்ண விருத்தம் - முயற்சி 4 (ராம்)

தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

கணநாத னென்ப  னுமைபாகன் தந்த

Ram Ramakrishnan

unread,
Sep 8, 2025, 8:20:24 AM (11 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு கோபால்.

முதல் கணநாதன் விநாயகப் பெருமாள்.

இரண்டாவது கணநாதர் - அப் பெயருடைய சிவபக்தர்.

சிறிது குழப்பம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. திரு. சிவசிவா அவர்களும் இதைச் சுட்டியுள்ளார்.

பாடலை மீண்டும் ஒருமுறை முழுவதுமாக எண்ண நினைத்துள்ளேன். வெகு விரைவில் பதிவிடுவேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 8, 2025, at 02:35, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 8, 2025, 9:02:33 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
வண்ண விருத்தம் முயற்சி – 4 - மீண்டும் முழுமையாகத் திருத்தி அமைத்தது.


தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான


திருப்புகழ் = (திருச்செந்தூர்) ராகம்: மாண்ட்


"விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய"

 

மணிமார்பு நங்கை யிடமேசு மந்த

  விணையாளு மன்னன் உளமாக

கனிவாயு கந்து கணநாதர் கொண்ட

  பிணையாகு மந்த சிவநேசம்

 

பணியோடி ழைந்து பழிநாண முண்டு

  பகமேவ  நின்ற        மதியாளர்

படைபோலு மன்ப ரொருசேர நின்று

  பலபாட லென்று மவரீவார்

 

அணிமாலை கொன்றை அதனோடு கங்கை

  அரனார னிந்த நிலையோடு

அவர்சூழு மங்கை அவள்பாலு முண்ட

  அருள்ஞான ரென்று    முளமாவார்   

 

கணநாத ரென்னும் நிலையான தொண்டர்

  கடையாணி யன்ன           விசுவாசி

விணைநாடு கின்ற துணைமேவ வெல்வர்

  கருநீல கண்ட          னருளாலே

 

பதம் பிரித்து.

மணிமார்பு நங்கை இடமே சுமந்த

  விணையாளும் மன்னன்  உளமாக

கனிவாய் உகந்து கணநாதர் கொண்ட

  பிணையாகும் அந்த      சிவநேசம்

 

பணியோடு இழைந்து பழிநாணம் உண்டு

  பகம்மேவ  நின்ற         மதியாளர்

படைபோலும் மன்பர் ஒருசேர நின்று

  பலபாடல் என்றும் அவரீவார்

 

அணிமாலை கொன்றை அதனோடு கங்கை

  அரனாரின் இந்த              நிலையோடு

அவர்சூழும் மங்கை அவள்பாலும் உண்ட

  அருள்ஞானர் என்றும் உளமாவார்   

 

கணநாதர் என்னும் நிலையான தொண்டர்

  கடையாணி யன்ன           விசுவாசி

விணைநாடு கின்ற துணைமேவ வெல்வர்

  கருநீல கண்டன்              அருளாலே

 

மணிமார்பு நங்கை இடமே சுமந்த

  விணையாளும் மன்னன்  உளமாக

கனிவாய் உகந்து கணநாதர் கொண்ட

  பிணையாகும் அந்த      சிவநேசம்


(அணிகலன் கொண்ட மீனாளை இடமாய்க் கொண்டு விண்ணை ஆள்கின்ற சிவ பெருமானை உள்ளத்தில் கொண்ட அன்பின் உருவமான கணநாதர் என்பார்க்கு, அவர் நேசிக்கும் சிவனே கொண்ட சொத்தாகும்).


பணியோடு இழைந்து பழிநாணம் உண்டு

  பகம்மேவ  நின்ற         மதியாளர்

படைபோலும் மன்பர் ஒருசேர நின்று

  பலபாடல் என்றும் அவரீவார்


(செய்கின்ற இறைவன் பணியே உள்ளத்தின் நிலையாக, பழிபுரிதற்கு அஞ்சி, அவாவின்மை, ஈச்வரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம் என்னும் அறுகுணம் பொருந்திய அறிவு நிரம்பியவர் அவர். அன்பர் குழாம் ஒன்றாகி, எந்நாளும் இறைவன் புகழைப் பற்பல பாடல்களால் பாடுவதே அவர் கொடுப்பது).

 

அணிமாலை கொன்றை அதனோடு கங்கை

  அரனாரின் இந்த              நிலையோடு

அவர்சூழும் மங்கை அவள்பாலும் உண்ட

  அருள்ஞானர் என்றும் உளமாவார்  


(இறைவன் அணிகின்ற கொன்றை மலர், கங்கை நதி, இவற்றோடு, அவரின் ஒருபாகமாகும், உமை, அவளிடம் பாலமுது உண்ட திருஞானசம்பந்தர், ஆகியோரும் அவருள்ளத்தில் என்றும் இருப்பவராம்).

        

கணநாதர் என்னும் நிலையான தொண்டர்

  கடையாணி யன்ன           விசுவாசி

விணைநாடு கின்ற துணைமேவ வெல்வர்

  கருநீல கண்டன்              அருளாலே


(கணநாதர் என்னும் சிவனின் தொண்டர், வண்டிக்கு அச்சாணி போன்ற உறுதியான நிலை கொண்ட விசுவாசி. அவர் செய்த தொண்டினால், நீலகண்டனின் அருள் என்னும் துணை கொண்டு விண்ணை நாடி வெற்றி கொண்டார்).

 

பழிநாணல் – பழிக்கு அஞ்சுதல்

பகம் - அவாவின்மை, ஈச்வரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம் என்னும் அறுகுணம்

 

இந்த வண்ண விருத்தம் கணநாதர் என்னும் நாயன்மாரைப் பற்றியது.

சீகாழியில் பிறந்து வளர்ந்த கணநாதர் என்ற சிவ பக்தர் சிவத் தொண்டு செய்வதிலே காலத்தைக் கழித்தார். திருஞான சம்பந்தப் பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர், அவரை மூன்று வேளைகளிலும் தரிசித்து வந்தார். கணநாதர் செய்து வந்த திருத் தொண்டைப் பாராட்டி எம்பெருமான்  அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி அளித்தார்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Sep 8, 2025, 9:14:05 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
Please review the highlighted places - sandham issue / sandhi issue / typo.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 8, 2025, 9:42:14 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

கிழ்க் கண்ட திருத்தங்கள் செய்தேன். மீண்டும் சரியா எனச் சொல்லவும்

1.  வினையாள்ப வன்தன்
2. பிணையான வந்த
3. அரனாரி னிந்த (typo correction)
4. கணநாத ரென்ற
5. துணைமேவு தங்கு

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 8, 2025, at 21:14, Siva Siva <naya...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Sep 8, 2025, 10:03:29 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
In vaNNam songs - one cannot visualize conformance in standalone phrases - need to see the context.
So, good to post the full song - or at least the half lines that were updated.

Ram Ramakrishnan

unread,
Sep 8, 2025, 10:16:57 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
Sure. Please see the full song with corrections.

மணிமார்பு நங்கை யிடமேசு மந்த

  விணையாள்ப வன்ற னுளமாக

கனிவாயு கந்து கணநாதர் கொண்ட

  பிணையான தந்த சிவநேசம்


அணிமாலை கொன்றை அதனோடு கங்கை

   அரனாரி அனந்த நிலையோடு

அவர்சூழு மங்கை அவள்பாலு முண்ட

   அருள்ஞான ரென்று    முளமாவார் 


பணியோடி ழைந்து பழிநாண முண்டு

    பகமேவ  நின்ற        மதியாளர்

படைபோலு மன்ப ரொருசேர நின்று

    பலபாட லென்று மவரீவார்


கணநாத ரென்ற நிலையான தொண்டர்

   கடையாணி அந்த           விசுவாசி

விணைநாடு கின்ற துணைமேவு தங்கு

   கருநீல கண்ட          னருளாலே






அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 8, 2025, 10:22:35 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
Pattern conformance looks fine now.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 8, 2025, 10:26:50 PM (10 days ago) Sep 8
to santhav...@googlegroups.com
Thanks so much for your time to look into my efforts and give your feedback.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 8, 2025, at 22:22, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages