மூவினக் காதல் வெண்பா

1 view
Skip to first unread message

Ramnath Bhagavath

unread,
2:02 PM (9 hours ago) 2:02 PM
to சந்தவசந்தம்
மூவினக் காதல் வெண்பா
8 வருடங்களுக்கு முன்பு, எனக்குத் திருமணம் ஆன பொழுது என் மனைவிக்கு மூவின வெண்பா எழுதியிருந்தேன். அதாவது, மூன்று வெண்பாக்கள், ஒவ்வொன்றும் ஒரு இன உயிர்மெய் எழுத்துகள் மட்டுமே கொண்டது. 

குறிப்பாக இடையின வெண்பாவில் புணர்ச்சி முக்கியம், உயிரை உயிர்மெய்யாக மாற்ற.

வல்லினம்:
சிற்றிடை பட்டுடை தேசு தகுபொற்பு
பொற்றொடி பொட்டு புதுப்பூ படுசடை
பற்றுகொடு பாகுப் பதப்பேச்சு ! சாற்றிடக் கைப்
பற்றுதற் பேறு பதிக்கு

தொடி = வளை

மெல்லினம்:
மின்னுமே நின்னணி மேனி மாண் மானினி
நண்ணினேன் நான்நின்மென் மைமுனை நாணமே
நின்னெண்ண மென்மனம் மன்னுமே ! நம்மணம்
நன்மண! மென்நன்மை நீ

மானினி = பெண், மென் மைமுனை = நீள மை இட்ட மெல்லலிய விழி முனை
நம்மணம் = நம் திருமணம்  
நன்மண! மென்நன்மை நீ = நன்மனம் என் நன்மை நீ

இடையினம்:
விழியோ யெழிலலை  வேலையே ! வாழ்வி
லெழிலியாய் வாரி யரிவை யருளீய
விலையேயோ ரல்லலே ! யிவ்வுயி ரெல்லையே !
யுளவலரி லுள்ளவ ளே

புணர்ச்சி பிரித்து இடையினம்
விழியோ எழிலலை வேலையே ! வாழ்வில்
எழிலியாய் வாரி அரிவை அருளீய
இலையே ஓர் அல்லலே ! இவ்வுயிர் எல்லையே !
உள அலரில் உள்ளவ ளே

வேலை = கடல், எழிலி = மேகம், உயிர் எல்லை = அவளிருக்கும் வரையில் நான் இருப்பேன் என்ற பொருளில்  

இராம்நாத் பகவத்

Swaminathan Sankaran

unread,
3:10 PM (8 hours ago) 3:10 PM
to santhav...@googlegroups.com
அழகு!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2a1448f7-e711-49ca-b51e-dfb93a3a1e45n%40googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
10:47 PM (14 minutes ago) 10:47 PM
to santhav...@googlegroups.com
அருமையான காதல் வெண்பாக்கள் திரு. பகவத்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 30, 2025, at 23:32, Ramnath Bhagavath <ramnat...@gmail.com> wrote:

மூவினக் காதல் வெண்பா
--
Reply all
Reply to author
Forward
0 new messages