ஈற்றடி ஒன்று, கருத்து ஒன்று, வெண்பா மூன்று
ஈற்றடி:
அடிமூன் றளந்தா னடி
வையத்தில் தன்னடியால் வன்துயரம் தீர்த்தருளி
மெய்யடியார் சிந்தைமிசை மேவிநிற்கும் - ஐயன்
வடிவாலே வாமனனாய் வான்மண் தொடர்ந்தே
அடிமூன் றளந்தா னடி.
வையத்தில் தன்னடியால் வன்துயரம் தீர்த்தருளி
மெய்யடியார் சிந்தைமிசை மேவிநிற்கும் - ஐயன்
வடிவாலே வாமனனாய் மாபலிசி ரத்தில்
அடிமூன் றளந்தா னடி.
மாயவனே அந்தணனாய் மண்ணுடன் விண்ணளந்துத்
தீயவனாம் மாபலியைத் தீர்த்திடத் - தூய
வடிவினிலே வாமனனாய் மன்னன் தலையில்
அடிமூன் றளந்தா னடி.