கீழ்வரும் ஐயங்களை தீர்த்துக் கொள்ள விழைகிறேன். கழை எனில் கரும்பு
அல்லது மூன்று விண்மீகள் என்று பொருள் வருவதாக சொல்லக் கேட்கிறேன்.
1. ஒரு வேளை கழைக் கூத்தாடி என்ற சொல்லின் வேரே மூங்கில் / கரும்பு
என்பதோ?
2. கழை, கழைய, கழைதல் என்ற என்ற சொல் இலக்கியத்தில் கையாளப்படிருக்கிறதா?
3. சங்க் இலக்கியங்கள்/ சிற்றிலக்கியங்கள் எனில் எடுத்துக்காட்டுகளை தர
வேண்டுகிறேன்.
4. கீழ்வரும் பாடல்களில் வரும் கழைய என்ற சொல்லாட்சிக்கான பொருள் அறியத்
தர வேண்டுகிறேன்.
------------------------------------------------------
நானறிந்த எடுத்துக் காட்டுகள்:
------------------------------------------------------
1. புறப்பொருள் வெண்பாமாலை
(செலவு இன்னது)
வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் உன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று
1.8
கூற்று இனைத்து அன்னார் கொடுவில் வலன் ஏந்திப்
பாற்று இனம் பின் படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர் 5
2.இரட்சண்ய யாத்திரிகம்
இரண்டாம் பாகம்
3.நிதான பருவம் - நகர்புகு படலம்
14.
ஆழி யன்னவ கழைய கப்புறஞ்
சூழு மேருவிற் றோன்றிய விஞ்சியை
ஊழி னோக்கியு யர்கடை வாயொரீஇ
வாழி யாரணர் புக்கனர் வஞ்சரூர்.
அன்பன்
இராஜ. தியாகராஜன்.
கீழ்வரும் ஐயங்களை தீர்த்துக் கொள்ள விழைகிறேன். கழை எனில் கரும்பு
அல்லது மூன்று விண்மீகள் என்று பொருள் வருவதாக சொல்லக் கேட்கிறேன்.
1. ஒரு வேளை கழைக் கூத்தாடி என்ற சொல்லின் வேரே மூங்கில் / கரும்பு
என்பதோ?
2. கழை, கழைய, கழைதல் என்ற என்ற சொல் இலக்கியத்தில் கையாளப்படிருக்கிறதா?
3. சங்க் இலக்கியங்கள்/ சிற்றிலக்கியங்கள் எனில் எடுத்துக்காட்டுகளை தர
வேண்டுகிறேன்.
4. கீழ்வரும் பாடல்களில் வரும் கழைய என்ற சொல்லாட்சிக்கான பொருள் அறியத்
தர வேண்டுகிறேன்.
அன்பு அய்யாவின் பார்வைக்கு ....bamboo, மூங்கில்; 2. pole used for propelling boats; 3. sugar-cane, கரும்பு; 4. the 7th lunar asterism, புனர்பூசம்; 5. an elephant-goad.Acrobat's pole; கழைக்கூத்தன் ஏறி நின்று ஆடுதற்கு நாட்டும் மூங்கிற்கம்பம்
கழை +. Bamboo- seed; மூங்கிலரிசி. போகுயர் நீள்கழை நெல்லும் (சீவக. 1422).செம்-மை + கழை. Red sugarcane; செங்கரும்பு. (யாழ். அக.)
அப்படிப்போடு.!இவ்வளோ அற்புதமாகச் சொல்லிவிட்டு என் போல் கவிமாமணிகள் வந்து சொல்வார்கள் என்றால் என்ன அர்த்தம்(கிண்டல்..) அரீ!. நாங்கள் வெறும் கவிமாமணி. நீயோ கவிமாமணிகட்கெல்லாம் மேலாகப்பட்ட கம்பனைக்கரைத்துக்குடித்த கவிமாமணி.
மூன்றாம் நான்காம் பொருள் காணப்படும் அகராதி அல்லது இலக்கியச் சான்று எது என்பதைத் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta