கவிதைச்சோலையில் கனவுப்பூக்கள் 2013

2,737 views
Skip to first unread message

kirikasan

unread,
Jan 3, 2013, 3:16:28 AM1/3/13
to santhav...@googlegroups.com

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புதிய இழையில் புதிய நம்பிக்கையோடு வருகிறேன்.
அன்புடன் கிரிகாசன்

 1. புத்தாண்டே புரிவாயா?

கடுமன மிடையெழு கருணையி னொளி
  குறைவுறக் கயமையில் கரமெடு பழி
விடுநின துயிரெனத் தரைவிழப் பொறி
  விளைவுறச் செயுமனம் விரைந்துநீ ஒழி
படுநிலமிடை எனப் பறித்துயிர் வெளி
   பறமுகி லொடுஎனப் புரிபவர் இனி
தடுநில மிடைமலர் தரணியில் ஒளி
   தகைமிகு வழமுற வருடமே அளி

விடமுள அரவமென் றுருபெறச் சிலர்
  விடுதலை எனிலெது விரைதுடி யுடல்
படவலி யுறச்சிதை பிரியதை யழி
  கடதுன துலகமும் கரம்விடு தனி
நடயினி விடுதலை நரகமே வழி
  நவஉல கமுமெம துமைநமன் வழி
இடமது பெறவிடின் இலகெனும் வழி
 எனுங் கயவரைஒழி அவரொழி ஒழி

”தரு”வதும் நிலைகொள்ள இடமுள்ள புவி
  தமிழெனில் இலையிடம் தவறிடு அழி
எருவெனப் புதையிடு வெனக்கொளும் வெறி
  இதமென உலவிடும் இவர்மன மழி
கருவொடு தறிதமிழ் கருகிடு மினி
  கடமையு முனதென சொலுமொரு விதி
மருகிட புதுவழி புதிதெனும் ஒளி
  மறுபடி உயிர்கொள்ள` வருடமே அளி

இருபதி னருகினி லிதனரை வர
  இழைந்திடு சிவனவர் விழிதொகை சக
தருவிடை வருடமும் தணல்பிரி வெடி 
  தெருவினில் பெரிதெனும் படபட ஒலி
இருளுற இரவெனில் பன்னிரண்டு மணி
   இதனிடை வரும்புது வருடமு மினி
தருமமும் தழைவுறத் தமிழ் பெரும் ஒளி
  தருமெழில் விழுமியம் பெறவழி புரி

**************

kirikasan

unread,
Jan 3, 2013, 12:18:42 PM1/3/13
to santhav...@googlegroups.com

  2.  அரசனா?  ஆண்டியா ?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்

**********

kirikasan

unread,
Jan 4, 2013, 5:21:44 PM1/4/13
to santhav...@googlegroups.com
புறநானூறு 37 – புறவும் போரும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்,
 பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
சினம் கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடந் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சிச்,
செம்பு உறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத் துண்மையின்,
‘நல்ல’ என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!


சங்க இலக்கியங்களுடன் தமிழர் (மன்னர்) வீரம் போற்றும் பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளதா தெரியவில்லை
இன்று தமிழனுக்கு வீரம் இல்லையா?
தமிழர் வீரம் பற்றி நாமும் பாடலாமே என்ற ஆசையில் பொதுவாக எழுந்தது

     தமிழன் வீரம்

கடலலையும் ஓங்கியெழும்   காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும்  கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும்  தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை  தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து  விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம்  புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி  கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும்  கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை  வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில்  வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள்  வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப்  பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த  விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம்  முகம் கறுத்து  கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ்  மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம்  அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன்  அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து  போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில்  பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர்   தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும்  தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப்  பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

***********

Lalitha & Suryanarayanan

unread,
Jan 5, 2013, 4:10:07 AM1/5/13
to santhav...@googlegroups.com
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்

மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்
..............

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
.......................

சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

அழகு தமிழ்ச் சொற்களும் கற்பனை வளமும் உங்களிடமே குடிகொண்டுள்ளன.

சிவசூரி.

2013/1/5 kirikasan <kana...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Jan 5, 2013, 4:46:39 AM1/5/13
to santhav...@googlegroups.com
அருமை 

2013/1/5 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

kirikasan

unread,
Jan 6, 2013, 6:44:48 AM1/6/13
to santhav...@googlegroups.com
உள்ளம் மகிழ்ந்த நன்றிகள் பலகோடி ஐயா

அன்புடன் கிரிகாசன்


 

kirikasan

unread,
Jan 6, 2013, 6:47:28 AM1/6/13
to santhav...@googlegroups.com
ஒரு வார்த்தை ஓராயிரம் மலர்களைத் தூவியது நன்றிகள் ஐயா!

அன்புடன் கிரிகாசன்



kirikasan

unread,
Jan 6, 2013, 6:51:47 AM1/6/13
to santhav...@googlegroups.com
         வேண்டுதல்

தாம்தோம் தத்தோம் தத்தித்தோம்
தாவிடு வானரம் ஒத்திட்டேன்
தீம்தோம் தித்தோம் திக்கெட்டும்
தீமைகளால் மனம் பொய்த்திட்டேன்
பாம்பைப் போலும் கொத்திட்டேன்
பாலதில் நஞ்சும் சொட்டிட்டேன்
வேம்பின் காயை வெட்டித்தான்
விருந்தில் தேனுள் வைத்திட்டேன்

மாயக் கற்பனை கொண்டிட்டேன்
மாலைகள் பிய்த்தும் வீசிட்டேன்
தேயும் நிலவாய் தேய்ந்திட்டேன்
தீயில் விரலைச் சுட்டிட்டேன்
ஆய கலைகள் கற்றிட்டேன்
ஆனால் ஏட்டைத் தீயிட்டேன்
போயோர்  முத்தை சேற்றிட்டேன்
புறமும்பேசிப் பொய்யிட்டேன்

வேண்டும் வரையில் வெட்கித்தேன்
விடியல் அறியா தூங்கிட்டேன்
ஆண்டே இன்பம் தேர்ந்தக்கால்  
அழிவே எண்ணிக் காத்திட்டேன்
அன்பில் உன்னை தண்டித்தேன்
அதனா லுள்ளம் சோர்ந்திட்டேன்
வெண்தண் இறையே நொந்திட்டேன்
விளையாடித்தான் வாழ்ந்திட்டேன்

காலைமலரைப் பிய்த்திட்டேன்
கானம் பாடக் கத்திட்டேன்
பாலில் உப்பைக் கொட்டிடேன்
பாமரன் வாக்கைப் பழியிட்டேன்
வேலை இன்றி சுற்றிட்டேன்
வீட்டில் மனைய வைதிட்டேன்
தோலில் கரியைப் பூசிட்டேன்
தெள்ளென் நீரில் தோய்ந்திட்டேன்

இறைவா என்னை மன்னிப்பீர்
இகமும் வாழ்வில் இன்பத்தை
குறையா தருவாய் கொண்டேன்நான்
கோபம் சினமென் றாகாமல்
மறையா துலகின் மன்னிப்பை
மலராம் உதயச் சூரியனாய்
உறையா துள்ளம் உருகித்தா
ஒர்நாள் பொழுதில் மலராதோ

பாவம் நீக்கப் பூசித்தேன்
பரமே சிவனே போற்றிட்டேன்
ஏவல் செய்தேன் இவன்மீது
இறையே சக்தி இரங்காயோ
தூவல்மழையில் நின்றிட்டேன்
தேகம் குளிர ஆடிட்டேன்
ஆவது ஏது அன்புள்ளம்
அணையா தீபம் காப்பாயோ

*************

kirikasan

unread,
Jan 6, 2013, 10:24:13 AM1/6/13
to santhav...@googlegroups.com

       ஆற்றாமை (தலைவி)

உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

**********

Raja.Tyagarajan

unread,
Jan 6, 2013, 12:37:11 PM1/6/13
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசரே,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
முகநூலின் முன்பொருமுறை உங்களைப் பற்றி நான் சொன்ன கருத்தினை மீண்டும் இற்றைப்படுத்துகிறேன் இச்சந்தவசந்தத்தில்:
 
உளமள்ளும் சொல்லாட்சியும், ஆற்றொழுக்கான நடையும் பொருந்திய கவிதைகளை இடுகின்றீர்.  அரசுப் பணி நெருக்கத்தால், இலந்தையார், நீங்கள், ஹரியண்ணா, சிவசூரி, சிவசிவா, தங்கமணி போன்றவரின் படைப்புகளைப் பற்றி பின்னூட்டம் இடுவதற்கு இயலவில்லை.  ஏன்,  இச்சந்தவசந்தத்தின் அன்பர்கள் அனைவரின் படைப்புகளும் இதில் உள்ளடங்கும்.  தொடரட்டும் உங்கள் பணி.
உங்களை விட வயதில் மூத்திருக்கிறேன் என்றெண்ணியே சொல்கிறேன் (இல்லாவிடில் மன்னிக்கவும்) வாழ்க, வளர்க, தமிழால், தமிழொடு, தமிழுக்காய், பல்வளங்களும் பெற்றிப் புவியில் பல்லாண்டு கவிஞரே!
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்

kirikasan

unread,
Jan 7, 2013, 3:36:40 AM1/7/13
to santhav...@googlegroups.com
அன்போடு தங்கள் வாழ்த்தினைஏற்றுக் கொள்கிறேன்!
அதிக புகழ்ச்சி அகங்காரத்தை ஏற்படுத்தும். அது கவிஞனுக்கு எதிரி என்பதை அனுபவரீதியாகப் பார்த்தவன் யான். அதேநேரம் பாராட்டுகள் ஊக்கத்தை தரும். கவிதை மழையாக ஊற்றெடுக்கும் எனவும் தெரிந்துகொண்டேன். எனவே  அதிக பாராட்டுக்களின்றித் தேவைப்படும்போது சிறிய உந்துதலைக் கொடுக்கும் சந்தசவசந்தம் மிக நிறைவாக எனக்குத் தோன்றுகிறது. எந்தக்கவலையும் வேண்டாம்! நன்றிகள்:தங்களுக்கு இந்த தாகத்துக்கு வார்க்கும் தண்ணீருக்காய்!!
அன்போடு கிரிகாசன்
*******************************************


On Sunday, January 6, 2013 5:37:11 PM UTC, இராஜ.தியாகராஜன் wrote:


kirikasan

unread,
Jan 7, 2013, 3:45:27 AM1/7/13
to santhav...@googlegroups.com


        சக்தியின் வேண்டுதல்

வேண்டும் வேண்டும் வரம்வேண்டும் - உயிர்
வீணையில் நாதம் எழவேண்டும்
ஆண்டும் ஆண்டும் பலவேண்டும் தமிழ்
ஆண்டே பலமுறும் நிலைவேண்டும்

மீண்டும் மீண்டும் பெருவாழ்வாய் - இம்
மேதினி வாழ்வில் பலங்கொண்டே
தாண்டும் தாண்டும் உரம் வேண்டும் என்
தலைவி நீயதைத் தரவேண்டும்

நீண்டும் நீண்டும் மகிழ்வோடு - நான்
நெஞ்சம் கனிவாய் தமிழ்பாடி
தூண்டும் தூண்டும் உணர்வோடு - கவி
தூவும் மலர்கள் தொகை வேண்டும்

பூண்டும் பூண்டும் பலவேடம் - இப்
பொழுதில் புவியில் கூத்தாடி
தோண்டும் தோண்டும் இன்பங்கள் - பெருந்
தொகையாம் எனவே பெறவேண்டும்

தீண்டும் தீண்டும் பொருள் யாவும் - அடை
தேனாய் வழியச் சுவைகொண்டு
நாண்டும் நாண்டும் தொகை வேண்டும் - என
நாளும் கேட்டும் குரல்வேண்டும்

மாண்டும் மாண்டும் புவிமீதில் - உயிர்
மீண்டும் பிறக்கும் செயலாகக்
கூண்டும் கூண்டிற் கிளியாகும் - இக்
கோலம் மாறும் வரம்வேண்டும்

மூண்டும் மூண்டும் பெருந்தீயாய் - பகை
மோசம் செய்தும் ஒருதீவில்
யாண்டும் யாண்டும் செய் தீமை - தனை
யாவும் நீக்கும் வரம்வேண்டும்

சீண்டும் சீண்டும் சினம் மேவி- என்
சிந்தை கெட்டுச் சிதறாமல்
வேண்டும் வேண்டும் நின்பாதம் - தலை
வைத்தே தூங்கும் மகிழ்வோடும்

டாண்டும் டாண்டும் எனவோடிப் - பெரும்
அண்டம் பாய்ந்து சுழல்கோள் கொள்
நீண்டும் பெருத்த உயர்வானின் - பொருள்
நீயே என்னுள் வரவேண்டும்

**********************

kirikasan

unread,
Jan 8, 2013, 4:16:46 AM1/8/13
to santhav...@googlegroups.com

 இலங்கையில் பல பாகங்களில் பலநிறங்களில் மழை பொழிவதை கேள்வியுற்றிருப்பீர்கள்  .முதலில் மஞ்சள் மழை பொழிந்தது .பின்னர் சிவப்பில் மழை பொழிந்தது. சிலநாட்களுக்கு முன்னர் பச்சை நிறத்தில் மழை ஊற்றியது . நேற்று நீல நிறத்தில் மழை பெய்தது. இதை ஆராய்ந்த குழுவொன்றின் அறிக்கை
இராயனகுண்டு வீச்சின் பாதிப்பு இந்த மழைகளின் நிறங்களுக்கு காரணம் என்றபோதும் (ஆனாலும் இடம் மாறி கொட்டும் மழை என்பதால்)

ஈழத்தில் ஒரு சிறுவனின் குரலாக இந்தக் கவிதை’’

          வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீ ஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

*************

Lalitha & Suryanarayanan

unread,
Jan 8, 2013, 4:57:22 AM1/8/13
to santhav...@googlegroups.com
வண்ண வண்ண மழையைப் போல வடித்து வைத்த கவிதையால்
எண்ண வண்ணம் கண்டு கொள்ள இன்பம் நெஞ்சில் பொங்குதே
எண்ணி லாத சந்த மெல்லாம் என்றும் உங்கள் சொந்தமே
மண்ணில் உங்கள் கவிதை யெல்லாம் மனத்தி லென்றும் தங்குமே.

வாழ்க கிரிகாசன்!

சிவசூரி.

2013/1/8 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
Jan 9, 2013, 7:41:24 AM1/9/13
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! நீடூழி வாழ்க!!

அன்புடன் கிரிகாசன்



kirikasan

unread,
Jan 9, 2013, 7:50:22 AM1/9/13
to santhav...@googlegroups.com

          எங்கே சுதந்திரம்

காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

kirikasan

unread,
Jan 10, 2013, 1:29:30 AM1/10/13
to santhav...@googlegroups.com

      புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில்  வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் நினவுகள் பலஎழும்
இவையெது கனவுகளோ
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும்  உணர்வுகள்  பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே    
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நெருப்பென எழும் மகிழ்வே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறமதி யுதவிட
உருவெடு திறன் பெரிதே
துளையிடு குழலிடை  நுழைவளி இசைஇடும்
நிகரெனும்  இன்னிசையோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

****************

kirikasan

unread,
Jan 14, 2013, 7:00:30 AM1/14/13
to santhav...@googlegroups.com


          பொங்கல் வராதோ?

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

kirikasan

unread,
Jan 15, 2013, 11:38:50 AM1/15/13
to santhav...@googlegroups.com

          தென்றல் வரும் திசை

தேனினிக்கும் காய் உவர்க்கும்
. தென்றல்வரும் பூமணக்கும்
. தீந்தமிழின் சுவை இனிக்காதா
தானிமைக்கும் நேரமதில்
. தாவும மனங் காவல்கொள்ளும்
. தேடுவழி ஒளியெடுக்காதா
வானிடையில் வரும்மதியால்
. வையகத்தில் ஒளிபரவும்
. வண்ணமுண்டு விதியழித்தாலும்
தானிருந்து மீண்டும்வளர்
. தன்மையுண்டு நாள்வளரும்
. தங்மென வான் ஒளிராதா

கோயிலுக்குள் தெய்வமுண்டு
. கும்பிடுமோர் பக்தனுண்டு
. கூடவரும் நிழல்பெரிதானால்
பேயிருக்கும் போலிருக்கும்
. பார்த்துமனம் கிலிபிடித்து
. பாதைவிட்டு ஓடிடுவானா
தாயினது அன்பெடுத்து
. தட்டிலிட்டு கனமளக்க
. தான்முயன்றால் ஊர்சிரிக்காதா
போயிருக்கும் உறவுதனில்
. பூகம்பமா புயல்வருமா
. போதுமிவை நினைவுகள் வீணா

சேயிருக்கும் தவழ்ந்துசெல்லும்
. தீயிருக்கும் தொடநினைக்கும்
. தாயெடுத்து அணைத்திடுவாளா
பாயிருக்கும் பக்கமதில்
. பாலிருக்கும் கனியிருக்கும்
. பசிஎடுதால் கரம்தடுப்பாளோ
ஆயிரம்தான் ஆகிடினும்
. அன்பு மனம் ஒற்றுமையின்
. ஆழமதை கோலிடலாமா
போயிருக்கும் திசைதனிலே
. பூமணக்கும் காற்று மெல்ல
. போய்விடக் காற் றாடிவிழாதா

ஆறிருக்கும் ஓடித்தரை  
. அருவியெனக் கூத்தடித்தும்
. ஆழியினைக் கலப்பதுதானே
வேரிருக்கு மண்ணுடனே
. விளையுமன்பு நிலைத்திருக்கும்
. விதிபிரித்தால் பிரிவதும் உண்டோ
மாறிவரும் திசைநடந்தும்
. முடிவுலொன்று சேருமெனில்
. மேல் நடந்துக் கொள்வதிலேனோ
ஊறில்லையேல்  தெய்வசுகம்
. உள்மனதில் உண்டுஎனில்
. ஓடிநட உள்ளதுநன்றே

kirikasan

unread,
Jan 19, 2013, 6:39:58 PM1/19/13
to santhav...@googlegroups.com



அரசசபை கூடியிருக்கிறது
மாண்புமிகு  மன்னவர் முன்னே அமர்ந்திருக்க அங்கே

              ராஜ சபை யில் கண்டது என்ன?

அமைச்சர்:
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் மோந்தேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரை மீது விளையாடும் மானைக் கண்டேன்
பாவூற்றி வளம் சேர்க்கப் படைத்தோந்தன்னின்
பாசமதைக் காணேன் ஓர்பரிவும்காணேன்

சேனாதிபதி
பன்சிலிர்த்த உணர்வோங்கும் பாடல் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பதிப்பும் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னமது இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னவகை செந்தமிழின் அழைக்குமோசை
அதுவின்று சென்றதெங்கே அறியேன் அரசே

ஆஸ்தான் கவி
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெல்லம் ஒடாது இருக்கக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொல்தடக்கிப் புரளக்கண்டேன்
சந்தணமும் கொட்டியதோ  நிலத்தில் கண்டேன்
மன்னபரி வாரங்களும் மறையக்கண்டேன்
மாதொருத்தி புன்னகையில் மர்மம் கண்டேன்

குடிமகன் ஒருவன்:
சொன்னதெலாம் கற்பனைகள் கொள்வீர் மன்னா!
சோதி பலங்கொண்டு கிழக் கெழுதல்காண்பீர்
பொன்னிவயல் பொலிந்து கதிர் குலுங்கக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்து புரளக் காண்பீர்
என்னபட்சி சோலை நிறைந் திருக்கக் காண்பீர்
சுற்றியொரு ஒளிவட்டம்  தோன்றக்காண்பீர்
தன்னை மறந்தாட இசை ஒலிக்கக்காண்பீர்
தமிழிலினிக்க சந்தமிடும் வசந்தம் காண்பீர்


விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து கிடக்கக் காண்பீர்
பெண்கள் மலர் தூவி எழில்போற்றக் காண்பீர்
பேசுங்கிளி ஒன்று புகழ் பாடக் காண்பீர்
மன்னவனென் றாலிவரே மன்னவனென்றே
மகிழ்வுகொண்டு மாநிலமும் வாழ்த்தக் காண்பீர்

******************

kirikasan

unread,
Jan 24, 2013, 9:19:49 PM1/24/13
to santhav...@googlegroups.com
           புகழ் எண்ணிப் பொல்லாப்பு (சோகப் பாடல்)

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
அடங்குமென்றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற கடலிலொரு அவனானவன்
 அழகென்று திரைகண்டு அதில்நீந்தவும்
தலைமூழ்கும் அலை யோங்கிவரும் போதினில்
   தெரிகின்ற சிறுதூர கரைவேண்டியும்
நிலையான தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதீதைக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடை யிட்டு தலைமூழ்குமோ

கதிமோச மென் றாக்க புயல்வீசுமோ
  கைதந்துவிடுமோ  ஓர் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதான் இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா


(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் முடிவோ

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டென சொல்மது வார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணோடு மண்ணாக மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையென உடலீந்து பிச்சையென உயிர்வைத்து
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யெனைப்
பாடி வலம்வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?

kirikasan

unread,
Jan 27, 2013, 3:17:35 AM1/27/13
to santhav...@googlegroups.com

            அன்பு மனம்        

ஆனா இன்பூவினில் வந்தேனா னதுகொண்டோமென
நானா இட்டோர் பூவுடனே
மீனாஅயல் அச்ச்சமெது விதியோ விடுவென்னும்கணம்
மீறும்வழி நீருள்மறையும்
தானந்தனும் தையாஎன சானாந்தமும் வீசும்வ
சந்தமதில் வீசும் காற்றே
ஏனோவென் எண்ணம்தனைச் சொல்லும் ஓர் உள்ளம்தனை
இன்னுமறிதல் கடிதாமோ

ஆனா இன்பூவினில் வந்தேனா னதுகொண்டோமென
வண்ணத்துப் பூச்சிபறக்கும்
மீனா அதுஅச்சமுடன் ஏனோவிட்டோடும் கணம்
நீரில் விழுந்தோடும் அலையும்
தானாந்தனி பூக்கும்சுனை  காணுஞ் செந்தாம ரையும்
தீயாய் அந்நீரினில் மிதக்கும்
ஏனோஅதன் எண்ணம்வெகு தூரம்கதிர் கண்டுமது
காணுமொரு அன்பில் மித க்கும்

வீணா ஒரு விதியும் வரும் தானாய் புயல்போலும் பலர்
வாழ்விற் பல இன்னல்விளையும்
நாணா மனம் தன்னில்பிழை நாளும் விதை கொள்ளும்வகை
நாடிமன துள்ளும் கெடுக்கும்
வீனா வதினோடு மிருபூவின் வடிவோடும் மனம்
வேண்டா துயரென்றே மலரும்
மானா குடம் போயும்தலை வாநீ யெனவண்ணத்தமிழ்
தாநீயெனத் தமிழும் பாடும்








kirikasan

unread,
Feb 6, 2013, 9:30:38 AM2/6/13
to santhav...@googlegroups.com

           காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

Subbaier Ramasami

unread,
Feb 6, 2013, 10:51:16 AM2/6/13
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசன்,
மிக உணர்ச்சியான கவிதை
நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

மிக மிக அர்புதம்!

இலந்தை

2013/1/8 kirikasan <kana...@gmail.com>


*************

--

kirikasan

unread,
Feb 7, 2013, 3:21:14 AM2/7/13
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா. இனி வண்ண மழை பொழியும்

அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Feb 7, 2013, 3:22:25 AM2/7/13
to santhav...@googlegroups.com

    அதிசய ஊற்று

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைசந்த
மெழவூறும் வசந்தமிதோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் பிறழ்படத்
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ
***************

kirikasan

unread,
Feb 9, 2013, 8:00:49 PM2/9/13
to santhav...@googlegroups.com

           சக்தியே ஆணையிடு

கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
 காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
  ஏகும்பாதை வானின்  தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
   கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
  ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்

வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே  -சுற்றி  
  வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
   மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
   வைத்த பானை  அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
   ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு

திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
   தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்                
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
   காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்  
  ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்                                                                  
எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
  என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்

தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
   தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப்  போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
   கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
   இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
    வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்

அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
  ஆலையில் கரும்புபோல  ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
   நிழல்பிரிந்து  கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
   தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
   போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்

*************************

kirikasan

unread,
Feb 12, 2013, 8:16:15 AM2/12/13
to santhav...@googlegroups.com


          சினம் கொள்ளாதே! (பாப்பா)

செல்லக்கண்ணே சின்னோர் வதனம்
செந்நிற மானதுமேன்
வெல்லம்போலும் கன்னம் இரண்டில்
வீழும் அருவியுமேன்
சொல்லில்சினமும் செய்கை முரணும்
சேர்ந்தே காணுதடி
எல்லைமீறிச் சீறும்கண்ணீர்
இதயம் நோகுடுதடி

நல்லோர் சினமும் கொள்ளார் அன்பை
நாடும் மனங்கொள்ளு
அல்லோர் தீமை செய்யும்போதும்
அதனிற் சினங்கொள்ளா
பல்நேர் விதிகள் முறைகள் கூறிப்
பக்குவமாய்ப் பேசு
பொல்லாப் பகையும் காணும்நேர்மை
பேச்சில் தணிவடையும்

சொல்லை கூட்டி அன்புக் கதைகள்
சொல்லப் பழகிவிடு ,
நில்லாய் என்றால் நிற்கும் அன்பில்
நெகிழும் உலகமிது
கல்லைக் கட்டிக் கடலில் இறங்க
கருதும் மனம்கொண்டு
தொல்லை கட்டி வாழ்வைக் கொண்டால்
தொலையும் இன்பமது

கீதம் போலே இனிமைகாணும்  
குழந்தை மொழிகொண்டாய்
நாதம்போலும் நற்தேன் வார்த்தை
நாளும் கூறிடுவாய்
வாதம் பொய்கள் வார்த்தே செய்யும்
வார்த்தை மனங்கவரும்
ஈதெம் வாழ்விம் இன்பம்தருமா
என்றால் இலையம்மா

நாளும் பூக்கும் மலர்கள் போலும்
நீயும் பூத்திடுவாய்
வாழும் போதில் வந்தேஎங்கும்
வண்ணம் பொலிவாழ்வும்
ஆழும் மனதில் அன்புக்கோலம்
அரசென்றுரு வாக்கி
கேளும் பாவாய் கருணைஆட்சி
காண்பாய் இளவரசி

உன்னைசுற்றி நிற்போர் என்றும்
உன்னைத் தூசித்தால்
மென்மை தன்னை மறவாதென்றும்
முன்னின் றெதிர் கூறு
தன்மை புரிதல் தவறும்மனிதர்
தன்னை எதிர் கொண்டால்
புன்மை கொள்ளும் கயவர்முன்னே
புயலென் றெதிர் கொள்வாய்

கல்லை எறிந்தால் பூக்கள்போலக்
காணல் தவறம்மா
சொல்லை பேச்சை உயர்வாய் திடமாய்
சேர்த்தே உறுதியுடன்
நில்லாய் நேர்மைதெளிவும் கொண்டு
நீயும் மலைபோலும்
வெல்லும் அறிவு கூர்மை கொள்ள
சூழும் பகை தாழும்

kirikasan

unread,
Feb 14, 2013, 12:50:04 AM2/14/13
to santhav...@googlegroups.com

          என் நாட்டைப்  போல வருமா?

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

*********************

kirikasan

unread,
Feb 16, 2013, 8:41:51 AM2/16/13
to santhav...@googlegroups.com
இந்தக்கவிதைக்கு  விளக்கம் தரவில்லை. அதை இங்கே தருகிறேன்

ஆனா + இன் + பூவினில் = அ + ன் + பு (அன்பினில்)
 வந்தேனா அதுகொண்டோமென  நானா + இட்டோர் + பூவுடனே = ந + ட் + பு டனே

மீனா (மி) அயல் அச்”ச்சம்” = மிச்சம்
கணம் = கண் + அம்
 (மிஞ்சுவது எது விதியோ விடு என்றுகூற ,கண் அம்மீறும்  வழி நீருள் மறையும்

இதுபோல

தானந்தனும் தையாஎன சானாந்தமும் வீசும்வ
சந்தமதில் வீசும் காற்றே
(த + ந் + தை என ச + ந்தமும் வீசும்வசந்தமதில் வீசும் காற்றே)

வீனா வதினோடு மிருபூவின் வடிவோடும்(விதியின் வடிவத்தில்) மனம்

வேண்டா துயரென்றே மலரும்
மானா குடம் போயும்தலை (மகுடம் வீழ்ந்தாலும் என் தலையைபார்த்து வாநீ என்றால்)
-கிரிகாசன்

kirikasan

unread,
Feb 17, 2013, 3:01:01 AM2/17/13
to santhav...@googlegroups.com

                மறுக்காதே தாயே!

களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ

புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி புரியாது
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாகி
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்

குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே

மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே

*****************

kirikasan

unread,
Feb 17, 2013, 4:14:59 AM2/17/13
to santhav...@googlegroups.com
முதலில் தந்த கவிதை ஒன்றை திருத்தினேன். அதை மீண்டும் தருகிறேன்


   எங்கே சுதந்திரம்

காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணுமெழில் என்னே ஞானப் பெண்ணே
சோலை முழுதிலும் சுந்தரப்பூ வண்ணச்
சுற்றெழில் கொள்ளுமோ சொல்லுபெண்ணே!
கோலஞ் சிவந்திடக் கீழத்திசை வானில்

கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக்  காணுஞ் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ ஞானப் பெண்ணே


ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லி மலர்ந்திடும் நீர்க்குளத்தின்

சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவெளி விரிவானி லடைந்திடும்
நேரெழில்போலுஞ் சுதந்திரத்தை
சாலச் சிறந்தெம துள்ளம் மகிழ்வுறச்
சற்றெனும் கொள்வமோ ஞானப் பெண்ணே

கோலமுந் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது ஞானப்பெண்ணே

தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் வாழ்ந்திடவும்
மூலவிதி கெட்டு வாழும்நிலை பெற்று

முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம் வந்து இருப்பதோ
வாடியுயிர் செல்லல்  நீதியதோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்திட
மூளும் தீயாகிடச் சுட்டிடவோ

தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமல ராகி யிதயமும்
வாழ்ந்திட நாளதுமுண்டோ பெண்ணே


காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு ஞானப் பெண்ணே

மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட வாகும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
பூமழை தீயெனக் கொட்டுதலாய்
தேசம் விடிந்திடும் தீயில் விரலிட்ட
தீமைகள் போய்விட காணாய் பெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெழிற் காலையில்
புத்துணர் வோடு நீ புன்னகைத்து

நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்தருடன்

கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விடத்

தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நிலம் பூமழை கொள்வது மெய்!
**************

kirikasan

unread,
Feb 21, 2013, 4:04:54 AM2/21/13
to santhav...@googlegroups.com

             இயற்கையின் பதில் ??

செக்கச் சிவந்த வானம்,   சிறுவெண் பனிநீரோடை
பக்கத் தினிலோர் கோவில்,   பாடித்திரியும் குயிலும்
சொக்கும் அழகில் வயல்கள்,   சுதந்திரக்காற் றின்வீச்சு
பக்க மடித்திட மெய்யில்   படர்ந்தே யின்பமுந் தருமே

தங்கம் போலொரு தோற்றம் தகதகமின்னும் வெய்லோன்
செங்கல் குவித்த சூளை  சேரும் செம்மை வானம்
தங்கும் முகிலின் வண்ணம் தானென் றாக்கி மேற்கில்
எங்கோ வீழ்ந்த்திடப் போகும்  இரவின் பகையாம் இரவியும்

தெங்கும் பனைவிட்டோலை திடுமென் றதிரிடவீழ
செங்கனி தின்றிடு மணிலும் திகைத்தே அஞ்சியுமோட
எங்கும் பரவிடு மௌனம் இரையும் காற்றின் சரசம்
அங்கம் சிலிர்க்கும் அமைதி அடடா என்றே கண்டேன்

முட்டித் தலையிடி போட்டு மூர்க்கம் பிடிக்கும் ஆடு
திட்டித் தீர்த்திடுங் கிழவி தெளிவற் றொதுக்கும் சிறுபெண்
சட்டெனத் தாவிடும் மீன்கள் சலசல வென்றிடு சுனைநீர்
மொட்டவிழ் மாலைப்பூக்கள் மயங்கும் மனங்களன்றோ

பட்டுச் சுருங்கு மிலைகள் படர்ந்த தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் தோலினை பற்றி தீயாயெரி காஞ்சோன்றி
முட்களில் பட்டேநோகும் முனையுடன் நாகதாளி
எட்டிக் கொத்திடு மரவம் இயற்கை எத்தனை அழகு

எட்டா ஆழமென்கிணறு இறைக்கு மியந்திரச் சத்தம்
முட்ட வழிந்திடும் தொட்டி மூழ்கி எழுமோர் சிறுவன்
தட்டச் சிதறிடும் தண்ணீர் தரையில் குளிர்மைச் சுகமும்
வெட்டவெளி எதிர்சத்தம் விளைக்கும் இன்பம் பெரிதே

பட்டிலெழிற் பாவாடை பாவை யணிந்தவள் செல்ல
கொட்டவிழித்திடும் கண்கள் குறுநகை சிந்திட நாணம்
மொட்டு மலர்விரி வதனம் மௌன மழைமுகில் குழலும்
தட்டினை ஏந்திய தாயார் தன்கரம் கொண்டுசெல் கோவில்

வட்டக் குளத்திடை பூக்கள் வந்தம ருஞ்சிறு குருவி
வீட்டெறிகல் கவண் சிறுவன் விளையாட்டில் தீதெண்ணம்
பட்டுவிழுந்தால் குருவி படு முயிர்வேதனை சொல்லி
குட்டியவன் பொருள்கொண்டு குரலழ கூட்டிநடந்தாள்

இத்தனை அழகிய வாழ்வில் இருந்தவர் இடிவிழவைத்து
கொத்தென கூட்டியழித்து குரலற கத்தியும் பார்த்து
செத்தனர் என்றுலகன்று சிறுமை கொண்டெதிர் கண்டு
வைத்த நெருப்பதுஎன்று வையகத்தில் தீதழிக்கும்

Swaminathan Sankaran

unread,
Feb 21, 2013, 8:40:04 AM2/21/13
to santhav...@googlegroups.com
அருமையாக இருக்கிறது. பாரதியை நினைவூட்டுகிறது.
 
சங்கரன் 


2013/2/21 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 Swaminathan Sankaran

Ramamoorthy Ramachandran

unread,
Feb 21, 2013, 1:07:06 PM2/21/13
to santhav...@googlegroups.com
அரங்கத் தலைவராய் பாரதியைக் கொண்ட சந்தவசந்தம் இத்தகைய கவிஞரை ஏற்றுப் போற்றுவது இயற்கைதானே?
                       வாழ்த்து.

கிரிகாசன் தருகின்ற கவிதை-தன்னைக்   
     கேட்கவும் நேரிலே பார்க்கவும் வைத்தே 
சரியாகக் கணினியின் முன்னே -சற்றும் 
     சலியாமல்  நெடுநேரம்  உட்கார வைக்கும்; 
விரிவான  வானத்தின் காட்சி -போல
    வெவ்வேறு  வண்ணத்தில் மழையாகக் கொட்டும்;
பரிவோடே உலகத்தைப்  பார்க்கும் -நல்ல 
    பார்வையை இவர்பாட்டு யாருக்கும்  நல்கும்.!

வாழ்த்துக்கள் -புலவர் இராமமூர்த்தி.    

2013/2/21 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

kirikasan

unread,
Feb 22, 2013, 2:35:52 PM2/22/13
to santhav...@googlegroups.com
ஐயா ! நான் மிகவும் மகிழ்வுற்றேன் நன்றிகள்

நுழை துளையுள் மூங்கிலிடை நுகர்மலரின் வாசம்
அளையு மிளந்தென்றலோடி அதில் இசைக்கும் ராகம்
விளையினிமை ஓசைதொட மனங் களிப்பில் காணும்
குளஅலையைப் போலெழுமோர்  குதூகலத்தைக் கொண்டேன்

அன்புடன் கிரிகாசன்

*********************************

kirikasan

unread,
Feb 22, 2013, 2:55:38 PM2/22/13
to santhav...@googlegroups.com
ஐயா, மிக்க நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன்


தாமரையோ தங்கநிலா தனிமையிலே ஓடம்
தனிலிருந்து நீரலைமேற் தான்செலுத்தும் நேரம்
சாமரையும் வீசப் புனல் சலசலத்து ஓடும்
சரிகம வென்றோர் குரலும் சந்தமுறப் பாடும்
தேமதுரக் குழலிசைகள் தேன்நில வேகாந்தம்
தித்திக்கும் இன்சுவைகள் பக்கத்திலே காணும்
அமரவொரு பஞ்சணையும் அகில்புகையின்வாசம்
அடஅடடா என்னேசுகம் அதையிதிலே கண்டேன்


அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Feb 22, 2013, 3:32:22 PM2/22/13
to santhav...@googlegroups.com

       சே, என்னே வாழ்க்கை!

இருந்தென்ன எழுந்தென்ன இருகால்கள் நடந்தென்ன
இந்த இடம் சொந்தமில்லையே
அருந்தென்ன அருஞ்சுவைகள் அளித்தென்ன புசித்தென்ன
அடிவயிற்றில் நிற்பதில்லையே
பெரும்மன்னர் படைகளென்ன பொற்கவசம் வாள்சுமந்து-
இருந்தென்ன போவதுதனியே
வருந்தென்னைக் குருத்தன்ன வாழையிலை பொலிவன்ன
வாளெடுக்க  துண்டுகள்தானே

சரிந்தென்ன நிமிர்ந்தென்ன சாய்தலின்றி வளர்ந்தென்ன
சார்ந்துவிதி சாம்பலாக்குதேன்
எரிந்தென்ன புகைந்தென்ன எழுங்கடலின் அலைபெருகி
எடுக்கயுயிர் ஊர்புகுந்ததேன்
புரிந்தென்ன அறிந்தென்ன புவியெழுந்து நடுநடுங்கப்
புதைகுழியில் போய்விழும் வாழ்வே
கரியென்றே உடலழியக் கனலெழுந்த எரிமலையாய்
காணுவதும் பூமியின்கோபம்

சிரித்தென்ன பகைத்தென்ன சிங்காரம் புரிந்தென்ன
சிறுமைகொண்ட வாழ்விதுவன்றோ
உரித்தென்ன உடைத்தென்ன  உடலழிந்துபோகையிலே
ஒன்றுமில்லை வெறுங்கரமன்றோ
கரித்துண்டைக் காவிமனம் கற்பனையில் வாழுகிறோம்
கஸ்தூரி சந்தணமென்றே
எரிக்கின்ற வேளயிலும் எழும் புகையும் ஏற்றதில்லை
இருந்தவரை ஆணவமும் ஏன்?

உருண்டென்ன வளைந்தென்ன உதய ஒளிச் சூரியனை
உலகுவிட்டு இருளில் ஓடுதே
இருண்டென்ன விடிந்தென்ன இரவுமென்ன பகலுமென்ன
ஏதுமொளி வாழ்வில் இல்லையே
நடந்தென்ன கிடந்தென்ன நடனமிட்டுக் குதித்தென்ன
நடுவனத்தில் விட்டதாகுதே
குடந்தேனைக் கொள்ளவெனக் குறுந்தடியைக் கைபிடிக்கக்
கொட்டியது குழவி மொத்தமே

கடந்தென்ன பாய்ந்தென்ன கடலெனவே துயரிருக்க
கருணையுள்ளம் ஒன்றுமில்லையே
இடந்தன்னை இழந்ததெமது இன்பவாழ் வழிந்தபின்னும்
இன்றுகூட தீர்வுஇல்லையே
படந்தன்னைப் பிடிததவரும் பாதிவழி திரிந்தவரும்
பருகிய நீர் பரமபோதையோ
நடந்ததென்ன அழிந்ததென்ன நல்லதமிழ் காப்பதற்கு
நாதியற்ற நீதிவாழ்ந்ததோ

வருந்தியென்ன வந்திடுமோ வளங்களினிப் பெறுவதுண்டோ
வருவதன்முன் காக்க வில்லையே
திருந்தியென்ன தேறியென்ன திரும்பியின்று பார்த்துமென்ன
தேவையான போது இல்லையே!
அருந்தவமாய் பிறந்த இனம்  அழகுதமிழ் வீரகுணம்
அழியவென்று விதிபடைத்தபின்
உருவழிந்து வாழ்வதிலும் உணர்விழந்து சோர்வதிலும்
உறுதியிட்டு முடிவு செய்வதோ

பருந்தன்ன குஞ்செனவும் பழகும்விதி மாற்றவெனப்
பறந்துசெல்லு வானம் எட்டிடும்
கருந்தேளும் அரவங்களும் காணும்வழி நீநடக்க
கவனமெடு பாதை கிட்டிடும்
மருந்தென்ன மாயமென்ன மனதிலொரு திண்ணமெடு
மாற்றமொன்று கையில் வந்திடும்
தரு, தென்னை பனைமரமும் தலைநிமிர்ந்து வாழ்வதென
தமிழ்மகனே நீயும் வாழ்ந்திடு !

kirikasan

unread,
Feb 26, 2013, 2:46:57 PM2/26/13
to சந்தவசந்தம்

இதுவும் ஒரு மணிவிழியின்கதை .ஆனாலும் புதிய கதை புதிய பார்வை.
இது யாரையும் குறித்தது அல்ல. நல்ல தூய நோக்கத்துடன் ஈழ தேசத்தை குறித்து
எழுதப்படும் ஒரு கற்பனைகதை. இதை ஒருகருவைமனதில் வைத்து தொடங்கிவிட்டேன் .
முடிப்பதற்கு சக்தி உதவ வேண்டும். இடையில் நிற்காது என நம்புகிறேன் .
அனைவரது வாழ்த்துக்களும் தேவை


சிங்காசனம் -1

கூடுமுயிர் ஓடும்வரை ஓடுமிருகாலும் நடை
போடும் நடம் காணுமே‌ நிதம்
தேடும்விழி மூடும்வரை தேகம்சுடும் நாளுமிசை
பாடிமனம் ஆடுமேசுகம்
நாடுமினிப் போதும்சுடு காடுமுன தாகுமெனப்
போடும்விதி மாறுமே கணம்
ஓடுமுயிர் கூடுமுடல் சூடும்எரி தீயிடையே
கூடுமெனப் போகுமே வானம்

நாடும்மகிழ் வோடுநடை போடுமெவர் வாழ்வில்பெருங்
கேடுமொரு வேளைவரும்கொள்
ஊடும் அதில் துன்பமெமைத் தேடும்வரும் சேருமதன்
பாடும்பெரும் பாடெனவே காண்
சூடும்அனல் தீண்டுமெனத் தீமைமன தோடும்பல
காயமதை ஆக்குமே உளம்
பீடும்பிணி யாகும் அதில்மூடும் இருள் கூடும் ஒளி
போயும் படு நோவுகள் எழும்


நாடுமதை யாளுமொரு நல்லரசன் ஆனவனின்
தீரம் பலவீன மாவதோ
காடும் அதில் வாழ்மிருகம் காணும்பெருங் கோரமுகம்
காவலனின் தோற்றமாவதோ
வீடும் மனை மக்களிவர் வேண்டுமுயிர் காப்பதொன்றே
வேந்தனவன் வேலையல்லவோ
கேடும் கொலை துன்பமெனக் கீழ்விலங்கென் றானவனை
கொற்றவனாய் காணல் நீதியோ

1. இரவின் மடியில்

மணிவிழி புரவியின் சிறுநடை பழகிடு
மதனுடை யசைவுதனில்
அணியெனும் நினைவுகள் மனமதி லெழவொரு
அதிதுயர் நிலைகொண்டாள்
தணிவது இலையென சடசட ஒலியெழத்
திரண்டது மழைமுகில் வான்
துணிவினை யெடுமனம் திகழ்ந்தது பொலிவொடு
துயரெனும் கனம் பெறினும்

விளைந்திடு இருளெனும் வியன்தரு கருமையும்
விறுவிறு எனக்கவிய
குழைந்திடு குளிர்மையும் குலவிட உடலிடை
குளுகுளு எனுமுணர்வும்
வளைந்திடும் தெருவினில் விரைந்திடும் கணமதில்
வருவது பெருமழையாம்
உழைந்திடத் துயரமும் உளமதில் மெதுவெழ
எதிரினில் குடிகண்டாள்

இடியுடன் புயலெழும் இறுகிய கருமையில்
இயல்புற மனமஞ்சி
கொடிதெனும்‌ தனிமையும் கொளுமனம் வெருகிட
குடிசையில் வருமிரவை
விடியலின் வரையங்கு விடுவது றிவென
விரைந்திட மனம் கருதிப்
படிமலர் நிறையிரு பகுதியில் குதிரையும்
பணிவுற நடைசெய்தாள்

அரவமும் சிலஎழில் அசைவுறு மலரிடை
அமைதியில் நெளிவதையும்
தரதர எனத்தொலை தனில்விழு அருவியின்
துளிதெறி யொலியிடையே
புரவியின் அசைவினில் பிறந்திடு மொலிசெவி
புகுந்திடச் சிறுவயதோர்
சரசர எனஉளம் சிறுபயம் மருவிட
சடுதியில் கலைந்தனர் காண்

மரமதின் மறைவினில் வருபவர் எவரென
மலர்முகம் துயரறவும்
கரமதை உயர்வினில் விடைதரும்குறியென
கனிவுடன் அசைவுசெய்தார்
வரமிடும் முகிலிடை திரியெழிற் தேவதை
வருவது புவியெனவே
உரமெடு திருமுக ஒளியுற மணிவிழி
எழில் தனில் வெளிநடந்தார்

மெலச்சிறு குடிசைகள் பரவிய திசையினில்
மறுத்திடு மனதுடனே
பலயிடி பொலிந்திடும் பசுமைகொள் முகில்களும்
பதுமையே கவனமென
நிலமிசை பெருந்துயர் நினையடை வதுவென
நிகழ்வுகள் எதிரொலிக்க
குலமகள் விதிகண்டு பிடிபிடிபிடியென
கொடிதுகொண் டுறுமியதோ?

(வளரும்)

kirikasan

unread,
Feb 27, 2013, 1:17:37 PM2/27/13
to santhav...@googlegroups.com
(உடல்நிலை மீண்டும் மோசமானதால் சிறிது  கோபத்துடன்)            
                 செத்தால் சிரிக்கவோ தேவி?

செத்தேனாம் என்றாற் சிரித்திடவோ யன்னைநீ சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே இனிப்புங் கலந்துன்னை இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில் விரும்பித் தமிழூன்றி விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று கத்திக் கதறுமுயிர் காவாயோ சொல்

உற்றேனோ உள்ளத்தே யுருகித் தமிழ்சொல்லும் உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத்  தழல் தனை ஆற்றென்னச் சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ பற்றவே கூற்றுவன் பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடல் நீறாக்கி நீரிடவோ நெஞ்சங்கொண்டாய்

கற்றேனோ யின்பங்கொள் கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச் சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில் பரவச வுணர்வீந்து  பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும் முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே

சொல்லுஞ் சுவைக்கரும்பில் சுற்றிமலர் பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே வித்தகனாய் வைத்துமங் கதன்போ லென்னை
அல்லு ம் பகற்கணைகள் அள்ளியெறி என்றுவிதி யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம் தீயெண்ணங் கொள்ளென்னச் செய்தவர் யார்?

எள்ளு மிவன் என்றே யெண்ணியுன் திருப்பாதம் கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத் தீட்டிய நல்லோவியத்தை திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச ஒளிசெய்தாற் போலென்னை உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித்  தேயென்று கொடும்வரத்தைக் கொடுத்ததேனோ

அள்ளித்தா எனதன்பின் அன்னையிலும் மேலான அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது குற்றுயிராய் கிடவென்று கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய் வானத்தின் கதிரெறிக்கும் வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச் சுந்தரமாய் தூயதமிழ் செய்யென்றாக்காய்

Pas Pasupathy

unread,
Feb 27, 2013, 2:16:26 PM2/27/13
to santhav...@googlegroups.com
தேவி நிச்சயம் கேட்பாள், கிரிகாசன்!

2013/2/27 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

Ramamoorthy Ramachandran

unread,
Feb 27, 2013, 2:52:29 PM2/27/13
to santhav...@googlegroups.com
உள்ளேதான் எழுந்தருளும் உயிர்க்காளி 
       உமக்குள்ளே ஓட்டங்காட்டி 
கள்ளத்தால் சிரித்திட்டாள் அதைஏதோ
     என்னவோஎன்  றெண்ணி நீவிர் 
உள்ளத்தில் பதைப்புறுதல் இனிவேண்டா 
     உள்ளத்தில்  ஆர்வங்  கொண்டால் 
அள்ளிக்கொள்  வாள்நந்தாய்,அவள்வாழும் 
     வரைநும்மை  வாழ  வைப்பாள்.

வாழ்க, நலம் வளம் பெற்று. புலவர் இராமமூர்த்தி.

2013/2/28 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

kirikasan

unread,
Feb 28, 2013, 5:52:20 AM2/28/13
to santhav...@googlegroups.com

பசுபதி ஐயா அவர்களுக்கும் , புலவர் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்! தாங்கள் கூறியதுபோல்.....!


    சிரிப்பில் மலர்ந்தேனோ

துள்ளி எழுந்துவிட்டேன் - மலர்த்
   தோட்டத்து வண்ணமென
அள்ளி குளித்துவிட்டேன் - அருள்
    யாக்கையில் தேக்கமுற
வெள்ளிமுளைத்தவிடி - காலை
    வேளையில் தேறிவிட்டேன்
கள்ளி அவள் நிஜம்தான் - எந்தன்
    காலத்தை யீந்தவளாம்

புள்ளி மயில் விரித்தால் - அந்தப்
    பொன்னெழிற் தோகையிலே
தள்ளி கிடந்தலைகள் -  அது
     தாங்கிடும் பொய்கையிலே
பள்ளிக் கலைவகுப்பில் - அந்த
     பாலகர் புன்சிரிப்பில்
உள்ளவள் என்னிடையே - ஏனோ
     உள்ளம் அழவும்செய்வாள்

நள்ளிரவின் கருமை - பின்னர்
    நாளிற் பகலொளியை
தெள்ளமுதென் கவியை - பின்னர்
    தேக உடலிழிவை
பிள்ளையெனை அணுகி - அன்பில்
    பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
    கொள்ளவும் செய்திடுவாள்

வள்ளமதில் கடலில் - எனை
    வைத்துப் பயணமிட்டாள்
உள்ளமதில் தெளிவை -  தந்து
    ஒளிர் விளக்கமானாள்
வெள்ளமென அருள்வாள் - பின்னர்
    வேடிக்கையாய் அடிப்பாள்
பிள்ளையென் றாகிவிட்டேன் - இவள்
    பாசத்தில் ஏது செய்வேன் !

***********

kirikasan

unread,
Feb 28, 2013, 6:16:34 AM2/28/13
to santhav...@googlegroups.com
இறுதி நேர தவறு கவிதையில் ஏற்பட்டுவிட்டது.. திருத்தம் இதோ



நள்ளிரவின் கருமை - பின்னர்
    நாளிற் பகலொளியை
அள்ளி யளிப்பவளோ -  கவி
   ஆற்றலும் ஈந்தபின்னே

பிள்ளையெனை அணுகி - அன்பில்
   பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
   கொள்ளவும் செய்திடுவாள்

**************

kirikasan

unread,
Mar 1, 2013, 2:08:28 PM3/1/13
to santhav...@googlegroups.com
 இது எனது தனிப்பட்ட கருத்து.

இலக்கியத்தில் காதலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நான் நிறைய தலைவன்,  தலைவி பேச்சுக்களாக கவிதைகள் தந்திருந்தாலும்
அவை தனித்தே  ஒதுங்கி நிற்கின்றன  அதனால் மனதில் தோன்றியதை இங்கே போட்டு உடைக்கிறேன். தவறானால் தெரிவிக்கவும்

           காதல் கவிதை

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நிறைகயலும் அலைகளையும் உருவாக்கினாள்
பார் செய்து பாரில்பல பனிமலைகளும், 
   பளிங்கெனவே உருகிநிலம் பரவச்செய்தாள்
நேர் நிற்க நில்லென்று தினகரனையும் 
   நிலவதனைச் சுழன்றோட நிகழ்வு செய்தாள்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமனிதரும்
 சேர்ந்து வாழென்றேனோ சிந்தை கொண்டாள்

யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி  வடிவுமீந்தார்
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்   
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வுசெய்து
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்

விண்ணாக்கி வெகுகதியில் கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற சக்தி தேவி
ஆணாகப் பெண்ணாக இருபாலரை
  அறிவீந்த இயற்கைதனும் உண்டாக்கியே
கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கி உணர்வீந்தவள்
மண்ணாகப் போகுமுடல் மதனாக்கிடும்
  மலர்கணையில் மனமொன்று படவும்வைத்தாள்

வானாக்கி வைத்துப் பெரு வளமோங்கிட
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில சுவையாக்கியும் 
  செய்தபின்னர் தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலம்பெருக விதி செய்தவள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை ஈர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ

இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
   இளைமையே தாய்மைக்கு ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதேவி குறைசெய்வளோ
  குற்றமவல் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாளோ

ஆதலினால் காதல்தனைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலினைப் பேசுவது  களங்கமில்லை
  கருணையுடன் நோக்குங்கள் காதல்தன்னை
பாதகமேயில்லாது பாடும் கீதம் 
  பனிமலையும் சுடுகதிரில் உருகுமாற் போல்
நாதயிசை நாட்டியங்கள் செய்தே யன்பை
  நல்லுணர்வு காதலினைப் போற்றலாமோ?

kirikasan

unread,
Mar 4, 2013, 2:25:23 AM3/4/13
to santhav...@googlegroups.com

       என்றும்  வாழுவேனாம்

கொட்டும்மழை தட்டியிடி மின்னினாலும்
  கூடிவருந் தென்றல்புய லாகினாலும்
தொட்டுமழை மண்ணில்வெள்ளம் பொங்கினாலும்
  துன்பம் பந்தா யென்னை விளை யாடினாலும்
வெட்டியிரு துண்டெனவே வீசினாலும்
 வேளைகண்டு தீயைச்சூழ வைத்துயாரும்
சுட்டெனையே சாம்பலாக்கிக் கொட்டினாலும்
  சுந்தரத் தமிழி லென்றும் வாழுவேனாம்

குட்டித் தலை மொட்டையனென் றாக்கினாலும்
  கும்மாளந்தான் போட்டுக் கூத்து ஆடினாலும்
பெட்டியிலே வைத்துப் பின்னை சுற்றினாலும்
    பெண்கள் வீட்டில் நிற்கவீதி தள்ளினாலும்
தட்டிமீது வைத்துத் தோளில் தூக்கினாலும்
    தங்க வண்ணத் தீயிலிட்டு சுட்டபோதும்
பெட்டகத்துள் வைத்த கவிப் புத்தகத்திலே
     பேசுந்தமி ழாயிருந்து புன்னகைப்பனோ
  
கட்டியுடல் கங்கைநீரில் விட்டக் காலும்
   கண்ணிழந்து காணுங்காட்சி பொய்த்தபோதும்
சுட்டஉடல் வேகிப்புகை தள்ளினாலும்
   சின்னவிழி கண்டு துயர் உற்றபோதும்
வட்டமாக நின்றவர்கள் எட்டப் போயும்
   வந்தவனைக் காணவில்லை வையம் என்றும்
விட்டுப் பெரு மூச்சுடனே வீடு சென்றும்
    விந்தையென் தமிழ்க்கவியில் வந்துநிற்பேன்

சட்டிதனை ஒட்டைபோட்டுத் தந்தவன் வந்தே
   சஞ்சலத்தில் வாடும்பொருள் கேட்டபோதும்
வட்டியென்ன கொள்முதலும் நட்டம்போகும்
  வையகத்தில் பட்டதொல்லை விட்டதாயும்
முட்ட மூச்சு கட்டியுயிர் எட்டப்போயும்
   முத்தமிழின் இன்னிசையில் மெல்லக்காட்சி
இட்டுவெல்லத் தேன்தமிழில் எந்தன்பாவில்
    இன்தமிழின் சொல்லடுக்கில் வாழுவேனாம்,

******************

kirikasan

unread,
Mar 6, 2013, 2:42:48 AM3/6/13
to santhav...@googlegroups.com

      இவரில்லையேல் எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற திங்கள்
   மறுநாளி லிலையாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலரும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலும்
  கதியின்றித் தொலையோடலாம்
எளியோரி னுயிரோடு விளையாடுமிவனை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமுள்ளே கொண்டு
  பிரியாயென் மகனென்னுமோ    
தெரியாத இரவோடு எழுமாழி சென்று
  திகழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீயின்
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதொன்று மில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளியில்
   தேயாமல்  நிலவோடுமோ  
அருகாமை கொடியொன்று அலைந்தாடி யின்பம்
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே யென்று
  புதிதா யோர்வழி காண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்டநாட்கள்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் ஊடே
    விளைகின்ற ஒலி பொங்குமோ
உருமாறி கருமாறி உலகத்தில்  ஏங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயத் தலைவி
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

kirikasan

unread,
Mar 8, 2013, 7:11:13 AM3/8/13
to santhav...@googlegroups.com
               ஏங்கும் நெஞ்சம் !

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம் கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம் !

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ  
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு  சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றார்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலாக
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்!

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொலப்
பிள்ளை யினைத்தேரிட்டும், பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன், மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமா யிவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக்  கனிவீழ அடிப்பர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து  நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

Ramamoorthy Ramachandran

unread,
Mar 8, 2013, 8:05:03 AM3/8/13
to santhav...@googlegroups.com
வருகின்ற அசைவெலாம் வளம்சேர்க்க வேஎன்ற
      மகிழ்ச்சியை  நீ எழுதினால், 
வானாண்டு பூமிக்குள் வளம்கண்ட  மானுடம் 
      மறுபடி எழுந்து  வருமே!
தருநின்று  நிழல்தரும் தளிர்த்திடும் காய்த்திடும் 
      சலிக்காமல் கனிகள் தருமே!
தாவென்று கேட்போரைக் குழந்தையாய் எண்ணியே 
       தன்னையே தந்து விடுமே!
பருவங்கள் மாறினால் பண்புதான் மாறுமோ?
      பகலென்றும் இரவாகுமோ?     
பாலூட்டும் பசுசீறி  நஞ்சைச்சு  ரக்குமோ?
      பால்நிலா வெயில் வீசுமோ?
உருவாக்கும் மனிதனின் உள்ளத்தில் கள்ளமே 
     உண்டாகா  தென்றன் நண்பா,
ஓடிவரும் அலைமீண்டும் ஓடிவரும் உன்கையில் 
     ஒளிமுத்தம் பலவும் தருமே!
08/03/2013 புலவர் இராம மூர்த்தி.

  


 
       
 

On Fri, Mar 8, 2013 at 5:41 PM, kirikasan <kana...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kana...@gmail.com) Add cleanup rule | More info
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

kirikasan

unread,
Mar 8, 2013, 8:20:54 AM3/8/13
to santhav...@googlegroups.com
ஐயா  தங்கள் கவிதைக்கு நான் அடிமை. என்னே அழகு! உள்ளம் பூரிப்பில் தவிக்கிறது. வாழ்க வாழ்க வாழ்க!கோடி ஆண்டுகள் வாழ்க! (என்னை குறித்து  வரும் கருத்துக்காக அல்ல.உண்மையாகவே எழுதுகிறேன்0

Ramamoorthy Ramachandran

unread,
Mar 8, 2013, 8:42:12 AM3/8/13
to santhav...@googlegroups.com
வணக்கம் கிரிகாசன், கடந்த செப்டம்பர், அக்டோபரில் லண்டன்  லேவிஷாம்  சிவன் கோயிலில் பேசினேன். மீண்டும் வருவேன்.
புலவர் இராமமூர்த்தி  

On Fri, Mar 8, 2013 at 6:50 PM, kirikasan <kana...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kana...@gmail.com) Add cleanup rule | More info

ஐயா  தங்கள் கவிதைக்கு நான் அடிமை. என்னே அழகு! உள்ளம் பூரிப்பில் தவிக்கிறது. வாழ்க வாழ்க வாழ்க!கோடி ஆண்டுகள் வாழ்க! (என்னை குறித்து  வரும் கருத்துக்காக அல்ல.உண்மையாகவே எழுதுகிறேன்0

kirikasan

unread,
Mar 10, 2013, 5:25:43 AM3/10/13
to santhav...@googlegroups.com
நல்லது ஐயா ! சந்திப்போம். மிக்க மகிழ்ச்சி you tube ல் தங்கள் பேச்சை தேடி கேட்டேன். பார்த்தேன்
அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Mar 10, 2013, 5:43:23 AM3/10/13
to santhav...@googlegroups.com

         என் மகளே, ஏது  சோகம்?

தேகமதில் நீதுடித்துச் சோகம் கொள்வதென்ன
தேசழிந்த தாய்விசும்பி தோன்றுவதேன் மகளே
நாகமொன்று சீறுவதாய் நேரும்பெருங் கோபம்
நீயெடுத் தேன்மகளே நெஞ்சில் நிறை சோகம்
தாகங் கொண்ட தேதுவெனத் தண்ணிலவே கூறாய்
தந்துனையே சந்தணமாய் தண்மையுறக் காண்பேன்
ஆகவென்ன செய்வதிடுவேன் அன்புமனம் காணும்
ஆனந்தமும் வந்திடவே  ஆணையிடு மகளே

மேகமதிற் பாரொளிரும் தாரகைகள் பொன்னா
மின்னுமவை நான்பறித்து மாலை செய்து தரவா
ஏகமதில் வாசமெழ யில்லையெனிற் காற்றில்
ஏறிக் கடல்தாண்டி மலை உச்சிமலர் கொளவா
தாகமெனிற் தேடிச்சுவை தேன்கனியின் சாறு
தங்கமது கிண்ணமிட்டு  தின்னவென்று தரவா
மேகம்விடும் தண்ணிலவை மெல்ல நீருள்வைத்து
மென்விரலால் தொட்டிடவே என்மகளே செயவா

கத்துங்கடல் ஆர்ப்பரித்துக்  காணுமதில் உலவும்
கரையெழுந்து விழும்அலையால் கால்கள் ஈரமிடவா
சத்தமிட்டுக் கூடுமெழிற் சோலைமரக் காவில்
சேர்ந்தயினக் குருவிகளைச் சுற்றியாட விடவா
மெத்தையெனப் பஞ்சுமுகில் பிய்தணைகள்கட்டி
மெல்லவுந்தன் மேனிதொட்டு மீதுறங்க விடவா
முத்தமிட ஆழ்கடலில் மின்னுமொளி சந்திர
மங்குமெழிற் சூழ்நிலையில் மடியுறங்க விடவா

புத்திரியே பள்ளியிலே பல்கலைகள் கற்றுப்
பேர்புகழிற் தேவதைகள் போற்றும் வகைசெயவா
சித்தமெல்லாம் அற்புதமே செங்கரும்பில் சிந்தும்
சாற்றினிலு மில்லையெனும் தேனினிமை தரவா
சத்தமிட்டு நீசிரித்தால் சிந்தனை யானந்தம்
சந்தமிடும் செந்தமிழில் பொங்குகவி தரவா
அத்தனையோர் அன்புளமே ஆகிடும்வானுதயம்
ஆதவனின் கதிரெனவே என்றுமுனைத் தொடவா

மெத்தையெனும் மேகங்களின் மெல்லியதோர் ஓட்டம்
மேலெழுந்து வான்பறந்த பட்சிகளின் கூட்டம்
முத்தமிட மலைமுகட்டை மேகம்வந்துகூடும்
முட்டிவழிந் தோடும் நதி மெலச்சிணுங்கி வீழும்
சத்தமிடுங் குயிலினிசை சலசலக்கும் பொழில்நீர்
சாரல்தரும் மழைவிழுந்து சிலுசிலுக்கும் இலைகள்
அத்தனையும் கொள்ளும் சுகம் அன்புவழிப் பெண்ணே
அட அடடா மெய்மறக்க அள்ளியுனை அணைப்பேன்

kirikasan

unread,
Mar 10, 2013, 6:02:08 AM3/10/13
to santhav...@googlegroups.com
சில சிறு பிழைகள் திருத்தி


On Sunday, March 10, 2013 9:43:23 AM UTC, kirikasan wrote:

         என் மகளே, ஏது  சோகம்?

தேகமதில் நீதுடித்துச் சோகங் கொள்வதென்ன
தேசழிந்த தாய்விசும்பித் தோன்றுவதென் மகளே

நாகமொன்று சீறுவதாய் நேரும்பெருங் கோபம்
நீயெடுத்த தேன்மகளே நெஞ்சில் நிறை சோகம்

தாகங் கொண்ட தேதுவெனத் தண்ணிலவே கூறாய்
தந்துனையே சந்தணமாய் தண்மையுறச் செய்வேன்

ஆகவென்ன செய்வதிடுவேன் அன்புமனம் காணும்
ஆனந்தமும் வந்திடவே  ஆணையிடு மகளே

மேகமதிற் பாரொளிருந் தாரகைகள் பொன்னா
மின்னுமவை நான்பறித்து மாலை செய்து தரவா
ஏகமதில் வாசமெழ யில்லையெனிற் காற்றில்
ஏறிக் கடல்தாண்டி மலை உச்சிமலர் கொளவா
தாகமெனிற் தேடிச்சுவை தேன்கனியின் சாறு
தாங்குமெழிற் கிண்ணமிட்டு  தின்னவென்று தரவா
மேகம்விடத் தண்ணிலவை மெல்ல நீருள்வைத்து

மென்விரலால் தொட்டிடவே என்மகளே செயவா

கத்துங்கடல் ஆர்ப்பரித்துக்  காணுமதில் ஓடும்
கரையெழுந்து விழு மலையால் கால்கள் ஈரமிடவா
சத்தமிட்டுக் கூடுமெழிற் சோலைமரக் கிளையில்

சேர்ந்தயினக் குருவிகளைச் சுற்றியாட விடவா
மெத்தையெனப் பஞ்சுமுகில் பிய்த்தணைகள்கட்டி

மெல்லவுந்தன் மேனிதொட்டு மீதுறங்க விடவா
முத்தமிட ஆழ்கடலில் மின்னுமொளி சந்திர
மங்குமெழிற் சூழ்நிலையில் மடியுறங்க விடவா

புத்திரியே பள்ளியிலே பல்கலைகள் கற்றுப்
பேர்புகழிற் தேவதைகள் போற்றும் வகைசெயவா
சித்தமெல்லாம் அற்புதமே செங்கரும்பில் சிந்தும்
சாற்றினிலு மில்லையெனும் தேனினிமை தரவா
சத்தமிட்டு நீசிரித்தால் சிந்தனை யானந்தம்
சந்தமிடும் செந்தமிழென் பொங்குகவி தரவா

அத்தனையோர் அன்புளமே ஆகிடும்வானுதயம்
ஆதவனின் கதிரெனவே என்று மொளி தரவா


மெத்தையெனும் மேகங்களின் மெல்லியதோர் ஓட்டம்
மேலெழுந்து வான்பறந்த பட்சிகளின் கூட்டம்
முத்தமிட மலைமுகட்டை மேகம்வந்துகூடும்
முட்டிவழிந் தோடும் நதி மெலச்சிணுங்கி வீழும்
சத்தமிடுங் குயிலினிசை சலசலக்கும் பொழில்நீர்
சாரல்தரும் மழைவிழுந்து சிலுசிலுக்கும் இலைகள்
அத்தனையும் கொள்ளும் சுகம் அன்புவழிப் பெண்ணே
அட அடடா மெய்மறக்க அள்ளிநிதம் தருவேன்

kirikasan

unread,
Mar 11, 2013, 6:21:01 AM3/11/13
to சந்தவசந்தம்
சொல்லாய் கிளியே

வேதனை மட்டுமே சொந்தங்க ளாவது
ஏனடிநீயும் சொல்லாய் கிளியே
வெந்தபுண் ணில்மீண்டும் நொந்துகொள் ளும்விதம்
தந்ததுமேனிப் பொல்லா விதியே
செந்தமிழ் மாந்தர்சு தந்திரம் எண்ணிடச்
செல்வதுதூர மென்றாம் கிலியே
எந்தன்குல மென்று மின்னல டைவதி
லின்பங் கொண்டாடு வதேன் உலகே

வந்தவர் போவதும் சென்றவர் மீள்வதும்
உண்டென்றுசொல் லுவையோ கிளியே
அந்த வகையினில் சென்றநம் சொந்தமும்
வந்துபிறப்ப துண்டோ இனியே
சுந்தர மைந்தரும் செவ்விழி மாதரும்
செந்தமிழ்மீது கொண்டோர் அனலே
சந்தண மாமரம் வெந்தது போயிந்த
சொந்தமுயிர் கொள்ளுமோ துளிரே

அந்தி பகலெந்த நேரமும் சிந்தனை
கொண்டசு தந்திரவாழ் வினையே
வந்திட எண்ணமும் கொண்டிங்கே யேங்குது
வந்தொரு நீதி சொல்லாய் எமையே
சந்திரன் சூரியன் நின்றுலாவும் வெளி
கொண்டது போற்சுகங் காண் உலகே
தந்துவிடுதலை கொள்ளு மின்பம் விட்டு
எங்களினம் கொல்வ தேன் தனியே

நிந்தனை விட்டுளம் நேர்மையைக் கொண்டிவர்
நீதிவழி செல்வ ரோ கிளியே
பைந்தமிழ் கொன்றிடும் பாவியர் எம்மிடை
பற்றுதல் கொள்ளுவரோ பொய்யிதே
வெந்தவர் சாம்பலில் வீரம் முளைத்திட
வேகமுடன் நடை கொள் மகனே
அந்தர வானிடை நீந்தும் பொருளென
ஆனவாழ் வின்றிமெய் வெல்லும் தமிழே !

Siva Siva

unread,
Mar 11, 2013, 7:52:00 AM3/11/13
to santhav...@googlegroups.com
Due to the boxbe issue that some members had, this thread had got split as a new thread with extra * * at the end of subject line. 
So, please continue your future posts in this original thread to keep continuity. (Your recent post was in the other thread with * in the subject line).

2013/3/8 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
Mar 12, 2013, 2:11:29 PM3/12/13
to சந்தவசந்தம்
நான் புதிய கூகிள் முகத்தோற்றத்துக்கு மாறியிருந்தேன். அதனால் நடந்ததோ
தெரியவில்லை. அது ஒரே குழப்பமாக உள்ளது. இப்போது பழையதுக்கு
மாறியுள்ளேன்.


n Mar 11, 11:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> Due to the boxbe issue that some members had, this thread had got split as
> a new thread with extra * * at the end of subject line.
> So, please continue your future posts in this original thread to keep
> continuity. (Your recent post was in the other thread with * in the subject
> line).
>

> 2013/3/8 kirikasan <kanara...@gmail.com>

kirikasan

unread,
Mar 12, 2013, 2:13:54 PM3/12/13
to சந்தவசந்தம்
வாழ ஒரு வாழ்வு

நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே - இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு - இவை
அல்லதென்றாகியும் மற்றவர் போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

****************

Message has been deleted

kirikasan

unread,
Mar 13, 2013, 9:02:40 PM3/13/13
to சந்தவசந்தம்
தாகம்

ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வா ழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர்
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும்
காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
சந்தண மார்பெடு தீரம் கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
புத்தொளி காணுமோர் தாகம்

Message has been deleted

Ramamoorthy Ramachandran

unread,
Mar 20, 2013, 4:16:06 PM3/20/13
to santhav...@googlegroups.com
வணக்கம், கிரிகாசன்  
ஆயிர மாயிரம் தோள்கள  சைந்தன, 
         ஆர்த்தது பேரொலியே! - ஓடை 
போயொரு பொங்கிடு மாநதி யாகிடப்
         பொங்குது பேரலையே! -சிறு   
சேயழு  தேஇனிக்  கால்களு  தைத்திடின் 
         சீக்கிரம் வளர்ந்திடுமே! -அது  
தாய்மடி பற்றியே தன்பசி  கூறிடும் 
        சமயம்நெ  ருங்கிடுமே!

சிறுபொறி  பற்றிச் சிலமணி யாய்விடின்  
      சீறிவெ  டித்திடுமே!- அடுத்
துறுவது  சூழ்ந்துள  காட்டை எரித்திடு
     சூறைப்  பேரெரியே!- அட,
பொறுத்தது போதுமெ  னப்புகல்  காலமும்
      பூத்தது, பார்மக்னே!-இதை 
அறிவித் திடவே அண்டங்கு லுங்கிட 
      அசனியி  டிக்கிறதே! 
      
விடிவினை நோக்கிவி   ரைந்தது  காலம், 
        வெள்ளிமு ளைத்ததுவே!- உளத் 
துடிப்புடன்  ஒற்றுமை  துலங்கிடக்,  கோபம்
        சுரக்குது, வீரத்துடன்!- இனி 
இடிவதிங்  கசுரர்  கோட்டை எனின்உன் 
      எண்ணம் நிறைவேறும் -நீ 
நெடிதுநி  னைந்துன்  உறவினைச்  சேர்தல் 
      நிச்சயம்  நிச்சயமே!
புலவர் இராமமூர்த்தி.20/03/2013 
       
         
  
      
                   

 
         
  
      
                   


2013/3/20 kirikasan <kana...@gmail.com>
இது ஏற்கனவே எழுத்தப்பட்டது .  இப்போது கலத்தோடு ஒத்துபோகிறது


     அன்பு முழக்கம்

தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ

முத்தி விசர்பிடித் துச்சி மரத்தினில்
பித்தம் பிடித்தவரும் - நின்று
நித்தமும் பெண்வர பொத்தென வீழ்ந்தவர்
நெஞ்சைக் கிழிப்பதுவும்
கத்திக் குரலிட்டுக் காடுறை பேயெனச்
சித்த மிழப்பதுவும் - இவை
உத்தம புத்தனும் போதி மரத்திடை
ஓதிய போதனையோ

குட்டிப் புழுதன்னும் தொட்டவர் கையினில்
கொட்டும் மயிர்கள் குத்தும் - அவை
பட்டுக் கடித்திட ரத்தச் சிவப்பிடும்
மொத்தம்வலி எடுக்கும்
கொட்டி விஷமதைப் புற்றுக் கறையானும்
கொள்ளி எறும்பதுவும் - அதை
முட்டி விட்டால்முழு மூச்சுடனே உயிர்
விட்டும் எதிர்த்து நிற்கும்

எட்டு அடிவளர் எம்மவர் இன்றுமே
தொட்டுக் கெடுத்தவனை - புது
பட்டுவிரிப்புடன் பஞ்சணைதூங்கிட
பாதம் பிடித்திருப்பர்
கட்டிய கைகளும் காலும்பிணைத்திட
சுட்டுக் கொல்லுமவனை - உள்ள
சட்டம் நெருங்கிட விட்டுவிடாதவர்
ஒட்டி உதவிசெய்வர்

சட்டம் குருடதன் கண்ணில் கருந்துணி
கட்டிவிட்ட துலகு - கரம்
தொட்டுமே அந்தகர் சொல்லென யானையை
விட்டது போலிருக்கு
முற்று மிருட்டறை மூடிக் கருமைக்குள்
கட்டியெமை யிருத்தி - தனி
தொட்டிவர் நீதியைச் சொல்லென கேட்டிட
சுத்தம் எது இருக்கு?

புற்றில் கரம்விடு, பூக்கள் பறித்திடப்
பெற்றிடு இன்பமென்றார் - இல்லை
சுற்றி உடல்பற்றிக் கொத்தும் அரவமென்
றெத்தனை நாளுரைத்தோம்
சுற்றிக் கழுத்தினில் ஒற்றைக் கயிறிட்டுச்
தூக்கிடும்போதினிலே - இன்று
முற்றும் பிழையிது மூச்சுதிணறுது
விட்டுவிடு என்கிறார்

செத்தவர் மீண்டும் சிதை பிரித்தே உயிர்
பெற்ரிட லேதுமுண்டோ - ஒரு
கொத்திப் பிரித்துடல் கொள்ளியிட்டபின்பு
கூடென ஏதுமுண்டோ
சத்தியத்தின் கண்கள் நித்திரை அல்ல, ஓர்
நித்திரபோல் நடித்தால்
எத்தனை நேரம் எழுப்பினும் தூக்கத்தை
விட்டுஎழுந்திடுமோ

தட்டி முதுகினில் வந்து சுதந்திரம்
தந்திடும் பூமியில்லை - இவன்
சட்டமதித் தெங்கள் தாயின் நிலம்தன்னை
விட்டேகப் போவதில்லை
முற்றும் உலகிது மெல்லத் திரும்பிட
இத்தனை செய்தயடா - அட
அற்புதம் தம்பிநீ அத்தனைவீறுடன்
ஆர்ப்பரித் தின்னும் எழு

பொங்கு மனத்திடை பொங்கும் கடலென
வெஞ்சினம் கொண்டுஎழு -அன்று
பொங்கி யெழுந்த எம்பெண்களின் சாபங்கள்
போய்ப் பகை வெல்ல எழு
பொங்கி வழிந்த குருதியைப்போல் நீயும்
பொங்கியெழு! புவியோர்
பங்கு எமதீழ மண்ணில் உரிமையை
பங்கிடும் மட்டும் எழு!

Chandar Subramanian

unread,
Mar 20, 2013, 9:31:37 PM3/20/13
to santhav...@googlegroups.com
மிக அருமையான சந்தம். முதலிரண்டடியில் பயிலும் எதுகை முறை, பாடல் முழுவதிலும் அமையப்பெற்றிருந்தால் மிக அழகாக அமைந்திருக்கும்.
 


 
2013/3/20 kirikasan <kana...@gmail.com>
இது ஏற்கனவே எழுத்தப்பட்டது .  இப்போது கலத்தோடு ஒத்துபோகிறது


     அன்பு முழக்கம்

தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

kirikasan

unread,
Mar 21, 2013, 3:52:53 AM3/21/13
to santhav...@googlegroups.com
  மனம் கனிந்த நன்றிகள் புலவர் ஐயா!

இன்று மிக களைப்பாக உள்ளேன் அதனால் கவிதை ஒன்று வேறு விதமாக..... கீழே!

kirikasan

unread,
Mar 21, 2013, 3:57:51 AM3/21/13
to santhav...@googlegroups.com
 நன்றிகள் ஐயா!  மிகவும் மகிழ்சி! தாங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் .

அன்புடன் கிரிகாசன்
************************


On Wednesday, March 20, 2013 5:31:37 PM UTC-8, Chandar Subramanian wrote:
மிக அருமையான சந்தம். முதலிரண்டடியில் பயிலும் எதுகை முறை, பாடல் முழுவதிலும் அமையப்பெற்றிருந்தால் மிக அழகாக அமைந்திருக்கும்.
 

kirikasan

unread,
Mar 21, 2013, 4:23:43 AM3/21/13
to சந்தவசந்தம்

வேண்டாமென்றால் என் செய்வேன்

வேண்டாமென்றால் வினையேன் என்னை
விட்டால் பறந்திடுவேன்
தாண்டேன் உந்தன் தர்மக்கனலை
தலைவி செய் வதையேன்
மாண்டான் என்றே மாந்தருலகில்
மறந்தே வாழ்ந்திடுவர்
ஆண்டேன் மாதம் வைத்தே என்னை
ஆக்கும் வேதனை சொல்

தோண்டேன் குழியை தூங்கேன் என்றே
தேகம் எனும்பாரம்
கூண்டே விட்டுக் கொள்ளே னென்று
சொன்னேனா யானும்
நீண்டே காணும் பிரபஞ்சத்துள்
நிற்கும் தெய்வத் தீ
மீண்டான் என்றே மின்னல் சுடருள்
மெல்லக் கருவாக்கு!

நாண்டே நானும் நின்றேனா காண்
நல்லோர் கவியென்றே
பூண்டேன் வேடம்புனைந்தேன் கவிதைப்
பூக்கள் தனைத் தூவித்
தூண்டேன் எனிலும் தீபத்திரியைத்
தொட்டே ஒளிசெய்தேன்
சீண்டேன் நின்னை சிரித்தே யிருந்தேன்
சினமேன் கொண்டாய் சொல்


ஆண்டேன் என்றே அங்கே ஒருவன்
அழகுத் தமிழ்கொன்றான்
பூண்டேன் புல்லேன் புழுவேன் எல்லாம்
போவென் றுயிர் வாங்க
மூண்டேன் தீயை முழுதும் கொல்ல
முனையா தவங் கொண்டாய்
நீண்டேன் துயரம் நெடுத்தே போக
நிலைத்தாய் சொல் சக்தி

-------------------

kirikasan

unread,
Mar 21, 2013, 5:04:25 AM3/21/13
to சந்தவசந்தம்
மன்னிக்கவும்! பழைய புரட்டுகிறேன். புதியனமட்டுமென்றால் விட்டு விடுவேன்

கண்டோம், ஆயின் கண்டிலோம்

வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன -நம்
காயும் நிலம் ஈரம் காணலையே

விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலையே

தேனைக் குடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனை யழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை

வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ

கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை

கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

88888888888888888888

kirikasan

unread,
Mar 23, 2013, 3:51:27 AM3/23/13
to santhav...@googlegroups.com
 
      பிரிந்தவர் சேரும்போது
   

ஒருநாள் இரவு உறங்கிக் கிடந்தேன்
ஓசை எதுவுமில்லை
பெருவான் வெளியில் பூத்தன மலர்கள்
பொலிந்தும் ஒளியில்லை    
வருவான் உயிராய் இணைவா னென்றே
வாசல் மூடவில்லை
தெருவில் நிழலோ ஒளியோ இல்லை
திங்கள் தோன்றவில்லை

திருநாள் வருமோ தோரணம் ஆடத்
துயரம் போகும்நிலை
அருகில் வந்தே அணைக்கும் துணையை
அறியேன் காணும்வரை
மெருகாய் இனிதாய் மேனிசி.லிர்த்தே
மென்மை பரவுங்கலை
தருமே உணர்வு தனைநான் எண்ணித்
தரையிற் உறங்குவளை

படபடவென்றே அதிரும்சத்தம்
பதறித் துடிதெழுந்தேன்
கடகடவென்று  காலடியோசை
கணமென் நிலைகுலைந்தேன்
தட தடஅதிர்வு தலைவா சலிடை
திடுமென் றோருருவம்
அடஎன் னதிசயம் அழகுத் திருமகன்
அவனின் நிழல்கண்டேன்

இதுநாள் வரையும் எங்கு சென்றாயோ
எண்ணம் விழியூடே
மதுகொள் மலரின் இதழாய் பனிநீர்
மருவத் துளிகொண்டேன்
பொதுவாய் தமிழும் தடந்தோள் உரமும்
பிரிந்தே காண்பதில்லை
எதுதான் இடையில் புகுந்தோ உறவும்
இதுநாள் வரையுமில்லை

விழிகள் கலங்க விரும்பிக் கலந்தோம்
வார்த்தை எதுவுமில்லை
மொழியின் துணையும் அவசியமின்றி
மௌனம் இணைத்த தெமை
வழியில் நின்றோர் கண்டோர் மாந்தர்
வாழ்க என்றுரைத்தார்
அழிவேயில்லை தமிழே நீயும்
அடைந்தாய் வீரமென்றார்

குளிரும்ஓடை குதித்தே நதியாய்
கொட்டியதோ அருவி
தளிரும் பூவும் தன்மை மெதுமை
தனைநேர் இதயமதில்
ஒளிரும் தீபம் உணர்வில் விடுதலை
உள்ளோர் திசைநோக்கி
வழியில் செல்வோர் மனதில் எழவும்
விரைந்தார் வீறுடனே!

(தமிழ்)
கண்கள் மயங்குது எண்ணம் அழிந்திடக்
காதல்தனை மறந்தே
வண்ண மிழந்திட எங்கு மறைந்தனை  
வாழ்ந்தவிதம் இழிவாம்
திண்ணம் தமிழிவள் மென்மையழிந்திட
தோல்வியிலே கிடந்தேன்
கண்ணியத் தோடெனைக் காவல் புரிந்திடக்
கைபிடித்தீர் கனிந்தேன்!

மறம் (வீரம்)
மண்ணில் பேய்கூடியே  மாஅரசாளது
மாண்டது நீதியெல்லாம்
உண்ணும் உணவிலும்  வஞ்சனைநச்சினை
ஊற்றி குழைத் தளித்தார்
கண்ணின் முன்னே படு பொய்கள் உரைத்திடப்
காலமும் நம்பியதோ
விண்ணில் தெய்வமதும் வேடிக்கை பார்நம்பி
விந்தை விதிகெடுத்தார்

அன்பொடு வாழ்ந்த எம் இன்பத்தமிழினம்
அல்லல் அழித்ததுபார்
இன்றுஅது பெரும் எல்லை கடந்தது
ஏற்றமினி அளிப்போம்
அன்னை கலைமகள் அன்புக் குழந்தைகள்
அங்கே எழுந்தனர்காண்
மின்னல் என வீரம் மேனி சிலிர்த்திட
மிக்கபலம் கொடுப்போம்

(தமிழும் வீரமும் இணைந்திட எழும்சக்தி அங்கே பரவுகிறது)

kirikasan

unread,
Mar 23, 2013, 4:14:32 AM3/23/13
to santhav...@googlegroups.com

கவிதை தந்தாள்

//ஒரு இணையத்தளதில் கவிதைப்போட்டியாம் ,கண்டேன்
போட்டிக்கு பாட்டெழுத என்னால் முடியுமா அதனால்........//


பாட்டெழுதப் பார்வதிக்குப் பாதியுடல் ஈந்தவனைப்
பார்க்கவெனக் கோவிலடி போனேன்
ஏட்டினிலே போட்டியினை எண்ணியொரு தீங்கவிதை
ஏற்றமுறத் தாவெனவே கேட்டேன்
நாட்டினிலே நாளிலன்று நாவினிக்க வோர் புலவன்
நீட்டியகை மீதுகவி யீந்தாய்
கேட்டவுடன் பாட்டெழுதிக் குற்றமெனக் கண்டவரை
போட்டுவிட்டதாகவும்தான் சொன்னார்

கேட்டுமொரு பாட்டினையே கூப்பிக் கரம் கொண்டிருக்க
கோவிலிடை சாமிகுரல் கேட்டேன்
”பாட்டெழுத வந்தவனுன் பாட்டினிலே பட்டழியும்
பாடுதனை எண்ணினையோ பாவி
பாட்டெழுதச் சொன்னவளும் பக்கமுண்டு பார்த்திருக்கப்
பாட்டெழுதக் கேட்டனை யுன்பாடு
பாட்டினிலே நானெழுதி பாடவென ஆகிவிடும்
பார்த்திருக்க ஓடியொழி என்றான்

ஓடு என்ற போதுமன தோடுகொண்ட ஆசைகளை
ஓடவிட்டே ஒடுமெண்ணம் இன்றி
ஓடு தலை மாலைகொண்டும் ஓடிநடம் பேய்கணங்க
ளோடு செய்யும் கூத்தன்நினை நம்பி
ஓடு ஏந்தும் யாசகனாய் உன்னை யெண்ணிவந்தவனை
ஒடுவென்பதென், கவிதையின்றி
ஓடுசுழல் பூமியிலே ஓடியுயிர் போய்விடினும்
ஓடுபவனல்லன் இவன் என்றேன்

நாடிவந்தபோது உந்தன் நாடுஎண்ணி வந்தனையோ
நாடுவதை ஈவதென்று எண்ண
நாடிதனில் ஓடும் கவி நாவிலெழக் கூறலின்றி
நாதனிடம் கேட்டதென்ன என்றாள்
நாடி நரம்பே யுறைய நான்வணங்கும் சக்திவர
நாதன்வேறு சக்திவேறென் றுண்டோ
நாடிய தொன் றென்றவனை நல்லினிய புன்னகையாள்
நான்வணங்கப் பூங்கவிதை ஈந்தாள்
 
**********************************

kirikasan

unread,
Mar 29, 2013, 5:10:32 AM3/29/13
to சந்தவசந்தம்
இது அனறைய நிலைமையில் எழுதியது பொய்யல்ல ஒரு பார்வை. பிழைகாணின்
கண்டனங்கள் தெரிவிக்கலாம்

தமிழ் சொல்ல.. உயிர்கொல்ல..!

தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி

அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியப் போனவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி

தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி

ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தேசமொன்று தமிழர் கையில் திருநாள் கொண்டதடி

வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
விளைவை அறியா மிருகம் வேளை எதிரி இல்லையடி
அயலில் ஆடு இலையைத் தின்று அம்மே என்றதடி
ஆகா இதுவே அருமைபோதும் உயிர் என்னென்குதடி

முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்நின்றான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்சிமிட்டி
முடியைவெட்டத் தேவையில்லை தலையைவெட்டென்றான்

முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமை என்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல

புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி

இனிதே வாழ்ந்தோம் இன்பமும்கொண்டோம் என்றும்அன்பிலடி
இன்றோ வாசல்கதவை திறந்தால் எருதில் ஒருவனடி
தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி

உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தால் அருகில் ’கத்தி’யடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் உறையுதடி

இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி கொடுமையடி
அருகில் வந்து கதவின் ஓரம் ஆபத்து நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைத் தின்னுதடி

தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைமை இல்லையடி
தமிழால் நலிந்தோம் நாமும்,நாளை இன்னோர் தேசமடி

உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பாரெம் விடையே உன்மீதி

காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்லக் கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்

kirikasan

unread,
Apr 4, 2013, 3:51:21 AM4/4/13
to santhav...@googlegroups.com
     ஆற்றுதல் ( அன்னையை இழந்தவளுக்கு)

பாசமும் பாவமும் கொண்டுபுனைந்தே
பால்வெளி வீதியிற் கோள்களுமிட்டு
தேசமு மாழியுந் தென்றலுங் கொண்டு
திங்கள் வலம்வரப் பூமியுஞ் செய்து
நாசமும் தீமைகொள் நாடுக ளாக்கி
நாம்பெறு மேனியை நீரொடு மண்ணும்
கேசமுந் தோலுடன் கொட்டவும் ரத்தம்
கூடியெலும் புடன் கொள்ளப் பிணைத்து

ஆசை பொறாமைகொள் ளகமும் வைத்து
ஆடித் துடித்திடு மங்கமும்செய்து
பாசை ,வினோத மெனப் பயி லாட்டம்
பேசி மகிழ்ந்தவர் பெண்ணவள் ஆணும்
கூசுங் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
கூடிக் குலாவெனக் கோலமுஞ் செய்து
பூசி மறைத்தொரு புன்மைகொள் மேனி
பூ இதுவேயெனக் காதிலும் சுற்றி

கூடி யிணைந்தொரு குழந்தையுஞ் செய்து
கொண்டபெருஞ் சுக மென்று மரற்றி
மூடி விழித்திட மோகமு மின்பம்
மெல்லச் சிரிப்பதில் மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள ஆவெனக் கத்தி
தென்ற லுடல்மணங் கொள்ள முகர்ந்து
ஓடிநடந்திடுஞ் செய்கை வியந்து
ஒரடியில் விழ உள்ளங் கலங்கிப்

பாலைக் குடித்திடப் பரவசமாகிப்
பார்த்தே யழநிலை பதைபதைத் தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் யழல்போலே
சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை யிருந்தருள் செய்கண நாதா
மென்மை வலித்திட செய்வது நீயா

என்றே துடித்தவ ளள்ளி யணைத்தே
ஆற்றிட எண்ணவு மரும்புக் காலால்
முன்னே யுதைத்திட முகமதிற் பட்டு
மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
தலையிடைகேசமும் பற்றியிழுத்தும்
கூனென மேனிகிடந்திட முதுகில்
கொண்டவள் சூ வெனக் குதிரையுமாடி

ஆயிரமாய்ப் பல வேதனைப் பட்டும்
அம்மா வெனுமொரு சொல்லினைக் கேட்டு
போயுளஞ் சூட்டினில் போட்டது வெல்லம்
போலு மினித்திடும் பாகென உருகி
நேய மெடுத்தவ ளம்மையை யிறைவன்
நீட்டியகையினிற் தாயுயிர் கேட்டோன்
காய மழிந்திடக் கருவத னுயிரை
கள்வனென் றேகவர் வேளையிற் கதற

மேனி எடுத்தவன் நாமும் புலம்பி
மீளக் கொடுப்பனோ மெய்யது பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியாம் சக்தி
சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
தன்மை இயல்பெனில் பொன்மகள் தேறாய்!

*****************************

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 4, 2013, 8:36:30 AM4/4/13
to சந்தவசந்தம்
>அருமைதமிழை அறியா துரைத்தால் அருகில் ’கத்தி’யடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் உறையுதடி

ஒவ்வொரு சொல்லிலும் வேதனையைப் பொதிந்து விரக்தியின் எல்லையில் எழுந்த கவிதை உள்ளத்தை உலுக்குகிறது.

அனந்த்


2013/3/29 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
Apr 5, 2013, 7:32:56 AM4/5/13
to santhav...@googlegroups.com

நன்றிகள் ஐயா !!! மிக்க நன்றிகள்!!

அன்புடன்
கிரிகாசன்


kirikasan

unread,
Apr 5, 2013, 7:38:01 AM4/5/13
to santhav...@googlegroups.com

   இது ஒரு திருமண ஜோடிக்கான  வாழ்த்து


தித்திக்க தித்திக்கத் தேனாகி  வாழ்வு இனித்திடவும் - இனி
எத்திக்கும் ஆனந்தராகம் இசைகொண் டெழுந்திடவும்
சத்தியத்தோடு நற் செல்வம் விளைந்தன்பு பொங்கிடவும் - மனம்
சித்திக்கும் வாழ்வினில் செல்வம்  நிறைந்திட வாழ்த்துகின்றோம்

ஆனந்த மேவிடு வாழ்வில் அகமென்றும் தூய்மையுடன் - எழிற்
பூவந்த நந்த வனத்தின்எழில் மலர்ப் புன்னகையும்
ஓரந்தம் இன்றியே உள்ளம் களிகொண்டு வாழ்ந்திடவும் - இனி
வேறேந்த இன்னலும் இன்றிக் கரம் கொள்ள வாழ்த்துகின்றோம்

தேன் உண்ண வண்டினம் வந்தருந்தும் பின்னர் ஓடிவிடும் - மலர்
தான் நின்ற பொய்கைநீர் வற்றினாலும்அங்கு தானிருக்கும்
நான் அந்த வண்டல்ல நீர்க்குளத்தின் அன்புத் தாமரையாம் - இதைக்
காணென்று வாழ்வினில் கையிணைந் தொன்றாகி வாழ்ந்திடுவீர்

சேயுடன் தாயென்று செல்வம் பொலிவளர் சீருடனும் - துள்ளிப்
பாயு மலை  கடல் போலும் விரிந்திடும் சந்ததியும்
காய் என்று தான்முதிர் வாழ்வு கனிந்தின்பம் கண்டிடவும் -என்றும்
வாய்த்திடும் வாழ்வுக்கு வாழ்த்துக்கள் அள்ளி வழங்குகிறோம்

kirikasan

unread,
Apr 5, 2013, 7:53:33 AM4/5/13
to santhav...@googlegroups.com
   இது ஒரு திருமண ஜோடிக்கான  வாழ்த்து
                இன்னொன்று


வாழ்வினில்  ஆனந்தம் பொங்கட்டும் - உள்ளம்
வண்ணமலர்ச்  சோலையாகட்டும்
ஆழ்மன தொன்றி இணையட்டும்  -இவர்
ஆசை களும் நிறைவேறட்டும்
தாழ்விலும் நேர்நிலை கொள்ளட்டும் -  எண்ணம்
 தங்கும் மனம் நிறைவாகட்டும்
ஆரம் என்றே அன்பு பூணட்டும் -  இது
ஆரம்பநாள் இனிப் பொங்கட்டும்

தேய்வது வானிடை வெண்ணிலா - இவர்
தேரும் வாழ்வு  முழுப் பொன்நிலா
பாய்வது  ஆனந்த நீர்நதி - விழி
 பார்ப்பது   அன்பென்ற ஓர் விதி
காய்வது ஈரத்தில் தோய்நிலம் - இவர்
கற்பனைகள் கரம்  கிட்டிடும்
சாய்வது நாணலின்  தன்மைகாண் - இவர்
சற்றும் தளரா த  மாமலை

பூத்திடும் நன்மலர்ச்சோலையில் - காலை
போகுந் தென்றல் தரும் இன்சுகம்
காத்திடும் உள்ளக் கனவுகள்-  என்றும்
கண்களின் மின்னிடும் பொன்னொளி
ஆத்திரம் கொள் சினம் என்பது -  இவர்
அன்பெனும் வாழ்வினில் இல்லையாம்
கூத்திடும் புத்துணர் வோங்கிட - கரம்
கொண்ட இன்வாழ்வென்றும் ஓங்குக

****************************

Pas Pasupathy

unread,
Apr 5, 2013, 9:18:04 AM4/5/13
to santhav...@googlegroups.com
அருமையான வாழ்த்துகள்!


2013/4/5 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramamoorthy Ramachandran

unread,
Apr 5, 2013, 5:06:30 PM4/5/13
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு சொலும் கனலாய் நீராய் 
ஒவ்வொரு சொல்லும் கதிரோன் சூடாய்
ஒவ்வொரு வரியும் சாட்டை அடியாய்
ஒவ்வொரு பதமும் உள்ளம் உருக்கக் 
கவ்விய உதட்டைப் பற்கள் கடிக்க 
ஐயோ என்றே ஆன்மா அழவே 
எய்த கணைகள் இடத்தை மறந்தே 
எம்மேல் பாய்ந்தன யாதுநாம்  செய்வோம் 
கூனல் இருளில் குனிந்த தலையுடன் 
மூச்சை விடவும் முடியாநிலையில் 
கையறும் போதே கவிதையும் கலங்கும் 
வெளிச்ச  நரகில் வீழ்ந்தேன்  
துளிக்கும் கண்ணீர் துடைக்க மறந்தே
.
 அருமைக் கவிதை ஆட்டிப் படைக்கிறது.!
ஒருநாள் விடியும் 
புலவர் இராமமூர்த்தி 05/04/2013


2013/4/5 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

kirikasan

unread,
Apr 6, 2013, 12:48:26 AM4/6/13
to சந்தவசந்தம்
ஐயா தங்கள் வாழ்த்து எனக்குக் கிடைத்த பெரும் வெகுமதி....நன்றிகள்!

On Apr 5, 2:18 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அருமையான வாழ்த்துகள்!
>

> 2013/4/5 kirikasan <kanara...@gmail.com>
>
>

kirikasan

unread,
Apr 6, 2013, 12:52:29 AM4/6/13
to சந்தவசந்தம்
துயரத்திலும் சிலிர்க்க வைக்கும் வரிகள்! நன்றிகள் போதாத வார்த்தை!
மி..க்..க.. ந..ன்..றி..க..ள்!

அன்புடன் கிரிகாசன்
*************

On Apr 5, 10:06 pm, Ramamoorthy Ramachandran <rawmurt...@gmail.com>
wrote:

kirikasan

unread,
Apr 6, 2013, 12:59:31 AM4/6/13
to சந்தவசந்தம்
விழித்தெழு

விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்

நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க

பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்

இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழ் ஆளும்
*******************

kirikasan

unread,
Apr 6, 2013, 2:20:37 AM4/6/13
to சந்தவசந்தம்
ஒருநாள் வரும்

செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி

உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி

தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி தமிழ்சூடச் சோழர்வகை யாயுயர்ந்து
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ

*****************

kirikasan

unread,
Apr 6, 2013, 2:30:34 AM4/6/13
to சந்தவசந்தம்
மன்னிக்கவும் இறுதியில் தவறுவிட்டு விட்டேன். திருத்தம்]


தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி

அங்கொருநாட் தொங்குகனி பாலில்விழத் தேனில்


எங்கும் மழை தூறலெனப் பார்நீ

தங்கமுடி தமிழ்சூடச் சோழர்வகை யாயோர்


சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ

--கிரிகாசன்

kirikasan

unread,
Apr 6, 2013, 9:19:54 AM4/6/13
to santhav...@googlegroups.com

                    கனவில் வந்தாள்

கண்கள் மின்னக் கனவில் வந்தாள்  களிகொண்டே
எண்கள் கூட்டி இதயந்தன்னை எட்டென்றாள்
விண்கல்பூமி வீழ்ந்தாற்போலும் வீழ்ந்தென்னில்
மண்கொள் என்றே மனதும் நடுங்கத் தான்வென்றாள்

தண்மை நீரில் துள்ளும் சின்னக் கயலொப்ப
பெண்கொள் விழிகள்- பேசாதென்னைக் குறிவைத்து
வெண்கல் லென்ன வீசும் பார்வைக் கண்கொண்டு
புண்கொள் என்றே போதை வலியைச் செய்தாளே

தன்நல் லிச்சை தணியத் தென்றல்தலை நீவி
அன்பில் பூத்த மலரின்வாசம் அதைமேவிப்
பொன்வெண்நிலவில் போயே வாழ்வென் றீந்தாலும்
என்னோர் பூவை இவளைக் கொள்ளா திருப்பேனோ

வெண்ணெய் விழிகள்  வழியும் சேலை வனப்பூடே
கண்ணை அள்ளும் மின்னல்வண்ணக் கனிவைத்தான்
திண்ணையோரம் தென்றல்வருடத் தேனின்பூ
உண்ணும் வண்டை ஒத்தே இருவர் உருகோமோ?

நெல்லிக் கனியில்  நிற்கும் சுவையாய் நீயும்நான்
அல்லல் செய்தே இன்பம் காணும் அதையும்தான்
எல்லைகோடு இட்டே பின்னர் அதைமீறிச்
செல்லச்செல்லச் சுகமேயென்று சொல்வோமோ

***********

kirikasan

unread,
Apr 7, 2013, 3:18:18 AM4/7/13
to santhav...@googlegroups.com

            நீயா , அவரா?

விழிகளில் உதிர்வது உதிரம்
விலை தமிழெனில் ஒரு சுழியம்
அழிவது தமிழ் இன உடலம் 
அக மகிழ்ந்திடும் இந்த உலகம்

கொதித்தெழச் சிலகரம் தள்ளும்
கெடுநிலை விளைவெனச் சொல்லும்
பொறுமையில் விளைவ தனர்த்தம்
புரிந்திடில் விடிவது திண்ணம்

வழி நெடுகலும் பல அரவம்
வகைவகை கொளும் பல விஷமும்
நெளிவதும் வழுகிடு மியல்பும்
நெறி மறு உயிர் எனில் வதையும்

பழிபல சொலும் தமிழ் எனவும்
பரமனின் திருநடம் பயிலும்
அழி எனப் பெருவழி புகவும்
அறிஞரின் இழிமனம் உதவும்

துளிஎன விழும்மழை இடியும்
துயரமும் எனப் பகல் விடியும்
வெளி யெனப் புகுஇல்லம் அழிக்கும்
விரும்பிய அரசுகள் இணையும்

குடிநலம் பெரிதெனும் விதியும்
குழந்தகள் இறைஎன்னும் கதியும்
பொடிபட உடைஎனத் திமிரும்
புவி கொளும் அரசிடை பரவும்

அழியினம் தமிழெனக்  கரமும்
அனுபவி எனமனம் ஒழுகும்
பொழுதினில் கருவிகள்பட விழியும்
பதிவுகள் தெளிவொடு பலஉமிழும்

அழகென அதிஉயர் ரசிகர்
அழிவதை விழிகொள மகிழும்
மெழுகென உருகிடுமின மெமதும்
மெதுவென விடஉயிர் பிரியும்

சரியென உனதிடை மனமும்
சகலமும் பொருள் கொளும்முடிவும்
கரியென உடல் எரி வதையும்
கடவுளின் செயலென நினைவும்

இருந்திடு மெனில் படுதோழா
இலையெனில் எழுவுடன் நேராய்
பருந்துகள் பறக்கட்டும் விண்ணில்
பருகிட உதிரமும் மண்ணில்

வரும் குறிகொண்டு சிறு குஞ்சில்
வெடிநெருப் பெழ அதிர் மெய்யில்
பெருகிடப் புயலென எழு விண்ணில்
பிரளயம் இடம் பெறும் தன்னில்

பலபல படித்திட அவர் வேண்டும்
படைத்தவ னுடமைகள் இவர்காயம்
கொலைஎனும் நிலை இலைவீரம்
கோழைகள் காமுகர் வெறியாகும்,

நிலையென தினி உருமாறும்
நிகழ்வுகள் பல நடந்தேறும்
குலைஅமைதியென் றிடும்  வர்க்கம்
குறி கொளு முடி,வரும் சொர்க்கம்

*************

kirikasan

unread,
Apr 7, 2013, 5:16:58 AM4/7/13
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும். எனக்கு இருக்கும் பலவீனம். கவிதயை அவசரப்பட்டு அனுப்புவது. இதை இனி கையாலவேண்டும்
இதோ இதுதான்  மனதில் கொண்ட கவிவடிவம் அதே கவிதை ,. சிலமாற்றங்கள்

          நீயா அவனா?

விழிகளில் உதிர்வது உதிரம் - அதன்

விலை தமிழெனில் ஒரு சுழியம்
அழிவது தமிழ் இன உடலம் - அதில்
அக மகிழ்ந்திடு மிது உலகம்

கொதித்தெழச் சிலகரம் தள்ளும் - விடு
கெடும் நிலை விளைவெனச் சொல்லும்
பொறுமையில் விளைவதும் அனர்த்தம் - அதைப்
புரிந்திடில் விடிந்திடல் நிகழும்

வழி நெடுகலும் பல அரவம் - அது

வகைவகை கொளும் பல விஷமும்
நெளிவதும் வழுகிடு மியல்பும் - அதன்

நெறி மறு உயிர் எனில் வதையும்

பழிபல சொல்லும் தமிழ் எனவும் - வரும்

பரமனின் திருநடம் பயிலும்
அழி என பெருவழி புகவும் - பல

அறிஞரின் இழிமனம் உதவும்

துளிஎன விழும்மழை இடியும் - பெருந்
துயரெனப் பகலதும் விடியும்
வெளி யெனப் புகுமனை யழிக்கும் - அதில்

விரும்பிய அரசுகள் இணையும்

குடிநலம் பெரிதெனும் விதியும் - பல
குழந்தைகள் இறைஎன்னும் கதியும்
பொடிபட உடைஎனத் திமிரும் - இந்த

புவி கொளும் அரசிடை பரவும்

அழியினம் தமிழெனக்  கரமும் - அதை

அனுபவி எனமனம் ஒழுகும்
பொழுதினில் கருவிகள் ஒளிரும் - பல
பதிவுகள் படமென உமிழும்

அழகென அதிஉயர் ரசிகர் - தமிழ்

அழிவதை விழிகொள மகிழும்
மெழுகென உருகிடு மினமும் -உயிர்
மெதுவென விடநிலை யழியும்

சரியெனில் உனதிடை மனமும் - இதில்

சகலமும் பொருள் கொளும்முடிவும்
கரியென உடல் எரி வதையும் _ இது

கடவுளின் செயலென நினைவும்

இருந்திடு மெனில் படுதோழா - இல்லை
இதுவெனில் எழுந்திடு நேராய்
பருந்துகள் பறக்கட்டும் விண்ணில் - அவை

பருகிட உதிரமும் மண்ணில்

வரும் குறிகொண்டு சிறு குஞ்சில் - உளம்
வெடிநெருப் பெழஅதிர் மெய்யில்
பெருகிடப் புயலென விண்ணில்  - எழு

பிரளயம் இடம் பெறும் தன்னில்

பலபல படித்திட அவர் வேண்டும் - உயிர்
படைத்தவ னுடமைகள் அள்ளும்
கொலைஎனும் நிலை இலைவீரம் - அது
கோழைகள் காமுகர் வாழ்வு

நிலையென தினி உருமாறும் - பார்

நிகழ்வுகள் பல நடந்தேறும்
குலைஅமைதியென் றாக்கும் -  திசை
குறி நினையெழு முடி,வரும் சொர்க்கம்

kirikasan

unread,
Apr 7, 2013, 6:21:26 AM4/7/13
to santhav...@googlegroups.com
ஒரு கவிதைப் போட்டிக்கு கவிதைகள் அனுப்பியுள்ளேன் . முடிவு சித்திரைப் புத்தாண்டில் தெரியும்.அதையிட்டு
நகைச்சுவைக்காக எழுதினேன் .எவரையும் மனம் நோக வைக்க அல்ல! பகிர்ந்து கொள்கிறேன்

   கவிதை எழுதக் கற்றுக் கொல்லுங்கள்

கவிதை வேண்டும் ஒன்றே கடனாய் பெறலா மென்று
புவியில் வட்டிக்கீயும் புலவர் உண்டோ பார்த்தேன்
தவிப்பில் கூகிள் எங்கும் தட்டிப் பார்த்தேன் இல்லை
குவிந்தே கிடக்கும் மின்நூல் கேட்பார் எடுப்பாரில்லை

`பீடிஎவ்`வென் றெழுதி பேணும் கவிதை தளங்கள்
தேடிப் பார்த்தும் ம்ஹூம்  தேவை நிறைவே இல்லை
வாடி தமிழே யென்று வாழ்த்திப் போற்றிப் பார்த்தும்
கோடி யருளைத தாரும் கோதை வரவுமில்லை

ஆகச் சினமும் மீற அருந்தத் தண்ணீர் தேடிப்
பாகம் பாதிகொண்டாள் பதியாம் இவனின் சதியைப்
பாகம் நளனின் கலையைப் பழுதென்றாக்கும் மையம்
தேகம் வளர்க்குஞ் சமையல் திகழும் அரங்கஞ் சென்றேன்

போகத் தின்ஓர் தலைவி புரியும் செயலைக் கண்டேன்
வேகச் சட்டியுமிட்டு விளைந்திடு பச்சைக் காய்கள்
மேகம் என்னும் பஞ்சின் மென்மைக் கரமும் கொண்டு
ஏகம் நறுக்கிச் சேர்க்கும் எழிலைக் கண்டே தேவி,

ஏதென் றதனைக்கேட்டேன் இதுதான் சாம்பார், தோசை
தோதென் றிதனில் தொட்டு துவளும் தேகப் பசியை
நாதா நீக்காய் என்றாள்  நாற்பது வாட்மின் குமிழோ
மூதென் றானோர் வயதில் மின்னி கொள்ளக் கண்டேன்

ஆகா கவிதை செய்வேன் அடியே நன்றி என்றே
போகக் கிடைக்கா சொர்க்கம் பின்வா சலினால் உள்ளே
போகும் வரமும் பெற்றோன் போல்நான் ஓடிச்சென்றேன்
தாகம் கொண்டே கணினி தன்னிற் கவிதை கண்டேன்

அங்கு மிங்கும் கொஞ்சம் அழகாய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்
வாங்க காலையுணவு வைத்தேன் ரெடி என்றாள்காண்
ஏங்கும் உள்ளத்தோடு என்கவி யும்தான் என்றேன்.

********************

Pas Pasupathy

unread,
Apr 7, 2013, 7:57:22 AM4/7/13
to santhav...@googlegroups.com
வித்தியாசமான, அருமையான கவிதை!


2013/4/7 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Siva Siva

unread,
Apr 7, 2013, 8:51:02 AM4/7/13
to santhavasantham
Nice! 

/ஆகா கவிதை செய்வேன் அடியே நன்றி என்றே
போகக் கிடைக்கா சொர்க்கம் பின்வா சலினால் உள்ளே
போகும் வரமும் பெற்றோன் போல்நான் ஓடிச்சென்றேன்
தாகம் கொண்டே கணினி தன்னிற் கவிதை கண்டேன்

அங்கு மிங்கும் கொஞ்சம் அழகாய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்/


பாவை செயல் கண்டு 
பாவைச் செயம் கொண்டது அழகு!



சில இடங்களில் வாய்பாடு சற்று மாறுகிறாற்போல் தோன்றுகிறது. அச்சீர்களைச் சற்று மாற்றினால் இன்னும் சிறக்கும்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2013/4/7 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
Apr 7, 2013, 11:45:59 AM4/7/13
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா!  மேலும் நன்றிகள் பல!


அன்புடன் கிரிகாசன்



kirikasan

unread,
Apr 7, 2013, 12:06:10 PM4/7/13
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா, தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். முடிந்தளவு கவனிக்கிறேன். இந்த இடத்தில்  பொதுவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உடல்நிலை கொஞ்சம் கடுமையாகி விட்டது.. ஒரு கவிதை எழுததொடங்குவேன் முடிக்கும்போது நான் படும் வேதனை சொல்லுக்கடங்காது..கைகள் அசையாது முயற்சித்தால் வேதனை,நரம்பில் பிடுங்கி எடுப்பதுபோலிருக்கும் விட்டுவிடு என்று மனது கெஞ்சும் நான் விடமாட்டேன் சில பிழைகள் இருந்தாலும்  அனுப்பி வைத்துவிடுவேன்.  இது எனது கடுமுயற்சியின் முடிவுகள்! இவை தங்கள்மனதை நோகப்பாடுத்தவல்ல. சொல்லக்கிடைத்த சந்தர்ப்பம்! அதனால்...!


அன்புடன்
கிரிகாசன்

kirikasan

unread,
Apr 7, 2013, 12:08:31 PM4/7/13
to santhav...@googlegroups.com


                வாழ்வின் வண்ணம்

சொல்லெண்ணம் சொல்விதம் இன்பந்தரும் அதில்
நல்லெண்ணம் பின்னிடின் நன்மைவரும்
சொல்லெண்ணம் கல்லென்னும் வன்மைகொளின் - அது
எல்லையில் துன்பங்கள் தன்னைத் தரும்

பல்வண்ணம் கொண்டுள்ளம் பார்த்துநிற்கும் - அது
இல்லெனும் அன்பினில் ஏற்றமுறும்
வெல்லென வாழ்வினில் வேகம் வரும் - எழும்
தொல்லைகளில் அதுசோர்ந்துவிடும்

கல்லென்ன மாமதி கற்றொழுகும் - பல
நல்லனக் கற்றிட மெல்லஎழும்  
செல்லெனும் வல்லமை சேர்ந்துவிடும் - உள்ள
புல்லெனும் கேடுகள் நீங்கிவிடும்

சல்லெனச் சத்தமிட்டோடும் நதி - அதில்
சில்லெனும் காலையின் நீர்க் குளிர்மை
நில்லென்னும் சூரியப் பொற்கிரணம் - எனக்
கொள்ளதி இன்பங்கள் கோடி பெறும்

செல்லன்ன நல்லெழில் சோலைகளுக் கதில்
மெல்லெனப் பூ விரி காட்சிகளும்
பல்லன்னப் பட்சிகள் நீந்துமெழில் கொண்ட
துல்லிய நீர்ச்செறி ஓடைகளும்

இல்லென வேளை என்றோதல்வீட்டு வாழ்வை
வில்லென நீவளைத் தெய்து விடு
வெல்லென  எண்ணித் துயர் கவிய நீயும்
கொல்லென தான்துயர் ஓட்டிவிடு

புல்தன்னில் நீர்துளிப் போர்வை கொள்ள- காலில்
இல்லென வெற்றடி பாதம்வைத்து
மெல்லெனப் புல்மிதித் தோடிநட அதி
சொல்லொண்ணா இன்பமும் தோன்றுமன்றோ?

புள்ளினம் கூடிக் குலவுமொலி - இதழ்
கள்ளென வண்டினம் தேடும் இசை
வள்ளெனதூரக் குரைக்கு மொலி மாடு
தள்ளி வண்டி ஓடும் சந்தஒலி

எள்ளெனப்  பூமியில் எம்மை வைத்து அதில்
நல்லன அல்லன கூட்டிவைத்து
நில்லென ஓர் சிறுகாலம் விட்டாள் - அதில்
பல்லின்பம் கொள்வது எங்கள் வழி
***************

kirikasan

unread,
Apr 7, 2013, 5:18:36 PM4/7/13
to santhav...@googlegroups.com
 இது ஒரு உண்மைப்பதிவு. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு இளைஞன் அங்கிருந்து வெளியேற சந்தர்ப்பம் கிடைத்தது அவன் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தான். அவனுக்கு பணிக்கப்பட்ட வேலை சமையல். அவன் உணவு பரிமாறுபோது அண்ணா வேதனை தாங்க முடியவில்லை. எங்காவது விஷம் கிடைத்தால் இந்த சோற்றுக்குள் போட்டு தாருங்கள் என்று இளம் பெண்கள் கேட்டார்கள் என்று அழுதவாறு கூறினான் அவன் வர்ணித்த சூழலை வைத்து எழுந்த கவி!. (குறிப்பு. உயிர்களை அழிக்க சொல்லி இங்கே நான் கூறவில்லை)

       இலங்கையை எரித்த தீயே!

சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றியதீ
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே யவர் நீசர்கள் பூமியில்
மீண்டும் எரியாயோ?

ஆளும் மன்னன்கொடுங் கோலன்என்றேநீதி
கேட்கமது ரையிலும்
காலிற் சிலம்புகை கொண்டவள் கண்ணகி
கூறஎரித் தொழித்தாய்
பாழு மரசொன்று நீதியின்றிக்கொடுங்
கோல்கொண்டு நிற்குதிங்கு
தீயே மறைந்துநீ நின்றதுபோதுஞ்
சினங்கொண்ட ழித்துவிடு

போரில் பகைவென்று பூவையர் கூட்டமாம்
பேசும்தமிழ்க் குலத்து
நேரின்று தாவென்று வாழக்குரலீந்த
வஞ்சியர் தம்மையின்று
வாரி இழுத்தொரு பாசறைக் கூட்டுக்குள்
வைத்துச்சி தைத்தவரை
கீறிக் கிழித்துமெய் கெட்டழித்துக்கூத்
தாடுதுபேய் களின்று

வந்தே யெரித்து ஒழித்துவிடு அந்தவன்மை
மனங்க ளெல்லாம்
வெந்தம னங்களின் பேய்பிடித்தபுத்தி
செய்யும்வி காரமெல்லாம்
தூயதெனஅந்தப் பூமியாக்கித்தமிழ்த்
துன்பம் களைந்துவிடு
நீயும்வந்துகேளா விட்டுவிட்டால்நீதி
கேட்பது யார்தானிங்கு

பாரதப்போர்ஒரு பாவைதிரௌபதியின்
சேலைபறித் ததனால்
நூறுஎனப்பல திரௌபதிகள் இன்று
சேலையிழந்து நின்றார்
ஓருடைபோகஇன் னொன் றிதோவென
மாதவன்கை கொடுத்தான்
ஆருயிர்தங்கையர் கேட்டுக்கதறியும்
சேலைகள் நீண்டதில்லை

சாக நினைத்துயிர் போகும்வழி யின்றி
சேயிழை யார்துடித்தே
வேகு முடலவ மானம்கொண்டே யவர்
விழிகள் நீர்தளும்ப
பாவிமகனவர் காலடிவீழ்ந் துடல்
நோகத்து டிப்பதனை
கூவியழும்குரல் ஓலம்நிறுத்திட
வானளவாய் எரியாய்

ஊனை விட்டுஉயிர் போவதனா லேயே
வேதனை தீருமென
உண்ணு முணவினில் ஒர்துளிநஞ்செனும்
ஊற்றித் தருவருண்டோ
தின்னும் கவளமும் தொண்டைநடுவினில்
சிக்கித் திணறிடுமோ
கண்ணும் உறங்கிடக் காலன்வந்து உயிர்
கொள்ளவும் மாட்டானோ?

என்று கலங்கி மயங்கிச் சிறைதனில்
வெம்பி அழுதுகொள்ளும்
நல்ல வர்காத்திட நாடெங்கும் பற்றியோர்
நாசம் எரிக்காயோ
பூமி யெரித்தது அன்று முடிந்தது
போகட்டும் விட்டுவிடு
பாழும் மனங்கொள்ளும், எண்ணமெரித்திடு
போதுமது எமக்கு


kirikasan

unread,
Apr 8, 2013, 2:53:35 AM4/8/13
to santhav...@googlegroups.com


       காலச் சுழல்

காலச் செடியினில் நாளென் மலர்தினம்
காற்றிலுதிர்ந்து விழும் - அதைப்
போலும் வயதென்னும் பூக்க ளுதிர்வதைப்
பொன்முகம் காட்டிநிற்கும்
பாலனென வந்து பாயிற் கிடந்திடும்
பக்குவமாகு மட்டும் - இந்த
ஞால முழுதிலும் நன்மை தீமையெங்கள்
நாளைப் பிரித்தெடுக்கும்

ஓலைக் குடிசையும் ஒட்டும் வயிறுடன்
ஓர்சில பேரிருக்கும் - கொடும்
காலைப் பசியெனும் காதகனின்பெரும்
கைவரிசை சிறக்கும்
பாலை வனமென பாழுமுயிர் வெம்மை
பட்டுத் துடித்திருக்க - அவர்
ஆலைக் கரும்பினைப் போலப் பிழிந்திட
ஆசைமனம் இருக்கும்

நாளைப் பிரிந்தொரு ராத்திரிவேளையும்
நாடி வருவதில்லை - இனி
நாளைநடப்பது வேறு அது இற்றை
நாளைப் போலாவதில்லை
கூழைக் குடிப்பவர் நாளை இருக்கலாம்
கோடி பணத்திடையே - அதே
வேளை பணம் மாடி வீடென்றிருப்பவர்
வீதி மரத்தடியே

நீலக் கருவானில் நீந்தி முகிலோடும்
நீண்ட வழியிருக்கும் - அந்தக்
கோலத் தெளிவிண்ணில் காணும் மாசக்தியும்
கூடி எம்முள் இருக்கும்
மேலே திகழொளி மேன்மைப் பெருஞ்சக்தி
மேவியுடல் அசைக்கும் - அந்த
மூலசக்தி மனம் வேண்டித் தொழுதிடு
மேனியிற் சக்தியெழும்

******************

kirikasan

unread,
Apr 11, 2013, 1:46:25 PM4/11/13
to santhav...@googlegroups.com

       காவாயோ நீ சக்தி

நடந்தோடி நின்றதெவை கால்கள்தானோ
  நாடி மனம் கூடியதென் ஆசைவானோ
படர்ந்தோடி சுற்றுங்கொடி பருவமேனோ
 பாரிலிவர் உயிர் வாங்கும் பாசம்தானோ
கடந்தோடி வரும் புயலும்காற்று மாகி   
  காலமெனும் ஆழியலை யடித்த வாழ்வோ
தொடர்ந்தோடி வந்துவினை யாக்குந் தேவி
  தூயமனம் கொண்டெமைக் காப்பாய் நீயே

அழுதோடிப் பிறந்து நிலம் வீழ்ந்த மேனி
 ஆகுமிவர் காலமெதி ரழிந்து கூனி
உழுதோடி விதைத்தாலு முறக்கமின்றி
 உணவோடு நிலமற்ற உடந்தையாவர் 
கழுகோடு புலி சிங்கம் கரடியாவும்
  காணுமொரு வாழ்வென்ப கானகத்தே
வழுவோடு இல்லாத வகையில் நீதி
  வகுத்துமேன் மனிதவிதி மாற்றிவைத்தாய்

நுழைந்தோடிக் காற்றினிய கீதம்கொள்ள
 நுகர்வண்டு துளையென்று மூங்கில் செய்தாய்
எழுந்தோடி வந்தெமது இன்னல்தீர்க்கா
 ஏன்இனிய வாழ்விலிசை யின்றிச் செய்தாய்
பழுதூக்கி பாதைநட என்று கூறின்
 பாவமதை எண்ணி நடை கொள்ள அஞ்சோம்
முழுதாக்கி பளிங்கென்னும்  பாதைசெய்து
  மழையுமாய் வழுக, விழ ஏனோசெய்தாய்

தலைமீறி எழுகின்ற நீரினோட்டம்
 தாகத்தில் துடிக்கின்ற குருவிபோல
கலைமீறிக் காணுஞ்சிதை வோடுகானம்
  காலையிருள் மாலைதுயில் கனவிலின்பம்
இலைமீறி வழிகின்ற பனியின்வாழ்வும்
  ஏனாக்கி மிதியென்று கால்கள் வைத்தாய்
மலை ஏறிச்செல்லாது மனிதவேட்டை
  மாண்புடனே ஆற்றுமினம் மண்ணில் வேண்டாம்

கிளைதேடி வந்தமரும் குருவி யொன்றும்
 கேட்காமல் வந்தணைக்குங் காற்றுமாகி
அளைந்தோடி  அன்னமதை உண்ணும் பாலன்
  ஆசையுடன் கொஞ்சுமவன் அன்னைபோலும்
வளைந்தோடி நாம் தொலைவில் நின்றபோதும்
 வாவென்று தெய்வ மெமை வாழ்த்தியென்றும்
களைந்தோடும் புன்மைகளைக் களைந்துபற்றிக்
  கரங்கொண்டு காவாயோ கருணைதேவி

*************************

kirikasan

unread,
Apr 13, 2013, 9:12:33 PM4/13/13
to santhav...@googlegroups.com


புதியன பொலியட்டும்

காலம் கனிந்திடக் கண்கள் திறந்தெமைக்
காத்திடும் சித்திரையோ - இந்த
ஞாலம் பொலிந்தின்ப நன்மைகள் கூடியிந்
நாடும் சிறந்திடுமோ
கோலம் இனித்திடக் கூடிமகிழ்ந்திவர்
கொள்ளுவர் ஆனந்தமோ - உண்மை
சீல மனத்தொடு சித்திரப் புத்தாண்டு
செய்திடும் நன்மைகளோ?

மாளும் விழுந் துயர் மாறா விதியென்று
மாறித் தொலை செல்லுமோ -அன்றி
நாளும் இவர்பொழு தானந்த மாகிட
நாடி யணைத்திடுமோ
வாளும் கையிலேந்தி வந்த கொடியெங்கள்
வானில் பறத்தல்விட்டே - புவி
வாழும் இனமென்று வாய்மை தனைகொண்டு
வாழெனச் செய்திடுமோ

பூக்கள் பொலிந்திடப் புத்தாடை பொட்டிட்டுப்
பூவையர் தம்பியரும் -வரும்
நாட்களி லானந்த நாட்டிய மிட்டவர்
நாட்டில் நடந்திடவும்
பாக்கள் படித்தவர் பந்தடித்தே யுண்ணும்
பாலுடன் தேன் சுவைத்தே - நல்ல
தூக்கத்திலும் ஒரு புன்சிரிப்பைக் கொள்லென்
றாக்கும் புத்தாண்டிதுவோ ?

kirikasan

unread,
Apr 15, 2013, 7:12:19 PM4/15/13
to santhav...@googlegroups.com
         புத்தாண்டே புதுவரவே

புத்தாண்டே புதுவரவே புன்னகைத்து வாராயோ?
புவியாண்டு பலகோடி நன்மைகளைத் தாராயோ?
பத்தோடு ஒன்றாகப் பாவங்கள் தாராமல்
பழிநீங்கி இனம்தளைக்க புதுவாழ்வு தருவாயோ?

நித்தமும் அழுதழுது நெஞ்சோ கனத்ததடி
நீநடந்து நிலமாண்டால் நீதிவழி திறக்காதோ?
புத்தாண்டு மகளே புதுவரவே வந்திங்கு
பொய்யா துறுதியுடன் பேசியெமைக் காவாயோ?

சத்தியமே வந்துவிடு சாகுமினம் பிழைத்துமெழ
நித்தியமாய் புவியிலொரு நேர்மைவழி காணவென
உத்தமி நீ வாராயேல் உண்மைஇறந்ததென
வைத்திடுவேன் தமிழையினி  வாழ்வில்கவி வேண்டியதோ?

கூசக் குளிரடிக்க கொள்ளுமெழில் நிலவெறிக்க
தேசத் திருநாட்டில்தென்றல் குளிரெடுத்து
வீசி உடல் சிலிர்க்கும் வேளையிலே ஓரோரம்
வாசித்த கவி எழுதி வைத்தேன் அதன்பின்.....!

****

வீட்டின் வடக்கே வெளிவாசல் திண்ணையிலே
நீட்டிக் கிடந்தேன் நான், நீள பெருங்குரலில்
கூட்டிக் கிணுகிணுத்த கொசுவினிசை சங்கீதம்
வாட்டி உயிரெடுக்க வாராத துயிலேங்கி

தேகம் திருப்ப அத் திசைதனிலே நேரெதிரே
தோகை ஒருத்தியெழில் துள்ளுமிள மயிலழகாள்
மேகக்குளிர் நிலவின் மின்னலிடும் புன்னகையும்
ஆக வடிவெடுத்தே அருகினிலே நின்றிருந்தாள்

கண்கள் பார்த்தவளின் களங்கமிலா முகம்நோக்கி
”பெண்ணே யார்நீயோ பேய்உலவும் நடுச்சாமம்
எண்ணாதொருஇருளில் எழுந்த விதமென்ன
மண்ணில் உன்பாத மழுந்தியதோ ஐய”மென்றேன்

சிரித்தவளாம் சித்திரையோ சித்திரமோ நானறியேன்
பிரித்த இதழிருந்து பிறந்தசங் கீதமெனும்
விரித்த நகைகண்டும் வெள்ளிமலர்க் கால்பார்த்தும்
சரிதான் பேயல்ல தமிழ்மகளோ நீ என்றேன்


பட்டுக்கரு கேசங்கள் பழுத்த நிலவொளியில்
கட்டிகுளிர் வெண்ணையது கசிந்து வழிவதென
திட்டாய் ஒளிமின்னித் தேகம் சிலிர்த்தவளோ
வட்டமுகம் மலர்த்தி வந்தேன்வி ஜயாஎன்றாள்

நேரத்தைப் பார்த்திந்த நட்டநடு நிசிவேளை
கோரத்தை மட்டுமே கொள்ளுமிவ் வூர்நோக்கி
யாரவள் நீ வந்தாய் யாதேது என்றுரைக்க
தூரத்தில் பெண்ணொருத்தி துடித்துக் கதறுமொலி

ஊரை கலக்கியவா றொலித்த விதம்கேட்டு
வீரத்தை நெஞ்சிழந்தோ வந்தஒலி பீதியெழப்
பாரத்தை மனம்கொள்ளப் பண்ணியதோ ஒலிகேட்டு
”யாரங்கே என்னகுரல் ஈதறிவாயோ”என்றாள்

பேசமுன் பேதைகாண் பெருந் துயரம் நடக்குதிங்கே
நீசர் கை கொடுங்கோலில் நேரும்துயர் ஆயிரமாம்
கூசுங் கதை பகிரவெழின் கோடியுகம் ஓடிடுமாம்
வாசலிலே வந்தவளே வாவென்ன வகையறியேன்

மீண்டும் புன்னகைத்து மெல்லியதாய் கண்பார்த்து
”ஆண்டொன்று போயின் அடுத்தவளின் புதுவரவு
நீண்ட புவிமேவி நிலைபெற்று  ஆளவென
தாண்டிப் பெருவெளியாம் தகதகக்கும் மின்னலிடை

ஆண்டு விஜயா இவ் வகிலத்தை சேரவந்தேன்
வேண்டியுன் வீடுவர விரும்பாதவன்போலே
நீண்ட கதை படித்தாய் நின்னைநான் என்னென்பேன்”
வேண்டா தவளாயின் விட்டுவிடு எனை யென்றாள்
சொன்னவளைப் பார்த்தேன் சுடரெனும் கண்ணிரண்டும்
மின்னும் ஒளிமுகமும் மெய்யென்று கூற “வொரு
கன்னிதனை கருமிருட்டில் காணப்பயமெழும்பும்
அன்னையென அறியேன் அடியேனை மன்னியென்றேன்

நட்டநடு நிசியாகி நடந்தேகால் பத்தொடு ஈர்
தட்டிமணி ஒலியெழுப்பத் தரணியிலே படர்பவளே
சொட்டுமணித் துளிமுன்னே சுந்தரி என்வீடுவந்து
தட்டியதேன்?” என்னத் ”தமிழ்கவிதை ஏதென்றாள்

”முத்தமிழின் கவிதையெனில் மோகமதில் கொண்டவளே
எத்தனைதான் பேரவலம் இத்தரையில் கண்டுள்ளோம்
உத்தமராம் ஊருலகம் ஒன்றும் கருணையின்றி
செத்தவரை எண்ணுமொரு செயல்கூட மறுத்தனரே
(அடுத்ததில் முடியும்)

kirikasan

unread,
Apr 15, 2013, 8:04:52 PM4/15/13
to santhav...@googlegroups.com

அத்தைமகள் போலே அழகியதோர் தீவெண்ணி
சொத்தை இறைத்துமென்ன சூழ் உலக நாடெல்லாம்
முத்தமிட உறவாட மோகினி போல் காதலுற்று
சித்தம் இழந்தவராய் சுற்றுகிறார் நாடிதனை
 
சொந்தம் எனத்தீவை தொட்டெடுக்க ஆவலுற்றுச்
சந்தனமே நெஞ்சில் தருகுவையோ ஓரிடமாம்
வந்துனையே காவலிட்டு வண்ணம் சிறப்படைய
தந்திடுவேன் காசுநின தன்னிலோர் பாதிகொடு

உத்தமராம் செந்தமிழர் உனக்கெதிராய் சற்றேனும்
கத்தியெழக் காணின் கவலைவிடு நானுள்ளேன்
செத்துவிட நஞ்செறிந்து சிதைப்பேன் அவர்முழுதும்
கொத்தாய் குலமழிப்பாய் கூடிக்கரம் கொடுப்பேன்

அத்தனை யோர் கேவலமாய் ஆடும் பல நாடுகளும்
குத்தியழித்திருக்க கோலமொன்று நாம்கண்டோம்
செத்தவரோ போயழியச் சுடுகாடு நோக்கி நடை
வைத்தநிலை கொண்டிங்கே வருந்திக் கிடக்கின்றோம்

புத்தாண்டு என்ன புதுவருடம் தானென்ன?
முத்தான மொழிஎல்லாம் ஒப்பாரிக்கா மென்றேன்
”எத்தகைய துன்பமென இவளறிவாள் நானாளும்
புத்தாண்டில் இல்லாமல் போம்” என்றாள் அதுசொல்லி

முடிக்கமுதல் மீண்டும் மங்கையவள் கத்துங் குரல்
துடிக்கும்பெண் அவலம் தொலைவிலே கேட்டிருக்க
”அடித்து வதை செய்யும் ஆட்களுடை கோரமது
வடிக்க மனம் ரத்தம் வழிந்தோட வாழ்கின்றோம்

என்னபிறவி கொண்டோம் இருந்தும் வீரமதைத்
தின்று விழுங்கிவிட்டுத் தெரியாமல் கிடக்கின்றோம்”
என்றுமுடிக்க முன் எழுஞ் சத்தம் வீதியிலே
நின்று நடந்தோடும் நிழலாட்டம் தென்படவே

~வந்துவிட்டான்ஆமி வளைந்து நிலத்தில்படு
எந்தவிதி யுன்னைஇங்கு  ஏகிவிடச் செய்ததுதோ
சுந்தரமாய் காணுகிறாய் சுற்றும்பகை கண்ணிடையில்
வந்துவிடில் உந்தன் கதி  வாழ்வே அழிந்ததம்மா”

என்றுமெலக் கூறக்கணம் எமைநோக்கி ஒருதடியன்
முன்வாசல் வழிகாண, ”முடிந்தோம் ஓடெ”ன்றேன்
தேனாய் சிரிப்பொன்றைத் திங்களொளித் தங்கைமகள்
தானாய் விரித்தங்கே தமிழ்மகனே அஞ்சாதே

யாரென்று கொண்டாய் ஞாலத்தை ஆளவரும்
போருக்கும் தலைவியாம் பூவுலகின் ஆட்டமெலாம்
நேருக்குநேர் நின்று நிகழ்வெல்லாம் சீராக்கி
பாருக்கு வழிகாட்ட பணிகொண்டு வந்தவளாம்”

சொல்ல அவள் முகத்தை சிறு குழந்தையாய் நோக்கி
”வல்ல மொழிபேசி வந்தாள் உன் முன்னவளும்
வெல்லவந்தேன் என்றாள் விடியுமுன் போகின்றாள்
நல்ல கதைபேச்சு நாடப்பதுவோ வேறென்றேன்

”கொல்லும் பகைவரெனும்  கோரப்பேய் ஆளுலகில்
நல்லவரின் நீதிவழி நடப்பவர்க்கு வாழ்வுஇல்லை
வல்லவளே உன்னாலே வரும் துன்பம் என்னையும்தான்
இல்லையென ஆக்கிவிடும் இறப்பதிவன் நீயில்லை

(நிச்சயமாக அடுத்ததில் முடியும்)

kirikasan

unread,
Apr 15, 2013, 8:45:44 PM4/15/13
to santhav...@googlegroups.com

  புத்தாண்டே புதுவரவே (மூன்றாம் பகுதி)

வா இன்னும் பார்த்துவிட வழியில் பலதிருக்கும்
போவதற்குஇன்னும் பொழுதுண்டு பன்னிரண்டு
ஆவதுவரைதானும் அழிவுகளைக் கண்டொருக்கால்
பூவான துன்னுள்ளம் புரிந்திடுமோ வா” என்றேன்

கண்டு கொளாதிருள் மறைந்து கையில் உயிர்பிடித்துக்
கொண்டே அவளுடனே குலைநடுங்க ஓடுகிறோம்
தண்டும் தடி இலைகள் தடக்கி யொருசத்தமெழச்
செண்டும் மலர்க்கொடியும் சிதைவடைய ஓடுகீறோம்

எந்ததிசையிருந்து இடிமுழங்கி குண்டுவரும்
வந்து தான்பந்தாட வாரிச் சிரமெடுக்கும்
சிந்தனையில் அச்சமெழச் சேர்ந்தோடக் காலடியில்
அந்தோ என்சொல்வேன் ஐந்தாறு உடல்துடிப்பு

குற்றுயிராய் ஒன்றிருந்து குரல் இன்றிக் கதறுவதும்
மற்றுயிரோ மரணிக்க மயக்கமதைக் கொள்ளுவதும்
அற்று உயிர்போகுங்கால் அலங்கோலமாய் கிடந்த
சுற்றங்களைக் கடந்து சுழன்றே ஒடுகிறோம்

பெருஞ்சீற்ற சத்தமெழப் பேரிடியாய் தடதடென
உருண்டோடும் வண்டியதில் ஒளிவெள்ளம் தவிர்க்கஎன
அருகே ஒருவீட்டை அமைதியிலே ஆழ்ந்துறங்கித்
திறந்தே கிடந்ததனால் தெரியாமல் உள் நுழைந்தோம்

அய்யோஎன் சொல்வேன் அழகியதோர் பெண்மகளாம்
செய்யாத கோரங்கள் செய்தே உயிரழித்தும்
மெய்யில் குருதிவர மேனிச் சிதைத் தழித்து
செய்யும் கொடும் விலங்கோர் செய்தழித்துச் சென்றுவிட

புதுவருடபெண்ணோ பேச்சறியா திகைத்திட்டாள்
இதுவும் பூவிமீதில் இருப்பதுவோ என்பதுபோல்
மதுவிழிகள் நீர்சுரக்க மனது வெறித்தவளாய்
எதுபேச என்றெண்ணா என்முன்னே மொழியிழந்தாள்

பன்னிரண்டு மணியடித்து பாரில் ஒலியெழுப்ப
என்னுடைய நேரமிது ஏங்காதே உலகமதின்
சின்னதொரு வருடம் செயலாற்ற வந்தேனாம்
உந்தன் இனமழியும் உண்மைதனை நானறிந்தேன்

புலரும் புதுவருடம் புத்தாண்டு மட்டுமல்ல
நிலவும் பகைநீங்கி நிம்மதியை தருமாண்டு
பலதும்தீயவைகள் பழிநீங்கி நலம்காக்க
மலரும் வாழ்வுக்காய் மனம்கொண்டுழைத்திடுவேன்

போகும் பிணி தமிழன் புதுவாழ்வு கொள்ளவென
ஆகும் வழி செய்வேன் அஞ்சாதே என்றிட்டாள்
வேகமுடன் அவளோ விழிநோக்கி நான்காண
தேகமெடுத்தவளோ தென்றலிலே கரைந்திட்டாள்

முழுதாய் வியாபித்து மேதினில் பரவியவள்
அழுதவிழி துடைக்க அழியுமினம் காத்திடவே
பொழுதா மிவ்வாண்டடில் போதியன செய்வாளோ
எழுதும் விதியென்று எங்கள்துயர் மறப்பாளோ!

*******************************முடிந்தது)

kirikasan

unread,
Apr 20, 2013, 1:47:42 AM4/20/13
to santhav...@googlegroups.com
 
          காத்தருள் தெய்வமே

விழிமீது ஒளிதந்து வெளிமீது நிலைகொண்ட
 அழியாத பெருந்தீபமே
எழிலான மலர்வாசம்  இழைகின்ற காற்றோடு
எமைவாழப் புவியீந்தனை
பொழிலாடி விரிகின்ற  புனல்மீது அலைபோலப்
பொலிகின்ற உணர்வீந்தெமை
வழிதேடி விரிகின்ற  வாழ்வின்பம் தனைவேண்டி
வழுவோடு அலை என்றனை

மொழிகூறிக் கதை பேசி  முழுதாகத் தமிழ்கூறி
முடிவான வரையாடினோம்
அழியாத உடலென்றே அகங்கார மதம்கொண்டு
அறிவானததைப் போக்கினோம்
பழியாவும் எமையென்று  பரிதாபம் உலகன்று
படைகொண்டே எமைமோதவும்
குழியாகப் பெரும்வாழ்வு குலைந்தாக எமையிங்கு
குடியாக்கி வழி செய்தனை

அழுதாலும் விழுந்தாலும் அதிதீபஒளியான
அருஞ்சோதி யெமதன்னையே
தொழுதோமே எமைக் காத்து துயரென்ன அதைக்கேட்டு
துடிக்காது இரு என்றனை
மழுவேந்தும் சிவன் வந்து மண்மீது நடமாடி
மறையென்று  முடிவாக்கியும்
தொழுதாலும் இரங்காது துயர்கண்டு இறங்காது
துடிஎன்று தொழில்செய்தனன்

புழுவாக வாழ்வென்ப புரியாமல் நெளிந்தோடிப்
பொழுதான பல ஓட்டினோம்
வழுவாக நடைபாதை வலமாக இடமாக
விழிமூடி  நடை கொண்டனம்
தொழுதோமின் றருள் வேண்டித் துகளோடு பெருங்கோளம்
தொலையண்டம் தனையாக்கியே
வழுகாது சுழன்றாடும் வகையான செய்தாயே
வா எம்மைக் காத்தன்பு செய்

kirikasan

unread,
Apr 20, 2013, 2:31:09 AM4/20/13
to santhav...@googlegroups.com
           
                 எமனே இது ஏனோ?


வேட்டையாடு மெண்ணங் கொண்டு   வீரனென்று சூலமேந்தி
 வீதியோரம் வந்துநின்ற கூற்றா
ஆட்டமென்ன அன்னை சக்தி ஆளுமிந்த மேனிமீது
ஆசை கொண்டு நீயிருப்ப தாகா
போட்டி போட்டு நீயழிக்கும் பூமிமீது யாருயிர்க்கும்
போதுமென்றதோர் கணக்குப் போடு
போட்டதென் கணக்கு வேறு பொற்றமிழ் விளைக்க அன்னை
போட்டதே நிலைக்கும் விட்டு ஓடு


நாட்டிலே இவன்தனக்கு  நாளுமிட் டுயிர்தனுக்கு
நாட்களை வகுத்த தன்னை கேளாய்
பாட்டிலேயென் வாழ்வமைத்த பார்வதிக்கு மூத்த அன்னை-
பார் வதைக்கின்கேட்பள் விட்டு வாளாய்
கூட்டிலே உயிரிருத்தி கூடவே உணர்வமைத்து  கோடிகோடி
சூட்சுமங்கள் செய்தாள்
நீட்டியே நடந்துலாவி நின்றனம் இச் சிக்கலான
நீளுடல் அழிப்பதென்ன சொல்லாய்

தேட்டமென்று பாரில்நானும் தேடிவைத்த தொன்றுமில்லை
தேவி கூறும் வார்த்தை மட்டுமுண்டு
பூட்டியென்னை அன்பினாலே  பூமியில்நிலைக்க வைத்து
புன்னகைக்க வைத்த அன்னை கண்டு
காட்டியுன் குணத்தை நீயும்  கையிற்கொள் சுருள்கயிற்றைக்
கட்டியென் கழுத்திற்போட எண்ண
நீட்டியென்  அருள் கொடுக்கும் நீள்வலித்த சூலமேந்தி
நின் செயல் சினப்பளன்னை பாரு

தோட்டமும் பயிர்வளர்க்க துள்ளி யுன் எருதழிக்கத்
தோல்வியென்று நாமும் பின்னர்கண்டு
வாட்டமும் இழந்து வாயில் வார்த்தைக ளொறுத்துவாழ
வையகம்  நிறுத்தினாளோ சொல்லு
போட்டவன் வினை அறுப்பான் போனவர் வகுத்தநீதி
புல்லருக்கும் நல்லவர்க்குமொன்று
ஏட்டிலே இருக்கும்சொல்லும் இன்பமே விதைத்தவர்க்கு
இன்பமே அறுத்தெடுப்பர் எண்ணு
It is loading more messages.
0 new messages