இவ்விதம் இராமனை மனிதன் என்ற ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் தான்
கவிச்சுவையை அறிய முடியும். இல்லையென்றால், உதாரணத்திற்கு அவன்
அயோமுகிப் படலத்திலும், பிரம்மாத்திரப் படலத்திலும் இலக்குவன் இறந்து
விட்டான் என்றெண்ணிப் புலம்புவது அர்த்தமற்றதாகப் புலப்படும். இது
என்னுடைய எண்ணம். நான் ஓரளவு சந்தித்த , பழகிய இலக்கிய ஆர்வலர்களும்
அவ்வாறே உணர்கிறார்கள், இங்கே.
முதல் ஐயம்: இவ்வெண்ணம், இந்நோக்கு சரி தானா? மற்றுக் கருத்துக்கள் உள்ளனவா?
இரண்டாவது ஐயம். :
மேற்சொன்ன நோக்கு சரிதான் என்றால், ஒரே ஒரு நிகழ்வு இடிக்கிறது, இதில்.
தன்னுடைய கால் துகள் பட்டுக் கல்லிலிருந்து ஒரு பெண் வெளியானதைப் பார்த்த
இராமன் , தன்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கக் கூடும். ? தான் தெய்வத்தன்மை
உடையவன் அமானுஷ்யன் என்பதை உணர்ந்தானா?
விவரம் அறிந்த பெரியோர்கள் விளக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
வரத ராஜன்
சிங்கப்பூர்
HP: 91852063
Email: girijavar...@gmail.com
இதற்கு மேலும் இந்நிகழ்விற்கு விளக்கம் இருக்குமென்று நம்புகிறேன்.
கமபனில் கரை கண்டவர்கள் உளார்கள் . அவர்கள் சொல்வதற்குக் காத்திருக்கின்றேன்.
வரத ராஜன்.
2008/10/6 srinivasan s <vasan...@gmail.com>:
--
Thanks and Regards
Girija
Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com
இவ்விதம் இராமனை மனிதன் என்ற ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் தான்
கவிச்சுவையை அறிய முடியும்.
முதல் ஐயம்: இவ்வெண்ணம், இந்நோக்கு சரி தானா? மற்றுக் கருத்துக்கள் உள்ளனவா?
இரண்டாவது ஐயம். :
மேற்சொன்ன நோக்கு சரிதான் என்றால், ஒரே ஒரு நிகழ்வு இடிக்கிறது, இதில்.
தன்னுடைய கால் துகள் பட்டுக் கல்லிலிருந்து ஒரு பெண் வெளியானதைப் பார்த்த
இராமன் , தன்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கக் கூடும். ? தான் தெய்வத்தன்மை
உடையவன் அமானுஷ்யன் என்பதை உணர்ந்தானா?
வணக்கம். கூடவே எனக்கும் ஒரு சந்தேகம்.இராமன் விடும் அம்புகள் தன் பணியைச் செய்து விட்டு மீண்டும் அம்புறாத்துணிக்கு வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்லிக்கேட்டிருக்கிற்றேன்.
ஆனால் எனது சந்தேகம் மானுஷ்யம்-அமானுஷ்யம் சம்பந்தப்பட்டது.இராமன் தன் திறமையைக் காட்டுவதற்காக் கூறப்படும் செய்தி:: 7 மரா மரங்களை ஊடுருவி இராமபாணம் மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்ததாகச் சொல்கிறார்கள் பிரவசன கர்த்தாக்கள். இது மானுடச் செயலாக எண்ணமுடியவில்லை. அப்படியாயின், இந்த பாணம் தன் பணியைச் செய்து மீண்டும் இராமனிடத்தில் வந்து சேரும் போது தன்னிடம் சில தெய்வீக திறமைகள் இருப்பதை இராமன் உணர்ந்திருக்க மாட்டானா ?
இராவணன் கேட்டிருந்த வரங்களில் , மனிதர்களால் என்பது விட்டுப்பட்டுப்
போயிருந்ததால் - ( மற்றவர்களால் தான் அழிக்கப் படலாகாது என்று வரம்
பெற்றிருந்தான் ) அவதாரமே மனிதன் என்பது தான். ஆக மனிதன் - மனிதன்
மாத்திரமே - என்பதை மறந்தால் , அவதார நோக்கமே பழுதாகிவிடும், அவதார
லட்சியமே நிறைவேறாமல் போய் விடுமோ என்பதாக ஹரிகி சொல்லியிருந்த காரணமே
சரி என்று எனக்குப் படுகிறது.
வரத ராஜன்.
2008/10/14 devoo <rde...@gmail.com>:
--