--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
*************
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சிங்காசனம் -1
கூடுமுயிர் ஓடும்வரை ஓடுமிருகாலும் நடை
போடும் நடம் காணுமே நிதம்
தேடும்விழி மூடும்வரை தேகம்சுடும் நாளுமிசை
பாடிமனம் ஆடுமேசுகம்
நாடுமினிப் போதும்சுடு காடுமுன தாகுமெனப்
போடும்விதி மாறுமே கணம்
ஓடுமுயிர் கூடுமுடல் சூடும்எரி தீயிடையே
கூடுமெனப் போகுமே வானம்
நாடும்மகிழ் வோடுநடை போடுமெவர் வாழ்வில்பெருங்
கேடுமொரு வேளைவரும்கொள்
ஊடும் அதில் துன்பமெமைத் தேடும்வரும் சேருமதன்
பாடும்பெரும் பாடெனவே காண்
சூடும்அனல் தீண்டுமெனத் தீமைமன தோடும்பல
காயமதை ஆக்குமே உளம்
பீடும்பிணி யாகும் அதில்மூடும் இருள் கூடும் ஒளி
போயும் படு நோவுகள் எழும்
நாடுமதை யாளுமொரு நல்லரசன் ஆனவனின்
தீரம் பலவீன மாவதோ
காடும் அதில் வாழ்மிருகம் காணும்பெருங் கோரமுகம்
காவலனின் தோற்றமாவதோ
வீடும் மனை மக்களிவர் வேண்டுமுயிர் காப்பதொன்றே
வேந்தனவன் வேலையல்லவோ
கேடும் கொலை துன்பமெனக் கீழ்விலங்கென் றானவனை
கொற்றவனாய் காணல் நீதியோ
1. இரவின் மடியில்
மணிவிழி புரவியின் சிறுநடை பழகிடு
மதனுடை யசைவுதனில்
அணியெனும் நினைவுகள் மனமதி லெழவொரு
அதிதுயர் நிலைகொண்டாள்
தணிவது இலையென சடசட ஒலியெழத்
திரண்டது மழைமுகில் வான்
துணிவினை யெடுமனம் திகழ்ந்தது பொலிவொடு
துயரெனும் கனம் பெறினும்
விளைந்திடு இருளெனும் வியன்தரு கருமையும்
விறுவிறு எனக்கவிய
குழைந்திடு குளிர்மையும் குலவிட உடலிடை
குளுகுளு எனுமுணர்வும்
வளைந்திடும் தெருவினில் விரைந்திடும் கணமதில்
வருவது பெருமழையாம்
உழைந்திடத் துயரமும் உளமதில் மெதுவெழ
எதிரினில் குடிகண்டாள்
இடியுடன் புயலெழும் இறுகிய கருமையில்
இயல்புற மனமஞ்சி
கொடிதெனும் தனிமையும் கொளுமனம் வெருகிட
குடிசையில் வருமிரவை
விடியலின் வரையங்கு விடுவது றிவென
விரைந்திட மனம் கருதிப்
படிமலர் நிறையிரு பகுதியில் குதிரையும்
பணிவுற நடைசெய்தாள்
அரவமும் சிலஎழில் அசைவுறு மலரிடை
அமைதியில் நெளிவதையும்
தரதர எனத்தொலை தனில்விழு அருவியின்
துளிதெறி யொலியிடையே
புரவியின் அசைவினில் பிறந்திடு மொலிசெவி
புகுந்திடச் சிறுவயதோர்
சரசர எனஉளம் சிறுபயம் மருவிட
சடுதியில் கலைந்தனர் காண்
மரமதின் மறைவினில் வருபவர் எவரென
மலர்முகம் துயரறவும்
கரமதை உயர்வினில் விடைதரும்குறியென
கனிவுடன் அசைவுசெய்தார்
வரமிடும் முகிலிடை திரியெழிற் தேவதை
வருவது புவியெனவே
உரமெடு திருமுக ஒளியுற மணிவிழி
எழில் தனில் வெளிநடந்தார்
மெலச்சிறு குடிசைகள் பரவிய திசையினில்
மறுத்திடு மனதுடனே
பலயிடி பொலிந்திடும் பசுமைகொள் முகில்களும்
பதுமையே கவனமென
நிலமிசை பெருந்துயர் நினையடை வதுவென
நிகழ்வுகள் எதிரொலிக்க
குலமகள் விதிகண்டு பிடிபிடிபிடியென
கொடிதுகொண் டுறுமியதோ?
(வளரும்)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ
ஐயா தங்கள் கவிதைக்கு நான் அடிமை. என்னே அழகு! உள்ளம் பூரிப்பில் தவிக்கிறது. வாழ்க வாழ்க வாழ்க!கோடி ஆண்டுகள் வாழ்க! (என்னை குறித்து வரும் கருத்துக்காக அல்ல.உண்மையாகவே எழுதுகிறேன்0
என் மகளே, ஏது சோகம்?
தேகமதில் நீதுடித்துச் சோகங் கொள்வதென்ன
தேசழிந்த தாய்விசும்பித் தோன்றுவதென் மகளே
நாகமொன்று சீறுவதாய் நேரும்பெருங் கோபம்
நீயெடுத்த தேன்மகளே நெஞ்சில் நிறை சோகம்
தாகங் கொண்ட தேதுவெனத் தண்ணிலவே கூறாய்
தந்துனையே சந்தணமாய் தண்மையுறச் செய்வேன்
ஆகவென்ன செய்வதிடுவேன் அன்புமனம் காணும்
ஆனந்தமும் வந்திடவே ஆணையிடு மகளே
மேகமதிற் பாரொளிருந் தாரகைகள் பொன்னா
மின்னுமவை நான்பறித்து மாலை செய்து தரவா
ஏகமதில் வாசமெழ யில்லையெனிற் காற்றில்
ஏறிக் கடல்தாண்டி மலை உச்சிமலர் கொளவா
தாகமெனிற் தேடிச்சுவை தேன்கனியின் சாறு
தாங்குமெழிற் கிண்ணமிட்டு தின்னவென்று தரவா
மேகம்விடத் தண்ணிலவை மெல்ல நீருள்வைத்து
மென்விரலால் தொட்டிடவே என்மகளே செயவா
கத்துங்கடல் ஆர்ப்பரித்துக் காணுமதில் ஓடும்
கரையெழுந்து விழு மலையால் கால்கள் ஈரமிடவா
சத்தமிட்டுக் கூடுமெழிற் சோலைமரக் கிளையில்
சேர்ந்தயினக் குருவிகளைச் சுற்றியாட விடவா
மெத்தையெனப் பஞ்சுமுகில் பிய்த்தணைகள்கட்டி
மெல்லவுந்தன் மேனிதொட்டு மீதுறங்க விடவா
முத்தமிட ஆழ்கடலில் மின்னுமொளி சந்திர
மங்குமெழிற் சூழ்நிலையில் மடியுறங்க விடவா
புத்திரியே பள்ளியிலே பல்கலைகள் கற்றுப்
பேர்புகழிற் தேவதைகள் போற்றும் வகைசெயவா
சித்தமெல்லாம் அற்புதமே செங்கரும்பில் சிந்தும்
சாற்றினிலு மில்லையெனும் தேனினிமை தரவா
சத்தமிட்டு நீசிரித்தால் சிந்தனை யானந்தம்
சந்தமிடும் செந்தமிழென் பொங்குகவி தரவா
அத்தனையோர் அன்புளமே ஆகிடும்வானுதயம்
ஆதவனின் கதிரெனவே என்று மொளி தரவா
மெத்தையெனும் மேகங்களின் மெல்லியதோர் ஓட்டம்
மேலெழுந்து வான்பறந்த பட்சிகளின் கூட்டம்
முத்தமிட மலைமுகட்டை மேகம்வந்துகூடும்
முட்டிவழிந் தோடும் நதி மெலச்சிணுங்கி வீழும்
சத்தமிடுங் குயிலினிசை சலசலக்கும் பொழில்நீர்
சாரல்தரும் மழைவிழுந்து சிலுசிலுக்கும் இலைகள்
அத்தனையும் கொள்ளும் சுகம் அன்புவழிப் பெண்ணே
அட அடடா மெய்மறக்க அள்ளிநிதம் தருவேன்
வேதனை மட்டுமே சொந்தங்க ளாவது
ஏனடிநீயும் சொல்லாய் கிளியே
வெந்தபுண் ணில்மீண்டும் நொந்துகொள் ளும்விதம்
தந்ததுமேனிப் பொல்லா விதியே
செந்தமிழ் மாந்தர்சு தந்திரம் எண்ணிடச்
செல்வதுதூர மென்றாம் கிலியே
எந்தன்குல மென்று மின்னல டைவதி
லின்பங் கொண்டாடு வதேன் உலகே
வந்தவர் போவதும் சென்றவர் மீள்வதும்
உண்டென்றுசொல் லுவையோ கிளியே
அந்த வகையினில் சென்றநம் சொந்தமும்
வந்துபிறப்ப துண்டோ இனியே
சுந்தர மைந்தரும் செவ்விழி மாதரும்
செந்தமிழ்மீது கொண்டோர் அனலே
சந்தண மாமரம் வெந்தது போயிந்த
சொந்தமுயிர் கொள்ளுமோ துளிரே
அந்தி பகலெந்த நேரமும் சிந்தனை
கொண்டசு தந்திரவாழ் வினையே
வந்திட எண்ணமும் கொண்டிங்கே யேங்குது
வந்தொரு நீதி சொல்லாய் எமையே
சந்திரன் சூரியன் நின்றுலாவும் வெளி
கொண்டது போற்சுகங் காண் உலகே
தந்துவிடுதலை கொள்ளு மின்பம் விட்டு
எங்களினம் கொல்வ தேன் தனியே
நிந்தனை விட்டுளம் நேர்மையைக் கொண்டிவர்
நீதிவழி செல்வ ரோ கிளியே
பைந்தமிழ் கொன்றிடும் பாவியர் எம்மிடை
பற்றுதல் கொள்ளுவரோ பொய்யிதே
வெந்தவர் சாம்பலில் வீரம் முளைத்திட
வேகமுடன் நடை கொள் மகனே
அந்தர வானிடை நீந்தும் பொருளென
ஆனவாழ் வின்றிமெய் வெல்லும் தமிழே !
n Mar 11, 11:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> Due to the boxbe issue that some members had, this thread had got split as
> a new thread with extra * * at the end of subject line.
> So, please continue your future posts in this original thread to keep
> continuity. (Your recent post was in the other thread with * in the subject
> line).
>
> 2013/3/8 kirikasan <kanara...@gmail.com>
நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்
கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே - இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு
அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே
தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு - இவை
அல்லதென்றாகியும் மற்றவர் போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு
****************
ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
சொத்தில்லை பாரம்பரியம்
வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வா ழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர்
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
முன்னெழுந்தார் இவர் வீரம்
பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும்
காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
வெற்றிவரை தொடரட்டும்
செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
சந்தண மார்பெடு தீரம் கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
புத்தொளி காணுமோர் தாகம்
இது ஏற்கனவே எழுத்தப்பட்டது . இப்போது கலத்தோடு ஒத்துபோகிறது
அன்பு முழக்கம்
தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ
முத்தி விசர்பிடித் துச்சி மரத்தினில்
பித்தம் பிடித்தவரும் - நின்று
நித்தமும் பெண்வர பொத்தென வீழ்ந்தவர்
நெஞ்சைக் கிழிப்பதுவும்
கத்திக் குரலிட்டுக் காடுறை பேயெனச்
சித்த மிழப்பதுவும் - இவை
உத்தம புத்தனும் போதி மரத்திடை
ஓதிய போதனையோ
குட்டிப் புழுதன்னும் தொட்டவர் கையினில்
கொட்டும் மயிர்கள் குத்தும் - அவை
பட்டுக் கடித்திட ரத்தச் சிவப்பிடும்
மொத்தம்வலி எடுக்கும்
கொட்டி விஷமதைப் புற்றுக் கறையானும்
கொள்ளி எறும்பதுவும் - அதை
முட்டி விட்டால்முழு மூச்சுடனே உயிர்
விட்டும் எதிர்த்து நிற்கும்
எட்டு அடிவளர் எம்மவர் இன்றுமே
தொட்டுக் கெடுத்தவனை - புது
பட்டுவிரிப்புடன் பஞ்சணைதூங்கிட
பாதம் பிடித்திருப்பர்
கட்டிய கைகளும் காலும்பிணைத்திட
சுட்டுக் கொல்லுமவனை - உள்ள
சட்டம் நெருங்கிட விட்டுவிடாதவர்
ஒட்டி உதவிசெய்வர்
சட்டம் குருடதன் கண்ணில் கருந்துணி
கட்டிவிட்ட துலகு - கரம்
தொட்டுமே அந்தகர் சொல்லென யானையை
விட்டது போலிருக்கு
முற்று மிருட்டறை மூடிக் கருமைக்குள்
கட்டியெமை யிருத்தி - தனி
தொட்டிவர் நீதியைச் சொல்லென கேட்டிட
சுத்தம் எது இருக்கு?
புற்றில் கரம்விடு, பூக்கள் பறித்திடப்
பெற்றிடு இன்பமென்றார் - இல்லை
சுற்றி உடல்பற்றிக் கொத்தும் அரவமென்
றெத்தனை நாளுரைத்தோம்
சுற்றிக் கழுத்தினில் ஒற்றைக் கயிறிட்டுச்
தூக்கிடும்போதினிலே - இன்று
முற்றும் பிழையிது மூச்சுதிணறுது
விட்டுவிடு என்கிறார்
செத்தவர் மீண்டும் சிதை பிரித்தே உயிர்
பெற்ரிட லேதுமுண்டோ - ஒரு
கொத்திப் பிரித்துடல் கொள்ளியிட்டபின்பு
கூடென ஏதுமுண்டோ
சத்தியத்தின் கண்கள் நித்திரை அல்ல, ஓர்
நித்திரபோல் நடித்தால்
எத்தனை நேரம் எழுப்பினும் தூக்கத்தை
விட்டுஎழுந்திடுமோ
தட்டி முதுகினில் வந்து சுதந்திரம்
தந்திடும் பூமியில்லை - இவன்
சட்டமதித் தெங்கள் தாயின் நிலம்தன்னை
விட்டேகப் போவதில்லை
முற்றும் உலகிது மெல்லத் திரும்பிட
இத்தனை செய்தயடா - அட
அற்புதம் தம்பிநீ அத்தனைவீறுடன்
ஆர்ப்பரித் தின்னும் எழு
பொங்கு மனத்திடை பொங்கும் கடலென
வெஞ்சினம் கொண்டுஎழு -அன்று
பொங்கி யெழுந்த எம்பெண்களின் சாபங்கள்
போய்ப் பகை வெல்ல எழு
பொங்கி வழிந்த குருதியைப்போல் நீயும்
பொங்கியெழு! புவியோர்
பங்கு எமதீழ மண்ணில் உரிமையை
பங்கிடும் மட்டும் எழு!
இது ஏற்கனவே எழுத்தப்பட்டது . இப்போது கலத்தோடு ஒத்துபோகிறது
அன்பு முழக்கம்
தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ
--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com
மிக அருமையான சந்தம். முதலிரண்டடியில் பயிலும் எதுகை முறை, பாடல் முழுவதிலும் அமையப்பெற்றிருந்தால் மிக அழகாக அமைந்திருக்கும்.
வேண்டாமென்றால் வினையேன் என்னை
விட்டால் பறந்திடுவேன்
தாண்டேன் உந்தன் தர்மக்கனலை
தலைவி செய் வதையேன்
மாண்டான் என்றே மாந்தருலகில்
மறந்தே வாழ்ந்திடுவர்
ஆண்டேன் மாதம் வைத்தே என்னை
ஆக்கும் வேதனை சொல்
தோண்டேன் குழியை தூங்கேன் என்றே
தேகம் எனும்பாரம்
கூண்டே விட்டுக் கொள்ளே னென்று
சொன்னேனா யானும்
நீண்டே காணும் பிரபஞ்சத்துள்
நிற்கும் தெய்வத் தீ
மீண்டான் என்றே மின்னல் சுடருள்
மெல்லக் கருவாக்கு!
நாண்டே நானும் நின்றேனா காண்
நல்லோர் கவியென்றே
பூண்டேன் வேடம்புனைந்தேன் கவிதைப்
பூக்கள் தனைத் தூவித்
தூண்டேன் எனிலும் தீபத்திரியைத்
தொட்டே ஒளிசெய்தேன்
சீண்டேன் நின்னை சிரித்தே யிருந்தேன்
சினமேன் கொண்டாய் சொல்
ஆண்டேன் என்றே அங்கே ஒருவன்
அழகுத் தமிழ்கொன்றான்
பூண்டேன் புல்லேன் புழுவேன் எல்லாம்
போவென் றுயிர் வாங்க
மூண்டேன் தீயை முழுதும் கொல்ல
முனையா தவங் கொண்டாய்
நீண்டேன் துயரம் நெடுத்தே போக
நிலைத்தாய் சொல் சக்தி
-------------------
கண்டோம், ஆயின் கண்டிலோம்
வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன -நம்
காயும் நிலம் ஈரம் காணலையே
விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலையே
தேனைக் குடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே
கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே
ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனை யழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை
வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ
கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை
கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!
மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?
88888888888888888888
தமிழ் சொல்ல.. உயிர்கொல்ல..!
தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி
அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியப் போனவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி
தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி
ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தேசமொன்று தமிழர் கையில் திருநாள் கொண்டதடி
வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
விளைவை அறியா மிருகம் வேளை எதிரி இல்லையடி
அயலில் ஆடு இலையைத் தின்று அம்மே என்றதடி
ஆகா இதுவே அருமைபோதும் உயிர் என்னென்குதடி
முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்நின்றான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்சிமிட்டி
முடியைவெட்டத் தேவையில்லை தலையைவெட்டென்றான்
முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமை என்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல
புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி
இனிதே வாழ்ந்தோம் இன்பமும்கொண்டோம் என்றும்அன்பிலடி
இன்றோ வாசல்கதவை திறந்தால் எருதில் ஒருவனடி
தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தால் அருகில் ’கத்தி’யடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் உறையுதடி
இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி கொடுமையடி
அருகில் வந்து கதவின் ஓரம் ஆபத்து நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைத் தின்னுதடி
தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைமை இல்லையடி
தமிழால் நலிந்தோம் நாமும்,நாளை இன்னோர் தேசமடி
உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பாரெம் விடையே உன்மீதி
காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்லக் கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்
இது ஒரு திருமண ஜோடிக்கான வாழ்த்து
இன்னொன்று
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On Apr 5, 2:18 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அருமையான வாழ்த்துகள்!
>
> 2013/4/5 kirikasan <kanara...@gmail.com>
>
>
On Apr 5, 10:06 pm, Ramamoorthy Ramachandran <rawmurt...@gmail.com>
wrote:
விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்
நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க
பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்
இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழ் ஆளும்
*******************
செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி
உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி
தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி தமிழ்சூடச் சோழர்வகை யாயுயர்ந்து
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ
*****************
தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாட் தொங்குகனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி தமிழ்சூடச் சோழர்வகை யாயோர்
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ
--கிரிகாசன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றியதீ
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே யவர் நீசர்கள் பூமியில்
மீண்டும் எரியாயோ?
ஆளும் மன்னன்கொடுங் கோலன்என்றேநீதி
கேட்கமது ரையிலும்
காலிற் சிலம்புகை கொண்டவள் கண்ணகி
கூறஎரித் தொழித்தாய்
பாழு மரசொன்று நீதியின்றிக்கொடுங்
கோல்கொண்டு நிற்குதிங்கு
தீயே மறைந்துநீ நின்றதுபோதுஞ்
சினங்கொண்ட ழித்துவிடு
போரில் பகைவென்று பூவையர் கூட்டமாம்
பேசும்தமிழ்க் குலத்து
நேரின்று தாவென்று வாழக்குரலீந்த
வஞ்சியர் தம்மையின்று
வாரி இழுத்தொரு பாசறைக் கூட்டுக்குள்
வைத்துச்சி தைத்தவரை
கீறிக் கிழித்துமெய் கெட்டழித்துக்கூத்
தாடுதுபேய் களின்று
வந்தே யெரித்து ஒழித்துவிடு அந்தவன்மை
மனங்க ளெல்லாம்
வெந்தம னங்களின் பேய்பிடித்தபுத்தி
செய்யும்வி காரமெல்லாம்
தூயதெனஅந்தப் பூமியாக்கித்தமிழ்த்
துன்பம் களைந்துவிடு
நீயும்வந்துகேளா விட்டுவிட்டால்நீதி
கேட்பது யார்தானிங்கு
பாரதப்போர்ஒரு பாவைதிரௌபதியின்
சேலைபறித் ததனால்
நூறுஎனப்பல திரௌபதிகள் இன்று
சேலையிழந்து நின்றார்
ஓருடைபோகஇன் னொன் றிதோவென
மாதவன்கை கொடுத்தான்
ஆருயிர்தங்கையர் கேட்டுக்கதறியும்
சேலைகள் நீண்டதில்லை
சாக நினைத்துயிர் போகும்வழி யின்றி
சேயிழை யார்துடித்தே
வேகு முடலவ மானம்கொண்டே யவர்
விழிகள் நீர்தளும்ப
பாவிமகனவர் காலடிவீழ்ந் துடல்
நோகத்து டிப்பதனை
கூவியழும்குரல் ஓலம்நிறுத்திட
வானளவாய் எரியாய்
ஊனை விட்டுஉயிர் போவதனா லேயே
வேதனை தீருமென
உண்ணு முணவினில் ஒர்துளிநஞ்செனும்
ஊற்றித் தருவருண்டோ
தின்னும் கவளமும் தொண்டைநடுவினில்
சிக்கித் திணறிடுமோ
கண்ணும் உறங்கிடக் காலன்வந்து உயிர்
கொள்ளவும் மாட்டானோ?
என்று கலங்கி மயங்கிச் சிறைதனில்
வெம்பி அழுதுகொள்ளும்
நல்ல வர்காத்திட நாடெங்கும் பற்றியோர்
நாசம் எரிக்காயோ
பூமி யெரித்தது அன்று முடிந்தது
போகட்டும் விட்டுவிடு
பாழும் மனங்கொள்ளும், எண்ணமெரித்திடு
போதுமது எமக்கு