கனவு - சில பழைய கவிதைகள்

664 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Sep 29, 2012, 11:46:27 PM9/29/12
to santhavasantham, vall...@googlegroups.com, தமிழ் மன்றம்

பழைய நாட்களில் நான் திஸ்கியில் எழுதி அவுட்லுக் எக்ஸ்பிரஸைப் பயன்படுத்தி அனுப்பிய மடல்களில் இடம்பெற்ற கவிதைகள் இவை.  என்னிடத்திலேயே இவற்றின் பிரதி கிடையாது.  என்னுடைய பழைய எழுத்துகளைக் கூடுமானவரை மீட்டெடுப்பது என்று களமிறங்கியிருக்கும் நண்பர்கள் எடுத்தவை இவை.  இழந்ததற்காக நான் வருந்தியதுண்டென்றால், அவற்றில் இந்தக் கவிதைகளும் அடக்கம்.  இவை அனுபவங்கள்.  கனவனுபவங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  


கனவு- (1): உன்னைப் போலவே.. 

உன்னைப் போலவே உன் அண்டை வீட்டானையும்...
ஓயாமல் சத்தமிடும்
கீழ்வீட்டு மின்விசிறி
புலித்தலை முளைத்த பூனைக்குட்டியாய்
எலித்தலை கொண்ட யானையாய் மாறி

பாயிற் படுத்துறங்கும் என்
உறக்கப் பரப்பெல்லாம்
ஓடிப்பிடித்தாடும்.

என்னைப் போலவே
அண்டை வீட்டானை
ஏன்
கீழ் வீட்டானையும்
நேசிக்கலாம்தான்.

சத்தமிடும்
மின்விசிறியை
என்ன செய்ய?



கனவு- (2): ...விழும்வரைக்கும் 

சின்னக் குளம் ஒன்று
தெறிக்கும் தளும்பும்
திடீரெனக் கடலாகும்.

அலையொன்று வானெழும்பும்
கரை நிற்கும் என்னைக்
கட்டும் பிடித்திழுக்கும்
ககனவெளி விட்டெறியும்.

முகமற்ற நான் பறப்பேன்
முகில்தடவி மீன் தொட்டு
புள்ளிகளாய்த் தெரியும்
எல்லைசி கட்டிடமும்
பக்கத்தில்
மீனாட்சி கோபுரமும்
பின்னே விரைந்தேக
எங்கெங்கோ சுற்றிடுவேன்.

பட்டுப் பூச்சியைப்போல்
காற்றின் உடலெல்லாம்
குடைந்து குடைந்தெழுந்து
கனவில் மனம்பறக்கக்
கண்ணுறங்கும் உடல் முழுக்க
கட்டிலுக்கு ஓரடிமேல்
விட்டுச் சிறகடிக்க
மேல்மிதக்க மேல்மிதக்க.

அலை மீண்டும் தரையிறக்கும்.
கடலுக்கு நடுவினில் நான் --
கணுக்கால் வரைமுழுக.

பக்கத்தில் கண்ணுறங்கும்
என்பிள்ளை காலென்மேல்
தப்பென்று விழும்வரைக்கும்...


கனவு- (3): எப்படிச் சாத்யம்.. 

கடற்கரையில் நான் நிற்பேன்
கடலுக்கு உள்ளிருந்து
குட்டிப் பெண்குழந்தை
மூன்றிருக்கும் அவள் வயது

உடல் முழுக்க ஒன்றுமின்றி
கழுத்திலொரு தாலியுடன்
என்னுருவம் தனைநோக்கி
இரண்டு கரம் நீட்டி
ஓடிவரும் பொழுது
தலையணையின் ஈரம் - என்
கண்நிலைமை தனைச்சொல்லும்.

இடுப்பளவு கடல்நீரில்
என்னுருவம் தெரிகையிலே
எனைநோக்கி வருமதுவோ
அடிப்பாதம் வரைமட்டும்
நனைந்தோடி வருவதனை

எத்தனை நாள்பார்த்தும்
எப்படி இதுசாத்யம்
என்றுணர்ந்து கொண்டதில்லை.

--
அன்புடன்,
ஹரிகி.

Subbaier Ramasami

unread,
Sep 30, 2012, 2:03:51 AM9/30/12
to santhav...@googlegroups.com
மின்விசிறி நல்ல சிந்தனை.
இது பழையகவிதையா? ‘புதுக் கவிதையா?”

இலந்தை

2012/9/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Sep 30, 2012, 2:23:06 AM9/30/12
to santhav...@googlegroups.com
'கனவுகள்' பற்றிய கவிதைகள் என்பதால் ஒரு கருத்து. கனவு முடியும் அந்த ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கும் நனவு. கனவையும் நனவையும் ஒரே ஒரு செய்கையால் இணைக்கும் அந்த நிலையை மனம் கொண்டதெப்படி? எவராலும் விளக்கவியலா அற்புதம் இது.
 
எடுத்துக்காட்டாக உங்களின் இரண்டாவது கனவில்...
 
அலை மீண்டும் தரையிறக்கும்.
கடலுக்கு நடுவினில் நான் --
கணுக்கால் வரைமுழுக.
"காலின் மேல் ஏதோ
பொத்தென்று விழுந்தது.."
 
இங்கு கனவில் காலின் மேல் ஏதோ விழும் அதே நேரத்தில் நனவில் மகனின் கால்படும்.
 
இப்படி பலநாள் நான் கனவுக்கும் நனவுக்கும் ஒரு புள்ளித் தொடர்பாக ஏதோ ஒரு செயலை உணர்ந்து வியந்திருக்கிறேன்.
 
வாழ்க்கை வியப்பானதுதான். எல்லாம் சாத்தியம் என்பது உண்மையாக இருக்கக்கூடும்.
 


 
2012/9/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Hari Krishnan

unread,
Sep 30, 2012, 2:40:51 AM9/30/12
to santhav...@googlegroups.com


2012/9/30 Subbaier Ramasami <elan...@gmail.com>

மின்விசிறி நல்ல சிந்தனை.
இது பழையகவிதையா? ‘புதுக் கவிதையா?”

இலந்தை

:))))

பழைய புதுக்கவிதை.

எண்பதுகளில் புதுக்கவிதைக் கிறுக்குப் பிடித்திருந்தது.  (நினைவிருக்கிறதா?  சென்னை காங்கிரஸ் பொருட்காட்சித் திடலில் ஜெயேந்திரர் நடத்திய ஹிந்துமத விழாவில் (பெயர் மறந்துவிட்டது--அன்றுதான் நீங்கள் உங்களுடைய ‘யானை‘ப் பாட்டை முதன்முதலாகப் படித்ததாக நினைவு)) ‘அறம்’ என்ற திருக்குறள் தலைப்பில் படித்ததும் புதுக்கவிதைதான்.  1983ஆ?  எண்பதுகளின் இறுதிப் பகுதியில் எழுதியவை இவை.  

அப்புறம் கவிதை எழுதப் பொழுதில்லாத இன்ஸ்ட்டியூட் நெருக்கடி. அப்புறம் இணையத்தில் உரைநடை.  உரைநடைக்குள் கவிழ்ந்த பின்னர் என்னுடைய கவிதை வெளிப்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது.  

இந்த மூன்றும் என்னவோ எனக்குப் பிடித்திருந்தன.  அவ்வளவுதான். :)

Kaviyogi Vedham

unread,
Sep 30, 2012, 3:01:59 AM9/30/12
to santhavasantham
ஆகா! ரொம்பவும் என் மனத்தைக்கவர்ந்த கவிகள்(புதுக்) இவை. உற்சாகமாயிருந்தது. வெகு நாள் கழ்க்ஷித்து உன்னிடமிருந்து கவி வந்து யான் படித்து..பேஷ் சொல்லி..
 யோகியார்

2012/9/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Sep 30, 2012, 1:40:44 PM9/30/12
to tamil...@googlegroups.com, santhavasantham, vall...@googlegroups.com
மிக அருமை!!!
மீட்டெடுத்த உங்கள் நண்பர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும்
மிக்க நன்றி!!

அன்புடன்
செல்வா

2012/9/29 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
Reply all
Reply to author
Forward
0 new messages