சந்த வசந்தம் அறிஞர்களின் ஆசிக்காக நான் நேற்று எழுதிய கவிதை இங்கே:
கட்டவண்டி
கட்டவண்டி
ஏறிக்குந்திக் காததூரம் போய்வந்தாலும்
களப்பே இல்லீங்க
- நல்ல
காளமாடு
ரெண்டுபக்கம் கயிறுபோட்டுப் பூட்டிருக்கேன்
கவலே இல்லீங்க.
முட்டிமோதி
முண்டியண்டி மூச்சுவாங்கி நீங்கபோற
மோட்டார் இல்லீங்க
- இதுல
மூஞ்சிவாட்டமில்லாம
முதுகெலும்பு வளையாம
மொதுவாப் போலாங்க!
காஞ்சவெக்கொல்
கட்சுத்துன்னுக் கயனிப்பக்கம் பில்லமேய்ற
காள பாருங்க
- அதொட
காதுகொம்பு
காலுவாலு கயுத்துத்தாளு பாக்க நூறு
கண்பொதாதுங்க!
ஆஞ்சரிஞ்சு
பொரியல்சேஞ்சு ஆக்கிப்போட்ற வீட்டம்மாவ
அம்மோவ்னுதுங்க!
அரிஞ்சதோலு
மிச்சம்மீதி அரிசிகயுநி அவகொடுத்தா
அம்மா(ங்) இஷ்டங்க.
பட்டிக்காட்டுப்
பள்ளம்மேட்ல பயகிப்போன மண்ணுரோட்ல
பாஷ்டா ஓடுங்க - வண்டி
பத்துமூட்ட
நெல்லுபோட்டுப் பத்துப்பேரு ஏறினாலும்
பாங்காப் போவுங்க.
சட்டிதூக்ற
பொம்பளதஞ் சாட்டக்காரப் புருஷனோட
சல்லுனு போனா - சும்மா
சாஞ்சுசாஞ்சு
ஓடையில சாயங்கால நேரத்துல
சாலிதாம் போங்க!
காத்துப்போயிப்
பஞ்சராயிக் கயண்டுபோயிப் பாதிரோட்ல
கயுத்தறுக்காது - நம்ம
காளரெண்டும்
பாத்துப்போவும் கண்ணசந்து போவமோன்னு
கவல வராது.
ஏத்திவந்த மக்களையே
எறக்கிவிட்டுத் தள்ளச்சொல்லி
எரிச்சல் தராது - நமக்கு
எதிரவரும்
வண்டிக்காரன் இருண்டுபோக லைட்டடிச்சு
எடஞ்சல் பண்ணாது.
மண்ண நம்பி
மயயநம்பி மாட்ட நம்ப்ற உயவனுக்கு
மரம் உசுருங்க - அங்க
மாடிவீடு
கட்டிக்கட்டி மண்ணமூடி மரத்தவெட்டி
மாச்சுப்புட்டீங்க.
கண்ணப்போல
மண்ணவச்சுக் காத்த எம மரம், அதுங்க
கடவுளுதாங்க! - அது
கட்டவண்டி ஓடவாயும்
காருவண்டி ஓடச்சாவும்
கருத்(து) இதுதாங்க!
நாய்க்குக்கல்ல
சோடிசேத்து நல்லமாட்டச் சூடுபோட்டு
நன்னிமறந்தோம் - நம்ம
நாலுபக்கம்
நல்லாருந்தா நானுநீயும் நல்லாருப்போம்
நாயந்தானங்க?
வாய்க்கயின்னா மோடுபள்ளம் வரவுசெலவு ராப்பவலு
வந்துதான் தீரும் -
கட்ட
வண்டிப்பாத பாத்து
நல்ல வாய்க்கப்பாடம் கத்துக்கலாம்
வாங்க ஏறுங்க!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
என் அருகே உள்ள நண்பர்கள் சில வார்த்தைகள் புரியவில்லை என்றார்கள். அதற்காகச் சிறிய விளக்கங்கள் இங்கே:
கட்டவண்டி
காஞ்சவெக்கொல் கட்சுத்துன்னுக் கயனிப்பக்கம் பில்லமேய்ற
[வைக்கோல், கடிச்சுத் துன்னு, கழனிப்பக்கம், புல்ல மேயுற]
அரிஞ்சதோலு மிச்சம்மீதி அரிசிகயுநி அவகொடுத்தா
[அரிசி கழுநீர்]
காத்துப்போயிப் பஞ்சராயிக் கயண்டுபோயிப் பாதிரோட்ல
கயுத்தறுக்காது - நம்ம
[கழுத்த]
மண்ண நம்பி மயயநம்பி மாட்ட நம்ப்ற உயவனுக்கு
[மழைய நம்பி]
கண்ணப்போல மண்ணவச்சுக் காத்த எம மரம், அதுங்க
[எம = இமை]
கட்டவண்டி ஓடவாயும் காருவண்டி ஓடச்சாவும்
[வாழும்]
நாய்க்குக்கல்ல சோடிசேத்து நல்லமாட்டச் சூடுபோட்டு
[நாயக்கண்டா கல்லக்காணோம்; நல்லமாட்டுக்கு ஒரு சூடு]
வாய்க்கயின்னா மோடுபள்ளம் வரவுசெலவு ராப்பவலு
[வாழ்க்கை]
வண்டிப்பாத பாத்து நல்ல வாய்க்கப்பாடம் கத்துக்கலாம்
[வாழ்க்கைப்பாடம் ]
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
என் புரிதலும்,அனுபவப்பாடமும் என்ன என்றால் அப்படியே கிராமத்தானா மாற வேண்டாம் என்பதே.
கட்டவண்டி
கட்டவண்டி
ஏறிக்குந்திக் காததூரம் போய்வந்தாலும்
களப்பே இல்லீங்க
- நல்ல
காளமாடு
ரெண்டுபக்கம் கயிறுபோட்டுப் பூட்டிருக்கேன்
கவலை இல்லீங்க.
முட்டிமோதி
முண்டியண்டி மூச்சுவாங்கி நீங்கபோற
மோட்டார் இல்லீங்க
- இதுல
மூஞ்சிவாட்டமில்லாம
முதுகெலும்பு வளையாம
மொதுவாப் போலாங்க!
காஞ்ச வைக்கோல் கடிச்சுத்துன்னுக் கழனிப்பக்கம் புல்ல மேயிற
காள பாருங்க
- அதொட
காதுகொம்பு
காலுவாலு கழுத்துத்தாளு பார்க்க நூறு
கண்போதாதுங்க!
ஆஞ்(சு) அரிஞ்சு
பொரியல் செஞ்சு ஆக்கிப்போடுற வீட்டம்மாவ
அம்மோவ்னுதுங்க! - அப்போ
அரிஞ்சதோலு
மிச்சம்மீதி அரிசிகழுநி அவகொடுத்தா
அம்மா(ங்) இஷ்டங்க.
பட்டிக்காட்டுப் பள்ளம்மேட்டுல பழகிப்போன மண்ணுரோட்டுல
பாஷ்டா ஓடுங்க - வண்டி
பத்துமூட்ட
நெல்லுபோட்டுப் பத்துப்பேரு ஏறினாலும்
பாங்காப் போவுங்க.
சட்டிதூக்குற பொம்பளதன் சாட்டக்காரப் புருஷனோட
சல்லுனு போனா - சும்மா
சாஞ்சுசாஞ்சு
ஓடையில சாயங்கால நேரத்துல
சாலிதாம் போங்க!
காத்துப்போயிப்
பஞ்சராயிக் கழண்டுபோயிப் பாதிரோட்டுல
கழுத்தறுக்காது - நம்ம
காளரெண்டும்
பாத்துப்போகும், கண்ணசந்து போவமோன்னு
கவலை வராது.
ஏத்திவந்த மக்களையே
எறக்கிவிட்டுத் தள்ளச்சொல்லி
எரிச்சல் தராது - நமக்கு
எதிரவரும்
வண்டிக்காரன் இருண்டுபோக லைட்டடிச்சு
எடஞ்சல் பண்ணாது.
மண்ண நம்பி மழையநம்பி மாட்ட நம்புற உழவனுக்கு
மரம் உசுருங்க - அங்கே
மாடிவீடு
கட்டிக்கட்டி மண்ணமூடி மரத்தவெட்டி
மாச்சுப்புட்டீங்க.
கண்ணப்போல மண்ணவச்சுக் காக்கும்இமை மரம், அதுங்க
கடவுளுதாங்க! - அது
கட்டவண்டி ஓடவாழும் காருவண்டி ஓடச்சாவும்
கருத்(து) இதுதாங்க!
நாய்க்குக் கல்லைச் சோடிசேர்த்து நல்லமாட்டைச் சூடுபோட்டு
நன்றி மறந்தோம் - நம்ம
நாலுபக்கம்
நல்லாருந்தா நானுநீயும் நல்லாருப்போம்
நாயந்தானங்க?
வாழ்க்கையின்னா மோடுபள்ளம் வரவுசெலவு ராப்பகலு
வந்துதான் தீரும் -
கட்ட
வண்டிப்பாதை பாத்து நல்ல வாழ்க்கைப்பாடம் கத்துக்கலாம்
வாங்க ஏறுங்க!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta