சில சந்தேகங்கள் - 1

1,042 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Apr 25, 2012, 9:10:56 AM4/25/12
to santhav...@googlegroups.com
எல்லோர்க்கும் வணக்கம்,

வருகிற திங்கட்கிழமையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "மொழி அறிவோம்" என்ற நிகழ்ச்சியை அடியேன் வழங்க இருக்கிறேன். இதில் எந்த சொல் சரி ? எந்த சொல் தவறு ? என்பதை விளக்க வேண்டும். உதாரணமாக சுவற்றில் என்பது தவறு. சுவர் என்பது சரி. 

இதற்கிடையே  முன்னொரு மடலில் சொன்னது போல எல்லோரையும் தமிழிலேயே பேச வைக்க வேண்டும் என்ற ஏன் நோக்கத்தையும் நான் ஒரு நிகழ்ச்சி மூலம் நிறைவேற்றுவேன். அதற்கான பணிகளும் நடை பெற்று வருகின்றன. 

இந்த நிலையில் சில சந்தேகங்கள் என்னுள் எழுந்தன (என்னில் எழுந்தன என்பது தான் சரியோ  ?). அவற்றை ஆன்றோர் தான் தீர்த்து வைக்க வேண்டும்.

மனதில் மகிழ்ச்சி என்பது தவறு. மனத்தில் மகிழ்ச்சி என்பதே சரி. இது ஏன் ?
அரண்மனை வீரர்களில் யார் சிறந்தவர் ? அரண்மனை வீரர்களுள் யார் சிறந்தவர் ?. இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?
ஒரு படத்தின் பாடல்களை வெளியிடும் போது " இன்று இசை வெளியீடு" என்று எழுதுகிறார்கள். இது சரியா ? இன்று பாடல்கள் வெளியீடு என்று தானே  இருக்க வேண்டும் ?
எதிர்க்கட்சி தலைவர் இணைய தளம் ஒன்றிற்கு/ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் எது சரி ? ஏன் ?
குற்றச்சாட்டு  என்று எழுதுவது தவறு. குற்றச்சாற்று என்று எழுதுவது தான் சரி. இது ஏன் ?

சந்தேகங்கள் தொடரும்......  

அன்புடன்,
நிரஞ்சன் 
360.gif

Hari Krishnan

unread,
Apr 25, 2012, 10:06:46 AM4/25/12
to santhav...@googlegroups.com


2012/4/25 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

குற்றச்சாட்டு  என்று எழுதுவது தவறு. குற்றச்சாற்று என்று எழுதுவது தான் சரி. இது ஏன் ?

குற்றச்சாற்று என்றெழுதுவதான் தவறு.  குற்றச்சாட்டு.  இதுவே சரி.  குற்றம்சாட்டப்பட்டவர், குற்றம்சாட்டியவர், குற்றச்சாட்டை விசாரிப்பவர்... இப்படி.



--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Apr 25, 2012, 10:09:00 AM4/25/12
to santhav...@googlegroups.com


2012/4/25 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

மனதில் மகிழ்ச்சி என்பது தவறு. மனத்தில் மகிழ்ச்சி என்பதே சரி. இது ஏன் ?

மனம் என்பது அடிச்சொல். ‘ம்’ என்ற எழுத்தில் முடிகிற சொற்களோடு உருபுகள் சேரும்போது (ஐ ஆல் கு இன் அது கண்) இரண்டுக்கும் இடையில் அத்துச் சாரியை கொடுக்கவேண்டும்.  எனவே, மனம்+அத்து+இல்=மனத்தில்.

மனது என்றொரு சொல்வடிவம் இருந்தால் மனதில் என்றெழுதலாம்.

திருக்குறளைப் பாருங்கள்: 

மனத்துக்கண் மாசிலனாதல்.... மனதுக்கண் அன்று.

Parthasarathy Krishnan

unread,
Apr 25, 2012, 12:20:00 PM4/25/12
to santhav...@googlegroups.com
மொழியிலின் படி குற்றச்சாட்டு ஏற்கப்படுகிறது. சில வல்லினங்கள் தொடர்புடையன என்பதால், போலியாக வருவது வழக்கம்.
கட்டு - கற்றை - கத்தை -  கத்தை.
வித்தை என்பத பாரதி "விச்சை" என்று குறிப்பிட்டிருக்கிறான்.
குற்றச்சாட்டு என வந்தால், (எழுதுபவர் மீது) குற்றச்சாற்று வேண்டாம்.

பாகி

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki (பாகி)


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 25, 2012, 1:48:27 PM4/25/12
to santhav...@googlegroups.com
>மனது என்றொரு சொல்வடிவம் இருந்தால் மனதில் என்றெழுதலாம்.

இது பற்றி முன்னமும் இங்கே மனம் விட்டுப் பேசியிருக்கிறோம் :-)
வடமொழியான மனஸ் என்பதை மனது, மனம் என்று இருவிதமாகத் தமிழில் மொழியாக்கம் செய்வதுண்டு.  (மனது பேச்சுவழக்கில் மனசு என்றாகிறது). மனஸ் மனம் என்றாகும்போது மனத்தை என்று அத்துச் சாரியை பெற்றும், மனது என்றாகும்போது பெறாமலும் வரும்.


காட்டு:
பாரதி- வெள்ளை மனது பறிகொடுத்தேன் - அம்மா! ;என்மனதைச் சொல்வேன்;
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!; வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கி..

திருப்புகழ்- மூலா நிலமதின் மேலே மனதுறு; மனது ருக்கி ளணைமீதே; மனதை யுடைய அசட்டு மனிதன்; மனது போற்கரு கினகு வாற்குழல்


எருது, விருது ஆகியவற்றோடு விகுதிகளைச் சேர்க்கையில் எருதின், எருதிற்கு என்றெழுதுவது போல மனது+ஐ = மனதை என்று எழுதுவதாகத் தோன்றுகிறது.

... அனந்த்


2012/4/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 25, 2012, 7:58:48 PM4/25/12
to santhav...@googlegroups.com
>> மனஸ் மனம் என்றாகும்போது மனத்தை என்று அத்துச் சாரியை பெற்றும், மனது 
>> என்றாகும்போது பெறாமலும் வரும்.
இது போலவே சிரஸ், சிரசு, சிரம் -
காட்டு:  எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்
திருமந்திரம்: நீரும் சிர(சு)இடை பன்னிரண்டு அங்குலம் 



2012/4/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 25, 2012, 8:31:18 PM4/25/12
to santhav...@googlegroups.com


2012/4/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இது பற்றி முன்னமும் இங்கே மனம் விட்டுப் பேசியிருக்கிறோம் :-)
வடமொழியான மனஸ் என்பதை மனது, மனம் என்று இருவிதமாகத் தமிழில் மொழியாக்கம் செய்வதுண்டு.  (மனது பேச்சுவழக்கில் மனசு என்றாகிறது). மனஸ் மனம் என்றாகும்போது மனத்தை என்று அத்துச் சாரியை பெற்றும், மனது என்றாகும்போது பெறாமலும் வரும்.


காட்டு:
பாரதி- வெள்ளை மனது பறிகொடுத்தேன் - அம்மா! ;என்மனதைச் சொல்வேன்;
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!; வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கி..

நீங்கள் சொல்வது உண்மை.  நாம் இதன் முன்னர் இச்சொல் குறித்து உரையாடியிருக்கிறோம்.  இரு வடிவங்களும் இலக்கணப்படி சரி என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் உருபு முதலானவற்றை மனம் என்ற வடிவத்துடன் சேர்க்க வேண்டும்; மனது என்ற வடிவத்துடன் அன்று என்று பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) சொல்கிறார்.  அவர் வானொலியில் ஆற்றிய உரைகளில் ‘மொழிப்பயிற்சி’ என்ற தலைப்பில் ஆற்றி உரை இந்தப் பக்கதில் உள்ளது:


இந்தப் பக்கத்தில் உள்ளனவற்றில் மூன்றாம் சொற்பொழிவு.  (முதலில் கீச்சுமூச்சு என்று முதல் நான்கைந்து வினாடிகளுக்கு ஒலிப்பது அறிவிப்பாளருடைய குரல். பத்து அல்லது பதினைந்து நிமிடச் சொற்பொழிவுதான். மனம், துவக்கம் போன்றனவற்றின் சரியான பயன்பாடு பற்றிச் சொல்லியிருக்கிறார்.

Hari Krishnan

unread,
Apr 25, 2012, 8:33:21 PM4/25/12
to santhav...@googlegroups.com


2012/4/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இது போலவே சிரஸ், சிரசு, சிரம் -
காட்டு:  எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்
திருமந்திரம்: நீரும் சிர(சு)இடை பன்னிரண்டு அங்குலம் 

மீண்டும் உண்மை.  மனஸ், சிரஸ் என்ற வடிவங்களைப் பயன்படுத்தப் போகிறார்களா, மனம், சிரம் போன்ற வடிவங்களைப் பயன்படுத்தப்படுகிறார்களா என்பதைச் சார்ந்தது அவற்றிலிருந்து கிளைக்கும் வடிவங்கள்.  வேண்டுவனவற்றைத் தேர்வுசெய்து கொள்ளலாம்

Niranjan Bharathi

unread,
Apr 26, 2012, 5:06:56 AM4/26/12
to santhav...@googlegroups.com
அறிவு கொளுத்தியமைக்கு மிக்க நன்றி. 
கீழ்க்காணும் சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள்.

  1. அரண்மனை வீரர்களில் யார் சிறந்தவர் ? அரண்மனை வீரர்களுள் யார் சிறந்தவர் ?.--> இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?
  1. ஒரு படத்தின் பாடல்களை வெளியிடும் போது " இன்று இசை வெளியீடு" என்று எழுதுகிறார்கள். இது சரியா ? இன்று பாடல்கள் வெளியீடு என்று தானே  இருக்க வேண்டும் ?
  1. எதிர்க்கட்சி தலைவர் இணைய தளம் ஒன்றிற்கு/ஒன்றுக்கு பேட்டி அளித்தார் --> இதில் எது சரி ? ஏன் ?

அன்புடன்,
நிரஞ்சன் 
2012/4/26 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Apr 26, 2012, 6:40:56 AM4/26/12
to santhav...@googlegroups.com


2012/4/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

  1. அரண்மனை வீரர்களில் யார் சிறந்தவர் ? அரண்மனை வீரர்களுள் யார் சிறந்தவர் ?.--> இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?

இரண்டு வடிவங்களும் வழக்காற்றில் உள்ளன.  ஆயினும், I would prefer வீரர்களுள்.  ஆங்கிலத்தில் சொல்லிப் பாருங்கள்: Who among the soldiers of our side is good/better/best.  Among என்ற பொருள் வரவேண்டுமானால் உள் என்ற விகுதியைப் பயன்படுத்தினால் தெளிவாக இருக்கும்.  ஆனால், நாடுகளில், மொழிகளில், நபர்களில் என்ற comparator ஆகவும் இல் பயன்படலாம்.  ‘யாம் அறிந்த மொழிகளிலே’ ஓர் எடுத்துக் காட்டு. மொழி+கள்+இல்+ஏ.  யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப் போல்... புலவரிலே.  புலவர்+இல்+ஏ.  இதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.  And it has been authenticated by giants.

  1. ஒரு படத்தின் பாடல்களை வெளியிடும் போது " இன்று இசை வெளியீடு" என்று எழுதுகிறார்கள். இது சரியா ? இன்று பாடல்கள் வெளியீடு என்று தானே  இருக்க வேண்டும் ?
பாடல் என்றாலே இசையுடன் கூடியதுதான்.  மரபு சார்ந்த  பாடல்களுக்கு இது பொருந்தும்.  மரபு சாராத வடிவங்களிலும் மென்மையான இசை ஒலித்தபடிதான் இருக்கிறது.  பாடல் வெளியீடு என்பதே பொருள் ரீதியாகப் பொருத்தமானது.  ஆனால், இசையமைப்பாளர்கள், இசைக்கே முதலிடம் கோருவதால், இசை வெளியீடு என்கிறார்கள்.  பாடல் வெளியீடு என்னும்போது, இயற்றப்பட்ட வரிவடித்திலான பாடல், இசையமைக்கப்பட்ட பாடல் இரண்டுமே உள்ளடங்கி இருக்கின்றன.  இசை வெளியீடு என்பது, இயற்றப்பட்ட வரி அல்லது வார்த்தை வடிவத்தை ஒதுக்கி விடுகிறது.  If one has to do justice and be fair to both பாடல் வெளியீடு என்பதே பொருத்தம்.  (சரி என்று சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.  இது சினிமாவின் உள்ளரசியல் சம்பந்தப்பட்ட விஷயம்.  மொழியின் வடிவத்தில் இன்னது பொருத்தம் என்பதைச் சொல்லிவிட்டேன்.  மற்றதை விட்டுவிடலாம்.  அதை ஆராய வேண்டாம்.)
  1. எதிர்க்கட்சி தலைவர் இணைய தளம் ஒன்றிற்கு/ஒன்றுக்கு பேட்டி அளித்தார் --> இதில் எது சரி ? ஏன் ?

இது எல்லாப் பெயர் சொல்லிலும் இடம்பெறும் இரண்டு வேறுபட்ட வடிவங்கள். வெளிநாட்டுக்கு, வெளிநாட்டிற்கு,|| சொல்லுக்கு, சொல்லிற்கு || கணக்குக்கு, கணக்கிற்கு.... இப்படி இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.

பகுபதம் பார்த்தால் ஒன்றிற்கு=ஒன்று+இன்+கு. ஒன்றுக்கு= ஒன்று+கு.  நாட்டிற்கு=நாடு+இன்+கு, நாட்டுக்கு=நாடு+கு.

இன் என்ற இடைநிலையைச் சேர்க்காமலேயே பொருள் விளங்குகிறது என்றால், சிம்ப்பிள் வடிவம் ஒன்றுக்கு, நாட்டுக்கு, இனத்துக்கு, சொல்லுக்கு, கணக்குக்கு.... இப்படி.  ஒன்றுக்கு என்பது சிம்பிள் வடிவம்.  நேரடியானது. ஒன்றிற்கு, வழக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம்.  (என்னுடைய என்சைக்ளோபீடியா பிரிடானிகா மொழிபெயர்பு இணையாசிரியப் பொறுப்பில் சேர்ந்ததும் நான் செய்த முதல் காரியம், இந்த வேறுபாட்டைச் சுட்டிக் காட்டி, விற்கு, டிற்கு, கிற்கு போன்ற எல்லா வடிவங்களையும் find and replace with வுக்கு, டுக்கு, குக்கு... எட்செட்ரா.  தேவையற்ற இடைநிலை என்பதால் விட்டுவிட்டோம்.  This was a combined editorial decision--Sudha Seshayyan, Madhurabharathi and me.)

இரண்டு வடிவங்களும் புழக்கத்தில் இருந்தாலும் எளிமை கருதி இந்த மாற்றத்தைச் செய்தோம். -விற்கு -திற்கு, -சிற்கு, றிற்கு எல்லாம் தவறு என்பதாலன்று.

Niranjan Bharathi

unread,
Apr 26, 2012, 12:48:30 PM4/26/12
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி ஐயா. 

அடுத்த சந்தேகங்கள் பின்வருமாறு :

1. 

 தூசி , தூசு எது சரி ?  ஏன் ?

2.
உடுத்தி, உடுத்து எது சரி ? ஏன் ?

3.
கோர்த்தான், கோத்தான் எது சரி ? ஏன் ?

4.

சின்னபின்னம், சின்னாபின்னம் எது சரி ? ஏன் ?

அன்புடன்,
நிரஞ்சன் 


2012/4/26 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

Kaviyogi Vedham

unread,
Apr 29, 2012, 12:16:27 AM4/29/12
to santhav...@googlegroups.com
நிரஞ்சன்..நீங்கள் இங்கு சரியா தவறாஎனக் கேட்டாலும் சரியே எனினும், தினமணியிலின்றும் தொடர்ந்து எழுதும் பேராசிரியரின் எது சரி தவறு கட்டுரைகளை வாங்கிப்படித்துப்பயன் பெறலாம் என்பது என் கருத்து.
 யோகியார்

2012/4/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Balasubramanian N.

unread,
May 2, 2012, 4:54:23 PM5/2/12
to santhav...@googlegroups.com

உடு பற்றி ஏற்கெனவே அடியேனும் ஹரியும் ராஜப்பனும் தந்துவிட்டிருக்கிற விளக்கக் குறிப்பின்படி:-

 

உடு = தனக்கு உடையணிவித்துக்கொள்

உடுக்கி(ன்)றான் / உடுக்கி(ன்)றாள் / உடுக்கி(ன்)றது

உடுக்கி(ன்)றார்(கள்) உடுக்கும்

 

உடுப்பான் / உடுப்பாள் / உடுக்கும்

உடுப்பார்(கள்)

 

உடுத்து [வினையெச்சம்: கொடுத்து, விடுத்து, தடுத்து,பழுத்து, என்பன போல்]

உடுத்தாது [-மல்]

உடுக்க=உடுப்பதற்கு

உடுக்கா[து] [-மல்]

 

உடுத்து = பிறருக்கு உடையணிவி, பிறரை உடுக்கச்செய்

உடுத்துகிறான் உடுத்துகிறாள்  உடுத்துகிறது,

உடுத்துகிறார்கள் உடுத்துகி[ன்]றன

உடுத்தினான்  உடுத்தினாள்  உடுத்திற்று

உடுத்தினார்கள், உடுத்தின

உடுத்துவான்  உடுத்துவாள்  உடுத்தும்

உடுத்துவார்[கள்] 

 

உடுத்த=உடுத்துவதற்கு

உடுத்தி [வினையெச்சம் - அணிவித்து என்றவாறு]

உடுத்தாது=உடுத்தாமல்

 

நகுபோலியன்

 



2012/4/29 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Niranjan Bharathi

unread,
May 11, 2012, 8:53:13 AM5/11/12
to santhav...@googlegroups.com
வணக்கம்,

வழக்கம் போல் மேலும் சில சந்தேகங்கள் தோன்றின. 

  • கருப்பு, கறுப்பு இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? இரண்டுமே கருமையைத் தான் குறிக்கின்றனவா ?கருப்பு என்றால் பஞ்சம் என்றும் கருப்பு என்றால் கருமை நிறம் என்றும் அகராதியில் பார்த்தேன். இது சரியா ?
  • காலவரையற்ற , காலவரையறையற்ற இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? 
  • கரும்பு அரவைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று செய்திகளில் படிக்கிறோம். இந்த "அரவை" என்ற சொல்லின் பயன்பாடு சரி தானா ? இல்லை அறவை என்று வர வேண்டுமா ? \
  • விபரம் , விவரம் இரண்டில்  எது சரி ?
  • கோயில் , கோவில் எது சரி ?

நன்றி,
நிரஞ்சன் 






2012/5/3 Balasubramanian N. <n.balasu...@gmail.com>



--
http://www.facebook.com/TamilMattumPesuvom

Balasubramanian N.

unread,
May 11, 2012, 11:42:59 AM5/11/12
to santhav...@googlegroups.com
அரைவை [அரைப்பது],
விபரம் விவரம் என்பதன் மரூஉ, வழக்கில் வந்துவிட்டது, என்ன செய்ய!

நகுபோலியன்
2012/5/11 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

Niranjan Bharathi

unread,
May 11, 2012, 11:53:42 AM5/11/12
to santhav...@googlegroups.com
அறைப்பது என்பது தானே சரி ? இடையின ரகரம் என்பது சரியா ?

2012/5/11 Balasubramanian N. <n.balasu...@gmail.com>



--
http://www.facebook.com/TamilMattumPesuvom

RAJAGOPALAN APPAN

unread,
May 11, 2012, 6:12:43 PM5/11/12
to santhav...@googlegroups.com
 
 
//காலவரையற்ற , காலவரையறையற்ற இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?//
 
கால வரையற்ற என்பதும், கால வரையறையற்ற என்பதும் வேறு வேறு. இரண்டிற்கும், பொதுவாக, காலக்கட்டுப்பாடு இல்லை என்றே பொருள் கொள்கிறோம் என்றாலும், அவற்றுக்கிடையே சிறிது வேறுபாடு உண்டு. முதலது, காலக் கட்டுப்பாடு இல்லாத நிலையையும் (காலக் கட்டுப்பாடு இல்லை என்பதே வகுத்து அறிவிக்கப்பட்ட விதி.); இரண்டாவது, காலக் கட்டுப்பாடு குறித்து எந்த விதியும் வகுத்து அறிவிக்கப்படாத நிலையையும் குறிக்கும்.

அ.ரா

2012/5/11 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

இராம்குமார் முகவை

unread,
May 12, 2012, 7:16:47 AM5/12/12
to santhav...@googlegroups.com
அறைதல் - ஓசை எழும்படி அடித்தல்
அரைத்தல் - அளவிற் குறையுமாறு செய்தல்

கருப்பு - ஒரு நிறத்தின் பெயர்
கறுப்பு - அடர்ந்த நிறம் (Dark color)

கோவில் - கோ + இல் = கோவில் சரி. கோவில் தலைவன் வீடு, அரண்மனை. பக்தி இலக்கிய காலத்தில் தான் இறைவனின் வீடானதாம்.
கோயில் - இலக்கணப்போலி

நன்றி,
முகவை இராம்குமார்.

2012/5/11 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

Hari Krishnan

unread,
May 12, 2012, 10:14:07 AM5/12/12
to santhav...@googlegroups.com


2012/5/12 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>

கருப்பு - ஒரு நிறத்தின் பெயர்
கறுப்பு - அடர்ந்த நிறம் (Dark color)

கறுத்த என்பது குணத்தைக் குறிப்பது.  உள்ளம் கறுத்தல் (கறுவினான் என்று சொல்கிறோமல்லவா?), கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை..... இப்படிப்பட்ட தன்மைகளைக் குறிப்பது வல்லின றகரத்துடன் கூடிய கறுப்பு.

கார் என்ற அடிச்சொல்லிலிருந்து பிறப்பதால், வண்ணத்தின் ஸ்பெல்லிங் கருப்பு.

RAJAGOPALAN APPAN

unread,
May 13, 2012, 9:25:19 PM5/13/12
to santhav...@googlegroups.com
 
//கோர்த்தான், கோத்தான் எது சரி ? ஏன் ?//
 
 
கோர் - கோர்வை - கோர்த்த (கோத்த) - கோர்க்கப்பட்ட - (கோக்கப்பட்ட)

பார் - பார்வை - பார்த்த (பாத்த) - பார்க்கப்பட்ட (பாக்கப்பட்ட).


கோர்த்தான் என்பதே பின்னர் சிதைந்து கோத்தான் ஆகிவிட்டது.இலக்கியங்களீலேயே கோக்க என்ற பயண்பாடு உண்டு.


'மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே' என்று தொடங்குகிற வில்லிபாரதப் பாடலில், மேகலையிலிருந்து உதிர்ந்த முத்துக்களை,
'எடுக்கவோ கோக்கவோ என்றான்'என்று வரும். கர்ணன் செஞ்சோற்றுக்கடன் கழிக்க உறுதியெடுத்துக்கொண்ட இடம்.

அ.ரா

2012/4/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

Hari Krishnan

unread,
May 14, 2012, 12:58:14 AM5/14/12
to santhav...@googlegroups.com


2012/5/14 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

கோர்த்தான் என்பதே பின்னர் சிதைந்து கோத்தான் ஆகிவிட்டது.இலக்கியங்களீலேயே கோக்க என்ற பயண்பாடு உண்டு.


'மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே' என்று தொடங்குகிற வில்லிபாரதப் பாடலில், மேகலையிலிருந்து உதிர்ந்த முத்துக்களை,
'எடுக்கவோ கோக்கவோ என்றான்'என்று வரும். கர்ணன் செஞ்சோற்றுக்கடன் கழிக்க உறுதியெடுத்துக்கொண்ட இடம்.


கோத்தல், கோவை என்பனவற்றின் சிதைவே கோர்த்தல், கோர்வை போன்றவை.  இது குறித்து வேறொரு மடற்குழுவில் சென்ற வாரம்தான் எழுதினேன்.  குறிப்பிட்ட மடல்களைத் தேடி எடுத்துத் தருகிறேன்.

கோர்வை¹ kōrvai

, n. < கோ-. [M. kōrva.] Corr. of கோவை.

என்பது லெக்சிகன் சொல்வது.  http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88&matchtype=exact&display=utf8

Corr. of என்றால் corrupted form of என்பதைக் குறிக்கும்.

இனி எடுக்கவோ கோக்கவோ என்ற பகுதியை

மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க

அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக்

கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்கென் னாருயிரைப்

போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு

என்பது பாரத வெண்பா. 

கோக்கேனோ என்ற சொல்தான் சரியான வடிவம்.  கோர்த்தல் என்ற வடிவத்தில் இலக்கிய ஆட்சி ஏதும் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

Balasubramanian N.

unread,
May 14, 2012, 1:27:24 AM5/14/12
to santhav...@googlegroups.com

அரை’ [to grind]தான் நான் கற்றது [in school] 



2012/5/14 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

devoo

unread,
May 14, 2012, 4:42:47 AM5/14/12
to சந்தவசந்தம்
> கோர்த்தல் என்ற வடிவத்தில் இலக்கிய
> ஆட்சி ஏதும் இருக்கிறதா.....


தேம்பாவணி -

பேர்த்தன பருதி போய்ப் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அறத் தயங்கும் பொன் மணி,
*கோர்த்தன தரளம் மேல் கொழுமும் தோரணம்
ஆர்த்தன முகில் இடை அவிர் வில் மானுமே.


கடு உண்ட எண் இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான்;
கடு உண்ட எண் இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான்.
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் *கோர்த்தான்;
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்த்தான்.


ஆர்த்தன பல்லாண்டு; ஆர்ந்தன உவகை; ஆறு அறுநூற்று மூ ஐம் பூ,
சீர்த்தன மதுவின் பூத்தன, சூசை சேர்த்த கைக் கொடியில் அம் மலரால்
*கோர்த்தன ஆறாறு அணிகளே கடவுட் குளுஞ்சுடர்ப் பதத்து அவை


நெட்டு ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீலப்
பட்டு ஒளிப் பந்தர் பாய்த்தி, பத்தியின் பயிற்றிக் *கோர்த்த
கட்டு ஒளி மணிகள் நாற, கதிர்ப் பகற்கு அஞ்சா மின்மீன்
விட்டு ஒளி பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே

தேவ்

On May 13, 9:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/5/14 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>


>
> > கோர்த்தான் என்பதே பின்னர் சிதைந்து கோத்தான் ஆகிவிட்டது.இலக்கியங்களீலேயே
> > கோக்க என்ற பயண்பாடு உண்டு.
>
> > 'மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே' என்று தொடங்குகிற வில்லிபாரதப் பாடலில்,
> > மேகலையிலிருந்து உதிர்ந்த முத்துக்களை,
> > 'எடுக்கவோ கோக்கவோ என்றான்'என்று வரும். கர்ணன் செஞ்சோற்றுக்கடன் கழிக்க
> > உறுதியெடுத்துக்கொண்ட இடம்.
>
> கோத்தல், கோவை என்பனவற்றின் சிதைவே கோர்த்தல், கோர்வை போன்றவை.  இது குறித்து
> வேறொரு மடற்குழுவில் சென்ற வாரம்தான் எழுதினேன்.  குறிப்பிட்ட மடல்களைத் தேடி
> எடுத்துத் தருகிறேன்.
>

> *கோர்வை¹* kōrvai
>
> , *n*. < கோ-. [M. *kōrva*.] *Corr. of *கோவை.
>
> என்பது லெக்சிகன் சொல்வது.http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamill...

Niranjan Bharathi

unread,
May 14, 2012, 9:26:34 AM5/14/12
to santhav...@googlegroups.com
ஐயா,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
மேலும் சில சந்தேகங்கள்.

பரிட்சை , பரீட்சை எது சரி ?
முதற்கண் வணக்கம் என்பது தவறு , வணக்கம் முதற்கண் என்பதேசரி என்று படித்தேன். இது உண்மையா ?
மெனக்கெட்டு என்பது தவறு. வினை கேட்டு என்பதே சரி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இதற்கு விளக்கம் தர முடியுமா ?

அன்புடன்,
நிரஞ்சன் 

2012/5/14 devoo <rde...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

devoo

unread,
May 14, 2012, 1:38:42 PM5/14/12
to சந்தவசந்தம்
On May 14, 6:26 am, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:

>> பரிட்சை , பரீட்சை எது சரி ? <<

’பரீக்ஷா’ என்பது சங்கத வடிவம்;
தமிழில் இஷ்டப்படி எழுதுவர்.
‘தேர்வு’ என எழுதலாம்.


>>> முதற்கண் வணக்கம் என்பது தவறு <<<

”அனைவருக்கும் முதற்கண் (முதலில்) வணக்கம் தெரிவிக்கிறேன்”
என்பதில் தவறில்லையே .

>>> மெனக்கெட்டு என்பது தவறு. வினை கேட்டு என்பதே சரி என்று கேள்விப்
>>> பட்டிருக்கிறேன்.<<<

வினைகெட்டு சரி

தேவ்


On May 14, 6:26 am, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:

Niranjan Bharathi

unread,
Jun 12, 2012, 8:39:04 AM6/12/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம், 

புதிய தலைமுறை அலைவரிசையில் மொழி அறிவோம் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். 
அதில் தவறான சொல் எது ? சரியான சொல் எது ? என்பதை விளக்கத்துடன் கூற வேண்டும். 

அதில் அடுத்த வாரத்திற்கு சில சொற்களைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் எல்லாச் சொற்களுக்கான விளக்கங்கள் கிடைக்கவில்லை. 

அதற்கு இந்தக் குழுமச் சான்றோரின் உதவி தேவை.  

நான் தயார் செய்திருக்கும் சொற்களை கீழே தந்திருக்கிறேன். இந்த சொல் எப்படி உருவானது என்ற தகவலையும் சொன்னால் அது உண்மையானதாக(Authentic) இருக்கும் என்று நம்புகிறேன். 

அதற்கும் தங்கில் உதவியையே நாடுகிறேன். 

அந்த சொற்கள் இதோ.

1. உத்திரவு - தவறு, உத்தரவு - சரி

இது ஏன் ?   உத்தரவு  என்ற சொல் எப்படி வந்தது ?

தேவநேயப் பாவாணரின் கட்டுரை ஒன்றைப் பார்த்த போது சில விளக்கங்கள் கிடைத்தன. 

உத்தரம் = 1. உயரத்திலுள்ள விட்டம். 2. உயரமான வடதிசை. Skt. uttara. 3. வடவனல் (பிங்.)
உத்தரம் = வினாவிற்குப் பின் தரும் விடை அல்லது மறுமொழி.
உத்தரவு= வேண்டுகோட்குப் பின் தரும் விடையோலை. 

2. புண்ணாக்கு - தவறு  , பிண்ணாக்கு - சரி 

இதற்கு இணையத்தில் ஒரு விளக்கம் கண்டேன்.  இது சரியா ?

"புண்ணாக்கு என்றால் புண் கொடுப்பது என்று பொருள். இங்கு பிண்ணாக்கு- பிண்ணமாக்கு-பிண்ணமாக்கு. பிண்ணம் என்பதற்கு சிறிய பகுதி. இங்கு நாம் பயன் படுத்தும் பிண்ணாக்கு என்பது கோதுமை, நெல் போன்ற சிறு தானியங்களிலிருந்து பிண்ணமாக்கப்பட்ட அதாவது பிரித்தெடுக்கப்பட்ட பொருள் என்றஅர்த்தத்தைத் தரும். அந்தப் பிண்ணாக்கே நாளடைவில் மருவி புண்ணாக்கு என்றானது"

3. கம்மாய் - தவறு, கண்வாய்(கண்மாய் ?) - சரி

இது ஏன் ? கண்வாய் (அ) கண்மாய் என்ற சொல் எப்படி வந்தது ? 

4. சேதி -  தவறு செய்தி - சரி 

இது ஏன் ? இந்த செய்தி என்ற சொல் எப்படி வந்தது ?

5. புட்டு - பிட்டு --> இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?
 
இந்த சொல் எப்படி வந்தது ?

6. வாய்பாடு - தவறு , வாய்ப்பாடு - சரி 

வாய்பாடு என்றால் வாயால் பாடு என்று பொருள். 
வாய்ப்பாடு என்றால் தான் "TABLES" என்று பொருள். 

இந்த விளக்கம் சரி தானே ?

இந்த  சொல் எப்படி வந்தது ?
Reply all
Reply to author
Forward
0 new messages