Fwd: பிரதோஷப் பாடல் (கோபால்)

25 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jan 16, 2026, 3:59:21 AMJan 16
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]

[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]

அடியவர் திருவடி தொழும் வரம்

கலைகளி னுதயமு னடியிடு சதிநடை கனகச பையினர சானவனே!
……கடையிடை முதலென உயர்தமி ழறிவவை களியொடு நிறுவிய கூடலனே
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமி சையமரு மோதவசீ!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)

நவையறு மடியவ ருனதடி அனுதின(ம்) நனிபர விசைதனி லாழ்பவனே!
……நகையுதி ருனமுக மலரென மலரவு(ம்) நலவள மளவற ஈபவனே!
சிவையொடு மகவொடு கவினொடு கனிவொடு திமிலெழு பரியம ரீச்சுரனே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(2)

கழுதொடு நடமிட வுடலெரி சுடுபொடி தடவிய கவினுறு மேனியனே!
……களமதி லலைதரு கொடுவிட முணவரு கறைதனை அணியென ஏற்றவனே!
செழுமடர் சடைதனி லொருநதி யரைமதி செறிபனி யொடுதண னாயவனே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(3)

புரமெரி சுடுநகை புரிபவ சுரரடை புரவல எளியவர் காவலனே!
……புலியுரி அரையணி குழையிரு செவியணி புயமதி லரவணி யோகியனே!
சிரமுன தடிமல ரினிலிட நினைபவர் சிரமமு நிழலற ஓடிடுமே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(4)

உடலிது மடிவரை உனைநினை இதயமு முனதொளி யுணரவு(ம்) நீயருளாய்!
……உலகிதி லறநெறி நிலைபெற வெளியவ ருயரிய வளமுற ஆணையிடாய்!
திடமன மளிகுண முனதரு மடியவர் திருவடி தொழுவர(ம்) நீதருவாய்!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(5)
•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:

கலைகளின் உதயம் உன் அடி இடு சதி நடை! கனக சபையின் அரசானவனே!
……கடை இடை முதல் என உயர் தமிழ் அறிவு அவை களியொடு நிறுவிய கூடலனே!
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமிசை அமரும் ஓ தவசீ!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)

[சதி நடை = நடனச் சதியும் நடையும்; கூடலன் = மதுரைக்கு உரியவன்; சிலை = வில் (பினாகம்); மழு = கோடரி; தழல் = தீ; தவசீ = தபஸ்வீ]

நவை அறும் அடியவர் உனது அடி அனுதினம் நனி பரவு இசைதனில் ஆழ்பவனே!
……நகை உதிர் உன முகம் அலரென மலரவும், நலவளம் அளவு அற ஈபவனே!
சிவையொடு மகவொடு கவினொடு கனிவொடு திமில் எழு பரி அமர் ஈச்சுரனே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(2)

[நவை அறும் = குற்றமற்ற; நனி பரவு = நன்றாகப் புகழ்கின்ற; அலர் என = மலர் போல; கவின் = அழகு; திமில் எழு பரி = காளை மாடு]

கழுதொடு நடமிட உடல் எரி சுடு பொடி தடவிய கவின் உறு மேனியனே!
……களம் அதில் அலை தரு கொடு விடம் உண வரு கறைதனை அணி என ஏற்றவனே!
செழும் அடர் சடைதனில். ஒரு நதி அரை மதி செறி பனியொடு தணன் ஆயவனே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(3)

[கழுது = பேய்; களம் = கழுத்து; அலை = கடல்; செறி = மிகுந்த: தணன் = தண்ணன்/குளிர்ந்தவன்]

புரம் எரி சுடு நகை புரிபவ! சுரர் அடை புரவல! எளியவர் காவலனே!
……புலி உரி அரை அணி, குழை இரு செவி அணி, புயமதில்்அரவு அணி யோகியனே!
சிரம் உனது அடி மலரினில் இட நினைபவர் சிரமமும் நிழல் அற ஓடிடுமே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(4)

உடல் இது மடி வரை உனை நினை இதயம், உனது ஒளி உணரவும் நீ அருளாய்!
……உலகு இதில் அறநெறி நிலை பெற, எளியவர் உயரிய வளம் உற ஆணையிடாய்!
திடமனம், அளி குணம், உனது அரும் அடியவர் திருவடி தொழு வரம் நீ தருவாய்!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(5)

[மடி வரை = அழியும் வரை; அளி குணம் = அள்ளிக் கொடுக்கும் குணம்]

நல்வாழ்த்துகள்
கோபால்
[16/01/2026]
सर्वे जना: सुखिनो भवन्तु ।

Siva Siva

unread,
Jan 16, 2026, 5:19:12 AMJan 16
to santhav...@googlegroups.com
Nice.

/அரும் அடியவர் /
You may want to double check such usage.
Usually, ஆர் before words starting in vowels.

V. Subramanian

On Fri, Jan 16, 2026 at 3:59 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]

[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]

அடியவர் திருவடி தொழும் வரம்



GOPAL Vis

unread,
Jan 16, 2026, 10:11:45 AMJan 16
to santhav...@googlegroups.com
Nice.
Thanks. 

/அரும் அடியவர் /
You may want to double check such usage.
Usually, ஆர் before words starting in vowels.
Oh, I am learning it only now. Thank you.  
Gopal. 

Swaminathan Sankaran

unread,
Jan 16, 2026, 3:32:38 PMJan 16
to santhav...@googlegroups.com
கடினமான (எனக்கு) சந்தத்தில் அருமையான படைப்பு.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttWcT1VdT1ePEPOAuTuRRvVWGQitBF4Wb3iGspc2BhphA%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

GOPAL Vis

unread,
Jan 16, 2026, 7:42:36 PMJan 16
to santhav...@googlegroups.com
பக்க நன்றி. 
கோபால்

On Sat, Jan 17, 2026 at 2:02 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
கடினமான (எனக்கு) சந்தத்தில் அருமையான படைப்பு.



On Fri, Jan 16, 2026 at 1:59 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]

[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]

அடியவர் திருவடி தொழும் வரம்

கலைகளி னுதயமு னடியிடு சதிநடை கனகச பையினர சானவனே!
……கடையிடை முதலென உயர்தமி ழறிவவை களியொடு நிறுவிய கூடலனே
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமி சையமரு மோதவசீ!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)

...........................

Ram Ramakrishnan

unread,
Jan 16, 2026, 8:20:23 PMJan 16
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு கோபால்.

சிறு சந்தேகம். கண்ணிகளில் நான்கடிகளிலும் ஓர் எதுகை வராமல் ஏழுசீர் விருத்தம் அமையுமா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 16, 2026, at 19:42, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:



GOPAL Vis

unread,
Jan 16, 2026, 11:59:13 PMJan 16
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது சரியே. 14 சீர் விருத்தமெனில் இரண்டடி விருத்தமாகி விடும். 
இதற்குத் தக்க பெயர் அறிஞர்கள் சொல்வார்கள். காத்திருப்பேன். நன்றி 
கோபால். 

--

Siva Siva

unread,
Jan 17, 2026, 6:15:20 AMJan 17
to santhav...@googlegroups.com
14 சீர் ஈரடிப் பாடல்களாகக் கருதுவதில் தடை உண்டா?


V. Subramanian

GOPAL Vis

unread,
Jan 17, 2026, 6:39:12 AMJan 17
to santhav...@googlegroups.com
14 சீர் ஈரடிப் பாடல்களாகக் கருதுவதில் தடை உண்டா?
இதற்காகவே காத்திருந்தேன். தங்கள் வினா அதைப் 14 சீர் ஈரடிப் பாடல் என்று உறுதி செய்கிறது. மிக்க நன்றி.
திரு ராம்கிராம் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன்
கோபால்.

இமயவரம்பன்

unread,
Jan 17, 2026, 7:35:46 AMJan 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தாளமிட்டுப் பாடவைக்கும் சந்தப் பாக்கள் சாலவும் அருமை!

Siva Siva

unread,
Jan 17, 2026, 7:46:21 AMJan 17
to santhav...@googlegroups.com
The rhythm of this set of Gopal's songs is somewhat similar to mahisasura mardhini sthothram.


V. Subramanian

GOPAL Vis

unread,
Jan 17, 2026, 8:49:21 AMJan 17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 

--

GOPAL Vis

unread,
Jan 17, 2026, 8:57:26 AMJan 17
to santhav...@googlegroups.com
Yes. In fact, I had the rhythm of ayigiri nandini .. in mind while writing the common (4th) line,
which was written before the others. 
gopal

--

GOPAL Vis

unread,
6:14 AM (11 hours ago) 6:14 AM
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [16 மார்ச் 2026]
[கலிவெண்பா]

கட்டைக் கடந்த கனலே உனதெல்லை
எட்ட முயன்ற இருவர்க்கும் - கிட்டாப்
பரமநின் மேனி பகிர்ந்துன் இடத்தைத்
தரவே உகந்தாயெம் தாய்க்கு! - சிரமேல்
மதியின் பிறையும் மலர்க்கொன் றையுமோர்
நதியும் நிலவிட நஞ்சு - பதியும்
மிடறு மணிபோல் மிளிர நுதற்கண்
சுடரத் தவிர்த்துத் துயிலில் - தொடரத்
தழலும் துதிமுத் தளமார் படையும்
உழலும் பணியார் உரமும் - கழலில்
சதியோ(டு) ஒலிசெய் சலங்கைச் சரமும்
விதியார் இசையில் விளைசங் - கதியோ(டு)
உனநட் டமதில் நழுவா உரியும் 
இனனம் புலியும் இருநீள் விழியா - மினவுன்
கருணை வெளமோ கரையற் றபடிப்
பெருகப் பெறுவர் வளமே - திருமுன் 
தவமாற் றியவர் தவறாற் றியவர்
எவரும் பெறுவர் இரவா துவரம்!
அறியா மையிருள் அகலச் சிவமே
செறிவார் ஒளியின் திரு!!

[நுதற்கண் = நெற்றிக் கண்; துதி முத்தளம் ஆர் படை = கூரிய மூன்று இதழ்கள் கொண்ட திரிசூலம்; உழலும் பணியார் உரம் = பாம்பு திரியும் மார்பு; நட்டம் = நடனம்; இனன் அம்புலியும் = சூரியனும் சந்திரனும்]


நல்வாழ்த்துகள் 
கோபால்
[16/03:2026]

On Sat, Feb 14, 2026 at 10:07 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் [14 பிப்ரவரி 2026]
வண்ணச் சந்தம் (142)
[தத்தன தத்தன தனதான]

நற்றமிழ் அருள்க!

முப்புர நக்கலி லெரிதீர
……முக்கண அக்கணி திரிசூல

அப்பொ(டு)அ ரைப்பிறை மதிசூடி
……அக்கினி சொற்றுடி பிடியோகி

ஒப்பறு பொற்புடை உமைபாக
……உக்கிர நச்சர வணிமார்ப

செப்பிட நற்றமி ழருளாயே
……சிற்பர நர்த்தக பெருமானே!

•~•~•~•~•~•~•~•~•
சொற்பிரிவு; பொருள்

முப்புரம் நக்கலில் எரி தீர
……முக்கண அக்கு அணி திரிசூல
[நக்கல் = சிரித்தல்; அக்கு அணி = எலும்பு (மாலை) அணிந்த]

அப்பொடு அரைப் பிறை மதி சூடி
……அக்கினி சொல் துடி பிடி யோகி
[அப்பு = நீர்; சொல் துடி = சொற்களை உதிர்க்கும் உடுக்கை]

ஒப்பு அறு பொற்பு உடை உமை பாக
……உக்கிர நச்சரவு அணி மார்ப
[பொற்பு உடை = பெருமை வாய்ந்த; உக்கிர = கொடிய; நச்சரவு = விடப் பாம்பு]

செப்பிட நற்றமிழ் அருளாயே
……சிற்பர நர்த்தக பெருமானே!
[செப்பிட = சொல்ல/புகழ; நர்த்தக = நடனமாடுபவனே!]


நல்வாழ்த்துகள் 
கோபால் 
[14/02/2026]


On Fri, Jan 30, 2026 at 6:34 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் [30 ஜனவரி 2026]
வண்ணச் சந்தம் (139)
[தான தந்தன தந்தன தந்தன 
……தான தந்தன தந்தன தந்தன
……தான தந்தன தந்தன தந்தன தனதான]

சித் அம்பரம்!

தோடு மங்குழை யுஞ்சடை யும்பொலி
……சோம னின்கலை யும்பணி யுங்கொடு

.........".........................

Siva Siva

unread,
8:52 AM (8 hours ago) 8:52 AM
to santhav...@googlegroups.com
/  மதியின் பிறையும் /

பிறை = ?

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
9:35 AM (8 hours ago) 9:35 AM
to santhav...@googlegroups.com
மதி - சந்திரன்., பிறை - தேய்ந்த நிலையிலுள்ள அரைவட்டம் என்று பொருள் கொள்ளலாமோ?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
9:36 AM (8 hours ago) 9:36 AM
to santhav...@googlegroups.com
மிக அருமையான் கலிவெண்பா, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
9:54 AM (7 hours ago) 9:54 AM
to சந்தவசந்தம்
"நிறைநீர நீரவர் கேண்மை ; பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு "

Siva Siva

unread,
10:12 AM (7 hours ago) 10:12 AM
to santhav...@googlegroups.com
Thanks for that kuRal 782 reference.
When I looked up the meaning, it seems there are 2 phrases - and the piRai is in one and madhi is in the other.

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

பரிமேலழகர் விளக்கம்
நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; 
பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம்.

V. Subramanian

GOPAL Vis

unread,
11:15 AM (6 hours ago) 11:15 AM
to santhav...@googlegroups.com
பிறை = ?
உங்கள் கேள்வியால் பிறை என்பது மதிக்கு மட்டுமே உரியது என்பது புலப்படுகிறது. 
மதியின் முழுமையற்ற ஒரு நிலையே பிறை. ஒரு கலை என்றும் குறிப்பிடலாம்.
பிறை அதன் வடிவை மட்டும் சுட்டும் சொல்லாகப் பாடலில் அமைந்தது
மதியின் கலையும் என்று திருத்திக் கொள்கிறேன். நன்றி. 
கோபால். 

GOPAL Vis

unread,
11:22 AM (6 hours ago) 11:22 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம். 
கோபால். 

On Mon, Mar 16, 2026 at 7:06 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமையான் கலிவெண்பா, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Mon, Mar 16, 2026 at 6:14 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் [16 மார்ச் 2026]
[கலிவெண்பா]

கட்டைக் கடந்த கனலே உனதெல்லை
எட்ட முயன்ற இருவர்க்கும் - கிட்டாப்
பரமநின் மேனி பகிர்ந்துன் இடத்தைத்
தரவே உகந்தாயெம் தாய்க்கு! - சிரமேல்
மதியின் பிறையும் மலர்க்கொன் றையுமோர்
நதியும் நிலவிட நஞ்சு - பதியும்
.....


……
Reply all
Reply to author
Forward
0 new messages