கடவுள் வாழ்த்து

82 views
Skip to first unread message

srinivasan s

unread,
Sep 8, 2009, 8:56:07 AM9/8/09
to santhav...@googlegroups.com
மதிப்பிற்குரிய யோகியார் அடியேனுக்கு விடுத்த அன்பு ஆணையை சிரமேற் தாங்கி, அடியேனிடம் பிறந்த கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இங்கே இடுகிறேன். தவறுகள் இருப்பின் மன்னித்து திருத்தி அருள்வீராக.
இவையெல்லாம் அறியாக் காலத்தில் புனையப்பட்டவை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவணக்கத்துடன் தொடங்குகிறேன். இறைவன் அனைவருக்கும் அருள்புரிபவர். அதில் அடியேனுக்கும் எள்ளளவு கிடைக்குமென்று நம்புகிறேன். இவை 'பத்மம்' என்னும் புனைப்பெயரில் எழுதப்பட்டவை.

கடவுள் வாழ்த்து

---

நிலையிலா  உலகில் நீயெனைப்  படைத்தாய்!

கலையிலே  என்னுளம் கலந்திட  வைத்தாய்!

அலையலை  யாய்க்கவி  ஆயிரம்  பாடியுன்

அலகிலாப்  புகழ்புவி   அனைத்தும்  பரப்புவேன்!

-------

தேனுறு  கமலத் திருவடி போற்றி!

கானுற   நடந்த   திருவடி போற்றி!

வானுற  உயர்ந்தோன்  இணயடி போற்றி!

யானுற  அருள்வோன்   இணயடி  போற்றி!

 

வையம்  ஏத்தும்   எழிலடி   போற்றி!

தையாள்  ஏந்தும்   எழிலடி   போற்றி!

ஐயன்   அழகன்   மலரடி   போற்றி!

உய்ய   உலகெலாம்  மலரடி  போற்றி!

 

குணத்துப் பெரியோன்  தாளே  போற்றி!

மனத்தே   இனியான்   தாளே   போற்றி!

கணத்தும்  நீங்கான்    தாளே   போற்றி!

வணத்துள்  வண்ணோன்  தாளே போற்றி!

 

திருவுடை  நெஞ்சோன்  தாளே  போற்றி!

அருளுடைக்  கடலோன்  அடியே  போற்றி!

இருளுடைத்   தகற்றும்     இணயடி போற்றி!

கருநிறக்   கண்ணன்    கழலடி    போற்றி!

----

உலகெல்லாம்     உன்கண்ணுள்!

            உய்யவழியும்   உன்னொளியில்!

நிலையில்லா      உளத்தோரோ

            நினதருளிலா    மானிடர்கள்!

கலையேஎன்     கருத்தெலாமுன்

            கருணையேஎன்    வேண்டுதலாம்!

அலைபாயா  துளமுன்றன்

            அடியிணையில்   வைப்பேனே!

---- 

வாடாமலர்  தேனார்குழல்  மங்கைதனை  உடையோனே!

    வரையாம்திரு  மலையில்திகழ்  மாலே!பரம்  பொருளோனே!

சேடாதிபன்  மேலேயுறை  சீரார்கடல்  நிறத்தோனே!

     சேணாய்முகில்  துதித்தேகும்  திருவேங்கடப் பெருமானே!

வீடாம்நின   தடியேநினை   அடியார்மனம்  களிப்போனே!

     விந்தைபெரும்  விந்தையென  வியப்பாருனைப்  பணிவாரே!

கூடாதெது  உள்ளம்தனைக்  கூடச்செயும்   பெரியோர்க்கே?

     கோலம்புரி  கோலமுடை  எழிலே!எமக்  கருள்வாயே!

---- 

மலராய் கனியாய்     மணமாய்       தருவாய்         பரந்தோனே!

இலனாய்       உளனாய்       இருளாய்        ஒளியாய்        இருப்போனே!

நலமாம் பொருளாய் நினைவாய்  உளமாய்  நிறைந்தோனே!

உலகாய்         அணுவாய்  உணர்ந்தாய்   எமக்கே  அருள்வாயே!

----

 

எழில்தவழ         உலகமைத்து         எல்லையிலே   கவிஞனையும்

கழியெண்ண  உளமளித்துக்   கனியெனவே  கற்பனையும்

பொழிந்திடவே  அமைத்தனையுன்  பொன்னான   அருளுடனே!

அழிந்திடாத   படைப்பெலாமுன்   அழகினையே   பறைசாற்றும்!

-----         

 
யோகியார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
அன்பில் சீனிவாசன்
 


--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Kaviyogi Vedham

unread,
Sep 8, 2009, 1:01:06 PM9/8/09
to santhav...@googlegroups.com
நல்ல பாக்கள் சீனிவாசன்!எல்லாமே அற்புதக் கருத்தோடம் வாய்ந்தவை. ரசித்தேன்.
 ‘தையாள்’-  ஏந்தும்   எழிலடி   போற்றி!
...எதுகை இடிக்கிறது.(ய வுக்கு யா=நெடில் எப்படி எதுகை ஆகும்?)
வண்ணோன்=வண்ணன்..? என்ன பொருள்.? பிரபந்தச் சான்று உண்டா?வண்ணோனுக்கு?
 ‘ண’ வுக்கு ந அல்லது ‘ன’ எதுகை சரியில்லை.
4)-குற்றியலுகரச்சீர் பிழைகளைக் களையவும்.
5)-நிலையில்லா உளத்தோரே..என்றிருக்க வேண்டும்..
உளத்தோரோ? என்று ஆண்டவனையே கேள்வி கேட்டால்..
 என்ன பதில் சொல்வார்!
யோகியார்


2009/9/8 srinivasan s <vasan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

srinivasan s

unread,
Sep 8, 2009, 8:59:22 PM9/8/09
to santhav...@googlegroups.com
யோகியார் அவர்களுக்குக் காலை வணக்கங்கள். தங்கள் பொன்னான நேரத்தில் சிறிது அடியேனுக்கு ஒதுக்கியது
தங்களது பரந்த உள்ளத்தையே காட்டுகிறது.
பாவிலக்கணத்தில் நுணுக்கங்களை அடியேனுடைய பாக்களில் வைத்துப் பார்த்தால் அடியேன் தங்கள் பரீட்சையில் 'பாஸ்' ஆக மாட்டேன்.
கருத்துக்களுக்காகச் சற்று இலக்கண மீறல்கள் இருக்கக் கூடும். 'தையாள்' என்பதற்கு ஏதேனும் மாற்றுச் சொல் இருந்தால் அடியேன் ஏற்றுத் திருத்திக் கொள்கிறேன்.
'வண்ணன்' என்னும் சொல் பிரபந்த்த்தில் நிறைய இருக்கிறது. ஆனால் இங்கு, 'முகில்' என்னும் சொல்லை வரவழைத்துச் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
'நிலையில்லா உளத்தோரே' என்னும் பகுதி இறைவனைக் குறிப்பிடவில்லை.
நிலையில்லா உளமுடையவர்கள் இவ்வுலகில் இருக்கிறார்களே, அவர்கள் இறைவனின் அருள் இல்லாதவர்கள் என்று இவ்வடி சொல்கிறது, பிற்பகுதியையும் சேர்த்துப் பார்த்தால்.
குற்றியலுகரம் குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருகிறேன். இப்பாடல்கள் மிகச் சிறு வயதில் எழுதப் பட்டவை. மாணாக்கன் தவறாக எடுத்துக் கொண்டு, நேர்மிருப்பின் திருத்திப் பணிகொள்வீர் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தாஸன்
 

srinivasan s

unread,
Sep 9, 2009, 3:45:02 AM9/9/09
to santhav...@googlegroups.com

இயற்கை வருணனைப் பாடல்கள்

இளமையில் அடியேன் சென்னை, மயிலையில் கடற்கரைக்கு அருகாமையில் வாசம் செய்து வந்தேன். அநேகமாக தினமும் கடற்கரைக்கு நடந்து செல்வது வழக்கம். அப்போது இயற்கை எழிலை கண்ணாரக் கண்டு அனுபவித்திருக்கிறேன். இளம் வயது துடிப்பில் சிறு சிறு கவிதைகளை வடிப்பது வழக்கமாக இருந்தது. அவற்றை இப்போது மீண்டும் கண்ணுற வாய்ப்பு ஏற்பட்டது. அவற்றை ஒரு சிறுவனுடைய படைப்பு என்பதை மனத்தில் கொண்டு படியுங்கள். தவறுகளை மன்னித்து மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காலை

 

தாமரைப்       புட்கள்            தொழுதிட      ஞாயிறு

பாமலர்           ஆரம்              ‘நா’மகள்        சூட்ட

நீள்வரை        சூழ்ந்த                        நள்ளிருள்       ஏக

கணங்கணம்  சிறிதாய்க்       கட்டொளி     பிரிய

மணம்தனைப்  பரப்பும்        மன்னியக்      காற்றுடன்

பொதியம்      தன்னில்         பொழியும்      நாற்றம்

கதியெனக்     கலந்து            சுதியுடன்       கூடித்

தென்றல்        எனவே           சிறுகால்         மிதக்க

குன்றிடாத்     திரைகள்        தோன்றிடும்  கடலில்          

செவ்வொளி  யுடனே           சேர்ந்திடும்    நீல

வெவ்வொளி யில்லா           நல்லொளி      தண்மை

அளித்திட      எழுவான்;       களித்திடும்    வானகம்

இருப்பதை     அறியும்          இவ்வுல          கவனது

தருமொளி      காணும்          தருணம்          பிறகே!

எழிலும்          இயலும்          தழுவிக்           கொள்ளும்

காட்சியைக்   காணக்           காணுமோ     ஆயிரம்

மாட்சிமை      கூரிய             மாவெழிற்      கண்கள்?

---- 

 

வானக்            குடும்பம்

 

செம்மை         படர்ந்தது,      சீர்விண்          ணென்னும்

நம்மை            மயக்கும்         நங்கை            முகமதில்

இறைவன்      *கதிரெனும்   இதழ்குவித்    தவள்தன்

குறைவிலா    எழிலுடைக்   கன்னத்           திலொரு

அமுதுறை      அழகு              அதர               பானம்

தமதன்(பு)      அளிப்பாய்த்  தந்திட்                டதுமே!

இரவின்          கொடுமையின்    இறுதியாய்ப்       பனித்துளிக்

கண்ணீர்        வானம்           மண்ணிலே    சிந்த

ஆதவன்         அரவணைப்பில் ஆவியாய் மறையும்!

நாளே             இரவு!             நாளெலாம்    கூடல்!

இன்பமே        ஒளிக்கதிர்!     இனிய            மக்கள்

தண்மை         அளிக்கும்       மென்னிள      முகில்கள்!

(3-ம் அடி: *கதிர் – கதிரவன்)

---

 

                                 நிலவு

நீலத்திரைச்   சேலையிலோர்

            நித்திலம்போல்         இன்பமவிழ்த்

தோலமிடும்   கடற்புனலில்

            ஓடமென                    மிதக்கின்றாய்!

கோலமெல்லாம்       உன்னிடத்து

            கூடித்திரண்   டெழிற்கோலம்

ஞாலத்திற்      கொளியூட்டென்

            நெஞ்சத்துநீ   தவழ்கின்றாய்!

--- 

தவறுகளைத் திருத்திப் பணிகொள்வீராக.
தாழ்மையுடன்
அன்பில் சீனிவாசன்


 
Reply all
Reply to author
Forward
0 new messages